роироо்рооுроЯрой் роЗрогைрои்родு роЗро░ுрок்рокро╡ро░்роХро│்

родிроЩ்роХро│், роЬூро▓ை 31, 2017

роЗрои்родிропாро╡ை роЖроЯ்роЪி роЪெроп்родро╡ро░்роХро│்,

இந்தியாவில்  ஆட்சி புரிந்தவர்களும்..ஆண்டும்....
முஹம்மது கோரி முதல் மோடி வரை....

1193  : முஹம்மது கோரி
1206   :குத்புதீன் ஐபக்
1210   :ஆரம்ஷா
  1211  : அல்தமிஷ்
  1236  : ருக்னுத்தீன் ஷா
   1236  : ரஜியா சுல்தானா
    1240  : மெஹசுத்தீன் பெஹ்ரம்ஷா
     1242  : ஆலாவுத்தீன் மஸூத் ஷா
      1246  : நாஸிருத்தீன் மெஹ்மூத்
      1266  : கியாசுத்தீன் பில்பன்
       1286  : ரங்கிஷ்வர்
        1287  : மஜ்தன்கேகபாத்
         1290  :ஷம்ஷீத்தீன் கேமரஸ்

(கோரி வம்ச ஆட்சி முடிவு "97 வருடம்)

கில்ஜி வம்சம்

1290 :1 ஜலாலுத்தீன் பெரோஸ் கில்ஜி
1292  :2 அலாவுதீன் கில்ஜி
  1316  :4ஷஹாபுதீன்  உமர் ஷா
   1316  : குதுபுத்தீன் முபாரக் ஷா
    1320  : நாஸிருத்தீன் குஸரு ஷா

( கில்ஜி வம்ச ஆட்சி முடிவு 30 வருடம்)

துக்ளக்Thaglakவம்சம்

1320  :கியாசுத்தீன் துக்ளக்(1)
1325  : (2) முஹம்மது பின் துக்ளக்
1351  :(3) பெரோஸ்ஷா துக்ளக்
1388  : (4) கியாசுத்தீன் துக்ளக்
1389  : அபுபக்கர் ஷா
1389  :மூன்றாம் முஹம்மது துக்ளக்
1394  :அலெக்சாண்டர் ஷா(7)
1394  :(8) நாஸிருத்தீன் ஷா
1395  : நுஸ்ரத் ஷா
1399  :(10) நாநாஸிருத்தீன் முஹம்மது ஷா.
1413  :(11)தவுலத் ஷா

(துக்ளக் வமிச ஆட்சி 94வருடம்)

சையித் வம்சம்

1414  :1.கஜர்கான்
1421  :2 . மெஹசுத்தீன் முபாரக் ஷா
1434  : 3.மு3 முஹம்மது ஷா
1445  :4 அலாவுதீன் ஆலம் ஷா

(சையத் வம்சம் 37 வருடம்)

லோதி வம்ச ஆட்சி

1451  : பெஹ்லூல் லோதி
1489  : அலெக்சாண்டர் லோதி
1517  : இப்ராஹிம் லோதி
(லோதி ஆட்சி 75 வருடம்)

முகலியாஆட்சி

1526  : ஜஹிருத்தீன் பாபர்
1530 : ஹிமாயூன்

சூரி வமிச ஆட்சி

1539   : ஷேர்ஷா சூரி
1545  :அஸ்லம் ஷா சூரி
1552  :மெஹ்மூத் ஷா சூரி
1553   :இப்றாஹிம் சூரி
  1554  :பர்வேஸ் ஷா சூரி
1554 :முபாரக் கான் சூரி
1555 :அலெக்சாண்டர் சூரி

(16வருடம் சூரி ஆட்சி)

முகலாயர் ஆட்சி

1555  :ஹிமாயூன்
1556  :ஜலாலுத்தீன் அக்பர்
1605  :ஜஹாங்கீர் சலீம்
  1628  :ஷா ஜஹான் 
   1659 : ஒளரங்கசீப்
   1707 :ஷாஹே ஆலம்
   1712  :பஹாத்தூர் ஷா
    1713 :பஹாரோகஷேர்
    1719  :ரேபுதாராஜத், நேகஷ்யார்&மெஹ்மூத் ஷா
  1754  :ஆலம்கீர்
   1759 :ஷாஹேஆலம்
   1806 :அக்பர் ஷா
    1837 :பஹதூர்ஷா ஜபர்

(முகலாயர் ஆட்சி 315 வருடம் )

ஆங்கிலேயர் ஆட்சி

1858 : லார்டு கேங்க்
1862 :லார்டு ஜேம்ஸ்பரோஸ்எல்ஙன்
1864 : லார்ட் ஜான் லோதேநஷ்
1869 :லார்டு ரிசர்டு
1872 :லார்டு நோடபக்
1876 ; லார்டுஎட்வர்ட்
1880 :லார்ட் ஜார்ஜ் ரிப்பன்
1884 :லார்டு டப்ரின்
1894 :  லார்டு ஹேஸ்டிங்
1899 : ஜார்ஜ் கர்னல்
1905: லார்டு கில்பர்ட்
1910 :லார்டு சார்லஸ்
  1916 :லார்ட் பிடரிக்
  1921 : லார்ட் ரக்ஸ்
   1926:.லார்ட் எட்வர்ட்
   1931: லார்ட் பெர்மேன்வெலிங்டன்
  1936 :லார்டு ஐ கே
   1943:லார்டு அரக்பேல்
     1947 : லார்டு மவுண்ட்பேட்டன்

( ஆங்கிலேயர்கள் ஆட்சி முடிவு)

சுதந்திர இந்தியாவின் ஆட்சி

1947:ஜவஹர்லால் நேரு
1964:குல்சாரிலால் நந்தா
1964:லால் பகதூர் சாஸ்திரி
  1966:குல்சாரிலால் நந்தா
   1966: இந்திராகாந்தி
   1977: மொராஜி தேசாய்
    1979: சரண்சிங்
     1980:இந்திராகாந்தி
1984:ராஜீவ்காந்தி
1989:V P சிங்
1990:சந்திரசேகர்
1991:. PN ராவ்
1992:A.B.வாஜ்பாய்
1996:  A.Jகொளடா
1997:L.K.குஜ்ரால்
1998:A.B.வாஜ்பாய்
2004 :மன்மோஹன்சிங்
2014:நரேந்திர மோடி

роиாро▒்роХாро▓ிропிро▓் роЕрооро░்рои்родு родொро┤ுро╡родு,

நாற்காலியில் அமர்ந்து தொழுவது அறவே கூடாது.
மாநில ஜமாஅத்துல் உலமா ஃபத்வா குழு வெளியீடு:

பிஸ்மில்லாஹி ர்ரஹ்மானி ர்ரஹீம்.

முஹியுஸ் ஸுன்னா ஹஜ்ரத் மௌலானா முஹம்மது ஷஃபீக்கான் ஸாஹிப் தாமத்பரகாதுஹும்
ஸ்தாபகர்
மழாஹிருல் உலூம் அரபிக் கல்லூரி
சேலம்.
&
ஹஜ்ரத் மௌலானா  அல்லாமா அப்துர்ரஹ்மான் ஸாஹிப் தாமத்பரகாதுஹும்.

நாற்காலியில்அமர்ந்து தொழுவது கீழ் வரும் காரணங்களினால் தடுக்கப் பட்டுள்ளது.

1, குர்ஆனுக்கு மாற்றமானது.

2, ஹதீஸுக்கு மாற்றமானது.

3, உலமா க்களின் ஃபத்வா க்களுக்கு மாற்றமானது .

4, தொழுகை யின் அசலான தன்மைக்கு மாற்றமானது .

5, யூதர் கள், கிருஸ்தவர்களின் சூழ்ச்சி யாகும்.

6,25வருடங்களுக்கு பிறகு பள்ளிகளை கிருஸ்தவ ஆலையங்களைப் போன்று மாற்றுவதற்கான சூழ்ச்சி யாகும்.

ஆதாரம்-1

தொழுகை யின் நோக்கமே அல்லாஹ் வின் முன்னிலையில் பணிவை வெளிப்படுத்தி அவனை வணங்குவதாகும்.
திட்ட மாக முஃமின்கள் வெற்றி பெற்று விட்டனர்.அவர்கள் எத்தகையோரென்றால், தங்களுடைய தொழுகையில் உள்ளச்சம் கொண்டோராக இருப்பர்.(அல்முஃமினூன்1,2.)
தொழுகை என்பது தன்னை முற்றிலும் மறந்து இறைவனுக்கு முன்னால் தன் பணிவை வெளிப்படுத்தி அவனை வணங்குவதாகும்.தொழுகையில் உள்ள ஒவ்வொரு செயல்களும் இதையே உணர்த்துகின்றன.
இதுவே (குஷுவு) என்னும் உள்ளச்சமாகும்.
மேலும் உள்ளச்சம் என்பது தொழுகை யாளி தன் பணிவை வெளிப்படுத்தி பார்வையை கீழ் தாழ்த்தியும் உடல் அங்கங்களை அமைதியாக வைத்து குரலை தாழ்த்து வதாகும்.(ஷாமி2/407)
நாற்காலியில் அமர்ந்து தொழுவதினால் மேற்கூறப்பட்ட (குஷுவு)உள்ளச்சத்தின் வெளிப்பாடுகள் இல்லாமல் ஆகிவிடுவதால்
நாற்காலியில் அமர்ந்து தொழுவது கூடாது.

ஆதாரம் 2

முஸ்லிம்களே! ஐந்து நேரத்தொழுகைகளையும் (குறிப்பாக)நடுத்தொழுகைகளையும்  பேணித் தொழுது வாருங்கள் மேலும் அல்லாஹ் விற்கு அடிபணிந்தவர்களாக நில்லுங்கள் (அல்பகரா238)
சில உலமாக்கள் மேற்கண்ட ஆயத்திற்கு அல்லாஹ் வுக்கு முன் ஒழுங்காக நில்லுங்கள்.என்று அர்த்தம் செய்துள்ளார்கள்.(ம ஆரிஃபுல் குர்ஆன் 1/236)
قومو ا لله قانتينஎன்பதின்
: விளக்கவுரை: அல்லாஹ் விற்கு முன்னால் பணிவுடனும் ஒழுக்கமாகவும் நின்றுகொள்ளுங்கள்.
பூமியில் அமர்ந்து தொழும்போது பணிவும், ஒழுக்கமும் ஏற்பாடு கின்றன.
நாற்காலியில் இந்த நிலை ஏற்படாததால் அவற்றில் அமர்ந்து தொழுவது கூடாது.

