நம்முடன் இணைந்து இருப்பவர்கள்

ஞாயிறு, நவம்பர் 07, 2021

சிசுவிற்கு ஜனாஸா தொழுகை உண்டா?

 கேள்வி :ஸலாத்தில் கரு கலைப்பு கூடுமா?*


சிசுவிற்கு ஜனாஸா  தொழுகை உண்டா?*



*الجواب بعون الله الملك الوهاب 👇*



فالجنين بعد نفخ الروح فيه 

لا يجوزإجهاضه بلا خلاف، 


أما قبل ذلك ففيه خلاف، 


فجمهور أهل العلم على تحريمه 


ومنهم من قال بالتحريم , وهو المعتمد عند المالكية. 


ومنهم من قال بالكراهة، 


ومنهم من قال بالجواز لعذر، 


من قال بالإباحة لعذر فقط , وهو حقيقة مذهب الحنفية


ومنهم من قال بالجواز مطلقا ، 


ولعل القول بالجواز في الأربعين الأولى إذا كان هناك عذر ومصلحة هو الراجح،


واختلف في الكفارة والأحوط فعلها، 


وهي عتق رقبة، 


أو صيام شهرين متتابعين، 


ودية الجنين إن سقط ميتا 


مقدارها عشر دية المرأة، 


وقدّرها بعضهم بمائتين وثلاثة عشر جراما من الذهب تقريبا


وَكَذَلِكَ الْمَرْأَةُ يَسَعُهَا أَنْ تُعَالَجَ لِإِسْقَاطِ الْحَبَلِ مَا لَمْ يَسْتَبِنْ شَيْءٌ مِنْ خَلْقِهِ وَذَلِكَ مَا لَمْ يَتِمَّ لَهُ مِائَةٌ وَعِشْرُونَ يَوْمًا ثُمَّ إذَا عَزَلَ وَظَهَرَ بِهَا حَبَلٌ هَلْ يَجُوزُ نَفْيُهُ؟ 


قَالُوا إنْ لَمْ يَعُدْ إلَى وَطْئِهَا أَوْ عَادَ بَعْدَ الْبَوْلِ وَلَمْ يُنْزِلْ جَازَ لَهُ نَفْيُهُ وَإِلَّا فَلَا كَذَا فِي التَّبْيِينِ


إِنْ أَسْقَطَتْ بَعْدَ مَا اسْتَبَانَ خَلْقُهُ وَجَبَتْ الْغُرَّةُ كَذَا فِي فَتَاوَى قَاضِي خَانْ.


الْعِلَاجُ لِإِسْقَاطِ الْوَلَدِ إذَا اسْتَبَانَ خَلْقُهُ كَالشَّعْرِ وَالظُّفْرِ وَنَحْوِهِمَا لَا يَجُوزُ وَإِنْ كَانَ غَيْرَ مُسْتَبِينِ الْخَلْقِ يَجُوزُ وَأَمَّا فِي زَمَانِنَا يَجُوزُ عَلَى كُلِّ حَالٍ وَعَلَيْهِ الْفَتْوَى كَذَا فِي جَوَاهِرِ الْأَخْلَاطِيِّ.


وَفِي الْيَتِيمَةِ سَأَلْت عَلِيَّ بْنَ أَحْمَدَ عَنْ إسْقَاطِ الْوَلَدِ قَبْلَ أَنْ يُصَوَّرَ فَقَالَ أَمَّا فِي الْحُرَّةِ فَلَا يَجُوزُ قَوْلًا وَاحِدًا وَأَمَّا فِي الْأَمَةِ فَقَدْ اخْتَلَفُوا فِيهِ وَالصَّحِيحُ هُوَ الْمَنْعُ كَذَا فِي التَّتَارْخَانِيَّة



وذهب الحنفیة إلی إباحة إسقاط العلقة حیث أنهم یقولون بإباحة إسقاط الحمل ما لم یتخلق منه شيء ولم یتم التخلق إلا بعد مائة وعشرین یوماً، 


قال ابن عابدین: وإطلاقهم یفید عدم توقف جواز إسقاطها قبل المدة المذکورة علی إذن الزوج، 


وکان الفقیه علي بن موسی الحنفي یقول: إنه یکره فإن الماء بعد ما وقع في الرحم مآله الحیاة، 


