роироо்рооுроЯрой் роЗрогைрои்родு роЗро░ுрок்рокро╡ро░்роХро│்

ро╡ெро│்ро│ி, рооே 13, 2016

роЗро╕்ро▓ாрооிроп рооாродроо்,ро╖роГрокாрой் рооாродроо்,

ஷஃபான் மாத சிறப்பிதழ்.

“அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களுக்கு ஷஃபான் மாதத்தில் நோன்பு நோற்பது மிகவும் விருப்பமாகும்.” அறிவிப்பாளர் உம்முல் முமினீன் அன்னை ஆயிஷா ஸித்தீக்கா ரலியல்லாஹு அன்ஹா. (சுனன் நசாஈ, அபூ தாவூத்.) இதுவொரு ஸஹீஹான நபி மொழியாகும் என்கிறார் அல்பானி.

“அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் ஷஃபானை விடவும் வேறு எந்த மாதத்திலும் அதிகமாக நோன்பு வைப்பவராக இருக்கவில்லை. இம்மாதம் முழுவதும் நோன்பாளியாக இருப்பார்கள். மற்றுமொரு அறிவிப்பில் அவர்கள் சில தினங்களைத் தவிர அம்மாதத்தில் நோன்பு நோற்றார்கள்”

புகாரி, முஸ்லிமில் பதிவாகியுள்ள இந்த நபி மொழியானது, ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் ஷபான் மாதத்தில் நோன்பு நோற்பதை எந்தளவுக்கு விரும்பியிருக்கின்றார்கள் என்பதைப் நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.
ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் இந்த மாதத்திற்கு இந்தளவுக்கு முக்கியத்துவம்  செலுத்தியது எதற்காக? என்ற வினாவுக்கான பதிலை பின்வரும் நபி மொழி தெளிவுபடுத்துகிறது.

“நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களிடம், அல்லாஹ்வின் தூதரே! ஷஃபான் மாதத்தில் நீங்கள் நோன்பு நோற்பதைப் போன்று ஏனைய மாதங்களில் நீங்கள் நோன்பு நோற்பதை நான் காணவில்லையே! என்று கேட்டேன். அதற்கவர்கள், அது ரஜபுக்கும், ரமழானுக்குமிடையில் வரும் மாதமாகும்.

இம்மாதம் பற்றி மக்கள் கவனயீனமாக இருக்கின்றார்கள். இம்மாதத்தில் அடியார்களுடைய அமல்கள் அல்லாஹ்விடம் எடுத்துக் காட்டப்படுகின்றன. இம்மாதத்தில் நோன்புடன் இருக்கும் நிலையில் எனது அமலும் அல்லாஹ்விடம் எடுத்துக் காட்டப்பட வேண்டும் என்றே நான் விரும்புகின்றேன் எனக் கூறினார்கள்.” (அபுதாவூத், நஸஈ, ஸஹீஹ் இப்னு ஹுஸைமா) இதனை அல்பானி “ஹசன்” என்று கூறுகின்றார்கள்

இந்த மாதத்தில் எந்த நாளில், எந்த இரவில் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள்  விசேடமாக வணக்கங்களில் ஈடுபட்டார்கள்? என்ற கேள்விக்கு பின்வரும் தகவல்கள் அதற்கான பதிலாக பதிவு செய்யப்படுகிறது.

(வல்லவன் அல்லாஹ் படைப்புக்களுக்கு முற்றிலும் மாறுபட்டவன். எனவே மனித செயல்பாடுகளுடன் அல்லாஹ்வின் செயல்களை மதிப்பீடு செய்துவிடாமல் பின்வரும் தகவல்களைப் புரிந்துகொள்ளுங்கள்.)

“உம்முல் முமினீன் அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அறிவிக்கின்றார்கள். ஒரு நாள் இரவு ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் எனது வீட்டில் இருக்கவில்லை. அவர்களைத் தேடிச் சென்றேன். அப்போது “அல்பகீஉ“ மைய்யவடியில் வானத்தின் பக்கம் தலையை உயர்த்திய நிலையில் நான் அவர்களைக் கண்டேன். அப்பொழுது, ஷஃபான் மாதத்தின் 15 ஆம் இரவில் அல்லாஹ் முதல் வானத்தில் இறங்கி அடியார்களுடைய பாவங்களை கலபு கோத்திரத்தாரின் ஆடுகளுக்கு இருக்கும் அடர்ந்த ரோமங்களின் அளவு மன்னிக்கிறான் என்று பகர்ந்தார்கள்.” (திர்மிதி, இப்னுமாஜா, அஹ்மத்.)

