роироо்рооுроЯрой் роЗрогைрои்родு роЗро░ுрок்рокро╡ро░்роХро│்

роЪெро╡்ро╡ாроп், роЬூро▓ை 31, 2018

рокро│்ро│ிро╡ாроЪро▓்роХро│் рокро░ிроЪுрод்родрооாроХ ро╡ைрок்рокродு,

பள்ளிவாசல்களின் பரிசுத்த்ம் புனித ஹஜ்ஜுக்கு செல்லும் ஹாஜிகள் வியந்து போற்றும் அம்சங்களில் ஒன்று. ஹரம் பள்ளிவாசலிலின் சுத்தம். அல்லாஹ் இபுறாகீம் அலை அவர்களுக்கும் இஸ்லாமீயில் அலை அவர்களுக்கும் சொன்ன உத்தரவு وَعَهِدْنَا إِلَىٰ إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ أَن طَهِّرَا بَيْتِيَ لِلطَّائِفِينَ وَالْعَاكِفِينَ وَالرُّكَّعِ السُّجُودِ (125) கட்டுவது மட்டுமல்ல. கட்டிட்த்தின் சுத்த்த்தை பராமரிப்பது இரு நபிமார்களுக்கும் உத்தரவிடப் பட்டிருந்த்து. இன்று பல இலட்சக்கணக்கான மக்கள் கூடுகிற அந்த இடத்தில் இந்த உத்தரவின் அவசியத்தை அதிகம் புரிந்து கொள்ள முடியும். அன்றிலிருந்து இன்று வரை கஃபாவும் மஸ்ஜிதும் ஹராமும் மிக சுத்தமாகவே பராமரிக்கப்படுகிறது. சபா மர்வாவும் ஹாஜிகள் தண்ணீர் அருந்தும் இடங்களும் ஒளூ செய்யும் இடங்களும் கழ்வறைகளும் கூட மிக சுத்தமாக பராமரிக்கப் படுகின்றன. இலட்சக்கணக்கான மக்கள் இடை வெளியின்றி பயன்படுத்தும் கழிவறைகளில் முகம் சுளிக்க வேண்டியிருக்காது என்பது நிச்சய்ம் ஒரு அதிசயமே! தடை இன்றி தண்ணீரும் கிடைக்கிறது. மஸ்ஜிதுல் ஹரமில் உள்ள பாத்ரூம் களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா ? 14 ஆயிரம் ! Bathrooms (washrooms) that reach up to 14,000 in number are cleaned 4 times daily. Despite of the crowd, the cleaning process continues thoroughly and does not affect the people over there. இந்த பாத்ரூம்கள் தினசரி நான்கு முறை சுத்தம் செய்யப் படுகின்றன. உபயோகிப்பாளர்களுக்கு இடையூறு இல்லாத வகையில் மஸ்ஜிதுல் ஹரமைசு சுற்றி 18 இலட்சம் சதுரை மீட்டர்கள் அன்றாடம் தொடர்ந்து சுத்தம் செய்யப் படுகின்றன. சுத்தம் செய்யப் படும் விதமும் வேகமும் கவனிக்கத் தக்கது. அரை மணி நேரட்த்தில் மதாப் எனப்படும் தவாப் நடை பெறும் தளம் சுத்தம் செய்யப் பட்டு விடுகிறது. இப்போதும் கூட இலட்சக்கணகான மக்கள் பல ஊர்களிலிருந்து வந்துஅ பல நாட்களாக குழுமி இடைவெளி இல்லாது அமல் செய்து கொண்டிருக்கிறார்கள். மதாபில் நடக்கிறார்கள். ஆனால் அங்கேயே தொழுகை நடை பெறுகிற்து எந்த வித முகச்சுளிப்பிற்கும் இடமிருப்பதில்லை.  அவ்வளவு சுத்தமாக இருக்கிறது. மஸ்ஜிதுல் ஹரமில் 30 ஆயிரம் பச்சை நிற  தொழுகை விரிப்புக்கள் விரிக்கப் பட்டுள்ளன, அவை ஒவ்வொன்றும் நவீன தொழில் நுட்பத்தில் நாளொன்றுக்கு மூன்று முறை சுத்தப் படுத்தப் பட்டு சக்தி வாய்ந்த உலர் இயந்திரத்தின் மூலம் உலர வைக்கப் படுகின்றன. அதில் தையல் விட்டுப் போன இடங்கள் மீண்டும் தைக்கப் படுகின்றன, The Holy Mosque is covered in almost 30,000 deluxe green rugs that is purified and cleaned 3 times a day. A modern dry cleaner has been established solely for those rugs in order to clean them using the latest technologies. The rugs under go a 5 step cleaning process that starts with dusting them, washing them, drying them, putting them in sunlight and finally re-stitching them. ஆண்டுக்கு இரு முறை கஃபாவின் உட்புறம் சுத்தம் செய்யப் படுகிறது. 2 மணி நேரம் நடை பெறுகிற  இந்தப் பணியில் அரசுத்த தலைவர்கள் உலக முஸ்லிம் பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள். அரசு அனுமதிக்க சாமாணியரும் கலந்து கொள்கிறார்கள். ஒரு நாளுக்கு முன்னதாக ஜம் ஜம் தண்னீரில்  ரோஜா நறுமணமும் ஊத் அத்தரும் கலந்து வைக்கப் படுகிறது. இதற்கான பிரத்தியேக பாத்திரங்கள் காப்பரில் தயார் செய்யப் பட்டுள்ளன. அல்லாஹ் கஃபாவை சிலை வணக்கம் , தீய செயல்கள், தீய எண்ணங்களிலிருந்து கஃபாவையும் மஸ்ஜிதுல் ஹரமையும் பாதுகாத்து வைத்துள்ளான் எனினும் அதன் புறச் சுத்த்த்தை பாதுகாக்க மக்களுக்கு உத்தரவிட்ட்தின் அடிப்படையில் மிகச் சிறப்பாக சுத்தம் செய்யும் பணிகள் தொடர்ந்து நடை பெற்று வருகின்றன. கியாமத் நாள் வரை அல்லாஹ் கஃபாரவை  மஸ்கிதுல் ஹரமையும் பரிசுத்தமானதாக ஆக்கி வைப்பானாக!  அதன் கண்ணியத்தை பாதுகாப்பானாக! கஃபாவை பார்த்த்தும் நாம் ஓத வேண்டிய துஆ இது عَنْ حُذَيْفَةَ بْنِ أُسَيْدٍ رَضِيَ اللَّهُ عَنْهُ ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا نَظَرَ إِلَى الْبَيْتِ ، قَالَ : " اللَّهُمَّ زِدْ بَيْتَكَ هَذَا تَشْرِيفًا وَتَعْظِيمًا وَتَكْرِيمًا ، وَبِرًّا وَمَهَابَةً ، وَزِدْ مِنْ شَرَّفَهُ وَعَظَّمَهُ مِمَّنْ حَجَّهُ وَاعْتَمَرَهُ تَعْظِيمًا وَتَشْرِيفًا وَبِرًّا وَمَهَابَةً " நம் அனைவருக்கும் கஃபாவை மீண்டும் மீண்டும் பாக்கியத்தை அல்லாஹ் வணங்குவானாக! இன்றைய நமது உரையின் நோக்கம் கஃபாவை வின் சுத்த்த்த மட்டும் கூறுவதல்ல. மஸ்ஜிதுல் ஹரமைப் போலவே நமது அனைத்து பள்ளிவாசல்களின் சுத்த்த்த்தை நாம் பராமரிக்க வேண்டும் என்பதாகும். பள்ளிவாசலை சுத்தமாக வைத்திருக்க இஸ்லாம் அதிக முக்கியத்துவம் அளித்துள்ளது. முன்னோர்கள் அதில் அதிக அக்கறை செலுத்தி இருக்கிறார்கள். فِي بُيُوتٍ أَذِنَ اللَّهُ أَنْ تُرْفَعَ وَيُذْكَرَ فِيهَا اسْمُهُ يُسَبِّحُ لَهُ فِيهَا بِالْغُدُوِّ وَالآصَالِ * رِجَالٌ لا تُلْهِيهِمْ تِجَارَةٌ وَلا بَيْعٌ عَنْ ذِكْرِ اللَّهِ وَإِقَامِ الصَّلاةِ وَإِيتَاءِ الزَّكَاةِ يَخَافُونَ يَوْماً تَتَقَلَّبُ فِيهِ الْقُلُوبُ وَالأَبْصَارُ ) النور/36-37 . قال السيوطي : في هذه الآية الأمر بتعظيم المساجد وتنزيهها عن اللغو والقاذورات وقد كان الصحابة يحافظون على نظافة المسجد، ويطيبونه، فقد كان عبد الله يجمر المسجد (أي يعطره) إذا قعد عمر على المنبر عن أبي سعيد الخدري - رضي الله عنه – قال: بينما رسول الله - صلى الله عليه وسلم – يصلي بأصحابه، إذ خلع نعليه، فرضعها عن يساره، فلما رأى ذلك القوم ألقوا نعالهم، فلما قضى رسول الله - صلى الله عليه وسلم – صلاته قال: (ما حملكم على إلقائكم نعالكم؟ قالوا: رأيناك ألقيت نعليك، فألقينا نعالنا، فقال رسول الله - صلى الله عليه وسلم -: إن جبريل أتاني، فأخبرني أن فيهما قذراً – أو قال: أذى- وقال: إذا جاء أحدكم المسجد فلينظر، فإن رأى في نعليه قذراً فليسمحهما، وليصل فيهما உமர் ரலி அவர்கள் குத்பா ஓத மிமபரி ஏறும் போது அவர்களது அப்துல்லாஹ் ரலி அகில் புகை போடுவார். மஸ்ஜித்துன்னபவியை சுத்தம் செய்ய பணியாளர் நியமிக்கப் பட்டிருந்தார். أن رجلاً أسود أو امرأة سوداء كان يقم المسجد فمات فسأل النبي صلى الله عليه وسلم عنه فقالوا مات قال أفلا كنتم آذنتموني به ؟ دلوني على قبره أو قال قبرها فأتى قبرها فصلى عليها" رواه البخاري 458 ، ومسلم 956 பள்ளிவாசல் அசுத்தப் படுத்தப் பட்ட்தை கண்டு பெருமானார் (ஸ்ல்) கோபப் பட்டார்கள் وروى النسائي  وابن ماجة  عن أنس أن النبي صلى الله عليه وسلم رأى نخامة في قبلة المسجد فغضب حتى احمر وجهه ، فجاءته امرأة من الأنصار فحكتها وجعلت مكانها خلوقا فقال رسول الله صلى الله عليه وسلم " ما أحسن هذا வீட்டில் இருக்கிற தொழும் இட்த்தையும் சுத்தமாக வைக்க பெருமானார் உத்தரவிட்டார்கள் عن عائشة - رضي الله عنها – أن النبي - صلى الله عليه وسلم – أمر ببناء المساجد في الدور وأمر بها أن تنظف وتطيب.. வெங்காயத்தின் கெட்ட வாடை கூட வேண்டாம் என்றார்கள் பெருமானார் (ஸல்) عن جابر - رضي الله عنهما- أن النبي - صلى الله عليه وسلم – قال: (من أكل الثوم أو البصل والكراث فلا يقربن مسجدنا فإن الملائكة تتأذى مما يتأذى منه بنو آدم). வாடை வரக்கூடிய தொழில் ஈடுபடுகிறவர்கள். தம்மை சுத்தப் படுத்திக் கொண்ட பிறகே பள்ளிக்கு வர வேண்டும். தெரியாமல் பள்ளிவாசலில் சிறு நீர் கழித்த சஹாபிக்கு பெருமானார் (ஸல்) சொன்ன அற்வுரை முழு உம்மத்திற்கும் பொருந்தும். روى مسلم في صحيحه أن النبي - صلى الله عليه وسلم – قال: إن هذه المساجد لا تصلح لشيء من هذا البول ولا القذر، إنما هي لذكر الله وقراءة القرآن.. பள்ளிவாசலை அசிங்கப் படுத்தக் கூடாது. ولقد رأى النبي - صلى الله عليه وسلم – في جدار المسجد نخامة فتناول حصاة فحكه2 وعدها خطيئة وقال: (البزاق في المسجد خطيئة، وكفارتها دفنها).  وفي حديث أبي ذر عند مسلم قال: قال النبي - صلى الله عليه وسلم -: (ووجدت في مساوئ أعمال أمتي النخاعة تكون في المسجد لا تدفن பள்ளிவாசலின் குப்பையை வெளியே எடுத்துப் போட்டால் நன்மை وعن أنس قال: قال رسول الله - صلى الله عليه وسلم -: (عرضت عليَّ أجور أمتي حتى القذاة يخرجها الرجل من المسجد) பள்ளிவாசலை சுத்தப் படுத்தும் பொறுப்பு வேலைக் கார்ர்களுடைய என்று முஸ்லிம்கள் நினைக்க கூடாது. அது தமது கடமை என்பதை அனைவரும் உணரனும். ·         நாம்  பள்ளிவாலை மணக்க செய்ய வேண்டும். ·         நல்ல ஆடைகளை அணிந்து வர வேண்டும். ·         இறுக்கமான உடலை அசைவுகளை காட்டக் கூடிய ஆடைகளை தவிர்க்க வேண்டும். ·         வீட்டில் ஓய்வுக்காக போடுகிற ஆடைகளை தவிர்க்க வேண்டும் ·         படங்கள் – பிறரை கவர்ந்திழுக்கும் வாசகங்களை கொண்ட ஆடைகளை தவிர்க்க வேண்டும். ·          ஹவ்லூ , பாய்கள் ,  கம்பளங்களை பராமரிக்க உதவ வேண்டும். ·         அவற்றை அசுத்தப்விடக் கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும். அசுத்தப் படுத்தி விட்டால் அது தவறு என்பதை புரிந்து நாமே சுத்தப் படுத்தி விட வேண்டும் ·         டீ கொட்டுவது, பேரீத்தம் பழக் கொட்டைகளை அப்படியே போட்டு விட்டு செல்வது போன்ற பழக்கங்களை எச்சரிக்கையாக தவிர்க்க வேண்டும். ·         பள்ளிவாசலின் பாத்ரூம்களை தொழுகையாளிகள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். ·         சமுதாயத்திற்கு பொதுவானது என்று கட்டப் பட்டிருந்தால் மட்டுமே பள்ளிவாசல்களின் பாத்ரூம்களை மற்றவர்கள் பயன்படுத்த அனுமதி உண்டு. ·         பாத்ரூம்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். ·         மற்றவர்கள் அசுத்தப் படுத்தி இருந்தால் கூட அதை சுத்தப் படுத்தி விடுவதை நன்மைக்குரியதாக கருத வேண்டும். ·         பள்ளிவாசல்களின் ஜன்னல்கள் , மேற்கூரைகள், வராண்டாக்கள், ஒளூ செய்யும் பகுதி ,  செருப்பு வைக்கும் பகுதி ஆகியவற்றின் சுத்த்த்தைப் பராமரிக்க பள்ளிவாசல் நிரிவாகிகளும் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும். இது முஅத்தினுக்கோ அல்லது துப்புரவு பணியாளருக்கோ சம்பளத்திற்கு செய்கிற வேலையாக இருக்கலாம் நிர்வாகிகளுக்கு இது பொருப்பு கடமை என்பதை நிரிவாகிகள் கவனத்தில் வைக்க  வேண்டும். கஃபதுல்லாஹ்வை கட்டிய இபுராகீம் நபிக்கும் இஸ்மாயீல் நபிக்கும் தான் அல்லாஹ் சுத்தமாக வைக்க உத்தரவிட்டான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். وثبت أن النبي صلى الله عليه وسلم أزال ذلك بنفسه كما في الصحيحين من حديث عائشة قالت "رأى في جدار القبلة مخاطا أو بصاقا أو نخامة فحكها " رواه البخاري 407 ومسلم 549 . நம்முடைய பல பள்ளிவாசல்களும் பெரிதாக கம்பீரமாக பெரும் பொருட் செலவில் கட்டப் பட்டுள்ளன, ஆனால் அவற்றை பராமரிக்க போதிய அக்கறை செலுத்தப் படுவதில்லை. சிங்கப் பூரைப் பற்றி சொல்வார்கள் . அங்கு ஒரு கட்டிடம் கட்ட எவ்வளவு பணம் செலவளிக்கப் படுகிறதோ. அதில் பாதி பராமரிக்க செலவிடப்படுகிறது. பள்ளிவாசாலை நிர்வகிப்போர் கவனிக்க வேண்டிய செய்தி இது.  உயர்ந்தோங்கி கட்டப் படும் பள்ளிவாசல்களில் ஒட்டை அடையவும் குப்பை தேங்கவும் அனுமதிப்பது பொருத்தமல்ல. நிறைவாக ஒரு செய்தி பள்ளிவாசலை கட்டுவதற்கு சொல்லப் பட்ட நற்கூலியை அதன் சுத்த்த்தை பரமாரிப்பதற்கும் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.   من أخرج أذى من المسجد بنى الله له بيتا في الجنة- ابن ماجة அல்லாஹ் மிக எதார்த்தமாகவும் அழுத்தமாகவும் கூறுகிறான். وَمَن يُعَظِّمْ شَعَائِرَ اللَّهِ فَإِنَّهَا مِن تَقْوَى الْقُلُوبِ பள்ளிவாசல்களின் பரிசுத்த்த்தை பேணி வாழ நம் அனைவருக்கும் அல்லாஹ் தவ்பீக் செய்வானாக பரிசுத்தமான கஃபாவை காணும் வாய்ப்பை நம் அனைவருக்கும் அல்லாஹ் வழங்குவானாக! குறிப்பாக தமிழகத்தில் இமாம்களால மக்தப் மதரஸாக்கள் அரபுக்கல்லூரிகளின் ஆசிரியர்களாக பணியாற்றுகிற அனைத்து ஆலிம்களுக்கும் அல்லாஹ் புனித ஹஜ் உம்ராவின் பாக்கியத்தையும் முஹம்மது ரஸூல் ஸல் அவர்களின் ஜியாரத்தின் பாக்கியத்தையும் அல்லாஹ் வழங்குவானாக! .

