நம்முடன் இணைந்து இருப்பவர்கள்

வியாழன், ஜூன் 29, 2017

அன்னிய பெண்கள்,

அன்னிய பெண்களை
இன்டர்நெட், YouTube மூலமாக காணக்கூடாத காட்சிகளை வேண்டுமென்றே காணும்

நமக்கு ஒரு பாடம் ஹழ்ரத் தஹ்லாபா (ரலியல்லாஹூ அன்ஹூ) அவர்களுடைய வாழ்க்கை*

மிக குறுகிய காலமே வாழ்ந்த நபி தோழர் தஹ்லபா அவர்களின் சம்பவம் .

16 வயது நிரம்பி பாலகர் இந்த தஹ்லபா இப்னு அப்துர்ரஹ்மான்(ரலியல்லாஹூ அன்ஹூ)மிக அமைதியான குணம்.

நற்பண்புகள் நிறைந்தவர் பிறர் மீது கண்ணியம் செய்யும் குணம் உடையவர்கள்.

இவர்களின் பணி நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் கூறும் செய்திகளை நபித்தோழர்களிடம் கூறிவருவதாகும்.

அப்பணியை பெரும் பாக்கியமாக கருதி செய்து வந்தார்கள்

ஒரு சமயம் நபிஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் தஹ்லபா அவர்களை ஒரு தேவையை கூறி அதை நிறைவேற்ற அனுப்பி வைத்தார்கள் .

தஹ்லபா (ரலியல்லாஹூ அன்ஹூ) அவர்கள் செல்லும் வழியே
ஒரு வீடு ஒன்றை கடக்க முற்பட்டார்கள்.

அவ்வீடு ஏழ்மையின் காரணமாக கதவுகள் இல்லாமல் , .மாறாக வீட்டின் முன் துணியால்
திரையிடப்பட்டிருந்தது.

அப்போது காற்றில் அவ்வீட்டின் திரை விலகியது அங்கு ஒரு குளியலறையின் இருந்தது அதில் ஒரு பெண் குளித்து கொண்டிருந்தார்கள் .

அச்சமயம் தஹ்லபா அவர்களின் பார்வை அப்பெண்ணின் மீது விழ உடனே தன்பார்வயைத் திருப்பியவராக தஹ்லாபா (ரலியல்லாஹூ அன்ஹூ) “இறைவனிடமிருந்து பாதுகாப்பு தேடுகிறேன்” என்று கூறி அவ்விடத்தை விட்டு கடந்த தஹ்லபா அவர்களின் மனம் ஒரு பெரிய பாவத்தை செய்ததாக எண்ணியது .

தாம் ஒரு நபிஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் தோழர் ஒருவராக இருந்துகொண்டு ஒரு பெரும்பாவத்தை செய்துவிட்டேனே நபிகளாரின் முகத்தை பார்க்கும் அளவிற்கு தமக்கு தகுதி இல்லை என்றெண்ணினார்.

மேலும் இறைவன் தன்னை பற்றி வசனம் இறக்கிவிடுவான். அல்லது நபிகளார் தம்மை
நயவஞ்சகர்கள் கூட்டத்தில் என்னை சேர்ந்து விடுவார்கள் என்று அச்சப்பட்டார்கள்
தான் ஒரு பாவி என அழுதார்கள்.

எங்கே செல்வது? என்ன செய்வது?ஒன்றும் விளங்க வில்லை வீட்டிற்கு சென்றால் நபிஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் என்னை தேடி தோழர்களை அனுப்புவார்கள்.

நான் நபிகளாரை காண வேண்டியிருக்கும்
என்று எண்ணி நடக்க ஆரம்பித்தார்கள்

அவர்கள் எங்கு சென்றார்கள் என்று
யாருக்கும் தெரியவில்லை .

நபிகளார் கண்கள் ஒவ்வொரு தொழுகைக்கு பின்னும் தஹ்லபாவை தேடின, நபிகளார் தன்தோழர்களிடம் " தஹ்லபா எங்கே என்று கேட்க , தோழர்கள் "தெரிய வில்லையே யா ரசூலுல்லாஹ் அவர்களோ விளையாட்டு பருவமுடையவர் எங்காவது சிறுவர்களுடன்
விளையாட சென்றிருப்பார், அல்லது அவர்களின் வீட்டில் இருப்பார் என்று கூறினார்கள் .

நாட்கள் உருண்டோடியது. நபிஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் உமர் ரலியய்யாஹூ அன்ஹூ ,சல்மான் பாரிஸ்  (ரலியல்லாஹூ அன்ஹூ) போன்றோரை அழைத்து தஹ்லபா (ரலியல்லாஹூ அன்ஹூ) அவர்களைதேட அனுப்பினார்கள் .

அத்தோழர்கள் மதீனா மாநகரம் முழுவதும் தேடியும் தஹ்லபா (ரலியல்லாஹூ அன்ஹூ) அவர்கள் கிடைக்கவில்லை

இறுதியாக மக்காவிற்கும்,மதீனாவிற்கும்
இடையே உள்ள மலையின் அடிவாரத்தை அடைந்த தோழர்கள் அங்கு ஆடுமேய்க்கும், மக்களிடம் தஹ்லபாவின் அங்க அடையாளம் மற்றும் வயது கூறி விசாரிக்க அம்மக்களில் ஒருவர் "நீங்கள் அந்த அழுதுகொண்டே இருக்கும் பாலகரையா வினவுகிறீர்கள்.

கடந்த 40 நாட்களாக இந்த மலையிலிருந்து
அவர் சூரியன் மறையும் நேரத்தில் கடுமையாக அழுது கொண்டே கீழிறங்கி வருவார்.

நாங்கள் எங்களிடம் உள்ள செம்மறி ஆட்டின்
பாலை கொடுப்போம் அதை குடித்துவிட்டு மறுபடியும் அழுதுக்கொண்டே மலைக்கே சென்றுவிடுவார்கள்.

சத்தியமாக அப்பாலகரிடம் அழுகையை தவிர வேறுஎதையும் நாங்கள் கேட்டதில்லை
என்றது உமர் (ரலியல்லாஹூ அன்ஹூ) திகைத்து போனார்
மாலைநேரம் ஆகும் வரை தஹலபாவிர்க்காக காத்திருந்த நபி தோழர்கள் அவர்களை பெற்றுக்கொண்டனர்.

அவருடைய அழுகையால் உடல் மெலிந்து நோய்வாய்பட்டவராய் மிக மோசமான உடல் நிலையில் கந்தளான ஆடையுடம் தஹ்லபாவை கண்டனர்.

உமர் (ரலியல்லாஹூ அன்ஹூ) சல்மான் பாரிஸ் (ரலியல்லாஹூ அன்ஹூ) மேலும் இன்ன பிற தோழர்களை கண்ட தஹ்லாபா (ரலியல்லாஹூ அன்ஹூ) மலையை நோக்கி நடக்க முற்பட்டார்கள்.

அப்போது உமர் (ரலியல்லாஹூ அன்ஹூ) அவர்களை தடுத்து நிறுத்தவே தஹ்லாபா (ரலியல்லாஹூ அன்ஹூ) அவர்கள் “உங்களுக்கு என்ன வேண்டும் ? “ என வினவ
உமர் (ரலியல்லாஹூ அன்ஹூ) “உன்னை நபி (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் ) அவர்கள் உன்னை அழைத்து வர சொன்னார்கள் “
என்றார் .

