நம்முடன் இணைந்து இருப்பவர்கள்

ஞாயிறு, ஆகஸ்ட் 26, 2018

இஸ்லாம் கூறும் ஆட்சி அதிகாரம்,

  இன்று நாம் ஒரு ஆபத்தான கட்டத்தை நெருங்கிகொண்டிருக்கிறோம். ஏனெனில் இன்னும் சில மாதங்களில் பாராளுமன்ற தேர்தல் நடக்கயிருக்கிறது. அதில் மதவெறிகொண்ட பி.ஜே.பி. வெற்றி பெற்று நாட்டின் பிரதமராக நரபலி மோடி வந்துவிட்டால் இந்தியா முழுவதும் இன்னொரு குஜராத்தாக மாறிவிடுமோ என்றபயம் எல்லா முஸ்லிம்களிடமும் இருக்கிறது .இந்த நேரத்தில் நாம் செய்ய வேண்டிய காரியம் என்ன. அதற்கு இஸ்லாம் என்ன வழி கூறுது என்பதை பார்ப்போம். பிறரை அச்சமூட்டி எச்சரிக்கை செய்ய வேண்டிய இஸ்லாமிய சமூகம் இன்று சர்வதேச அளவில் அச்சப்பட்டு வாழக்கூடிய அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. எந்த வழியிலாவது இஸ்லாமியர்களை அச்சுருத்திக்கொண்டிருக்கிறார்கள் இஸ்லாமிய எதிரிகள். நாமும் பயந்துவாழ்ந்துகொண்டிருக்கிறோம் .நாம் அஞ்ச வேண்டியவர்களா. அஞ்ச வேண்டிய சமூகத்தை சார்ந்தவரகளா. நம்முன்னோர்களின் இரத்தனாலமெல்லாம் வீரம் நிறம்பியிருந்த பரம்பரைக்கு சொந்தக்காரர்கள் இல்லையா. நம்மிடம் அந்த வீரம் எங்கே. கொஞ்சம் வரலாறை திரும்பி பாருங்கள்.வைர வரிகளால் பொறிக்கப்பட்டிருக்கும். அஞ்சா நெஞ்சர் ஹஜ்ரத் அலி(ரலி). அல்லாஹ்வின் சிங்கம் ஹம்ஸா (ரலி). அல்லாஹ்வின் போர்வாள் காலித் இப்னு வலீத்(ரலி) போன்றோர்கள் வார்த்தெடுக்கப்பட்ட தங்கங்கள். இன்று நம்மிடம் அந்த பெயர் இருக்கிறது. ஆனால் அவர்ளின் வீரம் எங்கே.அந்த வரலாறு திரும்ப வேண்டாமா. அன்று அவர்கள் சிறுபான்மையினராக இருந்து பெரும் வல்லரசுகளான ரோமாபுரி. பாரசீகத்தை கூட ஆச்சரியப்பட வைக்கவில்லையா.அவர்களால் எப்படி முடிந்தது அதனுடைய இரகசியம்தான் என்ன. இரண்டு காரணத்தை சொல்லலாம். (1பேணுதலான அவர்களின் வாழ்க்கை وَعَدَ اللَّهُ الَّذِينَ آمَنُوا مِنكُمْ وَعَمِلُوا الصَّالِحَاتِ لَيَسْتَخْلِفَنَّهُمْ فِي الْأَرْضِ كَمَا اسْتَخْلَفَ الَّذِينَ مِن قَبْلِهِمْ وَلَيُمَكِّنَنَّ لَهُمْ دِينَهُمُ الَّذِي ارْتَضَىٰ لَهُمْ وَلَيُبَدِّلَنَّهُم مِّن بَعْدِ خَوْفِهِمْ أَمْنًا ۚ  24:55.  உங்களில் எவர் ஈமான் கொண்டு (ஸாலிஹான) - நற்செயல்கள் புரிகிறார்களோ அவர்களை, அவர்களுக்கு முன்னிருந்தோரை(ப் பூமிக்கு) ஆட்சியாளர்களாக்கியது போல், பூமிக்கு நிச்சயமாக ஆட்சியாளர்களாக்கி வைப்பதாகவும், இன்னும் அவன் அவர்களுக்காக பொருந்திக் கொண்ட மார்க்கத்தில் அவர்களை நிச்சயமாக நிலைப்படுத்துவதாகவும், அவர்களுடைய அச்சத்தைத் திட்டமாக அமைதியைக் கொண்டு மாற்றி விடுவதாகவும், அல்லாஹ் வாக்களித்திருக்கிறான்; “ وهو على أنطاكية لما قدمت منهزمة الروم‏:‏ ويلكم أخبروني عن هؤلاء القوم الذين يقاتلونكم أليسوا بشرا مثلكم‏؟‏ قالوا‏:‏ بلى‏.‏ قال‏:‏ فأنتم أكثر أم هم‏؟‏ قالوا‏:‏ بل نحن أكثر منهم أضعافاً في كل موطن‏.‏ قال‏:‏ فما بالكم تنهزمون‏؟‏ فقال شيخ من عظمائهم‏:‏ من أجل أنهم يقومون الليل ويصومون النهار، ويوفون بالعهد، ويأمرون بالمعروف، وينهون عن المنكر، ويتناصفون بينهم، ومن أجل أنا نشرب الخمر، ونزني، ونركب الحرام، وننقض العهد، ونغصب، ونظلم، ونأمر بالسخط وننهى عما يرضي الله، ونفسد في الأرض‏.‏ فقال‏:‏ أنت صدقتني‏.‏ ‏ ஹிஜ்ரி  15ம் ஆண்டு ஹஜ்ரத் உமர்(ரலி)அவர்களின் ஆட்சிகாலத்தில் நடைபெற்ற யர்மூக் போர்களத்தில் ரோமர்கள் தோற்று அன் தாக்கியா போகும்போது அவர்களின் அரசர் ஹிர்கள் கேட்பான் உங்களைப்போன்று அவர்களும் மனிதர்கள்தானே அவர்களை விட நீங்கள் அதிகமானவர்கள் இல்லையா அவ்வாறிருந்தும் நீங்கள் தோற்று வருகிறீர்கள் உங்கள் தோழ்விக்கு காரணம் என்ன என்று கேட்கும்போது அவர்களில் ஒரு வயோதிகர் சொல்வார்.அந்த முஸ்லிம்கள் இரவு நின்று வணங்குகிறார்கள்.பகலில் நோன்பு நோற்கிறார்கள். நன்மையை ஏவி.தீமையை தடுக்கிறார்கள்.ஒப்பந்தத்தை நிறைவேற்றுகிறார்கள்.ஆனால் நாம் மது அருந்துகிறோம்.விபச்சாரம் செய்கிறோம்.ஒப்பந்தத்தை மீறுகிறோம் அதுதான் காரணம் இதனைக் கேட்ட அரசன் சொல்வான் நீங்கள் சொல்வது உண்மை. அவர்களுக்கு வெற்றி கிடைத்தது அவர்களின் பேணுதலான வாழ்கையினால்.நூல்.பிதாயா வந்நிஹாயா.