நம்முடன் இணைந்து இருப்பவர்கள்

வியாழன், ஜூன் 05, 2025

ஹஜ்,உம்ரா,

 

 





 

صفة حجة النبي صلى الله عليه وسلம்

"ஏற்றுக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜின் கூலி சுவர்க்கத்தைத்தவிர வேறில்லை" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அதனை நீங்கள் அடைய வேண்டுமானால் இரண்டு நிபந்தனைகளை, பரிபூரணப்படுத்தியே ஆக வேண்டும். முதலாவது இக்லாஸ் (அல்லாஹ்வுக்காக ஹஜ்ஜை நிறைவேற்றுவது) இரண்டாவது நபி (ஸல்) அவர்கள் செய்ததைப் போன்றே ஹஜ்ஜை நிறைவேற்றுவது. ஹஜ்ஜைப்பற்றிய சரியான தெளிவு இல்லாமல் இன்று பல ஹாஜிகள், ஹஜ் கிரியைகளை தவறான முறையில் செய்கின்றார்கள். நபியவர்கள் செய்த ஹஜ்ஜை சுருக்கமாகச் சொல்லி விளங்கவைப்பதினால் இத்தவறுகளை நீக்கலாம் என்ற நன்னோக்கோடு இச்சிறு பிரசுரம் வெளியிடப்பட்டுள்ளது.


என்னிடமிருந்து உங்களின் ஹஜ் கடமைகளை எடுத்துக் கொள்ளுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆகவே இதைப்படித்து நபியவர்களின் ஹஜ்ஜைப் போன்றே நீங்களும் செய்யுங்கள். அல்லாஹ் நமது ஹஜ்ஜை ஏற்று "அன்று பிறந்த பாலகனை" போன்றும், ஹஜ்ஜின் கூலியாகிய சுவர்க்கத்தைப் பெற்றவர்களாகவும் ஆக்கியருள்வானாக.


உம்ராச் செய்யும் முறை

உம்ரா செய்வதற்கு முன் குளித்து நறுமணம் பூசிக்கொண்டு இஹ்ராம் உடையை அணிந்த பின் "லப்பைக்க உம்ரத்தன்" என்று உரிய எல்லையிலிருந்து (மீக்காத்திலிருந்து) நிய்யத்து வைத்துக் கொண்டு மக்காவிற்குப் புறப்பட வேண்டும். (இலங்கை, இந்தியாவிலிருந்து வருபவர்களின் எல்லை யலம்லம்) இஹ்ராம் அணியும் எல்லைக்குள் வசிப்பவர்கள் அவர்கள் வசிக்கும் இடத்திலிருந்தே இஹ்ராம் அணிந்து நிய்யத்து வைத்துக் கொள்ள வேண்டும். இஹ்ராம் உடை என்பது ஆண்களுக்கு இரண்டு தைக்கப்படாத துணிகளை அணிவதாகும். ஒரு துணியை உடுத்துக்கொள்வது, மற்ற துணியால் தன் மேனியை போர்த்திக் கொள்வது. பெண்களுக்கு தனி இஹ்ராம் உடை கிடையாது. அவர்கள் தங்களுடைய அங்கங்கள் மறையும் அளவுக்கு இஸ்லாம் அனுமதித்த எந்த ஆடையையும் அணிந்து கொள்ளலாம். மக்கா செல்லும் வரை தல்பியா சொல்லிக் கொண்டு செல்வது சுன்னத்தாகும்.

 

لَبَّيْكَ أَللَّهُمَّ لَبَّيْكَ ، لَبَّيْكَ لاَ شَرِيْكَ لَكَ لَبَّبيْكَ، إِنَّ الْحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ وَالْمُلْكُ، لاَشَرِيْكَ لَكَ.


லைப்பைக், அல்லாஹும்ம லைப்பைக், லப்பைக் லா ஷரீக்க லக்க லப்பைக், இன்னல் ஹம்த வன்னிஃமத லக வல் முல்க், லாரீக்க லக்.

ஹரத்திற்குள் நுழைவதற்கு முன் தல்பியாவை நிறுத்திக் கொண்டு வலது காலை முன் வைத்து பின் வரும் துஆவை ஓத வேண்டும்.

 

 بِسْمِ اللهِ وَالصَّلاَةُ وَالسَّلاَمُ عَلَى رَسُوْلِ اللهِ أَللَّهُمَّ إفْتَحْ لِيْ أَبْوَابَ رَحْمَتِكَ.


பிஸ்மில்லாஹ், வஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா ரசூலில்லாஹ், அல்லாஹும்மஃப்தஹ்லி அப்வாப ரஹ்மத்திக.

 

ஹரத்திற்குள் நுழைந்ததும் முதலில் தவாபை ஆரம்பிக்க வேண்டும். தவாப் என்பது கஃபத்துல்லாவை ஏழு முறை பரிபூரணமாகச் சுற்றி வருவதற்கு சொல்லப்படும். தவாபுக்கு ஒளு அவசியமாகும். தவாபை ஆரம்பிப்பதற்கு முன் ஆண்கள் தங்களின் வலது தோள் புத்தை திறந்துவிட வேண்டும். அதாவது மேனியை போர்த்தியிருக்கும் துணியின் நடுப்பகுதியை வலது கக்கத்தின் கீழ் வைத்துக் கொண்டு அத்துணியின் இரு ஓரங்களையும் இடது தோள் மீது போட வேண்டும். அதன் பின் உம்ராவிற்குரிய தவாபை நிறைவேற்றுகின்றேன் என்ற எண்ணத்தோடு "ஹஜருல் அஸ்வத்" கல் பொருத்தப்பட்டிருக்கும் மூலையிலிருந்து உம்ராவின் தவாபை ஆரம்பிக்க வேண்டும். தவாபை ஆரம்பிக்கும் போது நான்கு முறைகளில் ஒன்றைக் கொண்டு ஆரம்பிக்க வேண்டும்.


1- முடியுமாக இருந்தால் ஹஜருல் அஸ்வத் கல்லை முத்தமிடுவது.
2- அதற்கு முடியாவிட்டால் கையினால் ஹஜருல் அஸ்வத் கல்லை தொட்டு கையை முத்தமிடுவது.
3- அதற்கும் முடியாவிட்டால் ஹஜருல் அஸ்வத் கல்லை, தடிபோன்றதால் தொட்டு அதை முத்தமிடுவது.
4- அதற்கும் முடியாவிட்டால் ஹஜருல் அஸ்வத் கல்லுக்கு நேராக நின்று தன் வலது கையை அதன்பக்கம் உயர்த்திக்காட்டி "அல்லாஹுஅக்பர்" என்று சொல்வது. (இப்போது கையை முத்தமிடக்கூடாது).

 

இந்நான்கில் முடியுமான ஒன்றைச் செய்துவிட்டு தவாபை ஆரம்பிக்க வேண்டும். ஹஜருல் அஸ்வத் கல்லை முத்தமிட வேண்டுமென்பதற்காக மற்றவர்களை இடித்துக் கொண்டு செல்வதை ஹாஜிகள் தவிர்த்துக்கொள்ள வேண்டும். ஹஜருல் அஸ்வத் கல்லை முத்தமிடுவது சுன்னத்தாகும். மற்றவர்களுக்கு தொல்லை கொடுப்பது ஹராமாகும். ஹராத்தைச் செய்து சுன்னத்தை நிறைவேற்ற வேண்டுமா? குறிப்பாக பெண்கள் இதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

 

கஃபத்துல்லாவோடு சேர்ந்து ஓர் அரைவட்டம் இருக்கின்றது, அதையும் சேர்த்து தவாப் செய்ய வேண்டும், காரணம் அதுவும் கஃபத்துல்லாவின் எல்லைதான். ருக்னுல் யமானியை, (ஹஜருல் அஸ்வத் கல் மூலைக்கு முன்னுள்ள மூலையை) தொட வாய்ப்புக் கிடைத்தால் தொட்டுக்கொள்ள வேண்டும். அதை முத்தமிடுவதோ அல்லது தொட்டு கையை முத்தமிடுவதோ அல்லது தொட வாய்ப்புக் கிடைக்காத நேரத்தில் அதன் பக்கம் கையை உயர்த்திக் காட்டி அல்லாஹுஅக்பர் என்று கூறுவதோ கூடாது. முந்திய மூன்று சுற்றுக்களிலும் "ரம்ல்" செய்வது சுன்னத்தாகும். "ரம்ல்" என்பது கால் எட்டுக்களை கிட்ட வைத்து வேகமாக நடப்பதற்குச் சொல்லப்படும். மற்ற நான்கு சுற்றுக்களையம் சாதாரணமான நடையில் நடப்பது. "ரம்ல்" செய்வது ஆண்களுக்கு மாத்திரம்தான் சுன்னத்தாகும். பெண்களுக்கல்ல.


ஒவ்வொரு சுற்றுக்களுக்கும் மத்தியில் குறிப்பிட்ட துஆக்கள் எதுவும் இல்லை, விரும்பிய துஆக்களைக் கேட்கலாம். தஸ்பீஹ், திக்ர் செய்தல், குர்ஆன் ஓதுதல் போன்றவைகளை, செய்து கொள்ளலாம். ருக்னுல் யமானியிலிருந்து ஹஜருல் அஸ்வத் கல் பொருத்தப்பட்டிருக்கும் மூலை வரையுள்ள இடத்தில்

 

رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَاحَسَنَةًوَفِي اْلآخِرَةِ حَسَنَةً وَقِنَاعَذَابَ النَّارِ

 

"ரப்பனா ஆத்தினா ஃபித்துன்யா ஹஸனத்தன் வஃபில் ஆகிரத்தி ஹஸனத்தன் வகினா அதாபன்னார்"

 

என்ற துஆவை ஓதுவது சுன்னத்தாகும். ஒவ்வொரு சுற்றை ஆரம்பிக்கும் போதும் ஹஜருல் அஸ்வத் கல்லுக்கு நேராக வரும்போது தக்பீர் (அல்லாஹுஅக்பர் என்று) கூறுவது சுன்னத்தாகும். தவாப் செய்து முடிந்ததும் திறந்த வலது தோள்புத்தை மூடிக்கொள்ள வேண்டும். பின்பு மகாமுல் இப்ராஹிமுக்குப் பின் சென்று தவாபுடைய சுன்னத் இரு ரக்அத்துகளை தொழ வேண்டும். முந்திய ரக்அத்தில் சூரத்துல் பாத்திஹாவுக்குப்பின் சூரத்துல் காஃபிரூனும் (குல்யாஅய்யுஹல் காஃபிரூன்) இரண்டாவது ரக்அத்தில் சூரத்துல் பாத்திஹாவுக்குப்பின் சூரத்துல் இக்லாஸையும் (குல்ஹுவல்லாஹுஅஹது) ஓதுவது சுன்னத்தாகும். முகாமுல் இபுறாஹிமுக்குப்பின் இட நெருக்கடியாக இருந்தால் கிடைக்கும் இடத்தில் தொழுதுகொள்ளலாம்.


ஸஃயி


ஸஃயி என்பது ஸஃபா மர்வா மலைகளுக்கு மத்தியில் ஏழு சுற்றுக்கள் சுற்றுவதாகும். தவாப் முடிந்த பின் ஸஃயி செய்வதற்காக ஸஃபா மலைக்குச் செல்லவேண்டும். ஸஃபா மலையடிவாரத்தை அடைந்ததும்

 إِنَّ الصَّفَا وَالْمَرْوَةَ مِنْ شَعَائِرِ اللهِ


என்னும் ஆயத்தை நபி (ஸல்) அவர்கள் ஓதிவிட்டு அல்லாஹ் எதைக்கொண்டு ஆரம்பித்தானோ அதைக் கொண்டு நாமும் ஆரம்பிப்போம் என்று சொல்லி ஸஃபா மலை மீது கஃபத்துல்லாவை பார்க்கும் அளவுக்கு ஏறி கிப்லாவை முன்னோக்கி அல்லாஹ்வை ஒருமைப்படுத்தி பெருமைப்படுத்தி அவனைப்புகழ்ந்து

 

لاَ إِلهَ إِلاَّ اللهُ وَحْدَهُ لاَ شَرِيْكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ يُحْيِيْ وَيُمِيْتُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيْرٍ، لاَ إِلهَ إِلاَّ اللهُ وَحْدَهُ، أَنْجَزَ وَعْدَهُ، وَنَصَرَ عَبْدَهُ، وَهَزَمَ اْلأَحْزَابَ وَحْدَهُ


லாஇலாஹா இல்லல்லாஹு வஹ்தஹு லாரீக்க லஹ், லஹுல் முல்க்கு வலஹுல் ஹம்து யுஹ்யீ வயுமீத்து வஹுவ அலா குல்லி ஷைய்யின் கதீர். லாஇலாஹா இல்லல்லாஹுவஹ்தஹ், அன்ஜஸ வஃதஹ், வநஸர அப்தஹ், வஹஸமல் அஹ்சாப வஹ்தஹ்.


என்னும் திக்ருகளை ஓதி இடையே துஆக்களும் செய்தார்கள். இப்படி மூன்று தடவைகள் செய்தார்கள். (அபூதாவூத், நஸாயி, இப்னுமாஜா, தாரமி, தப்ரானி)

 

இந்த திக்ருகளை நாமும் ஓதி இவைகளுக்கு இடையே நமக்காக துஆக்கள் செய்வதும் சுன்னத்தாகும். இன்று சிலர் தொழுகைக்குத் தக்பீர் கூறுவது போல் இரு கைகளையும் கஃபத்துல்லாவின் பக்கம் உயர்த்திக் காட்டிவிட்டுச் செல்கின்றார்கள். இது சுன்னத்தான முறையல்ல. துஆவுக்கு மாத்திரமே கையை உயர்த்த வேண்டும். பின்பு ஸஃபா மலையிலிருந்து இறங்கி மர்வாவை முன்னோக்கிச் செல்ல வேண்டும், முதல் பச்சை விளக்கு பொருத்தப்பட்ட இடத்திலிருந்து மறு பச்சை விளக்கு பொருத்தப்பட்ட இடம் வரைக்கும் சிறிது வேகமாக ஓட வேண்டும். அதன்பிறகு சாதாரணமாக நடக்க வேண்டும். இப்படி வேகமாக ஓடுவது ஆண்களுக்கு மட்டும்தான் பெண்களுக்கல்ல. மர்வா மலையை அடைந்ததும் அதன்மீது ஏறி கிப்லாவை முன்னோக்கி ஸஃபா மலையில் செய்தது போன்றே செய்வது சுன்னத்தாகும். இத்தோடு ஒரு சுற்று முடிவுறுகின்றது. பின்பு மர்வாவிலிருந்து ஸஃபா வரைக்கும் செல்வது, இங்கும் இரு பச்சை விளக்குகளுக்கு மத்தியில் சற்று வேகமாக ஓடுவது சுன்னத்தாகும். ஸஃபா மலையை அடைந்தால் இரண்டாவது சுற்று முடிவுறுகிறது. இப்படி ஏழு சுற்றுக்கள் சுற்ற வேண்டும், மர்வாவில்தான் கடைசிச் சுற்று முடிவுறும். ஒவ்வொரு சுற்றுக்கும் இடையில் தனிப்பட்ட பிரார்த்தனைகள் இல்லை.

 

விரும்பிய பிரார்த்தனைகள், திக்ருகள், குர்ஆன் போன்றவைகளை ஓதலாம். இப்படிப்பட்ட சிறப்பான இடங்களில் மனமுருக அல்லாஹ்விடத்தில் பிரார்த்தியுங்கள். தவாப் மற்றும் ஸஃயியை கீழ் தளத்தில் செய்ய முடியாவிட்டால் (கூட்டமாக இருந்தால்) மேல்மாடியில் செய்து கொள்ளலாம்.

 

ஸஃயின் ஏழு சுற்றுக்களும் முடிவடைந்தபின் ஆண்கள் மொட்டை அடித்துக் கொள்ள வேண்டும், இதுவே சிறந்த முறையாகும். மொட்டை அடிக்காதவர்கள் முடியை குறைத்துக் கொள்ள வேண்டும். முடியை குறைத்துக் கொள்வதென்பது இரண்டு அல்லது மூன்று இடங்களில் சில முடிகளை மட்டுமே கத்தரிப்பது என்பதல்ல, மாறாக தலையில் உள்ள எல்லா முடிகளும் கொஞ்ச அளவுக்காவது கத்தரிக்கப்பட வேண்டும், இதுவே நபிவழியாகும். பெண்கள் தங்களின் தலைமுடியின் நுனியில் விரல் நுனியளவுக்கு வெட்டிக் கொள்ள வேண்டும், இதுவே அவர்களுக்கு சுன்னத்தான முறையாகும், இத்துடன் உம்ராவின் செயல்கள் பரிபூரணமடைந்துவிட்டன. அல்லாஹ் நமது உம்ராவையும் மற்ற அமல்களையும் ஏற்றுக் கொள்வானாக.
 

குறிப்பு:- தவாஃபிலும் ஸஃயிலும் ஏழு சுற்றுக்களையும் ஒரே நேரத்தில் சுற்ற முடியாதவர்கள் இடையில் களைப்பாறிவிட்டு பின்பு மீதமுள்ள சுற்றுக்களைத் தொடருவதில் தவறில்லை.


ஹஜ் செய்யும் முறைகள்


ஹஜ்ஜின் வகைகள் மூன்று
 

1. ஹஜ்ஜுத்தமத்துஃ

2. ஹஜ்ஜுல் கிரான்

3. ஹஜ்ஜுல் இஃப்ராத்


ஹஜ்ஜுத் தமத்துஃ :-


ஹஜ்ஜுடைய மாதத்தில் (வ்வால், துல்கஃதா, துலஹஜ்) ஹஜ்ஜுக்கான உம்ராவைச் செய்து அதே வருடத்தில் ஹஜ்ஜையும் செய்வதற்குச் சொல்லப்படும். ஹஜ்ஜுக்குச் செல்லும்போது குர்பானி கொடுக்கும் பிராணியை, தன்னுடன் கூட்டிக் கொண்டு செல்லாதவர்களுக்கு இதுவே சிறந்த முறையாகும். ஹஜ்ஜுத்தமத்துஃ செய்பவர் உம்ராவை முடித்துவிட்டால் ஹஜ்ஜுக்காக நிய்யத் வைக்கும் வரை, இஹ்ராமினால் ஹராமாக்கப்பட்டிருந்த அனைத்தும் ஹலாலாகிவிடும், துல்ஹஜ் 8-ஆம் நாள் காலையில் தங்கியிருக்கும் இடத்தில் இருந்தே ஹஜ்ஜுக்கு நிய்யத் வைத்துக் கொண்டு இஹ்ராமை அணிந்து மினாவிற்குச் செல்ல வேண்டும்.