உடனே தஹ்லாபா (ரலியல்லாஹூ அன்ஹூ) “என்னை பற்றி ஏதும் இறைவசனம் இறங்கியதா ? அல்லது
என்னை நயவஞ்சகளோடு நபிகளார் சேர்த்து சொன்னார்களா ? என்று வினவ,
உமர் (ரலியல்லாஹூ அன்ஹூ) “நாங்கள் அப்படி ஓன்று அறிய வில்லை உன்னை பற்றி நபிகளார்
கவலைகொண்டுள்ளார்கள் உன்னை காண ஆவலாக உள்ளார்கள்’ என்று கூறினார்கள் .

அதற்க்கு தஹ்லபா ரலியல்லாஹூ அன்ஹூ “இல்லை நான் நபிகளாரை சந்திக்கும் அருகதை அற்ற பாவியாக உள்ளேன் என்னை விட்டுவிடுங்கள் நான் இந்த மலையிலேயே கிடந்து இறந்து விடுகிறேன் “ என்று கூறினார்கள் .

அதற்கு நபி தோழர்கள் “இல்லை உன்னை இந்த நிலையில் விட்டு செல்ல முடியாது .உன் உடல்நிலை மோசமாக உள்ளது என்று அவர்களை அப்படியே தூக்கி சென்று அவர்களின் வீட்டில் படுக்கவைத்தனர்
அப்போதும் தஹ்லாபா (ரலியல்லாஹூ அன்ஹூ) அழுது கொண்டே இருந்தார்கள் .

உமர் (ரலியல்லாஹூ அன்ஹூ) நபிகளிடம் வந்து “ யா ரசூலுல்லாஹ் ! தஹல்பாவை நாங்கள் மதீனாவின் மலை பகுதி அடிவாரத்தில் பெற்றுக்கொண்டோம் ,அவரின் உடல் நிலை மிக மோசமாக என்று கூறினார்கள்

உடனே நபிகளார் தஹ்லபாவின் வீட்டிற்க்கு வர நபி வருவதை அறிந்து தஹ்லாபா (ரலியல்லாஹூ அன்ஹூ)
படுக்கையிலிருந்து தலையை உயர்த்தினார்கள் .

நபி (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் தஹ்லபாவின் மிக அருகில் அமர்ந்து தஹ்லபாவின் தலையை
நபிகளாரின் திருமடியில் வைத்தார்கள் ,
அப்போது தஹ்லபா (ரலியல்லாஹூ அன்ஹூ) “ யா ரசூலல்லாஹ் ! என் தலையை தரையில் கிடத்திவிடுங்கள் இந்த பாவியின் தலை உங்கள் கண்ணியம் பொருந்திய மடியில் இருக்க அறுகதையற்றது என்று அழ ஆரம்பித்தார்கள்

அதற்க்கு நபிகளார் முடியாது என மறுத்தார்கள் ,மீண்டும் தஹலாபா (ரலியல்லாஹூ அன்ஹூ) யா ரசூலல்லாஹ் ! என் தலையை தரையில் கிடத்திவிடுங்கள்” என கூறி அழுதுகொண்டே இருந்தார்கள்.

அப்போது நபிகளார் “ தஹ்லபா உனக்கு என்ன நேர்ந்தது ? என்று வினவ
தஹ்லபா (ரலியல்லாஹூ அன்ஹூ) “யாரசூலுல்லாஹ் நான் ஒரு பெரிய பாவம் செய்து விட்டேன் அதனால்
இறைவன் என்னை தண்டிப்பான் என்று அச்சமாக உள்ளது , யா ரசூலுல்லாஹ் நான்
அல்லாஹ்வின் கருணையை ஆதரவு வைக்கிறேன் என்றார்கள் .

அதற்க்கு நபிகளார் “அல்லாஹ் உன்னை நிச்சயம் மன்னிப்பான் உனது பாவம் இந்த வானத்திற்கும் பூமிக்கும் இடையே உள்ள அளவாக இருந்தாலும் சரியே என்றார்கள்

அப்போது தஹ்லபா (ரலியல்லாஹூ அன்ஹூ) “யா ரசூலுல்லாஹ் என் உடலில் எலும்புகளுக்கும்
தசைகளுக்கும் இடையே எறும்புகள் ஊர்வதுபோல் உணர்கிறேன் என்றார்கள்
உடனே நபிகளார் “ நிச்சயமாக அப்படி உணர்கிறாயா தஹ்லபா ? என வியப்புடன் கேட்க அதற்க்கு தஹ்லாபா “ஆம் யாரசூலுல்லாஹ் “என்றார்கள் .

நபி (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் ) அவர்கள் “ யா தஹ்லாபா நிச்சயமாக நீ மரணத்தின் சுவையை உணர்ந்துகொண்டிருக்கிராய் !!!! என்றதும் தஹ்லாபா(ரலியல்லாஹூ அன்ஹூ) அவர்கள் “அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹ் வ அஷ்ஹது அன்ன முஹம்மதுர் ரசூளுல்லாஹ் “ என்ற கலிமாவை மொழிய,. மரணம் அவர்களை தழுவிகொண்டது.

வாழ்வில் எந்தவித ஆசைகளையும் நிரவேற்றிகொள்ளாத வயதில் மரணம் அவர்களை தழுவிகொண்டது .

இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் “

நபிகள் பெருமானார் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் ) அவர்கள் தன் கரங்களாலேயே கபன் இட்டு தாமே தொழுகையை
முன் நின்று நடத்தினார்கள்.
ஜனாஸாவை அடக்கம் செய்ய செல்லும்போது போது நபி (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் தன்னுடைய இரு பாதங்களின்
ஓரங்களை வைத்து கூட்டத்தின் மத்தியில் நடப்பது போல் நடப்பதை கண்ட உமர் (ரலியல்லாஹூ அன்ஹூ)
“யா ரசூலுல்லாஹ் ! மக்கள் தான் விசாலமாக வழிவிட்டு செல்கிறார்களே அப்பொழுது ஏன் இப்படி
நடந்து வருகிறீர்கள் ? என்று வினவ

நபிகளார் வியப்புடைன் “ ஓ உமரே இந்த தஹலபாவின்
நல்லடக்கதிற்கு பல்லாயிரக்கணக்கான வானவர்கள் வந்துள்ளார்கள் அதனால் தான் என் இருகால் பதிக்க இடம் இல்லாமல் நடக்கிறேன் .” என்று கூறினார்கள் .

தஹல்பா (ரலியல்லாஹூ அன்ஹூ ) அவர்களால்  தற்செயலாக செய்துபட்ட ஒரு சிறிய தவறுக்கு இப்படி வருந்தினார் என்றால் எமது நிலை ???

"யாஅல்லாஹ் எம்மை உன் கருணையால் மன்னிப்பாயாக"

செவ்வாய், ஜூன் 27, 2017

அப்துல் கலாம்,

ஜனாதிபதி மாளிகையில் அப்துல் கலாம் இப்தார் விருந்து வழங்காதது ஏன்?

குடியரசுத் தலைவராக அப்துல்கலாம் இருந்த போது பி.எம். நாயர் என்பவர் அவருக்கு தனிச்செயலாளராக இருந்தார். அப்துல் கலாம் மறைவுக்கு பின் டிடி தொலைக்காட்சி பி.எம். நாயரை பேட்டி எடுத்தது. அவருடன் பணியாற்றிய அனுபவங்களை 'கலாம் எபெக்ட்' என்று நாயர் புத்தகமாகவும் வெளியிட்டுள்ளார். அந்த புத்தகத்தில் கலாம் பற்றி பி.எம். நாயர் குறிப்பிட்டுள்ள மிக முக்கிய நிகழ்வுகள்.

