நம்முடன் இணைந்து இருப்பவர்கள்

செவ்வாய், ஜூன் 06, 2023

யூதர்களும் கிறிஸ்தவர்களும் யார்,

யூதர்களும் கிறிஸ்தவர்களும் யார்?
இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம்,  அவர்களுக்கு இரு மனைவிமார்கள்.
1: முதலாமவர் ஸாரா அலைஹஸ்ஸலாம்:
அவர்களின் மகன் இஸ்ஹாக் அலைஹிஸ்ஸலாம். 
அவரின் மகன் யஃகூப் அலைஹிஸ்ஸலாம்.
இவரில் இருந்து உருவான சந்ததியினரே பனூ இஸ்ராயில்கள்.
(இஸ்ஹாக் அலை, 
அவர்களின் மகன் யஃகூப் அலைஹிஸ்ஸலாம், 
அவர்களின் மகன் யூஸுப் அலைஹிஸ்ஸலாம்,  
மூஸா அலைஹிஸ்ஸலாம்,  
ஹாரூன் அலைஹிஸ்ஸலாம்,  
ஷுஐப் அலைஹிஸ்ஸலாம்,  
தாவூத் அலைஹிஸ்ஸலாம்,  
சுலைமான் அலைஹிஸ்ஸலாம்,  
ஸகரிய்யா அலைஹிஸ்ஸலாம், 
யஹ்யா அலைஹிஸ்ஸலாம்,
ஈஸா அலைஹிஸ்ஸலாம்.  
அதிகமான இறைத்தூதர்களை பனூஇஸ்ராயீல்களில் இருந்தே அல்லாஹ் அனுப்பினான்.
2: இரண்டாமவர் ஹாஜர் அலைஹஸ்ஸலாம்
அவர்களின் மகன் இஸ்மாஈல் அலைஹிஸ்ஸலாம்  அவர்களின் சந்ததியில் இறுதித்தூதர் முஹம்மத் ஸல் அவர்களைத் தவிர எந்த நபியும் வரவில்லை. இவர்கள் மக்கா  மதீனாவில் பிரச்சாரம் செய்தார்.
அவர்கள் அனைவரும் இஸ்லாத்தையே சிறந்த வாழ்க்கை நெறியாகப் பிரச்சாரம் செய்தார்கள்.
அல்லாஹ் பல அருட்கொடைகளை அவர்களுக்கு வழங்கி இருந்தான்.
يَا بَنِي إِسْرَائِيلَ اذْكُرُوا نِعْمَتِيَ الَّتِي أَنْعَمْتُ عَلَيْكُمْ
وَأَنِّي فَضَّلْتُكُمْ عَلَى الْعَالَمِينَ
இஸ்ராயீலின் மக்களே! உங்களுக்கு நான் வழங்கியிருந்த அருட்கொடையையும், உலக மக்கள் அனைவரையும் விட உங்களை நான் மேன்மைப்படுத்தியிருந்ததையும் எண்ணிப் பாருங்கள்!
(திருக்குர்ஆன் 2:47)
وَإِذْ قَالَ مُوسَىٰ لِقَوْمِهِ يَا قَوْمِ اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ جَعَلَ فِيكُمْ أَنبِيَاءَ وَجَعَلَكُم مُّلُوكًا وَآتَاكُم مَّا لَمْ يُؤْتِ أَحَدًا مِّنَ الْعَالَمِينَ
என் சமுதாயமே! உங்களில் நபிமார்களை ஏற்படுத்தி, உங்களை ஆட்சியாளர்களாக்கி, உலகத்தில் எவருக்கும் கொடுக்காததை உங்களுக்குக் கொடுத்ததின் மூலம் அல்லாஹ் உங்களுக்குச் செய்திருந்த அருட்கொடையை எண்ணிப் பாருங்கள்!” என்று மூஸா தமது சமுதாயத்திற்குக் கூறியதை நினைவூட்டுவீராக!
(திருக்குர்ஆன் 5:20)
وَظَلَّلْنَا عَلَيْكُمُ الْغَمَامَ وَأَنزَلْنَا عَلَيْكُمُ الْمَنَّ وَالسَّلْوَىٰ ۖ كُلُوا مِن طَيِّبَاتِ مَا رَزَقْنَاكُمْ ۖ وَمَا ظَلَمُونَا وَلَٰكِن كَانُوا أَنفُسَهُمْ يَظْلِمُونَ
உங்கள் மீது மேகத்தை நிழலிடச் செய்தோம். மன்னு, ஸல்வா(எனும் உண)வை உங்களுக்கு இறக்கினோம். “
(திருக்குர்ஆன் 2:57)
O.  ஆனால் அவர்களோ வரம்பு மீறி இறைத்தூதர்களையே கொலை செய்தார்ககள்.
O.  ஸகரிய்யா அலைஹிஸ்ஸலாம் அவர்களைக் கொலை செய்தார்கள்.
O.  நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை விபச்சாரத்தில் பிறந்தவர் எனக் கூறி அவர்களை சிலுவையில் அறைய முயற்சித்தார்கள்.
O.  அல்லாஹ்வுக்குப் பிள்ளை இருப்பதாகக் கூறினார்கள். (யூதர்கள் உஸைர் அவர்களை அல்லாஹ்வின் மகன் என்றார்கள்.
O.  கிறிஸ்தவர்கள் ஈஸா (அலை) அவர்களை அல்லாஹ்வின் மகன் என்றார்கள்.
O.  அவர்களின் மத குருமார்கள் வேதத்தைத் தங்கள் சுய விருப்பப்படி மாற்றியமைத்து பின்னர் இது அல்லாஹ்விடமிருந்து வந்ததாக இட்டுக்கட்டினார்கள்.
O.  இறைத்தூதர்களில் சிலரை ஏற்று சிலரை மறுத்தார்கள்.
யூதர்கள்:  ஈஸா அலைஹிஸ்ஸலாம், ஸகரிய்யா அலைஹிஸ்ஸலாம், யஹ்யாஅலைஹிஸ்ஸலாம் , முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  ஆகியோரை இறைத்தூதர்களாக ஏற்றுக் கொள்வதில்லை.
கிறிஸ்தவர்கள்:   முஹம்மத் (ஸல்) அவர்களைத் தவிர மற்ற அனைவரையும் நபியாக ஏற்றுக் கொள்கின்றனர்.
முஸ்லிம்களாகிய நாம்:
لَا نُفَرِّقُ بَيْنَ أَحَدٍ مِّن رُّسُلِهِ ۚ
அல்லாஹ்வின் தூதர்களில் எவருக்கிடையேயும் வேற்றுமை காட்டமாட்டோம். (திருக்குர்ஆன் 2:285)
وَالَّذِيْنَ يُؤْمِنُوْنَ بِمَۤا اُنْزِلَ اِلَيْكَ وَمَاۤ اُنْزِلَ مِنْ قَبْلِكَ وَبِالْاٰخِرَةِ هُمْ يُوْقِنُوْنَ‏
(நபியே!) இன்னும் அவர்கள் உமக்கு அருளப்பெற்ற (வேதத்)தின் மீதும் உமக்கு முன்னர் அருளப்பட்டவை மீதும் நம்பிக்கை கொள்வார்கள்; இன்னும் மறுமையை உறுதியாக நம்புவார்கள். (அல்குர்ஆன் : 2:4)
O.   யூத, கிறிஸ்தவர்கள் இஸ்லாத்தை விட்டும் பிரிந்து போனவர்கள்.
அல்லாஹ் கூறுறான்:
وَلَا تَكُونُوا كَالَّذِينَ تَفَرَّقُوا وَاخْتَلَفُوا مِن بَعْدِ مَا جَاءَهُمُ الْبَيِّنَاتُ ۚ وَأُولَٰئِكَ لَهُمْ عَذَابٌ عَظِيمٌ