ஹஜ்ஜுல் கிரான் :-


ஹஜ்ஜுடைய மாதத்தில் ஹஜ்ஜுக்கும் உம்ராவுக்கும் சேர்த்து ஒரே நிய்யத்து வைப்பது. யார் தன்னுடன் குர்பானிக்குரிய பிராணியை, கொண்டு செல்கின்றார்களோ அவர்களுக்கு இதுவே சிறந்த முறையாகும். இந்த முறையில்தான் நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுசெய்தார்கள்.


ஹஜ்ஜுல் இஃப்ராத் :-


இம்முறையில் குர்பானி கடமையில்லை. ஹஜ்ஜுடைய மாதத்தில் ஹஜ்ஜுக்கு மட்டும் நிய்யத்து வைப்பதாகும்.

 

கிரான் மற்றும் இஃப்ராத் முறைகளில் ஹஜ் செய்பவர்கள் மக்கா வந்ததும் தவாப் செய்ய வேண்டும். இதற்கு தவாபுல் குதூம் என்று சொல்லப்படும். தவாபுல் குதூமுக்குப் பின் ஸஃயி செய்பவர்கள் 10-ஆம் நாள் தவாபுல் இஃபாலாவுக்குப் பின் ஸஃயி செய்யத்தேவையில்லை. இப்போது ஸஃயி செய்யாதவர்கள் தவாபுல் இஃபாலாவுக்குப்பின் ஸஃயி செய்தே ஆகவேண்டும்.


துல்ஹஜ் பிறை 8-ஆம் நாள்


மேலே கூறப்பட்ட மூன்று முறைகளில் ஹஜ் செய்பவர்களும் துல்ஹஜ் பிறை எட்டாம் நாள் மினாவிற்குச் செல்ல வேண்டும். மினாவில் லுஹர், அஸர், மஃரிப், இஷா, ஸுப்ஹுத் தொழுகைகளை உரிய நேரத்தில் தொழ வேண்டும். நான்கு ரக்அத்துத் தொழுகைகளை இரண்டாக சுருக்கித் தொழவேண்டும். இப்படித்தான் நபி ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்கள் தொழுதார்கள்.


துல்ஹஜ் பிறை 9-ஆம் நாள்


துல்ஹஜ் பிறை ஒன்பதாம் நாள் சூரியன் உதித்தபின் அரஃபா செல்ல வேண்டும். அரஃபா சென்றதும் அரஃபா எல்லையை உறுதிப் படுத்தியபின் மஃரிப் தொழுகையின் நேரம் வரும் வரை அங்கேயே தங்கி இருப்பது அவசியமாகும். லுஹருடைய நேரம் வந்ததும் பாங்கும், இகாமத்தும் கூறி லுஹரை இரண்டு ரக்அத்தாக சுருக்கித் தொழ வேண்டும். லுஹர் தொழுகை முடிந்ததும் இகாமத் கூறி அஸர் தொழுகையையும் இரண்டு ரக்அத்தாக சுருக்கி லுஹருடன் முற்படுத்தித் தொழ வேண்டும். முன் பின் சுன்னத்துக்கள் இல்லை. தொழுகை முடிந்ததும் ஓர் இடத்தில் அமர்ந்து வணக்கத்தில் ஈடுபடவேண்டும். அரஃபாவுடைய தினம் மிக, சிறப்பான தினமாகும். ஹஜ் என்றால் அரஃபாவில் தங்குவதுதான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஹாஜிகளின் இத்தியாகத்தைப் பார்த்து மலக்குகளிடம் அல்லாஹ் பெருமைப்படும் நாளாகும். ஆகவே, அங்குமிங்கும் அலைந்து திரியாமல் உருக்கமான முறையில் உங்களின் ஈருலக வெற்றிக்காகவும், உலக முஸ்லிம்களுக்காகவும் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யுங்கள். அந்நாளில் செய்யும் வணக்கங்களில் மிக மேலானது துஆச் செய்வதாகும்.
நபி (ஸல்) வஸல்லம் அவர்கள் (தொழுகையை முடித்து விட்டு,) அரஃபா மலையடிவாரத்தில் நின்றவர்களாக, கிப்லாவை முன்னோக்கி சூரியன் மறையும் வரை துஆச்செய்தார்கள். (முஸ்லிம்)
அந்நாளில் செய்யும் திக்ருகளில் மிகச் சிறந்தது பின்வரும் திக்ராகும். நானும் எனக்கு முன்வந்த நபிமார்களும் கூறியவையில் மிகச் சிறந்தது

 

لااِلَهَ إِلاَّ اللهُ وَحْدَهُ لاَشَرِيْكَ لَهُ ، لَهُ الْمُلْكُ، وَلَهُ الْحَمْدُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءِ قَدِيْرٍ .


லாஇலாஹா இல்லல்லாஹு வஹ்தஹு லாரீக்க லஹ், லஹுல் முல்க்கு வலஹுல் ஹம்து வஹுவ அலா குல்லி ஷைய்யின் கதீர். என நபி (ஸல்) வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

 

அரஃபாவுடைய எல்லைக்குள் எங்கும் தங்கிஇருக்கலாம். ஜபலுர் ரஹ்மாவிற்க்குப் போய் அங்கிருந்து பிரார்த்தனை செய்யவேண்டும் என்று நினைத்து, பல சிரமங்களுக்கு மத்தியில் அங்கு சென்று அன்றைய நாளையே வீணாக்கிவிடாமல் கிடைத்த இடத்தில் அமர்ந்து, ஒவ்வொரு நொடிப்பொழுதிலும் முடியுமான அமல்களைச் செய்யுங்கள். நபி (ஸல்) அவர்கள் ஜபலுர்ரஹ்மா மலைமீது ஏறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. "நான் இந்த இடத்தில்தான் தங்கினேன், அரஃபாவின் எல்லைக்குள் எங்கும் தங்கலாம்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (அபூதாவூத், அஹ்மத்)


நபி (ஸல்) அவர்களே அரஃபாவின் எல்லைக்குள் எங்கு தங்கினாலும் ஒரே நன்மைதான் என்று சொல்லியிருக்கும் போது எதற்காக ஜபலுர்ரஹ்மாவிற்குச் செல்ல வேண்டும்? ஹாஜிகள் இதை கவனத்தில் கொள்வது அவசியம்.


குறிப்பு : யார் அரஃபா எல்லைக்கு வெளியில் தங்கி இருக்கின்றாரோ அவருடைய ஹஜ்ஜு ஏற்கப்படாது, இன்னும் அரஃபா தினத்தன்று ஹாஜிகள் நோன்பு நோற்கக்கூடாது.
முஸ்தலிஃபாவில் இரவில் தங்குவது


ஒன்பதாம் நாளின் சூரியன் மறைந்ததும் தல்பியா கூறியவர்களாக அமைதியான முறையில் முஸ்தலிஃபா செல்ல வேண்டும். முஸ்தலிஃபா சென்றதும் ஓர் பாங்கு இரண்டு இகாமத்தில் மக்ரிபையும் இஷாவையும் சேர்த்து இஷாவை இரண்டு ரகஅத்தாக சுருக்கித் தொழ வேண்டும். முன் பின் சுன்னத்துக்கள் இல்லை. சுப்ஹுவரை அங்கு தங்குவது அவசியமாகும். முஸ்தலிஃபாவிற்குள் எங்கும் தங்கலாம்.
நான் இங்குதான் தங்கினேன், முஸ்தலிஃபாவிற்குள் எங்கும் தங்கலாம் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

 

நோயாளிகள், பெண்கள் நடு இரவுக்குப்பின் அவர்கள் விரும்பினால் மினா செல்லலாம். நபி (ஸல்) அவர்கள் இதை அனுமதித்துள்ளார்கள்.


சுபஹுடைய நேரம் வந்ததும் சுபஹுத் தொழுகையை தொழுதுவிட்டு சூரியனின் மஞ்சள் நிறம் வரும் வரை அல்லாஹ்வை, போற்றிப்புகழ்ந்து அவனைப் பெருமைப்படுத்தக்கூடிய திக்ருகளைக் கூறுவதும்; கிப்லாவை முன்னோக்கி துஆச் செய்வதும் சுன்னத்தாகும்.


நபி (ஸல்) அவர்கள் மஸ்அருல் ஹராம் என்னும் மலைமீது ஏறி கிப்லாவை முன்னோக்கி நின்று சூரியனின் மஞ்சள் நிறம் வரும் வரை நின்ற நிலையில் பிரார்த்தனை செய்தார்கள்.(அபூதாவூத்)
இன்னும் ஓர் அறிவிப்பில்:-


அல்லாஹ்வைப் போற்றிப்புகழ்ந்து அல்லாஹுவைப் பெருமைப்படுத்தி, ஒருமைப்படுத்தும் திக்ருகளை ஓதினார்கள்.


துல் ஹஜ் பிறை 10-ஆம் நாள்


சூரியன் உதயமாகுவதற்கு முன் முஸ்தலிஃபாவிலிருந்து புறப்பட்டு தல்பியா கூறியவர்களாக மினா வர வேண்டும். 10-ஆம் நாள் மினாவில் செய்யும் நான்கு அமல்கள்.
1- ஜம்ரத்துல் அகபாவிற்கு மாத்திரம் ஏழு கற்களை வீசுவது.
2- குர்பானி கொடுப்பது.
3- முடி எடுப்பது.
4- தவாபுல் இஃபாலா செய்வது.


சொல்லப்பட்ட வரிசைப்பிரகாரம் செய்வதே சுன்னத்தாகும். ஒன்றைவிட மற்றொன்றை முற்படுத்தியோ பிற்படுத்தியோ செய்தாலும் தவறில்லை. பத்தாம் நாள் நபி (ஸல்) அவர்களிடம் பல ஸஹாபாக்கள் வந்து ஒன்றை முற்படுத்தி செய்துவிட்டேன் அல்லாஹ்வின் தூதரே என்று கேட்கும் போதெல்லாம் பரவாயில்லை என்றே நபி (ஸல்) அவர்கள் விடையளித்தார்கள்.


கல் எறிவது


பத்தாம் நாள் எறியும் கற்களை காலை சூரிய உதயத்திலிருந்து ளுஹர் நேரத்துக்குள் எறிய வேண்டும். இந்த நேரத்திற்குள் எறிய முடியாதவர்கள் இதற்குப் பின்னும் எறியலாம்.


பத்தாம் நாள் ஒரு நபித்தோழர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே! மாலையான பின்புதான் நான் கல் எறிந்தேன் என்றார், பரவாயில்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி) எறியும் கல்லின் அளவு சுண்டுவிரலால் வீசும் கல் அளவிற்கு இருக்க வேண்டும். அதை ஒவ்வொரு கற்களாக "அல்லாஹுஅக்பர்" என்று சொல்லிக் கொண்டு எறிய வேண்டும். ஏழு கற்களையும் ஒரே தடவையில் எறியக்கூடாது.


"சுண்டு விரலால் வீசக்கூடிய கற்களைப் போன்று ஏழு கற்களை நபி (ஸல்) அவர்கள் வீசினார்கள். ஒவ்வொரு கற்களை வீசும் போதும் தக்பீர் கூறினார்கள்" என ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (அபூதாவூத், பைஹகி)


கல் எறிவதற்கு முடியாத நோயாளி மற்றும் பலவீனர்களின் கல்லை இன்னும் ஒருவர் அவருக்குப் பகரமாக எறியலாம். ஏறியக்கூடியவர் அவ்வருடம் ஹஜ்ஜு செய்யக்கூடியவராக இருக்க வேண்டும். அவருடைய கல்லை எறிந்த பின்புதான் மற்றவரின் கல்லை எறிய வேண்டும். தனக்கு கல் எறிய சக்தி இருக்கும் போது பிறரை எறியச் சொல்லக்கூடாது.


குர்பானி கொடுப்பது


தமத்துஃ மற்றும் கிரான் முறைப்பிரகாரம் ஹஜ் செய்பவர்கள் கல் எறிந்ததற்குப் பிறகு குர்பானி கொடுக்க வேண்டும். அதாவது ஒட்டகம், மாடு, ஆடு இவைகளில் ஒன்றை அல்லாஹ்வுக்காக அறுப்பது. ஏழு பேர் சேர்ந்து ஓர் ஒட்டகத்தை அல்லது ஒரு மாட்டை அறுக்கலாம். ஆடு கொடுப்பதாக இருந்தால் ஒருவருக்கு ஒன்று வீதம் கொடுக்க வேண்டும். இஃப்ராது முறையில் ஹஜ் செய்தவருக்கு குர்பானி கொடுக்க வேண்டிய அவசியமில்லை. குர்பானியை மினாவிலும், மக்காவின் எல்லைக்குள் எங்கும் அறுக்கலாம், ஆனால் ஹரம் எல்லைக்கு வெளியில் அறுக்கக்கூடாது. "நான் இந்த இடத்தில்தான் குர்பானி கொடுத்தேன். மினாவில் எங்கும் குர்பானி கொடுக்கலாம். மக்காவின் தெருக்கள் எல்லாம் நடக்கும் பாதையும் குர்பானி கொடுக்கும் இடமுமாகும்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத், அபூதாவூத்)


குர்பானி இறைச்சியிலிருந்து அதைக் கொடுத்தவரும் உண்ணலாம்.


குர்பானி கொடுக்கும் இறைச்சியிலிருந்து மினாவுடைய மூன்று நாட்களை (பிறை 11,12,13) தவிர (வேறு நாட்களில்) நாங்கள் உண்ணாமலிருந்தோம். நீங்களும் (அந்த இறைச்சியைச்) சாப்பிட்டு, சேமித்தும் வைத்துக் கொள்ளுங்கள் என நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு அனுமதித்த போது நாங்களும் சாப்பிட்டோம், சேமித்தும் வைத்தோம். மதீனாவிற்கும் அவ்விறைச்சியை கொண்டு செல்லும் அளவு எங்களிடம் இருந்தது என ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (அஹ்மத்)
குர்பானி கொடுப்பதற்கு வசதியற்றவர் ஹஜ்ஜுடைய நாட்களில் மூன்று நோன்புகளும், ஊர்; திரும்பிய பின் ஏழு நோன்புகளும் நோற்க வேண்டும்.


தலை முடி எடுப்பது


குர்பானி கொடுத்த பின் தலை முடியை எடுக்க வேண்டும். (முடி எடுக்கும் முறை முன்னால் சொல்லப்பட்டுவிட்டது) முடியை எடுத்ததும் இஹ்ராமிலிருந்து நீங்கிக் கொள்ளலாம். அதாவது கணவன் மனைவி தொடர்பைத்தவிர இஹ்ராத்தினால் தடுக்கப்பட்டிருந்தவைகள் எல்லாம் ஆகுமாகிவிடும். தவாபுல் இஃபாலாவைச் (ஹஜ்ஜுடைய தவாபை) செய்துவிட்டால் கணவன் மனைவி உறவும் ஆகுமாகிவிடும்.


தவாபுல் இபாலா


தலை முடி எடுத்த பின் குளித்து மணம்பூசி தனது வழமையான ஆடையை அணிந்து கொண்டு தவாபுல் இஃபாலா செய்வதற்காக மக்கா செல்ல வேண்டும். தமத்துஆன முறையில் ஹஜ் செய்பவர்கள் தவாபுல் இஃபாலாவை முடித்துவிட்டு ஹஜ்ஜுக்கான சஃயும் செய்ய வேண்டும். கிரான் மற்றும் இஃப்ராதான முறையில் ஹஜ் செய்பவர்கள் மக்கா வந்தவுடன் செய்த தவாபுல் குதூமுக்குப் பின் சஃயி செய்திருந்தால் இப்போது தவாபுல் இஃபாலா மாத்திரம் செய்தால் போதும், சஃயி செய்யத் தேவையில்லை. தவாபுல் குதூமுக்குப் பின் சஃயி செய்யவில்லையென்றால் இப்போது (தவாபுல் இஃபாலாவுக்குப் பின்) சஃயி செய்தே ஆக வேண்டும். தவாப் மற்றும் சஃயை முடித்ததும் மினா சென்று 11-ஆம் இரவில் மினாவில் தங்குவது அவசியமாகும்.


துல் ஹஜ் பிறை 11-ஆம் நாள்


11-ஆம் நாள் ளுஹருடைய நேரம் வந்ததிலிருந்து சூரியன் மறைவதற்கு முன் மூன்று ஜம்ராக்களுக்கும் முறையே ஏழு கற்கள் வீதம் எறிய வேண்டும். முதலில் சிறிய ஜம்ராவிற்கும், இரண்டாவது நடு ஜம்ராவிற்கும், மூன்றாவது பெரிய ஜம்ராவிற்கும் எறிய வேண்டும். முதலாவது ஜம்ராவிற்கு கல் எறிந்த பின் வலது பக்கம் சற்று முன்னால்; சென்று கிப்லாவை முன்னோக்கி துஆச் செய்வது சுன்னத்தாகும். இரண்டாவது ஜம்ராவிற்கு கல் எறிந்த பின் இடது பக்கம் சற்று முன்னால் சென்று கிப்லாவை முன்னோக்கி துஆச் செய்வது சுன்னத்தாகும். மூன்றாவது ஜம்ராவிற்க்குப்பின் துஆச் செய்வது சுன்னத்தல்ல.


துல் ஹஜ் பிறை 12-ஆம் நாள்


12-ஆம் இரவும் மினாவில் தங்குவது அவசியமாகும். 12-ஆம் நாளும் 11-ஆம் நாளைப் போன்றே மூன்று ஜம்ராக்களுக்கும் ளுஹர் தொழுகையின் நேரத்திற்குப் பின் கல் எறிய வேண்டும். 12-ஆம் நாளோடு ஹஜ்ஜுக் கடமையை முடித்துவிட்டுச் செல்ல விரும்புபவர்கள் சூரியன் மறைவதற்கு முன் மினா எல்லையை விட்டும் வெளியாகிவிட வேண்டும். 13-ஆம் நாளும் மினாவில் தங்க விரும்புபவர்கள் 13-ஆம் இரவும் மினாவில் தங்கிவிட்டு 13-ஆம் நாள் ளுஹர் நேரத்திற்க்குப் பின் மூன்று ஜம்ராக்களுக்கும் கல் எறிந்துவிட்டு மக்கா செல்ல வேண்டும். 10,11,12,13-ஆம் நாட்களில் மினாவில் ஒவ்வொரு தொழுகையையும் உரிய நேரத்தில் தொழ வேண்டும். நான்கு ரக்அத்துத் தொழுகைகளை இரண்டு ரக்அத்துக்களாக, சுருக்கித் தொழ வேண்டும். மாதவிடாய் மற்றும் பிரசவத் தீட்டு ஏற்பட்ட பெண்கள் தவாப் மற்றும் தொழுகையைத்தவிர ஹஜ்ஜுடைய மற்ற எல்லா அமல்களையும் செய்யலாம். சுத்தமானதும் விடுபட்ட தவாபை நிறைவேற்ற வேண்டும்.