அப்துல் கலாம் இந்திய குடியரசுத் தலைவராக இருந்த சமயத்தில் அவருக்கு ஏராளமான பரிசுப் பொருட்கள் வரும். வெளிநாடுகளில் இருந்தும் ஏகப்பட்ட பரிசுப்பொருட்கள் வந்த வண்ணம் இருக்கும். அவற்றையெல்லாம் அப்துல் கலாம் போட்டோ எடுத்து வைத்து வகைப்படுத்துவார். பின்னர் அப்படியே அதனை ஆவண காப்பகத்துக்கு அனுப்பி விடுவார். ஒரு பொருளை கூட திரும்பி பார்த்ததது இல்லை. ஒரு பென்சிலை கூட தனக்கு என்று எடுத்து கொண்டது இல்லை. வெளிநாட்டு சுற்றுப்பயணங்களின் அன்பளிப்புகளை மறுத்தால், அந்த நாடுகளை அவமானப்படுத்துவது போல் அமைந்து விடும் என்பதால்தான் பரிசுபொருட்களை அப்துல்கலாம் பெறுவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

ரமலான் மாதத்தில் குடியரசுத் தலைவர் 'இப்தார்' விருந்தளிப்பது வழக்கமான பாரம்பரியமான நிகழ்வு. கடந்த 2002ஆம் ஆண்டு அப்துல் கலாம் குடியரசுத் தலைவராக பொறுப்பேற்ற சமயம். என்னைஅழைத்த அப்துல் கலாம், இப்தார் விருந்துக்கு ராஸ்டிரபதி பவனில் எவ்வளவு செலவாகும்? என்று கேட்டார். நான் 22 லட்ச ரூபாய் செலவழிப்போம் என்றேன். இருக்கப்பட்டவர்களுக்கு இப்தார் விருந்தளிப்பதால் என்ன பயன்? அந்த 22 லட்சத்தை அனாதை இல்லங்களுக்கு பிரித்து வழங்கி விடுவோம். அந்த தொகைக்கு இணையாக அனாதை இல்லத்தில் உள்ள குழந்தைகளுக்கு தேவையான உணவுப் பொருட்கள் வழங்க ஏற்பாடு செய்ய சொன்னார். பின்னர் தனியாக என்னை அழைத்து ஒரு லட்ச ரூபாய்க்கும் செக் அளித்து இதையும் சேர்த்து 23 லட்ச ரூபாய்க்கு குழந்தைகளுக்கு உணவு ஏற்பாடு செய்யுங்கள் என அப்துல்கலாம் கூறிய போது, மனித நேயமிக்க மனிதரிடம் பணிபுரிவது குறித்து மிகுந்த பெருமையடைந்தேன். கலாம் இஸ்லாமியர்தான் என்றாலும் அவர் குடியரசுத் தலைவர் பதவியில் இருந்த வரை குடியரசு தலைவர் மாளிகையில் 'இப்தார்' விருந்து அளிக்கப்பட்டதில்லை.

அப்துல் கலாம் 'யெஸ் சார்' வகை அதிகாரிகளை பக்கத்தில் வைத்து கொண்டதில்லை. ஒரு முறை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, ஜனாதிபதியை சந்தித்து பேசிக் கொண்டிருந்தார். இருவரும் விவாதித்துக் கொண்டிருந்தனர். அப்போது அருகில் நின்ற என்னை பார்த்து மிஸ்டர். நாயர் நான் சொல்வது சரியா? என்று வினா எழுப்பினார். அது சரியாக இருக்காது என்றும் அதற்கான காரணங்களையும் நான் அடுக்கி கூறினேன். உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு பிரமிப்பு. ராஷ்டிரபதியின் கருத்துக்கு சாதாரண அதிகாரி எதிர் கருத்து சொல்வதும் அதனை அவர் அனுமதிப்பதையும் கண்டு நீதிபதி அசந்தே போனார்.

குடியரசுத் தலைவராக அப்துல் கலாம் பொறுப்பேற்ற போது ராமேஸ்வரத்தில் இருந்து அவரது உறவினர்கள் 50 பேர் டெல்லிக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்கள் அனைவரும் குடியரசுத் தலைவர் மாளிகையில் தங்கியிருந்தனர். அவர்கள் டெல்லியை சுற்றிபார்க்க ஒரு பஸ் அமர்த்தி தரப்பட்டது. அந்த பேருந்துக்கான கட்டணத்தை அப்துல் கலாம் வழங்கி விட்டார். இவர்களில் யாருக்கும் எந்த சமயத்திலும் அரசுக்கு சொந்தமான கார் பயன்படுத்தப்படவில்லை. கலாமின் உறவினர்கள் டெல்லியில் தங்கியிருந்த சமயத்தில் அவர்களுக்கு உணவு செலவாக 2 லட்ச ரூபாய் குடியரசுத் தலைவர் மாளிகையில் செலவிடப்பட்டது. அந்த தொகையை கலாம் தனது கையில் இருந்து செலுத்தி விட்டார். எந்த குடியரசுத் தலைவரும் இது போன்று செலுத்தியதே இல்லை.

அப்துல் கலாமின் 5 ஆண்டு பதவி காலம் முடிய சில நாட்கள் இருந்த சமயத்தில் குடியரசுத் தலைவர் மாளிகை அதிகாரிகள் ஊழியர்கள் அவரை சந்தித்துக் கொண்டிருந்தனர். அப்போது நானும் அவரை சந்தித்தேன். என்ன மிஸ்டர் . நாயர் உங்கள் மனைவியை காணோம்? என்று கலாம் கேட்டார். எனது மனைவி ஒரு விபத்தில் சிக்கி கால் உடைந்து வீட்டில் இருக்கிறார் என்றேன். அடுத்த நாள் எனது வீட்டை சுற்றி ஒரே போலீஸ். என்னவென்று பார்த்தால் கலாம் எனது மனைவியை பார்க்க வீட்டுக்கே வந்து விட்டார். ஒரு குடியரசுத் தலைவர் சாதாரண ஊழியரின் மனைவியை சந்தித்து பேசுகிறாரே என்று நான் வியந்து போனேன்.

இவ்வாறு முன்னாள் குடியரசுத் தலைவர் பற்றி பி.எம். நாயர் கூறபகிர்கிறேன்..

