நம்முடன் இணைந்து இருப்பவர்கள்

திங்கள், மார்ச் 28, 2022

மனைவிக்கு பிரியமான விஷயம்,

அஹ்மத் பின் ஹம்பல் ரஹிமஹுல்லாஹ் அவர்கள்

அவர்களின் மகனாருக்கு அவரின் திருமணத்தின் போது....

மகனே ஒரு பெண்ணை நீ திருமணம் செய்ய போகிறாய்..

 அந்த பெண்ணிடம்
பத்து விஷயங்களை நடைமுறை செய்தால் தான் நீ மகிழ்ச்சியாக வாழலாம்
அவளுடைய வாழ்க்கையை சரியாக்கலாம்...

முதலாவதாக மகனே பெண்கள் அன்பை விரும்பக் கூடியவர்கள்.. எனவே
உன் அன்பை நீ அவளுக்கு வெளிபடுத்த வேண்டும்..

இரண்டாவதாக அன்பை வெளிப்படுத்துவதில் ஒருநாளும் நீ கஞ்சனாக ஆக கூடாது...

மூன்றாவதாக சொன்னார்கள்..
பெண்கள் கடினமான ஆணை வெறுப்பார்கள்.. பலகீனமான மிருதுவான ஆண்களுக்கு பணிவிடை செய்வார்கள்.. 

ஆகவே அவளுடைய அன்பை நீ அடைய வேண்டுமெனில் அவளோடு மிருதுவாக நடந்துகொள்....

நான்காவதாக சொன்னார்கள்..
பெண்கள் கணவனிடம் நல்ல பேச்சையும் அழகான தோற்றத்தையும், உடல் ஆடை பரிசுத்ததையும், எதிர்பார்ப்பாள்..

எனவே உன் உடலையும் பேச்சையும் தோற்றத்தையும் அழகாக்கி கொள் என்றார்கள்..

ஐந்தாவதாக சொன்னார்கள்..
உன் வீட்டில் உனது மனைவி அரசியாக ஆள்வதற்கு பார்ப்பாள்..அவளை அரசியாக ஆள்வதற்கே விட்டுவிடு நீ சந்தோஷமாக வாழ்வாய் என்றார்கள்..

ஆறாவதாக சொன்னார்கள்..
பெண்கள் கணவரின் உழைப்பை விரும்புவார்கள்.. எனவே நீ சம்பாதித்து கொடுத்து அவளை நல்ல முறையில் வாழவைக்க வேண்டும்..அதே சமயம் உன் குடும்பத்தையும் கவனிக்க வேண்டும் அவளையும் நல்ல முறையில் வாழவைக்க வேண்டும்..

ஏழாவதாக சொன்னார்கள்..
பெண்கள் வளைவிலிருந்து படைக்கப்பட்டவள்.. அதுதான் அவளின் அழகின் இரகசியம்..

வளைந்தவள் என்பதற்காக அவசரப்பட்டு அவளை நேராக்கமுயற்சிக்காதே...
அவளோடு நீயும் வளைந்து நடந்து சரியாக்கிவிடு என்றார்கள்..

அடுத்ததாக சொன்னார்கள்..
பெண் என்பவள் நீ வாழ்க்கையெல்லாம் நலவுகள் செய்தாலும் உன்னிடம் ஒரு நலவையும் காணவில்லை என சொல்லி விடுவாள்.. அதற்காக நீ அவளை வெறுத்து விடாதே..!!

சொன்னார்கள் அடுத்ததாக..
பெண் உடலாலும் சிந்தனையாலும் பலகீனமானவள்,அல்லாஹ்வே அவளின் மீதுள்ள பர்ளுகளை இல்லாமல் ஆக்கியுள்ளான்...