பாகம்.7  பக்கம்.20  எனவே நம்முடைய முன்னோர்களின் அச்சமில்லாத வாழ்க்கைக்கு முதல் காரணமாக இருந்தது பேணுதல். அடுத்தது 2)துஆ  أَمَّن يُجِيبُ الْمُضْطَرَّ إِذَا دَعَاهُ وَيَكْشِفُ السُّوءَ وَيَجْعَلُكُمْ خُلَفَاءَ الْأَرْضِ ۗ أَإِلَٰهٌ مَّعَ اللَّهِ ۚ قَلِيلًا مَّا تَذَكَّرُونَ 27:62. கஷ்டத்திற்குள்ளானவன் அவனை அழைத்தால் அவனுக்கு பதில் கொடுத்து, அவன் துன்பத்தை நீக்குபவனும், உங்களை இப்பூமியில் பின்தோன்றல்களாக ஆக்கியவனும் யார்? அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா? (இல்லை) எனினும் (இவையெல்லாம் பற்றி) நீங்கள் சிந்தித்துப் பார்ப்பது மிகக் குறைவே யாகும் அல்லாஹ் துஆ எனும் ஆயுதத்தை நமக்கு தந்திருக்கிறான் . நாம் இறையச்சத்தோடு இறைவனிடம் கையேந்தினால் எதிரிகள் ஆட்சியில் இருக்கமாட்டார்கள். இறைவன் நாடினால் ஆளே இருக்கமாட்டார்கள். எதிரிகளின் அராஜகம் வரம்புகடக்கும்போது அவர்களுக்கு எதிராக இறைவனிடம் பிராத்தனை செய்வது நபிமார்கள் .இன்னும் நம்முன்னோர்களின் நடைமுறையாக இருந்திருக்கின்றது. பிர் அவ்னின் தொல்லை அதிகரித்தபோது மூஸா நபி  கேட்ட துஆவை அல்லாஹ் கூறுகிறான்.  وَقَالَ مُوسَى رَبَّنَا إِنَّكَ آَتَيْتَ فِرْعَوْنَ وَمَلَأَهُ زِينَةً وَأَمْوَالًا فِي الْحَيَاةِ الدُّنْيَا رَبَّنَا لِيُضِلُّوا عَنْ سَبِيلِكَ رَبَّنَا اطْمِسْ عَلَى أَمْوَالِهِمْ وَاشْدُدْ عَلَى قُلُوبِهِمْ فَلَا يُؤْمِنُوا حَتَّى يَرَوُا الْعَذَابَ الْأَلِيمَ இன்னும்: “எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ ஃபிர்அவ்னுக்கும் அவனுடைய பிரமுகர்களுக்கும் அலங்காரத்தையும், இவ்வுலக வாழ்க்கையின் செல்வங்களையும் கொடுத்திருக்கிறாய்; எங்கள் இறைவனே! (அவற்றைக் கொண்டு) அவர்கள் உன் பாதையை விட்டு வழி கெடுக்கிறார்கள்; எங்கள் இறைவனே! அவர்களுடைய செல்வங்களை அழித்து, அவர்களுடைய நெஞ்சங்களையும் கடினமாக்கி விடுவாயாக! நோவினை தரும் வேதனையை அவர்கள் பார்க்காதவரையில், அவர்கள் ஈமான் கொள்ளமாட்டார்கள்” என்று மூஸா கூறினார்..10.88 பத்ர் போரின் வெற்றியின் பின்னனியில் நபியின் துஆ  இருப்பதை நாம் மறக்கமுடியாது. அலி(ரலி)அவர்கள் அறிவிக்கிறார்கள். பத்ர் போர் நடைபெற்றபோது யுத்தகளத்தில் இருந்த நான் மூன்று முறை நபியின் கூடாரத்துக்கு சென்றேன்.நபியவர்கள் ஸஜ்தாவில் இருந்து கொண்டு யா ஹய்யு யா கய்யூம் என்று துஆ செய்ததை நான் கண்டேன். அல்லாஹ் எங்களுக்கு வெற்றியளித்தான். நூல். பைஹகீ.நஸயி. நபியின் துஆவின் காரணமாக பத்ரின் வெற்றி கிடைத்தது மட்டுமல்ல. யுத்தம் தொடங்கும் முன்பாகவே வெற்றியின் நம்பிக்கையும் சொல்லப்பட்டது. எதிரிகளில் யார் கொல்லப்படுவார். எந்த இடத்தில் கொல்லப்படுவார் என்பதும் நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள்.  : فندب رسول الله صلى الله عليه وسلم الناس فانطلقوا حتى نزلوا بدرا فقال رسول الله صلى الله عليه وسلم : " هذا مصرع فلان " ويضع يده على الأرض ههنا وههنا قا ل : فما ماط أحدهم عن موضع يد رسول الله صلى الله عليه وسلم . رواه مسلم அனஸ்(ரலி)அவர்கள் அறிவிக்கிறார்கள்.  நபி(ஸல்)அவர்கள் போர் தொடங்கும்முன் எங்களிடம் சில குறிப்பிட்ட இடங்களில் கைவைத்து இது இவர் கொல்லப்படும் இடம் என்றார்கள். எதிரிகளில் கொல்லப்பட்ட எவரும் நபி(ஸல்)அவர்கள் கை வைத்து காட்டிய இடத்தை கொஞ்சம் கூட கடக்கவில்லை. நூல்.முஸ்லிம்.மிஸ்காத். பக்கம்.531 நாம் இறைவனிடம் கையேந்தினால் கள்ளரசும்.வல்லரசும் கவிழும். நல்லரசு மட்டுமே நிலைக்கும்.  سعيد بن المسيب قال : كتب رسول الله صلى الله عليه وسلم إلى كسرى وقيصر والنجاشي أما بعد (تعالوا إلى كلمة سواء بيننا وبينكم أن لا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله فان تولوا فقولوا أشهدوا بأنا مسلمون) قال سعيد : فمزق كسرى الكتاب ولم ينظر فيه فقال النبي صلى الله عليه وسلم : مزق ومزقت أمته ، ஹிஜ்ரி 6-ம் ஆண்டு நபி அவர்கள் எல்லா நாட்டின் மன்னர்களுக்கும் தூதுவர்கள் மூலம் இஸ்லாமிய அழைப்பு கடிதத்தை அனுப்பிய போது வல்லரசு நாடாக இருந்தபாரசீகத்தின் கிஸ்ரா மன்னனுக்கும் கடிதத்தை       شجاع بن وهبஎன்ற ஸஹாபியின். இன்னொரு அறிவிப்பின் படி عبدالرحمان بن حذافة(رضى)அவர்களின் மூலம் கொடுத்தனிப்பினார்கள். வாங்கிய கடிதத்தை கிழித்து போட்டான். இதனைக் கேள்விப்பட்ட நபி(ஸல்) அவர்கள் .அல்லாஹ் கிஸ்ராவின் ஆட்சியை கிழித்து எறிவானாக. என்று சொன்னார்கள்.நபியின் துஆவை அல்லாஹ் செயல் படுத்தினான்.பதவி வெறிகொண்ட அவனுடைய மகனான சீரவைஹி என்பவன் தனது தந்தையையே கொலைசெய்து விட்டு ஆட்சியில் அமர்ந்தான். அதற்கு பிறகு ஒரு நாள் அரண்மனையில் உள்ள மருந்துகள் வைக்கப்படும் இடத்தில்  ஆண்மைக்கு பலன் தரும் என்று எழுதப்பட்டிருந்த ஒரு பாத்திரத்தை கண்டான். அதில் இருந்ததோ கொடிய விஷம் .