நம்முடன் இணைந்து இருப்பவர்கள்

புதன், டிசம்பர் 18, 2019

அவசர முடிவினால் ஆபத்து,

அவசரம் அழிவுக்கு வழி வகுக்கும்

மக்கள் ஒரு அவசர யுகத்தில் இருக்கிறார்கள் . வணக்கத்திலும் அவசரம் , சாப்பாட்டிலும் அவசரம்நடை உடை பேச்சு என அனைத்திலும் அவசரம் தொற்றிக் கொண்டு விட்டது.

ஆங்கிலதில் you என்று எழுதுவதற்கு பதில் u என்று எழுதுகிறார்கள்ஓ மை காட் என்பது OMG ஆக சுருங்கி விட்டதுஉணர்வுகளை பிரதிபலிப்பதற்கு கூட மீம்ஸ்கள் வந்து விட்டனசிம்பள்கள் பயன்படுகின்றன.

ஒரு மவ்து செய்தியை பரிமாறினால் அழும் கண்ணீர் போடோக்கள் அடுத்த நொடியில் வந்து நிற்கின்றன,

அல்லாஹ் மனிதனை அவசரப் படுகிற இயல்புடைவனாக படைத்திருக்கிறான்அதே நேரத்தில் அவனுக்கு புத்தியை வழங்கி நிதானமாக நடந்து கொள்ள வலியுறுத்தவும் செய்கிறான்.

خُلِقَ الْإِنسَانُ مِنْ عَجَلٍ}(37) سورة الأنبياء

وَيَدْعُ الإِنسَانُ بِالشَّرِّ دُعَاءهُ بِالْخَيْرِ وَكَانَ الإِنسَانُ عَجُولاً}(11)
(மனிதன் நன்மைக்காக பிரார்த்திப்பது போல சில நேரங்களில் தனக்கோ மற்றவர்களுக்கோ தீமை ஏற்பட வேண்டும் என்றும் பிரார்த்திக்கிறான்அவனது நன்மைக்கான துஆ வை ஏற்பது போல அல்லாஹ் அவன் கேட்கிற தீய துஆக்களையும் ஏற்றுக் கொள்வான் எனில் நிலமை என்னவாகும். ? மனிதன் அவசரக்காரணக இருக்கிறான்.

நம்முடைய மாநிலத்தில் நடை பெறும் அரசியல் நிகழ்வுகள் நமக்கு அவசரப்படுதலின் ஆபத்து எத்தகையது என்பதை புரிவைக்கின்றன.

(செயல்பட வேண்டிய நேரத்தில் செயலாற்றாமல் போகிற போது எத்தகைய தீமை ஏற்படும் என்பதை பன்னீர் செல்வத்தை பார்த்து புரிந்து கொண்டோம்அவசரப் படுதலின் ஆபத்து எத்தகையது என்பதை சசிகலாவைப் பார்த்து நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். )

நம் கண் முன்னே நடக்கிற நிகழ்வுகளிலிருந்து பாடம் பெற்றுக் கொள்ள
வேண்டியது ஈமானிய குணம்.

 إن في ذلك لعبرة لمن يخشى

உலகின் பெரும் சக்ரவர்த்தியாக வாழ்ந்த தன்னைய பெரும் கடவுள் என்று பிரக்டணப்படுத்திக் கொண்ட பிர் அவ்னுக்கு நேர்ந்த கதியை விளக்கிச் சொல்லி விட்டு அல்லாஹ் இந்த வார்த்தைகளை கூறுகிறான். (சூரத்துன்னாஸிஆத்.)
எந்த மாபெரிய அதிகார பீடத்தில் இருப்பவர்களையும் அல்லாஹ் நினைத்தால் குப்பைத் தொட்டிக்குள் வீசி விட முடியும்.
பிரஞ்சு மன்னன் பதினான்காம் லூயி ஒரு முறை அதிகார போதையில் “ நானே அரசன் நானே அரசு” I am the state   என்று கூறினான்ஒன்றல்ல .. பத்தல்ல .. 72 ஆண்டுகள் பிரஞ்சின் ஆட்சியில் இருந்தவனுக்கு இறக்கும் தருவாவாயிலும் புத்தி வரவில்லை.  உலகின் அதிக நாள் ஆட்சியிலிருந்த மன்னன் என்ற பெயர் பெற்ற 14 ம் லூயிக்கும் மரணம் வந்தபோது லூயி சொன்னான்நான் தான் போறேன்ஆனால் அரசு நிலைத்திருக்கும்” I am going away, but the State will always remain ஆனால் . ஆனால் அவன் உருவாக்கிய சாம்ராஜ்யம் கூட இரண்டு தலைமுறைக்குள்ளாக காணாமல் போனது என்பது வரலாறு.
அதிகார வர்க்கத்திற்கு நேர்கிற தண்டனைகளைகளிலிருந்து அல்லாஹ்வை பயப்படுகிற முஃமின்கள் பாடம் படித்துக் கொள்ள வேண்டும் என்று அல்லாஹ் கூறுகிறான். .
பாடம் படிப்பத்ற்கான களமாக அதிகார வர்க்கம் தேர்ந்தெடுப்பபடுவதற்கு இரண்டு காரணங்கள் உண்டு,
1.   அதிகார வர்க்கம் தான் பெரும் பாலும் தன்னை மறந்துகடவுளை மறந்து செயல்படக் கூடிய வர்க்கம்.
2.   அதிகார வர்க்கத்தை தான் மக்கள் தமது ரோல்மாடலாக முன்னோடிகளாக நினைக்கிறார்கள்.
எனவே அதிகார வர்க்கத்திற்கு நேர்கிற அவலங்களிலிருந்து பாடம் படித்துக் கொள்ள வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.
நம்முடைய தமிழ் நாட்டில் அவசரப் பட்ட காரணத்திற்காக பெரும் அதிகாரப் பொறுப்பை ஒரு பெண்மணி இழந்து விட்டார் என்பது மட்டுமல்லஎதிர்பாராமல் சிறைக்கு செல்ல வேண்டிய சூழலும் ஏற்பட்டு விட்டது.
தமிழகத்தில் என்னவெல்லாம் நடந்தது ? யார் ஆட்சிக்கு வந்திருக்கீறார்கள் ? அவர்களது ஆட்சி எத்தனை நாள் நீடிக்கும் என்ற விவாதங்கள் அரசியல் சார்புடைவை., ஆனால் ஒரு பெண்மணி அவசரப் பட்டதன் காரணமாக அதிகாரம் செய்யும் வாய்ப்பை இழந்து விட்டார் என்பது வாழ்வியல் தத்துவம்.
திருமதி சசிகலா ஆளும் கட்சியின் பொதுச் செயலாலரானது சரியா என்ற விவாதத்தை ஒதுக்கி விட்டு அவர் அந்தப் பொறுப்புக்கு வந்த பிறகு வெளிப்படுத்திய துணிச்சல் காரணமாக அரசியல் விமர்ச்சகர்களால் அவருக்கு ஒரு எதிர்காலம் உண்டு என்று கூறப்பட்டதுகட்சியினரிடையேயும் மக்களிடையேயும் அவர் ஊடுறுவி விடுவார் என்று கருதப்பட்டதுஅவசரப் பட்டு அவர் முதலைமைச்சர் பதவிக்கு ஆசைப்பட்டார்அது ஒரு வகையில் பேராசை . இன்னொரு வகையில் அவரது ஆதரவாளர்கள் என்ற பெயரில் இயங்கிய சிலர் அவரை இழுத்து விட்ட படுகுழிஎதார்த்த சூழ்நிலையை கவனத்தில் கொள்ளாமல் அவர் பேராசைக்கு அடிமைப் பட்டு அவசரப் பட்டது அவரது நிலையை மேலும் சிக்கலாக்கி விட்டது.
சமூக ஊடகங்களில் பலரும் நீதிபதிகளை பாராட்டு கிறார்கள்உண்மையில் அது கேலிக்குரிய ஒரு செய்தி.
இத்தனை நாள் நீதி வழங்க தாமதித்தவர்கள் திடீரென் அவரசம் காட்டியது யாருடைய தூண்டுதல் ?அப்படி தூண்டியவர்கள் நினைத்த்திருந்தால் இன்னும் கூட சில வருடங்களுக்கு இந்த வழக்கை கிடப்பில் போட்டிருக்க முடியும்.
ஒரு எதார்த்தம் – இன்றைய அரசியலின் மிக அழுக்குப் படிந்த ஒரு இரகசியம் என்ன வென்றால் ஊழல் குற்றச் சாட்டு நிரூபிக்கப் பட்டு கடும் தண்டனை வழங்கப்பட்டிருந்த ஜெயலலிதா உள்ளிட்டவர்களை நீதிபதி குமாரசாமி என்பவரை வைத்து விடுதலை செய்த மத்திய அரசு தான் இப்போது திருமதி சசிகலாவை சிறைக்குள் அனுப்பியிருக்கிறது.
இல்லை என்றால் நீதிபதி குன்ஹாவின் தீர்ப்பை ஏற்றுக் கொண்டு  நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பில் தவறிருப்பதாக கூறிய நீதிபதிகள் ஒரு முக்கிய வழக்கை –இலாபம் தரக்கூடிய சந்தேகத்தை எழுப்புகிற வழக்கை – தப்பும் தவறுமாக தீர்ப்புச் செய்த நீதிபதி குறித்து கருத்து தேரிவித்திருக்க வேண்டாமா?
நடந்து கொண்டிருப்பதெல்லாம் மத்திய அரசின் நாடகங்கள்என்பது ஒரு தரப்பான நிஜமாக இருந்தாலும் இல்லை இல்லை அல்லாஹ்வின் நாட்டம் என்பதே எதார்த்தமான சத்தியமாகும்அல்லாஹ் நாடியிருந்தால் மத்திய அரசின் திட்டங்களை கூட திசை திருப்பியிருக்க முடியும்ஏன் இப்போது நடந்திருப்பதே கூட மத்திய அரசின் எதிர்ப்பார்ப்பிற்கு மாற்றமானதாக இருக்க கூடும்சசிகலாவின் கைத்துக்குப் பிறகு கூடு கலைந்து விடும் என்று காத்திருந்த மத்திய அரசுக்கு புதிய அரசுக்கு வாழ்த்துச் சொல்லும் நிலை ஏற்பட்டிருப்பது கூட ஒரு ஏமாற்றமாக இருக்க கூடும்.
அல்லாஹ்வின் நாட்டப்படி நடக்கிற நிகழ்வுகளிலிருந்து பாடம் படித்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு நம்முடையது.
அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நமக்கு மிக முக்கிய மான ஒரு வாழ்வியல் தத்துவத்தை வழங்கினார்கள்.
அவசரப்படக் கூடாது.”
அவசரப் படாதீர்கள் நான் ஒரு கணக்கு வைத்திருக்கிறேன் என்கிறான் அல்லாஹ்
فَلَا تَعْجَلْ عَلَيْهِمْ إِنَّمَا نَعُدُّ لَهُمْ عَدًّا(84)

