роироо்рооுроЯрой் роЗрогைрои்родு роЗро░ுрок்рокро╡ро░்роХро│்

роЪройி, роПрок்ро░ро▓் 22, 2017

родрооிро┤்роиாроЯு/ ро╣ெро▓்рооெроЯ்/

எப்படிப்பட்ட கேப்மாரித்தனம் /
மொள்ளமாரித்தனம் !?!
ஹெல்மெட் அணியாவிட்டால் ஆவணங்கள்
அனைத்தும் பறிமுதல் செய்யபடுமாம் ...
ஊழல் செய்து சிக்கிய மந்திரிகளின்
சொத்துக்களை/ஆவணங்களை பறிமுதல்
செய்ய மாட்டார்கள் ...

பல மாடி கட்டிடங்கள் இடிந்து பல பேர்
பலியாகினாலும் கட்டுவதற்கு உரிமம்
கொடுத்த அதிகாரிகளின் ஆவணங்களை
பறிமுதல் செய்ய மாட்டார்கள் ...

தவறான மருத்துவத்தால் பல பேர்
பலியாகியும் மருத்துவம் கொடுத்த
மருத்துவர்களின் சான்றிதழ்களை பறிமுதல்
செய்ய மாட்டார்கள் ...

ஆற்று மணலை கொள்ளையடிப்பதற்கு
உடந்தையாக செயல்படும் வருவாய்த்துறை
அதிகாரிகளின் பதவிகளை பிடுங்கமாட்டார்கள் ...

மலைகளே காணாமல் போகும் அளவிற்கு
கணிமவள கொள்ளைக்கு உடந்தையாக இருந்த
அதிகாரிகளின் சான்றிதழ்களை பறிமுதல்
செய்யமாட்டார்கள் ...

"மறந்து வீட்டில் விட்டுவிட்டு போய்விடும்
ஹெல்மெட்டுக்காக உங்கள் இருசக்கர
வாகனத்தின் ஆவணங்கள் பறிமுதல்
செய்யப்படுமாம்" ...

கேணப்பய ஊர்ல கிறுக்குப்பய நாட்டாமை
பண்ணாணாம்...!

ஹெல்மட் விஷயத்தில் கடுமையாக நெருக்கடி கொடுக்கும் நீதியரசர்களே காவல்துறையினரே!

உங்களிடம் சாமானிய மக்களில் ஒருவனாக சில கேள்விகள் கேட்க ஆசைப்படுகிறேன்!

ஹெல்மெட் அணியாமல் வந்த கிட்டத்தட்ட 1,40,000 பேர் வரை வழக்கு பதிவுசெய்து வாகனங்களை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் அலைய வைத்துக் கொண்டு இருக்கிறீர்களே. ...

புகை பிடித்தால் மரணம் நிச்சயம் என்று தெரிந்தும் அதில் கருகிய நுரையீரல் படத்தை மட்டும் போட்டு விட்டு விற்பனை செய்ய அனுமதி அளித்துள்ளது சரியா. ...

குடிப்பழக்கம் உயிருக்கும், வீட்டுக்கும், நாட்டுக்கும் கேடு என்று அச்சிட்டு விட்டு அதை அரசாங்கமே விற்பனை செய்வது நியாயமா....

நீங்கள் தீர்த்து வைக்க வேண்டிய கோடிக்கணக்கான வழக்குகள் நிலுவையில் இருக்கும்போது சாமானிய மக்களை வாட்டி வதைக்கும் இந்த வழக்குகள் அவசியம்தானா. ....

தமிழகத்தில் உள்ள அனைத்து சாலைகளும் தரமானதாக உள்ளது என்று உங்களால் உத்தரவாதம் அளிக்க முடியுமா....

நீதிபதிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து ஒரு பத்து நாட்களுக்கு ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனங்களில் வலம் வந்து
ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தி காட்டமுடியுமா.

ஹெல்மெட் என்பது அவசியம் தான் இல்லையென்று மறுக்க முடியாது. ..
அது நெடுந்தூர பயணங்களில் நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு பொருந்தும்..

20 - 30 கி.மீ வேகத்தில் செல்லும் நகரவாசிகளை ஏதோ குற்றவாளிகளை பிடிப்பதுபோல் விரட்டி விரட்டி பிடிப்பதுதான் உங்களுடைய விருப்பமா...

சமீபத்தில் ஹெல்மட் அணியாத ஒருத்தரை ஒரு காவலர் விரட்டி அந்த இருசக்கர ஓட்டுநர் விபத்தில் சிக்கி பலியானார்...

இந்த சட்டம் அமலுக்கு வந்த பின் இதுவரை ஹெல்மெட் அணிந்தும் முப்பதுக்கும் மேற்பட்டவர்கள் சாலை விபத்தில் பலியாகி உள்ளார்களே அதற்கு என்ன விளக்கம் தரப்போகிறீர்கள். .

சாலை விதிமுறைகளை பற்றிய தகவல்களை பள்ளிகளிலும்
கல்லூரிகளிலும் கட்டாய பாடமாக கொண்டு வந்து விழிப்புணர்வை ஏற்படுத்தலாமே...

ஹெல்மெட்_அணிவதால். ...
சிலருக்கு வியர்வை, அலர்ஜி, தலைவலி, முடி கொட்டுதல்,தலையில் புண் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகிறது. ..

கொலை,கொள்ளை,வழிப்பறி செய்யும் சமூக விரோதிகளுக்கு சாதகமாக அமைகிறது...

ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை மட்டும் வலியுறுத்தி விட்டு போகலாமே...

வண்டி ஓட்டுபவர்களுக்கு இல்லாத அக்கறை உங்களுக்கு ஏன். ...

இப்பொழுது சொல்லுங்கள்
ஹெல்மெட் அணிவதை நீங்கள் கட்டாயப்படுத்துவது எந்த வகையில் நியாயம்....

рокுродрой், роПрок்ро░ро▓் 05, 2017

роЕроо்рооா ропாро░், /роиீропே роЕроо்рооா/

தாய் பாசம் உள்ளவர்களுக்கு இந்த கவிதை வலி புரியும்

அம்மா...
நான் பிறந்து
விழுந்த போது...
உன் சேலைதான்
ஈரமானது...

நான் உறங்க...
உன் சேலைதான்
ஊஞ்சல் ஆனது..
.
நான் பால்
அருந்தும் போது...
உதட்டினை துடைத்து
உன் சேலை தான்...

எனக்கு பால்
கொடுக்கும்போது...
உன் சேலை தான்
எனக்கு திரையானது...

நான் மழையில்
நனையாமல் இருக்க...
உன் சேலை
தான் குடையானது...

நீச்சல் பழக...
என் இடுப்பில் கட்டியதும்
உன் சேலை தான்...

மழையில் நனைந்த
என் தலையை...
துவட்டியதும்
உன் சேலை தான்...

மாம் பழம் தின்று
என் கை துடைத்தும்
உன் சேலை தானம்மா...

