நம்முடன் இணைந்து இருப்பவர்கள்

வெள்ளி, மார்ச் 10, 2023

இப்றாஹீம் நபி

“பல உயிரினங்களின் வயிற்றில் பிரிக்கப்பட்ட இந்த உடலை அல்லாஹ் எப்படி உயிர்ப்பிப்பான்?” என்பதுதான் அது!

இந்த எண்ணத்தோடு இப்றாஹீம் நபி அல்லாஹ்விடம், “என் இறைவா! இறந்தவர்களை எப்படி உயிர்ப்பிக்கின்றாய் என்று எனக்குக் காட்டுவாயா?” என்று கேட்டார்கள்.

“இப்றாஹீம்! நீ நம்பவில்லையா?” என அல்லாஹ் கேட்டான்.

“இல்லை… இல்லை… நான் நம்புகின்றேன். இதைக் கண்ணாறக் கண்டு உள்ளம் அமைதியுற விரும்புகின்றேன்” என்றார்கள்.

அதற்கு அல்லாஹ் நான்கு பறவைகளை எடுத்து நன்கு பழக்கச் சொன்னான். இப்றாஹீம் நபி நான்கு பறவைகளை எடுத்து வளர்த்தார்கள். பின்னர் அவற்றை அல்லாஹ் கூறிய விதத்தில் அறுத்து துண்டு துண்டாக்கினார்கள். பறவையின் பாகங்கள் அனைத்தையும் ஒன்றாக் கலந்தார்கள். பின்னர் கலந்த அவற்றின் மாமிச உறுப்புக்களை நான்கு பகுதிகளாகப் பிரித்து நான்கு மலைகளின் மீது வைத்தார்கள். பறவைகளின் தலைகளை மட்டும் தனது கையில் வைத்துக் கொண்டார்கள். அதன் பின்னர் அந்தப் பறவைகளின் பெயர் கூறி அழைத்தார்கள்.

என்ன ஆச்சரியம்! அவர் பெயர் கூறி அழைத்ததும் ஒவ்வொரு மலையில் இருந்தும் துண்டு போடப்பட்ட இறைச்சி அவற்றின சிறகுகள், கால் எல்லாம் ஒன்று சேர்ந்து மீண்டும் பழைய பறவையாகி வந்து இப்றாஹீம் நபியின் கையில் இருந்த தலையுடன் இணைந்தன. இவ்வாறு நான்கு பறவைகளும் உயிர் பெற்ற அற்புதத்தை இப்றாஹீம் நபி கண்ணாறக் கண்டு பேராணந்தம் அடைந்தார்கள்.

இவ்வாறுதான் இறந்து அடக்கப்பட்டவர்கள், எரிக்கப் பட்டவர்கள், கடலில் மீன்களுக்கும், காட்டில் விலங்குகளுக்கும் இறையானவர்கள் அனைவரையும் அல்லாஹ் உயிர் கொடுத்து எழுப்புவான்.

இப்றாஹீம் நபியும் பறவைகளும் சம்பந்தப்பட்ட இச்சம்பவத்தை சூறா அல் பகரா அத்தியாயம் 02, வசனம் 260 வதில் காணலாம். وَإِذۡ قَالَ إِبۡرَٰهِـۧمُ رَبِّ أَرِنِي كَيۡفَ تُحۡيِ ٱلۡمَوۡتَىٰ قَالَ أَوَلَمۡ تُؤۡمِن قَالَ بَلَىٰ وَلَٰكِن لِّيَطۡمَئِنَّ قَلۡبِي قَالَ فَخُذۡ أَرۡبَعَةً مِّنَ ٱلطَّيۡرِ فَصُرۡهُنَّ إِلَيۡكَ ثُمَّ ٱجۡعَلۡ عَلَىٰ كُلِّ جَبَلٍ مِّنۡهُنَّ جُزۡءًا ثُمَّ ٱدۡعُهُنَّ يَأۡتِينَكَ سَعۡيًا وَٱعۡلَمۡ أَنَّ ٱللَّهَ عَزِيزٌ حَكِيمٌ

அன்றி, இப்ராஹீம் (இறைவனை நோக்கி) "என் இறைவனே! இறந்தவர்களை நீ எவ்வாறு உயிர்ப்பிக்கின்றாய். (அதை) நீ எனக்குக் காண்பி" எனக் கூறியபோது, அவன் (இதை) "நீங்கள் நம்பவில்லையா?" என்று கேட்டான். (அதற்கு) அவர் "நான் நம்பியே இருக்கின்றேன். ஆயினும், (அதனை என் கண்ணால் கண்டு) என்னுடைய உள்ளம் திருப்தியடைவதற்காக (அதனைக் காண்பி)" எனக் கூறினார். (அதற்கவன்) "நான்கு பறவைகளைப் பிடித்து நீங்கள் அவைகளைப் பழக்கி, பின்னர் (அவைகளைத் துண்டு துண்டாக ஆக்கி) அவற்றில் ஒவ்வொரு பாகத்தை ஒவ்வொரு மலையின் மீதும் வைத்துவிட்டு (நடுவில் இருந்துகொண்டு) அவைகளை நீங்கள் கூப்பிடுங்கள். அவை உங்களிடம் பறந்துவந்து சேரும் (எனக் கூறி, அவ்வாறு செய்து காண்பித்து) "நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனும், மிக்க நுண்ணறிவுடையவனுமாக இருக்கின்றான் என்பதையும் நீங்கள் உறுதியாக அறிந்து கொள்ளுங்கள்" என்றான்.

(அல்குர்ஆன் : 2:260)


நாம் மரணித்த பின்னர் மீண்டும் அல்லாஹ் எங்களை உயிர் கொடுத்து எழுப்புவான். நாம் செய்த நன்மைகளுக்குப் பரிசு தருவான். பாவங்களுக்குத் தண்டனை தருவான். இது இஸ்லாத்தின் அடிப்படையான நம்பிக்கையாகும்.

எனவே, மறுமையில் சுவனம் என்ற பரிசைப் பெற நாம் நன்மைகள் செய்திட வேண்டும். பாவங்களைத் தவிர்த்திட வேண்டும்.

4.சோதனைகள்

1, தியாகம்

இரண்டு மலக்குகள்

 صبوح قدوس ربنا ورب الملائكته والروح

4000ஆடுகள்

2000+2000 +மேய்ப்பாளன்

2.நெருப்புக்குண்டம்

3.மகனைஅறுத்தல்

4.விருந்தாளி











பிரபல்யமான பதிவுகள்