நம்முடன் இணைந்து இருப்பவர்கள்

செவ்வாய், ஜூலை 20, 2021

குர்பானியின் சட்டங்கள் ,உழ்ஹிய்யா,

  குர்பானியின் சட்டங்கள்
        உழ்ஹிய்யா

      ஷாஃபிஈ - ஹனஃபி
===========================

       உழ்ஹிய்யா *சுன்னத்தா* ? *வாஜிபா* ?

       ஷாஃபிஈ மத்ஹப் : *சுன்னத் முஅக்கதா* 
    ( வலியுறுத்தப்பட்ட சுன்னத் ) 

       ஹனஃபி மத்ஹப் : *வாஜிப்*
            (கடமை)

       ஷாஃபிஈ மத்ஹபில் *யாருக்கு சுன்னத்?*
       பெருநாள் தினத்தன்று ஒருவருக்கு தனக்கும் தன் பொறுப்பில் உள்ளவர்களுக்கும் உணவு மற்றும் உடைக்குப் போக வசதியிருந்தால் *உழ்ஹிய்யா கொடுப்பது சுன்னத்து*.
       ( பொறுப்பில் உள்ளவர்கள் : மனைவி ,பிள்ளைகள் மற்றும்  பெற்றோர். )

       ஹனஃபி மத்ஹபில் *யாருக்கு வாஜிப்*? 
       பெருநாள் தினத்தன்று ஜகாத்துடைய அளவு செல்வம் யாரிடம் உள்ளதோ அவருக்கு *உழ்ஹிய்யா கொடுப்பது வாஜிப்*.

       (ஜகாத்துடைய அளவு :
*85 கிராம் தங்கம்* அல்லது *612 கிராம் வெள்ளி* அல்லது *612 கிராம் வெள்ளியின் மதிப்புள்ள பணம்* .)

       ( ஜகாத் கடமையாவதற்கு ஒரு வருடம் ஆகி இருக்க வேண்டும் என்ற நிபந்தனை இங்கு இல்லை. )


        *தகுதி உள்ள பிராணிகள்*
=================
       உழ்ஹிய்யா கொடுக்க தகுதியுள்ள பிராணிகள்: *மூன்று*. 

        1. *ஒட்டகம்*
        2. *மாடு* 
        3. *ஆடு* 

     இம்மூன்றிலும் *ஆணினம்* *பெண்ணினம்* இரண்டினத்தையும் உழ்ஹிய்யா கொடுக்கலாம் .

       இம்மூன்றிலும் *எல்லா வகையையும்* உழ்ஹிய்யா கொடுக்கலாம் .
       *எருமை மாட்டையும்* உழ்ஹிய்யா கொடுக்கலாம் .



           *வயது வரம்பு*  
           =============     

      *ஒட்டகம்* : *ஐந்து வயது* முழுமை பெற்றிருக்க வேண்டும்.

      *மாடு* : *இரண்டு வயது* முழுமை பெற்றிருக்க வேண்டும்.

       ஆனால் *ஆட்டின் வயதில்* மட்டும் கொஞ்சம் வித்தியாசம் உண்டு.

           *ஹனஃபி மத்ஹப்*:
      *வெள்ளாடாக* இருந்தாலும்  *செம்மறி ஆடாக* இருந்தாலும் *ஒரு வருடம்* முழுமை பெற்றிருக்க வேண்டும் .

      அதே நேரத்தில் *செம்மறி ஆடு ஆறுமாதம்* முழுமை அடைந்து *ஒரு வருடத்திற்குண்டான* வளர்ச்சியை பெற்றிருந்தால் அதை உழ்ஹிய்யா கொடுக்கலாம். 


              *ஷாஃபிஈ மத்ஹப்*: 
        *செம்மறி ஆடாக* இருந்தால் *ஒரு வருடமும்*
 *வெள்ளாடாக* இருந்தால் *இரண்டு வருடங்களும்* முழுமை பெற்றிருக்க வேண்டும். 


                *கூட்டு குர்பானி*
                ===============

       *ஆட்டை  ஒருவருக்காக* உழ்ஹிய்யா கொடுக்க வேண்டும்.