ஆசிரியரின்
மிரட்டலுக்கு...
ஓடி ஒளிந்ததும்
உன் சேலைதான்...

அப்பா அடிக்க
வரும் போது...
என்னை ஒலித்து
வைத்ததும்...
உன் சேலை
தானம்மா...

அண்ணனுக்கு தெரியாமல்
மறைத்து வைத்து...
மிட்டாய் கொடுத்தும்
உன் சேலை தான்...

காசு எடுத்தால் என்னை
கட்டி வைத்து அடித்ததும்...
உன் சேலை தான்...

தலை வழிக்கு ஒத்தடம்
கொடுத்தும்...
உன் சேலை
தான் அம்மா...

அம்மா உன் சேலையை
தொட்டு பார்கிறேன்...

தொலைந்த இன்பத்தை
உன் கண்ணில் பார்கிறேன்...

மறு பிறவியிலும்
நீயே வேண்டுமென்று...
இறைவனிடம் கேட்கிறேன்
அம்மாவாக.....       அன்புள்ள அம்மாவுக்கு ஒரு கடுதாசி.....!!!

அம்மா...
எழுத வார்த்தைகள் இல்லாமல்
தொடங்குகிறேன்...!!

பருவம் வரை பக்குவமாய்
வளர்த்து விட்டாயே

ஊர் சண்டை இழுத்து வந்தாலும்
உத்தமன் என் பிள்ளை என்று
விட்டு கொடுக்காமல் பேசுவாயே
அம்மா..!!

நீ சொன்ன வேலைகளை விளையாட்டாய்
தட்டி சென்ற நாட்கள்..!!

செல்லம், தங்கம், "மள்ளிகை கடைக்கு "
போய்வாடா என நீ சொல்ல
இந்த வயதில் கடைக்கு போவதா?..
என நான் சொன்னேன்..!!

இன்றோ..
இங்கே கண்ணுக்கு தெரியாத
யாரோ ஒருவருக்காக ஓயாமல்
வேலை செய்கிறேன் அம்மா..!!

நெற்றி வியர்வை சிந்த பரிமாறும்
உந்தன் கை பக்குவ உணவு
நான் அறிந்த அமுதத்தின் அசல்தான்.
இருந்தும் தவறவிட்ட பல நாட்கள்..!!

கண்ணு "பத்து நிமிஷம்" பொறுத்துக்கோடா
சூடா சாப்பிட்டுட்டு போய்டுவ என நீ சொல்ல
பத்து நிமிஷமா..!, நான் வெளியல
சாப்பிட்டு கொள்கிறேன் என நான் சொல்லி
கிளம்பிய தருணங்கள்..!!

இன்றோ..
இங்கே உப்பு.,சப்பில்லா சாப்பாடு
சாப்பிடும் போதே கண்கள் கலங்க
இன்று காரம் கொஞ்சம் அதிகம்
போய்விட்டது என கடைக்காரர்
சொல்ல..!!

எனக்கு மட்டும் தெரிந்த
உண்மை..!!
பாசமுடன் நீ அளித்த உந்தன்
ஒற்றை பிடி சோற்றுக்காக இப்போது
ஏங்குகிறேன் அம்மா..!!

அன்றைய பொழுதில் சுற்றி திரிந்த நாட்கள்
வரண்ட தலை முடியில் வலுக்கட்டாயமாய்
தடவி விடும் எண்ணெய் துளிகள்
வேண்டா வெறுப்பாய் நிற்கும்
நான்..!!

இன்றும்
என் தலை முடி சகாராதான் அம்மா
உந்தன் கை ஒற்றை எண்ணெய்
துளிக்காக ஏங்கி நிற்கிறது..!!

ஆசையால்..
மழையில் நனைந்து வர
முனுமுனுத்தபடி துடைப்பாய்
உந்தன் முந்தானையில்

இப்போது நனைகிறேன்
ஆசையால் அல்ல, ஏக்கத்தால்..,
அத்தி பூக்கும் தருணமாய்..!

என்றாவது ஒருநாள் என்னை
திட்டும் நீ..! அந்த நொடியில்
எதிர்த்து பேசினேனே அம்மா..!!

இன்றோ..
இங்கே உயர் அதிகாரி திட்ட
சுரணை இல்லாத கல்லாய் நிற்கிறேனே
அம்மா..!!
என்னை மன்னித்துவிடேன் அம்மா..!!

தொலைபேசியில்...
உனக்காக, தேடி திரிந்து பார்த்து,
பார்த்து வாங்கிய புடைவையை பற்றி
சொல்வதற்கு முன் உன் வார்த்தைகள்
வருமே..!

கண்ணு உனக்காக
ஒரு சட்டை வாங்கிருக்கேன் வரும்போது
எடுத்துகிட்டு போடா என்று..!!

எப்படி அம்மா சொல்வேன் எந்தன்
அன்பையும் , எண்ணத்தையும்
என் ஏக்கங்களை சொல்ல துடிக்க...
கைபேசியை எடுத்து , அம்மா....என்று
சொல்லும் நொடிகனத்தில் மாறுகின்றது
எந்தன் வார்த்தைகள்., நான் இங்கு
நலமாய் இருக்கேன்..!நீ எப்படியம்மா
இருக்க..!!!

என் அன்னை ஆயிற்றே...
எந்தன் ஒற்றை வார்த்தையில்
புரிந்து கொள்வாய் எந்தன்
மனதை..!!

நான் சொல்ல மறந்த வார்த்தைகளை
பக்குவமாய் பட்டியளிடுவாய்..,
"வேலைக்கு ஒழுங்கா சாப்டு கண்ணு "
"மறக்காம எண்ண தேச்சி குளிடா"
"ரோட்ல பத்திரமா பாத்து போடா"
" உடம்ப பாத்துக்கோடா தங்கம் "

என் கண்கள் கட்டுபடுத்திக் கொண்டாலும்
என் இதையம் மட்டும் கதறி அழுகிறதே
அம்மா..!!

உன்னை என்னிடம் இருந்து பிரித்த
இந்த வாழ்க்கையை திட்டுவதா..?
இல்லை..
உந்தன் மேல் நான் வைத்திருக்கும்
பாசத்தை காட்டியதற்கு நன்றி சொல்வதா.?
தெரியவில்லையே அம்மா..!!

உனக்காக உயிரற்ற பொருட்களால்
அன்பு சின்னம் அமைத்து என்ன
பயன்..!!

உதிரம் என்னும் பசை தடவி
எலும்பு என்னும் கற்கள் அடுக்கி
உன் அன்பின் சின்னமாய் இருப்பேன்
அம்மா என்றும் உந்தன்
காலடியில்...சுவர்க்கத்திற்காக!

родிроЩ்роХро│், роПрок்ро░ро▓் 03, 2017

рокாрод்родிрооா ро░ро▓ி/

சொர்கத்துப் பெண்மணியான பாத்திமா(ரலி) பற்றி

*நிச்சயமாக இதில் பல படிப்பினைகள் இருக்கின்றன*

1.நபி(ஸல்) நான்காவது பிள்ளை பாத்திமா (ரலி).

