நம்முடன் இணைந்து இருப்பவர்கள்

வெள்ளி, பிப்ரவரி 26, 2021

தமிழக முஸ்லிம்களே உஷார்,

பதவிக்காக பிணம் தின்னி கழுகு இடம் மாட்டிக்கொண்ட  போல ஒவ்வொரு நாளும் லவ் ஜிஹாத் என்ற பெயரில் இளைஞர்கள் கைது செய்யப்படுகிறார்கள்

ஒவ்வொருவருக்கும் நாளும் இப்படி வாழ வேண்டியிருப்பதை கற்பனை செய்து பாருங்கள்?

 பகிர் !!! 

இது பாலஸ்தீனத்தில் ஒவ்வொரு நாளும்.

 இஸ்ரேலிய படையினரும் புல்டோசர்களும் பாலஸ்தீனிய வீடுகள் மற்றும் கிராமங்களின் வீட்டு வாசல்களுக்கு வந்து அவர்களை அழிக்கிறார்கள். 

தங்கள் வீடுகள் அழிக்கப்படுவதால் எதிர்ப்பதற்காகவும் பெற்றோர்கள் தாக்கப்படுவதால் குழந்தைகள் பயந்து இப்படி அழுகிறார்கள்..

 வீடுகளை அழித்த பின்னர் குகைகளில் வசிக்கச் செல்லும் சில பாலஸ்தீனியர்கள் கூட பாதுகாப்பாக இல்லை, ஏனெனில் இஸ்ரேலிய வீரர்கள் குகைகளை அழித்து குடும்பங்களை வெளியேற்றுவதாக அச்சுறுத்துகின்றனர்.

 இஸ்ரேலால் திருடப்பட்ட தங்கள் சொந்த நிலங்களில் வாழ அவர்களுக்கு பாதுகாப்பில்லை. 

 உலகம் எப்போது
 விழிக்கும்?

இந்த நிலைக்கு இந்திய முஸ்லிம்களையும் ஆளாக்க நேரிடலாம் அல்லாஹ் பாதுகாப்பானாக பாசிச ஆட்சியாளர்களுக்கு இஸ்ரேலியர்களுக்கும் எந்த வேறுபாடும் இருக்காது ஆகவே ஒருமித்த கருத்துடன் இஸ்லாமிய சமுதாயம் ஒன்றுபட்டு பாசிசத்தை எதிர்க்கவில்லை என்றால் நாளை இந்து ராஜ்ஜியம் அமைத்தே தீருவோம் என்று கூவும் இவர்களை வேறொடும் வேரடி மண்ணோடும் பிடுங்கி எரியவேண்டும் அது மக்களின் கையில்தான் இருக்கிறது பணத்தாசை பிடித்து அலையும் மனிதர்களால் இன்று ஜனநாயகம் கேள்விக்குறியாகி இருக்கிறது சிந்தியுங்கள் என் இஸ்லாமிய சமுதாயமே இன்று இல்லை என்றால் இனி என்றும் இல்லை !!! முடிவு மக்கள் கையில்.

குர்ஆனும் அறிவியலும்,


சிந்தித்துணரும் மக்களுக்கு சான்றுகள் உள்ளன....
   
    மனித சமுதாயத்தைப் படைத்து அவனுக்கு வாழ்வதற்கு தேவையான அனைத்து விதமான ஏற்பாடுகளையும் செய்து, அவன் எவ்வாறு வாழவேண்டும் என்பதனையும் தெளிவுபடுத்த வழிகாட்டல்களையும் அவனது தூதர்களுடன் அனுப்பிய அல்லாஹ், இறுதியாக ஒரு பூரணமான, சிறந்த வழிகாட்டியாக எம் கரங்களில் தவழும் புனித குர்ஆனை இறக்கியருளினான்.

    தூதுவர் மூஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் வாழ்ந்த சூனியம் கொடிகட்டிப் பறந்த காலத்தில், சூனியத்ததையும் மிகைத்த அற்புதத்துடன் எவ்வாறு வந்தாரோ, ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் வாழ்ந்த மருத்துவ சமூகம் அறியாத குஷ்டரோகம், பிறவிக்குருடு போன்ற நோய்களுக்கு சுகம் கொடுக்கும் அற்புதத்தோடு எவ்வாறு வந்தாரோ, அதோ போன்று தான் இலக்கணம், இலக்கியம் போன்றவற்றில் தேர்ச்சி பெற்ற அறிவியல் சமூகத்தில் அவற்றையும் மிகைக்கக்கூடிய இந்தத் திருக்குர்ஆனுடன் நபி முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் இப்பாருக்கு தூதுத்துவத்துக்கு முத்திரையாக வாந்தார்.

    அறிவியல் ஊற்றாக வந்த இந்த குர்ஆன் அன்று முதல் இன்று வரை அனைத்துத் துறைகளிலும் சாதனைகளை நிகழ்த்தி, ஏக இறைவனிடமிருந்து வந்த வேதம், வழிகாட்டி என்பதனை நிரூபித்து வருகின்றது.

    அந்த வரிசையில் நிகழ்த்திய சாதனையொன்றுதான் நவீன 21ஆம் நூற்றாண்டான இந்த நூற்றாண்டில் 'வில்லியம் பார்வன்' என்ற ஜேர்மனிய அறிஞரின் தலைமையிலான குழு கண்டுபிடித்து நிரூபித்துக்காட்டிய விஞ்ஞான உண்மையாகும்.


    கொடிகள் போன்ற தாவரங்கள் ஒன்றுடன் ஒன்று கதைத்துக் கொள்கின்றனவா? என்று ஆராய, வில்லியம் பார்வன் என்ற ஜேர்மனிய விரிவுரையாளரின் தலைமையில் ஆய்வொன்றில் ஈடுபட்டனர். அந்த ஆய்வின் விளைவாக தாவரங்களின் ஆணிவேரிலிருந்து ஒரு வகையான ஒலி வெளிப்பட்டு அது அதன் கிளைகளை அடைந்து அந்த ஒலி வெளியாகின்றது என்று அறிந்து கொண்டனர். பின்பு அவர்கள் தாவரங்களிலிருந்து வெளியாகும் ஓசையின் யதார்த்தத்தை தெளிவுபடுத்துமாறு அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பிவைத்தார்கள்.

    அவர்கள் அதற்கு தெளிவை கூற முற்படவில்லை என்பது ஒரு புறமிருக்க, அப்படியான எந்தவொரு ஒலியும் தாவரங்களுக்கு இல்லை என்று கடுமையாக மறுத்தது மட்டுமல்லாமல் அவர்கள் ஆச்சாரியத்திற்கு உள்ளாகினார்கள்.