فیکون له حکم الحیاة کما في بیضة صید الحرم، 


قال ابن وهبان: فإباحة الإسقاط محمولة علی حالة العذر أو أنها لا تأثم إثم القتل



حمل کو چار ماہ یعنی 120 دن گزرنے کے بعد چوں کہ اللہ رب العزت اس میں روح ڈال دیتا ہے؛ جس کی وجہ سے ایسے حمل کا اسقاط حرام ہے، اور یہ ایسے ہی ہے جیسے زندہ بچے کو درگور کردیا جائے۔



نیز الٹرا ساؤنڈ میں بچے کی کسی بیماری کا علم یقینی نہیں، 


بلکہ گمان کے درجے میں ہوتا ہے، 


اور اگر یقینی بھی ہو تو خالقِ کائنات بقیہ مدت میں اس مرض سے نجات دینے پر قدرت رکھتا ہے 


اور بالفرض آخر وقت تک بھی بچہ مذکورہ مرض میں مبتلا رہے، 


پھر بھی اس کا اسقاط جائز نہیں؛ 


کیوں کہ بیمار انسان کو مارنا جائز نہیں، 


اگر اب اسقاط کیا گیا تو یہ قتلِ جنین ہے، جس کی وجہ سے ماں باپ پر عُقل (بطورِ تاوان پانچ سو درہم) لازم ہوگا۔ 


لہذا آپ اللہ رب العزت سےصحت یابی کی دعا کریں اور اس سے اچھی امید رکھیں۔





(abortion) கருக்கலைப்பின் யதார்த்தத்தையும் ஷரீஅத்தின் விதிமுறையையும் முதலில் நாம் விளங்கி கொள்ள வேண்டும் 


மொழியியல் ரீதியான பொருளின்படி கருக்கலைப்பு abortion என்பது கருவை கருப்பையிலிருந்து வெளியேற்றுவது ஆகும். 



இஸ்லாமிய ஃபிக்ஹ் அறிஞர்கள்  பிரசவ காலம் பூர்த்தியாவதற்கு முன்பு கருவை கருப்பையிலிருந்து வெளியேற்றுவதே கருக்கலைப்பு என்பதாக வரையறுக்கின்றனர்.



பிரத்தியோகமான மருந்து சாப்பிடுதல், சுமை தூக்குதல்,மருத்துவரை அணுகி கருக்கலைப்பு செய்யக் கோருதல்,போன்ற முறைகளில் கருவைக் கலைக்கலாம். 


சிலவேளைகளில் தானாகவோ அல்லது பலவந்த தாக்குதல் மூலமாகவோ கரு கலைந்து விடுவதுமுண்டு.


abortion கருக்கலைப்பு என்பது கருவிற்கு ரூஹ் கொடுக்கப்படுவதற்கு முன்போ அல்லது பின்போ நடக்கலாம்.


முஸ்லிம் அறிஞர்களின் ஒருமித்த கருத்தின்படி ரூஹ் கொடுக்கப்பட்ட பின்பு கருவைக் கலைப்பது ஹராமாகும்.



ஏனெனில் இது மனித உயிருக்கு எதிரான தாக்குதலாகும். 


இதற்கு இரத்த ஈட்டுதொகையாக  - غرة  குர்ரா (ஆண் அல்லது பெண் அடிமை) கொடுக்கவேண்டும். 


இது பிறந்துவிட்ட முழு மனிதனுக்கு பகரமாக கொடுக்கப்படவேண்டிய திய்யாவில் (الدية) பத்தில் ஒரு பங்காகும்.


அல்லாஹ் கூறுகிறான்:-



وَلَا تَقْتُلُوا النَّفْسَ الَّتِي حَرَّمَ اللَّهُ إِلَّا بِالْحَقِّ



(கொலையை) அல்லாஹ் விலக்கியிருக்க நீங்கள் எந்த மனிதனையும் நியாயமான காரணமின்றி கொலைசெய்து விடாதீர்கள்..



(அல் இஸ்ரா : 33)




قَضَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي جَنِينِ امْرَأَةٍ مِنْ بَنِي لَحْيَانَ سَقَطَ مَيِّتًا بِغُرَّةٍ، عَبْدٍ أَوْ أَمَةٍ



‘பனூ லிஹ்யான்’ குலத்தைச் சேர்ந்த (கர்ப்பிணி) பெண் ஒருத்தியின் (வயிற்றிலிருந்த) சிசு, (மற்றொரு பெண் அடித்ததால்) இறந்து பிறந்தது. 


