роироо்рооுроЯрой் роЗрогைрои்родு роЗро░ுрок்рокро╡ро░்роХро│்

рокுродрой், роЕроХ்роЯோрокро░் 26, 2016

роПрой் роЗро╕்ро▓ாрооாройேрой்

அண்மையில் இஸ்லாத்தை தழுவிய அமெரிக்காவின் பிரபல் கால்பந்தாட்ட வீரர் இமானுவல

இஸ்லாத்தை தழுவியதற்கான 13 காரணங்களை கூறுகிறார்

1.இயேசுநாதர் (ஈஸா அலை) ஏகஇறை கொள்கையையே நிலைநிறுத்தினார். (Deut 6:4, Mark 12:29)
இதனையே முஸ்லிம்களும் பின்பற்றுகின்றனர்.

2. பன்றியின் இறைச்சியை இயேசுநாதர் (ஈஸா அலை) சாப்பிடவில்லை.(Leviticus 11:7)
இதேபோன்று முஸ்லிம்களுக்கும் பன்றியின் இறைச்சி தடுக்கப்பட்டுள்ளது. (திருகுர்ஆன்6:145)

3. இயேசுநாதர் (ஈஸாநபி) "அஸ்ஸலாமு அலைக்கும்"என்றுமுகமன் கூறினார். (John 20:21)
இதையே முஸ்லிம்களும் ஒருவரை ஒருவர் சந்திக்கும்பொழுது பின்பற்றுகின்றனர்.

4. ஒரு விடயத்தை செய்யநினைக்கும்பொழுது, "இறைவன் நாடினால்" என்று இயேசுநாதர் கூறினார்.
இதையே முஸ்லிம்களும் பின்பற்றுகின்றனர்.(திருகுர்ஆன்18:23- 24)

5. இறைவனை வணங்குவதற்கு முன்னர் இயேசுநாதர் (ஈஸாநபி) முகத்தையும், கைகளையும், கால்களையும் கழுவினார்.
முஸ்லிம்களும் தொழுகைக்கு முன்னர் இவ்வாறே வுழூ செய்கின்றனர்.

6. பைபிளில் கூறப்பட்ட முன்னைய நபிமார்களை போன்று இயேசுநாதர் (ஈஸாநபி) நெற்றியை தரையில் வைத்து இறைவனை வணங்கினார்.(Matthew 26:39)
முஸ்லிம்களும் தங்களது இறைவணக்கத்தை இவ்வாறே செய்கிறார்கள்.(திருகுர்ஆன்3: 43)

7. இயேசுநாதர் (ஈஸா நபி) தாடி வைத்திருந்ததுடன், நீண்ட அங்கியும் அணிந்திருந்தார்.
முஸ்லிம்களை பொறுத்தவரை இது முஹம்மது நபி (ஸல்) அவர்களின் சுன்னத்தாகும்.

8. இயேசுநாதர் (ஈஸாநபி) நபிமார்கள் அனைவர் மீதும் நம்பிக்கை வைத்திருந்ததுடன், அவர்களது சட்டங்களையும் பின்பற்றினார்கள். (Matthew 5:17)
இதுபோன்றே முஸ்லிம்களும் முஹம்மது நபி (ஸல்) அவர்களுடன் சேர்த்து, அனைத்து நபிமார்களையும் கண்ணியப்படுத்துகிறார்கள். (அல்குர்ஆன் 3:84, 2:285)

9. இயேசுநாதருடைய (ஈஸா நபி) கண்ணியத்திற்குரிய பரிசுத்தமான தாயாரான மரியம் (அலை) தங்களது தலைமுடியை மூடியும், உடம்பின் பகுதிகள் வெளித்தெரியாமலும் கண்ணியமாக ஆடை அணிந்திருந்தார்கள். (1 Timothy 2:9, Genesis 24: 64-65, Corinthians 11:6)
இவ்வாறே முஸ்லிம்பெண்களும் ஹிஜாப் உடையணிந்து, அன்னிய ஆடவர்களின் பார்வையிலிருந்து தங்களை தற்காத்துக்கொள்கின்றனர். (திருகுர்ஆன் 33:59)

10. இயேசுநாதரும் (ஈஸாநபி) 40 நாட்கள் நோன்பிருந்தார்கள். (Exodus 34:28, Daniel 10:2-6 , 1 Kings 19.8, Matthew 4:1)
முஸ்லிம்களுக்கும் ரம்ளான் மாதத்தில் நோன்பிருத்தல் கட்டாயமாகும். (திருகுர்ஆன் 2:183)

11.இயேசுநாதர் (ஈஸா நபி) வீட்டினுள் பிரவேசிக்கும்பொழுது, வீட்டில் இருப்பவர்களைபார்த்து, “உங்கள்மீது சாந்தி உண்டாகட்டுமென்றும்“ கூறுவார்கள். (Luke 10:5)
இதேபோன்றே முஸ்லிம்களும் வீட்டினுள் நுழையும்பொழுது "அஸ்ஸலாமுஅலைக்கும்" உங்கள்மீது சாந்தி நிலவட்டுமாக என்று கூறுமாறு திருகுர்ஆன் பணிக்கிறது. (திருகுர்ஆன் 24:61)

12. இயேசுநாதர் (ஈஸா நபி) விருத்தசேதனம் செய்திருந்தார்.செய்யும்பொழுது அவர்கள் 8 நாள் குழந்தை .(Luke 2:21) தோராவில், நபி ஆபிரஹாம் (அலை) அவர்களுக்கு எப்பொழுதுமே கட்டுப்படவேண்டிய உடன்படிக்கையென்று (விருத்தசேதனம் செய்தல்) இறைவன்கட்டளையிட்டிருந்தான். (Genesis 17,13)
திருகுர்ஆனில் 16:123 அத்தியாயத்தில் முஸ்லிம்கள்இப்ராஹிம் (அலை) அவர்களின் மார்க்கத்தை (வழிமுறையை) பின்பற்றவேண்டும் இப்ராஹிம் நபி அவர்களுக்கு விருத்தசேதனம் செய்யப்பட்டது, (சஹீஹ் புஹாரி, முஸ்லிம், )13. இயேசுநாதர் (ஈஸாநபி) அராமிக் மொழி பேசினார்கள். இறைவனை "எலாஹ்" (Elah) என்று அழைத்தார்கள். அது"அல்லாஹ்" என்று அரபியில் உச்சரிப்பதற்கு சமனாகும். ஏனெனில் "எலாஹ்"என்ற சொல், அரபியில் உள்ள"அல்லாஹ்" என்ற வார்த்தையிலிருந்து உதித்ததாகும்.எனவே இயேசுநாதரை (ஈஸா நபி) உண்மையான முறையில் பின்பற்றுபவர்கள், கிறிஸ்தவர்களா.............???
முஸ்லிம்களா................???

рокிро░рокро▓்ропрооாрой рокродிро╡ுроХро│்