    பின்பு அந்தக் குழு மீண்டும் இரண்டாவது தடவையாக பிரித்தானிய விரிவுரையாளர்களுடன் தமது ஆய்வை செய்துபார்த்தனர். மிகவும் நுட்பமான கமரா மூலம் நடந்த அந்த ஆய்வின் ஐந்தாம் நாளன்று தாவரங்களிலிருந்து வெளியாகிய ஒலி அவர்களை ஆச்சரியத்தின் எல்லைக்கே இட்டுச்சென்றது. அந்த ஆய்வுக்குழுவின் தலைவரான வில்லியம் பார்வனை கலிமா சொல்ல ஆர்வமூட்டியது. அதுதான் அல்லாஹ் அல்லாஹ்.... என்ற திக்ர் முழக்கத்தின் தெளிவான ஓசையாகும்.

    அப்போது அக்குழுவில் இருந்த இந்தியாவை அடிப்படையாகக் கொண்ட பரித்தானிய முஸ்லிம், அந்த அறிஞர் குழுவை பார்த்து இவ்வாறு கூறினார். 'தாவரங்களிலிருந்து வெளியாகும் ஒலிக்குரிய தெளிவான விளக்கவுரை 1400 வருடங்களாக எம்மிடம் இருக்கின்றது.' அனைவரும் அசந்து பேய்விட்டனர். அந்தவிளக்கம் இறுதித்தூதருக்கு வழங்கப்பட்ட அறிவியல் அற்புதமான அல்குர்ஆனின் 17வது அத்தியாயமான சூறா பனீஇஸ்ராயீலின் 44வது வசனமாகும். அது இவ்வாறு கூறுகிறது.

تُسَبِّحُ لَهُ السَّمَوَاتُ السَّبْعُ وَالأَرْضُ وَمَنْ فِيهِنَّ وَإِنْ مِنْ شَيْءٍ إِلاَّ يُسَبِّحُ بِحَمْدِهِ وَلَكِنْ لاَ تَفْقَهُونَ تَسْبِيحَهُمْ إِنَّهُ كَانَ حَلِيمًا غَفُورًا

'ஏழு வானங்களும், பூமியும், அவற்றில் உள்ளவைகளும் அவனைத் துதி செய்து கொண்டிருக்கின்றன, இன்னும் அவன் புகழைக் கொண்டு துதி செய்யாத (எந்தப்) பொருளும் இல்லை. எனினும் அவற்றின் துதி செய்வதை நீங்கள் உணர்ந்து கொள்ளமாட்டீர்கள், நிச்சயமாக அவன் பொறுமையுடையவனாகவும், மிக மன்னிப்பவனாகவும் இருக்கின்றான்.'

    பின் இந்த ஆய்வின் முடிவாக கீழ்வருவன தீர்மாணிக்கப்பட்டது.
1. தாவரங்களுக்கும் சிந்தித்து முடிவெடுக்கும் ஆற்றல் உண்டு.
2. தாவரங்களிலிருந்து வெளியாகும் ஒலி அதன் ஆணிவேரிலிருந்து வெளிப்பட்டு கிளைகளை சென்றடைகின்றது.

தாவரங்களுக்கு பேச்சு, மூச்சு, உணர்வு என்பன இல்லை என்று வாதிட்டவர்கள் முதன்முதலில் வெளியிட்ட முடிவே இதுவாகும்.

    இஸ்லாமிய சகோதரர்களே! இன்று இவர்கள் தாவரங்களுக்கு சிந்தித்து முடிவெடுக்கும் ஆற்றல், சக்தி உள்ளது என்று சொல்வது போன்று, இப்பிரபஞ்சத்தின் அனைத்து படைப்புகளுக்கும் இந்த ஆற்றல் உள்ளது என்று சொல்ல இன்னும் நெடுங்காலம் இல்லை. ஏனெனில் அல்குர்ஆன், சுன்னா இதனை கூறிவருகின்றது. உதாரணமாக அல் குர்ஆனின் 33வது அத்தியாயமான சூறா அல்அஹ்ஸாபின் 72வது வசனம் இவ்வாறு கூறுகின்றது.

إِنَّا عَرَضْنَا الأَمَانَةَ عَلَى السَّمَاوَاتِ وَالأَرْضِ وَالْجِبَالِ فَأَبَيْنَ أَنْ يَحْمِلْنَهَا وَأَشْفَقْنَ مِنْهَا وَحَمَلَهَا الإِنْسَانُ إِنَّهُ كَانَ ظَلُومًا جَهُولاً

'நிச்சயமாக வானங்களையும், பூமியையும், மலைகளையும் (நம் கட்டளைகளான) அமானிதத்தை சமந்து கொள்ளுமாறு எடுத்துக்காட்டினோம், அப்போது அதைச்சுமந்துகொள்வதிலிருந்து அவை விலகிக்கொண்டன, இன்னும் அதைச்சுமப்பதிலிருந்து அவை பயந்தன, (ஆனால்) மனிதனோ அதனைச்சுமந்து கொண்டான், நிச்சயமாக அவன் (அமானிதத்தை நிறைவேற்றும் விஷயத்தில்) பெரும் அநியாயக்காரனாக (அதன் கடமையை) அறியாதவனாக இருக்கின்றான்.'

இதனூடாக வானம், பூமியில் வாழ்கின்ற மனிதன் அல்லாத ஏனைய படைப்புகளும் சிந்தித்துத்தான் முடிவுகளை எடுக்கின்றன என்பது தெளிவாக தென்படுகின்றது.

    ஆனால் முஸ்லிம்களாகிய நாங்கள் கூட தாவரங்களுக்கும், விலங்குகளுக்கும் புத்தியில்லை என்ற கருத்துடையவர்களாகவே இன்றுவரை இருந்து வருகின்றோம். அப்படியல்ல மாறாக அவற்றுக்கு அல்லாஹ்வுக்கு மாறு செய்து பாவங்கள் புரிவதற்குரிய புத்தியைத்தவிர மற்ற அனைத்து ஆற்றல்களும் வழங்கப்படடுள்ளது.

