இஸ்லாமிய கேள்வி பதில்*
1. நாம் யார்?
*நாம் முஸ்லிம்கள்.*
2. நம் மார்க்கம் எது?
*நம் மார்க்கம் இஸ்லாம்.*
3. இஸ்லாம் என்றால் என்ன?
*அல்லாஹ்வின் கட்டளைக்கு அடிபணிவது.*
4. இஸ்லாத்தின் அடிப்படைக் கடமைகள் எத்தனை? அவை யாவை?
*இஸ்லாத்தின்* *அடிப்படைக் கடமைகள்* *ஐந்து.*
*அவை கலிமா*, *தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ்.*
5. கலிமாவை கூறு
*லாஇலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்*
6. கலிமாவின் அர்த்தத்தை கூறு.
*வணக்கத்திற்க்கு*
*உரியவன்* *அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை, முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் ஆவார்கள்.*
7. ஒரு நாளைக்கு கடமையான தொழுகை எத்தனை? அவை யாவை?
*ஒரு நாளைக்கு கடமையான தொழுகை* *ஐந்து. அவை*
*சுப்ஹு, லுஹர், அஸர், மக்ரிப், இஷா*
8. நோன்பு நோற்பது எப்போது கடமை?
*ரமலான் மாதத்தின் 30 நாளும் நோன்பு நோற்பது கடமையாகும்.*
9. ஜகாத் என்றால் என்ன?
*பணக்காரர்கள், ஏழைகளுக்கு தம் செல்வத்திலிருந்து 40ல் ஒரு பகுதியை கொடுப்பது ஜகாத் ஆகும்.*
10. ஹஜ் என்றால் என்ன?
*துல்ஹஜ்ஜி மாதத்தில் மக்காவில் புனித 'காபா'வை வலம் வந்து, முக்கிய இடங்களில் தங்கி, வணக்கம் புரிவது ஹஜ் ஆகும்.*
11. ஹஜ் செய்வது யார் மீது கடமை?
*உடல் வசதியும், பண வசதியும்* *உடையவர்கள் மீது ஆயுளில் ஒரு முறை*
*ஹஜ் செய்வது* *கடமையாகும்.*
12. ஈமான் என்றால் என்ன?
*ஈமான் என்பது உறுதியான நம்பிக்கை ஆகும்.*
13. முதன் முதலில் படைக்கப்பட்ட மனிதர் யார்?
*முதல் மனிதர் நபி ஆதம் (அலை) அவர்கள்.*
14. முதன் முதலில் படைக்கப்பட்ட பெண்மணி யார்?
*ஆதம் (அலை) அவர்களின் மனைவியான ஹவ்வா (அலை)*
15. தாயும், தந்தையும் இல்லாதவர் யார்?;
*நபி ஆதம் (அலை), ஹவ்வா (அலை) ஆகிய இருவர்.*
16. தந்தை இல்லாமல் பிறந்தவர் யார்?
*நபி ஈஸா (அலை) அவர்கள்.*
17. நாம் யாருடைய பிள்ளைகள்?
*நபி ஆதம் (அலை) அவர்களின் பிள்ளைகள்.*
18. நாம் யாருடைய உம்மத்தினர்?
*நாம் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் உம்மத்தினர்.*
19. அல்லாஹ் மனிதனை எதிலிருந்து படைத்தான்?
*அல்லாஹ் மனிதனை களி மண்ணிலிருந்து படைத்தான்.*
20. மலக்குகளை அல்லாஹ் எதிலிருந்து படைத்தான்?
*அல்லாஹ் மலக்குகளை ஒளியிலிருந்து படைத்தான்.*
21. அல்லாஹ் ஷைத்தானை எதிலிருந்து படைத்தான்?
*அல்லாஹ் ஷைத்தானை நெருப்பிலிருந்து படைத்தான்.*
22. ஷைத்தான்களின் தலைவன் யார்?
