роироо்рооுроЯрой் роЗрогைрои்родு роЗро░ுрок்рокро╡ро░்роХро│்

рокுродрой், рооே 31, 2017

рокி,роЬே,рокி,bjp,3 роЖрог்роЯு роЪாродройை,

பா.ஜ.க மூன்றாண்டு ஆட்சி நிறைவு பற்றி எதுவும் பாராட்டி எழுத முடியாமல் அவர்கள் தவிக்கும் தவிப்பு பார்க்க சிரிப்பாக உள்ளது..

தூய்மை இந்தியா, மேக் இன் இந்தியா, டிஜிட்டல் இந்தியா & ஸ்மார்ட் சிட்டி லாம் அவங்களுக்கு கூட நியாபகம் வரவில்லை, எதுனா செய்ஞ்சு இருந்தா தானே நியாபகம் வரும்.. எல்லாம் பேரு வச்சதோட சரி, அதுக்கப்புறம் ஒன்னும் நடக்கல.. அவர்கள் எழுதாட்டி என்ன நமக்கு எழுத ஆசை, கீழ்க்காணும் அத்தனையும் பற்றி விரிவாக எழுத ஆசை. ஆனால் திட்டமிட்டு நேரம் ஒதுக்க வேண்டும்.

-பெட்ரோல் / டீசல் வரி உயர்வு
-மருந்து பொருள் விலை உயர்வு
-ரயில் கட்டண விலை உயர்வு
-கேஸ் விலை உயர்வு
-புதிய வரிகள்
-பெரு முதலாளிகளின் வாராக்கடன்
-வெளிநாட்டு கருப்பு பண முதலீட்டாளர்கள் பெயர் வெளியிட மறுத்தல்
-ரூ.500/1000 தடை
-ரூபாயின் மதிப்பு
- மோடி வெளிநாட்டு பயணங்கள்
- வெளியுறவு கொள்கை
- ராணுவ வீரர் ஓய்வூதிய திட்ட தாமதம்
- உதய் மின்திட்டம்
- தமிழ்நாடு வறட்சி நிவாரணம்
- தபால் துறை வழியாக கங்கை நீர் விநியோகம்
- காஷ்மீர் தேர்தல் 8% வாக்குப்பதிவு
- அருணாசல பிரதேச ஆட்சி கலைப்பு
- ராணுவத்திற்கான உணவில் முறைகேடு
- சீனப் பட்டாசிற்கு எதிரான தேர்தல் நேர பேச்சு
- பலுசிஸ்தான் தலையீடு
- இட ஒதுக்கீடு நீக்கம் பற்றிய பேச்சுகள்
- பென்சன் வட்டி விகிதம் குறைப்பு மற்றும் விதிமுறை மாற்றங்கள்
- மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பல ஆயிரம் கோடி ஊதியம் தாமதம்
-ஜி.டி.பி குளறுபடி
-புதிய வங்கி கட்டணங்கள்
-ஆதார்
-அந்நிய நேரடி முதலீடு
-தூய்மை இந்தியா திட்டம்
-மேக் இன் இந்தியா
-டிஜிட்டல் இந்திய திட்டம்
-அணு உலை
-புல்லட் ரயில்
-நில கையகப்படுத்தும் மசோதா
-ஸ்மார்ட் சிட்டி
