நம்முடன் இணைந்து இருப்பவர்கள்

வியாழன், ஜூலை 29, 2021

மைய்யத்துக்கு கஷ்டமானகவலையான நேரம் எது?

நபி(ஸல்) அவரகள் தனது மனைவி ஆயிஷா
(ரலி) அவர்களிடம் கேட்கிறார்கள்..
ஆயிஷாவே ஒரு மனிதன் உலகைவிட்டு
பிரிந்தால், அந்த மைய்யத்துக்கு கஷ்டமான
கவலையான நேரம் எது?

ஆயிஷா(ரலி): யா ரஸூல்லாஹ் அந்த
மையத்தை வீட்டிலிருந்து வெளியே எடுத்துப்போகும்
நேரம்

நபி(ஸல்): "இல்லை"

ஆயிஷா(ரலி): அந்த மையத்தை கபுரில்
அடக்கிவிட்டு தன்னந்தனியாக விட்டுவிட்டு
வருகிறோமே அதுதான் துயரமானது.

நபி(ஸல்): "இல்லை

ஆயிஷா(ரலி): நீங்களே
சொல்லுங்கள் ரஸூலுல்லாஹ்

நபி(ஸல்): ஒரு மனிதன் மரணித்துவிட்டால் ,
அம்மனிதனின் உடம்பிலிருந்தும் நரம்புகளிலிருந்
தும் எலும்புகளிலிருந்தும் உயிர்
பிரித்தெடுக்கப்படுகிறது. அந்நேரத்தில் அந்த
உடம்பு புன்னாய் போய்விடுகிறது. எந்த
மைய்யத்தும் அதை தாங்காது.
அடுத்து அந்த மையத்தை குளிப்பாட்ட அதன்
சட்டையை கழட்டும்போது அந்த மையத்து கத்துகிறது
"எனை குளிப்பாட்டுபவனே இப்போதுதான் என்
உடம்பிலிருந்து உயிர் பிரிக்கப்பட்டு புன்னாய்
போயிருக்கிறது.என்னிடம் மெதுவாக
நடந்துகொள்.எனை இன்னும் நோகடித்து
விடாதே எனக் கெஞ்சுகிறது"
இந்நேரத்தில் மையத்து அதிகமாக
கவலைபடுகிறது.(மையத்து என்றால்
நாம்தான்)
அடுத்து குளிப்பாட்ட தண்ணீர் எடுத்து
வைக்கும்போது' என்மீது சூடான தண்ணீரை
ஊற்றிவிடாதே குளிர்ந்த நீரையும்
ஊற்றிவிடாதெ எனது உடம்பு
தாங்காது. சூடும் இல்லாமல் குளிரும்
இல்லாமல் நடுப்பட்ட தண்ணீரை என்மீது
ஊற்று. என்னை இறுக்கமாக தேய்காதீர்கள்.எ
ன்னிடம் மெதுவாக நடந்து
கொள்ளுங்கள் எனக்
கதறுகிறது.இச்சத்தத்தை மனிதர்களையும்
ஜின்களையும் தவிர எல்லா படைப்பினங்களும்
கேட்கிறது.
அடுத்து
கஃபனிடும்போது எனை கவனமாக தூக்குங்கள்,
ஏற்கனவே கவலையில் நொந்து
போயிருக்கிறேன் . தயவு செய்து எனை
கண்ணியமாக நடத்துங்கள்" எனக்
கெஞ்சுகிறது.கவலை படுகிறது.
(அதனால்தான் குளிப்பாட்டும்போது
குடும்பத்தில் உள்ளவர்கள் அருகிலேயே இருக்க
வேண்டும். குளிப்பாட்டுபவறோடு நாமும் சேர்ந்து
குளிப்பாட்ட வேண்டும். குளிப்பாட்டுபவர்க்கு
வேலையை வேகமாக முடிக்க வேண்டுமென்ற
அவசரம் மய்யத்துக்கு கவலையாக
அமையலாம்)
அடுத்து கஃபனை செய்து முடிக்கும்போது
"எனை மூடும்போது முதலாவதாக எனது முகத்தை
கட்டிவிடாதீர்கள்.
முதலாவதாக எனது கால்களை கட்டுங்கள்
அடுத்து எனது இடுப்பை மூடுங்கள் . கடைசியாக
எனது முகத்தை மூடுங்கள்.எனது குடும்பத்தை
பார்கணும்.இதற்குபின் இங்கு திரும்பி
வரப்போவதில்லை. கபுருக்கு செல்கிறேன்"
எனப் பணிவாக சப்தமிட்டு கேட்கிறது.
-என்பதாக நபிகள் நாயகம்(ஸல்)
அவர்கள் கூறுகிறார்கள்.
சகோதரர்களே சகோதரிகளே...
நாம் மரணத்தை அடிகடி நினைப்பது அமல்
செய்வதை லேசாக்குகிறது.
தொழுகையை லேசாக்குகிறது. குர்ஆன்
ஓதுவதை லேசாக்குகிறது. நம் குடும்பத்தை நேரான
வழியில் நடத்துவதை லேசாக்குகிறது. ஹராமை
விட்டும் ஹராத்தை விட்டும் தவிர்பதை
லேசாக்குகிறது.
இன்ஷா அல்லா நம் மரணமும் லேசாகும்.
நாம் அனைவரும் அடையவிருக்கும் மரணத்தை நம்
அனைவருக்கும் அல்லாஹ் லேசாக்கி
வைப்பானாக..
நம் பாவங்களை மன்னிப்பானாக..
கப்ரின் வேதனையை விட்டு நீக்கியருள்வானாக..
ஆமீன்.

செவ்வாய், ஜூலை 20, 2021

குர்பானியின் சட்டங்கள் ,உழ்ஹிய்யா,

  குர்பானியின் சட்டங்கள்
        உழ்ஹிய்யா

      ஷாஃபிஈ - ஹனஃபி
===========================

       உழ்ஹிய்யா *சுன்னத்தா* ? *வாஜிபா* ?

       ஷாஃபிஈ மத்ஹப் : *சுன்னத் முஅக்கதா* 
    ( வலியுறுத்தப்பட்ட சுன்னத் ) 

       ஹனஃபி மத்ஹப் : *வாஜிப்*
            (கடமை)

       ஷாஃபிஈ மத்ஹபில் *யாருக்கு சுன்னத்?*
       பெருநாள் தினத்தன்று ஒருவருக்கு தனக்கும் தன் பொறுப்பில் உள்ளவர்களுக்கும் உணவு மற்றும் உடைக்குப் போக வசதியிருந்தால் *உழ்ஹிய்யா கொடுப்பது சுன்னத்து*.
       ( பொறுப்பில் உள்ளவர்கள் : மனைவி ,பிள்ளைகள் மற்றும்  பெற்றோர். )

       ஹனஃபி மத்ஹபில் *யாருக்கு வாஜிப்*? 
       பெருநாள் தினத்தன்று ஜகாத்துடைய அளவு செல்வம் யாரிடம் உள்ளதோ அவருக்கு *உழ்ஹிய்யா கொடுப்பது வாஜிப்*.

       (ஜகாத்துடைய அளவு :
*85 கிராம் தங்கம்* அல்லது *612 கிராம் வெள்ளி* அல்லது *612 கிராம் வெள்ளியின் மதிப்புள்ள பணம்* .)

       ( ஜகாத் கடமையாவதற்கு ஒரு வருடம் ஆகி இருக்க வேண்டும் என்ற நிபந்தனை இங்கு இல்லை. )


        *தகுதி உள்ள பிராணிகள்*
=================
       உழ்ஹிய்யா கொடுக்க தகுதியுள்ள பிராணிகள்: *மூன்று*. 

        1. *ஒட்டகம்*
        2. *மாடு* 
        3. *ஆடு* 

     இம்மூன்றிலும் *ஆணினம்* *பெண்ணினம்* இரண்டினத்தையும் உழ்ஹிய்யா கொடுக்கலாம் .

       இம்மூன்றிலும் *எல்லா வகையையும்* உழ்ஹிய்யா கொடுக்கலாம் .
       *எருமை மாட்டையும்* உழ்ஹிய்யா கொடுக்கலாம் .



           *வயது வரம்பு*  
           =============     

      *ஒட்டகம்* : *ஐந்து வயது* முழுமை பெற்றிருக்க வேண்டும்.

      *மாடு* : *இரண்டு வயது* முழுமை பெற்றிருக்க வேண்டும்.

       ஆனால் *ஆட்டின் வயதில்* மட்டும் கொஞ்சம் வித்தியாசம் உண்டு.

           *ஹனஃபி மத்ஹப்*:
      *வெள்ளாடாக* இருந்தாலும்  *செம்மறி ஆடாக* இருந்தாலும் *ஒரு வருடம்* முழுமை பெற்றிருக்க வேண்டும் .

      அதே நேரத்தில் *செம்மறி ஆடு ஆறுமாதம்* முழுமை அடைந்து *ஒரு வருடத்திற்குண்டான* வளர்ச்சியை பெற்றிருந்தால் அதை உழ்ஹிய்யா கொடுக்கலாம். 