அதற்கு நஷ்ட ஈடாக ஓர் ஆண் அடிமையை, அல்லது ஓர் அடிமைப் பெண்ணை வழங்கிட வேண்டுமென இறைத்தூதர்  صلى الله عليه وسلم  அவர்கள் தீர்ப்பளித்தார்கள்.       


பார்க்க 👇                                                      (அபூஹுரைரா(ரலி), புஹாரி,முஸ்லிம்)



இதனடிப்பையில் கருவுக்கு ரூஹ் கொடுக்கப்பட்ட பின்பு அதைக் கலைப்பது தடை செய்யப்பட்டுள்ளது என்று முஸ்லிம் சட்ட அறிஞர்கள் ஒருமித்து கூறியுள்ளனர்.



கருவிற்கு ரூஹ் கொடுக்கப்படுவதற்கு முன்னர் கருக்கலைப்பு செய்வது குறித்து அறிஞர்களிடையே கருத்து வேறுபாடுகள் உள்ளது.


கருத்தரித்த பின்புள்ள படிநிலைகளைப் பொறுத்து சிலர் அதை அனுமதிக்கவும், 

சிலர் அதை தடை செய்யவும் செய்கின்றனர். 


சிலர் கருத்தரித்து 40 அல்லது 42 நாட்களுக்கு பிறகு கருக்கலைப்பு abortion செய்வது ஹராமாகும். என்கின்றனர், 



கரு முதிர்கருவாக வளர்ச்சியடைய ஆரம்பிக்கும்போது கை,கால், கண், நகம் போன்றவை வளர ஆரம்பிக்கின்றன.


எனவே  முன்பு கூறிய ஹதீஸ் அடிப்படையில் 


அதற்கு திய்யா(الدية) என்னும் இரத்த ஈட்டுத்தொகை வழங்குவதும் கட்டாயமாகும்.



நபி ஸல் அவர்கள் கூறியுள்ளதாக இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்;-




إِذَا مَرَّ بِالنُّطْفَةِ ثِنْتَانِ وَأَرْبَعُونَ لَيْلَةً، بَعَثَ اللهُ إِلَيْهَا مَلَكًا، فَصَوَّرَهَا وَخَلَقَ سَمْعَهَا وَبَصَرَهَا وَجِلْدَهَا وَلَحْمَهَا وَعِظَامَهَا، ثُمَّ قَالَ: يَا رَبِّ أَذَكَرٌ أَمْ أُنْثَى؟ 


فَيَقْضِي رَبُّكَ مَا شَاءَ، وَيَكْتُبُ الْمَلَكُ، ثُمَّ يَقُولُ: يَا رَبِّ أَجَلُهُ، فَيَقُولُ رَبُّكَ مَا شَاءَ، وَيَكْتُبُ الْمَلَكُ، ثُمَّ يَقُولُ: يَا رَبِّ رِزْقُهُ، فَيَقْضِي رَبُّكَ مَا شَاءَ، وَيَكْتُبُ الْمَلَكُ، ثُمَّ يَخْرُجُ الْمَلَكُ بِالصَّحِيفَةِ فِي يَدِهِ، فَلَا يَزِيدُ عَلَى مَا أُمِرَ وَلَا يَنْقُصُ



நுத்ஃபாவின் மீது நாற்பத்து இரண்டு இரவுகள் கடந்துவிட்ட நிலையில் அல்லாஹ்سبحانه وتعالى வானவர் ஒருவரை அனுப்புகிறான். 


பிறகு (மூன்றாவது நாற்பது கழிந்தபின்) அதற்கு உருவமளித்து,அதற்குச் செவிப்புலனையும் பார்வையையும் தோலையும் சதையையும் எலும்பையும் படைக்கிறான்.



பிறகு (நாற்பத்து இரண்டு நாட்கள் கழிந்ததும் அனுப்பப்பட்ட) அந்த வானவர், 



“இறைவா! இது ஆணா, பெண்ணா?” என்று கேட்கிறார். 


அப்போது உம்முடைய இறைவன் தான் நாடியதைத் தீர்ப்பளிக்கிறான்.


(அவ்வாறே) அந்த வானவரும் எழுதிப் பதிவு செய்கிறார். 


பிறகு அவர், “இறைவா! இதன் வாழ்நாள் (எவ்வளவு?)” என்று கேட்கிறார். 


அப்போது உம்முடைய இறைவன் தான் நாடியதைச் சொல்கிறான்.


