роироо்рооுроЯрой் роЗрогைрои்родு роЗро░ுрок்рокро╡ро░்роХро│்

роЪройி, роЬройро╡ро░ி 07, 2017

роЪெро▓்рокோройிро▓் роЕродிро░்роЪ்роЪி,

செல்போனில் அந்தரங்கத்தை எடுக்காதீர்கள்: அதிர்ச்சி !
நீங்கள் செல்போனிலோ விடீயோ கேமராவிலோ உங்களின் அந்தரங்கத்தை படம்
பிடித்து ரசிப்பவர்களாக இருந்தால்… வெரி சொறி....உங்களின் அந்தரங்க
வீடியோ இப்போது உலகம் முழுக்க பரவிக்கொண்டிருக ்கலாம். என்னடா இது
ஆச்சரியம் என்று யோசிக்கவேண்டாம் ! முதலில் உண்மைச் சம்பவம் 2 டைப்
பார்ப்போம். பின்னர் விடையத்துக்கு வரலாம் !
அது எப்படி… என் செல்போனில் நான் என்னைப் படம் எடுப்பதால் என்ன ஆபத்து
வந்துவிடப் போகிறது?” என்று யோசிக்கிறீர்களா … வெயிட்… உங்களுக்காகவே
சாம்பிளுக்கு சில சம்பவங்கள்…(பெய ர்கள் மாற்றப்பட்டிருக ்கின்றன.
அடையாறில் வசிக்கிறார்கள் மதுமிதா- ராம். புதுமணத் தம்பதிகளானஇவர்கள்
ஐ.டி. துறையில் வேலை செய்கிறார்கள். ஒருநாள் நண்பர் ஒருவரால்
மதுமிதாவுக்கு அனுப்பப்பட்டிரு ந்த அந்த மெயிலில் ஒரு வீடியோ
இணைக்கப்பட்டிரு ந்தது. அதைத் திறந்து பார்த்த மதுமிதாவுக்கு
அதிர்ச்சியில் இதயமே வெடித்துவிடும் போலிருந்தது. காரணம், அந்த வீடியோ
மதுமிதாவும் அவர் கணவன் ராமும் பெட்ரூமில் அந்தரங்கமாக இருந்தபோது சும்மா
ஜாலிக்காக செல்போனில் எடுத்தது. கொஞ்ச நேரம் அதைப் பார்த்து
ரசித்துவிட்டு, செல்போனிலிருந்த ு அப்போதே அதை அழித்தும் விட்டார்கள்.
ஆனால் அது இப்போது இண்டர்நெட் முழுக்க பரவிக் கொண்டிருக்கிறது .
‘செல்போனில் இருந்து டிலீட்(delete) செய்த ஒரு வீடியோ எப்படி
இண்டர்நெட்டுக்க ுப் போகமுடியும்? என்பதுதானே உங்கள் டவுட். அதற்கான
விடையைத் தெரிந்து கொள்வதற்கு முன் மேலும் சில அதிர்ச்சிச்
சம்பவங்களையும் பார்த்துவிடுவோம ்.
அண்ணாநகரைச் சேர்ந்த அந்தப் பெண்ணின் பெயர் ரம்யா. துறுதுறுவென துள்ளித்
திரியும் டீன் ஏஜ் பெண். 10_ம் வகுப்பு படிக்கிறாள். உடன் படிக்கும்
மாணவிகள் பலர் செல்போன் வைத்திருக்கிறார ்கள் என அப்பாவை நச்சரிக்கவே,
அவரும் ஒரு காஸ்ட்லியான கேமரா செல்போனை வாங்கிக் கொடுத்தார். ஒருநாள்
பெட்ரூமில் கண்ணாடி முன் நின்று தன் அழகை ரசித்துக் கொண்டிருந்தவளுக ்கு,
செல்போனில் தன் உடலை அரை நிர்வாணமாகப் படம் பிடித்தால் எப்படி இருக்கும்
என்று தோன்றியது. உடனே அதைச் செய்தும் விட்டாள். பின்னர் சிறிது நேரம்,
அந்த வீடியோவை ரசித்துப் பார்த்துவிட்டு போனில் அந்த வீடியோவை
அழித்துவிட்டாள் . ஆனால் இப்போது அந்த வீடியோவும் நெட்டில் உலா வந்து
கொண்டிருக்கிறது . டிலீட் செய்த ஒரு வீடியோ எப்படி இணையத்துக்குப் போனது
என்பதுதான் சம்பந்தப்பட்ட எல்லோருக்கும் புரியாத புதிர்.
அந்த புதிருக்கான விடையின் பெயர் ‘ரெக்கவரி சாஃப்ட்வேர் !
மேலே சம்பவத்தில் இடம்பெற்ற எல்லோருக்கும், ஒன்றுபோல் ஒரு விஷயம்
நடந்தது. அது அவர்களின் செல்போனும், டிஜிட்டல் கேமராக்களும் ஒருநாள்
பழுதடைந்தது. அவற்றைச் சரிசெய்ய கடைகளில் கொடுத்திருந்தார ்கள்.
அங்கிருந்துதான் அவர்களின் மானம் இணையதளத்தில் பறக்கவிடப்பட்டத ு.
செல்போன், கம்ப்யூட்டர் பயன்படுத்தும் நம்மில் பலருக்கு அதுகுறித்த
முழுமையான தகவல்கள் தெரிவதில்லை. அதுவும் தங்கள் செல்போனில் எடுக்கப்பட்ட
ரகசிய போட்டோக்கள், வீடியோக்கள் அழிக்கப்பட்ட பின்னரும், மீண்டும் அதைப்
பார்க்க முடியும் என்கிற விஷயம் பலருக்குத் தெரியாது. உங்கள் மோபைல்
போனை, சிம்பிளாக அதன் சார்ஜர் வயரைப் பாவித்து கணணியில்இணைத்தால் போதும்.
இந்த ரெக்கவரி சாஃப்ட்வேர் மூலமாக, அழிக்கப்பட்ட வீடியோக்கள் மற்றும்
புகைப்படங்களை மட்டும் உடனே எடுத்துவிட முடியும்.எனவே இனிமேல்,
ஜாக்கிரதையாக இருப்பது நல்லது ! உங்கள் மோபைல் போனை யாரிடமாவது
கொடுப்பதோ, இல்லை திருத்த வேலைகளுக்காகக் கொடுப்பதையோ, உங்களுக்குத்
தெரிந்தவர்கள் மற்றும் நம்பிக்கையானவர் களிடம் கொடுப்பது நல்லது

