роироо்рооுроЯрой் роЗрогைрои்родு роЗро░ுрок்рокро╡ро░்роХро│்

ро╡ெро│்ро│ி, роЖроХро╕்роЯ் 02, 2019

родிропாроХроо் роОрод்родройை ро╡роХை,

தொகுத்து வழங்குபவர் : மௌலானா ஹாஃபிழ் காரீ அல்ஹாஜ் J.A நைனார் முஹம்மது பாகவி விராதனூரி ஹழ்ரத் பெருந்தகை அவர்கள்*

*தலைப்பு : தியாகப் பூக்கள் மணக்கட்டும்!*

❈-❈-❈❈-❈-❈-❈-❈-❈-❈-❈-❈-❈-

*தியாகம் என்பது தன்னிடம் இருப்பதை பிறரும் பெற்று வாழ கொடுத்து உதவுதல், தன்னைவிட பிறரைத் தேர்ந்தெடுத்தல் ஆகும். அல்லாஹ்,  ரஸுல், சஹாபாக்கள், இமாம்கள் கட்டமைத்த சன்மார்க்கத்தின் வளர்ச்சிக்காக உடல், பொருள், ஆவி, அனைத்தையும் அர்ப்பணித்து கொள்வதே இஸ்லாமியர்களுக்கு பெரும் தியாகமாகும். தியாக உணர்வை நினைவுப்படுத்தி தியாகச்செம்மல்களாக மாற்றிடவே குர்பானி கொடுக்கும் தியாகப்பெருநாள் நம்மை வருடாவருடம் தொட்டுச் செல்கிறது.*

*தியாகம் பற்றி ஆறு கோணங்களில் உலமாக்கள் அலசுகிறார்கள்.*

*(1) التضحیة بالنفس*

*(1) "உயிர் தியாகம் செய்தல்"!*

*தியாகங்களில் மிக மேலானது இன்னுயிரை இழப்பது தான். அல்லாஹ் சூரா தௌபாவில் 110 ஆம் வசனத்தில் சொல்கின்றான்.*

*ان الله اشتری من المومنین انفسهم واموالهم بان لهم الجنة*
*நிச்சயமாக இறை நம்பிக்கையாளர்களுக்கு சொர்க்கம் தருவதற்குப் பகரமாக அவர்களின் உயிர்களையும் பொருள்களையும் அல்லாஹ் விலைக்கு வாங்கிக்கொண்டான்.*

*ஹழ்ரத் அம்ருப்னு ஜுமூஹ் (ரழியல்லாஹு அன்ஹு) வயது முதிர்ந்த, கால்ஊனமான சஹாபியாவார். இவர்கள் உஹத் யுத்தத்திற்கு புறப்பட்ட போது, அவர் பெற்றெடுத்த மகன்கள் போகவேண்டாம் என தடுக்கிறார்கள். அப்போது பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படக்கூடிய ஒற்றை வரியை ஓங்கி உரக்கச் சொன்னார்கள்.*

*والله لارجو ان اطا بعرجتی فی الجنة*

*அல்லாஹ் மீது ஆணையாக சொர்க்கத்தில் நான் நொண்டிக்கொண்டு நடப்பதை ஆசைப்படுகிறேன் என்று கூறி மகன்களை அமைதிப்படுத்தி விட்டு யுத்தகளம் சந்தித்து ஷஹீதாகி இன்னுயிரை இஸ்லாத்திற்காக தியாகம் செய்தார்கள்.*

*இதைப்போல ஏராளமான சஹாபிகள் தன்னலமில்லாமல் தன்னுயிர்களைத் தியாகம் செய்த வரலாறுகள் உண்டு.*

*(2) التضحیة بالمال*

*(2) "பொருளைத் தியாகம் செய்தல்"!*

*ஹழ்ரத் அபூபக்கர் (ரழியல்லாஹு  அன்ஹு) அவர்கள் ஹிஜ்ரத் சமயத்தில் நபியிடம் தன்னிடமுள்ள அனைத்து பொருள்களையும் கொடுத்து விட்டார்கள். அன்னாரின் தந்தை கண்தெரியாத அபூ குஹாஃபா அவர்கள் தனது பேத்தி அஸ்மா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்களிடம் என் மகன் என்ன கொடுத்துட்டு போனார்? எனக்கேட்டபோது தட்டில் கற்களை நிரப்பி வைத்து காட்ட, தடவிப்பார்த்து விட்டு  இவ்வளவா விட்டுச் சென்றிருக்கிறார் என வியப்பிலானார்.*

*ஒரு சமயம் சஹாபாக்களின் கூட்டத்தில் ஒற்றை வார்த்தையில் அபூபக்கர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் உச்சபட்ச அதீதபொருள் தியாகத்தை நபி (ஸல்லல்லாஹு  அலைஹி வஸல்லம்) அவர்கள் புகழும்போது இவ்வாறு சொன்னார்கள்.*

