நம்முடன் இணைந்து இருப்பவர்கள்

வெள்ளி, ஏப்ரல் 05, 2024

ஸதகத்துல் பிஃத்ர் ,

கத்துல் ஃபித்ர் என்றால் என்ன?


நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஸதகத்துல் ஃபித்ரை நோன்பாளிடமிருந்து ஏற்பட்ட வீணான காரியங்கள், தீய வார்த்தைகளை விட்டு தூய்மைப்படுத்தவும் ஏழைகளுக்கு உணவாகவும் கடமையாக்கினார்கள்.


🔗 *ஸதகத்துல் ஃபித்ர் கடமையாவதற்கான நிபந்தனைகள்*


1. முஸ்லிமாக இருக்க வேண்டும். 


2. நிஸாபை அடைந்து இருக்க வேண்டும் அதாவது, தங்கம் 87.480 கிராம் ( _சுமார் 11 பவுன்_ ), வெள்ளி 612 கிராம் அல்லது வெள்ளியின் மதிப்பளவுள்ள தொகை. ( *தற்சமயம் வெள்ளி ஒரு கிராம் 80 ரூபாய் வீதம் ரூ.48,960/-* ) பணமாகவோ, வியாபார சரக்காகவோ தனக்கு தரவேண்டிய கடனாகவோ இருந்தால் அவர் மீது ஸதகத்துல் ஃபித்ர் கடமையாகும்.


3. ஸதகத்துல் பித்ர், ஈதுப் பெருநாள் தினத்தில் ஃபஜ்ருடைய நேரம் வரும் போது கடமையாகும்.


📌 *எப்போது கொடுக்க வேண்டும்?* 


ஸதகத்துல் பித்ர், ஈதுப் பெருநாள் தினத்தில் ஈத்காவிற்கு செல்வதற்கு முன்பாக நிறைவேற்றி விடுவது முஸ்தஹப்பாகும்.

( *குறிப்பு* : _பெருநாள் தினத்திற்கு இரண்டு, மூன்று நாட்களுக்கு முன் கொடுப்பதும் கூடும்_ )


➡️ *யார் யாருக்காக கொடுக்க வேண்டும்?* 


ஸதகத்துல் ஃபித்ர் ஒருவர் *தனக்காகவும், தன்னுடைய வீட்டில் உள்ள சிறிய பிள்ளைகளுக்காகவும்* கொடுக்க வேண்டும்.


➡️ *எவ்வளவு கொடுக்க வேண்டும்?*


 *1 கிலோ 633 கிராம்* கோதுமை அல்லது அதற்கான கிரயம். இவ்வாண்டு அதன் கிரயம் *90 ரூபாய்* என நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.


🔗 *ஸதகத்துல் ஃபித்ர் யாருக்கு கொடுக்க வேண்டும்?*


ஜகாத் வாங்க தகுதி உள்ளவர்களுக்கு ஸதகத்துல் ஃபித்ர் கொடுக்க வேண்டும்.


 *அதன் விபரமாவது:* 


1️⃣ *மிஸ்கீன்* : எதுவும் இல்லாத ஏழை.


2️⃣ *ஃபகீர்* : ஜகாத் உடைய நிசாப் அளவு நகையோ, பணமோ, வியாபார சரக்கோ கையிருப்பு இல்லாதவர்.


3️⃣ *கடனாளி:* கொடுக்க வேண்டிய கடன் போக மேல் மிச்சமாக நிசாப் அளவு பணம் இல்லாதவர்.


4️⃣ *பிரயாணி* : பயணத்தில் வந்த இடத்தில் கை செலவுக்கு பணம் இல்லாமல் தவிப்பவர். அல்லது பணத்தை தவற விட்டு ஊருக்கு திரும்பி செல்ல வழியின்றி சிரமப்படுபவர். இத்தகையோர் சொந்த ஊரில் வசதியுள்ளவர்களாக இருந்தாலும் ஜகாத் தொகை பெறுவது கூடும்.


5️⃣ *ஜகாத் வசூலிப்பவர்* : ஏழைகள் மற்றும் வசதியற்ற மாணவர்களுக்காக ஜகாத் தொகையை வசூல் செய்யும் நபருக்கு அவரது உழைப்பிற்கு தோதுவாக ஜகாத் தொகையிலிருந்து ஊதியம் பெறுவது ஆகுமானதாகும்.


 *குறிப்பு* : _ஸதகத்துல் ஃபித்ருக்கு ஜகாத்தை போல நிசாப் ஒரு வருடம் கடந்திருக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை._ 


ஸகாதுல் ஃபித்ர்’ என்பது ரமழானின் நோன்பு முடிய ஓரிரு தினங்களுக்கு முன்பிருந்து, பெருநாள் தொழுகைக்காக மக்கள் செல்வதற்கு முன்னர் வரை ஒவ்வொரு முஸ்லிமும் செலுத்தவேண்டிய கட்டாய தர்மத்தைக் குறிக்கும். ஒருவர் தனது பொறுப்பில் இருக்கும் சிறு பிள்ளை, பெற்றோர், அடிமை உட்பட அனைவருக்குமாக இந்த கட்டாய ஸகாத்தை வழங்கியாக வேண்டும்.

எவ்வளவு? எவர்களுக்காக?

‘ரமழானில் இருந்து விடுபடுமுகமாக ‘ஸகாத்துல் பித்ரை’ அனைத்து மனிதர்கள் மீதும் நபி(ஸல்) அவர்கள் கடமையாக்கினார்கள். ஒரு ‘ஸாஉ’ பேரீத்தம்பழம் அல்லது ஒரு ‘ஸாஉ’ கோதுமை சுதந்திரமானவன், அடிமை, ஆண், பெண் அனைத்து முஸ்லிம்களுக்காகவும் வழங்க வேண்டும் என விதித்தார்கள்’
அறிவிப்பவர் : அலி இப்னு உமர்(ஸல்),
நூற்கள் :புகாரி, முஸ்லிம், முஅத்தா.

”ஒரு ‘ஸாஉ’ உணவு, அல்லது ஒரு ‘ஸாஉ’ கோதுமை, அல்லது ஒரு ‘ஸாஉ’ பேரீத்தம் அல்லது ஒரு ‘ஸாஉ’ தயிர் அல்லது ஒரு ‘ஸாஉ’ வெண்னை என்பவற்றை ஸகாதுல் ஃபித்ராவாக நாம் வழங்குபவராக இருந்தோம்’ என அபூ ஸயீதில் குத்ரி (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (புகாரி, முஸ்லிம்).

‘ஸாஉ’ என்பது நடுத்தரமான ஒரு மனிதரின் கைகளால் நான்கு அள்ளு அள்ளி வழங்குவதைக் குறிக்கும். இது அறபுகளிடம் காணப்பட்ட ஒரு அளவீட்டு முறையாகும். சாதாரணமாக அரிசி என்றால், ஒரு ‘ஸாஉ’ என்பது 2.3 kg. ஐக் குறிக்கும் என்பர்.

இந்த அளவு உணவையோ, உணவுத் தானியத்தையோ வழங்கவேண்டும். பெருநாள் செலவு போக மீதமிருக்கும் அளவு பொருளாதாரம் உள்ள அனைவரும் இதை வழங்கவேண்டும். ஒருவர் தனது பொறுப்பிலுள்ள அனைவருக்காகவும் இதை வழங்கவேண்டும்.

உதாரணமாக, ஒருவரிடம் மூன்று பிள்ளைகள், ஒரு மனைவி இருக்க, அவரது பொறுப்பில் அவரது பெற்றோர்களுமிருந்தால் தனது மூன்று பிள்ளைகள், தான், தனது மனைவி, பெற்றோர் இருவரும் என மொத்தமாக ஏழு பேர்களுக்காக ஏழு ‘ஸாஉ’ உணவு வழங்க வேண்டும். எனவே, இந்த ஸகாத் அனைவர் மீதும் விதியாகின்றது! சிறுவர்கள், வாய்ப்பற்ற முதியவர்கள் என்பவர்களுக்கும் விதியாகின் றது. அதை அவர்களது பொறுப்புதாரிகள் நிறை வேற்ற வேண்டும்.

எப்போது? எதற்காக!

‘நோன்பாளி வீண் விளையாட்டுக்கள், தேவையற்ற பேச்சுக்கள் போன்றவற்றில் ஈடுபட்டிருந்தால், அதற்குப் பரிகாரமாக அமைவதற்காகவும் ஏழைகளுக்கு உணவாக அமைவதற்காகவும்’ ‘ஸகாதுல் பித்ரை’ நபி(ஸல்) அவர்கள் கடமையாக்கினார்கள்.