2.பாத்திமா(ரலி) நபி(ஸல்) 41 ஆம் வயதில் பிறந்தார்கள்.

3. நபி (ஸல்) அவர்களின் பெண் மக்களில் ஆகா இளையவர் பாத்திமா (ரலி).

4.பாத்திமா(ரலி) திருமண வயது 15 ஆண்டுகள் 5 மாதங்கள்.

5.பாத்திமா(ரலி) கணவர் பெயர் அலி(ரலி).

6.ஹிஜ்ரி 2ஆம் ஆண்டு பாத்திமா(ரலி)க்கு திருமணம் நடந்தது.

7.பாத்திமா என்றால் "நரகத்தை விட்டும் தடுக்கப்பட்டவர்" என்று பொருள்.

8.பாத்திமா என்ற பெயர் நபிக்கு இல்ஹாம் மூலம் அறிவிக்கப்பட்டது.

9.பாத்திமா(ரலி) அவர்கள் சொர்கத்து பெண்களின் தலைவி ஆவார்கள்.

10.நபி(ஸல்) அவர்களுக்கு நுபுவத்திற்கு பின் பாத்திமா(ரலி) பிறந்தார்கள்.

11.பாத்திமா(ரலி) மீது தான் நபி(ஸல்) அதிகம் அன்பு வைத்தார்கள்

12.நபி(ஸல்) பயணம் செய்யும் போது கடைசியாக செல்லும் வீடு பாத்திமா(ரலி) வீடு.

13.பாத்திமா(ரலி) அவர்களுக்கு மொத்தம் 6 குழந்தைகள்.

14.பாத்திமா(ரலி) 3 பெண் குழந்தைகள் பெற்றார்கள்.

15.பாத்திமா(ரலி)க்கு 3 ஆண் குழந்தைகள் பிறந்தார்கள்.

16.நபி(ஸல்) பரம்பரை பாத்திமா(ரலி) மூலமாக பரவியது.

17.பாத்திமா(ரலி) சிறு வயதில் தாயை இழந்தார்கள்.

18.பாத்திமா(ரலி) அவர்களின் தாயார் பெயர் கதீஜா(ரலி).

19.பாத்திமா(ரலி)யை நபி(ஸல்) ஈரக்குலைத் துண்டு என்றார்கள்.

20.பயணத்திலிருந்து நபி(ஸல்) திரும்பியதும் முதல் சந்திப்பு பாத்திமா(ரலி).

21.நபி(ஸல்) இறந்து 6 மாதங்கள் சென்ற பின் பாத்திமா(ரலி) இறந்தார்கள்.

22.பாத்திமா(ரலி) முதல் குழந்தை ஆண் குழந்தை ஆகும்.

23.பாத்திமா(ரலி) இரண்டாவது  பெண் குழந்தை  பெயர் -உம்மு குல்தூம்(ரலி)

24.பாத்திமா(ரலி)யின் பிரபலமானகுழந்தைகள் ஹஸன், ஹுஸைன்(ரலி).

25.பாத்திமா(ரலி) முதல் பெண் குழந்தை பெயர்- ருகையா(ரலி).

26.ஹிஜ்ரி 4 ஆம் ஆண்டு ஹுசைன்(ரலி) பிறந்தார்கள்.

27.பாத்திமா(ரலி)க்கு 2 வருடம் கழித்து குழந்தை பிறந்தது.

28.பாத்திமா(ரலி) முகத்தோற்றம் நபி(ஸல்) அவர்கள் போன்றே இருந்தது.

29.பாத்திமா(ரலி)யின் மூன்றாவது பெண் குழந்தை ஜெய்னபு(ரலி).

30.பாத்திமா(ரலி)க்கு முதலில் பிறந்த குழந்தை ஹஸன்(ரலி).

31.பாத்திமா(ரலி)யின் மூன்றாவது குழந்தை முஹ்ஸின்(ரலி).

32.பாத்திமா(ரலி)யின் இரண்டாவது குழந்தை ஹுஸைன்(ரலி).

33.முஹ்சின்(ரலி) குழந்தை பருவத்தில் இறந்தது.

34.பாத்திமா(ரலி) ஒவ்வொரு மாதமும் 3 நாட்கள் நோன்பு பிடிப்பார்கள்.

35.பாத்திமா(ரலி) ரமலான் பிறை 20-யில் பிறந்தார்கள்.

36.பாத்திமா(ரலி)யின் சிறப்பு பெயர் ஸஹ்ரா ஆகும்.

37.ஸஹ்ரா என்றால் பிரியமானவர் எனப் பொருள்.

38.பாத்திமா(ரலி)க்கு 8 சிறப்பு பெயர்கள் உண்டு.

39.சித்தீ்கா-சிறப்பு பெயர்களில் ஒன்றாகும்

40.ஷியாக்கள் பிஆதிம(ரலி)க்கு 69 பெயர்கள் சூட்டியுள்ளார்கள்.

41.பாத்திமா(ரலி) மதீனாவில் பருவமெய்தினார்கள்.

42.பாத்திமா(ரலி) திருமணம் அல்லாஹ்வின் உத்தரவு படி தான் நடந்தது.

43.பாத்திமா(ரலி)யை அபுபக்ர்(ரலி) பெண் கேட்டார்கள்.

44.பாத்திமா(ரலி)யை அப்துர் ரஹ்மான் இப்னு அவுஃப் பெண் கேட்டார்கள்.

45.பாத்திமா(ரலி) பெரிதும் நாணமுள்ளவராக இருந்தார்கள்.

46.பாத்திமா(ரலி)யை உமர்(ரலி)யும் பெண் கேட்டார்கள்.

47.பாத்திமா(ரலி) திருமணம் எளிமையாக நடந்தது.

48.பாத்திமா(ரலி)யை உஸ்மான்(ரலி)யும் பெண் கேட்டார்கள்.

49.பாத்திமா(ரலி) மிகவும் இரக்க குணம் உள்ளவர்கள்.

50.பாத்திமா(ரலி) ஒருபோதும் கடுஞ்சொல் பேசியது இல்லை.

51.பாத்திமா(ரலி) வீட்டு வேலை செய்வதில் ஒரு போதும் சோம்பல் கொண்டதில்லை.

52.பாத்திமா(ரலி) ஒரேய நேரத்தில் 5 வேலை செய்வார்கள்.

53.பாத்திமா(ரலி) வீட்டு வேலை செய்யும் போது குர்ஆன் ஓதுவார்கள்.

54.பாத்திமா(ரலி) வேலைக்காரியுடன் முறை வைத்து கொள்வார்கள்.

55.பாத்திமா(ரலி) நபி(ஸல்) அவர்கள் மீது அளவு கடந்த அன்பு கொண்டிருந்தார்கள்.

56.பாத்திமா(ரலி) பழைய ஆடைகளை விரும்பி அணிவார்கள்.

57.பாத்திமா(ரலி) ஓட்டுப்போட்ட துணிகளையே அணிந்துள்ளார்கள்.

