நம்முடன் இணைந்து இருப்பவர்கள்

சனி, டிசம்பர் 14, 2019

இஸ்லாமிய அரசர்களைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்,

குடியுரிமை சட்டத்தின் மூலம் இந்தியநாட்டை உருவாக்கிய இசுலாமியர்களை வெளியேற்ற முயலும்
மத்தியஅரசே..! மதவாத அரசே..!

முகலாய மன்னர்களின் வருகைக்கு முன்னால் குமரி முதல் இமயம் வரை இந்தியா ஒரு நாடாக இருக்கவில்லை...

#சிந்தனைக்கு......

ஒருவேளை முஸ்லிம்கள் இந்தியாவிற்கு வராமல் இருந்திருந்தால் இந்தியா என்றொரு நாடு உருவாகாமல் இருந்திருக்கலாம்....?!

வரலாற்றை அறிவோம்…
.
முஸ்லிம்கள் இந்தியாவிற்கு வருவதற்கு முன்பு இந்தியா என்று ஒரு நாடு இருக்கவில்லை. 
அது (இந்தியப் பகுதி) கூர்ஜர – பிரதிஹரர்கள் நாடு, கன்னோசி நாடு, பாலர்கள் நாடு, கலிங்க நாடு, ராஷ்டிர கூடர்கள் நாடு, பாண்டிய நாடு, சேர நாடு, சோழ நாடு என பல நாடுகளாகத் திகழ்ந்தது. 
.
இந்தியா முழுமைக்கும் என்று ஒரே மன்னனோ, ஒரே தலைநகரமோ, ஒரே சட்டமோ, ஒரே நிர்வாகமோ, ஒரே நிர்வாக மொழியோ இருக்கவில்லை. 
.
இந்தியா முழுமையையும் ஒரே நாடாக இணைத்து, இந்தியா முழுமைக்கும் ஒரே அரசின், ஒரே தலைநகரம், ஒரே சட்டம், ஒரே நிர்வாகம், ஒரே நிர்வாக மொழி என்று வந்தது அலாவுதீன் கில்ஜி காலத்தில் தான். 
.
இதனை அதற்கு பின் வந்த முஸ்லிம் அரசர்கள் சுமார் 500 ஆண்டுக்காலம் கட்டிக்காக்க கூர்ஜர – பிரதீஹர நாட்டினர், கன்னோசி நாட்டினர், பாலர் நாட்டினர், கலிங்க நாட்டினர் என்பது மறைந்து இந்திய நாட்டினர் என்றாயிற்று. அது தான் இன்றுவரை தொடர்கிறது.
.
ஒருக்கால் முஸ்லிம்கள் இந்தியாவிற்கு வராமல் இருந்திருந்தால் இந்தியா என்றொரு நாடு உருவாகாமல் இருந்திருக்கலாம். 
.
இவ்வாறு இந்தியா என்றொரு நாடு உருவாக காரணமாக இருந்த கோரி முகம்மது, குத்பு தீன் ஐபெக், பக்தியார் கில்ஜி, இல்டு மிஷ், பால்பன், அலாவுதீன் கில்ஜி ஆகியோரின் தொண்டு உயரிய சரித்திர ஆசிரியர்களின் மனதிலே பதிந்ததேயல்லால் பாமரர்களிடத்தில் அது சென்றடையவில்லை. 
.
நம்முடைய பாடத்திட்டங்கள் அவ்வாறு அமைக்கப் பட்டுள்ளன. 
.
முஸ்லிம்கள் படையெடுப்பாளர்களாக போதிக்கப்படுகிறார்கள். 