              *ஷாஃபிஈ மத்ஹப்*: 
        *செம்மறி ஆடாக* இருந்தால் *ஒரு வருடமும்*
 *வெள்ளாடாக* இருந்தால் *இரண்டு வருடங்களும்* முழுமை பெற்றிருக்க வேண்டும். 


                *கூட்டு குர்பானி*
                ===============

       *ஆட்டை  ஒருவருக்காக* உழ்ஹிய்யா கொடுக்க வேண்டும்.

        ஆனால் *ஒட்டகத்திலும் மாட்டிலும் ஏழு பேர் சேர்ந்து* உழ்ஹிய்யா கொடுக்கலாம் .

       ஏழு பேர் சேர்ந்துதான் கொடுக்க வேண்டும் என்று கட்டாயமில்லை .
      ஏழுக்குக் குறைவானவர்களும்  ஒட்டகத்தையும் மாட்டையும் உழ்ஹிய்யா கொடுக்கலாம். 
     ஒரு தனிநபர் ஒட்டகம் மற்றும் மாட்டை உழ்ஹிய்யா கொடுக்கலாம்.

       அந்த ஏழு பங்கில் குழந்தைகளுக்காக கொடுக்கக்கூடிய *அகீகாவையும்* சேர்த்துக்கொள்ளலாம்.


             *பங்கீடு செய்தல்*
             ================

       உழ்ஹிய்யா பிராணியின் மாமிசத்தை *மூன்று பங்குகளாக*  பிரித்து வழங்குவது சிறந்தது. 

      ஒரு பங்கு : 
     *தன் குடும்பத்தினற்கு*.  
    
      இன்னொரு பங்கு : 
      *உறவினர்களுக்கு*

       இன்னொரு பங்கு :
       *ஏழை எளிய மக்களுக்கு*

=============================   
        உழ்ஹிய்யா கறியை *முஸ்லிம் அல்லாதவர்களுக்கு கொடுக்கக் கூடாது*.

        *ஏனென்றால் இது முஸ்லிம்களுடைய ஹக்காகும்*

         அக்கம்பக்கத்தில் மாற்றுமத சகோதரர்கள் இருந்து அவர்களுக்கும் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் கடையில் தேவையான கறியை விலைக்கு வாங்கி அவர்களுக்கு வழங்கலாம்.

============================
 

      *உழ்ஹிய்யாவின் நேரம்*:   
      ======================

        *ஹனஃபி மத்ஹப்* :
        ஆரம்பம் :
         *பெருநாள் தொழுகை நடந்ததற்குப் பிறகு*.

        முடிவு :
       *பிறை 12 - மஃக்ரிப் நேரம் வரும்  வரை* 
  ( அதாவது சூரியன் மறையும் வரை. ) 

         *ஷாஃபிஈ மத்ஹப்* : 
         ஆரம்பம்:
         *சூரியன் உதித்து 20 நிமிடங்கள் கழித்து  - இரண்டு ரக்அத் தொழுகை மற்றும் இரண்டு ஃகுத்பாக்கள்  - இதற்குண்டான நேரம் முடிந்ததற்குப்பிறகு*.
     ( தொழுகை நடந்திருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஆனால் தொழுகைக்குப் பிறகு உழ்ஹிய்யா கொடுப்பதே சிறந்தது.)

        முடிவு: 
         *பிறை 13 - மஃக்ரிப் நேரம் வரும் வரை*.
         ( அதாவது சூரியன் மறையும் வரை )

        *இரவிலும்* கொடுக்கலாம்.
*பகலிலும்* கொடுக்கலாம் .
        ஆனால் இரவில் கொடுப்பது ( மக்ரூஹ் ) வெறுக்கத்தக்கது.


         *குர்பானி தோலின் சட்டம்*   
         ======================= 
      குர்பானி தோலை *தனக்காக*  உபயோகித்துக்கொள்ளலாம்.

      *பிறருக்கும்* கொடுக்கலாம்.   
 (ஏழையாக இருந்தாலும் சரி. செல்வந்தராக இருந்தாலும் சரி.)

      ஆனால் *விற்கக்கூடாது*.  
  
       *அறுப்புக் கூலியாகவும் வழங்கக்கூடாது*.

       *பள்ளிவாசல்* மற்றும் *மத்ரஸாவின்* *கட்டிடப்பணிக்கோ* அல்லது *நிர்வாக செலவிற்கோ* கொடுக்கக்கூடாது. 

       பள்ளிவாசலில் *பைத்துல்மால்* இருந்தால் அதற்கு *கொடுக்கலாம்*.

        பள்ளிவாசலின் *இமாம்* மற்றும் *முஅத்தின் சாகிபுக்கு* கொடுக்கலாம். 
மத்ரஸாவின் *ஆசிரியர்களுக்கும்* *கொடுக்கலாம்*. 
        ஆனால் இவர்களுக்கு *சம்பளம்* அல்லது *போனஸ்* கொடுப்பதற்கு *குர்பானி தோலை பயன்படுத்தக்கூடாது*.

       மத்ரஸாவில் கல்வி பயிலும் *மாணவர்களுக்கு கொடுக்கலாம்*.


       *தகுதியற்ற பிராணிகள்*
       =====================

      *கால்கள் முடமாகி ஊனமுற்றவை*

      *கடுமையான நோய்வாய்ப்பட்டவை* 

       *எலும்பும் தோலுமாய்  மெலிந்தவை*

        *கண் குருடாகி போனவை*

       *காது அறுந்து துண்டிக்கப்பட்டவை*

மேற்கூறப்பட்ட பிராணிகளை உழ்ஹிய்யா கொடுப்பது அறவே கூடாது.


   *குறிப்பு*:  
       *கொம்பு முளைக்காத* அல்லது *கொம்பு உடைந்த* பிராணியை உழ்ஹிய்யா கொடுப்பது *கூடும்*.


        *அறுக்கும் ஒழுங்குகள்*
         ===================

          *அறுப்பவர் முஸ்லிமாக இருக்க வேண்டும்* .
         ( *ஆணும்* அறுக்கலாம் *பெண்ணும்* அறுக்கலாம் )

       *கத்தியை கூர்மையாக்கிக் கொள்ள வேண்டும்* .

      *உழ்ஹிய்யா கொடுப்பவரே அறுப்பது சிறந்தது*.

        அறுக்கத் தெரியவில்லையென்றால் பிறர் அறுக்கலாம்.
        அப்போது இவர் அந்த பிராணியை *பார்த்துக்கொண்டிருப்பது* சுன்னத்.

         *அறுப்பதற்கு முன்பாக உழூ செய்துகொள்வது*.

          *கிப்லாவை முன்னோக்குவது*.

        *வஜ்ஜஹ்து வஜ்ஹிய.....*
 *என்பதை ஓதிக் கொள்வது*. 
   (தெரியவில்லை என்றால் பரவாயில்லை.)

         *உழ்ஹிய்யாவின் நிய்யத் செய்துகொள்ள வேண்டும்*.

        *பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர்* என்று கூறி அறுக்க வேண்டும்.


        உழ்ஹிய்யா கொடுக்க நாடியவர் *துல்ஹஜ் மாதம் பிறை ஒன்றிலிருந்து உழ்ஹிய்யா கொடுக்கும் வரை* *நகம்* மற்றும் *முடியை* வெட்டாமல் இருப்பது *சுன்னத்தாகும்*.

        வீட்டில் உள்ள மற்றவர்களுக்கு இந்த சட்டம் இல்லை .

         உழ்ஹிய்யா கொடுப்பவர் 
*நகத்தையோ* அல்லது *முடியையோ* அகற்றி விட்டால் அதனால் உழ்ஹிய்யாவிற்கு எந்த *பாதிப்பும் இல்லை* .
        ஆனால் இந்த *சுன்னத்தின்  நன்மையை* அவர் இழந்து விடுவார் .


                 *கவனிக்க* :
                 ===========
 பல ஹதீஸ்களின் அடிப்படையில் *இறந்து போனவர்களுக்கு உழ்ஹிய்யா* கொடுப்பது நன்மைகளைப் பெற்றுத்தரும் *நற்செயலாகும்*. 
        
