நம்முடன் இணைந்து இருப்பவர்கள்

ஞாயிறு, செப்டம்பர் 08, 2024

நயவஞ்சகன்,

நயவஞ்சகன்

 

إِنَّ الْمُنَافِقِينَ فِي الدَّرْكِ الْأَسْفَلِ مِنَ النَّارِ وَلَنْ تَجِدَ لَهُمْ نَصِيرًا

 

நிச்சயமாக நயவஞ்சகர்கள் நரகத்தின் கீழ்ப்பாகத்தில் தான் இருப்பார்கள். (நபியே! அங்கு) அவர்களுக்கு உதவி செய்பவர் எவரையும் ஒருபோதும் நீர் காணமாட்டீர். திருக்குர்ஆன்:- 4:145

 

அண்ணல் நபி (ஸல்) அவர்களது காலத்தில் மதீனா புறநகர்ப் பகுதியில் யூதர்கள் வசித்து வந்தனர். அவர்களுக்கு முஸ்லிம்கள் பற்றிய தகவல்களை அவ்வப்போது தெரிவிப்பதும் அவர்களுடன் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதும் சிலரது வாடிக்கையாக இருந்தது. இவர்கள் மதீனாவில் முஸ்லிம்களுடன் முஸ்லிம்களாக வாழ்ந்து வந்த அன்றைய காலத்தின் (முனாஃபிக் எனும்) நயவஞ்சகர்கள் ஆவார்கள்.

 

அல்லாஹ்திருக்குர்ஆனின் பகரா அத்தியாயத்தின் ஆரம்பத்தில் முஸ்லிம்கள்இறைமறுப்பாளர்கள்நயவஞ்சகர்கள் ஆகிய மூன்று பிரிவினரான மனிதர்கள் இருப்பதை குறிப்பிடுகிறான். அவர்களில் முஸ்லிம்களைப் பற்றி 4 வசனங்களிலும்இறைமறுப்பாளர்களைப் பற்றி 2 வசனங்களிலும்நயவஞ்சகர்களைப் பற்றி 13 வசனங்களிலும் சுட்டிக்காட்டுகின்றான். நயவஞ்சகர்கள் இறைமறுப்பாளர்களை விடவும் இஸ்லாத்திற்கும்முஸ்லிம்களுக்கும் ஆபத்தானவர்கள். எதிரானவர்கள் என்பதை அல்லாஹ் இதன்மூலம் தெளிவுப்படுத்துகிறான்.

 

நயவஞ்சத்தனம் என்பது இறைமறுப்பைவிட படுமோசமானது. எனவேதான் அல்லாஹ் திருக்குர்ஆனில் பல இடங்களில் இந்த நயவஞ்கர்களின் முகத்திரையை கிழித்து அவர்களை தோழுரித்துக் காட்டுவதன் மூலம் அவர்களது பண்பு மற்றும் குணாதிசயங்கள் முஸ்லிம்களிடம் வந்து விடக்கூடாது என்பதை வலியுறுத்துகின்றான்.

 

இமாம் இப்னு ரஜப் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். நிபாக்” என்ற அரபுப் பதத்திற்குரிய பொருள்: ஏமாற்றுதல் மற்றும் சதிசெய்தல் மேலும், நன்மைகளை வெளிக்காட்டி நன்மைக்கு எதிரானதை மறைத்தல். நூல்:- ஜாமிஉல் உலூம்

 

எனவே, “நிபாக்” என்ற நயவஞ்சகத்திற்கு இவ்வாறு வரைவிலக்கணம் வழங்கலாம் இறைநம்பிக்கையை (ஈமான்) நாவின் மூலமாக வெளிப்படுத்துதல்நிராகரிப்பை (குப்ர்) உள்ளத்தில் மறைத்தல்.

 

அடையாளக் குணங்கள்

 

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( أَرْبَعٌ مَنْ كُنَّ فِيهِ كَانَ مُنَافِقًا خَالِصًا وَمَنْ كَانَتْ فِيهِ خَلَّةٌ مِنْهُنَّ كَانَتْ فِيهِ خَلَّةٌ مِنْ نِفَاقٍ حَتَّى يَدَعَهَا إِذَا حَدَّثَ كَذَبَ وَإِذَا عَاهَدَ غَدَرَ وَإِذَا وَعَدَ أَخْلَفَ وَإِذَا خَاصَمَ فَجَرَ ) பேசினால் பொய் சொல்வதுஒப்பந்தம் செய்துகொண்டால் நம்பிக்கை மோசடி செய்வதுவாக்களித்தால் மாறு செய்வதுவழக்காடினால் நேர்மை தவறுவது ஆகிய இந்த நான்கு குணங்கள் எவரிடம் குடிகொண்டுள்ளனவோ அவர் அப்பட்டமான நயவஞ்சகர் ஆவார். எவரிடம் அவற்றில் ஒரு குணம் குடிகொண்டுள்ளதோ அவர் அதை விட்டு விடும் வரை அவருள் நயவஞ்சகத்தின் ஒரு குணம் குடிகொண்டிருக்கும். அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-34, முஸ்லிம்-106

 

உண்மையான இறைநம்பிக்கையாளர் (முஃமின்) உள்ளும் புறமும் ஏக இறைவனை நம்பிக்கைக்கொண்டு அதன்படி செயல்படுவார். அந்த நம்பிக்கைக்கு ஒருபோதும் அவர் மாறு செய்யமாட்டார். ஆனால்நயவஞ்சகன் (முனாஃபிக்) உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவான்.

 

நயவஞ்சகத்தில் பெரியது சிறியது என்று இரு வகைகள் உள்ளன. பெரிய நயவஞ்சகம் என்பது உள்ளத்தளவில் இறைநிராகரிப்பை வைத்துக்கொண்டுவெளியில் தன்னை இறைநம்பிக்கையாளனாகக் காட்டிக்கொள்வது. இந்நிலை இஸ்லாத்திலிருந்து மனிதனை வெளியேற்றிவிடும் என்பது வெளிப்படை. சிறிய நயவஞ்சகம் என்பது செயல் ரீதியானது. இதுபற்றி இந்த நபிமொழியில் கூறப்பட்டது.

 

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் சிலர் உள்ளத்தில் இறைமறுப்பையும் உதட்டில் இறைநம்பிக்கையையும் வைத்துக்கொண்டு நயவஞ்சகர்களாக இருந்துவந்தனர். இவர்கள்தாம் அடிப்படை நயவஞ்சகர்கள் ஆவர். தாங்கள் இறைநம்பிக்கை கொண்டிருப்பதாக இவர்கள் கூறினார்கள்ஆனால்அது உண்மை அல்ல. தாங்களும் முஸ்லிம்களே என்று மற்றவர்களை நம்பவைத்து மோசடி செய்தார்கள். மார்க்கத்திற்கு உதவுவோம் என்று வாக்களித்துவிட்டு வாக்கு மீறினார்கள். வழக்கு என்று வந்துவிட்டால் நேர்மை தவறி நடந்துகொண்டார்கள். நயவஞ்சகத்தின் இந்த அடிப்படைக் குணங்கள் இன்றைக்கும் யாரிடமாவது இருந்தால்அவர்கள் முஸ்லிம்களாக இருந்தாலும் நயவஞ்சகர்களை போன்றவர்கள்தான் என இந்த நபிமொழி எச்சரிக்கிறது.

 

இக்குணங்கள் அனைத்தும் யாரிடம் குடிகொண்டுள்ளனவோ அவர் முழு நயவஞ்சகனைப் போன்றும்ஒரு சில குணங்கள் உள்ளவர் நயவஞ்சகத்தின் ஒரு பகுதியை பெற்றவரைப் போன்றும் கருதப்படுவார். இந்த நபிமொழிக்கு இதுதான் பொருளே தவிரஇக்குணங்கள் உள்ளவர் அடிப்படையிலேயே நயவஞ்சகர் ஆகிவிட்டார் என்று பொருளாகாது. ஏனெனில்நபியவர்கள் காலத்தில் வாழ்ந்த நயவஞ்சகர்கள் உண்மையில் இறைமறுப்பாளர்கள் ஆவர். இன்று ஒரு முஸ்லிமிடம் இக்குணங்கள் இருப்பதால் அவர் இறைமறுப்பாளராகிவிட மாட்டார். அது நம்பிக்கை நயவஞ்சகம்இது செயல் நயவஞ்சகம் என்பது குறிப்பிடத்தக்கது. நூல்:- அல்மின்ஹாஜ்

 

தொழுகைகளில்

 

நயவஞ்சகர்கள் அல்லாஹ்வை ஏமாற்று(வதாக எண்ணு)கிறார்கள். (உண்மையில்) அவனே அவர்களை ஏமாற்றத்திற்குள்ளாக்கி இருக்கின்றான். அவர்கள் தொழுகைக்காக எழுந்து நின்று சோம்பல்பட்டுக் கொண்டே நிற்கிறார்கள். அவர்கள் மக்களுக்குக் காட்டு(வதற்காகவே தொழு)கிறார்கள். அவர்கள் குறைவாகவே அல்லாஹ்வை நினைவு கூறுகிறார்கள். திருக்குர்ஆன்:-  4:142

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( إِنَّ أَثْقَلَ صَلاَةٍ عَلَى الْمُنَافِقِينَ صَلاَةُ الْعِشَاءِ وَصَلاَةُ الْفَجْرِ وَلَوْ يَعْلَمُونَ مَا فِيهِمَا لأَتَوْهُمَا وَلَوْ حَبْوًا ) நயவஞ்சகர்களுக்கு மிகவும் சிரமமான தொழுகை இஷாவும் ஃபஜ்ரும் ஆகும். அவர்கள் அவ்விரு தொழுகைகளில் உள்ள சிறப்பை அறிவார்களானால் (முழங்கால்களில்) தவழ்ந்தாவது வந்து சேர்ந்துவிடுவார்கள். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- முஸ்லிம்-1154

 

அலீ (ரலி) அவர்கள் கூறினார்கள். ( مَنْ تَرَكَ اَلْجُمُعَةَ ثَلاَثاً مُتَتَابِعَةً لِغَيْرِ عِلَّةٍ  كُتِبَ مُنَافِقاً ) யாரொருவர் எவ்வித காரணமுமின்றி மூன்று ஜும்ஆ தொழுகைகளைத் தொடர்ச்சியாக விட்டு விடுகின்றாரோ அவர் நயவஞ்சகர் என்று எழுதப்படும். நூல்:-  முஸ்தத்ரகுல் வஸாயில் பாகம்-6, பக்கம்-9

 

அலாஉ பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது. ஒருமுறை நாங்கள் அனஸ் (ரலி) அவர்கள் வீட்டில் இருந்தபோது அவர்களை சந்திக்க சென்றோம். அப்போது அன்னார் எங்களிடம், ( أَصَلَّيْتُمُ الْعَصْرَ ) “அஸ்ர் தொழுதுவிட்டீர்களா?” என்றார்கள். அதற்கு நாங்கள், “(இல்லை) நாங்கள் இப்போதுதான் (அதன் இறுதி நேரத்தில்) லுஹர் தொழுதுவிட்டு வருகிறோம்” என்று அவர்களிடம் கூறினோம். அன்னார், ( فَصَلُّوا الْعَصْرَ ) “அவ்வாறாயின்நீங்கள்  அஸ்ர்  தொழுங்கள்” என்றார்கள். உடனே நாங்கள் எழுந்து அஸர் தொழுதோம்.

 

நாங்கள் தொழுது முடித்ததும் அனஸ் (ரலி) அவர்கள், ( تِلْكَ صَلاَةُ الْمُنَافِقِ يَجْلِسُ يَرْقُبُ الشَّمْسَ حَتَّى إِذَا كَانَتْ بَيْنَ قَرْنَىِ الشَّيْطَانِ قَامَ فَنَقَرَهَا أَرْبَعًا لاَ يَذْكُرُ اللَّهَ فِيهَا إِلاَّ قَلِيلاً ) "இதுதான் நயவஞ்சகனின் தொழுகையாகும். அவன் சூரியனை எதிர்பார்த்துக்கொண்டு அமர்ந்திருப்பான். சூரியன் (சரியாக) ஷைத்தானின் இரு கொம்புகளுக்கிடையே (உதயமாகி அல்லது மறைந்து) வரும் போது அவன் (அவசர அவசரமாகக் கோழி கொத்துவதைப் போன்று) நான்கு கொத்துகள் கொத்துவான். அவன் அதில் மிகக் குறைவாகவே இறைவனை நினைவு கூறுவான்" என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியுற்றுள்ளேன்” என்றார்கள். நூல்:- முஸ்லிம்-1097

 

தொழுகையை அதற்குரிய நேரத்தில் தொழாமல் தாமதப்படுத்துவதையும்நிதானமின்றி அவசர அவசரமாகத் தொழுது முடிப்பதையும் நயவஞ்சகத்தனம் என்பதாக இந்த நபிமொழி கண்டிக்கிறது. ஆகவேஎப்போதாவது இவ்வாறு தொழுதால் பரவாயில்லை. (உ.தா ஒருவர் அயர்ந்து தூங்கிவிட்டார். அவர் திடீரென சூரிய உதயத்திற்கு சற்று நேரத்திற்கு முன்பு தான் விழித்தார். சூரிய உதயத்திற்கு முன் ஃப்ஜ்ரு தொழுதாக வேண்டும் என்பதற்காக அவர் தொழுகையில் அவசரம் காட்டலாம்.) எப்போதும் இவ்வாறே தொழுதால் தான் அது நயவஞ்சகத்தனம் என்பதாக விளங்க வேண்டும்.

