роироо்рооுроЯрой் роЗрогைрои்родு роЗро░ுрок்рокро╡ро░்роХро│்

рокுродрой், роПрок்ро░ро▓் 03, 2019

рокிроЬேрокி роЖроЯ்роЪிропிро▓் роОрой்рой роироЯрои்родродு,

இந்த 5 நிமிட ராகுல் காந்தி பேச்சால்தான்

1998 முதல் 2016 வரையில் குஜராத்தில் பா.ஜ.க. ஆட்சி செய்த காலத்தில் அங்கே நடைபெற்ற கலவரங்களின் எண்ணிக்கை 35,568. 2014 -16 காலத்தில் மட்டும் மதவெறித் தாக்குதலில் 305 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர். இது நேஷனல் கிரைம் ரிகார்ட்ஸ் பீரோ (NCRB) வெளியிட்டிருக்கும் கணக்கு.

மோடி ஆட்சிக்காலத்தில் 2002-ல் நடைபெற்ற படுகொலையின் போது அரசு கணக்கின்படியே 1044 பேர் கொல்லப்பட்டனர். 223 பேர் காணாமல் போயினர். 2500 பேர் படுகாயம் அடைந்தனர். இது மத்திய உள்துறை அமைச்சகம் அளித்த கணக்கு. உண்மையில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை இதைவிட மிகவும் அதிகம் என்பதே பல்வேறு அமைப்புகளின் மதிப்பீடு.

மத்திய பிரதேசத்தில் 2003 முதல் 2016 வரையிலான பா.ஜ.க. ஆட்சிக்காலத்தில் NCRB கணக்கீட்டின்படி 32,050 மதவெறித் தாக்குதல்கள் நடந்திருக்கின்றன. 2014 – 16 காலகட்டத்தில் மட்டும் 138 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர்.

சட்டிஸ்கரில் 2003 – 2016 ஆண்டுகளில் 12,265 மதவெறி தாக்குதல்கள் நடந்திருக்கின்றன.

உத்தர பிரதேசத்தில் 2017-ல் மட்டும் 195 மதவெறித் தாக்குதல்கள் நடந்திருக்கின்றன. 44 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர். 542 பேர் காயமடைந்திருக்கின்றனர்.

இவையெல்லாம் ஆதாரப்பூர்வமான அரசாங்க புள்ளி விவரங்கள். எத்தனை ஆதாரங்கள் இருந்தாலும், இடையறாத ஊடகப் பிரச்சாரத்தின் வாயிலாக, பொய்யை மெய்யாக்கிவிட முடியும் என்பது ஆர்.எஸ்.எஸ்.-ன் கணக்கு.

: மத்திய உள்விவகாரத்துறை அமைச்சர் ஹன்ஸ்ராஜ் கங்காராம் அஹிர், கடந்த 2017 ஜூலை 25-ம் தேதியன்று பாராளுமன்றத்தில் ஒரு அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளார். அதில் கடந்த 3 ஆண்டுகளில் நடைபெற்ற வகுப்புவாத மற்றும் இனவாதக் கலவரங்கள் குறித்த புள்ளிவிவரக் கணக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை கிட்டத்தட்ட மோடி அரசின் மூன்றாண்டு ‘சாதனைகளின்’ ஒப்புதல் வாக்குமூலமாக அமைந்துள்ளது.

தேசிய குற்றப் பதிவுத்துறை (NCRB) வெளியிட்டுள்ள தகவல்களின் படியே அந்த அறிக்கை உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதாலும், அதை மத்திய அமைச்சரே பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளதாலும் அந்தப் புள்ளிவிவரங்களை மோடியின் பக்தாள்கள் யாரும் சந்தேகப்பட முடியாது.

அந்த அறிக்கையின் படி நாடு முழுவதும் நடைபெற்றுள்ள வகுப்புவாத, இனவாத, வன்முறைகள் மற்றும் குற்றங்களின் எண்ணிக்கை கடந்த 3 ஆண்டுகளில் 41% உயர்ந்துள்ளது. அதாவது கடந்த 2014- ம் ஆண்டு நடைபெற்ற இனவாத, வகுப்புவாத வன்முறைகளின் மொத்த எண்ணிக்கை 336. ஆனால் அதுவே கடந்த 2016 -ம் ஆண்டில் 475-ஆக உயர்ந்திருக்கிறது.

கோவையில் இந்து முன்னணி நடத்திய கலவரம் (கோப்புப்படம்)
யூனியன் பிரதேசங்களைத் தவிர்த்து, மாநிலங்களில் மட்டும் பார்த்தால் சுமார் 49% வகுப்புவாத, இனவாத வன்முறைகள் அதிகரித்துள்ளன. மோடி ஆட்சியில் அமர்ந்த பின்னர் உத்தரப் பிரதேசத்தில் 2014 -ம் ஆண்டு நடைபெற்றதை விட 2016 -ம் ஆண்டில் 346% -மும், உத்திரகாண்டில் 450% -மும், மத்தியப் பிரதேசத்தில் 420% -மும், ஹரியானாவில் 433% -மும் அதிகரித்துள்ளன. வகுப்புவாத, இனவாத வன்முறைகள் எதையும் 2014 -ல் சந்தித்திராத பீஹார், 2016 -ம் ஆண்டில் எட்டு வன்முறைச் சம்பவங்களைச் சந்தித்திருக்கிறது.

இந்தப் புள்ளிவிவரக் கணக்கில் இ.பி.கோ 153ஏ, 153பி ஆகிய பிரிவுகளின் படி பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகள் மட்டுமே கணக்கில் கொள்ளப்பட்டுள்ளன. நாடு முழுவதும் மாட்டுக்கறி மற்றும் மாடுகள் விற்பனை தொடர்பாக நடத்தப்பட்ட வன்முறைச் சம்பவங்கள் எதுவும் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அந்தப் புள்ளி விவரங்களையும் இணைத்துப் பார்த்தால், பாஜக ஆளும் அனைத்து மாநிலங்களிலும், வகுப்புவாத வன்முறைகளின் அதிகரிப்பு விகிதம் 1000% -க்கும் மேலானதாகவே இருக்கும்.

ро░роЬрок் рооாродроо்,

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

கேள்வி
*ரஜப் 27ம் நாளான மிஃராஜ் தினத்தில் நோன்பு வைக்கலாமா?.

*பதில் :*

மிஃராஜ் தினத்தில் நோன்பு வைக்கலாம் என்பதற்கு நபிமொழிகளில் ஆதாரங்கள் காணக் கிடைக்கிறது.

இமாம் பைஹகி (ரஹ்மத்துல்லாஹி) அலைஹி அவர்கள் ஷுஃபுல் ஈமானிலும்,

இமாம் தைலமி (ரஹ்மத்துல்லாஹி) அவர்கள் முஸ்னதுல் பிர்தவ்ஸிலும்,

ஹழ்ரத் ஸல்மானுல் பார்ஸி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் வாயிலாக இவ்வாறு அறிவிக்கின்றனர்.

மேலும் அபான் இப்னு ஙயாஸ் அவர்கள், அனஸ் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் மூலமாக அறிவிக்கும் மற்றொரு நபிமொழியும் பைஹகியில் காணப்படுகிறது.

