роироо்рооுроЯрой் роЗрогைрои்родு роЗро░ுрок்рокро╡ро░்роХро│்

ро╡ெро│்ро│ி, рооே 20, 2016

родொрог்роЯு роиிро▒ுро╡ройроЩ்роХро│்

முஸ்லீம் மாணவர்களுக்கு
கல்வி உதவி தொகை வழங்கும்
தொண்டு நிறுவனங்கள் !...
அல்ஹம்துலில்லாஹ்

1. ஐக்கியப் பொருளாதாரப்
பேரவை ,,
அலி டவர்ஸ், கிரீம்ஸ்
ரோடு ஆயிரம் விளக்கு,
சென்னை – 600 006 தொலைபேசி:
2829 5445

2. இஸ்லாமிக் டெவலப்மென்ட்
பேங்க்,
ராயபேட்டை,
நெடுஞ்சாலை,
சென்னை – 14
தொலைபேசி: 94440 52530

3. சீதக்காதி அறக்கட்டளை, 688 ,அண்ணா சாலை, சென்னை – 06

4. ஆல் இந்தியா இஸ்லாமிக்
பவுண்டேசன்,
688 ,அண்ணா சாலை, சென்னை – 06

5. B S. அப்துல் ரஹ்மான் ஜகாத்
பண்ட் பவுண்டேசன், 4 மூர்ஸ்
ரோடு,
சென்னை – 06
(ஜகாத்துக்கு உரியவர்களுக்கு மட்டும்)

6. சுலைமான் ஆலிம் சாரிடபிள்
டிரஸ்ட்,
ஜாவர் பிளாசா,
நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை,
சென்னை – 34

7. முஹம்மது சதக்
அறக்கட்டளை,
133 , நுங்கம்பாக்கம்
நெடுஞ்சாலை,
சென்னை – 34

8. மெஜெஸ்டிக் பவுண்டேசன்
117, ஜெனெரல் பேட்டர்ஸ்
சாலை,
சென்னை – 02

9. முஸ்லிம் பவுண்டேசன் டிரஸ்ட்,
ஜபார்ஷா தெரு,
திருச்சி.

10. தமிழ்நாடு முஸ்லிம்
தொண்டு இயக்கம்,
118 /
பி வேப்பேரி நெடுஞ்சாலை,
சென்னை – 03

11. தமிழ்நாடு முஸ்லிம்
பட்டதாரிகள் சங்க வெல்பர்
டிரஸ்ட், டி – பிளாக் 10 ( 23 ) 11
வது தெரு,
அண்ணா நகர் –
சென்னை 40
போன் 98400 80564

12. அஸ்மா காசிம்
அறக்கட்டளை,
மாண்டியத் சாலை,
எழும்பூர் –
சென்னை – 08

13. ராஜகிரி பைத்துல்மால், கீழத்
தெரு,
ராஜகிரி – 614 207

14. டாம்கோ 807, – அண்ணா சாலை,
5 வது சாலை,
சென்னை

15. ஹாஜி. அஹமது மீரான்,
Managing Director Professional
Courier’s,
7 மகாராஜா சூர்யா ராவ் ரோடு,
ஆழ்வார்பேட்டை –
சென்னை – 18

16. மியாசி, புதுக்
கல்லூரி வளாகம்,
பீட்டர்ஸ்
ரோடு
சென்னை – 14

17. S I E T கே.பி. தாசன் சாலை,
தேனாம்பேட்டை,
சென்னை – 18

роЮாропிро▒ு, рооே 15, 2016

роЗрои்родிропா/родிрок்рокு роЪுро▓்родாрой

மைசூர் பேரரசை ஆட்சி செய்த மன்னர்களுள் குறிப்பிடத்தக்க ஒருவராக கருதப்படுபவர், திப்பு சுல்தான். தொடக்ககாலத்தில் ஆங்கிலேயருக்கு சிம்மசொப்பனமாக விளங்கி, கிழக்கிந்திய கம்பெனியின் அதிகாரத்தை உடைத்தெறியும் அளவுக்குப் பெரும் சவாலாக இருந்து, தன்னுடைய கடைசி மூச்சு நிற்கும் வரை ஆங்கிலேயர்களை எதிர்த்து உறுதியுடன் போராடிய மாவீரன். இளம் வயதிலேயே திறமைப்பெற்ற போர்வீரனாக வளர்ந்த அவர், சிறந்த ஆட்சியாளராகவும், நிர்வாகியாகவும் மற்றும் சமூக சீர்திருத்தவாதியாகவும் விளங்கினார். ‘உயிர் பிரியும் நேரம் கூட தங்களுக்கு அடங்கி நடக்க வேண்டும்’ என்று ஆங்கிலேயர் கூறியபோது, ‘முடியாது’ என மறுத்து, கர்ஜனையோடு “ஆடுகளைப்போல 200 ஆண்டுகள் பிழைப்பதை விட, புலியைப் போல இரண்டு நாட்கள் வாழ்ந்து மடியலாம்” என முழங்கியபடியே மரணத்தைத் தழுவியவர். இத்தகைய வீரமிக்க மாவீரனின் வாழ்க்கை வரலாறு மற்றும் ஆட்சிமுறைகளை விரிவாகக் காண்போம்.

