роироо்рооுроЯрой் роЗрогைрои்родு роЗро░ுрок்рокро╡ро░்роХро│்

роЪெро╡்ро╡ாроп், рокிрок்ро░ро╡ро░ி 28, 2017

роЗро╕்ро▓ாрооிроп роХேро│்ро╡ி рокродிро▓்,

இஸ்லாமிய கேள்வி பதில்*

1. நாம் யார்?
*நாம் முஸ்லிம்கள்.*

2.  நம் மார்க்கம் எது?
*நம் மார்க்கம் இஸ்லாம்.*

3. இஸ்லாம் என்றால் என்ன?
*அல்லாஹ்வின் கட்டளைக்கு அடிபணிவது.*

4. இஸ்லாத்தின் அடிப்படைக் கடமைகள் எத்தனை? அவை யாவை?
*இஸ்லாத்தின்* *அடிப்படைக் கடமைகள்* *ஐந்து.*
*அவை கலிமா*, *தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ்.*

5. கலிமாவை கூறு
*லாஇலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்*

6. கலிமாவின் அர்த்தத்தை கூறு.
*வணக்கத்திற்க்கு*
*உரியவன்* *அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை, முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் ஆவார்கள்.*

7. ஒரு நாளைக்கு கடமையான தொழுகை எத்தனை? அவை யாவை?
*ஒரு நாளைக்கு கடமையான தொழுகை* *ஐந்து. அவை*
*சுப்ஹு, லுஹர், அஸர், மக்ரிப், இஷா*

8. நோன்பு நோற்பது எப்போது கடமை?
*ரமலான் மாதத்தின் 30 நாளும் நோன்பு நோற்பது கடமையாகும்.*

9. ஜகாத் என்றால் என்ன?
*பணக்காரர்கள், ஏழைகளுக்கு தம் செல்வத்திலிருந்து 40ல் ஒரு பகுதியை கொடுப்பது ஜகாத் ஆகும்.*

10. ஹஜ் என்றால் என்ன?
*துல்ஹஜ்ஜி மாதத்தில் மக்காவில் புனித 'காபா'வை வலம் வந்து, முக்கிய இடங்களில் தங்கி, வணக்கம் புரிவது ஹஜ் ஆகும்.*

11. ஹஜ் செய்வது யார் மீது கடமை?
*உடல் வசதியும், பண வசதியும்* *உடையவர்கள் மீது ஆயுளில் ஒரு முறை*
*ஹஜ் செய்வது* *கடமையாகும்.*

12. ஈமான் என்றால் என்ன?
*ஈமான் என்பது உறுதியான நம்பிக்கை ஆகும்.*

13. முதன் முதலில் படைக்கப்பட்ட மனிதர் யார்?
*முதல் மனிதர் நபி ஆதம் (அலை) அவர்கள்.*

14. முதன் முதலில் படைக்கப்பட்ட பெண்மணி யார்?
*ஆதம் (அலை) அவர்களின் மனைவியான ஹவ்வா (அலை)*

15. தாயும், தந்தையும் இல்லாதவர் யார்?;
*நபி ஆதம் (அலை), ஹவ்வா (அலை) ஆகிய இருவர்.*

16. தந்தை இல்லாமல் பிறந்தவர் யார்?

*நபி ஈஸா (அலை) அவர்கள்.*

17. நாம் யாருடைய பிள்ளைகள்?
*நபி ஆதம் (அலை) அவர்களின் பிள்ளைகள்.*

18. நாம் யாருடைய உம்மத்தினர்?
*நாம் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் உம்மத்தினர்.*

19. அல்லாஹ் மனிதனை எதிலிருந்து படைத்தான்?
*அல்லாஹ் மனிதனை களி மண்ணிலிருந்து படைத்தான்.*

20. மலக்குகளை அல்லாஹ் எதிலிருந்து படைத்தான்?
*அல்லாஹ் மலக்குகளை ஒளியிலிருந்து படைத்தான்.*