    நாம் சுலைமான் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வரலாற்றைப் படித்தால் அதில் அவர்கள் பறவை, எறும்பு, காற்று, விலங்குகள் போன்றவற்றின் பாசையை அறிந்து அவற்றுடன் கதைத்ததை காணமுடியும். மேலும் அவரிடம் இருந்த 'ஹுத்ஹுத்' என்ற பறவையின் செயற்பாடுகள், மனிதனல்லாத படைப்புகளுக்கும் சிந்தித்து செயலாற்றும் ஆற்றல் உள்ளது என்பதனை உணர்த்துகின்றது.

    மேலும் அல்குர்ஆன் மற்றும் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வாழ்க்கையிலும் இவற்றுக்கான நிறைய ஆதாரங்கள் உள்ளன. உதாரணமாக நபிக்கு 12 வயதாக இருக்கும் போது ஆபூதாலிபுடன் ஷாம் தேசத்திற்கு வியாபாரத்திற்காக சென்றபோது, புஸ்ரா நகரைச் சேர்ந்த பஹீரா என்று பிரபல்யமான ஜிர்ஜீஸ் என்ற துறவிளூ நபியவர்கள் கனவாயால் வந்த போது அவருக்கு நபிமார்களுக்கு மாத்திரம் சிரம்பணியும் கற்களும் மரங்களும் சிறம்பணிந்ததாக கூறினார். மேலும் அவரது 40தாவது வயதில் மக்காவிலுள்ள ஒரு கல் அவருக்கு ஸலாம் கூறிவந்தது என்பன போன்றவையாகும். இவை கற்கள், மரங்கள் போன்றவற்றுக்கு சிந்தித்து செயலாற்றும் ஆற்றல் உள்ளது என்பதை நிரூபிக்கின்றது.

    மேலும் உலக முடிவில் முஸ்லிம்கள் யூதர்களை விரட்டி விரட்டி கொலைசெய்யும் சந்தர்ப்பத்தில் அவர்கள் கற்கள், மரங்கள், புதர்களுக்குப் பின்னால் ஒழிந்து கொள்வார்கள். அச்சந்தர்பத்தில் 'கர்காத்' எனும் யூதர்களின் மரத்தைத் தவிர மற்ற அனைத்தும் 'அல்லாஹ்வின் அடியானே! இதோ என்பின்னால் ஒரு யூதன் ஒழிந்திருக்கின்றான் அவனைக் கொல்' என்று காட்டிக் கொடுக்கும்.

    மேலும் அல்குர்ஆன் கூறும்போதுள:

وَيُسَبِّحُ الرَّعْدُ بِحَمْدِهِ وَالْمَلائِكَةُ مِنْ خِيفَتِهِ

'மேலும் இடி அவன் புகழைக் கொண்டும், மலக்குகள் அவனையஞ்சியும் (அவனை) தஸ்பீஹு செய்(து துதிக்)கின்றனர்.' (அர்ரஃது 13:13)

وَلِلَّهِ يَسْجُدُ مَنْ فِي السَّمَاوَاتِ وَالأَرْضِ طَوْعًا وَكَرْهًا وَظِلالُهُمْ بِالْغُدُوِّ وَالآَصَالِ

'வானங்களிலும், பூமியிலும் இருப்பவையெல்லாம், விரும்பியோ விரும்பாமலோ அல்லாஹ்வுக்கே ஸுஜூது செய்(து சிரம் பணி)கின்றன அவற்றின் நிழல்களும் காலையிலும் மாலையிலும் (அவ்வாறே! ஸஜ்தா செய்கின்றன).' (அர்ரஃது 13:15)

يَوْمَئِذٍ تُحَدِّثُ أَخْبَارَهَا

'அந்நாளில், அது(பூமி) தன் செய்திகளை அறிவிக்கும்.' (அஸ்ஸில்ஸால் 99:4)

    இதில் இடி, பூமி மற்றும் பிரபஞ்சத்தில் இருக்கும் அனைத்தும், படைத்த நாயனை அறிந்து அவனுக்கு நன்றி செலுத்தும் முகமாக சிரம்பனிவதை எடுத்துக் காட்டுகின்றது. இது அவற்றுக்கு கொடுத்திருக்கும் சிந்தித்து செயலாற்றும் ஆற்றலை நிரூபிக்கின்றது.

    மேலும் இந்த உயிர்களுக்கு மனிதர்கள் அறியாத நிறைய விடயங்களை அறியக்கூடிய ஆற்றல் உள்ளது. இயற்கை அனர்த்தங்களின் போது அதனை இவை முன்கூட்டியே அறிந்து தனது உயிரைக் காத்துக் கொள்கின்றன.

    மேலும் நபியவர்கள் கூறினார்கள். 'நாய் ஊளையிடுவதை செவியுற்றால் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடிக்கொள்ளுங்கள். ஏனெனில் அது ஷைத்தானைக் கண்டு சப்தமிடுகிறது. மேலும் சேவல் கூவுவதை செவியுற்றால் அல்லாஹ்விடம் ரஹ்மத்தை தேடிக்கொள்ளுங்கள். ஏனெனில் அது அமரர்களைக் கண்டு சப்தமிடுகிறது.' இவை போன்ற ஏராளமான அறிவிப்புகள் இப்பிரபஞ்சத்தின் அனைத்து படைப்புகளுக்கும் சிந்தித்து செயலாற்றும் ஆற்றல் உள்ளது என்பதை உண்மைப்படுத்துகின்றது. இவை அதி நவீன தொலை நோக்குக் கருவியான நுபுவ்வத்தின் மூலம் வெளிப்பட்டவையாகும். இதனைப் பின்வரும் வசனம் மேலும் தெளிவாக்கும்.

أَلَمْ تَرَ أَنَّ اللَّهَ يَسْجُدُ لَهُ مَنْ فِي السَّمَاوَاتِ وَمَنْ فِي الأَرْضِ وَالشَّمْسُ وَالْقَمَرُ وَالنُّجُومُ وَالْجِبَالُ وَالشَّجَرُ وَالدَّوَابُّ وَكَثِيرٌ مِنَ النَّاسِ وَكَثِيرٌ حَقَّ عَلَيْهِ الْعَذَابُ وَمَنْ يُهِنِ اللَّهُ فَمَا لَهُ مِنْ مُكْرِمٍ إِنَّ اللَّهَ يَفْعَلُ مَا يَشَاءُ