எனினும் படையெடுப்பென்பது அன்றைய நியதி என்பதையும், 
.
அப்படி படையெடுத்து வந்த முஸ்லிம் அரசர்கள் இந்தியாவையே தங்கள் தாய்நாடாக கொண்டார்கள் என்பதையும், 
.
இவர்களில் பலர் இந்தியாவிலேயே பிறந்து, இந்தியாவிலேயே வளர்ந்தவர்கள் என்பதையும், 
.
இவர்கள் எப்பகுதியிலிருந்து வந்தார்களோ அப்பகுதிகளை இவர்களின் எதிரிகள் கைப்பற்றி விட்டதால் அவை இவர்களின் எதிரி நாடுகள் ஆகிவிட்டன என்பதையும், 
.
இவர்கள் அவற்றோடு போரிட்டார்கள் என்பதையும், 
.
இவர்கள் இங்குள்ள செல்வத்தை (ஆங்கிலேயர் போல) தங்கள் மூதாதையர் நாட்டிற்கு எடுத்துச் செல்லவில்லை என்பதையும், 
.
இங்குள்ள செல்வத்தை இந்நாட்டின் வளத்திற்கே உபயோகித்தார்கள் என்பதையும், 
.
இவர்கள் இங்கிருந்த பிற மன்னர்களை வென்றது தான் நாட்டின் ஒருங்கிணைப்பை கொண்டு வந்தது என்பதும் சொல்லப்படுவதில்லை.
.
ஆம். கோரி முகம்மது கூர்ஜர – பிரதீஹரர்கள் நாட்டை, கன்னோசி நாட்டை வென்றது படையெடுப்பாக சொல்லப்படுகிறதேயல்லால், அதனால் கூர்ஜர பிரதிஹரர்கள் நாடு, கன்னோசி நாடு என்பது மறைந்து டெல்லியை தலைநகராகக் கொண்ட அரசோடு அவை இணைந்து இந்தியா என்றொரு நாடு உருவாக அவர் வித்திட்டார் என சொல்லப் படுவதில்லை. 
.
அவ்வாறே இல்டுட்மிஷ் ஒரு படையெடுப்பாளனாக சொல்லப் படுகிறாரேயல்லாமல் டெல்லி பேரரசிற்கு அப்பால் இருந்த பகுதிகளை வென்று இந்திய டெல்லி பேரரசோடு இணைத்து ஒன்றுபட்ட இந்தியா உருவாக காரணமாக இருந்தவர் என்பதும் சொல்லப்படுவதில்லை. 
.
அவ்வாறே அலாவுதீன் கில்ஜியும் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை, ஆப்கானிஸ்தான் முதல் வங்காளம் வரை உள்ள பகுதிகளை ஒவ்வொன்றாக வென்று டெல்லியை தலைநகராகக் கொண்ட இந்திய அரசோடு இணைத்து, தன் ஆட்சியின் கீழ் ஒரே தலைநகரம், ஒரே சட்டம், ஒரே நிர்வாகம், ஒரே நிர்வாக மொழி கொண்ட இந்தியா என்று திகழச் செய்தவர். 
.
எனினும் முஸ்லிம்கள் படையெடுப்பாளர்கள் என்று பாட நூல்கள் கூறுகின்றனவேயல்லால் அவர்கள் தங்கள் ரத்தம் சிந்தி, சிறிதும் பெரிதுமான நாடுகளை வென்று, மத்திய அரசோடு இணைத்து ஒன்றுபட்ட இந்தியாவை உருவாக்கி தங்கள் உதிரத்தால் அது சிந்தாமல் சிதறாமல் கட்டிக்காத்தவர்கள் என்று சொல்லப்படுவதில்லை. 
.
ஆனால் உண்மை நீண்ட நாட்களுக்கு உறங்காது. அது விழித்தெழும் போது வீரிட்டு எழும். 
.
எனவே ஒன்றுபட்ட இந்தியா உருவாக காரணமாக இருந்தவர்கள் முஸ்லிம்கள். அவர்கள் வராமல் இருந்திருந்தால் ஒன்றுபட்ட இந்தியா உருவாகாமல் போயிருக்கக் கூடும். 
.
இந்தியாவை ஒன்று படுத்தியதோடு அதனை மிக நீண்டகாலம், சுமார் 500 ஆண்டுகள், ஒன்றாகவே கட்டிக் காத்தது தான் இந்தியன் என்ற உணர்வு வளர காரணமாயிற்று. 
.
இது முஸ்லிம்கள் இந்தியாவிற்கு ஆற்றிய மகத்தான தொண்டு. 
.
இந்தியாவை பாதுகாத்தல்: ஒன்றுபட்ட இந்தியாவை உருவாக்கியது முஸ்லிம்கள் இந்தியாவிற்கு ஆற்றிய அரும் பெரும்தொண்டென்றால், அவ்விந்தியாவை அவர்கள் மங்கோலியர் படையெடுப்பிலிருந்து பாதுகாத்தது இன்னும் சற்று உயரிய தொண்டாகும். 
.
ஆம் 13-ம் நூற்றாண்டின் துவக்கத்தில் டெல்லியில் முஸ்லிம்கள் தங்கள் பேரரசை உருவாக்கி, இந்தியாவை ஒன்றுபடுத்திக் கொண்டிருந்த காலக்கட்டத்தில் 

