роироо்рооுроЯрой் роЗрогைрои்родு роЗро░ுрок்рокро╡ро░்роХро│்

ро╡ிропாро┤рой், роЪெрок்роЯроо்рокро░் 14, 2017

роЯாроХ்роЯро░் родேро╡ை роЗро▓்ро▓ை,

ஒருவர் தவறான உணவை உட்கொண்டார் என்று வைத்துக் கொள்வோம்,
தொண்டை வரைக்கும்x- அவர் கட்டுப்பாட்டில் நஞ்சு இருப்பதால் அது உள்ளே சென்றுவிடும்!

அதற்குப் பின் அதை மூளை கவனித்துக்கொள்ளும்.❗

1.உடம்புக்குக் கூடாத இந்த நஞ்சை வாந்தி மூலம் வெளியேற்றுமாறு இரைப்பைக்குப் பணிக்கும்.

2.இரைப்பை வாந்தி மூலம் வெளியேற்றித் தள்ளும் போது அவர் உடனே டாக்டரை நாடி "டொம்பெரிடன்" (Domperidone) ஒன்றைப் போட்டு நிறுத்தி விடுவார்.

3.இன்னும் உள்ளுக்குள் நஞ்சு இருப்பதால் இரைப்பையிடம் மூளை விசாரிக்கும்.

4.நான் என்ன செய்ய அரசே, இவன் விடவில்லையே என்று இரைப்பை ஒதுங்கி விடும்.

5.ஆனால் மூளை இறைவன் கொடுத்த பொறுப்பை சரியாக நிறைவேற்ற பேதியாக தள்ளுமாறு குடலைப் பணிக்கும்.

6.உடனே மூளையின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு குடல் வாயிற்றோட்டமாக அனுப்ப எத்தனிக்கும்.

7.வயிறு கலக்கிக்கொண்டு வரவே மீண்டும் டாக்டரை நாடிச் செல்வார்.

அவரும் ஒரு " லோபிரமைட் " (Loperamide) ஐக் கொடுத்து நிறுத்திவிடுவார்.

8.உடலில் மீண்டும் அதே நஞ்சைக் கண்ட மூளை குடலிடம் விசாரிக்க இரைப்பை சொன்ன அதே பதிலை குடல் சொல்லும்.

9.மூளை அடுத்து சளியாக மாற்றி வெளியேற்றுமாறு நுரையீரலை பணிக்கும்.

10.அப்போது இருமல் வரவே பழையபடி வைத்தியரை நாடி "இருமல் மருந்து" (Cough Syrup) ஒன்றை சாப்பிடுவார்.

11.நான்காவதாக அதை வெளியேற்ற மூளை தோலை நாடும்.

12.சொறி சிறங்கு முலம் தோல் வெளியேற்ற முனையும் போது "தோல் மருந்து" (Anti Allergic medicines) வகைகளை பாவித்து அதையும் நிறுத்தி விடுவார்.

வெளியேறும் அனைத்து வழிகளும் அடைபட்ட நிலையில் நஞ்சை வெளியேற்றும் வரை மூளை ஓயாது என்பதால் வேறு வழியைத் தேடும்.

13 உடம்புக்குள் ஒரு குப்பைத்தொட்டியை (கட்டி) உருவாக்கி அதில் நஞ்சை சேமிக்கும்.

கொஞ்ச நாளில் நம்மவர் ஸ்கேன் பண்ணிப் பார்த்து அதையும் வெட்டி வீசி விடவே மூளை ”இனி யாரையும் நம்பி பிரயோஜனம் இல்லை” என்று நஞ்சைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும்.

அது "மூளை கேன்சர் கட்டி" (Brain Tumour) ஆக மாறும் அபாயம் உண்டு. ��

��எமது உடலுக்கு எது தேவையோ அதை நீங்கள் தெளிவாகப் புரியும் பாஷையில் மூளை சொல்லும்.

உடலுக்குத் தண்ணீர் தேவை என்றால் அது தாகம் என்ற பாஷையில் உங்களோடு பேசும். ��

வாய்மொழியைக் கூட நாம் கவனிக்காது விட்டு விடுவோம் என்பதாலோ என்னவோ எந்நேரமும் கவனிக்க ஏதுவான உணர்ச்சி மொழியால் மூளை பேசுகிறது. ☘

உடலுக்கு சக்தி தேவைப்பட்டால் பசி எனும் உணர்ச்சி மொழியால் மூளை பேசும்.

குளிர் வந்தால் போர்த்தச் சொல்லும்.

வெப்பம் வந்தால் குளிக்கச் சொல்லும்.

இப்படி உடலுக்குத் தேவையபானவற்றை உணர்வை மொழியாக்கி மூளை சொல்லும்போது அதற்கெல்லாம் வைத்தியரை நாடி நாம் போவதில்லை.

பசிக்கிறது மருந்து தாருங்கள் என்று வைத்தியசாலை போவோமா? அல்லது சிற்றுண்டிச் சாலை போவோமா?