அது அவனின் தந்தை கிஸ்ரா தன்னுடைய ஆட்சியை யாராவது கைபற்றினால் அவர்கள் விஷத்தால் சாகவேண்டும் என்று திட்டமிட்டு வைக்கப்பட்ட விஷம். அதை அறியாமல் அதை சாப்பிட்டு இறந்தான்.இது நடந்தது ஆறு மாதத்திற்குல். இவர்களுக்கு எதிராக நபி கேட்ட துஆ. அவர்களையும் அவர்களின் ஆட்சியையும் அழித்தது. பிறகு ஹஜ்ரத் உமர்(ரலி) காலத்தில் பாரசீகம் இஸ்லாமிய ஆட்சியின் கீழ் வந்தது. `இரத்தமின்றி சப்தமின்றி வெற்றி பெரும்கூட்டம் நாம் மட்டுமே َنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ سَمِعْتُمْ بِمَدِينَةٍ جَانِبٌ مِنْهَا فِي الْبَرِّ وَجَانِبٌ مِنْهَا فِي الْبَحْرِ قَالُوا نَعَمْ يَا رَسُولَ اللَّهِ قَالَ لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يَغْزُوَهَا سَبْعُونَ أَلْفًا مِنْ بَنِي إِسْحَقَ فَإِذَا جَاءُوهَا نَزَلُوا فَلَمْ يُقَاتِلُوا بِسِلَاحٍ وَلَمْ يَرْمُوا بِسَهْمٍ قَالُوا لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَاللَّهُ أَكْبَرُ فَيَسْقُطُ أَحَدُ جَانِبَيْهَا قَالَ ثَوْرٌ لَا أَعْلَمُهُ إِلَّا قَالَ الَّذِي فِي الْبَحْرِ ثُمَّ يَقُولُوا الثَّانِيَةَ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَاللَّهُ أَكْبَرُ فَيَسْقُطُ جَانِبُهَا الْآخَرُ ثُمَّ يَقُولُوا الثَّالِثَةَ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَاللَّهُ أَكْبَرُ فَيُفَرَّجُ لَهُمْ فَيَدْخُلُوهَا فَيَغْنَمُوا فَبَيْنَمَا هُمْ يَقْتَسِمُونَ الْمَغَانِمَ إِذْ جَاءَهُمْ الصَّرِيخُ فَقَالَ إِنَّ الدَّجَّالَ قَدْ خَرَجَ فَيَتْرُكُونَ كُلَّ شَيْءٍ وَيَرْجِعُونَ   அபூஹுரைரா(ரலி) அவர்கள் கூறியதாவது: நபி(ஸல்) அவர்கள், "ஒரு  பகுதி  கரையிலும்  மற்றொரு  பகுதி  கடலிலும்  அமைந்துள்ள  ஒரு நகரத்தைப்  பற்றி  நீங்கள்  கேள்விப்பட்டிருக்கிறீ ர்களா?'' என்று  கேட்டார்கள். மக்கள், "ஆம்; அல்லாஹ்வின் தூதேர!'' என்று பதிலளித்தார்கள். நபி(ஸல்) அவர்கள், "இஸ்ஹாக்(அலை) அவர்களின் வழித்தோன்றல்களில் எழுபதாயிரம் பேர் அந்நகரத்தின்  மீது  போர்  தொடுக்காத  வரை  யுக  முடிவுநாள்  வராது.  அவர்கள்  வந்து (அந்நகரத்தில்)  இறங்கும்போது  அவர்கள்  எந்த  ஆயுதத்தைக்  கொண்டும்  சண்டையிட மாட்டார்கள்; அம்பெய்யவுமாட்டார்கள்.  அவர்கள்"லாயிலாஹ  இல்லல்லாஹு  வல்லாஹு அக்பர்' (அல்லாஹ்வைத்  தவிர  வேறு  இறைவனில்லை; அல்லாஹ்  மிகப்  பெரியவன்) என்றே கூறுவார்கள். உடேன அந்நகரத்தில் கடலிலுள்ள ஒரு பகுதி வீ ழ்ந்துவிடும். பிறகு  அவர்கள்  இரண்டாவது முறை"லாயிலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர்' என்று கூறுவார்கள்.  உடேன  அதன்  மறுபகுதி  வீ ழ்ந்துவிடும்.  பிறகு  அவர்கள்  மூன்றாவது  முறை "லாயிலாஹ  இல்லல்லாஹு  வல்லாஹு  அக்பர்'  என்று  கூறுவார்கள்.  உடனே  அவர்களுக்கு  வழி  திறக்கும்.  அதில்  நுழைந்து  போர்ச்செல்வங்களைத்  திரட்டுவார்கள்.  அவர்கள்  போர்ச் செல்வங்கைளப்  பங்கிட்டுக்கொண்டிருக்கும்போது  ஒருவர்  வந்து  உரத்த  குரலில், "தஜ்ஜால் புறப்பட்டுவிட்டான்'' என்று  அறிவிப்பார்.  உடனே  அவர்கள்  எல்லாவற்றையும்  விட்டுவிட்டு (தஜ்ஜாலை நோக்கி) திரும்பிச் செல்வார்கள் திக்ர் மற்றும் துஆவின் மூலம் நாவைமட்டும் பயன் படுத்தி எதிரிகளை விரட்டும் ஒரே சமுதாயம் முஸ்லிம்கள் மட்டும் தான். எல்லாவற்றுக்கும் மேலாக நம்மையும் நமது சந்ததிகளையும் கியாமத்வரை எதிரிகளை விட்டும் பாதுகாக்க நபியின் துஆ கேடயமாக அமையும். عائشة قالت : قال رسول الله صلى الله عليه وسلم : " اللهم من ولي من أمر أمتي شيئا فشق عليهم فاشقق عليه ومن ولي من أمر أمتي شيئا فرفق بهم فارفق به " . رواه مسلم எனது உம்மத்தின் காரியங்களில் ஏதேனும் ஒரு காரியத்திற்கு பொறுப்பேற்று அவர்களிடம் கடினமாக நடந்தால் இறைவா நீயும் அவரிடம் கடினமாக நடந்து கொள். என் சமுதாய பெறுமக்களே நாம் எந்த அச்சமும் .கலக்கமும்கொள்ள  வேண்டாம். வாழ்க்கையை அழிக்கும் போர்களத்திலும் சரி.வாக்களிக்கும் தேர்தல்களத்திலும் சரி வெற்றி நமதே.நாம் பத்ரின் முஸ்லிம்களாக இருந்தால். உத்தமர் உமரின் வாரிசாக இருந்தால்.அடலேறு அலியின் வாரிசாகவும் இருந்தால். நமது காலத்தின் அபூஜஹ்லுக்கும். அபூலஹபிற்கும் அவர்களின் முன்னோர்களின் நிலைதான் ஏற்படும் என்பது நிச்சயம். வல்ல அல்லாஹ் எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடித்து நமக்கு அச்சமற்ற வாழ்வை தருவானாக ஆமீன்…