 

அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. ஒருவர் சோம்பல் பட்டுக்கொண்டே தொழுகைக்காக எழுந்து நிற்பது வெறுக்கத்தக்கதாகும். மாறாகமுகமலர்ச்சியுடனும் ஆர்வத்துடனும் பேரானந்தத்துடனும் தொழுகைக்காக நிற்க வேண்டும். ஏனெனில்தொழுபவர் அல்லாஹ்வுடன் உரையாடுகிறார். அவருக்கு முன்னால் அல்லாஹ் இருக்கின்றான். அவரை மன்னிக்கின்றான். அவர் அவனிடம் பிரார்த்தனை புரிந்தால் அதற்குப் பதிலளிக்கின்றான். இவ்வாறு குறிப்பிட்ட அன்னார் அதைத் தொடர்ந்து மேற்காணும் வசனத்தை ஓதினார்கள். நூல்:- தஃப்சீர் இப்னு கஸீர்

 

தொழுகையில் என்ன ஓதுகிறோம் அல்லது என்ன ஓதப்படுகிறது என்று கவனிக்காமல் மன ஓர்மையின்றி அலட்சியமாக தொழுவதை வழமையாக்கிக் கொள்வதும் நயவஞ்சகத்தன்மையை உண்டாக்கிவிடக்கூடும்.

 

நபியவர்களது காலத்தில் வாழ்ந்த நயவஞ்சகர்கள் உடற்பலம்பணப்பலம்குழந்தை மற்றும் ஏனைய செல்வங்கள் வழங்கப்பட்டிருந்த போதிலும் அவர்கள் உலக சுகத்தில் தமது காலத்தை கழித்ததுடன் அல்லாஹ்வைப்பற்றி எந்த சிந்தனையும் இல்லாதவர்களாக வாழ்ந்தனர்.

 

தீய பேச்சாளன்

 

தங்கள் மனதில் இல்லாதவைகளையே அவர்கள் தங்கள் வாயால் கூறினார்கள். திருக்குர்ஆன்:- 3:167

 

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( إِنَّمَا أَخَافُ عَلَى هَذِهِ الْأُمَّةِ كُلَّ مُنَافِقٍ، يَتَكَلَّمُ بِالْحِكْمَةِ، وَيَعْمَلُ بِالْجَوْرِ ) இந்தச் சமுதாயத்தினர் விஷயத்தில் நான் அஞ்சுவதெல்லாம் இத்தகைய நயவஞ்சகன் குறித்துதான்: அவன் பேசும்போது தத்துவமாகப் பேசுவான். ஆனால்அநீதியான செயல்களைச் செய்வான். அறிவிப்பாளர்:- உமர் (ரலி) அவர்கள் நூல்:- முஸ்னது அஹ்மத்பைஹகீமிஷ்காத் பாபு ரியாஉ

 

சிலர் எதற்கெடுத்தாலும் "இஸ்லாம்! இஸ்லாம்!" என்றும் முழங்குவார்கள். ஆனால்செயல்படக்கூடிய நிலை வரும்போது இஸ்லாத்தின் வரம்புகளை அதிகமாக மீறுபவர்கள் இவர்களைவிட வேறு யாரும் இருக்க மாட்டார்கள்.

 

இதைத்தான் கிராமத்து சொல் வழக்கில் "சொல்லு சுல்தான் செயல் ஷைத்தான்" என்று சொல்லப்படும்.

 

புகழை விரும்புவார்கள்

 

தாம் செய்த (தீய)வற்றைக் குறித்து மகிழ்ந்துகொண்டும்தாம் செய்யாத (நல்ல)வற்றுக்காகப் பாராட்டப்பட வேண்டும் என்றும் விரும்பிகொண்டும் இருப்போர் வேதனையிலிருந்து தப்பித்தவர்கள் என்று (நபியே!) நீர் எண்ணவேண்டாம். வதைக்கும் வேதனைதான் அவர்களுக்கு உண்டு. திருக்குர்ஆன்:- 3:188

 

அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது. அருமை நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் நயவஞ்சகர்கள் சிலர்நபியவர்கள் அறப்போருக்குப் புறப்பட்டுச் சென்றால்அவர்களுடன் செல்லாமல் ஊரிலேயே தங்கிவிடுவார்கள். (அவ்வாறு) நபியவர்களுடன் செல்லாமல் தாம் தங்கிவிட்டதைப்பற்றி மகிழ்ச்சியும் அடைவார்கள். நபியவர்கள் (போரிலிருந்து) திரும்பி வரும்போது அவர்களிடம் (போய்தாம் கலந்து கொள்ளாமல் போனதற்குப் பொய்யான) சாக்குப்போக்குகளைக் கூறி (பொய்ச்) சத்தியம் செய்வார்கள். தாம் செய்யாத (நற்)செயல்களுக்காகத் தாம் புகழப்பட வேண்டுமென்றும் விரும்புவார்கள்.  இவர்கள் குறித்து தான் மேற்காணும் அருளப்பெற்றது. நூல்:- புகாரீ-4567

 

நபிமொழிகளை மறுப்பது

 

அபூசயீத் அலஹிம்யரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது. நபித்தோழர் முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தோழர்கள் செவியுறாத பல நபிமொழிகளை அறிவித்துக் கொண்டும் அவர்கள் செவியுற்று பலவற்றை அறிவிக்காமல் இருந்து வந்தார்கள்.

 

முஆத் (ரலி) அவர்கள் அறிவித்த ஒரு நபிமொழி நபித்தோழர் அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்களுக்கு எட்டியது. அப்போது அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள், ( وَاللَّهِ مَا سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ هَذَا وَأَوْشَكَ مُعَاذٌ أَنْ يَفْتِنَكُمْ فِي الْخَلاَءِ )  "அல்லாஹ்வின் மீதாணையாக! நபியவர்கள் (இவ்வாறு கூறியதை) நான் செவியுறவில்லை. மலம் ஜலம் கழித்தல் தொடர்பான இந்த விஷயத்தில் முஆத் உங்கள் மத்தியில் குழப்பம் விளைவிக்கப் பார்க்கிறார்" என்று கூறினார்கள். அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் இவ்வாறு கூறிய செய்தி முஆத் (ரலி) அவர்களை அடைந்தது.

 

ஆகவேமுஆத் (ரலி) அவர்கள் அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்களை சந்தித்து, ( يَا عَبْدَ اللَّهِ بْنَ عَمْرٍو إِنَّ التَّكْذِيبَ بِحَدِيثٍ عَنْ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ نِفَاقٌ وَإِنَّمَا إِثْمُهُ عَلَى مَنْ قَالَهُ ) "அப்துல்லாஹ்! நபியவர்களிடமிருந்து அறிவிக்கப்பட்ட நபிமொழியை பொய்யெனக் கூறுவது நயவஞ்சகமாகும். அதற்குரிய பாவம் அவ்வாறு (பொய்) சொன்னவரையே சாரும்” என்று கூறினார்கள். நூல்:-  இப்னுமாஜா-323

 

இந்த நபிமொழியை இதுவரை நான் கேள்விப்பட்டதில்லை. இந்த நபிமொழி குர்ஆனோடு முரண்படுகிறது. அல்லது என்னுடைய அறிவுக்கு ஒத்துப்போகவில்லை. அறிவியலுக்கு மாற்றமாக இருக்கிறது என்றெல்லாம் கூறி நபிமொழிகளை மறுத்துரைக்கும் பழக்கம் நயவஞ்சகத்தன்மையை உண்டாக்கும் என்பதை மேற்காணும் நபிமொழி தெளிவுப்படுத்துகிறது.

 

உலக அறிவு மற்றும் மார்க்க அறிவை முழுமையாக கற்றிந்தவர்கள் யாருமில்லை. "நபிமொழிகள் அனைத்தையும் நான் அறிவேன்" என்று  சொல்பவர் யாராவது உண்டாஅவ்வாறு சொல்லத்தான் முடியுமாநான் இதுவரை இந்த நபிமொழியை கேட்டதில்லை. படித்ததில்லை. எனவேஇதை இதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று கூறுவது அறிவார்ந்த செயலாகாது.

 

(ஸஹீஹ் எனும்) ஆதாரப்பூர்வமான  நபிமொழிகளையும்,  பல அறிவிப்பாளர்கள் மூலம் அறிவிக்கப்பட்டுபல நூல்களில் பதிவுசெய்யப்பட்டுள்ள (ளயீஃப் எனும்) பலவீனமான நபிமொழிகளையெல்லாம் "இது நபிமொழியே அல்ல" என்று மறுத்துரைப்பது தவறாகும்.

 

(பலவீனமான ஒரு நபிமொழிபல அறிவிப்பாளர்கள் மூலம் வரும்போது அதுபலமான நபிமொழியைப் போன்று ஆகிவிடும் என்பதே நபிமொழித்துறை நிபுணர்களின் முடிவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.)

 

அறப்போராட்டங்கள்

 

பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَنْ مَاتَ وَلَمْ يَغْزُ وَلَمْ يُحَدِّثْ بِهِ نَفْسَهُ مَاتَ عَلَى شُعْبَةٍ مِنْ نِفَاقٍ ) அறப்போரில் கலந்துகொள்ளாமலும் அது குறித்து மனதில் எந்தவிதமான ஆசையும் இல்லாமல் இறந்து போனவர் நயவஞ்சகத்தின் ஓர் அம்சத்திலேயே இறந்துபோகிறார். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- முஸ்லிம்-3871

 

இஸ்லாத்தின் ஆரம்ப காலத்துக்கு மட்டுமே இது பொருந்தும். இஸ்லாமிய வளர்ச்சி அடைந்துவிட்ட காலத்துக்கு இது பொருந்தாது என்பது அப்துல்லாஹ் பின் முபாரக் (ரஹ்) அவர்களின் கருத்தாகும். ஆனால்எல்லாக் காலத்துக்கும் இது பொருந்தும் என்று கூறுவோரும் உள்ளனர். நயவஞ்சகர்கள்தாம் அறப்போரில் கலந்து கொள்ளாமல் பின்வாங்குவர். எனவேஇது நயவஞ்சர்களின் குணங்களில் ஒன்றாகும். நூல்:-  அல்மின்ஹாஜ்

 

இஸ்லாமிய வளர்ச்சிக்காக அல்லது இஸ்லாம் வழங்கிய உரிமைகளை பாதுகாக்க மக்களெல்லாம் போராடிக் கொண்டிருக்கஒருவன் மட்டும் அல்லது ஓரிரு பேர் மட்டும் இந்த அறப்போராட்டங்களில் கலந்து கொள்ளாமல்அதாவது இந்த அறப்போராட்டங்களில் கலந்து கொண்டால் பொருளாதாரப் பாதிப்பு ஏற்படலாம்அல்லது உயிர் இழப்பு ஏற்படலாம்அல்லது ஆட்சியாளர்களிடம் தமக்கு கெட்டப் பெயர் ஏற்படலாம் என்றெண்ணி இது போன்ற அறப்போராட்டங்களில் கலந்துகொள்ளாமல் ஒதுங்கி கொள்பவருக்கும் இந்த நபிமொழி பொருந்தும் என்றே தோன்றுகிறது.

 

இரு குணங்களும் இணையாது

 

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( خَصْلَتَانِ لاَ تَجْتَمِعَانِ فِي مُنَافِقٍ حُسْنُ سَمْتٍ وَلاَ فِقْهٌ فِي الدِّينِ ) இரு குணங்கள் ஒரு நயவஞ்சகனிடம் ஒரு சேர  அமைந்திருக்காது.  (அவை:) 1. நன்னடத்தை 2. மார்க்க கல்வி. நூல்:- திர்மிதீ-2605

 

நயவஞ்சகம் எத்தகைய துன்பத்திற்குரியதெனில் அதற்கு ஆளாகிறவர்களுக்கு நற்குணம் மற்றும் இறைநெறியின் மூலம் நல்லறிவு பெறுதல் ஆகிய அருட்கொடைகள் வழங்கப்படமாட்டாது.

 

மார்க்கக் (கல்வியை) விளக்கங்களை உள்ளத்தில் தக்கவைத்துப் பிறருக்குப் போதித்துதன்னையும் (அமல் செய்ய தூண்டும்) செயலாற்ற வைக்கும் அல்லாஹ்வின் மீதுண்டான அச்சத்தை நிரந்தரமாக தரும் உன்னத நிலைக்கு மார்க்கத்தில் விளக்கம் (மார்க்கக் கல்வி) பெறுதல் என்று பொருளாகும்.

 

தாம் கற்ற மார்க்கக் கல்வியை பிறருக்குப் போதிப்பதால் மட்டும் தமக்கு கண்ணியம் கிடைத்துவிடும் என்ற எண்ணம் மார்க்கத்தில் உயர்வு பெறுவதை தடுத்துவிடும். மார்க்க கல்வி என்பது உள்ளத்தை அல்லாஹ்வின் அச்சத்தால் நிரப்ப வேண்டும். நாவோடு நிறுத்திக்கொள்ளக் கூடாது. அல்லாஹ்வின் அச்சத்தை ஏற்படுத்துவதுதான் மார்க்கக் கல்வியாகும் இதுவே இந்த நபிமொழியின் கருத்து.