இதை நோய் என்று அறிமுகப் படுத்தியது யார்? ��

வயிற்றோட்ட உணர்வை மூளை ஏற்படுத்தியது நஞ்சைக் கழிக்கவே.

இதையும் நோய் என்று அறிமுகப் படுத்தியது யார்?

சொறி என்று சொன்னாலே சொறிந்து விடு என்று தானே அர்த்தம்.

கையைக் கூட நம்மை அறியாமல் மூளை சொறியவைக்கிறது என்றால் இதை நோய் என்று அறிமுகப்படுத்தியது யார்?

மூக்கு ஒழுகுதல்,
சளி பிடித்தல்,
இருமல்,
காய்ச்சல்,
இவைகளை நோய்கள் என்று நினைப்பது அறியாமை!

இதற்கு மருத்துவம் செய்து இரசாயன வில்லைகளை விழுங்குவது அறியாமையின் உச்சம்!

இவைகள் நம் உடல் முழு ஆரோக்யம் நிலையில் உள்ளதை காட்டுகிறது!

இவைகள் நம் உடல் கழிவுகளை வெளியேற்றும் அற்புத இறை செயல்!

மருத்துவம்,
உடல் சுத்திகரிக்கும் செயலை தடுத்து,
கழிவுகளை உடலிலேயே தங்கவைத்து, மேலும் சேர்த்து,
நோய்களை பெரிதாக்கி புற்று நோய்வரை கொண்டு செல்லும்!

உடல் மொழியை புரிந்துக்கொள்ளுங்கள்!

மருத்துவம் தவிருங்கள்!

ஆரோக்யம் அனுபவியுங்கள்.... வாழ்க வளமுடன்...

роЮாропிро▒ு, роЪெрок்роЯроо்рокро░் 10, 2017

родாропрод்родு рокோроЯாро▓ாроо்,

கேள்வி: முஸ்லிம்கள் ஓதிப் பார்ப்பது, தாயத்து போடுவது போன்ற செயல்களை செய்கிறார்களே! இதற்கு ஆதாரம் இருக்கிறதா?

பதில்: நம்மில் எவருக்கேனும் தலைவலி, காய்ச்சல், மனப் பயம், கண் திருஷ்டி போன்ற நோய்கள் ஏதேனும் ஏற்பட்டால் ஒரு  ஆலிமிடமோ, ஷெய்கிடமோ, சாலிஹான மனிதரிடமோ சென்று ஓதி பார்ப்பதன் மூலம் சுகம் கிடைக்கும் என்று ஓதிப் பார்க்கிறோம். இவ்வாறு நாம் செய்வதற்குரிய ஆதாரத்தைப் பார்க்கலாம்.

ஓதிப் பார்ப்பதற்குரிய ஆதாரம்:
رأيت أثر ضربة في ساق سلمة فقلت ما هذه؟ قال: أصابتني يوم خيبر فقال الناس أصيب سلمة فأتى بي رسول الله صلى الله عليه وسلم فنفث في ثلاث نفاثات فما اشتكيتها حتى الساعة

‘நான், ஹழ்ரத் ஸல்மா ரலியல்லாஹு அன்ஹா அவர்களது கெண்டைக்கால் பகுதியில் காயத்தின் அடையாளமொன்றைக் கண்டு இது எப்படி ஏற்பட்டதென்று கேட்டபோது, இது கைபர் யுத்த களத்தில் வைத்து ஏற்பட்டதென்று கூறினார். பின்னர் இதுபற்றி பலரும் பலவிதமாகப் பேசியபோது நான் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கொண்டு வரப்பட்டு, நபியவர்கள் மூன்று முறை ஓதி ஊதினர். அதன்பின் இதுவரை அக்காயத்தினால் நான் பாதிக்கப்படவில்லை’ என்று பதிலளித்தனர்.

அறிவிப்பாளர்: யஸீத் இப்னு அபீ உபைத் ரலியல்லாஹு அன்ஹு.
நூல்: புஹாரி, கிதாபுல் மகாஸி, பாபு கஸ்வத்தி கைபர், அபூதாவுத், கிதாபுத் திப்பு, பாகம் 4 பக்கம் 219.

عن عائشة رضي الله عنها أن رسول الله صلى الله عليه وسلم نان اذا اشتما يقرأ في نفسه بالمعوذات وينفث فلما اشتد وجعه كنت أقرأ عليه وامسح عليه بيده رجاء بركتها

ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வியாதியுற்றால், அவர்கள் சூறத்துல் ஃபலக் மற்றும் சூறத்துன் நாஸ் ஆகிய இரு ஸூராக்களையும் ஓதி தமக்குத் தாமே ஊதிக் கொள்வார்கள். வேதனை அதிகமாக இருந்தால் நான் ஓதி அவர்களது கரத்தில் ஊதுவேன். அதனை அவர்கள் அருளை நாடி தன் மீது தடவிக் கொள்வார்கள்.

அறிவிப்பாளர்: அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன

நூல்: புஹாரி ஃபழாயிலுல் குர்ஆன், பாபுல் முஅவ்விதத்தைன், முஸ்லிம், பாபு ருகிய்யத்தில் மரீழி ஃபில் முஅவ்விதாத்தி வந்நஃப்ஸ்.