рооாрогро╡ рооாрогро╡ிропро░்роХро│் роХро▓்ро╡ி роХроЯрой்,

மாணவ மாணவியர்கள் கல்வி கடனுக்காக இனி வங்கி வாசலில் காத்திருக்க வேண்டியதில்லை.

மத்திய அரசின் இந்த புதிய உத்தரவை தெரிந்து கொள்ளுங்கள்

பொறியியல், மருத்துவம் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்புகளுக்கு கடன் பெற இனி வங்கி வாசலில் மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் கால்வலிக்க காத்திருக்க வேண்டாம்.

அதற்கு பதிலாக கல்விக்கடனுக்காகவே ‘பிரதமர் வித்யா லட்சுமி கார்யகிரம்’ எனும் இணையதளத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. இந்த தளத்தில் மூலமே இனி அனைத்து கல்விக்கடனுக்கான விண்ணப்பங்களும் அனுப்பப்பட வேண்டும். மாறாக எந்த வங்கியும் தனிப்பட்ட முறையில் கல்விக்கடனுக்கான விண்ணப்பங்களை பரிசீலிக்க தேவையில்லை என உத்தரவிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கடந்த 21-ந்தேதி மத்திய நிதி அமைச்சகம் அனைத்து அரசு வங்கிகளுக்கும், நிதி நிறுவனங்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.

அனைத்து கல்விக்கடன்களுக்கான விண்ணப்பங்களையும், ‘பிரதமர் வித்யா லட்சுமி கார்யகிரம்’ எனும் இணையதளம் வாயிலாகவே பரிசீலனை செய்ய வேண்டும் என ஆணையிட்டுள்ளது.
ஆதலால், இனிமேல், 12-வகுப்பு முடித்த வசதியில்லா  ஏழை மாணவ, மாணவிகள் பொறியல், மருத்துவ படிப்புக்கும், பட்டமேற்படிப்புகள் படிக்க கடன் பெற வங்கியில் வரிசையில் நிற்க வேண்டிய அவசியம் இல்லை.

