நம்முடன் இணைந்து இருப்பவர்கள்

ஞாயிறு, அக்டோபர் 31, 2021

அருமையான கேள்விகளும் அற்புதமான பதிலும்,

 


https://www.facebook.com/raheem.anvaari

கொசு குர்ஆன் கூறும் விஷயம்ம் என்ன?



https://youtu.be/tgL12ojp0es


(929) குர்ஆனில் கொசு ஓர் அதிசயம்
===========================

கொசு தோற்றத்தில் மிகவும் சிறியது! அற்பமானது! ஆனால் படைப்பில் அது அற்புதமானது விந்தையானது. 

அது அல்லாஹ்வின் அருள் மறையின் அற்புதச்செய்தியை முன்னறிவிப்பதாக உள்ளது. அது என்ன வசனம் தெரியுமா?

إِنَّ اللَّهَ لاَ يَسْتَحْيِي أَن يَضْرِبَ مَثَلاً مَّا بَعُوضَةً فَمَا فَوْقَهَا

 நிச்சயமாக அல்லாஹ், கொசுவையோ
அதைவிட அற்பமானதையோ (அதன் மேலுள்ளதையோ) உதாரணமாகக் கூற வெட்கப்படமாட்டான் 
(அல்பகரா :2:26)

இந்த இறை வசனம் எப்போது அருளப்பட்டது தெரியுமா?

இணைவைப்பவர்களுக்கு எடுத்துக்காட்டாக 
அல்லாஹ் 22:73-வது வசனத்தில் ஈயையும், 
29:41-வது வசனத்தில் சிலந்தியையும் உவமையாகக் கூறுகிறான். 

இதைக் கேட்ட இணைவைப்பாளர்கள் ஈயும், சிலந்தியும் அல்லாஹ்வின் வேதத்தில் கூறப்படுகின்றனவா? என்று இளக்காரமாகக் கேட்டனர்.

அப்போது தான் அல்லாஹ் இவ்வசனங்களை அருளி இப்படிக் கூறினான். 
நிச்சயமாக அல்லாஹ் கொசுவையோ அதைவிட அற்பமானதையோ (அதன் மேலுள்ளதையோ) உதாரணமாகக் கூற வெட்கப்படமாட்டான் 
(அல்பகரா :2:26) 

அதாவது சத்தியம் என வந்து விட்டால் அது எவ்வளவு அற்பமானதாக இருந்தாலும்,பெரிதாக இருந்தாலும் அதைக் கூறுவதற்கு அல்லாஹ் தயங்கமாட்டான். எனக்கூறிவிட்டு, 

அறிவியலுக்கு ஒரு சவாலாக கண்ணுக்குப் புலப்படாத ஓர் அற்பமான ஒரு பூச்சியையும் அதன் மேல் படைத்துள்ளான். அது அதன் குழவிக்குஞ்சாகவோ அதை தூய்மைப் படுத்தும் ஒரு அரிய படைப்பாகவோ இருக்கலாம். அதை அல்லாஹ்வே நன்கறிந்தவன்.

தன்னோடு ஒப்பிடும் போது, எதிரி பல மடங்கு பெரிதாய் அமைந்தவன் என்று அறிந்திருந்தும் எந்தவித அச்சமுமின்றி எதிர்கொள்ளும் தைரியத்தை எங்கிருந்து கொசு கற்றுக் கொண்டது?. 

இந்த போராட்டத்தில் சாவு நிச்சயம் என்று தெரிந்திருந்தும் மீண்டும் மீண்டும் எதிர்த்து போராடும் போர்க்குணத்தை எங்கே அது கற்றுக் கொண்டது?.

இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக மனிதன் கொசுவுக்கு பயந்து வலைக்குள் பதுங்கி கொள்ளும் அச்சத்தை அது ஏற்படுத்தி இருக்கிறதே!