“ஷஃஅபான் மாதத்தில் பாதி இரவு வந்து விட்டால் அதில் நீங்கள் நின்று வணங்குங்கள். அந்தப் பகலில் நோன்பு பிடியுங்கள். அந்த இரவில் இறைவன் வானத்திலிருந்து இறங்கி வந்து, பாவ மன்னிப்பு தேடுவோர் உண்டா? நான் அவர்களின் பாவங்களை மன்னிக்கிறேன். சோதனைக்கு ஆளானோர் உண்டா? நான் அவர்களின் துன்பங்களை போக்குகின்றேன். என்னிடம் கேட்கக் கூடியவர் உண்டா? நான் அவர்களுக்கு உணவளிக்கிறேன் என்று காலை வரை கூறிக் கொண்டேயிருக்கிறான் என்று ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம்  அவர்கள் கூறினார்கள். “ (அறிவிப்பவர்: அலீ ரலியல்லாஹு அன்ஹு, நூல்: இப்னுமாஜா 1378)

“ஐந்து இரவுகளில் கேட்கப்படும் பிரார்த்தனை மறுக்கப்படுவதில்லை. ரஜப் மாதத்தின் முதலாம் இரவு, ஷஃபான் மாதத்தின் 15ஆம் இரவு, ஜும்ஆவின் இரவு, இரு பெருநாட்களின் இரவு என்று ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் கூறினார்கள்.”-பைஹகீ.

இவ்வாறு சுமார் 25 கும் அதிகமான நபி மொழிகள் இவ்விரவின் சிறப்புக்கள் பற்றிப் பேசுகிறது. ஏராளமான நூட்களில் இந்த தகவல்கள் பதிவாகியுள்ளது. இந்த இரவின் சிறப்புப்பற்றி சொல்வதற்காகவே சுமார் 26  நூற்கள் தொகுக்கப்பட்டிருக்கிறது.

ما ورد فى ليلة النصف فى شعبان للمحمدث محمد بن الحسين بن عبد الله الآجري
نبذة فى فضائل النصف من شعبان للعلامة علي بن جلال الدين البكري الصديقي
شرح على رسالة الصديقي للعلامة المناوي
تحلية الشعبان فى ما روي فى ليلة النصف من شعبان للشيخ محمد بن طولون الدمشقي
الايضاح والبيان لما جاء فى ليلة النصف من شبعان للعلامة ابن حجر الهيتمي
مواهب الكريم المنان فى الكرم على ليلة النصف من شعبان للإمام محمد بن أحمد المصري
فيض المنان فى شرح ليلة النصف من شعبان لأبي السرور البكري الصديقي
التبيان فى بيان ما فى ليلة النصف من شعبان للعلامة على القاري الهروي الحنفي
تحفة اليقظان فى ليلة النصف من شعبان للشيخ ناصر الدين الطبلاوي
رسالة فى ليلة النصف من شعبان للأمام أبي النجا سالم بن محمد ناصر الدين السنهوري
شرح على ليلة النصف من شعبان للعلامة نور الدين الجلبي
عقد المرجان فى فضل ليلة النصف من شعبان للشيخ نوح بن مصطفى القونوي
نصيحة أهل الإيمان فى فضل ليلة النصف من شعبان للشيخ رجب بن محمد العمراني
افاضة المنان فى نشر مضائل ليلة النصف من شعبان للشيخ زين العابدين محمد بن عبد الله
هطال وابل الامتنان فيم يقال ليلة النصف من شعبان للعلامة قطب الدين مصطفى البكري
رسالة فى فضائل النصف من شعبان للشيخ علي بن خضر بن أحمد
الدر العالي الشان على ليلة النصف من شعبان للعلامة أحمد بن محمد السحيمي الشافعي
عرائس الحسان فى شرح فضائل ليلة النصف من شعبان للشيخ حسين بن سليم
فضائل النصف من شعبان للعلامة جمال بن عمر المكي الحنفي
تحفة اهل التوحيد والإيمان بادعية ليلة النصف من شعبان للشيخ عبد السلام الحنبلي
منح المنان لفضائل النصف من شعبان للشبخ البرهان السقا خطيب الأزهر
بهجة الإخوان فى فضل ليلة النصف من شعبان للشيخ محمد بن عبد الرحمن
حسن البيان فى ليلة النصف من شعبان للعلامة عبد الله بن الصديق الغماري
ليلة النصف من شعبان فى ميزان الانصاف العلمي للشيخ محمد زكي
ماذا فى شعبان للشيخ محمد بن علوي المالكي
حال المؤمنين فى شعبان