இந்த ‘பிரதமர் வித்யா லட்சுமி கார்யகிரம்’ எனும் இணையதளத்தில் சென்று, அதில் உள்ள கல்விக்கடனுக்கான விண்ணப்பத்தில் உள்ள விவரங்களை பூர்த்தி செய்து, எந்த வங்கி மூலம் கல்விக்கடன் வேண்டும் என்ற தகவலையும் தெரிவித்து அதை அனுப்பிவைக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் முறைப்படி பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு, கல்விக்கடன் குறித்த அழைப்பு வங்கி மூலம் சம்பந்தப்பட்ட மாணவருக்கு கடிதமாக அனுப்பப்படும்.  இந்த திட்டம் இந்த ஆண்டில் இருந்து செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

“ ‘பிரதமர் வித்யா லட்சுமி கார்யகிரம்’
https://www.vidyalakshmi.co.in/Students   எனும் இணையதளத்தின் மூலமே அனைத்து கல்விக்கடன்களுக்கான விண்ணப்பங்களும் பரிசீலிக்கப்பட வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

இதை எல்லா மாணவர்களுக்கும் தெரியப்படுத்தலாமே

ро╡ெро│்ро│ி, роЬூро▓ை 27, 2018

роХுро░்роЖройுроо்,роЕро▒ிро╡ிропро▓ுроо்,

திருக்குர்ஆனும் அறிவியல் அற்புதங்களும் (மலை, மின்னல், எரிமலை)

மலை என்பது குறிப்பிட்ட ஒரு நிலப்பகுதியில் அதன் சுற்றாடலுக்கு மேலே உயர்ந்து காணப்படும் ஒரு பெரிய நில வடிவம் ஆகும்.

நாம் வெகு தூரத்தில் இருந்து கொண்டு மலைகளின் அழகை ரசித்து மகிழ்கிறோம். மேலும் பாதைகளை அமைத்து மலையின் உச்சிக்கே சென்று, உலவும் மேகக்கூட்டங்களையும், உலகின் அழகையும் கண்டு வியப்பின் உச்சிக்கே செல்கிறோம்.

திருக்குர்ஆனில் பூமி மற்றும் வானங்கள் பற்றிப் பேசப்படுகின்ற இடங்களில் மலைகள் குறித்தும் பேசப்படுகிறது. வானங்களும், பூமியும் இறைவனின் பிரமிப்பூட்டும் பிரமாண்ட படைப்புகளாக இருப்பதைப் போன்றே மலைகளும் ஒரு மகத்தான படைப்பாகும் என்பதையே இது காட்டுகிறது.

“பின்னர் அவனே பூமியை விரித்தான். அவனே அதில் இருந்து நீரையும் மேய்ச்சலையும் வெளிப்படுத்துகிறான். மலைகளையும் அவனே அதில் நிலை நிறுத்தினான்” (திருக்குர்ஆன்-79:30) என்றும்,

“நிச்சயமாக (நம்முடைய) பொறுப்பை சுமந்து கொள்வீர்களா? என நாம் வானங்கள், பூமி, மலைகள் முதலியவற்றிடம் வினவினோம். அதற்கு அவை அதைப் பற்றி பயந்து, அதைச் சுமப்பதில் இருந்து விலகி விட்டன. மனிதன் அதைச் சுமந்து கொண்டான். (இருப்பினும்) அவன் அறியாமையால் தனக்குத் தானே தீங்கிழைத்துக் கொண்டான்” (33:72) என்றும் பூமியுடன் மலைகளும் சேர்ந்தே இடம் பெற்றுள்ளதை அறிந்து கொள்ளலாம்.

பூமியில் அழகாகவும், கம்பீரமாகவும் காட்சி அளிக்கும் மலைகள் எதற்காகப் படைக்கப்பட்டிருக்கின்றன? பூமியில் அதன் அவசியம்தான் என்ன?

“நாம் பூமியை விரிப்பாக ஆக்கவில்லையா? இன்னும் மலைகளை முளைகளாக ஆக்கவில்லையா?” (78:6) என்றும்,

“அவனே பூமியை விரித்து அதில் உறுதியான மலைகளையும் ஆறுகளையும் உண்டாக்கினான்” (13:3) என்றும்,

“அவனே பூமியை விரித்தான்... அதில் மலைகளையும் நிலைநாட்டினான்” (79:30,32) என்றும் இறைவன் திருமறையில் கூறுகின்றான்.

பூமி ஆடாமல் அசையாமல் நிற்பதற்கு மலைகள், ‘முளை’களாக அமைந்துள்ளன என்பதையும், அவை உறுதியானவை என்பதையும் மேற்கண்ட வசனங்கள் மூலம் அறியலாம்.

கூடாரங்கள் காற்றில் பறந்து விடாமல் தடுப்பதற்காக அதன் பக்கவாட்டில் உள்ள கயிறுகளை இழுத்துக் கட்டுவதற்காக பூமியில் அறையப்படும் ‘முளைக்குச்சி’களைப் போல மலையின் வேர்கள் அமைந்துள்ளன.

‘புவி’ (எர்த்) என்ற தலைப்பில் எழுதப்பட்ட புத்தகம் புவியியல் தொடர்பான அறிவியல் நூலாக போற்றப்படுகிறது. இந்த நூலின் ஆசிரியர்களில் ஒருவரும், அமெரிக்காவில் உள்ள தேசிய விஞ்ஞானக் கழகத் தலைவருமான பிராங் பிரஸ் கூறுகையில், “மலைகள், முளைகளைப் போன்று பூமிக்கடியில் புதைந்து காணப்படுகின்றன. அதன் வேர்கள் பூமிக்குள் மிக ஆழமாக ஊடுருவி நிற்கின்றன” என்று குறிப்பிட்டுள்ளார்.

பூமியின் மேற்பரப்பில் காணப்படும் மலைகளின் உயரத்தை விட 10 அல்லது 15 மடங்கு ஆழமாக பூமிக்கடியில் ‘மலை வேர்’ என்று அழைக்கப்படும் அதன் வேர் பதிந்துள்ளது.

சான்றாக, பூமியின் மேற்பரப்பில் இருந்து 9 கிலோ மீட்டர் உயரமான இமயமலையின் வேர் பூமிக்கு அடியில் சுமார் 125 கிலோ மீட்டர் ஆழத்திற்கு நீண்டு காணப்படுகிறது.

இதன் காரணமாக கூடாரத்தைத் தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கும் முளைகள் போன்று மலைகள் செயல்படுகின்றன என்பதை விஞ்ஞான உலகம் ஒப்புக் கொண்டுள்ளது.

பூமி பல அடுக்குகளைக் கொண்டுள்ளது என்பதை முந்தைய அத்தியாயத்தில் பார்த்தோம்.

நிலப்பகுதியைச் சேர்ந்த பூமியின் மேல் அடுக்கு, கண்டத்தட்டு (காண்டினென்டல் கிரஸ்ட்) என்றும், நீருக்கடியில் உள்ள மேல் அடுக்கு, கடல் தட்டு (ஓசியானிக் கிரஸ்ட்) என்றும் அழைக்கப்படுகிறது.