‘யார் பெருநாள் தொழுகைக்கு முன்னர் அதை வழங்கினாரோ, அது ஏற்றுக் கொள்ளப்பட்ட ‘ஸகாத்’தாகும். யார் தொழுகைக்குப் பின்னர் அதை வழங்கினாரோ அது (சாதாரணமாக) வழங்கப்பட்ட ஒரு தர்மமாகக் கணிக்கப்படும்’ என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ (அபூ தாவூத், இப்னு மாஜா).

இந்த நபி வழி ‘ஸகாதுல் பித்ரா’வின் நோக்கம், அது வழங்கப்பட வேண்டிய கால எல்லை என்பவற்றை விபரிக்கின்றது.

நோன்பாளிக்கு நோன்பில் ஏற்பட்ட குறைகளுக்குப் பரிகாரம் என்பது முதல் காரண மாகும்.

நோன்பு கடமையான சிறுவர்களுக்காகவும் ‘ஸகாதுல் ஃபித்ர்’ வழங்கப்பட வேண்டும். இவர்களுக்கு முதல் காரணம் பொருந்தாவிட்டாலும், பெருநாள் தினத்தில் ஏழை, எளியவர்கள் யாரும் உண்ண உணவு இன்றி இருக்கக் கூடாது, என்பது இரண்டாவது காரணமாகும். இது இவர்களுக்கும் பொருந்தும்.

இதனை பெருநாள் தொழுகைக்காக மக்கள் வெளியேறுவதற்கு முன்னர் வழங்கிவிட வேண்டும். இது வழங்கப்பட வேண்டிய நேரத்தின் இறுதிக் காலமாகும். பெருநாளைக்கு ஓரிரு தினங்களுக்கு முன்னர், இதனை வழங்குபவராக இப்னு உமர்(ரலி) அவர்கள் திகழ்ந்தார்கள். (அபூதாவூத்).

மற்றுமொரு அறிவிப்பில், இது ஸஹாபாக்களின் நடைமுறையாக இருந்தது என்ற கருத்தைப் பெறமுடிகின்றது. ‘அதை பெற்றுக் கொள்பவர்களுக்கு நாம் வழங்குபவர்களாக இருந்தோம். நபித்தோழர்கள் பெருநாளைக்கு ஓரிரு தினங்களுக்கு முன்னர் அதை வழங்கு பவர்களாக இருந்தார்கள்.’ (புகாரி)

எனவே, பெருநாளைக்கு ஓரிரு தினங்க ளுக்கு முன்னர் இருந்து இதை வழங்க ஆரம் பிக்கலாம்.

எங்கே? எவர்களுக்கு?

‘ஸகாதுல் பித்ரை’ அவரவர் வகிக்கும் பகுதிக்கே விநியோகிக்க வேண்டும். அதுவும் ஏழை எளியவர்களுக்கு மட்டுமே விநியோகிக்க வேண்டும். நபி(ஸல்) அவர்கள் இதை கூட்டாக சேகரித்து வழங்கியுள்ளார்கள். சிலர் ‘ஸகாதுல் பித்ரா’ என்ற பேரில் ‘பித்ரா’ கேட்டு வருகின்றனர். இவர்களுக்கு ‘பித்ரா’ வழங்குவது பொருத்தமல்ல. சொந்த ஊரிலுள்ள ஏழைகளுக்கு வழங்கி மீதமிருந்தால் வெளியூர் ஏழைகளுக்கு வழங்கலாம். அஃதின்றி வெளியூர்களிலிருந்து ‘பித்ரா’ கேட்டு வருபவர்களுக்கு ஒரு சுண்டு இரு சுண்டு அரிசி அல்லது சில்லறை வழங்குவது ‘பித்ரா’வில் அடங்குமா என்பது சிந்திக்க வேண்டியதாகும்.

எதை வழங்குவது?

‘ஸகாதுல் பித்ரா’வாக ஒரு ‘ஸாஉ’ உணவுக்கான பணத்தை வழங்க முடியுமா? எனற விடயத்தில் இஸ்லாமிய அறிஞர்களுக்கு மத்தியில் அபிப்பிராய பேதம் நிகழ்கின்றது.

பெரும்பாலான அறிஞர்கள் உணவுப் பொருளையே வழங்க வேண்டும் என்கின்றனர். இது ஒரு இபாதத்தாக இருப்பதால் இபாதத்தை ஏவப்பட்ட விதத்தில் பகுத்தறிவுக்கு இடம் கொடுக்காமல் செய்வது தான் சரியானது என்ற அடிப்படையில் இக்கருத்தை முன்வைக்கின்றனர்.

பணத்தையும் ‘பித்ரா’வாக வழங்கலாம் எனக்கூறுவோர் ஏழைகளுக்கு இது நன்மையாக அமையும் என்ற காரணத்தைக் கூறி இதை ஆமோதிக்கினறனர். இமாம் அபூ ஹனீபா (ரஹ்) அவர்கள் இக்கருத்தைக் கொண்டுள்ளார்.

இதில் முதல் கருத்தே மிகவும் பொருத்தமானதாகத் திகழ்கின்றது. இமாம் அஹ்மத் இப்னு ஹன்பலின் மகன் ‘எனது தந்தை ‘ஸகாதுல் பித்ரா’வுக்குப் பகரமாக அதன் அளவுக்குப் பணம் வழங்கப்படுவதை வெறுப்பவராக இருந்தார். பணம் வழங்கப்பட்டால் அது ஏற்றுக்கொள்ளப்படாமல் போகலாமோ என நான் அஞ்சுகின்றேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
(அல் மஸாயினுல் இமாம் அஹ்மத்., பக். 171 அல்மஸஅலா., 647)

இமாம் இப்னு குதாமா அவர்களும் இது அங்கீகரிக்கப்படாது ‘தவி முஃனி’யில் குறிப்பிடுகின்றார்.

இமாம் ஷவ்கானி அவர்களும் குறிப்பிட்ட பொருளிலிருந்து தான் ‘ஸகாதுல் ஃபித்ர்’ வழங்கப்பட வேண்டும். குறித்த பொருள் இல்லாத போது, அல்லது ஏதேனும் ஒரு நிர்ப்பந்தத்தால் அன்றி அதன் பெறுமதிக்குப் பணம் வழங்க முடியாது என்ற கருத்தை வலியுறுத்துகின்றார்கள். குறித்த ஒவ்வொன்றிலிருந்தும் ஒரு ‘ஸாஉ’ வழங்கப்படவேண்டும் என்று கூறப்பட்டதிலிருந்து ‘ஸாஉ’ என்ற அளவு தான் முக்கியம். அதன் பெறுமதி கவனத்தில் கொள்ளப்பட மாட்டாது என்பது புலப்படுகின்றது என இமாம் நவவி (ரஹ்) அவர்கள் ‘ஷரஹ் ஸஹீஹ் அல் முஸ்லிமில் குறிப்பிடுகின்றார்கள். அத்துடன் ‘அல் மஜ்முஉ’விலும் இக்கருத்தை விளக்கியுள்ளார்கள்.

இமாம் அபூ ஹனீபா அவர்கள்தான் பணத்தை வழங்கலாம் என்று கூறியுள்ளார்கள். ஏனைய அறிஞர்கள் உணவுத் தானியங்களை வழங்க வேண்டும் என்றும், ஏதேனும் நிர்ப்பந்தம் இருந்தால் மட்டும் பணத்தை வழங்கலாம் என்றும் கூறியுள்ளனர்.

ஒரு ஆட்டை அல்லது மாட்டை ஸகாத் கொடுக்கவேண்டும் எனும் போது, அதன் பெறுமதியைக் கொடுப்பது கூடாது என்பது போல், இதுவும் கூடாது என சில அறிஞர்கள் வாதிடுகின்றனர். இவ்வாறே, இமாம் இப்னு ஹஜர் அவர்கள் குறித்த பொருட்களின் அளவு ஒரே அளவாக இருந்தாலும் பணமாக கணக்கிடும் போது, அதன் அளவுகள் மாறுபடும். எனவே,

(1) ‘ஸகாத்துல் ஃபித்ர்’ இபாதத்தாக இருப்பதால் அதைக் குறிப்பிட்ட விதத்திலேயே செய்ய வேண்டும்.

(2) ஏழைகளின் நலன் நாடியே பணத்தை வழங்கலாம் என்று கூறப்படுகின்றது. தெளிவான ஆதாரம் இருக்கும் போது, ‘இஜ்திஹாத்’ செய்வதற்கு இடம் இல்லை.

(3) நபித்தோழர்களுக்கு மத்தியில் ஏராளமான ஏழைகள் இருந்தபோதும், அவர்கள் உணவுத் தானியங்களையே வழங்கினர். பணத்தை வழங்கவில்லை. எனவே, இது பின்னால் வந்ததொரு கருத்தாகவும், நடைமுறையாகவும் திகழ்கின்றது.