பிறப்பு: நவம்பர் 20, 1750

இடம்:  தேவனஹள்ளி, கர்நாடக மாநிலம், இந்தியா

பணி: மன்னர்

இறப்பு: மே 04, 1799

நாட்டுரிமை: இந்தியன்

பிறப்பு

‘மைசூரின் புலி’ என அழைக்கப்படும் திப்பு சுல்தான் 1750 ஆம் ஆண்டு நவம்பர் 20 ஆம் தேதி இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள “தேவனஹள்ளி” என்ற இடத்தில் ஹைதர் அலிக்கும், பாக்ர்-உன்-நிசாவுக்கும் மகனாகப் பிறந்தார். இவருடைய தந்தை சாதாரண குதிரைவீரனாக இருந்து, பிறகு ஒரு அரசை ஆளும் மன்னனாக உயர்ந்து, இரண்டாம் மைசூர் போரில் ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்டு வெற்றிக்கண்டவர்.

ஆரம்ப வாழ்க்கை

கல்வியில் சிறந்து விளங்கிய திப்பு சுல்தான், இளம் வயதிலேயே தன்னுடைய தந்தையுடன் பல போர்க்களம் கண்டார், இதனால் தன்னுடைய பதினாறு வயதிலேயே யுத்தத்தந்திரங்கள், ராஜதந்திரங்கள் என அனைத்திலும் தேர்ச்சிப்பெற்று, சிறந்த படைத்தளபதியாக வளர்ந்தார். 1776 ஆம் ஆண்டு மராட்டியர்களுக்கு சொந்தமான காதிகோட்டையை கைப்பற்றிய திப்புசுல்தான், பிறகு 1780ல் நடைபெற்ற இரண்டாம் மைசூர் போரில் ஆங்கிலப்படைகளுக்கு எதிராக தந்தையுடன் இணைந்து போர்தொடுத்தார். பின்னர்,  1782ல் தன்னுடைய தந்தை ஹைதரலியின் மரணத்திற்குப் பிறகு, 1782 ஆம் ஆண்டு டிசம்பர் 26 நாள் தன்னுடைய 32 வது வயதில் ‘சுல்தானாக’ அரியானை ஏறினார். மைசூரின் மன்னனாக பொறுப்பேற்ற திப்பு சுல்தான் அவர்கள், ‘புலி சின்னம் பொறிக்கப்பட்ட கொடியை’ தன்னுடைய சின்னமாக பயன்படுத்தினார். சுமார் நான்கு ஆண்டுகள் நடைபெற்ற இந்தப் போர் 1784 ஆம் ஆண்டு மங்களூர் உடன்படிக்கையின் மூலம் முடிவுக்கு வந்தது.

மூன்றாம் மைசூர் போர்

1789 ஆம் ஆண்டு திப்பு சுல்தான் தலைமையில் ஆங்கிலேயருக்கு எதிராக நடைபெற்ற மூன்றாம் மைசூர் போரில் மராட்டிய பேரரசும், ஐதராபாத் நிஜாமும் பிரிட்டிஷ் படைத்தளபதி கார்ன் வாலிசுடன் இணைந்து திப்பு சுல்தானுக்கு எதிராகப் போர்தொடுத்தனர். ஆனால், சற்றும் கலங்காத திப்புசுல்தான் எதிரிகளை துணிச்சலுடன் எதிர்கொண்டார். 1792 ஆம் ஆண்டு வரை நடைபெற்ற இந்தப் போரில் திப்பு சுல்தான் தோல்வியடைந்தார். இறுதியில் சீரங்கப்பட்டினம் அமைதி ஒப்பந்தத்தின்படி பல பகுதிகள் பிரிட்டிஷ், ஐதராபாத் நிஜாம் மற்றும் மராட்டியர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

நான்காம் மைசூர் போரும், திப்புவின் மரணமும்

‘போரில் திப்புசுல்தானை வீழ்த்தமுடியாது’ என அறிந்த பிரிட்டிஷ்காரர்கள், சூழ்ச்சி செய்து, திப்புவின் அமைச்சர்களையும், அதிகாரிகளையும் விலைப்பேசி, லஞ்சத்தை ஆயுதமாகப் பயன்படுத்தி, திப்புவை அழிக்கத் திட்டம் தீட்டினர். இந்த சூழ்ச்சிக்கு இடையில் 1799 ஆம் ஆண்டு நடைபெற்ற நான்காம் மைசூர் போரில், திப்பு சுல்தான் தீரமுடனும், துணிச்சலுடனும் போர்புரிந்தாலும், எதிரிகளின் நயவஞ்சக செயலினால் பிரிட்டிஷ் படைத் தொடர்ந்து முன்னேறித் தாக்கியது. இந்தத் தாக்குதலில் குண்டடிப்பட்டு கிடந்த திப்புசுல்தானிடம், ‘தங்களுக்கு அடங்கி நடக்க வேண்டும்’ என்று ஆங்கிலேயர் கூறியபோது, ‘முடியாது’ என மறுத்து கூறிய அவர், “ஆடுகளைப்போல 200 ஆண்டுகள் பிழைப்பதை விட, புலியைப் போல இரண்டு நாட்கள் வாழ்ந்து மடியலாம்” என முழங்கியபடியே 1799 ஆம் ஆண்டு மே 4  ஆம் தேதி வீரமரணம் அடைந்தார்.