உலகில் உயிர் கொல்லி நோய்கள் என்று அறிவிக்கப்பட்டவைகளில் மிக அதிகமானவை கொசுக்களால் தான் பரப்பப்படுகின்றன. இத்தனை ஆச்சரியங்களை உள்ளடக்கிய கொசுவை அற்பமாக எண்ணிக் கொண்டீர்களா?, 
அதுபற்றி ஆராய வேண்டாமா?. அதை தானே திருக்குர்ஆன் சொல்லிக் கொண்டிருக்கிறது.

நுண்கருவி மூலம் பெரிது படுத்தப்பட்ட அதன் அற்புதத் தோற்றத்தை படத்தில் காணலாம்.

விந்தையான கொசு பற்றிய விபரங்கள் 
1. அது பெண்பால். 
2. அதற்கு அதன் தலையில் 100 கண்கள். 3. அதன் வாயில் 48 பற்கள்.
4. அதன் உடலில் மாறுபட்ட மூன்று இதயங்கள். 
5. அதன் தும்பிக்கை நுனியில் ஆறு அறைகள்.
6. அவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனி அலுவல்கள் 
7. ஒவ்வொரு பக்கத்திலும் மூன்று இறக்கைகள்.

8. எக்ஸ்ரே கருவி போன்ற நுண்ணிய தர்மோமீட்டர் பொருத்தப்பட்ட சிவப்பு நிறத்தில் ஒரு நுண்ணிய கருவி அதனுள் படைக்கப்பட்டுள்ளது. அதன் வேலை அது மனித உடலில் இருளில் வந்து அமர்ந்து இரத்தத்தை உறிஞ்சும் போது யாரும் கண்டு கொள்ள முடியாத அளவுக்கு மனிதனுடைய நிறத்திற்கேற்றவாறு தன் நிறத்தை மாற்றிக்கொள்கிறது..

9. மனித மூளையே வியக்குமளவுக்கு அதனிடமுள்ள கூரிய ஊசி முள்ளால் குத்தி சிறிஞ்சியைப் போல் உறிஞ்சிக் குடிக்கிறது. அது எப்படீ பாய்ந்து உள்ளே செல்கிறது என்பதை நாம் தெரிந்து கொள்ள முடியாது.

10. மனிதனின் இரத்த வாசனையை 60 கி.மீட்டர் தொலைவிற்கு அப்பாலிருந்து நுகர்ந்து தெரிந்து கொள்ளும் அற்புத ஆற்றலை அது பெற்றிருக்கிறது.

11. இவை எல்லாவற்றிற்கும் மேலாக அதன் முதுகின் மேல் கண்களால் பார்க்கமுடீயாத அளவுக்கு மிகச்சிறிய ஒரு பூச்சி உள்ளது என இன்றைய அறிவியல் கண்டு பிடித்துள்ளது.

உலகத்தின் ஆதி உயிரினங்களுள் ஒன்று கொசு.

2.5 மில்லி கிராம் எடைகொண்ட கொசுவுக்குப் பற்கள் மட்டும் 47.

மழை கொட்டும்போதும் உடல் நனையாமல் துளிகளின் இடுக்குகளில் பறக்க முடிந்த ஒரே பூச்சியினம் கொசு.

ஒரு விநாடிக்கு 300 முதல் 600 முறை வரை சிறகடிக்கிறது. அதுதான் நீங்கள் கேட்கும் ரீங்காரம்.

சில வாரங்கள் மட்டுமே ஆயுள்கொண்ட கொசுக்கள் ஆண்டுக்கு 10 லட்சம் மனிதர்களைக் கொன்று குவிக்கின்றன.

கொசு வகைகளின் எண்ணிக்கை, 3000ஐத் தாண்டியுள்ளது. இதில், 80 வகை கொசுக்கள் மக்களின் இரத்தத்தை உறிஞ்சும்.

