роироо்рооுроЯрой் роЗрогைрои்родு роЗро░ுрок்рокро╡ро░்роХро│்

родிроЩ்роХро│், роЪெрок்роЯроо்рокро░் 30, 2019

рокро┤ро╡ேро▒்роХாроЯு,pulicat,

#ஏன்_பழவேற்காட்டை_பாதுகாக்க_வேண்டும்
இந்தியாவிலேயே முதன் முதலாக குடியேறிய மாலுமி வாஸ்கோடகாமா என்றும் தற்போது கேரளாவில் உள்ள கோழிகோட்டை என்ற இடத்தை அடைந்ததும் யாவரும் அறிந்த வரலாற்று உண்மையே

அதேப்போல் பழவேற்காட்டில் போர்த்துகீசியர்கள் 1522ல் குடியேறினார்
அதைத்தொடர்ந்து 1607ல் டச்சுக்காரர்கள் இங்கு வந்தனர்
அப்பொழுது நாயக்க மன்னர் இரண்டாம் வேங்கடரின் மனைவி இறைவிடம் டச்சுக்காரர்கள் அனுமதிப் பெற்று ஒரு சிறு தொழிற்சாலையை நிறுவினார்

அருகில் உள்ள போர்த்துகீசியர்களால்  பொருத்து கொள்ள இயலாமல் அத்தொழிற்சாலையை தாக்கி நாசமாக்கினார் அப்பொழுதுதான் டச்சுக்காரர்களுக்கு கோட்டை கட்டும் அவசியம் வந்தது

1613ல் ஜெல்ரியா என்ற கோட்டையை டச்சுக்காரர்கள் கட்டி முடித்தனர்.
ஜெல்ரியா என்பதன் பொருள் நெதர்லாந்தில் உள்ள ஒரு மாகாணத்தின் பெயர்.இந்த கோட்டையை பார்த்துதான் புனித ஜார்ஜ் கோட்டையை 1639 இல் ஆங்கிலேயர்கள் கட்டினா்.புனித ஜார்ஜ் கோட்டையை கட்டுவதற்கு பழவேற்காட்டில் உள்ள ஜல்ட்ரியா கோட்டையும் ஒரு காரணம்தான்

பின்பு அந்த கோட்டையை தகர்க்க எத்திராஜ் என்ற  அரசன் முயற்சி செய்தபோது டச்சுக்காரர்கள் அந்த சதியை முறியடித்தனர் அதுமட்டுமில்லாம் போர்த்துகீசியர்களும் முயற்சி செய்தனர் அதுவும் தோல்வியில்தான் முடிந்தது எப்பொழுதும் அந்த கோட்டையை சுற்றி 100 பாதுகாவலர்கள் இருந்ததாக குறிப்புகளும் உண்டு

சென்னையின் வரலாறுகூட 400 ஆண்டுகளுக்கு உட்பட்ட வரலாறே ஆனால் பழவேற்காட்டுடைய வரலாறு என்பது 1000 ஆண்டுகளுக்கு முந்திய வரலாறு என்று கூறலாம்
அதுமட்டுமில்லாமல் சோழர்கால சிவன் கோயிலும்,விஜயநகர பேரரசு கட்டின ஆதிநாரயண பெருமாள் கோயிலும் இங்கு சிறப்பானது,பள்ளி வாசலில் உள்ள நிழல் கடிகாரம்,மகிமை மாத கோயில்,முகத்துவாரம் இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்

இந்தியாவிலேயே இரண்டாவது உப்புநீர் உவரி பழவேற்காடு ஏரிதான்,உலக பாரம்பரிய சின்னங்களில் பழவேற்காடு ஏரியும் ஒன்று,ஆறும் கடலும் கலக்கக் கூடிய முகத்துவாரம்,படகு சவாரி,பறவைகள் சரணாலயம், என்னற்ற சுற்றுலா தளங்களாகவும் பழவேற்காடு அமைந்துள்ளது