 

விடுதலை பெற்றவர்

 

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَنْ صَلَّى لِلَّهِ أَرْبَعِينَ يَوْمًا فِي جَمَاعَةٍ يُدْرِكُ التَّكْبِيرَةَ الأُولَى كُتِبَتْ لَهُ بَرَاءَتَانِ بَرَاءَةٌ مِنَ النَّارِ وَبَرَاءَةٌ مِنَ النِّفَاقِ ) யார் அல்லாஹ்வுக்காக  கூட்டுத் தொழுகையில் ஆரம்பத் தக்பீரிலேயே சேர்ந்து நாற்பது நாள்கள் தொழுகிறாரோ அவருக்கு இரண்டு விடுதலைகள் எழுதப்படுகின்றன. 1) நரக விடுதலை 2)  நயவஞ்சகத்திலிருந்து விடுதலை. அறிவிப்பாளர்:- அனஸ் (ரலி) அவர்கள் நூல்:- திர்மிதீ-224

 

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَنْ صَلَّى فِي مَسْجِدِيْ أَرْبَعِينَ صَلَاةً لَا تَفُوتُهُ صَلَاةٌ، كُتِبَتْ لَهُ بَرَاءَةٌ مِنَ النَّارِ، وَبَرَاءَةٌ مِنَ الْعَذَابِ، وَبَرَاءَةٌ مِنَ النِّفَاقِ ) ஒருவர் என்னுடைய பள்ளிவாசலில் (மஸ்ஜிதுந் நபவியில்) ஒரு வேளை தொழுகைக்கூட தவறாமல் தொடர்ந்து நாற்பது வேளை தொழுகைகளை (பேணுதலுடன்) தொழுவாரோ அவருக்கு நரக வேதனையைவிட்டு விடுதலை பெற்றவர் என்று எழுதப்படுவதுடன் அவர் (நிஃபாக் எனும்) நயவஞ்சகத் தன்மையை விட்டும் நீங்கியவராகி விடுவார். அறிவிப்பாளர்:- அனஸ் (ரலி) அவர்கள்     நூல்:- முஸ்னது அஹ்மத்அத்தர்ஙீபு வத்தர்ஹுபுஇர்ஷாதுஸ் ஸாரீ

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். யார் என் மீது ஒருமுறை சலவாத்து ஓதுகிறாரோ அவருக்கு அல்லாஹ் பத்து மடங்கு அருள்புரிகிறான். அவர் என் மீது பத்துமுறை சலவாத்து ஓதினால் அல்லாஹ் அவர் மீது நூறு மடங்கு அருள்புரிகிறான். அவர் என் மீது நூறுமுறை சலவாத்து ஓதினால் அவரின் நெற்றியில் நயவஞ்கத்திலிருந்தும்நரகத்திலிருந்தும் பாதுகாக்கப்பட்டவர் என்ற வாசகத்தை எழுதிமறுமையில் உயிர்த் தியாகிகளுடன் அவரை அல்லாஹ் தங்க வைப்பான்.  நூல்:- தப்ரானீ

 

பிரபல திருக்குர்ஆன் விரிவுரையாளர் ளஹ்ஹாக் பின் முஸாஹிம் (ரஹ்) அவர்கள், ( بَلَغَنِي أنَّ التَّضَلُّعَ مِن ماءِ زَمْزَمَ بَراءَةٌ مِنِ النِّفاقِ ) "ஸம்ஸம் தண்ணீரை வயிறு நிரம்ப பருகுவதன் மூலம் நயவஞ்சகத்திலிருந்து விடுதலை பெறலாம்" என்ற செய்தி தமக்கு கிடைத்ததாகக் கூறுகிறார்கள். நூல்:- தஃப்சீர் துர்ருல் மன்ஸூர் அத்தவ்பா வசனம்-19

 

பிரார்த்திப்பது

 

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ( اَللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الشِّقَاقِ وَالنِّفَاقِ وَسُوءِ الأَخْلاَقِ ) "இறைவா! பகைமையிலிருந்தும் நயவஞ்சகத்திலிருந்தும் தீய குணங்களிலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்" என்று பிரார்த்தனை செய்பவர்களாக இருந்தார்கள். நூல்:- அபூதாவூத்-1322, நஸாயீ-5376

 

உம்மு மஅபத் ( ரலி) அவர்கள் கூறியதாவது. பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள், ( اللَّهُمَّ طَهِّرْ قَلْبِي مِنَ النِّفَاقِ ، وَعَمَلِي مِنَ الرِّيَاءِ ، وَلِسَانِي مِنَ الْكَذِبِ ، وَعَيْنِي مِنَ الْخِيَانَةِ ، فَإِنَّكَ تَعْلَمُ خَائِنَةَ الأَعْيُنِ وَمَا تُخْفِي الصُّدُورُ ) "இறைவா! என் உள்ளத்தை நயவஞ்சகத்திலிருந்தும் என் செயலை முகஸ்துதியிலிருந்தும் என் நாவை பொய்யிலிருந்தும் என் பார்வையை மோசடியிலிருந்தும் தூய்மைப்படுத்துவாயாக! நிச்சயமாக நீ பார்வையின் மோசடியையும் இதயங்களின் இரகசியங்களையும் அறிகின்றாய்" என்று பிரார்த்தித்தை நான் செவியுற்றுள்ளேன். நூல்:- பைஹகீமிஷ்காத் பாபு ஜாமிஉத் துஆ

 

தாபியீன்களில் ஒருவரான ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். நான் ஒரு முறை நபித்தோழர் அபூதர்தா (ரலி) அவர்களிடம் சென்றிருந்தேன். அப்போது அவர்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்தார்கள். தொழுகை முடிந்தவுடன் தங்களுடைய பிரார்த்தனையில் நயவஞ்சகத்திலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடினார்கள். அப்போது நான் அவர்களிடம் நயவஞ்சகத்திலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கான அவசியம் உங்களுக்கு என்ன வந்தது?” என்று வினவினேன்.

 

அப்போது அபூதர்தா (ரலி) அவர்கள் சோதனையிலிருந்து யார் தான் அச்சமற்று இருக்க முடியும்சோதனையிலிருந்து யார் தான் அச்சமற்று இருக்க முடியும்என்று கூறிவிட்டுஅல்லாஹ்வின் மீது ஆணையாக! ஒரு மனிதன் திடீரென ஒரு நேரத்தில் சோதிக்கப்படுகிறான்ஆனால் அந்த சோதனையால் அவன் மார்க்கத்தை விட்டே வழி தவறிவிடுகிறான் என்று பதிலளித்தார்கள்.

 

நபித்தோழர்களில் சிலர்  "இறைவா! நயவஞ்சகத்தனமாக பணிவதை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்" பிரார்த்தனை செய்வார்கள்.

 

மாமேதை இமாம் ஹசன் அல்பஸ்ரி (ரஹ்) அவர்களிடம், "நயவஞ்சகமாக பணிவது என்றால் என்னஎன்று கேட்கப்பட்டது. இமாமவர்களிடம், "உடல் இறைவனுக்குப் பணிந்து உள்ளம் பணியாத நிலைதான் அது" என்று பதிலளித்தார்கள். நூல்:- மதாரிஜுஸ்ஸாலிகீன் 3/358, ஃபிக்ஹுல் அவ்லவிய்யாத் யூசுஃப் அல்கர்ளாவீ

 

நன்றியுடன் தியானித்தல்

 

நன்றியுடன் அல்லாஹ்வை (திக்ர் எனும்) நினைவுகூர்வதுஉள்ளத்தை நயவஞ்சகத்திலிருந்து பாதுகாக்கும். அதனால் தான்நயவஞ்சகர்கள் குறித்து அல்லாஹ் கூறும்போது,

 

"இன்னும்மிகச் சொற்ப அளவேயன்றி அவர்கள் (நயவஞ்சகர்கள்) அல்லாஹ்வை நினைவு கூர்வதில்லை." (திருக்குர்ஆன்:- 4:142) என்றும்,  இறைநம்பிக்கையாளர்கள் குறித்து, "இறைநம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வை அதிகமதிகமான (தொழுகைதிக்ரு தஸ்பீஹ் போன்றவற்றின் மூலம்) நினைவு கூறுங்கள்." (திருக்குர்ஆன்:- 33:41) என்றும் கூறியுள்ளான்.

 

கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَنْ أَكْثَرَ ذِكْرَ اللهِ فَقَدْ بَرِئئَ مِنَ النِّفَاقِ ) எவர் அல்லாஹ்வை அதிகமாக(த் திக்ர் தஸ்பீஹ் மூலம்) நினைவுகொள்கிறாரோ அவர் நயவஞ்சகத் தன்மையை விட்டும் நீங்கிவிட்டார். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- தப்ரானீஜாமிஉஸ்ஸஙீர்

 

அச்சநிலை

 

ஹன்ழலா பின் அர்ரபீஆ அல்உசைதீ (ரலி) அவர்கள் கூறியதாவது. (ஒரு நாள்) அபூபக்ர் (ரலி) அவர்கள் என்னைச் சந்தித்து ( كَيْفَ أَنْتَ يَا حَنْظَلَةُ ) "ஹன்ழலா! எப்படி இருக்கிறீர்கள்என்று கேட்டார்கள். நான், ( نَافَقَ حَنْظَلَةُ ) "ஹன்ழலா நயவஞ்சகன் ஆகிவிட்டான்" என்று சொன்னேன். அதற்கு, "அல்லாஹ் தூயவன்என்ன சொல்கிறீர்கள்?" என்று கேட்டார்கள். அதற்கு நான், ( نَكُونُ عِنْدَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم يُذَكِّرُنَا بِالنَّارِ وَالْجَنَّةِ حَتَّى كَأَنَّا رَأْىَ عَيْنٍ فَإِذَا خَرَجْنَا مِنْ عِنْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم عَافَسْنَا الأَزْوَاجَ وَالأَوْلاَدَ وَالضَّيْعَاتِ فَنَسِينَا كَثِيرًا ) "நாம் அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்கருகில் இருக்கும்போது அவர்கள் சொர்க்கம்நரகம் ஆகியவற்றைப் பற்றி நாம் நேரடியாகப் பார்ப்பது போன்று நினைவூட்டுகிறார்கள். அவர்களிடமிருந்து நாம் புறப்பட்டு (வீட்டுக்கு) வந்ததும் மனைவி மக்களுடன் கலந்துறவாடுகிறோம்பிழைப்புகளில் ஈடுபட்டு விடுகிறோம். (அண்ணலார் சொன்னவற்றில்) அதிகமானவற்றை மறந்து விடுகிறோம்" என்று கூறினேன்.

 

அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் மீதாணையாக! இதே நிலையை நாமும் சந்திக்கிறோம்" என்று கூறினார்கள். பிறகு நானும் அபூபக்ர் (ரலி) அவர்களும் அண்ணலாரிடம் சென்றோம்.

 

நான், "நாயகமே! ஹன்ழலா நயவஞ்சகனாகிவிட்டான்" என்று கூறினேன். அதற்கு அண்ணலார், ( وَمَا ذَاكَ ) "என்ன ஆனது?" என்று கேட்டார்கள். அதற்கு நான், "நாயகமே! நாங்கள் உங்கள் அருகிலிருக்கும்போது தாங்கள் எங்களுக்கு நரகத்தையும் சொர்க்கத்தையும் நாங்கள் நேரடியாக பார்ப்பதைப் போன்று நினைவூட்டுகிறீர்கள். நாங்கள் உங்களிடமிருந்து புறப்பட்டுச் சென்றதும்  மனைவி மக்களுடன் கலந்துறவாடுகிறோம். பிழைப்புகளில் ஈடுபட்டு விடுகிறோம். அதிகமானவற்றை மறந்து விடுகிறோம்" என்று சொன்னேன்.

 

அதற்கு அண்ணலார், ( وَالَّذِي نَفْسِي بِيَدِهِ إِنْ لَوْ تَدُومُونَ عَلَى مَا تَكُونُونَ عِنْدِي وَفِي الذِّكْرِ لَصَافَحَتْكُمُ الْمَلاَئِكَةُ عَلَى فُرُشِكُمْ وَفِي طُرُقِكُمْ وَلَكِنْ يَا حَنْظَلَةُ سَاعَةً وَسَاعَةً ‏ ) "அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் என்னிடம் இருக்கும் போதுள்ள நிலையிலும் எண்ணத்திலும் எப்போதும் இருந்தால் உங்கள் படுகைகளிலும் நீங்கள் செல்லும் வழிகளிலும் வானவர்கள் வந்து உங்களுடன் கைகுலுக்கியிருப்பார்கள். மாறாகஹன்ழலா! (இப்படிச்) சில நேரம் (அப்படிச்) சில நேரம்" என்று மூன்று முறை கூறினார்கள். நூல்:- முஸ்லிம்-5305, திர்மிதீ-2438

 

ஜனாதிபதி உமர் (ரலி) அவர்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் இரகசிய காப்பாளரான ஹுதைபா (ரலி) அவர்களிடம், "அண்ணல் நபி (ஸல்) அவர்கள் உம்மிடம் கூறியுள்ள நயவஞ்சகர்களின் பட்டியலில் என் பெயர் உள்ளதாஎன்று கேட்டார்கள். நூல்:- ஃபிக்ஹுல் அவ்லவிய்யாத் யூசுஃப் அல்கர்ளாவீ

 

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து,  إِنِّي أَخَافُ أَنْ أَكُونَ مُنَافِقًا "நான் நயவஞ்சகனாக ஆகிவிடுவேனோ என்று பயப்படுகிறேன்" என்று கூறினார். அதற்கு அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள், ( لَوْ كُنْتَ مُنَافِقًا مَا خِفْتَ ذَلِكَ ) "நீ நயவஞ்சகனாக இருந்திருந்தால் அதைப்பற்றி பயந்திருக்கவே மாட்டாய். (எனவேநீ நயவஞ்சகன் அல்லர்.)" என்று கூறினார்கள். நூல்:-  ஹில்யத்துல் அவ்லியா 4/251