ரஜபில் ஓர் இரவு உண்டு. அவ்விரவில் நல்ல அமல் புரிவோருக்கு நூறு ஆண்டுகள் நல்ல அமல் புரிந்த கூலி கிடைக்கும். அது ரஜபு மாதத்தின் 27வது இரவாகும்.

அவ்விரவில் யாராவது *12 ரக்அத்கள்* தொழுதால் ஒவ்வொரு ரக்அத்திலும் *ஸூரத்துல் பாத்திஹாவும்*, *வேறு ஏதாவது ஸூரத்தும்* ஓத வேண்டும். ஒவ்வொரு இரண்டு ரக்அத்களும் தொழுது முடித்த பின்னர்,

*'ஸுப்ஹானல்லாஹி வல்ஹம்துலில்லாஹி வல்லாஹு அக்பர்'* என்று 100 தடவைகளும்,

*இஸ்திஃபார்* 100 தடவைகளும்,

அண்ணலார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீது 100 தடவை *ஸலவாத்துகளும்* ஓதிவிட்டு...

மறுமை, இம்மை சம்பந்தப்பட்டவை குறித்து தேவையானவற்றை *துஆச்* செய்யலாம்.

பின்னர் பகலில் *நோன்பு* நோற்க வேண்டும். அல்லாஹ் அவரது துஆக்களை ஏற்றுக் கொள்வான்.

மேலே காட்டப்பெற்ற இரண்டு ஹதீஸ்களும் 'மர்பூஉ' ஆன நபிமொழிகள். இவற்றில் இரண்டாவது ஹதீஸ் முந்தையதை விட மிக பலகீனமானது என பைஹகீ (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்கள் கூறுகின்றனர். அத்தோடு இரண்டாவது நபிமொழியை அறிவிக்கும் அறிவிப்பாளர்களில் சந்தேகத்திற்குரிய இருவர் காணப்படுவதாக இப்னு ஹஜர் ரஹ்மத்துல்லாஹி அவர்கள் கூறுகின்றனர். என்றாலும் ஏவல், விலக்கல் போன்ற ஆணை சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில்தான் பலவீனுமான ஹதீஸ்களை எடுக்கக் கூடாது.

ஆனால் பழாயில் சிறப்புகள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் அமல் செய்வதற்கு பலவீனமாக நபிமொழிகளை ஆதாரமாகக் கொள்ளலாம் என்பது ஹதீஸ் கலை மேதையர்களுடையவும், மார்க்கத்துறை அறிஞர்களுடையவும் ஏகோபித்த முடிவாகும்.

*ரஜப் 27 எனக்கு நபிப்பட்டம் வழங்கப்பட்டது. அத்தினத்தில் நோன்பு வைத்து நோன்பு திறக்கும் வேளையில் துஆக் கேட்டால், பத்து வருடக் குற்றங்களுக்கு அது பரிகாரமாக அமையும்.' பவாயிது நிஹாத் என்ற நூலில் அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மூலமாக அறிவிக்கப்படும் இந்த நபி மொழியும் 'மர்பூஉ'தான்!.

'யாராவது ரஜப் மாதம் 27 அன்று நோன்பு வைத்தால் அவருக்கு அல்லாஹ் *60 ஆண்டுகள்  நோன்பு வைத்த கூலியை கொடுப்பான்.*

அத்தினத்தில்தான் அண்ணல் நபியுல்லாஹ் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு ஜிப்ரயீல் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் நபிப்பட்டத்தை வழங்கினார்கள்.

ஜுஸ்உ அபீ முஆத் என்ற நூலில் அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மூலமாக இந்த நபிமொழி பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதே கருத்தில் வந்துள்ள எல்லா நபிமொழிகளிலும் இந்த நபிமொழிதான் மேலானதும், 27வது இரவிலும், பகலிலும் செய்யப்படுகின்ற அமல்களுக்கு அடிப்படை ஆதாரமுமாகும்.'