திங்கள், ஜூன் 26, 2017

ஈதுல் பித்ர் பெருநாள்,

நபி வழியில் ஈதுல்
ஃபித்ர் பெருநாளை
மகிழ்ச்சியுடன்
கொண்டாடுவோம்
இன்ஷா அல்லாஹ் ************
எனதருமை முக நூல்
சொந்தங்களே !
உறவினர்களே !,
சகோதரர்களே ! ,
சகோதரிகளே !
நண்பர்களே !
அல்லாஹ்வின்
பேரருளால் இவ்வருடம்
நோன்பை 29
நாட்களில் பூர்த்தி
செய்ய இருககிறோம்
இன்ஷா அல்லாஹ் ....
இந்த தருணத்தில்
இறைத்தூதர் நபி(ஸல்)
அவர்கள் காட்டிச் சென்ற
பெருநாட்களை
முக்கியமான
செய்திகளை, அமல்களை
நாம் ஒவ்வொருவரும்
தெளிவாக அறிந்து
கொண்டு அதன்படி நமது
ஈதுல் பித்ர் எனும் இந்த
நோன்பு பெருநாள்
தொழுகையை
முறைப்படி நபிவழியில்
நிறைவேற்றி
அல்லாஹ்வின்
பொருத்தத்தை
பெறுவோமாக இன்ஷா
அல்லாஹ்....
ஈத் என்றால் விழா
அல்லது மீண்டும் மீண்டும்
வரும் மகிழ்ச்சி என்று
பொருள். முஸ்லிம்கள்
அனைவருக்கும்
பெருநாள் தொழுகை
மிக
முக்கியமானதாகும்.
இது அன்றாடத்
தொழுகையின்
சிறப்புக்களையும்,
ஜும்ஆத் தொழுகையின்
பலன்களையும்
கொண்டது. இது
முஸ்லிம்களின்
பிணைப்புகளை
வலுப்படுத்தும்
தன்மையைக் கொண்டது.
தங்களுடைய ஆன்மீகக்
கடமைகளைப் பூர்த்தி
செய்வதில் இறைவன்
உதவியதற்காக
அவனுக்கு நன்றி
சொல்லும் முகத்து,
முஸ்லிம்கள் அனைவரும்,
சகோதரத்துவ
உணர்வோடும், மன
மகிழ்ச்சியோடும் கூடும்
நாள் தான் ஈத்
என்பதாகும். ஃபித்ரா
தர்மத்தைக் கொண்டு
இப்பெருநாள்
தொடங்குவதால் இதற்கு
ஈதுல் ஃபித்ர்
ஈகைப்பெருநாள் என
பெயரானது.
இந்த நோன்புப்
பெருநாளில் நாம்
கடைப்பிடிக்க வேண்டிய
எட்டு விஷயங்கள் உள்ளன.
1 குளித்து சுத்தமாகிக்
கொள்ளல்.
2 அழகிய புத்தாடை
அல்லது சுத்தமான ஆடை
அணிதல்.
3 தக்பீர் சொல்லல்.
4 பெருநாள் இரவில்
சுன்னத்தான
தொழுகைகளை தொழல்,
குர்ஆன் ஓதுதல், துஆ
கேட்டல், திக்ர் செய்தல்,
ஸலவாத் ஓதல்.
5 பெருநாள்
தொழுகையிலும்
குத்பாவிலும்
கலந்துகொள்ளல்.
6 ஆண்கள் மணம் பூசிக்
கொள்ளல், வெளியில்
செல்லாத பெண்களும்
மணம் பூசிக்
கொள்ளலாம்.
7 இயன்றவரை அதிகமாக
தானதர்மம் செய்தல்.
8 ஈதுல் பித்ருக்கே உரிய
(பித்ரா) ஸகாதுல் பித்ர்
எனும் தான தர்மம்
செய்தல்.
நபி(ஸல்) அவர்கள்
மக்காவிலிருந்து
ஹிஜ்ரத் செய்து மதீனா
குடியேறியபோது
மதீனத்து மக்கள் இரு
பண்டிகைகளை
கொண்டாடி வந்தனர்.
அதிலொன்று
வருடாந்திர
விளையாட்டு (sports day)
ஆக்கிக்கொண்டனர்.
இதனை செவியுற்ற நபி
(ஸல்) நீங்கள்
ஆக்கிக்கொண்ட
இந்நாட்களை மாற்றி
அதைவிடச் சிறந்த இரு
நாட்களை அல்லாஹ்
உங்களுக்கு தேர்வு
செய்துள்ளான், அதில்
ஒன்று ஈகைத் திருநாள்,
மற்றொன்று தியாகத்
திருநாள் என்றார்கள்.
இந்த நபி மொழியை
மாலிக்(ரலி) அறிவிக்க
அபூதாவூத், பைஹகீ,
நஸயீ என்ற நூல்களிலும்
இடம்பெற்றுள்ளது.
கடமையான ஃபித்ரா
பசி தாகத்துடன் நோன்பு
வைத்த நாம்
பெருநாளுக்கு முன்
தான தர்மத்தைக்
கொண்டு ஆரம்பிக்க
வேண்டும். அன்று எவரும்
பசி பட்டினியுடன்
இருக்கக்கூடாது. அன்று
நோன்பு வைப்பதும்
தடுக்கப்பட்டது என நபி (ஸல்) அவர்கள்
அறிவுறுத்தினார்கள்.
நபி(ஸல்) அவர்கள்
அழைப்பாளர்களை
மக்காவின்
தெருக்களுக்கு
அனுப்பி "தெரிந்து
கொள்ளுங்கள்!
நிச்சயமாக ஸதகத்துல்
ஃபித்ர் ஒவ்வொரு
முஸ்லிமின் மீதும்
கடமையாகும்" என்ற
வாசகத்தை கூறச்
சொன்னார்கள். ஆதாரம்:
திர்மிதி நோன்பில்
நகழ்ந்த தவறிலிருந்து
தூய்மைப்படுத்துவதற்காகவும் ஏழைகளுக்கு
உணவளிக்க வேண்டும்
என்பதற்காகவும் நபி
அவர்கள் ஸதகாத்துல்
ஃபித்ரைக்
கடமையாக்கினார்கள்.
ஆதாரம்: அபூதாவூத்..
நோன்பாளியிடமிருந்து
ஏற்பட்ட வீணான தவறுகள்
ஆகியவற்றிலிருந்து
தூய்மைப்படுத்துவதற்காகவும், ஏழைகளுக்கு
உணவாக இருக்கும்
பொருட்டும் நபி (ஸல்)
அவர்கள் நோன்புப்
பெருநாள் தர்மத்தைக்
கடமையாக்கினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு
அப்பாஸ்(ரலி)
அபூதாவுத்,
இப்னுமாஜா
பெருநாள்
தொழுகையின் நேரங்கள்
ஈத் பெருநாட்களில்
குளிர்ந்த காலை
நேரங்களில் அவரவர்
வீடுகளிலிருந்து
வெளிப்பட்டு (தொழ)
செல்பவர்களுக்கு
அல்லாஹ் அளப்பரிய
அருளைப்
பொழிகிறான்.
அறிவிப்பவர்: அனஸ்பின்
மாலிக்(ரலி) நூல்: இப்னு
அஸாகிர்
இரண்டு ஈட்டிகளின்
உயரத்திற்கு சூரியன்
உயரும்போது நோன்புப்
பெருநாள்
தொழுகையை நபி(ஸல்)
தொழுவார்கள். (ஒரு
ஈட்டியின் உயரம் என்பது
ஏறத்தாள மூன்று
மீட்டர்களாக ஆகும்.
அறிவிப்பாளர்: ஜுன்துப்
(ரலி) நூல்: அஹ்மது
இப்னுஹஸன்
நோன்புப் பெருநாளில்
தொழச் செல்வதற்கு
முன்பே சாப்பிடுவது.
நபி(ஸல்) அவர்கள்
உண்ணாமல் நோன்புப்
பெருநாள்
தொழுகைக்கு புறப்பட
மாட்டார்கள். ஹஜ்ஜுப்
பெருநாள்
தொழுகையைத்
தொழுவதற்கு முன்
உண்ண மாட்டார்கள் என
புரைதா(ரலி) அவர்கள்
அறிவிக்கின்றார்கள்.
ஆதாரம்: திர்மிதீ… சில
பேரிச்சம் பழங்களை
உண்ணாமல் நோன்புப்
பெருநாளில் (தொழுகைக்கு) நபி
(ஸல்) அவர்கள் புறப்பட
மாட்டார்கள். அறிவிப்பவர்:
அனஸ்(ரலி) புகாரி
மற்றோர் அறிவிப்பில்
அவற்றை ஒற்றைப்படை
எண்ணிக்கையில்
உண்பார்கள் என்று
கூறப்பட்டுள்ளது.
நபி (ஸல்) அவர்கள் ஈதுல்
பித்ர் (நோன்பு)
பெருநாளன்று
காலையில் ஏழு
பேரித்தம் பழங்களை
சாப்பிடாமல் வெளியேற
மாட்டார்கள்
அறிவிப்பாளர்:
ஜாபிர்பின் சம்ரா(ரலி)
நூல்: தப்ரானி
மற்றோர் அறிவிப்பில்
அவற்றை ஒற்றைப்படை
எண்ணிக்கையில்
உண்பார்கள் என்று
கூறப்பட்டுள்ளது.
அறிவிப்பாளர்: அனஸ்
(ரலி) புகாரி
தக்பீர்
ஈத் பெருநாட்களை
அல்லாஹ்வைப் புகழ்வது
கொண்டும் தக்பீரைக்
கொண்டும் அழகு
படுத்துங்கள்.
அறிவிப்பாளர்: அனஸ்பின்
மாலிக்(ரலி) ஆதாரம்: நயீம்
ஈதுல் ஃபித்ர் பெருநாள்