இப்னு அபீமுலைக்கா (அப்துல்லாஹ் பின் உபைதில்லாஹ்-ரஹ்) அவர்கள் கூறினார்கள். ( أَدْرَكْتُ ثَلَاثِينَ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كُلُّهُمْ يَخَافُ النِّفَاقَ عَلَى نَفْسِهِ مَا مِنْهُمْ أَحَدٌ يَقُولُ إِنَّهُ عَلَى إِيمَانِ جِبْرِيلَ وَمِيكَائِيلَ ) நான் நபித்தோழர்களில் முப்பது பேரைச் சந்தித்திருக்கிறேன். அவர்கள் ஒவ்வொருவரும் தமக்குள் நயவஞ்சகத்தனம் ஏற்பட்டுவிடுமோ என்று அஞ்சுபவர்களாகவே இருந்தனர். அவர்களில் யாரும் தமக்கு (வானவர்களான) ஜிப்ரீல்மீக்காயீல் (அலை) ஆகியோரின் இறைநம்பிக்கை இருப்பதாக சொல்லிக்கொண்டதில்லை. நூல்:- புகாரீ இறைநம்பிக்கை பாடம் -36

 

ஹசன் அல்பஸரீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள். ( مَا خَافَهُ إِلَّا مُؤْمِنٌ وَلَا أَمِنَهُ إِلَّا مُنَافِقٌ ) “இறைநம்பிக்கையாளரைத் தவிர வேறெவரும் நயவஞ்சகத்தனத்தை அஞ்சுவதில்லை. நயவஞ்சகனைத் தவிர வேறெவரும் அது விஷயத்தில் அச்சமற்று (அலட்சியமாக) இருப்பதில்லை. நூல்:- புகாரீ இறைநம்பிக்கை பாடம் -36


ஹன்ழலா (ரலி) அவர்கள் அதீத கவனம் செலுத்தக்கூடிய (சீரியஸான) ஒரு மனிதர். அதன் காரணமாக தமது நிலை பற்றி அவர் தீவிரமாகச் சிந்தித்தார். நபியவர்களுடன் இருக்கின்ற நேரத்தில் நல்லதோர் ஆன்மீக நிலையில் தாம் இருப்பதாகவும் நபியவர்களைவிட்டும் பிரிந்த பிறகு மனைவி மக்களோடு இருக்கின்ற நேரத்தில் அந்த ஆன்மீக நிலை இல்லாமல் போவதையும் உணர்ந்தார். இது ஒரு நயவஞ்சகம் என அவர் கருதினார். எனவேநபியவர்களிடம் இதை முறையிடவும் செய்தார். அதற்கு நபியவர்கள், "ஆம்! மனித உள்ளத்துக்கு அதீத கவனமும் (சீரியஸ்னஸ்) தேவைப்படுகிறது. மனைவிமக்களோடு உல்லாசமும் தேவைப்படுகிறது" என்பதை சுட்டிக் காட்டினார்கள்.

 

அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அவையில் நபித்தோழர்கள் இருக்கும் வரைஅல்லாஹ்வைப் பற்றிய சிந்தனையிலும் மறுமை பற்றிய ஆர்வத்திலும் மூழ்கிப் போய்விடுவார்கள். ஆனால்அங்கிருந்து வெளியேறி வீடுகளுக்கும் கடைகளுக்கும் சென்றுவிட்டால்இந்த சிந்தனைகள் மறைந்துபோய் மனைவி மக்களுடன் உறவாடுவதும் தொழிலைக் கவனிப்பதுமாக இருப்பார்கள். இவ்வாறு அங்கொரு நிலையிலும் இங்கொரு நிலையிலும் இருப்பதுஒரு நயவஞ்சகத்தனம் என்று ஹன்ழலா (ரலி) அவர்கள் எண்ணிவிட்டார்கள்.

 

அண்ணலாரிடம் இதைப் பற்றிக் கூறும்போதுஇது நயவஞ்சகம் ஆகாது என்று விளக்கினார்கள். 24 மணி நேரமும் இறை சிந்தனையிலேயே இருக்கவேண்டும் என்ற கட்டாயமில்லை என்றும் மறுமைக்கென சிறிது நேரம்இம்மைக்கென என சிறிது நேரம் என்று வாழ வேண்டும் என்றும் அண்ணலார் விவரித்தார்கள். இதுதான் நடைமுறைக்கு ஏற்ற வாழ்க்கை முறையாகும். எனவேதான்இஸ்லாம் பின்பற்றுவதற்கு ஏற்ற எளிய மார்க்கம் என்கிறோம்.

 

மாமேதை இமாம் ஹசன் அல்பஸ்ரி (ரஹ்) அவர்கள் கூறினார்கள். இறைநம்பிக்கையாளர் நயவஞ்சக குணங்கள் தம்மிடம் இருக்குமோ என்று அஞ்சுவார். ஆனால்நயவஞ்சகன் அவை தம்மிடம் இருக்கவே இருக்காது என்று தைரியமாக இருப்பான். நூல்:- மதாரிஜுஸ்ஸாலிகீன் 3/358, ஃபிக்ஹுல் அவ்லவிய்யாத் யூசுஃப் அல்கர்ளாவீ

 

சுயப்பரிசோதனை

 

நபித்தோழர் ஹுதைபா (ரலி) அவர்களிடம் ஒருவர் வந்து, ( هَلْ أَنَا مِنَ الْمُنَافِقِينَ؟ ) "நான் நயவஞ்சகர்களில் ஒருவனாக இருப்பேனா?" என்று கேட்டார். ஹுதைபா (ரலி) அவர்கள், ( هَلْ تُصَلِّي إِذَا خَلَوْتَ وَتَسْتَغْفِرُ إِذَا أَذْنَبْتَ؟ ) "நீர் தனிமையில் அல்லாஹ்வை தொழுகிறீராபாவம் செய்தால்அதற்குரிய (தவ்பா எனும்) மன்னிப்பு கோருகிறீரா?" என்று கேட்டார்கள். அம்மனிதர் ஆம்” என்றார். ஹுதைபா (ரலி) அவர்கள், ( اذْهَبْ فَمَا جَعَلَكَ اللَّهُ مُنَافِقًا )  “(அப்படியானால்) நீர் போகலாம். அல்லாஹ் உம்மை நயவஞ்சகனாக ஆக்கமாட்டான்" என்றார்கள்

 

நயவஞ்சகர்கள் தங்களை முஸ்லிம்கள் எனக் காட்டிக் கொள்வதற்காக மற்ற முஸ்லிம்களுடன் சேர்ந்து தொழுவார்கள்தனியே இருந்தால் தொழமாட்டார்கள். இதுவே அவர்களின் யதார்த்தம். ஒருவன் தனிமையில் தான் செய்த பாவத்தை எண்ணி வருந்திபாவமன்னிப்பு கேட்கிறான்தொழுகிறான் என்றால் அது அவனுக்கும் அல்லாஹ்விற்கும் மட்டுமே தெரியும். எனவேஅவன் நயவஞ்சகன் எனும் பட்டியலில் வரமாட்டான் என நபித்தோழர் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.

 

இன்று பள்ளிவாசலுக்குச் சென்று தொழ இயலாத நிலையில் ஒருவர் வீட்டில் தனியே அமர்ந்து தனது பாவங்களை நினைத்து வருந்தி அழுது, தொழுகையையும் நிறைவேற்றினால் அவருக்கு பள்ளிவாசலுக்குச் சென்று தொழுத நன்மை கிடைக்கும். நம்மால் மற்றவர்கள் பாதிக்கப்படக்கூடாது என்ற நல்லெண்ணத்துடன் வீட்டில் தொழுவதால் அவரின் எண்ணத்திற்கேற்ப நற்கூலி கிடைக்கும்.

 

அறிஞர் யூசுஃப் அல்கர்ளாவீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். இறைநம்பிக்கையாளருக்கும் நயவஞ்சகருக்கும் இடையிலான வேறுபாடு: இறைநம்பிக்கையாளர்நற்செயல்கள் செய்துவிட்டு, (அதன் மூலம் கர்வம் கொள்ளாமல்) "என்னிடமிருந்து அவை ஏற்கப்படாமல் போவதை அஞ்சுகிறேன்" என்பார். நயவஞ்சகன்பாவச்செயல்களில் ஈடுபட்டுவிட்டு (அது குறித்த உறுத்தல் இல்லாமல்) "எனக்கு மன்னிப்பு வழங்கப்படுவதை ஆசைப்படுகிறேன்." என்பான்.

 

நாம் நயவஞ்சகன் இல்லை என்பதை நமக்கு நாம் அறிந்துக்கொள்ள நாம் முறையாக தொழுகும் தொழுகையாளியாகவும் நிகழ்ந்துவிட்ட பாவங்களை எண்ணி முறையாக பாவமன்னிப்புக் கோருபவராகவும் ஆகவேண்டும்.


திருக்குர்ஆனில் காபிரூன் (நிராகரிப்பாளர்கள்) எனும் அத்தியாயத்தைவிட  முனாபிக்கூன் (நயவஞ்சகர்கள்) எனும் அத்தியாயம் பெரியதாக இருக்கிறது.  நிராகரிப்பாளர்களிடம் எச்சரிக்கையாக இருப்பதைவிட நயவஞ்சகர்களிடம் மிகுந்த எச்சரிக்கையாக இருங்கள் என்கிறார் ஒரு அறிஞர்.

 

அல்லாஹுத்தஆலா நம்மை நயவஞ்சகக் குணம் மற்றும் செயல்களில் இருந்து பாதுகாப்பானாக! ஆமீன்!

வெள்ளி, செப்டம்பர் 06, 2024

முஹம்மது (ஸல்)

*ரபிய்யுல் அவ்வல் வசந்தம்*

*நபிகள் நாயகம் (ஸல்..) அவர்களின்* *வாழ்க்கையிலே...!*

1.   நபி (ஸல்..) அவர்கள் பிறப்பு :
      20-04-570 திங்கட்கிழமை, 
      ரபீஉல் அவ்வல் மாதம் பிறை 12

2.   பிறந்த இடம் : 
      திரு மக்கா

3.   பெற்றோர் : 
      அப்துல்லாஹ் - அன்னை ஆமீனா

4.   பாட்டானார் : 
      அப்துல் முத்தலீப்

5.   தந்தை மரணம் : 
      நபி (ஸல்..) அவர்கள் கருவில்
      இருக்கும் போது

6.   தாயார் மரணம் : 
      நபி (ஸல்..) அவர்களின் ஆறு வயதில்

7.   பாட்டனார் மரணம் : 
      நபி (ஸல்..) அவர்களின் எட்டு வயதில்.

8.   வளர்ப்பு : 
      பாட்டனாருக்குப் பின் 
      பெரிய தந்தை அபூதாலிப்.

9.   செவிலித் தாய்மார்கள் : 
      ஹள்ரத் துவைஃபா (ரலி..) என்ற 
      அடிமைப் பெண். பின்பு 
      ஹள்ரத் ஹலிமா (ரலி..) அவர்கள்.

10. பட்டப் பெயர்கள் : 
      அல் அமீன்
      (நம்பிக்கைக்கு உரியவர்), 
      அஸ்ஸாதிக் 
      (உண்மையானவர்)
11. முதல் வணிகம் : 
       அன்னை கதீஜா (ரலி..)
      அவர்களின் வணிகக் குழுவில் 
      சேர்ந்து சிரியா தேசம் பயணம்.

12. முதல் திருமணம் :
       அன்னை கதீஜா (ரலி..) அவர்களுடன்.

13. மஹர் தொகை : 
      500 திர்ஹம்கள்.

14. திருமணத்தை நடத்தி வைத்தவர் :
       அபூதாலிப் அவர்கள்.

15. நபி (ஸல்..) அவர்கள் மனைவியர் :
      அன்னை கதீஜா (ரலி..), 
      அன்னை ஸவ்தா (ரலி..), 
      அன்னை ஆயிஷா (ரலி..), 
      அன்னை ஹஃப்ஸா (ரலி..), 
      அன்னை ஜைனப் பின்த் குஜாமா
      (ரலி...),
      அன்னை உம்முஸல்மா (ரலி..), 
      அன்னை ஜைனப் பின்த் ஜஹ்ஷ்
      (ரலி..),
      அன்னை ஜுவைரிய்யா (ரலி..), 
      அன்னை உம்மு ஹபீபா (ரலி..), 
      அன்னை ஸஃபிய்யா (ரலி..), 
      அன்னை மைமூனா (ரலி..), 
      அன்னை மரியத்துல் கிப்தியா (ரலி..)

16. ஆண் மக்கள் : 
      காஸிம் (ரலி..)
      அப்துல்லாஹ் (ரலி..), 
      இப்றாஹீம் (ரலி..) 
      இவர்கள் குழந்தைப் பருவத்திலேயே
      மௌத்தாகி விட்டார்கள்.

17. பெண் மக்கள் : 
       ஜைனப் (ரலி..),  
       ருகையா (ரலி...), 
       உம்முகுல்தூம் (ரலி..), 
       ஃபாத்திமா (ரலி..)

18. பேரர்கள் : உமாமா (ரலி..),
      முஹ்சின் (ரலி..), 
      ஹசன் (ரலி..) 
      ஹுசைன் (ரலி..)

19. ஊழியர்கள் : 
      பிலால் (ரலி..), 
      அனஸ் (ரலி...), 
      உம்மு அய்மன் 
      மாரியா (ரலி..)

20. அடிமை :
       ஜைதிப்னு ஹாரிதா (ரலி..)

21. பெருமானார் (ஸல்..) அவர்களின்
       தகப்பனார் உடன் பிறந்தோர் : 
      மொத்தம் 12 பேர். அவர்களில்
      இஸ்லாத்தை ஏற்றவர்கள் 
      ஹள்ரத் ஹம்ஜா (ரலி..), 
      ஹள்ரத் அப்பாஸ் (ரலி..)

22. பெருமானார் (ஸல்..) அவர்களின்
       தாய் உடன் பிறந்தோர் : 
       மொத்தம் 6 பேர். அவர்களில்
       இஸ்லாத்தை ஏற்றவர்கள் 
       ஹள்ரத் அம்மாரா (ரலி..), 
       ஹள்ரத் ஆத்திகா (ரலி..), 
       ஹள்ரத் ஸஃபிய்யா (ரலி..)