தம்மிடம் தெளிவான சான்றுகள் வந்த பின்பும் முரண்பட்டுப் பிரிந்து விட்டோரைப் போல் ஆகாதீர்கள். அவர்களுக்கே கடும் வேதனை உண்டு. (திருக்குர்ஆன் 3:105)
O.  அல்லாஹ் இவர்களுக்கு இஸ்லாத்தைத் தான் மார்க்கமாக வழங்கினான். அவர்கள் ஆரம்பத்தில் இஸ்லாத்தையே பிரச்சாரம் செய்தார்கள். பின்னர் வேதத்தில் கையாடல் செய்தார்கள். இஸ்லாத்தை விட்டும் வெளியேறி விட்டார்கள்.
O.  இவர்கள் அல்லாஹ், றஸுலுடைய சாபத்தை பெற்றவர்களே.
لُعِنَ الَّذِيْنَ كَفَرُوْا مِنْ بَنِىْۤ اِسْرَآءِيْلَ عَلٰى لِسَانِ دَاوٗدَ وَعِيْسَى ابْنِ مَرْيَمَ‌  ذٰ لِكَ بِمَا عَصَوْا وَّكَانُوْا يَعْتَدُوْنَ‏
இஸ்ராயீலின் சந்ததிகளில் எவர்கள் (இவ்வேதத்தை) நிராகரிக்கின்றார்களோ அவர்கள் தாவூத் மற்றும் மர்யமின் மகன் ஈஸா ஆகிய இவர்கள் நாவாலும் சபிக்கப்பட்டே இருக்கின்றனர். ஏனென்றால், அவர்கள் (அக்காலத்திலும்) வரம்பு கடந்தே பாவம் செய்து வந்தனர். (அல்குர்ஆன் : 5:78)
0.  ஒரு முஸ்லிமுக்கு ஈமான் கொண்ட ஒருவரை விட நேசத்துக்குரியவராக. யூத கிறிஸ்தவர்கள் ஆகிவிட முடியாது.
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَتَّخِذُوا الْيَهُوْدَ وَالنَّصٰرٰۤى اَوْلِيَآءَ ‌ؔۘ
முஃமின்களே! யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் உங்களுடைய பாதுகாவலர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள்.
بَعْضُهُمْ اَوْلِيَآءُ بَعْضٍ‌
(உங்களுக்கு விரோதம் செய்வதில்) அவர்கள் தம்மில் சிலர் சிலருக்குப் பாதுகாவலர்களாக இருக்கின்றனர்;
وَمَنْ يَّتَوَلَّهُمْ مِّنْكُمْ فَاِنَّهٗ مِنْهُمْ‌
உங்களில் எவரேனும் அவர்களைப் பாதுகாவலர்களாக ஆக்கினால் நிச்சயமாக அவரும் அவர்களைச் சேர்ந்தவர் தான்.
اِنَّ اللّٰهَ لَا يَهْدِى الْقَوْمَ الظّٰلِمِيْنَ‏
நிச்சயமாக அல்லாஹ் அநியாயக்கார மக்களுக்கு நேர்வழி காட்டமாட்டான். (அல்குர்ஆன் : 5:51)
وَمَنْ يَّتَوَلَّ اللّٰهَ وَ رَسُوْلَهٗ وَالَّذِيْنَ اٰمَنُوْا فَاِنَّ حِزْبَ اللّٰهِ هُمُ الْغٰلِبُوْنَ‏
அல்லாஹ்வையும், அவனது தூதரையும், முஃமின்களையும் யார் நேசர்களாக ஆக்குகிறார்களோ, அவர்கள் தான் ஹிஸ்புல்லாஹ் (அல்லாஹ்வின் கூட்டத்தினர்) ஆவார்கள்; நிச்சயமாக இவர்களே மிகைத்து வெற்றியாளர்களாவார்கள்.
(அல்குர்ஆன் : 5:56)
0.  உள்ளத்தில் ஈமானைச் சுமந்து பாவம் செய்து கொண்டுள்ள இறைவிசுவாசி இறை  மறுப்பாளனை விட அல்லாஹ்விடத்தில் மேலானவன்.
0.  இன்று உலகில் பெறும் சமூகமாக உள்ள கிறிஸ்தவர்களினதும். இன்று உலகில் சிறிய சமூகத்தாராக உள்ள யூதர்களினதும் விருப்பம் என்ன தெரியுமா..?
وَلَن تَرْضَىٰ عَنكَ الْيَهُودُ وَلَا النَّصَارَىٰ حَتَّىٰ تَتَّبِعَ مِلَّتَهُمْ ۗ
யூதர்களும், கிறித்தவர்களும் அவர்களின் மார்க்கத்தை நீர் பின்பற்றும் வரை உம்மை ஏற்றுக் கொள்ளவே மாட்டார்கள்.
قُلْ إِنَّ هُدَى اللَّهِ هُوَ الْهُدَىٰ ۗ
“அல்லாஹ்வின் வழியே (சரியான) வழியாகும்’ எனக் கூறுவீராக!
وَلَئِنِ اتَّبَعْتَ أَهْوَاءَهُم بَعْدَ الَّذِي جَاءَكَ مِنَ الْعِلْمِ ۙ مَا لَكَ مِنَ اللَّهِ مِن وَلِيٍّ وَلَا نَصِيرٍ
உமக்கு விளக்கம் வந்த பின் அவர்களின் மனோ இச்சைகளை நீர் பின்பற்றினால், அல்லாஹ்விடமிருந்து காப்பாற்றுபவனோ, உதவுபவனோ உமக்கு இல்லை.
(திருக்குர்ஆன் 2:120)
இன்றைக்கு எல்லாத் துறைகளிலும் முழு உலகமக்களும் அவர்களைப் பின்பற்ற வேண்டும். அவர்களின் கலாச்சாரம் உலக அளவில் பரவ வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு செயல்படுவோர் இவர்கள்.
0.  இத்தகைய பெறுமை பிடித்த பண்புடைய சபிக்கப்பட்ட சமூகமான யூத,கிறிஸ்தவ சமூகத்துக்கு மாறு செய்வதை இஸ்லாம் மார்க்கமாக்கியுள்ளது.
1)  காலணிகளுடனும், காலுறைகளுடனும் தொழுதல்.
. روى أبو داود (652) 
عَنْ شَدَّادِ بْنِ أَوْسٍ رضي الله عنه قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : ( خَالِفُوا الْيَهُودَ ، فَإِنَّهُمْ لَا يُصَلُّونَ فِي نِعَالِهِمْ وَلَا خِفَافِهِمْ ) وصححه الألباني في صحيح أبي داود .
காலணிகளுடன் தொழுது) யூதர்களுக்கு மாறு செய்யுங்கள். ஏனெனில் அவர்கள் காலணிகளுடனும் காலுறைகளுடனும் தொழ மாட்டார்கள் என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஷத்தாத் பின் அவ்ஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: அபூதாவுத்)