(4) நபி(ஸல்) அவர்களும், கலீபாக்களும் உணவு வழங்கிய நடைமுறைக்கு இது முரண்பட்டதாகும். நிர்ப்பந்த நிலைகளில் அனுமதிக்கப்பட்ட பணம் வழங்கலாம் என்ற கருத்து இன்று ‘பித்ரா’ வாகப் பணம் தான் வழங்கப்படவேண்டும் என்ற அளவுக்கு, சுன்னாவை மிஞ்சி வளர்ந்துவிட்டது.

எனவே ‘பித்ரா’வை உணவாகவே வழங்க வேண்டும். என்றாலும் நிர்ப்பந்தமான, தவிர்க்க முடியாத நிலையில் இருப்பவர்கள் மட்டும் மாற்று வழிகளைக் கைக்கொள்ளலாம்.

ஒரு ஆலோசனை:

ஏழைகளுக்கு உணவை வழங்குவது அவர்களுக்குப் போதியதாக இருக்காது என்று கருதுபவர்கள் ‘பித்ரா’வாக குறித்த அளவுக்கு உணவை வழங்கி விட்டு மேலதிக தர்மமாக வேண்டுமானால் பணத்தையோ, வேறு பொருட்களையோ வழங்கலாம். பணத்தை ‘ஸகாதுல் பித்ரா’வாக ஆக்காமல், உணவை ‘ஸகாதுல் பித்ரா’வாக ஆக்கி, பணத்தை மேலதிக தர்ம மாக ‘ஸதகா’வைச் செய்யலாம். இது அவசியம் என்பதற்காகக் கூறப்படவில்லை. அதிக வசதியுள்ளவர்கள், ஏழைகள் மீது அனுதாபம் கொண் டவர்கள் அதற்காக மார்க்க நிலைப்பாட்டில் மாற்று முடிவு எடுக்காது, செயல்படுவதற்காகவே இவ்வாலோசனையாகும்

நபி ஈஸா அலை அவர்கள் வரலாறு ,

நபி ஈசா  (அலை) அவர்கள் வரலாறு :-

பிஸ்மில்லாகிர் ரஹ்மானிர் ரஹீம்
அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ

என் அன்பு சகோதர சகோதரிகளே நாம் இப் புனிதமிக்க ரமலான் மாதத்தில் நபிமார்கள் வாழ்க்கை வரலாறு பற்றி பார்த்து வருகின்றோம் நாம் முன்னைய நபிமார்கள் வரலாற்றில் நேற்றைய தினம்  நபி ஈசா  (அலை) அவர்கள் தாயார் மர்யம்   (அலை) அவர்கள் வாழ்க்கை வரலாறு பற்றி பார்த்தோம். மேலும் இன்றைய தினம் இன்ஷா அல்லாஹ் அவர்கள் புதல்வன்  நபி ஈசா (அலை) அவர்களது வாழ்க்கை வரலாறை காண்போம் இன்ஷா அல்லாஹ்.

நபி ஈசா  (அலை) அவர்கள் வரலாறு :-

யஹோஷுவா என்பதே ஈஸா என்பதன் மூலம் என்று கூறப்படுகிறது. இதன் பொருள் யஹோவா(கடவுள்) காப்பாற்றுகிறார் என்பதாகும். பைளாவி இமாமோ இது ஹீப்ருமொழி சொல் என கூறுகிறார்கள். ஆனால் ஏனையோர் இது வெள்ளை என்று பொருள்படும் ஈஸ் என்னும் அரபிச் சொல்லிலிருந்து தோன்றியது என்று சொல்கின்றனர்.

ஈஸா மஸீஹ் எனும் பெயர் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு மட்டுமே சொல்லப்படுகிறது. கிரேக்கமொழியில் ‘ஜீஸஸ் கிறைஸ்ட்‘என்று ஆகி தமிழில் ஏசு கிறிஸ்து என்று மருவியுள்ளது. மஸஹ் என்றால் தடவுதல் என்று பொருள்படும். இவர்கள் நோயாளிகளைத் தம் கைகளால் தடவி அவர்களின் நோயை நீக்கியதால் மஸீஹ் என்னும் பட்டம் ஏற்பட்டதென்று சொல்லுவார்கள். அதுவே கிரேக்க மொழியில் கிரைஸ்ட் ஆகியிருக்கிறது.

ஹழ்ரத் மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு வயது 20இருக்கும்போது தங்களது சிற்றன்னை நபி ஜகரிய்யா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மனைவி ஈஷாஉ அவர்கள் வீட்டிற்குச் சென்று ஒரு மறைவான இடத்திற்குச் சென்று குளிப்பதற்காக உடைகளை மாற்றி உடுத்திக் கொண்டிருக்கும்போது நடைபெற்ற சம்பவத்தை பற்றி அல்லாஹ் தனது திருமையில் கூறுகிறான்.

இவ்வேதத்தில் (ஈஸா நபியின் தாயாராகிய) மர்;யமைப் பற்றியும் (சிறிது) கூறும். அவர் தம் குடும்பத்தினரை விட்டு விலகி,கிழக்குத் திசையிலுள்ள (தம்) அறைக்குச் சென்று, (குளிப்பதற்காகத்) தம் ஜனங்களின் முன் திரையிட்டுக் கொண்ட சமயத்தில், (ஜிப்ரயீல் என்னும்) தம்முடைய தூதரை அவரிடம் அனுப்பி வைத்தோம். அவர் சரியான ஒரு மனிதருடைய கோலத்தில் அவர் முன் தோன்றினார்.(மர்யம் அவரைக் கண்டதும்) ‘நிச்சயமாக நான், உம்மிடமிருந்து என்னை இரட்சித்துக் கொள்ளுமாறு ரஹ்மானிடம் பிரார்த்திக்கிறேன். நீர் நன்னடத்தையுடையவராக இருந்தால்… (இங்கிருந்து அப்புறப்பட்டுவிடும்)’ என்றார்.

அதற்கவர், ‘பரிசுத்தமான ஒரு மகனை உமக்களி(க்கப்படும் என்பதை உமக்கு அறிவி)ப்பதற்காக நான் உம் இறைவனால் அனுப்பப் பெற்ற (மலக்காகிய) ஒரு தூதன்தான் என்றார்.

அறத்கவர்> ‘எனக்கு எவ்வாறு சந்ததி ஏற்படும்? எம்மனிதனும் என்னைத் தீண்டியதில்லையே’ என்று கூறினார். அதற்கவர், ‘அவ்வாறே (நடைபெறும்) அது எனக்கு எளிது. அவரை மனிதர்களுக்கு ஒரு திருஷ்டாந்தமாகவும்,நம்முடைய அருளாகவும் நாம் செய்வோம். இது முடிவாகக் கற்பனை செய்யப்பட்டு விட்ட ஒரு விஷயம்’ என்றுஉமதிறைவன் கூறுகிறான்’ என்றார். பின்னர் (தானாகவே) மர்யமுக்குக் கர்ப்பமேற்பட்டுக் கர்ப்பத்துடன் (அவர் இருந்த இடத்திலிருந்தே வெளியேறித்) தூரத்திலுள்ள ஓர் இடத்தைச் சென்றடைந்தார்.’

– அல்-குர்ஆன் 19:16-22

இச்சம்பவத்தை அல்லாஹ் திருக்குர்ஆனில் மற்றுமோர் இடத்தில்;>

‘(மேலும் மர்யமை நோக்கி) மலக்குகள் (ஆகுக! என்ற) ஒரு சொல்லைக் கொண்டு உனக்கு (ஒரு மகவை அளிக்க) நன்மாரயங் கூறுகின்றான். அதன் பெயர், ‘மர்யமுடைய மகன் ஈஸா மஸீஹ்’ என்பதாகும். இவர் இம்மை-மறுமையில் மிக்க கம்பீரமானவராகவும், (இறைவனுக்கு) மிக்க நெருங்கியவர்களில் ஒருவராகவும் இருப்பார்’ என்று கூறினார்.

அன்றி, ‘அவர் தொட்டிலில் (குழந்தையாக) இருக்கும்போது (தம் தாயின் பரிசுத்தத் தன்மையைப் பற்றி)யும், (தம் நபித்துவத்தைப் பற்றி) வாலிபத்திலும் மனிதர்களுடன் பேசுவார். தவிர நல்லொழுக்கமுடையோரில் உள்ளவராகவுமிருப்பார்'(என்றும் கூறினார்கள்)

(அதற்கு மர்யம் தம் இறைவனை நோக்கி) ‘என் இறைவனே! எந்த ஒரு மனிதரும் என்னைத் தீண்டாதிருக்கும்போது,எனக்கு எவ்வாறு சந்ததி ஏற்பட்டுவிடும்’ என்று கூறினார். (அதற்கு) ‘இவ்வாறே,அல்லாஹ் தான் நாடியதைப் படைக்கிறான். அவன் ஒரு பொருளை(ப் படைக்க) நாடினால்,அதனை ‘ஆகுக’ என அவன் கூறுவதுதான் (தாமதம்) உடனே அது ஆகிவிடும்’ என்று கூறினான்.’