தொழுகை என்பது வணக்கமாகும் (அப்த்) என்ற வார்த்தையின் பொருள் அடிமை யாகும்.அடிமையிடம் அடிமைத்தனம் வெளிப்படவேண்டும் . நாற்காலியில் அமர்ந்து தொழும்போது அடிமைத்தனம் வெளிப்படுவதில்லை.எனவே நாற்காலியில் அமர்ந்து தொழுவது கூடாது.

ஆதாரம் 3

ஹஜ்ரத் அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.நபி(ஸல்) அவர்கள் நோயுற்ற நிலையில் ஃர்ளான தொழுகையை பூமியில் அமர்ந்தே நிறைவேற்றினார்கள்.மேலும் நஃபில் தொழுகையை அமர்ந்தும் சைக்கினை செய்தும் நிறைவேற்றினார்கள்.
ஹிஜ்ரி 5ஆம் ஆண்டு துல்ஹிஜ்ஜா மாதம் நபியவர்களின் காலில் காயம் ஏற்பட்டபோது பல நேரத் தொழுகையை தங்கள் வீட்டில் அமர்ந்தே தொழுதார்கள்.அச்சமயம் நாற்காலி அவர்களிடம் இருந்தது.(முஸ்லிம் 876)

நபியவர்களின் வீடு மஸ்ஜித் தின் அருகில் இருந்தும் கூட நோயின் காரணமாக தொழுகை களை வீட்டிலேயே நிறைவேற்றினார்கள்.
இவ்வாறே எவரேனும் பூமியில் அமர்ந்து தொழ முற்றிலும் சக்தியற்ற வராக இருந்தால் அவர் வீட்டிலேயே அமர்ந்து தொழுது கொள்ளட்டும்.(மஜ்ம உஜ்ஜவாயித் வமன்பவுல் ஃபவாயித்(2/149,அல்முஃஜமுல் அவ்ஸத்3/28,முஸ்னத்அபியஃலாஅல்மவ்ஸலி7/42)

ஆதாரம் 4

நபி(ஸல்) அவர்கள் ஒரு நோயாளியை நலம் விசாரிக்க சென்றார்கள்.அவர் தலையனை யின் மீது ஸஜ்தா செய்து தொழுது கொண்டிருப்பதை கண்ட நபியவர்கள் அதை தூக்கி எறிந்து விட்டார்கள் அவர் ஸஜ்தா செய்ய ஒரு குச்சியை எடுத்தார்.அதையும் எறிந்து விட்டார்கள்.பிறகு கூறினார்கள்.உங்களால் முடிந்தால் பூமியில் ஸஜ்தா செய்து தொழுங்கள் இல்லையானால் சைகை செய்தால் போதுமானது.(ஸுனனுஸ் ஸஙீர் லில் பைஹகீ 118/1,ஹுல்யதுல் அவ்லியாவதபகாதுல்அஸ்ஃபியா92/7)

ஆதாரம் 5

ஹஜ்ரத் ஜாபிர் (ரலி) அவர்களின் அறிவிப்பு நானும் நபியவர்களும் நோயாளியை சந்திக்க சென்றோம் அவர் தலையனை மீது ஸஜ்தா செய்து தொழுது கொண்டிருப்பதை கண்ட நபியவர்கள் அவரைப் பார்த்து கூறினார்கள் உங்களால் முடிந்தால் பூமியின் மீது ஸஜ்தா செய்யுங்கள் இல்லை எனில் சைகை செய்தால் போதுமானது.
உங்கள் ருகூவை காட்டிலும் ஸஜ்தாவிற்கு அதிகமாக குனிந்து தொழுங்கள்.
மேற்கண்ட மூன்று ஹதீஸ் களிலும் நபியவர்கள் பூமியின் மீது அமர்ந்து தொழுகையை நிறைவேற்றுமாறு கட்டளையிட்டார்கள்.(முஸ்னத் அபியஃலா3/345,அல்முதாலிபுல்ஆலியா 4/300,ம ஆரிஃபதுஸ்ஸுன் வல்ஆஸார்3/224)

எனவே நாற்காலியில் அமர்ந்து தொழுவது தொழுகையின் அடிப்படை நோக்கத்திற்கு மாற்றமானதாகும்.
அன்று முதல் இன்று வரை உலமாக்கள் நாற்காலிகளை பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.நாற்காலியில் அமர்ந்து தொழுவது ஏதேனும் ஒரு வகையில் ஆகும் என்றிருந்தால் நிச்சயமாக அதைப் பற்றி கூறியிருப்பார்கள்.ஆனால் அதைப் பற்றி எங்கும் உலமாக்கள் குறிப்பிடாமல் இருப்பது நாற்காலியில் அமர்ந்து தொழுவது
தொழுகையில் இருக்கவேண்டிய உள்ளச்சம்,பணிவு , அடிமைத்தனத்தின் வெளிப்பாடு ஆகிய வற்றிர்கு மாற்றமாக உள்ளது என்ற கருத்து தெளிவாகிறது.