ஆட்சிமுறையும், சீர்திருத்தங்களும்

திப்புசுல்தான் மிகப்பெரிய இராணுவப் படையினைக் கொண்டிருந்தார். இதில் குதிரைப்படை, ஒட்டகப்படை மட்டுமல்லாமல், போரில் பீரங்கிகளையும் பயன்படுத்தியுள்ளார். இதைத்தவிர, கடற்பயிற்சி பள்ளிகள் உருவாக்கப்பட்டு, கடற்படையில் பீரங்கிகள் மற்றும் ஆங்கிலேயருக்கு நிகராக நவீன ஏவுகணைகளை பயன்படுத்தினார் எனக் கூறப்படுகிறது. சக்தி வாய்ந்த ராக்கெட் மற்றும் ஏவுகணை தொழில்நுட்பத்தை முதன்முதலில் பயன்படுத்தியவர் திப்பு சுல்தான் எனப் பல வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

திப்புசுல்தான் ஆட்சியில், பெண்களுக்கு மரியாதை கொடுத்தது மட்டுமல்லாமல், தேவதாசி முறையை முழுமையாக எதிர்த்தார். கோயில்களில் நரபலி கொடுப்பதைத் தவிர்த்து, முழுமையான மதுவிலக்கை அமல்படுத்தினார். திப்பு, இஸ்லாமிய மதத்தில் முழு ஈடுபாடு கொண்டவராக விளங்கினாலும், அவருடைய ஆட்சியில் இந்துக்கள் மற்றும் பிற மதத்தவரும் சுதந்திரமாக செயல்பட்டனர். மக்களிடையே அமைதியை மட்டும் விரும்பிய அவர், மத ஒற்றுமையை இறுதிவரை கடைப்பிடித்தார். மக்களுக்கு கடமை, உரிமை, பொறுப்பு உள்ளதாக சட்டம் இருக்கவேண்டும் எனக் கருதி சட்டபடியான விசாரணையும், தண்டனையும் அமையவேண்டும் எனக் கருதினார். விவசாயத்தில் பல சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டு, தொழில் வளர்ச்சியில் முன்னேற்றத்தை ஏற்படுத்தினார்.

1782 முதல் 1799 வரை மைசூர் பேரரசை ஆட்சி செய்த திப்புசுல்தான் அவர்கள், சிறந்த படைவீரராகவும், ஆட்சியாளராகவும் வாழ்ந்தவர். தன்னுடைய கொள்கை அறிவிப்பால் மட்டுமல்லாமல், நடைமுறையில் ஆட்சியிலும், தனிப்பட்ட வாழ்விலும் மக்கள் சார்ந்த கொள்கைகளை இறுதிவரை பின்பற்றியவர். போர் வ்யூகத்திலும், படைக்கலத் தயாரிப்பிலும், இராணுவ தொழில்நுட்பத்திலும் ஆங்கிலேயரை நடுநடுங்க வைத்த மாவீரன். இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஒரு வீர வரலாறு படைத்தவர் திப்புசுல்தான் என்றால் அது மிகையாகது.

காலவரிசை

1750 – நவம்பர் 20 ஆம்தேதி இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள “தேவனஹள்ளி” என்ற இடத்தில் பிறந்தார்.

1776 – காதிகோட்டையை கைப்பற்றினார்.

1782 – டிசம்பர் 26 நாள் மைசூர் பேரரசராக அரியானை ஏறினார்.

1780-84 – பிரிட்டிஷாருடன் இரண்டாம் மைசூர் போர்.

1789-92 – பிரிட்டிஷாருடன் மூன்றாம் மைசூர் போர்.

1799 – பிரிட்டிஷாருடன் நான்காம் மைசூர் போர்.

1799 – மே 4 ஆம் தேதி வீர மரணம் அடைந்தார்

manbaiee.blogspot.com

ро╡ெро│்ро│ி, рооே 13, 2016

роЗро╕்ро▓ாрооிроп рооாродроо்,ро╖роГрокாрой் рооாродроо்,

ஷஃபான் மாத சிறப்பிதழ்.

“அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களுக்கு ஷஃபான் மாதத்தில் நோன்பு நோற்பது மிகவும் விருப்பமாகும்.” அறிவிப்பாளர் உம்முல் முமினீன் அன்னை ஆயிஷா ஸித்தீக்கா ரலியல்லாஹு அன்ஹா. (சுனன் நசாஈ, அபூ தாவூத்.) இதுவொரு ஸஹீஹான நபி மொழியாகும் என்கிறார் அல்பானி.

“அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் ஷஃபானை விடவும் வேறு எந்த மாதத்திலும் அதிகமாக நோன்பு வைப்பவராக இருக்கவில்லை. இம்மாதம் முழுவதும் நோன்பாளியாக இருப்பார்கள். மற்றுமொரு அறிவிப்பில் அவர்கள் சில தினங்களைத் தவிர அம்மாதத்தில் நோன்பு நோற்றார்கள்”

புகாரி, முஸ்லிமில் பதிவாகியுள்ள இந்த நபி மொழியானது, ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் ஷபான் மாதத்தில் நோன்பு நோற்பதை எந்தளவுக்கு விரும்பியிருக்கின்றார்கள் என்பதைப் நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.
ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் இந்த மாதத்திற்கு இந்தளவுக்கு முக்கியத்துவம்  செலுத்தியது எதற்காக? என்ற வினாவுக்கான பதிலை பின்வரும் நபி மொழி தெளிவுபடுத்துகிறது.

“நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களிடம், அல்லாஹ்வின் தூதரே! ஷஃபான் மாதத்தில் நீங்கள் நோன்பு நோற்பதைப் போன்று ஏனைய மாதங்களில் நீங்கள் நோன்பு நோற்பதை நான் காணவில்லையே! என்று கேட்டேன். அதற்கவர்கள், அது ரஜபுக்கும், ரமழானுக்குமிடையில் வரும் மாதமாகும்.

இம்மாதம் பற்றி மக்கள் கவனயீனமாக இருக்கின்றார்கள். இம்மாதத்தில் அடியார்களுடைய அமல்கள் அல்லாஹ்விடம் எடுத்துக் காட்டப்படுகின்றன. இம்மாதத்தில் நோன்புடன் இருக்கும் நிலையில் எனது அமலும் அல்லாஹ்விடம் எடுத்துக் காட்டப்பட வேண்டும் என்றே நான் விரும்புகின்றேன் எனக் கூறினார்கள்.” (அபுதாவூத், நஸஈ, ஸஹீஹ் இப்னு ஹுஸைமா) இதனை அல்பானி “ஹசன்” என்று கூறுகின்றார்கள்

இந்த மாதத்தில் எந்த நாளில், எந்த இரவில் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள்  விசேடமாக வணக்கங்களில் ஈடுபட்டார்கள்? என்ற கேள்விக்கு பின்வரும் தகவல்கள் அதற்கான பதிலாக பதிவு செய்யப்படுகிறது.

(வல்லவன் அல்லாஹ் படைப்புக்களுக்கு முற்றிலும் மாறுபட்டவன். எனவே மனித செயல்பாடுகளுடன் அல்லாஹ்வின் செயல்களை மதிப்பீடு செய்துவிடாமல் பின்வரும் தகவல்களைப் புரிந்துகொள்ளுங்கள்.)

“உம்முல் முமினீன் அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அறிவிக்கின்றார்கள். ஒரு நாள் இரவு ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் எனது வீட்டில் இருக்கவில்லை. அவர்களைத் தேடிச் சென்றேன். அப்போது “அல்பகீஉ“ மைய்யவடியில் வானத்தின் பக்கம் தலையை உயர்த்திய நிலையில் நான் அவர்களைக் கண்டேன். அப்பொழுது, ஷஃபான் மாதத்தின் 15 ஆம் இரவில் அல்லாஹ் முதல் வானத்தில் இறங்கி அடியார்களுடைய பாவங்களை கலபு கோத்திரத்தாரின் ஆடுகளுக்கு இருக்கும் அடர்ந்த ரோமங்களின் அளவு மன்னிக்கிறான் என்று பகர்ந்தார்கள்.” (திர்மிதி, இப்னுமாஜா, அஹ்மத்.)

“ஷஃஅபான் மாதத்தில் பாதி இரவு வந்து விட்டால் அதில் நீங்கள் நின்று வணங்குங்கள். அந்தப் பகலில் நோன்பு பிடியுங்கள். அந்த இரவில் இறைவன் வானத்திலிருந்து இறங்கி வந்து, பாவ மன்னிப்பு தேடுவோர் உண்டா? நான் அவர்களின் பாவங்களை மன்னிக்கிறேன். சோதனைக்கு ஆளானோர் உண்டா? நான் அவர்களின் துன்பங்களை போக்குகின்றேன். என்னிடம் கேட்கக் கூடியவர் உண்டா? நான் அவர்களுக்கு உணவளிக்கிறேன் என்று காலை வரை கூறிக் கொண்டேயிருக்கிறான் என்று ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம்  அவர்கள் கூறினார்கள். “ (அறிவிப்பவர்: அலீ ரலியல்லாஹு அன்ஹு, நூல்: இப்னுமாஜா 1378)

“ஐந்து இரவுகளில் கேட்கப்படும் பிரார்த்தனை மறுக்கப்படுவதில்லை. ரஜப் மாதத்தின் முதலாம் இரவு, ஷஃபான் மாதத்தின் 15ஆம் இரவு, ஜும்ஆவின் இரவு, இரு பெருநாட்களின் இரவு என்று ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் கூறினார்கள்.”-பைஹகீ.