மங்கோலியாவிலிருந்து வெகுண்டெழுந்த முரட்டு இனத்திரான மங்கோலியர்கள் தங்கள் மாபெரும் தலைவன் செங்கிஸ்கான் தலைமையில் டெல்லி பேரரசை போன்று பன்மடங்கு விரிந்த, பன்மடங்கு வலிமை பெற்றிருந்த பேரரசுகளான சீனப் பேரரசு, மத்திய ஆசியா, மேற்கு ஆசியா பகுதிகளை வென்றுக் கொண்டு இந்தியாவிற்கு அருகில் இருந்த மிக வலிமை பெற்ற குவாரசைம் பேரரசை நெருங்கியபோது 
.
அதன் வலிமை பொருந்திய மன்னன் அலாவுதீன் (டெல்லியின் அலாவுதீன் கில்ஜி அல்ல) மங்கோலியர் வலிமைக்கு அஞ்சி காஸ்பியன், பகுதிக்கு ஓடிவிட, 
.
குவாரசைம் அரசின் வாரிசு ஜலாலுத்தீன் பஞ்சாப் வந்து டெல்லியின் முஸ்லிம் மன்னன் இல்டுமிஷ்ஷிடம் அடைக்கலம் கோரிய போது, 
.
இல்டுமிஷ் மதியூகத்துடன் அதை நிராகரித்துவிட, ஜலாலுத்தீனை துரத்தி வந்த செங்கிஸ்கான் டெல்லியை தாக்காமல் திரும்பிச் சென்றார். 
.
இல்லையேல் இந்தியா மங்கோலியர்களால் கைப்பற்றப்பட்டு ஒரு மங்கோலிய காலனியாகியிருக்கும்.
.
இல்டுமிஷ்ஷின் மதியூகம் இந்தியாவை காத்தது. 
.
மங்கோலிய படையெடுப்பு இல்டுமிஷ் காலத்தில் மட்டும் நடைபெறவில்லை. 
.
அது டெல்லி சுல்தான்கள் பால்பன், அலாவுதீன் கில்ஜி காலத்திலும் தொடர்ந்தது. மங்கோலியரிடமிருந்து இந்தியாவை காக்க பால்பன் எல்லைப்புரத்தில் வலிமையான கோட்டைகளைக் கட்டி அதில் தீரமிக்க படையை நிறுத்தினான். 
.
இவரின் வல்லமை மிக்க ஆளுனன் ஷேர்கான் மங்கோலியர்களுக்கு ஒரு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தான்.
.
 ஷேர்கானின் இறப்பிற்கு பின்மங்கோலியரிடமிருந்து இந்தியாவை காக்க பால்பன் தன் மைந்தர்கள் முகம்மது கான் மற்றும் புக்ராகானை எல்லைப்புற கவரனர்களாக நியமித்தான். 
.
வலிமையும் தீரமும்மிக்க முகம்மதுகான் மங்கோலியருடன் நடைபெற்ற யுத்தத்தில் மாண்டான். தன் 80வது வயதில் முதியோனாகிய பால்பனுக்கு இது ஒரு பேரிடியாக அமைந்தது. 
.
இந்தியாவை காப்பதில் தன் அன்பு மகனை பறிகொடுத்த பால்பன் தன் பணியில் சற்றும் தளர்ச்சியடையாமல், உடன் மேல் நடவடிக்கை எடுத்து மங்கோலியர்களை வென்று இந்தியாவை காத்தான், 

ஏனோ இந்திய பாடநூல்கள் இத்தியாகத்தை போற்றுவதில்லை. 
.
அலாவுதீன் கில்ஜியின் காலத்தில் மங்கோலியர் அடுக்கடுக்காய் இந்தியாவின் மீது படையெடுத்து வந்தனர். 

இரண்டு முறை அவர்கள் டெல்லியையும் கைப்பற்றினர். 

ஆனாலும் அலாவுதீன் கில்ஜி மனம் தளரவில்லை.

 தன் உயரிய அதிகாரிகளான ஜாபர் கான், காஜிமாலிக், மாலிக் காபூர் ஆகியோரைக் கொண்டு மங்கோலியர்களை மிரண்டு ஒடச் செய்தான். 
.
மங்கோலியர்களை வீழ்த்தி இந்தியாவை காத்ததில் மேற்சொன்ன மூன்று அதிகாரிகளின் பங்கு மகத்தானது. 