வருடம் முழுவதும் இறால் கிடைக்க கூடிய இடமும் பழவேற்காடுதான்,இங்கு பச்சைகல்(கட்டுநண்டு) நண்டு,சிலிக்கா நண்டு,கோட்றா,வெள்ளறா,சமூக்க எறா இப்படி பலவகையான இறாக்களும் நண்டுகளும் உண்டு.அதேப்போல். மீன்வகைகளில் ஆத்துமீன் கடல்மீன் என்று இரண்டு வகையான மீன்களாக பிரிக்கலாம்,ஆற்றில் ஊடன்,கெலங்கான்,மடவ,சப்பிளி,சங்கரா,உடுபாத்தி,மட்டுவான்,போன்ற மீன்களும் கடலில் பாற,கானங்களுத்தி,வஞ்சிரம்,சுறா,கொடுவா,சூர,மத்தி,இன்னும் பல மீன்கள் இப்பழவேற்காட்டில் காணலாம்

இங்கு பிடிக்க கூடிய மீன்களை கேரளா,கர்நாடக,ஆந்திரா போன்ற  மாநிலங்களுக்கும்,சென்னை அருகிலுள்ள காசிமேடு,சிந்தாதிரிப்பேட்டை போன்ற இடங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது

இப்படி வரலாறும்,இயற்கையும் நிறைந்த பழவேற்காட்டை எல்.என்டி  துறைமுகத்தால் மீன்வளம் குறைந்தும்,சமூகத்தில் பொருளாதார தேக்கமும் நிலவுகிறது மீண்டும் அதானி என்னும் துறைமுகம் வர ஒருபோதும் நாம் அனுமதி தரக்கூடாது பழவேற்காட்டை பாதுகாப்பது  நம் ஒவ்வொருவரின் தலையாய கடமை நமது
#Save_Pazhaverkadu
#Stop_Adani_Port

роЪройி, роЪெрок்роЯроо்рокро░் 28, 2019

рооௌро▓ாройா рооௌро▓ро╡ி роХாроЬா ро╣роЬ்ро░род் рокропாрой்роХро│்,






























































































роХாроЬா рооொроп்ройுродீрой் роЕро┤ро░род் рокропாрой்


роЪுроХ்роХு рокро▒்ро▒ி роЙроЩ்роХро│ுроХ்роХு родெро░ிропுрооா,

1. சுக்குடன் சிறிது பால் சேர்த்து, மைய்யாக அரைத்து, நன்கு சூடாக்கி, இளஞ்சூடான பதத்திற்கு ஆறினதும், வலியுள்ள கை, கால் மூட்டுகளில் பூசிவர மூட்டுவலி முற்றிலும் குணமாகும்.

2. சுக்கைத் தூள் செய்து, எலுமிச்சை சாறுடன் கலந்து குடித்தால் பித்தம் விலகும்.

3. சுக்கு, மிளகு, தனியா, திப்பிலி, சித்தரத்தை இவை அனைத்தையும் இட்டு கஷாயம் செய்து பருகிவர, கடுஞ்சளி மூன்றே நாட்களில் குணமாகும்.

4. சிறிது சுக்குடன், ஒரு வெற்றிலையை மென்று தின்றால், வாயுத்தொல்லை நீங்கும்.

5. சுக்கு, வேப்பம்பட்டை போட்டு கஷாயம் செய்து குடித்துவர, ஆரம்பநிலை வாதம் குணமாகும்.

6. சுக்குடன் சிறிது நீர் தெளித்து, விழுதாக அரைத்து, நெற்றியில் தடவினால் தலைவலி வந்தவழியே போய்விடும்.

7. சுக்கு, கருப்பட்டி, மிளகு(Pepper) சேர்த்து, "சுக்கு நீர்" காய்ச்சிக் குடித்து வர உடல் அசதி, சோர்வு நீங்கி சுறுசுறுப்பு ஏற்படும்.