-ஹிந்தி திணிப்பு
-காவேரி நீர் மேலாண்மை ஆணையம்
-நீதிபதிகள் நியமனம் தாமதம்
-ஜி.எஸ்.டி
-சரிந்து வரும் வேலை வாய்ப்புகள்
-காஷ்மீர் தொடர் கிளர்ச்சி - பெல்லட் குண்டு
-கல்புர்கி கொலை
-ரோஹித் வெமுலா
-ஜவாஹர்லால் பல்கலைக்கழகம் சர்ச்சைகள்
-வருண் காந்தி - ராணுவ ரகசியங்கள்
-ரகுராம் ராஜன் மாற்றம்
-ஜல்லிக்கட்டு
-எல்லை தாண்டிய தாக்குதல். உண்மையா பொய்யா ? தொடர் ராணுவ வீரர்கள் பலி
-ஜியோ சிம் விளம்பரம்
-லலித் மோடி
-வியாபம்
-கிரண் ரிஜ்ஜு 450 கோடி ஊழல்
-சுரங்க ஊழல் - மகாராஷ்டிரா & கர்நாடகா
-தனி விமானம் 2000 கோடி
-பிரான்ஸ் - பழைய போர் விமானம் அதிக விலை
-10 லட்சம் ஆடை
-பாகிஸ்தான் திடீர் வருகை & அதானி தொழில் வாய்ப்புகள்
-பள்ளிப்பாட புத்தகங்கள் வரலாறு திரிப்பு
-முக்கிய பிரச்சனைகளில் மௌனம்
-பல்வேறு பா.ஜ.க உறுப்பினர்களின் வெடி தயாரிப்பு செயல்பாடுகள்
-ஓரினச்சேர்க்கை, பலாத்காரம், பெண் பற்றி கலாச்சாரத்திற்கு முரணான கருத்துக்கள்.
-சஹாரா நிறுவன லஞ்சம் - மோடி முதலமைச்சராக இருந்த போது
-தனியார் நிறுவன விளம்பரம் - JIO & PAYTM
-குஜராத் தொழிலதிபர் மகேஷ் ஷா வாக்குமூலம்
-பதில் இல்லாத தகவல் அறியும் சட்டம் - மோடி கல்வி தகுதி
-தேச பக்தி நாடகங்கள்
-மேகாலயா கவர்னர் காம லீலை
-ஜக்கி ஈஷா யோகா நிகழ்ச்சி
-பாபா ராம்தேவ் - நில ஒதுக்கீடு
-சமஸ்கிருதம் திணிப்பு
-புதிய கல்வி கொள்கை
-பொது சிவில் சட்டம்
-கங்கை சுத்தப்படுத்தும் திட்டம் - 20,000 கோடி வீண்
-மாட்டு கறி தடை
-மாட்டு கறி கொலைகள் - அக்லாக், உனா(குஜராத்)
-ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் மாநாடு - பசுமை தீர்ப்பாயம் அபராதம்
-அயோத்தி ராமர் கோவில்
-அமைச்சர்களின் வெறுப்பு பேச்சு
-கட்டாய சூரிய வணக்கம் / யோகா
-காவிரி நதி நீர் மேலாண்மை வாரியம், தீர்ப்பு & வன்முறை
-டெல்லி விவசாயிகள் போராட்டம்
-நீட் தேர்வு
-ரேஷன் மானியம் நிறுத்தம்