இவ்வாறு சுமார் 25 கும் அதிகமான நபி மொழிகள் இவ்விரவின் சிறப்புக்கள் பற்றிப் பேசுகிறது. ஏராளமான நூட்களில் இந்த தகவல்கள் பதிவாகியுள்ளது. இந்த இரவின் சிறப்புப்பற்றி சொல்வதற்காகவே சுமார் 26  நூற்கள் தொகுக்கப்பட்டிருக்கிறது.

ما ورد فى ليلة النصف فى شعبان للمحمدث محمد بن الحسين بن عبد الله الآجري
نبذة فى فضائل النصف من شعبان للعلامة علي بن جلال الدين البكري الصديقي
شرح على رسالة الصديقي للعلامة المناوي
تحلية الشعبان فى ما روي فى ليلة النصف من شعبان للشيخ محمد بن طولون الدمشقي
الايضاح والبيان لما جاء فى ليلة النصف من شبعان للعلامة ابن حجر الهيتمي
مواهب الكريم المنان فى الكرم على ليلة النصف من شعبان للإمام محمد بن أحمد المصري
فيض المنان فى شرح ليلة النصف من شعبان لأبي السرور البكري الصديقي
التبيان فى بيان ما فى ليلة النصف من شعبان للعلامة على القاري الهروي الحنفي
تحفة اليقظان فى ليلة النصف من شعبان للشيخ ناصر الدين الطبلاوي
رسالة فى ليلة النصف من شعبان للأمام أبي النجا سالم بن محمد ناصر الدين السنهوري
شرح على ليلة النصف من شعبان للعلامة نور الدين الجلبي
عقد المرجان فى فضل ليلة النصف من شعبان للشيخ نوح بن مصطفى القونوي
نصيحة أهل الإيمان فى فضل ليلة النصف من شعبان للشيخ رجب بن محمد العمراني
افاضة المنان فى نشر مضائل ليلة النصف من شعبان للشيخ زين العابدين محمد بن عبد الله
هطال وابل الامتنان فيم يقال ليلة النصف من شعبان للعلامة قطب الدين مصطفى البكري
رسالة فى فضائل النصف من شعبان للشيخ علي بن خضر بن أحمد
الدر العالي الشان على ليلة النصف من شعبان للعلامة أحمد بن محمد السحيمي الشافعي
عرائس الحسان فى شرح فضائل ليلة النصف من شعبان للشيخ حسين بن سليم
فضائل النصف من شعبان للعلامة جمال بن عمر المكي الحنفي
تحفة اهل التوحيد والإيمان بادعية ليلة النصف من شعبان للشيخ عبد السلام الحنبلي
منح المنان لفضائل النصف من شعبان للشبخ البرهان السقا خطيب الأزهر
بهجة الإخوان فى فضل ليلة النصف من شعبان للشيخ محمد بن عبد الرحمن
حسن البيان فى ليلة النصف من شعبان للعلامة عبد الله بن الصديق الغماري
ليلة النصف من شعبان فى ميزان الانصاف العلمي للشيخ محمد زكي
ماذا فى شعبان للشيخ محمد بن علوي المالكي
حال المؤمنين فى شعبان

இந்த மாதத்தின் 15ஆம் நாளில் நோன்பு நோற்று இரவில் வணக்கம் புரிவது  மத்கபுகளுடைய நாட்களில் பதிவாகியுள்ள கருத்து.

ஹனபி மத்ஹப்:

“ஷஃபானில் 15ஆம் இரவில் வணக்கங்கள் புரிந்து அவ்விரவை உயிர்பியுங்கள். ஒரு வருடப் பாவங்களுக்கு அது பரிகாரமாகும்.” (மராக்கில் அர்வாஹ், துர்ருல் முக்தார், பஹ்ருர் ராயிக்.)

ஷாஃபி மத்ஹப்:
 
“இந்த இரவுக்கென்று விசேட சிறப்புக்கள் இருக்கிறது. பாவங்கள் மன்னிக்கப்படுகிறது.”
(பதாவா இப்னி ஹஜர் அல் ஹைத்தமி.)