21. அல்லாஹ் ஷைத்தானை எதிலிருந்து படைத்தான்?
*அல்லாஹ் ஷைத்தானை நெருப்பிலிருந்து படைத்தான்.*

22. ஷைத்தான்களின் தலைவன் யார்?
*இப்லீஸ்.*

23. மனிதர்களின் எதிரி யார்?
*இப்லீஸ. ஷைத்தான்.*

24. குர்ஆனில் எத்தனை நபிமார்களின் பெயர்கள் கூறப்பட்டுள்ளன?
*25 பேர்*

25. அல்லாஹ் மனிதர்களை எதற்காக படைத்தான்?

*அல்லாஹ்வை வணங்குவதற்காக.*

26. அல்லாஹ் மனிதனை என்ன தன்மையில் படைத்தான்?
*எல்லா படைப்பினங்களிலும் சிறந்தவனாக*

27. ஷைத்தான் என்பதின் பொருள் என்ன?
*அல்லாஹ்வின் அருளை விட்டும் தூரமானவன் என்பதாகும்.*

28. இப்லீஸ் என்பதன் பொருள் என்ன?
*குழப்பவாதி என்பது பொருள்.*

29. ஷைத்தான்கள் எந்த இனத்தைச் சார்ந்தவர்கள்?
*ஜின் இனத்தைச் சார்ந்தவர்கள்.*

30. நம் வேதத்தின் பெயர் என்ன?

*அல்குர்ஆன்*

31. நபி (ஸல்) அவர்களுக்கு அல்குர்ஆன் எந்த இரவில் வழங்கப்பட்டது?
*ரமலான் மாதம் லைலதுல் கத்ர் இரவில் வழங்கப்பட்டது.*

32. நபி (ஸல்) அவர்கள் எந்த வயதில் நபி ஆனார்கள்?
*40 வயதில்*

33. மக்கீ சூரா என்றால் என்ன?

*மக்காவில் இறங்கிய சூரா.*

34. மதனீ சூரா என்றால் என்ன?

*மதீனாவில் இறங்கிய சூரா.*

35. குர்ஆனில் பிஸ்மி இல்லாத சூரா எது?
*குர்ஆனில் பிஸ்மி இல்லாத சூரா அத்தவ்பா ஆகும்.*

36. (ஸல்) என்ற சுருக்கத்தை எப்படி வாசிக்க வேண்டும்?

*ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்று வாசிக்க வேண்டும்.*

37. நபிமார்கள் பெயரைக் கேட்டால் என்ன சொல்ல வேண்டும்?
*அலைஹிஸ்ஸலாம் என்று சொல்ல வேண்டும்.*

38. நம் நபியின் பெயரைக் கேட்டால் என்ன சொல்ல வேண்டும்?
*ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்று சொல்ல வேண்டும்.*

39. திருக்குர்ஆனில் உள்ள சூராக்கள் எத்தனை?
*114 சூராக்கள் ஆகும்.*

40. ரசூல்மார்கள் மொத்தம் எத்தனை பேர்?
*313 பேர் ஆவார்கள்.*

41. திருக்குர்ஆனில் உள்ள சஜ்தா ஆயத்துக்கள் எத்தனை?
*14*

42. குர்ஆனில் முதன் முதலில் இறங்கிய வசனம் எது? 

*இக்ரஃ பிஸ்மி ரப்பிகல்லதீ*

43. இஸ்லாமிய வருடத்தின் முதல் மாதம் எது?

*முஹர்ரம்*

44. நபி (ஸல்) எந்த மாதத்தில் பிறந்தார்கள்?

*ரபீயுல் அவ்வல்*

45. மிஃராஜ் என்றால் என்ன?

*நபி (ஸல்) அவர்களின் விண்வெளிப் பயணம்*

46. பிறர் தும்மினால் நாம் என்ன சொல்லவேண்டும்?
*யர்ஹமுகல்லாஹ்.*

47. திருக்குர்ஆனிலேயே மிகச் சிறிய அத்தியாயம்-சூரா எது?