роЪройி, рооே 27, 2017

рооாроЯ்роЯு роЕро░роЪிропро▓்ро╡ாродிроХро│்,

சென்னை :இறைச்சி மற்றும் தோல் பொருட்கள் தயாரிப்புக்காக மாடுகளை விற்பதற்கு மத்திய அரசு தடைவிதித்துள்ளதற்கு மாட்டு வியாபாரிகள், லட்சக்கணக்கான தொழிலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதைக் கண்டித்து விழுப்புரத்தில் விவசாயிகள் மறியலில் ஈடுபட்டனர். திருச்சியில் மாட்டிறைச்சி கூடத்துக்கு இன்று சீல் வைக்க வந்த மாநகராட்சி அதிகாரிகளை வியாபாரிகள் சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.நாடு முழுவதும் இறைச்சி மற்றும் தோல் பொருட்கள் தயாரிக்க மாடுகளை விற்பதற்கு நேற்று மத்திய அரசு தடை விதித்தது. மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் சார்பில் மிருக வதை தடுப்பு சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு இதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. கால்நடை சந்தைகள் மூலமாக மாடு, எருமை, ஒட்டகம் ஆகியவற்றை இறைச்சிக்காக விற்கவோ, வாங்கவோ கூடாது. பண்ணை உரிமையாளர்கள் மட்டுமே சந்தைகளில் கால்நடைகளை விற்பனை செய்ய வேண்டும். விவசாய தேவைக்காக மட்டுமே கால்நடைகள் விற்கப்பட வேண்டும். கால்நடைகளைவாங்கியவர்கள் 6 மாத இடைவெளிக்குள் அவற்றை விற்பனை செய்யக் கூடாது உள்பட பல்வேறு அம்சங்கள் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளன. இதில், 23 பக்கங்கள் கொண்ட 50க்கும் மேற்பட்ட கட்டுப்பாடுகள் வகுக்கப்பட்டுள்ளன. அரசாணையை சமீபத்தில் காலமான முன்னாள் சுற்றுச்சூழல் அமைச்சர் அனில் மாதவ் தவே கையெழுத்திட்டுள்ளார்.
மத்திய அரசின் இந்த ஆணையால், இறைச்சி விற்பனையாளர்களும், தோல் வியாபாரிகளும் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். தோல் வர்த்தக நிறுவனங்களின் 90 சதவீத தேவை வார சந்தை, மாட்டு சந்தைகளின் மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது. தற்போது மத்திய அரசின் உத்தரவால் இனி பெரும்பாலான தோல் நிறுவனங்கள் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பல ஏழை விவசாயிகள் கறவை மாடுகள் அல்லாதவற்றை வருமானத்திற்காக விற்பனை செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். அவர்களும் தங்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என கவலை தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக, நாடு முழுவதும் மீண்டும் மாட்டிறைச்சி விவகாரம் பெரும் புயலை கிளப்பி உள்ளது.தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் 210 கால்நடை சந்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன.சென்னை, திருச்சி, ஈரோடு, வேலூர், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஆண்டுக்கு ₹16,250 கோடிக்கு தோல் மற்றும் காலணி பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதேபோல் தமிழகம் முழுவதும் உள்ள 400 தோல் தொழிற்சாலைகளில் சுமார் 1.5 லட்சம் பேர் வேலை செய்து வருகின்றனர். அவர்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதனால் இந்தியாவின் இறைச்சி வர்த்தகம், ₹1 லட்சம் கோடி அளவுக்கு பாதிக்கப்படும். மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கும் உத்தரவை மத்திய அரசு உடனடியாக திரும்பபெற வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். விவசாயிகள் மறியல்இதற்கிடையில், விழுப்புரம் மாவட்டம் தியாகதுருகத்தில் சனிக்கிழமை தோறும் வாரச்சந்தை நடைபெற்று வருகிறது. இங்கு கடலூர், விழுப்புரம், பண்ருட்டி, உளுந்தூர்பேட்டை, திருக்கோவிலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பகுதியை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் வளர்க்கும் ஆடு, மாடுகளை கொண்டு வந்து விற்பனை செய்து வந்தனர். கேரளா, தேனி, கம்பம், பொள்ளாச்சி உள்ளிட்ட வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான பெரு வியாபாரிகள் சந்தைக்கு வந்து ஆடு, மாடுகளை வாங்கி செல்வர்.
இந்நிலையில் இன்று 600க்கும் மேற்பட்ட மாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தன. மாடுகளை விற்க நேற்று மத்திய அரசு தடை விதித்ததால், தியாகதுருகம் சந்தைக்கு வெளியூர் மற்றும் வெளிமாநிலத்தை சேர்ந்த வியாபாரிகள் மாடுகளை வாங்க வரவில்லை. விழுப்புரம், கடலூர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு சில வியாபாரிகள் மட்டுமே சந்தைக்கு மாடுகள் வாங்க வந்திருந்தனர். மாடுகள் வரத்து அதிகரிப்பு மற்றும் வியாபாரிகள் வருகை குறைவு காரணமாக எதிர்பார்த்த அளவுக்கு மாடுகள் விலை போகவில்லை. இதனால் மாடுகளின் விலை கடுமையாக சரிந்தது.அடிமட்ட விலைக்கு கேட்கப்பட்டதால் ஆத்திரமடைந்த விவசாயிகள் சுமார் 200 பேர் தங்களது மாடுகளுடன் சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசைக் கண்டித்து அவர்கள் கோஷம் எழுப்பினர். இதனால் 2 மணி நேரத்துக்கும் மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சீல் வைக்க எதிர்ப்புதிருச்சி பொன்மலை ஜி.கார்னரில் உள்ள மாநகராட்சி மாட்டிறைச்சி கூடத்தை பூட்டி சீல் வைக்க மாநகராட்சி அரியமங்கலம் கோட்ட உதவி ஆணையர் வைத்தியநாதன், உதவி செயற்பொறியாளர் பக்ருதீன் ஆகியோர் சென்றனர்.