வெள்ளி, ஆகஸ்ட் 24, 2018

ஹளரத் உமர் ரலியல்லாஹு தஆலா அன்ஹு,

ரத் உமர் பாருக் ரலியல்லாஹு அன்ஹு இவர்களுக்கு நபி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களின் வம்சமாகிய குரைஷி வம்சமே. கத்தாப் என்பது இவர்களது தகப்பனின் பெயர். அபூ ஹப்ஸ் என்பது காரணப் பெயர். பாருக் என்பது சிறப்புப்பெயர். இவர்கள் யானை வருடத்துக்கு 13 வருடங்களின் பின் பிறந்தார்கள். பதவி யேற்றல் முதலாம் கலீபா அவர்கள் நோயுற்றிருக்கும் பொழுதே மற்றவர்களுடன் ஆலோசித்து உமர் இப்னு கத்தாப் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களை கலீபாவாகத் தேர்ந்தெடுத்தார்கள். ஓர் உறுதி மொழிப் பத்திரம் எழுதுவித்தார்கள். முன்பாடத்திற் கூறியதுபோல் புத்திமதிகளும் உமர் (ரலியல்லாஹு அன்ஹு) க்குக் கூறினார்கள். ஆனால் அவர்களுக்குப் பின்னரே இவர்கள் ஹிஜ்ரி 13-ம் ஆண்டு ஜமாதுல் ஆகிர் 23-ந் தேதி (கி. பி: 633 ஆகஸ்ட் 23ந் தேதி) பதவியேற்றார்கள். பதவியேற்றபின் மிம்பரில் (பிரசங்கமேடை) ஏறி “அரபிகள், தன்னை மேய்ப்பவுனுக்கு வழிபடும் ஒட்டகம் போல்வர். அதை எங்கு கொண்டு செல்கின்றான் என்பதைக் கவனித்தல் அவனது கடமையே. அதை அவன் சரியாகச் செய்ய  வேண்டும். கஃபாவின் நாயன்மீது ஆணையாக, நான் உங்களை நல்வழியில் கொண்டு செல்வேன் என உறுதி கூறுகிறேன்” என்று கூறினார்கள். இஸ்லாமைத் தழுவியது உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் வீரம், தீரம், வன்மை ஆகியவற்றில் பிரசித்தி பெற்றவர். முதலில் நபித்துவத்தை இவர்கள் அங்கீகரிக்கவில்லை. முஸ்லிம்களின் பெரும் விரோதியாயிருந்தார்கள். எங்கு கண்டாலும் அவர்களை இம்சித்து வந்தார்கள். ஒருநாள் பெருமானார் அவர்களையே கொன்று விடுவதென உருவியவாளுடன் வெளிச் சென்றார்கள். இடைவழியில் தனது சகோதரியிடமிருந்த குர்ஆன் எழுதியிருந்தவோர் கடிதத்தை வாசித்ததும் உண்மை பதிந்தது. கொன்று வெகுமதி பெறத் துணிந்து சென்றவர் அதை மறந்து நபி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களைத் கண்டவுடன் இஸ்லாமைத் தழுவினர். இவர் இஸ்லாமைத் தழுவிய பின்னர் இஸ்லாமியருக்குப் பலம் அதிகரித்தது. திமிஷ்கின் வெற்றி யார்மூக்கின் வெற்றிக்குப் பின் பசீர்பின் கஃபு என்பாரை அங்கு நியமித்துவிட்டு, கலீபா அவர்களின் உத்தரவுப்படி, ஸிரியாவின் இராஜதானியும் பாதுகாப்பிடமுமான திமிஷ்கை நோக்கிச் சென்று எழுபது இரவுகளாக அம்புமாரிகள் பொலிந்து கொண்டு முஸ்லிம்கள் அதை முற்றுகையிட்டுக் கொண்டிருந்தனர். ஒவ்வொரு தலைவரும் அவரவருக்கு நியமிக்கப்பட்ட வாயிலில் சேனைகளுடன் காத்திருந்தார். காலித் இப்னு வலீத் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் கீழ்ப்பூர வாயிலில் 5,000 வீரருடன் காத்திருந்தார். இவர் இராக் காலங்களில் உறங்குவதைக் குறைத்துக்கொண்டு ஒவ்வொரு நிமிஷத்திலும் நகரத்தின் செய்திகளை உளவு விசாரித்துக் கொண்டிருந்தார். ஓரிரவு நகரவாசிகள் தங்கள் தலைவனுக்கு ஆண்மகவு கிடைத்திருப்பதைக் கொண்டாடிக் கொண்டிருப்பதை அறிந்து, காலித் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் நகரைச் சுற்றியிருக்கும் அகழியில் துருத்திகளின் உதவியால் நீந்திக் கடந்து சென்று, கயிற்றின் உதவியால் மதிலின் மீதேறிக்கொண்டு இன்னுஞ் சிலரை ஏற்றிக்கொண்டு, பின்னர் உள்ளே இறங்கிக் காவலாளிகளைக் கொன்றுவிட்டு, வாயிலை உடைத்து விட்டுத் தக்பீர் சொல்லச் சகல முஸ்லிம்களும் உள்ளே புகுந்து விட்டனர். இதைக்கண்ட உரோமர் மதில் சுவற்றின் வாயிலைத் திறந்து சென்று அபூ உபைதாவுடன் திரை செலுத்த உடன்படிக்கை செய்து கொண்டனர். காலித் (ரலியல்லாஹு அன்ஹு) உட்புகுந்த செய்தியை அறியாமலே அபூ உபைதா (ரலியல்லாஹு அன்ஹு) சமரசம் செய்து கொண்டதால் வெற்றி கொள்ளப்பட்ட பகுதியையும் சமரசம் செய்து கொண்ட பகுதியுடனையே சேர்த்துக்கொண்டு, கொள்ளைப் பொருட்களைத் திருப்பிக் கொடுத்தும் கைதிகளை விடுவித்தும் விட்டனர். இவ்யுத்தம் ஹிஜ்ரி 14ம் ஆண்டு நிகழ்ந்தது. இதன் பின்னர் அரேபியர் சேனை, ஸிரியாவின் கரையோரப் பகுதிகளிலுள்ள பேரூத், பீசான், தப்ரிய்யா, கைஸரிய்யா, கஸா, அம்வாஸ், யாபா, தர்ஸூஸ் முதலிய அனேக ஊர்களைக் கைப்பற்றினது. இவை முஆவியாவின் காலத்தில் பிடிக்கப்பட்டவை. காலக்கிரமத்தில் இங்கெல்லாம் உரோமர் குறைந்து அரபிகள் அதிகமாயினர். வெற்றிகள் பத்தரை வருடமாகிய இக்குறைந்த காலத்தில் இஸ்லாம் கைப்பற்றிய நாடுகள் 22,51,030 சதுரமைல் விஸ்தீரண மானவையாயிருந்தன. இஸ்லாமிய அரசாங்கமே அக்காலத்தில் மிகப் பெரிய அரசாங்கமாக இருந்தது. எத்தகைய சண்டையிலும் அராபிய முஸ்லிம்கள் 50,000 பேர்களுக்குமேல் ஒருங்கு சேர முடியவில்லை. ஆனால் விரோதிகளின் படையில் 2 லட்ச்சத்துக்குமேல் குழுமியிருந்த யுத்தங்களிலும் சொற்பகாலத்தில் பெரும் வெற்றி பெற்றது ஒரு