*இப்லீஸ்.*
23. மனிதர்களின் எதிரி யார்?
*இப்லீஸ. ஷைத்தான்.*
24. குர்ஆனில் எத்தனை நபிமார்களின் பெயர்கள் கூறப்பட்டுள்ளன?
*25 பேர்*
25. அல்லாஹ் மனிதர்களை எதற்காக படைத்தான்?
*அல்லாஹ்வை வணங்குவதற்காக.*
26. அல்லாஹ் மனிதனை என்ன தன்மையில் படைத்தான்?
*எல்லா படைப்பினங்களிலும் சிறந்தவனாக*
27. ஷைத்தான் என்பதின் பொருள் என்ன?
*அல்லாஹ்வின் அருளை விட்டும் தூரமானவன் என்பதாகும்.*
28. இப்லீஸ் என்பதன் பொருள் என்ன?
*குழப்பவாதி என்பது பொருள்.*
29. ஷைத்தான்கள் எந்த இனத்தைச் சார்ந்தவர்கள்?
*ஜின் இனத்தைச் சார்ந்தவர்கள்.*
30. நம் வேதத்தின் பெயர் என்ன?
*அல்குர்ஆன்*
31. நபி (ஸல்) அவர்களுக்கு அல்குர்ஆன் எந்த இரவில் வழங்கப்பட்டது?
*ரமலான் மாதம் லைலதுல் கத்ர் இரவில் வழங்கப்பட்டது.*
32. நபி (ஸல்) அவர்கள் எந்த வயதில் நபி ஆனார்கள்?
*40 வயதில்*
33. மக்கீ சூரா என்றால் என்ன?
*மக்காவில் இறங்கிய சூரா.*
34. மதனீ சூரா என்றால் என்ன?
*மதீனாவில் இறங்கிய சூரா.*
35. குர்ஆனில் பிஸ்மி இல்லாத சூரா எது?
*குர்ஆனில் பிஸ்மி இல்லாத சூரா அத்தவ்பா ஆகும்.*
36. (ஸல்) என்ற சுருக்கத்தை எப்படி வாசிக்க வேண்டும்?
*ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்று வாசிக்க வேண்டும்.*
37. நபிமார்கள் பெயரைக் கேட்டால் என்ன சொல்ல வேண்டும்?
*அலைஹிஸ்ஸலாம் என்று சொல்ல வேண்டும்.*
38. நம் நபியின் பெயரைக் கேட்டால் என்ன சொல்ல வேண்டும்?
*ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்று சொல்ல வேண்டும்.*
39. திருக்குர்ஆனில் உள்ள சூராக்கள் எத்தனை?
*114 சூராக்கள் ஆகும்.*
40. ரசூல்மார்கள் மொத்தம் எத்தனை பேர்?
*313 பேர் ஆவார்கள்.*
41. திருக்குர்ஆனில் உள்ள சஜ்தா ஆயத்துக்கள் எத்தனை?
*14*
42. குர்ஆனில் முதன் முதலில் இறங்கிய வசனம் எது?
*இக்ரஃ பிஸ்மி ரப்பிகல்லதீ*
43. இஸ்லாமிய வருடத்தின் முதல் மாதம் எது?
*முஹர்ரம்*
44. நபி (ஸல்) எந்த மாதத்தில் பிறந்தார்கள்?
*ரபீயுல் அவ்வல்*
45. மிஃராஜ் என்றால் என்ன?
*நபி (ஸல்) அவர்களின் விண்வெளிப் பயணம்*
46. பிறர் தும்மினால் நாம் என்ன சொல்லவேண்டும்?
*யர்ஹமுகல்லாஹ்.*
47. திருக்குர்ஆனிலேயே மிகச் சிறிய அத்தியாயம்-சூரா எது?
*சூரா கவ்ஸர்*
48. நபிப் பட்டம் கொடுக்கப்பட்ட போது, நபி (ஸல்) அவர்களின் வயது எத்தனை?