எந்த ஒன்றுக்கும் அல்லாஹ்விடம் ஒரு கணக்கு இருக்கிறதுஅந்த கணக்கை நமது கணக்கு முந்தி விடக்கூடாது.

வாகணங்களில் செல்லுகிற போது எதிரே வருகிற வாகனத்தின் விரைவுக்கு ஒரு கணக்கு இருக்கும் நமது வாகணத்தின் விரைவுக்கும் ஒரு கணக்கு இருக்கும்எதிரே வரும் வாகணத்தைப் பற்றிய நமது கணக்கு முந்தி விடும் என்றால் விபத்து நிகழ்ந்து விடுகிறதே அது போல வாழ்க்கையின் ஒவ்வொரு விசயத்திலும் அல்லாஹ்விற்கு ஒரு கணக்கு இருக்கிறது . அதை புரிந்து கொண்டு பொறுமையாக செயல்பட்டால் நல்லது . அவர்சப்பட்டு விட்டால் ஆபத்து தான்.

எனவே நல்ல காரியங்களில் கூட அவரசரப்படக்கூடாது என அல்லாஹ் அறிவுறுத்துகிறான்.

ஜிப்ரயீல் அலை ஓதி முடிப்பதற்கு முன் பெருமானார் (ஸல்எங்கே அது தவறிப்போய்விடுமோ என்ற பயத்தில் அவசரப்பட்டு ஓதுவார்கள்அல்லாஹ் கூறினான்அவரசரப் படாதீர்கள்.

وَلَا تَعْجَلْ بِالْقُرْآنِ مِنْ قَبْلِ أَنْ يُقْضَى إِلَيْكَ وَحْيُهُ وَقُلْ رَبِّ زِدْنِي عِلْمًا(114)
அவசரப் படுவது காரியங்களை கெடுத்துவிடும்.
உஹது யுத்தத்தில் அவசரப் பட்ட தோழர்களால் கிடைத்த  வெற்றி பறிபோனது.
1.      أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَقَامَهُمْ فِي مَوْضِعٍ ثُمَّ قَالَ احْمُوا ظُهُورَنَا فَإِنْ رَأَيْتُمُونَا نُقْتَلُ فَلَا تَنْصُرُونَا وَإِنْ رَأَيْتُمُونَا قَدْ غَنِمْنَا فَلَا تَشْرَكُونَا فَلَمَّا غَنِمَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَبَاحُوا عَسْكَرَ الْمُشْرِكِينَ أَكَبَّ الرُّمَاةُ جَمِيعًا

ஹுனைன் யுத்தத்தின் போது கிடைத்த பெரும் பெருட்செல்வத்தை பெருமானார் (ஸல்அவர்கள் மக்கா வாசிகளிடையே பங்கு வைத்த போது அவசரப் பட்ட சில அன்சாரி இளைஞர்கள் பெருமானார் தங்களை கவனிக்கவில்லைஊர்க்காராராகிவிட்டார் என்று பேசிவிட்டனர்.
فأعطى أبا سفيان بن حرب أربعين أوقية ومائة من الإبل فقال: ابني يزيد؟ فقال: (أعطوه أربعين أوقية ومائة من الإبل)، فقال: ابني معاوية؟ قال: (أعطوه أربعين أوقية ومائة من الإبل)، وأعطى حكيم بن حزام مائة من الإبل، ثم سأله مائة أخرى فأعطاه، وأعطى النضر بن الحارث بن كلدة مائة من الإبل، وأعطى العلاء بن حارثة الثقفي خمسين، وأعطى العباس بن مرداس أربعين، فقال في ذلك شعراً، فكمل له المائة، ثم أمر زيد بن ثابت بإحصاء الغنائم والناس، ثم فضها على الناس فكانت سهامهم لكل رجل أربعاً من الإبل وأربعين شاة، فإن كان فارساً أخذ اثني عشر بعيراً وعشرين ومائة شاة ) زاد المعاد:  الرحيق المختوم: (