58.உலகில் ஏழைப் பெண்களில் கொடையாளி பாத்திமா(ரலி).

59.பாத்திமா(ரலி) வீட்டை விட்டு வெளியேறுவது மிக குறைவு.

60.பாத்திமா(ரலி) வியாழன்,சனி ஜியாரத் செய்வார்கள்.

61.நபி(ஸல்) அவர்கள் இறந்த பிறகு பாத்திமா(ரலி) ஒரு போதும் சிரிக்கவே இல்லை.

62.நபி(ஸல்) இறந்த பின் பாத்திமா(ரலி) இரவு பகல் அழுது கொண்டே இருந்தார்கள்.

63.உலகில் அதிகம் அழுதவர்களில் 8-வது நபர் பாத்திமா(ரலி).

64.பாத்திமா(ரலி) 29-வது வயதில் வஃபாதானார்கள்.

65.சுவனப் பெண்களில் பாத்திமா(ரலி)யே சிறந்த பெண் ஆவார்கள்.

66.மறுமையில் பெண்களுக்கு பாத்திமா(ரலி) சிபாரிசு செய்வார்கள்.

67.பெண்களில் முதன்முதலில் சுவனம் புகுபவர் பாத்திமா(ரலி) தான்.

68.பாத்திமா(ரலி)க்கு காத்தூனே ஜன்னத் என்ற புகழ் பெயர் உண்டு.

69.பாத்திமா(ரலி) உடல் இரவில் அடக்கம் செய்யப் பட்டது.

70.ஜன்னத்துல் பகீயில் பாத்திமா(ரலி)யை அடக்கம் செய்யப்பட்டது.

71.பாத்திமா(ரலி) மக்காவில் பிறந்து மதினாவில் இறந்தார்கள்.

72.பாத்திமா(ரலி) இறந்து 7-வது நாள் அலி(ரலி) திருமணம் புரிந்தார்கள்.

73.பாத்திமா(ரலி) அவர்களுடன் பிறந்தவர்கள் மொத்தம் 5 பேர்கள்.

74.பாத்திமா(ரலி)க்கு 3 சகோதரிகள்,3 சகோதரர்கள் இருந்தார்கள்.

75.பாத்திமா(ரலி) மூத்த சகோதரி பெயர்-ஜய்னபு(ரலி)
இரண்டாவது சகோதரி-ருக்கையா(ரலி)
மூன்றாவது சகோதரி-உம்முகுல்தூம்(ரலி).

76.மூன்று சகோதரர்கள்:-
●காசிம்
●இப்ராஹிம்
●அப்துல்லாஹ்

77.பாத்திமா(ரலி) எப்போதும் உளூ உடனே இருப்பார்கள்.

78.பாத்திமா(ரலி) தன் கணவன் மீது பேரன்பு கொண்டிருந்தார்கள்.

79.பாத்திமா(ரலி) பற்றி அல்லாஹ் குர்ஆன் வசனம் இறக்கி உள்ளான்.

80.பாத்திமா(ரலி) தன் மாமியாருடன் ஒரு போதும் சண்டையிடவில்லை.

81.பாத்திமா(ரலி) பெரும்பாலும் சோள ரொட்டி தான் சாப்பிட்டார்கள்.

82.பாத்திமா(ரலி)க்கு ஜாகியா,ராலியா என்ற பெயர்கள் உண்டு

83.பாத்திமா(ரலி) அதிகமாக பட்டினியாக இருந்துள்ளார்கள்.

84.பாத்திமா(ரலி) நாள் தவறாமல் இரவு வணக்கம் செய்வார்கள்.

85.பாத்திமா(ரலி) சில சமயம் கால் வீங்கும் அளவுக்கு தொழுவார்கள்.

86.பாத்திமா(ரலி) தனது வாழ்நாளில் பொய் சொன்னதில்லை.

87.பாத்திமா(ரலி) பிறர் தன்னை புகழ்வதை ஏற்க மாட்டார்கள்.

88.பாத்திமா(ரலி) சுஜுதில் இருக்கும் போது ஹுசைன்(ரலி) பிறந்தார்கள்.

89.ஹஸன்(ரலி) விஷம் வைத்து கொல்லப்பட்டார்கள்.

90.ஹுஸைன்(ரலி) சுஜுதில் இருக்கும் போது வாழால் வெட்டப்பட்டார்கள்.

91.பாத்திமா(ரலி) அவர்கள் சரியான பதில் கூறுபவர்களாக இருந்தார்கள்.

92.பாத்திமா(ரலி) உமாமாவை மருமணம் செய்து கொள்ள கணவரிடம் வசியத் செய்தார்கள்.

93.பாத்திமா(ரலி) தன்னிடம் உள்ள சிறந்த பொருளையே தானம் செய்வார்கள்.

94.பாத்திமா(ரலி) சுபுஹுக்கப் பின்னர் தூங்க மாட்டார்கள்.

95.பாத்திமா(ரலி)யும் அலி(ரலி)யும் அரபுக் கவிதைகளில் உரையாடிக் கொள்வார்கள்.

ропாро░ுроХ்роХாроХро╡ுроо் роХாрод்родிро░ுроХ்роХாродு,

1. மூன்று விஷயங்கள் யாருக்காகவும் காத்திருப்பது இல்லை.

நேரம்
இறப்பு
வாடிக்கையளர்கள்

2. மூன்று விஷயங்கள் சகோதர சகோதரிகளையும் விரோதியாக்கும்.

நகை
பணம்
சொத்து

3. மூன்று விஷயங்கள் யாராலும் திருடமுடியாது.

புத்தி
கல்வி
நற்பண்புகள்

4. மூன்று விஷயங்கள் ஞாபகம் வைத்திருப்பது அவசியம்.

உண்மை
கடமை
இறப்பு

5. மூன்று விஷயங்கள் வெளிவந்து திரும்புவதில்லை.

வில்லிலிருந்து அம்பு
வாயிலிருந்து சொல்
உடலிலிருந்து உயிர்

6. மூன்று பொருள்கள் வாழ்க்கையில் ஒருமுறைதான் கிடைக்கும்.

தாய்
தந்தை
இளமை

7. இந்த மூன்று பேர்களுக்கும் மரியாதை கொடு.

