роироо்рооுроЯрой் роЗрогைрои்родு роЗро░ுрок்рокро╡ро░்роХро│்

ро╡ெро│்ро│ி, роЯிроЪроо்рокро░் 14, 2018

роЗро▒ைроиேроЪро░்роХро│ை роородிрод்родு ро╡ாро┤்,

! بسم الله الرحمن الرحيم

நல்லாரைக் காண்பதும் நன்றே! ************************************* يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اتَّقُوا اللّٰهَ وَكُوْنُوْا مَعَ الصّٰدِقِيْنَ‏ (القران 9:119) عن ابن عباس رضي قال قال رجل يا رسول الله من اولياء الله؟ قال الذين اذارءوا ذكر الله *********************************************************** அருளிலார்க்கு அவ்வுலகில்லை பொருளிலார்க்கு இவ்வுலகில்லை எனவே பொருளை தேடுவதற்கு நாம் பல வழிகளில்  முயலுவதைப் போன்றே அருளைப் பெறுவதற்கும் பல வழிகளில் முயலுவதே அறிவுடமையாகும். அருளை பெறுவதற்கு தொழுகை. நோன்பு. ஜகாத். ஹஜ் போன்ற இறைக் கடமைகள் பிரதான வழிகளாகும்.  அதற்கு வேறு பல கிளைச் சாலைகளும் உள்ளன. அவற்றுள் நல்லோரின் சகவாசத்தைப் பெறுவது என்பதும் ஒரு கிளைச் சாலையாகும். இறையன்பை பெற்றவர்களுடன் இணைந்து கொள்ளும்போது நமது குறையும் நிறைவாகி விடும் அதிசயத்தைக் கீழ் வரும் நிகழ்வில் காணலாம். *************************-*************** 6408- حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ حَدَّثَنَا جَرِيرٌ عَنِ الأَعْمَشِ عَنْ أَبِي صَالِحٍ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ((إِنَّ لِلَّهِ مَلاَئِكَةً يَطُوفُونَ فِي الطُّرُقِ، يَلْتَمِسُونَ أَهْلَ الذِّكْرِ، فَإِذَا وَجَدُوا قَوْمًا يَذْكُرُونَ اللَّهَ تَنَادَوْا هَلُمُّوا إِلَى حَاجَتِكُمْ. قَالَ فَيَحُفُّونَهُمْ بِأَجْنِحَتِهِمْ إِلَى السَّمَاءِ الدُّنْيَا. قَالَ فَيَسْأَلُهُمْ رَبُّهُمْ وَهْوَ أَعْلَمُ مِنْهُمْ مَا يَقُولُ عِبَادِي قَالُوا يَقُولُونَ يُسَبِّحُونَكَ، وَيُكَبِّرُونَكَ، وَيَحْمَدُونَكَ وَيُمَجِّدُونَكَ. قَالَ فَيَقُولُ هَلْ رَأَوْنِي قَالَ فَيَقُولُونَ لاَ وَاللَّهِ مَا رَأَوْكَ. قَالَ فَيَقُولُ وَكَيْفَ لَوْ رَأَوْنِي قَالَ يَقُولُونَ لَوْ رَأَوْكَ كَانُوا أَشَدَّ لَكَ عِبَادَةً، وَأَشَدَّ لَكَ تَمْجِيدًا، وَأَكْثَرَ لَكَ تَسْبِيحًا. قَالَ يَقُولُ فَمَا يَسْأَلُونِي قَالَ يَسْأَلُونَكَ الْجَنَّةَ. قَالَ يَقُولُ وَهَلْ رَأَوْهَا قَالَ يَقُولُونَ لاَ وَاللَّهِ يَا رَبِّ مَا رَأَوْهَا. قَالَ يَقُولُ فَكَيْفَ لَوْ أَنَّهُمْ رَأَوْهَا قَالَ يَقُولُونَ لَوْ أَنَّهُمْ رَأَوْهَا كَانُوا أَشَدَّ عَلَيْهَا حِرْصًا، وَأَشَدَّ لَهَا طَلَبًا، وَأَعْظَمَ فِيهَا رَغْبَةً. قَالَ فَمِمَّ يَتَعَوَّذُونَ قَالَ يَقُولُونَ مِنَ النَّارِ. قَالَ يَقُولُ وَهَلْ رَأَوْهَا قَالَ يَقُولُونَ لاَ وَاللَّهِ مَا رَأَوْهَا. قَالَ يَقُولُ فَكَيْفَ لَوْ رَأَوْهَا قَالَ يَقُولُونَ لَوْ رَأَوْهَا كَانُوا أَشَدَّ مِنْهَا فِرَارًا، وَأَشَدَّ لَهَا مَخَافَةً. قَالَ فَيَقُولُ فَأُشْهِدُكُمْ أَنِّي قَدْ غَفَرْتُ لَهُمْ. قَالَ يَقُولُ مَلَكٌ مِنَ الْمَلاَئِكَةِ فِيهِمْ فُلاَنٌ لَيْسَ مِنْهُمْ إِنَّمَا جَاءَ لِحَاجَةٍ. قَالَ هُمُ الْجُلَسَاءُ لاَ يَشْقَى بِهِمْ جَلِيسُهُمْ)). رَوَاهُ شُعْبَةُ عَنِ الأَعْمَشِ وَلَمْ يَرْفَعْهُ. وَرَوَاهُ سُهَيْلٌ عَنْ أَبِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ. 6408. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்“  அல்லாஹ்விடம் சில வானவர்கள் உள்ளனர். அவர்கள் அல்லாஹ்வை நினைவு கூர்ந்து போற்றுவோரைத் தேடியவண்ணம் தெருக்களில் சுற்றி வருகின்றனர். அல்லாஹ்வை நினைவு கூர்ந்து போற்றிக்கொண்டிருக்கும் ஒரு குழுவினரை அவர்கள் கண்டால் “உங்கள் தேவையைப் பூர்த்தி செய்ய வாருங்கள்“ என்று அவர்கள் (தம்மில்) ஒருவரை ஒருவர் அழைக்கின்றனர். பின்னர் அந்த வானவர்கள் அல்லாஹ்வைப் போற்றுகிறவர்களைத் தம் இறக்கைகளால் முதல் வானம் வரை சூழ்ந்து கொள்கின்றனர். அப்போது அவ்வானவர்களிடம் அவர்களின் இறைவன் “என் அடியார்கள் என்ன கூறுகின்றனர்?“ என்று கேட்கிறான். அவ்வானவர்களை விட அவனே தம் அடியார்களை நன்கறிந்தவனாவன், அதற்கு அவ்வானவர்கள் உன்னைப் பெருமைப்படுத்திக் கொண்டும், உன்னைப் புகழ்ந்து கொண்டும், உன்னைப் போற்றிக் கொண்டும் இருக்கின்றர்“ என்று கூறுகின்றனர்.  அதற்கு இறைவன், “அவர்கள் என்னைப் பார்த்திருக்கிறார்களா?