فعَنْ أَنَسٍ -رضي الله عنه- أَنَّ رَجُلًا سَأَلَ النَّبِيَّ -صلى الله عليه وسلم- غَنَمًا بَيْنَ جَبَلَيْنِ فَأَعْطَاهُ إِيَّاهُ، فَأَتَى قَوْمَهُ فَقَالَ: أَيْ قَوْمِ: أَسْلِمُوا فَوَاللَّهِ إِنَّ مُحَمَّدًا لَيُعْطِي عَطَاءً مَا يَخَافُ الْفَقْرَ، فَقَالَ أَنَسٌ: إِنْ كَانَ الرَّجُلُ لَيُسْلِمُ مَا يُرِيدُ إِلَّا الدُّنْيَا، فَمَا يُسْلِمُ حَتَّى يَكُونَ الْإِسْلَامُ أَحَبَّ إِلَيْهِ مِنْ الدُّنْيَا وَمَا عَلَيْهَا

قد تأثر حدثاء الأنصار من هذا العطاء بحكم طبيعتهم البشرية وترددت بينهم مقالة، حتى قال قائلهم لقي والله رسول الله صلى الله عليه وسلم- قومه،

அவர்களது அந்த அவசரத்தால் பெருமானார் (ஸல்அவர்கள் கோபமடையவில்லைஅது தான் அன்சாரிகளின் அதிர்ஷ்டம்.  பெருமானார் (ஸல்அவர்கள் அவசரப் பட்டு விடவில்லை மனிதர்களின் இயல்பான சுபாவம் அது என்று எடுத்துக் கொண்டு நிதானமாக அவர்களுக்கு தனது திட்டத்தை கூறினார்கள்..

أتاهم رسول الله -صلى الله عليه وسلم-، فحمد الله وأثنى عليه بما هو أهله، ثم قال:

لَا تَرْضَوْنَ يَا مَعْشَرَ الْأَنْصَارِ أَنْ يَذْهَبَ النّاسُ بِالشّاءِ وَالْبَعِيرِ وَتَرْجِعُونَ بِرَسُولِ اللّهِ إلَى رِحَالِكُمْ؟ فَوَاَلّذِي نَفْسُ مُحَمّدٍ بِيَدِهِ لَمَا تَنْقَلِبُونَ بِهِ خَيْرٌ مِمّا يَنْقَلِبُونَ بِهِ، وَلَوْلَا الْهِجْرَةُ لَكُنْتُ امْرَءًا مِنْ الْأَنْصَارِ، وَلَوْ سَلَكَ النّاسُ شِعْبًا وَوَادِيًا، وَسَلَكَتْ الْأَنْصَارُ شِعْبًا وَوَادِيًا لَسَلَكْتُ شِعْبَ الْأَنْصَارِ وَوَادِيَهَا، الْأَنْصَارُ شِعَارٌ وَالنّاسُ دِثَارٌ5، اللّهُمّ ارْحَمْ الْأَنْصَارَ وَأَبْنَاءَ الْأَنْصَارِ، وَأَبْنَاءَ أَبْنَاءِ الْأَنْصَارِفبكى القوم حتى أخضلوا لحاهم وقالوا: رضينا برسول الله -صلى الله عليه وسلم- قسماً وحظاً،

அவசரப் படுதல் எந்த இடத்தை கூட பாதித்து விடும் என்பதற்கும் நிதானம் எத்தகைய சூழலையும் அடியோடு மாற்றியமைக்கும் என்பதற்கும் இது அற்புதமான ஒரு உதாரணமாகும். ;
நல்ல விசயங்களில் கூட அவசரப்படுதல் தப்பான முடிவுகளுக்கு காரணமாகிவிடும் என்பதனாலே அவசரப் படுதல் குறித்  கடும் எச்சரிக்கைகள் வழங்கப்பட்டுள்ளன. .
மக்களை பின்னால் விட்டு விட்டு தன்னைச் சந்திக்க முந்தி வந்த மூஸா அலை அவர்களை ஏன் அவ்வாறு செய்தீர்கள் என அல்லாஹ் கேள்வி கேட்டான்.

அவர் அவசரப் பட்டதில் மக்களை தான் குழப்பத்தில் ஆழ்த்தி விட்டதாக அல்லாஹ் கூறுகிறான்.
இந்த அவசரத்தினால் மூஸா அலை அவர்கள் கோபமடைய நேர்ந்தது என்பது மட்டுமல்லசமூதாயத்தில் சிலர் வழி தவறிப்போகிற சந்தர்ப்பமும் ஏற்பட்டதை அல்லாஹ் குறிப்பிடுகிறான்.
நபி (ஸல்அவர்கள் அவசரப்படுவதை மனிதனை இழிவு படுத்துவதையே இலக்காக கொண்ட சைத்தானிய குணம் என்றார்கள்/
·        وقال عليه الصلاة والسلام: (التأني من الله، والعجلة من الشيطان

العجلة من الشيطان  என்பதற்கு இப்னுல் கய்யும் அல்ஜவ்ஸீ கூறும் விளக்கம்.

قال ابن القيم- خفة وطيش وحدة في العبد، تمنعه من التثبت والوقار والحلم، وتوجب وضع الشيء في غير محله، وتجلب الشرور، وتمنع الخيور. وهي متولدة بين خلقين مذمومين: التفريط والاستعجال قبل الوقت
மனிதனிடமிருக்கிற அலட்சியம் பதற்றம் கோபம் ஆகியவற்றின் வெளிப்பாடு தான் அவசரம்இந்த இயல்பு மனிதனிடம் இருக்க வேண்டிய உறுதி கம்பீரம் பொறுமையை தடுத்துவிடுகிறது. .  நியாயமில்லாத வழிகளில் செயல்பட தூண்டு கிறதுதீமைகளை கொண்டு வருகிறதுநன்மைகளை தடுத்துவிடுகிறதுஅவசரம் என்பது எல்லை மீறுதல் காலம் கனிவதற்குள்ளாக முந்திக் கொள்ள முயற்சித்தல் எனும் இரு தீமைகளிலிருந்து பிறக்கிறது.

மனிதனை தாழ்வு படுத்துகிற எல்லா அம்சங்களும் அவசரத்தில் இருக்கிறது என்பதால் தான் பெருமானார் (ஸல்அவர்கள் அவசரம் சைத்தானி குணம் என்றார்கள்.

وقال عمرو بن العاص: لا يزال المرء يجتني من ثمرة العجلة الندامة.