அவளுடைய தொழுகை நோன்பை கூட விட வைத்திருக்கிறான்.. அல்லாஹ் அந்த பெண்ணுக்கு பர்ளை லேசாக்கியது போன்று நீயும் அவளுக்கு அந்த காலகட்டத்தில் உன் தேவைகளையும்..
அவளுக்கு கட்டளைகளையும் லேசாக்கி கொள்...!!!

கடைசியாக சொன்னார்கள் ‌..
பெண் என்பவள் உன் சிறை கைதி.. சிறைகைதியாக வந்தவளின் மீது இரக்கப்படு அல்லாஹ் உன்மீது இரக்கப்படுவான்..

இந்த பத்தையும் கடைபிடி..
அல்லாஹ் உன் வாழ்க்கையை மகிழ்ச்சியாக்குவான்.❤️❤️❤️

சனி, மார்ச் 26, 2022

கற்பதும், கற்பிப்பதும் இறை நம்பிக்கையே,


திங்கள், மார்ச் 21, 2022

இமாம்களின் வழி நடப்போம்,

நமது முன்னோடிகள் யார் ?
நல்லோர்களான இமாம்களா ?
நவீன ஏகத்துவ ஏஜெண்ட்களா ?

இமாம்களின் வழி நடப்போம் !
இறைவனின் பொருத்தத்தை அடைவோம் !

இஸ்லாம் மட்டுமே நேர்வழி என்ற நிலைமாறி, இஸ்லாம் மார்க்கத்தில் எது நேர்வழி என்ற குழப்பமான கால சூழ்நிலையில் நாம் வாழ்கிறோம்...

குர்ஆன், ஹதீஸிலிருந்து மார்க்கச் சட்டங்களை வாழ்வில் நடைமுறைப்படுத்த நாம் யாருடைய விளக்கங்களைப் பின்பற்றுவது.இன்றைய நவீன அறிஞர்களையா ?

அல்லது அல்லாஹ்வுக்காகவே தங்கள் வாழ்வை அர்ப்பணம் செய்த இமாம்கள் மற்றும் ஹதீஸ் கலை வல்லுநர்களையா ?

இதோ உங்கள் சிந்தனைக்கு...

நபிகள் நாயகம் (ஸல்..) அவர்களின் காலத்திற்கு ஏறத்தாள 90 ஆண்டுகளுக்கு பிறகு மத்ஹப்கள் தோன்றியது...

மத்ஹப்கள் உருவாகியதன் முக்கிய நோக்கம் குழப்பம் இல்லாமல் சிறந்த வழியில் மக்கள் அமல்களை செய்யவும், மார்க்கச் சடங்களை  நிறைவேற்றவும் வேண்டும் என்பதேயாகும்...

மத்ஹபில் 4 வழிமுறைகள் உள்ளது. 
அந்த நான்கு வழிமுறைகளும் 
கண்மணி நாயகம் (ஸல்..) அவர்கள் காட்டித்தந்ததே...

அதில் பிரிவுகள் இல்லை. 
மனநோய் உள்ளவர்களுக்கு மட்டுமே மத்ஹப்கள் பிரிவாகத் தெரியும்...

1. #ஹனபி_மத்ஹப் 
இமாம் அபு ஹனிபா நுஃமான் இப்னு 
ஸாபித் (ரஹ்..)
வாழ்ந்த காலம்:  ஹிஜ்ரி  80  - 150.

2. #மாலிகி_மத்ஹப் 
இமாம் மாலிக் (ரஹ்..)
வாழ்ந்த காலம்:  ஹிஜ்ரி 93 - 179.

3. #ஷாஃபிஈ_மத்ஹப் 
அபு அப்தில்லாஹ் முஹம்மது இப்ன் 
இத்ரிஸ் அஷ்ஷாஃபி (ரஹ்..)
வாழ்ந்த காலம்:  ஹிஜ்ரி 150 - 204.

4. #ஹன்பலி_மத்ஹப் 
அஹ்மத் இப்னு முஹம்மது இப்னு 
ஹன்பல் (ரஹ்..)
வாழ்ந்த காலம்:  164 - 241.