23. நபிப் பட்டம் கிடைத்தது : 
       40 ஆம் வயதில் (கி.பி. 610)

24. நபிப் பட்டம் கிடைத்த இடம் : 
       ஹிரா குகை

25. முதல் வஹீ : 
       " இக்ரஃ பிஸ்மி "
       என்ற வசனம்

26. முதல் முதலாக ஈமான்
      கொண்டவர்கள் :    
       பெண்களில் - 
       ஹள்ரத் அன்னை கதீஜா (ரலி..),
       சிறுவர்களில் - ஹள்ரத் அலீ (ரலி..), 
      ஆண்களில் ஹள்ரத் அபூபக்கர் (ரலி..),
      அடிமைகளில் - ஹள்ரத் பிலால் (ரலி..)

27. முஸ்லிம்களின் முதல் ஹிஜ்ரத் :
       அபிசினியாவிற்கு, நபித்துவம் 
       5 – ஆம் ஆண்டில், 
       மன்னர் நஜ்ஜாஸி ஆட்சியில்.

28. முதல் ஹிஜ்ரத் செய்தவர்கள் : 
       நபி (ஸல்..) அவர்களின் 
       மகள் ருகையா (ரலி..), 
       மருமகன் ஹள்ரத் உஸ்மான் (ரலி..) 
       மற்றும் 
       ஆண்கள் 11 பேர், பெண்கள் 4 பேர்.

29. தாயிஃப் நகரில் தவ்ஹீத் : 
       நபித்துவ 10 – ஆம் ஆண்டில்,
      துணையாகச்  சென்றவர் 
      ஹள்ரத் ஜைது (ரலி..)

30. மக்காவில் தீன் அழைப்புப் பணி : 
      13 ஆண்டுகள்

31. மதீனாவிற்கு ஹிஜ்ரத் : 
      நபித்துவ 14 – ஆம் ஆண்டில்

32. உடன் சென்றவர் : 
       ஹள்ரத் அபூபக்கர் (ரலி..)

33. ஹிஜ்ரத்தின் போது மறைந்திருந்த
      குகை : 
      " தௌர் "

34. மதீனா சேர்ந்த நாள் : 
       ஈஸவி 25-09-622 - இல்

35. பத்ரு யுத்தம் : 
      ஹிஜ்ரி 2, ரமளான் மாதம்

36. தொழுகைக்கு பாங்கு
       அறிமுகப்படுத்தப்பட்டது : 
       ஹிஜ்ரி - 2 இல்

37. நபி (ஸல்..) அவர்கள் காலத்தில் கஃபா
      கிப்லாவாக ஆக்கப்பட்டது :
      ஹிஜ்ரி - 2 இல்

38. உஹது யுத்தம் : 
       ஹிஜ்ரி - 3 இல்

39. அகழ் யுத்தம் : 
       ஹிஜ்ரி - 5 இல்

40. ஹுதைபிய்யா உடன்படிக்கை : 
       ஹிஜ்ரி - 6 இல்

41. மது ஹராமாக்கப்பட்டது :
       ஹிஜ்ரி - 6 இல்

42. நபி (ஸல்..) அவர்களின் புனித பல்
      ஷஹிதான யுத்தம் : 
      உஹது யுத்தம்.

43. நபி (ஸல்..) அவர்களின் காலத்து
      போர்களில் சில :
      பனூ முஸ்தலிக்,
      ஹுனைன், 
      தாயிப், 
      பனூ கைனூக், 
      பனூ நஸீர், 
      பனூ குறைளா, 
      கைபர்,
      மூத்தா, 
      தபூக் யுத்தங்கள்

44. மக்கா மீது படையெடுப்பு :
       ஹிஜ்ரி - 8 இல்

45. மிஃராஜ் : 
       நபித்துவ 12 – ஆம் ஆண்டில்,
       ரஜப் பிறை 27 திங்கட் கிழமை.

46. தொழுகை கடமையாக்கப்பட்டது :
       மிஃராஜில்.

47. ஹஜ் கடமை : 
       ஹிஜ்ரி - 9 இல்

48. நபி (ஸல்..) அவர்கள் ஹஜ் செய்தது : 
       ஹிஜ்ரி – 10 இல்.

49. நபி (ஸல்..) அவர்களின் தலையிலும்
      தாடியிலும் இருந்த மொத்த
      நரை முடிகள் : 
      17

50. நபி (ஸல்..) அவர்கள் செய்த இறுதிப்
      பிரசங்கம் : 
      ஹஜ்ஜத்துல் விதாவில்.

51. இறுதி வஹி : 
       110 – ஆம் அத்தியாயம்.

52. நபி (ஸல்..) அவர்கள் உலகைப் பிரிந்த
      நாள் : 
      ஹிஜ்ரி 10,  ரபீஉல் அவ்வல் பிறை 12, 
      திங்கட்கிழமை.

53. நபி (ஸல்..) அவர்களின்
      புனித உடலை கழுவ நீர் 
      எடுக்கப்பட்ட கிணறு : 
      அரீஸ் கிணறு.

54. நீராட்டியவர்கள் : 
      ஹள்ரத் அலீ (ரலி..),
      ஹள்ரத் அப்பாஸ் (ரலி..), 
      ஹள்ரத் பழ்ல் (ரலி..), 
      ஹள்ரத் குஸீ (ரலி..), 
      ஹள்ரத் உஸாமா (ரலி..),
      ஹள்ரத் ஷக்ரான் (ரலி..), 
      உஸ் இப்னு கௌல் அன்சாரி (ரலி..)

55. ஜனாஸா தொழுகை : 
       72 முறை நடந்தது

56. கப்ரில் இறக்கியவர்கள் :  
       ஹள்ரத் அலீ (ரலி..), 
       ஹள்ரத் அப்பாஸ் (ரலி..), 
       ஹள்ரத் பழ்ல் (ரலி..), 
       ஹள்ரத் குஸீ (ரலி..)

57. நபி (ஸல்..) அவர்களை இறுதியாகக்
      கண்டவர்கள் : 
      ஹள்ரத் பழ்ல் (ரலி..), 
      ஹள்ரத் குஸீ (ரலி..)

58. வாழ்ந்த நாட்கள் : 
       சந்திரக் கணக்குப்படி
       63 வருடங்கள், 3 நாட்கள், 
       6 மணி நேரம்.  
       சூரியக் கணக்குப்படி 
       61 வருடங்கள், 49 நாட்கள், 
       6 மணி நேரம்.

59. உலகில் விட்டுச் சென்ற பொருட்கள் :
       ஒரு சீப்பு, 
       சுர்மா கூடு, 
       2 தொழுகை பாய்கள், 
       ஒரு திரிகை, 
       ஜோடி காலணி,
       போர்வை, 
       ஊன்றுகோல்,
       கேத்தல், 
       கீழ் ஆடை, 
       குர்ஆனில் சில தொகுப்புகள், 
       மிஸ்வாக், 
       ஜிப்பா, 
       மூன்று பாய்கள், 
       இரண்டு சுர்மா கோல்.

60. அண்ணலாரைப் போன்று தோற்றம்
      அளித்த சஹாபி : 
      ஹள்ரத் முஸ்அப் இப்னு உமைர் (ரலி..)

61. அண்ணலாருக்குப் பின் ஆண்ட
      கலீஃபாக்கள் : 
      ஹள்ரத் அபூபக்கர் (ரலி..), 
      ஹள்ரத் உமர் (ரலி..), 
      ஹள்ரத் உஸ்மான் (ரலி..), 
      ஹள்ரத் அலீ (ரலி..)

62. அதிக அளவில் ஹதீஸ்களை
       அறிவித்தவர்கள் : 
       ஆண் சஹாபி - 
       ஹள்ரத் அபூஹுரைரா (ரலி...), 
       பெண் சஹாபி - 
       ஹள்ரத் ஆயிஷா (ரலி..)

63. அன்னை பாத்திமா (ரலி..) மரணம் :   
       பெருமானார் (ஸல்..) 
       மறைந்த ஆறு மாதத்தில்.
 
நபி பெருமானார் (ஸல்..) அவர்களின் வாழ்க்கை முழுவதும் குர்ஆனாகவே இருந்தது...

*ஸல்லல்லாஹு அலா முஹம்மது*
*ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸஹ்பிஹி வஸல்லம்.*

(இந்த குறிப்புகளை நாமும் நமது குடும்பத்தார்களும் அதிலும் குறிப்பாக நம்முடைய குழந்தைகள் மற்ற ஏனையவர்களும் தெரிந்துக் கொண்டு நபிவழி நடக்க..... இன்ஷா அல்லாஹ் முயற்சி செய்வோம்.

வியாழன், செப்டம்பர் 05, 2024

இறை நேசம் பெறுவோம்,

  இறை நேசம் பெறுவோம்

وَكَانَ فَضْلُ اللَّهِ عَلَيْكَ عَظِيمًا

(நபியே!) உங்கள் மீது அல்லாஹ்வுடைய அருள் மகத்தானதாக இருக்கிறது. திருக்குர்ஆன்:-  4:113

 

நாம் யாரை உளமாற நேசிக்கின்றோமோ அவர் விருப்பமே நமது விருப்பமாகிவிடுகிறது. அது போன்றுதான் அல்லாஹுத்தஆலா நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை உளமாற நேசித்ததால் நபியவர்கள் விரும்பிய அனைத்தையும் நிறைவேற்றித் தந்தான்.https://whatsapp.com/channel/0029VaEGpj71NCrSak2rwR0J

குறிப்பாகஅல்லாஹுத்தஆலா திருக்குர்ஆனை அவன் விருப்பத்துடன் இறக்கியருளினாலும்நபியவர்களின் விருப்பத்திற்கிணங்க ஒரு சில மாற்றங்களுடன் இறக்கியருளினான். நபியவர்களுக்கு கண்ணியக்குறைவு ஏற்பட்டுவிடக்கூடாது என்று திருக்குர்ஆனின் வசனங்கள் மூலம் அல்லாஹ் எச்சரித்தான். நபியவர்களுக்கு கவலை ஏற்பட்டபோதெல்லாம் திருக்குர்ஆனின் வசனங்கள் மூலம் அல்லாஹ் தேற்றினான். நபியவர்களை திட்டித்தீர்த்தவர்களைதிருக்குர்ஆன் வசனங்கள் மூலம் அல்லாஹ்வும் திட்டித்தீர்த்தான்.

 

பெருமைக்காக சொல்லவில்லை  

 

அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது.  நபித்தோழர்களில் சிலர் இவ்வாறு பேசிக்கொண்டனர்: அவர்களில் ஒருவர், "மாண்பும் மகத்துவமும் நிறைந்த அல்லாஹ்இப்ராஹீமை உற்ற நண்பரை தேர்ந்தெடுத்துக்கொண்டான் என்பது வியப்பாக இருக்கிறது" என்று கூறினார். வேறொருவர், "அல்லாஹ் மூசாவுடன் உண்மையாகவே பேசிய பேச்சைவிட இது மிக வியப்பான செய்தியாக இல்லையே" என்று கூறினார். இன்னொருவர், "ஈசா அல்லாஹ்வின் கட்டளையா(ல் உருவானவரா)வார்மேலும்அவனது உயிருமாவார்" என்று கூறினார். மற்றொருவர், "அல்லாஹ்ஆதமைத் தேர்ந்தெடுத்துக்கொண்டான்" என்று கூறினார்.

 

அப்போது அங்கு வந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது தோழர்களின் பேச்சை கேட்டு விட்டுஆம்! அவர்கள் உண்மையில் அவ்விதமே இருந்தார்கள் என்று கூறிவிட்டு, ( أَلاَ وَأَنَا حَبِيبُ اللَّهِ وَلاَ فَخْرَ ) "தெரிந்து கொள்ளுங்கள். நான் அல்லாஹ்வின் நேசர் ஆவேன். (இது) தற்பெருமை அல்ல" என்று கூறினார்கள். நூல்:-  திர்மிதீ-3539, தாரிமீ

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்மேற்காணும் நபிமொழியில் தம்மை "அல்லாஹ்வின் நேசர்" என்று கூறியுள்ளார்கள்.

 

இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு "கலீலுல்லாஹ்" என்றும்மூசா (அலை) அவர்களுக்கு "கலீமுல்லாஹ்" என்றும்ஈசா (அலை) அவர்களுக்கு "ரூஹுல்லாஹ்" என்றும் செல்லப்பெயர் இருப்பதைப் போன்று, நபிகள் நாயகம் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கும் "ஹபீபுல்லாஹ்" என்று செல்லப்பெயர் உள்ளது.

 

ஹபீபுல்லாஹ் (அல்லாஹ்வின்  நேசர்) என்று செல்லப்பெயர் கொண்ட  அகில உலகத்தின் தலைவர் நபிகள் நாயகம் முஹம்மத் (ஸல்) அவர்கள் தம்மை அல்லாஹ்வின்  நண்பர் என்று ஒரு பேச்சுக்காக சொல்லவில்லை. அல்லாஹ், முஹம்மத் (ஸல்) அவர்களை எப்படி நேசித்தான் என்பதற்கு சில உதாரணங்களைப் பார்ப்போம்.