'வானங்களிலுள்ளவைகளும், பூமியிலுள்ளவைகளும், சூரியனும், சந்திரனும், நட்சத்திரங்களும், மலைகளும், மரங்களும், பிராணிகளும், மனிதர்களில் பெரும்பாலானவர்களும் நிச்சயமாக அல்லாஹ்வுக்கு ஸுஜூது செய்(து வணங்கு)கின்றன என்பதை நீர் பார்க்கவில்லையா? இன்னும் அநேகர் மீது வேதனை விதிக்கப்பட்டு விட்டது அன்றியும், எவனை அல்லாஹ் இழிவுபடுத்துகின்றானோ அவனை கண்ணியப்படுத்துபவன் எவனுமில்லை நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியதைச் செய்கிறான்.' (அல்ஹஜ்22:18)

    இது ஒருபுறம் இருக்க மேலே நாம் குறிப்பிட்ட வசனங்களை அவதானித்தோமானால் அதிலே 'தஸ்பீஹ்' மற்றும் 'சிறம்பனிதல்' என்ற வார்த்தைப் பிரயோகங்கள் பிரயோகிக்கப்படுவததை நாம் காணலாம். இவை இரண்டிலும், இந்த தஸ்பீஹ் என்ற பிரயோகத்திற்கு பல அறிஞர்களும் பலவிதமாக கருத்திடுவதை அவதானிக்கலாம். அதில் ஒரு விளக்கம் தான்: 'தஸ்பீஹ் என்பது அல்லாஹ்வைத் துதிப்பது'. அதாவது அவனது வள்ளமையை ஆற்றலை நன்கு அறிந்து அவனுக்கு நன்றி செலுத்தும் விதமாக அவனைப் புகழ்வதும் 'திக்ர்' (ஞாபகம்) செய்வதுமாகும். [கான்க (3:190,191)]

    இதற்கு கொடுக்கப்படும் மற்றுமொரு விளக்கம் தான் 'அல்லாஹ்வுக்குரிய பண்புகளை, அவனுடைய அந்தஸ்தை, அவனுக்கேயுரிய வேலைகளை வேறு எந்த வஸ்துக்கும், வேறு எந்தவொரு படைப்புக்கும், வேறு எந்தவொரு சக்திக்கும் கொடுக்காமல் இருப்பது'. அதாவது அல்லாஹ்வுக்கு நிகராக இணையாக அவனுடைய பண்புகள், வேலைகள் என்பவற்றில் யாரையும் இணைக்காமல் இருப்பது என்பதாகும். இக்கருத்தையே பின்வரும் வசனமும் தெளிவுபடுத்துகின்றது.

سَبَّحَ لِلَّهِ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ وَهُوَ الْعَزِيزُ الْحَكِيمُ

'வானங்களிலுள்ளவையும், பூமியில் உள்ளவையும் அல்லாஹ்வை தஸ்பீஹ் செய்கின்றன. அவனே (யாவரையும்) மிகைத்தவன்ளூ தீர்க்கமான அறிவுடையவன்'. (61:01)

இதனைத் தொடர்ந்து வரும் வசனங்களை அவதானித்தால் அவை பின்வருமாறு கூறுகின்றது.

يَا أَيُّهَا الَّذِينَ آَمَنُوا لِمَ تَقُولُونَ مَا لَا تَفْعَلُونَ . كَبُرَ مَقْتًا عِنْدَ اللَّهِ أَنْ تَقُولُوا مَا لَا تَفْعَلُونَ

'விசுவாசிகளே! நீங்கள் செய்யாததை ஏன் கூறுகிரீர்கள். நீங்கள் செய்யாததை(ப் பிறருக்குச் செய்ய)க் கூறுவது அல்லாஹ்விடத்தில் வெறுப்பால் மிகப்பெரியதாகிவிட்டது'. (61:02,03)

    இதில் நாம் அவதானிக்கத் தக்க விடயங்கள் தான் ஒரு மனிதனின் சொல்லும் செயலும் ஒன்றாக அமைய வேண்டும், மேலும் நாம் செய்யாததை செய்வதென்று கூறுவது அல்லாஹ்வால் மிகவும் வெறுக்கத்தக்தொன்றாகும். இந்த இரண்டு கருத்துக்களும் சிரம்பனிதல் என்பதின் விளக்கத்தோடு ஒன்றுபடுகின்றது.

    மேலே நாம் பார்த்த விளக்கங்களில் முதலாவது சொல் சார்ந்தது, இரண்டாவது செயல்சார்ந்தது. இவை இரண்டுமே அவசியமானதே. தாவரங்களிடமோ அல்லது வேறு உயிர்களிடமோ இதனை நாம் தெளிவாகக் கானலாம். உதாரணமாக ஒரு மிளகாய்ச் செடி ஒருபோதும் 'நான் இவ்வளவு காலமும் உங்களுக்கு மிளகாய் தந்தேன்ளூ இதன் பிறகு நான் கத்தரிதான் தருவேன்'. என்று அடம்பிடித்து அதைச் செய்ததுண்டா?

    மேற்கூறிய அனைத்து விடயங்களின் மூலமும் தெளிவாகின்ற ஒரு விடயம் தான் அல்லாஹ்வுக்கு இணைகற்பித்து, நிராகரித்து வாழ்பவர்களை விட இந்த உயிர்கள் அல்லாஹ்விடம் மேலானது என்பதாகும். இதனால் தான் அல்லாஹ் 7ம் அத்தியாயமான அல்அஃராபின் 179வது வசனத்தில் இத்தகைய மனிதர்களை கால்நடைகளைவிடவும் கேடுகெட்டவர்கள் என்று கூறுகின்றான்.

وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالإِنْسِ لَهُمْ قُلُوبٌ لا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آَذَانٌ لا يَسْمَعُونَ بِهَا أُولَئِكَ كَالأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ أُولَئِكَ هُمُ الْغَافِلُونَ

'நிச்சயமாக நாம் ஜின்களிலிருந்தும், மனிதர்களிலிருந்தும் அநேகரை நரகத்திற்கென்றே படைத்துள்ளோம்; அவர்களுக்கு இருதயங்கள் இருக்கின்றன - ஆனால் அவற்றைக் கொண்டு அவர்கள் நல்லுணர்வு பெற மாட்டார்கள்; அவர்களுக்குக் கண்கள் உண்டு ஆனால், அவற்றைக் கொண்டு அவர்கள் (இறைவனின் அத்தாட்சிகளைப்) பார்ப்பதில்லை அவர்களுக்குக் காதுகள் உண்டு. ஆனால் அவற்றைக் கொண்டு அவர்கள் (நற்போதனையைக்) கேட்கமாட்டார்கள் - இத்தகையோர் கால்நடைகளைப் போன்றவர்கள். இல்லை! அவற்றை விடவும் கேடுகெட்டவர்கள், இவர்கள் தாம் (நம்வசனங்களை) அலட்சியம் செய்தவர்களாவார்கள்.'