ஆதார நூல்:பதாவா ரிழ்விய்யா, பாகம் 4, பக்கம் 657, 658

роЗро╕்ро▓ாрооிроп роЖроЯ்роЪி рооுро▒ை ,

இஸ்லாமிய ஆட்சி முறை

قول الله عز وجل : يا أيها الذين آمنوا كونوا قوامين بالقسط شهداء لله... قول النبى صلى الله عليه وسلم : وعن عبد الله - رضي الله عنهما - قالا : قال رسول الله صلى الله عليه وسلم : " ', الخلق عيال الله ، فأحب الخلق إلى الله من أحسن إلى عياله " (رواه البيهقي  في " شعب الإيمان ")
புகழனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தாகட்டுமாக! அவனுடைய சாந்தியும் கருணையும் நபிகள் நாயகம் ஸல் அவர்கள் மீதும் அவர்களின் அடிச்சுவட்டை தவறாது  பின்பற்றி நடந்த ஸஹாபாக்கள் நல்லடியார்கள் நம் அனைவரின் மீதும் உண்டாவதாக ஆமீன். மக்களுக்கு பணிசெய்வதற்காகத் தான் அரசியலும் ஆட்சி அதிகாரங்களும் இருக்கிறது. ஆனால் அவைகள் மக்களுக்கு பிணியை ஏற்படுத்தும் அபாயங்களாக மாறிப் போயுள்ளன. அரசியல் என்பதற்கு வரைவிலக்கணம் குடிமக்களுக்கான அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றி அவர்களை சீர்திருத்தம் செய்யும் காரியங்களில் ஈடுபடுவது என்பதாகும். ஆனால் இன்றைய சூழலில் அது மக்களின் மீது ஆதிக்கம் செலுத்தி தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்வது என்று மாறிவிட்டது. நபிகள் நாயகம் ஸல் அவர்கள் தனக்கு பின்னால் மக்கள் நலன் சார்ந்து ஆட்சி அதிகாரங்கள் செயல்படுவதற்கு வழிகாட்டிச் சென்றார்கள். நான்கு கலீஃபாக்களின் ஆட்சிக் காலம் வரை அது முறையாக கடைபிடிக்கப்பட்டு வந்தது. பின்னாளில் அது மன்னராட்சி முறையில் சர்வாதிகார முறையில் மாறிப் போனது . அப்போது துவங்கிய கருத்து வேற்றுமைகளும் சண்டை சச்சரவுகளும் இன்று வரை தொடர்கிறது. இன்று ஜனநாயக முறைப்படி மக்களால் மக்களில் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவது உலக நாடுகளில் நடைமுறையில் இருந்தாலும் பணம், ஊழல், அடிதடி, காசுக்கு வாக்களிப்பது, ஜாதி இனம் மொழி அடிப்படையில் வாக்களிப்பது என்று நல்லவர்கள் புறக்கணிக்கப் படுகிறார்கள். ஒரு நாட்டில் அனைத்து தரப்பு மக்களுக்கும் வாக்குரிமை இல்லாத நிலையில் வாக்குரிமை உள்ளவர்களில் வெறும் 35 /40 சதவீத மக்களின் ஆதரவை பெற்றவர் ஆட்சியாளராக தேர்ந்தெடுக்கப்படுகிறார்  மீதம் 60 சதவீத மக்களின் அதிருப்தியோடு அவர் ஆட்சி செய்கிறார் என்றால் அது எவ்வாறு நல்லாட்சியாக இருக்க முடியும். இன்றைய ஜனநாயக ஆட்சி முறை மக்கள் விரோத ஆட்சி முறையாகத் தான் இருக்கிறது. மக்களுக்கு எதிரான சமூக குற்றங்கள் பெருக வழிவகுக்கும் சட்டங்களை தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பான்மையானவர்கள் ஆதரித்தால் அது எல்லோருக்குமான சட்டமாக்கப்படுகிறது இதை நாம் பின்பற்ற வேண்டிய நிர்பந்தத்திற்கு உள்ளாகிறோம். உதாரணமாக " விரும்பி உடலுறவு வைத்துக் கொள்வது குற்றமல்ல" ஓரினச் சேர்க்கை குற்றமல்ல " என்பது போன்ற சட்டங்களைச் சொல்லலாம். அதே போல குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அதிகமாக உயர் பொறுப்புகளில் இருக்கிறார்கள் மாறாக விகிதாச்சார பிரதிநிதித்துவம் கொண்டு வரப்பட்டால் தான் சமத்துவத்துவத்தை ஏற்படுத்த முடியும். இன்னும் ஏராளமான குளறுபடிகள் உள்ள இந்த ஜனநாயக ஆட்சி முறை இஸ்லாமிய கொள்கை கோட்பாடுகளுக்கு முற்றிலும் எதிரானது. மேலும் ஆட்சியாளர் தனக்கு வாக்களித்தவர்களின் நலன்களில் மட்டுமே கவனம் செலுத்தினால் இது எப்படி மக்களின் நலனுக்கான ஆட்சியாக இருக்கும். இவ்வாறான சூழலில் உண்மையான நல்லாட்சி எப்படி இருக்க வேண்டும் என்பதை நாம் நமது முன்னோர்கள் ஸஹாபாக்களின் ஆட்சிக்காலத்தில் இருந்து படித்துக் கொள்ள கடமைப் பட்டுள்ளோம். இஸ்லாம் மனித வாழ்வின் எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு சொல்லும் மார்க்கம் என்பதால் வீட்டுப் பொறுப்பாளர்களான குடும்பத்தலைவர்கள் முதல் நாட்டுப் பொறுப்பாளர்களான அரசுத் தலைவர்கள் வரை அனைவருக்குமான வழிகாட்டல் இஸ்லாத்தில் உண்டு. அந்த வழி காட்டலின் படி நடப்பவர் யாராக இருந்தாலும் மக்கள் நலன் காக்கும் ஆட்சியாளராக திகழ்வர்;  தவறும்போது மக்கள் விரோத ஆட்சியாளராகி விடுவர். உண்மையான நல்லாட்சி முறைக்கு வித்திடும் குர்ஆன் மற்றும் ஹதீஸின் வழிகாட்டல்கள்... ۞يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ كُونُواْ قَوَّٰمِينَ بِٱلۡقِسۡطِ شُهَدَآءَ لِلَّهِ وَلَوۡ عَلَىٰٓ أَنفُسِكُمۡ أَوِ ٱلۡوَٰلِدَيۡنِ وَٱلۡأَقۡرَبِينَۚ إِن يَكُنۡ غَنِيًّا أَوۡ فَقِيرٗا فَٱللَّهُ أَوۡلَىٰ بِهِمَاۖ فَلَا تَتَّبِعُواْ ٱلۡهَوَىٰٓ أَن تَعۡدِلُواْۚ وَإِن تَلۡوُۥٓاْ أَوۡ تُعۡرِضُواْ فَإِنَّ ٱللَّهَ كَانَ بِمَا تَعۡمَلُونَ خَبِيرٗا⭕ முஃமின்களே! நீங்கள் நீதியின்மீது நிலைத்திருப்பவர்களாகவும், உங்களுக்கோ அல்லது (உங்கள்) பெற்றோருக்கோ அல்லது நெருங்கிய உறவினருக்கோ விரோதமாக இருப்பினும் அல்லாஹ்வுக்காகவே சாட்சி கூறுபவர்களாகவும் இருங்கள்;. (நீங்கள் யாருக்காக சாட்சியம் கூறுகிறீர்களோ) அவர்கள் செல்வர்களாக இருந்தாலும் ஏழைகளாக இருந்தாலும் (உண்மையான சாட்சியம் கூறுங்கள்). ஏனெனில் அல்லாஹ் அவ்விருவரையும் காப்பதற்கு அருகதையுடையவன்;. எனவே நியாயம் வழங்குவதில் மன இச்சையைப் பின்பற்றி விடாதீர்கள்;. மேலும் நீங்கள் மாற்றிக் கூறினாலும் அல்லது (சாட்சி கூறுவதைப்) புறக்கணித்தாலும், நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதையெல்லாம் நன்கு அறிந்தவனாகவே இருக்கின்றான். (அல்குர்ஆன் : 4:135) 1 -  *பொறுப்பு என்பது ஒரு அமானிதம் என்பதை அடிப்படையில் புரிந்து வைத்திருக்க வேண்டும்.