தண்ணீர் ஓதி அடித்தல்:
أن رسول الله عليه وسلم دخل على ثابت بن قيس قال احمد: وهو مريض فقال اكشف البأس رب الناس. عن ثابت بن قيس بن شماس ثم أخذ ترابا من بطحان فخعله في قدح ثم نقث عليه بماء وصب عليه

அருமை நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹழ்ரத் தாபித் இப்னு கைஸ் ரலியல்லாஹு அன்ஹுவின் நலம் விசாரிக்கச் சென்றிருந்தனர். அப்போது, அனைவரையும் பரிபாலிக்கும் ரட்சகனே! நோயை குணப்படுத்துவாயாக! என்று பிரார்த்தித்தனர். பின்னர் மதீனரிலுள்ள பர்ஹானா என்னுமிடத்திலிருந்து சிறிது மண்ணை எடுத்து ஒரு பாத்திரத்திலிட்டு அதில் தண்ணீரையும் கலந்து ஓதி ஊதிய பின் நோயாளியின் மீது ஊற்றினர் நபிகளார்.

அறிவிப்பாளர்: அஹ்மத் இப்னு ஸாலிஹ் ரலியல்லாஹு அன்ஹு.
நூல்: அபூதாவூத், கிதாபுத் திப்பு, பாபுர்ருகா பாகம் 4 பக்கம் 214. இப்னு மாஜா, பாபுல் ஹும்மா மின் ஃபைஹிஜஹன்னம்.

நபிகள நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஜம்ரத்துல் அகபாவிலிருந்து திரும்பி வந்து கொண்டிருக்கும்போது ஒரு பெண் நோயால் பாதிக்கப்பட்டிருந்த குழந்தை ஒன்றுடன் நபியவர்களைப் பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்தாள். அவள் நபியவர்களை நோக்கி, அல்லாஹ்வின் ரஸூலே! இக்குழந்தைதான் எனது குடும்பத்தின் கடைசி குழந்தை. இது நோயால் பாதிக்கப்பட்டு பேசும் சக்தியை இழந்து விட்டுள்ளது என்று கூறவே, அது கேட்ட நபியவர்கள்,…
ائتوني بشئ من ماء فأتيي بماء فغسل يديه ومضمض فاه ثم أعطاها فقال: اسقيه منه وصبي عليه منه واستشفى الله له

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொண்டு வருமாறு சொல்ல, தண்ணீர் கொண்டு வரப்பட்டது. பின்னர் நபியவர்கள் அதில் தமது முபாரக்கான இரு கைகளையும் கழுவிய பின் வாயையும் அதனுள் கொப்பளித்து அத்தண்ணீரை அப்பெண்ணிடம் கொடுத்து, அதனை அக்குழந்தைக்கு பருக தந்து பின்னர் அக்குழந்தையின் மீது ஊற்று. அல்லாஹ்வைக் கொண்டு சுகம் பெறும் என்பதாகக் கூறி அனுப்பி வைத்தனர்.

நூல்: இப்னு மாஜா, பாகம் 4 பக்கம் 130.

தாயத்து அணிதல்:
عن عمروبن شعيب عن أبيه عن جده أن رسول الله صلى الله عليه وسلم قال: إذا فزع أحد كم فى النوم فليقل: اعوذ بكلمات الله التامات من غضبه وعقابه وشر عباده ومن همزات الشيا طين وان يحضرون فإنها لن تضره. فكان عبدالله بن عمر و يلقنها من بلغ من ولده ومن لم يبلغ منهم كتبها في صك ثم علقها في عنقه

உங்களில் ஒருவர் தூக்கத்தில் திடுக்கிட்டால், ‘அவூது பி கலிமாத்தில்லாஹித் தாம்மாத்தி மின் ஃகழபிஹி வ இஃகாபிஹி வஷர்ரி இபாதிஹி வமின் ஹமஸாத்திஷ் ஷயாத்தீனி வஅன்ய் யஹ்ழுரூன். ஃப இன்னஹா லன் தாழுர்ரஹு’ என்று ஓதிக் கொள்ளுமாறு அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினர். இனி அப்துல்லாஹ் இப்னு அம்ரு ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், இதனை பருவமடைந்த தமது பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுப்பவராகவும், பருவமடையாத குழந்தைகளுக்கு ஒரு பொருளில் எழுதி அதனை அவர்களின் கழுத்தில் தொங்கவிடுபவராகவும் இருந்தனர்’

அறிவிப்பாளர்: அம்ரு இப்னு ஷுஐப் ரலியல்லாஹு அன்ஹு.
நூல்: திர்மிதி, கிதாபுத் தஅவாத் பாபு மன் அவா இலா ஃபிராஷிஹீ, பாகம் 5 பக்கம் 313. அபூதாவூத், கிதாபுத் திப்பு, பாகம் 4 பக்கம் 218.