8. சுக்குடன், தனியா வைத்து சிறிது நீர் தெளித்து, மைய்யாக அரைத்து உண்டால், அதிக மது அருந்திய போதை தீர்ந்து இயல்பு நிலை ஏற்படும்.

9. சுக்கோடு சிறிது வெந்தயம் சேர்த்துப் பொடியாக்கி, தேனில் கலந்து சாப்பிட்டால், அலர்ஜி தொல்லை அகலும்.

10. சுக்கு, மிளகு, சீரகம்(Cumin), பூண்டு(Garlic) சேர்த்து கஷாயம் செய்து காலை, மாலை குடித்துவர மாந்தம் குணமாகும்.

11. சுக்குடன், சிறிது துளசி இலையை மென்று தின்றால், தொடர் வாந்தி, குமட்டல் நிற்கும்.

12. சுக்குடன், மிளகு, சுண்ணாம்பு சேர்த்து மைய்யாக அரைத்துப் பூசிவர, தொண்டைக் கட்டு மாறும். குரல் இயல்பு நிலைபெறும்.

13. சிறிது சுக்குடன், சின்ன வெங்காயத்தை வைத்து அரைத்துச் சாப்பிட்டால், மலக்குடலில் உள்ள தீமை தரும் கிருமிகள் அழியும்.

14. சுக்குடன், கொத்தமல்லி இட்டு கஷாயம் செய்து பருகினால் மூலநோய் தீரும்.

15. சுக்கு, ஐந்து மிளகு, ஒரு வெற்றிலை சேர்த்து மென்று தின்று, ஒரு தம்ளர் நீர் குடித்தால் தேள், பூரான் கடி விஷம் முறியும்.

16. சுக்கு, அதிமதுரம் இரண்டையும் தூள் செய்து, தேனில் கலந்து சாப்பிட்டுவர குற்றிருமல் குணமாகும்.

17. தயிர்சாதத்துடன், சிறிது சுக்குப்பொடி இட்டு சாப்பிட்டால், வயிற்றுப்புண் ஆறும்.

18. சுக்கு (Dry Ginger), மிளகு, பூண்டு, வேப்பிலை இவைகளைச் சேர்த்து கஷாயம் செய்து, தினம் மூன்று வேளை வீதம் இரண்டு நாட்கள் குடித்துவர விஷக்காய்ச்சல் குறையும்.

19. சுக்கு, மிளகு, சீரகம் இட்டு எண்ணெய் காய்ச்சி, தலைக்குத் தேய்த்துக் குளித்துவர, நீர்க்கோவை நீங்கும். ஈர், பேன் ஒழியும்.

20. சுக்குத்தூளுடன் உப்பு சேர்த்து பல் துலக்கிவர, பல்வலி தீரும். ஈறுகள் பலம் பெறும். வாய்துர்நாற்றம் விலகும்.

நன்றி.....

ро╡ெро│்ро│ி, роЪெрок்роЯроо்рокро░் 27, 2019

роЗро▓ро╡роЪ ро╡ீроЯு ро╡ேрог்роЯுрооா,

சொர்க்கத்தில் நமக்கென ஒரு சொந்தவீடு

1. பள்ளிவாசல் கட்டுதல்:

நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள் “ யார் ஒருவர் அல்லாஹ்வுக்காக ஒரு பள்ளியைக்கட்டுவாரோ, அவருக்காக அல்லாஹ் சொர்க்கத்தில் ஒரு வீட்டைக் கட்டுகிறான்” (புஹாரி – முஸ்லிம்)

2. சூரத்துல் இஹ்லாஸ் ஓதுதல்:

நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள், “எவர் ஒருவர் குல்ஹுவல்லாஹுஅஹத் (சூரத்துல் இஹ்லாஸ்) சூராவை தினமும் தொடரந்து பத்து முறை ஓதுவாரோ அவருக்காக அல்லாஹ் சுவர்க்கத்தில் ஒரு வீட்டைக்கட்டுகிறான்.” இதை முஆத் பின் அனஸ் (ரழி) அறிவிக்கிறார்கள். (ஸஹீஹுல் ஜாமிஃ-6472)