ஒரு கொசு, முட்டையிலிருந்து, முழு வளர்ச்சி அடைந்த கொசுவாக மாறுவதற்கு தேவைப்படும் காலம்,5 நாட்கள் மட்டுமே

முட்டையிலிருந்து வெளிவந்த சில நிமிடங்களுக்குப் பின், கொசுக்கள் இனப் பெருக்கம் செய்ய முடியும். மேலும், கொசுவுக்கு முள் போன்ற கூரிய முனையுடைய இரத்த உறிஞ்சுக்குழல் உண்டு. கொசுவின் துணையுறுப்புகள் மிகவும் தனிச்சிறப்பு வாய்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

உலகின் அபாயகரமான பூச்சியினம் என்று கின்னஸால் அறிவிக்கப்பட்டதும் கொசுதான்.

ஆண் கொசுவைவிடப் பெண் கொசுவே பெரியது. ஆண் கொசு சைவம். இலை தழைகளிலேயே அது உணவு உட் கொள்ளும். கடிப்பதும் ரத்தம் குடிப்பதும்
பெண் கொசுதான்.

கடிக்கும்போது ஒரு கொசு இரண்டு குழல்களை உடலுக்குள் நுழைக்கிறது. ஒரு குழல் ரத்தம் உறையாதிருக்க நொதிப்பொருளை செலுத்துகிறது. மறு குழல் உறையாத ரத்தத்தை உறிஞ்சுகிறது.
' ஏடிஸ் ' வகை கொசுதான் டெங்கு பரப்புகிறது.

ஒரு தொற்று நோயாளியைக் கடித்த கொசு ஆரோக்கியமானவரையும் கடிக்கும்போது தொற்றுக்கிருமிகளை உட்செலுத்தி டெங்கு பரப்புகிறது.
டெங்குவிற்கு மருந்தில்லை; டெங்குவில் மீண்டாலும் நோய் எதிர்ப்புச் சக்தியை உடல் மீண்டும் அடைவதில்லை.

கொசு/நுளம்பு மனிதக் குருதியை நுண்ணிய ஊசி போன்ற வாயுறுப்பால் அகத்துறிஞ்சி தனது வயிறு அல்லது கண்டப்பைக்குள் செலுத்தும். கண்டப்பைக்குள் செலுத்தப்பட்ட குருதி, சில நொதியங்கள் சேர்க்கப்பட்டு நுளம்புக்கான உணவாக கண்டப்பையுள் சேகரிக்கப்படும். அதேவேளை மனித உடலில் இருந்து கொசு/நுளம்பு குருதியை அகத்துறிஞ்சும் போது தனது உமிழ் நீரை மனித உடலுக்குள் பாய்ச்சும்.நுளம்பு இனங்களில் அனோஃபிலசு (Anopheles) எனப்படும் நுளம்பினத்தின் பெண் நுளம்புகளே, உலகின் சில பாகங்களில் மனித இறப்பை ஏற்படுத்தும், மலேரியா என்னும் அபாயகரமான தொற்றுநோயை ஒருவரிலிருந்து இன்னொருவருக்கு கடத்தும் நோய்க்காவியாக இருக்கின்றது

கொசுக்களை விரட்ட பயன்படுத்தும் பொருட்களில் கொசுக்களை அழிக்கும் இரசாயனம் அலெத்ரின்(alletrin) சார்பு பொருட்கள் உள்ளன. இது கொசுக்களை மட்டும் அழிப்பதில்லை மனிதனின் சுவாசப்பையில் நச்சுப்பொருள் கலந்து நாளடைவில் மார்புச்சளி, தும்மல் தலைவலி போன்ற உடல்நலக்கேடுகள் விளைகின்றன.

உடலில் தேங்காய் எண்ணை அல்லது விளக்கெண்னை பூசிக்கொண்டால் இரவில் கொசுக்கள் மட்டுமல்ல வேறு சில் பூச்சிகளும் நம்மை கடிக்காது.