*40 வயது*
49. துன்பம் ஏற்பட்டால் என்ன சொல்ல வேண்டும்?
*இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.*
50. உயிரை வாங்கும் வானவர் யார்?
*மலக்குல் மௌத்*
51. திருக்குர்ஆனின் மொத்த வசனங்கள் (ஆயத்துக்கள்) - எத்தனை?
*6666*
52. தும்மினால் என்ன சொல்ல வேண்டும்?
*அல்ஹம்து லில்லாஹ்*
53. வஹீ என்றால் என்ன?
*அல்லாஹ்வின் செய்தி.*
54. வஹீ கொண்டு வரும் வானவர் யார்?
*ஜிப்ரயீல் (அலை)*
55. இஸ்திக்பார் என்றால்
என்ன?
*பாவமன்னிப்பு தேடுவது.*
56. முதன் முதலில் பாங்கு சொன்னவர் யார்?
*பிலால் (ரலி)*
57. முதல் கலீபா யார்?
*அபூ பக்கர் சித்தீக் (ரலி)*
58. மன்னிக்கப்படாத பாவம் எது?
*குப்ர் - இறைமறுப்பு, ஷிர்க் - அல்லாஹ்வுக்கு இணைவைத்தல்.*
59. கொடுங்கோல மன்னன் பிர்அவ்னை எதிர்த்துப் போராடிய நபி யார்?
*நபி மூஸா (அலை)*
60. எவருடைய பெற்றோருக்கு கியாமத்து நாளில் கிரீடம் சூட்டப்படும்?
*குர்ஆனை மனனம் செய்த ஹாபிழ்களின் பெற்றோருக்கு*
61. அல்லாஹ்வுக்கு பிரியமான இடம் எது?
*பள்ளிவாசல்*
62. யாருடைய காலின் கீழ் சொர்க்கம் உள்ளது?
*தாயின் காலின் கீழ்.*
63. பிள்ளைகளை தொழுகைக்கு ஏவ வேண்டிய வயது.
*7 வயது.*
64. பிள்ளைகள் வெளியே போகும் போது வீட்டிள்ளோர் என்ன சொல்ல வேண்டும்?
*ஃபீ அமானில்லாஹ்*
65. நமது செயல்களை பதிவு செய்யும் மலக்குகளின் பெயர் என்ன?
*கிராமன் காதிபீன்.*
66. பிர்அவ்ன் ஆட்சி செய்த நாடு எது?
*எகிப்து (மிஸ்ர்)*
67. இறைத் தூதர்களை அரபியில் எப்படி சொல்வது?
*நபி, ரசூல்*
68. இஸ்லாம் என்பதின் பொருள் என்ன?
*அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு அடிபணிவது.*
69. உலகம் முழுவதையும் படைத்தது யார்?
*அல்லாஹ்.*
70. அஸ்ஸலாத் என்றால் என்ன?
*தொழுகை*
71. திருக்குர்;ஆன் எந்த மொழியில் உள்ளது?
*அரபி மொழியில்.*
72. அர் ரஹ்மான் என்பதின் பொருள் என்ன?
*அளவற்ற அருளாளன்.*
73. திருக்குர்ஆனின் முதல் சூரா எது?
*சூரா அல் பாத்திஹா*
74. முஸ்லிமின் முதல் கடமை என்ன?
*தொழுகை*.
75. மக்காவில் உள்ள அல்லாஹ்வின் இல்லம் எது?
*கஃபா.*
76. அல்லாஹ்வுக்கு மாறு செய்தவர்கள் மறுமையில் தண்டனை பெறும் இடம் எது?
*நரகம்.*
77. பத்ருப் போரில் கலந்துக் கொண்ட ஸஹாபாக்கள் எத்தனை பேர்.?
*313 நபர்கள்.*
78. ஹஜ்ஜதுல் விதா என்றால் என்ன?