                  *நிறைவு*

           *எல்லாம் வல்ல இறைவன்* நமது உழ்ஹிய்யா வணக்கத்தை ஏற்று  அதற்குண்டான *வெகுமதிகளையும் சன்மானங்களையும்* ஈருலகிலும் நமக்கு வாரி வழங்கிடுவானாக!    
                      *ஆமீன்!*     
       வல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்.*ஈதுல் அழ்ஹா (பக்ரீத்) பெருநாள் தினத்தில் செய்ய வேண்டிய நல்அமல்கள்*
**************************
*1,* இரவின் கடைசி நேரத்தில்  தஹஜ்ஜுத் தொழுகை தொழுவது
*2,* ஃபஜ்ர் தொழுகையை இமாம் ஜமாஅத்துடன் மஸ்ஜிதில் தொழுவது.
*3*, கடமையான ஐந்து நேரத்தொழுகைக்கு பின்பு தக்பீர் சொல்வது.
*4,* நன்கு குளித்து தூய்மையாகிக் கொள்வது.
*5,* மிஸ்வாக் செய்வதுடன் தொழுகைக்காக உளூ செய்து கொள்வது.
*6,* புதிய ஆடை அணிந்து கொள்வது. அல்லது இருக்கும் ஆடைகளில் சிறந்த ஆடையை அணிந்து கொள்வது.
*7,* நறுமணம் பூசிக் கொள்வது.
*8,* தக்பீர் சொல்லிய வண்ணம் ஈது தொழுகை நடைபெறும் மைதானத்திற்கோ, அல்லது மஸ்ஜிதிற்கோ செல்வது.
*9,* வாஜிபான ஈதுடைய தொழுகையை இமாம் ஜமாஅத்துடன் தொழுவது.
*10,* தொழுகை முடிந்த பின் ஓதப்படும் குத்பாவை அமைதியாக செவிமடுத்து கேட்பது.
*11,*  விரைந்து சென்று விடாமல் கூட்டு துஆவில் பங்கெடுப்பது.
*12,* தொழுகை முடிந்த பின் வீட்டிற்கு திரும்பும்போது வேறு பாதை வழியாக திரும்புவது.
*13,* ஈதுடைய தொழுகை முடிந்த பின் குர்பானி கொடுப்பது.
*14,* குர்பானி பிராணியை அறுக்கும் பொழுது மறவாமல் பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர் என்று கூறுவது.
*15,* ஈதுடைய தொழுகை தொழுத பின் காலை உணவு சாப்பிடுவது.
*16,* குர்பானி இறைச்சியை நாமும் உண்பதுடன் உற்றார் உறவினர்களுக்கும், ஏழைகளுக்கும் உண்ணக்கொடுப்பது
*17,* முஸ்லிமான சகோதரர்களுக்கு மத்தியில் ஸலாம் சொல்லி முஸாஃபஹா செய்து அன்பை வெளிப்படுத்துவது.
*18,* ஏழைஎளிய மக்கள், மற்றும் அநாதைகளுக்கு தானதர்மம் செய்வது.
*19,* அண்டை வீட்டார்களுக்கு அன்பளிப்புகள் கொடுப்பது.
*20,* சகோதர சமுதாய மக்களுக்கும் அன்பளிப்புகள் அல்லது உணவு விருந்து கொடுப்பது.
*21,* அல்லாஹ்வை மகத்துவப்படுத்தும் விதமாக அதிகமாக தக்பீர் சொல்வது.
*22,* இஸ்லாமிய மார்க்கத்தில் தடை செய்யப்பட்ட ஹராமான காரியங்களை செய்யாமல் தவிர்ந்து கொள்வது.
*23,* குடும்ப உறுப்பினர்களிடம் சண்டை சச்சரவு செய்யாமல் சந்தோஷமாக பெருநாளை கொண்டாடுவது.
*24,* சக மனிதர்களுக்கு எந்த துன்பமும் கொடுக்காமல் அவர்களை மகிழ்ச்சி படுத்தி நாமும் மகிழ்ச்சியாக இருப்பது.

*தக்பீர் வாசகம்*
*அல்லாஹு அக்பர்* *அல்லாஹு அக்பர்*
*லா இலாஹ இல்லல்லாஹு* *வல்லாஹு அக்பர்*
*அல்லாஹு அக்பர்*
*வலில்லாஹில் ஹம்து

புதன், ஜூலை 14, 2021

ஆதார் கார்டு,smsமூலம்,

ஆதார் ஆணையம் அறிமுகம்

செல்போன் குறுஞ்செய்தி மூலம் ஆதார் கார்டில் மாற்றம் செய்யும் முறையை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) அறிமுகப்படுத்தியுள்ளது.

2009-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சிக் காலத்தின்போது ஆதார் கார்டு அறிமுகப்படுத்தப்பட்டது. ஆதார் கார்டு என்பது கைரேகை, கருவிழி பதிவு போன்ற உடல் அங்கங்கள் சார்ந்த பதிவுகளுடன் வழங்கப்படும் ஒரு அடையாள அட்டையாகும். காங்கிரஸ் அரசில் ஆதார் கார்டு அறிமுகப்படுத்தப்பட்டிருந்தாலும், பா.ஜ.க அரசு ஆட்சிக்கு வந்த பிறகு பல்வேறு திட்டங்களுக்கும் ஆதார் கார்ட்டை கட்டாயமாக்கிவருகிறது. எனவே, அரசின் திட்டங்களின் பலனைப் பெற ஆதார் கார்டு என்பது ஒவ்வொருவருக்கும் அவசியமான ஒன்றாக இருந்துவருகிறது.
ஆனால், ஆதார் கார்டில் இருக்கும் ஏதேனும் தகவல்களை மாற்றுவது பலருக்கு சிரமமான ஒன்றாகவே இருந்துவருகிறது. பெயர் மாற்றம், முகவரி மாற்றம் உள்ளிட்டவற்றை நாமே UIDAI என்ற இணையத்துக்கு சென்று மாற்ற முடியும். இருப்பினும், இணைய வசதி இல்லாதவர்களுக்கு இது சிரமமான காரியமாகவே இருந்துவருகிறது. இந்தநிலையில், செல்போன் குறுஞ்செய்தி மூலமே இந்த மாற்றங்களை செய்யும் எளிய வழிமுறையை யு.ஐ.டி.ஏ.ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.
எஸ்.எம்.எஸ் மூலம் ஆதார் சேவைகள் என்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த சேவையில் பல சேவைகள் கிடைக்கின்றன. ஆதார் இணையத்தில் பதிவு செய்துள்ள மொபைல் எண்ணிலிருந்து 1947 என்று குறுஞ்செய்தி அனுப்புவதன் மூலம் பல சேவைகளைப் பெற முடியும்.

ஆதார் விர்ச்சுவல் ஐ.டி பெறலாம்:

ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ள ஆதார் எண்ணுக்கு பதிலாக பெறக்கூடியது விர்ச்சுவல் ஐ.டி எனப்படும் 16 இலக்க எண். இந்த எண்ணை பெறுவதற்கு GVID என்று டைப் செய்து இடைவெளி விட்டு உங்கள் ஆதார் எண்ணின் கடைசி நான்கு எண்களை டைப் செய்து 1947 என்று எண்ணுக்கு பதிவு செய்யப்பட்ட செல்போனிலிருந்து குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும்.

ஆதார் விர்ச்சுவல் ஐ.டியை மீட்டெடுக்கலாம்:

விர்ச்சுவல் ஐ.டியை மீட்டெடுப்பதற்கு RVID என்று டைப் செய்து இடைவெளி விட்டு உங்கள் ஆதார் எண்ணின் கடைசி நான்கு இலக்க எண்களை டைப் செய்து பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணிலிருந்து குறுஞ்செய்தி அனுப்பி பெற்றுக்கொள்ளலாம்.

ஆதார் எண் மூலம் ஓ.டி.பி:

GETOTP என்று டைப் செய்து இடைவெளி விட்டு ஆதார் எண்ணின் கடைசி நான்கு எண்களை டைப் செய்து குறுஞ்செய்தி அனுப்பி பெற்றுக்கொள்ளலாம்..

விர்ச்சுவல் ஐ.டி மூலம் ஓ.டி.பி:

GETOTP என்று டைப் செய்து இடைவெளி விட்டு விர்ச்சுவல் ஐ.டியின் கடைசி ஆறு எண்களை டைப் செய்து குறுஞ்செய்தி அனுப்பி பெற்றுக்கொள்ளலாம்.

ஆதார் கார்டை லாக் செய்தல்:

உங்கள் ஆதார் கார்டை லாக் செய்யவேண்டுமெனில் முதலில் நீங்கள் விர்ச்சுவல் ஐ.டியைப் பெறவேண்டும். பிறகு இரண்டு கட்ட எஸ்.எம்.எஸ் வழிமுறை மூலம் ஆதார் கார்ட்டை லாக் செய்யலாம்.

முதல்படி: முதலில் GETOTP என்று ஆதார் எண்ணின் கடைசி நான்கு இலக்கங்களை டைப் செய்து குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும்.

இரண்டாம் படி: ஓடிபி எண்ணைப் பெற்ற உடனையே அடுத்த குறுஞ்செய்தியை அனுப்ப வேண்டும். LOCKUID என்று இடைவெளி விட்டு ஆதார் எண்ணின் கடைசி ஆறு எண்கள் டைப் செய்து இடைவெளி விட்டு ஆறு இலக்க ஓடிபி எண்ணை டைப் செய்து அனுப்ப வேண்டும்.

ஒருவேளை ஒரே மொபைல் எண் இரு ஆதார் எண்களுக்கு கொடுக்கப்பட்டு, ஆதாரின் கடைசி நான்கு எண்களும் ஒரே எண்ணாக இருந்தால் கடைசி எட்டு ஆதார் எண்கள் மற்றும் ஆறு இலக்க ஓடிபி எண்ணை அனுப்ப வேண்டும்.

ஆதார் கார்டை அன்லாக் செய்தல்:

GETOTP என்று டைப் செய்து இடைவெளிவிட்டு கடைசி விர்ச்சுவல் ஐ.டியின் கடைசி ஆறு இலக்க எண்ணை டைப் செய்து அனுப்ப வேண்டும்.