        ஆனால் *ஒட்டகத்திலும் மாட்டிலும் ஏழு பேர் சேர்ந்து* உழ்ஹிய்யா கொடுக்கலாம் .

       ஏழு பேர் சேர்ந்துதான் கொடுக்க வேண்டும் என்று கட்டாயமில்லை .
      ஏழுக்குக் குறைவானவர்களும்  ஒட்டகத்தையும் மாட்டையும் உழ்ஹிய்யா கொடுக்கலாம். 
     ஒரு தனிநபர் ஒட்டகம் மற்றும் மாட்டை உழ்ஹிய்யா கொடுக்கலாம்.

       அந்த ஏழு பங்கில் குழந்தைகளுக்காக கொடுக்கக்கூடிய *அகீகாவையும்* சேர்த்துக்கொள்ளலாம்.


             *பங்கீடு செய்தல்*
             ================

       உழ்ஹிய்யா பிராணியின் மாமிசத்தை *மூன்று பங்குகளாக*  பிரித்து வழங்குவது சிறந்தது. 

      ஒரு பங்கு : 
     *தன் குடும்பத்தினற்கு*.  
    
      இன்னொரு பங்கு : 
      *உறவினர்களுக்கு*

       இன்னொரு பங்கு :
       *ஏழை எளிய மக்களுக்கு*

=============================   
        உழ்ஹிய்யா கறியை *முஸ்லிம் அல்லாதவர்களுக்கு கொடுக்கக் கூடாது*.

        *ஏனென்றால் இது முஸ்லிம்களுடைய ஹக்காகும்*

         அக்கம்பக்கத்தில் மாற்றுமத சகோதரர்கள் இருந்து அவர்களுக்கும் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் கடையில் தேவையான கறியை விலைக்கு வாங்கி அவர்களுக்கு வழங்கலாம்.

============================
 

      *உழ்ஹிய்யாவின் நேரம்*:   
      ======================

        *ஹனஃபி மத்ஹப்* :
        ஆரம்பம் :
         *பெருநாள் தொழுகை நடந்ததற்குப் பிறகு*.

        முடிவு :
       *பிறை 12 - மஃக்ரிப் நேரம் வரும்  வரை* 
  ( அதாவது சூரியன் மறையும் வரை. ) 

         *ஷாஃபிஈ மத்ஹப்* : 
         ஆரம்பம்:
         *சூரியன் உதித்து 20 நிமிடங்கள் கழித்து  - இரண்டு ரக்அத் தொழுகை மற்றும் இரண்டு ஃகுத்பாக்கள்  - இதற்குண்டான நேரம் முடிந்ததற்குப்பிறகு*.
     ( தொழுகை நடந்திருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஆனால் தொழுகைக்குப் பிறகு உழ்ஹிய்யா கொடுப்பதே சிறந்தது.)

        முடிவு: 
         *பிறை 13 - மஃக்ரிப் நேரம் வரும் வரை*.
         ( அதாவது சூரியன் மறையும் வரை )

        *இரவிலும்* கொடுக்கலாம்.
*பகலிலும்* கொடுக்கலாம் .
        ஆனால் இரவில் கொடுப்பது ( மக்ரூஹ் ) வெறுக்கத்தக்கது.


         *குர்பானி தோலின் சட்டம்*   
         ======================= 
      குர்பானி தோலை *தனக்காக*  உபயோகித்துக்கொள்ளலாம்.

      *பிறருக்கும்* கொடுக்கலாம்.   
 (ஏழையாக இருந்தாலும் சரி. செல்வந்தராக இருந்தாலும் சரி.)

      ஆனால் *விற்கக்கூடாது*.  
  
       *அறுப்புக் கூலியாகவும் வழங்கக்கூடாது*.

       *பள்ளிவாசல்* மற்றும் *மத்ரஸாவின்* *கட்டிடப்பணிக்கோ* அல்லது *நிர்வாக செலவிற்கோ* கொடுக்கக்கூடாது. 