“ என்று கேட்பான். அதற்கு வானவர்கள், “இல்லை; உன் மீதாணையாக! அவர்கள் உன்னைப் பார்த்ததில்லை“ என்று பதிலளிப்பார்கள். அதற்கு இறைவன், “என்னைப் பார்த்திருந்தால் எப்படியிருப்பார்கள்?“ என்று கேட்பான். வானவர்கள், “உன்னை அவர்கள் பார்த்திருந்தால் இன்னும் அதிகமாக உன்னை வழிபடுவார்கள்; இன்னும் கூடுதலாக உன்னைப் போற்றிப் புகழ்ந்து துதிப்பார்கள்“ என்று பதிலளிப்பார்கள். அதற்கு இறைவன், “என்னிடம் அவர்கள் என்ன வேண்டுகிறார்கள்?“ என்று (தனக்குத் தெரியாதது போன்று) கேட்பான். வானவர்கள், “அவர்கள் உன்னிடம் சொர்க்கத்தைக் கேட்கின்றனர்“ என்பார்கள். அதற்கு இறைவன், “அவர்கள் அதைப் பார்த்ததுண்டா?“ என்று கேட்பான். அதற்கு வானவர்கள், “இல்லை; உன் மீதாணையாக! அதிபதியே! அவர்கள் அதனைப் பார்த்ததில்லை“ என்பர். அதற்கு இறைவன், “அவ்வாறாயின் அதனை அவர்கள் பார்த்திருந்தால் அவர்கள் நிலை எப்படியிருக்கும்?“ என்று கேட்பான். வானவர்கள், “சொர்க்கத்தை அவர்கள் பார்த்திருந்தால் இன்னும் அதிகமாக அதன் மீது ஆசைகொண்டு, அதிக வேட்கையுடன் தீவிரமாக அதைத் தேடுவார்கள்“ என்று பதிலளிப்பார்கள்.  இறைவன், “அவர்கள் எதிலிருந்து (என்னிடம்) பாதுகாப்புக் கோருகின்றனர்?“ என்று வினவுவான். வானவர்கள், “நரகத்திலிருந்து (பாதுகாப்புக் கோருகின்றனர்)“ என்று பதிலளிப்பார். இறைவன், “அதனை அவர்கள் பார்த்திருக்கிறார்களா?“ என்று கேட்பான். வானவர்கள், “இல்லை; உன் மீதாணையாக! அதனை அவர்கள் பார்த்தில்லை“ என்பர். அதற்கு இறைவன், “அவ்வாறாயின் அவர்கள் அதைப் பார்த்திருந்தால் அவர்கள் நிலை என்னவாக இருந்திருக்கும்?“ என்று கேட்பான் வானவர்கள், “நரகத்தை அவர்கள் பார்த்திருந்தால் நிச்சயம் அதிலிருந்து கடுமையாக வெருண்டோடுபவர்களாகவும் அதனை மிகவும் அஞ்சுபவர்களாகவும் இருப்பார்கள்“ என்பர். அப்போது இறைவன், “எனவே (வானவர்களே!) அவர்களை நான் மன்னித்து விட்டேன் என்பதற்கு உங்களை நான் சாட்சிகளாக ஆக்குகிறேன்“ என்று கூறுவான்.  அந்த வானவர்களிடையே உள்ள ஒரு வானவர், “(அந்தக் குழுவினரிடையே அமர்ந்திருந்த) இன்ன மனிதன், உன்னைப் போற்றுகிற அவர்களில் உள்ளவன் அல்லன். அவன் ஏதோ தேவை நிமித்தமாகவே அங்கு வந்தான்“ என்பார். அதற்கு இறைவன், “அவர்கள் ஒன்றாக அமர்ந்துள்ள நண்பர்கள். அவர்களுடன் வந்து அமர்ந்த ஒருவன் அவர்களால் (பாக்கியம் பெறுவானே தவிர,) பாக்கியமற்றவனாக ஆகமாட்டான்“ என்று கூறுவான்.  என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.  இன்னும் சில அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் இந்த நபிமொழி வந்துள்ளது. ஷஹீஹ் புகாரி அத்தியாயம் : 80. பிரார்த்தனைகள் நல்லாருடன் சற்று நேரம் வெறுமனே தங்கியிருப்பதன் நன்மையை நபிகள் நாயகம் ( ஸல்) அவர்கள் உவமை கூறி விளக்குகிறார்கள். 5534- حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ عَنْ بُرَيْدٍ عَنْ أَبِي بُرْدَةَ عَنْ أَبِي مُوسَى رَضِيَ اللَّهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ((مَثَلُ الْجَلِيسِ الصَّالِحِ وَالسَّوْءِ كَحَامِلِ الْمِسْكِ وَنَافِخِ الْكِيرِ، فَحَامِلُ الْمِسْكِ إِمَّا أَنْ يُحْذِيَكَ، وَإِمَّا أَنْ تَبْتَاعَ مِنْهُ، وَإِمَّا أَنْ تَجِدَ مِنْهُ رِيحًا طَيِّبَةً، وَنَافِخُ الْكِيرِ إِمَّا أَنْ يُحْرِقَ ثِيَابَكَ، وَإِمَّا أَنْ تَجِدَ رِيحًا خَبِيثَةً)) 5534. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்“  நல்ல நண்பன் மற்றும் கெட்ட நண்பனின் நிலையானது கஸ்தூரியைச் சுமக்கிறவனின் நிலையையும், (உலைக் களத்தில்) உலை ஊதுகிறவனின் நிலையையும் ஒத்திருக்கிறது. கஸ்தூரியைச் சுமப்பவன் ஒன்று அதை உனக்கு அன்பளிப்பாக வழங்கலாம். அல்லது நீ அவனிடமிருந்து (அதை விலைக்கு) வாங்கிக் கொள்ளலாம். அல்லது அதிலிருந்து நீ நறுமணத்தையேனும் பெறலாம். ஆனால் உலை ஊதுபவனோ ஒன்று உன்னுடைய ஆடையை எரித்துக் கரித்துவிடுவான்; அல்லது (அவனிடமிருந்து) நீ துர்வாடையையாவது அடைந்தே தீருவாய்.  என அபூ மூஸா(ரலி) அறிவித்தார்.50 ஷஹீஹ் புகாரி அத்தியாயம் : 72. (உண்பதற்காக) அறுக்கப்படும் பிராணிகளும் வேட்டைப் பிராணிகளும் எனவேதான் இப்படியும் ஒரு நபிமொழி உண்டு ஒருவன் நல்லவனா கெட்டவனா என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமானால் அவன் நண்பனை பார்க்க வேண்டும் அவன் நல்லவனாக இருந்தால் இவனும் நல்லவனாகவே இருப்பான் அவன் தீயவனாக இருந்தால் இவனும் தீயவனாகவே இருப்பான் என்று சொல்வார்கள். ﻭﻋﻦ ﺃﺑﻲ ﻫﺮﻳﺮﺓ ﻗﺎﻝ: ﻗﺎﻝ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ: «اﻟﻤﺮء ﻋﻠﻰ ﺩﻳﻦ ﺧﻠﻴﻠﻪ ﻓﻠﻴﻨﻈﺮ ﺃﺣﺪﻛﻢ ﻣﻦ ﻳﺨﺎﻟﻞ» . ﺭﻭاﻩ ﺃﺣﻤﺪ ﻭاﻟﺘﺮﻣﺬﻱ ﻭﺃﺑﻮ ﺩاﻭﺩ ﻭاﻟﺒﻴﻬﻘﻲ ﻓﻲ «ﺷﻌﺐ اﻹﻳﻤﺎﻥ» ﻭﻗﺎﻝ اﻟﺘﺮﻣﺬﻱ: ﻫﺬا ﺣﺪﻳﺚ ﺣﺴﻦ ﻏﺮﻳﺐ. ﻭﻗﺎﻝ اﻟﻨﻮﻭﻱ: ﺇﺳﻨﺎﺩﻩ ﺻﺤﻴﺢ ஒரு நாள் நபிகள் நாயகம் ( ஸல்) அவர்கள்  பஜ்ருத் தொழுகையில்  சூரத்துர் ரூம்  என்ற அத்தியாயத்தை ஓதினார்கள்.  