இம்தாதுல் முஃப்தியீனில் எழுதப்பட்டுள்ளதாவது:
இது போன்ற விஷயங்களில் நிபந்தனைகளோடு கூடும் என்று அனுமதி அளித்தோம் என்றால் நாளடைவில் பொது மக்கள் நிபந்தனைகளை மறந்து விட்டு வெறும் கூடும் என்கிற விஷயத்தை மட்டுமே எடுத்துக்கொள்வார்கள்.இது அனுபவபூர்னமான  விஷயமாகும்.
(இம்தாதுல் முஃப்தியீன், கேள்வி எண்-879)

நாற்காலியில் அமர்ந்து தொழுவது கூடாது என்பதற்கான ஃபத்வாக்கள்.

நாற்காலியில் கால்களை தொங்க விட்டு தொழுவதற்காக அமருவதும் ஸஜ்தா செய்வதற்காக டேபிளின் மீது தலைகுணிவதும் கூடாது.ஆனால் பூமியில் அமர்வதற்கோ, ஸஜ்தா செய்வதற்கோ முற்றிலும் முடியாது என்கிற போது அனுமதி உண்டு. பூமியில் ஸஜ்தா செய்வதற்கு அறவே முடியாத நிலையில் பூமியில் அமர்ந்து ஒரு ஜானை விட உயரமில்லாத ஒரு பொருளின் மீது ஸஜ்தா செய்வது கூடும்.
(ஹஜ்ரத் மொவ்லானா முப்தி கிஃபாயதுல்லாஹ் சாஹிப்-ரஹ்.நூல். கிஃபாயதுல் முஃப்தி3/400) கேள்வி எண் 1393)

ஒரு நாற்காலியில் அமர்ந்து மற்றொரு நாற்காலியின் மீது ஸஜ்தா செய்தால் தொழுகை கூடிவிடும்.எனினும்நிபந்தனை என்னவெனில் இரு முழங்கால்களையும் நாற்காலியின் மீது வைக்கவேண்டும்.
அவ்வாறு வைக்கவில்லை எனில் தொழுகை கூடாது.திரும்ப தொழுவது அவசியமாகும்.(அஹ்ஸனுல் ஃபத்வா 4/51)

தாருல் உலூம் தேவ் பந்தினுடைய மு ஃப்திகளின் தீர்ப்பு.

ஒருவர் தொழுகையில் நிற்க முடியாது ஆனால் பூமியில் அமர்ந்து ஸஜ்தா செய்து தொழுக முடியுமென்றால் அவர் பூமியில் ஸஜ்தா செய்வது அவசியமாகும்.
பூமியில் ஸஜ்தா செய்யாமல் நாற்காலியிலோ அல்லது தரையிலோ அமர்ந்து வெறும் சைகை மூலம் ஸஜ்தா செய்வது கூடாது.
நாற்காலியில் அமர்ந்து தொழுவது கூடாது ஏனெனில் முடியாத நிலையில்.1, பூமியில் அமர்ந்து தொழுவது சுன்னத்தான வழிமுறை ஆகும்.இவ்வாறே ஸஹாபாக்களும் அவர்களுக்கு பின் வந்தவர்களும் செய்து வந்துள்ளார்கள்.

ஏறத்தாழ கி.பி.1990க்கு முன்பு வரை நாற்காலியின் மீது அமர்ந்து தொழகும் முறை காணப்படவில்லை.

2, நாற்காலிகளை தேவையின்றி பயன் படுத்துவதால் ஸஃப்ஃபுகளில் இடையூறு ஏற்படுகிறது.
ஆனால் ஹதீஸ்களில் தொழுகையின் ஸஃப்ஃபுகளில் சேர்ந்து நிற்பது பற்றி மிக அதிகமாக வலியுறுத்தப்பட்டுள்ளது.

3, தகுந்த தேவையின்றி நாற்காலிகளை பள்ளியில் கொண்டு வருவதால் மாற்றார் களின் வழிப்பாட்டு தலங்களுக்கு ஒப்பாகிறது.
தீனுடைய காரியத்தில் அன்னியர்களுடன் நாம் ஒபாகுவதை தடுக்கப் பட்டுள்ளது.

4, தொழுகை என்பது பணிவு, அடிமைத்தனத்தின் வெளிப்பாடு ஆகும்.
இந்நிலை நாற்காலியில் அமர்ந்து தொழும்போது தான் பூரணமாக வெளிப்படுகிறது.

5, ஒரு தொழுகை யாளி பூமியை நெருங்கி தன் நெற்றியை வைப்பது தொழுகையில் வேண்டப்படுகிறது.நாற்காலியில் அவை நிறைவேறுவதில்லை.

தமிழ் நாடு உலமாக்களின் ஒரு மித்த தீர்ப்பு.