அவசரப்படுதலின் முடிவை கவலையாகவே மனிதர்கள் பெற்றுக் கொள்வார்கள் என அம்ரு பின் ஆஸ் ரலி கூறினார்கள்

அவசரத்திற்கான தீமையை பெருமானார் (ஸல்அவர்கள் இப்படியும் உணர்த்தினார்கள்
அவசரப் படாதவரை மக்களின் துஆ ஏற்கப்படும்.

يستجاب للعبد ما لم يستعجل

இந்த இடத்தில் நாம் புரிந்து கொள்ள வேண்டிய ஒரு முக்கிய தகவல் அவசரம் என்பதன் பொருள் நேரம் வருதற்கு முன் அல்லது ஒரு காரியம் நிறைவடைவதற்கு முன் அதற்கு முந்துவதாகும்

ஒரு காரியத்திற்கு அதற்குரிய நேரம் வந்த பிறகு அவசரம் காட்டுவது போட்டியிடுவதாகும்.  இது வரவேற்கத்தக்கது.

எனவே ஹதீஸ்களிலும் மற்ற அறிவுரைகளிலும் அவசரம் காட்டுமாறு செய்யப்படுகிற அறிவுரைகளை இந்த அடிப்படையிலேயே புரிந்து கொள்ள வேண்டும்.

காலம் கணிந்த பிறகு முந்தியிருத்தம் என்பது போட்டியிடுதலாகும் தொழுகைக்கு பாங்கு சொல்லப்பட்டவுடன் தொழுவது போல

தொழுகையின் நெரம் வருதற்கு முன்னரே தொழுவது அவசரப்படுதலாகும்

இமாம் தக்பீர் சொன்ன பிறகு உடனே  தலை உயர்த்துவது அல்லது குனிவது  கட்டாயமாகும்இமாமின் செயலுக்கு முந்திச் செல்வது அவசரப்படுதலாகும்

பெருமானார் (ஸல்அவர்கள் எச்சரித்தார்கள்

 : أما يخشى الذي يرفع رأسه قبل الإمام أن يحول الله رأسه رأس حمار. . الترمذي

·         ஜமாத் தொழுகைக்கு வரும் போது அவசரம் கூடாது,
·         ஜும்  வில் இமாம் மின்பரிலிருந்து இறங்குவதற்கு முன் அவசரம் காட்டக் கூடாது.
·         இகாமத் சொல்லும் போது எப்போது மக்கள் எழுந்திருக்க வேண்டும் என்பதில் இமாமகளிடம் கருத்து வேறு பாடு உண்டு எனினும் இகாமத்திற்கு முன்பே எழுவது சரியல்ல.

اختلف أهل العلم رحمهم الله تعالى في الوقت الذي يقوم فيه المأموم للصلاة على أقوال ذكرها النووي رحمه الله في المجموع (3/233) وهي كما يلي :
القول الأول : يقوم إذا شرع المؤذن في الإقامة ، وبه قال عطاء والزهري . 
القول الثاني : يقوم إذا قال : حي على الصلاة , وبه قال أبو حنيفة .
القول الثالث : يقوم إذا فرغ المؤذن من الإقامة ، وبه قال الشافعي .

ولم يقل أحدٌ من أهل العلم فيما نعلم بمشروعية القيام قبل أن يشرع المؤذن في الإقامة، وأما القول بتحريمه فلا يظهر، والظاهرُ أنه خلاف الأولى والأفضل

சாப்பாட்டிலும் கூட  அவசரம் கூடாது

و كان رسول الله (صلى الله عليه وسلم) يحمد الله بين كل لقمتين ( يكثر من حمد الله عز و جل) 


என்வே மார்க்கத்தின் இந்த உறுதியான வழிகாட்டுதல்களின்  படி எந்தக்காரியத்திலும் அவசரப் படுதல் கூடாது மாற்றமாக நிதானத்தையே கடை பிடிக்க வேண்டும்.

 பொறுத்தார் பூமியாள்வார் என்ற முதுமொழி உண்மையே

·         وقال رسول الله -صلى الله عليه وسلم- لأشج عبد القيس: (إن فيك خصلتين يحبهما الله، الحلم والأناة

·         وعن عبد الله بن سرجس المزني أن النبي -صلى الله عليه وسلم- قال: (السمت الحسن، والتؤدة  –)أي التأني وترك العجلة- (والاقتصاد جزء من أربعة وعشرين جزءاً من النبوة



அவசரப்படுதலுக்கு மாற்றமாக நிதானத்தை கடை பிடிக்க வேண்டும் என்று உபதேசிக்கிற இஸ்லாம் கூடவே இன்னொரு அறிவுரைரையையும் தருகிறது.

தாஹா அத்தியாயத்தின் 84 வது வசனத்தில் குர் ஆன் ஓதும் போது அவசரப்படாதீர் என்று மட்டும் சொல்லாமல் பெருமானாரின் கவலைக்கு வேறு ஒரு மருந்தையும் அல்லாஹ் சொன்னான்.
அவசரப்படாதீர்கள் ரப்பிடம் அறிவின் விசாலத்தை கேளுங்கள்/
என்ன அருமையான வழிகாட்டுதல்?
அவசரப் படாமல் இருக்க என்ன வழி ?
அதற்கு அல்லாஹ்வின் உதவியும் அறிவின் பயன்பாடும் மிக முக்கியம் என்பதை இது உணர்த்துகிறது.
பெருமானர் (ஸ்ல்அவர்கள் கோபப்பட வேண்டிய பல கட்டத்திலும் அவசரப் பட்டு கோபம் காட்டி விடாமல் நிதானம் காட்டியது குறித்து அல்லாஹ் திருமறையில் புகழ்ந்து பேசுகிறான்.
فَبِمَا رَحْمَةٍ مِّنَ اللَّهِ لِنتَ لَهُمْ ۖ وَلَوْ كُنتَ فَظًّا غَلِيظَ الْقَلْبِ لَانفَضُّوا مِنْ حَوْلِكَ ۖ فَاعْفُ عَنْهُمْ وَاسْتَغْفِرْ لَهُمْ وَشَاوِرْهُمْ فِي الْأَمْرِ ۖ فَإِذَا عَزَمْتَ فَتَوَكَّلْ عَلَى اللَّهِ ۚ إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُتَوَكِّلِينَ

அப்போது அல்லாஹ்வின் கிருபயால் தான் இது சாத்தியமாயிற்று  என்று கூறுவதை நாம் கவனிக்க வேண்டும்.
எனவே வாழ்க்கையில் அவசரப்பட்டு தப்பு செய்து விடாமல் இருக்க அல்லாஹ்விடம் பிரார்த்தித்த வண்ணம் இருக்க வேண்டும்அதற்கேற்ற போதுமான அறிவை அல்லாஹ்விடமே கேட்க வேண்டும்.
பிரச்சனைகளை எதிர்கொள்ள போதுமான அறிவை திரட்டிக் கொள்ள வேண்டும் என்று இந்த வசனம் நமக்கு அறிவுறுத்துகிறது.
ஒரு பிரச்சனையை எப்படி சமாளிக்க வேண்டும் என்று தெரியாத கட்டத்தில் தான் அறிவாளிகள் கூட அவசரப் பட்டு விடுகிறார்கள்.
ஒரு மிஷின் கெட்டுப் போய்விட்டதுஅதனால் பெரும் நஷ்டம் ஏற்படும் என்றாலும் அவசரப்பட்டு யாரிடமாவது ரிப்பேருக்கு கொடுத்து விட்டால் மிஷினே பயன்படாமல் போய்விடும்.
ஒரு பெரிய தொழிற்சாலையில் ஒரு மிஷின் கெட்டுப் போய்விட்டதுவல்லுனரை வெளிநாட்டிலிருந்து வரவழைத்தார்கள்மிஷினை ஒரு முறை சுற்றிப் பார்த்து ஆராய்ந்த அவர் ஒரு சுத்தியலை கொண்டு வரச்சொல்லி மிஷினின் முதுகில் இலேசாக தட்டினார்மிஷின் இயங்கியது , இதற்காக அவர் 10 ஆயிரம் டாலர் சமபளம் கேட்டார்ஒரு சின்ன தட்டுக்கு 1 0 ஆயிரமா என்று ஊழியர்கள் கேட்டார்கள்சிறு தட்டுக்கு அல்லஎங்கு தட்ட வேண்டும் என்று தெரிந்து வைத்திருந்ததற்காக 10 ஆயிரம் என்று அவர் சொன்னார்/
எந்த ஒரு பிரச்சனைக்கு தீர்வு காணவும் அதற்கு தேவையான அறிவு அவசியம்.
·         காவல் துறையால் ஏற்படும் பிரச்சனைகளுக்கு சட்டங்களை பற்றிய அறிவு அவசியம்.
·         இயற்கை பேரிடர்களால் ஏற்படும் பிரச்சனைக்கு சுற்றுச் சூழல் அறிவு அவசியம்.
·         குடும்ப ரீதியான பிரச்சனைகளுக்கு மக்களின் மனோ உணர்வை பற்றி அறிந்திருப்பது அவசியம்.
·         சமூக ரீதியான பிரச்சனைகளுக்கு கலை பண்பாடு குறித்த அறிவு அவசியம்.
·         மார்க்க ரீதியான பிரச்சனைகளுக்கு மார்க் அறிவு அவசியம்.

ஒவ்வொன்றுக்கும்ன் துறை சார்ந்த அறிவின் தெளிவு இருக்கும் எனில் நாம் அவசரப் பட மாட்டோம்.

எனவே எந்த ஒரு விவகாரத்திலும் அவசரப் படக் கூடாதுஅவசரப் பட்டால் காரியம் கெட்டுப் போகும்.
சில சந்தர்ப்பத்தில் பிறகு சரி செய்ய முடியாத அளவு கெட்டுப் போகும்;

நிதானத்தையும் பிரச்சனைகளை தீர்க்கும் அறிவையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்
அதற்காக அல்லாஹ்வின் உதவியையை கையேந்தி நிற்க வேண்டும்

இந்தியாவின் குடியுரிமைச் சட்டம்

இந்தியாவின் குடியுரிமை சட்டத்தை பற்றி

يَا أَيُّهَا النَّاسُ إِنَّا خَلَقْنَاكُم مِّن ذَكَرٍ وَأُنثَى وَجَعَلْنَاكُمْ شُعُوبًا وَقَبَائِلَ لِتَعَارَفُوا إِنَّ أَكْرَمَكُمْ عِندَ اللَّهِ أَتْقَاكُمْ إِنَّ اللَّهَ عَلِيمٌ خَبِيرٌ}(13)سورة الحجرات.
وقال الرسول صلى الله عليه وسلم في حديث صحيح: (الناس سواسية كأسنان المشط الواحد. لا فضل لعربي على عجمي إلا بالتقوى]]
ஒரு மனிதருக்கு அல்லாஹ் அதிகாரத்தை தருவது அவருக்கு நன்மையாகவும் அமையலாம். அவரை சோதித்து தண்டிப்பதற்காகவும் அமையலாம்.
அதிகாரத்திற்கு வந்த பிறகு யார் பெருந்தன்மையாளர்களாக மாறிவிடுகிறார்களோ அவர்களுக்கு அதிகாரம் நன்மையானது. யார் குரூரமானவர்களாக மாறிவிடுகிறார்களோ அவர்களுக்கு அதிகாரம் ஒரு சாபமே.
இது வரலாற்றுச் சத்தியம்.
அதனால்தான் அதிகாரப் பொறுப்பிற்கு வருகிறவர்கள் அதற்கு முன்னர் எப்படி இருந்தாலும் தாங்கள் நல்லவர்கள் என்று காட்டிக் கொள்ள நான் அனைவருக்கும் பொதுவானவராக நடந்து கொள்வேன் என்று கூறுவதை நாம் பார்த்திருக்கலாம்.
சமீபத்தில் இலங்கை தேர்தலில் கோத்தபாய ராஜபக்சே வெற்றி பெற்று ஜனாதிபதியாக ஆனபோது. எனக்கு முஸ்லிம்களும் தமிழ் மக்களும் வாக்களிக்கவில்லை. ஆயினும் நான் அவர்களுக்கும் பொதுவானவனாவே நடந்து கொள்வேன் என்று கூறினார் .
அப்படி கூறினால் தான் அவர் ஜனாதிபதி பதவிக்கு பொருந்தமானவர் என்று உலகம் சொல்லும்.
அவர் பொறுப்பிற்கு வந்த பிறகு சொன்னபடி நடந்தால் அவரை நல்லவர் என்று வரலாறு போற்றும்.
அபூபக்கர் சித்தீக் ரலி அவர்கள் தனக்குப்பிறகு இஸ்லாமிய அரசுக்கு பொறுப்பேற்க உமர் ரலி அவர்களின் பெயரை அறிவித்தார்கள்.
வரலாறு அந்த சூழலை பேசுகிறது.
في شهر جمادى الآخرة سنة 13هـ، مرض الخليفة أبو بكر واشتد به المرض،][ فلما ثقل واستبان له من نفسه، جمع الناس إليه فقال: «إنه قد نزل بي ما قد ترون، ولا أظنني إلا ميتاً لما بي، وقد أطلق الله أيمانكم من بيعتي وحل عنكم عقدتي، ورد عليكم أمركم، فأمِّروا عليكم من أحببتم، فإنكم إن أمَّرتم في حياة مني كان أجدر أن لا تختلفوا بعدي»، فتشاور الصحابة، ثم رجعوا إلى أبي بكر فقالوا: «رأيُنا يا خليفة رسول الله رأيُك»، قال: «فأمهلوني حتى أنظر لله ولدينه ولعباده»، ثم وقع اختيار أبي بكر بعد أن استشار بعض الصحابة على عمر بن الخطاب
உமர் ரலி அவர்களின் தேர்வை உஸ்மான் ரலி அப்துர் ரஹ்மான் பின் அவ்ப் ரலி உஸைது பின் ஹுழைர் ரலி போன்றாவர்களிடம் கூறி அது பற்றி கருத்து கூறுமாறு அபூபக்கர் சித்தீக் ரலி அவர்கள் கேட்ட போது அனைவரும் அவருடைய புறவாழ்வை விட அகவாழ்வு சிறந்த்து எனவே உங்களுடைய தேர்வு சரியே என்றனர்.
ஆனால் தல்ஹா பின் உபைதில்லாஹ் ரலி அவர்கள் மட்டும் தனது பயத்தை வெளிப்படையாக கூறினார். உமர் கடுமையானவராயிற்றே !
உலகின் மகா தீர்க்க சிந்தனையாளர்களில் ஒருவரான அபூபக்கர் சித்தீக் ரலி அவர்கள் கூறினார்கள்
நான் இருக்கையில் உங்களுக்கு அவர் கடுமையானவராக தோன்றுகீறார். அவர் ஆட்சிப் பொறுப்பேற்பாரானால் மென்மையானவராக மாறிவிடுவார் என்று கூறினார்.
فقد قال طلحة بن عبيد الله رضي الله عنه لأبي بكر الصديق: ما أنت قائل لربك إذا سألك عن استخلافك عمر علينا وقد ترى غلظته؟ فقال أبو بكر: أجلسوني، أبا الله تخوفونني؟ خاب من تزود من أمركم بظلم، أقول: اللهم استخلفت عليهم خيرَ أهلك. وبيَّن لمن نبهه إلى غلظة عمر وشدته فقال: ذلك لأنه يراني رقيقًا، ولو أفضى الأمر إليه لترك كثيرًا مما هو عليه[