3. தனது குழந்தையை இழந்துவிட்டால் பொறுமையோடு அல்லாஹ்வை புகழ்தல்:

நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள், “ஒருவர் தனது குழந்தை மரணித்துவிட்டால், உடனே மலக்குகளிடம் அல்லாஹ்: “எனது அடியானின் இதயக்கனியை நீங்கள் பறித்து வந்து விட்டீர்களா? என்று கேட்பான். அதற்கு அவர்கள் “ஆம், பறித்து வந்துவிட்டோம்” என சொல்வார்கள். மீண்டும் அவர்களிடம் அல்லாஹ்: எனது அடினானின் இதயக்கனியை நீங்கள் பறித்தபோது, எனது அடியான் என்ன சொன்னான்? என கேட்பான். அதற்கு அவர்கள் “இறைவா ! அந்த அடியான் “ அல்ஹம்துலில்லாஹ், இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்” என்று சொன்னான் என மலக்குகள் கூறுவார்கள். உடனே அல்லாஹ் மலக்குகளிடம், “அந்த அடியானுக்காக சொர்க்கத்தில் ஒருவீட்டைக்கட்டுங்கள், அந்த வீட்டிற்கு “புகழுக்குரிய வீடு” என்று பெயரிடுங்கள்” என சொல்வான். இதை அபுமூஸா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (ரியாலுஸ்ஸாலிஹீன்-362-1)

4. கடைவீதியில் ஓதவேண்டிய திக்ரை ஓதுதல்:

எவர் ஒருவர் கடைவீதியில் நுழைந்தவுடன் “ லாயிலாஹ இல்லல்லாஹ், வஹ்தஹு லாஷரீக்கலஹு லஹுல்முல்கு, வலஹுல்ஹம்து, யுஹ்யீ, வ யுமீது, வஹுவ ஹய்யுன் லா யமூத்து, பி யதிகல் ஹைரு, வஹுவ அலா குல்லி ஷையின் கதீர்” என்று சொல்கிராறோ அவருக்கு, அல்லாஹ் பத்து லட்ச‌ம் நன்மைகளை வழங்குகிறான், பத்து லட்ச‌ம் தீங்குக‌ளைவிட்டும் அவரை விலக்குகிறான், பத்து லட்ச‌ம் அந்தஸ்துகளை உயர்த்துகிறான், மேலும் அவருக்காக சொர்க்கத்தில் ஒரு வீட்டைக் கட்டுகிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இதை இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (ஸஹீஹுல் ஜாமிஃ-1113-1)

5. ஜமாஅத் தொழுகையில் வரிசையில் ஏற்படும் இடைவெளியை நிரப்புதல்:

எவர் ஒருவர் ஜமாஅத் தொழுகையின்போது, வரிசைகளில் ஏற்படும் இடைவெளியை நிரப்புகிறாரோ, அவருக்காக அல்லாஹ் சொர்ர்க்கத்தில் ஒரு வீட்டைக் கட்டுகிறான், என நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள். இதை அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (ஸஹீஹுல் ஜாமிஃ-1843)

6. ஃபர்ளான தொழுகையில் முன்-பின் சுன்னத் 12 ரக்கஅத்-களை தொடர்ந்து தொழுதல்:

எவர் ஒருவர் ஃபர்ளான தொழுகையின் முன்-பின் சுன்னத் தொழுகைகளை 12 ரக்கஅத் (ளுஹருக்கு முன் இரண்டு இரண்டாக நான்கும், ளுஹருக்கு பின் இரண்டும், மஃரிபுக்குப்பின் இரண்டும், இஷாவுக்குப்பின் இரண்டும், ஃபஜ்ருக்கு முன் இரண்டும், மொத்தம் 12 ரக்கஅத்)தை தொடர்ந்து தொழுது வருபவர்களுக்கு, அல்லாஹ் சொர்க்கத்தில் ஒரு வீட்டை கட்டுகிறான். என நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள். இதை அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (இப்னுமாஜா – திர்மிதி)