* ، عَنْ أَبِي ذَرٍّ، قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللهِ، أَلَا تَسْتَعْمِلُنِي؟ قَالَ: فَضَرَبَ بِيَدِهِ عَلَى مَنْكِبِي، ثُمَّ قَالَ: «يَا أَبَا ذَرٍّ، إِنَّكَ ضَعِيفٌ، وَإِنَّهَا أَمَانَةُ، وَإِنَّهَا يَوْمَ الْقِيَامَةِ خِزْيٌ وَنَدَامَةٌ، إِلَّا مَنْ أَخَذَهَا بِحَقِّهَا، وَأَدَّى الَّذِي عَلَيْهِ فِيهَا»-(صحيح مسلم) 3729. அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் (நபி (ஸல்) அவர்களிடம்), "அல்லாஹ்வின் தூதரே! எனக்கு ஏதேனும் (அரசுப்) பதவி வழங்கக் கூடாதா?" என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், தமது கையால் எனது தோள்மீது அடித்துவிட்டு, "அபூதர்! நீர் பலவீனமானவர். அது (பதவி) ஒரு கையடைப் [-அமானிதம்]பொருளாகும். அதை முறைப்படி அடைந்து, அதில் தமக்குரிய பொறுப்புகளை நிறைவேற்றியவரைத் தவிர மற்றவர்களுக்கு அது (மறுமையில்) இழிவும் துயரமும் ஆகும்" என்று கூறினார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்) إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَنْ تُؤَدُّوا الْأَمَانَاتِ إِلَى أَهْلِهَا وَإِذَا حَكَمْتُمْ بَيْنَ النَّاسِ أَنْ تَحْكُمُوا بِالْعَدْلِ -   النساء: 58 நம்பி உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட அமானிதங்களை அவற்றின் சொந்தக்காரர்களிடம் நீங்கள் ஒப்புவித்து விடவேண்டுமென்றும், மனிதர்களிடையே தீர்ப்பு கூறினால் நியாயமாகவே தீர்ப்புக் கூறுதல் வேண்டும் என்றும் உங்களுக்கு நிச்சயமாக அல்லாஹ் கட்டளையிடுகிறான். (அல்- குர்ஆன் 4:58) 2 -  *நம்முடைய பொறுப்பு பற்றியும் விசாரணை உண்டு என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.* عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ: «أَلَا كُلُّكُمْ رَاعٍ، وَكُلُّكُمْ مَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ، فَالْأَمِيرُ الَّذِي عَلَى النَّاسِ رَاعٍ، وَهُوَ مَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ، وَالرَّجُلُ رَاعٍ عَلَى أَهْلِ بَيْتِهِ، وَهُوَ مَسْئُولٌ عَنْهُمْ، وَالْمَرْأَةُ رَاعِيَةٌ عَلَى بَيْتِ بَعْلِهَا وَوَلَدِهِ، وَهِيَ مَسْئُولَةٌ عَنْهُمْ، وَالْعَبْدُ رَاعٍ عَلَى مَالِ سَيِّدِهِ وَهُوَ مَسْئُولٌ عَنْهُ، أَلَا فَكُلُّكُمْ رَاعٍ، وَكُلُّكُمْ مَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ» ،(صحيح مسلم) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நினைவில் கொள்க! நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே. உங்களில் ஒவ்வொருவரும் தத்தமது பொறுப்பிலுள்ளவை பற்றி (மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள். ஆட்சித் தலைவர் மக்களின் பொறுப்பாளர் ஆவார். அவர் தம் குடிமக்கள் குறித்து விசாரிக்கப்படுவார். ஓர் ஆண், தன் குடும்பத்தாருக்குப் பொறுப்பாளன் ஆவான். அவன் தன் பொறுப்புக்குட்பட்டவர்கள் குறித்து விசாரிக்கப்படுவான்.ஒரு பெண், தன் கணவனின் இல்லத்துக்கும், அவனுடைய குழந்தைக்கும் பொறுப்பாளி ஆவாள். அவள் அவர்கள் குறித்து விசாரிக்கப்படுவாள். பணியாள் தன் உரிமையாளரின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவன் அது குறித்து விசாரிக்கப்படுவான். நினைவில் கொள்க! உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே. உங்களில் ஒவ்வொருவரும் தத்தமது பொறுப்புக்குட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவீர்கள். இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (ஸஹீஹ் முஸ்லிம் 3733. ) 3 -  *ஆட்சி பொறுப்பிலிருப்பவர்களுக்கு நபிகள்( ஸல்) அவர்களின் எச்சரிக்கை.* عَنْ عَطِيَّةَ، عَنْ أَبِي سَعِيدٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ أَحَبَّ النَّاسِ إِلَى اللَّهِ يَوْمَ القِيَامَةِ وَأَدْنَاهُمْ مِنْهُ مَجْلِسًا إِمَامٌ عَادِلٌ، وَأَبْغَضَ النَّاسِ إِلَى اللَّهِ وَأَبْعَدَهُمْ مِنْهُ مَجْلِسًا إِمَامٌ جَائِرٌ»- (سنن الترمذي) “மறுமை நாளன்று மக்களில் அல்லாஹ்விடம் அதிக பிரியத்திற்கும் நெருக்கத்திற்கும் உரியவர் நேர்மையான தலைவராவார். மறுமை நாளன்று மக்களில் அல்லாஹ்விடம் அதிக கோபத்திற்கும் சாபத்திற்கும் உரியவர் அநியாயக்கார தலைவராவார்.” என்று நபி [ஸல்] அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூ ஸயீத் [ரலி] (நூல் : திர்மிதீ) عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «أَفْضَلُ عِبَادِ اللَّهِ عِنْدَ اللَّهِ مَنْزِلَةً يَوْمَ الْقِيَامَةِ إِمَامٌ عَادِلٌ رَفِيقٌ، وَإِنَّ شَرَّ عِبَادِ اللَّهِ عِنْدَ اللَّهِ مَنْزِلَةً يَوْمَ الْقِيَامَةِ إِمَامٌ جَائِرٌ خَرِقٌ»-معجم ابن الأعرابي “அல்லாஹ்விடம் அவனுடைய அடியார்களில் மறுமையில் சிறந்தவர், மென்மை சுபாவமுள்ள, நேர்மையான தலைவராவார். அல்லாஹ்விடம்  அவனுடைய அடியார்களில் மறுமையில் மோசமானவர், கடின சுபாவமுள்ள, அநியாயக்கார தலைவர்.” என்று நபி [ஸல்] அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: உமர்  [ரலி] 7150 - حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا أَبُو الأَشْهَبِ، عَنِ الحَسَنِ، أَنَّ عُبَيْدَ اللَّهِ بْنَ زِيَادٍ، عَادَ مَعْقِلَ بْنَ يَسَارٍ فِي مَرَضِهِ الَّذِي مَاتَ فِيهِ، فَقَالَ لَهُ مَعْقِلٌ إِنِّي مُحَدِّثُكَ حَدِيثًا سَمِعْتُهُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَا مِنْ عَبْدٍ اسْتَرْعَاهُ اللَّهُ رَعِيَّةً، فَلَمْ يَحُطْهَا بِنَصِيحَةٍ، إِلَّا لَمْ يَجِدْ رَائِحَةَ الجَنَّةِ»-صحيح البخاري 4 7150. ஹஸன் அல்பஸரீ (ரஹ்) அவர்கள் அறிவித்தார். (நபித் தோழர்) மஅகில் இப்னு யஸார் (ரலி) அவர்கள் இறப்பதற்கு முன் நோய்வாய்ப்பட்டிருந்தபோது அன்னாரை(ச் சந்தித்து) நலம் விசாரிப்பதற்காக (அன்றைய பஸ்ரா நகர ஆட்சியர்) உபைதுல்லாஹ் இப்னு ஸியாத் சென்றார். அவரிடம் மஅகில்(ரலி) அவர்கள் 'நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடமிருந்து கேட்ட செய்தி ஒன்றை உமக்கு அறிவிக்கிறேன். நபி(ஸல்) அவர்கள், 'ஓர் அடியானுக்குக் குடிமக்களின் பொறுப்பை அல்லாஹ் வழங்கியிருக்க, அவன் அவர்களின் நலனைக் காக்கத் தவறினால், சொர்க்கத்தின் வாடையைக் கூட அவன் பெறமாட்டான்' என்று சொல்ல கேட்டேன்' எனக் கூறினார்கள். 4-    *மக்கள் நலனுக்காக ஒரு திட்டம் கொண்டு வரப்பட்டாலும் மக்களை அது சிரமப்படுத்தாமலும் வெறுப்படையச் செய்யாமலும் இருக்கவேண்டும்.* 3038 - حَدَّثَنَا يَحْيَى، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ شُعْبَةَ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، بَعَثَ مُعَاذًا وَأَبَا مُوسَى إِلَى اليَمَنِ قَالَ: «يَسِّرَا وَلاَ تُعَسِّرَا، وَبَشِّرَا وَلاَ تُنَفِّرَا، وَتَطَاوَعَا وَلاَ تَخْتَلِفَا» - صحيح البخاري 3038. அபூ மூஸா அல் அஷ்அரீ(ரலி) அறிவித்தார். நபி (ஸல்) அவர்கள், முஆத் அவர்களையும் என்னையும் யமன் நாட்டிற்கு (ஆட்சி நடத்தவும் பிரசாரம் செய்யவும்) அனுப்பினார்கள். அப்போது (எங்கள்) இருவரிடமும், 'நீங்கள் இலேசானதையே மக்களுக்கு நற்செய்தி கூறுங்கள்: வெறுப்பூட்டி விடாதீர்கள். ஒருவரோடு ஒருவர் இசைந்து பழகி (அன்பு செலுத்தி)க் கொள்ளுங்கள். ஒருவரோடு ஒருவர் (கருத்து வேறுபட்டு) பிணங்காதீர்கள்' என்று (அறிவுரை) கூறினார்கள். (ஸஹீஹுல் புஹாரி) 5 - *ஆட்சி பொறுப்பிலிருப்பவர் மென்மை சுபாவமும் இரக்க குணமும் உள்ளவராக இருக்க வேண்டும்.* عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ شِمَاسَةَ، قَالَ: أَتَيْتُ عَائِشَةَ أَسْأَلُهَا عَنْ شَيْءٍ، فَقَالَتْ: مِمَّنْ أَنْتَ؟ فَقُلْتُ: رَجُلٌ مِنْ أَهْلِ مِصْرَ، فَقَالَتْ: كَيْفَ كَانَ صَاحِبُكُمْ لَكُمْ فِي غَزَاتِكُمْ هَذِهِ؟ فَقَالَ: مَا نَقَمْنَا مِنْهُ شَيْئًا، إِنْ كَانَ لَيَمُوتُ لِلرَّجُلِ مِنَّا الْبَعِيرُ فَيُعْطِيهِ الْبَعِيرَ، وَالْعَبْدُ فَيُعْطِيهِ الْعَبْدَ، وَيَحْتَاجُ إِلَى النَّفَقَةِ، فَيُعْطِيهِ النَّفَقَةَ، فَقَالَتْ: أَمَا إِنَّهُ لَا يَمْنَعُنِي الَّذِي فَعَلَ فِي مُحَمَّدِ بْنِ أَبِي بَكْرٍ أَخِي أَنْ أُخْبِرَكَ مَا سَمِعْتُ مِنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ فِي بَيْتِي هَذَا: «اللهُمَّ، مَنْ وَلِيَ مِنْ أَمْرِ أُمَّتِي شَيْئًا فَشَقَّ عَلَيْهِمْ، فَاشْقُقْ عَلَيْهِ، وَمَنْ وَلِيَ مِنْ أَمْرِ أُمَّتِي شَيْئًا فَرَفَقَ بِهِمْ، فَارْفُقْ بِهِ» ،صحيح مسلم 3732. அப்துர் ரஹ்மான் பின் ஷுமாசா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் சில விஷயங்களைப் பற்றிக் கேட்பதற்காக ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்கள், "நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?" என்று கேட்டார்கள். நான், "எகிப்தியரில் ஒருவன்" என்று பதிலளித்தேன். அவர்கள், "உங்கள் ஆட்சியாளர் இந்தப் போரில் உங்களிடம் எப்படி நடந்துகொண்டார்?" என்று கேட்டார்கள். அதற்கு நான், "வெறுக்கத்தக்க அம்சங்கள் எதையும் நாங்கள் அவரிடம் காணவில்லை. எங்களில் ஒருவரது ஒட்டகம் இறந்து விட்டால், அவருக்கு அவர் ஒட்டகம் வழங்கினார். அடிமை இறந்துவிட்டால், அவருக்கு அடிமை தந்தார். செலவுக்குப் பணம் தேவைப்பட்டால் பணம் தந்தார்" என்று விடையளித்தேன். அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள், "அவர் என் சகோதரர் முஹம்மத் பின் அபூபக்ர் விஷயத்தில் நடந்துகொண்ட விதம், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து நான் செவியுற்ற ஒரு செய்தியைக் கூறவிடாமல் என்னைத் தடுக்காது" என்று கூறிவிட்டுப் பின்வருமாறு சொன்னார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னுடைய இந்த இல்லத்தில் வைத்து, "இறைவா! என் சமுதாயத்தாரின் விவகாரங்களில் ஒன்றுக்குப் பொறுப்பேற்றுக் கொண்ட ஒருவர், அவர்களைச் சிரமத்திற்குள்ளாக்கினால், அவரை நீயும் சிரமத்தில் ஆக்குவாயாக! என் சமுதாயத்தாரின் விவகாரங்களில் ஒன்றுக்குப் பொறுப்பேற்றுக் கொண்ட ஒருவர், அவர்களிடம் மென்மையாக நடந்து கொண்டால், நீயும் அவரிடம் மென்மையாக நடந்து கொள்வாயாக!" என்று கூறியதை நான் கேட்டுள்ளேன். (ஸஹீஹ் முஸ்லிம்) 6-  *புதிய சட்டம் கொண்டு வருவதில் உள்ள பாதகங்கள், தவறுகள் சுட்டிக்காட்டப்பட்டால் உடனே அதை ஒப்புக்கொண்டு திருத்தும் பக்குவம் இருக்க வேண்டும்.