பின்னர், UNLOCKUID என்று டைப் செய்து விர்ச்சுவல் ஐ.டியின் கடைசி ஆறு இலக்க எண் மற்றும் ஆறு இலக்க ஓடிபியை டைப் செய்து அனுப்பவேண்டும்

புதன், ஜூலை 07, 2021

நேர்ச்சை எப்படி செய்வது,

இஸ்லாமிய இறைநம்பிக்கை என்பது 70- க்கும் மேற்பட்ட கிளைகள் கொண்டது. அது குறித்த தகவல்களை இந்த தொடரில் பார்த்து வருகிறோம். இந்த வாரம் இறை நம்பிக்கைகளில் ஒன்றான ‘நேர்த்திக்கடனை நிறைவேற்றுவது’ குறித்த தகவல்களை காண்போம்.

நேர்த்திக்கடனை நிறைவேற்றுவது இறைநம்பிக்கையின் உடல் சார்ந்த ஒரு பகுதியாக உள்ளது. அதை நிறைவேற்றுவதற்கு
இஸ்லாத்தை பொறுத்த அளவில் நேர்த்திக்கடன் என்பது ஒரு வணக்கம். எல்லா வணக்கங்களும் இறைவனுக்கு மட்டுமே இணக்கம். அந்த வகையில் நேர்த்திக்கடனை இறைவனுக்கு மட்டுமே உரித்தாக்கி நிறைவேற்றிட வேண்டும். மற்ற யாருக்காகவும் நேர்ச்சை செய்யக்கூடாது. நேர்த்திக்கடனை நிறைவேற்றவும் கூடாது.

இது இறை நம்பிக்கையின் ஒரு அங்கமாக இருப்பதால் இதில் மற்றவர்கள் அங்கம் வகிக்க முடியாது. இதற்கு பின்வரும் வசனங்கள் சான்று:

“இம்ரானுடைய மனைவி (கர்ப்பமான பொழுது ஆண் குழந்தை பெற விரும்பி இறைவனை நோக்கி) ‘என் இறைவனே, நிச்சயமாக நான் என் கர்ப்பத்திலுள்ளதை உனக்கு முற்றிலும் அர்ப்பணம் செய்து விட நேர்ச்சை செய்து கொண்டேன். ஆதலால், (அதனை) என்னிடமிருந்து நீ அங்கீகரித்துக்கொள்வாயாக’ என்றாள்”. (திருக்குர்ஆன் 3:35)

‘நம்பிக்கையாளர்களில் இத்தகையவர்களும் உள்ளனர். இறைவனிடம் தாங்கள் கொடுத்த வாக்குறுதியை அவர்கள் மெய்ப்படுத்திக் காட்டி விட்டிருக்கிறார்கள்; அவர்களில் சிலர் தமது நேர்ச்சையை நிறைவேற்றி விட்டார்கள்; இன்னும் சிலர் அதற்கான நேரத்தை எதிர்பார்த்த வண்ணம் இருக்கின்றார்கள்’. (திருக்குர்ஆன் 33:23)

“நீங்கள் உண்டு, பருகி மன நிறைவடைவீராக. மனி தர்களில் எவரையேனும் கண்டால் ‘நான் அளவற்ற அருளாளனுக்கு நோன்பு நோற்பதாக நேர்ச்சை செய்துவிட்டேன். எந்த மனிதனுடனும் பேசமாட்டேன்’ என்று கூறுவீராக”. (திருக்குர்ஆன் 19:26)

‘நேர்த்திக்கடன் இருவகை. 1) எவர் இறைவனுக்கு கட்டுப்படும் விஷயத்தில் நேர்ச்சை செய்தாரோ அது இறைவனுக்கு உரியது, அதை நிறைவேற்றுவது அவசியம். 2) எவர் பாவம் புரியும்படி நேர்ச்சை செய்தாரோ அது சைத்தானுக்கு உரியது. அதை நிறைவேற்றுவது அவசியமில்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: இம்ரான் பின் ஹூசைன் (ரலி), நூல்: நஸயீ)

நன்மையும் இல்லாத, பாவமும் இல்லாத வீணான நேர்ச்சைகளும் உண்டு. இவற்றையும் நிறைவேற்றத் தேவையில்லை. தமக்கு உரிமையே இல்லாதவற்றிலும் நேர்ச்சை செய்யக்கூடாது.

நன்மை பயக்கும் நேர்ச்சைகள்

‘மஸ்ஜிதுல் ஹராமில் ஓர் இரவு இஃதிகாப் (தங்கி) இருப்பதாக அறியாமைக்காலத்தில் உமர் (ரலி) நேர்ச்சை செய்திருந்தார். அவரிடம் நபி (ஸல்) அவர்கள் ‘உமது நேர்ச்சையை நிறைவேற்றும்’ என்றார்கள்”. (அறிவிப்பாளர்: இப்னுஉமர் (ரலி), நூல்: புகாரி)

“ஜூஹைனா கூட்டத்தைச் சார்ந்த ஒரு பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘என் தாய் ஹஜ் செய்வதாக நேர்ச்சை செய்து, அதை நிறைவேற்றாமல் இறந்துவிட்டார். அவர் சார்பாக நான் ஹஜ் செய்யலாமா?’ என்று கேட்டதற்கு, ‘ஆம், செய்யலாம்’ என நபி (ஸல்) கூறினார்கள்”. (அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: புகாரி)

“சஅத்பின் உபாதா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் ‘நேர்ந்து கொண்டு அதை நிறைவேற்றும் முன்பே இறந்துவிட்ட தம் தாயின் நேர்த்திக் கடன் குறித்து’ விளக்கம் கேட்டார்கள். ‘அதை நிறைவேற்றுமாறு’ நபி (ஸல்) தீர்ப்பளித்தார்கள்”. (அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: புகாரி)

தேவையற்ற நேர்ச்சைகள்

``ஒரு முதியவர் தம் இரண்டு புதல்வர்(கள் தம்மைத் தோள்களில் தாங்கிக்கொண்டிருக்க அவர்)களிடையே தொங்கியபடி கால்கள் பூமியில் இழுபட வந்து கொண்டிருந்ததைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் ‘இவருக்கு என்ன நேர்ந்தது?’ என்று கேட்டார்கள். ‘கஅபா வரை நடந்து செல்வதாக இவர் நேர்ச்சை செய்திருக்கிறார்’ என்று மக்கள் கூறினார்கள். ‘இவர் தம்மை இவ்விதம் வேதனைப்படுத்திக்கொள்வது இறைவனுக்குத் தேவையற்றது’ என்று கூறிவிட்டு, அவரை வாகனத்தில் ஏறிச்செல்லுமாறும் உத்தரவிட்டார்கள்”. (அறிவிப்பாளர்: அனஸ் (ரலி), நூல்: புகாரி)

“உக்பா பின் ஆமிர் (ரலி) கூறுகிறார்: ‘என் சகோதரி கஅபா வரை நடந்து செல்வதாக நேர்ச்சை செய்தார். அவர் இதுபற்றி நபிகளாரிடம் தீர்ப்பு பெற்றுத்தரும்படி எனக்கு உத்தரவிட்டார். நான் நபி (ஸல்) அவர்களிடம் விளக்கம் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘அவர் சிறிது தூரம் நடந்துவிட்டு வாகனத்தில் ஏறிக்கொள்ளட்டும்’ என்றார்கள்”. (நூல்: புகாரி)

‘ஒரு தடவை அபூபக்ர் (ரலி) ‘அஹ்மஸ்’ எனும் குலத்துப் பெண்மணியான ஸைனப் வசம் சென்றார்கள். அவள் மவுன விரதம் பூண்டு பேசாமலிருப்பதாகக் கண்டார்கள். உடனே, ‘இவளுக்கென்ன ஆயிற்று?, ஏன் பேசாமல் இருக்கிறாள்?’ என்று விசாரித்தார்கள். அதற்கு மக்கள் ‘இவள் ஹஜ் செய்யும் வரை எவருடனும் பேசமாட்டேன் என நேர்ச்சை செய்திருக்கிறாள்’ என்று கூறினார்கள். அவளிடம் அபூபக்ர் (ரலி) ‘நீ பேசு, ஏனெனில் இவ்வாறு மவுனமாக இருப்பது அனுமதிக்கப்பட்ட காரியமல்ல. இது அறியாமைக் காலச்செயலாகும்’ என்றார்கள். உடனே அவள் மவுனத்தை கலைத்துப்பேசினாள்”. (அறிவிப்பாளர்: கைஸ் பின் அபீ ஹாஸிம் (ரஹ்), நூல்: புகாரி)

‘நபி (ஸல்) அவர்கள் (வெள்ளிக்கிழமை) உரை நிகழ்த்திக் கொண்டிருந்த போது ஒருவர் வெயிலில் நின்று கொண்டிருப்பதைக் கண்டார்கள். அவர் குறித்து மக்களிடம் கேட்டார்கள். மக்கள், ‘இவர் அபூஇஸ்ராயீல் ஆவார். இவர் நின்று கொண்டே இருப்பேன்; உட்காரமாட்டேன் என்றும், நிழலில் ஒதுங்கமாட்டேன் (வெயிலில்தான் இருப்பேன்) என்றும், யாரிடமும் பேசமாட்டேன், நோன்பு நோற்பேன் என்றும் நேர்ந்து கொண்டார்’ என்று கூறினார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் ‘அவருக்கு உத்தரவிடுங்கள்; அவர் பேசட்டும். நிழல் பெறட்டும். உட்காரட்டும். நோன்பை மட்டும் நிறைவு செய்யட்டும்’ என்றார்கள்”. (அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: புகாரி)

ஒருவர் தமக்கு உடமையில்லாத ஒன்றிலும், பாவச் செயலிலும், இறைவனுக்கு மாறுசெய்வதிலும் நேர்ச்சை செய்யக்கூடாது.