தொழுகைக்கு
வீட்டிலிருந்து
புறப்படும்போது தக்பீர்
சொன்னவர்களாகப்
புறப்படுவார்கள்.
தொழும் இடம் (முஸல்லா)
வரும் வரை தக்பீர்
சொல்வார்கள்.
அறிவிப்பாளர்: இப்னு
உமர்(ரலி) நூல்கள்:
ஹாகிம் சுனன்பைஹகீ,
இப்னு அஸாகீர்.
பெருநாள்
வந்துவிட்டால் நபி (ஸல்)
அவர்கள் (போவதற்கும்
வருவதற்கும்)
பாதைகளை மாற்றிக்
கொள்வார்கள். புகாரி
நோன்புப்
பெருநாளிலும்
ஹஜ்ஜுப்
பெருநாளிலும் (திடலில் தொழுவதால்
தடுப்பாக) நபி(ஸல்)
அவர்களுக்கு முன்னால்
ஓர் ஈட்டி நாட்டப்படும். நபி
(ஸல்) அவர்கள் (அதை
நோக்கித்)
தொழுவார்கள். இப்னு
உமர்(ரலி), புகாரி
நபி(ஸல்) அவர்கள் (பெருநாள்
தொழுகைக்காகத்)
தொழும் திடலுக்குப்
புறப்படுவார்கள்.
அவர்களுக்கு முன்பே
கைத்தடி எடுத்துச்
செல்லப்பட்டுத் தொழும்
இடத்தில் அவர்களுக்கு
முன்னால் நாட்டப்படும்.
அதை நோக்கி நபி (ஸல்)
தொழுவார்கள். இப்னு
உமர்(ரலி), புகாரி
திடலில் பெருநாள்
தொழுகை
பெரும்பாலும் நபி(ஸல்)
அவர்கள் பெருநாள்
தொழுகைகளை திறந்த
பொது மைதானத்தில்
தொழுதுள்ளார்கள்.
மழை காலத்தில்
பெருநாள்
தொழுகையை
பள்ளியில் நடத்தினார்கள்.
அறிவிப்பாளர்:
அபூஹுரைரா(ரலி)
அபூதாவூத்,
இப்னுமாஜ்ஜா
நபி (ஸல்) அவர்கள்
நோன்புப்
பெருநாளிலும்
ஹஜ்ஜுப்
பெருநாளிலும் (பள்ளியில் தொழாமல்)
திடலுக்குச்
செல்பவர்களாக
இருந்தனர். அவர்கள் முதன்
முதலில்
தொழுகையையே
துவக்குவார்கள்.
தொழுது முடித்து
எழுந்து மக்களை
முன்னோக்குவார்கள்.
மக்களெல்லாம் தங்கள்
வரிசைகளில் அப்படியே
அமர்ந்திருப்பார்கள்.
அவர்களுக்குப்
போதனைகள்
செய்வார்கள். (வலியுறுத்த
வேண்டியதை)
வலியுறுத்துவார்கள்; (கட்டளையிட
வேண்டியதை)
கட்டளையிடுவார்கள்.
ஏதேனும் ஒரு
பகுதிக்குப் படைகளை
அனுப்ப
வேண்டியிருந்தால்
அனுப்புவார்கள். எதைப்
பற்றியேனும் உத்தரவிட
வேண்டியருந்தால்
உத்தரவிடுவார்கள்.
பின்னர் (இல்லம்)
திரும்புவார்கள். அபூ
ஸயீத்(ரலி), புகாரி
பெருநாள்களில் பாங்கு
இகாமத்
சொல்லப்பட்டதில்லை
ஜாபிர்(ரலி), இப்னு
அப்பாஸ்(ரலி) ஆகியோர்
கூறினார்கள்: நோன்புப்
பெருநாளிலும்
ஹஜ்ஜுப்
பெருநாளிலும் பாங்கு
சொல்லப்பட்டதில்லை.
புகாரி
நபி(ஸல்) அவர்கள் (பெருநாள்
தொழுகைக்குத்)
தயாராகித்
தொழுகையைத்
துவக்கினார்கள். பிறகு
மக்களுக்கு உரை
நிகழ்த்தினார்கள். நபி (ஸல்) அவர்கள் (உரை
நிகழ்த்தி) முடித்து
இறங்கிப் பெண்கள்
பகுதிக்குச் சென்று
பிலால்(ரலி) உடைய கை
மீது சாய்ந்து கொண்டு
பெண்களுக்குப்
போதனை செய்தார்கள்.
அறிவிப்பாளர்: ஜாபிர்
இப்னு அப்தில்லாஹ்(ரலி),
புகாரி
பிலால்(ரலி) தம்
ஆடையை ஏந்திக்கொள்ள,
பெண்கள் தங்கள் தர்மத்தை
அதில் போடலானார்கள்.
நான், நபி (ஸல்) அவர்கள்,
அபூ பக்ர்(ரலி), உமர்(ரலி),
உஸ்மான்(ரலி)
ஆகியோருடன்
பெருநாள்
தொழுகையில்
பங்கெடுத்துள்ளேன்.
அவர்கள் அனைவரும்
உரை நிகழ்த்துவதற்கு
முன்பே
தொழுபவர்களாக
இருந்தனர். புகாரி
நபி (ஸல்) அவர்கள், அபூ
பக்ர்(ரலி), உமர்(ரலி)
ஆகியோர் இரண்டு
பெருநாள்களிலும்
உரை நிகழ்த்துவதற்கு
முன் தொழுபவர்களாக
இருந்தனர். இப்னு உமர்
(ரலி), புகாரி
பெருநாள்
தொழுகைக்கு முன்பும்
பின்பும் எந்தத்
தொழுகையும் இல்லை
நபி (ஸல்) அவர்கள்
நோன்புப் பெருநாள்
தினத்தில் புறப்பட்டு
இரண்டு ரக்அத்கள்
தொழுதனர். அதற்கு
முன்பும் பின்பும்
எதையும் அவர்கள்
தொழவில்லை.
அவர்களுடன் பிலால்(ரலி)
அவர்களும் சென்றனர் என
இப்னு அப்பாஸ்(ரலி)
அவர்கள்
அறிவிக்கின்றார்கள்.
ஆதாரம்: புகாரி
நபி(ஸல்) அவர்கள்
நோன்புப் பெருநாளில்
இரண்டு ரக்அத்கள்
தொழதனர். அதற்கு
முன்னம் பின்னும்
எதையேனும்
தொழவில்லை. பிறகு
பெண்கள் பகுதிக்கு
வந்தனர். அவர்களுடன்
பிலால்(ரலி) இருந்தார்.
தர்மம் செய்வதன் அவசியம்
குறித்து அவர்களுக்கு
நபி(ஸல்)
விளக்கினார்கள்.
பெண்கள் (தங்கள்
பொருட்களைப்)
போடலானார்கள். சில
பெண்கள் தங்கள் கழுத்து
மாலையையும்
வளையல்களையும்
போடலானார்கள்.
அறிவிப்பவர்:இப்னு
அப்பாஸ்(ரலி), புகாரி
முதல் ரக்அத்தில் 7
தக்பீர்களும் இரண்டாவது
ரக்அத்தில் 5 தக்பீர்களும்
நபி (ஸல்) அவர்கள்
பெருநாள்
தொழுகையில் முதல்
ரக்அத்தில் ஏழு தக்பீர்களும்
இரண்டாவது ரக்அத்தில்
ஐந்து தக்பீர்களும்
கூறினார்கள் என
அப்துல்லாஹ் இப்னு
அம்ரு(ரலி) அவர்கள்
அறிவிக்கின்றார்கள்.
ஆதாரம்: அஹ்மத்,
இப்னுமாஜா
''நோன்புப் பெருநாள்
தொழுகையில் முதல்
ரக்அத்தில் ஏழு தக்பீரும்
இரண்டாவது ரக்அத்தில்
ஐந்து தக்பீரும் உள்ளது.
அவை இரண்டிற்கும்
பின்னரும் கிராஅத் (குர்ஆனை ஓதுதல்)
உண்டு'' என நபி(ஸல்)
அவர்கள் கூறினார்கள் என
அம்ரு இப்னு ஷுஐப் தம்
தந்தை மற்றும் பாட்டனார்
வாயிலாக
அறிவிக்கிறார். புகாரி,
திர்மிதீ
பெருநாள்
தொழுகைக்கு
பெண்களை அனுமதிக்க
வேண்டும்
நபி (ஸல்) அவர்கள்
நோன்புப் பெருநாளில்
இரண்டு ரக்அத்கள்
தொழதனர். அதற்கு
முன்னம் பின்னும்
எதையேனும்
தொழவில்லை. பிறகு
பெண்கள் பகுதிக்கு
வந்தனர். அவர்களுடன்
பிலால்(ரலி) இருந்தார்.
தர்மம் செய்வதன் அவசியம்
குறித்து அவர்களுக்கு
நபி (ஸல்)
விளக்கினார்கள்.
பெண்கள் (தங்கள்
பொருட்களைப்)
போடலானார்கள். சில
பெண்கள் தங்கள் கழுத்து
மாலையையும்
வளையல்களையும்
போடலானார்கள்.
அறிவிப்பவர்: இப்னு
அப்பாஸ்(ரலி), புகாரி
வீட்டில் தனித்து
இருக்கும் நாங்கள்
மாதவிடாய் பெண்கள்
முதற்கொண்டு இரு
பெருநாள்
தொழுகைக்கு
வெளியே வர
ஆணையிடப்பட்டோம்.
தொழுகையில் கலந்து
கொள்ளவும்,
பிரார்த்தனைகளில்
பங்கேற்கவும்
அனுமதிக்கப்பட்டோம்.
ஆனால் மாதவிடாய்
பெண்கள்