தவாபுல் விதா


ஹஜ் கடமையை முடித்துவிட்டு தன்வீடு செல்ல விரும்புபவர்கள் கடைசியாகச் செய்யும் அமல் தவாபுல் விதாவாகும். தவாபுல் விதா என்பது கஃபத்துல்லாவிலிருந்து விடை பெற்றுச் செல்லும் தவாபாகும். அதுவே ஹஜ் செய்பவரின் கடைசி அமலாகும். தவாபுல் இஃபாலாவை முடித்த ஒரு பெண் மாதவிடாய் மற்றும் பிரசவ இரத்தத்தின் காரணமாக தவாபுல் விதாவைச் செய்ய முடியாவிட்டால் அப்பெண்ணிற்கு மாத்திரம் தவாபுல் விதாவை விடுவதற்கு அனுமதி உண்டு. மற்ற எல்லா ஹாஜிகளும் அதை நிறைவேற்றுவது அவசியமாகும். மக்காவிலுள்ள எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு கடைசியாக தவாபுல் விதாவைச் செய்ய வேண்டும். தவாபுல் விதா முடிந்ததும் பயணத்தைத் தொடங்க வேண்டும். இத்துடன் ஹஜ் கடமை முடிவடைகின்றது. சிலர் தவாபுல் விதாவை செய்து விட்டு கல் எறிகின்றார்கள். இது முற்றிலும் தவறாகும். அவர் மீண்டும் தவாபுல் விதா செய்ய வேண்டும். இன்னும் சிலர் தவாபுல் விதாவை முடித்துவிட்டுச் செல்லும் போது கஃபாவை பார்த்துக் கொண்டே பின்னோக்கி வருகின்றார்கள், இதுவும் தவறாகும். அல்லாஹ் நம் அனைவரின் ஹஜ் கடமைகளையும் ஏற்று அன்று பிறந்த பாலகனைப் போன்று தன் தாயகம் திரும்ப நம் அனைவருக்கும் வாய்ப்பளிப்பானாக!
இஹ்ராம் அணிந்தவர் தவிர்க்க வேண்டியவைகள்


1-உடலிலுள்ள முடியையோ, நகங்களையோ எடுப்பது.

2-உடல், ஆடைகள், உணவு, குடிபானம் ஆகியவைகளில் மணம் பூசுவது.
3-பூமியிலுள்ள உயிர்ப்பிராணிகளைக் கொல்வது அல்லது வேட்டையாடுவது, விரட்டுவது.

4-இஹ்ராமிலும், இஹ்ராமில்லாத நிலையிலும் ஹரமின் எல்லைக்குள் உள்ள மரம் செடிகளை வெட்டுவது.

5-தவறி விடப்பட்ட பொருட்களை எடுப்பது. ஆனால் உரியவர்களிடம் கொடுக்க முடியுமாக இருந்தால் மட்டும் எடுக்கலாம்.

6-இஹ்ராம் அணிந்தவர் திருமணம் செய்யவோ, அல்லது முடித்து கொடுக்கவோ, தனக்கோ அல்லது பிறருக்கோ திருமணம் பேசவோ கூடாது. இன்னும் பெண்ணுடன் உடலுறவு கொள்வது, காம உணர்வோடு கலந்துரையாடுவதும் கூடாது.


ஹஜ்ஜுடைய நேரத்தில் உடலுறவு கொண்டால் அந்த ஹஜ்ஜு சேராது. அதற்கு பரிகாரமாக ஓர் குர்பானி கொடுப்பதுடன் அடுத்த வருடம் மீண்டும் ஹஜ்ஜு செய்ய வேண்டும்.


ஆண்கள் மீது மாத்திரம் விலக்கப்பட்டவைகள்
தலையை, துணி போன்றவைகளால் மறைப்பது, சட்டையையோ அல்லது தையல் போடப்பட்ட எந்தவித உடைகளையோ உடம்பில் எந்த இடத்திலாவது அணிவது.
பெண்கள் மீது மாத்திரம் விலக்கப்பட்டவைகள்
இஹ்ராமுடைய நிலையில் பெண்கள் கையுறை அணிவது, முகத்தை புர்காவால் மூடுவது கூடாது. ஆனால் அன்னிய ஆண்களுக்கு முன் இருக்கும் போது முகத்தை மூடிக்கொள்ள வேண்டும்.


அர்கானுல் ஹஜ் (ஹஜ்ஜின் கடமைகள்)


இவைகளைச் செய்யாமல் ஹஜ்ஜுநிறைவேறாது.
 

1-நிய்யத் வைப்பதோடு இஹ்ராம் உடை அணிதல்.

2-அரஃபாவில் தங்குதல்.

3-தவாபுல் இஃபாலா செய்தல்.

4-ஸஃபா மர்வா மலைக்கு மத்தியில் ஹஜ்ஜுடைய ஸஃயி செய்தல்.


ஹஜ்ஜுடைய வாஜிபுகள் (அவசியமானவைகள்)


(1) நபி (ஸல்) அவர்கள் கூறிய எல்லையிலிருந்து இஹ்ராம் அணிதல்.

(2) சூரியன் மறையும் வரை அரஃபாவில் தங்கி இருத்தல்.

(3) 10-ஆம் இரவு முஸ்தலிஃபாவில் தங்குதல்.

(4) 10-ஆம் நாள் காலையில் பெரிய ஜம்ராவிற்கு ஏழு கற்களும், 11, 12-ஆம் நாட்கள் மூன்று ஜம்ராக்களுக்கும் முறையே ஏழேழு கற்கள் வீதம் எறிதல், 13-ஆம் நாள் மினாவில் தங்குபவர்கள் 13-ஆம் நாளும் கல்லெறிய வேண்டும்.

(5) ஆண்கள் முடியை மழிப்பது அல்லது கத்தரிப்பது. பெண்கள் முடியின் நுனியில் விரலின் நுனியளவு கத்தரிப்பது.

(6) 11, 12-ஆம் இரவில் மினாவில் தங்குவது. (13-ஆம் நாள் விரும்பியவர்கள் மினாவில் தங்கலாம். இந்த இரவு தங்குவது அவசியமில்லை, ஆனால் சிறந்தது.)

 

(ஹஜ் செய்யும் போது) கெட்ட செயல்களில் ஈடுபடாமலும், தன் மனைவியோடு இல்லற உறவில் ஈடுபடாமலும் யார் ஹஜ் செய்கின்றாரோ அவர் அன்று பிறந்த பாலகரைப்போன்று (தன் தாயகம்) திரும்பிச் செல்வார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்

 

நன்றி: C.O.C.G வெளியீடு, ஜித்தா


தொடர்புடைய சுட்டிகள்:

bullet

ஹஜ் உம்ரா ஜியாரத் - ஆய்வும் தெளிவும் (16 தலைப்புகளில்)

bullet

துல்ஹஜ் மாதத்தின் முந்தைய 10 நாட்களின் சிறப்புகளும் உழ்ஹிய்யாவின் சட்டங்களும்


ஹஜ் பக்கம் மெய்நிகர் ஹஜ்

ஹஜ் மற்றும் உம்ராவின் சடங்குகளை எவ்வாறு நிறைவேற்றுவது

ஷேக் முஹம்மது அஸ்-சாலிஹ் அல்-உதைமீன் மூலம்

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்




புனித யாத்திரை முறைகள் | உம்ரா | ஹஜ் | நபியின் மசூதிக்குச் செல்வது |
முதற்கட்ட அறிவிப்பு | ஆண்களுக்கான தேவைகள் | சொற்களஞ்சியம்


முன்னுரை

பிரபஞ்சத்தின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். இறுதி நபிமார்கள் மற்றும் தூதர்களான முஹம்மது (ஸல்) அவர்கள் மீதும், அவரது குடும்பத்தினர் மற்றும் மதிப்புமிக்க தோழர்கள் மீதும் சாந்தியும் ஆசீர்வாதமும் உண்டாகட்டும்.

ஹஜ் என்பது சிறந்த வழிபாட்டு முறைகளில் ஒன்றாகும், மேலும் இது மிகவும் உன்னதமான செயல்களில் ஒன்றாகும், ஏனெனில் இது அல்லாஹ் முஹம்மது (ஸல்) அவர்களை அனுப்பிய இஸ்லாத்தின் தூண்களில் ஒன்றாகும். அது இல்லாமல் ஒரு அடியானின் மதம் முழுமையடையாது.

கீழ்க்கண்டவை உண்மையாக இருக்கும்போது மட்டுமே ஒரு வழிபாட்டு முறை ஏற்றுக்கொள்ளப்படும்.

1. மறுமையின் மீதுள்ள ஆசையுடன் ஒருவர் அதை அல்லாஹ்வுக்கு மட்டுமே அர்ப்பணிக்கிறார். மனிதர்களிடையே காணப்பட வேண்டும் என்ற நோக்கத்திலோ அல்லது உலக லாபத்திற்காகவோ இதைச் செய்ய முடியாது.

2. ஒருவர் நபி (ஸல்) அவர்களின் முன்மாதிரியை வார்த்தைகளிலும் செயல்களிலும் பின்பற்றுகிறார். சுன்னாவைப் பற்றிய அறிவைத் தவிர இதை அடைய முடியாது.

புனித யாத்திரையின் வடிவங்கள்

ஹஜ்ஜின் மூன்று வடிவங்கள் உள்ளன:
தமத்து'-இஃப்ராத்-கிரான்

தமத்து': ஒரு யாத்ரீகர் ஹஜ் மாதங்களில் மட்டுமே உம்ராவுக்காக இஹ்ராம் அணிவார், அதாவது அவர் மக்காவை அடைந்ததும், உம்ராவுக்காக தவாஃப் மற்றும் சயீ செய்கிறார். பின்னர் அவர் தனது தலைமுடியை மழித்துக் கொள்கிறார் அல்லது வெட்டுகிறார். துல்-ஹஜ் மாதத்தின் எட்டாவது தர்வியா நாளில், அவர் ஹஜ்ஜுக்கு மட்டும் தனது இஹ்ராம் அணிந்து அதன் அனைத்து தேவைகளையும் நிறைவேற்றுகிறார்.

இஃப்ராத்: ஒரு யாத்ரீகர் ஹஜ்ஜுக்கு மட்டும் இஹ்ராம் அணிவார். அவர் மக்காவை அடைந்ததும், அவர் தனது வருகைக்காக தவாஃப் செய்கிறார், ஹஜ்ஜுக்கு சயீ செய்கிறார். அவர் இஹ்ராமிலிருந்து விலகாததால், அவர் தனது தலைமுடியை மொட்டையடிக்கவோ அல்லது வெட்டவோ இல்லை. அதற்கு பதிலாக, பெருநாள் நாளில் ஜம்ரா அல்-அகாபாவில் கல்லெறிந்த பிறகு வரை அவர் இஹ்ராமில் இருக்கிறார். ஹஜ்ஜுக்கு தவாஃப் செய்த பிறகு வரை ஹஜ்ஜுக்கு தனது சயீயை ஒத்திவைக்க அவருக்கு அனுமதிக்கப்படுகிறது.

குரான்: ஒரு யாத்ரீகர் உம்ரா மற்றும் ஹஜ் இரண்டிற்கும் இஹ்ராம் அணிவார் அல்லது அவர் உம்ராவிற்கு முதலில் இஹ்ராம் அணிவார், பின்னர் ஹஜ்ஜுக்கான தவாஃப் செய்வதற்கு முன் ஹஜ்ஜுக்கான நோக்கங்களைச் செய்கிறார். இஃப்ராத் செய்பவர் மீதான கடமைகள், குரான் செய்யும் ஒருவர் அறுக்க வேண்டும், ஆனால் முந்தையது அவ்வாறு செய்ய கடமைப்படவில்லை என்பதைத் தவிர. மூன்று வடிவங்களில் சிறந்தது 'தமத்து' ஆகும். நபி (ஸல்) அவர்கள் தம்மைப் பின்பற்றுபவர்களைச் செய்ய ஊக்குவித்த வடிவம் இது. ஒரு யாத்ரீகர் கிரான் அல்லது இஃப்ராத் செய்ய எண்ணங்களைச் செய்தாலும், அவர் தனது நோக்கங்களை 'தமத்து' ஆக மாற்ற அனுமதிக்கப்படுகிறார்; அவர் தவாஃப் மற்றும் சயீ செய்த பிறகும் இதைச் செய்யலாம்.

நபி (ஸல்) அவர்கள் தனது தோழர்களுடன் பிரியாவிடை ஹஜ் ஆண்டில் தவாஃப் மற்றும் சயீ செய்தபோது, ​​பலியிடும் விலங்குகளைக் கொண்டு வராத அனைவரும் ஹஜ்ஜுக்கான நோக்கங்களை உம்ராவிற்கான நோக்கங்களாக மாற்றிக்கொள்ளவும், தங்கள் தலைமுடியை வெட்டவும், ஹஜ் வரை இஹ்ராமிலிருந்து விலகவும் கட்டளையிட்டார்கள். "நான் பலியிடும் விலங்குகளைக் கொண்டு வரவில்லை என்றால், நான் உங்களுக்குக் கட்டளையிட்டதைச் செய்திருப்பேன்" என்று கூறினார்கள்.

உம்ரா

ஒரு யாத்ரீகர் உம்ராவிற்கு சடங்கு ரீதியாக தூய்மையாக இருக்க விரும்பினால், அவர் தனது ஆடைகளைக் களைந்துவிட்டு, பாலியல் அசுத்தத்திற்குப் பிறகு, வசதிப்பட்டால், குளிக்க வேண்டும். அவர் தனது தலை மற்றும் தாடியில் சிறந்த எண்ணெயைக் கொண்டு வாசனை திரவியம் பூச வேண்டும். இஹ்ராமுக்குப் பிறகு அதில் எஞ்சியிருப்பதில் எந்தத் தீங்கும் இல்லை.

மாதவிடாய் உள்ள பெண்கள் மற்றும் பிரசவத்திற்குப் பிந்தைய இரத்தப்போக்கு உள்ளவர்கள் உட்பட, ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்கும் இஹ்ராமுக்காக குளிப்பது சுன்னத்தாகும். மாதவிடாய் உள்ளவர்கள் அல்லது பிரசவத்திற்குப் பிந்தைய இரத்தப்போக்கு உள்ளவர்கள் தவிர, குளித்துவிட்டு தன்னைத் தயார்படுத்திக் கொண்ட பிறகு, ஒரு யாத்ரீகர், நேரம் வந்துவிட்டால், கடமையான தொழுகையைத் தொழுகிறார். இல்லையெனில், ஒவ்வொரு முறை வுழு செய்யும்போதும் செய்யப்படும் இரண்டு சுன்னத் ரக்அத்களைத் தொழுவதன் மூலம் அவர் தனது நோக்கத்தை நிறைவேற்றுகிறார்.

அவர் தனது தொழுகையை முடித்ததும், "உம்ராவுக்காக நான் இங்கே இருக்கிறேன், இதோ நான் இருக்கிறேன், ஓ அல்லாஹ், இதோ நான் இங்கே இருக்கிறேன். இதோ நான் இங்கே இருக்கிறேன். உங்களுக்கு எந்த துணையும் இல்லை. இதோ நான் இங்கே இருக்கிறேன். நிச்சயமாக எல்லா புகழும், அருளும், ஆட்சியும் உமக்கே, உங்களுக்கு எந்த துணையும் இல்லை" என்று கூற வேண்டும். [தல்பீயா].

இதைச் சொல்லும்போது ஒரு ஆண் தன் குரலை உயர்த்துகிறான், ஒரு பெண் தன் அருகில் இருப்பவருக்கு மட்டுமே அவள் சத்தம் கேட்கும் வகையில் அதைச் சொல்கிறாள்.

இஹ்ராம் கட்டிய ஒருவர் முடிந்தவரை அடிக்கடி தல்பீயா சொல்ல வேண்டும், குறிப்பாக காலங்களும் இடங்களும் மாறும்போது. உதாரணமாக: பயணத்தின் போது இறங்கும்போது அல்லது ஏறும்போது அல்லது பகல் அல்லது இரவு நெருங்கும்போது. அவர் அல்லாஹ்விடம் அவனது திருப்தியையும், சொர்க்கத்தையும் கேட்க வேண்டும், மேலும் நரக நெருப்பிலிருந்து அல்லாஹ்வின் கருணையில் அடைக்கலம் தேட வேண்டும்.

உம்ராவின் போது இஹ்ராம் அணிந்ததிலிருந்து தவாஃப் செய்யும் வரை தல்பீயா சொல்ல வேண்டும். ஹஜ்ஜின் போது இஹ்ராம் அணிந்ததிலிருந்து பெருநாள் தினத்தன்று ஜம்ரா அல்-அகாபாவில் கல்லெறியும் வரை தல்பீயா சொல்ல வேண்டும்.

ஒரு யாத்ரீகர் புனித மசூதிக்குள் நுழையும் போது, ​​அவர் தனது வலது காலை முதலில் நீட்டி, "அல்லாஹ்வின் பெயரால், அல்லாஹ்வின் தூதர் மீது சாந்தியும் ஆசீர்வாதமும் உண்டாகட்டும். யா அல்லாஹ், என் பாவங்களை மன்னித்து, உன் கருணையின் கதவுகளை எனக்குத் திறந்து விடு. நான் எல்லாம் வல்ல அல்லாஹ்விடமும், அவனது மகத்தான முகத்திலும், அவனது நித்திய ஆதிக்கத்திலும் சபிக்கப்பட்ட சாத்தானிடமிருந்து பாதுகாவல் தேடுகிறேன்" என்று கூறுவார்.

அவர் கருங்கல்லை நெருங்கி, அதைத் தனது வலது கையால் தொட்டு முத்தமிடுகிறார். இது சாத்தியமில்லை என்றால், அவர் கருங்கல்லை நோக்கி அதை சுட்டிக்காட்ட வேண்டும்.

தள்ளியும் தள்ளியும், தீங்கு விளைவித்தும், மற்றவர்களால் தீங்கு விளைவிக்காமலும் இருப்பது நல்லது.

ஒரு யாத்ரீகர் கல்லைத் தொடும்போது, ​​பின்வருமாறு கூற வேண்டும்: "அல்லாஹ்வின் பெயரால், அல்லாஹ் மிகப் பெரியவன். ஓ அல்லாஹ், உன் மீது நம்பிக்கை கொண்டு, உன் வேதத்தின் மீது நம்பிக்கை கொண்டு, உன் மீது விசுவாசம் கொண்டு, உன் நபி முஹம்மது (ஸல்) அவர்களின் வழியைப் பின்பற்றி."

ஒரு யாத்ரீகர் கஅபாவை இடதுபுறமாக வைத்துக்கொண்டு நடக்க வேண்டும். அவர் ருக்ன் அல் யமானியை அடையும் போது அதைத் தொட வேண்டும், ஆனால் முத்தமிடக்கூடாது, மேலும் "எங்கள் இறைவா, எங்களுக்கு இம்மையில் நன்மையையும் மறுமையிலும் நன்மையையும் வழங்குவாயாக, நரக நெருப்பின் தண்டனையிலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக. யா அல்லாஹ், இம்மையிலும் மறுமையிலும் மன்னிப்பும் ஆரோக்கியமும் உன்னிடம் நான் வேண்டுகிறேன்."

