அண்ணல்நபிமீது அழகியகாதல்!*
*அண்ணல்நபி(ஸல்) அவர்கள்சொன்ன அருமையானதுஆ அதைஓதியதால
ஒருநாள்
*அண்ணல்நபி*
ஸல்லல்லாஹூ
அலைஹி வஸல்லம்
அவர்கள் பயான்
செய்தார்கள்.
"பயான் முடிந்து
வீட்டுக்கு வந்த
*ஹஜ்ரத்அபூசலமா*
அன்ஹூ அவர்கள்"
"தங்கள் மனைவி
*உம்முசல்மா*
ரலியல்லாஹு
அன்ஹா அவர்களிடம்"
*"நபிஸல்லல்லாஹூ* அலைஹி வஸல்லம் அவர்கள்இன்றுபயானில்
ஓர் அருமையான
துஆவைச் சொல்லிக்
கொடுத்தார்கள்.!"
"நம்முடைய
வாழ்க்கையில்
என்ன பிரச்சனை
ஏற்பட்டாலும்
இந்தத் துஆவை
ஓதிவந்தால்..
அந்தப் பிரச்சினை
தீர்ந்து விடும்..!"
ஆகவே
நீ இந்தத்துஆவை
எழுதி வைத்துக்கொள்...
"ஒருவேளைநான்
இறந்து விட்டால்
அந்தத் துஆவை
நீ ஓதிவா உன்கவலை
தீர்ந்துவிடும்..!"
என்றார்கள்.
"சில மாதங்களில்
*ஹஜ்ரத்அபூசலமா*
(ரலி) அவர்கள்
இறந்து விட்டார்கள்..!"
"கணவரை இழந்த
துக்கம் தாங்காமல்
*உம்முசலமா(ரலி)*
அவர்கள் துடித்துப்
போய்விட்டார்கள்..!"
ஏனென்றால்
*"ஹஜ்ரத்அபூசலமா*
(ரலி) அவர்கள் ஊர்
மக்கள் வியந்து
பாராட்டும் அளவுக்கு
மனைவியை
அவ்வளவு அன்பாக
வைத்திருந்தார்கள்.!"
காலங்கள் கடந்தன...
"ஒருநாள்
*உம்முசல்மா(ரலி)*
அவர்களுக்கு
நபியவர்கள் சொன்ன
அந்தத்துஆ ஞாபகம் வந்ததும்."
انا لله وانا اليه راجعون
اللهم أجرني في مصيبتي واخلف لي خيرا منها
*"இன்னா லில்லாஹ் வ இன்னா இலைஹி ராஜிவூன்.... அல்லாஹூம் மஃஜுர்னீ ஃபீமுஸீபத்தி வஹ்லுஃப்லீ கைரம்மின்ஹா"*
பொருள்:
யா அல்லாஹ்!
என் கஷ்டத்தை
நீக்கி.. எனக்கு
சிறந்த நலவை
கொடுப்பாயாக!
*"உம்முசல்மா*
ரலியல்லாஹு
அன்ஹா அவர்கள்
துஆவைதினமும்
ஓதிவந்தார்கள்!"
இந்தத் துஆவை
ஓதும்போதெல்லாம்..
"நிச்சயமாக!
எனது அன்புகணவர்
*அபூசலமா (ரலி)*
அவர்களைப் போல்
இந்த உலகத்தில்
சிறந்த கணவர்
கிடைக்கமாட்டார்..!"
*"அண்ணல் நபி*
*ஸல்லல்லாஹூ*
அலைஹி வஸல்லம் அவர்கள்சொன்ன துஆ
என்பதால்..."
"நான் இந்தத் துஆவை
ஓதிவருகிறேன்..!"
என ஓதிவந்தார்கள்.
*"அல்லாஹுஅக்பர்*
*என்னஒர்ஆச்சரியம்.!*
அன்னைஉம்முசல்மா
ரலியல்லாஹு அன்ஹாஅவர்களுக்கு.."
"அகிலத்தின்பேரொளி
*அண்ணல்*
*பெருமானார்*
*ஸல்லல்லாஹூ*
அலைஹி வஸல்லம்
அவர்களே கணவராக வந்தார்கள்..!"
நூல்: முஸ்லிம்
*அண்ணல்நபிமீது அழகியகாதல்!*
*பூமான்நபியை பார்த்தால்....... தொட்டால்....... பேசினால்........ எழுதினால்..... புகழ்பாடினால்.. மீலாதுநடத்தினால்.. மவ்லிதுஓதினால்... ஹந்தூரிசெய்தால்... எல்லாம்பரக்கத்..!*
*முதன்முதலில்*
*மாநபியைதொட்ட*
*பெண்மணிக்கு*
*கிடைத்தபரக்கத்..!*
!!!!*!!!!!*!!!!!*!!!!!*!!!!!*!!!!*
அன்னைஆமினாஅம்மா
(ரலி) அவர்களுக்கு
பிரசவம் பார்த்த
உம்முஷ் ஷிஃபா(ரலி)
சொல்கிறார்கள்.