7. அல்லாஹ்வுக்காக ஹிஜ்ரத் செய்தல்:

எவர் அல்லாஹ்வை ஈமான்கொண்டு, என்னைப்பின்பற்றி அல்லாஹ்வுக்காக நாடு துறந்து ஹிஜ்ரத் செய்கிறாரோ, அவருக்கு அல்லாஹ் சொர்க்கத்தில் ஒரு வீட்டை கட்டுகிறான், என நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள். இதை ஃபளாழத் பின் அபீத் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (ஸஹீஹுல் ஜாமிஃ-235-1)

8. நற்பண்புகள்:

எவர் ஒருவர் தன்பக்கம் உரிமையிருந்தும், பிறருக்கு விட்டுக்கொடுக்கிறாரோ அவருக்கு சொர்க்கத்தின் கீழ்தளத்தில் ஒரு வீடு கிடைப்பதற்கும், எவர் ஒருவர் நகைச்சுவைக்காகக்கூட பொய் பேசாமல் தன்னை பேணிக்கொள்கிறாரோ அவருக்கு சொர்க்கத்தின் நடுத்தளத்தில் ஒரு வீடு கிடைப்பதற்கும், அழகிய நற்பண்புகளை தனதாக்கிக்கொள்பவருக்கு சொர்க்கத்தின் மேல் தளத்தில் ஒருவீடு கிடைப்பதற்கும் நான் பொறுப்பெடுத்துக் கொள்கிறேன்” என நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள். இதை அபீ அமாமா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (صحيح الترغيب وترهيب 6-3)

சொர்க்கத்தில் நமக்கென ஒரு தோட்டம்

வீடு மட்டுமிருந்தால் போதுமா? அதைச்சுற்றி தோட்டம், தோப்பு, பூங்கா போன்றவை வேண்டாமா? மனிதன் எதை விரும்புவான் என்பதை அவனைப்படைத்த இறைவனுக்குத் தெரியாதா?. இதோ, இறைவன் தனது அடியானுக்கு பரிசளிக்கும் அரண்மணையைச்சுற்றி தோட்டம் அமைத்துத் தருவதாகவும் வாக்களிக்கிறான்.

இவ்வுலகில் நாம் அமைக்கும் தோட்டம் போன்றதல்ல, இறைவன் ஏற்படுத்தும் தோட்டம். அது என்றும் பலன்தரக்கூடிய நிலையான சொர்க்கப் பூஞ்சோலைகளாகும். அத்தகைய தோட்டங்களைப் பெறுவதற்கான எளிய வழிமுறைகளையும் அண்ணல் (நபி) ஸல் அவர்கள் நமக்கு அறிவித்துத்தருகிறார்கள்.

இறைவனை நினைவுகூர்வதன் வழியாக அதனை நாம் பெற்றுக்கொள்ள முடியும். இதற்கான நபிவழியாக கீழே கொடுக்கப்பட்டுள்ள திக்ருகளை தொடர்ந்து ஓதிவருவோமானால் அரண்மணைகள் மட்டுமல்லாது, அத்துடன் அழகிய தோட்டங்களையும் நமக்கு பரிசளிப்பதற்கு இறைவன் காத்திருக்கிறான்.

இவ்வுலகில் பொருளைத்தேடுவதற்காக எந்தளவிற்கு போராடுகிறோமோ, அதைவிட பன்மடங்கு ஆர்வத்தோடு எல்லையில்லா இன்பங்களை தன்னகத்தே கொண்ட அரண்மனைகளையும் தோட்டங்களையும் நாம் ஒவ்வொருவரும் பெறுவதற்கு மிகுந்த ஆர்வத்தோடும் இறைவன் தருவான் என்ற நம்பிககையோடும் நமது வாழ்வில் எல்லா நிலையிலும் முயற்சி செய்யவேண்டும் அதற்கு ஏக இறைவனாகிய அல்லாஹ் நமக்கு அருள் புரிவானாக!!!.