தொழுமிடத்திலிருந்து
ஒதுங்கி இருக்க
பணிக்கப்பட்டோம்.
அப்போது ஒரு பெண்
அல்லாஹ்வின் தூதரே!
எங்களில் எவருக்காவது
உடை இல்லையெனில்
என்ன செய்வது என
வினவினார். அதற்கு நபி
(ஸல்) அவர்கள் உங்களது
தோழிகளிடமிருந்து ஓர்
உடையை கடனாக
வாங்கி உடுத்தி
வாருங்கள் என பதில்
கூறினர். அறிவிப்பவர்
உம்மு அதிய்யா(ரலி)
நூல்கள்: புகாரி,
முஸ்லிம், நஸயி,
இப்னுமாஜ்ஜா
நபி (ஸல்) அவர்கள் (பெருநாள்
தொழுகைக்குத்)
தயாராகித்
தொழுகையைத்
துவக்கினார்கள். பிறகு
மக்களுக்கு உரை
நிகழ்த்தினார்கள். நபி (ஸல்) அவர்கள் (உரை
நிகழ்த்தி) முடித்து
இறங்கிப் பெண்கள்
பகுதிக்குச் சென்று
பிலால்(ரலி) உடைய
கைமீது சாய்ந்து
கொண்டு
பெண்களுக்குப்
போதனை செய்தார்கள்.
பிலால்(ரலி) தம்
ஆடையை ஏந்திக் கொள்ள,
பெண்கள் தங்கள் தர்மத்தை
அதில் போடலானார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர்
இப்னு அப்தில்லாஹ்(ரலி),
புகாரி
நபி (ஸல்) அவர்கள்
நோன்புப் பெருநாளில்
இரண்டு ரக்அத்கள்
தொழதனர். அதற்கு
முன்னம் பின்னும்
எதையேனும்
தொழவில்லை. பிறகு
பெண்கள் பகுதிக்கு
வந்தனர். அவர்களுடன்
பிலால்(ரலி) இருந்தார்.
தர்மம் செய்வதன் அவசியம்
குறித்து அவர்களுக்கு
நபி (ஸல்)
விளக்கினார்கள்.
பெண்கள் (தங்கள்
பொருட்களைப்)
போடலானார்கள். சில
பெண்கள் தங்கள் கழுத்து
மாலையையும்
வளையல்களையும்
போடலானார்கள்.
அறிவிப்பாளர்: இப்னு
அப்பாஸ்(ரலி), புகாரி
ஓதிய வசனங்கள்
நபி(ஸல்) அவர்கள் இரு
பெருநாள்
தொழுகையிலும்
ஜுமுஆத்
தொழுகையிலும்
ஸப்பிஹிஸ்ம ரப்பிக்கல்
அஃலா (87வது
அத்தியாயத்தையும்) ஹல்
அதாக்க ஹதீஸுல்
காஷியா (88வது
அத்தியாயத்தையும்) ஓதி
வந்தனர். பெருநாளும்,
ஜுமுஆவும் ஓரே
நாளில் வரும்பொழுது
இந்த இரண்டு
அத்தியாயங்களை
இரண்டு
தொழுகையிலும்
ஓதுவார்கள்.
அறிவிப்பவர்: நுஃமான்
பின் பஷீர்(ரலி) நூமான்
இப்னு பஷீர், நூல்கள்:
முஸ்லிம், முஅத்தா,
அபூதாவூத், திர்மிதீ,
நஸயீ
50வது
அத்தியாயத்தையும் 54வது
அத்தியாயத்தையும்
ஓதியதாக ஓர் அறிவிப்பு
முஸ்லிம், முஅத்தா,
அபூதாவூத், திர்மிதீ,
நஸயீ ஆகிய நூல்களில்
பதிவு
செய்யப்பட்டுள்ளது.
பிரார்த்தனை
பருவமடைந்த மற்றும்
மாதவிடாய்
பெண்களையும்
பெருநாள்
தொழுகைக்கு
வெளியே
அனுப்புமாறு நபி(ஸல்)
அவர்கள் எங்களுக்குக்
கட்டளையிட்டார்கள்.
நற்பணிகளில் மற்றும்
முஸ்லிம்களுடைய
துஆவில் அவர்கள் பங்கு
பெறுவதற்காக. ஆனால்,
மாத விலக்கான
பெண்கள், தொழும்
இடத்தின் ஓரப்பகுதியில்
இருக்க வேண்டும். என
உம்மு அதிய்யா(ரலி)
அறிவிக்கிறார். புகாரி,
முஸ்லிம்
பெருநாளில் நாங்கள் (தொழும் திடலுக்கு)
புறப்பட
வேண்டுமெனவும்
கூடாரத்திலுள்ள
கன்னிப் பெண்களையும்
மாதவிடாய் ஏற்பட்டுள்ள
பெண்களையும் புறப்படச்
செய்ய வேண்டும் எனவும்
கட்டளையிடப்பட்டிருந்தோம். பெண்கள்
ஆண்களுக்குப் பின்னால்
இருப்பார்கள். ஆண்களின்
தக்பீருடன் அவர்களும் தக்பீர்
கூறுவார்கள்.
ஆண்களின் துஆவுடன்
அவர்களும் துஆச்
செய்வார்கள். அந்த
நாளின் பரக்கத்தையும்
புனிதத்தையும் அவர்கள்
எதிர்பார்ப்பார்கள்.
அறிவிப்பவர்: உம்மு
அத்திய்யா (ரலி) நூல்கள்:
புகாரீ, முஸ்லிம்
இந்த நன்னாளில்
வறியவர்களுக்கு உதவி
செய்வது துன்பங்களில்
உழல்பவர்களுக்கு
கருணை காட்டுவது .
நோயுற்றவர்களை
சென்று பார்த்து
அவர்களுக்கு ஆறுதல்
கூறவது, தங்களைப்
பிரிந்து
வெளியூர்களுக்குச்
சென்றுள்ள
நண்பர்களுக்கும்,
உறவினர்களுக்கும் தமது
மகிழ்ச்சிகளை பரிமாறி
கொள்வது இப்படி
எல்லோரையும் எண்ணிப்
பார்க்கின்ற ஒருநாளாக
ஈதுப் பெருநாள்
விளங்குவது மிகவும்
மகிழ்ச்சிகரமானது
பெருநாள் அன்று ஈத்
முபாரக்
சொல்லலாமா ?...
பெருநாள் அன்று தமது
மகிழ்ச்சியை
தெரிவிப்பதற்கு தனக்கு
விருப்பமான
சொற்களைப் பயன்படுத்தி
குர்ஆன் ஹதீசுக்கு
முரணில்லாத வகையில்
வாழ்த்து தெரிவிக்கும்
முகமாக ஈத் முபாரக் என்ற
சொல்லை
பயன்படுத்துவதில் எந்த
தவறுமில்லை ஆனால்
பெருநாள் அன்று
இப்படித்தான்
ஒருவருக்கொருவர்
சொல்லிக்
கொள்ளவேண்டும் என்று
மார்க்க அடிப்படையில்
நினைத்து கொள்வதும்
அதனை
செயல்படுத்துவதும்தான் தவறு
ஈத் முபாரக் மட்டுமின்றி
ஹேப்பி ரம்ஜான்,
ஹேப்பி பக்ரீத் மற்றும்
ஒரு பெருநாள்
வாழ்த்தான குல்ல ஆமின்
அன்தும் பி கைர் என்பது
போன்ற எந்தச்
சொல்லுக்கும் இது தான்
நிலை. இது போன்ற
பெருநாட்களில்
கீழ்காணும் வாழ்த்து ஈத்
முபாரக் என்று
சொல்வதை விடவும்
நல்லதொரு சிறந்த
துஆவாகவும்
இருக்கிறது இதையே
நாம் பரஸ்பரம் உபயோகப்
படுத்திக் கொள்வோம்
இன்ஷா அல்லாஹ் !...
‘தகப்பல் அல்லாஹ்
மின்னா வ மின்கும்’ –
பொருள் அல்லாஹ்
உங்களிடமிருந்தும்
நம்மிடமிருந்தும் (நற்செயல்களை)
ஏற்றுக்கொள்வானாக! –
ஏழைகளாக இருந்தாலும்,
உடல் ஊனமுற்றவர்களாக
இருந்தாலும்
வீரத்தையும்,
துணிச்சலையும்
இழக்காத
சான்றோர்களின்
மார்க்கத்தில் பிறந்த
நம்மிடம் கோழைத்தனம்
ஒருபோதும் குடி
கொண்டுவிடக்கூடாது.
நோன்பு மூலம் பெற்ற
இறையச்சம் ஒரு போதும்
கோழைகளையும்,
தாழ்வு மனப்பாண்மை
கொண்டோரையும்
உருவாக்காது என்பதை
இந்த பெருநாள்
தினத்தில் நாம்
கவனத்தில் கொள்ளுதல்
அவசியம்.
உலக முஸ்லிம்கள்
யாவரும் கொண்டாடும்
இத்திருநாளை நாம்
சாந்தியும்,
சமாதானமும்
வேரூன்றி, தளைத்து,
வளர அல்லாஹ்விடம்
பிரார்த்தித்தவர்களாக
கொண்டாடுவோம்.
எல்லாம் வல்ல ரஹ்மான்
அல்லாஹ் நம் அனைவரின்
அமல்களை அவனுக்கு
உகப்பானதாக ஆக்கி
வைப்பானாக! நபி (ஸல்)
அவர்கள் காட்டிய வழியில்
செயல்பட தவ்பீக்
தந்தருள்வானாக! ஆமீன்