* திருமணத்தின்போது பெண்ணுக்கு கொடுக்கப்படும் மஹர் தொகையில் உச்ச வரம்பு விதித்து சட்டம் இயற்றிய உமர் [ரலி] அவர்கள்,  ஒரு பெண்ணின் சுட்டிக்காட்டலுக்கு இசைந்து தன் அதிகாரப்பூர்வமான சட்டத்தையே  திரும்பப்பெற்ற வரலாறு.... رَوَى أَبُو يَعْلَى فِي مُسْنَدِهِ الْكَبِيِرِ أَنَّهُ لَمَّا نَهَى عَنْ إِكْثَارِ الْمَهْرِ بِالْوَجْهِ الْمَذْكُورِ اعْتَرَضَتْهُ امْرَأَةٌ مِنْ قُرَيْشٍ فَقَالَتْ لَهُ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ نَهَيْتَ النَّاسَ أَنْ يَزِيدُوا النِّسَاءَ صَدُقَاتِهِنَّ عَلَى أَرْبَعِمِائَةِ دِرْهَمٍ قَالَ نَعَمْ فَقَالَتْ أَمَا سَمِعْتَ مَا أَنْزَلَ اللَّهُ فِي الْقُرْآنِ قَالَ وَأَيُّ ذَلِكَ فَقَالَتْ أَمَا سَمِعْتَ اللَّهَ يَقُولُ {وَآتَيْتُمْ إِحْدَاهُنَّ قِنْطَارًا فَلَا تَأْخُذُوا مِنْهُ شَيْئًا أَتَأْخُذُونَهُ بُهْتَانًا وَإِثْمًا مُبِينًا} [النساء: 20] قَالَ فَقَالَ اللَّهُمَّ غَفْرًا كُلُّ النَّاسِ أَفْقَهُ مِنْ عُمَرَ ثُمَّ رَجَعَ فَرَكِبَ الْمِنْبَرَ فَقَالَ إِنِّي نَهَيْتُ أَنْ تَزِيدُوا فِي الْمَهْرِ عَلَى أَرْبَعِمِائَةِ دِرْهَمٍ فَمَنْ شَاءَ أَنْ يُعْطِيَ مِنْ مَالِهِ مَا أَحَبَّ أَوْ فَمَنْ طَابَتْ نَفْسُهُ فَلْيَفْعَلْ وَسَنَدُهُ جَيِّدٌ - حاشية السندي على( سنن ابن ماجه) உமர் [ரலி] அவர்கள், 400 திர்ஹங்களைவிட மஹ்ரை அதிகம் தரக்கூடாது என்று மஹருக்கு உச்ச வரம்பு ஒன்றை விதித்தார்கள். அப்போது குறைஷி குலத்துப்பெண் ஒருவர், “அமீருல் முஃமினீன் அவர்களே! 400 திர்ஹங்களை விட மஹ்ரை அதிகம் தரக்கூடாது என்று மக்களைத் தடுத்துள்ளீர்களா?” என்று ஆட்சேபித்தார்கள். அதற்கு உமர் [ரலி] அவர்கள் “ஆம்” என்றார்கள். அப்போது அந்தப்பெண், “குர்ஆனில் அல்லாஹ் இறக்கியதை செவியுறவில்லையா?” என்றார்கள். அதற்கு உமர் [ரலி] அவர்கள் “அது என்ன?” என்று கேட்டார்கள். அதற்கு அப்பெண், “ஒரு பொருட்க குவியலையே [மஹராக] கொடுத்திருந்த போதிலும், அதிலிருந்து எதையும் (திரும்ப) எடுத்துக் கொள்ளாதீர்கள் - அபாண்டமாகவும், பகிரங்கமாகப் பாவகரமாகவும், அதனை நீங்கள் (திரும்பி) எடுக்கிறீர்களா? (அல்குர்ஆன் 4:20) என்று அல்லாஹ் கூற கேட்டதில்லையா?” என்றார்கள். உடனே உமர் [ரலி] அவர்கள் இறைவா! என்னை மன்னித்திடு!! உமரை விட அனைவரும் விளக்கமுள்ளவர்களாகத் தான் இருக்கிறாரகள் என்று கூறியவர்களாக திரும்பிச்சென்று மிம்பரில் ஏறி “400 திர்ஹங்களைவிட மஹ்ரை அதிகம் தரக்கூடாது என்று நான் உங்களைத் தடுத்தேன்; யார் எவ்வளவு விரும்புகிறாரோ அவ்வளவையும் மஹராக கொடுக்கலாம். [தவறில்லை. தடையில்லை]” என்று மறு அறிவிப்புச் செய்தார்கள். 7-    *அரசருக்கு எதிராக வழக்க தொடர முடியும்.* *தீர்ப்பும் அரசருக்கு எதிராக அமையலாம் நீதியின் அடிப்படையில்.* *நிலம் கையகப்படுத்துவதிலும் பக்குவமான அணுகுமுறை வேண்டும்* ஹிஜ்ரி 17 –ஆம் ஆண்டு, உமர் (ரலி)ஆட்சிப்பொறுப்பிற்கு வந்து நான்காண்டுகள் உருண்டோடி விட்டது. இஸ்லாம் மெல்ல, மெல்ல அருகே இருக்கும் நாடுகளுக்கும் பரவிக் கொண்டிருந்த இனிமையான தருணம் அது... மஸ்ஜிதுன் நபவீ உள்ளூர் மற்றும் வெளியூர் முஸ்லிம்களின் கூட்ட நெரிசலால்ச சிக்கித் தவித்துக் கொண்டிருப்பதைஉணர்ந்த உமர் (ரலி) அவர்கள் பள்ளியை விஸ்தரிக்க நாடி அதற்காக, பள்ளியைச் சுற்றி இருக்கிற நபித்தோழர்களின் வீட்டை இடித்து, அந்த இடத்தையும் சேர்த்து கட்டினால் தான் பள்ளியை விரிவாக்கம்செய்ய முடியும் என்ற நிலையையும் உணர்ந்தார்கள்.பள்ளியைச் சுற்றிலும் ”உஸாமா (ரலி), ஜைத் இப்னு ஹாரிஸா (ரலி), அப்துல்லாஹ்இப்னு ஜஅஃபர் இப்னு அபூதாலிப் (ரலி), அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) ஸஅத் இப்னுஅபீ வக்காஸ் (ரலி),  அப்துர்ரஹ்மான் இப்னுஅவ்ஃப் (ரலி), மற்றும் அப்துல்லாஹ் இப்னுஅப்பாஸ் (ரலி),  அப்துர்ர்ஹ்மான் இப்னு அபூபக்ர்(ரலி), முஹம்மத் இப்னு அபூபக்ர் (ரலி), முஃமின்களின் அன்னையர் நபி {ஸல்} அவர்களின் தூய மனைவியர் ஆகியோரின் வீடுகள் இருந்தன. உமர் (ரலி) அவர்கள், முஃமின்களின் அன்னையர் வீட்டை மட்டும் விட்டு விட்டு மற்றெல்லோரின் வீடுகளையும், இடங்களையும் வாங்கிட முடிவெடுத்தார்கள். வீட்டின் உரிமையாளர்கள் அனைவரையும் அழைத்து “ நீங்கள் உங்கள் வீட்டை விலைக்கு கொடுத்தீர்கள் என்றால் அதற்குப் பகரமாக மதீனாவின் இன்னொரு இடத்தில் ஒரு வீட்டையோ, அல்லது