இந்த மாதத்தின் 15ஆம் நாளில் நோன்பு நோற்று இரவில் வணக்கம் புரிவது  மத்கபுகளுடைய நாட்களில் பதிவாகியுள்ள கருத்து.

ஹனபி மத்ஹப்:

“ஷஃபானில் 15ஆம் இரவில் வணக்கங்கள் புரிந்து அவ்விரவை உயிர்பியுங்கள். ஒரு வருடப் பாவங்களுக்கு அது பரிகாரமாகும்.” (மராக்கில் அர்வாஹ், துர்ருல் முக்தார், பஹ்ருர் ராயிக்.)

ஷாஃபி மத்ஹப்:
 
“இந்த இரவுக்கென்று விசேட சிறப்புக்கள் இருக்கிறது. பாவங்கள் மன்னிக்கப்படுகிறது.”
(பதாவா இப்னி ஹஜர் அல் ஹைத்தமி.)

“பிரார்த்தனைகள் அங்கீகரிக்கப்படும் ஐந்து இரவுகளில் இதுவும் ஒர் இரவாகும்.” (அல் உம்மு, முக்னில் முஹ்தாஜ்)

“இந்த இரவினை முழுமையாக வணக்கங்களைக் கொண்டு சிறப்பிக்கவேண்டும் .அப்பொழுதுதான் மேற்கூறிய பலாபலன்களை பெற்றிட முடியும் என்ற கருத்தினைப் பதிவு செய்துவிட்டு அந்த இரவின் சிறிது நேரங்கள் வணக்கங்களைப் புரிந்தாலும் அச்சிறப்பினைப் பெற்றிட முடியும்” (அல் மஜ்மூஉ)

ஹன்பலி மத்ஹப்:

“ஷஃபான் மாத 15 ஆம் இரவு சிறப்புமிக்கதாகும். அந்த இரவில் சலபு (முன்னோர்) கள் தொழுது வந்திருக்கின்றார்கள்.” (ஷரஹ் முன்தஹல் இராதாத். கஷ்ஷாஃபுள் கிநாயி ஃபீ மத்னில் கிநாய

ஷஃபான் மாதத்தின் 15 ஆம் இரவின் சிறப்பு பற்றிய தகவல்கள் யாவும் நம்பகரமற்றது. அவ்விரவில் விசேடமாக அமல்களில் ஈடுபடுவது வழிகேடாகும் என்பதற்கான பதில்.

“ஷரீக் என்பவர் நம்மிடம் வந்தபோது ஷஃபான் மாதத்தின் 15 ஆம் இரவில் அல்லாஹ்வின் முன்னோக்குதல் பற்றிய நபி மொழி சம்பந்தமாக அவரிடம் கேட்டோம். இதனை சிலர் நிராகரிப்பதாகவும் அவரிடம் நாம் கூறினோம். அவர்கள் என்ன சொல்கிறார்கள்? என்று அவர் கேட்டார். அவற்றில் குறைகள் இருப்பதாக சொல்கின்றனர் என்றோம். அதற்கு அவர்; நிச்சயமாக இந்த நபிமொழிகளை சொன்னவர்கள்தான் அல் குர்ஆனை நமிடம் ஒப்படைத்தவர்கள். தொழுகைகள் ஐந்து நேரங்களாகும். ஹஜ் செய்யவேண்டும். நோன்பு நோற்க வேண்டும் என்று சொன்னவர்களும் அவர்கள்தான். இந்த நபி மொழிகள் மூலமாகத்தான் அல்லாஹ்வைப் பற்றியும் நாம் அறிந்துகொண்டோம் என்றார்.” (இமாம் அஹ்மதின் புதல்வர் அப்துல்லாஹ். அஸ்ஸுன்னாஹ்)

“இந்த இரவின் சிறப்பு பற்றிப்பேச ஸஹீஹான நபிமொழி ஒன்றுகூட  இல்லையென்று கூறுபவர்களுக்கு  இவை தெளிவானதொரு ஆதாரங்களாக இருக்கிறது.” (துஹ்பதுள் அஹ்வதி ஷரஹ் திர்மிதி.)