கண்டத் தட்டு பூமியின் மேற்பரப்பில் இருந்து சுமார் 40 கிலோ மீட்டர் ஆழம் வரை உள்ளது. கடல் தட்டு கடல் நீருக்கடியில் 5 முதல் 10 கிலோ மீட்டர் ஆழம் வரை வியாபித்துள்ளது. மேன்டில் எனப்படும் இரண்டாம் அடுக்கு மற்றும் உட்கரு (கோர்) எனப்படும் மைய அடுக்கு என பல அடுக்குகள். அதில் உள் மையம், வெளி மையம் என்று உட்கரு இரண்டு கிளை அடுக்குகளாக பிரிந்துள்ளன.

பூமியின் உள்ளமைப்பு பல்வேறு நிலைகளில் உள்ளன. இதனால் பூமி தன்னைத் தானே சுற்றிக் கொண்டு சூரியனையும் சுற்றி வரும்போது நிலப்பரப்பு நிலை பெயர்ந்து போகலாம். பூமியின் அடுக்குகளில் நடுக்கம் ஏற்பட்டு சீட்டுக்கட்டுகள் போல சரிந்து போகலாம். இதனால் பூமியை அசையவிடாமல் கெட்டியாகவும், உறுதியாகவும் பிடித்துக் கொள்வதற்கு மலையின் மேற்பகுதி உறுதுணையாக உள்ளது.

“இன்னும் இப்பூமி (மனிதர்களுடன்) ஆடி சாயாமல் இருக்கும் பொருட்டு, நாம் அதில் நிலையான மலைகளை அமைத்தோம். அவர்கள் நேரான வழியில் செல்லும் பொருட்டு, நாம் விசாலமான பாதைகளையும் அமைத்தோம்” (திருக்குர்ஆன்-21:31) என்ற வசனத்தின் மூலம் பூமி ஆடாமல் அசையாமல் இருப்பதற்காகவே மலைகள் அமைந்துள்ளன என்பதை அறியலாம்.

மலையின் கம்பீரமான தோற்றமும், எழிலும் மனிதர்களுக்கு மலைப்பை ஏற்படுத்துவதால்தான் அதற்கு மலை என்று பெயரிட்டனர்.