இலட்சக்கணக்கில் திரண்டு வந்த வீரமிக்க மங்கோலியர்களை தாக்கி, சின்னாபின்னப்படுத்தி, சிதறி ஓடச்செய்தான் ஜாபர்கான். 
.
அதனால் நீர் நிலைகளில் தாகம் தீர தண்ணீர் பருக குதிரைகள் தயங்கினால். “ஏன் ஜாபர்கானை கண்டு விட்டீர்களா?” என மங்கோலியர் கேட்டதாக ஒரு கூற்று. 
.
அது போன்றதே காஜி மாலிக் மற்றும் மாலிக் காபூரின் ஆற்றலும், டெல்லியை கைப்பற்றிய மங்கோலியர்களை தாக்கி, இடுப்பொடிந்து சிதறி ஓடச் செய்தனர் 
.
இவர்கள். மங்கோலியர்களைப் போன்றே அலாவுதின் கில்ஜியும் ஒரு போர் விரும்பியாக (War Lord), தீரனாக, அஞ்சாநெஞ்சினனாக, போர் தந்திரம் மிக்கவனாக இருந்ததே மங்கோலியர் தோல்விக்கு மிக முக்கிய காரணம்.
.
இத்தகைய முஸ்லிம் சுல்தான்களும், தளபதிகளும் இல்லாதிருந்தால் இந்தியா மங்கோலியரால் கைப்பற்றப்பட்டு, அது ஒரு மங்கோலியக் காலனியாகியிருக்கும். 
.
அவ்வாறின்றி ஒன்று படுத்திய இந்தியாவை மங்கோலியரிடமிருந்து பாதுகாத்து இந்தியாவாகவே திகழச் செய்தது முஸ்லிம்கள் இந்தியாவிற்கு ஆற்றிய அளவிடற்கரிய பெருந் தொண்டாகும். 

– பேரா. ஏ. தஸ்தகீர் – (முன்னாள் வரலாற்றுத் துறை தலைவர், அரசு கல்லூரி

இந்தியாவின உயர்விற்கும் வளர்ச்சிக்கும் பல்வேறு கால கட்டங்களில் முஸ்லிம்கள் அயாராது உழைத்துள்ளனர்
.
இந்தியா என்ற அகண்ட ஒரு நாட்டை உருவாக்கியவர்களும் அதை கட்டியழுப்பியவர்களும் முஸ்லிம்களே !
.
குமரி முதல் இமயம் வரை இந்தியா ஒரு நாடே என்ற பெருமை நிறைந்த முழக்கத்தை நாம் செவியுறுகிறோம் 
.
ஆனால் குமரி முதல் இமயம் வரை மட்டும் இல்லாமல் பாகிஸ்தானையும் வங்காள தேசத்தையும் இணைத்த ஒரு அகண்ட பாரதத்தை உருவாக்கியவர்கள் முஸ்லிம்கள் 
.