மார்க்கச் சட்டங்களைத் தொகுத்த மத்ஹப் இமாம்களின்  காலங்களும் கிட்டத்தட்ட 
ஒரே காலம் தான்...

மத்ஹப்பில் பிரிவினை இருந்தது என்று வைத்துக்கொண்டால்  நான்கு இமாம்களிடமும் " நீ பெரியவனா ? அல்லது  நான் பெரியவனா ? " என்ற தர்க்கம் ஏற்பட்டு அன்றைக்கே நான்கு நாற்பதாக மாறியிருக்கும்...

ஆனால் மத்ஹப் தோன்றி 1,300 வருடங்கள் ஆகியும் அதே 4 வழிகள் தான் இன்று வரைக்கும் இருக்கிறது...

புதிதாக ஒன்று கூட தோன்றவில்லை.  மத்ஹபில் பிரிவினை இல்லை என்பதற்கு இதுவே தக்க சான்று...

நான்கு இமாம்களையும் அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக !
#ஆமீன்...

(ஆனால் இன்றோ மத்ஹப்பில் பிரிவினை என்று வந்த ஒரு கூட்டத்தை அல்லாஹ் வேர் வேறாக பிரித்து அவர்களுக்குள்ளேயே அடித்துக்கொள்ளும் சூழலை உருவாக்கி மக்களுக்கு அந்த கூட்டத்தை பிரித்து காட்டியுள்ளான். வெறும் முப்பது வருடங்களுக்குள்.)

ஹதீஸும், ஹதீஸ் கலை வல்லுநர்களும் !

ஆதாரப்பூர்வமான ஆறு மிகப்பெரிய 
ஹதீஸ்  நூல்களைத் தொகுத்த 
ஆறு இமாம்களும் மத்ஹப்பை பின்பற்றியவர்களே !

அந்த ஆறு இமாம்களும் ஹதீதுகளை தொகுப்பதற்கு முன் தங்களுக்கென 
ஓர் வரைவிலக்கணம் வகுத்து அதன்படியே தங்கள் நூல்களில் ஹதீஸ்களைப் பதிய தொடங்கினார்கள்...

1. #ஸஹீஹ்_அல்புகாரி 
அபு அப்துல்லாஹ் முஹம்மது பின் இஸ்மாயில் அல் புகாரி (ரஹ்..)
வாழ்ந்த காலம்:  194 - 256.
பின்பற்றிய மத்ஹப் =  ஷாஃபி.
தொகுத்த ஹதீஸ்கள் =  7,275.

2.  #ஸஹீஹ்_முஸ்லிம்  
அபு அல் ஹசன் அஸ்கர் அத்தீன் முஸ்லிம் அன் நய்சாபூரி (ரஹ்..)
வாழ்ந்த காலம்:  204-261
பின்பற்றிய மத்ஹப் =  ஷாஃபிஈ.
தொகுத்த ஹதீஸ்கள் =  2,200.

3. #அபு_தாவூத் 
அபு தாவூத் சுலைமான் இப்னு 
அல் அசாத் (ரஹ்..)
வாழ்ந்த காலம்:  202 - 275.
பின்பற்றிய மத்ஹப் =  ஹன்பலி
தொகுத்த ஹதீஸ்கள் = 4,800.

4.  #திர்மிதீ
அபு ஈஸா இப்னு ஈஸா திர்மிதீ (ரஹ்..)
வாழ்ந்த காலம்:  209 - 279.
பின்பற்றிய மத்ஹப் = ஷாஃபிஈ
தொகுத்த ஹதீஸ்கள் = 3,956.