*ماانا  یکافٶ احد الاابابکر*

*ஒருவருக்கும் நான் பிரதிஉபகாரம் செய்ய வேண்டியதில்லை. அபூபக்கர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களைத் தவிர! அன்னார் தீனுக்காக செய்த தியாகங்களுக்கு அல்லாஹுவே கூலி கொடுப்பான் என்றார்கள். குர்பானியும் பொருள் தியாகத்தால்தான் நிறைவேற்றப்படுகிறது.*

*(3) التضحیة باالاوقات*

*(3) "நேரங்களைத் தியாகம் செய்தல்"!*

*ஹழ்ரத் அபூஹுரைரா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் தமது நேரங்களை முழுமையாக ஹதீஸ்களைப் படிப்பதிலும் அதை  பதிவு செய்வதிலும் பயன்படுத்தி தியாகம் செய்ததால் ஐந்தாயிரத்திற்கும் அதிகமான ஹதீஸ்களை அறிவித்து யாராலும் தொடமுடியாத சாதனை படைக்க முடிந்தது. இன்றைக்கு சமூகத்தில் பலர் தொழுகைக்காகக்கூட சிறிது நேரத்தை தியாகம் செய்வதற்கு மனமின்றி  தொழுகைக்கு வருவதில்லை.*

*(4) التضحیة باالمنصب*

*"அந்தஸ்த்தை தியாகம் செய்தல்"!*

*ஹழ்ரத் முஸ்அப் இப்னு உமைர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் மக்காவில் மிகப்பெரிய பணக்கார குடும்பத்தில் பிறந்தவர்கள். இஸ்லாத்தை ஏற்றப்பிறகு தமது அந்தஸ்த்தை தியாகம் செய்தார்கள். இஸ்லாத்தைக் கற்றுக்கொடுப்பதற்காக மக்கா வந்து இஸ்லாத்தை தழுவிய 12 மதீனாவாசிகளுடன் இவர்களை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அனுப்பிவைத்தார்கள்.அங்கு போய் கதவை தட்டித் தட்டி இஸ்லாத்தை எடுத்துரைத்தார்கள். மூன்றே மாதங்களில் 73 பேர் இஸ்லாத்தை தழுவினார்கள். இவர்களை மக்காவிற்கு அழைத்து வந்து நபியிடம் பைஅத் செய்ய வைத்தார்கள். நாமும் அந்தஸ்த்தை பார்க்காமல் இறங்கிப்போய் இஸ்லாத்தை பரப்ப வேண்டும்.*

*(5) التضحیة بفراق الاهل والاحباب*

*(5) குடும்பத்தையும் & நண்பர்களையும் பிரியும் தியாகம்!*

*இன்றைக்கு எத்தனையோ கண்ணியமிக்க உலமா பெருமக்கள் மார்க்கப்பணி நிமித்தமாக குடும்பதினரை விட்டுவிட்டு வெளியூர்களிலும் ஏன் வெளிநாடுகளிலும்கூடபல தியாகங்களைச் செய்து கொண்டிருக்கிறார்கள். எத்தனையோ இளைஞர்கள் அன்னைநாட்டை துறந்து எண்ணெய் நாட்டிற்கு சென்று குடும்பத்தைக் காப்பதற்காக சொல்லமுடியாத தியாக காயங்களை சுமந்து வாழுகின்றனர்.*

*(6) التضحیة باالاولاد*

*குழந்தைகளை தியாகம் செய்தல்!*

*ஹழ்ரத் இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அல்லாஹ்வின் உத்தரவை உலகறியச் செய்வதற்காக மினா மலை அடிவாரத்தில் தன் அருமை மகன் இஸ்மாயீல் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களை அறுத்து தியாகம் செய்வதற்கு தயாராகிவிட்டார்கள். அதனைஅல்லாஹ் ஏற்று அதற்குப் பகரமாக ஆடு மாடு ஒட்டகம் ஆகிய முப்பிராணிகளை குர்பானி செய்வதை கியாமத் நாள்வரை இஸ்லாமியர்களுக்கு கடமையாக்கிவிட்டான். நாமும் நமது குழந்தைகள் தீனின் வழிகளில் வாழ்வதற்கு பற்பல தியாகங்களை மேற்கொள்ளவேண்டும். அதிகாலையில் தூக்கத்தை தியாகம் செய்து பிள்ளைகளை தட்டி எழுப்பி மக்தப் மதரஸாவிற்கு அனுப்பி உண்மையான தீன்தாரிகளாக ஒளிர்ந்திடச் செய்யவேண்டும். தியாகப்பூக்களை நம்வாழ்நாளில் மணக்கச்செய்வோமா?

рокிро░рокро▓்ропрооாрой рокродிро╡ுроХро│்