*சூரா கவ்ஸர்*

48. நபிப் பட்டம் கொடுக்கப்பட்ட போது, நபி (ஸல்) அவர்களின் வயது எத்தனை?

*40 வயது*

49. துன்பம் ஏற்பட்டால் என்ன சொல்ல வேண்டும்?
*இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.*

50. உயிரை வாங்கும் வானவர் யார்?
*மலக்குல் மௌத்*

51. திருக்குர்ஆனின் மொத்த வசனங்கள் (ஆயத்துக்கள்) - எத்தனை?

*6666*

52. தும்மினால் என்ன சொல்ல வேண்டும்?

*அல்ஹம்து லில்லாஹ்*

53. வஹீ என்றால் என்ன?

*அல்லாஹ்வின் செய்தி.*

54. வஹீ கொண்டு வரும் வானவர் யார்?
*ஜிப்ரயீல் (அலை)*

55. இஸ்திக்பார் என்றால்
என்ன?
*பாவமன்னிப்பு தேடுவது.*

56. முதன் முதலில் பாங்கு சொன்னவர் யார்?
*பிலால் (ரலி)*

57. முதல் கலீபா யார்?

*அபூ பக்கர் சித்தீக் (ரலி)*

58. மன்னிக்கப்படாத பாவம் எது?

*குப்ர் - இறைமறுப்பு, ஷிர்க் - அல்லாஹ்வுக்கு இணைவைத்தல்.*

59. கொடுங்கோல மன்னன் பிர்அவ்னை எதிர்த்துப் போராடிய நபி யார்?

*நபி மூஸா (அலை)*

60. எவருடைய பெற்றோருக்கு கியாமத்து நாளில் கிரீடம் சூட்டப்படும்?

*குர்ஆனை மனனம் செய்த ஹாபிழ்களின் பெற்றோருக்கு*

61. அல்லாஹ்வுக்கு பிரியமான இடம் எது?

*பள்ளிவாசல்*

62. யாருடைய காலின் கீழ் சொர்க்கம் உள்ளது?
*தாயின் காலின் கீழ்.*

63. பிள்ளைகளை தொழுகைக்கு ஏவ வேண்டிய வயது.

*7 வயது.*

64. பிள்ளைகள் வெளியே போகும் போது வீட்டிள்ளோர் என்ன சொல்ல வேண்டும்?
*ஃபீ அமானில்லாஹ்*

65. நமது செயல்களை பதிவு செய்யும் மலக்குகளின் பெயர் என்ன?
*கிராமன் காதிபீன்.*

66. பிர்அவ்ன் ஆட்சி செய்த நாடு எது?

*எகிப்து (மிஸ்ர்)*

67. இறைத் தூதர்களை அரபியில் எப்படி சொல்வது?
*நபி, ரசூல்*

68. இஸ்லாம் என்பதின் பொருள் என்ன?
*அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு அடிபணிவது.*

69. உலகம் முழுவதையும் படைத்தது யார்?
*அல்லாஹ்.*

70. அஸ்ஸலாத் என்றால் என்ன?
*தொழுகை*

71. திருக்குர்;ஆன் எந்த மொழியில் உள்ளது?
*அரபி மொழியில்.*

72. அர் ரஹ்மான் என்பதின் பொருள் என்ன?
*அளவற்ற அருளாளன்.*

73. திருக்குர்ஆனின் முதல் சூரா எது?
*சூரா அல் பாத்திஹா*

74. முஸ்லிமின் முதல் கடமை என்ன?
*தொழுகை*.