5.  #நஸாயீ 
அஹ்மத் இப்னு சுஹைப் இப்னு அலி அந்-நஸாயீ (ரஹ்..)
வாழ்ந்த காலம்:  215 - 300.
பின்பற்றிய மத்ஹப் = ஹன்பலி.
தொகுத்த ஹதீஸ்கள் = 5,270

6. #இப்னு_மாஜா = அபு அப்தில்லாஹ் முஹம்மது இப்னு யாஜித் இப்னு 
மாஜா (ரஹ்..)
வாழ்ந்த காலம்:  209 - 273.
பின்பற்றிய மத்ஹப் =  ஷாஃபிஈ
தொகுத்த ஹதீஸ்கள் = 4,000.

மத்ஹப்கள் அனைத்தும் குப்பை, இமாம்களைப் பின்பற்றக்கூடாது, இமாம்களின் கருத்துகளை ஏற்கக்கூடாது, குர்ஆன் மற்றும் ஹதீஸ் மட்டுமே மார்க்கம் என்று கூறும் கூட்டத்தார்க்கு இது சமரப்பணம்...

ஹதீஸ்களை தொகுப்பதற்கு முன் அனைத்து இமாம்களும் அவர்களுக்கு என்று ஓர் வரைவிலக்கணத்தை (இமாம்களின் சொந்த கூற்று) வடிவமைத்துக்கொண்டு அதன் படியே ஹதீஸ்களைத் தொகுத்தார்கள். ஆகையால் இமாம்களின் கூற்றினை ஏற்கக்கூடாது என சொல்பவர்கள் முதலில் அவர்கள் வகுத்த வரைவிலக்கணத்தை தூக்கியெறிய வேண்டும்.

பின்பு மத்ஹப்வாதிகள் வழிகேடர்கள், காஃபிர்கள். அவர்களின் தொகுப்பினை ஏற்கக்கூடாது எனில், ஹதீஸ்களைத் தொகுத்த அனைத்து இமாம்களும் நான்கு மத்ஹப்களில் ஒன்றைப் பின்பற்றியே வாழ்ந்துள்ளார்கள்...

ஆகையால் அவர்கள் தொகுத்த அனைத்து ஹதீத்களையும் கட்டுக்கதைகள் என புறம் தள்ள  வேண்டும் !
செய்வார்களா ?

எதற்கெடுத்தாலும் புகாரியில் இருக்கிறதா ?
முஸ்லிமில் இருக்கிறதா ?
(ஸிஹாஹ் சித்தா) ஆதாரபூர்வமான ஆறு ஹதீஸ் கிதாபுகளில் இருக்கிறதா ? 
என்று கேள்வி கேட்கும் நவீன ஏகத்துவவாதிகளே !

மத்ஹப்களை வழிகேடுகள் என்றும் குப்பைகள் என்றும் நாவு கூசாமல் அநாகரீகமாக விமர்சிக்கும் 
ஏகத்துவத்தின் ஏகபோக உரிமையாளர்களாகத் தங்களைக் காட்டிக் கொள்ளும் கணவான்களே !

இமாம் புஹாரீ, முஸ்லிம், திர்மிதீ, அபூதாவூத், நஸாயீ போன்ற இந்த சமுதாயத்திற்கு ஹதீஸைத் தொகுத்தளித்த அத்தனை மிகப் பெரிய இமாம்களும் தங்கள் வாழ்நாள் முழுவதும் மத்ஹப் இமாம்கள் வகுத்துத் தந்த மார்க்கச் சட்டங்களின் அடிப்படையிலேயே வாழ்ந்து மறைந்தவர்கள்...

மத்ஹபை பின்பற்றுவோரை வழிகேடர்கள், காஃபிர்கள் என்று முத்திரை குத்தும் நீங்கள் தங்கள் வாழ்வையே அர்ப்பணித்து, இந்த சமுதாயத்திற்கு ஹதீஸ்களை வழங்கிய மத்ஹப்களை பின்பற்றி வாழ்ந்த மரியாதைக்குரிய ஹதீஸ் கலை வல்லுநர்களையும் நிராகரிப்பில் தள்ளுகிறீர்களா ?