கொசுக்கள் பெண்களைத்தான் அதிகமாக கடிக்கும் காரணம் அவர்கள் உடலிலுள்ள ஈஸ்ஸ்ட்ரோஜென்ஸ் கொசுக்களை கவருகின்றன ஆக பெண் தான் பெண்ணுக்கு எதிரி என்பது கொசுக்கள் விஷயத்திலும் உண்மையே

Vitamin B --- கொசுவின் எதிரி..., 
இந்த வைட்டமின் B அதிகமாக இருப்பவர்களை கொசு அண்டுவதில்லை...

வைட்டமின் B எவ்வளவு நீங்கள் எடுத்துகொள்ளலாம் என்று மருத்துவரின் பரிந்துரைப்படி மாத்திரைகளை வாங்குவது நல்லது.

சுத்தம் கொசுவுக்கு பகை:-

கொசு ..தொல்லை ..பற்றி தொடரே 
எழுதலாம் அவ்வளவு செய்தி இருக்கு 

குறிப்பா கொசு எப்படி உருவாகிறது?

மிகசிறு நீர் தேகத்தில் தான் கொசு லார்வா என்கிற முட்டையை பாதுகாக்கிறது அதாவது கொட்டாங்குச்சி எனப்படும் 
செரட்டை அதில் நாள்பட தண்ணீர் இருக்குமால் அதுவே கொசுவின் வீடு 

அதே போன்று சிறு சிறு டப்பாக்கள் அதில் தண்ணீர் கொசுவுக்கு சொகுசான வீடு.
ஓடும் தண்ணீரில் கொசு ஐயா இருக்க மாட்டார் அவருக்கு நன்னீர் அவசியம் 

எனவே குடிநீர் தேக்கம் அவருக்கு அடைக்கலம் கொடுக்கும் அற்புதமான இல்லம் 

குடிநீர் சேகரிப்பு தொட்டியை யாரும் சரியாக பராமரிப்பதில்லை ..காத்து கொசுவுக்கு பகை சிறு சிறு செடி கொடிகள் தவிர்த்தல் நலம் ... 

கொசு நம் ரத்தத்தை உறிஞ்சும் போது அது உறைந்துவிடக்கூடாது என்பதற்காக தனது எச்சில் போன்ற திரவத்தை வெளிப்படுத்துகிறது. இதில் உள்ள ரசாயனம் தோலில் பட்டதும் எரிச்சலையும் அரிப்பையும் ஏற்படுத்துகிறது.

இந்த பதிவை படித்தபின்பு
நீயெல்லாம் எனக்கு கொசுமாதிரி என்று
யாரையாவது சொல்வீர்களா?

ஒரு முஸ்லிம் பாம்பை வளர்ப்பது ஆகுமானதா?,

ஒரு முஸ்லிம் பாம்பை வளர்ப்பது ஆகுமானதா?

