роироо்рооுроЯрой் роЗрогைрои்родு роЗро░ுрок்рокро╡ро░்роХро│்

родிроЩ்роХро│், роЪெрок்роЯроо்рокро░் 30, 2019

рокро┤ро╡ேро▒்роХாроЯு,pulicat,

#ஏன்_பழவேற்காட்டை_பாதுகாக்க_வேண்டும்
இந்தியாவிலேயே முதன் முதலாக குடியேறிய மாலுமி வாஸ்கோடகாமா என்றும் தற்போது கேரளாவில் உள்ள கோழிகோட்டை என்ற இடத்தை அடைந்ததும் யாவரும் அறிந்த வரலாற்று உண்மையே

அதேப்போல் பழவேற்காட்டில் போர்த்துகீசியர்கள் 1522ல் குடியேறினார்
அதைத்தொடர்ந்து 1607ல் டச்சுக்காரர்கள் இங்கு வந்தனர்
அப்பொழுது நாயக்க மன்னர் இரண்டாம் வேங்கடரின் மனைவி இறைவிடம் டச்சுக்காரர்கள் அனுமதிப் பெற்று ஒரு சிறு தொழிற்சாலையை நிறுவினார்

அருகில் உள்ள போர்த்துகீசியர்களால்  பொருத்து கொள்ள இயலாமல் அத்தொழிற்சாலையை தாக்கி நாசமாக்கினார் அப்பொழுதுதான் டச்சுக்காரர்களுக்கு கோட்டை கட்டும் அவசியம் வந்தது

1613ல் ஜெல்ரியா என்ற கோட்டையை டச்சுக்காரர்கள் கட்டி முடித்தனர்.
ஜெல்ரியா என்பதன் பொருள் நெதர்லாந்தில் உள்ள ஒரு மாகாணத்தின் பெயர்.இந்த கோட்டையை பார்த்துதான் புனித ஜார்ஜ் கோட்டையை 1639 இல் ஆங்கிலேயர்கள் கட்டினா்.புனித ஜார்ஜ் கோட்டையை கட்டுவதற்கு பழவேற்காட்டில் உள்ள ஜல்ட்ரியா கோட்டையும் ஒரு காரணம்தான்

பின்பு அந்த கோட்டையை தகர்க்க எத்திராஜ் என்ற  அரசன் முயற்சி செய்தபோது டச்சுக்காரர்கள் அந்த சதியை முறியடித்தனர் அதுமட்டுமில்லாம் போர்த்துகீசியர்களும் முயற்சி செய்தனர் அதுவும் தோல்வியில்தான் முடிந்தது எப்பொழுதும் அந்த கோட்டையை சுற்றி 100 பாதுகாவலர்கள் இருந்ததாக குறிப்புகளும் உண்டு

சென்னையின் வரலாறுகூட 400 ஆண்டுகளுக்கு உட்பட்ட வரலாறே ஆனால் பழவேற்காட்டுடைய வரலாறு என்பது 1000 ஆண்டுகளுக்கு முந்திய வரலாறு என்று கூறலாம்
அதுமட்டுமில்லாமல் சோழர்கால சிவன் கோயிலும்,விஜயநகர பேரரசு கட்டின ஆதிநாரயண பெருமாள் கோயிலும் இங்கு சிறப்பானது,பள்ளி வாசலில் உள்ள நிழல் கடிகாரம்,மகிமை மாத கோயில்,முகத்துவாரம் இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்

இந்தியாவிலேயே இரண்டாவது உப்புநீர் உவரி பழவேற்காடு ஏரிதான்,உலக பாரம்பரிய சின்னங்களில் பழவேற்காடு ஏரியும் ஒன்று,ஆறும் கடலும் கலக்கக் கூடிய முகத்துவாரம்,படகு சவாரி,பறவைகள் சரணாலயம், என்னற்ற சுற்றுலா தளங்களாகவும் பழவேற்காடு அமைந்துள்ளது

வருடம் முழுவதும் இறால் கிடைக்க கூடிய இடமும் பழவேற்காடுதான்,இங்கு பச்சைகல்(கட்டுநண்டு) நண்டு,சிலிக்கா நண்டு,கோட்றா,வெள்ளறா,சமூக்க எறா இப்படி பலவகையான இறாக்களும் நண்டுகளும் உண்டு.அதேப்போல். மீன்வகைகளில் ஆத்துமீன் கடல்மீன் என்று இரண்டு வகையான மீன்களாக பிரிக்கலாம்,ஆற்றில் ஊடன்,கெலங்கான்,மடவ,சப்பிளி,சங்கரா,உடுபாத்தி,மட்டுவான்,போன்ற மீன்களும் கடலில் பாற,கானங்களுத்தி,வஞ்சிரம்,சுறா,கொடுவா,சூர,மத்தி,இன்னும் பல மீன்கள் இப்பழவேற்காட்டில் காணலாம்

இங்கு பிடிக்க கூடிய மீன்களை கேரளா,கர்நாடக,ஆந்திரா போன்ற  மாநிலங்களுக்கும்,சென்னை அருகிலுள்ள காசிமேடு,சிந்தாதிரிப்பேட்டை போன்ற இடங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது

இப்படி வரலாறும்,இயற்கையும் நிறைந்த பழவேற்காட்டை எல்.என்டி  துறைமுகத்தால் மீன்வளம் குறைந்தும்,சமூகத்தில் பொருளாதார தேக்கமும் நிலவுகிறது மீண்டும் அதானி என்னும் துறைமுகம் வர ஒருபோதும் நாம் அனுமதி தரக்கூடாது பழவேற்காட்டை பாதுகாப்பது  நம் ஒவ்வொருவரின் தலையாய கடமை நமது
#Save_Pazhaverkadu
#Stop_Adani_Port

рокிро░рокро▓்ропрооாрой рокродிро╡ுроХро│்