-அல்-குர்ஆன் 3: 45-47

அதன்பின் மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் சட்டையில் ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஊதினார்கள். உடனே கர்ப்பம் உண்டாயிற்று. இவ்வாறு அவர் இறைவனுடைய ஆவியை ஊதி இவர்கள் பிறந்ததினால் ரூஹுல்லாஹ்’ என்னும் சிறப்புப் பெயரால் அழைக்கப்பட்டனர். சில காலத்திற்குப் பின் மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் உடம்பில் மாறுதல் உண்டானது. கர்ப்பிணிக்குரிய அடையாளங்கள் தென்பட்டன. இதனைக் கண்ட ஜகரிய்யா நபி அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பெரும் கவலை கொண்டார்கள். இதனை தமது மனைவியிடம் மெதுவாக சொன்னார்கள்.

சிறிது நேர யோசனைக்குப் பிறகு ஜகரிய்யா நபி அவர்களின் மனைவியார்,”நல்ல செய்தியைச் சொன்னீர்கள். இதற்காக ஏன் வருத்தப்பட வேண்டும்?”என்ற கேட்டார்கள்.

ஜகரிய்யா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நான் எவ்வளவு பெரிய அவமானச் செய்தியை உன்னிடம் கூறுகிறேன். நீ அதிர்ச்சியடைவாய் என்று பார்த்தேன். ஆனால் நீ ஆனந்தப்படுகிறாயே! என்று கூறினார்கள்.

உடனே ஈசாஉ அவர்கள், ‘தகப்பன் இல்லாமல் ஒரு நபி பிறப்பார். அவர் மக்களுக்கு நேர்வழி காட்டுவதோடு,அவர்களின் பிணிகளையும் நீக்குவார். மரித்தவர்களை உயிர்ப்பிப்பார். அவரால் மற்றும் பல அற்புதங்களும் நிகழும் என்று நீங்கள் தவ்ராத் வேதத்தில் படித்ததில்லையா? என்றும், அந்த நபியின் கரு இதுவாகத்தான் இருக்கும் என்றும் என் மனசாட்சி கூறுகிறது. எனவே மர்யமை என்னிடம் அழைத்து வாருங்கள் என்று கூறினார்கள்.

மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அழைத்து வரப்பட்டதும்,நீ ரெம்ப அதிர்ஷ்டசாலிதான். உன் வயிற்றில் உள்ள குழந்தை பிறந்து பல்வேறு அற்புதங்களை செய்யப் போகிறது என்று சொன்னார்கள்.

மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்களோ இது உண்மைதானா? என்று கேட்டார்கள். ஆம் அவற்றையெல்லாம் நான் தவ்றாத்தில் படித்துள்ளேன் என்று சொன்னார்கள். இந்த குழந்தை அந்த நபிதான் என்று எப்படி நம்புவது? அதற்கு ஆதாரம் என்ன? என்று கேட்டார்கள்.

அல்லாஹ்வின் மீது ஆணையிட்டுக் கூறுகிறேன். உனது வயிற்றிலிருக்கும் குழந்தை அந்தநபியேதான். இதற்குரிய இப்பொழுதைய ஆதாரம் என்னவென்றால்,நான் உன்னைச் சந்தித்ததுமே எனது வயிற்றிலிருக்கும் குழந்தை உனது வயிற்றிலிருக்கும் குழந்தைக்குத் தலை தாழ்த்துவது போன்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது’ என்றார் ஈஷாஉ. அச்சமயத்தில் நபி யஹ்யா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஈசாஉ அவர்களின் கர்ப்பத்தில் இருந்தார்கள்.

அதேசமயம் ஹழ்ரத் மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்களும், ‘அச்சமயத்தில் எனது கருவிலிருக்கும் குழந்தையும் அசைவதை நான் உணர்ந்தேன்;’ என்றார்கள்.

மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் சிற்றன்னையின் மகன் ஒருவர் யூசுஃபுந் நஜ்ஜார் என்பவர் ஒருவர் இருந்தார். அவர் தச்சுச்தொழில் செய்து கொண்டு,மீதியுள்ள நேரத்தில் இறைவனை வணங்கி வந்தார். அவருக்கு இச்செய்தி கிடைத்ததும்,மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்களி;டம் அவர்கள் கர்ப்பமான விசயத்தை பற்றி கேட்டார்.

அதற்கு மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தான் சுத்தமானவள் என்றும்,இது அல்லாஹ்வின் நாட்டம் என்றும் கூறினாள்.

ஹழ்ரத் மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு பிரவச காலம் நெருங்கியது. அனைவரும் ஆலோசனை செய்து,யூசுஃப் நஜ்ஜார் உடன் வெளியூருக்கு அனுப்பி வைத்தார்கள். பைத்துல் லஹ்ம் என்னும் இடத்தை அடைந்ததும் பிரவச வேதனை ஏற்பட்டு அங்கு ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை ஈன்றெடுத்தனர்.

கவலை மிகுதியால் மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அழ,இறைவன் அசரீரி மூலமாக ஆறுதல் கூறி அங்கு நின்று கொண்டிருந்த ஒரு பட்டுப்போன பேரீத்தம் பழ மரத்தன் கிளைகளைப் பிடித்து உலுக்குமாறு கூற, அவர்களும் அவ்விதமே செய்ய,கனிகள் உதிர்ந்தன. அருகில் நீருற்றும் உருவாயிற்று. பேரீத்;தங்கனிகளை உண்டும்,அங்கிருந்த நீரை அருந்தியும் வாழ்ந்து வந்தனர்.

அவர்கள் பிறந்தத எட்டாம் நாள் அவர்களுக்கு விருத்தசேதனம் (கத்னா) செய்து ‘ஈஸாஹ்‘ என்று பெயர் வைக்கப்பட்டதாகவும் ஒரு குறிப்பில் காணப்படுகிறது.

மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அந்த குழந்தையை எடுத்துக் கொண்டு யூசுப் நஜ்ஜாருடன் தங்கள் வீடு வந்து சேர்ந்ததும் உறவினர்கள்,ஜனங்கள்,எல்லோரும் ஒன்று திரண்டு படையெடுத்து வந்தது அந்த குழந்தையைப் பற்றி கேள்விகள் கேட்க ஆரம்பித்தனர்.

இந்த குழந்தை எப்படிப் பிறந்தது? இதற்கு தந்தை யார்? நல்ல குடும்பத்தில் பிறந்த நீ இப்படி செய்வது உனக்கு வெட்கமில்லையா? போன்ற அடுக்கடுக்கான கேள்விகளைத் தொடுத்தனர். இச்சமயம் மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் குழந்தைக்கு பாலூட்டிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் இந்தக் கேள்வவிகளுக்கெல்லாம் எவ்விதப் பதிலும் கொடுக்காமல் குழந்தையை ஜாடை காட்டி குழந்தையிடம் கேளுங்கள் என்று சைகை மூலம் அறிவித்தார்கள்.

அச்சமயம் ஹழ்ரத் மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்வின் உத்திரவுபடி நோன்பு நோற்றிருந்தார்;கள். அக்காலத்தில் நோன்பு நோற்பவர்கள் பிறருடன் பேசுவதையும் தடைபடுத்திக் கொண்டிருந்தனர்.
https://m.facebook.com/story.php?story_fbid=313656229587078&id=100028281103831

தங்களுடைய கேள்விகளுக்கு பதில் கூறாது குழந்தையிடம் கேட்கும்படி ஜாடை காட்டுகிறார்களே! என்று குழந்தை எப்படி பேசும்? நாங்கள் பைத்தியக்காரர்களா? என்று அகங்காரத்துடன் வந்திருந்தவர்கள் கடும்கோபம் கொண்டனர்.

