நம்முடன் இணைந்து இருப்பவர்கள்
வெள்ளி, ஆகஸ்ட் 13, 2021
காதல் திருமணம் இஸ்லாத்தில் கூடுமா?
*இஸ்லாமிய இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் மாற்றுமதத்தாரோடு திருமணம் செய்யும் அவலம்!*
*உலமாக்கள்,உம்மத்தின் பொறுப்பாளர்கள்,மஸ்ஜித் நிர்வாகிகள், பெற்றோர்களுக்கு வேண்டுகோள்!*
*✍மவ்லானா காலித் சைஃபுல்லாஹ் ரஹ்மானி அவர்களின் கோரிக்கை!*
*ஜெனரல் செக்ரட்ரி ஆல்இந்தியா முஸ்லிம் பெர்ஷனல் லா போர்ட்*
வெளியீடு நாள்:நியூடெல்லி ஆகஸ்ட் 2/2021
இஸ்லாம் நிகாஹ்வுடைய விஷயத்தில் "ஒரு முஸ்லிமான பெண்ணுடைய திருமணம், முஸ்லிமான ஆணுடன் மட்டுமே அமைய வேண்டுமென" அவசியமாக்கியுள்ளது.
அதேபோன்றுதான் எந்த முஸ்லிமான வாலிபரும் முஷ்ரிகான பெண்ணை திருமணம் செய்ய முடியாது.வெளிரங்களமாக அவ்வாறு திருமணம் என்ற பெயரில் சடங்கு நடைபெற்றாலும் ஷரீஅத் ரீதியாக அது திருமணமாக கருதப்படாது.எனினும் கைசேதம் என்னவெனில்,காலேஜ்கள் போன்ற கற்கும் இடங்களின் மூலம் மற்றும் வேலை செய்யும் இடங்களிலும் ஆண் பெண் இருசாராரும் கலப்பதின் காரணமாக மேலும் சரியான மார்க்க அறிவு இல்லாததின் காரணமாகவும் மற்றும் பெற்றோர்களின் தர்பியத் முறையாக இல்லாதிருப்பதின் காரணமாக இதுபோன்ற நிகழ்வுகள்
அதிகமாக நடைபெற்று வருகின்றன.பல நேரங்களில் இஸ்லாமிய வாலிபப் பெண்கள் மாற்றுமத ஆண்களுடன் சென்று விடுகின்றனர்.பிறகு சிமத்துடன் வாழ்க்கையை கழிக்கின்றனர்.எந்தளவெனில் தாங்களாகவே தங்களின் வாழ்க்கையை சீரழித்து கொள்கிறார்கள்.
*இதற்கு தீர்வு என்ன?*
*1️⃣உலமாக்கள் பொதுமக்களின் சபைகளில் இந்த தலைப்பைப்பற்றி அதிகமாக பேச வேண்டும்.மேலும் மக்களுக்கு இதனுடைய இம்மை மறுமையின் நஷ்டங்களை உணர்த்த வேண்டும்.*
*2⃣பெண்களுக்கான பயான் கூட்டங்கள் அதிகமாக நடத்தப்பட வேண்டும்.அதில் மற்ற தலைப்புகளுடன் இந்த தலைப்பை பற்றியும் குறிப்பாக பேச வேண்டும்.*
*3️⃣பள்ளிவாசல் இமாம்கள் ஜுமுஆ உரைகளிலும்,குர்ஆன் ஹதீஸ் பாடங்களிலும் இத்தலைப்பை பற்றி பேச வேண்டும்.மேலும் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் இருக்க பெண்பிள்ளைகளை எப்படி வளர்க்க வேண்டுமென மக்களுக்கு சொல்லித்தர வேண்டும்.*