திக்ரு செய்வது:

ஒருமுறை நபி (ஸல்) அவர்கள் அபுஹுரைரா (ரழி) அவர்களின் இல்லத்தின் வழியாக சென்றபொழுது, அபுஹுரைரா (ரழி) அவர்கள் தோட்டவேலை செய்துகொண்டிருந்தார்கள். அதைக்கண்ட ரஸூ{ல் (ஸல்) அவர்கள்,
அபுஹுரைராவே ! நீர் என்ன செய்துகொண்டிருக்கிறீர்? என கேட்டார்கள். அதற்கு நான் மரங்களை நட்டுக்கொண்டிருக்கிறேன், என சொன்னபொழுது, அபுஹுரைராவே! மரம் நடுவதைவிட சிறந்த ஒன்றை நான் அறிவித்துத் தரட்டுமா? என கேட்டார்கள். அறிவித்துத்தாருங்கள், யா ரஸூலுல்லாஹ் என அபுஹுரைரா (ரழி) அவர்கள் கூறினார்கள். ஸுப்ஹானல்லாஹி வல்ஹம்துலில்லாஹி வ லாயிலாஹ இல்லல்லாஹுவல்லாஹுஅக்பர்” என நீர் ஒவ்வொருமுறை சொல்லும்போதும் அல்லாஹ் உமக்காக சொர்க்கத்தில் ஒரு மரத்தை நடுகிறான்” என நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள். இதை அபுஹ{ரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கறார்கள் (ஸஹீஹுல் ஜாமிஃ)

எவர் ஒருவர் தினமும் ஸுப்ஹானல்லாஹில் அழீம் வபிஹம்திஹி என கூறுகிறாரோ அவருக்காக அல்லாஹ் சொர்க்கத்தில் ஒரு ஈச்ச‌மரத்தை நடுகிறான் என நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள். இதை ஜாபிர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (ஸஹீஹுல் ஜாமிஃ-6429)

ро╡ிропாро┤рой், роЪெрок்роЯроо்рокро░் 26, 2019

роЗро╕்ро▓ாрооிроп роТро┤ுроХ்роХро╡ிропро▓்,

தொப்பியும் தாடியும் புர்காவும் மாத்திரம் அல்ல முஸ்லிம்களின் முன்மாதிரி

திருடக்கூடாது.

பொய் சொல்லக் கூடாது.

லஞ்சம், ஊழல் கூடாது.

கடத்தல் கூடாது.

வட்டி கூடாது.

பதுக்கல் வியாபாரம் கூடாது.

பிற மதத்தை நிபந்தனை செய்யக் கூடாது.

நம்பிக்கைத் துரோகம் கூடாது.

பிறரை ஏமாற்றக் கூடாது.

பிறர் குறை பேசக் கூடாது.

பிறரைக் கேலி, கிண்டல் செய்யக் கூடாது.

பிறர் சொத்தை அபகரிக்கக் கூடாது.

அனாதைகளை விரட்டக் கூடாது.

ஒப்பந்தத்துக்கு மாறு செய்யக் கூடாது.

பிறரை வம்பிழுக்கக் கூடாது.

எவரையும் அநியாயமாக கொல்லக் கூடாது.

எவரையும் தூற்றித் திரியக் கூடாது.

எவர் மீதும் தப்பெண்ணம் கூடாது.

கடும் வார்த்தைப் பிரயோகம் கூடாது.

எவர் மீதும் அபாண்டம் சுமத்தக் கூடாது.

எவரையும் துன்புறுத்தக் கூடாது.

பெரும் சிரிப்புக் கூடாது.

பெருமை கூடாது.

பேராசை கூடாது.

ஆடம்பரம் கூடாது.

ஆணவம், அகம்பாவம் கூடாது.

ஆட்டம் போடக் கூடாது.