“பிரார்த்தனைகள் அங்கீகரிக்கப்படும் ஐந்து இரவுகளில் இதுவும் ஒர் இரவாகும்.” (அல் உம்மு, முக்னில் முஹ்தாஜ்)

“இந்த இரவினை முழுமையாக வணக்கங்களைக் கொண்டு சிறப்பிக்கவேண்டும் .அப்பொழுதுதான் மேற்கூறிய பலாபலன்களை பெற்றிட முடியும் என்ற கருத்தினைப் பதிவு செய்துவிட்டு அந்த இரவின் சிறிது நேரங்கள் வணக்கங்களைப் புரிந்தாலும் அச்சிறப்பினைப் பெற்றிட முடியும்” (அல் மஜ்மூஉ)

ஹன்பலி மத்ஹப்:

“ஷஃபான் மாத 15 ஆம் இரவு சிறப்புமிக்கதாகும். அந்த இரவில் சலபு (முன்னோர்) கள் தொழுது வந்திருக்கின்றார்கள்.” (ஷரஹ் முன்தஹல் இராதாத். கஷ்ஷாஃபுள் கிநாயி ஃபீ மத்னில் கிநாய

ஷஃபான் மாதத்தின் 15 ஆம் இரவின் சிறப்பு பற்றிய தகவல்கள் யாவும் நம்பகரமற்றது. அவ்விரவில் விசேடமாக அமல்களில் ஈடுபடுவது வழிகேடாகும் என்பதற்கான பதில்.

“ஷரீக் என்பவர் நம்மிடம் வந்தபோது ஷஃபான் மாதத்தின் 15 ஆம் இரவில் அல்லாஹ்வின் முன்னோக்குதல் பற்றிய நபி மொழி சம்பந்தமாக அவரிடம் கேட்டோம். இதனை சிலர் நிராகரிப்பதாகவும் அவரிடம் நாம் கூறினோம். அவர்கள் என்ன சொல்கிறார்கள்? என்று அவர் கேட்டார். அவற்றில் குறைகள் இருப்பதாக சொல்கின்றனர் என்றோம். அதற்கு அவர்; நிச்சயமாக இந்த நபிமொழிகளை சொன்னவர்கள்தான் அல் குர்ஆனை நமிடம் ஒப்படைத்தவர்கள். தொழுகைகள் ஐந்து நேரங்களாகும். ஹஜ் செய்யவேண்டும். நோன்பு நோற்க வேண்டும் என்று சொன்னவர்களும் அவர்கள்தான். இந்த நபி மொழிகள் மூலமாகத்தான் அல்லாஹ்வைப் பற்றியும் நாம் அறிந்துகொண்டோம் என்றார்.” (இமாம் அஹ்மதின் புதல்வர் அப்துல்லாஹ். அஸ்ஸுன்னாஹ்)

“இந்த இரவின் சிறப்பு பற்றிப்பேச ஸஹீஹான நபிமொழி ஒன்றுகூட  இல்லையென்று கூறுபவர்களுக்கு  இவை தெளிவானதொரு ஆதாரங்களாக இருக்கிறது.” (துஹ்பதுள் அஹ்வதி ஷரஹ் திர்மிதி.)

“ஷஃபான் மாதத்தின் நோன்பு நோற்பதற்கு ஸஹீஹான  நபிமொழிகள் பல பதிவாகியிருக்கிறது. அத்துடன் இந்த மாதத்தின் 15 ஆம் இரவு சிறப்புமிக்கதென்பதற்கும் மர்ஃபூவான நபிமொழிகள் பல பதிவாகி இருப்பதைக் காணலாம். ஏராளமான அறிஜர் பெருமக்கள் இதனை அங்கீகரித்துள்ளனர். இமாம் அஹ்மத் இது பற்றிய பல தகவல்களை பதிவு செய்துள்ளார்கள். சலபுகள் இதனை நடைமுறைப்படுத்தி ஊர்ஜிதம் செய்துள்ளனர். இந்த இரவில் விரும்பினால் தனிமையில் தொழ முடியும். இவ்வாறு முன்னோர்கள் தொழுதிருக்கின்றார்கள். அத்துடன் அந்த தகவல்களை குற்றம் குறை காணும் மதீனா முனவ்வரா உட்பட பலவூர் அறிஜர்களும் இருக்கவே செய்கின்றனர். (இப்னு தைமிய்யாவின்.  “மஜ்மூஉல் ஃபதாவா”, “இக்திழாவுஸ் ஸிராத்தில் முஸ்தகீம்”)

“நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் பராஅத்துடைய இரவு ஜன்னத்துல் பகீ அடக்கஸ்தலம் சென்றுள்ளனர். இது பற்றி எந்தவொரு தோழருக்கும் அறிவிக்கவும் இல்லை. இவ்வாறு புரியவேண்டும் என்று தோழர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கவும் இல்லை. இருந்தாலும்கூட இந்த நபி மொழியின் அடிப்படையில் பராஅத்துடைய இரவு பலர் கூடி அடக்கஸ்தலம் சென்று நீண்ட நேரங்கள் துஆ பிரார்த்தனையில் ஈடுபட்டால் அதனை குற்றம் குறை கூறக்கூடாது. (மௌலவி இஸ்மாயில் திஹ்லவி. சிராத்துல் முஸ்தகீம்.)