அற்புதச் செயலாகும். இது, இவர்களின் ஈமானேனும் நம்பிக்கையின் பயனும், திருக்குர்ஆனைக் கைகொண்டு ஒழுகிய தன் பயனுமாகும். இவர்களின் நீதி, நேர்மை, வாக்குறுதி, அன்பு முதலிய நற்குணங்களின் காரணமாய் அநேகர் இஸ்லாமை அங்கீகரித்தனர். தவிரவும், உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அரபிகளை நன்றாய்ப் பயிற்சியும் செய்தார்கள். சிறு சிறு விஷயங்களையும் அவர்கள் கவனித்து வந்தார்கள். குணாதிசயங்களும் சேவைகளும் தன்னை அங்கீகரிக்கும் மக்கள் யாவருக்கும் இஸ்லாம் சமத்துவம் அளிக்கிறது. ஆதலால் உமர் (ரலியல்லாஹு அன்ஹு) வின் காலத்தில் அதிபதிகளும் கலீபா அவர்களும் சாதாரண பிரஜைக்குச் சமமாகவே பாவிக்கப்பட்டு வந்தார்கள். ஒவ்வொருவருக்கும் கலீபா அவர்கள் மீது குற்றங்காணும் உரிமையும் இருந்தது. இது ஜனநாயகத்தின் மூலகாரணமாகும். தேவையான விஷயங்களில் மற்றவர்களையும் கலந்து ஆலோசிப்பார்கள். சாதாரண மனிதனும் தன் அபிப்பிராயத்தை வெளியிட அனுமதிக்கப்பட்டான். “நான் பிழை செய்தால் எனக்கு நல்வழியைக் காண்பியுங்கள்” எனச் சதா கூறுபவராயிருந்தார்கள். நீதம் செலுத்துவதில் அதிகாரி, பிரஜை என்று பார்க்கமாட்டார்கள். அத்துடன் பிரஜைகள் மீது அளவு கடந்த அன்பும், கருணையுமுடையவராயிருந்தார்கள். பொது நிதியை அதற்குத் தகுந்தோருக்கல்லாது அனுமதியார்கள். சொந்தச் செலவுக்காக மிகக் கஷ்டத்துடன் ஜீவனம் நடத்தி வந்தார்கள். தோற்கொதுமை ரொட்டியும், ஸைத்துன் என்னையுமே (ஒலிவ்) அதிகமாக இவரின் உணவு. உதுமான் (ரலியல்லாஹு அன்ஹு), ஸுபைர் (ரலியல்லாஹு அன்ஹு) போன்றவர்கள் இவர்களது கஷ்ட நிலையைக் கண்டு மனமுருகி, அவர்களின் திருப் புதல்வியாகிய ஹப்ஸா நாயகியிடம் சென்று “நீங்கள் எங்கள் பெயர்களை வெளியிடாமல் உங்கள் பிதாவிடம் சென்று அவர்கள் பொதுநிதியிலிருந்து எடுத்துக்கொள்ளும் தொகை அவர்களுக்குப் போதியதாயில்லாத்தால் இன்னுமதிகமாய் எடுக்குமாறு கூறுங்கள்” என்று வேண்டிக்கொண்டனர். அன்னார் இதைத் தகப்பனிடம் சொன்னபோது, “இவ்வாறு கூறியவர்களை நான் அறிந்திருக்க வேண்டும்” எனக் கூற, ஹப்ஸா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்கள் “நாமங்களை வெளியிட முடியாதிருக்கிறேன்” எனக் கூறவே “நல்லது, நீர் எனக்கும் அவர்களுக்குமிடையில் நிற்கிறீர். நபி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் பசியுடன் இருக்கவில்லையா? ஒட்டுப்போடப் பெற்ற ஆடையை அணியவில்லையா? அவர்கள் இகலோக வாழ்க்கையைக் கருதாதிருக்க, என்னையும் இருக்கவிடுங்கள்” எனக் கூறி அனுப்பிவிட்டார்கள். தங்கள் குடும்பத்தவரும் இங்ஙனம் வாழ்வைதையே அவர்கள் விரும்பினார்கள். இவர்களின் சிறந்த குணத்திற்காக இவர்கள் மீது ஜனங்களுக்கு நல்ல பயபக்தியிருந்தது. சேனையினதும், மற்றும் வர்க்கத்தினர்களதும் பதவிகள் இவர்கள் காலத்திலேயே ஒழுங்குபடுத்தப்பெற்றன. ஹிஜ்ரி சகாப்தம் இவர்களாலேயே ஏற்படுத்தப்பட்டது. கூபா, பஸறா, புஸ்த்தாத், மூஸில், ஜீஸா இவைகளெல்லாம் இவர்களால் நிர்மாணிக்கப்பட்ட நகரங்களேயாகும். இஸ்லாத்தில் கடிதங்களுக்கு முதன்முதல் தேதியிட்டவர்களும், அவற்றிற்கு முத்திரையிட்டவர்களும், அமீருல் முஃமினீன் (நம்பிக்கை கொண்டவர்களின் எஜமான்) என முதலில் அழைக்கப்பட்டவர்களும், இரவில் மற்றவர்கள் அறியாவண்ணம் சுற்றித்திரிந்து மனிதர் குறைகளைக் கவனிக்கும் வழக்கத்தைத் தொடங்கியவர்களும், பட்டணங்களில் முதன் முதல் நியாயாதிபதிகளை (காஸிகள்) நியமித்தவர்களும், இஸ்லாத்தில் முதன் முதல் கடிதங்கள் எடுத்துச் செல்ல உதவியாகத் தபால் ஆபீஸ்களை ஏற்படுத்தியவர்களும், முதன் முதலில் இஸ்லாத்தில் வரவு செலவுகள் பதியப் புத்தகங்கள் உபயோகித்து ஒழுங்காய் நடாத்தத் துவங்கியவர்களும், மக்கவிலே ஹிஜ்ரி 17ம் ஆண்டு மஸ்ஜிதுல் ஹராம் எனும் வணக்கஸ்தலம் காட்டியவர்களும், ஹிஜ்ரி 18ல் முதன் முதலில் பாரசீகர்களின் நாணயங்களின் வடிவத்தில் நாணயங்கள் அடித்துச் சிலதில் அரபியில் ‘அல்ஹம்துலில்லாஹ்’ என்றும், சிலதில் ‘முஹம்மதுர் ரஸுலுல்லாஹ்’ என்றும் எழுதியவர்களும், வருடா வருடம் நைல் நதிக்குப் பலியாக ஒவ்வொரு குமரிப் பெண்ணைக் கொடுத்து வந்த வழமையைத் தடை செய்தவர்களும் இவர்களேயாவர். குடும்ப வாழ்க்கை கலீஃபா அவர்கள் பல முறை மண முடித்திருந்தார்கள். நிறைய மக்களைப் பெற்றெடுக்க வேண்டுமென்பதற்காகவே நான் பல திருமணங்கள் செய்கிறேன் என்றார்கள் கலீஃபா. ஆரம்பத் திருமணம் ஹஸ்ரத் உஸ்மான் இப்னு மள்ஊன் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் உடன் பிறந்த ஜைனப் என்ற பெண்மணியோடு நடைப்பெற்றது. சோதனை மிகுந்த ஆரம்பக் காலத்திலேயே தம் கணவரும் அறியா வண்ணம் இஸ்லாத்தை ஏற்றுவாழ்ந்த இவ்வம்மையார் மக்காவிலேயே மரணித்து விட்டனர். இவர்களின் மணிவயிறு பெற்ற மக்களே நபி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கரம் பற்றி வாழ்ந்த அன்னை