“ஷஃபான் மாதத்தின் நோன்பு நோற்பதற்கு ஸஹீஹான  நபிமொழிகள் பல பதிவாகியிருக்கிறது. அத்துடன் இந்த மாதத்தின் 15 ஆம் இரவு சிறப்புமிக்கதென்பதற்கும் மர்ஃபூவான நபிமொழிகள் பல பதிவாகி இருப்பதைக் காணலாம். ஏராளமான அறிஜர் பெருமக்கள் இதனை அங்கீகரித்துள்ளனர். இமாம் அஹ்மத் இது பற்றிய பல தகவல்களை பதிவு செய்துள்ளார்கள். சலபுகள் இதனை நடைமுறைப்படுத்தி ஊர்ஜிதம் செய்துள்ளனர். இந்த இரவில் விரும்பினால் தனிமையில் தொழ முடியும். இவ்வாறு முன்னோர்கள் தொழுதிருக்கின்றார்கள். அத்துடன் அந்த தகவல்களை குற்றம் குறை காணும் மதீனா முனவ்வரா உட்பட பலவூர் அறிஜர்களும் இருக்கவே செய்கின்றனர். (இப்னு தைமிய்யாவின்.  “மஜ்மூஉல் ஃபதாவா”, “இக்திழாவுஸ் ஸிராத்தில் முஸ்தகீம்”)

“நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் பராஅத்துடைய இரவு ஜன்னத்துல் பகீ அடக்கஸ்தலம் சென்றுள்ளனர். இது பற்றி எந்தவொரு தோழருக்கும் அறிவிக்கவும் இல்லை. இவ்வாறு புரியவேண்டும் என்று தோழர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கவும் இல்லை. இருந்தாலும்கூட இந்த நபி மொழியின் அடிப்படையில் பராஅத்துடைய இரவு பலர் கூடி அடக்கஸ்தலம் சென்று நீண்ட நேரங்கள் துஆ பிரார்த்தனையில் ஈடுபட்டால் அதனை குற்றம் குறை கூறக்கூடாது. (மௌலவி இஸ்மாயில் திஹ்லவி. சிராத்துல் முஸ்தகீம்.)

“இந்த இரவில் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் அடக்கஸ்தலம் சென்றுள்ளார்கள். மரணித்தவர்களுக்கு பிராத்தனை புரிந்துள்ளார்கள். எனவே இந்த இரவினை அமல்களில் செலவு செய்யவேண்டும். விரும்பிய அமலை செய்துகொள்ள முடியும்.” (அப்துல் ஹை லக்னோவி. அல் ஆதாருள் மர்பூஆ பில் அக்பாரில் மௌழூஆ)

ஷபான் மாதத்தின் 15 ஆம் நாள் மற்றும் அதன் இரவின் சிறப்புக்கள் பற்றி பதிவான நபி மொழிகள் அனைத்தையும் மொத்தமாகப் பார்க்கும்போது சந்தேகமின்றி இது தெளிவான உண்மையான விடயமாகும் என்பது ஊர்ஜிதமாகிறது. (அல்பானி “அஸ்ஸில் ஸிலதுஸ் ஸஹீஹா” 1144 ம் இலக்கம்)
 

“பராஅத்துடைய இரவினை சிறப்பிப்பதற்காக இறை இல்லத்தில் ஒன்றுகூடி வணக்கத்தில் ஈடுபடுவதை இமாம்கள் வழிகேடாகும் என்று கூறியுள்ளார்களா?”