.முஹலாய மன்னர்களின் வருகைக்கு முன்னால் குமரி முதல் இமயம் வரை இந்தியா ஒரு நாடாக இருக்கவில்லை 
நாம் வாழும் தமிழகமே சேர நாடு சோழ நாடு பல்லவ நாடு பாண்டிய நாடு என ஒரு 50 துண்டுகளாகவாவது இருந்திருக்கும் 
.
தமிழகமே இத்தனை துண்டுகளாக இருந்தது என்றால் இந்தியா எத்தனை துண்டுகளாக நொறுங்கி கிடந்திருக்கும் என்பதை நீங்கள் எண்ணி பாருங்கள் 
.
இப்படி நொறுங்கி கிடந்த இந்தியாவை ஒருங்கிணைத்து அகண்ட பாரதமாக உருவாக்கியவர்கள் முஸ்லிம்கள்
.
இந்திய முஸ்லிம்களின் செங்குருதியில் இந்திய சுதந்திரம் பெறப்பட்டது .
.
இஸ்லாமியர்களின் தியாகமும்—-இந்திய சுதந்திரமும்……..
.
இந்திய சுதந்திர போரில் இந்திய நாட்டில் வாழ்ந்த மக்கள் தொகையில் சிறு பாண்மையினராக இருக்கக்கூடிய முஸ்லிம் மக்கள் தங்களின் சதவீதத்தைவிடவும் மிக அதிகமாக தங்களின் இன்னுயிரையும் ,பொருளாதாரத்தையும் இழந்து, 
.
ஆங்கிலேயர்களால் பலவித கொடிய இன்னல்களை அனுபவித்தும் இந்திய சுதந்திரத்திற்காக பாடுபட்ட வேளையில், 
.
ஆங்கிலேயர்களுக்கு வால் பிடித்தும் அவர்கள் போடும் எழும்பு துண்டாண சர் பட்டத்திற்காகவும்,அவர்களிடம் அடிமை வேளை பார்க்கவும் முறை வாசல் செய்து வந்தவர்கள் கைபர் கணவாய் வழியாக இந்தியாவிற்கு வந்தேறிகளாக வந்த பார்ப்பனர்கள் தான் என்பது உண்மை வரலாறு. 
.
இன்று இந்தியாவை இந்து மயமாக்குவோம் என்று முழங்கும் பார்ப்பன பாசிஸ்ட்டுகள் அன்று காட்டிக்கொடுப்பவர்களாகவே இருந்தனர்.
.
ஏன் வாஜ்பாயும் கூட காட்டிக்கொடுத்தவர்களில் ஒருவர் அதற்கு சரித்திரம் சான்று பகர்கின்றது. 
.
காட்டிக் கொடுத்து பதவி சுகம் பெற்ற இவர்களால் ஆங்கிலம் பேசுவதும் ஹராம் என்று மார்க்கக் கட்டளையிட்ட இந்திய முஸ்லிம்களின் தியாகம் மறைக்கப்பட்டுள்ளதோடு
.
இன்றைக்கு முஸ்லிம்களை வன்முறையாளர்களாகவும் தீவிரவாதிகளாகவும் சித்தரிக்க பார்ப்பன பணியா கும்பல் தங்களின் ஊடகங்கள் வாயிலாக முற்சித்து அதில் வெற்றியும் பெற்றுள்ளன. 
.
சுதந்திரப் போராட்டத்தில் எவ்வித பங்களிப்பும் செய்யாததோடு சுதந்திரப் போராளிகளை ஆங்கிலேயரிடம் காட்டிக் கொடுத்த ஒரு கூட்டம் இந்தியாவை உரிமை கொண்டாடுகிறது. 
.
இந்திய சுதந்திரத்திற்காக பாடுபட்டு சுதந்திரம் பெற்றுத்தந்த முஸ்லிம்களுக்கு குடியிருக்க வாடகைக்குகூட வீடு கிடைக்காத நிலை இந்தியாவில் ஏற்பட்டிருக்கிறது. 
.
சுதந்திரமடைந்து கிட்டத்தட்ட அறுபது வருடங்களாகியும் கல்வி வேலை வாய்ப்புகளில் இடஒதுக்கீடு வேண்டி கெஞ்சிக் கொண்டிருக்கும் நிலைமையும் வேதனையளிக்கிறது. 
.
ஆட்சியில் இருக்கக்கூடியவர்கள் எந்த மதத்தைச் சார்ந்தவர்களோ,எந்த கொள்கையை சார்ந்தவர்களோ அவர்களுக்கு சாதகமான வரலாற்றை கல்வியில் புகுத்தியும்,தனக்கு எதிரான கொள்கையுடையவர்களைப் பற்றி தவறான செய்திகளை புகுத்தியும் உண்மையான வரலாற்றை திரித்து வைத்திருக்கின்றனர். 
.
கர்னாடகத்தில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சியில் இருக்கின்ற காரணத்தினால் அங்கே பகவத் கீதையை கல்விகூடங்களில் புகுத்த முயற்சிக்கிறது. 
.
பீகாரில் பாரதீய ஜனதா கட்சி கூட்டணியில் ஆட்சி நடத்தும் நிதீஷ் குமார் ஆர்.எஸ்.எஸ்.தலைவர் கோவால்கர் உடைய வாழ்க்கை வரலாற்றை பாடத்திட்டத்தில் புகுத்தியுள்ளது. 
.
இது போன்றே முன் சென்ற ஆட்சியாளர்கள் உண்மையான இஸ்லாமியர்களின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட தியாகத்தை மறைத்து  காந்தியை சுட்டுக்கொன்றவர்களின் தியாகம் போற்றப்படுகிறது. 
.
இதுபோன்ற தவறான செய்திகளை மீண்டும் மீண்டும் (கோயபல்ஸ்தத்துவம்) கேள்விப்படும் மக்கள் (இஸ்லாமியர்கள் உள்பட) இந்த வரலாறு உண்மையாக இருக்குமோ? என்று நினைக்கின்றனர். 
.
அவர்களுக்காக,மற்றும் இஸ்லாமியர்களைப்பற்றி தவறாக விளங்கியுள்ள மற்றவர்கக்கும் உண்மையை விளக்கும் விதமாக இக்கட்டுரை தொகுக்கப்பட்டுள்ளது. 
.
இந்திய சுதந்திரத்திற்கு பாடுபட்ட இஸ்லாமியர்களைப் பற்றிய ஒரு சில செய்திகளை அறிந்துகொள்வது நல்லது. 
.
சுதந்திரப்போராட்டத்தில் ஈடுபட்ட முஸ்லிம்களைப்பற்றி 1975ம் ஆண்டு டிசம்பர் மாதம் 27ம் தேதி வெளியான ‘இல்லஸ்டிரேட்டட் வீக்லி’ என்னும் பத்திரிக்கையில் அதன் ஆசிரியர் குஷ்வந்த் சிங் பல ஆதாரங்களுடன் எடுத்துக் கூறி உறுதிப்படுத்தியுள்ளார். 
.
இந்திய விடுதலைக்காகச் சிறை சென்றவர்களிலும் உயிர்த் தியாகம் செய்தவர்களிலும் முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையில் இருந்தனர். 
.
அவர்களுடைய மக்கள் தொகை விகிதாச்சாரத்தைவிட விடுதலைப்போரில் உயிர் துறந்த முஸ்லிம்களின் விகிதாச்சாரம் அதிகம்’ என்று அந்தப் பத்திரிக்கையில் வெளியான கட்டுரையில் கூறப்பட்டுள்ளது. 
.
சுதந்திர வரலாற்றில் இந்திய அளவில் இல்லாது தமிழகத்திலும் ஏராளமானவர்கள் பல தியாகங்களை செய்துள்ளனர். .
.
இந்தியாவை கட்டிஎடுழுப்பியது போலவே இந்தியா அணுஆயுத வல்லரசாக உருவாகுவதற்கும் ஒரு முஸ்லிமின் உழைப்பே அடிப்படையானது
.
டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் முக்கிய பங்களிப்பில் நடத்தபட்ட பொக்ரான் அணுகுண்டு சோதனைக்கு பிறகுதான் இந்தியா உலக அரங்கில் வலிமையுடன் உயர்ந்து நின்றது
.
அந்த நிகழ்வுக்கு பிறகு தான் உலக நாடுகள் இந்தியாவை திரும்பி பார்க்க ஆரம்பித்தது 
.
ஏவுகளை தொழில் நுட்பமானாலும் ராக்கெட் தொழில் நுட்பமானாலும் அணுஆயுத தொழில் நுட்பமானாலும் அனைத்தையும் இந்தியாவிற்கு வழங்கியதில் அப்துல் கலாமின் பங்கு அளபெரியது 
.
இந்த தொழில் நுட்பங்களை இந்தியாவிற்கு வழங்கி இந்தியாவை சிறப்பின் சிகரத்தில் அமரவைத்து உலகில் இருந்து விடை பெற்றிருக்கிறார் 
இசுலாமியரான அப்துல் கலாம்...