роЪெро╡்ро╡ாроп், рооே 23, 2017

родрооிро┤்роиாроЯு родро╡்ро╣ீрод் роЬрооாрод், 40 роХேро│்ро╡ி,

தவ்ஹீது என்ற பெயரில் வாழும் மடையர்களுக்கு  நாற்பது கேள்விகள்
வரலாற்றில் நபித்தோழர்களின் காலத்தில் உருவான காரிஜிய்யாக்கள் தங்களை தவ்ஹீதுவாதிகள் (اصحاب العدل والتوحيد ) என்றே அழைத்துக் கொண்டார்கள். முன்னுக்குப் பின் முரணாக நடந்தார்கள்.

கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் கமாலுத்தீன் மதனீ, காஞ்சி அப்துர் ரவூஃப், பி. ஜெயினுல் ஆபிதீன் ஆகிய மூவரால் தொடங்கப்பட்ட  ஜம்யிய்யத் அஹ்லுல் குர்ஆன் வல் ஹதீஸ் அமைப்பு பணத்தகராறினால் மூவரும் தனித்தனியாக பிரிந்த பின்பு ஏற்கனவே இருந்த நடைமுறைகள் அனைத்தையும் இல்லை என்று பிரச்சாரம் செய்து தங்களின் இயக்கத்தை இல்லை.. இல்லை.. வயிறுகளை வளர்த்தார்கள்.
ஆரம்பத்தில் எதையெல்லாம் ”கூடாது ” என்று விமர்சித்தார்களோ அதையெல்லாம் தாங்களே பிற்காலத்தில் செய்தார்கள்.. இதோ அவர்களை நோக்கி சில கேள்விகள்…..

1. தர்கா கொடியை ஷி ர்க் என்று விமர்சித்த நீங்கள்,  எதெற்கெடுத்தாலும் நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான கொடி கட்டுகிறீர்களே?  இந்த கொடிக்கலாச்சாரம் நபி வழியா? உங்கள் பாஷையில் போர்க்களத்தை தவிர்த்து மார்க்கப் பிரச்சாரத்திற்கு நபி நாயகம் கொடியை பயன்படுத்தியிருக்கிறார்களா? அல்லது நீங்கள் நடத்தும் ஒவ்வொரு நிகழ்ச்சியும் போர்க்களம் தானோ? !

2. மீலாது விழா வை பித்அத் என்று கூறிய நீங்கள் சுதந்திர தின விழா மற்றும் குடியரசு தின விழாக்களை கொண்டாடி அதற்காக இரத்த தானம் செய்கிறீர்களே? இந்த கொண்டாட்டம் நபி வழியா?  நபிகள் நாயகம் பிறந்த நாளில் இரத்த தானம் செய்யலாமில்லையா?

3. திருமணத்தில் மாப்பிள்ளை மாலையணிவது மாற்றுமத கலாச்சாரம் என்றீர்கள்?  பாரம்பரியமாக முஸ்லிம்களின் அடையாளம் என்று அறியப்பட்ட தொப்பியணிவது நபிவழியில்லை என்றீர்களே? உங்கள் தொண்டர்கள் கழுத்திலும் கையிலும் நாய் சங்கிலி போன்று செயின் அணிகிறார்களே? 

4. உட்கார்ந்து சிறு நீர்கழிக்க முடியாதவாறு ஜீன்ஸ் பேன்ட் அணிகிறார்களே?  திருமணத்தில் யூத கிறிஸ்தவ கலாச்சார உடையாகிய கோட் சூட் அணிகிறார்களே?  நீங்கள் நபி வழி என்று கற்று கொடுத்ததா?   இல்லை என்றால் நீங்கள் ஏன் தடுக்கவில்லை?

5. திருமணத்தில் குடும்பத்தார்கள் நிழல் பெறுவதற்காக பந்தல் போடுவதை ஆடம்பர திருமணம் என்றீர்களே?   60 ரூபாய் மன் பானைக்கு எல்லா தெருக்களிலும் பந்தல் போட்டு வைத்திருக்கிறீர்களே?  இது ஆடம்பரமில்லையா? இது நபிவழியா?