(அதன்படி) அந்த வானவரும் எழுதிப் பதிவு செய்கிறார்.


பிறகு அவர், “இறைவா! இதன் வாழ்வாதாரம் (எவ்வளவு)?” என்று கேட்கிறார். 


அப்போது உம்முடைய இறைவன் தான் நாடியதைத் தீர்ப்பளிக்கிறான். 


(அதன்படி) அந்த வானவரும் எழுதி பதிவு செய்துவிட்டு பிறகு தமது கையில் அந்த ஏட்டை எடுத்துக்கொண்டு வெளியேறிவிடுகிறார். 


(தமக்கு) ஆணையிடப்பட்டதைவிட அவர் கூட்டுவதுமில்லை; குறைப்பதுமில்லை



(அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்(ரலி), 


நூல் :முஸ்லிம்)



மற்றொரு அறிவிப்பில் நாற்பத்திரண்டு இரவுகள் என்பதற்கு பதிலாக أَرْبَعِينَ لَيْلَةً  நாற்பது இரவுகள் என்று வந்துள்ளது.



அல்லாஹ்سبحانه وتعالى  கூறுகிறான்-



وَإِذَا الْمَوْءُودَةُ سُئِلَتْ * بِأَيِّ ذَنْبٍ قُتِلَتْ



உயிருடன் புதைக்கப்பட்ட பெண் (குழந்தை) வினவப்படும் போது – “எந்தக் குற்றத்திற்காக அது கொல்லப்பட்டது?” என்று. 



(அத்தக்வீர் : 8,9)



ஆகவே கருவைக் கலைப்பது தடை செய்யப்பட்டுள்ளதால், கருவின் மீதான தாக்குதலான  கருக்கலைப்பிற்கு காரணமாக இருக்கும் தாயோ, தந்தையோ, கணவரோ, மருத்துவரோ, அல்லது வேறு யாராக இருந்தாலும் அவர்கள் குற்றவாளிகளாவர்.



எனவே இந்த குற்றத்தை இழைத்தவர்கள் இரத்த ஈட்டுத்தொகை என்னும் திய்யா செலுத்தவேண்டியது கட்டாயமாகும்.



அதற்கான கஃப்பாரா👇 



وَمَا كَانَ لِمُؤْمِنٍ اَنْ يَّقْتُلَ مُؤْمِنًا اِلَّا خَطَـــٴًــا‌  وَمَنْ قَتَلَ مُؤْمِنًا خَطَـــٴًــا فَتَحْرِيْرُ رَقَبَةٍ مُّؤْمِنَةٍ وَّدِيَةٌ مُّسَلَّمَةٌ اِلٰٓى اَهْلِهٖۤ اِلَّاۤ اَنْ يَّصَّدَّقُوْا‌  


فَاِنْ كَانَ مِنْ قَوْمٍ عَدُوٍّ لَّـكُمْ وَهُوَ مُؤْمِنٌ فَتَحْرِيْرُ رَقَبَةٍ مُّؤْمِنَةٍ‌  وَاِنْ كَانَ مِنْ قَوْمٍ بَيْنَكُمْ وَبَيْنَهُمْ مِّيْثَاقٌ فَدِيَةٌ مُّسَلَّمَةٌ اِلٰٓى اَهْلِهٖ وَ تَحْرِيْرُ رَقَبَةٍ مُّؤْمِنَةٍ‌  


فَمَنْ لَّمْ يَجِدْ فَصِيَامُ شَهْرَيْنِ مُتَتَابِعَيْنِ تَوْبَةً مِّنَ اللّٰهِ‌  وَكَانَ اللّٰهُ عَلِيْمًا حَكِيْمًا


‏ 

தவறாக அன்றி, ஒரு முஃமின் பிறிதொரு முஃமினை கொலை செய்வது ஆகுமானதல்ல; 


உங்களில் எவரேனும் ஒரு முஃமினை தவறாக கொலை செய்துவிட்டால், 


அதற்குப் பரிகாரமாக முஃமினான ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும்; 


அவனுடைய குடும்பத்தாருக்கு நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் - 


அவனுடைய குடும்பத்தார் (நஷ்ட ஈட்டுத் தொகையை மன்னித்து) அதை தர்மமாக விட்டாலொழிய; 