ஸஃபர்20 ஹிஜ்ரி 1432, ஜனவரி மாதம் 20/2011அன்று மதுரையில் கூடிய தமிழ் நாடு ஜமாஅத் துல் உலமா சபையில் 350உலமாக்களின் ஒரு மித்த தீர்ப்பு:

நாற்காலியில் அமர்ந்து தொழுவது கூடாது .
தங்கடம் உள்ளவர்கள் தரையில் தான் உட்கார்ந்து தான் தொழுக வேண்டும்.
மேற்கூறப்பட்ட குர்ஆன், ஹதீஸ், ஃபத்வாக்களின் மூலம் நாற்காலியில் அமர்ந்து தொழுவது கூடாது என்பது தெளிவாகிவிட்டது.

ஒரு முஃமின் எப்பொழுது உட்கார்ந்து தொழுவது கூடும்.

நின்று தொழுவதை விடுவதற்கான காரணம் இருவகைப்படும்.

1,ஹகீகி:அறவே நின்று தொழ முடியாதவர்.

2,ஹிக்மி:அறவே நிற்க முடியாது என்பதல்ல மாறாக அவரால் நிற்க முடியும் ஆனால் நின்றால் கீழே விழுந்தது விடுவார் அல்லது மார்க்கம் எதை தங்கடம் என கூறியுள்ளதோ அந்த அளவிற்கு பலகீனம் ஏற்படுவது.

உதாரணமாக: அனுபவமுள்ள முஸ்லிம் மருத்துவர் நின்று தொழுதால் நோய் அதிகமாகும் (அ) கடுமையான வலி ஏற்படும் (அ) நோய் குணமாக தாமதமாகும்.என கூறியிருந்தால்-அவர் அமர்ந்து தொழுவது கூடும்.
ஆனால் சகித்துக் கொள்ளும் படி வலி இருந்தால் கூடாது.

நோயாளி தொழுகும் முறை.

1,அத்த ஹிய்யாதில் அமரும் நிலை தான் சிறந்து.
சம்மணம் போட்டு அமர்வதும் , இரண்டு கால்களையும் வெளியே விட்டு பித்தட்டில் அமருவதும் மற்றும் குத்த வைத்து அமருவதும் கூடும்.

2, உட்கார்ந்து தொழும் போது பார்வை மடியில் இருக்க வேண்டும்.
கையைக் கட்டிக்கொள்ள வேண்டும்.
ருகூசெய்யும்போது கையை முட்டுக்காலில் வைக்க வேண்டும்.
நெற்றியை முட்டுக்கால்களுக்கு சமமாக வைக்க வேண்டும்.
பித்தட்டை உயர்த்தக் கூடாது.
மேலும் ஸஜ்தா செய்ய வேண்டும் ஸஜ்தா செய்ய சக்தி இல்லை எனில் ருகூவைவிட ஸஜ்தா வில் தலையை அதிகமாக சாய்க்க வேண்டும்.
ஸஜ்தா செய்யும் போது கையை பூமியின் மீது வைக்க வேண்டும்.
சைகை செய்து தொழுபவரை பின் பற்றி தொழுவது கூடாது.

3, தொழுகையின் மற்ற செயல்களான கிராஅத் ஓதுவது, தஸ்பீஹ் ஹாத் ஓதுவது, நடுநிலையாக
மன ஓர்மையோடு தொழுவது இவையனைத்தும் உடல் ஆரோக்கியம் உள்ளவர் நிறைவேற்றுவது போன்று நிறைவேற்ற வேண்டும்.

மஸ்அலாக்கள் :

1, யாராவது தரையில் அமர்ந்து எழுந்து நிற்பதற்கு சக்தி இல்லை எனில் அவர் கட்டிலில் அமர்ந்து கால்களை மடக்கி தொழவேண்டும்.

2,ஃபஜ்ருடைய சுன்னத் அதிமுக்கியமானதாக இருப்பதால் நிற்க சக்தி உள்ளவர்கள் அதை நின்று தான் தொழுக வேண்டும்.
மற்ற சுன்னத்களை உட்கார்ந்து தொழலாம்.
3, முதல் ரக அத்தை நின்று தொழுதவர் 2வதுரக அத்திற்கு எழ முடியாமல் ஆகிவிட்டால் தரையில் அமர்ந்து தொழுவது கூடும்.
4, ஒருவர் தலையால் சைகை செய்து தொழ முடியாத நிலைக்கு ஆகிவிட்டால் தொழுகை மன்னிக்கப்படும்.

தொகுப்பு:
மௌலானா முஃப்தி அபுல் கலாம் காஸிமி மழாஹிரி.சேலம்.
பொதுச்செயலாளர்-மாநில ஜமாஅத்துல் உலமா ஃபத்வா குழு
தொலைபேசி 9443391412
வெளியீடு:
மாநில ஜமாஅத்துல் உலமா ஃபத்வா குழு.