‘இறைவனுக்கு மாறுசெய்வதிலும், உறவை முறிப்பதிலும், தமக்கு உடமையில்லாத ஒன்றிலும் நேர்ச்சை செய்வது கிடையாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ (அறிவிப்பாளர்: ஸயீத்பின் முஸய்யப் (ரலி), அபூதாவூத்)

ஒரு காரியம் கை கூடுவதற்கு நேர்ச்சை செய்ய அனுமதியுண்டு. எனினும் நேர்ச்சை செய்வதினால் மட்டுமே ஒரு காரியம் நிறைவேறும் என்று நினைத்துவிடக் கூடாது. மேலும் நிறைவேறும் அந்த காரியம் நேர்த்திக்கடனால் மட்டுமே நிறைவேறாது. அதில் விதியும் சேர்ந்திருக்கிறது. விதியில் இல்லாத ஒன்றை நேர்த்திக்கடனால் கொண்டு வரமுடியாது என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

‘நேர்த்திக்கடன் (விதியில்) எதையும் மாற்றிவிடாது. நேர்த்திக்கடன் மூலம் கஞ்சனிடமிருந்து செல்வம் வெளிக்கொணரப்படுகிறது என நபி (ஸல்) கூறினார்கள்.’ (அறிவிப்பாளர்: இப்னு உமர் (ரலி), நூல்: புகாரி)

‘நேர்த்திக்கடனானது, விதியில் எழுதப்படாத எந்தவொன்றையும் மனிதனிடம் கொண்டு வந்து விடாது. மாறாக, அவனுக்கு எழுதப்பட்ட விதியின் பக்கமே அவனைக் கொண்டு செல்கிறது. அதன் மூலம் இறைவன் கஞ்சனிடமிருந்து செல்வத்தை வெளிக்கொணர்கிறான். இதற்கு முன் எந்தக் காரணத்திற்காக அவன் வழங்காமல் இருந்தானோ அதே காரணத்திற்காக இப்போது வழங்கத் தொடங்கி விடுகிறான் என நபி (ஸல்) கூறினார்கள்.’ (அறிவிப்பாளர் : அபூஹூரைரா (ரலி), புகாரி)

‘நேர்த்திக்கடன் விதியில் எதையும் துரிதப்படுத்தவும் செய்யாது; தாமதப்படுத்தவும் செய்யாது என நபி (ஸல்) கூறினார்கள்.’ (அறிவிப்பாளர்: இப்னு உமர் (ரலி), நூல்:புகாரி)

நமது காரியம் நிறைவேறுவதற்கு நேர்த்திக்கடனையும் தாண்டி தொழுகையும், பிரார்த்தனையும் இருக்கிறது. இவ்விரண்டிலும் ஈடுபட்டு நமது தேவைகளை இறைவனிடம் கேட்டுப்பெறலாம்.

ஒருவேளை நேர்த்திக்கடன் செய்தால் அதில் நன்மையானவற்றை நிறைவேற்றிட வேண்டும். அதில் தேவையற்றதையும், வீணானவற்றையும், பாவமானவற்றையும் விலகிக் கொண்டு நேர்த்திக் கடனை முறித்துவிட வேண்டும். முறித்ததற்காக சில பரிகாரங்களை செய்ய வேண்டும். அது குறித்த இறைவனின் கூற்றையும், இறைத்தூதரின் கூற்றையும் இனி காண்போம்.

‘நேர்த்திக்கடனை முறித்ததின் பரிகாரம் சத்தியத்தை முறித்ததின் பரிகாரமாகும் என நபி (ஸல்) கூறினார்கள்.’ (அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி), நூல்:அபூதாவூத்)

‘உங்களின் சத்தியங்களில் வீணானவற்றுக்காக இறைவன் உங்களைத் தண்டிக்கமாட்டான். மாறாக திட்டமிட்டுச் செய்யும் சத்தியங்களுக்காகவே உங்களைத் தண்டிப்பான். அதற்கான பரிகாரம் உங்கள் குடும்பத்தினருக்கு நீங்கள் உணவாக அளிக்கும் நடுத்தரமான உணவில் பத்து ஏழைகளுக்கு உணவளிப்பது, அல்லது அவர்களுக்கு உடையளிப்பது, அல்லது ஓர் அடிமையை விடுதலை செய்வது ஆகியவையே. (இவற்றில் எதையும்) பெறாதோர் மூன்று நாட்கள் நோன்பு நோற்க வேண்டும். நீங்கள் சத்தியம் செய்(து முறித்)தால், சத்தியத்திற்குரிய பரிகாரம் இவையே.’ (திருக்குர்ஆன் 5:89)

நல்ல நேர்த்திக்கடன்களை நல்லவிதமாக நிறைவேற்றிட வேண்டும். மற்ற தேவையில்லாத நேர்த்திக்கடன்களை முறித்துவிட வேண்டும்

மார்க்கம் நமக்கு ஏராளமான இபாதத்துகளை கற்றுத்தந்துள்ளது இபாதத்துகள் அனைத்தும் அல்லாஹ்வின் நெருக்கத்தை நாடியும் அவனிடம் கூலியை எதிர்பார்த்தும் நிறைவேற்ற வேண்டும் ஃபர்ளான, சுன்னத்தான இன்னும் உபரியான இபாதத்களையும் மார்க்கம் வழிகாட்டியுள்ளது அவ்வாறு மார்க்கம் கூறியுள்ள இபாதத்களில் ஒன்றுதான் நேர்ச்சை என்பதும் நேர்ச்சை என்பது மார்க்கம் கடமையாக்காத ஒன்றை ஒருவர் தன் மீது கடமையாக்கிக்கொள்வதாகும்.

நேர்ச்சை என்பது மார்க்கம் வழிகாட்டிய விஷயமாகும் குர்ஆனிலும் சுன்னாவிலும் இதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளது

அல்லாஹ் கூறுகிறான்

அவர்கள் தாம் தங்கள் நேர்ச்சைகளை நிறைவேற்றிக் கொண்டும் அனைத்துத் திசைகளிலும் தீங்கு பரவக்கூடிய மறுமை நாளினைக் குறித்து அஞ்சிக் கொண்டுமிருப்பார்கள். 76:7

பின்னர் அவர்கள் (தலைமுடி இறக்கி, நகம் வெட்டி, குளித்துத்) தம் அழுக்குகளை நீக்கி, தங்கள் நேர்ச்சைகளை நிறைவேற்றி பழமை வாய்ந்த ஆலயத்தையும் தவாஃப் செய்யுங்கள் 22:29

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்

அல்லாஹ்வுக்கு வழிப்படுவதாக ஒருவர் நேர்ந்து கொண்டால் (அதை நிறைவேற்றும் (முகமாக) அவனுக்கு அவர் வழிப்படட்டும்! அல்லாஹ்வுக்கு மாறு செய்வதாக ஒருவர் நேர்ந்துகொண்டால் (அதை நிறைவேற்றுவதற்காக) அவனுக்கு அவர் மாறு செய்திட வேண்டாம்.

என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.நூல்:ஸஹீஹுல் புஹாரி 6696

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

உங்களில் சிறந்தவர்கள் என் தலைமுறையினர் ஆவர். பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள். பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள். -இதன் அறிவிப்பாளரான இம்ரான் இப்னு ஹுஸைன்(ரலி) அவர்கள் ‘நபி(ஸல்) அவர்கள் தங்களின் தலைமுறையினரைக் குறிப்பிட்ட பின்னர் இரண்டு தலைமுறையினரைக் கூறினார்களா? மூன்று தலைமுறையினரைக் கூறினார்களா? என்று எனக்குத் தெரியாது. என்று கூறினார்கள்.

(தொடர்ந்து அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்)

பிறகு ஒரு சமுதாயத்தார் வருவார்கள். அவர்கள் நேர்ந்து கொள்வார்கள். ஆனால் அதை நிறைவேற்றமாட்டார்கள்; நம்பிக்கை மோசடி செய்வார்கள். அவர்களை நம்பி எதையும் ஒப்படைக்கப்படாது. அவர்கள் தாமாகவே சாட்சியமளிக்க முன்வருவார்கள். ஆனால், சாட்சியம் அளிக்கும்படி அவர்களை யாரும் கேட்கமாட்டார்கள். அவர்களிடையே பருமனாயிருக்கும் (தொந்தி விழும்) நிலை தோன்றும்.

