--------------------------
இந்த இயக்கங்களில், தவ்ஹீது பேரில் மக்களை அழைக்கும் ஒரு இயக்கத்தின் தலைமை முன்னோடி மெளலவிகள் மீது தொடர்ந்து பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன.
--------------------------
வைக்கப்படும் பாலியல் குற்றச்சாட்டு உண்மையா பொய்யா என்பது பற்றி ஆராய்வது நமது நோக்கம் அல்ல. ஒரு தனிப்பட்ட தவ்ஹீது இயக்கத்தின் நிர்வாகிகள் தொடர்ந்து பாலியல் பழியில் வீழ்வது ஏன்? அதற்கான காரணம் என்ன என்று ஆராய்வதே நமது கட்டுரையின் நோக்கம்.
--------------------------
இஸ்லாமிய வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்ட இயக்கங்கள் இஸ்லாம் கூறும் குர்ஆன், ஹதிஸ் படி செயல்படாமல், வழிகெட்ட கவாரிஜ்கள் வழியில் செல்வதே இதற்கு ஒரே காரணம்.
--------------------------
ஒன்றுபட்ட நபித்தோழர்களிடையே பிரிவினை ஏற்படுத்தி “அஹ்லே தவ்ஹீத்” என்ற தனி ஜமாத்தை முதன் முதலில் உண்டாக்கியவர்கள் கவாரிஜ்கள். இவர்கள் வழியில் சென்று தவ்ஹீத் பெயரில் தனி இயக்கம், தனிப்பள்ளி கட்டியவர் ததஜ மெளலவி. பி. ஜெய்னுல் ஆபிதீன்.
--------------------------
இந்த வழிகெட்ட கவாரிஜ்களின் வழிமுறையை பின்பற்றியே தமிழ்நாடு தவ்ஹீது ஜமாத்தும் ஒவ்வொரு ஆர்ப்பாட்டம், போராட்டம், மாநாடு என்று அனைத்து இயக்க நிகழ்வுகளுக்கும் ஆணையும், பெண்ணையும் ஒன்றாக களத்தில் இறக்கி விட்டு ஃபித்னாவுக்கு விதை போட்டனர்.
--------------------------
அடுத்து இவர்கள் பெண்களுக்கு செய்த மாபெரும் துரோகம், இயல்பாக வெட்க உணர்வும் நாணமும் கொண்ட பெண்களின் தங்கள் முகத்தை மூடும் சுய உரிமையை பறித்து, ஆண்களின் மத்தியில் அவர்களது அழகை ஹலாலாக காட்சிப்படுத்தியது. பெண்கள் முகத்தை மறைப்பது ஹராம் என்று தீர்ப்பளித்து ஃபித்னாவின் வாசலைத் திறந்து விட்டனர்.
--------------------------
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சமுதாயத்தில் பல சமுக பெண்கள் கலந்திருந்தனர். குறைஷி என்னும் உயர் கோத்திரப் பெண்கள், நாகரிகம் தெரியாத காட்டரபி பெண்கள், கிராமப்புற பெண்கள், அடிமைப்பெண்கள், அன்றாட கூலி வேலை செய்யும் ஏழைப் பெண்கள்., இந்த அத்துணை பெண்களும் அவரவர்களின் வெட்க உணர்வுக்குத் தக்கவாறு ஹிசாபை பேணினர்.
--------------------------
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மனைவி ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களைப் போன்ற கண்ணியமான பெண்கள் பிற ஆடவர்களுக்கு முன் முகத்திரை அணிந்திருந்தனர். எந்தளவு என்றால் இஹ்ராம் நிலையில் முகத்தை மறைக்க கூடாத நிலையிலும் தங்கள் முகத்தை மறைத்தே இருந்தனர் என்று கீழ் வரும் ஹதீஸ் மூலம் அறியலாம்.
--------------------------
பெண்களாகிய நாங்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் இஹ்ராம் அணிந்த நிலையில் இருந்தபோது, ஒட்டகத்தில் பயணிப்பவர்கள் எங்களை கடந்து சென்று கொண்டிருந்தார்கள். அவர்கள் எங்கள் அருகில் வரும்போது தலையில் உள்ள முக்காட்டை முகத்தின் மீது போட்டுக் கொள்வோம். அவர்கள் எங்களை கடந்து சென்று விட்டால் முக்காட்டை அகற்றிக்கொள்வோம். (அறிவிப்பவர்: ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, அபூ தாவூத் 1562)
--------------------------
இதுபோல் இஹ்ராம் நிலையில் கஃபத்துல்லாஹ்வில் தவாபு செய்யும் போது, எதிர் வரும் ஆண்களின் பார்வையிலிருந்து தவிர்க்க தங்கள் கையிலிருக்கும் விசிறியை கொண்டும் முகத்தை மறைத்துக்கொள்வார்கள் என்ற ஹதீசும் உள்ளது.