எவரையும் அடிமைப்படுத்தக் கூடாது.

பிறர் விசயத்தில் நுழையக் கூடாது.

அனுமதியின்றி பிறர் வீடு புகக் கூடாது.

எவரையும் கடிந்து கொள்ளக் கூடாது.

எவர் மீதும் எரிந்துவிழக் கூடாது.

பூமியில் செருக்காக நடக்கக் கூடாது.

கோபம் கூடாது.

பொறுமை இழக்கக் கூடாது.

கஞ்சத்தனம் கூடாது.

எவரையும் அலைக்கழிக்கக் கூடாது.

அபயமளிக்க மறுக்கக் கூடாது.

பிறர் உரிமை மீறக் கூடாது.

நடிக்கக் கூடாது.

வேடம் போடக் கூடாது.

ஒழுக்கம் தவறக் கூடாது.

அசுத்தமாக இருக்கக் கூடாது.

உறவுகளை துண்டிக்கக் கூடாது.

வீண் குழப்பங்களை உண்டு பண்ணக் கூடாது.

போதைப்பொருள் பாவனை, விற்பனை கூடாது.

நன்நம்பிக்கை நன்னடத்தை போன்ற நல்லவைகள் மட்டுமே கொண்டிருக்க வேண்டும்

இஸ்லாம் கூறும் இவ்வடிப்படையான விசயங்களைப் புறந்தள்ளிவிட்டு வெறுமனே வெளித் தோற்றங்களுக்கு மாத்திரம் முக்கியத்துவமளிப்பதில் எந்தப் பிரயோசனமும் இல்லை.

ரசூலுல்லாஹ்வின் அழைப்புப் பணியில் முதன்மையானது அன்னாரது நற்பண்புகளே. அதன்பின்னரே ஏனைய அணிகலன்கள்.

எனவே பிறருக்கு முன்மாதிரியான ஒரு நல்ல முஸ்லிமாக வாழ அல்லாஹ் எனக்கும் உங்களுக்கும் வழி காட்டுவானாக

ро╡ெро│்ро│ி, роЪெрок்роЯроо்рокро░் 13, 2019

роЪрои்родிро░ாропрой்-2 роЪோродройைроХ்роХாрой рооுроЯிро╡ைрок் рокро▒்ро▒ி.роЗро╕்ро▓ாроо்,

சந்திராயன்-2 சோதனைக்கான முடிவைப் பற்றி...

வருமுன் உரைத்த இஸ்லாம்*

*மனிதன் பூமியில் தான் வாழ முடியும்*

நாம் வாழ்கின்ற பூமியைப் போலவே இன்னும் பல கோள்கள் இருப்பதையும், பூமியைப் போலவே அவை சுற்றிச் சுழல்வதையும் திருக்குர்ஆன் கூறுகிறது. விண்வெளிப் பயணம் கூட சாத்தியம் எனத் திருக்குர்ஆன் கூறுகிறது.

ஆனாலும் பூமியில் தான் மனிதன் வாழ முடியும்; வேறு எந்தக் கிரகத்திலும் மனிதன் வாழ முடியாது என்பதை அழுத்தமாக எடுத்துரைக்கிறது.

உங்களுக்குப் பூமியில் குறிப்பிட்ட காலம் வரை வாழ்விடமும், வசதியும் உள்ளன என்றும் கூறினோம்.

திருக்குர்ஆன் : 2:36

உங்களுக்குப் பூமியில் குறிப்பிட்ட காலம் வரை தங்குமிடமும், வசதியும் உள்ளன என்று (இறைவன்) கூறினான்.

திருக்குர்ஆன் 7:24

அதிலேயே வாழ்வீர்கள்! அதிலேயே மரணிப்பீர்கள்! அதிருந்தே வெளிப்படுத்தப்படுவீர்கள் என்றும் கூறினான்.

திருக்குர்ஆன் 7:25

பூமியில் உங்களை வாழச் செய்திருக்கிறோம். உங்களுக்கு வசதி வாய்ப்புகளையும் இதில் ஏற்படுத்தினோம்.