வாழ்வில் ஒருமுறையாவது இந்த சுன்னாவை நடைமுறைப்படுத்த வேண்டும் என அறிஞர்கள் சொல்லுகின்றார்கள்.
2) தலை முடிக்குச் சாயமிடுதல்:
عن أبي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ : إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : ( إِنَّ الْيَهُودَ وَالنَّصَارَى لَا يَصْبُغُونَ فَخَالِفُوهُمْ ) رواه البخاري (3462) ومسلم (2103) .
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: 
யூதர்களும், கிறிஸ்தவர்களும் (தம் தாடிகளுக்கும் தலைமுடிக்கும்) சாயமிட்டுக் கொள்வதில்லை. எனவே, நீங்கள் (அவற்றிற்குக் கருப்பு அல்லாத சாயமிட்டு) அவர்களுக்கு மாறு செய்யுங்கள். 
என அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார்கள். (ஸஹீஹ் புகாரி : 3462)
நபிகளார் யூத கிறிஸ்தவர்களுக்கு மாறு செய்யும்முகமாக தலைமுடிக்குச் சாயமிடச் சொன்னார்கள் இன்று நாம் யாரைப் பின்பற்றிச் சாயமிடுகிறோம்..?
3) மாதவிடாய் காலத்தில் மனைவியுடன் ஒன்றாக இருத்தல்:
அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது:
யூதர்கள் மாதவிடாய் ஏற்பட்ட பெண்களுடன் அமர்ந்து சாப்பிடமாட்டார்கள்; வீடுகளில் அவர்களுடன் ஒட்டி உறவாடாமல் (ஒதுங்கி) இருப்பார்கள். எனவே,நபித்தோழர்கள் (இது குறித்து) நபியவர்களிடம் கேட்டனர்.
அப்போது ,2:222 வசனத்தை அல்லாஹ் அருளினான்.
وَيَسْأَلُونَكَ عَنِ الْمَحِيضِ ۖ قُلْ هُوَ أَذًى فَاعْتَزِلُوا النِّسَاءَ فِي الْمَحِيضِ ۖ وَلَا تَقْرَبُوهُنَّ حَتَّىٰ يَطْهُرْنَ ۖ فَإِذَا تَطَهَّرْنَ فَأْتُوهُنَّ مِنْ حَيْثُ أَمَرَكُمُ اللَّهُ ۚ إِنَّ اللَّهَ يُحِبُّ التَّوَّابِينَ وَيُحِبُّ الْمُتَطَهِّرِينَ
மாதவிடாய் பற்றியும் உம்மிடம் கேட்கின்றனர்.”அது ஓர் தொல்லை. எனவே மாதவிடாயின் போது பெண்களை விட்டும் (உடலுறவு கொள்ளாமல்) விலகிக் கொள்ளுங்கள்! அவர்கள் தூய்மையாகும் வரை அவர்களை நெருங்காதீர்கள்! அவர்கள் தூய்மையாகி விட்டால் அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிட்டவாறு அவர்களிடம் செல்லுங்கள்! திருந்திக் கொள்வோரை அல்லாஹ் விரும்புகிறான். தூய்மையாக இருப்போரையும் விரும்புகிறான்’ எனக் கூறுவீராக!
 (திருக்குர்ஆன் 2:222)
அதனையடுத்து அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்கள் தாம்பத்திய உறவைத் தவிர மற்ற காரியங்களைச் செய்துகொள்ளுங்கள் என்று கூறினார்கள்.
இந்தச் செய்தி யூதர்களுக்கு எட்டியபோது, நம்முடைய காரியங்களில் எந்த ஒன்றுக்கும் மாறு செய்யாமல் விடக்கூடாது என்பதே இந்த மனிதரின் விருப்பம் என்று கூறினார்கள்.
உசைத் பின் ஹுளைர் ரளியல்லாஹு அன்ஹு, அப்பாத் பின் பிஷ்ர் ரளியல்லாஹு அன்ஹு  ஆகியோர் வந்து, அல்லாஹ்வின் தூதரே! யூதர்கள் இன்னின்னவாறு கூறுகின்றனர். எனவே, (மாதவிடாய் ஏற்பட்டுள்ள) பெண்களுடன் நாமும் ஒட்டி உறவாடாமல் இருந்தாலென்ன? என்று கேட்டனர்.
(இதைக் கேட்டதும்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது முகம் (கோபத்தால்) நிறம் மாறிவிட்டது...
(ஸஹீஹ் முஸ்லிம் : 507)
இஸ்லாம் தனித்துவமான மார்க்கம் இறைத் திருப்தியைத் தவிர வேறு நோக்கம் இஸ்லாத்தில் இல்லை.
4) ஸஹர் செய்தல்:
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்கள் கூறினார்கள்:
நமது நோன்பிற்கும், வேதக்காரர்களின் நோன்பிற்கும் இடையில் உள்ள வேறுபாடு சஹர் நேரத்தில் உண்பதுதான்.
இதை அம்ர் பின் அல்ஆஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். (ஸஹீஹ் முஸ்லிம் : 2001)
عن أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : تَسَحَّرُوا فَإِنَّ فِي السَّحُورِ بَرَكَةً. رواه البخاري (1923) ، ومسلم (1095).
நீங்கள் ஸஹர் செய்யுங்கள். நிச்சியமாக ஸஹர் செய்வதில் பரக்கத் உள்ளது.
5) ஆஷுரா நோன்பில் யூத,கிறிஸ்தவர்களுக்கு மாறு செய்தல்:
இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்கள் ஆஷூரா நாளில் தாமும் நோன்பு நோற்று, நோன்பு நோற்குமாறு (மக்களுக்கும்) கட்டளையிட்டார்கள். அப்போது மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! இது யூதர்களும் கிறிஸ்தவர்களும் கண்ணியப்படுத்தும் நாளாயிற்றே?” என்று வினவினர். அதற்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்கள், “இன்ஷா அல்லாஹ் (அல்லாஹ் நாடினால்) அடுத்த ஆண்டில் நாம் (முஹர்ரம்) ஒன்பதாவது நாளில் நோன்பு நோற்போம்” என்று கூறினார்கள். ஆனால், அடுத்த ஆண்டு வருவதற்குள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்துவிட்டார்கள். (ஸஹீஹ் முஸ்லிம் : 2088)