 

வஹீ வரும்போது

 

(நபியே! ஜிப்ரீல் வஹீ மூலம் ஓதிக்காண்பிக்கும் வசனங்கள் தவறிவிடுமோ என்று பயந்துஅவர் ஓதி முடிப்பதற்கு முன்னர்) நீங்கள் அவசரப்பட்டு அதனை ஓத உங்களுடைய நாவை அசைக்காதீர்கள். ஏனெனில், அதை (உமது நெஞ்சில்) ஒன்றுசேர்ப்பதும் நீர் ஓதும்படி செய்வதும் நம்முடைய பொறுப்பாகும். ஆகவே, (ஜிப்ரீல் மூலம்) அதனை நாம் (உங்களுக்கு) ஓதிக்காண்பித்தால், (அவர் ஓதி முடித்த பின்னர்) அவ்வாறே அதனை நீங்கள் பின்தொடர்ந்து ஓதுவீராக. பிறகு அதனை விளக்கித் தருவது நமது பொறுப்பே ஆகும். திருக்குர்ஆன்:- 75:16,17,18,19

 

அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் தம்மிடம் வேதஅறிவிப்பு (வஹீ) கொண்டுவரும் போது அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தம் நாவையும் இதழ்களையும் (எங்கே இறைவசனங்கள் மறந்துவிடப் போகின்றனவோ என்ற அச்சத்தால் மனனமிடுவதற்காக) அசைத்துக் கொண்டிருப்பார்கள். இது அவர்களுக்குச் சிரமமாக இருந்தது. இது அவர்களது வதனத்திலேயே காணப்படலாயிற்று. அப்போதுதான் மேற்காணும் (75:16-19) வசனங்களை அல்லாஹ் அருளினான்.  நூல்:- புகாரீ-4929முஸ்லிம்-764திர்மிதீ-3242  

 

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் வஹீயைப் பெறுவதில் அவசரம் காட்டுபவர்களாகவும் ஜிப்ரீல் (அலை) அவர்களை முந்திக்கொண்டு அதனை ஓதக்கூடியவர்களாகவும் இருந்தார்கள். எனவேதான்வஹீயைக் கவனமாகச் செவியுறுமாறு நபியவர்களுக்கு அல்லாஹ் கட்டளையிட்டான். அவர்களின் நெஞ்சில் அதை ஒன்று சேர்ப்பதற்கும்அதை அவர்களுக்கு விளக்கிக் கொடுப்பதற்கும் அல்லாஹ் பொறுப்பு ஏற்றுக்கொண்டதாக கூறுகின்றான்.

 

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் குர்ஆன் மறந்துவிடுமோ என்ற எண்ணத்தில் வேக வேகமாக ஓதியபோது அல்லாஹ், “உங்கள் மனதில் நாம் பதிய வைப்போம் நீங்கள் சிரமப்படாதீர்கள்” என்று கூறி நபியவர்களின் சிரமத்தை குறைக்கிறான்

 

ஓர் ஆசிரியர் மாணவருக்கு பாடம் நடத்திக்கொண்டிருக்கும்போது அந்த மாணவர் அங்கும் இங்கும் திரும்பி பார்த்துக்கொண்டிருந்தார். அதனால் பாடம் நடத்துவதைச் சற்று நிறுத்திவிட்டு அந்த மாணவரை நோக்கி! "இங்கும் அங்கும் பாடம் பார்த்துக் கொண்டிராமல் பாடத்தை கவனமாகக் கேள்!" என்று ஆசிரியர் அறிவுரை கூறிவிட்டுபிறகு பாடம் நடத்துவதைப் போன்றதாகும். இதுவும் ஜிப்ரீல் (அலை) அவர்கள் ஓதுவதைக் கவனமாகக் கேட்டுக் கொண்டிருக்க வேண்டுமே தவிரஅவருடன் சேர்ந்து அவசர அவசரமாக ஓத வேண்டாம். வஹீயை அருளி முடித்துவிட்டு சென்ற பிறகு மனனம் செய்து கொள்ளலாம் என்று அல்லாஹ் கூறும் அறிவுரை இடைமறிப்பு வாசகமாக அமைந்துள்ளது.

 

கிப்லா மாற்றம்

 

(நபியே!) உம்முடைய முகம் (அடிக்கடி) விண்ணை நோக்கித் திரும்புவதை நாம் காண்கிறோம். எனவேநீர் விரும்புகிற கிப்லாவிற்கு (இதோ) உம்மைத் திருப்புகிறோம். எனவேஉமது முகத்தை (கஅபா இருக்கும்) புனிதப் பள்ளிவாசலின் திசையில் திருப்பிக்கொள்ளுங்கள். (முஸ்லிம்களே!) நீங்களும் (இனி) எங்கிருந்தாலும் உங்கள் முகங்களை அதன் திசையிலேயே திருப்புங்கள். திருக்குர்ஆன்:-  2:144

 

அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் (மக்காவிலிருந்து) மதீனாவுக்கு நாடு துறந்து சென்றபோதுமதீனாவில் யூதர்கள் அதிகமாக வாழ்வதைக் கண்டார்கள்.

 

எனவே, பைத்துல் மக்திசை முன்னோக்குமாறு நபியவர்களுக்கு அல்லாஹ் கட்டளையிட்டான். இதனால் யூதர்கள் மகிழ்ச்சியடைந்தனர். நபியவர்கள் பத்துக்கும் மேற்பட்ட மாதங்கள் வரை பைத்துல் மக்திசை முன்னோக்கி(த் தொழுது) வந்தார்கள்.

 

எனினும் இப்ராஹீம் (அலை) அவர்களின் கிப்லா(வாகிய கஅபா)வையே நபியவர்கள் விரும்பினார்கள். எனவே, (இது தொடர்பாக) அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்து கொண்டும், (அடிக்கடி) வானத்தை நோக்கிப் பார்வையைச் செலுத்துக்கொண்டும் இருந்தார்கள். அப்போதுதான் மேற்காணும் (2:144) வசனத்தை அல்லாஹ் அருளினான். நூல்:- தஃப்சீர் இப்னு கஸீர்

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பைத்துல் மக்திசை நோக்கி தொழுத நேரத்தில் கஅபாவை கிப்லாவாக ஆக்கினால் நன்றாக இருக்குமே என எண்ணியபோது அல்லாஹ், கஅபாவை நோக்கி தொழ உத்தரவு பிறப்பிக்கிறான். இதன்மூலம் அல்லாஹ், நபியவர்களின் ஏக்கம் போக்கினான்.

 

பெயர் சொல்லி அழைக்காதே!

 

(இறைநம்பிக்கையாளர்களே!) அல்லாஹ்வுடைய தூதரை நீங்கள் அழைத்தால் அதனை நீங்கள் உங்களுக்குள் ஒருவர் மற்றொருவரை அழைப்பதைப் போல் அழைக்க வேண்டாம். (முஹம்மத் என பெயர் கூறி அழைக்க வேண்டாம்) திருக்குர்ஆன்:- 24:63

 

அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. பேராசான் பெருமானார் (ஸல்) அவர்களை மக்கள்முஹம்மதே! அபுல் காசிமே! என பெயர் சொல்லி அழைத்துக் கொண்டிருந்தனர். அல்லாஹுத்தஆலா தன் தூதரை கௌரவிக்கும் விதமாக அவ்வாறு மக்களை அழைப்பதற்கு தடை விதித்து, "அல்லாஹ்வின் நபியே! அல்லாஹ்வின் தூதரே!" என அழைக்குமாறு கட்டளையிட்டான். நூல்:- தஃப்சீர் அல்பஙவீதஃப்சீர் இப்னு கஸீர், தஃப்சீர் துர்ருல் மன்ஸூர்

 

அல்லாஹ்ஒருவரை ஒருவர் சாதாரணமாக அழைத்துக்கொள்வதைப் போன்று இறைதூதரையும் பெயர் சொல்லி அழைக்காமல்கண்ணியத்தோடு அழைக்க வேண்டும் என ஆணையிடுகின்றான்.

 

ஒரு மனிதனை குறிப்பிட்டு அழைப்பதற்காக தான் அவருக்கு பெயர் சூட்டப்பட்டுகிறது. ஆனால்அண்ணல் நபி (ஸல்) அவர்கள் பெயர் அப்படியல்ல. நபியவர்களின் பெயரைச் சொல்லி யாரும் அழைக்கக்கூடாது என்பது இறைகட்டளையாகும். இது இந்த சமுதாயத்தினர் மூலம் நபியவர்களுக்கு இறைவன் அளிக்கும் கண்ணியமாகும்.

 

இறைவன்நமது தூதரை பெயர் சொல்லி அழைக்காதீர்கள் என்று மட்டும் சொல்லாமல், "யாரசூலல்லாஹ்! யா நபியல்லாஹ்! என்று அழையுங்கள்" என்று மாற்று ஏற்பாட்டையும் சொல்லித்தருக்கிறான்.

 

ஆனால்முன் சென்ற இறைத்தூதர்கள் காலத்தில் அவர்களின் சமுதாயத்தினர் தம்முடைய இறைத்தூதரை பெயர் சொல்லியே அழைத்துள்ளனர். அதை அல்லாஹ் கண்டிக்கவில்லை.

 

நூஹ்! நிச்சயமாக நீங்கள் எங்களுடன் தர்க்கித்தீர்கள். அதுவும் அதிகமாகவே தர்க்கித்துவிட்டீர்கள். திருக்குர்ஆன்:- 11:32

 

லூத்! (இவ்வாறு கூறுவதை விட்டும்) நீங்கள் விலகிக் கொள்ளாவிடில் நிச்சயமாகநீங்கள் (நம் ஊரை விட்டு) துரத்தப்படுவீர்கள். திருக்குர்ஆன்:- 26:167

 

மூசா! உங்களுடைய இறைவன் (உங்கள் பிரார்த்தனையை அங்கீகரிப்பதாக)  உங்களுக்கு அளித்திருக்கும் வாக்குறுதியின்படி (இக்கஷ்டத்தை நீக்கும்படி) நமக்காக நீங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். திருக்குர்ஆன்:- 7:134

 

அல்லாஹ் தனது திருமறையில் மற்ற இறைத்தூதர்களின் பெயரை நேரடியாக குறிப்பிட்டான். ஆனால், அண்ணல் நபி (ஸல்) அவர்களை அழைக்கும்போது அன்னாரின் பெயரை நேரடியாக குறிப்பிட்டாமல் “நபியே! அல்லாஹ்வின் தூதரே! போர்வைப் போர்த்திக்கொண்டிருப்பவரே!” என்று தான் அழைக்கிறான். “முஹம்மத்” என்ற பெயரை நேரடியாக கூறினாலும் அதோடு இறைத்தூதரே! என்ற சொல்லையும் இணைத்தே அழைத்து, அழகுபார்க்கிறான்

 

ஒருவர் தனக்கு கீழ் உள்ளவரை அழைக்கும்போது அவர்களின் பெயரைச்சொல்லி அழைப்பதும் உண்டு. பெரும்பாலும் அவரிடம் இருக்கும் மிக உயர்ந்த தன்மைகளைச் சொல்லி அழைப்பதும் உண்டு. இப்படித்தான் அண்ணல் நபி (ஸல்) அவர்களை அழைக்கும் போது அவர்களிடம் இருந்த மிக உயர்ந்த பண்பான நபித்துவத்தையும்தூதுத்துவத்தையும் சொல்லி அழைக்கிறான். அத்தோடு மனிதர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அழைக்கும்போது சாதரண மக்களை அவர்களின் பெயரைச் சொல்லி அழைப்பது போன்று அழைக்கக்கூடாது என்றும் தடுத்திருக்கிறான்.

 

குரலை உயர்த்தாதீர்கள்

 

இறைநம்பிக்கையாளர்களே! (நபியவர்கள் பேசும்பொழுது) நபியின் குரலுக்கு மேல் உங்கள் குரலை உயர்த்தாதீர்கள்.  மேலும்உங்களுக்குள் ஒருவர் மற்றவரிடம் உரத்த குரலில் பேசுவதைப் போல் நபியிடம் குரலுயர்த்திப் பேசாதீர்கள். இதன் காரணமாக உங்களுடைய நற்செயல்களெல்லாம் அழிந்துவிடக்கூடும். (இதனை) நீங்கள் உணர்ந்துகொள்ள முடியாது. திருக்குர்ஆன்:- 49:2

 

இப்னு அபீமுளைக்கா (ரஹ்) அவர்கள் கூறியதாவது. (ஒருமுறை) நல்லவர்களான அபூபக்ர் (ரலி) அவர்களும் உமர் (ரலி) அவர்களும் அழிவில் சிக்கிக்கொள்ள இருந்தார்கள். பனூ தமீம் குலத்தைச் சேர்ந்த பயணக் குழுவினர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் (தங்களுக்கு ஒரு தலைவரை நியமிக்கும்படி கோரியவர்களாக) வந்தபோது நபியவர்களுக்கு அருகில் அவர்கள் இருவரும் குரலை உயர்த்திப் பேசினார்கள்.

 

அந்த இருவரில் ஒருவர் (உமர்)பனூ முஜாஷிஉ குலத்தாரான அக்ரஃ பின் ஹாபிஸ் அவர்களை நோக்கி (அவரைத் தலைவராக நியமிக்கும்படி) சைகை செய்தார். மற்றொருவர் (அபூபக்ர்)இன்னொருவரை (கஅகாஉ பின் மஅபத்) நோக்கி, (அவரைத் தலைவராக நியமிக்கும்படி) சைகை செய்தார்.

 

அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்களிடம், ( مَا أَرَدْتَ إِلاَّ خِلاَفِي ) ‘‘எனக்கு மாறுசெய்யவே நீங்கள் விரும்புகிறீர்கள்” என்று கூறினார்கள். உமர் (ரலி) அவர்கள், ( مَا أَرَدْتُ خِلاَفَكَ ) ‘‘தங்களுக்கு மாறுசெய்வது என் விருப்பமன்று” என்று சொன்னார்கள். இந்த விவகாரத்தில் அவர்கள் இருவரின் குரல்களும் உயர்ந்தன. அப்போது தான்  மேற்காணும் (49:2ஆவது) வசனத்தை அல்லாஹ் அருளினான்.