பாத்திரத்தில் எழுதிக் கொடுத்தல்:

கர்ப்பிணிப் பெண்களுக்கு பிள்ளைப்பேறு கஷ்டத்திற்குரியதாகி விட்டால், ‘பிஸ்மில்லாஹி லாஇலாஹ இல்லாஹுவல் ஹலீமுல் கரீம். ஸுப்ஹானல்லாஹி ரப்பிஸ் ஸமா வாத்திஸ் ஸப்இ வரப்பில் அர்ஷில் அளீம். கஅன்னஹும் யவ்ம யரௌனஹா லம் யல்பஸு இல்லா அஷிய்யத்தன் அவ் ழுஹாஹா. கஅன்னஹும் யவ்ம யரௌனமா யூஅதூன லம் யல்பஸு இல்லா ஸாஅத்தன் மின் நஹாரின் பலாஃக் ஃபஹல் யுஹ்லகு மில்லல் கௌமுல் ஃபாஸிகூன்’ என்பதை ஒரு பாத்திரத்தில் எழுதி அதனை பருகக் கொடுத்து பின் அத்தண்ணீரைக் கொண்டு முகம் கை போன்றவைளை கழுவிக் கொள்ளட்டும் என்று ஹழ்ரத் இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றனர்.

முஸன்னஃப்: இப்னு அபீ ஷைபா.
நூல்: மகாலாத்துஸ் ஸுன்னிய்யா, பக்கம் 182.

இனி இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தண்ணீர் ஓதிக் கொடுக்கும் போது குர்ஆனின் வசனங்களையும், துஆக்களையும் ஓதுவதற்குப் பதிலாக நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் முபாரக்கான திருமுடியைத் தண்ணீரில் முக்கியெடுத்து அதனை அருந்தக் கொடுப்பவர்களாக இருந்தனர்.

தாயத்து பற்றி அதிகம் படிக்க

தாயத்து போடலாம்

தாயத் போடுங்க

தாயத்து

ро╡ெро│்ро│ி, роЪெрок்роЯроо்рокро░் 08, 2017

рокро░்рооா рооுро╕்ро▓ிроо்(рооிропாрой்рооро░்),

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து மதீனாவுக்குச் சென்ற ஒரு சில தினங்களில் சாசனம் ஒன்றை வெளியிட்டார்கள். அது மதீனாச் சாசனம் என்று அழைக்கப்படுகிறது. அதில் கூறப்பட்டிருக்கும் பல செய்திகளில் ஒரு செய்தி என்னவென்றால் “யாரெல்லாம் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் அழிக்க நினைக்கவில்லையோ அவர்களும் முஸ்லிம்களும் ஒரே சமூகமாகும்”.
இதன் அடிப்படையில் இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களிடம் பகைமை கொள்ளாத மக்களுடன் முஸ்லிம்கள் சகோதரப் பாசத்துடன் நடந்து கொள்ள வேண்டும். அவர்கள் பாதிக்கப்பட்டால் இவர்களும் இவர்கள் பாதிக்கப்பட்டால் அவர்களும் ஒன்றாக இணைந்து குரல் கொடுத்து அநீதியைத் தடுக்க வேண்டும்.
முஸ்லிம்களுக்கும் இதர மக்களுக்குமிடையில் இப்படியொரு ஐக்கியம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் ஆதிக்க சக்திகள் கண்ணும் கருத்துமாக இருக்கின்றன. இவர்களுக்கிடையே பகைமையையும் மோதல்களையும் ஏற்படுத்தி நீதியை நிலைநாட்டும் சக்தி உலகில் உருவாகிவிடாமல் பார்த்துக் கொள்கின்றன.
இந்தக் கோணத்திலேயே உலகில் நடக்கும் பல பிரச்சினைகளைப் புரிந்து கொள்ள வேண்டும். கடந்த சில நாட்களாக பர்மாவில் முஸ்லிம்களுக்கெதிராக நடத்தப்பட்டு வரும் இனப்படுகொலையையும் இந்தக் கோணத்திலேயே நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

பர்மா என்றழைக்கப்படும் தேசம் இந்தியா, வங்தேசம், சீனா, தாய்லாந்து, லாவொஸ் ஆகிய நாடுகளுக்கு இடையில் வங்காள விரிகுடாவின் கிழக்கு கரைகளில் அமைந்துள்ள மிகவும் பின்தங்கிய நாடு. மருத்துவம், சுகாதாரத்தில் ஆப்பிரிக்க நாடுகளை விட மோசமான நிலையில் உள்ள நாடு. மனித உரிமை மீறல்கள், குழந்தை தொழிலாளர்கள், ஆள்கடத்தல், பேச்சுரிமை மறுப்பு ஆகியவற்றில் உலகளவில் முதல் இடத்தைப் பிடித்துள்ள நாடு.