என இம்ரான் இப்னு ஹுஸைன்(ரலி) அறிவித்தார். நூல்:ஸஹீஹுல் புஹாரி 6695

மொத்தத்தில் நேர்ச்சை செய்வது ஆகுமானது அதனை நிறைவேற்றவது அவசியம் என்பதில் முஸ்லிம்கள் ஒன்றுபட்டுள்ளார்கள் அதில் யாரும் மாற்றுக் கருத்து கொள்ளவில்லை.

நேர்ச்சை எவ்வாறு செய்வது

நேர்ச்சை செய்வதற்கென்று குறிப்பிட்ட வாசகம் ஏதுமில்லை ஒருவர் நான் அல்லாஹுக்காக நோன்பை நோற்க நேர்ச்சை செய்துகொண்டேன்.அல்லது இன்ன விஷயத்தைச் செய்வதற்கு நான் நேர்ச்சை செய்துகொண்டேன் என்று கூறுவதாகும் .

இமாம் அல் ஜஸீரீ கூறினார்கள் நேர்ச்சை செய்வதற்கென்று குறிப்பிட்ட வாசகம் எதுவுமில்லை நேர்ச்சையை அவசியமாக்கிக்கொள்ளக்கூடிய எந்த வாசகத்தையும் பயன்படுத்தலாம் அதில் நேர்ச்சை செய்தேன் என்று குறிப்பிடாவிட்டாலும் சரியே. நேர்ச்சையின் வாசகத்தை மொழியாமல் நிய்யத் கொண்டால் மட்டும் போதுமா இல்லையா என்பதில் கருத்துவேறுபாடுள்ளது இதில் உறுதியான கருத்து வாசகத்தை மொழியவேண்டும் நிய்யத் மட்டும் போதுமானதல்ல என்பதாகும்.அல்ஃபிக்ஹ் அலா மதாஹிபில் அர்பஆ 2/131

நேர்ச்சையின் நிபந்தனைகள்

நேர்ச்சையின் நிபந்தனைகள் இரண்டுவகையாகும் ஒன்று நேர்ச்சை செய்பவருடன் தொடர்புடையது மற்றொன்று நேர்ச்சை செய்யப்படுபவற்றுடன் தொடர்புடையது.

நேர்ச்சை செய்பவருடன் தொடர்புடைய நிபந்தனைகள்

  1. இஸ்லாம் காஃபிர் நேர்ச்சையை நிறைவேற்றினால் அது சரியாகாது
  2. விரும்பி தேர்வு செய்வது நிர்பந்தத்தினால் செய்தால் அது சரியாகாது
  3. நேர்ச்சையை செயல் படுத்த ஆற்றல் இருக்கவேண்டும் சிறுவரோ,பைத்தியமோ நேர்ச்சை செய்தால் அது சரியாகாது
  4. கடமை சுமத்தப்பட்டவராக இருக்கவேண்டும் கடமை சுமத்தப்படாத சிறுவரிடமிருந்து அது அங்கீகரிக்கப்படாது
  5. நேர்ச்சையை மொழியவேண்டும் சமிஞ்னை போதுமானதல்ல ஊமையாக இருந்தாலேத் தவிற அவரது சமிஞ்னையும் விளங்குமாறு இருக்கவேண்டும். அல்ஃபிக்ஹ் அலா மதாஹிபில் அர்பஆ 2/130

நேர்ச்சை செய்யப்படுகின்றவற்றின் நிபந்தனைகள்

1, நேர்ச்சையின் மூலம் கடமையானதாக அல்லாமல் சுயமாகவே கடமையானதாக இல்லாத அல்லாஹ்வின் நெருக்கத்தை நாடிச்செய்யக்கூடிய அமலாகவும் அது இருக்கவேண்டும்

2, நேர்ச்சையாக செய்யப்படும் செயல் இபாதத் ஆக இருக்கவேண்டும் உளூ, குளிப்பு, குர்ஆனை தொடுவது,அதான் சொல்வது, ஜனாஸாவில் பங்கெடுப்பது, நோயாளியை நலம் விசாரிக்கச்செல்வது, போன்ற வஸீலாவாக இருக்கக்கூடிய காரியங்களை நேர்ச்சையாக செய்யமுடியாது. அல்ஃபிக்ஹ் அலா மதாஹிபில் அர்பஆ 2/132

3, நேர்ச்சை செய்யப்படும் விஷயம் மார்க்கத்தில் உள்ள செயலாக இருக்கவேண்டும் மார்க்கத்திலேயே இல்லாத விஷயத்தை நேர்ச்சையாக நிறைவேற்ற முடியாது உதாரணமாக ஒருவர் நான் இரவு முழுக்க நோன்பு நோற்கிறேன் அல்லது ஒரு பெண் நான் என்னுடைய ஹைளு காலத்தில் அல்லாஹ்வுக்காக நோன்பு நோற்கபோறேன் என்று கூறுவது தவறாகும் ஏனெனில் இரவு நேரம் நோன்பு நோற்பதற்குறிய நேரமல்ல,ஹைளிலிருந்தும் நிஃபாஸிலிருந்தும் தூய்மையாக இருக்கும் போது தான் நோற்க முடியும் தூய்மையாக இருக்கவேண்டுமென்பது இபாதத்திற்குரிய நிபந்தனையாகும் .அல் ஃபிக்ஹுல் இஸ்லாமி வ அதில்லதுஹு 4/111

நேர்ச்சை அல்லாஹுக்கு மாறு செய்யும் காரியமாக இருக்கக்கூடாது,நேர்ச்சை செய்வதற்கு முன்னரே ஃபர்ளான இபாதத்தாகவும் இருக்கக்கூடாது உதாரணமாக ஒருவர் ஹஜ்ஜு செய்ய நேர்ச்சை செய்தால் அது நேர்ச்சையாகாது.அதே போன்று சக்திக்கு மீறிய செயலாக,சாத்தியமற்ற செயலாகவோ இருக்கக் கூடாது.இவை அனைத்தையும் நேர்ச்சையை நிறைவேற்றும் போது கவனிக்கவேண்டும்

நேர்ச்சையின் வகைகள்

இமாம் இப்னு தகீகுல் ஈத் அவர்கள் கூறினார்கள் நேர்ச்சை மூன்று வகைப்படும்

ஒன்று: அருட்கொடை கிடைப்பதற்காக அல்லது தண்டனை பெறாமல் போனதற்காக நேர்ச்சை செய்வதாகும் இத்தகைய சூழலில் நேர்ச்சையை நிறைவேற்றுவது அவசியமாகும்.

இரண்டு: ஒன்றை தடுப்பதற்கோ அல்லது செய்ய தூண்டுவதற்காகவோ நேர்ச்சை செய்வது உதாரணமாக ஒரு மனிதர் நான் வீட்டிற்குள் நூழைந்து விட்டால் அல்லாஹுக்காக இதை செய்கிறேன் என்று கூறி நேர்ச்சை செய்வதில் கருத்துவேறுபாடுள்ளது இதில் இமாம் ஷாஃபியி அவர்களுக்கு இரு கருத்துள்ளது ஒன்று அவர் நேர்ச்சையை நிறைவேற்றுவதற்கும் பரிகாரம் செய்வதற்கும் தேர்வு உரிமை வழங்கப்பட்டவர் ஆவார் என்பதாகும் இதற்கு கோபத்தின் போதும் விவாதத்தின் போதும் செய்யும் நேர்சை என்று சொல்லப்படும்.

மூன்றாவதாக: எந்த ஒன்றுடனும் தொடர்பில்லாமல் அல்லாஹ்விற்கு கட்டுப்படும் நோக்கில் அல்லாஹுக்காக நான் இதை செய்கிறேன் என்று நேர்ச்சை செய்வதாகும் அவ்வாறு செய்தால் அதை நிறைவேற்றுவது கட்டாயமாகும் இதற்குத் தான் பொதுவான நேர்ச்சை என்று கூறுகிறோம். இஹ்காமுல் அஹ்காம் 2/265

பொதுவான நேர்ச்சையின் வகைகள்

  1. மூடலான நேர்ச்சை
  2. தர்க்கம், கோபம் ஆகிய வற்றின் போது செய்யும் நேர்ச்சை
  3. அனுமதிக்கப்பட்ட நேர்ச்சை
  4. வெறுக்கத்தக்க நேர்ச்சை
  5. பாவமான நேர்ச்சை
  6. நன்மையான நேர்ச்சை
  7. கடமையான நேர்ச்சை
  8. சாத்தியமில்லாத நேர்ச்சை

மேற்கூறிய விளக்கமும் அவற்றிற்கான சட்டமும்

1, மூடலான நேர்ச்சை எதை நேர்ச்சை செய்கிறோம் என்பதைக் குறிப்பிடாமல் அல்லாஹ்விற்காக நான் நேர்ச்சை செய்துள்ளேன் என்று கூறுவதாகும்

அவ்வாறு கூறிய நேர்ச்சையில் சத்தியத்திற்கான பரிகாரம் செய்ய வேண்டுமென்று அதிகமான உலமாக்கள் கூறியுள்ளார்கள் என்று இமாம் இப்னு குதாமா அவர்கள் கூறினார்கள். அல் உத்தா ஃபி ஷரஹில் உம்தாஆ

உஸ்பத் பின் ஆமிர் அவர்கள் அறிவித்தார்கள்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

சத்திய முறிவுக்கான பரிகாரமே நேர்ச்சை முறிவுக்கான பரிகாரமாகும்.