ஒவ்வொரு முறை அவர் கருங்கல்லை கடக்கும்போதும், "அல்லாஹ் மிகப் பெரியவன்" என்று சொல்ல வேண்டும்.

அவரது தவாஃபின் மீதமுள்ள நேரத்தில், அவர் தனக்குப் பிடித்தமான பிரார்த்தனைகள், அல்லாஹ்வைப் பற்றிக் குறிப்பிடுதல், குர்ஆனை ஓதுதல் போன்றவற்றைச் சொல்லலாம். ஏனெனில், தவாஃப், சயீ மற்றும் ஜம்ராவில் கல்லெறிதல் ஆகியவை அல்லாஹ்வைப் பற்றிக் குறிப்பிடுவதற்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளன.

இந்த தவாஃபின் போது ஒரு மனிதன் இரண்டு விஷயங்களைச் செய்ய வேண்டும்:

1. தவாஃபின் ஆரம்பம் முதல் இறுதி வரை அல்-ல்த்தெபா'. அல்-ல்த்தெபா' என்றால் ஒருவரின் ரெடாவின் நடுப்பகுதியை அவரது வலது கையின் கீழும் அதன் முனைகளை அவரது இடது தோள்பட்டையின் மீதும் வைப்பதாகும்.

அவர் தவாஃப் செய்து முடித்ததும், அவர் தனது ரெடாவை அதன் அசல் நிலைக்குத் திரும்பச் செய்யலாம், ஏனெனில் இத்தெபாவுக்கான நேரம் தவாஃபின் போது மட்டுமே.

2. முதல் மூன்று சுற்றுகளில் அல்-ரம்ல். அல்-ரம்ல் என்றால் சிறிய அடிகள் மூலம் ஒருவரின் வேகத்தை அதிகரிப்பதாகும். ஒரு யாத்ரீகர் தனது கடைசி நான்கு சுற்றுகளில் சாதாரண வேகத்தில் நடக்க வேண்டும்.

அவர் ஏழு தவாஃப் சுற்றுகளை முடித்ததும், மகாம் இப்ராஹிமை அணுகி, "மேலும் நீங்கள் ஆபிரகாமின் இடத்தை தொழுகைக்கான இடமாக எடுத்துக் கொள்ளுங்கள்" என்று ஓதுகிறார். அத்தியாயம் 2, வசனம் 125 [2:125].

அவர் மகாம் இப்ராஹிமுக்கு அருகில், முடிந்தவரை வசதியாக இரண்டு குறுகிய ரக்அத்களைத் தொழுகிறார். முதல் ரக்அத்தில் அவர் சூரா அல்-காஃபிரூனையும் [அத்தியாயம் 109] இரண்டாவது ரக்அத்தில் சூரா அல்-ல்க்லாஸையும் [அத்தியாயம் 112] ஓதுகிறார்.

இரண்டு ரக்அத்களை முடித்ததும், அவர் கருங்கல்லுக்குத் திரும்பிச் சென்று, வசதிப்பட்டால் அதைத் தொட வேண்டும். அவர் மேஸாவுக்குச் சென்று, அஸ்-சஃபாவை நெருங்கும்போது, ​​"நிச்சயமாக அஸ்-சஃபாவும் அல்-மர்வாவும் அல்லாஹ்வின் ஆலயங்களில் ஒன்றாகும்" என்று ஓத வேண்டும் [2:158].

அவர் கஅபாவைப் பார்க்கும் வரை அஸ்-சஃபாவில் ஏறுகிறார். கஅபாவை நோக்கி கைகளை உயர்த்தி, அல்லாஹ்வைப் புகழ்ந்து, தனக்குப் பிடித்த பிரார்த்தனைகளைச் செய்கிறார். நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு பிரார்த்தனை செய்தார்கள்: "அல்லாஹ்வைத் தவிர வேறு தெய்வம் இல்லை", இடையில் மூன்று முறை பிரார்த்தனை செய்தார்கள்.

அவர் அஸ்-சஃபாவிலிருந்து இறங்கி, பச்சை நிற அடையாளத்தை அடையும் வரை வழக்கமான வேகத்தில் அல்-மர்வாவை நோக்கிச் செல்கிறார். பின்னர் அவர் அடுத்த பச்சை நிற அடையாளத்தை அடையும் வரை வேகமாக ஓட வேண்டும். அவர் வழக்கமான வேகத்தில் அல்-மர்வாவை நோக்கித் தொடர்கிறார். அவர் அதை அடைந்ததும், அவர் அதில் ஏறி, கிப்லாவை நோக்கிச் சென்று, கைகளை உயர்த்தி, அஸ்-சஃபாவில் சொன்னதை மீண்டும் கூறுகிறார். அவர் அல்-மர்வாவிலிருந்து இறங்கி, நடக்க வேண்டிய இடத்தில் நடக்கவும், ஓட வேண்டிய இடத்தில் ஓடவும் கவனமாக இருக்கிறார்.

அவர் ஏழு சுற்றுகள் முடியும் வரை இந்த நடைமுறையைத் தொடர்கிறார். அஸ்-சஃபாவிலிருந்து அல்-மர்வாவுக்குச் செல்வது ஒரு சுற்று, திரும்பி வருவது மற்றொரு சுற்று.

அவர் தனது சயீயின் போது தான் விரும்பிய பிரார்த்தனைகள், குர்ஆன் ஓதுதல் மற்றும் அல்லாஹ்வைப் பற்றி நினைவு கூர்தல் போன்றவற்றை ஓதலாம்.

சயீயை முடிக்கும்போது அவர் தலையை மொட்டையடித்துக் கொள்கிறார். ஒரு பெண் தனது தலைமுடியை விரல் நுனி நீளத்திற்கு வெட்டுகிறார்.

Shaving is preferable, except when Hajj is near and there isn't sufficient time for hair to grow back. In this case it's best to clip so that hair will remain for shaving during Hajj.

With that, Umrah is completed. and a pilgrim is free to dress in other clothing, wear perfume and engage in marital relations, etc.

The Hajj

In the forenoon of the eighth day of Dhul-Hijja, a pilgrim purifies himself once again by bathing as he did before Umrah in the place in which he is staying, if convenient. He puts on his Ihram and says: " Here I am for Hajj. Here I am, oh Allah, here I am. Here I am. You have no partner. Here I am. Surely all praise, grace and dominion is yours, and you have no partners."

If he fears that something will prevent him from completing his Hajj he should make a condition when he makes his intentions, saying: " If I am prevented by any obstacle my place is wherever I am held up." If he has no such fear, he doesn't make this condition.

A pilgrim goes to Mina and there prays Dhuhr, Asr, Magrib, Isha and Fajr, shortening his four unit prayers so as to make them two units each, without combining them.

When the sun rises, he goes to Arafah and there prays Dhuhr and Asr combined at the time of Dhuhr, making each one two units. He remains in Namira Mosque until sunset if possible. He remembers Allah and makes as many supplications as possible while facing the Qibla.

The Prophet (may the peace and blessing of Allah be upon him) prayed thus: "There is no Deity but Allah alone. He has no partner. All dominion and praise are His and He is powerful over all things.

If he grows weary it is permissible for him to engage in beneficial conversation with his companions or reading what he can find of beneficial books, especially those concerning Allah's grace and abundant gifts. This will strengthen his hope in Allah.

He should then return to his supplications and be sure to spend the end of the day deep in supplication because the best of supplication is the supplication of the day of Arafah.

At sunset he goes from Arafah to Muzdalifah and there prays Magrib, Isha, and Fajr. If he is tired or has little water, it is permissible for him to combine Magrib and Isha. If he fears that he will not reach Muzdalifah until after midnight, he should pray before he reaches it for it is not permissible to delay prayer until after midnight. He remains there, in Muzdalifah, making supplications and remembering Allah till just before sunrise.

If he is weak and cannot handle the crowd during Ar-Ramy, it is permissible for him to go to Mina at the end of the night to stone the Jamrah before the arrival of the crowd.

Near sunrise, a pilgrim goes from Muzdalifah to Mina. Upon reaching it he does the following:

a) He throws seven consecutive pebbles at Jamrah Al-Aqaba which is the closest monument to Makkah, saying Greatest," as he : "Allah is the throws each pebble.

b) He slaughters the sacrificial animal, eats some of it, and gives some to the poor. Slaughter is obligatory on the Mutamati and Qiran.

c) He shaves or clips his hair; shaving is preferable. A woman clips her hair the length of a finger tip.

These three should be done in the above order if convenient, but there is no restriction if one precedes another.

With that, one is allowed to come out of Ihram. He can wear other clothing and do everything that was lawful before Ihram except engaging in marital relations.

He goes to Makkah to perform Tawaf Al-lfadha and Sa'yi, also for Hajj. It is Sunnah to put perfume on before going to Makkah.

With the completion of this Tawaf and Sa'yi, a pilgrim is allowed to do everything that was lawful before Ihram, including engaging in marital relations.

After performing Tawaf and Sa'yi, he returns to Mina to spend the nights of the eleventh and twelfth days there.

He stones the three Jamrah in the afternoon of both the eleventh and twelfth days. He starts with the first Jamrah, which is furthest from Makkah, then the middle one, and lastly Jamrah Al-Aqaba. Each one should be stoned with seven consecutive pebbles accompanied by Takbeer. He stops after the first and middle Jamrah to make supplications facing the Qibla. It is not permissible to stone before noon on these two days. It is best to walk to the Jamrah, but riding is permissible.

If he is in a hurry after stoning on the twelfth day, he leaves Mina before sunset. But if he wishes to prolong his stay, which is best, he spends the night of the thirteenth in Mina and stones that afternoon in the same manner as on the twelfth day.

When he is ready to return to his country, he makes Tawaf Al-Wadaa, which is seven circuits around the Ka'bah. Menstruating women and women experiencing postnatal discharge are not obligated to perform Tawaf Al-Wadaa.

Visiting The Prophet's Mosque

1. A pilgrim goes to Madina before or after Hajj with the intention of visiting the Prophet's mosque and praying in it. Prayer there is better than a thousand prayers elsewhere except in the Holy Mosque in Makkah.

2. Upon reaching the mosque he prays two Rakaas of salutation or performs any obligatory prayer that is due.

3. He goes to the grave of the Prophet (may the peace and blessings of Allah be upon him) and he stands before it. He greets him saying the " May the peace, mercy, and blessings of Allah be upon you, oh Prophet. May Allah grant you a good reward on behalf of your people. "

He takes a step or two to his right to position himself before Abu-Bakr and greets him saying : "May the peace, mercy, and blessing of Allah be upon you. oh Abu-Bakr, Caliph of the Messenger of Allah. May Allah be pleased with you and grant you a good reward on behalf of Muhammad's people."

Then he takes a step or two to his right to position himself before Umar and greets him saying: " May the peace, mercy and blessings of Allah be upon you, oh Umar, Prince of the believers. May Allah be pleased with you and grant you a good reward on behalf of Muhammad's people."

4. In a state of purity, he goes to pray in Qubaa Mosque.

5. He goes to Al-Baqee to visit Uthman's grave (may Allah be pleased with him). He stands before it and greets him saying: "May the peace, mercy and blessing of Allah be upon you,

oh Uthman Prince of the believers. May Allah be pleased with you and grant you a good reward on behalf of Muhammad's people." He greets any other Muslims in Al-Baqee.

6. He goes to Uhud and visits the grave of Hamza (may Allah be pleased with him) and the other martyrs there with him. He greets them and preys to Allah to grant them forgiveness, mercy, and pleasure.

Preliminary Notification l

The following is incumbent upon the Muhrim for Hajj or Umrah:

1. That he be committed to Allah's religious obligations upon him such as prayer in its time (in congregation for men).

2. That he avoids what Allah has prohibited such as obscenity, inequity, and disobedience. if anyone undertakes Hajj therein. Let there be no obscenity, nor wickedness, nor wrangling during Hajj ~ [2:197].

3. That he avoids harming the Muslims with words or actions within the Masha'ir or elsewhere.

4. That he avoids all of the restrictions of Ihram:

a. He shouldn't cause the loss of any of his hair or nails. A prick by a thorn and the like is unobjectionable, even if there is bleeding.

b. He shouldn't perfume himself, his clothing, his food or his drink after entering Ihram. He should also abstain from cleansing himself with scented soap. There is no harm in what remains of the effect of perfume used prior to Ihram.

c. He shouldn't touch, kiss, etc. his spouse out of passion and, even worse, shouldn't have sexual intercourse.

e. He shouldn't be wed or propose to a woman for himself or others. f. He shouldn't wear gloves, although there is no harm in wrapping the hands in cloth. This ruling goes for both men and women.

Requirements for Men:

a) He cannot cover his head with something that touches it, although there is no harm in the use of an umbrella, the roof of a car or tent for shade. There is also no harm in carrying his baggage atop his head. b) He cannot wear a shirt, turban, hooded cloak trousers, or shoes. Only if he is unable to obtain an Ezar or sandals can he wear trousers or shoes.

c) He cannot wear anything with the same qualities of the above mentioned such as an Abea', Qubaa, hat, undershirt, etc.

It is permissible for him to wear sandals, rings, glasses, a hearing aid. a watch, worn on his wrist or hung from his neck, or a speech aid. It is permissible for him to cleanse himself with unscented cleansers and to wash and scratch his head and body, even if some of his hair falls unintentionally. In such a case there is no obligation on him because of it.

A woman cannot wear a Niqab or Burqa'. The Sunnah is for her to uncover her face except if men not related to her might see her, in which case it is obligatory for her to cover her face during Ihram and otherwise.

Allah is the giver of success. May His blessings be upon our Prophet Muhammad and all of his family and companions.

By the needy before Allah, Muhammad As-Salih Al-Uthaimeen


Glossary


Abaya': cloak like, woolen wrap.
Abu Bakr: first Muslim Caliph.
Al-Baqee': a place in Madina.
Al-ldhtebaa:placing the middle of the Reda' under the right arm and the ends of it over the left shoulder during Tawaf.
Al-lkhlas: Chapter 112 (Purity of Faith).
Al-Kafirun: Chapter 109 of the Qur'an ( Those who reject Faith).
AlMarwah: name of the hillock where a Muslim begins Sa'yi.
Al-Raml: walking quickly but with small steps during the first three circuits of Tawaf.
Arafah: the most important stop during Hajj, located beyond Muzdalifah.
Ar-Ramy-- The Stoning.
As-Safaa: name of the hillock where a Muslim ends his last lap of Sa'yi.
Asr: the afternoon prayer.
Burqa': a face veil like a Niqab.
Dhul-Hijja: the twelfth month of the Islamic calendar.
Dhuhr: the noon prayer.
Eid: celebration for Muslims.
Ezaar: lower cloth of Ihram.
Fajr: dawn prayer.
Hajj: official Muslim pilgrimage to Makkah.
Hamza: one of the Prophet's uncles and a martyr during the battle of Uhud.
Ifraad: isolated form of Hajj.
Ihram: the ceremonial state of making Hajj or the Hajj garments themselves. Isha night prayer.
Jamrah: Monument in Mina.
Jamrah Al-Aqaba: the monument closest to Makkah.
Ka'bah: the house of Allah in the Holy Mosque in Makkah.
Magrib: dusk prayer.
Maqam Ibrahim: the stepping stone of the prophet Abraham.
Mes'aa: the stretch between As-Safaa and Al-Marwah.
Masha'ir: ceremonial shrines.
Mina: one of the ceremonial shrines, a valley near Makkah.
Muhammad-- the last of the prophets, the prophet of Islam.
Muhrim: a person in Ihram.
Mutamati: a pilgrim performing Hajj Tamattu'.
Muzdalifah: one of the ceremonial shrines of Hajj, between Mina and Arafah.
Namira: mosque in Mina.
Niqab: a face veil revealing the eyes through slashes
Qiran: a pilgrim performing Hajj Qiran.
Qibla: the direction Muslims face to pray.
Qiraan: Accompanied form of Hajj.
Quba: a mosque in Madina, used to be on the outskirts.
Qur'an: the Book of Allah.
Rakaa: a unit of prayer.
Reda': the upper cloth of Ihram.
Rukn Al-Yamani: the corner of the Ka'bah which faces Yemen.
Sa'yi: the walk made between As-Safaa and Al-Marwah.
Sunnah: way of the Prophet.
Surah: a chapter of the Qur'an.
Takbeer: saying "Allahu Akbar ("Allah is Greatest")
Talbeeya: the supplication a Muslim recites once he is in Ihram and has made his intention.
தமட்டு: ஹஜ்ஜின் இன்பமான வடிவம்.
தர்விய்யா: துல்ஹிஜ்ஜாவின் எட்டாவது.
தவாஃப்: கபாவைச் சுற்றி வருதல்
தவாஃப் அல்ஃபதா: ஹஜ்ஜுக்கான தவாஃப்.
தவாஃப் அல்-வதா: பிரியாவிடை தவாஃப்.
உஹுத்: மதீனாவில் உள்ள ஒரு மலையின் பெயர் மற்றும் இந்தப் பெயரில் போர் நடந்த இடம்.
உமர்: இரண்டாவது முஸ்லிம் கலீஃபா மற்றும் விசுவாசிகளின் முதல் இளவரசர்.
உம்ரா-சிறு ஹஜ்: தவாஃப் மற்றும் சாயி ஆகியவற்றின் கலவையாகும்.
உத்மான்: மூன்றாவது முஸ்லிம் கலீஃபா மற்றும் விசுவாசிகளின் இரண்டாவது இளவரசர்.
வுது: கழுவுதல்.


சவுதி அரேபியாவின் தூதரகம்

முகப்பு பக்கம் | புத்தகங்கள் & பிரசுரங்கள் | பதிவிறக்கம் | தகவல் கோரிக்கை | பிரார்த்தனை நேரங்கள் ]

புதன், ஜூன் 04, 2025

அரஃபா நாளின் சிறப்புகள்,

💞 இஸ்லாத்தில் அரஃபா நாளின் சிறப்புகள் பற்றி அறிந்து கொள்ளுவோம் 💞

• மக்காவிற்கு கிழக்கே 12 மைல் தொலைவில் ஒரு மலை உள்ளது! அதைச் சுற்றியுள்ள மைதானத்திற்கு சொல்லப்படும் பெயர் தான் அரஃபா ஆகும்! அரஃபா என்றால் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளுதல் என்று பொருள் ஆகும்!

• அரஃபா மைதானம் எப்போதும் வெட்ட வெளியாகக் காட்சி தரும்! ஆனால் துல்ஹஜ் மாதம் ஒன்பதாம் நாள் வந்த விட்டால் ஹாஜிகள் அனைவரும் ஒன்று கூடும் நாளாக அரஃபா மைதானம் ஆகி விடும்!