"உலகத்தில் யாருக்கும்
கிடைக்காத பெரும்
பாக்கியத்தை
அல்லாஹ் எனக்கு கொடுத்தான்.!"
*"அண்ணல்நபி*
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்குழந்தையாக
பிறந்தபோது
முதன்முதலில்
என் கையில் தான்
விழுந்தார்கள்.!"
*"அண்ணல்நபி*
*(ஸல்)அவர்களை*
முதன் முதலில் தொட்டபரக்கத்தினால்
அல்லாஹ் எனக்கு
கொடுத்த பாக்கியம் என்ன தெரியுமா?"
"சுவர்க்கவாதியும்,
உலகத்திலேயே
மாபெரும்
செல்வந்தருமான...
*அப்துர்ரஹ்மான்*
*இப்னு அவ்ப்*
(ரலி) அவர்களை
"அல்லாஹுதஆலா
எனக்கு மகனாக
கொடுத்தான்.!"
என்றார்கள்.
*அண்ணல்நபி அவர்களைத்தொட்ட பரக்கத்தினால் விடுதலை..!*
(*(*(*(*(*(*(*(*(*(*("(*(*(*(*
"அன்னைஆமீனாஅம்மா
(ரலி) அவர்களுக்கு
உம்முஷ் ஷிஃபா
அவர்கள்பிரசவம்
பார்த்தபின்.."
"தனக்குஉதவிக்காக
பக்கத்தில்இருந்த
சுவைபிய்யாவிடம்
குழந்தையான
கோமான்நபியவர்களை கொடுத்தார்கள்."
"உலகிலேயே
இரண்டாவதாக
*அண்ணல்நபி*
*ஸல்லல்லாஹு*
அலைஹிவஸல்லம்
அவர்களைத்தொட்ட.."
"அபூலஹபுடைய
அடிமைப் பெண்
சுவைபபிய்யாவுக்கு
அல்லாஹ்கொடுத்த
பாக்கியம் என்ன தெரியுமா..?"
பூமான்நபி(ஸல்)
அவர்கள் பிறந்த
செய்தியை
அபூலஹபிடம்சென்று.."
"உங்கள்சகோதரர்
அப்துல்லாவுக்கு
ஆண் குழந்தை பிறந்திருக்கிறது
என சொன்னதும்.."
அடுத்த நொடி
"கல்நெஞ்சன்அபூலஹப் மனம்மாறிசுவைபா
உன்னை விடுதலை செய்கிறேன்."என
சுட்டுவிரலைநீட்டி
சொன்னான்.
-மௌலானா மௌலவி
*அபூபக்கர்உஸ்மானி*
ஹஜ்ரத் அவர்களின்
பயானிலிருந்து...
*அண்ணல்நபிக்காக*
*அடிமையை விடுதலைசெய்த*
*அபூலஹபுக்கு*
*கிடைத்தபரக்கத்..!*
!!!!!!*!!!!!!!*!!!!!!!*!!!!!!*!!!!!!*
"அண்ணல்நபி
ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்
அவர்கள் பிறந்த
செய்தியை
சொன்னதால்..."
"சுவைபியாவை
விடுதலை செய்ததால்
அல்லாஹுதஆலா
அபூலஹபுக்கு கொடுத்தபரக்கத்
என்ன தெரியுமா..?"
"ஒருமனிதர் கனவில்
அபூலஹப்நரகத்தில்
இருப்பதைபார்த்தார்.!"
அபூலஹப் சொன்னார்:
*"முஹம்மத் (ஸல்)*
அவர்கள் பிறந்த செய்தியைஎன்னுடைய
அடிமைசுவைபிய்ய
சொன்னதும்.."
"நான் சந்தோஷத்தில் சுட்டுவிரலைநீட்டி
நீ விடுதலை.!"என
சொன்னேன்
அதன் காரணத்தால்
"நான் நரகத்தில்
இருந்தாலும்
அல்லாஹுதஆலா
என்சுட்டுவிரலில் பால்சுரக்கவைக்கிறான்
அதைநான்குடித்து வருகிறேன்!"என்றார்
அகிலத்தின்அருள் அண்ணல்நபி(ஸல்) அவர்களின் அழகுதிருமுகம்..