அங்கு சுமார் 130 இன மக்கள் வாழ்கின்றனர் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதில் பெரும்பான்மையினராக பௌத்தர்களும். சிறுபான்மையினராக முஸ்லிம்களும் இந்துக்களும் கிறிஸ்தவர்களும் மற்றும் பழங்குடியினரும் வாழ்கின்றனர். பர்மாவில் வாழும் 6 கோடி மக்களில் முஸ்லிம்கள் 10 சதவீதம் உள்ளனர். இதில் ராக்கினே என்றும் அராகான் என்றும் அழைக்கப்படுகிற மாகாணத்தில்தான் முஸ்லிம்கள் பெருமளவில் வசிக்கின்றனர். இவர்கள் ரோஹிங்க்ய முஸ்லிம்கள் என்று அழைக்கப்படுகின்றனர். இவர்களே இன்றைக்கு பெரும் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.
1300 ஆண்டுகளுக்கு முன்பே பர்மா மக்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டனர் என்பதற்கான சான்றுகள் உள்ளன. நபி (ஸல்) அவர்களின் மார்க்கத்தை உலகம் முழுவதும் எடுத்துச் செல்வதற்கு நபித் தோழர்கள் பல கண்டங்கள், பல கடல்கள் தாண்டிச் சென்றனர். அதனடிப்படையில் பர்மா மக்களிடையே இஸ்லாத்தை எடுத்துரைப்பதற்காக வந்திறங்கியவர் முஹம்மது இப்னு அல் ஹனஃபிய்யா. இவர் ஹிஜ்ரி 60 ஆம் ஆண்டு (கி.பி.680) பர்மாவின் முதல் முஸ்லிமாக தனது காலடியை எடுத்து வைத்தார். இவரைத் தொடர்ந்து துருக்கி, பாரசீகம், அரேபிய தீபகற்பம், சீனா ஆகிய நாடுகளிலிருந்து முஸ்லிம்கள் வணிகர்களாகவும் மாலுமிகளாகவும் பர்மாவுக்கு வரத் தொடங்கினர்.
முஸ்லிம்களின் வருகையாலும் அவர்களின் தூய்மையான இஸ்லாமிய மார்க்கத்தை அறிந்து கொண்டதாலும் பல பூர்வீக பர்மா மக்கள் இஸ்லாத்தை தங்களின் வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டனர்.
அங்குள்ள பூர்வீக மக்களை திருமணம் செய்து கொள்வதன் மூலமாக முஸ்லிம்கள் பர்மாவோடும் அதன் மக்களோடும் ஒன்றோடு ஒன்றாக கலந்து விட்டனர்.

பர்மாவின் முதல் புத்த சாம்ராஜ்ஜியம் 11 ஆம் நூற்றாண்டில் தொடங்கியது. அதில் முதலில் உருவானது பாகன் சாம்ராஜ்ஜியம். புத்த சாம்ராஜ்ஜியங்களின் துவக்கத்திற்குப் பிறகு தான் புத்த பிட்சுகளின் மதவெறியாட்டமும், முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளும் தொடங்கின. மன்னான் யசாவின் (Hmannan Yazawin) எனப்படும் பர்மாவின் அரசர்கள் பற்றிய வரலாற்றுக் குறிப்பேட்டில் புத்த சாம்ராஜ்ஜியத்தில் முஸ்லிம்களின் வருகையை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
அக்குறிப்பேட்டின்படி கி.பி. 1055ஆம் ஆண்டு பயாத் குடும்பத்தைச் சார்ந்த பயாத் வி, பயாத் தா எனப்படும் இரு அரேபிய முஸ்லிம் சகோதர மாலுமிகளின் கப்பல் நடுக்கடலில் சேதமாகி தண்ணீரில் மூழ்கியதால் அருகில் உள்ள தாடன் எனும் கடற்கரை நகருக்கு தப்பிச் சென்றனர். அந்த ஊரைச் சார்ந்தவர்கள் அவர்களை யானை பலம் உடையவர்கள் என்று கூறினர். இதைக் கேட்ட தாடனின் மன்னன் இவர்களால் தனக்கு ஆபத்து வந்துவிடுமோ என அஞ்சி இரு சகோதரர்களில் ஒருவரை தூங்கிக்கொண்டிருக்கும் பொழுது கொன்று விட்டான். இவரே புத்த சாம்ராஜ்ஜியத்தால் கொல்லப்பட்ட முதல் முஸ்லிம் ஆவார். மற்றொரு சகோதரர் பயத் தா தப்பி ஓடி பாகன் சாம்ராஜ்ஜியத்தின் அரசன் அனவ்ரஹ்தாவிடம் தஞ்சம் புகுந்து அரசனிடமே வேலை செய்தார். அவர் பொபா என்ற இனத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை திருமணம் செய்து ஷ்வே, பியின் சகோதரர்கள் என்று அழைக்கப்படும் இரு மகன்களைப் பெற்றெடுத்தார்.