கொல்லப்பட்ட அவன் உங்கள் பகை இனத்தைச் சார்ந்தவனாக (ஆனால்) முஃமினாக இருந்தால், முஃமினான ஓர் அடிமையை விடுதலை செய்தால் போதும் (நஷ்ட ஈடில்லை; இறந்த) அவன் உங்களுடன் சமாதான (உடன்படிக்கை) செய்து கொண்ட வகுப்பாரைச் சேர்ந்தவனாக இருந்தால் அவன் சொந்தக்காரருக்கு நஷ்ட ஈடு கொடுப்பதுடன், முஃமினான ஓர் அடிமையை விடுதலை செய்யவும் வேண்டும்; 


இவ்வாறு (பரிகாரம்) செய்வதற்கு சக்தியில்லாதவனாக இருந்தால், 


அல்லாஹ்விடம் மன்னிப்புப் பெறுவதற்காகத் தொடர்ந்து இரண்டு மாதங்கள் நோன்பு வைக்க வேண்டும் - 


அல்லாஹ் நன்கு அறிந்தவனாகவும், பூரண ஞானமுடையவனாகவும் இருக்கிறான்.



(அல்குர்ஆன் : 4:92)




அடிமையை உரிமையிடுவது


தொடர்ந்து இரு மாதம் நோன்பு நோற்பது 


அல்லது அதற்கான ஈட்டுத்தொகை 213 கிராம் தங்கம் என்றும் ,


அல்லது ஒன்றரை கிலோ வெள்ளி என்றும் கூறப்படுகிறது 



கருத்தரித்து நாற்பது நாட்களுக்கு முன்னர் செய்யப்படும் கருக்கலைப்பை பொறுத்தவரை அது அனுமதிக்கப்பட்டதாகும்



கருவின் மீதான தாக்குதலாக இது கருதப்படமாட்டாது என்பதால் செய்தால் இதற்கு தண்டனை கிடையாது.



فأجمع أهل العلم على حرمة الإجهاض إذا أتم الجنين مائة وعشرين 


لأنه بعد الطور الثالث ‏وهو تمام المائة وعشرين يوماً يكون قد نفخ فيه الروح وفي إجهاضه قتل للنفس التي حرم ‏الله إلا بالحق، 



ஆக ஒரு மண்டலம் 40 நாள் 

3மண்டலத்தில் அதாவது 120நாளில் ஒரு சிசு பூரணமாக உருவாகி விடுகிறது 


அதற்கு பிறகு எந்த ஒரு நிலையிலும் கருகலைப்பு ஹராமாகும்.. 



குழந்தை கருவிலேயே இறந்து விட்டது எனில் அதை வெட்டி எடுப்பது கூடும் 


அதே சமயம் அந்தக் குழந்தை உயிருடன் இருக்கிறது எனில் அவ்வாறு செய்வது கூடாது 


குழந்தையின் உயிரை எடுப்பதற்கு எவ்வகையிலும் அனுமதி இல்லை


கருவில் குழந்தைக்கு ஏதேனும் குறைபாடு இருக்கிறது என ஸ்கேன் வழியாக தெரிந்தாலும் 


120 நாட்கள் கழிந்த பின்னர் கலைப்பதற்கு அனுமதி கிடையாது 


ஏனெனில் நோயாளியான ஒருவரை கொலை செய்வதற்கும் மார்க்கத்தில் அனுமதி இல்லை



அவ்வாறு தெரியாமல் கலைத்து விட்டால்  அது ஒரு உயிரை கொலை செய்ததினுடைய குற்றமாகும் 


எனவே அதற்கு பரிகாரமாக 500 திர்ஹம் அதாவது ஒரு கிலோ 531 கிராம் கிராம் வெள்ளி அளவில் காஃப்பாரா  கடமையாகிவிடும்



பார்க்க 👇



فتاوی رحیمیہ (2/240)


الموسوعة الفقهیة الکویتیة۳۰/ ۲۸۵)


الفتاوى الهندية (5/ 356)


فتاوی شامی (3 / 176)


الدرالمختار مع الشامية، کتاب الحظر والإباحة، باب الاستبراء وغیره، ، کراچی ( ۶/ ۴۲۹)


ابن الهمام، فتح القدير، 3: 274


(ہدایہ: ۲/۳۱۱، کتاب النکاح، ط: اشرفی دیوبند)


نہایۃ المحتاج" (8/443)


حاشیہ قليوبی "(4/160) 


مرداوی رحمہ اللہ "الإنصاف" (1/386)


"الشرح الكبیر" (2/266)


"الفتاوى الجامعہ" (3/1055)