6. திருமணத்தில் குடும்பத்தார்கள் நிழல் பெறுவதற்காக பந்தல் போடுவதும்,  மாப்பிள்ளை மாலை போடுவதும், ஆடம்பரமாக தெரியும் உங்களுக்கு அதே திருமணத்தில் (ஜனாசா வீட்டுக்குப் போடப்படும்) சாமியானா பந்தலும், நானூறு சேர்களும் ஹலாலானது எப்படி?

7. பெண்வீட்டு விருந்தை கடுமையாக விமர்சிக்கும் மருத்துவ முகாம் தொடங்கி 10 வது ஆண்டு விழா கொண்டாட்டத்தில் பஃபே உணவு பரிமாறப்பட்டதாமே?  வாரம் வாரம் சாப்பாடு பக்ரீத் பண்டிகையில் தொண்டரணிக்கு மீன் பிரியாணி விருந்து இதுவெல்லாம் ஆடம்பர விருந்து இல்லையா ? இது நபிவழி விருந்தா?

8. திருமண வலீமாவிற்கு உச்ச வரம்பில்லை குறைந்தது ஒரு ஆடு. கூடுதல் வசதிக்கேற்ப தேவைக்கேற்ப வைத்துக்கொள்வதற்கு நபி (ஸல்) அவர்களே அனுமதி தந்திருக்க, வலீமா உச்ச வரம்பு 150 கலம் (மூன்று  பேர்  இணைந்து சாப்பிடுவது) என்றும்,  40 படி என்றும் நிர்ணயம் செய்ய உங்களுக்கு யார் அதிகாரம் வழங்கியது?  நபி வழியில் என்ன ஆதாரம்?

9. மார்க்க விஷயத்தில் ஒரு கருத்து தான் சரியாக இருக்க முடியும் என்றீர்கள் ? தொழுகையில் ஆமீன் சப்தமிட்டு கூறுவதா? மெதுவாக கூறுவதா?  என்ற விஷயத்தில் இரண்டுமே சரிதான் என்றே முடிவிற்குத்தானே கடைசியாக வந்தீர்கள்?  ஒரே நிலைபாடு ஏன் சாத்தியமில்லை?  இரண்டு மத்ஹப் சட்டங்களும் சரியாக ஏன் இருக்க கூடாது?

10. ஜமாத் நிலைப்பாடு, ஜமாஅத் பைளா என்கிறீர்களே? உங்கள் ஜமாஅத் செயல்படுவது குர்ஆன் ஹதீஸ் படி தான் என்றால் நிலைபாடு எங்கிருந்து வந்தது?

11. நீங்கள் செயல்படுவது குர்ஆன் ஹதீஸ்படியா? பைளா படியா? இது மத்ஹப் என்பதின் மறு பெயர; இல்லையா?  முந்தைய நிலைப்பாட்டில் மரணித்த தவ்ஹீத் சகோரர்களின் மறுமை நிலை தான் என்ன? அண்ணன் வந்து பரிந்துரைத்து காப்பாற்றுவாரா?

12. ஜனாஸாவை தெருவில் வைத்து தொழுகை நடத்துவதற்கு நபி வழியில் ஆதாரம் உள்ளதா? நபி (ஸல்) காலத்தில் ஜனாஸாவை திடலிலோ தெருவிலோ வைத்து தொழுகை நடத்தியிருக்கிறார்களா?

13. அப்படியிருந்தால் இவ்வளவு காலமாக ஏன் அதை செய்யவில்லை? இவ்வளவு காலமாக பெண்களை ஏன் நடுத்தெருவில் விடவில்லை? கபர;ஸ்தானுக்கும் ஏன் கூப்பிட்டுவிட்டு போகவில்லை? பெண்கள் கபர்ஸ்தானுக்கு வருவதற்கு நபிவழியில் தடையிருக்கிறதா? நீங்கள் தானே பெண்களும், கப்ர் ஜியாரத்திற்கு கப்ருஸ்தானுக்கு போகலாம் என்று மறு ஆய்வில் கண்டுபிடித்திருந்தீர்கள்?  அதென்ன ஆய்வு!! மறு ஆய்வு!! வஹீ ஏதாவது உங்களுக்கு வருகின்றதா? உங்கள் அண்ணன் அந்தளவு உயர்வை அடைந்து விட்டாரா?