மேலும் வரலாறை படிக்க

புத்தம் பித்தம்

கடலில் தத்தலிப்பு

ро╡ெро│்ро│ி, роЪெрок்роЯроо்рокро░் 01, 2017

ро╡ிро░ро▓் роиுройி ро░ேроХை,

விரல்நுனி ரேகையில் அல்லாஹ்வின் தனித்த அடையாளம்

(Unique Identification Data)

அல்லாஹ் படைத்த மனித மிருக தாவர வர்க்கங்கள் அனைத்தும் பிரத்தியேக தனித்தனி அங்க அடையாளங்களுடனேயே சிருஷ்டித்துள்ளான் நமது பார்வைக்கு ஒன்றுபோல் இவை தெரிந்தாலும் ஒவ்வொரு ஜீவனும் தனித்த அடையாளங்களுடனே படைக்கப்பட்டுள்ளன. இந்த அடையாளங்கள் இருப்பதால்தான் பறவைகள் விலங்குகள் தங்கள் இணைகளை அறிந்து ஒரு கூட்டமாக சமுதாயமாக வாழுகின்றன

பூமியில் ஊர்ந்து திரியும் பிராணிகளும் தம் இரு இறக்கைகளால் பறக்கும் பறவைகளும் உங்களைப்போன்ற இனமேயன்றி வேறில்லை; இன்னும் அவையாவும் அவற்றின் இறைவனிடம் ஒன்று சேர்க்கப்படும். (அல்குர்ஆன் 6:38)

அந்த அல்லாஹ்தான் படைப்புக்கான திட்டம் வகுப்பவனும் அதனைச் செயல்படுத்துபவனும் அதற்கேற்ப வடிவம் அமைப்பவனுமாவான் (அல்குர்ஆன் 59:24)

மனிதர்களும் பல்வேறு உருவ அளவிலும் பல நிறங்களிலும் முகத்தோற்றத்திலும் தங்களுக்கிடையில் அடையாளம் காண்பதற்காகவே இப்படி வித்தியாசமாகப் அல்லாஹ் படைத்திருக்கின்றான் குறிப்பாக முக அடையாளமே நடைமுறையில் பெரிதும் பயன்படுகிறது ஆனால் போர் விபத்து மற்றும் கலவர சண்டையில் உடல் உறுப்புகளை இழப்பவர்களை அடையாளம் காண்பது மிகவும் கடினம்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் உஹதுப் போரில் பங்குகொண்ட நபித்தோழர், அனஸ் இப்னு நள்ர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கடுமையாக போரிட்டு ஷஹீதானர். அவர் (உடல் முழுவதும் சிதைந்து போனதால்) அடையாளம் அறியப்படாத நிலையில் கொல்லப்பட்டார். அவரின் உடலில் வாளால் வெட்டப்பட்டும், ஈட்டியால் குத்தப்பட்டும், அம்பால் துளைக்கப்பட்டும் எண்பதுக்கும் மேற்ப்பட்ட காயங்கள் இருந்தன. அவரை அவரின் சகோதரி மச்சத்தை வைத்தோ அல்லது கைவிரல் வைத்தோ கண்டறிந்தனர். (அறிவிப்பவர்: அனஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 4048)

1400 ஆண்டுகளுக்கு முன்பு கைவிரல் நுனி வடிவ அமைப்பை வைத்து மனிதர்களை அடையாளம் காண முடிந்தது. இந்த விரல் நுனியே இருபதாம் நுற்றாண்டிலும், இனி வரும் இறுதிநாள் வரையிலும், அனைத்து மனிதருக்குமான தனித்துவமான (Unique Identification Data) அடையாளமாக அல்லாஹ் ஆக்கி வைத்துள்ளான். பொதுவாக மனிதர்களின் கைகளிலும், விரல்களிலும் ரேகைகள் உள்ளன. உள்ளங்கை ரேகையால் உலக ஆதாய பயன் பெறுபவர்கள் கைரேகை ஜோசியர்கள் மட்டுமே. விரல் நுனி ரேகையே தடய அறிவியல் மற்றும் அனைத்து துறைகளுக்கும் பயனளிக்கிறது.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்காவில் இஸ்லாத்தை போதித்து, மரணத்திற்குப்பின் மனிதனை எழுப்பி அவனின் சுவன, நரக நிலைகளை விளக்கினார்கள். அப்பொழுது ஒரு மனிதர்,ஒரு உக்கி, மக்கிப்போன எலும்பை கையிலெடுத்து, அதை தூளாக நொறுக்கி, இந்த எலும்புக்கும் அல்லாஹ் உயிர் கொடுப்பானா? என்று கேட்டார். அப்போதுதான் அல்லாஹ் இந்த வசனத்தை இறக்கினான்.

(மரித்து உக்கிப்போன) மனிதனின் எலும்புகளை நாம் ஒன்று சேர்க்கவே மாட்டோம் என்று மனிதன் எண்ணுகின்றானா? அன்று; அவன் நுனி விரல்களையும் (முன்னிருந்தவாறே) செவ்வையாக்க நாம் ஆற்றலுடையோம். (அல்குர்ஆன். 75:3,4)

மனித உடலில் பல உறுப்புகள் இருந்தாலும் இவ்வசனத்தில் குறிப்பாக அல்லாஹ் விரலைக் கூட முன்பிருந்தவாறே செய்வையாக்க ஆற்றலுடையவன் என்று கூறுவதன் மூலம் விரலும் அந்த விரல்களிலுள்ள ரேகைகளும் அப்படியே மீண்டும் உருவாகும் என்கின்றான். உலக அழிவிற்க்குப் பிறகு, இறுதித்தீர்ப்பு நாளில் அனைத்து ஜீவராசிகளும் தனித்தனி அடையாளத்துடன் முன்பிருந்தவாறே மீண்டும் உயிர்ப்பிப்பது அல்லாஹ்வுக்கு மட்டுமே உள்ள தனி ஆற்றல், வல்லமையாகும்.