அதற்கான கிரயத்தையோ முழுமையாகப் பெற்றுக் கொள்ளலாம். அல்லது நீங்கள் விரும்பினால் அரசுக்கு அன்பளிப்பாக தரலாம். அரசும் உங்களை நன்றியுணர்வுடன் நடத்தாட்டும். அல்லது நீங்கள் விரும்பினால் அல்லாஹ்விற்காக தருமமாகத் தந்திடுங்கள். கூலி வழங்குவதற்கு அல்லாஹ் போதுமானவனாக இருக்கின்றான்” என்று கூறினார்கள். இதைக் கேட்ட மாத்திரத்தில் அப்துல்லாஹ் இப்னு ஜஅஃபர் இப்னு அபூதாலிப் (ரலி) அவர்களும், அபூபக்ர் ஸித்தீக் (ரலி) அவர்களின் இரு மகன்களும் தங்களின் வீடுகளையும், நிலங்களையும் அல்லாஹ்விற்காக தர்மம் செய்துவிட்டார்கள். மற்ற நபித்தோழர்களில் சிலர் கிரயத்தையும், இன்னும் சிலர் மதீனாவின் பிற பகுதியில் நிலத்தையும் பெற்றுக் கொண்டு அவர்கள் வசித்த வீட்டையும், நிலத்தையும் அரசிடம் ஒப்படைத்தனர். இந்த நிகழ்வு நடைபெறுகிற போது, அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் ஊரில் இல்லை. ஊரிலிருந்து வந்த உடன் உமர் (ரலி)அவர்கள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களைச் சந்தித்து மற்ற வீட்டின் உரிமையாளர்களிடம் பேசியது போன்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமும் பேசினார்கள்.ஆனால், இப்னு அப்பாஸ் (ரலி)அவர்களோ மறுத்து விட்டார்கள். அதற்கு உமர் (ரலி) அவர்கள் ”நீர் இடம் தரவில்லையானால் அரசு உம்முடைய நிலத்தை தம் அதிகாரத்தைக் கொண்டு கைப்பற்றிக் கொள்ளும்!” என்று கூறினார்கள். இருவருக்கும் பேச்சு முற்றவே, வழக்காக நீதிமன்றத்தில் தொடுத்தார்கள் இப்னுஅப்பாஸ் (ரலி) அவர்கள் நீதிபதி உபை இப்னு கஅப் (ரலி) அவர்கள் இருவரின் வாதப் பிரதிவாதங்களையும் கேட்டு விட்டு...உமர் (ரலி) அவர்களை நோக்கி “உமர் (ரலி) அவர்களே!  நபி [ஸல்] அவர்கள் கூற நான் கேட்டிருக்கின்றேன்.... “அல்லாஹ் நபி தாவூத் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களிடம் பைத்துல் முகத்தஸை  கட்ட ஆணை பிறப்பித்தான். முதற்கட்டமாக அதற்கான இடத்தை தெரிவு செய்யும் பணியை மேற்கொண்டவர்கள் தாவூத் ( அலை)அவர்கள் தான் அங்கே இஸ்ரவேலர்களில் ஒருவருக்குச் சொந்தமான ஓர் இடம் இருப்பதைக் கண்டு அதை இறையில்லம் கட்ட இடம் தேவைப்படுவதால் தம்மிடம் விலைக்கு தந்து விடுமாறு விலை பேசினார்கள்.ஆனால், அவரோ தரமுடியாது என்று மறுத்து விட்டார். அதற்கு தாவூத் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள்... “மனதிற்குள் இப்படிச் சொல்லிக் கொண்டார்களாம் “நீ தராவிட்டால் என்ன? நான் எடுத்துக்கொள்கிறேன்” என்று. உடனடியாக, அல்லாஹ் தாவூத்(அலை) அவர்களிடம் வஹீ மூலம் “என்னை வணங்குவதற்காகக் கட்டப்படுகிற ஆலயம் என்பது ஆக்கிரமிப்பு, அபகரிப்பு, மோசடி ஆகிய குற்றங்களிலிருந்து நீங்கி பரிசுத்த பூமியாய் இருக்கவேண்டும்” என்று அறிவித்தான். பின்னர், அதற்கான இழப்பீடைக் கொடுத்து அந்த இடத்தை வாங்கி பைத்துல் முகத்தஸின் கட்டுமானப்பணியை துவக்கினார்கள் தாவூத் (அலை) அவர்கள்” ஆகவே, உமர் அவர்களே! சற்று நிதானித்து முடிவெடுங்கள்”என்றார்கள். இதைக் கேட்டதும், உமர் (ரலி) அவர்கள் இப்னு அப்பாஸ் அவர்களே! உம்முடைய வீடும் வேண்டாம், உம்முடைய நிலமும் வேண்டாம். இரண்டையும் அதிகாரத்தைக் கொண்டு நான் ஒரு போதும் அபகரிக்க மாட்டேன்”என்றார்கள். அதற்கு, இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள்உமர் (ரலி) அவர்களிடம் “உமர் (ரலி) அவர்களே! ஒரு மனிதனுக்கு இஸ்லாம் வழங்கியிருக்கிற உரிமையை அவர் எந்தளவுக்கு பயன்படுத்த முடியும் என்பதைக் காட்டுவதற்காகத் தான் நான் இவ்வாறு செய்தேன். மேலும், உங்களை விட மஸ்ஜிதுன் நபவீயின் விரிவாக்கத்தில் அதிக நாட்டமுடையவன் நான். எனவே, எந்தப் பிரதி பலனையும் நாடாமல் இதோ என் வீட்டையும், நிலத்தையும் உங்களிடம் தருகின்றேன்” என்றார்கள். (நூல் : வஃபாவுல் வஃபா) *நல்லாட்சியின் இலக்கணமாக அமைந்த உமர் [ரலி] அவர்களின் ஆட்சி...* عن أسلم أن عمر رضي الله عنه طاف ليلة فإذا هو بامرأة في جوف دار لها وحولها صبيان يبكون وإذا قدر على النار قد ملأتها ماء فدنا عمر من الباب فقال: يا أمة الله! ما بكاء هؤلاء الصبيان؟ قالت: بكاؤهم من الجوع، قال: فما هذه القِدر التي على النار؟ قالت: قد جعلت فيها ماء هو ذا أعللهم به حتى يناموا وأوهمهم أن فيها شيئا دقيقا فبكى عمر ثم جاء إلى دار الصدقة وأخذ غرارة وجعل فيها شيئا من دقيق وشحم وسمن وتمر وثياب ودراهم حتى ملأ الغرارة ثم قال: يا أسلم! اِحْمِل علي، فقلتُ: يا أمير المؤمنين! أنا أحمله عنك؟ فقال لي: لا أم لك يا أسلم! أنا أحمله لأني أنا المسؤول عنهم في الآخرة، فحمله حتى أتى به منزل المرأة، فأخذ القدر فجعل فيها دقيقا وشيئا من شحم وتمر وجعل يحركه بيده وينفخ تحت القدر، فرأيت الدخان يخرج من خلل لحيته حتى طبخ لهم، ثم جعل يغرف بيده ويطعمهم حتى شبعوا! ثم خرج وربض بحذائهم حتى كأنه سبع، وخفت أن أكلمه، فلم يزل كذلك حتى لعب الصبيان وضحكوا، ثم قام فقال: يا أسلم! تدري لم ربضت بحذائهم؟ قلت لا، قال: رأيتهم يبكون فكرهت أن أذهب وأدعهم حتى أراهم يضحكون، فلما ضحكوا طابت نفسي (كنز العمال) உமர் ரலி அவர்களின் பணியாளர் அஸ்லம் ரஹ் அவர்கள் அறிவிக்கிறார்கள்....