14. ஜமாத் சகோதரருக்கு திருமணம் என்றதும் கும்பலாக வந்து எங்கள் மத குருதான் நிக்காஹ் நடத்துவார் என்று கூறுகிறீர்களே?  இது எந்த நபி வழியின் அடிப்படையில்? 

15. நபி(ஸல்) அவர்கள், எந்த நபித்தோழரின் திருமணத்திற்காவது நபித்தோழர்களை கூட்டமாக அழைத்து சென்று திருமணம் நடத்தியதற்கு சான்றுள்ளதா? நபி வழியடிப்படையில் திருமணத்தை நடத்திவைப்பது என்றால் என்ன பொருள்?

16. ரமலானில் நடு நிசி நேரத்தில் ஊர் முழுவதும் தெரு தெருவாக வேன் போட்டு அடித்து இரவுத்தொழுகைக்கு பெண்கள் கூட்டத்தை சேர்ப்பது எந்த நபி வழியின் அடிப்படையில்?

17. கணவர் ஊரில் இல்லாத பெண்களையும் இளம் கண்ணிப் பெண்களையும் ஜமாத் தோழர;கள் வேனில் சென்று கதவு தட்டி எழுப்பி அண்ணிய பெண்களை மஹ்ரம் துணையில்லாமல் ஜமாத் தோழிகளை தோழர்கள் வேனில் பயணித்து அழைத்து வருவதற்கு நபிவழியில் அனுமதியிருக்கின்றதா?

18. மஹ்ரம் துணையில்லாவிட்டால் ஹஜ் கூட கடமையில்லை மார்க்கம் சொல்கிறதே?  ஐந்து வக்து தொழுகைக்கு கூப்பிடாமல் வாலி வசூல் செய்யப்படும் ஜும்ஆ மற்றும் பெருநாள் மழை மற்றும் கிரகணத் தொழுகைகளுக்கு மட்டும் பெண்களை வரவழைப்பது எந்த நபிவழியின் அடிப்படையில்?

19. நபி (ஸல்) காலத்தில் ஐந்து வக்கு தொழுகைக்கும் பெண்கள் பள்ளிவாசலுக்கு வந்தார்களா? இல்லையா?  இத்தனை ஆண்டுகள் ஆகியும் இன்னும் ஏன் ஐந்து வக்திற்கு கூப்பிடவில்லை?

20. நீங்கள் இறந்து விட்டால் உங்களது ஜனாஸா எங்களுக்குத்தான் என்று ஜனாஸா உறுதி மொழி படிவம் ஒன்றில் போட்டா ஒட்டி உங்கள் ஜமாத் தோழர்களிடம் கையெழுத்து வாங்குகிறீர்களே? இது எந்த நபி வழியின் அடிப்படையில்? என்ன ஆதாரம்?

21. வெள்ளிக்கிழமை வசூல் நபி வழியா?   நபி(ஸல்) காலத்தில் வாரந்தோரும் வசூல் செய்தார்களா? ஆதாரம் காட்ட முடியுமா?

22. குர்ஆன், ஹதீஸ் என்று வாய் கிழிய பேசும் நீங்கள் MISC (மேலப்பாளயத்தில்  இவர்கள்  நடத்தும் அரபுக் கல்லூரியில்  ஓதி முடிப்பவர்களுக்கு இந்த பெயரில்தான்  பட்டம் தருகிறார்கள்)  களை உறுவாக்குகிறீர்களே? இது வரை குர்ஆன் முழுவதையும் மனனம் செய்த ஒரு ஹாபிளை கூட உற்பத்தி செய்யவில்லை.. ஏன் ?

23. நபி வழியல்லாத விருந்து பாவமானது;  அந்த விருந்து வைபவத்தில் கூலிக்காக தவ்ஹீத் கொள்கைவாதிகள் கலந்து சப்ளை செய்து விட்டு சாப்பிட்டு விட்டு பணமும் வாங்கி வருகிறார்களே? அதே விருந்துக்கு குடும்ப ரீதியில் அழைத்தால் மறுக்கிறார;களே இந்த சம்பாத்தியம் நபி வழியில் முறையானது தானா? என்ன ஆதாரம்? பாவமான விருந்தின் மூலமும் சம்பாதிக்கலாமோ? இது பாவத்திற்கு துணைபோவதில்லையா?