வரலாறு என்ன காட்டுகிறது

உமர் ரலி அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு மாகா நிதானத்துடன் மென்மையாக மக்கள் மீது பேரன்பும் பெரும் கருணையும் கொண்டவர்களாக நடந்து கொண்டார்கள்

ஆட்சிப் பொறுப்பென்பது நல்லவர்களை மேலும் நல்வழிப்படுத்தும் மோசாமானவர்களை மேலும் கொடூராமாக்கி விடும்.

நம்முடைய மத்திய அரசை ஆட்சி செய்து கொண்டிருப்பவர்களின் பழைய வரலாறு நல்லதாக இல்லை. பல்லாயிரம் அப்பாவிகளை கொன்று குவித்த குற்றச் சாட்டுக்கு ஆளானவர்கள். அவ்வாறு மக்கள் கொல்லைப்பட்டத்தை காருக்கு முன்னாள் விழுந்து சாகும் மிருகங்களுக்கு நான் பொறுப்பேறக முடியாது என்று கூறியவர்கள்.

முதலில் அவர்களிடம் சிறிய அதிகாரம் இருந்தது. சிறிய அளவில் அதிகார துஷ்பிரயோகம் செய்தார்கள். இப்போது அவர்களிடம்  நாட்டின் மைய அதிகாரம் இருக்கிறது. அதற்கேற்ப இன்னும் பெரிய அளவில் அதிகார மிருகத்தனத்துடன் நடந்து கொள்கிறார்கள்.

நாடாளுமன்றத்தில் அவர்கள் பேசுகிற வார்த்தைகளிலும் அவர்கள் வெளிப்படுத்துகிற உடல்மொழிகளிலும் கீழ்த்தர மனிதர்கள் பெரும் பொறுப்புக்களில் உட்கார்ந்திருக்கிறார்கள் என்பது வெளிப்படையாக தெரிகிறது.

கடந்த திங்கட்கிழமை நாடாளுமன்ற மக்களவை உள்துறை அமைச்சர் அமித்ஷா கொண்டு வந்த  குடியுரிமை சட்ட திருத்த மசோதா (Citizenship Amendment Bill)  இந்த ஆட்சியாளர்களின் மனிதாபிமானமற்ற இயல்புக்கு வெளிப்படையான சாட்சியாகும்.

அந்த சட்ட திருத்தம் என்ன சொல்கிறது.

ஏற்கெனவே இருக்கிற சட்டம் என்ன சொல்கிறது.

அரசியலமைப்புச்சட்டம் 1950 ஆம் ஆண்டு சனவரி மாதம் 26 ஆம் தேதி அமலுக்கு வந்தது. அதில் குடியுரைமை பற்றிய தெளிவான விளக்கங்கள் இருக்க வில்லை. நாடு பிரிவினைக்கு ஆளான போது ஏராளமான மக்கள் இடம் பெயர்ந்தனர். அதனால் 1955 ம் ஆண்டு குடியுரிமை சட்டம் இயற்றப் பட்டது அதில் குடியுரிமைக்கு மூன்று தகுதிகள் கூறப்பட்டிருந்தன.

1.   1950 ஜனவரி 26 ம் தேதியில் இந்தியாவை இருப்பிடமாகக் கொண்டவர்கள். பெற்றோர்களில் ஒருவர் இந்தியாராக இருந்து 5 வருடமாக இந்தியாவில் தங்கியிருப்பவர்.

2.    பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்கு குடிபெயர்ந்தவர்கள் 

3.   பொற்றோரில் ஒருவரி இந்தியராக இருக்கும் நிலையில் குடியுரிமை கோரி மனுச்செய்பவர்

.
இந்த ஆரம்ப கால சட்ட விதிகளில் துளியும் மதக் கலப்பு இருக்கவில்லை.

இம்மசோதா தொடர்பான விவாதத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் அஸதுத்தீன் உவைசி கூறினார்.

இந்திய அரசியல் சாசனம் தொகுக்கப் பட்ட போது அது பகவானின் பெயராலோ அல்லது குதாவின் பெயராலோ ஆரம்பிக்கப் படக் கூடாது என்னும் அளவுக்கு அன்றைய தலைவர்கள் மதச்சார்பற்றவர்களாக இருந்தார்கள்.

இப்போது பாஜ அரசு கொண்டு வந்த சட்ட திருத்தம் என்ன சொல்கிறது.
பாகிஸ்தான்வங்கதேசம்ஆப்கானிஸ்தானை சேர்ந்த ஹிந்துக்கள்சீக்கியர்கள்பௌத்தர்கள்சமணர்கள்,பார்சி இனத்தவர்கிறிஸ்தவர்கள் ஆகியோரில், 2014-ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதிக்கு முன் குடியேறியவர்களுக்கு உரிய ஆவணங்கள் எதுவுமில்லை என்றாலும்இந்தியாவில் குறைந்தது ஆண்டுகள் வசித்தாலே அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம் என்பதே அந்த திருத்தம்.

ஒருவகையில் பார்த்தால் இந்தச் சட்ட திருத்தம் மிக வேடிக்கையானதாக தோன்றும்

ஏனெனில்

பாஜக அரசு அக்கம் பக்கத்திலுள்ள நேபாளம் பூட்டான் மியான்மர் ஆகிய மூன்று நாடுகளை விட்டு விட்டு மற்ற மூன்று நாடுகளை மட்டும் குறிப்பிடுவதற்கு - முஸ்லிம் வெறுப்பு அல்லது இஸ்லாத்தின் மீது அவதூறு கூறுதல் என்பதை தவிர வேறு எந்தக் காரணமும் இல்லை.

பாகிஸ்தானையும் பங்களாதேசத்தையும் கூட பிரிட்டிஷ் காலத்தில் ஒன்று பட்ட இந்தியாவில் இருந்தவை என்று கூறலாம். ஆப்கானிஸ்தான் ஒரு போதும் பிரிட்டிஷின் ஒன்று பட்ட இந்தியாவில் இருக்கவில்லை.