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: நீங்கள் (மறுமை நாளில் காலில்) செருப்பணியாதவர்களாகவும், கத்னா செய்யப்படாதவராகவும் எழுப்பப்படுவீர்கள். பிறகு, “ நாம் முதன் முதலாகப் படைத்ததைப்போன்றே அதை மீண்டும் படைப்போம். இது நம்முடைய வாக்குறுதியாகும். இதை நாம் நிச்சயம் செய்யவிருக்கிறோம்.” (அல்குர்ஆன் 21:104) என்னும் வசனத்தை ஓதிக்காட்டினார்கள். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 3349)

விரல் ரேகையைப் பற்றி நவீன அறிவியல் என்ன கூறுகிறது?

விரல் ரேகையானது குழந்தை கர்ப்பத்திலிருக்கும் நான்காம் மாதத்தில் உருவாகிவிடும். பின்பு மனிதன் இறக்கும்வரை அதில் எந்த மாற்றமும் ஏற்ப்படுவதில்லை.இன்று உலகில் 600 கோடி மனிதர்கள் வாழ்கிறார்கள் என்றால், இந்த கைவிரல் ரேகை ஒரு மனிதருக்கு உள்ளது போல் மற்றொரு மனிதருக்கு இருக்காது.ஒட்டு மொத்த மனிதர்களின் 6000 கோடி விரல்களும் ஒன்று போல் மற்றொன்று இருக்க வாய்ப்பில்லை. அல்லாஹ் ஒவ்வொரு மனிதனுக்கும் பிரத்தியேக, தனித்தனி அடையாளங்களை (Unique Identification Data) அமைத்துள்ளான்.

நமது தோற்றம் நாளுக்கு நாள் மாறக்கூடியது.பத்து வயதில் இருப்பது போல் இருபது வயதில் இருப்பதில்லை.நாற்பது வயதில், அறுபது வயதில் அல்லது என்பது வயதில் நமது உடல் உறுப்பு, முக அடையாளங்கள் மாறிக்கொண்டே இருக்கும். ஆனால் இரண்டு வயது குழந்தையின் விரல் ரேகைதான், அந்தக் குழந்தை என்பது வயதான முதியவராக மாறிய போதும் அதே ரேகைதான் இருக்கும். விரல் நுனி ரேகை அமைப்பு கொஞ்சம் கூட மாறுவதில்லை. எனவேதான் தடய அறிவியல் துறை விரல் ரேகை நிபுணர்கள், இதை “ கடவுள் கொடுத்த முத்திரை “ என்று ( A Seal given by God ) வர்ணிக்கிறார்கள். இது அல்லாஹ் அடியானுக்கு வைத்த முத்திரை.

தாயின் கர்ப்பத்தில் 10 வது வாரத்தில் வளரும் விரல்களில் 17 வது வாரத்திற்குள் விரல் ரேகைகள் பதியப்பட்டு முடிந்து விடும்.பிறகு அதன் ஆயுள் வரை மாறுவதில்லை. இதிலும் ஆச்சரியம், ஒத்த உருவமுள்ள இரட்டைக் குழந்தைகள் விரல் ரேகைகளும் ஒன்றுபோல் இருப்பதில்லை. இன்றைய நவீன அறிவியல் வளர்ச்சியில் உருவான குளோனிங் முறையில் அச்சு அசலாக தாயைப்போல சேய் பிறந்தாலும் பிறக்கும் குழந்தையின் விரல் ரேகை ஒன்று போல் இருக்காது. காரணம் விரல் ரேகையை டிஎன்ஏ என்னும் மரபணு ஜீன்களால் உருவாவதில்லை. தாயின் கர்பத்தில்தான் ரேகைகள் தீர்மானிக்கப்படுகின்றன.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: விந்துத்துளி தாயின் கருப்பையில் நாற்பது அல்லது நாற்பத்தைந்து நாட்கள் தங்கியிருந்த பின்னர் அந்த விந்துத்துளிக்குள் வானவர் ஒருவர் சென்று, ‘இறைவா! இவன் நற்பேறற்றவனா? அல்லது நற்பேறு பெற்றவனா? என்று கேட்கிறார். பிறகு (இறைக்கட்டளைக்கேற்ப) அது குறித்து எழுதப்படுகிறது. அவனுடைய செயல்பாடு, இயக்கம், வாழ்நாள், வாழ்வாதாரம் ஆகியவையும் எழுதப்படுகின்றன. பிறகு ஏடுகள் சுருட்டப்பட்டு விடுகின்றன. பிறகு அதில் கூட்டப்படுவதுமில்லை; குறைக்கப்படுவதுமில்லை. (அறிவிப்பவர்: ஹுதைபா பின் அசீத் ரளியல்லாஹு அன்ஹு, அவர்கள். நூல்: முஸ்லிம்.5146)