இந்தியா என்ற ஒரு தேசத்தை உருவாக்கிய இசுலாமியர்களை வெளியேற்ற நினைப்பது
களிறு தன் மீது மண்ணை அள்ளி வீசுவதற்கு ஒப்பாகும்.

வலிமார்கள். அவ்லியாக்கள்.யார்?

சூஃபித்துவத்தில் குருவின் இடம்

��நம் உடலுக்கு ஒருவரை தந்தை என்று அறிகிறோம். அவருடையை பெயரின் முதல் எழுத்தையே முதலெழுத்தாகவும் (இனிஷியலாக) போட்டுக் கொள்கிறோம். அதை யாராவது மாற்றிப் போட்டுவிட்டால் கோபம் கொள்ளவும் செய்கிறோம். இந்த உடலுக்கான தந்தை ஒரு குறிப்பிட்ட நபர் என்பதைப்போல, நம்முடைய ஆன்மாவுக்கு ஒரு தந்தை தேவைப்படுகிறார். ஆன்மிக உலகின் அவையத்து நம்மை முந்தியிருக்கச் செய்ய அவரால் மட்டுமே உதவ முடியும். அவர்தான் ஆன்மிகப் பாதையின் குரு. ஞானாசிரியர். ஷெய்கு. முர்ஷித். பீர். இன்னும் எத்தனையோ பெயர்களால் அழைக்கப்படுபவர். அவரை ‘ரூஹின் தந்தை’ என்றும் சொல்கிறார்கள். ‘ரூஹ்’ என்ற அரபிச் சொல்லுக்கு ஆன்மா என்று பொருள்.