இடையில் அவர்கள் ஓதுவது தடைபட்டது. தொழுகை முடிந்ததும் அவர்கள் மக்களை நோக்கி சிலருக்கு என்ன கேடு! முறையாக ஒளூச் செய்யாது நம்முடன் கலந்து தொழுகிறார்கள்.  நான் ஓதும்போது தடைபடுவதற்கு அவர்களே காரணம் என்று கடிந்துரைத்தார்கள்  (நூல்: நஸயீ) இந்த நபி மொழி ஓர் உண்மையைப் பிரகடனப் படுத்துகிறது. ஒளூ முறையாகச் செய்யாதிருத்தல் என்ற தீமை முன்னால் இருப்பவரின் சிந்தனையைத் தடுமாறச் செய்கிறதென்றால் நல்லாரின் நன்னடத்தை அவரருகில் அமர்ந்திருப்போரின் சிந்தனையை நேரிய வழியில் திருப்பாதிருக்குமா? عن حنظلةَ الأسيدي رضي الله عنه، وكان مِن كتَّاب رسول الله صلى الله عليه وسلم، قال: لقيني أبو بكر فقال: كيف أنت يا حنظلة؟ قال: قلتُ: نافَق حنظلة! قال: سبحان الله! ما تقول؟ قال: قلت: نكون عند رسول الله صلى الله عليه وسلم يذكِّرنا بالنار والجنة حتى كأنا رأي عين، فإذا خرجنا من عند رسول الله صلى الله عليه وسلم عافَسْنا الأزواج والأولاد والضَّيْعات، فنسينا كثيرًا، قال أبو بكر: فوالله إنا لنلقى مثل هذا، فانطلقت أنا وأبو بكر حتى دخلنا على رسول الله صلى الله عليه وسلم، قلت: نافَق حنظلة يا رسول الله! فقال رسول الله صلى الله عليه وسلم: ((وما ذاك؟))، قلت: يا رسول الله، نكون عندك تذكرنا بالنار والجنة حتى كأنا رأي عين، فإذا خرجنا من عندك عافَسْنا الأزواج والأولاد والضَّيعات، نسينا كثيرًا، فقال رسول الله صلى الله عليه وسلم: ((والذي نفسي بيده، إن لو تدومون على ما تكونون عندي وفي الذِّكر، لصافحتكم الملائكة على فُرشكم وفي طرقكم، ولكن يا حنظلة ساعة وساعة))، ثلاث مرات؛ (رواه مسلم) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் எழுத்தர்களில் ஒருவரான ஹன்ழலா பின் அர்ரபீஉ அல்உசைதீ (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு நாள்) அபூபக்ர் (ரலி) அவர்கள் என்னைச் சந்தித்து, ”ஹன்ழலா, எப்படி இருக்கிறீர்கள்?” என்று கேட்டார்கள். நான், ”ஹன்ழலா நயவஞ்சகனாகிவிட்டான்” என்று சொன்னேன். அதற்கு ”அல்லாஹ் தூயவன்; என்ன சொல்கிறீர்கள்?”என்று கேட்டார்கள். அதற்கு நான், ”நாம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கருகில் இருக்கும்போது அவர்கள் சொர்க்கம், நரகம் ஆகியவற்றைப் பற்றி நாம் நேரடியாகப் பார்ப்பதைப் போன்று நினைவூட்டுகிறார்கள். அவர்களிடமிருந்து நாம் புறப்பட்டு (வீட்டுக்கு) வந்ததும் துணைவியருடனும் குழந்தை குட்டிகளுடனும் கலந்துறவாடுகிறோம்; பிழைப்புகளில் ஈடுபட்டுவிடுகிறோம்.(அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னவற்றில்) அதிகமானவற்றை மறந்துவிடுகிறோம்” என்று சொன்னேன். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள், ”அல்லாஹ்வின் மீதாணையாக! இதே நிலையை நாமும் சந்திக்கிறோம்” என்று கூறினார்கள். பிறகு நானும் அபூபக்ர் (ரலி) அவர்களும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றோம். நான், ”அல்லாஹ்வின் தூதரே! ஹன்ழலா நயவஞ்சனாகிவிட்டான்” என்று சொன்னேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ”என்ன அது?” என்று கேட்டார்கள். அதற்கு நான், ”அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் உங்கள் அருகிலிருக்கும்போது தாங்கள் எங்களுக்கு நரகத்தையும் சொர்க்கத்தையும் நாங்கள் நேரடியாகப் பார்ப்பதைப் போன்று நினைவூட்டுகிறீர்கள். நாங்கள் உங்களிடமிருந்து புறப்பட்டுச் சென்றதும் துணைவியருடனும் குழந்தை குட்டிகளுடனும் கலந்துறவாடுகிறோம்; பிழைப்புகளில் ஈடுபட்டுவிடுகிறோம். அதிகமானவற்றை மறந்து விடுகிறோம்” என்று சொன்னேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ”என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! நீங்கள் என்னிடம் இருக்கும்போதுள்ள நிலையிலும் இறை எண்ணத்திலும் எப்போதும் இருந்தால், உங்கள் படுக்கைகளிலும் நீங்கள் செல்லும் வழிகளிலும் வானவர்கள் (வந்து) உங்களுடன் கை குலுக்கியிருப்பார்கள். மாறாக, ஹன்ழலா! (இப்படிச்) சில நேரம் (அப்படிச்) சில நேரம்” என்று மூன்று