 

அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். இந்த வசனம் அருளப்பெற்றபின் உமர் (ரலி) அவர்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் இந்த அளவுக்கு மெதுவாகப் பேசுவார்கள்; (அவர் என்ன கூறினார் என்பதை) நபி (ஸல்) அவர்கள் அவரிடம் (திரும்ப) விசாரித்தே தெரிந்துகொள்வார்கள். நூல்:- புகாரீ-4845, திர்மிதீ-3179

 

அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்கு முன்னாள் குரலை உயர்த்திப் பேசுதல் கண்ணியக்குறைவு என்று அல்லாஹ் கருதுகின்றான்.

 

மார்க்க அறிஞர்கள் கூறுகிறார்கள். அருமை நாயகம் (ஸல்) அவர்கள் பூமிக்குள் உயிருடன் இருக்கின்றார்கள். எனவேநபியவர்களை ஸியாரத்துச் செய்ய செல்கின்றவர்கள் அங்கு குரலை உயர்த்தி சப்தமிட்டு கொண்டிருக்கக்கூடாது. அங்கு போய் அவ்வாறு சப்தமிடுவதும் கண்ணியக்குறைவே ஆகும்.

 

சமுதாயக் கவலை

 

(நபியே!) இவ்வேதத்தை அவர்கள் நம்பிக்கை கொள்ளாவிட்டால்அவர்களின் போக்குக்காகக் கடும் துக்கப்பட்டு உம்மை நீரே மாய்த்துக்கொள்வீர் போலும்? (நீர் இவ்வாறெல்லாம் கவலைப்படாதீர்.) திருக்குர்ஆன்:- 18:6

 

அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. ஒரு தடவை மக்காவில் குறைஷி தலைவர்களான உத்பா பின் ரபீஆஅபூஜஹ்ல் ஆகியோர் குறைஷியர் சிலருடன் குழுமியிருந்தனர். அப்போது பேராசான் பெருமானார் (ஸல்) அவர்களுக்குத் தம் சமூகத்தாரின் எதிர்ப்பும் தாம் கொண்டு வந்த மேன்மைக்குரிய கொள்கையை அவர்கள் நிராகரிப்பதும் பெரும் சுமையாக தோன்றியது. சமுதாயத்தின் இந்தப் போக்கு நபியவர்களுக்கு கடுமையான துக்கத்தைக் கொடுத்தது. அப்போதுதான் மேற்காணும் (18:6) வசனத்தை அல்லாஹ் அருளினான். நூல்:- தஃப்சீர் இப்னு மர்தவைஹீ

 

இந்த மக்கள் உண்மையான மார்க்கத்தை ஏற்றுக்கொள்ளாமல் இருக்கும்போது பேராசான் பெருமானார் (ஸல்) அவர்களின் கவலையை பார்த்த அல்லாஹ், “இந்த மக்களின் மீது கவலை கொண்டு உங்களை நீங்களே அழித்துக்கொள்வீர்கள் போலிருக்கிறதே இவ்வாறெல்லாம் கவலைப்பட வேண்டாம்” என தேற்றுகிறான்.

 

தம் சமூகத்தார் அசத்தியத்தின் மீது பிடிவாதமாக இருப்பது கண்டு அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்கு ஏற்பட்ட துக்கம் சாதாரணமானது அல்ல. அன்புக்குரியோரும் நெருக்கமானவர்களும் ஒருவரை விட்டு பிரிந்து செல்லும்போது அவர்களின் புறக்கணிப்பால் அவருக்கு ஏற்படும் கடுமையான வலியை இது ஒத்திருக்கிறது. பிரிவின் துயரத்தை தாங்க முடியாமல் அவர் தம்மையே மாய்த்துக்கொள்ள நினைப்பதுண்டு. இது இயற்கையான வலி. இத்தகைய வலி தான் நபியவர்களுக்கு அப்போது ஏற்பட்டது.

 

ஓர் உண்மையான தலைவர்சமுதாய வழிகாட்டிசமுதாயச் சீரழிவை கண்டு எந்த அளவுக்கு துடிப்பார்துடிக்க வேண்டும் என்பதற்கு நபியவர்களின் இந்த நிலை சிறந்த முன்மாதிரியாகும். சமுதாயத்தின் மீது அவர்களுக்கு இருந்த அக்கறை தான் என்னஉலக வரலாற்றில் இப்படி ஒரு தலைவரா என்று வியக்கத் தோன்றுகிறது.

 

உலக அலங்காரத்தை விரும்பினால்

 

நபியே! உம்முடைய துணைவியரிடம் கூறுவீராக: "நீங்கள் இவ்வுலக வாழ்க்கையையும் அதன் அலங்காரத்தையும் மட்டுமே விரும்புவீர்களாயின் வாருங்கள்! உங்களுக்கு ஏதும் கொடுத்து நல்ல முறையில் (தலாக் கொடுத்து) உங்களை விடுவித்து விடுகிறேன். மேலும்நீங்கள் அல்லாஹ்வையும்அவனுடைய தூதரையும்மறுமை வாழ்க்கையையும் விரும்புவீர்களாயின் நிச்சயமாக அல்லாஹ் உங்களிலுள்ள இத்தகைய நல்லவர்களுக்காக மகத்தான (நற்)கூலியை தயார்செய்து வைத்துள்ளான். திருக்குர்ஆன்:- 33:28,29

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனா சென்றபின்நண்பர்கள் அன்போடு வழங்கிய அன்பளிப்புக்கள்அண்டைவீட்டார் கொடுத்த இரவல் கறவை ஒட்டகங்கள் மூலம் கிடைக்கும் பாலைக்கொண்டு தம் குடும்பத்தாரின் பசியை ஓரளவுக்குத் தணித்தார்கள். பல நாள்கள் நபியவர்களின் துணைவியர் இல்லங்களில் (அறைகளில்) அடுப்பு எரிந்ததில்லை. சில பேரிச்சம் பழத்துண்டுகளும் தண்ணீரும் தான் அவர்களின் உணவாக இருந்தன. பல சமயங்களில் அந்தப் போதாக்குறையான உணவுகூட அவர்களுக்குக் கிடைப்பதில்லை.

 

இந்த சூழ்நிலையில்தான் ஒருமுறை அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அன்பு துணைவியர் நபியவர்களைச் சூழ்ந்துகொண்டு குடும்பச் செலவுக்கு கூடுதலான தொகை வழங்கவேண்டும் என்று வலியுறுத்தினார்கள். பேச முடியாத அளவிற்கு துக்கம் மேலிட்டவர்களாக அண்ணலார் அமைதி காத்தார்கள். பின்னர் ஒருமாத காலம் அண்ணலார் தம் துணைவியரிடமிருந்து விலகியிருந்தார்கள். அப்போது தான் மேற்காணும் (33:28,29) வசனங்களை அல்லாஹ் அருளினான். நூல்:- தஃப்சீர் இப்னு கஸீர்

 

அண்ணல் நபி (ஸல்) அவர்களின் துணைவியர் குடும்பச் செலவுக்கு கூடுதலான தொகை வழங்கவேண்டும் என்று வலியுறுத்தி நபியவர்களை சங்கடத்திற்கு ஆளாக்கியபோது அல்லாஹ், நபியவர்களுக்காக பரிந்து பேசி, நபியவர்களை ஆறுதல்படுத்தினான்.

 

அதன் பிறகு நபியவர்களின் துணைவியர் அல்லாஹ்வையும் அவன் தூதரையும் மறு உலகையுமே தேர்ந்தெடுத்துக் கொண்டனர். பொறுமை காக்க சம்மதித்தனர்.

 

உமக்கு அழிவுண்டாகட்டும்!

 

அழியட்டும் அபூலஹபின் இரு கரங்கள்அவனுமே அழியட்டும்! அவனுடைய பொருளும்அவன் சேகரித்து வைத்திருப்பவைகளும் அவனுக்கு யாதொரு பயனுமளிக்காது. வெகுவிரைவில் அவன் கொழுந்துவிட்டெரியும் நெருப்பை அடைவான். விறகு சுமக்கும் அவனுடைய மனைவியும் (நரகத்திற்கு செல்வாள்.) அவளுடைய கழுத்தில் முறுக்கேறிய ஈச்சங்கயிறுதான். (அதனால் சுருக்கிடப்பட்டு அவளும் அழிந்துவிடுவாள்.) திருக்குர்ஆன்:- 111:1,2,3,4,5

 

அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. (நபியே!) உம்முடைய நெருங்கிய உறவினர்களுக்கு எச்சரிக்கை செய்வீராக!” (அதாவது,) ‘தூய மனம் படைத்த உம்முடைய குழுவினரையும் (எச்சரிக்கை செய்வீராக!’) எனும் (26:214ஆவது) இறைவசனம் அருளப்பட்டபோது கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் புறப்பட்டுச் சென்று ‘ஸஃபா’ (மலை) மீதேறி உரத்த குரலில்“யா ஸபாஹா (அதிகாலை ஆபத்து! உதவி! உதவி!)” என்று கூறினார்கள். அப்போது (மக்கா நகர) மக்கள், ‘‘யார் இவர்?” என்று கூறியவாறு நபியவர்களிடம் ஒன்றுகூடினர்.

 

அப்போது நபியவர்கள், ( أَرَأَيْتُمْ إِنْ أَخْبَرْتُكُمْ أَنَّ خَيْلاً تَخْرُجُ مِنْ سَفْحِ هَذَا الْجَبَلِ أَكُنْتُمْ مُصَدِّقِيَّ ) ‘‘இந்த மலையின் அடிவாரத்திலிருந்து (உங்களைத் தாக்குவதற்காக பகைவர்களின்) குதிரைப் படையொன்று புறப்பட்டு வருகிறது என்று நான் உங்களிடம் தெரிவித்தால்என்னை நீங்கள் நம்பியிருப்பீர்களா?” என்று கேட்டார்கள். மக்கள், ‘‘உம்மிடமிருந்து எந்தப் பொய்யையும் நாங்கள் அனுபவித்ததில்லை. (அவ்வாறிருக்கஇதை நாங்கள் நம்பாமல் இருப்போமா?)” என்று சொன்னார்கள்.

 

நபியவர்கள், ( فَإِنِّي نَذِيرٌ لَكُمْ بَيْنَ يَدَىْ عَذَابٍ شَدِيدٍ ) ‘‘அப்படியென்றால்நான் கடும் வேதனையொன்று எதிர்நோக்கி யுள்ளது என்று உங்களுக்கு எச்சரிக்கை செய்கின்றேன்” என்றார்கள். (அப்போது நபியவர்களைப் பார்த்து) அபூலஹப், ‘‘உமக்கு அழிவுண்டாகட்டும்! இதற்காகத்தான் எங்களை ஒன்றுகூட்டினாயா?” என்று கேட்டான். பின்னர் நபியவர்கள் எழுந்தார்கள். அப்போதுதான்  மேற்காணும் (111ஆவது) அத்தியாயத்தை அல்லாஹ் அருளினான். நூல்:- புகாரீ-4971, திர்மிதீ-3276

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை கொடியோன் அபூலஹப் திட்டியபோது அதற்குப் பதிலடியாக அல்லாஹ்வும் அபூலஹபை சபிக்கிறான்.

 

சந்ததியற்றவன்

 

நிச்சயமாக உங்களின் எதிரிதான் சந்ததியற்றவன் ஆவான். திருக்குர்ஆன்:- 108:3

 

அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. அருமை நாயகம் (ஸல்) அவர்களின் மூத்த மகன் காசிம் (ரலி) அவர்கள் மரணமடைந்தார். அதன் பிறகு நபியவர்களின் இளைய மகன் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் மரணமடைந்தார். அப்போது அல்ஆஸ் பின் வாயில் என்பவன், ( قَدِ انْقَطَعَ نَسْلُهُ فَهو أبْتَرُ ) "முஹம்மதின் பரம்பரை வேரறுந்துவிட்டது. எனவேஅவர் சந்ததியற்றவராக ஆகிவிட்டார்" என்று கூறினான். அப்போது தான் மேற்காணும் (108:3) திருவசனத்தை அல்லாஹ் அருளினான். நூல்:- தஃப்சீர் துர்ருல் மன்ஸூர்

 

யஜீத் பின் ரூமான் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். அல்ஆஸ் பின் வாயில் என்பவனிடத்தில் நபிகள் பெருமானார் (ஸல்) அவர்களைப் பற்றி கூறப்பட்டால் அவன் இவ்வாறு கூறுபவனாக இருந்தான்: ( دَعُوهُ فَإِنَّهُ رَجُلٌ أَبْتَرُ لَا عَقِبَ لَهُ، فَإِذَا هَلَكَ انْقَطَعَ ذِكْرُهُ ) “அவரை விடுங்கள்ஏனெனில் அவர் சந்ததியற்றவர். அவருக்கு வழித்தோன்றல் யாரும் கிடையாது. அவர் மரணமடைந்தார் எனில் அவரைப் பற்றி பேசுவதற்கே யாரும் இருக்க மாட்டார்” என்று இவ்வாறு அவன் கூறியது தொடர்பாகவே (108 வது)  அல்கவ்ஸர் அத்தியாயத்தை அல்லாஹ் அருளினான். நூல்:- தஃப்சீர் இப்னு கஸீர்

 

அத்தா பின் அபீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். அருமை நாயகம் (ஸல்) அவர்களின் மகனார் காசிம் (ரலி) அவர்கள் மரணமடைந்த பொழுது கொடியோன் அபூலஹப் இணைவைப்பாளர்களிடம் சென்று, ( بُتِرَ مُحَمَّدٌ اللَّيْلَةَ ) "இன்றைய இரவில் முஹம்மத் வேரறுந்தவராக ஆகிவிட்டார்" என்று கூறினான். அப்போது தான் மேற்காணும் (108:3) திருவசனத்தை அல்லாஹ் அருளினான். நூல்:- தஃப்சீர் இப்னு கஸீர்

 

பேரறிஞர் இஸ்மாயீல் சுத்தி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். ஒரு மனிதனின் ஆண்மகன் மரணமடைந்துவிட்டால்அவன் சந்ததி இழந்துவிட்டான் என்று அரபிகள் கூறுவது வழக்கம். அருமை நாயகம் (ஸல்) அவர்களின் புதல்வர்கள் மரணமடைந்தபோது "முஹம்மத் சந்ததி இழந்துவிட்டார்" என்று எதிரிகள் கூறினார்கள். அப்போதுதான் மேற்காணும் (108:3) திருவசனத்தை அல்லாஹ் அருளினான். நூல்:- தஃப்சீர் இப்னு கஸீர்

 

ஆகஒரு மனிதனின் ஆண்மக்கள் மரணமடைந்துவிட்டால் அவனைப் பற்றி பேசுவதற்கே நாதியில்லாமல் ஆகிவிட்டது என்று அரபிகள் தங்களின் அறியாமையினால் கூறினார்கள். அவர்கள் கூறியவாறு அல்ல.  மாறாக,  நபிகள் நாயகம் முஹம்மத் (ஸல்)  அவர்களைப் பற்றிய நினைவுகளும் புகழும் மக்களிடையே ஆண்டாண்டு காலமாக அல்லாஹ் நிலைக்கச் செய்துள்ளான். மேலும்அன்னாரின் சந்ததியும் மறுமைநாள் நெருக்கம் வரை நிலைத்திருப்பார்கள்.