தாய்
தந்தை
குரு

நம்மை உயர்த்தும் ஏழு விஷயங்கள் :

1) ஏழ்மையிலும் நேர்மை
2) கோபத்திலும் பொறுமை
3) தோல்வியிலும் விடாமுயற்சி
4) வறுமையிலும் உதவிசெய்யும் மனம்
5) துன்பத்திலும் துணிவு
6) செல்வத்திலும் எளிமை
7) பதவியிலும் பணிவு

வழிகாட்டும் ஏழு விஷயங்கள் :

1) சிந்தித்து பேசவேண்டும்
2) உண்மையே பேசவேண்டும்
3) அன்பாக பேசவேண்டும்
4) மெதுவாக பேசவேண்டும்
5) சமயம் அறிந்து பேசவேண்டும்
6) இனிமையாக பேசவேண்டும்
7) பேசாதிருக்க பழக வேண்டும்

நல்வாழ்வுக்கான ஏழு விஷயங்கள் :

1) மகிழ்ச்சியாக இருக்க பழகுங்கள்
2) பரிசுத்தமாக சிரிக்ககற்று கொள்ளுங்கள்
3) பிறருக்கு உதவுங்கள்
4) யாரையும் வெறுக்காதீர்கள்
5) சுறுசுறுப்பாக இருங்கள்
6) தினமும் உற்சாகமாக வரவேற்கத்தயாராகுங்கள்
7) மகிழ்ச்சியாக இருக்க முயற்சி மேற்கொள்ளுங்கள்

கவனிக்க ஏழு விஷயங்கள் :

1) கவனி உன் வார்த்தைகளை
2) கவனி உன் செயல்களை
3) கவனி உன் எண்ணங்களை
4) கவனி உன் நடத்தையை
5) கவனி உன் இதயத்தை
6) கவனி உன் முதுகை
7) கவனி உன் வாழ்க்கையை

சும்மா ஏதேனும் படத்தை பகிர்ந்தா நல்லது நடக்கும்னு நம்பி பகிரும் நண்பர்களே இப்பதிவை நம்பி பகிர்ந்தால் கண்டிப்பாக மேற்சொன்ன நல்லது நடக்கும்.

роЮாропிро▒ு, роПрок்ро░ро▓் 02, 2017

роЗроЬ்родிро╣ாродுроо் роЕродு рокро▒்ро▒ிроп роиро╡ீрой роЪிрои்родройைроХро│ுроо்,

இஜ்திஹாதும் அது பற்றிய நவீன சிந்தனைகளும

எல்லாக் காலத்துக்கும் எல்லா சூழலுக்கும் மனித நலன்களைப் பாதுகாத்து அவனது பிரச்சினைகள் சகலதுக்குமான தீர்வை வழங்குவதற்கு இஸ்லாமிய ஷரீஆ உத்தரவாதம் வழங்கியிருக்கிறது.

“இன்றைய தினம் உங்களுக்காக நான் உங்களுடைய மார்க்கத்தைப் பரிபூரணமானதாக ஆக்கிவைத்துவிட்டேன்; என்னுடைய அருட்கொடையை நான் உங்கள் மீது முழுமைப்படுத்தியும் விட்டேன். இன்னும் உங்களுக்காக இஸ்லாமை மார்க்கமாகப் பொருந்திக்கொண்டுவிட்டேன்.” (அல்மாஇதா: 3)

அவ்வகையில் உலகில் இறுதியாக இறக்கியருளப்பட்ட தெய்வீக வெளிப்பாடான முஹம்மதிய ஷரீஆ மறுமை வாழ்வுக்கான வழிகாட்டல்களை வழங்குவது போலவே இவ்வுலகுக்கான வாழ்வியல் வழிகாட்டல்கள் அனைத்தையும் பொதிந்ததாக இருக்கிறது. அதேநேரம் இஸ்லாமிய ஷரீஆ சமூக வாழ்வின் தேவைகளிலும்தான் தனி மனித சார் பிரச்சினைகளிலும்தான் சமநிலையான வழிகாட்டல்களைத் திருப்திகரமாக முன்வைக்கிறது.

இதனால் இஸ்லாமிய சட்டவியல் நெகிழ்வுத் தன்மை கொண்டதாகவும் புதிதாய்த் தோன்றும் பிரச்சினைகளுக்கும் தீர்வு சொல்லும் இயலுமை கொண்ட உயிரோட்டம் கொண்டதாகவும் இருந்து வருகிறது.

இப்பின்னணியில் இஸ்லாமிய சட்டவியலின் உயிரோட்டத் தன்மையையும் வளர்ச்சியையும் நிலைத் தன்மையையும் பேணி இயங்கு நிலையில் வைத்திருக்கும் சாதனமாக இஜ்திஹாத் காணப்படுகிறது.

இஜ்திஹாத் என்பது…

இஜ்திஹாத் என்ற பதத்தை இமாம் அபூஹாமித் அல்கஸ்ஸாலி அவர்கள் தனது ‘முஸ்தஸ்ஃபா’ எனும் நூலிலே மொழி ரீதியாகப் பின்வரும் அமைப்பில் விளக்குகிறார்கள். (அல்ஜீம் வல்ஹாஉ வத்தால்) ஆகிய எழுத்துக்களின் அடியாகத் தோன்றுகிறது. இதன் கருத்து முயற்சியை செலவளித்தல் என்பதாகும். அச்சொல் (அல்இஃப்திஆல்) வஸ்னைப் பெறுகையில் இன்னும் கருத்தூன்றிய சொல்லாக உருவாகிறது. அப்போது இஜ்தஹத எனும் சொல் ஜஹத வை விடவும் மேலான கருத்துக் கொண்டதாகிறது.

அடுத்து இஸ்லாமிய பரிபாஷை ரீதியில் இச்சொல்லைத் தெளிவுபடுத்தும் போது இமாம் ஆமிதி அவர்களது ‘அல்இஹ்காம் ஃபி உஸூலில் அஹ்காம்’  நூல் தரும் விளக்கம் அலாதியானது; போதுமானது. அவர் ‘ஷரீஆ சட்டமொன்றின் முடிவைப் பெறும் நோக்கில் இனி முடியாது எனக் உணரும் அளவுக்கு முயற்சியைப் பிரயோகித்தல்’ என்கிறார். இமாம் ஷவ்கானியின் ‘இர்ஷாதுல் ஃபுஹூல்’ நூலின் வரைவிலக்கணமும் குறிப்பிடக் கூடிய ஒன்றே. ‘இஸ்லாமிய ஷரீஆ சட்டங்களின் முடிவொன்றை நெருங்குவதற்காக முயற்சியை இயலுமான அளவின் உச்சகட்டத்திற்குப் பிரயோகித்தல்’ என வரையறுக்கிறார் இமாம் ஷவ்கானி.

ஒரே வரியில் சொல்வதாக இருந்தால் இஜ்திஹாத் என்பது குறிப்பிட்ட விவகாரங்களில் இஸ்லாமிய ஷரீஆ எடுக்கும் நிலைப்பாட்டைக் கண்டறிவதற்காக நிலையான அல்குர்ஆன் மற்றும் அஸ்ஸுன்னா ஆகிய ஷரீஆ மூலாதாரங்களையும் சட்டவாக்க வழிமுறைகளையும் பிரயோகித்து சரியான முடிவைக் கண்டடைவதற்கான முயற்சியை மேற்கொள்ளுதல் எனலாம்.

இஸ்லாமிய அறிவுச் செயற்பாடான இஜ்திஹாதிற்கு நன்மைகள் உண்டு என இஸ்லாம் கூறுகின்றது. புகாரியில் பதிவு செய்யப்பட்டிருக்கும் நபிமொழியொன்றிலே “தீர்ப்புச் சொல்பவர் இஜ்திஹாத் செய்து அவரது முடிவு சரியாக இருந்தால் அவருக்கு இரண்டு கூலிகள் உண்டு. இஜ்திஹாத் செய்து அவரது முடிவு பிழையாக இருந்தால் அவருக்கு ஒரு கூலி உண்டு.” என இஜ்திஹாதுக்குத் தூண்டுதல் வழங்கப்படுகிறது.