பொதுவாக விரல் நுனி ரேகை மூலம் குற்றவாளிகளை அடையாளம் காண்பதற்க்குத்தான் தடய அறிவியல் துறையினர் முதலில் இம்முறையைப் பயன்படுத்தினர் ஆனால் தற்கால கணினி அறிவியல் வளர்ச்சியின் காரணமாக பாஸ்போர்ட் மற்றும் அனைத்து அரசுத் துறை சேவைகளைப் பயன்படுத்த ஆதார் எனப்படும் தனித்துவ அடையாளத்திற்கு விரல் நுனி ரேகைகளே பெரிதும் பயன்படுகிறது தற்போது வெளிவரும் புதிய ஸ்மார்ட்போன்களை கையாள விரல்நுனி ரேகை அடையாளம் தேவைப்படுகிறது.

போலியான விரல் ரேகைகளை ஜெல்லடின் போன்ற பொருள்களால் உருவாக்கி அதை விரலில் அணிந்து கொண்டு ஏமாற்றும் நிகழ்வுகளும் நவீன தொழிற்நுட்ப உலகில் நடக்கத்தான் செய்கிறது அல்லாஹ் அமைத்த அடையாளத்தை மனிதனால் ஏமாற்ற முடியுமா? நிச்சயம் முடியாது ஏனெனில் விரல் நுனி ரேகைகள் கை விரலின் மேற்புறத்தில் பார்வைக்குத் தெரிந்தாலும் அதன் வேர் தோலின் அடிப்புரத்திலிருந்து வருவதாக அறிவியல் ஆய்வுகள் தற்போது கூறுகின்றன.

விரல் நுனியின் மேற்புற தோலிருந்து அரை மில்லி மீட்டர் (0 5 mm) ஆழத்தில் அசலான உள் ரேகைகள் (Internal Finger prints) பதிந்துள்ளன

பொதுவாக கை விரல் ரேகைகள் வயோதிகத்தினாலும் அல்லது கடினமான உடல் உழைப்பினாலும் தேய்ந்து தெளிவில்லாமல் போக வாய்ப்புள்ளது ஆனால் தற்போது கண்டுபிடிக்கப்பட்ட கருவிகள் தோலின் அடியில் உள்ள அசலான ரேகைகளை இனம் கண்டு ஆட்களை அடையாளப்படுத்துகிறது மேலும் விரலின் மேற்தோலிருக்கு கீழே உள்ள ரேகையானது எல்லா மனிதர்களுக்கும் ஒரே ஆழத்தில் இருப்பதில்லை ஒவ்வொரு மனிதரின் அசல் ரேகை ஆழம் வேறுபடுகிறது இந்த ஆழ வித்தியாசத்தை 2 D காமிரா மூலம் அளந்து மனிதர்களை அடையாளம் காணலாம்.

இதல்லாமல் விரல் ரேகையில் உள்ள வியர்வை சுரப்பிகளில் இருந்து படியும் அமினோ அமிலங்களின் அளவை அளந்து சம்பந்தப்பட்ட நபர் ஆணா அல்லது பெண்ணா என்பதையும் எந்த இணத்தை (Race) என்பதைக்கூட அறிய முடியும் காரணம் இந்த அமினோ அமிலங்கள் ஆணைவிட பெண்ணிற்கு இரு மடங்கு சுரக்கும்.

அல்லாஹ்வின் ஆதார் அடையாளமானது இவ்வுலகில் வாழ்ந்த மனிதர்களுக்கும் இன்று வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களுக்கும் இனி இறுதி நாள் வரை வரப்போகின்ற மனிதர்களுக்கும் தனித்தனி பிரத்யேக அடையாளத்தை பதிந்து வைத்துள்ளான் அனைத்து மனிதர்களின் அமல்களும் அல்லாஹ்வின் ஆதார் அடையாளம் மூலம் பதியப்பட்டுள்ளது. இப்பதிவே சொர்க்க நரகத்தை தீர்மானிக்க உதவும் அல்லாஹ் ஞானமுள்ளவன்; பேரறிவாளன் வல்ல அல்லாஹ் நம்மை நரகத்தை விட்டும் பாதுகாப்பானாக!

“இது உங்கள் செயலைப்பற்றிய நம்முடைய பதிவுப்புத்தகம் இது உங்களைப்பற்றிய உண்மையையே கூறும் நிச்சயமாக நாம் நீங்கள் செய்தவற்றை எல்லாம் எழுதி வைத்திருக்கின்றோம்” (அல்குர்ஆன் 45:2.

இதை பற்றி அதிகம் படிக்க

рокிро░рокро▓்ропрооாрой рокродிро╡ுроХро│்