சகோதரர்களே !
நல்லடியார்களாக வாழ்ந்து மறைந்த 
நம் இமாம்களின் விளக்கங்களை ஏற்று அவ்வழியில் ஒற்றுமையான சமூகமாக, 
பலம் மிக்க உம்மத்தாக பயணிப்போமா ?
அல்லது பிரிவினையை வளர்க்கும் நவீன ஏகத்துவ ஏஜண்ட்களைப் பின்பற்றி சிதறுண்டு கிடப்போமா ?

சிந்தியுங்கள்...
செயல்படுங்கள்...

அனைவருக்கும் பகிருங்கள்...!

புதன், மார்ச் 02, 2022

மரணத்தை ( மௌத்) கேட்கலாமா?

மரணத்தின் அறிகுறிகளைக் காணும் சிலர் சீக்கிரம் நாம் மரணித்து விட்டால் நல்லதுஎன்று சில வேளை நினைப்பார்கள்.
முதுமையின் காரணமாக மற்றவர்களுக்குப் பாரமாகி, சொந்த பந்தங்கள் கூட அலட்சியப்படுத்துவதைக் காணும் போது ஏன் இவ்வுலகில் நாம் வாழ வேண்டும்?என்று எண்ணுவார்கள். இறைவா! சீக்கிரம் என்னை மரணிக்கச் செய்து விடு! என்று பிரார்த்தனை செய்து விடுவார்கள்.
எந்த நிலையிலும் யாரும் மரணத்தை இறைவனிடம் கேட்கவும் கூடாது; மனதால் அதற்கு ஆசைப்படவும் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள்.தனக்கு ஏற்பட்ட துன்பத்தின் காரணமாக உங்களில் யாரும் மரணிக்க ஆசைப்படக் கூடாது. அப்படிச் செய்ய வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டால் இறைவா! நான் வாழ்வது எனக்குச் சிறந்ததாக இருக்கும் வரை என்னை வாழ வை! நான் மரணிப்பது எனக்கு நல்லதாக இருந்தால் என்னை மரணிக்கச் செய் என்று கூறட்டும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)
நூல்: புகாரி 5671,

இதற்கான காரணத்தையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவாக விளக்கியுள்ளார்கள்.
ஒரு மனிதருக்கு (மறுமையில்) நன்மை செய்ய இறைவன் நாடினால் இவ்வுலகிலேயே அவருக்குரிய தண்டனையை முன்கூட்டியே அளித்து விடுவான். ஒரு மனிதருக்கு (மறுமையில்) அல்லாஹ் தீமையை நாடினால் அவருடைய பாவங்களை நிலுவையில் வைத்து நியாயத் தீர்ப்பு நாளில் கணக்குத் தீர்ப்பான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)
நூல்: திர்மிதீ 2319

இறை நம்பிக்கையுடைய ஆணும், இறை நம்பிக்கையுடைய பெண்ணும் தமது விஷயத்திலும், தமது பிள்ளைகள் விஷயத்திலும், தமது செல்வங்களிலும் தொடர்ந்து துன்பங்களுக்கு உட்படுத்தப்படுவார்கள். அல்லாஹ்வைச் சந்திக்கும் நாளில் அவர்கள் மீது எந்தக் குற்றமும் மீதமிருக்காது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
நூல்: திர்மிதீ 2323

எனவே நோய் நொடி, முதுமை, குடும்பத்தாரின் அலட்சியம், உடல் உபாதை மற்றும் மன உளைச்சலின் காரணமாக நாம் மரணத்திற்கு ஆசைப்படக் கூடாது. மறுமையில் நமக்குக் கிடைக்கவுள்ள தண்டனையைக் குறைக்க இறைவன் நமக்குத் தந்துள்ள பரிகாரம் என்று துன்பங்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.

பிரபல்யமான பதிவுகள்