இஸ்லாமிய வரலாற்றில் இஜ்திஹாத்…

நபித்துவ ஆட்சிக் காலத்திலேயே நபித்தோழர்களுள் முக்கிய ஒருவரான முஆத் இப்னு ஜபல்(ரழி) அவர்கள் யெமன் பிராந்தியத்திற்கான ஆளுநராக நியமனம் செய்யப்படுகிறார்கள். அப்போது மக்களுக்கான தீர்வுகளை வழங்குவது குறித்துத் தூதர்(ஸல்) அவர்கள் தோழரிடம் “உம்மிடம் பிரச்சினைகள் ஏதும் வந்தால் எவ்வாறு தீர்த்து வைப்பீர்?” என வினவிய போது, முஆத் இப்னு ஜபல்(ரழி) அவர்கள் “அல்லாஹ்வின் வேதத்தில் உள்ளவற்றைக் கொண்டு தீர்ப்பளிப்பேன்” என பதில் கூறினார்கள். அப்போது தூதரவர்கள், “அல்லாஹ்வின் வேதத்தில் தீர்வு இல்லாவிடின் என்ன செய்வீர்?” எனத் வினவிய போது, “அல்லாஹ்வின் தூதரின் ஸுன்னாவிலிருந்து தீர்ப்பளிப்பேன்” என்கிறார்கள். அதன் பின்பு “அல்லாஹ்வின் தூதரின் ஸுன்னாவிலும் தீர்வு இல்லாவிடின் என்ன செய்வீர்?” என மீளவும் கேட்ட பொழுதில் “எனது அறிவிற்குட்பட்ட வரைக்கும் பூரணமாக இஜ்திஹாத் செய்து தீர்வு சொல்வேன்” எனக் கூற தூதரவர்களும் ஆமோதித்து, அல்லாஹ்வையும் புகழ்ந்தார்கள்.

நிலைமை இவ்வாறிருக்க இடைக்காலத்தில் இஜ்திஹாதின் வாயில் மூடப்பட்டதாக ஃபத்வா வழங்கப்பட்டு இஸ்லாமிய அறிவுத்துறைகளின் தேக்கநிலை திறந்துவிடப்படுகிறது. இக்காலவெளிகளில் இஜ்திஹாத் பற்றிய மாற்றுச் சிந்தனையாளராக வரலாற்றுள் புரட்சிகரமாக ஊடுறுவுபவராக இமாம் இப்னு தைமியா(ரஹ்) அவர்கள் காணப்படுகிறார்கள். இவ்வகையில் தேக்கம் மிகுந்து காணப்பட்ட வேளையொன்றில் இமாம் இப்னு தைமியா(ரஹ்) அவர்களது பணி பிரமாண்டமானது. இதற்கு அன்னாரது 30 க்கும் மேற்பட்ட பாகங்கள்கொண்ட மஜ்மூஉல் ஃபதாவா மாத்திரமே போதிய சான்றாகும்.

இக்காலத்தில் இஜ்திஹாதின் வாயில் மூடப்பட்டமை குறித்து இமாம் யூசுப் அல்கர்ளாவி அவர்கள் “இஜ்திஹாதின் வாயில் மூடப்பட்டதே ஒரு இஜ்திஹாதின் முடிவுதான்; எனவே நாம் இன்னொரு இஜ்திஹாத் மூலம் பழைய இஜ்திஹாதை முறித்துவிடுகிறோம்” என அலாதியாக விமர்சனம் செய்கிறார்கள்.

இப்பின்னணியில் தாரிக் ரமழான் முன்வைக்கும் கருத்துக்களும் முக்கியமானவை. அவர் “இஜ்திஹாதின் வாயில்கள் ஒருபோதும் மூடப்பட மாட்டாது. இஸ்லாமின் பெயரால் அவ்வாறான முடிவொன்றைப் பிரகடனம் செய்ய எந்தப் புலமையாளருக்கும் உரிமை கிடையாது. ஏனெனில் இவ்வகையான பிரகடனங்கள் இயல்பாகவே இஸ்லாமுக்கு எதிரானது. உண்மையில் இஜ்திஹாத் இஸ்லாமிய சட்டவியலின் மூன்றாவது மூலாதாரமாக இருப்பதோடு அதுவே நீதித்துறையின் முழுப் பொறுப்பையும் சுமக்கிறது” என்கிறார்.

ஏன் தற்காலத்தில் இஜ்திஹாத் அவசியம்?

உண்மையில் இன்று ஒரு சாரார் வளம் கொழிக்கும் எம் முதுசங்களான ஃபிக்ஹுத் துறையின் மீதும் எம் முன்னோர்களான மகத்தான அறிஞர்கள் மீதும் கொண்ட அளவு கடந்த நம்பிக்கையின் விளைவால் இஜ்திஹாத் இக்காலத்திற்குத் தேவையற்றது; அவர்களது இஜ்திஹாத்களே எமக்கும் போதுமானது; என்ற நிலைபாட்டிலே இருந்து வருகின்றனர். என்ற போதிலும் அவர்கள் காலத்தை விட்டும் வித்தியாசப்பட்ட சூழலொன்றை எதிர்கொள்ளும் நாம் புதிய இஜ்திஹாதின் பால் தேவையுடையவர்களாக மாறுவோம் என்பது நிதர்சனமானது.

காலத்துக்குக் காலம் தோன்றும் பிரச்சினைகள் புதிதானவை; முன்னைய காலங்களை விட்டும் வேறுபட்டவை; புதிய தீர்வுகளை வேண்டி நிற்பவை என்பது இஜ்திஹாதின் தேவையை இன்னும் ஊன்றிச் சொல்கிறது. ஷெய்க் கர்ளாவி அவர்களுடைய வார்த்தைகளில் சொல்வதானால் கைத்தொழில் புரட்சியாலும் நவீன தொழிநுட்பத்தின் அபரிமித வளர்ச்சியாலும் தொடர்பு சாதனங்களின் தலைகீழ் மாற்றத்தாலும் அக்காலத்தோடு கற்பனைபண்ணிக் கூடப் பார்க்க முடியாத இக்காலத்தில் இஜ்திஹாத் என்பது முன்னைய இமாம்களின் காலத்தை விடவும் மிக அவசியமானது எனலாம். இதற்கு மிகச் சிறியதொரு உதாரணமாகக் குறுகிய கால மற்றும் இட பரிமாணங்களுக்கே தன் ஃபத்வாக்களை இமாம் ஷாபிஈ அவர்கள் மாற்றியமையைக் குறிப்பிட்டுக் கூறலாம்.