“இந்த இரவில் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் அடக்கஸ்தலம் சென்றுள்ளார்கள். மரணித்தவர்களுக்கு பிராத்தனை புரிந்துள்ளார்கள். எனவே இந்த இரவினை அமல்களில் செலவு செய்யவேண்டும். விரும்பிய அமலை செய்துகொள்ள முடியும்.” (அப்துல் ஹை லக்னோவி. அல் ஆதாருள் மர்பூஆ பில் அக்பாரில் மௌழூஆ)

ஷபான் மாதத்தின் 15 ஆம் நாள் மற்றும் அதன் இரவின் சிறப்புக்கள் பற்றி பதிவான நபி மொழிகள் அனைத்தையும் மொத்தமாகப் பார்க்கும்போது சந்தேகமின்றி இது தெளிவான உண்மையான விடயமாகும் என்பது ஊர்ஜிதமாகிறது. (அல்பானி “அஸ்ஸில் ஸிலதுஸ் ஸஹீஹா” 1144 ம் இலக்கம்)
 

“பராஅத்துடைய இரவினை சிறப்பிப்பதற்காக இறை இல்லத்தில் ஒன்றுகூடி வணக்கத்தில் ஈடுபடுவதை இமாம்கள் வழிகேடாகும் என்று கூறியுள்ளார்களா?”

ஷஃபான் மாதத்தின் 15 ஆம் நாளின் பகலில் நோன்பிருந்து அவ்விரவில் விசேட வணக்கங்கள் புரிவதற்கான ஆதரங்கள் நபி மொழிகளில் இருந்து காண்பித்தோம். சலபுஸ் ஸாலிஹீன்களில் அநேகர் அந்த நாளில் விசேட வணக்கங்களை நிறைவேற்றி வந்திருக்கின்றார்கள் என்றுகூறி  அதற்கான ஆதரத்தினையும் பதிவு செய்தோம். அப்போது  சலபுஸ் ஸாலிஹீன்க்களில் ஒரு சாரார் அந்த நாளின் விசேட வணக்கத்தினை நிராகரித்துள்ளனர். அது தொடர்பிலான தகவகல்களை அவர்கள் ஏற்க மறுத்துள்ளனர் என்று அவற்றினை  மூடி மறைக்காமல் நாம் இங்கே சுட்டிக்காண்பிக்கவும் செய்தோம். அந்த அடிப்படையில்,

ஷஃபான் மாத 15 ஆம் இரவின் விசேட வணக்கம் தொடர்பில் மத்ஹபுடைய கிரந்தங்களில் இருந்து நமது நிலைப்பாட்டுக்கு சாதகமான கருத்துக்களை சமர்ப்பித்த நாம், மத்ஹபுடைய நூட்களில்  நமது நிலைப்பாட்டுக்கு முரணான கருத்துக்களும் பதிவகியுள்ளாதா? அவ்வாறு பதிவாகி இருந்தால் அதற்கான பதில்கள் என்னவென்றும் கூறவேண்டிய பொறுப்பு நமக்கு இருப்பதனால் அது பற்றி இப்பொழுது அலசுவோம் வாருங்கள்.

மாலிக் மத்ஹப்.

“ஷஃபான் மாதத்தின் 15 ஆம் இரவில் ஒன்றுகூடுவது மக்ரூஹ் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இதை பொறுப்புதாரிகள் தடுத்து நிறுத்த வேண்டும்.” ( மவாஹிபுல் ஜலீல் ஃபீ ஷர்ஹி முக்தஸரிஷ் ஷைகில் ஜலீல், அஷ்ஷர்ஹுள் கபீர்.)

ஹனபி மத்ஹப்/

“இவ்விரவினை சிறப்பிப்பதற்காக இறை இல்லத்தில் ஒன்றுகூடுவது மக்ரூஹ்  ஆகும். தனிமையில் தொழ முடியும்.” (மராக்கில் ஃபலாஹ், அல் பஹ்ருர் ராயிக்.)

ஹன்பலி மத்ஹப்.

“இவ்விரவினை சிறப்பிப்பதற்காக இறை இல்லத்தில் ஒன்றுகூடுவது பித்அத் ஆகும்.” (ஷரஹ் முன்தஹல் இராதாத், கஷ்ஷாஃபுள் கினாஇ அன் மத்னில் இக்னாஇ, மதாலிபுல் உளின் நுஹா)
“இவ்விரவினை சிறப்பிப்பதற்காக இறை இல்லத்தில் ஒன்றுகூடி தொழுவது மக்ரூஹ்  ஆகும். தனிமையில் தொழ முடியும்.” (இப்னு ரஜப் அல் ஹன்பலி: லதாயிபுல் மஆரிப்)

ஷாஃபி மத்ஹப்.