• ஒவ்வொரு வருடமும் பல லட்சம் மக்கள் துல் ஹஜ் உடைய 9 வது நாளில் உலகின் பல பாகங்கலிருந்தும் ஹஜ் கடமையை செய்ய மக்காவுக்கு வருகை தரக்கூடிய அனைத்து முஸ்லிம்களையும் ஒன்றிணைக்கக் கூடிய ஒரு ஒப்பற்ற தினம் தான் ‘ அரஃபா தினம் ’ ஆகும்!

• அன்றைய தினத்தில் ‘ அரஃபா மைதானத்தில் ’ அனைவரும் ஒன்று திரண்டு, நிறம், மொழி, குலம், நாடு, பணம், பதவி, சாதி, அமைப்பு அனைத்தையும் துறந்து, வேற்றுமையை இல்லாமல் ஒற்றுமையாக இருப்பார்கள்!

• ஹஜ் செய்ய கூடியவர்கள் கட்டாயம் அரஃபா மைதானத்திற்கு சென்று சிறிது நேரமாவது தங்க வேண்டும் அப்போது தான் ஹஜ் பூர்த்தி ஆகும்! இல்லை என்றால் இவர்களின் ஹஜ் செல்லுபடி ஆகாது!

📚(நூல் : தப்ரானீ : 6302 | ஸஹீஹ் ஜாமிஃ : 5995 | திர்மிதி : 889)

💟 அரஃபா எனும் பெயர் வர காரணம் :

• ஆதம் (அலை) அவர்களும் ஹவ்வா (அலை) அவர்களும் அல்லாஹ் தடுத்த ஒரு செயலை செய்த காரணத்தினால் அல்லாஹ் சொர்க்கத்தில் இருந்து இருவரையும் வெளியேற்றி இருவரையும் தனி தனியாக வெவ்வேறு இடங்களுக்கு அல்லாஹ் உலகில் இறக்கி வைத்தான்!

• பிறகு இருவரும் நீண்ட காலம் பாவ மன்னிப்பு தேடிய பின்பு இருவரையும் அல்லாஹ் மன்னித்து அரஃபா எனும் இடத்தில் தான் அல்லாஹ் சந்திக்க வைத்தான்! அதனாலயே இதற்கு அரஃபா (அறிந்து கொண்ட இடம்) என்னும் பெயர் வந்தது!

• அரஃபா மைதானத்தின் நடுப்பகுதியில் ஒரு மலை உள்ளது இதனை ‘ ஜபலே ரஹ்மத் ’ (அருளின் மலை) என்று அழைப்பார்கள்! இந்த இடத்தில் வைத்து ஆதம் (அலை) அவர்களும் அவர்களின் மனைவி ஹவ்வா (அலை) அவர்கள் மீதும் அல்லாஹ் இரக்கம் காட்டி பாவங்களை மன்னித்தான் அதனாலயே இதற்க்கு அருளின் மலை என்றும் பெயர் வந்தது! 

• இந்த மலையின் மீது ஏறி நின்று தான் நபி (ஸல்) அவர்கள் தங்களின் இறுதிப் பேருரை நிகழ்த்தினார்கள்!

📚(நூல் : ரஹீக் (முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு)

💟 அரஃபா நாளின் சிறப்புகள் :

1) அல்லாஹ் புகழ்ந்து பேசுகிறான் :

அல்லாஹ் கூறியதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

நிச்சயமாக அல்லாஹ், அரஃபா  தினத்தன்று முதல் வானத்திற்கு வருகை தந்து, வானவர்களிடம் அரஃபா தினத்தன்று ஒன்று கூடியிருக்கின்றவர்களைப் பற்றி பெருமை பாராட்டி பேசுகின்றான்!

"எனது மலக்குமார்களே! எனது அடியார்களை நோக்கி பாருங்கள்! அவர்களில் அந்தஸ்த்து உள்ளவர்கள், அந்தஸ்து இல்லாதவர்கள் என அனைவரும் பரட்டை தலையுடையவர்களாகவும், புழுதி படிந்தவர்களாகவும் என்னிடம் வந்துள்ளார்கள்!

📚(நூல் : முஸ்னத் அஹ்மத் : 7089)

2) நரக விடுதலை உறுதி செய்யும் நாள் :

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

அல்லாஹ், அரஃபா (துல்ஹஜ் 9ஆவது) நாளில் அடியார்களுக்கு நரக விடுதலையளிக்கும் அளவிற்கு வேறெந்த நாளிலும் நரக விடுதலை அளிப்பதில்லை!

📚(நூல் : ஸஹீஹ் முஸ்லிம் : 2623)

• ஹதீஸ் விளக்கம் : இந்த நாளில் நாம் செய்ய கூடிய நல்ல அமல்கள் மூலம் அல்லாஹ் நரகில் விடுதலையை உறுதி படுத்துகிறேன்!

3) துஆ ஏற்ற கொள்ளப்படும் சிறந்த நாள் :

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

அரஃபா நாளின் போது கேட்கப்படும் துஆவே சிறந்த துஆவாகும்! துஆக்களில் சிறந்தது அரஃபா நாளின் துஆவாகும்!

📚(நூல் : சுனன் திர்மிதி : 3585)

(தரம் : ஹசன் : அல்பானி (ரஹ்) : ஸஹீஹு அத் தர்கீப் வத் தர்ஹீப் : 1536) 

• நாம் இந்த அரஃபா நாளில் அதிகம் அதிகம் நமக்கும் நம்முடைய குடுபத்திற்கு உறவினர்கள் நண்பர்கள் மற்றும் முழு முஸ்லீம் சமுதாயத்திற்கு இம்மை மறுமைக்கும் அதிகம் துஆ செய்ய வேண்டும்!

4) இஸ்லாம் அரஃபா நாளில் தான் முழுமை பெற்றது :

• இஸ்லாம் அரஃபா நாளில் தான் முழுமை பெற்று விட்டது! இதற்க்கு பிறகு இஸ்லாத்தில் நன்மை காரியம் என்று ஒன்றை சேர்க்கவோ அல்லது இஸ்லாத்தில் உள்ள ஒரு செயலை நீக்கவோ யாருக்கும் அனுமதி கிடையாது!

• ஆனால் இஸ்லாம் முழுமை பெற்றாலும் இஸ்லாம் வருவதற்கு முன்பு ஆரம்ப கால மக்களிடம் எப்படி அறியாமை மூடநம்பிக்கை ஷிர்க் ஆனா செயல்கள் இருந்த அதே நிலை இஸ்லாத்தில் மீண்டும் ஏற்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறி உள்ளார்கள்!

📚(நூல் : சுனன் திர்மிதி : 2629)

இன்றைய தினம் நாம் உங்களுக்கு உங்களுடைய மார்க்கத்தை முழுமையாக்கி வைத்து என்னுடைய அருளையும் உங்கள் மீது முழுமையாக்கி வைத்து விட்டோம்!

 📖(சூரத்துல் : அல் மாயிதா : 03)

• என்ற அல் குர்ஆன் வசனம் அரஃபா நாளின் வெள்ளிக்கிழமை அன்று இறங்கியது! இந்த வசனத்தைக் கேட்ட உமர் (ரழி) கண் கலங்கினார்கள்! நபி (ஸல்) அவர்கள், உமரே! நீங்கள் அழுவதற்கு காரணமென்ன? என வினவினார்கள்!

• அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் ஒவ்வொரு நாளும் மார்க்கத்தை அதிகம் அதிகம் தெரிந்து கொண்டே வந்தோம்!  இப்போது மார்க்கம் முழுமையாக்கப்பட்டு விட்டது! முழுமையான ஒன்று மீண்டும் குறைய ஆரம்பித்து விடுமே என எண்ணி நான் அழுகிறேன்!  என உமர் (ரழி) கூறினார்கள்! அதற்கு நபி (ஸல்) நீங்கள் உண்மை தான் கூறினீர்கள் என்றார்கள்!

📚(நூல் : தப்ஸீர் இப்னு கஸீர் | ஸஹீஹ் முஸ்லிம் : 5742)

5) அல்லாஹ் சத்தியம் செய்த நாட்கள் :

சாட்சிகள் மீதும், சாட்சி சொல்லப்படுவதன் மீதும் சத்தியமாக!

📖(சூரத்துல் : அல் புரூஜ் : 03)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

வாக்களிக்கப்பட்ட நாள் என்பது மறுமைநாளாகும்! சாட்சி சொய்ய வேண்டிய நாள் என்பது அரஃபா தினமாகும்! சாட்சி என்பது ஜுமுஆ தினமாகும்!

📚(நூல் : சுனன் திர்மிதி : 3339)

6) சிறந்த திக்ர் :

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பிரார்த்தனைகளிலேயே மிகவும் சிறந்தது அரஃபா நாளில் செய்யும் பிரார்த்தனை ஆகும்.

நானும், எனக்கு முன் இருந்த நபிமார்களும் கூறியவற்றில் சிறந்தது “லாஇலாஹ இல்லல்லாஹு, வஹ்தஹு லாஷரீக்க லஹு, லஹுல் முல்க்கு, வலஹுல் ஹம்து, வஹுவ அலா குல்லி ஷய்இன் கதீர்” என்ற திக்ராகும்.

(பொருள்: வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் இல்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணை யாரும் இல்லை. அவனுக்கே ஆட்சியதிகாரம் உரியது. அவனுக்கே புகழ் அனைத்தும் உரியது. அவன் எல்லாவற்றிற்கும் வலிமையுடையவன்)

7) நபி (ஸல்) அவர்களின் கடைசி உரை :

• நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ரி 10 யில் மட்டும் தங்கள் வாழ்நாளில் ஒரே ஒரு முறை ஹஜ் மட்டும் செய்து உள்ளார்கள்! இது தான் நபி (ஸல்) அவர்களின் முதல் மற்றும் கடைசி ஹஜ் ஆகும்!

• நபி (ஸல்) அவர்கள் மரணத்திற்கு முன்பு கடைசியாக மக்களுக்uகு ஹிஜ்ரி 10 துல் ஹஜ் 9 வது நாள் அரஃபா நாளில் தான் வரலாற்று சிறப்புமிக்க உபதேசம் செய்தார்கள்!

❤️ அல் குர்ஆன், நபிவழி - இரண்டையும் பின்பற்றுங்கள் :

• மக்களே! சிந்தித்துப் புரிந்து கொள்ளுங்கள்! எனது பேச்சை கவனமாக கேட்டுக் கொள்ளுங்கள்! நான் எனது பிரச்சாரத்தை உங்களுக்கு எடுத்துரைத்து விட்டேன்!

• உங்களிடையே அல்லாஹ்வின் வேதத்தையும் அவனது தூதரின் வழிமுறையும் விட்டுச் செல்கிறேன்! நீங்கள் அவற்றைப் பின்பற்றினால், ஒருபோதும் வழிகெட மாட்டீர்கள்!

• இஸ்லாத்தில் புதிதாக (ஒன்றை) உருவாக்குவதிலிருந்து உங்களை நான் எச்சரிக்கை செய்கின்றேன்! ஏனென்றால் புதிதாக ஏற்படுத்தப்பட்ட அனைத்தும் பித்அத்தாகும், அனைத்து பித்அத்தும் வழிகேடாகும்!

📚(நூல் : இப்னு மாஜா : 3074 | அபூதாவூத் : 4607)

❤️ தலமைக்கு கட்டுப்பட வேண்டும் :

• மக்களே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள் கருப்பு நிற (அபிசீனிய) அடிமை ஒருவர் உங்களுக்குத் தலைவராக ஆக்கப்பட்டாலும் அவர் அல்லாஹ்வின் வேதத்தைக் கொண்டு உங்களை வழி நடத்தி அதை உங்களுக்கிடையில் நிலைநிறுத்தும் காலமெல்லாம் (அவரது சொல்லைக்) கேட்டு நடங்கள்! (அவருக்குக்) கீழ்ப்படியுங்கள்!

(நூல் : ஸுனன் நஸாயி  : 4192 | திர்மிதி : 616)

❤️ இஸ்லாத்தில் ஏற்ற தாழ்வு பார்க்க கூடாது :

• மக்களே! உங்களது இறைவன் ஒருவனே அறிந்து கொள்ளுங்கள்! எந்த ஓர் அரபிக்கும் ஓர் அரபி அல்லாதவரை விடவோ, எந்த ஓர் அரபி அல்லாதவருக்கும் ஓர் அரபியை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை!

• எந்த ஒரு வெள்ளையருக்கும் ஒரு கருப்பரை விடவோ, எந்த கருப்பருக்கும் ஒரு வெள்ளையரை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை!  இறையச்சம் மட்டுமே ஒருவரின் மேன்மையை நிர்ணயிக்கும்!

• நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உங்களில் மிகச் சிறந்தவர் உங்களில் அதிகம் இறையச்சம் உள்ளவர் தான்!

(நூல் : அஸ்ஸில்ஸலதுல் ஸஹீஹா : 2700)

❤️ பெண்களை மதிப்புடன் நடத்துங்கள் :

• கவனியுங்கள்! பெண்கள் விஷயத்தில் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்!  அவர்களுக்கு நன்மையே நாடுங்கள்! அவர்கள் உங்களுக்குக் கட்டுப்பட்டவர்கள்!

• அல்லாஹ்வுடைய அமானிதமாக அவர்களை நீங்கள் பெற்றுள்ளீர்கள்! எப்படி உங்கள் மனைவியர் மீது உங்களுக்கு உரிமைகள் இருக்கின்றனவோ, அதே போல் உங்கள் மனைவியருக்கும் உங்கள் மீது உரிமைகள் இருக்கின்றன!

• அவர்கள் உங்களுக்குச் சிறந்த முறையில் பணிவிடை ஆற்றட்டும்! அவர்களுக்குரிய கடமை என்னவென்றால், நீங்கள் எவரை விரும்ப மாட்டீர்களோ, அவரை அவர்கள் வீட்டுக்குள் அனுமதிக்காமல் இருக்கட்டும்!

• இன்னும், மானக்கேடான செயலைச் செய்யாமல் இருக்கட்டும்! அவர்கள் குற்றம் புரிந்தால், அவர்களைத் தண்டிக்கிற உரிமையும் உங்களுக்கு உண்டு! அது அவர்களை இலேசாக காயம்படாதபடி தண்டிப்பதாகும்!

• அவர்களுக்கு ஒழுங்கான முறையில் உணவும் உடையும் வழங்குங்கள்!  அவர்களுக்கு நன்மையை நாடுங்கள்! அவர்கள் உங்களின் உதவியாளர்களாகவும் உங்களைச் சார்ந்தவர்களாகவும் இருக்கிறார்கள்! அல்லாஹ்வின் பெயரை முன்மொழிந்தே நீங்கள் அவர்களுடன் மணவாழ்க்கை மேற்கொண்டுள்ளீர்கள்!

(நூல் : முஸ்லிம் 2334 | ஸஹீஹ் ஜாமி : 7880 | திர்மிதி : 1163)

❤️ நம்முடைய ஒவ்வொரு செயலுக்கும் அல்லாஹ்விடம் பதில் கூறவேண்டும் :

• மக்களே! எனக்குப் பின் எந்தவொரு நபியும் (இறைத்தூதரும்) இல்லை! உங்களுக்குப் பின் எந்தவொரு சமுதாயமும் இல்லை! உங்களைப் படைத்துக் காப்பவனான அல்லாஹ்வையே வணங்குங்கள்!

• உங்கள் இறைவனை அதிவிரைவில் நீங்கள் சந்திப்பீர்கள்! அவன் உங்கள் செயல்களைப் பற்றி உங்களிடம் விசாரணை செய்வான்! எனக்குப் பிறகு நீங்கள் உங்களுக்குள் கொலை குற்றம் புரிந்து வழிகேடர்களாக மாறிட வேண்டாம்!

• உங்களது இறைவனை நீங்கள் சந்திக்கும் வரை (இப்படியே வாழுங்கள்!) நீங்கள் அனைவரும் தவறாமல் அல்லாஹ்வின் முன்னிலையில் ஆஜராகப் போகிறீர்கள்! அப்போது அல்லாஹ் உங்களது செயல்களைப் பற்றி விசாரிப்பான்!

• நான் மார்க்கத்தை உங்களுக்கு எடுத்துரைத்து விட்டேன்! உங்களில் எவராவது மற்றவருடைய பொருளின் மீது பொறுப்பேற்றிருந்தால், அதை அவர் உரிய முறையில் அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்து விடட்டும்!

📚(நூல் : ஸஹீஹ் முஸ்லிம் : 2334)

❤️ அற்பமானவற்றை வைத்தும் ஷைத்தான் வழிகேடுப்பான் :

• எச்சரிக்கையாக இருங்கள்! மக்களே! உங்களது இந்த நகரத்தில், தான் வணங்கப்படுவதைப் பற்றி ஷைத்தான் நம்பிக்கை இழந்து விட்டான்! ஆனாலும், அவன் மகிழ்ச்சியுறும் விதமாய் நீங்கள் அற்பமாக கருதும் சில விஷயங்களில் அவனுக்கு நீங்கள் கீழ்ப்படிவீர்கள்!

• ஆகவே, உங்களது மார்க்க விஷயத்தில் அவனிடம் எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள்!

📚(நூல் : ஸஹீஹ் ஜாமிஃ : 7880)

❤️ வட்டிக் கணக்கிடாதீர்கள் :

 • அறியாமைக்கால அனைத்து விவகாரங்களும் என் பாதங்களுக்குக் கீழ் புதைப்பட்டு விட்டன! மேலும், இன்று வரையிலான எல்லா வட்டிக் கணக்குகளையும் ரத்துச் செய்து விட்டேன். எனினும், உங்களது அசல் உங்களுக்கே உரியது!

(நூல் : முஸ்லிம் : 2334 | இப்னு மாஜா : 3074)

❤️ சகோதரத்துவம் பேணுங்கள்!

• ஒவ்வொரு முஸ்லிமும் மற்ற முஸ்லிமுக்கு சகோதரர் ஆவார். முஸ்லிம்கள் அனைவரும் சகோதரர்களே! 

• ஒரு முஸ்லிமின் பொருள் பிறருக்கு அறவே ஆகுமானதல்ல! மனமுவந்து கொடுத்தாலே தவிர! உங்களுக்கு நீங்கள் அநீதம் இழைத்துக் கொள்ளாதீர்கள்

📚(நூல் : ஸஹீஹ் ஜாமிஃ : 7880)

❤️ சொர்க்கம் செல்லும் வழி :

• மக்களே! உங்கள் இறைவனையே வணங்குங்கள்! உங்கள் இறைவனுக்கே பயந்து கொள்ளுங்கள்! கடமையான ஐவேளைத் தொழுகைகளையும் தவறாது பேணுங்கள்! (ரமளானில்) நோன்பு நோற்று வாருங்கள்!

• விருப்பமுடன் ஜகாத் கொடுத்து விடுங்கள்! அல்லாஹ்வின் இல்லத்தை ஹஜ் செய்யுங்கள்! உங்களில் அதிகாரம் உடையோருக்குக் கட்டுப்பட்டு நடங்கள்; நீங்கள் சொர்க்கம் செல்வீர்கள்!