ஹஃப்ஸா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்களும், ஹஸ்ரத் அப்துல்லாஹ் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களுமாவர். இரண்டாம் மனைவியார், அன்னை உம்மு ஸலமா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் சகோதரி கரீபா என்பவர். இவர் இஸ்லாத்தை ஏற்காததால் ஹிஜ்ரி 6-ம் ஆண்டில் விவாக பந்தத்திலிருந்து விலக்கப்பட்டார். மூன்றாம் மனைவியார் ஆத்திக்கா. இவரும் இஸ்லாத்தை ஏற்காது விவாக விடுதலை பெற்றாரியினும் இவரின் திருமகனார் ஹஸ்ரத் உபைதுல்லாஹ் (ரலியல்லாஹு அன்ஹு) முஸ்லிமாகி வாழ்ந்தனர். மதீனா வாழ்வில் ஹிஜ்ரி 7-ம் ஆண்டில் ஆஸிம் இப்னு ஃஹாபித் (ரலியல்லாஹு அன்ஹு) என்ற அன்ஸாரியின் மகளார் ஜமீலா என்பவரை மனமுடித்தார்கள். ஆயினும் ஏதோ காரணத்தினால் இவரும் மனவிடுதலை செய்யப்பட்டனர். கலீஃபா அவர்கள் தங்கள் பிந்திய காலத்தில் நபி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் உறவுத் தொடர்பை வலுப்படுத்திக்கொள்ள வேண்டுமென்ற ஆவல் கொண்டு ஹஸ்ரத் அலீ (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் திருமகளார் உம்மு குல்ஃஸும் பின்த் ஃபாத்திமா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்களை மணந்தார்கள். இன்னும் பல பெண்களோடு அவர்கள் மன வாழ்வு கொண்டிருந்தார்கள். இம் மனைவியர் மூலமாக கலீஃபா அவர்களுக்கு அனேக மக்களும் பிறந்தார்களாயினும் அவர்களில் வரலாற்றில் புகழேற்றுச் சிறந்தவர்கள் பெண்களில் நபி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களோடு திருவாழ்வு கொண்ட அன்னை ஹஃப்ஸா நாயகியார் மட்டுமே. ஆண்களில் ஹஸ்ரத் அப்துல்லாஹ் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் மாபெரும் ஹதீஸ் அறிவிப்பாளராக விளங்குகின்றனர். ஹஸ்ரத் அபூ ஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களையடுத்து, நபி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் அருள் மொழிகளை அதிகமாக அறிவித்தவர்கள் இவர்களே. ஹஸ்ரத் உபைதுல்லாஹ் (ரலியல்லாஹு அன்ஹு) மிகச் சிறந்த வீரராகத் திகழ்ந்தனர். மூன்றாவதாக ஹஸ்ரத் ஆஸிம் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் ஆழ்ந்த ஞானியாகத் திகழ்ந்தார்கள்.          சிறப்புகள் ஹிஜ்ரத்துக்குப் பின்னர் துவங்கிய ஹஸ்ரத் உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் மதீனா வாழ்வு மூன்று கால கட்டங்களைக் கண்டது. அவர்களுக்குள் அமைந்திருந்த அறிவு, ஆற்றல்கள் அனைத்தயும் வரலாற்றில் பொலிவுடன் நின்றிலங்கிடச் செய்யும் தளமாக மதீனாவே விளங்கியது. நபி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மறைவோடு நிறைவு கண்ட பதினோராண்டு கால முதலாம் கட்டத்தில் ஹஸ்ரத் உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் முழு வாழ்வும் நபி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் திரு வாழ்வோடு பின்னிப் பிணைந்ததாகவே இருந்தது. நபி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் அரசியல் நிர்ணயங்கள், அறிவியல் ஆய்வுகள், சமுதாய அமைவு முறைகள், போர்ப் பணிகள் முதலிய அனைத்துமே ஹஸ்ரத் உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களைக் கொண்டு களை கட்டின. பெருமைக்குரிய அத்திருச் சந்நிதானத்தில் ஹஸ்ரத் அபூபக்கர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் தகுதியே எஞ்ஞான்றும் முன்னின்றதாயினும், நபி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ஹஸ்ரத் உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் எண்ணங்கள் பாலும் ஆழ்ந்த கண்ணோட்டம் கொள்பவர்களாகவே இருந்தார்கள். ஏனெனில் அவ்வெண்ணங்களுக்கேற்ப இறை வசனங்களே இறங்கிய எத்தனையோ சந்தர்ப்பங்களை நபி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கண்டார்கள். மதுபானங்கள் அருந்தத் தடை, உம்முல் முஉமினீன்களின் நடமாட்டங்களுக்குத் திரை – போன்ற வேத சட்டங்கள் ஹஸ்ரத் உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் எண்ணங்களுக்கேற்பவே இறங்கின. இத்தகைய ஆழ்ந்த ஞானங்கள் அவர்களிடமிருந்து வெளிப்படக் கண்டே நபி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள், “நபித்துவம் என்னுடன் முற்றுப் பெறாதிருக்குமானால் உமர் நபியாகத் தகுந்தவரே” என்று புகழ்ந்தார்கள். “விண்ணுலகில் ஜிப்ரஈலும் மீக்காஈலும் எனக்கமைச்சர்களாக இருப்பார். இம்மண்ணுலகிலோ அபூபக்கரும் உமரும் என்னுடைய அமைச்சர்கள்” என நபி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அறிவித்தார்கள். நபி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தங்களின் அவ்விரு தோழர்களையும் தாங்கள் பார்க்கும் கண்களாகவும் கேட்கும் செவிகலாகவும் வர்ணித்தார்கள். இஸ்லாம் ஹஸ்ரத் உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் ஊணும் உடையுமாகவே