முறை கூறினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 49. பாவமீட்சி நல்லோர்களின் அவையில் அமர்ந்திருக்கும்போது ஏற்படும் நல்ல மாற்றத்திற்கு இதைவிட சிறந்த எடுத்துக்காட்டு தேவையிருக்காது. நல்லோரை நேசிப்பதும் நல்ல அமலே! ****************************************** நல்லோரின் சகவாசம் நன்மை பயப்பதைப்போன்றே நல்லோரை நேசிப்பதும் நல்ல அமல் என்பதை நபி மொழிகள் நன்குணர்த்துகின்றன. 3529- ٍ أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ((إِنَّ مِنْ عِبَادِ اللَّهِ لأُنَاسًا مَا هُمْ بِأَنْبِيَاءَ وَلاَ شُهَدَاءَ يَغْبِطُهُمُ الأَنْبِيَاءُ وَالشُّهَدَاءُ يَوْمَ الْقِيَامَةِ بِمَكَانِهِمْ مِنَ اللَّهِ تَعَالَى)). قَالُوا يَا رَسُولَ اللَّهِ تُخْبِرُنَا مَنْ هُمْ. قَالَ: ((هُمْ قَوْمٌ تَحَابُّوا بِرُوحِ اللَّهِ عَلَى غَيْرِ أَرْحَامٍ بَيْنَهُمْ وَلاَ أَمْوَالٍ يَتَعَاطَوْنَهَا فَوَاللَّهِ إِنَّ وُجُوهَهُمْ لَنُورٌ وَإِنَّهُمْ عَلَى نُورٍ لاَ يَخَافُونَ إِذَا خَافَ النَّاسُ وَلاَ يَحْزَنُونَ إِذَا حَزِنَ النَّاسُ)). وَقَرَأَ هَذِهِ الآيَةَ: {أَلاَ إِنَّ أَوْلِيَاءَ اللَّهِ لاَ خَوْفٌ عَلَيْهِمْ وَلاَ هُمْ يَحْزَنُونَ} இறை அடியார்களில் சிலர் உள்ளனர். அவர்கள் நபிமார்களுமல்லர் ஷுஹதாக்களுமல்லர் ஆனால் நபிமார்களும்.  ஷுஹதாக்களும் அவர்களை( அவர்களின் அந்தஸ்தை பார்த்து  ரோஷம் கொள்வர் ) பெருமையாக கருதுவர் என நபிகள் நாயகம் ( ஸல்) அவர்கள் நவின்றார்கள். அப்போது அன்னாரின் நண்பர்கள் யாரசூலல்லாஹ்  யார் அவர்கள்?  என்று எங்களுக்கு அறிவிப்பீர்களாக! என்றார்கள்.  தங்களுக்கிடையேயுள்ள உறவின் காரணமாகவோ. அல்லது கொடுக்கல் வாங்கலின் காரணமாகவோ அல்லாமல் இறைவனின் தொடர்புக்காக அன்பு செலுத்தக்கூடியவர்கள் அவர்கள். அவர்களின் முகங்கள் பிரகாசமாக இருக்கும். அவர்கள் ஒளியின் மீதிருப்பார்கள். மக்களெல்லாம் பயப்படும் சந்தர்ப்பங்களில் இவர்கள் பயப்படமாட்டார்கள். மக்கள் கவலைப்படும் வேளைகளில் இவர்கள் கவலைப்பட மாட்டார்கள் என நபிகள் நாயகம் ( ஸல்) அவர்கள் நவின்று "அலா இன்ன அவ்லியா அல்லாஹி லா கவ்புன் அலைஹிம்  வலாஹும் யஹ்ஸனூன் " என்ற திருவசனத்தை ஓதிக் காட்டினார்கள்  (நூல்: அபூதாவூத்) வலிமார்கள் . என்றால் யார் ? *********************************** الَّذِينَ آمَنُوا وَكَانُوا يَتَّقُونَ (63)) 10:63 . அவர்கள் ஈமான் கொண்டு  (முழுமையாக தக்வா-) பயபக்தியுடன் நடந்து கொள்வார்கள். 10:64 . இறைநேசர்கள் என்றால் அல்லாஹ்வின் நெருக்கத்தை பெற்றுத்தருகிற நல்லறங்களில் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டிருப்பார்கள். அல்லாஹ்வின் வெறுப்பைப் பெற்றுத்தருகிற தீய செயல்களில் ஈடுபடாமல் தொடர்ந்து தங்களை தற்காத்துக் கொண்டிருப்பார்கள் என்று இமாம் முல்லா அலிகாரீ (ரஹ்)  வர்கள் தங்களின் ஷரஹ்ஃபிக்ஹூல் அக்பர்  எனும் நூலில் ( பக்கம் 95 )குறிப்பிடுகிறார்கள்.. இறைநேசர்கள் எனும் வலிமார்கள்  இரண்டு விஷயங்களை மிகவும் உயர்வாக  கருதினார்கள் அதற்காகவே, தங்களின் வாழ்க்கையை அல்லாஹ்விற்காக  சாதிக்கும் சாதனைத் தளமாக மாற்றியமைத்தார்கள். 1. அல்லாஹ் தான் படைத்திருக்கின்ற   கோடான கோடி படைப்புக்களில்  தம்மை மனிதனாக படைத்தமைக்காக... 2. அத்தகைய மனிதர்களில் மிகச்  சிறப்பாக தம்மை தேர்ந்தெடுத்து,  ஹிதாயத் எனும் நற்பேற்றினை  வழங்கியமைக்காக... தங்களின் வாழ்நாள் முழுவதும்  இறைநேசத்தைப் பெற்றுத் தருகிற அத்துனை தளங்களிலும் தம்மை அல்லாஹ்விற்காக முழுமையாக  ஒப்படைத்து விட்டிருந்தார்கள். وفي تفسير ابن كثير : حديث مرفوع كما قال البزار عن سعيد بن جبير، عن ابن عباس قال: قال رجل: يا رسول الله، مَنْ أولياء الله؟ قال: "الذين إذا رءُوا ذُكر الله". ثم قال البزار: وقد روي عن سعيد مرسلا. யாரைப் பார்த்தால் இறைவனின் ஞாபகம் வருமோ அவர்கள் தான் இறை நேசச் செல்வராவார். இத்தகைய இறை நேசர்களுடன் தொடர்பு வைக்க வேண்டும் ********************************************************* يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَكُونُوا مَعَ الصَّادِقِينَ (119) “ஈமான் கொண்ட விசுவாசிகளே! நீங்கள் அல்லாஹுவை அஞ்சுங்கள்(தக்வா செய்யுங்கள்) மேலும் சாதிக்கீன்களுடன் (தோழமை கொண்டு ) இருங்கள்”.