திருக்குர்ஆன் 7:10

அவனது கட்டளைப்படி வானமும், பூமியும் நிலை பெற்றிருப்பதும் அவனது சான்றுகளில் உள்ளவை. பின்னர் அவன் உங்களை ஒரே தடவை அழைப்பான். அப்போது பூமியிலிருந்து வெளிப்படுவீர்கள்.

திருக்குர்ஆன் 30:25

பூமியிலிருந்து மீண்டும் எழுப்பப்படுவீர்கள் என்ற சொற்றொடர் முக்கியமாகக் கவனத்தில் கொள்ள வேண்டிய சொற்றொடராகும். எல்லா மனிதர்களும் அழிக்கப்பட்ட பின் அனைவரும் பூமியிலிருந்து எழுப்பப்படுவார்கள் என்பது ஒரு மனிதன் கூட பூமிக்கு வெளியே வாழ முடியாது என்பதைத் தெளிவுபடுத்துகிறது.

இதில் தான் வாழ்வீர்கள் என்ற சொற்றொடர் பூமியைத் தவிர வேறு எங்கும் மனிதர்கள் இயற்கையாக வாழ முடியாது என்பதை எடுத்துரைக்கிறது. சில கோள்களில் உயிரினம் வாழ்ந்த தடயம் தென்படுகிறது என்றெல்லாம் கூறினாலும் அது நிரூபிக்கப்படவில்லை. மனிதன் பூமியில் மட்டும் தான் வாழ முடியும் என்பதை விஞ்ஞானிகளும் ஒப்புக் கொள்கிறார்கள்.

மனிதன் தாங்கிக் கொள்கின்ற அளவுக்கு வெப்பமும், குளிரும் பூமியில் மட்டுமே உள்ளது.

சில கோள்களில் காணப்படும் வெப்பம் மனிதனைக் கரிக் கட்டையாக்கி விடும்.

சில கோள்களில் காணப்படும் குளிர் மனித இரத்தத்தை உறைந்து போகச் செய்து விடும்.

உயிர் வாழ அவசியமான காற்றும் பூமியில் தான் இருக்கிறது. ஆக்ஸிஜன் துணையுடன் சில நாட்கள் விண்வெளியில், அல்லது சந்திரனில் தங்குவதை வாழ்வது என்று கூறக் கூடாது. அது இயற்கைக்கு மாற்றமானது.

அதை விட முக்கியமாகக் கவனிக்க வேண்டியது பூமி மட்டுமே சூரியனிலிருந்து 23 டிகிரி சாய்வாகச் சுழல்கிறது. இப்படிச் சாய்வாகச் சுழல்வதால் தான் கோடை, குளிர், வசந்தம், மற்றும் இலையுதிர் காலங்கள் ஏற்படுகின்றன.

வருடமெல்லாம் ஒரே சீரான வெப்பமோ, குளிரோ இருந்தால் அதுவும் வாழ்வதற்கு ஏற்றதாக இராது. எழுதப் படிக்கத் தெரியாத முஹம்மது நபிக்கு இதில் தான் வாழ்வீர்கள் என்று எவ்வாறு அடித்துக் கூற இயலும்? எல்லாக் கோள்களையும் படைத்த இறைவனால் மட்டுமே அன்றைய நிலையில் இதனைக் கூற முடியும். எனவே இதுவும் இறை வேதம் என்பதை நிரூபிக்கும் சான்றாக உள்ளது.

*நீங்கள் படித்து விட்டு மற்றவர்களுக்கும் அனுப்புங்கள்*

*உங்கள் வாயிலாக அல்லாஹ் ஒருவரை நேர்வழியில் செலுத்துவது சிகப்பு ஒட்டகங்களை (தருமம் செய்வதை) விட உங்களுக்குச் சிறந்ததாகும்*

рокிро░рокро▓்ропрооாрой рокродிро╡ுроХро│்