இருந்தது. அவர்களின் எண்ணங்களெல்லாம் அதனை ஏற்றம் பெறச் செய்யும் ஆய்வுகளிலேயே மூழ்கியிருந்தன. அந்த மழலைச் சமுதாயம் தவழத் துவங்கியபோது எதிர்ப்பட்ட தடங்கல்களைத் தட்டி விலக்கி அதற்கு வலிவையும் பொலிவையும் ஓட்டத் தேவையான தங்கள் திறனையும், தெம்பையும் அந்த ஆரம்ப நாளிலிருந்தே அவர்கள் முழுமையாக அர்ப்பணித்தார்கள். ஒரு சமயம் நபி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ஹஸ்ரத் உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களோடு கரம் கோர்த்து நடந்து சென்று கொண்டிருந்தார்கள். உரையாடலினூடே ஹஸ்ரத் உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள், “பெருமானே! என ஆன்மாவைத் தவிர்த்து மற்ற உலகப் பொருள்கள் அனைத்தையும் விட தாங்கள் எனக்கு மேலாகத் தெரிகிறீர்கள்” என்றார்கள். “அபல் ஹஃப்ஸ்!” என்றழைத்து நபி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள், “அது போதாது! உம் ஆன்மாவை விடவும் மேலாக என்னை நீர் நேசிக்காத வரையிலும் பூரண விசுவாசியாக மாட்டீர்” என்று. ஒரு கணமும் தயங்காது அந்நல்லறத் தோழர் தம் நாயகரின் கரம் பற்றி தம் நெஞ்சோடு அணைத்துக் கூறினர், “பெருமானே! என் ஆன்மாவை விடவும் அதிகமாகவே தங்களை நான் நேசிப்பேன்” என்று. மறைவு ஹஜ்ஜின் கடைமைகளை முடித்து மதீனா திரும்பிய கலீஃபா அவர்கள் பள்ளியில் ஒருநாள் உரையாற்றிய சமயம், “ஒரு செந்நிறச் சேவல் என்னை இரண்டு அல்லது மூன்று முறை கொத்திடக் கனவில் கண்டேன். என் மரணம் அண்மிவிட்டதற்குரிய முன்னறிவிப்பு இது” என்று குறிப்பிட்டார்கள். பள்ளியில் அவர்கள் ஆற்றிய கடைசி உரையாகவும் அதுவே இருந்தது. கலீஃபா அவர்களின் கனவைப் பற்றிச் செவியுற்ற அஸ்மா பின்த் உமைஸ் (ரலியல்லாஹு அன்ஹா) அம்மையார் “அமீரல் முஉமினீன்! தங்களை அரபியல்லாத ஒருவன் கொல்வான்” என்று அறிவித்தனர். அவ்வாறே நிகழ்ந்தது. துல்ஹஜ் மாதத்தின் 26ம் பிறை மறைந்து பொழுது புலர்ந்துகொண்டிருந்தது என்றும் போல் அன்றும் காலைத் தொழுகையை கலீஃபா உமர் (ரலியல்லாஹு அன்ஹு) நடத்திகொண்டிருந்த போது அபூ லூலு என்றழைக்கப்பற்ற பைரோஸ் என்னும் நிஹாவந்தை சேர்ந்த ஒரு மஜூசி முஸ்லிம்களைப் போல் வேடம் தரித்து தொழுகை அணியில் இருந்தான். திடீரென பாய்ந்து கலீஃபா அவர்களின் உடலில் தனது குறு வாளால் குத்தினான். அடுத்தடுத்து ஆறு முறைகள் குத்தினான். அடிவயிற்றில் பட்ட ஆழமான தாக்குதல் கலீஃபா அவர்களை அயரச்செய்தது. சற்று பின் நகர்ந்து தன் பின்னே நின்ற ஹஸ்ரத் அப்துல் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் கரம் பற்றி தொழுகை நடத்துமாறு முன் நகர்த்தி விட்டு கீழே சாய்ந்தார்கள். அணியில் தொழுதுகொண்டிருந்த ஸஹாபாக்கள் திடுக்கிட்டு அந்த வெறியன் பைரோஸை பிடிக்க பாய்ந்தார்கள். அந்த வெறியன் பைரோஸ் தப்பிக்க தன் குறுவாளை சுழற்றிய படியே ஓடினான். அதன் தாக்குதல் 13 ஸஹாபாக்களின் மேல் பட்டு அதில் அறுவர் இறந்தனர். இறுதியாக ஓர் ஈராக்கிய வீரர் முரட்டுத் துணியை அவன் முகத்தின் மேலாக வீசி அவனை பிடித்து விட்டார். இனி தான் தப்பிக்க முடியாதென உணர்ந்த அவன் அந்த குறுவாளாலேயே தன்னையும் குத்தி தற்கொலை புரிந்துகொண்டான். பின்னர் மயக்க நிலையில் இருந்த கலீஃபா அவர்கள் வீடு சேர்க்க பட்டார்கள். மரணத்தின் மடியில் மூன்று நாட்கள் வரை எல்லா அறபோதங்களையும் செய்துகொண்டிருந்த கலீஃபா அவர்கள் தொழுகைக்கான அழைப்பொலி கேட்கும்போதெல்லாம் இரத்தம் வடிந்துகொண்டிருந்த நிலையிலேயே தொழுதுக்கொண்டார்கள். “தொழுகையை விட்டவனுக்கு இஸ்லாத்தில் இடம் இல்லை” என்றார்கள் கலீஃபா. மூன்று நாட்களுக்கு பின் கலீஃபா அவர்களின் புனித ஆன்மா தன் உடற்கூட்டை விட்டு விடைபெற்று கொண்டது. அப்பொழுது அவர்களுக்கு வயது 63. ஹிஜ்ரி 23ம் ஆண்டு துல்ஹஜ் மாதத்தின் கடைசி நாளோடு உலகம் அதற்குப்பின் இனி கனவிலும் காணமுடியாத ஒரு பொற்கால வரலாறு மூடப்பட்டு விட்டது. ஹிஜ்ரி 24ம் ஆண்டு பிறந்த அன்று புத்தாண்டின் பிறப்பை எண்ணி மகிழவேண்டிய உள்ளங்கலெல்லாம் சோகத்தால் சோர்ந்து நின்றன. மதீனா திருநகரமே அழுதுக்கொண்டிருந்தது. எந்த எல்லை வரை செய்தி பரவிச்சென்றதோ அந்த இஸ்லாமிய உலகமே அழுதது. நீதி வழுவா நெறி முறையின் இறைவனின் நல்லாட்சியை நடத்தாட்டிய நாயகர், ஜோதி எம்பெருமானின் வழிமுறையை விட்டும் வழுவாது மக்களை நிலைப்படுத்திய காவலர், பகைத்தவரை பணியவைத்து, திகைத்தவரை தெளியவைத்து, பசித்தவரை புசிக்கவைத்து அழுதவரை சிரிக்கவைத்து, அந்த சிரிப்பிலே தன் இறைவனின் பொருத்தத்தைக்கண்ட வித்தகர், பெருமான் உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் திரு உடல் அன்று மதீனாவின் மண்ணில் குடிபுகுந்தது. இவர்கள் ஆயிஷா நாயகியின் அறையில் அபூபக்கர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் கப்ருக்கு பக்கத்தில் நல்லடக்கம்