*நபி (ஸல்) அவர்கள் மறைவதற்கு முன் செய்த கடைசி ஹஜ் ஆகும்.*
79. நபி (ஸல்) அவர்கள் செய்த ஹஜ் எத்தனை?
*ஒன்று*
80. நபிமார்களில் மிகச்செல்வந்தரராக வாழ்ந்த நபி யார்?
*நபி சுலைமான் (அலை)*
81. நபி (ஸல்) அவர்களுக்கு எத்தனை பிள்ளைகள்?
*ஏழுபேர். 3ஆண்கள் 4 பெண்கள்*
82. ஹதீஸ்களை அதிகம் அறிவிப்பு செய்த ஸஹாபி யார்?
*அபூ ஹுரைரா (ரலி)*
83. அதிகமான ஹதீஸ்களை அறிவிப்பு செய்த நபி (ஸல்) மனைவி யார்?
*அன்னை ஆயிஷா (ரலி)*
84. திருக்குர்ஆனில் பிஸ்மி இல்லாத சூரா எது?
*சூரா தவ்பா.*
85. முதன் முதலில் இஸ்லாத்தை ஏற்றவர் யார்?
*கதீஜா (ரலி)*
86. திக்ருகளில் சிறந்தது எது?
*லாயிலாஹ இல்லல்லாஹ்*
87.சிறுவர்களில் முதலில் இஸ்லாத்தை ஏற்றவர் யார்?
*அலி (ரலி)*
88. நபித் தோழர்களில் அதிகம் செல்வம் படைத்தவர் யார்?
*அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ப் (ரலி)*
89. ஜும்ஆ தொழுகைக்கு எத்தனை ரக்அத்கள்?
*2 ரக்அத்கள்.*
90. நபி (ஸல்) அவர்களின் பெற்றோர் யாவர்?
*தாயார் ஆமினா, தந்தையார் அப்துல்லாஹ்.*
91. நபிமார்களின் பெயரைக் கேட்டால் என்ன சொல்ல வேண்டும்?
*அலைஹிஸ்ஸலாம் என்று சொல்ல வேண்டும்.*
92. நபித்தோழர்களின் பெயரைக் கேட்டால் என்ன சொல்லவேண்டும்?
*ரலியல்லாஹு அன்ஹூ என்று சொல்ல வேண்டும்.*
93. இறைநேசர்கள் நல்லடியார்களின் பெயரைக் கேட்டால் என்ன சொல்லவேண்டும்?
*ரஹ்மத்துல்லாஹி அலைஹி என்று சொல்ல வேண்டும்.*
94. முதன் முதலில் ஏற்பட்ட கொலை எது?
*ஆதம் (அலை) அவர்களின் மகன் காபில், தன் சகோதரர் ஹாபிலை கொலை செய்தது.*
95. உயர்ந்த சொர்க்கம் எது?
*ஜன்னதுல் பிர்தவ்ஸ்.*
96. எந்த முஸ்லிமுக்கு தொழுகை கடமையில்லை?
*மனநிலை பாதிக்கப்பட்டவருக்கு*
97. நபி (ஸல்) காலத்தில் தன்னை 'நபி' என்று சொன்ன பொய்யன் யார்?
*முஸைலமதுல் கத்தாப்.*
98. ஹதீஸ் கிரந்தங்களில் முதலிடம் பெற்ற நூல் எது?
*ஸஹீஹுல்புகாரி*
99. உண்மையான வீரன் யார்?
*கோபம்*
*வரும்போது தன்னை* *கட்டுப்படுத்திக்கொள்பவன்.*
100. நபி (ஸல்) அவர்கள் வாழ்வு காலம்.
*63 ஆண்டுகள்*
மக்காவில் 13 ஆண்டு
.மதினாவில்10ஆண்டு
роХро░ுрод்родுроХро│் роЗро▓்ро▓ை:
роХро░ுрод்родுро░ைропிроЯுроХ