24. தவ்ஹீத் வாதிகளை ஷர்க்வாதிகளுடைய கப்ருஸ்தானத்தில் அடக்கம் செய்ய நபிவழியில் ஆதாரம் உள்ளதா?  சுன்னத் வல் ஜமாஅத் மக்களால் சுன்னத் வல்ஜமாஅத் வணக்க வழிப்பாட்டு கிரியை முறைப்படி செய்து அடக்கம் செய்வதற்கே சுன்னத் ஜமாஅத் பள்ளிவாசல்களில்  வக்ஃப் செய்யப்பட்டிருகின்றது. அப்படியிருக்க உங்கள் ஜனாஸாவை இங்கு அடக்கலாமா? ஷிர்க்வாதிகளின் பக்கத்தில் அடக்கம் செய்யலாமா?  ஆதாரம் காட்டுங்களேன்?

25. நீங்கள் தனியாக பள்ளிவாசல் கட்டாத காலத்தில் இமாம் வேலைக்கு சம்பளம் வாங்குவது ஹராம் என்று வாய் கிழிய பேசினீர்கள். உங்கள் பள்ளியில் இமாமாக  வேலைப் பார்த்த ஆலிமுக்கு சம்பளம் வழங்கியது ஹராமா? ஹலாலா?

26. நீங்கள் நடத்தும் மிஸ்க் கல்லூரியில் வேலை பார்க்கும் சுலைமானுக்கு சம்பளம் வழங்குவதும் அவர் அதனை வாங்குவதும் உங்களின் மொழியில் ‘மார்க்கத்தை வைத்து வயிறு வளர்க்கும்’ செயலா? இல்லையா?

27.  சகோதரர் அழைப்பாளர் அப்பாஸ் அலி MISC  அவர்களுக்கு onlinepj யில் மார்க்க கேள்விகளுக்கு பதில் அளிக்க கேள்வி ஒன்றுக்கு இவ்வளவு ஊக்கத்தொகை தவ்ஹீத் ஜமாத் சார்பாக வழங்கவேண்டும் என்று முடிவு செய்யப்பட்டதாக கோவை ரஹ்மத்துல்லா அப்பாஸ் அலி யை நீக்கும் அறிக்கையில் கூறியுள்ளாரே?  மார்க்க கேள்விக்கு பதில் சொல்ல சம்பளம் கொடுப்பதும் வாங்குவதும் உலகில் இது வரை எங்குமே நடந்திடாதது. இதுவும் நபிவழி தானா?

28. எல்லோரையும் தொப்பியை கழற்ற வைத்துவிட்டு உங்கள் தலைவர் மட்டும் சின்னத்திரையில் தொப்பியணிவது ஏன்?

29. இன்னுமா உங்கள் மத மத தலைவர் முஸ்லிம் பாய் என்று தமிழ் முஸ்லிம்களுக்கு தெரியவில்லை? தொப்பி போட்டால் தான் முஸ்லிம் என்று தெரியுமா? இப்படி பிறருக்காக மார்க்கம் அல்லாத ஒன்றை தொடர்ந்து செய்ய உங்கள் மதத்தில் ஆதாரம் உண்டா?

30. தலைமுடிக்கு கருப்பு டை அடிப்புது கூடுமா?  கூடாது என்றால் உங்கள் மத தலைவர் , மத குருமார்கள் ஏன் கருப்பு டை அடிக்கிறார்கள்?  கூடும் என்றால் நபி வழியில் என்ன ஆதாரம்? ஆதாரப்பூர்வமான ஹதீஸை காட்டுவீர்களா?

31. உங்கள் ஜமாத் கொள்கையை பின்பற்றுபவருக்கும் மட்டுமே சுவர்க்கம் என்றால் வெறும் இரண்டரை இலட்சம் பேருக்கு மட்டும் தான் சுவர்க்கமா?

32. உங்கள் மனோ இச்சை கொள்கையை பின்பற்றாவிட்டாலும் சுவர்க்கம் கிடைக்காதா? உங்கள் கொள்கை தொடங்கிய 1986 க்கு முன்பு உலகில் மரணித்த யாருக்குமே சுவர்க்க செல்ல வாய்ப்பேயில்லையா?