நாம் இன்று வேண்டி நிற்கும் இஜ்திஹாத்…

இக்காலம் நம்மிடம் வேண்டிநிற்கும் இஜ்திஹாத் நம்மை இஸ்லாம் எனும் மார்க்கத்தைக் கொண்டு இவ்வுலகில் வாழ்வதனை நோக்கிய இஜ்திஹாதாகும். இது நம் முஸ்லிம் சமூகத்தின் அத்தியாவசியத் தேவையாக இருக்கிறது.

அவ்வகையில் நாம் வேண்டும் இஜ்திஹாத் இரு வகை என்கிறார் இமாம் யூஸுப் அல்கர்ளாவி அவர்கள்:

முதலாவது வகை: ஏற்கனவே இமாம்களால் மத்ஹப்களுக்குட்பட்டும் வெளியாலும் செய்யப்பட்ட இஜ்திஹாத்களுக்கிடையில் ராஜிஹான கருத்தைப் பெறுவதற்கான இஜ்திஹாதாகும்.

இரண்டாவது வகை: புதிதாகத் தோற்றம் பெறுகின்ற பிரச்சினைகள் மற்றும் இதற்கு முன்னர் தோன்றிய இமாம்கள் பேசாத பிரச்சினைகள் பற்றி ஆரம்பத்திலிருந்து இஜ்திஹாத் செய்வதனைக் குறிக்கும். அவ்வகையில் இப்பகுதியினுள் தீர்வு காணப்படாத அல்லது புதிய கோணத்தில் தீர்வு சொல்லப்பட வேண்டிய பழைய பிரச்சினைகளும் கூட உள்ளடங்கியிருக்கும்.

இக்காலத்தில் இஜ்திஹாதை வேண்டி நிற்கும் இரு புதிய துறைகள்:

இமாம் கர்ளாவி அவர்கள் இன்றைய கால இஜ்திஹாதைப் புதிதாக வேண்டி நிற்கும் இரு துறைகளாக பொருளாதாரம் மற்றும் வைத்தியத் துறையை அடையாளப்படுத்துகிறார். இவ்விரண்டு துறைகளும் இன்று கணத்துக்குக் கணம் மாற்றங்களை உள்வாங்கிக் கொண்டே இருக்கும் துறைகளாகும். எனவே இத்துறைகளுக்கான இஸ்லாமியத் தீர்வுகளையும் இஸ்லாமிய மாற்றீடுகளையும் வழங்குவதற்கு இஜ்திஹாதின் தேவை துரிதமாக இருக்கிறது.

குலுக்கல் சீட்டு வியாபார முறைகள், உண்டியல் வியாபார முறைகள், கழிவு விற்பனை முறைகள் என சந்தேகங்களும் மறைமுகமாக ஹராம்கள் மலிந்தும் காணப்படும் புதிய பொருளாதார முறைமைகள் இஜ்திஹாதுக்கான பலமான அறைகூவலை முன்வைக்கிறது. இவற்றுள் ஹராம்-ஹலால் வேறுபாட்டைத் தெளிவாக முன்வைப்பதோடு உரிய மாற்றீடுகளையும் முன்வைக்க வேண்டிய அவசியம் காணப்படுகிறது. இல்லாத பட்சத்தில் இஸ்லாமிய ஃபிக்ஹுத் துறையும் வலுவிழந்து போய்விடும்.

இவ்வாறுதான் அறிவியலின் துரித வளர்ச்சியால் வெகு முன்னேற்றம் கண்டிருக்கும் வைத்தியத் துறையும் இஜ்திஹாதின் பலமான தேவையை உணர்த்தும் பகுதியாகும். குடும்பக் கட்டுப்பாடு, உடல் உறுப்பு மாற்றுச் சிகிச்சைகள் எனத் தினம் தினம் பிறக்கும் கேள்விகள் இன்று எம் அறிஞர்களைத் திணறடித்து புதிய அளவுகோல்களில் இஜ்திஹாத் நோக்கி நிர்ப்பந்திக்கிறது.

இக்கால இஜ்திஹாதின் வடிவங்கள்:

மூன்று வகைகளில் இஜ்திஹாத் இக்காலங்களில் மேற்கொள்ளப்படுகிறது.

முதலாவது: மத்ஹப்களுக்குள்ளால் கருத்துக்களை ராஜிஹ் செய்வதில் தொடங்கி பின்னர் மத்ஹப்களுக்கிடையிலும் அதற்கு வெளியாலும் ஒப்பீடு செய்வது வரை சென்ற இஜ்திஹாத் ஆகும். இதன் ஆரம்பத் வடிவமாக இந்திய உபகண்டத்தில் தோன்றிய ‘மஜல்லத்துல் அஹ்காம் அல்அத்லிய்யா’ காணப்படுகின்றது.

இரண்டாவது: ஃபத்வாக்கள் வடிவில் இஜ்திஹாத் தோற்றம் பெற்றுள்ளமையை இரண்டாவது வகையாகக் குறிப்பிடலாம். அது இன்று பல்வேறு வடிவங்கள் பெற்றிருக்கின்றது. உத்தியோகபூர்வமாக அரசுகள், அறிஞர் குலாம்களின் ஃபத்வாக்கள் முதற்கொண்டு குறித்த துறைசார் நிறுவனங்கள், அமைப்புக்கள் தம்மோடு தொடர்பான ஃபத்வாக்களைத் தொகுத்து வெளியிடுவது வரைக்கும் விசாலித்திருக்கின்றது. இவற்றுக்கு உதாரணமாக சவூதியின் லஜ்னதுத் தாயிமா லில் ஃபதாவா, அஸ்ஹர் பல்கலைக்கழகத்தின் லஜ்னதுல் ஃபத்வா முதற்கொண்டு சஞ்சிகைகளின் ஃபத்வாத் தொகுப்புக்கள் வரைக்கும் ஏராளம் கூறலாம்.

மூன்றாவது: ஆய்வுகள் மற்றும் கற்கைகளின் போதான இஜ்திஹாத் ஆகும். குறித்த துறைகளில் சிறப்பாக மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் கொண்டுதரும் புதிதான சிறப்பான முடிவுகள் இப்பகுதிக்குள் உள்ளடங்கும். இவற்றின் மூலமே மிக உறுதியான, மிக மேலான, உண்மைக்கு மிக நெருக்கமான முடிவுகள் கிடைக்கப்பெறுகின்றன.