உடனே பால்குடித்துக் கொண்டிருந்த அக்குழந்தைத பால் குடிப்பதை நிறுத்திவிட்டு அக்கூட்டத்தினரைப் பார்த்து, ‘நிச்சயமாக நான் அல்லாஹ்வின் அடியானாக இருக்கிறேன். அல்லாஹ் எனக்கு இன்ஜீல் என்ற வேதத்தை அருளி,என்னைத் தனது நபியாகவும் ஆக்குவான். நான் எங்கிருந்த போதிலும்,என் மீது பேரருள் புரிந்து கொண்டே இருப்பான். நான் இவ்வுலககில் இருந்து வரும்வரை,தொழுது கொண்டும்,ஏழை வரியைக் கொடுத்துக் கொண்டும் வருமாறு என்னை ஏவியுள்ளான். எனது தாய்க்கு நன்றி செலுத்தி வருமாறும் கூறியுள்ளான். என்னை அவன், என் வாழ்நாள் முழுவதும் வழி தவறச் செய்ய மாட்டான். என்மீது என்றென்றும் அவனது சாந்தியும்,சமாதானமும் நிலைத்து நிற்கும்’ என்று பேசினார்கள். அப்போது அவர்களது வயது நாற்பது நாட்கள்தான்.

இந்தச் சம்பவங்களை அல்லாஹ் தனது திருமறையில்:

அப்பால்,மர்யம் ஈஸாவை கருக்கொண்டார்; பின்னர் கர்ப்பத்துடன் தொலைவிலுள்ள ஓரிடத்தை சென்றடைந்தார்.

பின்பு (அவருக்கு ஏற்பட்ட) பிரசவ வேதனை அவரை ஒரு பேரீத்த மரத்தின்பால் கொண்டு வந்தது: “இதற்கு முன்பே நான் இறந்து,முற்றிலும் மறக்கப் பட்டவளாகி இருக்கக் கூடாதா”என்று கூறி(அரற்றி)னார்.

(அப்போது ஜிப்ரீல்) அவருக்குக் கீழிருந்து: “(மர்யமே!) கவலைப்படாதீர்கள்! உம்முடைய இறைவன் நிச்சயமாக உமக்கு கீழாலேயே ஒரு சின்ன ஆற்றை உண்டாக்கியிருக்கின்றான்”என்று அழைத்து கூறினார்.

“இன்னும், இந்த பேரீச்ச மரத்தின் கிளையைப் பிடித்து உம் அருகில் இழுத்துக் குலுக்கும்; (கொய்வதற்குப்) பக்குவமான பழங்களை உம் மீது அது உதிர்க்கும்.

“ஆகவே, (அவற்றை) உண்டு, (ஆற்று நீரைப்) பருகி கண் குளிர்ந்து இருப்பீராக! பின்னர் எந்த மனிதரையேனும் நீர் பார்க்க நேரிட்டால்,“மெய்யாகவே அர்ரஹ்மானுக்காக நான் நோன்பிருப்பதாக நேர்ந்திருக்கின்றேன்; ஆதலின் இன்றைய தினம் எந்த மனிதருடனும் பேச மாட்டேன்”என்று கூறும்.

பின்னர் (மர்யம்) அக்குழந்தையைச் சுமந்து கொண்டு தம் சமூகத்தாரிடம் வந்தார்; அவர்கள் கூறினார்கள்: “மர்யமே! நிச்சயமாக நீர் ஒரு விபரீதமான பொருளைக் கொண்டு வந்திருக்கிறீர்!”

“ஹாரூனின் சகோதரியே! உம் தந்தை கெட்ட மனிதராக இருக்கவில்லை; உம் தாயாரும் நடத்தை பிசகியவராக இருக்கவில்லை” (என்று பழித்துக் கூறினார்கள்).

(ஆனால்,தம் குழந்தையிடமே கேட்கும் படி) அதன் பால் சுட்டிக் காட்டினார்; “நாங்கள் தொட்டிலில் இருக்கும் குழந்தையுடன் எப்படிப் பேசுவோம்?”என்று கூறினார்கள்.

“நிச்சயமாக நான் அல்லாஹ்வுடைய அடியானாக இருக்கின்றேன்; அவன் எனக்கு வேதத்தைக் கொடுத்திருக்கின்றான்; இன்னும்,என்னை நபியாக ஆக்கியிருக்கின்றான்.

“இன்னும்,நான் எங்கிருந்தாலும்,அவன் என்னை முபாரக்கானவனாக (நற்பாக்கியமுடையவனாக) ஆக்கியிருக்கின்றான்; மேலும்,நான் உயிருடன் இருக்கும் காலமெல்லாம் தொழுகையையும்,ஜகாத்தையும் (நிறை வேற்ற) எனக்கு வஸீய்யத் செய்து (கட்டளையிட்டு) இருக்கின்றான்.

“என் தாயாருக்கு நன்றி செய்பவனாக (என்னை ஏவியிருக்கின்றான்;) நற்பேறு கெட்ட பெருமைக்காரனாக என்னை அவன் ஆக்கவில்லை.

. “இன்னும்,நான் பிறந்த நாளிலும்,நான் இறக்கும் நாளிலும் (மறுமையில்) நான் உயிர் பெற்று எழும் நாளிலும் என் மீது சாந்தி நிலைத்திருக்கும்”என்று (அக்குழந்தை) கூறியது.

இ(த்தகைய)வர் தாம் மர்யமுடைய புதல்வர் ஈஸா (ஆவார்); எதைக் குறித்து அவர்கள் சந்தேகம் கொண்டிருக்கிறார்களோ அதுபற்றிய உண்மையான சொல் (இதுவே ஆகும்).

-அல்-குர்ஆன் 19:23-34

பிறந்து நாற்பதே நாள் ஆன குழந்தை பேசியதும் வந்தவர்களிடையே ஒரே குழப்பம் ஏற்பட்டது. ஜகரிய்யாவையும்,யூசுஃபுந் நஜ்ஜார் ஆகியோர்தான் இதற்கு காரணம். அவர்களை கொன்று விட வேண்டும். அதுதான் சிறந்த பரிகாரம் என்று தமக்குள் பேசிக் கொண்டனர்.

இதற்கிடையே வானஇயல் நிபுணர்கள் வானத்தில் புதிதாக தோன்றிய ஒரு நட்சத்திரத்தைக் கண்டு, ‘இது உலகில் ஒரு நபி தோன்றியிருப்பதற்கான அடையாளமாக இருக்கிறது’ என்றார்கள். பனீஇஸ்ரவேலர்களளின் மதகுருமார்கள் வேதங்களைப் புரட்டிப் பார்த்து,இச்சமயத்தில் எங்களுக்கு வழிகாட்டக்கூடிய ஒரு தேவத் தூதர் பெத்லஹேமில் பிறந்து விட்டார்’ என்று மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் அந்நாட்டு மன்னனான ஐரதூஸ் இச்செய்தி கேட்டு ஆத்திரப்பட்டான். அந்த குழந்தையால் தனது ஆட்சிக்கு ஆபத்து ஏற்படக் கூடும் என்று எண்ணி அக்குழந்தையை கொன்றுவிட அவன் தீர்மானித்தான்.

அரசனின் இந்த எண்ணத்தை வஹீ மூலம் அல்லாஹ் மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு தெரிவத்து, உடனே அந்நாட்டை விட்டு வெளியேறி எகிப்துக்குச் சென்றுவிட கட்டளையிட்டான். யூசுபு நஜ்ஜாரின் துணையைக் கொண்டு அவர்கள் அந்த நாட்டை விட்டு வெளியேறி எகிப்து சென்று அங்கு நூல் நூற்று அதிலிருந்து கிடைக்கும் சொற்ப வருவாயைக் கொண்டும்,வயல்களில் உதிர்ந்து கிடக்கும் தானியங்களைப் பொறுக்கி உணவு சமைத்தும் மிகவும் கஷ்ட வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு யூசுப் நஜ்ஜாரும் காடுகளுக்கு சென்று விறகு வெட்டி விற்று,அதில் கிடைக்கும் சொற்ப வருவாயை ஹழ்ரத் மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் கொடுத்து உதவி செய்து வந்தார்.

ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு மூன்று அல்லது நான்கு வயது ஆனதும் அவர்களை அன்னை மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கல்வி கற்க ஒரு ஆசிரியரிடம் சேர்த்தார்கள். ஆசிரியர் கல்வியைக் கற்றுக் கொடுக்க ஆரம்பித்ததும் , ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அதனை முழுமையாக சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். அதனைக் கண்ட ஆசிரியர் அவர்கள்,இந்த குழந்தை அறிவில் என்னைவிட பன்மடங்கு சிறந்ததாக இருக்கிறது. எனவே அதற்கு நான் கற்றுக் கொடுக்க வேண்டியது ஒன்றுமில்லை என்று சொன்னார்கள். அதற்கு மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள், ‘நீங்கள் கற்றுக் கொடுக்காவிட்டாலும் இவனை உங்கள் அருகிலேயே சிறிது காலம் இருக்கவிடுங்ககள்’ என்று கூறி பாலகரான ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை அந்த ஆசிரியரிடமே விட்டுச் சென்றார்கள். இப்படியே சில காலம் சென்றது.