இதை உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.நூல்:ஸஹீஹ் முஸ்லிம் 3379

இது பெரும்பான்மை ஸஹாபாக்களின் கருத்தாகும் அவர்களின் காலத்தில் இதில் கருத்துவேறுபாட்டை அறியவில்லை எனவே இது இஜ்மாவாகும். .அல் உத்தா ஃபி ஷரஹில் உம்தாஆ

இந்த நேர்ச்சையுடன் தொடர்புடைய நிபந்தனை அனுமதிக்கப்பட்டதாக, அல்லது பாவமாக இருந்தாலும் சரியே உதாரணமாக ஒருவர் நான் நோன்பு நோற்றால் அல்லது தொழுதால் அது அல்லாஹ்விர்காக என் மீது நேர்ச்சையாகிவிடும் என்று கூறினால் அதனை முறிப்பது அவர் மீது கடமையாகிவிடும் இன்னும் அதற்கு சத்தியத்தை முறித்ததற்கான பரிகாரமும் செய்யவேண்டும்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர் ஒரு சத்தியம் செய்துவிட்டு, அது அல்லாத வேறொன்றை அதைவிடச் சிறந்ததாகக் கருதும்பட்சத்தில் அந்தச் சிறந்ததையே அவர் செய்யட்டும்; சத்திய முறிவுக்காகப் பரிகாரமும் செய்யட்டும்.

அறிவிப்பாளர் அபூஹுரைரா (ரலி) அவர்கள்.நூல்:ஸஹீஹ் முஸ்லிம் 3392

மூடலான நேர்ச்சையில் ஒருவர் நோன்பு நோற்பதாக நிய்யத் வைத்தார் ஆனால் எத்தனை என்று நிய்யத் வைக்கவில்லை எனில் அவர் பரிகாரத்திற்கான நோன்பை மூன்று நாட்கள் நோற்க வேண்டும் .

அதே போன்று உணவளிப்பதாக நேர்ச்சை செய்து அதிலும் எண்ணிக்கையை குறிப்பிடாவிட்டால் அவர் பத்து ஏழைகளுக்கு உணவளிக்கவேண்டும் ஏனெனில் இதிலும் அவர் சத்தியத்திற்கான பரிகாரத்தையே கடைபிடிக்க வேண்டும்

2, கோபம் மற்றும் தர்க்கத்தின் போது செய்யும் நேர்ச்சையைப்பொருத்தவரை ஒருவர் நான் இவரிடம் பேசமாட்டேன் அப்படி பேசினால் நான் இதை செய்வேன் என்றோ அதே போன்று ஒருவரது வீட்டிற்கு நான் செல்லமாட்டேன், நான் சொல்வது போன்று நடக்காவிட்டால் நான் இதைச்செய்வேன் என்றெல்லாம் கூறுவதாகும் அவர் ஒருசெயலைச் செய்யாமலிருக்க இவ்வாறு நேர்ச்சை செய்கிறார் இப்படி நேர்ச்சை செய்தவர் அவர் செய்த நேர்ச்சையை நிறைவேற்றுவதற்கும் அல்லது பரிகாரம் செய்வதற்கும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளார் அவர் விரும்பியதைத் தேர்ந்தெடுக்கலாம் . அல்ஃபிக்ஹ் அலா மதாஹிபில் அர்பஆ 2/129

3, அனுமதிக்கப்பட்ட நேர்ச்சை என்பது உண்பது, குடிப்பது, பயணம் செய்வது போன்ற அனுமதிக்கப்பட்ட காரியங்களைச் செய்வதாக நேர்ச்சை செய்வதாகும் இதிலும் நேர்ச்சை செய்தவர் அவர் செய்த நேர்ச்சையை நிறைவேற்றுவதற்கும் அல்லது பரிகாரம் செய்வதற்கும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளார் அவர் விரும்பியதைத் தேர்ந்தெடுக்கலாம் . அல்ஃபிக்ஹ் அலா மதாஹிபில் அர்பஆ2/129

நபி அவர்களிடம் ஒரு பெண் வந்து நான் உங்களுக்கு முன்பாக தஃப்ஃபு அடிப்பதாக நேர்ச்சை செய்தேன் என்று கூறினார் அப்போது நபி அவர்கள் உனது நேர்ச்சையை நிறைவேற்று என்று கூறினார்கள். அம்ருபின் ஷுஐப் தனது தந்தை மற்றும் பாட்டனார் மூலமாக அறிவிக்கிறார் .நூல்: சுனன் அபீதாவூத் 3312

4, வெறுக்கத்தக்க நேர்ச்சை என்பது மார்க்கம் விரும்பாத ஒன்றை ஒருவர் நேர்ச்சை செய்வதாகும் உதாரணமாக ஒருவர் நான் பூண்டு,வெங்காயம்,போன்ற வற்றை உண்பேன் என்பதாக நேர்ச்சை செய்வதாகும் இவ்வாறு நேர்ச்சை செய்தவர்கள் சத்தியத்திற்கான பரிகாரம் செய்வது விரும்பத்தக்கதாகும் அதே வேளை அவர் தனது நேர்ச்சையை நிறைவேற்றி விட்டால் பரிகாரம் செய்யதேவையில்லை. அல்ஃபிக்ஹ் அலா மதாஹிபில் அர்பஆ2/129

5, பாவமான நேர்ச்சை என்பது ஒரு நான் மது அருந்துவேன்,கப்ரை தவாஃப் செய்வேன், அல்லாஹ் அல்லாதவற்றிற்காக அறுத்துப் பலியிடுவேன்,திருடுவேன், உறவைத் துண்டித்து வாழ்வேன் என்றெல்லாம் மார்க்கம் பாவமென்றும்,ஹராமாக்கப்பட்டதென்றும் கூறிய பாவமான காரியத்தை நேர்ச்சை செய்வதாகும் .

இத்தகைய நேர்ச்சையை நிறைவேற்றுவது கூடாது என்பது உலமாக்களின் ஏகோபித்த கருத்தாகும்.

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்

அல்லாஹ்வுக்கு வழிப்படுவதாக ஒருவர் நேர்ந்து கொண்டால் (அதை நிறைவேற்றும் (முகமாக) அவனுக்கு அவர் வழிப்படட்டும்! அல்லாஹ்வுக்கு மாறு செய்வதாக ஒருவர் நேர்ந்துகொண்டால் (அதை நிறைவேற்றுவதற்காக) அவனுக்கு அவர் மாறு செய்திட வேண்டாம்.

என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.நூல்:ஸஹீஹுல் புஹாரி 6696

நாம் எந்நிலையிலும் அல்லாஹுக்கு மாறு செய்யக்கூடாது அப்படி நேர்ச்சை செய்தவர் சத்தியத்திற்கான பரிகாரம் செய்யவேண்டும்.

عَنْ عَائِشَةَ قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«لَا نَذْرَ فِي مَعْصِيَةٍ، وَكَفَّارَتُهُ كَفَّارَةُ يَمِينٍ»

அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறினார்கள்

அல்லாஹ்விர்க்கு மாறு செய்வதில் நேர்ச்சை என்பதில்லை அதற்கான பரிகாரம் சத்தியத்திற்கான பரிகாரமாகும் ,அறிவிப்பாளர் ஆயிஷா அவர்கள் நூல்:சுனன் திர்மிதி 1524

6, நன்மையான நேர்ச்சை என்பது அல்லாவிற்குக் கட்டுப்படுவதாகும் நன்மை என்பதற்கு அரபியில் அல்பிர்ரு என்று கூறுவார்கள் அல்பிர்ரு என்பதற்கு இத்தாஅத் என்று தான் விளக்கம் சொல்லப்பட்டுள்ளது அதாவது கட்டுப்படுதல் இவ்வாறு தான் பின் வரும் வசனத்திற்கு விளக்கம் சொல்லப்பட்டுள்ளது

நீங்கள் வேதத்தையும் ஓதிக் கொண்டே, (மற்ற) மனிதர்களை நன்மை செய்யுமாறு ஏவி, தங்களையே மறந்து விடுகிறீர்களா? நீங்கள் சிந்தித்த அறியமாட்டீர்களா.2:44

ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் ஒரு பயணத்தில் இருந்தபோது, ஒருவர் நிழலில் தங்க வைக்கப்பட்டு மக்கள் (அவரைச் சுற்றிலும்) குழுமியிருந்ததைக் கண்டார்கள். ‘இவருக்கு என்ன நேர்ந்தது?’ என்று கேட்டார்கள். ‘இவர் நோன்பு நோற்றிருக்கிறார்!’ என்று மக்கள் கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் ‘ பயணத்தில் நோன்பு நோற்பது நற்செயலில் சேராது!’ என்று கூறினார்கள்.நூல்:ஸஹீஹுல் புஹாரி 1946

நன்மையான நேர்ச்சை மூன்று வகையாகும்

அ) ஒரு அருளை அடையவேண்டு மென்பதற்கு பகரமாகவோ அல்லது வேதனையை தடுத்துக்கொள்ள வேண்டுமென்பதற்கு பகரமாகவோ நேர்ச்சை செய்வதாகும் உதாரணமாக நோயாளியாக இருப்பவர் அல்லாஹ் எனக்கு நிவாரணத்தைத் தந்தால் நான் அவனுக்காக நோன்புவைப்பேன் என்று கூறுவதாகும் இத்தகைய நேர்ச்சையை நிறைவேற்றுவது அவசியமாகும் என்பதில் அறிஞர்களிடம் இஜ்மா உள்ளது.