மலைப்பைத் தருவது மலை மட்டுமல்ல; திருக்குர்ஆனில் மலை பற்றி இறைவன் கூறிய கருத்துகளும்தான் மழையும் மாமறையும் நாம் சுவாசிக்கின்ற ஆக்ஸிஜன், நமக்குப் பலனளிக்கும் நைட்ரஜன், வெப்பத்தைத் தக்க வைக்கும் கார்பன் டை ஆக்ஸைடு ஆகியவற்றைத் தாங்கி நிற்பது வளி மண்டலம்! அந்த வளி மண்டலம் இண்டு இடுக்குகள் இல்லாமல் ஐந்து அடுக்குகளாக அமையப் பெற்று சூரியனின் புற ஊதாக் கதிர்களை உள்ளே ஊடுருவாமல், பிரமாண்டமான வால் நட்சத்திரங்களை உள்ளே நுழைய விடாமல் இந்தப் புவியைப் பாதுகாத்துக் கொண்டிருக்கின்றது. அந்த வளி மண்டலத்தைத் தன் கைவசம் வைத்திருப்பது புவி ஈர்ப்பு விசை என்பதை அறிந்தோம்.இந்தப் புவி ஈர்ப்பு விசையின் இன்னொரு பயன் வானிலிருந்து மழையைப் பெற்றுத் தருவதாகும். அது எப்படி? என்ற கேள்விக்கு விடை காண்பதற்கு முன்னால் தாகம் தீர்க்கும் மேகத்தைப் பற்றி முதலில் பார்ப்போம். பென்னம் பெரும் மலைகளைப் போல் வானத்தில் திரண்டு நிற்கும் கன்னங்கருத்த மேகத்தை நாம் பார்க்கின்றோம். இந்த மேகம் இவ்வாறு திரள்வதற்கு முன்பாக இரண்டு கட்டங்களைச் சந்திக்கின்றன.மூன்றாவது கட்டமாகத் தான், சூழ் கொண்ட இந்தத் திரட்சி நிலையை அடைகின்றன. பஞ்சுகளைப் போல் திட்டு திட்டாக தனித்தனியாக மிதந்து நிற்கும் குட்டி குட்டி மேகங்களைக் காற்று தள்ளிக் கொண்டு செல்கின்றது. இவை அனைத்தும் ஒன்றிணைகின்றன. இவ்வாறு ஒன்றிணைந்த மேகங்கள் செங்குத்தாக விண்ணை நோக்கி எழுகின்றன. குவியக் கூடிய இந்த மேகங்களின் மத்திய தொகுதி ஓர் இழுவை சக்தியாக செயல்பட ஆரம்பித்து தன் இரு பக்கவாட்டிலும் உள்ள மேக சகாக்களை அரவணைத்து விண்ணை நோக்கி செங்குத்தாக இழுத்துச் செல்கின்றது.விண்ணகத்தின் குளிர்ந்த பகுதியை நோக்கி இது இழுத்துச் செல்லப் படுகின்றது. அவ்வாறு இழுத்துச் செல்லும் போது அந்த மத்தியப் பகுதியான இழுவை சக்தி குளிரினால் பொழிந்து சிந்தி விடாமல் பக்கவாட்டிலுள்ள மேகங்கள் பார்த்துக் கொள்கின்றன. விண்வெளியின் குளிர் பகுதியின் உச்சி நிலைக்குச் செல்லச் செல்ல மேகத்தின் வயிற்றில் ஆலங்கட்டிகள்,நீர் திவளைகள் சூல் கொண்டு மேகத் தொகுப்பின் எடை கூடுகின்றது. ஆக, அந்தரத்தில் கன்னங்கருத்த கனமான இமயத்தை விஞ்சும் அளவுக்கு 25,000 முதல் 30,000 அடி வரை ஒரு பெரும் மலை உருவாகின்றது. தனது எல்லைக்குள் இப்படி ஆலங்கட்டிகள் தொகுப்பாக கனமான ஒரு மலையாக ஏறுவதை அனுமதிக்காக புவி ஈர்ப்பு விசை அம்மலையை கீழ் நோக்கி இழுக்கின்றது. அது தான் நம் மீது அருளாகப் பொழிகின்ற மழை! இது மழையைப் பற்றிய ஒரு சிறு குறிப்பு! இப்போது விஷயத்திற்கு வருவோம். வானிலை ஆராய்ச்சியாளர்கள் இன்று இந்த மேகங்களை நாம் மேற்கண்டவாறு வகைப்படுத்துகின்றனர்.இப்படி சூல் கொண்டு திரண்டெழுந்து நிற்கும் இந்த மேகக் கூட்டத்திற்கு ஈன்ம்ன்ப்ர்ய்ண்ம்க்ஷன்ள்,ஈப்ர்ன்க் என்று குறிப்பிடுகின்றனர். இன்று வானியல் வல்லுநர்களால் வகைப்படுத்தப் பட்ட இந்த மேகத் திரட்சியை, மழைப் பொழிவை எந்தப் பல்கலைக் கழகத்திலும் போய் படித்து மேதையாகிடாத,ஏடெத்துப் படித்திராத முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் எப்படிச் சொல்ல முடிந்தது? மேற்கண்ட நவீன கண்டுபிடிப்புகளை அச்சுப் பிசகாமல் அப்படியே அல்குர்ஆன் சொல்வதைப் பாருங்கள்! அல்லாஹ் மேகங்களை இழுத்து அவற்றை ஒன்றாக்குவதையும், பின்னர் அதை அடுக்கடுக்காக அமைப்பதையும் நீர் அறியவில்லையா? அதன் மத்தியில் மழை வெளிப்படுவதைக் காண்கிறீர்!வானத்திலிருந்து அதில் உள்ள (பனி) மலைகளிலிருந்து ஆலங்கட்டியையும் இறக்குகிறான். தான் நாடியோருக்கு அதைப் பெறச் செய்கிறான். தான் நாடியோரை விட்டும் திருப்பி விடுகிறான். அதன் மின்னொளி பார்வைகளைப் பறிக்கப் பார்க்கிறது. (அல்குர்ஆன் 24:43) இதிலிருந்து புனித ரமளான் மாதத்தில் இறங்கத் தொடங்கிய இந்த வேதத்தின் வசனங்கள் படைத்த எல்லாம் வல்ல அல்லாஹ்வின் வார்த்தைகள் தான் என்று சான்று கூறி நிற்கின்றன! இந்த வசனத்தில் அல்லாஹ், மேகங்களுக்குப் (பனி) மலைகள் என்ற பதத்தைப் பயன்படுத்தியிருக்கின்றான். இன்று வானியல் ஆய்வாளர்கள் சொல்லும் இந்தக் கருத்தை அல்குர்ஆன் அன்றே சொல்லி முடித்திருக்கின்றது எனும் போது இது நூற்றுக்கு நூறு அல்லாஹ்வின் வேதம் தான் என்ற நம்பிக்கை மென்மேலும் அதிகரிக்கின்றது. மேற்கண்ட வசனத்தை அல்லாஹ் முடிக்கும் போது, "அதன் மின்னொளி கண்ணைப் பறிக்கப் பார்க்கின்றது" என்று சொல்லி முடிக்கின்றான். அதன் மின்னொளி என்றால் எதன் மின்னொளி?இதற்கான விளக்கத்தை அடுத்து வரும் மின்னல்’ என்ற தலைப்பில் பார்ப்போம். மின்னல் அல்லாஹ் மேகங்களை இழுத்து அவற்றை ஒன்றாக்குவதையும், பின்னர் அதை அடுக்கடுக்காக அமைப்பதையும் நீர் அறியவில்லையா? அதன் மத்தியில் மழை வெளிப்படுவதைக் காண்கிறீர்!வானத்திலிருந்து அதில் உள்ள (பனி) மலைகளிலிருந்து ஆலங்கட்டியையும் இறக்குகிறான். தான் நாடியோருக்கு அதைப் பெறச் செய்கிறான். தான் நாடியோரை விட்டும் திருப்பி விடுகிறான். அதன் மின்னொளி பார்வைகளைப் பறிக்கப் பார்க்கிறது. (அல்குர்ஆன் 24:43) இந்த வசனத்தில் மின்னலைப் பற்றிக் குறிப்பிடும் போது, அதன் மின்னல் என்று மின்னலை ஏதோ ஒன்றுடன் இணைத்து அல்லாஹ் கூறுகின்றான். எதன் மின்னல்? என்ற கேள்விக்கு நாம் விடையைத் தேடினால் இந்த வசனத்திலேயே இதற்கு முன்பாக ஆலங்கட்டியைப் பற்றி அல்லாஹ் குறிப்பிடுவதைப் பார்க்க முடிகின்றது. அதன் மின்னல்’ என்பது ஆலங்கட்டியின் மின்னல்’ என்று திருக்குர்ஆன் பதில் கூறுகின்றது. அது சரி! ஆலங்கட்டிக்கும் மின்னலுக்கும் என்ன சம்பந்தம்? என்ற கேள்வி இப்போது எழுகின்றது.