75. மக்காவில் உள்ள அல்லாஹ்வின் இல்லம் எது?
*கஃபா.*

76. அல்லாஹ்வுக்கு மாறு செய்தவர்கள் மறுமையில் தண்டனை பெறும் இடம் எது?
*நரகம்.*

77. பத்ருப் போரில் கலந்துக் கொண்ட ஸஹாபாக்கள் எத்தனை பேர்.?
*313 நபர்கள்.*

78. ஹஜ்ஜதுல் விதா என்றால் என்ன?
*நபி (ஸல்) அவர்கள் மறைவதற்கு முன் செய்த கடைசி ஹஜ் ஆகும்.*

79. நபி (ஸல்) அவர்கள் செய்த ஹஜ் எத்தனை?
*ஒன்று*

80. நபிமார்களில் மிகச்செல்வந்தரராக வாழ்ந்த நபி யார்?
*நபி சுலைமான் (அலை)*

81. நபி (ஸல்) அவர்களுக்கு எத்தனை பிள்ளைகள்?
*ஏழுபேர். 3ஆண்கள்  4 பெண்கள்*

82. ஹதீஸ்களை அதிகம் அறிவிப்பு செய்த ஸஹாபி யார்?
*அபூ ஹுரைரா (ரலி)*

83. அதிகமான ஹதீஸ்களை அறிவிப்பு செய்த நபி (ஸல்)   மனைவி யார்?
*அன்னை ஆயிஷா (ரலி)*

84. திருக்குர்ஆனில் பிஸ்மி இல்லாத சூரா எது?
*சூரா தவ்பா.*

85. முதன் முதலில் இஸ்லாத்தை ஏற்றவர் யார்?

*கதீஜா (ரலி)*

86. திக்ருகளில் சிறந்தது எது?
*லாயிலாஹ இல்லல்லாஹ்*

87.சிறுவர்களில் முதலில் இஸ்லாத்தை ஏற்றவர் யார்?

*அலி (ரலி)*

88. நபித் தோழர்களில் அதிகம் செல்வம் படைத்தவர் யார்?
*அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ப் (ரலி)*

89. ஜும்ஆ தொழுகைக்கு எத்தனை ரக்அத்கள்?

*2 ரக்அத்கள்.*

90. நபி (ஸல்) அவர்களின் பெற்றோர் யாவர்?

*தாயார் ஆமினா, தந்தையார் அப்துல்லாஹ்.*

91. நபிமார்களின் பெயரைக் கேட்டால் என்ன சொல்ல வேண்டும்?
*அலைஹிஸ்ஸலாம் என்று சொல்ல வேண்டும்.*

92. நபித்தோழர்களின் பெயரைக் கேட்டால் என்ன சொல்லவேண்டும்?

*ரலியல்லாஹு அன்ஹூ என்று சொல்ல வேண்டும்.*

93. இறைநேசர்கள் நல்லடியார்களின் பெயரைக் கேட்டால் என்ன சொல்லவேண்டும்?
*ரஹ்மத்துல்லாஹி அலைஹி என்று சொல்ல வேண்டும்.*

94. முதன் முதலில் ஏற்பட்ட கொலை எது?

*ஆதம் (அலை) அவர்களின் மகன் காபில்,  தன் சகோதரர் ஹாபிலை கொலை செய்தது.*

95.  உயர்ந்த சொர்க்கம் எது?
*ஜன்னதுல் பிர்தவ்ஸ்.*

96. எந்த முஸ்லிமுக்கு தொழுகை கடமையில்லை?
*மனநிலை பாதிக்கப்பட்டவருக்கு*

97. நபி (ஸல்) காலத்தில் தன்னை 'நபி' என்று சொன்ன பொய்யன் யார்?
*முஸைலமதுல் கத்தாப்.*

98. ஹதீஸ் கிரந்தங்களில் முதலிடம் பெற்ற நூல் எது?
*ஸஹீஹுல்புகாரி*

99. உண்மையான வீரன் யார்?
*கோபம்*
*வரும்போது தன்னை* *கட்டுப்படுத்திக்கொள்பவன்.*

100. நபி (ஸல்) அவர்கள் வாழ்வு காலம்.
*63 ஆண்டுகள்*

மக்காவில் 13 ஆண்டு
.மதினாவில்10ஆண்டு

роХро░ுрод்родுроХро│் роЗро▓்ро▓ை:

рокிро░рокро▓்ропрооாрой рокродிро╡ுроХро│்