роЬூроо்роЖ родிройроо்,

*அஸ்ஸலாமுஅலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹ்*

*மறந்து விட*
          *வேண்டாம் !*

*மறந்து விட*
          *வேண்டாம்* !!

*மறந்து விட*
          *வேண்டாம் !!!*

                   
*ஒட்டகம் *

                 
*மாடு       *

                 
*ஆடு        *

                   
*கோழி      *

                
*முட்டை  ⚪*

ஆகியவற்றை செலவில்லாமல்  குர்பானி கொடுத்த நன்மை பெற வேண்டிய நாள்.

இதோ அல்லாஹ் கூறுவதை பாருங்கள்‼

"நம்பிக்கை கொண்டோரே! வெள்ளிக் கிழமையில் தொழுகைக்காக அழைக்கப்பட்டால் அல்லாஹ்வை நினைப்பதற்கு விரையுங்கள்! வியாபாரத்தை விட்டு விடுங்கள்!நீங்கள் அறிந்தால் இதுவே உங்களுக்கு நல்லது."
        அல்குர்ஆன்:62:09
➖➖➖➖➖➖➖➖➖➖
" இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:  ”ஜும்ஆ நாளில் கடமையான குளிப்புப் போல் குளித்துவிட்டுப் (பின்னர்) பள்ளிக்கு வந்தால் ஓர் ஒட்டகத்தை இறைவழியில் குர்பானி கொடுத்தவர் போலாவார். இரண்டாம் நேரத்தில் வந்தால் ஒரு மாட்டைக் குர்பானி கொடுத்தவர் போலாவார். மூன்றாம் நேரத்தில் வந்தால் கொம்புடைய ஆட்டைக் குர்பானி கொடுத்தவர் போலாவார். நான்காம் நேரத்தில் வந்தால் ஒரு கோழியைக் குர்பானி கொடுத்தவர் போலாவார். ஐந்தாம் நேரத்தில் வந்தால் முட்டையைக் குர்பானி கொடுத்தவர் போலாவார். இமாம் பள்ளிக்குள் வந்துவிட்டால் வானவர்கள் ஆஜராகி போதனையைக் கேட்கிறார்கள்.”  என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். "
  ஷஹீஹ் புகாரி:881
➖➖➖➖➖➖➖➖➖➖
"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வெள்ளிக்கிழமை அன்று இமாம் உரையாற்றிக் கொண்டிருக்கும்போது, உன் அருகில் இருப்பவரிடம் நீ ”மௌனமாக இரு” என்று கூறினாலும் நீ வீண்பேச்சு பேசியவனாவாய். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். "
ஸஹீஹ் முஸ்லிம்:1541
➖➖➖➖➖➖➖➖➖

*விரைந்து செல்லுவோம் நன்மைகளை அள்ளிக்கொள்ள...

இன் ஷா அல்லாஹ்!!!