📚(நூல் : திர்மிதி : 616 | மிஷ்காத் : 576)

❤️ மார்க்கத்தை பிறருக்கு எடுத்து கூறுவது நமது மீது கடமை :

• மறுமையில் என்னைப் பற்றி உங்களிடம் விசாரிக்கும் போது நீங்கள் என்ன பதில் கூறுவீர்கள்? என்று நபி (ஸல்) அவர்கள் ஸஹாபாக்களிடம் கேட்டார்கள்!

• கூடியிருந்தோர் நிச்சயமாக நீங்கள் எடுத்துரைத்தீர்கள் நிறைவேற்றினீர்கள் நன்மையையே நாடினீர்கள் என நாங்கள் சாட்சி கூறுவோம் என்றார்கள்!

• நபியவர்கள் தங்களது ஆட்காட்டி விரலை வானை நோக்கி உயர்த்தி, பின்பு மக்களை நோக்கித் திருப்பி “அல்லாஹ்! இதற்கு நீயே சாட்சி!” என்று மூன்று முறை கூறினார்கள்!

• இங்கு வந்திருப்பவர்கள் அனைவரும் இங்கு வராத மற்றவர்களுக்கும் எடுத்துக் கூறுங்கள்! ஏனெனில், செய்தியை கேள்விப்படுபவர்களில் சிலர் நேரடியாகக் கேட்பவர்களைவிட நன்கு விளக்கமுடையவர்களாக இருப்பார்கள்!

📚(நூல் :ஸுனனுத் திர்மிதி &  முஸ்னது அஹ்மது | முஸ்லீம் : 1739)

7) அரஃபா நாளில் தான் அல்லாஹ் நம்மிடம் வாக்குறுதி வாங்கினான் :

• அல்லாஹ் முதன் முதலில் ஆதம் (அலை) அவர்களை படைத்தான் அவர்களின் விலா எலும்பில் இருந்து அவ்வா (அலை) அவர்களை படைத்தான்!

• ஆதம் (அலை) மற்றும் அவ்வா (அலை) இவர்கள் இருவர் மூலமே அல்லாஹ் மனித சமுதாயத்தை தோற்றுவித்தான்!

• அல்லாஹ் அரஃபா நாளில் ஒரு பெருவெளியில் ஆதம் {அலை} அவர்களின் முதுகுத்தண்டிலிருந்து உறுதிமொழி பெற்றான்!

• அதாவது, அவரது முதுகுத்தண்டிலிருந்து தான் படைத்த அனைத்து வழித்தோன்றல்களையும் வெளியோக்கினான்! பிறகு தனக்கு முன்னால் அவர்களை அணுக்களைப் போன்று பரப்பினான்!

• பின்னர், அவர்களை நோக்கி நான் உங்கள் இறைவன் அல்லவா? என்று கேட்டான்! ஆம்! நாங்கள் நீதான் எங்கள் இறைவன் என சாட்சியமளிக்கின்றோம்  என்றனர்!

• இவ்வாறு செய்வதற்கு காரணம் அல்லாஹ் கூறுகிறான் :

உம் இறைவன் ஆதமுடைய மக்களின் முதுகுகளிலிருந்து அவர்களுடைய சந்ததிகளை வெளியாக்கி, அவர்களைத் தங்களுக்கே சாட்சியாக வைத்து: “நான் உங்களுடைய இறைவன் அல்லவா?” என்று கேட்டதற்கு, அவர்கள் “மெய் தான். நாங்கள் சாட்சி கூறுகிறோம்” என்று கூறியதை (அவர்களுக்கு) நினைவூட்டுவீராக! (ஏனெனில் இது நினைவூட்டப்படாததனால்) நிச்சயமாக இதனை (மறந்து) விட்டுப் பராமுகமாக இருந்து விட்டோம் என்று மறுமை நாளில் நீங்கள் (யாருமே) சொல்லாதிருக்கவும்!

அல்லது, இணைவைத்தவர்கள் எல்லாம் எங்களுக்கு முன் இருந்த எங்கள் மூதாதையர்களே; நாங்களோ அவர்களுக்குப் பின் வந்த (அவர்களுடைய) சந்ததிகள் - அந்த வழிகெட்டோரின் செயலுக்காக நீ எங்களை அழித்து விடலாமா?” என்று கூறாதிருக்கவுமே! (இதனை நினைவூட்டுகிறோம் என்று நபியே! நீர் கூறுவீராக.)

📖(சூரத்துல் : அல் அஃராஃப் : 172 & 173 |
(நூல் : சுனன் அல் குப்ரா : 11191 | முஸ்னத் அஹ்மத் : 2455)


*புனிதமான இரவு* 
)) قال رسول الله ﷺ : صِيامُ يَومَ عَرَفَةَ، أَحْتَسِبُ على الله أَنْ يُكَفِّرَ السَّنَةَ الَّتِي قَبْلَهُ، والسَّنَةَ الَّتِي بَعْدَهُ »
அல்லாஹ்வின் திருத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறுகிறார்கள் 
அரஃபா நாளில் நோன்பு நோற்பதன் மூலம், அதற்கு முந்தைய ஆண்டு மற்றும் அதற்குப் பிந்தைய ஆண்டுகளின் சிறிய பாவங்களுக்கு பரிகாரமாக அமையும் .
 (ஸஹீஹ் முஸ்லிம்)(2840)


அரஃபா நாளின் இரவு மற்றும் பகலில் செய்யவேண்டிய நல்ல அமல்கள்:👇

1) அரஃபா நாள் நாட்களின் அரசனான வெள்ளிக்
கிழமையில் வருகிறது 
2)பகலின் அரசனான அரஃபா தினமும் பகல்தான் 
3)ஸலவாத்தின் அரசனான தரூதே இப்ராஹீமை அதிகம் ஓதுங்கள் .
4) அரஃபா நோன்பு வையுங்கள் (அதுவும் வெள்ளிக்கிழமை அன்று அல்லாஹு அக்பர்) 
5) புனிதமான துல்ஹஜ் மாதத்தின் முதலாவது நோன்பாக இந்த அரபாவுடைய நோன்பை நான் நோற்க்கிறேன்.
6) ரமலானில் கலாவான ஒரு நோன்பை இதில் நான் சேர்த்துக் கொள்கிறேன். 

புனிதமான நாளின் புனித அமல்கள்👇
1)வெள்ளிக்கிழமை என்பதால் தயவுசெய்து வேகமாக பள்ளிக்குச் செல்லுங்கள்
2) கஃபு  சூராவை அவசியம் ஓதுங்கள்
3) பெண்கள் அவர்கள் இருக்கும் இடத்திலேயே முசல்லாவில் வேகமாக அமருங்கள் 
4) அரபா நாளில் லட்சோப லட்ச ஹாஜிகள் குழுமியிருந்து அல்லாவிடம் துவா செய்யும் பொழுது கண்ணீர் விட்டு அழுவார்கள்க அதனைப் பார்த்து சைத்தான் பொறாமை படுகிறான் மேலும் வெட்கப்படுகிறான் வேதனைப்படுகிறான். 
5) நம்முடன் இருந்து வபாத்தான தாய், தந்தை மற்றும் குடும்பத்தார்களுக்கு மறக்காமல் துவா செய்யுங்கள் 
6) புனிதமான ஹஜ் பயணம் புறப்பட்டுச் சென்ற நமது குடும்பத்தார்களுக்காக நமது நண்பர்களுக்காக துவா செய்ய மறந்து விடாதீர்கள் காரணம் அவர்களின் ஹஜ்ஜுகள் கபூல் ஆக வேண்டும். 
_________________👇
புனிதமான அரபாவுடைய நாள் மஃரிபு தொழுகை முதல் ஆரம்பிப்பதால் நாளை மஃரிப் வரை தயவுசெய்து எல்லோரும் கீழ்காணும் துவாக்களை ஓதி வாருங்கள்.
👇
حَسْبُنَا اللهُ وَنِعْمَ الْوَكِيل نِعْمَ الْمَوْلَى وَنِعْمَ النَّصِيرُ
لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ الْعَلِيِّ الْعَظِيمِ
رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ

اَسْتَغْفِرُ اللَّهَ الْعَظِيمَ إِنَّهُ كَانَ غَفَّارًا

لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ يُحْيِي وَيُمِيتُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ

اللَّهُمَّ صَلِّ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ وَعَلَى آلِ سَيِّدِنَا مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى ابْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ
وَبَارَكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آل مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلَى ابْرَاهِيمَ وَعَلَى آلِ ابْرَاهِيمَ فِي الْعَالَمِينَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ
ஒன்பதாவது அத்தியாயமான சூரத்து தவ்பாவினுடைய கடைசி இரண்டு ஆயத்துக்களை அவசியம் ஓதவும்👇
أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمُ

لَقَدْ جَاءَكُمْ رَسُولٌ مِنْ أَنْفُسِكُمْ عَزِيزٌ عَلَيْهِ مَا عَنِتُمْ

حَرِيصٌ عَلَيْكُمْ بِالْمُؤْمِنِينَ رَءُوفٌ رَحِيمٌ

فَإِنْ تَوَلَّوْا فَقُلْ حَسْبِيَ اللَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ عَلَيْهِ تَوَكَّلْتُ

وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ

துவா ஓதும்போது பாவியான இஸ்கீனையும் நினைவு கூர்ந்து துவா செய்யுங்கள் அல்லாஹ் உங்கள் அனைவருக்கும் நல்லருள் பாலிப்பானாக ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்.