роЮாропிро▒ு, роЬூро▓ை 30, 2017

родொрок்рокி родро▓ைрок்рокாроХை роЕрогிропро▓ாрооா?,

*தொப்பி தலைப்பாகை அணியலாமா?*

*_சுன்னதுல் வல் ஜமாத்தார்கள் மட்டும்  இணையவும்_*

⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜

*✍​எழுதியவர்: மௌலவி S.L. அப்துர்ரஹ்மான் (கௌஸி) கல்முனை.*

*இஸ்லாத்தின் பார்வையில் தொப்பி, தலைப்பாகை அணிவதற்குரிய ஆதாரங்கள்.*

*♣  வஹ்ஹாபிகளின்* *நிலைப்பாடு:*

*இஸ்லாம் மார்க்கத்தில் தொப்பி, தலைப்பாகை அணிவதற்க்கு எந்த ஒரு முக்கியத்துவமும் கிடையாது (அதாவது சுன்னத் கிடையாது). காரணம் நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் தனது வாழ்நாளில் ஒரே ஒரு தடவை கூட தொப்பி அணிந்தார்கள் என்பதற்கு ஒரு ஆதாரமும் கிடையாது.*

*♣சுன்னத் வல் ஜமாஅத் அடிப்படையில் அதாவது குர்ஆன், ஹதீஸ், ஸஹாபாக்கள், இமாம்களின் கூற்றுக்கள் அடிப்படையில் தொப்பி, தலைப்பாகை அணிவது சுன்னத்தாகும். அந்த அடிப்படையில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொப்பி, தலைப்பாகை அணிந்திருப்பதற்கு ஒரு ஆதாரத்தைக் கூட காட்ட முடியாது என்று முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்கப் பார்த்த பொய்யன் தஜ்ஜால் பி.ஜே.யின் முகத்திரை கீழ்காணும் ஆதாரங்கள் மூலம் கிழித்தெறியப்படுகிறது.*

♦ ஆதமுடைய மக்களே! ஒவ்வொரு பள்ளிவாசலிலும் (ஆடை முதலியவற்றால்) உங்களுடைய அலங்காரத்தைப் பற்றி பிடியுங்கள் (அல்குர்ஆன் 7:31)

குறிப்பு :- ஸீனத் என்பதன் பொருள் அழகு, அலங்காரம் என்பதாகும். சாதாரணமாக அணியும் வழமையான ஆடைகளான ஜுப்பா, சேட், சாறன், போன்றவைகளை விட மேலதிகமான உபரி ஆடைகளை அணிந்து அழகாக, அலங்காரமாக பள்ளிவாசலுக்கு வரவேண்டும் என இந்த அத்தியாயம் ஆர்வமூட்டுகின்றது. உபரி ஆடைகள் எனும் போது தொப்பி, தலைப்பாகை போன்றவற்றை குறிக்கும்.

♦  ஹழ்ரத் அப்துல்லாஹ் பின் உமர் ரலியல்லாஹுஅன்ஹு அவர்கள் கூறியதாவது ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதரே, இஹ்ராம் கட்டியிருப்பவர் எந்த ஆடையை அணிய வேண்டும்? என்று கேட்டார்கள், அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவைகள், (முழுநீளச்) சட்டைகள் தலைப்பாகைகள், முழுக்கால் சட்டைகள், தொப்பிகள், காலுறைகள் ஆகியவற்றை அணியாதீர்கள். காலணிகள் கிடைக்காதவர் மட்டும் காலுறைகள் அணிந்து கொள்ளட்டும். ஆனால் காலுறை இரண்டும் கனுக்கால்களுக்கு கீழே இருக்கும் படி கத்தரித்துக்கொள்ளட்டும். குங்குமப் பூச்சாயம் மற்றும்‘வர்ஸ்’ எனும் வாசனைச் செடியின் சாயம் தேய்க்கப்பட்ட ஆடைகளை அணியாதீர்கள் என்று சொன்னார்கள். 

ஆதாரம்: புகாரி 1542

ஹதீஸ் விளக்கம் : - இஹ்ராம் அணியும்போது தொப்பி அணியாதீர்கள் என்று சொல்லும்போது மற்ற நேரங்களில் தொப்பி அணியுங்கள் என்று உறுதியாக கூறுவது தெரிகிறது.

♦ ஹழ்ரத் இஸ்ஸத் பின்த் இயாத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது, ‘அபா கிர்ஸாபா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூற நான் கேட்டிருக்கிறேன் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எனக்கு ஒரு தொப்பியை அளித்து ‘இதனை நீ அணிந்து கொள்’ எனக் கூறினார்கள்.

முக்ஜமுல் கபீர் அத்தபரானி 2520

♦ சுலைமான் பின் தர்கான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது, ‘அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மீது தொப்பியொன்றை நான் கண்டேன். அது மஞ்சள் நிறத்தில் கம்பலி கலந்த பட்டால் ஆனதாக இருந்தது. 

​​ஆதாரம்: புகாரி

♦ (கடும் வெப்பத்தின் காரணமாக) ஸஹாபாக்கள் தலைப்பாகையின் மீதும்,தொப்பியின் மீதும் ஸஜ்தா செய்வார்கள். 

​​அறிவிப்பவர் : ஹழ்ரத் ஹஸன் ரலியல்லாஹு அன்ஹு
நூல் : புகாரி

♦ ஹழ்ரத் புழால் பின் உபைத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறக்கேட்டதாக உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். ஷஹீதுகள் நான்கு பிரிவினர் ஒருவர் பலமான ஈமான் கொண்ட ஒரு முஃமின், இவர் அல்லாஹ்வுக்கு அளித்த வாக்கை நிறைவேற்றி எதிரிகளுடன் மோதி அதே யுத்தத்தில் கொலை செய்யப்பட்டார். மறுமை நாளில் இவரது உயர் அஸ்தஸ்தை ஏனையோர் "இவ்வாறு" பார்ப்பார்கள் என்று பின்புறமாகத் தனது தலையை வளைத்து அன்னார்ந்து காட்டிய போது தலையில் இருந்து தொப்பி விழுந்தது. 