வாலிபரான ஈஸா அவர்கள்,மக்களை நேர்வழிபடுத்த எவ்வளவோ முயன்றார்கள். அவர்களைக் கண்டாலே மக்களுக்கு கடும்கோபம் ஏற்பட்டது. தகப்பனில்லாது பிறந்த நீரா எமக்கு புத்தி சொல்ல வந்தீர்? காலம் காலமாக நமது மூதாதையர்கள் வணங்கி வந்த தெய்வங்களை நிந்திக்க உமக்கு என்ன உரிமை இருக்கிறது?’ என்று சொன்னதோடு, அவர்களை தீர்த்துக் கட்டவும் முயன்றார்கள்.

பனீ இஸ்ரவேலர்களிடம் தான் நபி என்பதை அறிவித்ததோடு,அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது வருகையைப் பற்றிக் குறிப்பட்டதைத் திருக்குர்ஆனில் அல்லாஹ் பின்வருமாறு குறிப்பிடுகிறான்:

‘மர்யமுடைய மகள் ஈஸா (இஸ்ராயீலின் சந்ததிகளை நோக்கி) ‘இஸ்ராயீலின் சந்ததிகளே! மெய்யாகவே நான்,உங்களிடம் அனுப்பப்பட்ட அல்லாஹ்வுடைய ஒரு தூதன். நான் எனக்கு முன்னுள்ள தவ்ராத்தை உண்மைப்படுத்துகிறேன். எனக்குப் பின்னர், ‘அஹ்மத்‘என்னும் பெயர் கொண்ட ஒரு தூதர் வருவதைப் பற்றியும் நான், (உங்களுக்கு) நன்மாராயம் கூறுகிறேன்’ என்று கூறியதை (நபியே! நீர் அவர்களுக்கு) ஞாபகமூட்டும். (அவர் அறிவித்தவாறு அத்தூதர்) தெளிவான அத்தாட்சிகளுடன் அவர்களிடம் வந்த சமயத்தில், (அவரை விசுவாசிக்காது) ‘இது தெளிவான சூனியம்!’ என்று அவர்கள் கூறினர்.’

-அல்-குர்ஆன் 61:6

ஒரு சமயம் ஹழ்ரத் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் எகிப்திலுள்ள நைல் நதியோரமாகச் சென்று கொண்டிருந்தார்கள். நதி கரையோரத்தில் சில சலவைத் தொழிலாளிகள், அழுக்கு துணிகளை மூட்டை மூட்டையாகக் குவித்து வைத்துக் கொண்டு துவைத்துக் கொண்டிருந்தார்கள். அவர்களிடம் சென்று லாஇலாஹ இல்லல்லாஹ் என்ற கலிமாவைக் கொண்டு உங்கள் உள்ளத்தைப் பரிசுத்தப்படுத்துங்கள் என்று உபதேசம் செய்தார்கள். இவர்களின் உபதேசத்தைக் கேட்டு சலவைத் தொழிலாளிகள் சிந்திக்கத் தொடங்கி, அவர்கள் மீது விசுவாசம் கொண்டார்கள்.

துணிக்கு சாயம் ஏற்றும் தொழில் செய்பவரிடம் சென்று மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தொழில் கற்க ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை அழைத்துச் சென்றார்கள். அவனும் அதற்கு ஒத்துக் கொண்டு, ஒவ்வொரு பானையிலும் சாயத்திற்கு ஏற்றவாறு துணிகளை போட்டு சாயம் ஏற்றச் சொன்னார்கள். ஆனால் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அனைத்து துணிகளையும் ஒரே பானையில் போட்டு சாயத்தில் ஏற்றினார்கள். சாயக்காரர் வந்து, மிகவும் கோபப்பட்டு, துணிக்காரர்களுக்கு என்ன பதில் சொல்லப் போகிறேன் என்று அங்கலாய்த்தார். அதற்கு ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் லாஇலாஹ இல்லல்லாஹ் என்று சொல்லி ஒவ்வொரு துணியாக எடுங்கள். நீங்கள் நினைத்த சாயம் அந்தந்த துணிகளில் இருக்க காண்பீர்கள் என்று சொன்னார்கள். அதன்படி அவன் செய்ய, அவ்வாறே வந்தது. இதைக் கண்டு அவன் ஈஸா நபி அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மீது ஈமான் கொண்டான்.

மன்னன் ஐரதூஸ் இறந்த சேதி ஹழ்ரத் மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்குத் தெரிய வந்தது. ஹழ்ரத் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களையும், யூசுப் நஜ்ஜார் அவர்களையும் அழைத்துக் கொண்டு பைத்துல் முகத்தஸ் திரும்பினார்கள். வழியில் அவர்கள நாசரேத் என்ற ஊரில் சிறிது காலம் தங்கியிருந்தார்கள். இந்த நாசரேத் என்ற ஊரில் அவர்கள் தங்கியிருந்ததன் காரணமாகத்தான் அல்லாஹ் திருக்குர்ஆனிலல் கிறித்துவர்களை ‘நஸரா’ என்று குறிப்பிட்டுள்ளான்.

ஹழ்ரத் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு வயது 30ஆகியது. ஒலிவ இலைகளைச சேகரித்து வருவதற்காக அவாக்ள் தங்கள் தாயுடன் ஒரு மலைமீது ஏறினர். சில இலைகளைப் பறித்துத் தாயிடம் ஒப்படைத்து விட்டு,அந்த மலையின் ஓரிடத்தில் அமர்ந்து இறைதியானத்தில் ஈடுபட்டார்கள். அச்சமயத்தில் அவர்களின் முன் ஒரு பேரொளி தோன்றியது. திடுக்கிட்ட அவர்கள் அதனைக் கூர்ந்து கவனித்துப் பார்த்துக் கொண்டிருக்கையில் அவ்விடத்தில் ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தோன்றி, ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கையில் ஒரு புத்தகத்தைக் கொடுத்து இது இன்ஜீல் வேதமாகும். அல்லாஹ் பனீ இஸ்ரவேலர்களுக்கு நேர்வழிக்காட்டக் கூடிய தூதராக உங்களை நியமித்துள்ளான். அவர்களை விக்கிரக ஆராதனையை விட்டு விலக்கி, அல்லாஹ்வை மட்டும் வணங்கிவர வைப்பீர்களாக!’ என்று கூறிவிட்டு மறைந்து விட்டார்கள்.

ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் தாய் பாஷையான சுர்யானீ (அரேமிய பாஷை)பாசையில் வேதம் இறக்கப்பட்டிருந்தது. அதில் கூறப்பட்டிருந்த உபதேசங்களெல்லாம் அவர்களது நெஞ்சத்தில் ஆழப் பதிந்து விட்டன. இந்த இன்ஜீல் வேதம் இறக்கபட்டது ரமலான் மாதம் 18அன்று. தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு அருளப்பட்ட ஜபூர் வேதம் இறக்கப்பட்ட 1,200வருடங்களுக்குப் பிறகுதான் இந்த இன்ஜீல் வேதம் இறக்கப்பட்டதென்று ஒரு குறிப்பு காணப்படுகிறது.

அதன்பிறகு ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தம் தாயிடம் தான் நபியாக அனுப்பப்பட்ட விசயத்தையும்,அதனால் தங்களுக்கு சேவை புரிவதில் அதிகமாக ஈடுபட முடியாது என்பதையும் எடுத்துச் சொன்னார்கள்.

அதற்கு மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் உன்னுடைய இந்த நிலையைப் பற்றி அல்லாஹ் நீ பிறக்கும் முன்பே எனக்கு அறிவித்து விட்டான். அதனால் நீ எதற்கும் கவலைப்படாமல் அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்தி வா என்று சொன்னார்கள்.

மலையிலிருந்து ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இறங்கி நடந்து வந்து கொண்டிருக்கையில் வழியில் ஒரு குஷ்டரோகி தென்பட்டான். அவனை ஈஸா நபியவர்கள் தடவி இறைவனிடம் நோயை குணமாக்கும்படி இறைஞ்சினார்கள். அல்லாஹ்வின் கிருபையால் அவன் பரிபூரணமாக குணமடைந்தான். அவன் இச்செய்தியை பைத்துல்முகத்தஸ் சென்று மக்களிடம் சொன்னான். இச்செய்தி காட்டுத்தீ போல நகரெங்கும் பரவி விட்டது.

ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நகருக்குள் நுழைந்ததும், பிறவிக் குருடர்கள், ஊமையர்கள், முடவர்கள், குஷ்டரோகிகள் ஆகியோர் அவர்கள் முன்னால் கூடிநின்று தங்களையும் குணப்படுத்துமாறு வேண்டிநின்றனர். ஈஸா நபியவர்கள் அவர்கள் அனைவரையும் குணப்படுத்தினார்கள்.

இப்பெரும் கூட்டத்தினரிடையே ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஏகத்துவத்தை எடுத்தியம்பினார்கள். விக்கிரக வணக்கத்தை விட்டு விலகுமாறு வேண்டினார்கள். பனீ இஸ்ரவேலர்கள் அல்லாஹ் அவர்கள் மீது செய்துள்ள கிருபைகளையும்,உதவிகளையும் மறந்து விக்கிரகத் தொழும்பர்களாக மாறிவிட்டதையும் மதகுருமார்கள் இறைப் பணியை மறந்து விட்டு பேராசை பிடித்து வீண் ஆடம்பரவhழ்வில் அலைக்கழிந்து கிடப்பதையும் கடுமையாக சாடினார்கள்.

இதனால் பனீ இஸ்ரவேலர்களில் ஒரு பகுதியினரும்,மதகுருமார்களும் அவர்களுக்கு பரமவிரோதிகளாக மாறினர்.

ஹழ்ரத் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஒரு சனிக்கிழமை அன்று குளக்கரையில் அமர்ந்து கொண்டு,களிமண்ணால் பறவைகளைப் போன்று உருவங்களைச் செய்து கொண்டிருந்தார்கள். இது அவர்களுக்கு கோபத்தை உண்டு பண்ணியது. ஈஸா நபியின் இச்செயலை அவர்கள் கடுமையாக ஆட்சேபித்தனர். இதைப் பற்றி அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகிறான்:

இஸ்ராயீலின் சந்ததியினருக்குத் தூதராகவும் (அவரை ஆக்குவான்; இவ்வாறு அவர் ஆகியதும் இஸ்ரவேலர்களிடம் அவர்:) “நான் உங்கள் இறைவனிடமிருந்து ஓர் அத்தாட்சியுடன் நிச்சயமாக வந்துள்ளேன்; நான் உங்களுக்காக களிமண்ணால் ஒரு பறவையின் உருவத்தை உண்டாக்கி நான் அதில் ஊதுவேன்; அது அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு (உயிருடைய) பறவையாகிவிடும். பிறவிக் குருடர்களையும், வெண் குஷ்டரோகிகளையும் குணப்படுத்துவேன்; அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு இறந்தோரையும் உயிர்ப்பிப்பேன்; நீங்கள் உண்பவற்றையும்,நீங்கள் உங்கள் வீடுகளில் சேகரம் செய்து வைப்பவற்றையும் பற்றி நான் உங்களுக்கு எடுத்துக் கூறுவேன். நீங்கள் முஃமின்கள் (நம்பிக்கையாளர்) ஆக இருந்தால் நிச்சயமாக இவற்றில் உங்களுக்குத் திடமான அத்தாட்சி இருக்கிறது” (என்று கூறினார்).

– அல்குர்ஆன் 3:49

அப்படியானால் எலும்பில்லாத ஒரு பறசையைச் செய்து அதனைப் பறக்கச் செய்யுங்கள் பார்ப்போம் என்று கிண்டலாகக் கூறினர். ஹழ்ரத் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வவ்வாலைப் போன்று ஒரு பறவையைக் களிமண்ணில் செய்து,அதன்மீது ஊதினார்கள். உடனே,அது உயிர்ப்பெற்று பறக்க ஆரம்பித்தது.

இவ்வளவு மகத்தான அற்புதத்தை ஹழ்ரத் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் செய்து காட்டியும்,அந்தப் பனீ இஸ்ரவேலர்கள் அவர்களை அல்லாஹ்வின் தூதர் என்று ஏற்றுக் கொள்ளாது,இது ஒரு கண்கட்டு வித்தை. கொஞ்சம் முயற்சி எடுத்தால் யாரும் இதைப் போல் செய்யலாம் என்றனர்.

அவர்கள் இப்படிச் சொன்னதும்,ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ‘ என்னை நம்புங்கள். நான் அல்லாஹ்வின் தூதனே! இதனை நிரூபிப்பதற்காக அல்லாஹ்வின் உத்திரவைக் கொண்டு இது போன்ற இன்னும் பல அற்புதங்களை செய்து காட்டுவேன். பிறவிக் குருடர்களுக்கும்,பார்வை வரச் செய்வேன். குஷ்டரோகத்தையும் குணப்படுத்துவேன்’ என்று கூறினார்கள்.

அவர்கள் இப்படிச் சொன்னதும்,இதனைப் பரிசோதிப்பதற்காக வேண்டி,அப்பகுதியிலிருந்த அத்தனைப் பிறவிக் குருடர்களையும்,குஷ்டரோகிகளையும் அழைத்துக் கொண்டு அவர்கள் முன் நிறுத்தினார்கள். அவர்கள் அனைவரையும் அதிசயிக்கத்தக்க விதத்தில் அனைவரும் குணமாயினர். ஒரு நாளில் மட்டும் 50,000பேர் குணமடைந்ததாக ஒரு குறிப்பில் காணப்படுகிறது.

இச்செய்தி வெளியில் தெரியவாரம்பித்ததும் பல்லாயிரக்கணக்கானோர் அவர்களை நாடி வந்தனர். அவர்கள் அனைவரின் நோய்களையும் குணப்படுத்தினார்கள். இவ்வளவு செய்தும் பனீ இஸ்ரவேலர்கள் அவர்களை நபி என்று நம்ப மறுத்தனர். மாறாக,இவர் பெரிய சூனியக்காரர் என்றே கூறி வந்தனர்.

ஈஸா நபியவர்கள் அவர்களை நோக்கி ‘நான் எத்தகைய அற்புதத்தை செய்து காட்டினால் என்னை நபி என்று நம்புவீர்கள்’ என்று கேட்டனர். அதற்கு பனீ இஸ்ரவேலர்கள் ‘இறந்தவர்களை உயிர்ப்பிக்க முடியுமா? என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் ‘சரி’ யென்று சொன்னார்கள்.

இதனால் ஆச்சரியத்தில் மூழ்கிய அம்மக்கள், அக்காலத்தில் மிகப் பெரிய அறிவாளியாகவும்,மருத்துவ நிபுணராகவும் இருந்த ஜாலினூஸ் என்பவரிடம் வந்து,இது பற்றி கேட்டனர். அவர் ஈஸா அவ்வாறு இறந்தவர்களை உயிர்ப்பிக்ச் செய்தால் அவர் அல்லாஹ்வின் தூதர் என்பதை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும்’ என்றார்கள்.

உடனே அவர்கள் ஈஸா நபி அவர்களிடம் வந்து மூன்று நாட்களுக்கு முன்னர் ஆஸர் என்பவர் இறந்துவிட்டார். அவரது சடலத்தை உயிர்ப்பித்து காட்டுங்கள் என்றனர்.

அவர் அடக்கப்பட்ட இடத்திற்கு என்னை அழைத்துச் செல்லுங்கள் என்றனர் ஈஸா நபி அவர்கள். அங்கு அவர்கள் அந்த சமாதிக்கருகில் சென்று, ‘அல்லாஹ்வின் உத்திரவு கொண்டு எழுந்திரும்’ என்று சொன்னார்கள். என்ன ஆச்சரியம். அவர் தூங்கியெழுந்தவரைப் போன்று சோம்பலை முறித்துக் கொண்டே எழுந்து வெளியே வந்தார். பனீ இஸ்ரவேலர்களுக்கு அதை நம்பவே முடியவில்லை. இப்பவாது என்னை அல்லாஹ்வின் தூதர் என்று நம்புகிறீர்களா? என்று கேட்டார்கள் ஈஸா நபியவர்கள்.

அதற்கு என்ன பதில் சொல்வது? என்று புரியாமல் நழுவிவிட்டனர். புதிதாக இறந்தவரைத்தான் உயிர்ப்பித்து விட்டார். இறந்து நீண்ட காலமாகிவிட்டவர்களை இவரால் எழுப்ப முடியுமா? என்ற கேள்வியை எழுப்பிக்கொண்டு பனீ இஸ்ரவேலர்கள் மீண்டும் ஹழ்ரத் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை அணுகி,புதிதாக இறந்துவிட்டவரைத்தான் நீங்கள் உயிர்ப்பித்து விட்டீர்கள். இறந்;து நீண்ட காலமாகிவிட்டவரை உங்களால் உயிர்ப்பிக்க முடியுமா என்று கேட்டார்கள்.

அல்லாஹ் நாடினால் எதுதான் நடக்காது? என்று ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மறுமொழி பகர்ந்தனர்.