--------------------------
"நீங்கள் உங்கள் வீடுகளிலேயே தங்கி இருங்கள்; ஜாஹிலியா காலத்தில் தங்கள் அழகை வெளிக்காட்டியது போன்று நீங்கள் வெளிக்காட்டவேண்டாம்." (அல்குர்ஆன் 33 : 33)
--------------------------
தபரூஜ் என்ற சொல்லுக்கு சுற்றிதிரிதல் என்பது பொருளல்ல.. அழகு, அலங்காரத்தை வெளிக்காட்டுவது என்பதாகும்.
--------------------------
பெண்களின் முகம்தான் அழகின் முதல் படி, முக அழகைப் பார்த்தே பெண்களை ஆண்கள் விரும்புகிறார்கள்.
--------------------------
ஆண்களை ஈர்க்கும் அழகை வசீகரத்தை அல்லாஹ் பெண்களின் முகத்தில் வைத்துள்ளான். அதை தனது நெறி நூலிலும் எடுத்துக் காட்டுகிறான்.
--------------------------
(நபியே!) பிற பெண்களின் அழகு உம்மை எத்துனை ஈர்த்தாலும் உம் மனைவியற்கு பகரமாக அவர்களை மாற்றிக்கொள்வதற்கு உமக்கு அனுமதியில்லை. (அல்குர்ஆன் 33 : 52)
--------------------------
இந்த வசனத்தில் பெண்களின் அழகு ஆண்களை ஈர்க்கும் என்று படைத்த இறைவன் திட்டவட்டமாக கூறுகிறான். ஒரு பெண் பேரழகியாக இருந்தாலும், அவள் தான் முகத்தை மூடிக்கொண்டால் எவரையும் ஈர்க்கமுடியாது. ஒரு பெண் முகத்தை மறைத்துக்கொண்டால் அழகியும், அழகற்றவளும், குமரியும், கிழவியும் ஒன்றுதான்.
--------------------------
பெண்கள் முகத்தை முடிக்கொள்வதால் சமுகத்தில் தவறான நடவடிக்கையில் சில பெண்கள் இறங்குகிறார்களாம். அதற்காக முகத்தை கட்டாயம் திறக்க வேண்டுமாம்!
--------------------------
முஸ்லிம் பெண்கள் முகத்தை கட்டாயம் மறைக்கத்தான் வேண்டும் என்று இஸ்லாம் கூறவில்லை. ஆனால் கவாரிஜ் வழி கேடர்களின் நடைமுறையை பின்பற்றும் தவ்ஹீது இயக்கதாரிகள், “பெண்கள் முகத்தை மூடுவது கூடாத காரியம், ஹராமான செயல் முகத்தை திறந்துதான் வைக்கவேண்டும் என்பதை கொள்கையாக வைத்துக்கொண்டனர்.
--------------------------
ஆணும் பெண்ணும் போராட்ட களத்தில் ஒன்று கலப்பதற்காக, முகம் பார்த்து ஒருவரை ஒருவர் அறிந்து இப்லிஸின் ஃபித்னா தூண்டிளில் சிக்க வழி ஏற்படுத்துகிறார்கள்.
--------------------------
இவர்கள் நடத்தும் பெண் மதராசாக்கள், அநாதை இல்லங்கள், புதிதாக இஸ்லாத்தை தழுவிய பெண்கள் பள்ளி போன்றவற்றின் பொறுப்புதாரி ஆண் நிர்வாகிகள், அங்குள்ள பெண் உஸ்தாது, மாணவிகளிடம் சரளமாக கலந்து பழகும் அளவிற்கு சுதந்திரம் இருப்பதால் பாலியல் குற்றச்சாட்டுப் பஞ்சுகள் எரிந்து புகையாக வருவதை பார்க்க முடிகிறது.
--------------------------
அடுத்து இவர்களின் ஃபித்னா, மர்கஸ் பள்ளிகளில் அரங்கேறியது. பெண்களும் வந்து தொழும் அளவிற்கு விஷேசமான இடவசதி செய்து கொடுத்துள்ளார்கள்.