பிறை ஒன்பது பிடிக்கும் தாஸுஆ நோன்பானது யூதர்களுக்கு மாறு செய்வதற்காகப் பிடிக்கின்ற நோன்பாகும். பிறை பத்து பிடிக்கும் ஆஷூரா நோன்பு மூஸா (அலை) அவர்களும், பனூ இஸ்ரவேலர்களும் பிர்அவ்னிடமிருந்து பாதுகாக்கப்பட்டு பிர்அவ்ன் கடலில் மூழ்கடிக்கப்பட்டமைக்கு அல்லாஹ்வுக்கு நன்றி கூறுவதற்காகவுமே இந்த நோன்பை மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களும், அவர்களின் சமூகமும் நோற்றுள்ளார்கள்.
6) ரோம், பாரசீக மன்னர்களுக்கு முன் மரியாதைக்காக எழுந்து நிற்பதைப்போல் எழுந்து நிற்பதை தடுத்தார்கள்:
ஒரு முறை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நோய் வாய்ப்பட்டார்கள். அப்போது அவர்கள் உட்கார்ந்தநிலையில் தொழுகை நடத்தினார்கள். நாங்கள் அவர்களுக்குப் பின்னால் நின்று தொழுதோம். அவர்கள் திரும்பிப் பார்த்த போது நாங்கள் நின்று கொண்டிருப்பதைக் கண்டார்கள். சைகை மூலம் எங்களை உட்காரச் சொன்னார்கள். நாங்கள் உட்கார்ந்தநிலையில் அவர்களைப் பின்பற்றித் தொழுதோம். தொழுகையை முடித்தவுடன் ரோம், பாரசீக மன்னர்கள் அமர்ந்திருக்க மக்கள் நிற்பார்களே அதுபோன்ற செயலைச் செய்யமுற்பட்டு விட்டீர்களே. இனிமேல் அவ்வாறு செய்யாதீர்கள். உங்கள் தலைவர்களைப் பின்பற்றித் தொழுங்கள். அவர்கள் நின்று தொழுகை நடத்தினால் நீங்களும் நின்றுதொழுங்கள். அவர்கள் உட்கார்ந்து தொழுகை நடத்தினால் நீங்களும் உட்கார்ந்துதொழுங்கள் என்று கூறினார்கள். (நூல்: முஸ்லிம் 701)
இன்று ஆசிரியர் வரும்போது மாணவன் எழுந்து நிற்காவிட்டால் என்னவாகும்…?
(7)  யூதர்கள் பயன்படுத்திய ஒரு வார்த்தைக்கு மாற்றமாக அல்லாஹ் வசனத்தை இறக்கினான்:
யூதர்கள் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்களை இரட்டைப் பொருள் கொண்ட “ராஇனா” (எங்களைக் கவனித்து வழி நடத்துங்கள், ஆடுமேய்க்கும் இடையரே ) பொன்ற கருத்துடைய வாசகத்தைப் பயன்படுத்தி வந்த போது அல்லாஹ் 2:104 வது வசனத்தை இறக்கினான்.
يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَقُوْلُوْا رَاعِنَا
ஈமான் கொண்டோரே! நீங்கள் (நம் ரஸூலைப் பார்த்து இரண்டு அர்த்தம் கொடுக்கும் சொல்லாகிய) “ராஇனா” என்று சொல்லாதீர்கள்.
وَ قُوْلُوا انْظُرْنَا وَاسْمَعُوْا ‌ وَلِلْڪٰفِرِيْنَ عَذَابٌ اَلِيْمٌ‏
(இதற்குப் பதிலாக அன்புடன் நோக்குவீர்களாக என்னும் பொருளைத் தரும் சொல்லாகிய) “உன்ளுர்னா” என்று கூறுங்கள். இன்னும், அவர் சொல்வதைக் கேளுங்கள். மேலும் காஃபிர்களுக்கு நோவினை தரும் வேதனையும் உண்டு. (அல்குர்ஆன் : 2:104)
😎 நபிமார்களின் அடகஸ்தளங்களை வணக்கஸ்தளமாக ஆக்கிக் கொள்வது தொடர்பாக வந்துள்ள எச்சரிக்கை :
ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா  அவர்கள் கூறினார்கள்;
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்களுக்கு இறப்பு நெருங்கிவிட்டபோது, தம் முகத்தின் மீது சதுரமான கருப்புத் துணி ஒன்றைப் போட்டுக் கொண்டார்கள். வெப்பத்தை உணரும்போது அதைத் தம் முகத்திலிருந்து அகற்றி விடுவார்கள். அதே நிலையில் அவர்கள் இருந்து கொண்டிருக்க, ‘யூதர்களின் மீதும் கிறிஸ்தவர்களின் மீதும் அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும். தம் இறைத்தூதர்களின் அடக்கஸ்தலங்களை அவர்கள் வணக்கஸ்தலங்களாக ஆக்கினார்கள்’ என்று கூறி, அவர்கள் செய்ததைப் போன்று செய்யக் கூடாது என்று (தம் சமுதாயத்தாரை) எச்சரித்தார்கள்.  (ஸஹீஹ் புகாரி : 3453, 3454)
9) மாற்றுமதக் கலாச்சாரத்தை நடைமுறைப்படுத்த நினைப்பது தவறாகும்.
அபூவாகித் அல்லைத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்:
“நாம் இஸ்லாத்தை ஏற்ற புதிதில் நபி(ஸல்) அவர்களுடன் ஹுனைன் போருக்காகப் போய்க்கொண்டிருந்தோம். (இவர்கள் மக்கா வெற்றியின் போது இஸ்லாத்தில் இணைந்தவர்கள்.)
நாம் ஒரு மரத்தைக் கடந்து சென்றோம். காஃபிர்கள் ஒரு இலந்தை மரத்தைப் புனிதமாகக் கருதி வந்தனர். அதற்குத் “தாது அன்வாத்” என்பது பெயராகும்.
இந்த மரத்திற்குக் கீழே இஃதிகாஃப் இருந்தனர். போருக்குப் போகும் போது இந்த மரத்தில் வாலைக் கொழுகி வைத்து விட்டு எடுத்துச் செல்வார்கள். (அப்படிச் செய்தால் போரில் வெற்றி பெறலாமென்பது அவர்களது நம்பிக்கையாகும்.)