(9:119) என்னும் திருவசனமும் வலியுறுத்துகிறது. . ﻋﻦ ﺍﺑﻲ ﻫﺮﻳﺮﺓ ﺍﻥ ﺍﻟﻌﻴﻦ ﻟﺘﺪﺧﻞ ﺍﻟﺮﺟﻞ ﺍﻟﻘﺒﺮ                ‏( ﺭﻭﺍﻩ ﺍﺑﻦ ﻣﺎﺟﻪ) நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : கண் திருஷ்டி ஒருவனை கப்ரில் நுழைத்து விடும் (அறிவிப்பவர் : அபூ ஹூரைரா ரலி நூல் : இப்னு மாஜா ) இந்த ஹதீஸை கொஞ்சம் கவனமாக பாருங்கள் இதில் மிகப் பெரிய விளக்கம் இருக்கிறது ! ஒரு சாதாரண மனிதனுடைய தீய பார்வைக்கே ஒருவனை மௌத்தாக்கும் (மரணத்தைஏற்படுத்தும்) சக்தி இருக்குமானால்  ஏன் ?......  இறைநேசம் பெற்ற இறைநேசர்களின் அன்பு பார்வைக்கு அவன் வாழ்வை சீர்திருத்தம் பெற செய்யும் ஆற்றல் இருக்காதா ? இறைநேசச் செல்வர்களின் வரலாற்றை வாசிப்பது ******************************************************* அல்குர்ஆனில் அல்லாஹ் சுமார் 1000 வசனங்களின் மூலம் முன்னோர்களான நபிமார்கள், அவர் தம் சமுதாயத்தினர் வரலாறு குறித்தும், ஸாலிஹீன்களான இறைநேசர்கள் குறித்தும் எடுத்துக் கூறுகின்றான். சில சமயம்  வரலாற்றை துவங்குகிற போதும், சில நேரம் வரலாற்றை முடிக்கிற போதும் திண்ணமாக, இவ் வரலாற்றில் அறிவுடையோருக்கு நல்ல பல சான்றுகளும், படிப்பினைகளும் இருப்பதாகக் கூறுகின்றான். ”கஹ்ஃப் குகை வாசிகள், மர்யம் அலைஹிஸ்ஸலாம், லுக்மான் அலைஹிஸ்ஸலாம், சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவையில் இருந்த நல்லடியார், மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் தாயார், துல்கர்னைன் அலைஹிஸ்ஸலாம், யாஸீன் சூராவில் கூறப்படும் இளைஞரான இறைநேசர், ஃபிர்அவ்னின் மனைவி ஆஸியா அலைஹிஸ்ஸலாம், சூரா மஆரிஜில் கூறப்படும் அஸ்ஹாபுல் உஃக்தூத்” என ஈமானில் ஏற்றத்தையும் தாக்கத்தையும் உண்டு பண்ணுகிற இறைநேசர்களின் வாழ்க்கையை அல்லாஹ் குர்ஆனில் கூறி வாசிக்கத் தூண்டுகின்றான். இறைநேசர்களின் வரலாறுகளை வாசிப்பதால் மாசடைந்த நம் இதயங்கள் தூய்மை பெறுகின்றன. ஈமானின் நிலை உயர்வை அடைகின்றன. நல் அமல்களின் தரம் ஏற்றம் பெறுகின்றன. முக்கிய வலிமார்கள் சிலரின் வாழ்க்கைக் குறிப்பும் அவர்கள் ஆற்றிய சேவைகளும் ******************************************** இந்த நல்லடியார்கள் நமக்கு இறையச்சத்தையும் இறைத்தூதரின் மீது பற்றையும் மார்க்கத்தின் மீது பிடிப்பையும் உருவாக்கினார்கள். தாம் வாழ்ந்த காலத்தில் மக்களை நல்வழிப்படுத்த அதிக முயற்சி செய்தார்கள். * மக்களை இஸ்லாத்திற்கு அழைத்தார்கள். * முஸ்லிம்களுக்கு சரியான மார்க்கத்தை சொல்லிக் கொடுத்தார்கள். *அல்லாஹ்வின் நெருக்கத்தை பெற வழி காட்டினார்கள். *சமூக சீர்திருத்தப் பணிகள் பலவற்றை திறம்படச் செய்தார்கள். *அரசியல் ரீதியாகவும் முஸ்லிம்களின் முன்னேற்றத்திற்காக உழைத்தார்கள். *அக்கிரமச் சக்திகளுக்கு எதிராக போராடினார்கள். 1) முஹ்யுத்தீன் அப்துல் காதிர் ஜீலானி ( ரஹ்) ******************************** வலிமார்களுக்கெல்லாம் தலைவர் என்று போற்றப்படும் அப்துல்காதிர் ஜீலானி ( ரஹ்) அவர்கள் அபூசாலிஹ் ஸய்யித் மூஸா ( ரஹ்) உம்முல்கைர் ஃபாத்திமா ( ரஹ்) தம்பதிகளின் திருமகனாக ஹிஜ்ரி 470 ரமளான் பிறை 1.கி.பி 1078 மார்ச் 19 ம் தேதி திங்கட்கிழமை அதிகாலையில் ஜீலான் என்ற ஊரில் பிறந்தார்கள். . இவர்கள் தனது 91 ம் வயதில் ஹிஜ்ரி 561 ரபியுல் ஆகிர் பிறை 11 கி.பி 1166 பிப்ரவரி 14 அன்று திங்கட்கிழமை பக்தாதில் வஃபாத் ஆனார்கள். சிறு வயதிலேயே தந்தையை இழந்து தாய் வளர்ப்பில் வளர்ந்தார்கள்.  9 வயதில் குர்ஆனை மனனம் செய்தார்கள் பிறகு மேற்படிப்புக்காக  அவர்களின் தாயார் பக்தாத் நகரின் புகழ் பெற்ற நிஜாமிய்யா அரபிக்கல்லூரியில் கல்வி கற்க அவர்களை அனுப்பி வைத்தார்கள். இளம் வயதிலேயே பிரபல்யமாகிவிட்ட கௌஸுல் அஃளம் அவர்களை பல்கலைக் கழகத்தில் சேரவிடாமல் தடுக்க சிலர் முயற்சி செய்தனர். நிஜாமிய்யா பல்கலைக் கழகத்தின் முதல்வராக இருந்த இமாம் கஜ்ஜாலி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் அப்போதுதான் மூன்று மாதங்களுக்கு முன்பு பதவியை இராஜினாமா செய்து விட்டு ஆன்மீக கல்விகற்க ஷைகை தேடி சென்றுவிட்டார்கள். தற்போது அபூஜகரிய்யா யஹ்யத் தப்ரீஜ் என்பவர்கள் அப்போது முதல்வராக இருந்தார்கள். கௌஸ் நாயகத்தின் ஒளிமயமான முகத்தைப் பார்த்து அசந்து விட்டார்கள். கௌஸுல் அஃளம் அவர்களுக்கு மதரஸாவில் இடமில்லை என்பதை சூசகமாக சொல்லும் வகையில் ஒரு பாத்திரம் நிறைய தழும்ப தழும்ப தண்ணீரைக் கொண்டு வந்து வைத்தார்கள். உடனே கௌஸுல் அஃளம் அவர்கள் தோட்டத்திற்குச் சென்று ரோஜா பூக்களைப் பறித்து வந்து தண்ணீரில் போட்டார்கள். அதாவது பக்தாதில் ஷரீஅத்துடைய இல்மை கற்ற நிறைய அறிஞர் பெருமக்கள் இருக்கிறார்கள் நீங்கள் வேறு ஊருக்கு செல்லுங்கள் என்ற அர்த்தத்தில் தண்ணீரை வைத்தார்கள்.  