ஆ) எவ்வித நிபந்தனையுமில்லாமல் அல்லாஹ்விற்காக நேர்ச்சை செய்வதாகும் இத்தகைய நேர்ச்சை நிறைவேற்றவேண்டும் என்று தான் பெரும்பான்மை அறிஞர்கள் கூறியுள்ளார்கள்

இ) கட்டுப்படுதலுக்குரிய நேர்ச்சை அது கடமை என்பதில் எவ்வித ஆதாரவுமில்லை உதாரணமாக நோயாளியைச் சந்திப்பது இதனை நிறைவேற்றுவது அவசியமாகும்

7, கடமையான நேர்ச்சை என்பது மார்க்கம் நம்மீது கடமையாக்கிய இபாதத்துகளை செய்ய ஒருவர் நேர்ச்சை செய்வதாகும் இவ்வாறு செய்வது கூடாது .

8, சாத்தியமில்லாத விஷயத்தை நேர்ச்சை செய்யக்கூடாது அவ்வாறு செய்திருந்தால் அதனை நிறைவேற்றத் தேவையில்லை .அல்முக்னி 13/381

நேர்ச்சையின் சட்டங்கள்

நேர்ச்சை செய்வது குறித்துப் பல வசனங்கள் உள்ளன நேர்ச்சையை நிறைவேற்றுவோர்களை குர்ஆன் பாராட்டவும் செய்கிறது மரியம் அவர்கள் நேர்ச்சை செய்தது பற்றி குர்ஆன் இவ்வாறு கூறுகிறது

ஆக, நீர் புசித்தும் பருகியும் கண் குளிர்ந்திருப்பீராக! பிறகு, மனிதரில் எவரையேனும் நீர் கண்டால் நிச்சயமாக நான் ரஹ்மானுக்கு நோன்பு நோற்கிறேன்; ஆகவே, இன்றைய தினம் எம்மனிதருடனும் பேசமாட்டேன்” என்று கூறிவிடுங்கள் என்றும் கூறினார்.19:26

அல்லாஹ் கூறுகிறான்

நிச்சயமாக நல்லவர்கள் கிண்ணங்களிலுள்ள கற்பூரம் கலந்த பானத்தை அருந்துவார்கள்.

அது அல்லாஹ்வினுடைய அடியார்கள் அருந்துவதற்காக ஏற்பட்ட ஓர் ஊற்றின் நீராகும். அதனை அவர்கள் (தாங்கள் விரும்பிய இடமெல்லாம்) ஓடச் செய்வார்கள். அவர்கள் தாம் தங்கள் நேர்ச்சைகளை நிறைவேற்றிக் கொண்டும் அனைத்துத் திசைகளிலும் தீங்கு பரவக்கூடிய மறுமை நாளினைக் குறித்து அஞ்சிக் கொண்டுமிருப்பார்கள்.76:5-7

மறுமையின் அமளி துமளியைக்குறித்த அச்சமும் நேர்ச்சையை நிறைவேற்றுவதும் நல்லோர்களின் மறுமை வெற்றிக்கும் சுவனத்தில் நுழைந்ததற்கும் காரணமாக அல்லாஹ் ஆக்கியுள்ளான்.

அதே வேளையில் பல்வேறு ஹதீஸ்ள் நேர்ச்சையை தடைசெய்தும் அது விரும்பத்தக்கதல்ல என்றும் தெரிவிக்கிறது

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நேர்ச்சை செய்ய வேண்டாம் என்று எங்களுக்குத் தடை விதிக்கலானார்கள். மேலும் ” நேர்ச்சை (விதியிலுள்ள) எதையும் மாற்றிவிடாது. நேர்ச்சையின் மூலம் கஞ்சனிடமிருந்து (செல்வம்) வெளிக் கொணரப்படுகிறது (அவ்வளவுதான்)” என்று சொன்னார்கள்.நூல்: ஸஹீஹ் முஸ்லிம். 3368

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்

நேர்த்திக்கடன் (விதியில்) எதையும் துரிதப்படுத்தவும் செய்யாது; தாமதப்படுத்தவும் செய்யாது. நேர்த்திக்கடன் மூலம் கஞ்சனிடமிருந்து (செல்வம் ஏழைக்கு) வெளிக் கொணரப்படுகிறது (அவ்வளவுதான் அறிவிப்பாளர் இப்னு உமர் (ரலி) அவர்கள்.  நூல்: ஸஹீஹ் முஸ்லிம்3369

இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் நேர்த்திக்கடன் செய்ய வேண்டாமென்று தடை விதித்தார்கள். மேலும், ‘நேர்த்திக்கடன் (விதியிலுள்ள) எதையும் மாற்றிவிடாது. நேர்த்திக் கடன் மூலம் கஞ்சனிடமிருந்து (செல்வம்) வெளிக்கொணரப்படுகிறது (அவ்வளவு தான்)’ என்றார்கள்.ஸஹீஹுல் புஹாரி 6608

ஒருபுறம் நேர்ச்சையை நிறைவேற்றுவோர்களைப் புகழ்ந்தும் மறுபுறம் அதனைச் செய்யக்கூடாது என்று மார்க்கம் தடையும் விதிக்கிறது புகழுக்குரிய நேர்ச்சை என்பது கட்டுப்படுவதில் நிறைவேற்றுவதாகும் அதில் வேறு எதுவும் காரணமும் இல்லாமல் இருக்கவேண்டும் அப்படியிருந்தால் அது அனுமதிக்கப்பட்ட நேர்ச்சையாகும்

அதுவல்லாத நேர்ச்சைகள் தடுக்கப்பட்டதும் விரும்பத்தகாததுமாகும்

நேர்ச்சைகள் அல்லாஹுக்கு கட்டுப்படும் விதத்தில் செய்தால் அதனை நிறைவேற்ற வேண்டும் அவ்வாறல்லாத நேர்ச்சைகளைச் செய்தவர்கள் அதற்குப் பகரமாக நேர்ச்சையைச் செய்தவர்கள் பரிகாரம் செய்ய வேண்டும் ஒருவர் சத்தியத்தை முறித்தால் அதற்கு என்ன பரிகாரமோ அதைத்தான் இதற்கும் பரிகாரமாகும்

அல்லாஹ் கூறுகிறான்

உங்கள் சத்தியங்களில் வீணானவற்றிற்காக அல்லாஹ் உங்களைக் குற்றம் பிடிக்க மாட்டான்; எனினும் (ஏதாவது ஒன்றை) உறுதிப்படுத்தச் செய்யும் சத்தியங்களுக்காக (அவற்றில் தவறினால்) உங்களைப் பிடிப்பான்; (எனவே சத்தியத்தை முறித்தால்) அதற்குரிய பரிகாரமாவது: உங்கள் குடும்பத்தினருக்கு நீங்கள் கொடுக்கும் ஆகாரத்தில் நடுத்தரமானதைக் கொண்டு பத்து ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும், அல்லது அவர்களுக்கு ஆடை அணிவிக்க வேண்டும், அல்லது ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும்; ஆனால் (இம்மூன்றில் எதனையும்) ஒருவர் பெற்றிராவிட்டால் (அவர்) மூன்று நாட்கள் நோன்பு நோற்க வேண்டும்; நீங்கள் சத்தியம் செய்யும் பொழுது இதுவே உங்கள் சத்தியங்களின் பரிகாரமாகும்; உங்கள் சத்தியங்களை (முறித்து விடாமல்) பேணிக் காத்துக் கொள்ளுங்கள்; நீங்கள் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் பொருட்டு அவன் தன் அத்தாட்சிகளை – ஆயத்களை – உங்களுக்கு இவ்வாறு விளக்குகிறான் 5:89

பரிகாரம் மூன்று விதமாக உள்ளது

1, பத்து ஏழைகளுக்கு உணவளிப்பது, அல்லது உடை அளிப்பது

2, ஒரு அடிமையை விடுதலைச்செய்வது

3, மூன்று நாட்கள் நோன்பு நோற்பது

மார்க்கம் கடமையாக்கிய விஷயங்களிலும் வழிகாட்டியவற்றிலும் மார்க்கத்தின் வரம்பைப்பேணி வாழ்வோம் அல்லாஹ்விடம் கூலியை பெறுவோமாக

பிரபல்யமான பதிவுகள்