எனவே நாம் நபி(ஸல்) அவர்களிடம், “அவர்களுக்கு “தாது அன்வாத்” என்ற மரம் இருப்பது போல், எமக்கும் ஒரு “தாது அன்வாத்” என்ற மரத்தை ஏற்படுத்துங்கள்!” என நபி(ஸல்) அவர்களிடம் நாம் கேட்டோம்.
இதைக் கேட்ட நபி(ஸல்) அவர்கள், “அல்லாஹு அக்பர்! (அல்லாஹ்வே மிகப் பெரியவன்!) எனக் கூறிப் பின்னர்,
“பனூ இஸ்ராயீலர்கள் மூஸா நபியிடம் கேட்டது போல் நீங்களும் என்னிடம் கேட்டுள்ளீர்கள்.(நாம் அப்படிக் கேட்டது பெரிய தவறு என உணர்த்தினார்கள்.)
மூஸா (அலை) அவர்களும் அவர்களின் சமூகமும் தமது சிலைகளுக்கு வழிபாடு செய்துகொண்டிருக்கும் ஒரு கூட்டத்தாரிடம் வந்தனர். (அவ்வேளை), அவர்கள், “மூஸாவே! அவர்களுக்குப் பல கடவுள்கள் இருப்பது போல் எமக்கும் ஒரு கடவுளை ஏற்படுத்துவீராக!” என்று கேட்டனர் (7:138) என்ற குர்ஆன் வசனத்தை ஓதிக் காட்டிய பின்னர்.
நபிகளார் சொன்னார்கள் உங்களுக்கு முன்பிருந்தவர்களது வழிமுறைகளை நீங்கள் பின்பற்றுவீர்கள்!” என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்   அவர்கள் கூறினார்கள்.
 (திர்மிதி 2180)
ﺣﺴﻦ ﺻﺤﻴﺢ 4031 ﻋﻦ اﺑﻦ ﻋﻤﺮ، ﻗﺎﻝ: ﻗﺎﻝ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ: «ﻣﻦ ﺗﺸﺒﻪ ﺑﻘﻮﻡ ﻓﻬﻮ ﻣﻨﻬﻢ» ( رواه الترمذي)
“எவன் ஒரு கூட்டத்திற்கு ஒப்பாகச் செயல்படுகின்றானோ அவனும் அந்தக்கூட்டத்தைச் சேர்ந்தவனே” என நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்   அவர்கள் கூறினார்கள் (திர்மதி).
இது எவ்வளவு கடும் எச்சரிக்கை, இதில் எவ்வாறு ஒரு முஸ்லிம் அலட்சியமாக இருக்க முடியும்?
صحيح البخاري عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ( لاَ تَقُومُ السَّاعَةُ حَتَّى تَأْخُذَ أُمَّتِي بِأَخْذِ الْقُرُونِ قَبْلَهَا، شِبْرًا بِشِبْرٍ وَذِرَاعًا بِذِرَاعٍ)). فَقِيلَ يَا رَسُولَ اللَّهِ كَفَارِسَ وَالرُّومِ. فَقَالَ: ((وَمَنِ النَّاسُ إِلاَّ أُولَئِكَ)).
அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு  அறிவித்தார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்கள் கூறினார்கள் “என் சமுதாயத்தார் தமக்கு முந்தைய சமுதாயங்களின் நடைமுறைகளை சாண் சாணாக, முழம் முழமாகப் பின்பற்றி நடக்காத வரை மறுமை நாள் வராது“ என்று . உடனே, “இறைத்தூதர் அவர்களே! பாரசீகர்கள் மற்றும் ரோமர்கள் போன்றவர்களையா (இந்தச் சமுதாயத்தார் பின்பற்றுவர்)?“ என வினவப்பட்டது. அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்கள், “அவர்களைத் தவிர (இன்று) மக்களில் வேறு யார் உள்ளனர்?“ என்று (திருப்பிக்) கேட்டார்கள்.
(ஸஹீஹ் புகாரி)
O. கிறிஸ்மஸ் கொண்டாட்டம்:
ஒவ்வொருவருடமும் டிசம்பர் 25 ம் திகதி முதல் ஈஸா (அலை) அவர்களின் பிறந்த தினம் என அத்தினத்தை முன்னிட்டு ஜனவரி ஒன்று வரை கிரிஸ்தவர்கள் அவர்களின் பண்டிகைக்குரிய நாட்களாக கொண்டாடி வருகின்றனர். 
உண்மையில் இத்தினங்களில் தான் நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம்  அவர்கள் பிறந்தார்களா..? என கேட்டால் அதற்கான எந்த சான்றுகளும் குர்ஆன் ஹதீஸில் கிடையாது.  கிரிஸ்தவர்களில் அனைவரும் இந்நிலைப்பாட்டை ஏற்றுக் கொள்ளவுமில்லை என்பதே உண்மை.  
ஒரு முஸ்லிம் இன்னொரு மதம் சார்ந்த நம்பிக்கையை மதிக்கலாம். ஆனால் அதை ஆதரிக்க முடியாது என்பது இஸ்லாத்தின் அடிப்படை என்றிருக்க அவர்களின் பண்டிகை தினத்தில் வாழ்துக்களை பரிமாறிக்கொள்வது ஆகுமானதில்லை.  
குறிப்பாக இஸ்லாத்தை விட்டு பிரிந்து சென்ற யூத கிரிஸ்தவர்களுக்கு மாறு செய்ய வேண்டும் என்பதே இஸ்லாத்தின் கொள்கையாகும். நாம் அவர்களுக்கு வாழ்த்துக் கூறுவது அவர்களின் செயலுக்கு நாம் வழங்கும் அங்கிகாரமாக மாறிவிடும்.
இஸ்லாத்தின் தனித்துவத்தைப் பேணி 
பிறமதக் கலாசாரங்களிலிருந்து விலகி நடக்க அல்லாஹ் எமக்கு அருள் புரிவானாக.!
10)  புரிந்து கொள்ள வேண்டிய பகுதி:
மாற்று மதத்தினருடன் சக வாழ்வைப் பேணுதல், கொடுக்கல் வாங்கல் செய்தல், வியாபாரம் செய்தல், அவர்கள் மார்க்கத்துக்கு முரணற்ற விருந்துகளுக்கு அழைத்தால் அதில் கலந்து கொள்ளுதல்’ அவர்களுக்கு ஆபத்தின் போது உதவி செய்தல், போர்களின் போது சமாதானத்தை விரும்புவோருக்கு அடைக்களம் கொடுத்தல் போன்றவை தடை கிடையாது இவை இஸ்லாம் பேணச் சொல்லும் உறவு முறைகலாகும். எமது மார்க்கம் எதை வரம்பாகா சொல்லியுள்ளதோ அவற்றைப் பேணி நடப்பது என்மீது கடமையாகும். 
அல்லாஹ் மிக அறிந்தவன்.
அல்லாஹ் எனக்கும் உங்களுக்கும் இந்த மார்க்கத்தில் தெளிவைத் தருவானாக.!