*பேரழகுமுகம்..!*
"""""""""""""""""""""""""""""""""""""""
அஜ்மலு மின்க லம் தரக்த்து அய்னா
*நாயகமே! உங்களைப்போன்ற ஓர்அழகுமுகத்தை எந்தக்கண்ணும் பார்த்ததில்லை..!*
-ஹஸ்ஸான்இப்னு
ஸாபித் (ரலி)
*வெண்மைமுகம்..!*
"""""""""""""""""""""""""""""""""""""""
"நபி(ஸல்)அவர்கள்
மிகவெண்மையான
அழகிய முகம்
உடையவர்களாக
இருந்தார்கள்.!"
-இப்னு துஃபைல்(ரலி)
நூல்:-திர்மிதீ
*பௌர்ணமிமுகம்.!*
""""""""""""""""""""""""""""""""""""""
வஜ்ஹுல் முபாரக்
மித்லஷ்ஷம்ஸி
வல் கமரீ முஸ்ததீரா
*"அருள்நபியின் அழகுமுகம் பௌர்ணமிபோல் வட்டவடிவமாக பிரகாசித்துக் கொண்டிருக்கும்.!"*
-ஜாபிர்பின்சமூரா(ரலி)
நூல்:-பைஹகீ
*சஹாபாக்கள் சொல்வார்கள்:-*
"""""""""""""""""""""""""""""""""""""""
"நாங்கள்வெயிலில்
வேலை செய்து கொண்டிருப்போம்
"எங்களுக்கு
களைப்புஏற்பட்டால்...
உடனேபள்ளிவாசல்
பக்கமாக சென்று..."
*"அண்ணல்நபி*
(ஸல்)அவர்களின் அழகுதிருமுகத்தைப் பார்ப்போம்..உடனே
எங்களுடையகளைப்பு
நீங்கி சுறுசுறுப்பாக
ஆகிவிடுவோம்.!"
*நபிமூஸா(அலை) அவர்களின்ஆசை..!*
"மிஃராஜில்
*அண்ணல்நபி*
*ஸல்லல்லாஹு*
அலைஹிவஸல்லம்
அவர்களிடம்
*"நபிமூஸா* அலைஹிஸ்ஸலாம்
அவர்கள் 50 வக்த்
தொழுகையை
5 வக்த்வரை
திரும்பத்திரும்ப
குறைத்துவிட்டு வரசொன்னதின்
ரகசியம் என்ன தெரியுமா?"
*"அண்ணலநபி*
(ஸல்) அவர்களின்
அழகு திருமுகத்தை
திரும்பத் திரும்ப
பார்க்க வேண்டும்.!" என்றஆசையினால்.
-சூஃபியாக்கள்
*மிஃராஜின் ரகசியம்?*
""""""""""""""""""""""""“"""""""""""""""""
ربي ارنى انظر اليك
"யா அல்லாஹ்!
நான் உன்னை
பார்க்க வேண்டும்" என
*"ஹஜ்ரத்நபிமூஸா*
(அலை)அவர்கள்
அல்லாஹ்வை பார்க்க ஆசைப்பட்டார்கள்.!"
ஆனால்
*"அண்ணல்நபி*
(ஸல்)அவர்களின்
அழகுதிருமுகத்தைப்
அல்லாஹ்பார்க்க ஆசைப்பட்டான் மிஃராஜுக்குஅழைத்து
கொண்டான்..!"
*பூமான்நபியை நினைத்தால் பார்த்தால் மனதுக்குஅமைதி.!
*அண்ணல்நபி(ஸல்)*
ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்
அவர்கள்
"உஹதுப்போரில் விட்டார்கள் என வதந்திபரவியதும்..."
"மதீனாவைச்சேர்ந்த
ஒரு பெண்மணி
உஹது போர்களத்தை
நோக்கிசென்றார்..!"
"போகும் வழியில்
உங்கள் தந்தை
உங்கள் கணவர்
உங்கள் பிள்ளை
இறந்து விட்டார்கள்
என்ற செய்தி கேட்டபோது
"முஹம்மத்(ஸல்)
அவர்கள் எப்படி இருக்கிறார்கள்?"
என்றுதான் கேட்டார்.
"உஹதுகளம்சென்று
அண்ணல்நபிகளின்
நூரானமுகத்தைப்
பார்த்ததும்..."
كل مصيبة بعدك جلل يارسول الله
"யா ரசூலுல்லாஹ்!
உங்கள்திருமுகத்தை
பார்த்த பின்.."
"என் தந்தை கணவர் பிள்ளை இறந்த
எல்லாகவலையும்
மறைந்து போய்விட்டது யாரசூலுல்லாஹ்!"