​ஆதாரம் : திர்மிதி 1695

♦‘நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்; அவர்கள் (மக்கா வெற்றியின் போது)கறுப்புத் தலைப்பாகை அணிந்தவர்களாக மக்காவில் நுழைந்தனர்’ அறிவிப்பவர் : ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரலியல்லாஹு அன்ஹு) 

​நூல்: முஸ்லிம்

♦நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் ஊரிலிருக்கும் போது சிரிய நாட்டுத் தொப்பியையும், பயணம் செல்லும்போது காது வரை மூடும் நீண்ட தொப்பியையும் அணிவார்கள். 

​​அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா 
ஆதாரம்: அபுஷ்ஷெய்க்

♦ நபித்தோழர் ஹாலித் பின் வலீத் (றழியல்லாஹு லாஹு அன்ஹு) அவர்களின் தொப்பியில் நபி (ஸல்லலாஹு அலைஹி வசல்லம்) அவர்களின் தலைமுடிகளில் சில முடிகள் இருந்தன. ஒரு யுத்தநேரம் அவர்களிடமிருந்து அந்தத் தொப்பி தவறிவிட்டது. அதனால் காலித் பின் வலீத் ஆத்திரமடைந்தவராகக் காணப்பட்டார்.அங்கிருந்த நபீத்தோழர்கள் தொப்பி காணாமற் போனதற்காக காலித் இவ்வாறு கோபப்படுகிறார் என்று பேசிக்கொண்டனர். இதைக்கேட்ட காலித் இப்னு வலீத் (றழியல்லாஹு அன்ஹு) அவர்கள் ஸஹாபாக்களை நோக்கி “தொப்பி” காணாமற் போனதற்காக நான் கவலைப்பவோ கோபப்படவோ இல்லை. அதில் நபீ (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் தலை முடிகளிற் சில முடிகள் இருக்கின்றன. அதன் “பறகத்” தவறிவிடுமென்றும் அது காபிர்களிடம் போய்விடும் என்று அஞ்சுகிறேன்” என்றுசொன்னார்கள்.

அறிவிப்பு ;- ஹழ்ரத் காளி இயாள் (றழியல்லாஹு அன்ஹு) 
​ஆதாரம் ;- அஷ்ஷிபா, தபறானி 9: 349, ஹாகிம்

♦(அதே மக்கா வெற்றியின்போது) ‘நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கறுப்புத் தலைப்பாகை அணிந்த நிலையில் மக்களுக்கு சொற்பொழிவு நிகழ்த்தினார்கள்.’ 

​​அறிவிப்பவர் : ஹழ்ரத் ஜஃபர் இப்னு அம்ரு (ரலியல்லாஹுஅன்ஹு)
நூல் : முஸ்லிம்

♦  நபி ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்கள் வுழு செய்யும் போது தன் தலைப்பாகையின் மீது மஸஹ் செய்தார்கள். 

​​அறிவிப்பவர்: ஹழ்ரத் அனஸ் (ரலியல்லாஹு அன்ஹு)
நூல் : அபூதாவூத், இப்னு மாஜா

♦இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தனது தலைப்பாகையை இரண்டு தோல்களுக்குமிடையில் தொங்க விடுபவர்களாக இருந்தார்கள். 

​​ஆதாரம்: திர்மிதி

♦ நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் வெண்மை நிறமான தொப்பியை அணிந்து வந்தார்கள். 

​​அறிவிப்பாளர் : ஹழ்ரத் இப்னு உமர் ரலியல்லாஹூ அன்ஹூ 
ஆதாரம்: சுஅபுல் ஈமான் பாகம் 5 ஹதீஸ் எண் 6259

♦ ‘இப்னு உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் மக்காவுக்குப் புறப்பட நேர்ந்தால், ஒட்டகப் பயணம் சிரமமாகும் போது ஏறிச் செல்வதற்கு (மாற்று வாகனமாக) கழுதையையும், ஒரு தலைப்பாகையையும் வைத்திருப்பார்கள். அதை தலையில் கட்டிக் கொள்வார்கள்’.

​அறிவிப்பவர் : ஹழ்ரத் இப்னு உமர் (ரலியல்லாஹு அன்ஹு)
நூல் : முஸ்லிம்

♦ அப்துல்லாஹ் பின் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள், நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (வழமையாக) வெள்ளை தொப்பி அணிந்து வந்துள்ளார்கள்.’

​​நூல்: தப்ரானி

♦ருக்கானா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் சொன்னார்கள், நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறக் கேட்டிருக்கிறேன் நமக்கும் முஷ்ரிக்குகளுக்கும் உள்ள வித்தியாசம் தொப்பியின் மீது தலைப்பாகை அணிவதுதான்’.

நூல்: ஸுனன் அபூதாவூது 4075,4078 ஸுனன் திர்மிதி 3919, 1844

♦நான் நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹிவஸல்லம் அவர்களுடன் சாப்பிட்டேன் அப்போது அவர்களின் தலையில் வெள்ளைத்தொப்பி இருப்பதைக் கண்ணுற்றேன் அறிவிப்பாளர் : பர்ஹத் ரலியல்லாஹு அன்ஹு. 