நல்ல மனிதனாக வாழ,

நல்ல மனிதனாக வாழ 

ஒரு முஃமின் இன்னொரு முஃமினிடம் ஒரு தவறைக் காணும் போது அவர் அந்தத் தவறிலிருந்து அவரைத் திருத்துவதும் அவரிடம் நன்மையை ஏவுவதும் கடமையாகும்.

நான் ஒருமுறை நபி (ஸல்) அவர்களிடம் சென்று, “இஸ்லாத்தைத் தழுவுவதாக தங்களிடம் உறுதிமொழி எடுத்துக் கொள்ள வந்திருக்கின்றேன்” என்று கூறினேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், “முஸ்லிம்கள் ஒவ்வொருவருக்கும் நலம் நாட வேண்டும்” என்று எனக்கு நிபந்தனை விதித்தார்கள்.

அறி : ஜரீர் இப்னு அப்தில்லாஹ் (ரலி), நூல் : புகாரி-58 

மென்மையே நன்மை

இந்த ஹதீஸின் அடிப்படையில் நாம் நம்முடைய சக இஸ்லாமிய தோழருக்கு நன்மையைக் கருத வேண்டும். அதையொட்டி அவரிடம் ஏற்படும் தவறுகளைச் சுட்டிக் காட்ட நாம் கடமைப்பட்டுள்ளோம். இதை ஆதாரமாகக் கொண்டு நாம் ஒரு தவறைச் சுட்டிக் காட்ட முனைகின்ற போது அவரிடம் ஒரே பாய்ச்சலில் பாய்ந்து விடக் கூடாது.