    இதே சந்தர்பத்தில் ஒரு மனிதனுக்கு ஒரு மலக்கின் அந்தஸ்தையும் அடைந்து கொள்ளலாம். எவ்வாறெனில் எமது சொல்லிலும் செயலிலும் இந்த தஸ்பீஹ் வரும் சந்தர்பத்தில் தான் இதில் ஆச்சரியப்படுவதற்கோ, சிந்திப்பதற்கோ ஒன்றும் இல்லை. ஏனெனில் மலக்குகளைவிட மனிதன் உயர்ந்தவன் என்பதனால் தான் அல்லாஹ் ஆதம் (அலை) அவர்களைப் படைத்து அவருக்கு சிரம்பனியும் படி மலக்குகளை ஏவினான். மேலும் யூஸுப் (அலை) அவர்களைப் பார்த்து அவரது சமூகமே مَا هَذَا بَشَرًا إِنْ هَذَا إِلَّا مَلَكٌ كَرِيمٌ 'அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இவர் மனிதரல்ல! இவர் மேன்மைக்குரிய ஒரு மலக்கேதவிர வேறில்லை'. என்று சாட்சியம் அளித்தார்கள்.   

    ஆகவே சகோதரர்களே! முதலில் கூறியன போன்ற எண்ணற்ற அற்புதங்கள், அதிசயங்கள் அல்லாஹ்வின் படைப்புகளில் மறைந்துள்ளன. பஞ்ச பூதங்கள் மனிதனுக்கு பயனளிப்பது போன்று தாவரங்களிலும் என்னற்ற பயன்கள் உள்ளன. தாவரம் இல்லை எனில் உயிர்கள் இல்லை என்று சொல்லும் அளவுக்கு இவற்றில் பயன்பாடுகள் உள்ளன. இது போன்ற என்னற்ற அற்புதங்கள், அதிசயங்கள் அல்குர்ஆனில் பொதிந்துள்ளன. இவற்றை ஆராய்ந்து அதிலிருந்து படிப்பினை பெருமாறு அல்குர்ஆனே கூறுகின்றது. ஆகவே முஸ்லிம்களாகிய நாம் கால்நடைகளைவிட கேடுகெட்டவர்களாக மாறாமல், உயர்ந்த படைப்பாக இருக்க அல்குர்ஆனை ஆராய்ந்து படித்து அதன்படி வாழ்வோம்.

إِنَّ فِي خَلْقِ السَّمَاوَاتِ وَالأَرْضِ وَاخْتِلَافِ اللَّيْلِ وَالنَّهَارِ وَالْفُلْكِ الَّتِي تَجْرِي فِي الْبَحْرِ بِمَا يَنْفَعُ النَّاسَ وَمَا أَنْزَلَ اللَّهُ مِنَ السَّمَاءِ مِنْ مَاءٍ فَأَحْيَا بِهِ الأَرْضَ بَعْدَ مَوْتِهَا وَبَثَّ فِيهَا مِنْ كُلِّ دَابَّةٍ وَتَصْرِيفِ الرِّيَاحِ وَالسَّحَابِ الْمُسَخَّرِ بَيْنَ السَّمَاءِ وَالأَرْضِ لآَيَاتٍ لِقَوْمٍ يَعْقِلُونَ

'நிச்சயமாக வானங்களையும், பூமியையும் (அல்லாஹ்) படைத்திருப்பதிலும்; இரவும், பகலும் மாறி, மாறி வந்து கொண்டிருப்பதிலும்;, மனிதர்களுக்குப் பயன் தருவதைக் கொண்டு கடலில் செல்லும் கப்பல்களிலும்; வானத்திலிருந்து அல்லாஹ் தண்ணீரை இறக்கி அதன் மூலமாக பூமி இறந்த பின் அதை உயிர்ப்பிப்பதிலும்;, அதன் மூலம் எல்லா விதமான பிராணிகளையும் பரவ விட்டிருப்பதிலும், காற்றுகளை மாறி, மாறி வீசச் செய்வதிலும்; வானத்திற்கும், பூமிக்குமிடையே கட்டுப்பட்டிருக்கும் மேகங்களிலும் - சிந்தித்துணரும் மக்களுக்கு (அல்லாஹ்வுடைய வல்லமையையும், கருணையையும் எடுத்துக் காட்டும்) சான்றுகள் உள்ளன.' (அல்பகறா2:164)

கடன் இருக்கும் நிலையில் ஹஜ் செல்லலாமா,

கடன் இருக்கும் நிலையில் கடனை அடைக்க எவ்வித ஏற்பாடும் செய்யாமல் ஒருவர் மரணித்தால், கடன் அடைக்கப்படும்வரை அவரது ஆன்மா அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் (திர்மிதீ); உயிர்த் தியாகிகளுக்குங்கூட கடனைத் தவிர அனைத்துப் பாவங்களும் மன்னிக்கப்படும்; ஆனால் கடன் மன்னிக்கப்படுவதில்லை (முஸ்லிம்) போன்ற அறிவிப்புகளின்படி, கடன் அடைக்கப்பட வேண்டும் என்பது சரியே! இது ஹஜ்ஜை நிறைவேற்றச் செல்வோருக்கு மட்டும் உள்ள நிபந்தனையல்ல. எல்லா முஸ்லிம்களுக்கும் பொதுவான விதியாகும்.


 

கடன் உள்ளவருக்கு ஹஜ் கடமை இல்லை என்பதையும் தாண்டி, கடனே இல்லாவிட்டாலும், ஹஜ்ஜுக்குச் சென்று வரும் பொருளாதார வசதியில்லாதவருக்கும் ஹஜ் கடமை இல்லை. அதாவது, கடமையான ஹஜ்ஜை நிறைவேற்றவில்லை என்பதற்கான கேள்விக்கு பொருளாதார வசதியற்றவர் உள்ளாக மாட்டார். ஹஜ் செய்வதற்கான பொருளாதாரம் அவரிடம் இல்லை; எனவே ஹஜ் செய்யவில்லை என்றாகிவிடும்.

ஒருவரின் ஹஜ் பயணத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் செலவாகும் என்று வைத்துக்கொள்வோம். அவருக்கு ஒரு லட்சம் ரூபாய் கடனும் உள்ளது. இப்போது உடனடியாகக் கடனை அடைத்து, ஹஜ் பயணத்தைத் தவிர்ப்பது சிறந்ததாகும். மரணம் எப்பவும் சம்பவிக்கலாம் என்பதைக் கருத்தில் கொண்டு கடன் அடைக்கப்பட வேண்டும்.