எனவே இந்த மின்னலைப் பற்றி அறிவியல் உலகம் என்ன கூறுகின்றது என்று பார்ப்போம். ஒன்றாகத் திரண்டு நிற்கும் மேக மலையின் மேற்பகுதியில் உள்ள ஆலங்கட்டிகள், அதிகம் குளிர்ந்து போன நீர்ப்பகுதிகள் மற்றும் பனித்துகளின் மேல் விழும் போது மேகங்கள் மின் காந்தப் புலன்களைப் பெற்று விடுகின்றன. இந்த நேரத்தில் குளிர்ந்த நீர்பபகுதிகள் மற்றும் பனித்துகள்களிலிருந்து எலக்ட்ரான்கள் கிளம்பி சூடான ஆலங்கட்டிகளை நோக்கித் தாவுகின்றன. அதனால் ஆலங்கட்டி எதிர் மின்னூட்டத்தையும் குளிர்ந்த நீர்ப்பகுதிகள் மற்றும் பனித்துகள்கள் நேர் மின்னூட்டத்தையும் பெறுகின்றன. இதன் விளைவாக நேர் மின்னூட்டம் பெற்ற சின்னஞ்சிறு பனித்துகள்கள் உடைந்து சிதறுகின்றன. சிதறிய சின்னஞ்சிறு சிதறல்கள் மேகத்தின் மேற்பகுதிக்கு எடுத்துச் செல்லப்படுகின்ற போது அங்கு ஏற்கனவே எதிர் மின்னூட்டத்தைப் பெற்றிருக்கின்ற ஆலங்கட்டிகள் மேகத்தின் அடிப்பாகத்தில் விழுகின்றன. கீழே விழுந்த ஆலங்கட்டிகளின் எதிர் மின்னூட்டங்கள் தான் மின்னல் வெட்டுவதன் மூலம் வெளியேற்றப் படுகின்றன. இந்த மின் வெட்டு தன்னைச் சுற்றிலும் உள்ள காற்றை 30,0000 C அளவுக்கு வெப்பப் படுத்துகின்றது. இது சூரியனின் மேற்பரப்பிலுள்ள வெப்பத்தை விட 5 மடங்கு அதிகமாகும். (சூரியனின் மேற்பரப்பு வெப்பம் 60000 C) இந்த அளவுக்கு வெளியாகும் வெப்பம் காற்றை வெகு வேகமாக விரிவுபடுத்துகின்றது. இதில் உருவாவது தான் இடி முழக்கம்! இங்கு நாம் கவனிக்க வேண்டிய அம்சம், அதன் மின்னல் என்று கூறியதன் மூலம் மின்னலுக்குக் காரணம் ஆலங்கட்டி தான் என்று அல்குர்ஆன் 1400 ஆண்டுகளுக்கு முன் சொன்ன உண்மையை இன்று வானிலை ஆய்வாளர்கள் நிரூபித்துக் கொண்டிருக்கின்றனர். இதுவும் அல்குர்ஆன் தூய நாயனான அல்லாஹ்வின் வேதம் என்பதற்கு ஓர் அற்புதமான அறிவியல் சான்றாகும். விண்ணகத்தில் வெப்பத்தைப் பிரசவித்து வெளிவரும் இந்த மின்னல் மண்ணகத்தில் என்ன சாதித்துக் கொண்டிருக்கின்றது? இதைப் பற்றியும் அல்லாஹ் திருக்குர்ஆனில் நாம் வியக்கும் வண்ணம் கூறுகின்றான். அச்சத்தையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தக் கூடியதாக அவனே மின்னலை உங்களுக்குக் காட்டுகிறான். பளுவான மேகங்களையும் அவன் உருவாக்குகிறான். இடியும் அவனைப் புகழ்ந்து போற்றுகிறது. அவனைப் பற்றிய அச்சத்தினால் வானவர்களும் (புகழ்ந்து போற்றுகின்றனர்). இடி முழக்கங்களையும் அவனே அனுப்புகிறான். தான் நாடியோரை அவற்றின் மூலம் தண்டிக்கிறான்.அவர்களோ அல்லாஹ்வைப் பற்றி தர்க்கம் செய்கின்றனர். அவன் வலிமை மிக்கவன். (அல்குர்ஆன்13:12,13) இவ்விரண்டு வசனங்களும் மின்னல், இடியைப் பற்றி விளக்குகின்றன. இடி, மின்னல் எவ்வாறு உருகின்றன என்பதை மேலே நாம் கண்டோம். எல்லாம் வல்ல அல்லாஹ் இவ்விரண்டில் மின்னலைப் பற்றி குறிப்பிடும் போது, அச்சத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தக் கூடியதாக அவனே மின்னலைக் காட்டுகின்றான் என்று கூறுகின்றான். மின்னல் பளிச்சென்று வெட்டி மறையும் போது நம்முடைய நாடி நரம்புகளில் அச்ச அலைகள் ஓடிப் பரவுகின்றன. 30,0000 ஈ வெப்பத்தை ஏற்படுத்தும் மின்னலைப் பற்றி அச்சம் தரக் கூடியது என்று அல்குர்ஆன் கூறுவதை நாம் புரிந்து கொள்ள முடிகின்றது. ஆனால் மின்னலில் எதிர்பார்ப்பு, ஆதரவு உள்ளது என்று அல்லாஹ் கூறுவதிலிருந்து என்ன கருத்தை அவன் சொல்ல வருகின்றான் என்று எளிதில் புரிந்து கொள்ள முடிவதில்லை. மின்னலுக்கு ஏன் எதிர்பார்ப்பு என்ற வார்த்தையை அல்லாஹ் பயன்படுத்த வேண்டும்? என்ற விளக்கத்தைக் காண நாம் களமிறங்குவோம். வளி மண்டலத்தில் நைட்ரஜன் 78 சதவிகிதமும், ஆக்ஸிஜன் 21 சதவிகிதமும், கார்பன் டை ஆக்ஸைடு0.033 சதவிகிதமும், ஆர்கான், நியான், ஹீலியம், மீதேன், ஹைட்ரஜன் ஆகிய வாயுக்கள் மிகக் குறைந்த அளவிலும் கலந்துள்ளன என்பதை வளி மண்லத்தில் கலந்திருக்கும் வாயுக்கள் என்ற தலைப்பில் முன்னர் கண்டோம். ஒரு தடவை மின் வெட்டி மறையும் போது, ஏதோ மின் வெட்டி மறைகின்றது என்று நாம் கண் சிமிட்டி விட்டு அதைக் கண்டு கொள்ளாது விட்டு விடுகின்றோம். ஆனால் ஒரு தடவை மின்னல் வெட்டுகின்ற போது அங்கு ஒரு கல்யாணமே நடந்து முடிகின்றது. ஆம்! காற்றிலுள்ள 78 சதவிகித நைட்ரஜனும் 21 சதவிகித ஆக்ஸிஜனும் ஒன்றாகக் கலந்து கை கோர்க்கின்றன. இதனால் பிறக்கின்ற குழந்தை தான் நைட்ரேட்டுகள்! நைட்ரஜனும் ஆக்ஸிஜனும் ஒன்று சேர்ந்ததும் நைட்ரேட் உருவாகின்றது. இந்த நைட்ரேட்டுகள் மழை நீருடன் கலந்து நீர்த்த நைட்ரிக் அமிலமாக மாறி மழையாகப் பொழிகின்றது. வளி மண்டலத்திலுள்ள இந்த நைட்ரஜனை ஏற்கனவே மண்ணில் உள்ள பாக்டீரியாக்கள் கவர்ந்து நைட்ரேட்டுகளாக மாற்றுகின்றன! இந்தப் பணியை மின்னல் வந்து பாய்ந்து வளி மண்டலத்தில் உள்ள நைட்ரஜன்களை உடைத்து அமிலமாக, சத்தாக, சாறாக மாற்றி மழை நீருடன் ஆறாக ஓடச் செய்கின்றது. மண்ணுக்குள் கால்சியம், இரும்பு, அலுமினியம் போன்ற கனிமங்கள் இருக்கின்றன. அந்தக் கனிமங்களுடன் இது கலக்கும் போது அவற்றின் நைட்ரேட்டுகள் உருவாகின்றன. கால்சியத்துடன் கலக்கும் போது கால்சியம் நைட்ரேட்டு