ஷரீஅத்துடைய இல்மு மட்டும் போதாது அதை மணமாக்கக்கூடிய இர்ஃபான் என்கிற ஆன்மீக இல்மும் வேண்டும் அதற்காகவே நான் அனுப்பப்பட்டுள்ளேன் என்பதை உணர்த்தவே தண்ணீரில் ரோஜாவை தூவினார்கள். அவர்களின் அறிவு ஞானத்தைக் கண்டு திகைத்துப்போன முதல்வர் அவர்கள் உடனே அவர்களை கல்லூரியில் சேர்த்துக் கொண்டார்கள். கௌஸ் நாயகம் வருகையால் பக்தாத் பல்கலைக் கழகம் உலகப் புகழ்பெற்றதாக மாறியது இன்று வரை உலகம் முழுவதுமுள்ள 90% அரபிக்கல்லூரிகளில் நிஜாமிய்யா பாடத்திட்டங்களே ஓதிக்கொடுக்கப்படுகின்றன. நூல்: பஜ்ஹத்துல் அஸ்ரார் பக்தாத் நிஜாமிய்யா பல்கலைக்கழகத்தில்சேர்ந்த  முஹ்யுத்தீன் அப்துல் காதிர் ஜீலானி ( ரஹ்) அவர்கள் பல்லாண்டுகள் ஹதீஸ். பிக்ஹ் கலைகளை கற்றுத் தேர்ந்தார்கள். பின்பு இறைஞானக் கல்வியை கற்க விரும்பி ஷைகு என்னும் குருவை தேடி அழைந்தார்கள். இறுதியில் அபுல்கைர் ஹம்மாத் ( ரலி) அவர்களின் சீடராகி மூன்று வருடங்கள் இறைஞான கல்வி கற்றார்கள். அவருடைய காலத்தில் அப்பாஸிய கலீபாக்களின் ஆட்சி நடந்து கொண்டிருந்தது. உலகில் முஸ்லிம்கள் மிகுந்த செல்வாக்கோடு வாழ்ந்த காலம் அது. கல்வி, கலை,அறிவியல்,மருத்துவம். என முக்கியத்துறைகள் அனைத்திலும் முஸ்லிம்கள் சிறந்து விளங்கினார்கள். மற்றவர்கள் தமது தேவைகளுக்காக முஸ்லிம் நாடுகளையே நம்பியிருந்த காலம் அது. அங்கே இரண்டு வகையான தீமைகள் பெருகி வந்தன. 1.அறிவியல் துறையில் முன்னேறிக் கொண்டிருந்த முஸ்லிம்கள் மார்க்கத்தின் உயிரோட்டமான ஆன்மீக சிந்தனைகளிலிருந்து விலகிச் சென்று கொண்டிருந்தார்கள். படிப்பறிவு மேலோங்கி பக்தி குறைந்து கொண்டிருந்த்து. 2.ஆன்மீக வாதிகள் என்று அறியப்பட்டோர் ஷரீஅத்தின் சட்ட விதிகளுக்கு அப்பாற்பட்டவர்களாக செயல்பட்டுக் கொண்டிருந்தனர். இந்த இரண்டு சூழ்நிலைகளையும் அடியோடு மாற்றினார் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்)அவர்கள் ஞானம் மிக்க அவரது உபதேசங்கள் மனித உள்ளங்களை தட்டி எழுப்பி மார்க்கத்தின் பாதைக்கு அழைத்து வந்தன. கணக்கிலடங்காதோர் அவரால் நேர் வழி பெற்றனர். அவரது உரையை கேட்க ஒரு சமயம் பக்தாது நகருக்கு 90 ஆயிரம் பேர் திரண்டதாக வரலாறு சொல்கிறது. அந்த சபையை பற்றி ஆச்சரியமூட்டும் வகையில் பேசப்படுகின்றன. ஏராளமானோர் அவரது பேச்சில் திருந்தினர். அதனால் மக்கள் அவரை பேராசானாக போற்றினர். ஒரு முக்கியமான காலகட்டத்தில் முஸ்லிம் சமூகத்தின் மனப் போக்கை மார்க்கத்தை நோக்கி திருப்பியதால் தான் அவர் முஹ்யுத்தீன் என்று அழைக்கப்பட்டார். சிக்கலுக்கு தீர்வு தந்த செம்மல் *********************************** மாபெரும் மாமேதைகளால் கூட தீர்வு காண முடியாத பல சிக்கலான சட்டப்பிரச்சனைகளுக்கும் மகான் முஹ்யுத்தீன் அப்துல்காதிர் ஜீலானி ( ரஹ்) அவர்கள் எளிதாக தீர்ப்பு வழங்கும் திறன் பெற்றிருந்தார்கள். ஒரு மனிதர் விநோதமான சத்தியம் ஒன்றைச் செய்துவிட்டார்.  உலகிலே எவரும் செய்ய முடியாத வணக்கத்தை நான் நிறைவேற்றத் தவறினால் என் மனைவியை மூன்று தலாக் சொன்னவனாவேன். என்பதே அந்த சத்தியம். இது சாத்தியமாகாது எனவே அவர் மனைவி முத்தலாக்தான் என்று எல்லா மேதைகளும் தீர்ப்புக் கூறினார்கள். கடைசியாக இம்மாமேதையிடம் இக்கேள்வி வந்தது.  இதில் ஏன் தடுமாற்றம்.  அந்த மனிதனை புனித மிகு பைத்துல்லாஹ்வை தன்னந்தனியாக 7 சுற்று தவாஃப் செய்யச் சொல்லுங்கள். அவரது சத்தியம் நிறைவேறும் மனைவியும் தலாக் ஆகமாட்டாள் என்று உடனே பதில் சொன்னார்கள். இந்த பதிலைக் கேட்டு இராக்கின் உலமாக்கள் அனைவரும் ஆச்சர்யப்பட்டார்கள். ( தவாப் செய்ய எப்போதும் நெருக்கடி இருக்கும் தன்னந்தனியாக தவாஃப் செய்வது என்பது யாரும் செய்யாத அமலாகும்.) 