வியாழன், மே 29, 2025

துல்ஹஜ் முதல் பத்து நாட்கள்,

துல்ஹஜ்  முதல் பத்து நாட்கள்
மற்றும் குர்பானியின் சிறப்புகள்



 நாம் அல்லாஹ்வைத் தவிர வேறு எதைக் கொண்டும் யாரைக் கொண்டும் சத்தியம் செய்வது கூடாது. அல்லாஹ் தன் படைப்பினங்களில் முக்கியமானவைகளைக் கொண்டு சத்தியம் செய்வான். அவ்வாறு அல்லாஹ் சத்தியம் செய்பவைகளில் துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களும் ஒன்றாகும். 
قال الله تعالي وَالْفَجْرِ (1) وَلَيَالٍ عَشْرٍ (2) وَالشَّفْعِ وَالْوَتْرِ (3)عن جابر رضي الله عنه قال : قال رسول الله صلى الله عليه وسلم : {والفجر وليال عشر}عشر الأضحية والوتر يوم عرفة والشفع يوم النحر هذا حديث صحيح  رواه الحاكم في المستدرك
روي ان الله اختار من السنة ثلاث عشرات:العشر الأخير من رمضان لما فيه من بركات ليلة القدر, وعشر الأضحي لما فيه من يوم التروية ويوم عرفة والأضاحي والتلبية والحج وأنواع المناسك, وعشر المحرم لما فيه من بركات يوم عاشوراء , قال الفقهاء رح لو قال رجل لله علي أن أصوم أفضل الأيام في سنتي هده بعد رمضان  يجب عليه العشر الأول من دي الحجة {زبدة الواعظين} 
அல்லாஹ் வருடத்தில் மூன்று பத்து நாட்களை சிறப்பானதாக ஆக்கி வைத்துள்ளான். 1.ரமழான் மாதத்தின் கடைசி பத்து நாட்களை சிறப்பானதாக ஆக்கியுள்ளான். காரணம் லைலத்துல் கத்ரு என்ற சிறந்த இரவின் பரக்கத் உள்ளது என்பதற்காக. 2 .துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களை சிறப்பானதாக அல்லாஹ் ஆக்கியுள்ளான். காரணம் தர்வியா எனும் துல்ஹஜ்  8-ம் நாளும் அரஃபா நாளும் குர்பானியின் நாட்களும் அதில் உள்ளது என்பதற்காக. 3.முஹர்ரம் மாதத்தின் முதல் பத்து நாட்களை சிறப்பானதாக அல்லாஹ் ஆக்கியுள்ளான். காரணம் ஆஷூரா எனும் சிறந்த நாள் அதில் உள்ளது என்பதற்காக.                                                        
ஃபுகஹாக்கள் கூறுவார்கள். ஒருவர் நான் இந்த வருடத்தில் ரமழானுக்கு அடுத்து சிறப்பான நாட்களில் நோன்பு வைப்பேன் என நேர்ச்சை செய்தால் அவர் துல்ஹஜ் பத்து நாட்களில் அந்த நேர்ச்சையை நிறைவேற்ற வேண்டும்
عَنِ ابْنِ عَبَّاسٍ رضي الله عنه قال قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا مِنْ أَيَّامٍ الْعَمَلُ الصَّالِحُ فِيهِنَّ أَحَبُّ إِلَى اللَّهِ مِنْ هَذِهِ الْأَيَّامِ الْعَشْرِ فَقَالُوا يَا رَسُولَ اللَّهِ وَلَا الْجِهَادُ فِي سَبِيلِ اللَّهِ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلَا الْجِهَادُ فِي سَبِيلِ اللَّهِ إِلَّا رَجُلٌ خَرَجَ بِنَفْسِهِ وَمَالِهِ فَلَمْ يَرْجِعْ مِنْ ذَلِكَ بِشَيْءٍ (ترمذي)
 இந்த பத்து நாட்களில் செய்யப்படும் நற்செயலை விட வருடத்தின் வேறு எந்த நாளில் செய்யப்படும் நற்செயலும் அல்லாஹ்விடம் மிகப் பிரியமானதாக இல்லை என நபி ஸல் கூறிய போது அல்லாஹ்வின் தூதரே மற்ற நாட்களில் செய்யும் ஜிஹாதை விட இந்த நாட்களில் செய்யப்படும் சிறிய அமல் அல்லாஹ்விடம் மிக உயர்ந்ததா என்று கேட்க, ஆம் என்று நபி ஸல் பதில் கூறி விட்டு. யார் ஜிஹாதுக்கு தனது உயிர் மற்றும் உடைமையுடன்  சென்று அவற்றில் எதனுடனும் வீடு திரும்பவில்லையோ அவரைத்  தவிர என்று கூறினார்கள்.        
இந்த நாட்களில் தக்பீர் மற்றும் தஹ்மீத் தஹலீல் ஆகியவற்றை அதிகப்படுத்த வேண்டும்.  பிறை  1  முதல் 9 வரை நோன்பு வைக்க  முயற்சி செய்ய வேண்டும். இதில் அரஃபா நாளின் நோன்பு மிகவும் வலியுறுத்தப்பட்ட சுன்னத்தாகும்
குர்பானி தர விரும்புவர் பிறை ஆரம்பித்த நாளில் இருந்து நகம் முடி களையக் கூடாது.  
يستحب للمضحي أن لايأخد من شعره وأظفاره شيئا من أول دي الحجة الي أن يضحي  لقول النبي صلي الله عليه وسلم من أراد أن يضحي منكم  فلا يأخد من شعره وأظفاره شئا  
من لم ينو الأضحية في أول دي الحجة فأخد شعره وأظفاره ثم نوي الأضحية يجوز فلا يأخد شعره وأظفاره بعد النية
ஒருவரி துல்ஹஜ் ஆரம்பிக்கும்போது குர்பானியை நிய்யத் செய்யவில்லை. அதனால் அவர் பிறை ஆரம்பித்த பிறகு நகம், முடிகளை வெட்டினார். அதற்குப் பிறகு தான் அவருக்கு அந்த நிய்யத் ஏற்பட்டதென்றால் அவர் நிய்யத் செய்த நேரத்திலிருந்து நகம் முடி வெட்டாமல் இருந்து கொள்ள வேண்டும். 
குர்பானி கொடுக்கும் நாட்களில் குர்பானியை விட மிகச் சிறந்த அமல் வேறு இல்லை.
عَنْ عَائِشَةَ رضي الله عنه أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَا عَمِلَ ابْنُ آدَمَ يَوْمَ النَّحْرِ عَمَلًا أَحَبَّ إِلَى اللَّهِ عَزَّ وَجَلَّ مِنْ هِرَاقَةِ دَمٍ وَإِنَّهُ لَيَأْتِي يَوْمَ الْقِيَامَةِ بِقُرُونِهَا وَأَظْلَافِهَا وَأَشْعَارِهَا وَإِنَّ الدَّمَ لَيَقَعُ مِنْ اللَّهِ عَزَّ وَجَلَّ بِمَكَانٍ قَبْلَ أَنْ يَقَعَ عَلَى الْأَرْضِ فَطِيبُوا بِهَا نَفْسًا (ابن ماجة)
கருத்து-குர்பானி கொடுக்கும் நாளில் குர்பானியை விட மிகச் சிறந்த அமல் வேறு எதுவும் இல்லை. ஒருவர் குர்பானிப் பதிலாக ஒரு கோடி ரூபாய் தர்மம் செய்தாலும் குர்பானிக்கு ஈடாகாது. குர்பானிப் பிராணி மறுமையில் அதே உருவத்தோடு வந்து நமக்காக சாட்சி சொல்லும். மேலும் அதன் இரத்தம் தரையைச் சென்றடைவதற்கு முன்பு அல்லாஹ்வின் பொருத்தத்தைப் பெற்று விடுகிறது. எனவே மன மகிழ்வுடன் குர்பானி கொடுங்கள். 
عَنْ زَيْدِ بْنِ أَرْقَمَ قَالَقَالَ أَصْحَابُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَا رَسُولَ اللَّهِ مَا هَذِهِ الْأَضَاحِيُّ قَالَ سُنَّةُ أَبِيكُمْ إِبْرَاهِيمَ قَالُوا فَمَا لَنَا فِيهَا يَا رَسُولَ اللَّهِ قَالَ بِكُلِّ شَعَرَةٍ حَسَنَةٌ قَالُوا فَالصُّوفُ يَا رَسُولَ اللَّهِ قَالَ بِكُلِّ شَعَرَةٍ مِنْ الصُّوفِ حَسَنَةٌ (ابن ماجة)
விளக்கம்- குர்பானி என்பது நபி இப்றாஹீம் அலை அவர்களின் வழிமுறை என நபி ஸல் கூறியபோது இதனால் என்ன நன்மை என நபித்தோழர்கள் கேட்க, அதன் ஒவ்வொரு முடிக்கும் பகரமாக நன்மை உண்டு என நபி ஸல் கூறியவுடன் ஆச்சரியத்துடன் யாரஸூல ல்லாஹ் அப்படியானால் ஆட்டில் முடிகள் அதிகமாக இலட்சக் கணக்கில் இருக்குமே அதற்கும் நன்மை உண்டா என்று கேட்க ஆம் என நபி ஸல் பதில் கூறினார்கள்.                 
வறிய நிலையிலும் வருடம் தோறும் குர்பானி கொடுத்தவரின் சிறப்பு 
عن أحمد بن اسحق أنه قال كان لي أخ فقير وكان مع فقره يضحي كل سنة بشاة فلما توفي صليت ركعتين فقلت:اللهم أرني أخي في نومي فأسأله عن حاله فنمت علي الوضوء فرأيت في منامي كأن القيامة قد قامت وحشر الناس من قبورهم فادا أخي راكب علي فرس أشهب وبين يديه نجائب فقلت ياأخي ما فعل الله بك؟ فقال:غفر لي,فقلت بم؟ فقال بسبب درهم تصدقت به علي امرأة عجوز فقيرة في سبيل الله؟ فقلت ما هده النجائب؟قال ضحاياي في الدنيا والتي أركبها أول أضحيتي فقلت الي اين قصدت؟ قال الي الجنة فغاب عن بصري {سنانية}
அஹ்மத் இப்னு இஸ்ஹாக் ரஹ் அவர்கள் கூறினார்கள். எனக்கு ஏழ்மையான ஒரு சகோதரர் இருந்தார். தன்னுடைய வறிய நிலையிலும் வருடம் தோறும் ஆடு குர்பானி கொடுப்பார். ஒருநாள் அவர் வஃபாத்தாகி விட்டார். அவர் இறந்த பின்பு அவரைப் பற்றிய மறுமை வாழ்வின் நிலையைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இரண்டு ரக்அத் தொழுது அல்லாஹ்விடம் அல்லாஹ் அவரை என் கனவில் காட்டு. நான் அவரிடம் அவரது நிலையைப் பற்றி விசாரித்துத் தெரிந்து கொள்ள வேண்டும் என துஆச் செய்தேன். நான் உளூவுடன் தூங்கினேன். அப்போது என் கனவில் கியாமத் ஏற்பட்டு விட்டதைப் போன்றும் மக்கள் அனைவரும் தங்களுடைய கப்ருகளில் இருந்து எழுப்ப ப்படுவது போன்றும் கனவில் கண்டேன். அப்போது அந்த நண்பரையும் கண்டேன். அவர் ஒரு உயர்ந்த குதிரையின் மீது சவாரி செய்த படி இருந்தார். அவருக்கு முன்னால் கால்நடை வாகனங்கள் அணி வகுத்து நின்றன. அவரிடம் நான் அல்லாஹ் உங்களிடம் எவ்வாறு நடந்து கொண்டான் என விசாரித்தபோது அல்லாஹ் என்னை மன்னித்தான் என்று கூறினார். எதனால் என்று நான் கேட்க, ஒரு வயதான, ஏழ்மையான பெண்ணுக்கு ஒரு திர்ஹம் நான் தர்மம் செய்தேன். அதனால் அல்லாஹ் என்னை மன்னித்தான் என்று கூறினார். நான் அவரிடம் இந்த வாகனங்கள் ஏது என்று கேட்க, இதுவெல்லாம் நான் குர்பானி கொடுத்த வாகனங்கள். நான் ஏறிப் பயணம் செய்திருக்கும் இந்த வாகனம் தான் நான் முதலில் கொடுத்த குர்பானி என்று கூறி என் கன்னை விட்டும் மறைந்து விட்டார்.                    
விளக்கம்-ஆடாக இருந்தாலும் அதில் சவாரி செய்யும் வகையில் பெரிய உருவமாக அல்லாஹ் மறுமையில் மாற்றியமைக்க வாய்ப்புண்டு
வசதி இருந்தும் குர்பானி கொடுக்கா விட்டால்
عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه  أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ كَانَ لَهُ سَعَةٌ وَلَمْ يُضَحِّ فَلَا يَقْرَبَنَّ مُصَلَّانَا (ابن ماجة
மாதவிடாய் மற்றும் பிரசவத்தீட்டு உள்ள பெண்களும், கர்ப்பிணிப் பெண்களும் குர்பானி கொடுக்கலாம்.  கர்ப்பிணிப் பெண்கள் குர்பானி கொடுக்கக் கூடாது என்ற தவறான எண்ணம் சிலருக்கு இருக்கிறது
عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ دَخَلَ عَلَيْهَا وَحَاضَتْ بِسَرِفَ قَبْلَ أَنْ تَدْخُلَ مَكَّةَ وَهِيَ تَبْكِي فَقَالَ مَا لَكِ أَنَفِسْتِ قَالَتْ نَعَمْ قَالَ إِنَّ هَذَا أَمْرٌ كَتَبَهُ اللَّهُ عَلَى بَنَاتِ آدَمَ فَاقْضِي مَا يَقْضِي الْحَاجُّ غَيْرَ أَنْ لَا تَطُوفِي بِالْبَيْتِ فَلَمَّا كُنَّا بِمِنًى أُتِيتُ بِلَحْمِ بَقَرٍ فَقُلْتُ مَا هَذَا قَالُوا ضَحَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ أَزْوَاجِهِ بِالْبَقَرِ (بخاري) الأضحية للمسافر والنساء-كِتَاب الْأَضَاحِيِّ
சுருக்கம்- ஆயிஷா ரழி அவர்கள் ஹஜ்ஜுக்கு வந்திருந்த நேரம் பார்த்து அவர்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டு விட்டது. என்னால் அந்த அமலும் செய்ய முடியாதே என்று அழ ஆரம்பித்தார்கள். அப்போது நபி ஸல் அவர்கள் இந்த விஷயம் அல்லாஹ் ஒவ்வொரு பெண்ணுக்கும் ஏற்படுத்தியுள்ளதாகும். இதற்காக கவலை கூடாது. நீ எல்லா அமல்களையும் நிறைவேற்றலாம். அரஃபாவில் தங்கலாம். மினாவில் தங்கலாம். குர்பானி கொடுக்கலாம். முஜ்தலிஃபாவில் தங்கலாம். தவாஃப் மட்டும் செய்யக் கூடாது. அதை பிறகு நீ நிறைவேற்ற முடியும் என்றார்கள். 
ஆயிஷா ரழி அவர்கள் கூறினார்கள் இதன் பின்பு நான் மினாவில் தங்கியிருக்கும்போது என்னிடம் கூட்டுக் குர்பானிக் கறி கொண்டு வந்து தரப்பட்டது. இது ஏது என்று கேட்டேன். நபி ஸல் அவர்கள் தம் மனைவிமார்கள் பெயரில் கொடுத்த மாட்டின் இறைச்சி என்று பதில் கூறப்பட்டது. 
குர்பானி விஷயத்தில் முக்கியமான விளக்கம். 
 ஒரு குடும்பத்தில் யார் சம்பாதிக்கிறாரோ மேலும் ஜகாத்துடைய நிஸாப் அளவுக்கு மிச்சமாக பணம் வைத்துள்ளாரோ அவர் மீது குர்பானி கடமை. ஜகாத் கடமையான சிலர் குர்பானி கடமையான பின்பும் தன் பெயரில் கொடுக்காமல் தன் தந்தை அல்லது தாயார் பெயரில் குர்பானி கொடுக்கிறார்கள். அவ்வாறு தருவதால் இவரின் கடமை நீங்காது.  தாம் கொடுத்தது போக மிச்சமிருந்தால் பெற்றோர் பெயரில் கொடுப்பது தவறில்லை. என் பெற்றோரை விட நான் முக்கியமானவனா என்ற எண்ணத்தில் பலர் இத்தகைய தவறைச் செய்கிறார்கள். தொழுகை இவர் மீது கடமை என்றால் என் பெற்றோர் தொழாமல் நான் தொழுவதா என்று நாம் யாரும் சொல்ல மாட்டோம். அதுபோன்றுதான் குர்பானி. 
தனக்காக அகீகா கொடுக்கப்பட்டிருக்கா விட்டால் அந்த அகீகாவை முதலில்  தராம்ல குர்பானி தரக்கூடாது என்ற எண்ணமும் சிலரிடம் உள்ளது. அகீகா குழந்தைப் பருவத்தில் தான் சுன்னத். அதைத் தாண்டினால் ஜாயிஸ்.  ஆனால் குர்பானி என்பது  வாஜிப். 
وَنَقَلَ التِّرْمِذِيُّ عَنْ أَهْلِ الْعِلْمِ أَنَّهُمْ يَسْتَحِبُّونَ أَنْ تُذْبَحَ الْعَقِيقَةُ فِي السَّابِعِ فَإِنْ لَمْ يُمْكِنْ فَفِي الرَّابِعَ عَشَرَ فَإِنْ لَمْ يُمْكِنْ فَيَوْمِ أَحَدِ وَعِشْرِينَ . وَقَالَ الشَّافِعِيُّ : لَا تُؤَخَّرُ عَنْ السَّابِعِ اخْتِيَارًا فَإِنْ تَأَخَّرَتْ إلَى الْبُلُوغِ سَقَطَتْ عَمَّنْ كَانَ يُرِيدُ أَنْ يَعُقَّ عَنْهُ لَكِنْ إنْ أَرَادَ هُوَ أَنْ يَعُقَّ عَنْ نَفْسِهِ فَعَلَ . (فتح الباري – عمدة القاري
குர்பானி கொடுப்பதற்கு ஆடு தான் சிறந்தது
{ وفديناه بذبح عظيم}{37:107 } أي عظيم القدر ولم يرد عظيم الجثة وإنما عظم قدره لأنه فدى به الذبيح أو لأنه متقبل 
 உளத்தூய்மையுடன்  ஹாபீல் கொடுத்த  ஆட்டை பலஆயிரம் வருடங்கள் சுவனத்த்தில் அல்லாஹ் பாதுகாத்தான்
وقال ابن عباس : هو الكبش الذي تقرب به هابيل وكان في الجنة يرعى حتى فدىالله به إسماعيل-
وَاتْلُ عَلَيْهِمْ نَبَأَ ابْنَيْ آدَمَ بِالْحَقِّ إِذْ قَرَّبَا قُرْبَانًا فَتُقُبِّلَ مِنْ أَحَدِهِمَا وَلَمْ يُتَقَبَّلْ مِنَ الْآخَرِ قَالَ لَأَقْتُلَنَّكَ قَالَ إِنَّمَا يَتَقَبَّلُ اللَّهُ مِنَ الْمُتَّقِينَ (27)المائدة      -     عَنْ عَبْد اللَّه بْن عَمْرو قَالَ إِنَّ اِبْنَيْ آدَم اللَّذَيْنِ قَرَّبَا قُرْبَانًا فَتُقُبِّلَ مِنْ أَحَدهمَا وَلَمْ يُتَقَبَّل مِنْ الْآخَر كَانَ أَحَدهمَا صَاحِب حَرْث وَالْآخَر صَاحِب غَنَم وَإِنَّهُمْ أُمِرَا أَنْ يُقَرِّبَا قُرْبَانًا وَإِنَّ صَاحِب الْغَنَم قَرَّبَ أَكْرَمَ غَنَمِهِ وَأَسْمَنَهَا وَأَحْسَنَهَا طَيِّبَةً بِهَا نَفْسُهُ وَإِنَّ صَاحِب الْحَرْث قَرَّبَ أَشَرَّ حَرْثِهِ الْكَوْدَن وَالزُّوَان غَيْرَ طَيِّبَةٍ بِهَا نَفْسُهُ وَأَنَّ اللَّه عَزَّ وَجَلَّ تَقَبَّلَ قُرْبَان صَاحِب الْغَنَم وَلَمْ يَتَقَبَّل قُرْبَان صَاحِب الْحَرْث(وفي رواية فَصَعِدَا الْجَبَل فَوَضَعَا قُرْبَانهمَا)فَقَبِلَ اللَّه الْكَبْش فَحَزَنَهُ فِي الْجَنَّة أَرْبَعِينَ خَرِيفًا3 وَهُوَ الْكَبْش الَّذِي ذَبَحَهُ إِبْرَاهِيم عَلَيْهِ السَّلَام(تفسير ابن كثير)
காபீல் ஹாபீல் இருவரும் குர்பானி கொடுத்தாலும் ஹாபீல் கொடுத்த ஆடு மட்டுமே அல்லாஹ்விடம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. காரணம் உளத்தூய்மை தான். ஹாபீல் தன்னிடம் இருந்த ஆடுகளில் தனக்கு மிகப் பிரியமான ஆட்டை குர்பானி கொடுத்தார். காபீல் விவசாயி என்பதால் தானியங்களை குர்பானியாக கொடுத்தார். அவரிடம் உளத்தூய்மை இருந்திருக்கவில்லை. அந்தக் கால வழக்கப்படி இருவரும் மலை மீது கொண்டு போய் தமது குர்பானிகளை வைத்தார்கள். வானில் இருந்து நெருப்பு வந்து ஹாபீலுடைய ஆட்டை மட்டும் எடுத்துக் கொண்டு சென்றது. அந்த ஆட்டை அல்லாஹ் சுவனத்தில் பாதுகாத்தான் பிற்காலத்தில் அதுதான் இப்றாஹீம் அலை அவர்களுக்காக சுவனத்தில் இருந்து கொண்டு வரப்பட்டது அதைத்தான் அவர்கள் அறுத்தார்கள்.                                  
அக்காலத்தில் குர்பானிப் பிராணிகளையும் அதுபோல் ஙனீமத் பொருட்களையும் 
மலை மீது கொண்டு போய் வைத்து அதை நெருப்பு வந்து கரித்துச் செல்வது அக்கால நடைமுறை
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ غَزَا نَبِيٌّ مِنْ الْأَنْبِيَاءِ فَقَالَ لِقَوْمِهِ لَا يَتْبَعْنِي رَجُلٌ مَلَكَ بُضْعَ امْرَأَةٍ وَهُوَ يُرِيدُ أَنْ يَبْنِيَ بِهَا وَلَمَّا يَبْنِ بِهَا وَلَا أَحَدٌ بَنَى بُيُوتًا وَلَمْ يَرْفَعْ سُقُوفَهَا وَلَا أَحَدٌ اشْتَرَى غَنَمًا أَوْ خَلِفَاتٍ وَهُوَ يَنْتَظِرُ وِلَادَهَا فَغَزَا فَدَنَا مِنْ الْقَرْيَةِ صَلَاةَ الْعَصْرِ أَوْ قَرِيبًا مِنْ ذَلِكَ فَقَالَ لِلشَّمْسِ إِنَّكِ مَأْمُورَةٌ وَأَنَا مَأْمُورٌ اللَّهُمَّ احْبِسْهَا عَلَيْنَا فَحُبِسَتْ حَتَّى فَتَحَ اللَّهُ عَلَيْهِ فَجَمَعَ الْغَنَائِمَ فَجَاءَتْ يَعْنِي النَّارَ لِتَأْكُلَهَا فَلَمْ تَطْعَمْهَا فَقَالَ إِنَّ فِيكُمْ غُلُولًا فَلْيُبَايِعْنِي مِنْ كُلِّ قَبِيلَةٍ رَجُلٌ فَلَزِقَتْ يَدُ رَجُلٍ بِيَدِهِ فَقَالَ فِيكُمْ الْغُلُولُ فَلْيُبَايِعْنِي قَبِيلَتُكَ فَلَزِقَتْ يَدُ رَجُلَيْنِ أَوْ ثَلَاثَةٍ بِيَدِهِ فَقَالَ فِيكُمْ الْغُلُولُ فَجَاءُوا بِرَأْسٍ مِثْلِ رَأْسِ بَقَرَةٍ مِنْ الذَّهَبِ فَوَضَعُوهَا فَجَاءَتْ النَّارُ فَأَكَلَتْهَا ثُمَّ أَحَلَّ اللَّهُ لَنَا الْغَنَائِمَ رَأَى ضَعْفَنَا وَعَجْزَنَا فَأَحَلَّهَا لَنَا (بخاري)باب قَوْلِ النَّبِىِّ صلى الله عليه وسلم  أُحِلَّتْ لَكُمُ الْغَنَائِمُ–كتاب فرض الخمس
   சுருக்கம்- ஒரு நபி போருக்குப் புறப்படும்போது சில நிபந்தனைகளை முன் வைத்து தன் உம்மத்தை அழைத்துச் சென்றார் தன் மனைவியுடன் இன்னும் சேராத புதிய மணமகன்கள், கட்டிடம் கட்டி விட்டு அதன் மேல்தளம் அமைக்காதவர்கள், கால்நடைகள் குட்டி போடும் நிலையில் அதை எதிர் பார்த்து காத்திருப்பவர் ஆகியோர்  எங்களோடு வரக்கூடாது.(இவர்களால் முழுமையாகப்போரில் கவனம் செலுத்த முடியாது.) என்று கூறி மற்றவர்களை அழைத்துச் சென்றார். அங்கு போய்ச் சேருவதற்குள் அசர் நெருங்கி விட்டது. சூரியன் மறைந்து விட்டால் போரிட முடியாது. ஆகவே அல்லாஹ்விடம் யாஅல்லாஹ் இந்த சூரியனை எங்களுக்காக மறையாமல் தடுத்து வை என துஆ செய்தார். அதன்படி போர் முடியும் வரை சூரியன் மறையாமல் இருந்தது. அல்லாஹ் வெற்றியை கொடுத்தான். அக்காலத்தில் குர்பானி கொடுப்பவர்களும் சரி, ஙனீமத் பொருளை அடைந்தவர்களும் சரி அவர்கள் தியாக உள்ளத்தோடு அவற்றை பயன்படுத்தாமல் ஒரு மலை மீது கொண்டு போய் வைத்து விட வேண்டும். நெருப்பு வந்து அதை கரித்துச் சென்று விட்டால் அவர்களின் குர்பானி ஏற்கப்பட்டது என்று பொருள். அதன்படி இப்போரில் கிடைத்த ஙனீமத் பொருட்களை அவ்வாறே வைத்த போது நெருப்பு வந்ததுஆனால் கரிக்காமல் சென்று விட்டது. அப்போது அந்த நபி தன் உம்மத்தினரிடம் இங்கு வந்து சேர வேண்டிய தியாகப் பொருட்களில் சிலதை யாரோ எடுத்து வைத்துள்ளீர்கள். அதை நேரடியாகவும் சொல்ல மாட்டீர்கள் ஆகவே அதை கண்டு பிடிக்க உங்களில் ஒவ்வொரு குடும்பத் தலைவரும் என்னிடம் வந்து கை கொடுக்க வேண்டும் என்ற போது, வரிசையாக வந்து அவர்கள் கை கொடுத்தனர். அதில் ஒரு குடும்பத் தலைவரின் கை நபியின் கையுடன் ஒட்டிக் கொண்டது உடனே அந்த நபி உங்களின் குடும்பம் முழுவதும் என்னிடம் கை கொடுக்க வேண்டும் என்ற போது அவ்வாறே செய்தனர். அப்போது அவர்களில் இரண்டு அல்லது மூன்று நபர்களின் கைகள் நபியின் கையுடன் ஒட்டிய போது, உங்களிடம் தான் அப்பொருட்கள் உள்ளன. மரியாதையாக அதை கொண்டு வாருங்கள் என்ற போது ஒரு மாட்டின் தலை அளவுக்கு அவர்கள் மறைத்து வைத்திருந்த தங்கத்தை கொண்டு வந்தனர். அதை மலை மீது வைத்த பின்பே நெருப்பு வந்து அதை கரித்துச் சென்றது அவர்களின் தியாகம் ஏற்கப்பட்டது. 
عن أبي هريرة ، رضي الله عنه قال : نزل جبريل عليه الصلاة والسلام إلى النبي صلى الله عليه وسلم ، فقال له النبي صلى الله عليه وسلم : يا جبريل كيف رأيت عيدنا ؟ » فقال : لقد تباهى به أهل السماء . اعلم يا محمد أن الجذع من الضأن خير من السيد من المعز ، وأن الجذع من الضأن خير من السيد من البقر ، وأن الجذع من الضأن خير من السيد من الإبل ، ولو علم الله ذبحا خيرا منه فدى به إبراهيم عليه الصلاة والسلام (كنز العمال)
குர்பானிப் பிராணியை முன்பாகவே வாங்கி வளர்த்து, கொழுக்க வைப்பதின் சிறப்பு
ذَلِكَ وَمَنْ يُعَظِّمْ شَعَائِرَ اللَّهِ فَإِنَّهَا مِنْ تَقْوَى الْقُلُوبِ (32)سورة الحج عَنْ اِبْن عَبَّاس رضي الله عنه قال "تَعْظِيمهَا اِسْتِسْمَانهَا وَاسْتِحْسَانهَا
{تفسير القرطبي} وَقَالَ أَبُو أُمَامَة عَنْ سَهْل : كُنَّا نُسَمِّن الْأُضْحِيَّة بِالْمَدِينَةِ وَكَانَ الْمُسْلِمُونَ يُسَمِّنُونَ .رَوَاهُ الْبُخَارِيّ
இப்னு அப்பாஸ் ரழி அவர்கள் கூறினார்கள். மேற்படி குர்ஆன் வசனத்தில் அல்லாஹ்வின் சின்னங்களை கண்ணியப்படுத்தினால் அது இறையச்சத்தின் அடையாளம் என்பதில்  கண்ணியப்படுத்துதல் என்பது அதை முன்னதாகவே வாங்கி தீனி போட்டு கொழுக்க வைப்பதாகும். ஸஹ்ல் ரழி கூறினார்கள் நாங்கள் குர்பானிப் பிராணிகளை முன்பாகவே வாங்கி கொழுக்க வைப்போம். முஸ்லிம்களும் அவ்வறே செய்தனர். 
நபி ஸல் அவர்கள் அறுத்த குர்பானிப் பிராணியைப் போன்றே தம்  குர்பானிப் பிராணியும் இருப்பதை விரும்பிய நபித்தோழர்கள்
عن يُونُس بْن مَيْسَرَةَ بْنِ حَلْبَسٍ قَالَ خَرَجْتُ مَعَ أَبِي سَعِيدٍ الزُّرَقِيِّ صَاحِبِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى شِرَاءِ الضَّحَايَا قَالَ يُونُسُ فَأَشَارَ أَبُو سَعِيدٍ إِلَى كَبْشٍ أَدْغَمَ لَيْسَ بِالْمُرْتَفِعِ وَلَا الْمُتَّضِعِ فِي جِسْمِهِ فَقَالَ لِي اشْتَرِ لِي هَذَا كَأَنَّهُ شَبَّهَهُ بِكَبْشِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ (ابن ماجة) بَاب مَا يُسْتَحَبُّ مِنْ الْأَضَاحِيِّ
யூனுஸ் இப்னு மய்ஸரா ரஹ் கூறினார்கள் நான் நபித்தோழர் அபூஸயீத் ரழி அவர்களுடன் குர்பானி ஆடு வாங்கச் சென்றேன். அப்போது அபூஸயீத் ரழி அவர்கள் இலேசாக கறுப்பு நிறம் கலந்த, நடுத்தரமான அளவு கொண்ட ஒரு ஆட்டை சுட்டிக்காட்டி இதை எனக்கு வாங்குங்கள் காரணம் இது நபி ஸல் அவர்கள் கொடுத்த குர்பானி ஆட்டைப் போன்று உள்ளது என்றார்கள்.
لابد أن تكون الضحية بما يجزئ، فلا تجزئ الصغيرة التي لم تبلغ سناً ينتفع بها، وحدد ذلك في الإبل بخمس سنين، فإذا تمت السنة الخامسة فهي ناقة أو بعير يضحى به، وتجزئ البقر إذا بلغت السنتين، والمعز إذا بلغت سنة، والضأن إذا بلغت نصف سنة، هكذا حددت أسنانها (شرح عمدة الاحكام)
ஒரு வயது பூர்த்தியடையாத ஆட்டை குர்பானி கொடுப்பது கூடாது.  ஆறு மாத செம்மறியாடு பார்ப்பதற்கு ஒரு வருடம் பூர்த்தியானதைப் போன்று இருந்தால் அதை குர்பானி கொடுக்கலாம்.  மாட்டில் இரண்டு வயது பூர்த்தியடையாத மாட்டை குர்பானி கொடுப்பது கூடாது. ஒட்டகத்தில் ஐந்து  வயது பூர்த்தியடையாத ஒட்டகத்தை குர்பானி கொடுப்பது கூடாது.
குர்பானிப் பிராணியில் இருக்கக் கூடாத குறைகள்
குறிப்பு- நோய் தாக்கிய, ஒற்றைக்கண் உள்ள, நொண்டியான, முற்றிலும் கொம்பு உடைந்த ஆட்டை குர்பானி கொடுக்கக் கூடாது. வெண்மை நிறம் கொண்ட ஆடு சிறந்தது. காயடிக்கப்பட்ட ஆடு மிகவும் சிறந்தது. 
أَنَّ عَائِشَةَ قَالَتْ : كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا ضَحَّى اشْتَرَى كَبْشَيْنِ عَظِيمَيْنِ ، سَمِينَيْنِ أَقْرَنَيْنِ ، أَمْلَحَيْنِ مَوْجُوئَيْنِ (أحمد
நபி ஸல் குர்பானி கொடுத்தால் பருமனான, கொம்பு உள்ள, காயடிக்கப்பட்ட ஆட்டைக் குர்பானி கொடுப்பார்கள்
وإن قطع من الذنب أو الأذن أو العين أو الإلية الثلث أو أقل أجزأه وإن كان أكثر لم يجزه لأن الثلث نتفذ فيه الوصية من غير رضا الورثة فاعتبر قليلا وفيما زاد لا تنفذ إلا برضاهم فاعتبر كثيرا (هداية
வால், காது ஆகியவை மூன்றில் ஒரு பகுதி அறுபட்டிருந்தாலோ அல்லது அதை விடக் குறைவாக அறுபட்டிருந்தால் குர்பானி கொடுக்கலாம்.  கொம்பும் இவ்வாறே மூன்றில் ஒரு பகுதிக்கும் குறைவாக உடைந்திருந்தால் குர்பானி கொடுக்கலாம். அதற்கு மேல் அறுபட்டிருந்தால் குர்பானி கொடுக்கக் கூடாது. 
மூன்றில் ஒரு பங்கு குறை மன்னிக்கப்படும் என்பதற்கு இமாம்கள் கூறும் ஆதாரமாகிறது. வஸிய்யத் உடைய சட்டமாகும். ஒருவர் தன்னுடைய வாரிசுகளின் அனுமதி இல்லாமலேயே மூன்றில் ஒரு பகுதியை வாரிசு அல்லாதவருக்கு வஸிய்யத் செய்ய அனுமதி உண்டு. காரணம் அதுபோக மீதி இரண்டு பங்கு என்பது வாரிசுகளுக்கு மிச்சமிருப்பது என்பது முழுவதும் மிச்சமிருப்பதைப் போன்றே கருதப்படும். பிறருக்கு வஸிய்யத் செய்த மூன்றில் ஒரு பங்கு என்பது குறைந்த அளவு என்பதால் வாரிசுகளுக்குச் சேர வேண்டிய சொத்தில் குறைவு செய்ததாக கவனிக்கப்படாது. அதுபோல் குர்பானிப் பிராணியில் மூன்றில் ஒரு பங்கு குறை மன்னிக்கப்படும்.                                 
குர்பானிப் பிராணியின் கண்களில் எந்தக் குறையும் இருக்கக்கூடாது
عن حذيفة قال قال رسول الله صلى الله عليه و سلم استشرفوا العين والأذن أي اطلبوا سلامتهما (طبراني
குர்பானிப் பிராணியின் கண்களில் மூன்றில் ஒரு பங்கு குறை இருக்கிறதா அல்லது அதைவிடக் கூடுதலாக உள்ளதா என்பதை பரிசோதிக்க ஹிதாயா நூலில் கூறப்படும் விளக்கம் 
ثم معرفة المقدار في غير العين متيسر وفي العين قالوا تشد العين المعيبة بعد أن لا تعتلف الشاة يوما أو يومين ثم يقرب العلف إليها قليللا قليلا فإذا رأته من موضع أعلم على ذلك المكان ثم تشتد عينها الصحيحة وقرب إليها العلف قليلا قليلا حتى إذا رأته من مكان أعلم عليه ثم ينظر إلى تفاوت ما بينهما فإن كان ثلثا فالذاهب الثلث وإن كان نصفا فالنصف (هداية
மற்ற உறுப்புக்களில் குறை இருந்தால் வெளியில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். ஆனால் கண்ணில் குறை இருப்பதை வெளியில் பார்த்துத் தெரிந்து கொள்ள முடியாது. இதற்காக நாம் செய்ய வேண்டியது நீண்ட நேரம் ஆட்டுக்கு எந்த தீனியும் தராமல் இருந்த பிறகு அதற்கான தீனியை எடுத்துக் கொண்டு அந்த ஆட்டின் இரு கண்களில் குறையுள்ளதாக கருதப்படும் கண் மட்டும் திறந்திருக்கும் அமைப்பில் மற்றொரு கண்ணை அதாவது ஆரோக்கியமான கண்ணைக் கட்டி விட்டு தூரத்தில் இருந்து தீனியைக் கொண்டு செல்ல வேண்டும். எவ்வளவு தூரத்தில் ஆடு தன்னுடைய தீனியைப் பார்த்து அதை நோக்கி வர ஆரம்பிக்கிறது என அந்த இடத்தை அடையாளம் இட வேண்டும். பின்பு அடுத்த நாள் அதே மாதிரி மற்றொரு ஆரோக்கியமான கண் மட்டும் திறந்திருக்கும் அமைப்பில் மற்றொரு கண்ணை அதாவது குறையுள்ள கண்ணைக் கட்டி விட்டு தூரத்தில் இருந்து தீனியைக் கொண்டு செல்ல வேண்டும். இந்த முறை தூரத்தில் இருந்தே ஆடு தன்னுடைய தீனியை அடையாளம் கண்டு அதை நோக்கி வர ஆரம்பிக்கும். அந்த இடத்தை அடையாளம் இட வேண்டும். தற்போதைய அடையாளத்தை விட முதல் நாள் போட்ட அடையாளம் மூன்றில் ஒரு பகுதியை விட தூரம் குறைவாக இருந்தால் அல்லது மூன்றில் ஒரு பகுதி மட்டும் இருந்தால் அந்த ஆட்டை குர்பானி கொடுக்கலாம்.                   
அகீகாவில் ஆடுகளின் எடையை விட எண்ணிக்கை தான் முக்கியம். ஆனால் உழ்ஹியாவில் ஆடுகளின் எடை தான் முக்கியம்.
أَنَّ تَكْثِير الْعَدَد فِي الْعَقيقة مَقْصُود فَهُوَ الْأَفْضَل بِخِلَافِ الْأُضْحِيَّة .لأَنَّ الْمَقْصُود فِي الضَّحَايَا اللحم ولحم السمين،فَشَاة نَفِيسَة أَفْضَل مِنْ شَاتَيْنِ غَيْر سَمِينَتَيْنِ بِقِيمَتِهَا -قَالَ النَّوَوِيّ: فِيمَنْ أَرَادَ أَنْ يُعْتِقَ رَقَبَةً وَاحِدَةً ، أَمَّا لَوْ كَانَ مَعَ شَخْصٍ أَلْف دِرْهَم مَثَلًا فَأَرَادَ أَنْ يَشْتَرِيَ بِهَا رَقَبَة يُعْتِقُهَا فَوَجَدَ رَقَبَة نَفِيسَة أَوْ رَقَبَتَيْنِ مَفْضُولَتَيْنِ فَالرَّقَبَتَانِ أَفْضَل،قَالَ:وَهَذَا بِخِلَافِ الْأُضْحِيَّة فَإِنَّ الْوَاحِدَة السَّمِينَة فِيهَا أَفْضَل، لِأَنَّ الْمَطْلُوب هُنَا فَكّ الرَّقَبَة وَهُنَاكَ طِيب اللَّحْم (فتح الباري)وهكذا قال الشافعى رحمه الله عنه فى الاضحية استكثار القيمة مع استقلال العدد أحب إلى 
  விளக்கம்-நவவீ இமாம் கூறுகிறார்கள்- ஒரு மனிதனிடம் ஆயிரம் ரூபாய் உள்ளது இந்த ஆயிரத்திற்கு அடிமைகளை வாங்கி உரிமை  விட எண்ணுகிறார் அப்போது ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஒரே ஒரு உயர்ந்த அடிமையையும் காண்கிறார் அதேபோல 500 ரூபாய் மதிப்புள்ள இரண்டு அடிமைகளையும் காண்கிறார் இந்நிலையில் அவர்  ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஒரே ஒரு உயர்ந்த அடிமையை வாங்கி உரிமை விடுவதை விட  500 ரூபாய் மதிப்புள்ள இரண்டு அடிமைகளை வாங்கி உரிமை விட்டு அவ்விருவரையும் அடிமைத்தனத்திலிருந்து விடுவிப்பது தான் சிறந்த து ஏனெனில் இங்கே அடிமையின் மதிப்பை விட எண்ணிக்கை தான் முக்கியம். இதேபோல் தான் அகீகாவும். குர்பானீ அப்படியல்ல. குர்பானியில் ஐந்தாயிரம் மதிப்புள்ள இரண்டு ஆடுகளை விட பத்தாயிரம் மதிப்புள்ள கொழுத்த ஆடு சிறந்தது         
குர்பானிப் பிராணியை வாங்கும்போது குறையற்றதாக வாங்கி பின்பு அவரிடம் வளரும்போது ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால்..
عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رض قَال ابْتَعْنَا كَبْشًا نُضَحِّي بِهِ فَأَصَابَ الذِّئْبُ مِنْ أَلْيَتِهِ أَوْ أُذُنِهِ فَسَأَلْنَا النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَمَرَنَا أَنْ نُضَحِّيَ بِهِ رواه ابن ماجة - كتاب الأضاحى
அபூசயீத் ரழி கூறினார்கள் நாங்கள் ஒரு ஆட்டை வாங்கி வைத்திருந்தோம். அதன் பித்தட்டுப் பகுதியை (மற்றொரு அறிவிப்பில் அதன் காதை) ஒரு ஓநாய் கடித்து சேதப்படுத்தி விட்டது. அதைப் பற்றி நபி ஸல் அவர்களிடம் கேட்டோம். அதற்கு நபி ஸல் அவர்கள் அதையே குர்பானி கொடுக்க ஏவினார்கள். 
இறந்தவருக்காக குர்பானி கொடுக்கலாம்
عَنْ حَنَشٍ قَالَ رَأَيْتُ عَلِيًّا يُضَحِّي بِكَبْشَيْنِ فَقُلْتُ لَهُ مَا هَذَا فَقَالَ إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَوْصَانِي أَنْ أُضَحِّيَ عَنْهُ فَأَنَا أُضَحِّي عَنْه(ابو داود
நபி ஸல் அவர்களின் வஃபாத்துக்குப் பிறகு அலீ ரழி அவர்கள் இரண்டு ஆடுகளை குர்பானி கொடுப்பார்கள். காரணம் கேட்ட போது நபி ஸல் அவர்கள் தனக்காகவும் குர்பானி தரும்படி எனக்கு வஸிய்யத் செய்தார்கள் அதனால் அவர்களுக்கு சேர்த்து நான் தருகிறேன் என்றார்கள்.