சனி, ஜூன் 24, 2017

ரம்மிய ரமழானே,

ரம்மிய ரமழானே நீ  விடை பெறுகின்றாயா....

எங்களை விட்டும் நீ செல்கின்றாயா......

உன்னை வழியனுப்பும் தருவாயில் உள்ளோம் ரமழானே..........

மனம் மறுக்கிறது ரமழானே......

கண்கள் கண்ணீர் வடிக்கிறது ரமழானே.......

இதயம் பிடைகிறது ரமழானே.......

உன்னை வழியனுப்ப.....

மனமில்லை ரமழானே உன்னை வழியனுப்ப.....

அனைவருக்கும் வசந்தமாய் அல்லவா நீ வந்தாய்......

சிறப்பு மிக்க விருந்தாளியாய் அல்லவா நீ வந்தாய்........

எத்தனை எத்தனை மகிழ்ச்சியை நீ தந்தாய் தெரியுமா........

எவ்வளவு ஒற்றுமையை நீ  தந்தாய் தெரியுமா.......

உன் வரவால் ஒரு தாய் பெற்ற மக்களை போன்று நாங்கள் ஆனோம் ரமழானே......

உன் வரவால் இறையில்லங்களெல்லாம் அலங்கரிக்கப்பட்டது ரமழானே.....

உன் வரவால் இறையில்லங்களெல்லாம் மக்கள் வெள்ளத்தால் நிரம்பியது ரமழானே.....

உன் வரவால் ஏழை எளிய மக்கள் ஆனந்தத்தால் மகிழ்ச்சியினால் கண்ணீர் வடித்தார்கள் ரமழானே.....

உன் வரவால் இந்த சமுதாயம் எத்தனை எத்தனை கோடிகளை செலவழித்தார்கள் என்று உனக்கு தெரியுமா ரமழானே......

புண்ணிய மிக்க ரமழானே......

யாராவது பசித்திருப்பதை விரும்புவார்களா......

உன் வரவால் நாங்கள் பசித்திருந்தோம் ரமழானே.......

புனித ரமழானே.....

உண்ணுவதற்க்கு உணவு இல்லாத்தினால் கிடையாது ரமழானே........

குடிப்பதற்க்கு தண்ணீரோ பானியங்களோ இல்லாமலிருந்ததினால் கிடையாது ரமழானே....

உன்னை கண்ணியப்படுத்த வேண்டும்.....

உன்னை சங்கை செய்ய வேண்டும்......

என்ற ஒரே காரணத்தினால் ரமழானே......

கை விட்டு விடாதே ரமழானே...

கை விட்டு விடாதே
ரமழானே.....

ஒரு போதும் இந்த பாவிகளை கை விட்டு விடாதே ரமழானே......

உன்னை கண்ணியப்படுத்துவதில் ஏதாவது தவறுகள் செய்திருந்தால் .........

மன்னித்து விடு ரமழானே......