2) புளைல் இப்னு இயாள் (ரஹ்) அவர்கள். ******************************************* வரலாற்று ஆசிரியர்களால்,ஹதீஸ்கலை வல்லுனர்களால் பெரிதும் மதிக்கப்படுவார்கள். அவர்கள் வாழ்வில் ஏற்பட்ட மாற்றம்.. فضيل بن عياض، أبو على، أحد الأقطاب، ولد بخراسان، بكورة أبيورد، وقدم إلى الكوفة وهو كبير، فسمع بها الحديث. ثم تعبد وانتقل إلى مكة، وجاور بها، إلى أن مات، سنة سبع وثمانين ومائة. وأفرد ابن الجوزى ترجمته بالتأليف وكان شاطراً، يقطع الطريق بين أبيورد وسرخس. وسبب توبته أنه كان يعشق جارية، فبينما هو ذات يوم يرتقى الجدران إليها، إذ سمع تالياً يتلو: )ألم يأن للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله وما نزل من الحق( فقال: " بلى!. والله يارب! قد آن " . فرجع، فآواه الليل إلى خربة، فإذا فيها رفقة، فقال بعضهم: " نرتحل " . وقال بعضهم: " حتى نصبح، فان فضيلا على الطريق " . فآمنهم، وبات معهم. ورجع إلى خربة فبات بها فسمع سفارا يقولون: خذوا حذركم إن فضيلا أمامكم يقطع الطريق، فأمنهم واستمر على توبته حتى كان منه ما كان من السيادة والعبادة والزهادة، ثم صار علما يقتدى به ويهتدى بكلامه وفعاله ஹிஜ்ரி 107-ல் பிறந்து ஹிஜ்ரி – 187-ல் மறைந்தார்கள். தஸவ்வுஃப் கலையில நிகரற்று விளங்கியவர்கள். ஆனால் ஒரு காலத்தில், தூரத்து தேச மக்களே இவர் பெயரைக் கேட்டால் அஞ்சி நடுங்குவார்கள். பயங்கரத் திருடர் 'தாரீகி திமிஷ்க்' எனும் நூலின் ஓர் அறிவிப்பில்,இவர்களைப் பற்றி ஒரு நிகழ்வு பதியப்பட்டுள்ளது. ஒரு நாள் ஒரு இடத்திற்கு திருடச் சென்றார் ஃபுளைல்,அங்கே ஒரு வியாபாரக் கூட்டத்தினர் இப்படிப் பேசிக் கொண்டார்கள். இங்கே ஃபுளைல் என்றொரு திருடர் இருக்கின்றாராம். எவ்வளவு தான் பாதுகாப்பாக இருந்தாலும், கன நேரத்தில், அசால்ட்டாக திருடி விட்டுச் சென்றிடுவாராம். எனவே, ரொம்ப உஷாராக இருக்க வேண்டும். என்று பேசிக் கொண்டார்கள். தூரத்தில் நின்று இதைக் கேட்டுக் கொண்டிருந்த ஃபுளைல் திடுக்கிட்டார். வெட்கித் தலை குனிந்தார். அவர்களின் அருகே வந்த ஃபுளைல் நீங்கள் பயப்படவேண்டாம் இன்று இரவு முழுவதும் உங்களுக்கு நான் காவல் இருக்கின்றேன். ஃபுளைல் இடம் இருந்து உங்கள் பொருளை நான் பாதுகாக்கிறேன். என்றார் வியாபாரக் கூட்டத்தினர் உறங்கினார்கள் இரவில் விழித்துக்கொண்டிருந்த ஃபுளைல் சிந்திக்க ஆரம்பித்தார். ஆம்! நாம் மாறினால் என்ன? நம் செயலைக் கண்டு மக்கள் இப்படி அச்சப்பட்டு இரவெல்லாம் தூங்காமல் நிம்மதியிழந்து துன்பப்படுகின்றார்களே! ஆம்! இனி நான் திருட மாட்டேன் என உறுதி கொண்டார். காலை நேரம் வியாபாரிகள் சில அன்பளிப்புகளை ஃபுளைலிடம் கொடுத்து விடைபெறுகிற போது இரவெல்லாம் கண்விழித்து எங்களின் பொருட்களையெல்லாம் பாதுகாத்த தாங்களின் பெயர் என்னவோ? என்றார்கள் நான் தான் நேற்றிரவு நீங்கள் பயந்து கொண்டிருந்த ஃபுளைல் என்று கூறிவிட்டு, என்னை குறித்து நீங்கள் பேசியதை நான் கேட்ட போதே நான் மாற வேண்டும் என முடிவெடுத்தேன் என்றார் ஃபுளைல். இதை இப்னு அஸாகிர் (ரஹ்) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (நூல் தாரீகீ திமிஷ்க் பாகம் 48, பக்கம்-384) என்றாலும் அந்த நிலைப்பாட்டில் உறுதியாக இருக்க முடியாமல் மீண்டும் திருட ஆரம்பித்தார்கள். இப்ராஹீம் இப்னு அஷ் அஸ் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள் ஒரு நாள் இரவு நேரம் ஒரு வீட்டில் சுவர் ஏறி குதித்து திருட முயன்ற போது அங்கே ஒரு பெண்மணி குர்ஆன் ஓதிக்கொண்டிருந்தார். திருடச் சென்ற ஃபுளைல் செவி தாழ்த்தி கேட்க ஆரம்பித்தார். اَلَمْ يَاْنِ لِلَّذِيْنَ اٰمَنُوْۤا اَنْ تَخْشَعَ قُلُوْبُهُمْ لِذِكْرِ اللّٰهِ وَمَا نَزَلَ مِنَ الْحَـقَِّۙ‏  ஈமான் கொண்டார்களே அவர்களுக்கு, அவர்களுடைய இருதயங்கள் அல்லாஹ்வையும், இறங்கியுள்ள உண்மையான (வேதத்)தையும் நினைத்தால், அஞ்சி நடுங்கும் நேரம் (இன்னும்) வரவில்லையா? எனும் 57-ம் அத்தியாயத்தின் 16-ம் வசனத்தை கேட்டதும் இதோ வந்துவிட்டேன் என் இறைவா? இதோ உருகிவிட்டேன் என் இறைவா? இதோ பணிந்துவிட்டேன் என் இறைவா? என் பாவங்களை மன்னித்துவிடு! என் – குற்றங்களை பொறுத்து விடு! என்றார். ஃபுளைல் மாறினார்! ஆம்! நம்பத் தகுந்த ஆலிமாக, சுஃப்யான் இப்னு உயைனா ,ஷாபிஈ,  இப்னுல் முபாரக் ஹூமைதீ, ஸவ்ரீ பிஷ்ருல் ஹாபி போன்ற ஈடு இணையில்லா மார்க்க ஞானிகளின் ஆசானாக, நஸாயீ, தஹபீ போன்ற ஹதீஸ் கலா வல்லுநர்களின் வலுவான ஆதாரமாக மாற்றம் பெற்றார். ஏற்றம் பெற்றார். (நூல்- ஸியரு அஃலாமின் நுபலா,   பாகம்-13,பக்கம்-59எண்-3793) 3) காஜா முயீனுத்தீன் சிஷ்தி ( ரஹ்) ******************************************* குத்புல் ஹிந்த் ( இந்தியாவின் வலிமார்களின் தலைவர்) என்று போற்றப்படும் காஜா முயீனுத்தீன் ( ரஹ்) அவர்கள் ஹிஜ்ரி 530 ரஜப் பிறை 14 கி.