பதில் : பாம்பு என்பது தீங்குவிளைவிக்கின்ற, நோவினைப்படுத்துகின்ற ஒரு விளங்காகும். மேலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அதனை எங்கு கண்டாலும் கொன்றுவிடுமாரி ஏவினார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக ஆயிஷா றழியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கின்றார்கள் : “தீங்கழைக்க க்கூடிய ஐந்து (வகை) உயிரினங்கள் புனித (ஹரம்) எல்லைக்குள்ளும் வெளியிலும் கொல்லப்படும். பாம்பு, நீர்க்காகம், எலி, வெறிநாய், பருந்து ஆகியவைதாம் அவை.” (ஆதாரம் : முஸ்லிம்-1198)
“பாம்புகளைக் கொல்லுங்கள்” (என்று) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மின்பர் மேடையில் இருந்து உரைநிகழ்த்துவதை நான் செவிமடுத்தேன் என்று அப்துல்லாஹ் இப்னு உமர் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்.
(எனவே) அப்துல்லாஹ் இப்னு உமர் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் : “கண்ணில் படும் ஒவ்வொரு பாம்பையும் கொன்றுவருபவனாக இருந்தேன்” என்றார்கள். (ஆதாரம் : புஹாரி-3299, முஸ்லிம்-3233)
தொழுகையில் இருக்கின்றபோது பாம்பைக் கொல்லுமாரு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
அபூஹுரைரா றழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் : “பாம்பு , தேள் ஆகிய இரண்டையும் தொழுகையில் கொல்லுமாரு றஸுல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஏவினார்கள்.”​(ஆதாரம் : திர்மிதி-390) இது ஆதாரபூர்வமானது என இமாம் அல்பானீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்.
எனவே, மார்க்கம் அவைகளை கொல்லுமாரு ஏவிஇருக்கின்ற சந்தர்ப்பத்தில் ஒரு முஸ்லிமிற்கு அதனைக்கொண்டு எவ்வாரு பயன்படுத்தமுடியும்?
இமாம் அஸ்zஸர்கஷீ கூறினார்கள் : “தீங்கிழைக்கக் கூடிய ஐந்து உயிரினங்களையும் கையகப்படுத்துவது தடுக்கப்பட்டதாகும்.” (துஹ்பதுல் முஹ்தாஜ் : 9/337) , (அல்மன்ஸுர் பில் கவாஇத் : 3/80)
இமாம் அஸ்ஸுயூதி கூறினார்கள் : “எந்த விடயங்கள் பயன்படுத்துவது தடுக்கப்பட்டதோ அந்த விடயங்களை எடுத்துக்கொள்வதும் தடுக்கப்பட்டதாகும். அந்த அடிப்படையிலேயே கேளிக்கை இயந்திரங்கள், தங்கம்-வெள்ளி பாத்திரங்கள், வேட்டைக்கு பயன்படுத்தப்படாத நாய் மற்றும் பன்றி போன்ற தீங்கிழைக்கக் கூடியவைகள் அனைத்தும் தடைசெய்யப்பட்டதாகும்.” (அல்அஷ்பாஹ் வன் நழாஇர் : பக்கம்- 280)
இப்னு குதாமா கூறினார்கள் : “கொல்வதற்கு கடமையாக்கப்பட்டவைகளை பயன்படுத்துவது (ஹராம்) தடையாகும்.” (அல்முஃனீ : 2/11)
பாம்பை வாங்குவதையோ விற்பனைசெய்வதையோ தடைசெய்யப்பட்டது என்று அறிஞர்கள் கூறுகின்றார்கள்.
இமாம் அந்நவவீ கூறினார்கள் : “ (மிருகங்களில்) பயன்பெறமுடியாது என்கின்றவைகளை விற்பனை செய்வது ஆகுமானதல்ல. வண்டு, தேள், பாம்பு, எலி, எறும்பு போன்றவைகளை உதாரணமாகக் கூறலாம்.” (ரௌழதுத் தாலிபீன் : 3/351)
“எந்தவித பயனுமில்லாத பூச்சிக்களை விற்பனைசெய்வது ஆகுமானதல்ல என்பதில் அறிஞர்கள் உடன்படுகின்றார்கள். ஆதலால் விற்பனை செய்யப்படக்கூடிய பொருளில் பயன்பாடு இருக்கவேண்டும் என்ற ஒரு நிபந்தனை இடப்படுகின்றது. எனவே, எலிகளையோ, பாம்புகளையோ, தேள்களையோ, வண்டுகளையோ மற்றும் எறும்புகளையோ விற்பனை செய்வது ஆகுமானதல்ல.” (அல்மவ்ஸுஆ அல்பிக்ஹிய்யா : 17/280)
மேலும், பாம்பை கொலை செய்யுமாரு மார்க்க ஏவுதல்களில் வந்துள்ள பொதுவான ஆதாரங்களின் அடிப்படையில் ; நச்சுத்தன்மை உள்ள பாம்போ அல்லது நச்சுத்தன்மையற்ற பாம்போ எந்த வகையாக இருந்தாலும் பயன்படுத்துவது (ஹராம்) தடைசெய்யப்பட்டதாகும்.
மேலும், எந்தவித பிரயோஜனமுமற்ற இப்படியான பாம்புகளை பயிற்சி கொடுப்பது என்பது ஒரு முஸ்லிமைப் பொருத்தமட்டில் எந்தவித தேவையற்ற காரியமாகும். அத்துடன் இப்படியான மிருகங்களை வளர்ப்பதில் ஆபத்துக்களே அடங்கியுள்ளன.
யாவும் அறிந்தவன் அல்லாஹ் ஒருவன் மாத்திரமே.