*4️⃣பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளுக்கு மார்க்க கல்வி கற்க சரியான முறையான ஏற்பாட்டை செய்து கொடுக்க வேண்டும்.தங்களின் பெண்பிள்ளைகளின் மொபைல் போன் போன்றவைகளை நோட்டமிட வேண்டும்.முடிந்தளவு பெண்பிள்ளைகளை பெண்கள் படிக்கும் கல்லூரிகளில் சேர்க்க வேண்டும்.ஸ்கூலைத் தவிர பிற நேரங்களின் பெண்பிள்ளைகளின் நேரங்கள் வெளியில் செலவழியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.மேலும் முஸ்லிமான பெண்பிள்ளைக்கு முஸ்லிமான பையனே துணையாக இருக்க முடியும் என்பதை பெண்பிள்ளைகளுக்கு புரிய வைக்க வேண்டும்.*
*5️⃣பொதுவாக எந்த வாலிபர்கள் வாலிபப் பெண்கள் ரஜிஸ்டர் ஆஃபிஸில் திருமணம் செய்கிறார்களோ அவர்களின் பெயர்கள் முனனதாகவே ரிஜிஸ்டரில் பதிவு செய்யப்பட்டிருக்கும்.பள்ளிவாசல் இமாம்கள்,மார்க்க சேவையில் உள்ளவர்கள்,பொறுப்பாளர்கள்,முக்கியஸ்தர்கள் அவர்களின் வீட்டிற்கு சென்று அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும்.அதாவது,இந்த சடங்காக நடைபெற்ற திருமணத்தால் நீ உன் முழு வாழ்க்கையையும் ஹராமில் கழிக்கப் போகிறாய் என்று விளங்கப்படுத்த வேண்டும்.மேலும் அனுபவம் என்னவெனில்,சிறிது நேர சுகத்திற்காக முடிக்கப்படும் இவ்வாறான திருமணங்கள் உலகிலேயே தோல்வியில்தான் முடிகிறது என்பதையும் விளங்கப்படுத்த வேண்டும்.*
*6️⃣வாலிபர்கள் குறிப்பாக வாலிபப் பெண்களின் பெற்றோர்கள், பொறுப்பாளர்கள் திருமணத்தை தயவுசெய்து தள்ளிப் போட வேண்டாம்.ஏனெனில் திருமணத்தை பிற்படுத்துவதும் இதுபோன்ற நிகழ்வுகளுக்கு பெரிதும் காரணமாக உள்ளன.*
*7️⃣திருமணத்தை சாதாரணமாக முடித்துக் கொள்ள வேண்டும்.அதன்மூலம் பரகத் உள்ளது.அதில் சந்ததிகளின் பாதுகாப்பும், செல்வத்தை அழிப்பதை விட்டும் பாதுகாப்பும் உள்ளது.*
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
பிரபல்யமான பதிவுகள்
-
பத்ரு ஸஹாபாக்கள ் இரவு நமக்கு ரமலான் பிறை 17 அல்லாஹ்வின் கிருபையால் இஸ்லாத்தினb் முதல் போர் நடந்த நாள்.. பத்ரு போர் 313 ஸஹாபாக்கள் ...
-
இஸ்லாமிய கேள்விகளும் அதற்கான பதில்களும் ஸஹாபாக்களில் இரண்டு சிறகுடையவர் என்ற சிறப்பு பெற்ற நபித்தோழர் யார்? விடை: ஜஃபர் பின் அபீதாலிப்(ரலி)...
-
இஸ்லாமிய கேள்வி பதில்* 1. நாம் யார்? *நாம் முஸ்லிம்கள்.* 2. நம் மார்க்கம் எது? *நம் மார்க்கம் இஸ்லாம்.* 3. இஸ்லாம் என்றால் என்ன? *அல்...
-
https://youtu.be/CuQi6wXI9uo நோக்கங்களில் ஒன்று, ஒருவர் தன் பாலியல் தேவைகளை அனுமதிக்கப்பட்ட வழிகளில் நிறைவு செய்துகொள்ள வேண்டும் என்பதாகும்...