��ஒரு ஞானகுரு என்பவர் மனிதனுக்கும் இறைவனுக்கும் இடையேயான பாலமாக அல்லது ஏணியாக இருக்கிறார். ஞானப்பாதையில் இருக்கும் நிலைகளையும் அவைகளை எப்படிக் கடப்பது என்பதையும், அதில் உள்ள அபாயங்களையும் அருள்களையும் எடுத்துக்காட்டக் கூடியவர் அவரே. ஏனெனில் அனுபவ அறிவை உணர்த்த அந்த அனுபவம் பெற்ற இன்னொருவரால் மட்டுமே முடியும்.

��சொல்லத் தகுமல்ல இப்பொருளைச்

சுருட்டி மறைக்கிறேன் ஷரகுக்காக (ஞானப்புகழ்ச்சி, பாடல் எண் 17)

��என்று பீரப்பா சொல்வதன் காரணமும் இதுதான். வெளிப்படையாகப் புட்டுப்புட்டு வைக்க முடியாத ரகசிய அறிவாகும் இது.

��நூல்களில் வழியாக நீச்சல் கற்றுக்கொள்ள முடியாது. தண்ணீருக்குள் இறங்கித்தான் ஆகவேண்டும். நீச்சல் தெரியாமல் இறங்கும் சமயத்தில் ஒரு நீச்சல் நிபுணரின் உதவி தேவைப்படுகிறது. நம்மை நீரின் மேலே போட்டுவிடுகின்ற அதே சமயத்தில் நாம் நீரினுள் மூழ்கி செத்துவிடாமல் காக்க அவராலேயே முடியும். குருவானவர் நம்மை ஆக்குபவராகவும் காப்பவராகவும் இருக்கிறார். அதனால்தான் ஃபனா பிர்ரஸூல், ஃபனா ஃபில்லாஹ் எல்லாம் துவங்கும் இடம் ஃபான ஃபிஷ் ஷைஹ் ஆக உள்ளது

��யாருக்கு ஆன்மிக ஞானகுரு வாய்க்கவில்லையோ அவனுடைய குரு ஷைத்தானாகவே இருப்பான் என்றார். ஞானி
பாயஸீத் பிஸ்தாமி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள்.

��ஒரு ஞானாசிரியரிடத்தில் உதவி தேடுவதென்பது நபிகள் நாயகத்திடமே உதவி தேடுவதைப் போன்றதாகும். ஏனெனில் ஒரு சிஷ்யர் ஒரு ஞானகுருவிடம் தீட்சை பெற்றிருப்பார். அந்த ஞானகுரு இன்னொருவரிடம் தீட்சை பெற்றிருப்பார். அப்படியே அது நபிகள் நாயகம் அவர்களைப்போய்ச் சேரும். இந்த ஞானகுருக்களின் வரிசை சூஃபி ஞான பாதையில் சில்சிலா எனப்படுகிறது. ஆன்மிகப் பாதைகளின் தொடக்கமும் முடிவும் பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள்தான்.

��குருவுக்கு தரும் மரியாதை இறைவனுக்கே தரும் மரியாதை என ஞானி இப்னு அரபி அவர்களின் ஃபுதூஹாத்துல் மக்கிய்யா எனும் ஞான நூல் குறிப்பிடுகிறது. ஞானவழியில் செல்வதற்கு ஒரு தோழரைத் தேடிக்கொள் என்று ஹதீஸ் ஒன்றும் உள்ளது.

��”ஒரு குருவைக் கண்டுகொண்டால் நீங்கள் அருள் பாலிக்கப்பட்டவராவீர்கள். அவருடைய அருளாசியினால் கற்பனைக்கும் கனவுகளுக்கும் எட்டாததையெல்லாம் நீங்கள் பெறுவீர்கள்” என்று கூறுகிறார் ஞானி பரமஹம்சர்.