இஜ்திஹாத் தொடர்பான நவீன கருத்துக்கள் சில…

இஜ்திஹாத் சிந்தனைப் பின்னணியில் மார்க்கம் சிந்தனா ரீதியாகப் புத்துயிர்ப்புச் செய்யபடவேண்டும் என்ற கருத்தை விளக்குகையில் இமாம் அல்கர்ளாவியின் கருத்துக்கள் முக்கியம் பெறுகின்றது:

“இஜ்திஹாத் உயிர்ப்பிக்கப்படல் வேண்டும். இஜ்திஹாத் இல்லாது ஷரீஆ உயிர்வாழ முடியாது. இஜ்திஹாத் ஆரம்ப கால அறிஞர்களின் கூற்றுக்களிலிருந்து தேர்ந்தெடுக்கும் முறையாக இருக்க முடியும் அல்லது ஆரம்ப காலம் அறிந்திராத நவீன கால இஜ்திஹாதாக இருக்கவும் முடியும். அதற்கும் அப்பால் சிறு கிளைப் பகுதியில் மேற்கொள்ளப்படும் இஜ்திஹாதாக இருக்கவும் முடியும் அல்லது பிரதான அடிப்படைப் பகுதியொன்றில் மேற்கொள்ளப்படும் இஜ்திஹாதாக இருக்கவும் முடியும். தனிநபர் அல்லது குழு அடிப்படையிலான இஜ்திஹாதாக அது இருக்கவும் முடியும். இஜ்திஹாதுக்கான அறிவு மற்றும் பண்பாடு ரீதியான நிபந்தனைகளைப் பெற்றவர்கள் மாத்திரமே இப்பகுதியில் தலையிடவேண்டும். பொருத்தமான இடங்களில் இஜ்திஹாத் மேற்கொள்ளப்படல் என்பதன் மூலம் கருதப்படுவது முழு உம்மத்தையும் ஒன்றிணைக்கும் நம்பிக்கை, சிந்தனை, உணர்வு, செயற்பட்டுப் பகுதிகளில் அல்லாமல் பல கருத்துக்களுக்கு இடம்பாடான ஏனைய பகுதிகளில் இஜ்திஹாத் செய்வதாகும். இஜ்திஹாத் செய்ய முடியாத திட்டவட்டமான பரப்புக்கள் (கத்இய்யத்) மிகச் சொற்பமானவை. எனினும் முக்கியமானவை. ஏனெனில் எச்சந்தர்ப்பத்திலும் மாற்றமுறா நிலையான பகுதிகள் அவை. நடுநிலைச் சிந்தனை ஒழுங்குபடுத்தப்பட்ட புனர்நிர்மாணத்தை நோக்கி அழைக்கிறது. நவீன காலத்திற்கேற்ப வடிவமைக்கப்படும் சமநேரத்தில் தெளிவான‌ இலக்குகளையும் வழிமுறைகளையும் கொண்ட இஜ்திஹாதை நோக்கி அது அழைக்கின்றது. இஜ்திஹாதின் வாயிலை மூடி அனைத்து அறிஞர்களையும் கண்மூடி பின்பற்றும் நிலைக்கு தூண்டும் முறைமையை நடுநிலை சிந்தனை மறுக்கிறது. மறுபுறம் எவ்வித நிபந்தனையோ வரையறையோ இன்றி வருகின்றவர் போகின்றவர்களுக்கெல்லாம் இஜ்திஹாதின் வாயிலை திறந்து கொடுக்கும் நிலைப்பாட்டையும் அது மறுக்கிறது.”

நவீன உலக ஒழுங்கு எதிர்நோக்கும் பொருளாதாரம், அரசியல், சமூக பிரச்சினைகளுக்கு முழுமையான தீர்வு முன்வைக்கப்பட வேண்டுமாயின் பாரம்பரிய இஸ்லாமிய சிந்தனை முறைமையில் இஜ்திஹாத் மேற்கொள்ளப்பட வேண்டும் எனக் கூறும் தாரிக் ரமழானின் கருத்துக்களும் இவ்விடம் மனங்கொள்ளத் தக்கவை. அவர் இரண்டு முக்கிய சிந்தனைகளை நவீன இஜ்திஹாத் உள்வாங்க வேண்டும் என வலியுறுத்துகிறார்:

இஸ்லாமிய ஷரீஆவின் அடிப்படை மூலாதாரங்கள் மீள்வாசிப்புக்கு உட்படுத்தப்படல். அவ்வகையில் குர்ஆன் , சுன்னா , இஜ்மா என தொடரும் மூலாதாரங்களில் ‘வாழும் சூழல்’ (Context) அல்லது உலகியற் கலைகள் முக்கிய இடத்தை பெற வேண்டும். உலகியற் கலைகள் என்பது இயற்கை விஞ்ஞானம் (Experimental Science)  மற்றும் சமூக விஞ்ஞானம் (Social Science)  ஆகிய இரு பகுதிகளை உள்ளடக்குகிறது. இயற்கை விஞ்ஞானத்தில் Chemistry, Physics, Biology, Neuroscience, Medicine  போன்ற பகுதிகள் உள்ளடங்கும். சமூக விஞ்ஞானத்தில் Sociology, Political science, Economy போன்ற பகுதிகள் அடங்குகின்றன.

சமூக விஞ்ஞானக் கலைகளில் துறைபோனவர்கள் (Scholars of Context)  மார்க்க அறிஞர்களின் (Scholars of Text)  தரத்திற்கு சமமானவர்களாகக் கருதப்பட வேண்டும் என்ற கருத்தையும் தாரிக் ரமழான் விரிவாகப் பேசுகிறார். சட்ட அதிகாரம் இரு சாராருக்கும் சம அளவில் பகிர்ந்தளிக்கப்படுகிறது. இவ்விரு வகையினரும் தமது கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும் போதேநவீன காலம் எதிர்நோக்கும் பொருளாதாரம், அரசியல், சமூகவியல் பிரச்சினைகளுக்கு முழுமையான தீர்வுமுன்வைக்கப்பட முடியும். குறிப்பாக ஷரீஆவின் இறுதி இலக்குகள் நோக்கி வாழ்வமைப்பை நகர்த்திச் செல்வதற்கு இவ்வகையான கருத்துப் பறிமாற்றம் அவசியம்.

இஜ்திஹாதின் இன்மையானது சிந்தனைத் தேக்கம் மற்றும் மனித இயல்பினைச் சிதைத்துவிடும் இயல்புடையது. அது மானிட  சிறப்பம்சமாகக் கருதப்படும் அறிவாற்றலைக் கொள்ளையிடுகிறது. அல்லாஹ்வுடைய ஆதாரங்களை விட்டும் மனிதனைத் தடுத்துவிடக் கூடியது. இன்னும் நவீன காலத்தில் இஸ்லாமிய உலகை நோக்கி இஜ்திஹாத் புத்துயிர்ப்பு சிந்தனையை  உரத்துப் பேசியோர்/பேசுவோர் ஏராளம் இருக்கின்றனர். அனைவரும் இஸ்லாமிய சிந்தனையை இக்கால மயப்படுத்தி இஸ்லாமை உயிரோட்டத்துடன் வழங்க உழைத்துக் கொண்டிருக்கும் அறிஞர் பெருமக்களாவர்.

உசாத்துணைகள்:

அல்இஜ்திஹாத் ஃபி அஷ்ஷரீஆ அல்இஸ்லாமிய்யா
கலாநிதி அல்லாமா யூஸுப் அல்கர்ளாவி
அல்இஜ்திஹாத் அல்மஸ்லஹி
கலாநிதி அஹ்மத் அர்ரய்ஸூனி

рокிро░рокро▓்ропрооாрой рокродிро╡ுроХро│்