ஒரு நாள் உமர் ரலி அவர்கள் இரவில் மக்களின் நிலையை அறிய ரோந்து வந்தார்கள் அப்போது ஒரு வீட்டு வளாகத்தில் ஒரு பெண் அவளைச் சுற்றி குழந்தைகள் அழுது கொண்டிருந்தார்கள். அந்த பெண்ணுக்கு முன்னால் தண்ணீர் நிரப்பப்பட்ட பாத்திரம் இருந்தது கீழே நெருப்பு மூட்டப்பட்டு எரிந்து கொண்டிருந்தது. அதைப் பார்த்த உமர் ரலி அவர்கள் விசாரித்த போது அந்த பெண்மணி குழந்தைகள் பசியால் அழுது கொண்டிருக்கின்றன அந்தப் பிள்ளைகளுக்கு கொடுக்க உணவு இல்லாததால் நெருப்பை மூட்டி தண்ணீர் நிரப்பப்பட்ட பாத்திரத்தை வைத்திருக்கிறேன் இதைப் பார்த்து நமக்கு ஏதோ உணவு தயாரிக்கப்படுகிறது என்று எண்ணி குழந்தைகள் தூங்கி விடுவார்கள்....என்று கூறினாள். இதைக் கேட்ட உமர் ரலி அவர்களின் கண்களில் கண்ணீர் வழிந்தது. உடனே தனது பணியாளரை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்து பைத்துல் மாலிலிருந்து கொஞ்சம் மாவு, கொழுப்பு, பேரீத்தம்பழங்கள், நெய், ஆடைகள், சில திர்ஹங்களை ஒரு பையில் போட்டு அதை தன் முதுகில் தூக்கி வைக்கும் படி தனது பணியாளரிடம் கூறினார்கள். அதற்கவர் நானே சுமந்து வருகிறேன் என்றார். ஆனால் உமர் ரலி அவர்கள் என் ஆட்சியில் நடந்த காரியங்களுக்கு நான் தான் மறுமையில் கேள்வி கேட்கப்படுவேன் என்று தானே சுமந்து வந்தார்கள்.பின்பு அந்தப் பாத்திரத்தில் சிறிது மாவு, கொழுப்பு, பேரீத்தம்பழங்களை போட்டு கொதிக்க வைத்து தன் கரத்தாலே சமைத்தார்கள், அடுப்பூதினார்கள் புகை அவர்களின் அடர்ந்த தாடியினூடே வருவதை நான் பார்த்தேன். சிறிது நேரத்தில் பாயாசம் போன்ற ஒரு உணவு தயாரானது அதை தன் கரத்தாலே அந்தப் பெண்மணிக்கும் குழந்தைகளுக்கும் பரிமாறினார்கள் அவர்கள் வயிறு நிறைந்த பிறகு அந்த பிள்ளைகளோடு விளையாடினார்கள். அந்தப் பிள்ளைகள் சிரிப்பதை பார்த்து விட்டு வந்து நான் ஏன் அந்த பிள்ளைகளோடு விளையாடினேன் தெறியுமா? அந்தப் பிள்ளைகள் அழுவதை பார்த்த நான் சிரிப்பதையும் பார்த்து என் உள்ளம் சாந்தியடைய ஆசைப்பட்டேன் என்றார்கள். இறைவனை விசுவாசங்கொண்டு அவனை அஞ்சி வாழும் ஒருவருடைய ஆட்சியோ அல்லது அத்தகையோரின் ஆட்சி முறையை முன்மாதிரியாக கொண்டவரின் ஆட்சியோ நடக்காவிட்டால் மக்கள் நலன் பேணும் நல்லாட்சியாக அது இருக்க வாய்ப்பில்லை. *தேர்தல் / ஓட்டுரிமை மிகச் சரியாக பயன்படுத்துவது கடமை.* அதே சமயம் அநியாயக்கார  ஆட்சியை பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்கவும் நமக்கு அனுமதியில்லை . அதை தடுத்து நிறுத்தி நல்லாட்சி அமைய நாம் உறுதுணையாக இருக்க வேண்டும். நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறியுள்ளார்கள் ١- [عن أبي بكر الصديق:] قال أبو بكر، رضي الله عنه وإنا سمعنا النبي ﷺ يقول: إن الناس إذا رأوا الظالم فلم يأخذوا على يديه أوشك أن يعمهم الله بعقاب وإني سمعت رسول اللهِ ﷺ يقول: ما من قوم يعمل فيهم بًالمعاصي، ثم يقدرون على أن يغيروا، ثم لا يغيروا إلا يوشك أن يعمهم الله منه بعقاب (رواه أبو داود (٢٧٥ هـ) "மக்கள் அநியாயக்கார (அரச)னை பார்த்து அவனுடைய கையை பிடித்து தடுக்காவிட்டால் அல்லாஹ் அவர்கள் எல்லோரையும் வேதனையைக் கொண்டு பிடிப்பான்" என்று நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூற நாங்கள் கேட்டோம் என அபூபக்கர் சித்திக் ரலி  அவர்கள் அறிவித்தார்கள் இன்னும் அவர்கள் அறிவித்தார்கள் நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூற நான் கேட்டேன் " எந்த கூட்டத்தினர் அவர்களில் பாவங்கள் நடைபெற அதைத்  தடுப்பதற்கு சக்தியிருந்தும் அதைத் தடுத்து நிறுத்தவில்லையோ அல்லாஹ் அவர்களுக்கு தண்டனையை பொதுவாக்கி விடுவான்" (நூல் அபூதாவூத்) அல்லாஹ் திருமறையில் கூறியுள்ளான். وَلَا تَكۡتُمُواْ ٱلشَّهَٰدَةَۚ وَمَن يَكۡتُمۡهَا فَإِنَّهُۥٓ ءَاثِمٞ قَلۡبُهُۥۗ وَٱللَّهُ بِمَا تَعۡمَلُونَ عليم⭕ அன்றியும், நீங்கள் சாட்சியத்தை மறைக்க வேண்டாம் - எவன் ஒருவன் அதை மறைக்கின்றானோ நிச்சயமாக அவனுடைய இருதயம் பாவத்திற்குள்ளாகிறது - இன்னும் நீங்கள் செய்வதையெல்லாம் அல்லாஹ் நன்கறிவான். (அல்குர்ஆன் 2: 283) வாக்களிப்பதும் சாட்சியம் சொல்வது தான் அதை மறைப்பதோ மறுப்பதோ நமக்கு அழகில்லை குறிப்பாக நாமும் நம் வருங்கால வாரிசுகளும் இந்த மண்ணில் நிம்மதியாக மார்க்கச் சட்ட திட்டங்களை பின்பற்றி வாழ்வதற்கு நம் எதிரிகள் ஆட்சிக்கு வருவதை தடுக்க வேண்டிய கடமை நமக்குள்ளது. மேலும் முஸ்லிம்கள் பல அணியாக பிரிந்து செயல்படுவது நம்மை வைத்து பிறர் வாழ்வதற்கு வழிவகுக்குமே தவிர நாம் நினைக்கும் ஆட்சி முறையை கொண்டு வர முடியாது எனவே நாம் ஓரணியாக செயல்பட்டு நல்லாட்சி அமைய பாடுபடுவோம். ربنا لا تسلط علينا من لا يخافك فينا ولا يرحمنا ... வல்ல அல்லாஹ் அவனது மாபெரும் கிருபையால் நம் மீது கருணை காட்டாத நம் விஷயத்தில் அல்லாஹ்வை பயப்படாத எந்த ஆட்சியாளனையும் நம் மீது ஆதிக்கம் செலுத்திடாமல் பாதுகாப்பானாக ஆமீன் யாரப்பல் ஆலமீன்.

நன்றி
DAWOODI AALIMKAL SANGAMAM

рокிро░рокро▓்ропрооாрой рокродிро╡ுроХро│்