உருவாகின்றது. இவை தான் மண்ணில் விளைகின்ற தாவரங்களுக்கு இயற்கை உரமாகப் பயன்படுகின்றன. இவற்றை நேரடியாக மனிதன் சாப்பிடுவதன் மூலமோ அல்லது இவற்றைச் சாப்பிடும் ஆடு, மாடுகளின் இறைச்சியைச் சாப்பிடுவதன் மூலமோ மனிதன் நைட்ரஜனைத் தன் உடலில் சேர்த்துக் கொள்கின்றான். மனிதனுடைய உடலில் ஒட்டிக் கொண்டிருக்கும் இந்த நைட்ரஜன் அவன் இறந்தவுடன் மீண்டும் அது மண்ணிலேயே போய் சேர்ந்து விடுகின்றது. மனித உடலில் மட்டுமல்லாது மொத்த உயிரினங்களின் உடலிலும் நைட்ரஜன் கலந்து அந்த உயிரினங்கள் மடிந்ததும் மண்ணில் கலந்து விடுகின்றது. பின்னர் மீண்டும் காற்றிலேயே கலந்து விடுகின்றது. இதற்குப் பெயர் தான் நைட்ரஜன் சுழற்சி என்று வழங்கப் படுகின்றது. சுப்ஹானல்லாஹ்! அல்லாஹ் மின்னலுக்கு ஏன் எதிர்பார்ப்பு என பெயர் வைத்தான் என்ற உண்மை நமக்கு மின்னல் போல் பளிச்சிடுகின்றதல்லவா? மிகப் பெரிய ஆற்றலாளனான அவன் நைட்ரஜன்,ஆக்ஸிஜன் என்ற பின்னல்களில் மின்னலைப் பாய்ச்சி நம்மை வாழ வைக்கின்றான். நாம் எப்படி அவனுக்கு நன்றி செலுத்த மறந்தவர்களாக இருக்கின்றோம் என்பதை எண்ணிப் பார்ப்போம்! மின்னலில் பொதிந்திருக்கும் இந்த ஆற்றலை அறிவியல் உலகம் கண்டு பிடிப்பதற்கு முன்னால் அன்றே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மூலம் குர்ஆனில் சொல்லி முடித்த அந்த நாயன் மிகப் பெரியவனே! அல்லாஹு அக்பர்! எரிமலையும் இறைமறையும் வானியல் ஆராய்ச்சியாளர்களிடம் மிகவும் பிரபலமானது பெரு வெடிப்புக் கொள்கை (Big bang theory) ஆகும். இந்தப் பிரபஞ்சத்தில் காணப்படும் பூமி உள்ளிட்ட அனைத்து கோள்களும் துணைக் கோள்களும் நட்சத்திரங்களும் ஒரே பொருளாகத் தான் இருந்தன. இந்தப் பொருள் பூமியை விட 318.5 மடங்கு எடையைக் கொண்டதாகவும் மிக மிக அடர்த்தியானதாகவும் இருந்தது. அந்தப் பொருள் ஏதோ ஒரு வானியல் மாற்றத்தால் திடீரென வெடித்துச் சிதறியது. இதனால் அண்டம் முழுவதும் ஒரே தூசுப் படலமாகப் பரவியது. இது சுமார்1500 கோடி ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. இதற்குப் பிறகு புகை மூட்டமாக இருந்த அந்தத் தூசுப் படலம் ஈர்ப்பு விசையின் காரணமாக சிறிது சிறிதாக இணைந்து பெரிதாகி இப்போதுள்ள கோள்கள், துணைக் கோள்கள், நட்சத்திரங்கள் ஆகியவை தோன்றின. இவ்வாறு தூசுப் படலத்திலிருந்து பிரிந்து கோள்கள் உருவான நிகழ்வு சுமார் 500 கோடி முதல் 750 கோடி வருடங்களுக்கிடையில் நடைபெற்றது. இது தான் பெரு வெடிப்புக் கொள்கை(இண்ஞ் க்ஷஹய்ஞ் ற்ட்ங்ர்ழ்ஹ்) ஆகும். மனிதன் தன்னுடைய விஞ்ஞான அறிவையும் நவீன கருவிகளையும் கொண்டு இந்தப் பேரண்டம் எவ்வாறு தோன்றியது என்ற வரலாற்றை தற்போது கண்டறிந்துள்ளான். ஆனால் 1400 ஆண்டுகளுக்கு முன் இதைப் பற்றி யாருக்காவது தெரிந்திருந்ததா? பூமி, சூரியன், சந்திரன் ஆகியவற்றைப் பற்றி வெறும் கதைகளையும் கற்பனைகளையும் நம்பிக் கொண்டிருந்த காலம். இன்று கூட மற்ற மதங்களின் வேதங்களில் இந்தக் கதைகள் தான் கூறப்படுகின்றன. பேரண்டத்தின் தோற்றம் குறித்து திருக்குர்ஆன் என்ன கூறுகின்றது என்று பார்ப்போம். வானங்களும், பூமியும் இணைந்திருந்தன என்பதையும், அவ்விரண்டையும் நாமே பிரித்தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொரு பொருளையும் தண்ணீரிலிருந்து அமைத்தோம் என்பதையும்(நம்மை) மறுப்போர் சிந்திக்க வேண்டாமா? அவர்கள் நம்பிக்கை கொள்ள வேண்டாமா? (அல்குர்ஆன்21:30) பின்னர் வானம் புகையாக இருந்த போது அதை நாடினான். விரும்பியோ விரும்பாமலோ நீங்கள் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்று அதற்கும் பூமிக்கும் கூறினான். விரும்பியே கட்டுப்பட்டோம் என்று அவை கூறின. (அல்குர்ஆன் 41:11) என்ன அற்புதமான வார்த்தைகள்! பூமியும் இதர கோள்களும் இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் ஒரே பொருளாக இருந்தன என்பதையும் அதன் பிறகு புகை போன்றிருந்த நிலையில் தான் அனைத்தும் உருவாயின என்பதையும் இவ்விரு வசனங்களும் தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கின்றன. மேலே நாம் கூறியுள்ள பெரு வெடிப்புக் கொள்கையையும்  இந்த இரு வசனங்களையும் படித்துப் பாருங்கள்!உண்மையிலேயே நமது உடலைப் புல்லரிக்கச் செய்கின்றதல்லவா? இந்தப் பேருண்மை 1400ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு மனிதருக்கு எப்படித் தெரியும்? படைத்த இறைவனின் வார்த்தையாக திருக்குர்ஆன் இருந்தால் மாத்திரமே இதைக் கூற முடியும். எனவே திருக்குர்ஆன் இறை வேதம் என்பதற்கு இதுவும் சான்றாக அமைந்திருக்கிறது. அடுப்பிலிருந்து ஒரு தீக்கங்கை கிடுக்கியில் தனியாக எடுத்து ஓரிடத்தில் வைக்கின்றோம். நேரமாக நேரமாக அந்தத் தீக்கங்கின் மேற்பகுதி குளிர்ந்து விடுகின்றது. ஆனால் அதன் உட்பகுதியோ நெருப்புக் குழம்பாகக் கனன்று கொண்டிருக்கின்றது. சூரியனிலிருந்து பிரிந்து வந்த பூமி மேற்பகுதியில் குளிர்ந்து, அதன் மீது தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். ஆனால் அதன் உட்பகுதியோ நெருப்புக் குழம்பாகக் கொந்தளித்துக் கொண்டிருக்கின்றது. அதனால் தான் அது அவ்வப்போது எரிமலைகளைக் கொப்பளிக்கின்றது. இந்தப் பூமி ஒரு காலத்தில் சூரியனுடன் ஒன்றாக இருந்தது என்பதற்கு இந்த எரிமலைகள் அக்கினி சாட்சிகளாகத் திகழ்கின்றன

рокிро░рокро▓்ропрооாрой рокродிро╡ுроХро│்