புதன், ஆகஸ்ட் 22, 2018

இது தாண்டா தமிழ்நாடு,

சட்டப்படி மெஜாரிட்டி இல்லை என்பது தெளிவாகத் தெரிந்தும் ஆட்சியில் நீடித்துக்கொண்டே  இருக்கிறது ஒரு கட்சி. அதற்குப் பெயர் "மாநில அரசு"

இந்த அநீதியைத் தெரிந்தே அனுமதித்துக்கொண்டு, வழக்கைத் தள்ளிப்போட்டபடியே, இந்த அரசைக் காக்கும் இடத்திற்குப் பெயர் "நீதிமன்றம்" 

பெரிய மனிதர்களுக்குப் பாலியல் விருந்தளிக்க, அதற்கு மாணவிகளைப் பயன்படுத்த 'ஆள் பிடிக்கிறார்' ஒரு பெண். அவருக்குப் பெயர் "பேராசிரியர்"

அப்படி 'ஆள் பிடித்த வழக்கில்' தனது பெயர் சம்பந்தப்பட்டது தெரிந்தவுடனே தானே ஒரு விசாரணைக் கமிஷன் அமைத்து, அதன் அறிக்கையைத் தானே வாங்கி வைத்துக் கொள்கிறார் ஒருவர்.. அவருக்குப் பெயர் "மாநில ஆளுனர்"

மருத்துவக் கல்வி படிக்க விரும்பும் இந்த மாநிலத்தின் குழந்தைகளுக்கு வேறு மாநிலங்களில் தேர்வு மையம் கொடுக்கப்படுகிறது. அலைச்சலில் சாகிறார் தந்தை ஒருவர். குக்கிராமத்தில் படிக்கும் குழந்தைக்கும், தலைநகரில் படிக்கும் குழந்தைக்கும் ஒரேவிதமான தேர்வு நடத்தப்பட்டு அவர்களது கனவுகள் சிதறடிக்கப்படுகின்றன. அதற்குப் பெயர் "தகுதித் தேர்வு"
 
பெண் பத்திரிக்கையாளர்கள் படுக்கையில் சமரசம் செய்துதான் வாய்ப்புகளைப் பெறுகிறார்கள் என்கிறார் ஒருவர். அவருக்குப் பெயர் "கட்சிப் பிரமுகர்"

அவரைக் கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்னரும் அதிகாரத்திலிருக்கும் முக்கியமான ஒருவரோடு ஒரு நிகழ்வில் கலந்துகொள்கிறார் அந்த நபர். "அவரைப் பிடித்துத் தருவது என் வேலை அல்ல" என்கிறார் அந்த முக்கியமானவர். அவருக்குப் பெயர் "மத்திய அமைச்சர்"

கைது செய்யப்பட வேண்டியவரின் வீட்டுக்கே காவல்துறை பாதுகாப்பு கொடுத்துக்கொண்டிருக்கிறது. காரணம் செல்வாக்கு  மிக்க அவரது உறவினர். அவருக்குப் பெயர் "தலைமைச் செயலாளர்"

மக்களின் உடல்நலத்தைப் பாதிக்கும் போதைப்பொருளான குட்கா ஊழல் வழக்கில் சம்பந்தப்பட்டவர்களாகக் குற்றம் சாட்டப்படுகிறார்கள் இருவர். ஒருவருக்குப் பெயர் "சுகாதாரத்துறை அமைச்சர்". இன்னொருவருக்குப் பெயர் "காவல்துறை உயரதிகாரி"

தீவிரவாதிகளுக்கு எதிரான 'துல்லியத் தாக்குதல்' போல குறிவைத்துச் சுட்டபிறகு, காயம்பட்டவர்களை மருத்துவமனைகளிலும் சென்று அடித்து நொறுக்குகிறது சீருடை அணியாத ஒரு கூட்டம். அதற்குப் பெயர் "காவல்துறை"

விளம்பர இடைவேளைகளுக்கு நடுவே, மக்களுக்குப் போக்குக் காட்டியபடியே, பின் வேறு வழியில்லாமல் செய்தியின் தீவிரத்தைக் குறைத்து வெளியே பரப்புகின்றன சில நிறுவனங்கள். விவாதங்களின் மூலம் அரசுத் தரப்பை நியாயப் படுத்தும் வேலையைத் தெளிவாகச் செய்யவும் தெரியும் அவர்களுக்குப் பெயர் "ஊடகங்கள்"

தனது மாநிலத்தின் மக்கள் சுடப்பட்டுச் சாகும்போது "துப்பாக்கிச் சூடு தவிர்க்க முடியாதது" என்கிறார் ஒருவர். அவருக்குப் பெயர் "மாநில அமைச்சர்"

"இப்படி ஒரு சம்பவம் நடந்ததே தனக்குத் தெரியாது" என்று சொல்லிவிட்டுச் செத்தவர்களுக்குப் பத்து லட்சம் ரூபாய் பிச்சையிடுகிறார் ஒருவர். அவருக்குப் பெயர் "முதலமைச்சர்"

இவையெல்லாவற்றுக்கும்,  விட்டுக்கொடுக்காமல் முட்டுக் கொடுக்கும் அற்பப் பதர்களுக்குப் பெயர் " தேச பக்தர்கள்"

இதையெல்லாம் மனசாட்சியில்லாமல் நடத்திக் கொண்டிருக்கும் ஒரு அமைப்பிற்குப் பெயர் "தேசம்"

ஆனால், தங்களது வாழ்வாதாரத்திற்கும், தங்களது ஊரின் சுற்றுப்புறச் சூழலுக்கும், தங்கள் குடும்பத்தினரின் உடல்நிலைக்கும் தீங்கு விளைவிக்கும் ஒரு தொழிற்சாலைக்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்டவர்களுக்கும், போராட்டங்களை ஒருங்கிணைத்தவர்களுக்கும், இவ்வளவு ஏன், வாய்வழியே சுடப்பட்டுச் செத்த ஒரு பத்தாம் வகுப்பு மாணவிக்குமான பெயர் மட்டும் "Fringe Elements"

இதுதான்டா எங்கள் இந்தியா இதுதாண்டா எங்கள் தமிழ்நாடு

இவனுங்களுக்கு பதிலாக வெள்ளைக்கார இருந்தாலே இந்தியா நன்றாக இருக்கும்

பிரபல்யமான பதிவுகள்