ஆனால், கடன் உள்ளவர் இஸ்லாம் அனுமதித்துள்ள வேறு வழியில் மக்கா செல்வதற்கான வசதியைப் பெற்றிருந்தால் அவருக்குக் கடன் உள்ளது என்று வைத்துக்கொண்டாலும் அவர் இப்போது ஹஜ் செய்வது கூடுமா கூடாதா என்றால், கடன் உள்ளவர் ஹஜ் செய்யலாம் என்பதே இஸ்லாத்தின் நிலைபாடாக உள்ளது. கஅபா அமைந்திருக்கும் நாட்டில் இருந்தாலும், அங்குப் பணியாற்றும் நிறுவனத்தில் ஹஜ்ஜுக்கு விடுப்புக் கிடைத்தாலும், சென்றுவர பொருளாதாரம் இருந்தாலும் கடனாளி ஹஜ் செய்தல் கூடாது என்பதற்கான தெளிவானத் தடையேதும் குர்ஆன், சுன்னாவிலிருந்து நம்மால் அறிய முடியவில்லை!

பயணத்தில் உண்பதும் உடுத்துவதும் ஹலாலாக இருக்கவேண்டும் என்று பொதுவாக இஸ்லாம் கூறுவதால், இதன் அடிப்படையில் ஹஜ் பயணத்திற்கான செலவுகள் ஹலாலாக இருக்கவேண்டும். கடன் வாங்குவது ஹராம் அல்ல! அதனால் கடன் உள்ளவர் மக்கா சென்றால் அவர் ஹஜ் செய்வதற்குக் கடன் இடையூறாக இருக்கும் என்பதற்குப் போதிய தெளிவுகள் இல்லை!

ஹஜ்ஜுடைய காலத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து பேரூந்து வாகனம் மூலமாக ஹஜ் யாத்திரையை மேற்கொள்ளும் பயணிகளுடன் வரும் பேரூந்து வாகன ஓட்டிக்குக் கடன் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அதை அவர் பொருட்படுத்த வேண்டியதில்லை. அவரும் குறிப்பிட்ட எல்லையை அடைந்ததும் ஹஜ் பயணிகளுடன் தாமும் இஹ்ராம் அணிந்து “லப்பைக்க அல்லாஹும்ம லப்பைக்” என்று தல்பியா முழங்கியபடி வாகனத்தைச் செலுத்தி மக்காவிற்குள் நுழைந்து தங்க வேண்டிய இடங்களில் தங்கி, செய்ய வேண்டிய ஹஜ் கிரியைகளை நிறைவேற்றினால் இவர் உழைப்பிற்கான ஊதியத்துடன் ஹஜ்ஜை நிறைவேற்றுகிறார். 2:198வது வசனத்தின் கருத்துப்படி ஹஜ்ஜின்போது நேர்மையான முறையில் அல்லாஹ்வின் அருளைத் தேடுவதில் அல்லாஹ் தடைவிதிக்கவில்லை!

அதுபோல், மற்ற நாடுகளிலிருந்து விமானம் மூலமாக வரும் ஹஜ் பயணிகளைக் கொண்டுவந்து ஜித்தாவில் சேர்க்கும் விமான ஓட்டி, அவரும் ஹஜ்ஜை முடித்துவிட்டு, குறிப்பிட்ட தேதியில் வந்து விமானம் புறப்படும் நாளில் வேலையை ஏற்றுக் கொள்கிறேன் என ஹஜ் கிரியைகளை நிறைவேற்றினால் அவருக்கு ஆகுமானதே!

இதை வாசித்தீர்களா? : திசை மாறும் இயக்கங்கள்
ஹஜ் கடமை என்பது கிரியைகளைக் கொண்டு நிறைவேற்றப்படுவதாகும். “பூமியில் பரந்து சென்று அல்லாஹ்வுடைய அருளைத் தேடிக் கொள்ளுங்கள்” என்கிற (62:10) வசனத்தினடிப்டையில் வேலைக்கென சவூதிக்கு வந்தவர் ஹஜ்ஜின் நாட்களில் மக்கா சென்று குறிப்பிட்ட இடங்களில் குறிப்பிட்ட கிரியைகளை நிறைவேற்றினால் அவருடைய ஹஜ் கடமையும் நிறைவேறிவிடும்.

கடன் உள்ள நிலையில் மரணித்தவருக்குக் கடன் மன்னிக்கப்படுவதில்லை. இது எல்லாருக்கும் உள்ள பொதுவானதாகும். ஹஜ்ஜுக் கடமையை நிறைவேற்றியவருக்கும் இது பொருந்தும்!

கடனாளியாக இருந்து, அந்தக் கடனை அடைக்காமலும் வாய்ப்புக் கிடைத்தும் ஹஜ்ஜை நிறைவேற்றாமலும் மரணித்த ஒருவரையும் கடனிருந்தும் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி ஹஜ்ஜுக் கடமையை நிறைவேற்றிவிட்டு மரணித்த ஒருவரையும் ஒப்பு நோக்கினால் இந்த உண்மை புரியும்.

oOo

ஹஜ்ஜுக் கடமையை நிறைவேற்றுவதற்கு அல்லாஹ் வாய்ப்பை வழங்கும்போது, ஆதாரமில்லாத பொருந்தாக் காரணங்களை நாமாகக் கற்பித்துக் கொள்ளாமல், மக்காவுக்குச் சென்று ஹஜ்ஜை நிறைவேறுவதற்கு முனைப்புக் கொள்ளவேண்டும். ஹஜ்ஜுக் கடமையை நிறைவேற்றுவதற்கு ஆர்வமூட்டும் சான்றுகளைக் காண்போம்:

அருள்வளமிக்கதாகவும் அகிலத்தாருக்கு வழிகாட்டியாகவும் மனிதர்களுக்காக அமைக்கப்பெற்ற முதல் ஆலயம் பக்கா(எனும் மக்கா)வில் உள்ளதுதான். அது, பெரும் பேறு பெற்றதாகவும் உலகத்தாருக்கான நேர்வழி மையமாகவும் திகழ்கிறது.