உங்களது நாட்களில் மிகச் சிறந்த நாள் வெள்ளிக் கிழமையாகும்
    
       ஜூம்ஆ நாள்                   
         (வெள்ளிக் கிழமை)
      
          சிறப்புக்கள் 

அன்பான இஸ்லாமிய
உறவுகளே!

சூரியன் உதிக்கும் நாட்களில்

வெள்ளிக்கிழமையே மிகவும் சிறந்த
நாளாகும்.

அன்று தான் ஆதம் (அலை) அவர்கள் படைக்கப்பட்டார்கள்;அன்று தான் சொர்க்கத்திற்குள் அனுப்பப்பட்டார்கள்;
அன்று தான் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்கள்;
அன்று தான் யுக
முடிவு நிகழும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
நூல் : #முஸ்லிம் 1548

ஜும்ஆ நாள் (வெள்ளிக் கிழமை) வந்து விட்டால் வானவர்கள்
(ஜும்ஆ தொழுகை நடக்கும்) பள்ளிவாசலின் நுழைவாயில்களில்
ஒவ்வொரு வாசலிலும்
(இருந்த வண்ணம்)

முதன் முதலாக உள்ளே நுழைபவர்களையும் அடுத்தடுத்து உள்ளே நுழைபவர்களையும் (அவர்களின் பெயர்களை)
எழுதிப் பதிவு செய்து கொண்டிருப்பார்கள்

இமாம் உரைமேடையில் (உரையாற்றுவதற்காக) அமர்ந்து விட்டால்
(பதிவு செய்யும்) ஏடுகளைச் சுருட்டி வைத்து விட்டு (அவரது உபதேச) உரையைச்
செவிமடுத்த வண்ணம் (உள்ளே) வருவார்கள்’
என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்

அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு,
நூல்: #புகாரி3211

1   பெருந்துடக்கிற்காக (கடமை) குளிப்பது போன்று

ஜும்ஆவுடைய நாளில் குளித்து விட்டு பள்ளிக்கு (நேரத்தோடு) செல்பவர் ஓர்
ஒட்டகத்தை குர்பானி கொடுத்தவர் போன்றவர் ஆவார்.☑

2 இரண்டாம் நேரத்தில் செல்பவர் ஒரு மாட்டைக்
குர்பானி கொடுத்தவர் போன்றவர் ஆவார்.☑

3மூன்றாம் நேரத்தில் செல்பவர் கொம்புள்ள ஆட்டைக் குர்பானி கொடுத்தவர் போன்றவர் ஆவார்.☑

4 நான்காம் நேரத்தில் செல்பவர் ஒரு கோழியைத் தர்மம் செய்தவர் போன்றவர் ஆவார்.☑

5 ஐந்தாம் நேரத்தில் செல்பவர் முட்டையைத் தர்மம் செய்தவர் போன்றவர் ஆவார். ☑

இமாம் (பள்ளிக்குள்) வந்து விட்டால்
வானவர்களும் (உள்ளே) வந்து (இமாமின்)
உபதேசத்தை செவியேற்கிறார்கள்”
என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

ஜும்ஆ நாளில் குளிப்பது பருவமடைந்த ஒவ்வொருவரின் மீதும் கடமையாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

    வெள்ளிக்கிழமை
யன்று ஒரு நேரம் உண்டு.
சரியாக அந்த நேரத்தில் ஒரு முஸ்லிம் தொழுகையில் நின்று அல்லாஹ்விடம் எதையேனும் கேட்டால் அதை அவருக்கு அல்லாஹ் கொடுக்காமல் இருப்பதில்லை என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அந்த நேரம் மிகவும் குறைவான. என்பதைத் தம் கையால் சைகை செய்து காட்டினார்கள்

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி),
நூல்: #புகாரி 6400.

ஒரு ஜும்ஆ விலிருந்து மறு ஜும்ஆ வரை நிகழும் பாவங்களுக்கு ஜும்ஆ
தொழுகை பரிகாரமாகும். ஐவேளைத் தொழுகைகளும் அதற்கு இடைப்பட்ட நேரங்களில் நிகழும் பாவங்களுக்குப் பரிகாரமாகும்.

ஆனால் பெரும் பாவங்களாக
அவை இருக்கலாகாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்

அலட்சியமாக மூன்று ஜும்ஆக்களை யார்
விட்டு விட்டாரோ அவரது உள்ளத்தில் அல்லாஹ் முத்திரையிட்டு விடுகின்றான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபுல் ஜஃது (ரலி),

இந்த ஜும்ஆவுடைய முழு நன்மையும் அல்லாஹ்! நாம் அனைவருக்கும் கிடைக்க செய்வானாக!
எல்லாப் புகழும்
         அல்லாஹூவுக்கே

рокிро░рокро▓்ропрооாрой рокродிро╡ுроХро│்