பனீ இஸ்ரவேலர்கள் மிகவும் சிதிலமடைந்து போயிருந்த ஒரு சமாதியைக் காட்டி,இங்கு அடக்கமானவர் நான்காயிரம் வருடங்களுக்கு முன் ஹழ்ரத் நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் காலத்தில் வாழ்ந்தவர். இவர் பெயர் ஸாம் என்றனர்.

உடனே ஹழ்ரத் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் முன் கூறியது போலவே அல்லாஹ்வின் உத்திரவைக் கொண்டு எழுந்திரும்’ என்று சொன்னார்கள். அதிலிருந்து ஒரு மனிதர் எழுந்து ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு ஸலாம் சொன்னார். இம்மாதிரி இறந்து போன பலரை உயிர்ப்பித்து காட்டியும் பனீ இஸ்ரவேலர்களுக்கு அவர்கள் மீது நம்பிக்கை ஏற்படவில்லை. ஆனால் அவர்களில் 12பேர் மட்டும் அவர்கள் மீது விசுவாசம் கொண்டனர். இவர்களுக்கு ஹவாரிய்யூன்கள் என்று கூறப்படுகிறது. இதில் பெரும்பான்மையோர் சலவைத் தொழிலாளியாக இருந்தனர்.

இந்த ஹவாரிய்யூன்கள்தாம் ஹழ்ரத் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பிரதம சீடர்களாகச் செயல்பட்டு வந்தனர். ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுடன் கூடவே சென்று வருவார்கள். அவர்கள் காடு,மேடு,பள்ளம்,மலை,பாலைவனம் போன்ற இடங்களில் சுற்றித்திரிந்து மக்களுக்கு நற்போதனை புரிந்து கொண்டிருந்தார்கள். அப்போதெல்லாம் சீடர்கள் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு பணிவிடை செய்து வந்தார்கள்.

தமது சீடர்களுக்கு பசி ஏற்படின் அல்லாஹ்வின் திருநாமத்தைக் கொண்டு தரையில் தட்டுவார்கள். அதிலிருந்து ரொட்டி வரும். அதை பங்கிட்டுக் கொடுப்பார்கள். தண்ணீரையும் அவ்வாறே பெற்றுக் கொடுத்தனர்.

ஹழ்ரத் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நெட்டையாகவும் இல்லாது,குட்டையாகவும்இல்லாது நடுத்தர உயரமுடையவர்களாக இருந்தார்கள். அதிக வெண்மையும்,அதிக கறுப்புமில்லாது பொதுநிறமாக இருந்தார்கள்.கம்பளியால் தயாரிக்கப்பட்ட உடையையும் தொப்பியையும்அணிந்து வந்தார்கள். அவர்களது உடையில் பல ஒட்டுகள் இருந்தன. கிழிபடும் உடைகளை அவ்வப்போது தைத்துக் கொண்டனர். அதற்காக ஊசியையும்,நூலையும் தம் சட்டையில் வைத்துக் கொண்டனர். அவர்களின் கரத்தில் எப்போதும் ஒரு கம்பு இருந்து கொண்டே இருக்கும். அவர்கள் சுற்றுப்பிராயணம் செய்யும் போது எவ்விடத்தில் இரவு வருகிறதோ அங்கேயே இரவை கழித்துக் கொள்வார்கள். படுக்கையில் மிருதுவான விரிப்புகளை விரிப்பதில்லை. அடிக்கடி நோன்பு நோற்பவர்களாக இருந்தனர்

நல்லோர்களின்அடி சுவடுகள் ..,

நல்லோர்களின்
அடி சுவடுகள்  .....

தினமும் அதிகாலைத் தொழுகைக்குப் பின்னர் அபூபக்கர் (ரலி) அவர்கள், பள்ளிவாசலை விட்டு வேகமாக வெளியேறி மதீனாவின் எல்லையில் இருக்கும் ஒரு குடிசை வீட்டுக்குச் செல்வதையும் சற்று நேரத்திற்குப்  பின்னர் அங்கிருந்து வெளியேறுவதையும் உமர் (ரலி) கவனித்தார்.

அபூபக்கர் (ரலி) எனென்ன நல்ல காரியங்கள் செய்கிறார் என்பது பெரும்பாலும் உமர் (ரலி) அவர்களுக்குத் தெரியும். ஆயினும் இந்த விஷயம் மட்டும் தெரியவில்லை.

நாட்கள் நகர்ந்தன. கலீஃபா அபூபக்கர் (ரலி) அவர்களோ தொடர்ந்து அந்த குடிசை வீட்டுக்குச் சென்று கொண்டே இருந்தார். அங்கு சென்று அவர் என்ன செய்வார் என்பதும் உமர் (ரலி) அவர்களுக்குத் தெரியாமலே இருந்தது.

ஒருநாள்….
அபூபக்கர் (ரலி) வெளியே சென்ற பின்னர், அந்த குடிசைக்குச் சென்று என்ன நடக்கிறது என்பதை பார்த்தே தீரவேண்டும் என்ற முடிவுக்கு வந்தார் உமர் (ரலி).

குடிசைக்குள் நுழைந்தார்… வயதான பார்வையற்ற நடக்க இயலாத ஒரு மூதாட்டி இருப்பதைக் கண்டார். 

பின்னர் குடிசையைக் கவனித்தார். கண்ட காட்சி ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

கண் தெரியாத இந்த மூதாட்டி அபூபக்கர் (ரலி) அவர்களின் உறவினராக இருக்குமோ என்ற எண்ணத்தில் அவரிடம் உமர் (ரலி) கேட்டார்:

"தினமும் ஒருவர் இங்கே வருகிறாரே அவர் இங்கு வந்து என்ன செய்வார்?”

மூதாட்டி: "அருமை மகனே, அல்லாஹ்வின் மீது ஆணை! அவரைக் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. தினமும் காலையிலேயே இங்கு வருவார். வீட்டைத் துடைத்து சுத்தம் செய்வார். 
ஆட்டிலிருந்து பால் கறப்பார். எனக்கு உணவு சமைத்துத் தருவார். பின்னர் எதுவும் பேசாமல் திரும்பிவிடுவார்”.

அது கேட்ட உமர் (ரலி) குலுங்கிக் குலுங்கி அழுதவராக வீட்டைவிட்டு உடனே வெளியேறிவிட்டார்.

அபூபக்கர் (ரலி) மரணித்த பின்னர், அந்த மூதாட்டிக்கு பணிவிடை செய்யவேண்டும் என்றும் அபூபக்கர் (ரலி) மரணமடைந்த செய்தியை அந்த மூதாட்டிக்குத் தெரிவிக்க வேண்டாம் என்றும் உமர் (ரலி) தீர்மானித்தார்.

அந்த குடிசைக்குச் சென்றார். முதல் நாளே அந்த மூதாட்டி கேட்டார்:

"உமது நண்பர் மரணித்துவிட்டாரோ…?”

உமர் (ரலி) திடுக்கிட்டார். திகைப்புடன் கேட்டார்: "உங்களுக்கு எப்படி அது தெரிந்தது?”

மூதாட்டி: நீர் எனக்கு உண்ணத் தரும் பேரீத்தப் பழத்தை விதை நீக்காமல் தருகிறீர். உமது தோழர் விதை நீக்கித் தருவார்”.

நடுங்கத் துவங்கிவிட்டார் உமர் (ரலி).
நிற்க முடியாமல் தரையில் அமர்ந்தார். கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடியது.

அப்போதுதான் அந்தப் புகழ்பெற்ற வாசகத்தைக் கூறினார் உமர் (ரலி):

"உமக்குப் பின்னர் வரவிருக்கும் கலீஃபாக்களுக்குப் பெரும் சுமையை விட்டுவிட்டுச் சென்றுவிட்டீரே அபூபக்கரே…!”

இப்போது நாம்… 

அபூபக்கர் (ரலி) அவர்களுக்காக அழுவதா…?

உமர் (ரலி) அவர்களுக்காக அழுவதா..?

அல்லது கொஞ்சம் கொஞ்சமாக நம்மை விட்டு அகன்று கொண்டிருக்கும் நல்ல பண்பாடுகளுக்காக அழுவதா…? தெரியவில்லை.

மரணிக்கு முன் நல்ல சுவடுகளை விட்டுச் செல்வோம். ஏனெனில் நாம் விட்டுச் செல்லும் சுவடுகள் அனைத்தும் பதிவு செய்யப்படுகின்றன.

"அவர்கள் விட்டுச் சென்ற சுவடுகளையும் நாம் பதிவு செய்து கொண்டிருக்கிறோம்” 
(36:12)♥️

பிரபல்யமான பதிவுகள்