தவறைச் சுட்டிக் காட்டுவதில் ஒரு முரட்டுத்தனம் வந்து விடக் கூடாது. தவறை எப்படிச் சுட்டிக் காட்ட வேண்டும் என்பதை இஸ்லாம் தகவாக சொல்லிக் காட்டுகின்றது. இதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உள்ள முன்னுதாரணத்தை வாழ்க்கையில் நாம் பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அமர்ந்திருக்கும் போது, ஒரு கிராமவாசி பள்ளிக்குள் நுழைந்து, “யா அல்லாஹ்! எனக்கும் முஹம்மதுக்கும் மன்னிப்பை வழங்குவாயாக! எங்களுடன் சேர்த்து வேறு யாருக்கும் நீ மன்னிப்பளிக்காதே!” என்று சொன்னார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உடனே சிரித்து விட்டார்கள். “(அல்லாஹ்வின்) விசாலமான தன்மைக்கு நீ தடை விதிக்கின்றாயே!” என்று கூறினார்கள்.

பிறகு அவர் பள்ளியின் ஓரத்தில் ஆடையை அகற்றி சிறுநீர் கழிக்கலானார். (தான் தவறு செய்து விட்டோம் என்று) அவர் உணர்ந்த பின் என்னருகில் வந்து நின்று கொண்டு, “அவர்கள் கடுமையாக எச்சரிக்கவில்லை. ஏசவில்லை” என்று சொன்னார். அப்போது நபி (ஸல்) அவர்கள், “இது பள்ளிவாசலாகும். இதனுள் சிறுநீர் கழிக்கப் படலாகாது. இது அல்லாஹ்வை நினைவு கூர்வதற்காகவும் தொழுவதற்காகவுமே கட்டப் பட்டுள்ளது” என்று கூறி ஒரு வாளி தண்ணீர் கொண்டு வர உத்தரவிட்டார்கள். அது அவரது சிறுநீரில் ஊற்றப்பட்டது.

அறி : அபூஹுரைரா (ரலி), நூல் : இப்னுமாஜா-529 (522)

ஒரு கிராமவாசி பள்ளிவாசலில் சிறுநீர் கழித்து விட்டார். உடனே மக்கள் அவரைப் பிடித்தனர். நபி (ஸல்) அவர்கள், “அவரை விட்டு விடுங்கள். அவர் கழித்த சிறுநீர் மீது ஒரு வாளி தண்ணீரை ஊற்றி விடுங்கள். நீங்கள் நளினமாக எடுத்துச் சொல்லக் கூடியவர்களாக அனுப்பப் பட்டுள்ளீர்கள். கடினமாக எடுத்துச் சொல்பவர்களாக நீங்கள் அனுப்பப் படவில்லை” என்று கூறினார்கள்.

அறி : அபூஹுரைரா (ரலி), நூல் : புகாரி-220 

பள்ளிவாசலில் சிறுநீர் கழித்து விட்டதால் தன்னை நபி (ஸல்) அவர்கள் கண்டிப்பார்கள் என்று அந்தக் கிராமவாசி எதிர்பார்க்கின்றார். ஆனால் அவர் எதிர்பார்த்தது போல் எதுவும் நடக்கவில்லை. அதே சமயம் அந்தக் கிராமவாசியை நோக்கிப் பாயும் மக்களிடம் நபி (ஸல்) அவர்கள் நளினத்தைப் போதிக்கின்றார்கள்.

தவறைச் சுட்டிக் காட்டுவதாகக் கூறி, தவறு செய்தவரை கடித்துக் குதறி விடும் பழக்கம் நம்மில் பலரிடம் உள்ளது. அத்தகையவர்களுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இந்த நடைமுறையில் அழகிய படிப்பினை உள்ளது.

பார்வை ஒன்றே போதும்!

ஒருவர் தன் நண்பரிடம் ஒரு பொருளைக் கொடுத்து, வெளியில் யாரிடமும் இதைக் கொடுக்கக் கூடாது என்று சொல்கிறார். இவரோ நண்பரின் வேண்டுகோளை மீறி அடுத்தவரிடம் கொடுத்து விடுகின்றார். அவர் திருப்பித் தர வரும் போது உரிமையாளர் அங்கு இருக்கின்றார். தனது உத்தரவை நண்பர் அப்பட்டமாகவே மீறி விட்டார் என்று தெரிந்த உரிமையாளர் நண்பர் மீது ஒரு பார்வை செலுத்துகின்றார். இந்தப் பார்வையில் மின்னல் பாய்ச்சிய மின்சாரத் தாக்குதல் அந்த நண்பரைப் படாத பாடு படுத்தி விடும். அனலில் பட்ட புளுவாக அவரை நெளிய வைத்து விடும். அந்தப் பார்வை பல கோடி அர்த்தங்களை அந்த நண்பரிடம் சொல்லி முடித்து விடும். இதற்குப் பிறகு வார்த்தைகள் தீயாக, ஏன் தென்றலாகக் கூட வரத் தேவையில்லை. இதிலேயே அந்த நண்பர் உரிய பாடத்தைப் பெற்றுக் கொண்டு விடுவார்.

இது போல் 9 மணிக்கு வரவேண்டிய ஊழியர் ஒருவர் அரை மணி நேரம் தாமதமாக வருகின்றார் என்றால் முதலாளி அவரைக் கடுமையான வார்த்தைகளால் வசை பாட வேண்டியதில்லை. கடிகார முட்களைப் பார்த்தாலே போதும். அது அந்த ஊழியரின் இதயத்தைத் தைத்து விடும். இப்படி ஒரு அணுகுமுறையை நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கையிலிருந்து நாம் பெறுகின்றோம்.

நபியின் அனுகுமுறையில் நமக்கு பாடம் இல்லையா?

அனஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமக்குப் பணியாள் எவரும் இல்லாத நிலையில் மதீனாவுக்கு வந்தார்கள். ஆகவே அபூதல்ஹா (ரலி) அவர்கள் என் கையைப் பிடித்துக் கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அழைத்துச் சென்று, “அல்லாஹ்வின் தூதரே! அனஸ் புத்திசாலியான சிறுவன். அவன் தங்களுக்கு ஊழியம் செய்யட்டும்” என்று கூறினார்கள்.