♥இறைவனே குருவாக

♥வல்லதீன ஜாஹதூ ஃபீனா ல நஹ்தியன்னஹும், எவரொருவர் இறைவனை அடையும் பொருட்டு, தன் முழு சக்தியையும் பயன்படுத்தி முயல்கின்றாரோ அவரை நேரான பாதையில் தானே செலுத்துவதாக அல்லாஹ் சூரா அன் கபூத்-தில் [26:69] அறிவிக்கிறான்.

��மெய்ஞ்ஞானப் பாதையில் செல்பவர்களுக்கு இறைவனே குருவாக இருக்கிறான் என்பது இந்த வசனத்தின் மூலமும் இன்னும் இதுபோன்ற பல வசனங்களின் மூலமாகவும் தெளிவாகிறது.

��“கருவே குருவே என் கண்ணே ரஹ்மானே” என்று இறைவனை குருவாக்கி ஞானகவி மஸ்தான் சாஹிபு  பாடினார்கள். பீரப்பாவின் ஞானப்பூட்டின் ஒரு பாடலும் இறைவனை இவ்விதவே விளிக்கிறது:

��”எல்லாரும் குருவாகிவிட முடியாது. நீரில் மிதக்கும் பெரிய மரக்கட்டையின் மீதேறி மிருகங்களும் செல்லலாம். ஆனால் மதிப்பற்ற மரத்துண்டின் மீது மனிதன் ஏறினால் மூழ்கிப்போவான். ஒவ்வொரு காலகட்டத்திலும் இறைவனே குருவாகி வருகின்றான். சச்சிதானந்தன் மட்டுமே குருவாவான்” என்று பரமஹம்சர் கூறுவது குறிப்பிடத்தக்கது.

��பிறப்புடனிறப்புமில்லை பிசகது தானுமில்லை .

நிறப்புகழனைத்து மொன்றாய் நின்றது நிறைந்த சோதி

சிறப்புளவமுதமூட்டித் திருப்பதஞ் சேர்க்கும் ஞானத்

திறப்புகளறிந்த பேர்க்குத் திறவுகோல் குருவதாமே ! என்று குருவின் புகழைப் பாடுகிறார் பீராப்பா.

��வணக்க வழிபாடுகள், ஆன்மிகப் பயிற்சிகளின் அவசியம்
சூஃபிப் பாதையில் பயணிக்கும் ஒருவர் குருவின் வழிகாட்டுதலின் பேரில் சில அல்லது பல ஆன்மிகப் பயிற்சிகளை தினமும் செய்யவேண்டியிருக்கும். இதனை  முராகபா, முஹாசபா,  ரியாளத், சாதனா என்றும் இன்னும் பல பெயர்களாலும் குறிப்பிடுகின்றனர். பெருமானார் ஹிராக் குகையில் தனித்திருந்து இறைவனை தியானித்தது நமக்கு முக்கியக் குறிப்பாகும். பயிற்சிகள் மேற்கொள்ளாமல் எந்த சூஃபியும் உருவாகவில்லை.

��கௌது நாயகம் அவர்கள் முதலில் 11 ஆண்டுகளும் பிறகு 11 ஆண்டுகளும் தனிமையில் பயிற்சிகளை மேற்கொண்டார்கள். இமாம் கஸ்ஸாலி பல ஆண்டுகள் சூஃபிகளோடு தனித்திருந்து பயிற்சிகள் மேற்கொண்டார்கள். நாகூர் நாயகம் அவர்கள் தம் வாழ்நாள் பூராவும் பயிற்சியிலேயே கழித்தார்கள் என்றே சொல்லலாம். அவர்களது குருவான முஹம்மது கௌது குவாலியரி அவர்கள் காடுகளில் 12 ஆண்டுகள் தனித்திருந்து பயிற்சிகள் மேற்கொண்டார்கள்.

��இந்தப் பயிற்சிகளெல்லாம் ஏன்❓பரமஹம்சர்  இந்தக் கேள்விக்கு விடை கொடுக்கிறார்:

��”பித்தளைப் பாத்திரத்தை தினமும் கழுவ வேண்டும். ஆனால் தங்கப் பாத்திரத்தை அப்படிச் செய்யவேண்டியதில்லை. ஆன்மிக சாதகன் தினமும் தியானம் செய்து மனதைத் தூய்மையாக வைத்திருக்கவேண்டும். இறைவனை அடைந்தவருக்கு எதுவும் தேவையில்லை.

பிரபல்யமான பதிவுகள்