33. தவ்ஹீத் இயக்கமாக, பின்னர் ஜம்யிய்யத்துல் அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ் ஆக பின்னர் அனைத்து தவ்ஹீத் ஜமாத் கூட்டமைப்பாக பின்னர் 2002ல் தானே த.த. ஜ. ஆக மாறினீர்கள்? இப்போ பழைய தவ்ஹீத்வாதிகள் சுவர்க்கவாதிகளா இல்லையா? அவர்கள் தான் நிறைய தியாகம் செய்தவர்கள், நிறைய துன்புறுத்தப்பட்டவர்கள்? என்று கூறுகிறீர்களே... ஆனால் அண்ணனுடைய புதிய பரிணாமங்களை ஏற்காதவர்களின் நிலை என்ன? குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் ஆதாரம் காட்டுங்களேன்?
34. இரண்டாம் ஜமாஅத் தொழுகையை சட்டப்பூர்வமானதாகக் கருதும் நீங்கள் ஏன் நீங்கள்  கட்டி வைத்துள்ள  ஆலயங்களில்  இரண்டாம் ஜமாஅத்தை வெளி மைக் போட்டு  தொழுகை நடத்துவதில்லை?

35. திருமண பந்தல், மாப்பிள்ளை மாலை அணிவது ஹராமாகத் தெரிந்த உங்களுக்கு, கோடிக்கணக்கான வால்போஸ்ட், பிட் நோட்டீஸ் விளம்பரம், தெருத் தெருவாக தெருமுனைப் பிரச்சாரம், வீடு வீடாக இளம் பெண்கள் பிரச்சாரம், வேனில் ஜெனரேட்டர் வைத்து வீதிதோறும் பிரச்சாரம், ஊர் முழுவதும் பேனர்கள், நூற்றுக்கணக்கான கொடிகள் ஆகியவை ஏன் வீண்விரயமாகத் தெரியவில்லை?

36. மாவட்டம் தோறும் கோடிக்கணக்கில் செலவு செய்து மாநாடு நடத்தியும் உங்களுக்கு ஏன் வருமான வரி ரெய்டு வரவில்லை?

37. முஸ்லிம்களையும், கிறிஸ்தவர்களையும் ஆபாசமாகப்  பேசும் அளவுக்கு இந்துத்துவ சக்திகளை நீங்கள் ஏன் விமர்சிப்பதில்லை?

38. நீங்கள்  யார்?  இஸ்லாமியர்களை  மட்டுமே இலக்காக கொண்டு செயல்படும் உங்களின் நோக்கம் என்ன?

39. நபியை தரக்குறைாக விமர்சித்தல், நபித்தோழர்களை மரியாதைக் குறைவாக ஏசுதல், முத்தலாக்கை ஒழிக்க கோஷமிடுதல்,  சட்டத்துறைகளை அழிப்போம் என்று பகிரங்கமாகப் பேசுதல், இறைநேசர்களின் நினைவிடங்களை இடிக்க முற்படுதல் ஆகியவற்றில் நீங்களும் – இந்துவத்துவவாதிகளும்  ஒரே நேர்கோட்டில் வருகிறீர்களே.. நீங்கள் யார்?

40. நீங்களும்  உங்களின்  பக்தர்களும்  அல்லாஹ் – ரசூலின்  மீது  மரியாதைக் குறைவாக நடப்பதின் பின்னணி என்ன? உங்களின் வேலைகளை உங்களின் தொண்டர்கள்  செய்து வரும் நிலையில், முஹம்மது (ஸல்) அவர்களின் முபாராக்கான பெயர் எழுதப்பட்ட வால்போஸ்டர்களை குப்பைத் தொட்டியில் ஒட்டும் அளவுக்கு உங்களின் பக்தர்களின் மனநிலை இருப்பது  ஏன்?  சிறுநீர்  கழிக்கும் பொதுச்சுவர்களில்  முஹம்மது (ஸல்)இன்  பெயரை எழுதி அவமரியாதை செய்த  காரியத்திற்கு யார் பொறுப்பு?  நீங்களா?  எழுதியவனா?

рокிро░рокро▓்ропрооாрой рокродிро╡ுроХро│்