(غایۃ الا وطار ۴/۲۴۹، باب الا ستبراء)



مذاهب الفقهاء في الصلاة على السقط



abortion ஆகி இறந்து விட்ட குறை மாதக் குழந்தைக்கு ஜனாஸா தொழுகை நடத்தும் விஷயத்தில் இமாம்களின் பார்வையானது மூன்று வகைப்படும்



قال الامام احمد يصلي علي السقط اذا كان له اربعة اشهر وعشر في البطن ونفخ فيه الروح وان لم يستهل 



*ஒன்று ஹம்பலி மத்ஹபின் ஆய்வாகும்*



அதாவது வயிற்றில் நான்கு மாதம் பத்து நாட்கள் உள்ளேயிருந்து அதற்கு உயிர் கொடுக்கப்பட்டு விட்டால் அது தானாக பிறக்கா விட்டாலும், அசையாவிட்டாலும்  அந்த குறைமாத குழந்தைக்கு தொழுகை நடத்தப் படவேண்டும்




பார்க்க 👇



المرقات( 4/56)



واستدل بقوله صلى الله عليه وسلم : 


( والسقط يصلى عليه ، ويدعى لوالديه بالمغفرة والرحمة )  


குறை மாதக் குழந்தைக்கு தொழுகை நடத்தப் படவேண்டும் என்றும் அது தனது பெற்றோர்களுக்காக பாவமன்னிப்பையும் கிருபையையும் வேண்டி நிற்கும் என்றும் நபியவர்கள் கூறியிருக்கிறார்கள்



ஆதாரம் 👇

رواه أبو داوود صححه الألباني في صحيح الجامع/3525)

ولحديث المغيرة بن شعبة قال قال النبي صلى الله عليه وسلم 

السقط يصلي عليه 

رواه ابوداؤد 

والطفل يصلي عليه 

رواه الترمذي 

قال الامام مالك لا يصلي علي الطفل الا ان يختلج ويتحرك بعد الولادة 

*இரண்டாவது மாலிக்கீ மத்ஹபின் ஆய்வாகும்*

பொதுவாக குழந்தை வெளியே பிறந்து அதற்குள் அசைவு  ஏற்பட்டு விட்டால் 

அவ்வகையான குழந்தைக்கு தொழுகை நடத்தப் படவேண்டும்

பார்க்க 👇

العيني (4/196) 

قال الامام ابو حنيفة والشافعي لا يصلي علي الطفل حتي يستهل 


 *மூன்றாவது ஹனஃபீ மற்றும் ஷாஃபியீ  மத்ஹபின் ஆய்வாகும்*

والاستهلال ما يدل علي الحياة من حركة عضو او رفع صوت


 குறைமாதக் குழந்தை உயிரோடு தான் இருந்தது என்பதற்கான அறிகுறி இருக்க வேண்டும் 


அதாவது உடலசைவின் மூலமோ அல்லது சப்தத்தை வெளியே உயர்த்துவது மூலமாகவோ அறிந்து கொள்ளலாம்

والمعتبر فيه خروج اكثره حيا حتي لو خرج اكثره وهو يتحرك صلي  عليه ، وفي الاقل لا 

அதாவது குறை மாத குழந்தைக்கு உறுப்பில் அதிகமான பகுதியில் தோற்றம் ஏற்பட்டு அதற்குள் அசைவு ஏற்பட்டால் அப்போது தொழுகை நடத்தப்படும் 

இல்லையானால் தொழுகை நடத்தப்படாது

 பார்க்க👇

المرقات (4/56 )

عن جابر قال قال رسول الله صلى الله عليه وسلم الطفل لايصلي عليه ولايرث ولا يورث حتي يستهل 


குறை மாத குழந்தைக்கு உயிர் உள்ளது என்பதற்கான அறிகுறி தென்படாத வரை அதற்கு தொழுகையும் நடத்தப்படாது பாகக்காரனாகவும் ஆகாது  ஆக்கவும் படாது


ஆதாரம் 👇

رواه الترمذي والنسائي وابن ماجه 

وعن جابر اذا استهل الصبي صلي عليه وورث 

உயிரோடு பிறந்ததற்கான அறிகுறி தென்பட்டால் அவ்வகை குழந்தைக்கு தொழுகையும் நடத்தப்படும் வாரிசுரிமையும் தரப்படும்

ஆதாரம் 

رواه النسائي

பிரபல்யமான பதிவுகள்