அதில் தெளிவான சான்றுகளும் மக்காமு இப்ராஹீமும் உள்ளன. அதில் நுழைந்தவர் பாதுகாப்புப் பெற்றவர் ஆவார். மக்களில் அங்குச் சென்றுவரச் சக்தி பெற்றோர் அல்லாஹ்வுக்காக அவ்வில்லத்தை ஹஜ் செய்வது கடமையாகும். எவர் மறுதலித்தாலும் (அதனால் அல்லாஹ்வுக்கு இழப்பில்லை. ஏனெனில்) அல்லாஹ் அகிலத்தாரிடம் தேவையற்றவன் ஆவான் (அல்குர்ஆன் 3:96,97).

“வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வையன்றி வேறு யாருமில்லை என்றும் முஹம்மத் அவர்கள் இறைத்தூதர் என்றும் உறுதியாக நம்புதல், தொழுகையை நிலை நிறுத்துதல், ஸகாத்து வழங்குதல், ஹஜ் செய்தல், ரமலானில் நோன்பு நோற்றல், ஆகிய ஐந்து காரியங்களின் மீது இஸ்லாம் நிறுவப்பட்டுள்ளது’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” அறிவிப்பவர் இப்னு உமர்(ரலி) (நூல்கள்: புகாரி 8, முஸ்லிம் 20, திர்மிதீ, நஸயீ, அஹ்மத்)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு முறை) எங்களிடையே உரையாற்றினார்கள். அப்போது, “மக்களே! அல்லாஹ் உங்கள் மீது ஹஜ்ஜை விதியாக்கிவிட்டான். எனவே ஹஜ் செய்யுங்கள்” என்றார்கள். அப்போது ஒரு மனிதர், “ஒவ்வோர் ஆண்டிலுமா (ஹஜ் செய்ய வேண்டும்), அல்லாஹ்வின் தூதேர?” என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பதிலளிக்காமல்) அமைதியாக இருந்தார்கள். அவர் மூன்று முறை அவ்வாறே கேட்டபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நான் “ஆம்’ என்று சொல்லிவிட்டால் அது (ஒவ்வோர் ஆண்டிலும்) கடைமயாகிவிடும். பின்னர் உங்களால் அதை நிறைவேற்ற முடியாமலாகிவிடும்” என்று கூறிவிட்டு, “நான் (எதுவும் கூறாமல்) உங்களு(டைய முடிவு)க்கு எதை விட்டுவிட்டேனோ அதை(ப் பற்றி எதுவும் கேட்காமல்) நீங்களும் விட்டு விடுங்கள். உங்களுக்கு முன் வாழ்ந்தவர்கள் அழிந்தெதல்லாம், அவர்கள் தங்கள் இறைத்தூதர்களிடம் அதிகமாக(த் தேவையற்ற) கேள்விகள் கேட்டதாலும் அவர்களுடன் கருத்து மாறுபாடு கொண்டதாலும்தான். ஒன்றைச் செய்யுமாறு உங்களுக்கு நான் கட்டைளயிட்டால், அதை உங்களால் முடிந்த அளவிற்குச் செய்யுங்கள். ஒன்றைச் செய்ய வேண்டாமென உங்களுக்கு நான் தடை விதித்தால் அதை(முற்றாக) விட்டுவிடுங்கள்!” என்றார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) (நூல்கள்: புகாரி 7288, முஸ்லிம் 2599, நஸயீ).

இதை வாசித்தீர்களா? : வாழ்த்துக்களில் சிறந்தது - அஸ்ஸலாமு அலைக்கும்!
தொழுகை, நோன்பு, ஸகாத் போன்ற கடமையான அமல்களை அறிவித்திடும் குர்ஆன் வசனங்களைப் போன்று, மேற்காணும் இறைவசனங்களும் நபிவழி அறிவிப்புகளும் ஹஜ் செய்வது முஸ்லிம்கள் மீது கடமையாகும் என வலியுறுத்துகின்றன.

கடமையான மற்ற அமல்களை நாம் வாழுமிடங்களில் இருந்தே நிறைவேற்றிக்கொள்ளலாம். ஆனால், ஹஜ்ஜுக் கடமையை, மனிதர்களுக்கென முதல் முதலாக அமைக்கப்பட்ட இறை ஆலயம் என அல்லாஹ் அறிவித்திருக்கும் மக்காவில் அமையப்பெற்ற கஅபத்துல்லாஹ்வைச் சென்றடைந்து அதைச் சுற்றியுள்ள குறிப்பிட்ட சில இடங்களில் தங்கியிருந்து ஹஜ் கிரியைகளை நிறைவேற்றிட வேண்டும்.

ஹஜ்ஜைப் பற்றி மக்களுக்கு அறிவிப்பீராக! அவர்கள் நடந்தும் வெகு தொலைவிலிருந்து வரும் மெலிந்த ஒட்டகங்களின் மீதும் உம்மிடம் வருவார்கள் (எனக் கூறினோம்) (அல்குர்ஆன் 22:27).

இறைத்தூதர் இப்ராஹீம் (அலை) அவர்களின் மூலமாகவே அல்லாஹ் ஹஜ்ஜின் அறிவிப்பை ஏற்பாடு செய்துள்ளான் என்பதை மேற்கண்ட வசனத்திலிருந்து விளங்குகிறோம். ஹஜ்ஜுக்கான அறிவிப்பைக் கேட்டு ஹஜ்ஜை நிறைவேற்றுவதற்காக அருகிலிருப்போர் நடந்தும், தூரத்திலிருப்போர் வாகனங்களில் பயணித்தும் கஅபத்துல்லாஹ்வை வந்தடைவார்கள் என்றும் அல்லாஹ் கூறுகிறான்.

மக்களில் அங்குச் சென்றுவரச் சக்தி பெற்றோர் அல்லாஹ்வுக்காக அவ்வில்லத்தை ஹஜ்ஜுச் செய்வது கடமையாகும் (அல்குர்ஆன் 3:97).

ஒரு முஸ்லிம் இன்று உலகின் எந்தப் பகுதியில் இருந்தாலும் அவர் மக்காவுக்குச் சென்று வர சக்தி பெற்றிருந்தால் அங்குச் சென்று ஹஜ் செய்வது அவருக்குக் கடமையாகும். இந்த வசனத்தில் கூறப்பட்டுள்ள ‘சக்தி’ என்பது ஹஜ் கிரியைகளுக்காகத் தொலை தூரம் செல்வதால் சென்று திரும்பும் நாட்களுக்கான பொருளாதாரமும் உடல் ஆரோக்கியமும் முக்கியத் தேவைகளாகும்.