மன்னித்து விடு
ரமழானே......

நாளை மறுமையில்
மஹ்ஷர் பெருவழியில்
பயந்து நடுங்கி நிற்க்கும் வேளையில்.......

இந்த பாவிகளான எங்களுக்கு......

பரிந்துரை செய்
ரமழானே......

பரிந்துரை செய்
ரமழானே........

  ஒன்று மட்டும்
எங்களுக்கு தெரியும் ரமழானே........

அடுத்த வருடம் நிச்சயமாக நீ வருவாய்.......

உன்னை வரவேற்க்க நாங்கள் இருப்போமா ரமழானே......

காரணம்.......

சென்ற வருடம் நீ வந்தபோது எங்களுடன் இருந்து உன்னை வரவேற்ற.....

நாங்கள் உயிராய் நேசித்த பலரையும் இன்று இழந்து தவிக்கின்றோம் ரமழானே........

அந்த மண்ணறை வாழ் மக்களுக்கும் பரிந்துரை செய் ரமழானே.......

ரம்மிய ரமழானே
நீ விடை பெறுகின்றாயா.....

அஸ்ஸலாமு அலைக்க யா ஷஹ்ர ரமழான்.....

அஸ்ஸலாமு அலைக்க யா ஷஹ்ரல் முபாரக்..........

உன்னை பிரிய மனமில்லாமல்.....
அல்ஹம்து லில்லாஹ்..

யூதர்கள் யார்,

யூதர்கள்* தான் இவ்வுலகில் புத்திகூர்மை உடைய மக்கள்..

உலகில் மிக சொற்ப தொகையினர் இவர்களே..

அதே சமயம் உலகத்தை தனக்கு சாதகமாக வளைப்பவர்களும் இவர்களே...

உலக தீவிரவாதம் முஸ்லீம்களின் பெயரால் இவர்களால் தான் நடத்தபடுகிறது...

உலக ஊடகங்கள்,உலக வங்கிகள்,உலக அரசியல்,உலக விஞ்ஞானம் அனைத்தும் இவர்கள் பிடியில்...

*இவர்களின் நாடு இஸ்ரேல்...*

உலகில் எந்த மதத்தை சார்ந்தவர்களும் இன்னொரு மதத்திற்கு மாற முடியும்...
யூத மதத்தை தவிர...

இவர்களை தவிர யாரையும் யூத மதத்தில் சேர்ப்பதில்லை...

மத பிரசாரம் செய்வதில்லை...

உலக மொத்த ஆபாச இணையதளங்களை இயக்குபவனும் உருவாக்குபவனும் இந்த யூதர்களே...

ரஷ்யா என்ற பெரிய நாட்டை கம்யூனிஸம் என்ற போலி தத்துவத்தை விதைத்து ஒரு நாட்டையே வசப்படுத்தி வைத்த காரல் மார்க்ஸ் ஒரு தீவிர யூதன்...

உலக போதை கலாச்சாரத்தை விதைத்து இளைஞர் சக்தியை சிதைப்பதும் இவர்களே...

ஐரோப்பிய யூனியன்,உலக வங்கி, அமெரிக்க ஏகாதிபத்தியம்,ஐநா சபை இவை அத்தனையும் யூதர்களின் பிடியில்...

இஸ்ரேல் நாட்டில் புகை பிடிப்பது தேச விரோத குற்றம்...

ஆனால்..

உலகில் புகையிலைகல் விற்பனை செய்யும் ஏஜெண்டுகள் இவர்களே...

போதை பொருட்கள் இஸ்ரேல் நாட்டில் தடை...

உலகில் போதை பொருளை விற்பது இவர்களே...

ஆபாச இணையதளங்கள் இஸ்ரேல் நாட்டில் தடை...

இன்று அத்தனை ஆபாச இணையதளங்களும் இயக்குவது அவர்களே...

குழந்தைகளின் அறிவை மழுங்கடிக்கும் கார்ட்டூன் படங்கள் இஸ்ரேல் நாட்டில் தடை...

ஆனால்..

கார்ட்டூன் படங்களை உலகில் உலவ விடுவதும் இந்த யூதர்களே...

இதைபோல் சொல்லி கொண்டே போகலாம்...

மறைமுகமாக உலகை ஆள்பவர்கள் இவர்கள்...

நம் மூளை இவர்களிடம் நமக்கே தெரியாமல் அடகு வைத்துள்ளோம்...

இந்த யூதர்கள் நேருக்கு நேர் மோதாத கோழைகள்...

ஆனால்..

சூழ்ச்சி செய்வதில் வல்லவர்கள்...
84 நோபல் பரிசுகள் பெற்ற ஒரே நாடு... உங்களுக்கு தெரியுமா?

எல்லோரும் தெரிந்து கொள்ள ஒரு பதிவு
ஒரு சின்ன குட்டி நாடு மொத்தமே ஒன்றரை கோடி தான் மக்கள் தொகை ஆனால் உலகத்தையே அவர்கள் தான் மறைமுகமாக ஆள்கிறார்கள் எப்படி ??
அந்த நாட்டை பற்றி மக்களை பற்றிய சிறு குறிப்புகள் !!

கல்யாணம் பண்ணனும்னா ஏதாவது ஒரு துறையில் டாக்டர் பட்டம் வாங்கி இருக்க வேண்டுமாம்.

கல்லூரியில் சேர முதலில் 5000 டாலர் கொடுத்து ஏதாவது ஒரு நிறுவனத்தை ஆரம்பித்து 15 பேருக்கு வேலை கொடுத்த பின்பு அதை 15000 டாலர் ஆக்கினால் தான் கல்லூரியில் சீட் கிடைக்குமாம் இதனால் இன்று உலகத்தில் உள்ள பாதி முக்கிய ப்ரெண்டெட் நிறுவனங்கள் அந்த நாட்டை சேர்ந்தவை தான்.

உலகத்தில் உள்ள அணைத்து சிறுவர் கார்ட்டூன் படங்களை தயாரிப்பது அவர்கள் தான் அவர்கள் நாட்டின் குழந்தைகள் அதை பார்ப்பதில்லை அங்கு அது தடை செய்ய பட்டுள்ளது.

உலகத்தில் முதன் முதலாக தற்பொழுது வங்கிகளில் கடன் கொடுக்கும் கடன் வாங்கும் விதத்தை உலகத்துக்கு கத்து கொடுத்தது இவர்கள் தான்.

கர்ப்பிணி பெண்கள் தொலைக்காட்சி , சினிமா பார்க்க அனுமதிக்க படுவதில்லை , அதற்கு பதில் கர்ப்பமாக இருக்கும் பொழுது கணக்கு ஆங்கிலம் போன்ற பல மொழிகளில் பாடம் படிப்பார்களாம் , அப்பொழுது பிறக்கும் குழந்தைகள் அறிவாக பிறக்கிறார்களாம் ..

உலகத்தில் அதிகம் நோபல் பரிசு வென்றவர்கள் இந்த நாட்டில் தான் மொத்தம் 84 பேர்.

உலகத்தில் மெத்த படித்த மேதாவிகளும் உலகத்தை மறைமுகமாக ஆளும் தந்திரமும் மிக்கவர்கள் உள்ள ஒரே நாடு.

இவர்களை யாரும் ஒன்றும் செய்ய முடியவில்லை.

இப்படி இன்னும் ஏராளாமான விஷயங்கள் அந்த நாட்டை பற்றி தெரிந்த உடன் இப்பொழுது தெரிகிறது அவர்கள் எல்லோரையும் ஆள என்ன காரணம் என்று.

அந்த நாடு தான்
இஸ்ரேல்.

பிரபல்யமான பதிவுகள்