​​ஆதாரம் : அத்திஹாமா

​​♦  ஹழ்ரத் ஹஸனுல் பஸரி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள், ‘ஸஹாபாக்கள் தங்களுடைய தலைப்பாகை தொப்பியின் மீது ஸஜ்தா செய்பவர்களாக இருந்தார்கள்’. 

​(நூல்: புகாரி 1/151
​​
♦ தப்ரானி இமாம் மற்றும் சுயூத்தி இமாம் ஆகியோர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வெள்ளை தொப்பி அணிந்திருந்தார்கள் என்று அறிவிக்கிறார்கள். இமாம் தப்ரானி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் இதை நம்பகமானது என்றும், இமாம் சுயூத்தி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் ஸஹீஹான ஹதீது என்றும் கூறுகின்றார்கள். 

​(நூல்: சிராஜுல் முனீர் பாகம் 4, பக்கம் 112)

♦  நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களிடம் மூன்று தொப்பிகள் இருந்தன. 

​​அறிவிப்பாளர் : ஹழ்ரத் இப்னு அப்பாஸ் ரலியல்லாஹூ அன்ஹூ 
ஆதாரம்:  அபுஷ்ஷெய்க்

♦  ஹழ்ரத் அனஸ் இப்னு மாலிக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தொப்பி அணிவதை வழக்கமாக கொண்டிருந்தனர். 

​நூல்: ஸஹீஹுல் புஹாரி பாகம் 2, பக்கம் 863

♦கலீபா உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் காலத்தில் ஷாம் (சிரியா) பிரதேசத்தில் கிரிஸ்தர்கள் சரணடைய இரு சாராருக்குமிடையில் ஒரு ஒப்பந்தம் கைச்சாந்தது ஒப்பந்த நிபந்தனைகளை உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களே முன்வைத்தார்கள் அவற்றில் முஸ்லிம்களுக்கு ஒப்பாகக் கூடிய முறையில் அவர்களுடைய தொப்பி, தலைப்பாகைகளை கிறிஸ்தவர்கள் அணிவது கூடாது என நிபந்தையிட்டார்கள்.

தப்ஸீர் இப்னு கஸீர் 2: 543

♦ ஹழ்ரத் முல்லா அலி காரி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் சொல்கிறார்கள், ‘தொப்பியானது முஸ்லிம்களின் சிறப்பான,முக்கிய இஸ்லாமிய சின்னமாகும்.

மிர்காத் அல்மஸாபீஹ் வால்யூம் 8, பக்கம் 246  எமக்கு இந்த விசயத்தில் சஹீஹான அறிவிப்புகள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய வழிமுறையை சுட்டிக்காட்டுகிறது. இதனால் தலையை மறைப்பது ஒரு சுன்னத்தான விசயம் என உறுதியாகக் கூறமுடியும்.

♦  இமாம் ஷாபிஈ ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கூறுகிறார்கள் தொப்பி அணிவது சுன்னத் ஆகும்.
​ 
துஹ்பதுல் முஹ்தாஜ் 3: 36

♦  இமாம் மாலிக் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கூறுகிறார்கள் தொப்பி, தலைப்பாகை அணிவது சுன்னத் ஆகும். 

​ஆரிவளதுல் அஹவதி 4: 250

*சில காலங்களுக்கு முன்னால் புதுமை விரும்பிகள் தொப்பி அணிவது கூடாது சுன்னத் இல்லை என்றும் அதற்க்கு ஆதாரம் இல்லை என்றும் பிரச்சாரம் மேற்கொண்ட போது சுன்னத் வல் ஜமாஅத் உலமாக்கள் தகுந்த ஆதாரம் காட்டிய நேரத்தில் தொப்பி அணியலாம் ஆனால் கட்டாயமில்லை, என்று கூறினார்கள்.*

*♦இன்று சத்தியத்தை இறைவன் நிலைத்துட செய்துவிட்டான். அல்ஹம்துலில்லாஹ்! சத்திய கொள்கை 'அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமா'அத்தினர் தொப்பி அணிவது கட்டாயம் என்று யாரும் சொல்லவில்லை சொல்லவும் மாட்டார்கள். எனவே சுன்னத்தான காரியமே என்றுதான் சொல்கிறோம். எனது சமுதாயத்திற்க்கு மத்தியில் குழப்பங்கள் ஏற்படும் போது யார் எனது வழிமுறைகளை (சுன்னத்) உயிர்பிக்கின்றார்களோ அவர்களுக்கு நூறு ஷஹீதுகளின் நன்மைகளை பெற்றுக்கொள்வார்கள் என கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள்.* 

*​​எனவே சுன்னாக்களை குழிதோண்டி புதைக்கும் புதுமை விரும்பிகளே!! அல்லாஹ்வை பயந்து சுன்னாக்களை கடைபிடிக்கிற போது தான் நாம் பெருமானாரின் அன்பை பெற்றுக்கொள்ளலாம்

рокிро░рокро▓்ропрооாрой рокродிро╡ுроХро│்