       பள்ளிவாசலில் *பைத்துல்மால்* இருந்தால் அதற்கு *கொடுக்கலாம்*.

        பள்ளிவாசலின் *இமாம்* மற்றும் *முஅத்தின் சாகிபுக்கு* கொடுக்கலாம். 
மத்ரஸாவின் *ஆசிரியர்களுக்கும்* *கொடுக்கலாம்*. 
        ஆனால் இவர்களுக்கு *சம்பளம்* அல்லது *போனஸ்* கொடுப்பதற்கு *குர்பானி தோலை பயன்படுத்தக்கூடாது*.

       மத்ரஸாவில் கல்வி பயிலும் *மாணவர்களுக்கு கொடுக்கலாம்*.


       *தகுதியற்ற பிராணிகள்*
       =====================

      *கால்கள் முடமாகி ஊனமுற்றவை*

      *கடுமையான நோய்வாய்ப்பட்டவை* 

       *எலும்பும் தோலுமாய்  மெலிந்தவை*

        *கண் குருடாகி போனவை*

       *காது அறுந்து துண்டிக்கப்பட்டவை*

மேற்கூறப்பட்ட பிராணிகளை உழ்ஹிய்யா கொடுப்பது அறவே கூடாது.


   *குறிப்பு*:  
       *கொம்பு முளைக்காத* அல்லது *கொம்பு உடைந்த* பிராணியை உழ்ஹிய்யா கொடுப்பது *கூடும்*.


        *அறுக்கும் ஒழுங்குகள்*
         ===================

          *அறுப்பவர் முஸ்லிமாக இருக்க வேண்டும்* .
         ( *ஆணும்* அறுக்கலாம் *பெண்ணும்* அறுக்கலாம் )

       *கத்தியை கூர்மையாக்கிக் கொள்ள வேண்டும்* .

      *உழ்ஹிய்யா கொடுப்பவரே அறுப்பது சிறந்தது*.

        அறுக்கத் தெரியவில்லையென்றால் பிறர் அறுக்கலாம்.
        அப்போது இவர் அந்த பிராணியை *பார்த்துக்கொண்டிருப்பது* சுன்னத்.

         *அறுப்பதற்கு முன்பாக உழூ செய்துகொள்வது*.

          *கிப்லாவை முன்னோக்குவது*.

        *வஜ்ஜஹ்து வஜ்ஹிய.....*
 *என்பதை ஓதிக் கொள்வது*. 
   (தெரியவில்லை என்றால் பரவாயில்லை.)

         *உழ்ஹிய்யாவின் நிய்யத் செய்துகொள்ள வேண்டும்*.

        *பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர்* என்று கூறி அறுக்க வேண்டும்.


        உழ்ஹிய்யா கொடுக்க நாடியவர் *துல்ஹஜ் மாதம் பிறை ஒன்றிலிருந்து உழ்ஹிய்யா கொடுக்கும் வரை* *நகம்* மற்றும் *முடியை* வெட்டாமல் இருப்பது *சுன்னத்தாகும்*.

        வீட்டில் உள்ள மற்றவர்களுக்கு இந்த சட்டம் இல்லை .

         உழ்ஹிய்யா கொடுப்பவர் 
*நகத்தையோ* அல்லது *முடியையோ* அகற்றி விட்டால் அதனால் உழ்ஹிய்யாவிற்கு எந்த *பாதிப்பும் இல்லை* .
        ஆனால் இந்த *சுன்னத்தின்  நன்மையை* அவர் இழந்து விடுவார் .


                 *கவனிக்க* :
                 ===========
 பல ஹதீஸ்களின் அடிப்படையில் *இறந்து போனவர்களுக்கு உழ்ஹிய்யா* கொடுப்பது நன்மைகளைப் பெற்றுத்தரும் *நற்செயலாகும்*. 
        