பி 1116 ஏப்ரல் 28 வெள்ளிக்கிழமை காலை குராசான் என்ற ஊரில் பிறந்தார்கள். சிறுவயதிலேயே தாயை இழந்த அவர்கள் தனது 15 ம் வயதில் தந்தையையும் இழந்தார்கள். ஷைகு உஸ்மான் ஹாரூனி அவர்களின் ஆன்மீக மாணவராகி இரண்டு ஆண்டு காலம் ஆன்மீக  கல்வி கற்றார்கள். பின்பு தீனை எத்திவைப்பதற்காக இந்தியா வந்தவர்கள் டெல்லியிலிருந்து அஜ்மீருக்கு சென்ற ஒரே பிரயாணத்தில் இவர்களின் ஆன்மீக உரையால் 80 ஆயிரம் நபர்கள் இஸ்லாத்தை ஏற்றார்கள். 4) அஹ்மது கபீர் ரிஃபாயீ (ரஹ்) ********************************* அஹ்மது கபீர் ரிஃபாயீ (ரஹ்) அவர்கள் தம் தவமடத்தில் திங்கள்  வியாழன் தவிர ஏனைய நாட்கள் ஃபிக்ஹு, தப்ஸீர்,ஹதீது ஆகியவற்றைத் தம் சீடர்களுக்கு கற்றுக்கொடுப்பார்கள். திங்களும், வியாழனும் லுஹர் தொழுகைக்குப் பின் நாற்காலியில் அமர்ந்து மக்களுக்கு உபதேசம் செய்வார்கள். லட்சக்கணக்கான மக்கள் அந்த  உபதேசம் கேட்டு நன்மை அடைவார்கள். ரிபாயி அவர்கள் தன் முரீத் அப்துஸ் ஸமீஉ (ரஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்களுக்கு எழுதிய அறிவுரைகள் ‘ஹிகமுர் ரிபாயி’ என்னும் பெயருடன் விளங்குகின்றன. இத்தகைய இறைநேசர்களான நல்லோரின் நேசமும் நன்மை தரும் ஆதலால் தான் நபிகள் நாயகம் ( ஸல்) அவர்கள் அடிக்கடி இப்படி துஆ செய்வார்களாம். عن أَبي الدَّرداءِ ، قَالَ: قَالَ رَسولُ اللَّهِ ﷺ: كانَ مِن دُعاءِ دَاوُدَ صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم: "اللَّهمَّ إِنِّي أَسْأَلُكَ حُبَّكَ، وَحُبَّ مَنْ يُحِبُّكَ، (رواه الترمذي) யா அல்லாஹ் உனது நேசத்தையும் உன்னை நேசிப்போரின் நேசத்தையும் உன்னிடம் நான் கேட்கிறேன் என பிரார்த்திப்பார்கள். இறை நேசர்களின் வாழ்வினிலிருந்து படிப்பினை ******************************************** உண்மையான முஃமின்களைப் பொருத்தவரை அவர்களின் வாழ்வின் நோக்கம் இறைப் பொருத்தத்தைப் பெறுவது தான் எனவே நம்முடைய முன்மாதிரிகளாக இறை நேசர்கள் திகழ்கிறார்கள்.... மனிதன் படைக்கப் பட்ட நோக்கமே இறைவனை வணங்குவதற்காகத் தான் என படைப்பின் தத்துவத்தை மனிதகுலத்திற்கு இறை நேசர்கள் ஞாபகமூட்டிக் கொண்டே இருக்கிறார்கள். அவ்லியாக்களின் பெயரால் அனாச்சாரங்கள் *************************************** கப்ரு ஜியாரத் செய்வது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட ஒரு சுன்னத்தான செயலாகும். நபி( ஸல்) அவர்களும் அதற்கு அனுமதி வழங்கியுள்ளார்கள். 2304- عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ زَارَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَبْرَ أُمِّهِ فَبَكَى وَأَبْكَى مَنْ حَوْلَهُ فَقَالَ: ((اسْتَأْذَنْتُ رَبِّي فِي أَنْ أَسْتَغْفِرَ لَهَا فَلَمْ يُؤْذَنْ لِي وَاسْتَأْذَنْتُهُ فِي أَنْ أَزُورَ قَبْرَهَا فَأُذِنَ لِي فَزُورُوا الْقُبُورَ فَإِنَّهَا تُذَكِّرُ الْمَوْتَ)). صحيح مسلم 1777. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் தம் தாயாரின் அடக்கத்தலத்தைச் சந்தித்தபோது அழுதார்கள்; (இதைக் கண்டு) அவர்களைச் சுற்றியிருந்தவர்களும் அழுதனர். அப்போது அவர்கள், ”நான் என் இறைவனிடம் என் தாயாருக்காகப் பாவமன்னிப்புக் கோர அனுமதி கேட்டேன்.  எனக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அவரது அடக்கத்தலத்தைச் சந்திப்பதற்கு அனுமதி கேட்டேன். எனக்கு அனுமதி வழங்கினான். எனவே, அடக்கத்தலங்களைச் சந்தியுங்கள். ஏனெனில், அவை மரணத்தை நினைவூட்டும்!” என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 11. இறுதிக் கடன்கள் அதே நேரத்தில் சுன்னத்தான ஜியாரத்தை நிறைவேற்றுகின்றோம் என்ற பெயரில் ஹராம், ஷிர்க் கலந்து விடக் கூடாது. சில இறைநேசர்களின் அடக்கஸ்தலங்களில் ஒரு சிலர் ஜியாரத் என்ற பெயரில் இறைநேசர்களிடம் நீங்கள்தான் என்னுடைய தேவையை பூர்த்தி செய்ய வேண்டும் வியாதியை குணப்படுத்தவேண்டும் என்று கேட்பதும். மண்ணரையில் விழுவதும். குழந்தைகளை கீழேபோட்டு உருட்டிவிடுவதும். தொட்டு முத்தமிடுவதும் நடைபெறுகின்றது. சில இடங்களில் பாட்டுக் கச்சேரிகள் நடத்துவது. மூக்கிலும் காதுகளிலும். நாவுகளிலும் வேல்குத்திக் கொள்வது போன்ற அனாச்சாரங்களும் நடைபெறுகின்றது. இவைகளெல்லாம் தடுக்கப்பட வேண்டும் உலமாக்கள் மக்களுக்கு ஜியாரத்தினுடைய முறையை கற்றுக் கொடுக்க வேண்டும். எனவே எல்லாம் வல்ல அல்லாஹ்  இறைநேசர்களை மதித்து அவர்கள் செய்த சேவைகளை நாமும் செய்து நாளை மறுமை நாளில் நபிமார்கள் வலிமார்களோடு சுவனத்தில் இருக்கும் பாக்கியத்தை நம் அனைவர்களுக்கும் தந்தருள்வானாக !
ஆமீன்
DAWOODI AALIMKAL SANGAMAM

рокிро░рокро▓்ропрооாрой рокродிро╡ுроХро│்