 

உமது புகழை உயர்த்துவோம்

 

(நபியே!) உமது புகழை நாம் உயர்த்துவோம். திருக்குர்ஆன்:- 94:4

 

கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஒருமுறை வானவர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் என்னிடம் வந்து, ( إِنَّ رَبِّي وَرَبَّكَ يَقُولُ: كَيْفَ رَفَعْتُ ذِكْرَكَ؟ ) "என்னுடைய இறைவனும் உம்முடைய இறைவனுமாகிய அல்லாஹுத்தஆலா (முஹம்மத் - ஸல் அவர்களே!)நான் உமது புகழை எவ்வாறு உயர்த்தியுள்ளேன் என்பதை அறிவீராக! என்று கேட்கிறான்" என்ற இறைசெய்தியை கூறினார். நான், "அல்லாஹ்வே அறிந்தவன்" என்று கூறினேன். அல்லாஹ், ( إِذَا ذُكِرتُ ذُكِرتَ مَعِي ) "(நபியே!) என்னுடைய பெயர் கூறப்பட்டால் என்னுடன் சேர்த்து உமது பெயரும் கூறப்படுகிறது" என்று கூறினான். அறிவிப்பாளர்:- அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் நூல்:- தஃப்சீர் அத்தபரீதஃப்சீர் இப்னு அபீஹாத்திம்தஃப்சீர் இப்னு மர்தவைஹீஇப்னு ஹிப்பான்அபூயஅலாதஃப்சீர் இப்னு கஸீர்

 

பிரபலமான திருக்குர்ஆன் விரிவுரையாளர்களான அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி)முஜாஹித் (ரஹ்) ஆகிய இருவரும் கூறுகிறார்கள். இதுதொழுகையின் அழைப்பான பாங்கைக் குறிக்கும். அதாவதுபாங்கில் நபியவர்களின் பெயரும் கூறப்படுகிறது என்பதே கருத்து. நூல்:- தஃப்சீர் இப்னு கஸீர்

 

உலகில் ஒவ்வொரு நாளும் ஐந்து வேளை தொகையில் சொல்லப்படும் பாங்கின் வழியாக “முஹம்மதுர் ரசூலுல்லாஹ்” என்று சொல்லப்படுகிறதுநபிகள் நாயகம் முஹம்மத்  (ஸல்) அவர்களின் பெயர் ஒரு பாங்கிற்கு இரண்டு தடவை என்ற அடிப்படையில் ஒரு நாளைக்கு அவர்களின் பெயர் பத்து முறை உச்சரிக்கப்படுகிறது.

 

உலகத்திலே சுமார் நாற்பத்தி ஐந்து லட்சத்திற்கும் மேலாக பள்ளிவாசல்கள் இருக்கிறது என்றால் இவற்றில் அனைத்து நாற்பத்தி ஐந்தாயிரம் பள்ளிவாசல்களிலேயும் பகிரங்கமாக “அஷ்ஹது அன்ன முஹம்மதுர் ரசூலுல்லாஹ்” என்று ஒரு நாளைக்கு ஐந்து முறை சொல்லப்படுகின்ற காரணத்தினால்ஒரு நாளில் நாலரைக்கோடி தடவை உச்சரிக்கப்படுகிறது.   

 

உலகத்தில் ஒவ்வொரு நாளும் நாலரைக்கோடி முறை உச்சரிக்கப்படுகின்ற ஒரே பெயர் நபிகள் நாயகம் முஹம்மத் (ஸல்) அவர்களின் பெயர் மட்டுமே.

 

படைப்பினங்களில் இப்படி ஒரு திருநாமத்தை உலகத்தில் சொல்வதற்கு யாருடைய திருநாமத்தையும் இறைவன் ஆக்கவில்லை. இனிமேல் யாரும் அவர்களை புகழ்ந்து தான் புகழ் வரவேண்டும் என்று யாரும் சொல்ல முடியாத அளவிற்கு அல்லாஹுத்தஆலா அவர்களின் புகழை உயர்த்திவிட்டான்! அல்ஹம்துலில்லாஹ்!

 

ஸலவாத் சொல்கிறான்

 

நிச்சயமாக அல்லாஹ்வும்அவனுடைய வானவர்களும் நபி (முஹம்மது-ஸல் அவர்கள்) மீது ஸலவாத்து சொல்கிறார்கள். ஆகவே இறைநம்பிக்கையாளர்களே! நீங்களும் (முஹம்மது-ஸல்)  அவர்கள் மீது ஸலவாத்துச் சொல்லி சலாமும் கூறிக்கொண்டிருங்கள்.    திருக்குர்ஆன்:- 33:56

 

அல்லாஹ்தமது தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் சொல்கிறேன் என்று கூறுவதன் மூலம் அன்னார் மீதுள்ள தமது அன்பை வெளிப்படுத்துகிறான்.

 

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

مَنْ صَلَّى عَلَىَّ صَلاَةً وَاحِدَةً صَلَّى اللَّهُ عَلَيْهِ عَشْرَ صَلَوَاتٍ وَحُطَّتْ عَنْهُ عَشْرُ خَطِيئَاتٍ وَرُفِعَتْ لَهُ عَشْرُ دَرَجَاتٍ ‏ ) எனது சமுதாயத்தில் எவரேனும் ஒருவர் (உளத்தூய்மையுடன்) என்மீது ஒருமுறை ஸலவாத்து ஓதினால் அதற்குப் பகரமாக அவருக்கு அல்லாஹ் பத்து மடங்கு அருள்புரிகிறான். மேலும் பத்து பாவங்களை அழித்து விடுகிறான். பத்து அந்தஸ்துகளை உயர்த்துகிறான். அறிவிப்பாளர்:- அனஸ் (ரலி) அவர்கள் நூல்:- நசாயீ-1280, பைஹகீதப்ரானீ

 

அபூதல்ஹா (ரலி) அவர்கள் கூறியதாவது. ஒருநாள்கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள்முகத்தில் மகிழ்ச்சி ததும்ப (எங்களிடம்) வந்தார்கள். (அது குறித்து நாங்கள் வினவினோம்.) அப்போது அவர்கள் கூறியதாவது: என்னிடம் வானவர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து, ( أَمَا يُرْضِيكَ يَا مُحَمَّدُ أَنْ لاَ يُصَلِّيَ عَلَيْكَ أَحَدٌ مِنْ أُمَّتِكَ إِلاَّ صَلَّيْتُ عَلَيْهِ عَشْرًا ) "முஹம்மத் (ஸல்) அவர்களே! உங்கள்மீது உங்கள் சமுதாயத்தில் உள்ள ஒருவர் ஸலவாத் ஓதும்போதுஅவரின் மீது நான் பத்து முறை அருள்வேண்டி பிரார்த்தனை புரியாமலிருப்பதில்லை என்பதை நீங்கள் பொருந்திக்கொள்ளவில்லையா?" என்று கூறினார். நூல்:- நசாயீ-1278

 

அல்லாஹ் தமது இறைத்தூதர் அருமை நாயகம் (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் ஓதுமாறு கூறிவிட்டதால், ஒரு முஸ்லிம் தமது ஆயுளில் ஒருமுறையாவது  ஸலவாத் ஓதுவது கட்டாயக் கடமையாகும் என்பது மார்க்க அறிஞர்களின் ஏகோபித்த தீர்ப்பாகும்.

 

மணமுடித்து வைத்தான்  

 

(நபியே! உம்முடைய வளர்ப்பு மகனான) ஸைத் (மணவாழ்க்கை என்ற) தேவையை அந்தப் பெண்ணிடம் முடித்துக்கொண்டபோதுஅப்பெண்ணை உமக்கு நாம் மணமுடித்து வைத்தோம் திருக்குர்ஆன்:- 33:37

 

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. (ஸைத் பின் ஹாரிஸா - ரலி அவர்கள் மணவிலக்கு செய்ததையடுத்து) ஸைனப் (ரலி) அவர்களது காத்திருப்பு காலம் (இத்தா) முடிந்ததும் அருமை நாயகம் (ஸல்) அவர்கள் ஸைத் (ரலி) அவர்களிடம், ( فَاذْكُرْهَا عَلَيَّ ) "நீ (ஸைனபிடம் சென்று) என்னை (மணந்து கொள்வது) பற்றி அவரிடம் பேசு" என்றார்கள்.

 

ஸைத் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். எனவே, "நான் சென்றுஸைனபே! உமக்கு ஒரு நற்செய்திஅண்ணலார் உன்னை (மணக்க விரும்புவது) பற்றி உன்னிடம் கூறுவதற்காக (என்னை) அனுப்பி வைத்துள்ளார்கள்" என்று கூறினேன். அதற்கு அவர், ( مَا أَنَا بِصَانِعَةٍ شَيْئًا حَتَّى أُوَامِرَ رَبِّي ) "நான் என் இறைவனிடம் (முடிவு வேண்டி இஸ்திகாரா தொழுது பிரார்த்தனை செய்து) அனுமதி பெறாமல் ஏதும் செய்வதற்கில்லை" என்று கூறிவிட்டு தமது தொழுமிடத்திற்குச் சென்று (தொழ) நின்றுவிட்டார். அப்போதுதான்மேற்காணும் (33:37) வசனத்தை அல்லாஹ் அருளினான். நூல்:- முஸ்லிம்-2798நஸாயீ-3199

 

அல்லாஹ்மனிதர்களில் எவருக்கும் திருமணம் நடத்தி வைத்ததில்லை. ஆனால்அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்கு மட்டும் ஜைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களை திருமணம் நடத்தி வைத்தேன் என்பதாக திருக்குர்ஆனில் சான்று பகிருகின்றான்.

 

சத்தியம் செய்கிறான்

 

(நபியே!) உமது வாழ்நாள்மீது சத்தியமாக! அவர்கள் புத்தி மயங்கி (வழிகேட்டில்) தட்டழிந்து கொண்டிருந்தார்கள். (ஆதலால்அதற்கு செவி சாய்க்கவில்லை.) திருக்குர்ஆன்:- 15:72

 

அல்லாஹ், இறைத்தூதர் லூத் (அலை) அவர்களின் சமுதாயத்தைப்பற்றி குர்ஆனில் சொல்லிக்கொண்டு வரும்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மீது சத்தியம் செய்து சொல்கிறான்.

 

அப்துல்லாஹ் பின் அப்பாஸ் ரலி கூறியதாவது. ( مَا خَلَقَ اللَّهُ وَمَا ذَرَأَ وَمَا بَرَأَ نَفْسًا أَكْرَمَ عَلَيْهِ مِنْ مُحَمَّدٍ ﷺ، وَمَا سَمِعْتُ اللَّهَ أَقْسَمَ بِحَيَاةِ أَحَدٍ غَيْرِهِ ) முஹம்மத் (ஸல்) அவர்களைவிடச் சிறந்த எவரையும் அல்லாஹ் படைக்கவில்லை. அவர்களைத் தவிர வேறு யாருடைய வாழ்நாள்மீதும் அல்லாஹ் சத்தியம் செய்துள்ளதை நான் கேட்டதில்லை. நூல்:- தஃப்சீர் இப்னு அபீஹாத்தம்தஃப்சீர் இப்னு கஸீர்

 

அல்லாஹுத்தஆலா தனது திருமறையில் பல இடங்களில் சூரியன்சந்திரன் போன்ற பல படைப்பினங்களின் மீது சத்தியம் செய்து பல விஷயங்களை சொல்கிறான். ஆனால் மனிதர்களில் அண்ணல் நபி (ஸல்) அவர்களைத்தவிர யாரும் மீதும் அல்லாஹ் சத்தியம் செய்து சொல்லவில்லை. இது நபி (ஸல்) அவர்களுக்குள்ள தனிச்சிறப்பையே காட்டுகிறது. ஆகையால் இதை வைத்து கொண்டு மனிதர்கள் மற்ற மனிதர்கள் மீது சத்தியம் செய்யலாம் என்று விளங்கிக்கொள்ளக்கூடாது. படைத்த இறைவன் யாரும் மீதும் எதன் மீதும் சத்தியம் செய்வான்.

 

எனவேநாம் நபிநேசம் கொண்டு, இறைநேசம் பெறுவோமாக! ஆமீன

பிரபல்யமான பதிவுகள்