நம்முடன் இணைந்து இருப்பவர்கள்

சனி, ஆகஸ்ட் 28, 2021

26ஆகஸ்ட் உலக நாய்கள் தினம்,

இன்று உலக நாய்கள் தினமாம்..

நாயிக்கும் (முஸ்லிம்) பாயிக்கும் ஆகாது.

காரணம்.......
     
SYED AHAMED ALI FACEBOOK பதிவிலிருந்து.

கட்டிவைத்த மாளிகை வாசலில் கட்டித்தொங்கும் வாசகம்
"நாய்கள் ஜாக்கிரதை"

இறை நம்பிக்கையாளனுக்கு மார்க்கம் எச்சரிக்கை செய்கிறது "நாய்கள் விஷயத்தில் ஜாக்கிரதையாக இருங்கள்" என்று.

நாயின் எச்சில் அசுத்தமட்டுமல்ல கொடிய நோய் கிருமிகளை கொண்டது. அது நம்மீது பட்டுவிட்டால் ஏழுமுறை தண்ணீர் கொண்டு அதில் ஒரு முறை மண் கொண்டு சுத்தம் செய்யவேண்டும் என்று நபிகள்(ஸல்) அவர்கள் அன்று சொன்னதை இன்று விஞ்ஞானம் ஒத்துக்கொள்கிறது. காரணம் நாய் கிருமிக்கு மண்ணில் மருத்துவம் இருக்கிறதாம்.

இன்று நகரங்களில் நாயை "நாய்" என்று சொல்லக்கூடாதாம்
செல்லப்பிராணியாம்..
பாசம் தரும் தாயை தள்ளி வைத்து விட்டு நோய்தரும் நாயை பஞ்சணையில் உறங்கவைக்கும் பைத்தியங்கள் வாழும் காலம் இது..

"கருப்பு நிற நாயின் உருவில் ஷைத்தான் வருவான்" என்றார்கள் நபிகளார் (ஸல்) அவர்கள்..

சரி நாயும் ஒரு உயிரினம்தானே அதையும் படைத்து உணவளிப்பவன் அல்லாஹ்தானே என்போம் உண்மைதான் என்றாலும் "அது (நஜீஸ்)அசுத்தம் விலகிசெல்லுங்கள்" என்று அல்லாஹ்வின் தூதர் நமக்கு விளக்கிக் சொன்னதால் நாம் விலகிசெல்கிறோம்.
அதற்கும் சில முக்கியத்துவமான காரணங்கள் உண்டு. 
"நாய் எப்போதும் தனக்குக் கிடைத்ததை தன் இனத்திற்கு பகிர்ந்தளிக்க விரும்பாது"
"தன் இடத்திற்கு விருந்தாளியாய் வரும் தன் இனத்தைச் சேர்ந்த நாயை வா என வரவேற்று தன்னோடு அரவணைக்கும் குணம் அதற்கு கிடையாது". அதை விரட்டி விட்டு விட்டுத்தான் ஒரு இடத்தில் உட்காரும். "இரவில் விழித்திருந்து அதிகாலையில் (சுப்ஹூ நேரத்தில்) தூங்கும்." மேற்கூறிய குணங்கள் யாவும் மனிதர்களிடம் இருக்ககூடாத குணங்கள். வளர்ப்புப் பிராணிகளின் குணங்கள் அதை வளர்ப்போரிடமும் தொற்றிக் கொள்ளும். என்கிற நபிமொழியின் கருத்து படி நாய்களின் கெட்ட குணம் மனிதர்களுக்கு வரக்கூடாது என்பதற்காகவே நபி (ஸல்) அவர்கள் நாய் வளர்ப்பதை தடை செய்தார்கள்.

நாய் வளர்க்கலாமா..?
வேட்டை நாய்களை வளர்ப்பதற்கு மார்க்கம் அனுமதி தருகிறது என்றாலும் நஜீஸ் அசுத்த சட்டம் அதிலும் மாறுபடாது.

இதையும் தாண்டி நாய் படாத பாடு
கல்லை கண்டால் நாயை காணோம்
குரைக்கிற நாய் கடிக்காது,
நாய் வாலை நிமிர்த்த முடியாது.
நாயை குளிப்பாட்டி நடுவீட்டுல வச்சாலும்.

இவை நாயை பற்றிய
நடைமுறை பழமொழி...

ஒருவரை உச்சபட்சமாக
கேவலமாக திட்டினாலும் நாய் என்றுதான் திட்டுவார்கள்.

ஆனால் அப்படிப்பட்ட
கேவலம் நிறைந்த நாய்கூட (குகை வாசிகளான) இறை நேசர்களுடன் சேர்ந்ததால், இறை நேசர்களை நேசித்ததால் நல்லோருடன் இணங்கியதால் சுவனத்தில் அது இடம் பெறுகிறது .

ஆனால் நல்லவர்களோடு இறைநேசர்களோடு நாம் தொடர்பில் இருப்பது அது சொர்க்கத்திற்கான தொடர்பு என்பதை நம் சமூகத்தின் சில நாய்கள் ஏனோ புரிந்து கொள்வதில்லை.

மட்டைநாரும் மலரோடு சேர்ந்தால் மணம் தரும் என்பது இதுதானோ....?

நாமும் இறைநேசர்களை நேசிப்போம் இறைநேசர்களோடு தொடர்பில் இருப்போம் சுவனம் வரை.
இன்ஷா அல்லாஹ்...

பிரபல்யமான பதிவுகள்