பாம்புகளைக் கொல்லுதல் வேண்டும்.

1441. நபி(ஸல்) அவர்கள் மிம்பரின் மீதிருந்து உரையாற்றியபடி, பாம்புகளைக் கொல்லுங்கள். முதுகில் இரண்டு வெள்ளைக் கோடுகள் கொண்ட (‘தாத் துஃப்யத்தைன்’ என்னும்) பாம்பையும் குட்டையான – அல்லது – சிதைந்த வால் கொண்ட (‘அப்தர்’ எனும்) பாம்பையும் கொல்லுங்கள். ஏனெனில், அவையிரண்டும் (கண்) பார்வையை அவித்து விடும்; கருவைக் கலைத்து விடும்” என்று சொல்ல கேட்டேன். அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அறிவித்தார்: நான் (ஒரு முறை) ஒரு பாம்பைக் கொல்வதற்காக விரட்டிச் சென்று கொண்டிருந்தபோது அபூ லுபாபா (ரலி) என்னைக் கூப்பிட்டு ‘அதைக் கொல்லாதீர்கள்” என்றார்கள். நான், ‘இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பாம்புகளைக் கொல்லும்படி உத்திரவிட்டுள்ளார்கள்” என்று சொன்னேன். அதற்கு அவர்கள், ‘(ஆமாம், உண்மை தான்.) ஆனால், அதன் பிறகு வீடுகளில் வசிக்கும் பாம்புகளை (பார்த்த உடனே) கொல்லவேண்டாமென்று அவர்கள் தடுத்தார்கள். அவை வீட்டில் வசிக்கும் ஜின்களாகும்” என்று பதிலளித்தார்கள்.
புஹாரி : 3297-3298 இப்னு உமர் (ரலி).
1442. நாங்கள் (ஒருமுறை) இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் (மினாவிலுள்ள ஒரு குகையில் தங்கி) இருந்தோம். அப்போது அவர்களுக்கு, ‘வல் முர்சலாத்தி (ஒன்றன் பின் ஒன்றாக அனுப்பப்படுகின்றவை மீது சத்தியமாக!)” எனும் (77 வது) அத்தியாயம் அருளப் பட்டது. அதை நாங்கள் நபி (ஸல்) அவர்களின் வாயிலிருந்து (அவர்களே ஓதக்) கேட்டுக் கொண்டிருந்தோம். அப்போது பாம்பு ஒன்று (தன்னுடைய புற்றிலிருந்து) வெளிப்பட்டது. (அதைக் கொல்ல) போட்டியிட்டுக் கொண்டு நாங்கள் விரைந்தோம். அது எங்களை முந்திக் கொண்டு தன்னுடைய புற்றுக்குள் நுழைந்துவிட்டது. அப்போதுஇறைத்தூதர் (ஸல்) அவர்கள் , ‘நீங்கள் அதன் தீங்கிலிருந்து காப்பாற்றப்பட்டதைப் போன்றே அதுவும் உங்கள் தீங்கிலிருந்து காப்பாற்றப்பட்டு விட்டது” என்று கூறினார்கள்.
புஹாரி : 4930 இப்னு மஸ்ஊது (ரலி

பிரபல்யமான பதிவுகள்