роироо்рооுроЯрой் роЗрогைрои்родு роЗро░ுрок்рокро╡ро░்роХро│்

роЪெро╡்ро╡ாроп், роиро╡роо்рокро░் 01, 2016

роЕроо்рооா ропாро░்

​அம்மா! அம்மா!​

​✏ 'அம்மா' சொன்ன அற்புதமான பொய்களில் ஒன்று :​
​கடைசி உருண்டையில்தான் எல்லா​
​சத்தும் இருக்கும்,​
​இத மட்டும்​ ​வாங்கிக்கோடா​
​கண்ணா!​

​✒ நாம் பெற்ற முதல் இரத்த தானம் எது தெரியுமா? நம் 'அம்மா'வின் பால்தான்​.

​✏ தன் 'அம்மா' தனக்கு​ ​என்னவெல்லாம்​
​செய்தாள் என்பதை, மனிதன் கடைசி வரை உணர்வதில்லை.​
​அவன் அதை உணரும்போது​, ​அவள் உயிரோடு இருப்பதில்லை.​

​✒ 'அம்மா' என் அருகில் இருந்தால், கல்பாறை கூட பஞ்சு மெத்தைதான்.​
*
​✏ சொல்ல வந்ததை சரியாக சொல்ல முடியாமல் தவித்து நின்று பார். தாய்மொழியின் அருமை புரியும். வெளிநாட்டில் இருந்து பார். தாய்நாட்டின் அருமை புரியும். இதேபோல, 'தாயை' விட்டு தள்ளி இருந்து பார். தாயின் அருமை புரியும்.​

​✒ என் முகம் பார்க்கும் முன்பே, என் குரல் கேட்கும் முன்பே, என் குணம் அறியும் முன்பே என்னை நேசித்த ஒரே மனித இதயம், என் 'அம்மா' மட்டும்தான்.​

​✏ ஓர் 'அம்மா'வின் இறுதி ஆசை. என் மண்ணறையின் மீது உன் பெயரை எழுதி வை. உன்னை நினைப்பதற்கு அல்ல, அங்கும் உன்னைச் சுமப்பதற்கு!​

​✒ என்னை நடக்க வைத்து பார்க்க வேண்டும் என்ற ஆசையை விட, நான் விழுந்து விடக்கூடாது என்ற கவலையில்தான் இருந்தது என் 'அம்மா' வின் கவனம்.​

​✏ நான் ஒருமுறை அம்மா என்று அழைப்பதற்காக, பிரசவ நேரத்தில் ஆயிரம் முறை அம்மா, அம்மா என்று கதறியவள்தான் என் 'அம்மா'​

​✒ குழந்தைகளின் பல்வேறு அழுகைகளின் அர்த்தம் புரிந்த ஒரே டிஸ்னரி புக், 'அம்மா' மட்டும்தான்​

​✏ தாய்மையின் வலி என்னவென்று எனக்கும் தெரியும். அதனால்தான் அன்று 'அம்மா' வுடன் சேர்ந்து நானும் அழுதேன் பிறக்கயில்​

​✒ தேங்காய் திருகும்போது, 'அம்மா' விடம் திட்டு வாங்கிக் கொண்டே சாப்பிடும் சுகமே தனி!​

​✏ அம்மா...! அப்பா, ஆடம்பரமாய் கட்டிக்​ ​கொடுத்த வீட்டை விட, உன் ஆடையில் கட்டித்​ ​தந்த அந்த (தொட்டில்)​ ​வீடுதான் பெரும் நிம்மதியைத் தந்தது.​
​நோய் வரும்போது ஓய்வுக்கு பாயைத் தேடுவதை விட, என் 'தாயை'த் தேடுது மனசு​

​✏ உலகில் மிகவும் அழகான வார்த்தை எது தெரியுமா? எனக்கு 'அம்மா'! உங்களுக்கு..?​

​✒ 'அம்மா' என்பது வெறும் பெயரல்ல, மறப்பதற்கு! அது உயிரோடு கலந்த உதிரத்தின் உறவு.​

​✏ ஆயிரம் கைகள் என்​ ​கண்ணீரைத் துடைத்துப்​
​போனாலும், ஆறாத​ ​துன்பம் 'அம்மா' வின் சேலைத் தலைப்பில் துடைக்கும்போதுதான் நீங்கியது.​

​✒ கடைசி தோசை சாப்பிடும் போது, சட்னியை வேண்டும் என்றே அதிகமாக வைத்து, சட்னியை காலி செய்வதற்காக, இன்னொரு தோசை வைக்கிறதுதான் 'அம்மா'வின் அன்பு.​

​✏ நான் நேசித்த முதல் பெண்ணும், என்னை நேசித்த முதல் பெண்ணும் நீதானே 'அம்மா'!​

​✒ மண்ணறையில் உறங்கச் சொன்னால் கூட, தயங்காமல் உறங்குவேன். 'அம்மா', நீ வந்து ஒரு தாலாட்டுப் பாடினால்...!​

​✏ மூச்சடக்கி ஈன்றாய் என்னை​
​என் மூச்சுள்ள வரை காப்பேன் 'அம்மா' உன்னை​.

​✒ அன்பைப் பற்றி படிக்கும் போதெல்லாம் தவறாமல் வந்து போகிறது 'அம்மா' வின் முகம்.​

​✏ உலகில் தேடித் தேடி அலைந்தாலும், மீண்டும் அமர முடியாத ஒரே சிம்மாசனம், 'அம்மா' வின் கருவறை​.

​✒ வாழ்க்கையில் தியாகம் செய்பவர் அப்பா. வாழ்க்கையையே தியாகம் செய்பவர் 'அம்மா'!​

​✏ 'அம்மா...!​' ​அன்று நம்​ ​தொப்புள்கொடியை​ ​அறுத்தது, நம் உறவைப் பிரிக்க அல்ல. அது நம் பாசத்தின்​ ​தொடக்கத்துக்கு வெட்டப்பட்ட திறப்பு​ ​விழா ரிப்பன்!​     

рокிро░рокро▓்ропрооாрой рокродிро╡ுроХро│்