பக்கத்திலுள்ள இந்த நாடுகளில் சிறுபான்மையினர் மதரீதியாக துன்புறுத்தப்படுகிறார்கள் என்று பாஜக அரசு சொல்வது உண்மையாக இருக்குமானால் (இன்றைய தி ஹிந்து தமிழ் ) கட்டுரையில் கூறப்பட்டுள்ளது போல ) இந்தியாவின் அண்டை நாடும்சமயச்சார்பான அரசுமான பூடானின் அதிகாரபூர்வ மதமாக வஜ்ராயன பௌத்தம் ஏன் இந்தப் பட்டியலிலிருந்து விடுபட்டதுபூடானைப் பொறுத்தவரை கிறிஸ்தவர்கள் வீட்டுக்குள் தனிப்பட்ட அளவிலேயே பிரார்த்தனை செய்ய முடியும்எல்லைப் பிராந்தியங்களில் உள்ள பல பூட்டானிய கிறிஸ்தவர்கள் தேவாலயங்களில் வழிபடுவதற்காக இந்தியாவுக்குப் பயணிக்கும் நிலை உள்ளதுஆனால்குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதாவில் அவர்கள் பலனாளிகளாக இல்லை. 

மியான்மரில் ரோகிங்கியா முஸ்லிம் மக்கள் மீது இனப்படுகொலை ஏவப்பட்டுநிறைய பேர் இந்தியாவுக்கு அகதிகளாக வந்த நிலையில் அவர்கள் ஏன் இந்தப் பட்டியலில் சேர்க்கப்படவில்லை

அவர்களை அரசியல் அகதிகள் என்கிறார் உள்துறை அமைச்சர். பொளத்த மதவாத துன்புறுத்தல் என்று உலகிற்கே தெரிந்த ஒரு உண்மையை பூசனிக்காயை சோற்றில் மறைப்பது போல மறைக்கிறார்.

உண்மையில் உலகின் மிக மோசமான அகதிகள் என்று ஐநா சபை பட்டியலிட்டிருக்கிற ரோகிங்கியா அகதிகளே  இன்றைய நிலையின் உலகின் அதி தீவிர கருணைக்கு உரியவர்கள்,

அவர்களை புறக்கணிக்கிற ஒரு சட்ட மசோதாவை இந்தியப் பிரதமர் மோடி கருணையின் அடையாளம் என்கிறார்,

அதே போல பொளத்த மதவாத தாக்குதலுக்கு ஆளாகி இலட்சக்கணக்கான தழிழ் அகதிகள் இந்தியாவில் குடியேறியுள்ளனர். அவர்களையும் அரசியல் அகதிகள் என  கூறி இந்த சட்ட மசோதா ஏற்க மறுக்கிறது.

உண்மையில் மத ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாகி இந்தியாவில் அடைக்கலாமாகியுள்ளோர் என்று எடுத்துக் கொள்ளப் படுமானால் ரோகிங்கியா அகதிகளும். இலங்கை தமிழ் அகதிகளுமே இதில் இந்தியக் குடியுரிமை பெற முதல் தகுதி படைத்தவர்கள். இவர்களுக்கு இந்திய மரபுத் தொடர்பும் உள்ளது

இன்னொரு எதார்த்தம் என்ன வென்றால், மக்களுக்கு நன்மையாக அமைய வேண்டும் என்ற எண்ணத்தில் குடியுரிமைச் சட்ட திருத்தத்தில்
இவர்கள் உள்ளடக்க்ப் பட்டிருந்தால் இன்று நாடுமுழுவதும் பெரும் மகிழ்சி அலை உருவாகியிருக்கும்.

காரணம் அரசு கொண்டு வந்துள்ள மசோதாவினால் நன்மை அடைந்த இலட்சக்கணக்கான மக்கள் இதை கொண்டாடியிருப்பார்கள்.

தமிழகத்தின் மக்கிழ்ச்சிக்கும் அளவே இருந்திருக்காது. அகதி முகாம்களில் வாழ்கிற மக்களின் வாழ்விம் பெரும் சந்தோசம் பார்ந்திருக்கும்.

தற்போதுள்ள பெரிய கேள்வி என்ன வென்றால் மத்திய அரசு தற்போது கொண்டு வந்துள்ள மசோதாவினால் நன்மை அடையப் போவது எத்தனை போர் ?

ஆப்கானிஸ்தான் , பாகிஸ்தான். பங்களாதேஷிலிருந்து மதரீதியாக துன்புறுத்தப் பட்டு 2014 டிஸம்பர் 31 ம் தேதிக்குள்ளாக இந்தியாவிற்குள் குடிபெயர்ந்தோர் எத்தனை பேர் என்ற கேள்விக்கு அரசு இதுவரை பதில் சொல்ல வில்லை.

அப்படியானால் இந்தச் சட்ட்த்தால் யார் நன்மைய அடைகிறார்கள் ?

அசாம் மாநிலத்தில் கொண்டு வரப்பட்ட குடிமக்கள் பதிவேற்ற சட்ட்த்தால் சுமார் 19 இலட்சம் மக்கள் இந்தியர்கள் அல்ல என்று அறிவிக்கப் பட்டிருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் தலைமுறைகளாக இந்தியாவில் வாழ்கிறவர்கள். சரியான சான்று அளிக்க முடியாதவர்கள்.

இந்தப் 19 இலட்சம் பேர்களில் சுமார் 5 இலட்சம் பேர் பங்களாதேஷி இந்துக்கள். மற்ற 14 இலட்சம் பேர் பங்காளி முஸ்லிம்கள்.

அரசு கொண்டுவந்துள்ள இந்தச் சட்ட்த்தின் மூலம் பங்காளி இந்துக்கள் இந்தியக் குடியுரிமை பெறுவார்கள். பங்காளி முஸ்லிம்கள் நிலமற்றவர்களாகி விடுவார்கள்.

தேவையே இன்றி பாஜக அரசு கொண்டு வந்துள்ள இந்த மசோதாவின் மூலம் உடனடியாக ஏற்படக் கூடிய ஒரே நிகழ்வு இந்த 5 இலட்சம் பங்காளி இந்துக்களை இந்தியர்களாக்குவதுதான்.

இந்த அப்பட்டமான மதப் பாகுபாட்டை இது இந்திய அரசியல் சாசனத்தின் பன்பிற்கு எதிரானது என்று எவ்வளவுதான் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கதறிக் கதறி பேசிய போதும் இந்திய உள்துறை அமைச்சர் மிக தந்திரமான வார்த்தைகளில் இந்தியாவின் சட்ட பூர்வ முஸ்லிம்களை இந்தச் சட்டம் 01 சதவீதம் கூட பாதிக்காது என்கிறார்.

ஆனால் தேசத்தின் மீது அக்கறை கொண்டவர்கள் மிக சரியாக இந்த மசோதாவை எதிர்த்தார்கள்.

முன்னாள் உள்துறை அமைச்சர் ப சிதம்பரம், அரசியல் சாசனத்தின் அடிப்படை பன்பை பாதுகாப்பது தான் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கடமை. இந்த சட்ட திருத்தம் அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்று தெரிந்தும் இந்துத்துவாவை அமுல் படுத்தும் நோக்கில் இந்தச் மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. இது ஒரு துக்க நாள் என்றார்.