“ஷஃபான் மாதத்தின் 15 ஆம் இரவு மக்ரிப் தொழுகையினை அடுத்து 1௦௦ ரக்அத்துக்கள் தொழுவது நிராகரிக்கப்படவேண்டிய பித்அத் ஆகும்.” (இமாம் நவவி: அல் மஜ்மூஉ)

சகோதரர்களே! ஷஃபான் மாதத்தின் பராஅத்துடைய இரவு சிறப்பிக்கப்பட வேண்டும். அவ்விரவினை வணக்க வழிபாடுகளில் கழிக்கவேண்டும் என்ற நமது நிலைப்பாட்டுக்கு  எந்த இமாம்களின் கருத்துக்களை சாதகமாக மேல் வரிகளில் நாம் பதிவு செய்தோமோ அதே இமாம்கள் அதே நூலில் பராஅத்துடைய இரவினை சிறப்பிப்பதற்காக இறை இல்லத்தில் ஒன்று கூடுவதை நிராகரித்துள்ளார்களே என்று தயக்கமடைய வேண்டாம். பீதி கொள்ளவேண்டாம்.

இமாம்கள் கூறியுள்ள கருத்துக்களை கவனமாகப் படித்துப்பாருங்கள். பராஅத்துடைய இரவினை சிறப்பிப்பதற்காக இறை இல்லத்தில் ஒன்று கூடுவது கூடாதுன்னு கூறும்போது ஏதேனும் ஒன்றை குறிப்பிட்டுப் பேசுகின்றர்களா? என்று கூர்ந்து பாருங்கள். அப்பொழுது, முன்னுக்குப்பின் முரணான கருத்துக்களை இமாம்கள் பதிவு செய்யவில்லை என்பதும் நமது நிலைப்பாட்டுக்கு அவர்கள் முரணானவர்களுமல்ல என்பதும் உங்களுக்குப் புரியும்.

பராஅத்துடைய இரவு சிறப்பிக்கப்படவேண்டும். அதற்காக இறை இல்லம் உட்பட விரும்பும் இடத்தில்  ஒன்று கூடலாம். விரும்பும் அமல்களைப் புரியலாம். ஆனாலும் அன்றிரவு இறை இல்லத்தில் ஒன்றுகூடி கூட்டாக 1௦௦ ரக்அத்துக்கள் தொழுகையை நிறைவேற்றவேண்டாம் என்றுதான் இமாம்கள் கூறுகின்றார்களே தவிர, எதிரணியினர் சொல்வதுபோன்று அவ்விரவு நினைவு கூறப்படக்கூடாது. அதற்காக இறை இல்லங்களில் விசேட நிகழ்வுகள் ஏற்பாடு சைய்யக்கூடாதென்று  அறிவுசார்ந்த எவரும்  கூறவில்லை என்பதைப் புரியுங்கள்.

“பராஅத்துடைய இரவில் முன்னோர்களெல்லாம் தொழுததுபோன்று விரும்பினால் தனிமையில் அல்லது கூட்டாகத் தொழ முடியும். இது நல்லதொரு கருமம். ஆனாலும்கூட 1௦௦ ரக்அத்துக்கள் போன்ற நிர்ணயிக்கப்பட்ட தொழுகையினை தொழுவதற்காக இறை இல்லத்தில் ஒன்றுகூடுவது பித்அத் ஆகும்.” (இப்னு தைமிய்யா பதாவல் குப்ரா, மஜ்மூஉல் பதாவா.)

“இது எனது மாதம்”

கிப்லா மாற்றப்பட்ட மாதம்.

“கஅபாவை முன்நோக்கித் தொழவேண்டும் என்ற ஆசை இந்த மாதத்தின் 15 நாளில்தான் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களுக்கு நிறைவேறியதது.” (ஸஹீஹ் இப்னி ஹிப்பான்.) இதனை இமாம் குர்துபி, தப்ரி, நவவி, ஹலபி  போன்றவர்களும் குறிப்பிடுகின்றனர்.

ஸலவாத்துடைய மாதம்.

“அல்லாஹ்வும் அவனது அமரர்களும் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களுக்கு ஸலவாத் சொல்கின்றார்கள். விசுவாசிகளே! நீங்களும் அவர்களுக்கு ஸலவாத்தும் சலாமும் சொல்லுங்கள்” என்ற பொருளைத் தரும் இறை வாக்கியம் இந்த மாதத்தில்தான் இறங்கியதென்று பல அறிஜர் பெருமக்கள் கூறியதாக அஸ்ஸெய்யித் முஹம்மத் அலவிய்யுள் மாலிகி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அன்னவர்கள் கூறுகின்றார்.

“இது எனது மாதம்” என்று ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் நவின்றதற்கு இவற்றினை காரணங்களாகவும் எடுத்துக்கொள்ள முடியும்.

இந்த மாதத்தினை மக்கள் மறந்துவிடுகின்றார்கள் என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் அறிவித்துவிட்டதால் அதனை எல்லோரும் நினைவு கூறமாட்டார்கள் என்பது நிஜமாகும். எனினும் இந்த மறதி எவ்வாறு உருவாக்கப்படுகிறது? யார் இதற்குத் தடையாக இருக்கின்றார்கள்? எதற்காக இவ்வாறு செய்கிறார்கள்? என்பதைக்  கண்டறிய முடிந்தால் முயற்சி செய்யுங்கள்.

рокிро░рокро▓்ропрооாрой рокродிро╡ுроХро│்