                  *நிறைவு*

           *எல்லாம் வல்ல இறைவன்* நமது உழ்ஹிய்யா வணக்கத்தை ஏற்று  அதற்குண்டான *வெகுமதிகளையும் சன்மானங்களையும்* ஈருலகிலும் நமக்கு வாரி வழங்கிடுவானாக!    
                      *ஆமீன்!*     
       வல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்.*ஈதுல் அழ்ஹா (பக்ரீத்) பெருநாள் தினத்தில் செய்ய வேண்டிய நல்அமல்கள்*
**************************
*1,* இரவின் கடைசி நேரத்தில்  தஹஜ்ஜுத் தொழுகை தொழுவது
*2,* ஃபஜ்ர் தொழுகையை இமாம் ஜமாஅத்துடன் மஸ்ஜிதில் தொழுவது.
*3*, கடமையான ஐந்து நேரத்தொழுகைக்கு பின்பு தக்பீர் சொல்வது.
*4,* நன்கு குளித்து தூய்மையாகிக் கொள்வது.
*5,* மிஸ்வாக் செய்வதுடன் தொழுகைக்காக உளூ செய்து கொள்வது.
*6,* புதிய ஆடை அணிந்து கொள்வது. அல்லது இருக்கும் ஆடைகளில் சிறந்த ஆடையை அணிந்து கொள்வது.
*7,* நறுமணம் பூசிக் கொள்வது.
*8,* தக்பீர் சொல்லிய வண்ணம் ஈது தொழுகை நடைபெறும் மைதானத்திற்கோ, அல்லது மஸ்ஜிதிற்கோ செல்வது.
*9,* வாஜிபான ஈதுடைய தொழுகையை இமாம் ஜமாஅத்துடன் தொழுவது.
*10,* தொழுகை முடிந்த பின் ஓதப்படும் குத்பாவை அமைதியாக செவிமடுத்து கேட்பது.
*11,*  விரைந்து சென்று விடாமல் கூட்டு துஆவில் பங்கெடுப்பது.
*12,* தொழுகை முடிந்த பின் வீட்டிற்கு திரும்பும்போது வேறு பாதை வழியாக திரும்புவது.
*13,* ஈதுடைய தொழுகை முடிந்த பின் குர்பானி கொடுப்பது.
*14,* குர்பானி பிராணியை அறுக்கும் பொழுது மறவாமல் பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர் என்று கூறுவது.
*15,* ஈதுடைய தொழுகை தொழுத பின் காலை உணவு சாப்பிடுவது.
*16,* குர்பானி இறைச்சியை நாமும் உண்பதுடன் உற்றார் உறவினர்களுக்கும், ஏழைகளுக்கும் உண்ணக்கொடுப்பது
*17,* முஸ்லிமான சகோதரர்களுக்கு மத்தியில் ஸலாம் சொல்லி முஸாஃபஹா செய்து அன்பை வெளிப்படுத்துவது.
*18,* ஏழைஎளிய மக்கள், மற்றும் அநாதைகளுக்கு தானதர்மம் செய்வது.
*19,* அண்டை வீட்டார்களுக்கு அன்பளிப்புகள் கொடுப்பது.
*20,* சகோதர சமுதாய மக்களுக்கும் அன்பளிப்புகள் அல்லது உணவு விருந்து கொடுப்பது.
*21,* அல்லாஹ்வை மகத்துவப்படுத்தும் விதமாக அதிகமாக தக்பீர் சொல்வது.
*22,* இஸ்லாமிய மார்க்கத்தில் தடை செய்யப்பட்ட ஹராமான காரியங்களை செய்யாமல் தவிர்ந்து கொள்வது.
*23,* குடும்ப உறுப்பினர்களிடம் சண்டை சச்சரவு செய்யாமல் சந்தோஷமாக பெருநாளை கொண்டாடுவது.
*24,* சக மனிதர்களுக்கு எந்த துன்பமும் கொடுக்காமல் அவர்களை மகிழ்ச்சி படுத்தி நாமும் மகிழ்ச்சியாக இருப்பது.

*தக்பீர் வாசகம்*
*அல்லாஹு அக்பர்* *அல்லாஹு அக்பர்*
*லா இலாஹ இல்லல்லாஹு* *வல்லாஹு அக்பர்*
*அல்லாஹு அக்பர்*
*வலில்லாஹில் ஹம்து

பிரபல்யமான பதிவுகள்