ஆகவே நான் நபி (ஸல்) அவர்களுக்குப் பிரயாணத்திலும் ஊரில் இருக்கும் போதும் பணிவிடைகள் செய்து வந்தேன். நான் செய்த எந்தச் செய்கைக்காகவும் “இதை ஏன் இப்படிச் செய்தாய்?’ என்றோ, நான் செய்யாத எந்த விஷயத்திற்காகவும் “இதை ஏன் நீ இப்படிச் செய்யவில்லை’ என்றோ என்னிடம் நபி (ஸல்) அவர்கள் கேட்டதேயில்லை.

நூல் : புகாரி-2768 

இன்று இந்த அணுகுமுறைகளை முதலாளி தன் தொழிலாளியிடம் அனுசரிப்பதில்லை. நண்பர்கள் தங்களுக்குள் அலங்கரித்துக் கொள்வதில்லை. இப்படியொரு தன்மை இரு தரப்பிலும் நிலவுகின்ற போது அங்கு அமைதி தழுவும். பணி சிறக்கும். இதற்கு மாற்றமாக ஒரு நல்ல நண்பர் அல்லது ஒரு நல்ல ஊழியர் ஏற்கனவே குற்ற உணர்வில் இருக்கும் போது, அவரிடத்தில் சீறிப் பாயும் கடின வார்த்தைகள் அவரை சீர்குலைய வைக்கின்றன. அனஸ் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் பத்து ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார்கள். இந்தப் பத்தாண்டு காலத்தில் ஏதேனும் பிசகுதல் இல்லாமல் இருந்திருக்க முடியாது. ஆயினும் நபி (ஸல்) அவர்களின் மென்மையான அணுகுமுறையினால் அது சரி செய்யப்பட்டிருக்கும் என்பதை நாம் விளங்க முடிகின்றது.

இன்னொரு விஷயத்தையும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். முஹம்மது (ஸல்) அவர்களைப் போன்று முதலாளி மட்டும் இருந்தால் போதாது. ஊழியராக இருப்பவர் அனஸ் (ரலி) அவர்களைப் போன்று முதலாளியின் எதிர்பார்ப்புகளை உள்வாங்கிக் கொண்டு செயல்படும் உண்மை உணர்வுள்ளவராகவும் இருக்க வேண்டும்.

அழகிய ஆசிரியர்!

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அழகிய நற்பண்புக்கு இன்னோர் எடுத்துக்காட்டு!

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் தொழுது கொண்டிருக்கும் போது கூட்டத்தில் ஒருவர் தும்மினார். உடனே நான், “யர்ஹமுகுமுல்லாஹ் – அல்லாஹ் உங்களுக்கு அருள் செய்வானாக’ என்று சொன்னேன். உடன் மக்கள் என் மீது தங்கள் பார்வைகளைச் செலுத்தினர். “(உங்கள்) தாய் தொலைந்து போகட்டும்! உங்கள் செய்தி என்ன? என்னையே பார்க்கின்றீர்களே!” என்று நான் கேட்டேன். அதற்கு நபித்தோழர்கள் என்னை (கண்டிக்கும் விதமாக) தங்கள் தொடைகளில் கைகளால் அடித்துக் காட்டினர். அவர்கள் என்னைப் பேசாமல் இருக்கச் சொல்கின்றார்கள் என்று அறிந்து மவுனமாகி விட்டேன்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுது முடித்ததும் (கடுமையாகப் பிடிப்பார்கள் என்று நினைத்தேன்) என் தாயும் தந்தையும் அவர்களுக்கு அர்ப்பணமாகட்டும். அவர்களை விட அழகிய முறையில் போதிக்கும் ஓர் ஆசிரியரை அவர்களுக்கு முன்னரும் பின்னரும் நான் கண்டதே இல்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்கள் என்னை அரற்றவில்லை. என்னை அடிக்கவில்லை. என்னை ஏசவுமில்லை. “நிச்சயமாக இது தொழுகை! இதில் மக்கள் பேச்சு எதுவும் பேசுதல் முறையாகாது. நிச்சயமாக தொழுகை என்பது தஸ்பீஹ், தக்பீர், குர்ஆன் ஓதுதல் என்பது மட்டும் அடங்கியதாகும்” என்று கூறினார்கள். (ஹதீஸின் சுருக்கம்)

அறி : முஆவியா பின் ஹகம் (ரலி), நூல் : முஸ்லிம்-935 (836)

இந்த ஹதீஸை அறிவிக்கும் முஆவியா பின் ஹகம் (ரலி) தொழுகையில் தான் பேசிய பேச்சுக்காக நபி (ஸல்) அவர்களிடம் சரியாக வாங்கிக் கட்டப் போகின்றோம் என்று கனமான உள்ளத்தோடு காத்திருக்கின்றார்கள். ஆனால் நபி (ஸல்) அவர்களோ அவர் செய்த செயல்கள் எதையும் கண்டனம் செய்யவில்லை என்பதை இங்கு காண்கிறோம். அதற்காக அந்தச் செயலை நபி (ஸல்) அவர்கள் கண்டு கொள்ளவில்லை என்று கூற முடியாது.

சம்பந்தப் பட்ட அவரே தவறு என்று உணர்ந்து குற்ற உணர்வில் கூனி குறுகிப் போயிருக்கும் அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மேலும் அவற்றைச் சொல்லி குத்திக் காட்ட விரும்பவில்லை. ஏனெனில் அவர்கள் நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் ஆவார்கள். எதையும் அளவுக்கு மீறி கூறினால் அது அமிர்தமாக இருப்பினும் நஞ்சாகி விடும் என்ற மனித உளவியல் ஓட்டத்தைப் புரிந்த புனிதத் தலைவர் அவர்கள். அதனால் உடன்பாட்டு மறையாக, பாஸிடிவாக எதைச் சொல்ல வேண்டுமோ அதை மட்டும் சொல்லி முடிக்கின்றார்கள்.

இதுபோன்ற இதம், பதம் நம்மை என்றும் ஆட்கொள்ளும் விதத்தில் நமது பயணத்தை அமைத்துக் கொள்ளும் நன்மக்களாக அல்லாஹ் நம் அனைவரையும் ஆக்கி அருள்புரிவானாக!

பிரபல்யமான பதிவுகள்