அடுத்து, தொலை தூரம் சென்று வர வாகனம் அவசியம். ‘சக்தி’ என்பதில் வாகன அவசியமும் உள்ளடங்கும். ஆகவே, ஹஜ்ஜுக்குச் சென்று வர சக்தி பெற்றோர் என்பதில் பொருளாதாரம், உடல் ஆரோக்கியம், மற்றும் வாகன வசதியும் வேண்டும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓர் அன்சாரிப் பெண்ணிடம், “நீ எங்களுடன் ஹஜ்ஜுச் செய்வதைத் தடுத்தது எது?” என்று கேட்டார்கள். அதற்கு அப்பெண்மணி, “எங்களிடம் நீர் இறைப்பதற்கான இரண்டு ஒட்டகங்கள் மட்டுமே உள்ளன. ஓர் ஒட்டகத்தில் என் கணவரும் மகனும் ஏறி ஹஜ்ஜுக்குச் சென்றுவிட்டனர். மற்றோர் ஒட்டகத்தை எங்களுக்காக விட்டுச் சென்றனர். அதன் மூலம் நாங்கள் நீர் இறைத்துக் கொண்டிருக்கிறோம்” என்றார்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ரமளான் மாதம் வந்துவிட்டால் அப்போது நீ உம்ராச் செய்துகொள். ஏனெனில், ரமளானில் உம்ராச் செய்வது ஹஜ்ஜுக்கு நிகரான(பலனுடைய)தாகும்” என்று கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) (நூல்கள்: புகாரி 1863, மேற்கண்ட அறிவிப்பு முஸ்லிம் 2408, 2409)

இதை வாசித்தீர்களா? : ரஜப் மாத நற்(?) செயல்கள்
இதன் அறிவிப்பாளர் அதாவு (ரஹ்) அவர்கள் கூறுகிறார்: “இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அப்பெண்ணின் பெயரைக் குறிப்பிட்டார்கள். ஆனால், அதை நான் மறந்துவிட்டேன்”. (அப்பெண்ணின் பெயர் ‘உம்மு ஸினான்’ என்பதாகும்).

ஹஜ்ஜுக்குச் சென்று வர வாகனத் தேவையுள்ளது. இது அந்தந்தக் காலத்திற்கேற்ப வாகனங்கள் மாறிக்கொள்ளும். சென்று வரும் சக்தியை முன்னேற்பாடு செய்துகொள்ள வேண்டும். என்றும் அல்லாஹ் கூறுகிறான்.

ஹஜ்ஜுக்குரிய காலம் குறிப்பிடப்பட்ட மாதங்களாகும்; எனவே, அவற்றில் எவரேனும் (இஹ்ராம் அணிந்து) ஹஜ்ஜைத் தம் மீது கடமையாக்கிக் கொண்டால், ஹஜ்ஜின் காலத்தில் உடலுறவு, கெட்ட வார்த்தைகள் பேசுதல், சச்சரவு – ஆகியவை செய்தல் கூடாது; நீங்கள் செய்யும் ஒவ்வொரு நன்மையையும் அல்லாஹ் அறிந்தனாகவே இருக்கிறான்; மேலும் ஹஜ்ஜுக்குத் தேவையான பொருட்களைச் சித்தப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள்; நிச்சயமாக இவ்வாறு சித்தப்படுத்தி வைப்பவற்றுள் நன்மை மிக்கது, தக்வா(என்னும் இறையச்சமே) ஆகும்; எனவே நல்லறிவுடையோரே! என்னையே அஞ்சி வாழுங்கள் (அல்குர்ஆன் 2:197).

ஹஜ்ஜுக்குத் தேவையான பொருள்களைச் சேகரித்துக் கொள்ள வேண்டும் என்பதில் உணவும், வாகன வசதியும் அடங்கிவிடும்.

யமன் வாசிகள் (ஹஜ்ஜுக்குத் தேவையான) பொருள்களைச் சேகரிக்காமல் ஹஜ்ஜுக்கு வருவார்கள். மேலும், ‘நாங்கள் இறைவன் மீது நம்பிக்கை வைத்துள்ளோம்’ என்றும் கூறுவார்கள். மக்கா வந்தடைந்தால் மக்களிடம் யாசகம் கேட்பார்கள். இது குறித்தே அல்லாஹ், “(ஹஜ்ஜுக்குத் தேவையான) பொருட்களைச் சித்தப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள், நிச்சயமாக இவ்வாறு சித்தப்படுத்தி வைப்பவற்றுள் மிகவும் நன்மையானது தக்வா (என்னும் இறையச்சமே) ஆகும்” என்ற வசனத்தை இறக்கினான். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) (நூல்: புகாரி 1523).

2:197வது வசனம் அருளப்பட்ட பின்னணி, தொலைவிலிருந்து ஹஜ்ஜுக்குச் செல்வோர் தேவையான பொருட்களை சேகரித்துக் கொண்டு செல்லாமல் மக்கா சென்று தமது தேவையை யாசித்துப் பெற்றுள்ளனர். இவ்வாறு செய்யாமல் உங்களுக்கான பொருட்களை முன்னேற்பாடாக சேகரித்துக் கொள்ளுங்கள் என்று அறிவுரை சொல்லப்படுகிறது. இதனால் யாசிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று சொல்லலாமே தவிர, வயிற்றுப் பசிக்குக்கூட யாசிப்பது கூடவே கூடாது என்று தடைவிதிப்பதாக ஆகாது. “குர்பானி இறைச்சியை ஏழைகளுக்கும், யாசிக்காதோருக்கும், யாசிப்போருக்கும் உண்ணக் கொடுங்கள்” என்று 22:28, 36 ஆகிய வசனங்கள் கூறுகின்றன!.

சக்தி பெறுதலைத் தாமாக முயற்சி செய்து சக்தி பெறுதல் என்றும் எதிர்பாராமல் வேறு வகையில் மக்கா சென்று விடுவது என்றும் இரு வகைகளாகப் பிரிக்கலாம். நாம் கவனிக்கத் தக்கது அவை ஹலாலான வழியில் உள்ளதா என்பதை மட்டுமே.

எனவே, ஹஜ்ஜுக் கடமையை நிறைவேற்றுவதற்கு ஹலாலான வழியில் சக்தி வழங்கப்பட்டவர்கள், கடன் என்ற காரணத்துக்காக அதைத் தள்ளிப் போட்டுக் கொண்டிருக்கத் தேவையில்லை.

பிரபல்யமான பதிவுகள்