ஷஃபான் மாதத்தின் 15 ஆம் நாளின் பகலில் நோன்பிருந்து அவ்விரவில் விசேட வணக்கங்கள் புரிவதற்கான ஆதரங்கள் நபி மொழிகளில் இருந்து காண்பித்தோம். சலபுஸ் ஸாலிஹீன்களில் அநேகர் அந்த நாளில் விசேட வணக்கங்களை நிறைவேற்றி வந்திருக்கின்றார்கள் என்றுகூறி  அதற்கான ஆதரத்தினையும் பதிவு செய்தோம். அப்போது  சலபுஸ் ஸாலிஹீன்க்களில் ஒரு சாரார் அந்த நாளின் விசேட வணக்கத்தினை நிராகரித்துள்ளனர். அது தொடர்பிலான தகவகல்களை அவர்கள் ஏற்க மறுத்துள்ளனர் என்று அவற்றினை  மூடி மறைக்காமல் நாம் இங்கே சுட்டிக்காண்பிக்கவும் செய்தோம். அந்த அடிப்படையில்,

ஷஃபான் மாத 15 ஆம் இரவின் விசேட வணக்கம் தொடர்பில் மத்ஹபுடைய கிரந்தங்களில் இருந்து நமது நிலைப்பாட்டுக்கு சாதகமான கருத்துக்களை சமர்ப்பித்த நாம், மத்ஹபுடைய நூட்களில்  நமது நிலைப்பாட்டுக்கு முரணான கருத்துக்களும் பதிவகியுள்ளாதா? அவ்வாறு பதிவாகி இருந்தால் அதற்கான பதில்கள் என்னவென்றும் கூறவேண்டிய பொறுப்பு நமக்கு இருப்பதனால் அது பற்றி இப்பொழுது அலசுவோம் வாருங்கள்.

மாலிக் மத்ஹப்.

“ஷஃபான் மாதத்தின் 15 ஆம் இரவில் ஒன்றுகூடுவது மக்ரூஹ் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இதை பொறுப்புதாரிகள் தடுத்து நிறுத்த வேண்டும்.” ( மவாஹிபுல் ஜலீல் ஃபீ ஷர்ஹி முக்தஸரிஷ் ஷைகில் ஜலீல், அஷ்ஷர்ஹுள் கபீர்.)

ஹனபி மத்ஹப்/

“இவ்விரவினை சிறப்பிப்பதற்காக இறை இல்லத்தில் ஒன்றுகூடுவது மக்ரூஹ்  ஆகும். தனிமையில் தொழ முடியும்.” (மராக்கில் ஃபலாஹ், அல் பஹ்ருர் ராயிக்.)

ஹன்பலி மத்ஹப்.

“இவ்விரவினை சிறப்பிப்பதற்காக இறை இல்லத்தில் ஒன்றுகூடுவது பித்அத் ஆகும்.” (ஷரஹ் முன்தஹல் இராதாத், கஷ்ஷாஃபுள் கினாஇ அன் மத்னில் இக்னாஇ, மதாலிபுல் உளின் நுஹா)
“இவ்விரவினை சிறப்பிப்பதற்காக இறை இல்லத்தில் ஒன்றுகூடி தொழுவது மக்ரூஹ்  ஆகும். தனிமையில் தொழ முடியும்.” (இப்னு ரஜப் அல் ஹன்பலி: லதாயிபுல் மஆரிப்)

ஷாஃபி மத்ஹப்.

“ஷஃபான் மாதத்தின் 15 ஆம் இரவு மக்ரிப் தொழுகையினை அடுத்து 1௦௦ ரக்அத்துக்கள் தொழுவது நிராகரிக்கப்படவேண்டிய பித்அத் ஆகும்.” (இமாம் நவவி: அல் மஜ்மூஉ)

சகோதரர்களே! ஷஃபான் மாதத்தின் பராஅத்துடைய இரவு சிறப்பிக்கப்பட வேண்டும். அவ்விரவினை வணக்க வழிபாடுகளில் கழிக்கவேண்டும் என்ற நமது நிலைப்பாட்டுக்கு  எந்த இமாம்களின் கருத்துக்களை சாதகமாக மேல் வரிகளில் நாம் பதிவு செய்தோமோ அதே இமாம்கள் அதே நூலில் பராஅத்துடைய இரவினை சிறப்பிப்பதற்காக இறை இல்லத்தில் ஒன்று கூடுவதை நிராகரித்துள்ளார்களே என்று தயக்கமடைய வேண்டாம். பீதி கொள்ளவேண்டாம்.