--------------------------
பெண்களைப் பார்த்தபடியே பயான் செய்ய, இளவட்ட இமாமுக்கு ஒரு நல்ல வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்து உணர்ச்சிகரமான பயான் உரையை உறுதி செய்துள்ளார்கள்..
--------------------------
ஸஹீகான ஹதீஸ்களை தூக்கி எறிந்துவிட்டு, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சுன்னாக்களை மர்கஸ்ஸில் உயிர்ப்பிக்கிறார்களாம்.
--------------------------
"நீ என்னுடன் தொழ விரும்புகிறாய் என்பதை நான் அறிவேன்; எனினும் உமது அறையில் (பைத்தீ) தொழுவது உமது வீட்டில் (ஹுஜ்ரத்கீ) தொழுவதை விடச் சிறந்ததாகும். மேலும் உமது வீட்டில் தொழுவது நீ வசிக்கும் பகுதியில் (தாரீகி) தொழுவதை விடவும்; நீ வசிக்கும் பகுதியில் தொழுவது உமது கோத்திரப் பள்ளியில் தொழுவதை விடவும், உமது கோத்திரப்பள்ளியில் தொழுவது எனது பள்ளியில் (மஸ்ஜிதுன்னபவி) தொழுவதைவிடவும் சிறந்தது" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினர்.
--------------------------
எனவே அப்பெண்மணி தன் உள் வீட்டின் மூலையில் தொழுகையிடத்தை அமைத்து அதிலேயே தனது மரணம் வரை தொழுது வந்தார்கள். (Al banna, -Fath.vol.5,2:1337)
--------------------------
"பெண் வீட்டின் முற்றத்தில் தொழுவதை விட வீட்டினுள் தொழுவது சிறந்தது. வீட்டினுள் அவள் தொழுவதை விட வீட்டின் உள் அறையில் தொழுவது சிறந்ததாகும்" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினர். (அறிவிப்பவர்: –இப்னு மஸ்வூத் ரளியல்லாஹு அன்ஹு, அபூ தாவூத்.483)
--------------------------
அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கிறார்கள், “இன்று பெண்கள் உருவாக்கியுள்ள (அலங்கார உத்திகள் போன்று) வற்றை அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பார்த்திருப்பார்களேயானால் பனு இஸ்ராயீல் சமுதாயப் பெண்கள் பள்ளிவாசலுக்குச் செல்லக் கூடாதென தடுக்கப் பட்டதைப் போன்று இவர்களையும் தடுத்திருப்பார்கள். (முஸ்லிம் 76)
--------------------------
உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் மனைவியரில் ஒருவர் (ஆத்திகா) எனும் ஒருவர் ஸுபுஹ், இஷா ஆகிய தொழுகைகளைப் பள்ளியில் ஜமாத்தில் தொழச் செல்வர் அவரிடம் (உங்கள் கணவர்) உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், இவ்வாறு செல்வதை வெறுக்கிறார்கள்; ரோஷப்படுகிறார்கள் என்று தாங்கள் அறிந்திருந்தும் நீங்கள் ஏன் பள்ளிக்கு செல்கிறீர்கள் என்று கேட்கப்பட்டது,
--------------------------
உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் ஆட்சியில் பெண்கள் பள்ளியில் ஜமாஅத்தாக தொழுவதை ஆரம்பத்தில் அனுமதித்தாலும் பிற்பாடு அதை தடை செய்து, பெண்கள் வீட்டினுள் தொழுவதே சிறந்தது என்று சுன்னாவை வலியுறுத்தினார்கள். இதை அன்றிருந்த நபித்தோழர்கள் எவரும் ஆட்சேபிக்கவில்லை. (அல் அயினி – உம்தத்துல்காரீ 3/228)
--------------------------
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நபித்தோழர்கள் வாழ்ந்த அந்த சிறந்த சமுதாயத்தின் காலத்திலேயே, பெண்கள் பள்ளிக்கு தொழ வருவதில் உள்ள பிரச்சினைகளை அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களும், உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களும் தெளிவு படுத்துகிறார்கள். இன்றைய நவீன ஃபித்னா உலகின் நிலையை நாம் சொல்ல வேண்டியதில்லை.
--------------------------
பெண்கள் முகத்தை மூடுவது ஹராம் என்று தீர்ப்பளித்து, ஆணையும் பெண்ணையும் நேருக்கு நேர் சந்திக்க, ஆர்பாட்ட, போராட்ட களம் அமைத்து கண்ணியம் சிதைத்தல்.