பாஜாக அரசு நாட்டின் எதிர்காலத்தை நாசமாக்குகிறது என்றார் முன்னாள் மத்திய அமைச்சர் கபில் சிபல் , இந்த மசோதாவின் மூலம் நாட்டை மதரீதியாக பாஜக பிளவு படுத்துகிறது. பாஜகவினர் ஒரு சமூகத்தின் பேரைக் குறிப்பிடாமல் அவர்களை குறிவைக்கின்றனர். 18 லிருந்து 20 கோடி மக்களின் நம்பிக்கையை நாம் இழக்க நேரிடும். இந்தியாவின் பாரம்பரியம் பற்றி தெரியாத உங்களால் இந்தியாவை பாதுகாக்க முடியாது. தயவை செய்து இந்தியக் குடியரசை இரு ஜுராஸீக்களின் குடியரசாக மாற்றி விடாதீர்கள் ( don’t covert this Indian republic into a juracik republic என்று கபில் சிபல் அவர்கள் உணர்ச்சி பொங்க கூறினார்.

இந்த நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மீது அக்கறை கொண்ட பலரும் இந்தச் சட்ட திருத்த்த்தின் அநீதியான அம்சம் குறித்து மிகுந்த கவலை கொண்டு பேசிய போதும் பாஜக அரசு தனது மிருக பலத்தால் இம்மசோதாவை வெற்றி பெறச் செய்துள்ளது. இதற்கு ஜனாதிபதி உடனடியாக ஒப்புதல் அளிக்கவும் கூடும். நீதிமன்றங்கள் கூட இன்றுள்ள சூழ்நிலையில் அரசாங்கத்தின் செல்வாக்கிற்கு பணிந்து போக்க கூடும்.

இந்திய மக்களாகிய நாம் கவனிக்க வேண்டியது என்ன வென்றால்
தி ஹிந்து தமிழ் நாளிதழ் தெளிவாக நாம் சுட்டிக்காட்டுகிறது.

அரசமைப்புரீதியான எந்தத் தர்க்கத்துக்குள்ளும் குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதா வரவில்லைஆனால்குதர்க்கமான அரசியல் தர்க்கம் அதில் இருக்கவே செய்கிறதுசட்டத்தின்படி இந்தியாவை இந்து ராஷ்டிரமாக்குவதற்கான முதல் முயற்சி இது . இது அரசமைப்புக்கு ஒவ்வாத சட்டம் என்று நீதித் துறை வலியுறுத்திக் கூற வேண்டும்அப்படிச் செய்யாமல்போனால்இது முடிவாக அல்லஇதுபோன்ற சட்டரீதியான நகர்வுகளுக்கு இது தொடக்கமாகவே அமையும்காலப்போக்கில் நாம் அறிந்த அரசமைப்பையும் முடிவுக்குக் கொண்டுவந்துவிடும்.

எனவே இந்த நாட்டின் அரசியல் சாசனத்தை பாதுகாக்க கடமைப்பட்டவர்கள், இந்த நாட்டின் பன்முகத் தன்மையை நேசிக்கிறவர்கள், இந்த நாட்டின் மதச்சார்பின்மையை நம்புகிறவர்கள், குறிப்பாக சிறுபான்மையினத்தை சார்ந்தவர்கள் இந்தச் சட்ட திருத்த்திற்கு எதிரான தங்களது கண்டனத்தை பதிவு செய்தாக வேண்டும்.

தமிழ நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை இம்மசோதாவிற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. அதே போல பல பல அரசியல் கட்சிகளும் ஜனநாயக அமைப்புக்களும் கண்டனம் தெரிவித்திருகின்றன,

நமது ஊரில் அத்தகைய கண்டனக் கூட்டம் நடை பெறும் போது மக்கள் திரளாக பங்கேக வேண்டும்.

பாஜக அரசாங்கத்தின் முகத்திரையை கிழித்தெறிய வேண்டும்.

ஆட்சியிலிருப்பவர்களுக்கு இஸ்லாத்தின் சார்பில் ஒன்று சொல்லிக் கொள்வோம்.

அதிகாரத்தை மக்களின் நன்மைக்கு பயன்படுத்தினால் வரலாற்றில் வாழ்வீர்கள்.

இது காந்தியின் தேசம்.

யாருக்கெல்லாம் சொந்த மாக ஒரு நாடு இல்லையே அவர்கள் எல்லோரும் இங்கு வரலாம். இந்தியா அவர்களுக்கு தாய் வீடு என்றார் காந்தியடிகள்.

காந்தி இறந்து பல்லாண்டுகளாகி விட்ட போதும் இந்தியாவின் அடையாளமாக இருக்கிறார்.

அவரது தேசத்தை ஆளும் வாய்ப்பை பெற்ற நீங்கள் ஹிட்லர்களாகிவிடாதீர்கள்.

வரலாறு நல்லவர்களுக்கானது.  நல்லோர்கள் காலம் கடந்து வாழ்வார்கள்.

சிலுவைப்படையினர் பைத்துல் முகத்தஸை கைப்பற்றிய போது அங்கிருந்த முஸ்லிம்களை ஈவு இரக்க மின்றி கொன்று குவித்தனர். அங்கிருந்த குப்பத்துஸ் ஸஹ்ரா என்ற பாறையின் முன்பகுதியில் முழங்கால் அளவு இரத்தம் தேங்கியிருந்த்தாக வரலாறு கூறிகிறது.

அதே பைத்துல் முகத்தஸை சுல்தான் சலாஹுத்தின் மீட்ட போது அங்கிருந்தவர்கள் தமது உடமைகளுடன் வெளியேற அனுமதித்தார். அதற்கு 10 திர்ஹம் அவர்கள் செலுத்தினால் போதுமானது என்றார், அப்படி 10 திர்ஹம் செலுத்த முடியாதவர்களுக்கு தனது சொந்த பணத்திலிருந்து செலுத்தினார். தனது சகோதர்ர்களுக்கும் அவ்வாறு செய்ய உத்தரவிட்டார், அங்கிருந்து வெளியே கிருத்துவர்களுக்கு அடைக்கலம் தர அக்கம் பக்கத்திலிருந்த கிருத்துவ அரசுகள் முன் வரவில்லை. அப்போது சலாஹீத்தீன் அய்யூபி தனது நிலப்பரப்பிலிருந்தே ஒரு பகுதியை ஒதுக்கி அங்கே அவர்கள் தங்கிக் கொள்ள அனுமதித்தார்.

இதுதான் வரலாற்றில் வாழ்வதற்கான வழி.

தற்போது பாஜக அரசு முன்னெடுத்துச் செல்கிற திட்டங்கள் இந்திய தேசத்தை மட்டும் அல்ல பாஜகவையும் பெரும் சீரழிவுக்கும் இழிவுக்கும் தள்ளிவிடும் என்று எச்சரிக்கிறோம்.

இந்திய தேசத்தை டைனோஸர்களின் குடியரசாக இல்லாமல் சுல்தான் சலாஹுத்தீன்களின் குடியரசாக அல்லாஹ் ஆக்குவானக!

பிரபல்யமான பதிவுகள்