இமாம்கள் கூறியுள்ள கருத்துக்களை கவனமாகப் படித்துப்பாருங்கள். பராஅத்துடைய இரவினை சிறப்பிப்பதற்காக இறை இல்லத்தில் ஒன்று கூடுவது கூடாதுன்னு கூறும்போது ஏதேனும் ஒன்றை குறிப்பிட்டுப் பேசுகின்றர்களா? என்று கூர்ந்து பாருங்கள். அப்பொழுது, முன்னுக்குப்பின் முரணான கருத்துக்களை இமாம்கள் பதிவு செய்யவில்லை என்பதும் நமது நிலைப்பாட்டுக்கு அவர்கள் முரணானவர்களுமல்ல என்பதும் உங்களுக்குப் புரியும்.

பராஅத்துடைய இரவு சிறப்பிக்கப்படவேண்டும். அதற்காக இறை இல்லம் உட்பட விரும்பும் இடத்தில்  ஒன்று கூடலாம். விரும்பும் அமல்களைப் புரியலாம். ஆனாலும் அன்றிரவு இறை இல்லத்தில் ஒன்றுகூடி கூட்டாக 1௦௦ ரக்அத்துக்கள் தொழுகையை நிறைவேற்றவேண்டாம் என்றுதான் இமாம்கள் கூறுகின்றார்களே தவிர, எதிரணியினர் சொல்வதுபோன்று அவ்விரவு நினைவு கூறப்படக்கூடாது. அதற்காக இறை இல்லங்களில் விசேட நிகழ்வுகள் ஏற்பாடு சைய்யக்கூடாதென்று  அறிவுசார்ந்த எவரும்  கூறவில்லை என்பதைப் புரியுங்கள்.

“பராஅத்துடைய இரவில் முன்னோர்களெல்லாம் தொழுததுபோன்று விரும்பினால் தனிமையில் அல்லது கூட்டாகத் தொழ முடியும். இது நல்லதொரு கருமம். ஆனாலும்கூட 1௦௦ ரக்அத்துக்கள் போன்ற நிர்ணயிக்கப்பட்ட தொழுகையினை தொழுவதற்காக இறை இல்லத்தில் ஒன்றுகூடுவது பித்அத் ஆகும்.” (இப்னு தைமிய்யா பதாவல் குப்ரா, மஜ்மூஉல் பதாவா.)

“இது எனது மாதம்”

கிப்லா மாற்றப்பட்ட மாதம்.

“கஅபாவை முன்நோக்கித் தொழவேண்டும் என்ற ஆசை இந்த மாதத்தின் 15 நாளில்தான் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களுக்கு நிறைவேறியதது.” (ஸஹீஹ் இப்னி ஹிப்பான்.) இதனை இமாம் குர்துபி, தப்ரி, நவவி, ஹலபி  போன்றவர்களும் குறிப்பிடுகின்றனர்.

ஸலவாத்துடைய மாதம்.

“அல்லாஹ்வும் அவனது அமரர்களும் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களுக்கு ஸலவாத் சொல்கின்றார்கள். விசுவாசிகளே! நீங்களும் அவர்களுக்கு ஸலவாத்தும் சலாமும் சொல்லுங்கள்” என்ற பொருளைத் தரும் இறை வாக்கியம் இந்த மாதத்தில்தான் இறங்கியதென்று பல அறிஜர் பெருமக்கள் கூறியதாக அஸ்ஸெய்யித் முஹம்மத் அலவிய்யுள் மாலிகி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அன்னவர்கள் கூறுகின்றார்.

“இது எனது மாதம்” என்று ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் நவின்றதற்கு இவற்றினை காரணங்களாகவும் எடுத்துக்கொள்ள முடியும்.

இந்த மாதத்தினை மக்கள் மறந்துவிடுகின்றார்கள் என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் அறிவித்துவிட்டதால் அதனை எல்லோரும் நினைவு கூறமாட்டார்கள் என்பது நிஜமாகும். எனினும் இந்த மறதி எவ்வாறு உருவாக்கப்படுகிறது? யார் இதற்குத் தடையாக இருக்கின்றார்கள்? எதற்காக இவ்வாறு செய்கிறார்கள்? என்பதைக்  கண்டறிய முடிந்தால் முயற்சி செய்யுங்கள்.

рокிро░рокро▓்ропрооாрой рокродிро╡ுроХро│்