என்றார்.உலகின்பேரருள் உத்தமநபி(ஸல்) அவர்களின் உதடுகள்..!*
*இறுதிநபியின் இறுதிநேரம்..!*
*அன்னைஆயிஷா*
ரலியல்லாஹு
அன்ஹாஅவர்கள் சொல்கிறார்கள்:-
*அண்ணல்நபி*
(ஸல்) அவர்களின்
இறுதி நேரம்.....
"நபியவர்களை
நான் நெஞ்சோடு அணைத்துக் கொண்டேன்."
பின்பு "மிஸ்வாக் குச்சியை கடித்து மிருதுவாக்கி கொடுத்தேன்
நபியவர்கள்
மிஸ்வாக்
செய்தார்கள்."
"நபியவர்கள்
மேல்நோக்கி பார்த்தவர்களாக தங்கள் விரலை மேல்நோக்கி உயர்த்தினார்கள்."
அப்போது
"பெருமானாரின்
*உதடுகள்*
அசைந்தன என்ன
சொல்கிறார்கள்?"
என காதுதாழ்த்தி நான்கேட்டேன்.
"யா அல்லாஹ்!
உண்மையாளர்கள்
வீரத்தியாகிகள்
நல்லடியார்கள்
ஆகிய நீ அருள்
புரிந்த இவர்களுடன்
சேர்த்துவைப்பாயாக!"
"என்னை நீ மன்னிப்பாயாக!
என்மீது கருணை காட்டுவாயாக!
உயர்ந்த நண்பருடன் என்னை சேர்த்து வைப்பாயாக!"
என்றார்கள்.
கடைசி வாசகத்தை மூன்று தடவை சொன்னார்கள்.
"இறுதியாக
உயர்த்திய கை
கீழே சாய்ந்தது
உயர்ந்த நண்பனாகிய
அல்லாஹ்விடம் சென்று விட்டார்கள்.!"
இன்னாலில்லாஹி..
ஹிஜ்ரி 11
ரபிவுல்அவ்வல்12
திங்கட்கிழமை
முற்பகல் நேரம்
63 வயது 4 நாட்கள்
இப்பூவுலகை விட்டு மறைந்தார்கள்
(நூல்:-புகாரி ஷரீஃப்)
*பூமான்நபிமீது பாத்திமாநாயகிக்கு என்னஒருபாசம்..?*
__________***___________
*அண்ணல்நபி*
ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்
அவர்களின்
இறுதி நேரம்...
*"அன்பு மகளார் அன்னைபாத்திமா* ரலியல்லாஹு
அன்ஹாஅவர்களை
அருகில்அழைத்து
ஏதோசொன்னார்கள்"
*"அன்னைபாத்திமா*
(ரலி) அவர்கள் அழுதார்கள்
நபியவர்கள்
மீண்டும் ஏதோ சொன்னார்கள்
சிரித்தார்கள்.!?"
மாநபியவர்களின்
மறைவுக்குப் பின்...
*அன்னைபாத்திமா*
(ரலி) அவர்களிடம்
*அன்னைஆயிஷா*
(ரலி) அவர்கள்
"நபியவர்கள்
உங்களிடம் என்ன சொன்னார்கள்?
"நீங்கள் ஏன்
அழுதீர்கள் பிறகு
ஏன் சிரித்தீர்கள்?"
எனக் கேட்டதும்
*அன்னைபாத்திமா*
(ரலி)அவர்கள் சொன்னார்கள்:
*நபி(ஸல்)அவர்கள்*
என்னுடையகாதில்..
"பாத்திமா!
எனக்கு ஏற்பட்ட இதே வலியினால் நான் இறந்து விடுவேன் என்றார்கள் நான்
அழுதேன்..!"
"நமது குடும்பத்தில் நீங்கள் தான் என்னை முதலில் சந்திப்பீர்கள் என்றார்கள்
நான் சிரித்தேன்.!"
என்றார்கள்.
அல்லாஹு அக்பர்
என்ன ஒரு பாசம்!
*"நபிஸல்லல்லாஹு* அலைஹி வஸல்லம்
அவர்கள் நான்
இறக்கப்போகிறேன்.!"
என சொன்னபோது
"பெருமானார்
(ஸல்) அவர்களை
பிரியப்போகிறோமே.!"
எனபாத்திமாநாயகி
அழுதார்கள்.
"நீங்கள் என்னை முதலில் சந்திப்பீர்கள்
அதாவது நீங்கள் இறந்து விடுவீர்கள் என்றபோதுஎன்றபோது... நாம்
மௌத்தாகப்போகிறோமே என அழவில்லை..!"
*"அண்ணல்நபி* ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்
அவர்களை சீக்கிரம் சத்திக்கப்
போகிறோமே என்ற
சந்தோஷத்தில்
சிரித்தார்கள்.!"