புதன், ஏப்ரல் 23, 2025

இந்தியா india கடந்து வந்த பாதைகள்,மாநில சுயாட்சி,

*மாநில சுயாட்சி
-ஒரு சிறு வரலாற்றுக் குறிப்பு.

* இந்தியா என்பது தேசமல்ல.
பல தேசங்களின் ஒன்றியம் தான்.

* இந்தியா என்றால் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை என்பார்கள்.
1947 ஆகஸ்ட்-15 இந்தியா விடுதலையடையும் போது காஷ்மீரும், கன்னியாகுமரியும் இந்தியாவோடு இல்லை என்பதே வரலாறு.

* கன்னியாகுமரி திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கட்டுப்பாட்டிலும், காஷ்மீர் ஹரிசிங் மன்னனால் அங்குள்ள சமஸ்தானத்திலும் இருந்தது.

* வெள்ளையர்கள் வருகைக்கு முன்பு இந்தியா என்ற இன்றைய நிலப்பரப்பு முழுமையும் எவராலும் ஆளப்படவில்லை.

* கி.மு.5- 6 நூற்றாண்டுகளில் ஆட்சி செய்த மகதப் பேரரசு தொடங்கி,
மௌரியப் பேரரசு
குப்தப் பேரரசு
ஹர்சப் பேரரசு
சாளுக்கியப் பேரரசு
ராஷ்டிரக் கூடப் பேரரசு
டில்லி சுல்தான்கள்
முகலாயப் பேரரசு வரை
இந்தியா முழுமையும் ஆளவில்லை.
குறிப்பாக இன்றைய தமிழ்நாட்டை ஆளவில்லை.
இவர்களெல்லாம் ஆள முடியாத தமிழ்ப்பகுதியை,  வடக்கே உள்ள அமித்ஷாவும், மோடியுமா ஆண்டு விட முடியும்?

* 1498 மே 20 வாஸ்கோடகாமா கோழிக்கோடு வந்து சேர்ந்தான். ஐரோப்பியர்களிடம் இம்மண் அடிமைப்படுவதற்கான ஆரம்ப முயற்சி அதுதான்.

*1498 முதல் 2022 வரையிலான 500 ஆண்டு அரசியல் வரலாற்றில், தமிழ்மண் காக்கும் பெரும் போராட்டம் குறித்தும் அறிந்திடல் வேண்டும். 

* எனது நிலத்தை எவனும் அடிமைப்படுத்த முடியாது என்ற குரல்கள் தமிழ் மண்ணிலிருந்தே தொடங்கியது. இதுதான் சுயாட்சியின் முதல் குரல்.

*பூலித்தேவன்
*ஒண்டிவீரன்
*வீரன் அழகுமுத்து
*வீரன் சுந்தரலிங்கம்
* மருதநாயகம்
*கட்டபொம்மன்
* ஊமைத்துரை
*வேலு நாச்சியார்
*மருது சகோதரர்கள்
*வீரன் வேலுத்தம்பி
* தீரன் சின்னமலை
*இராணி மங்கம்மாள்
* விருப்பாச்சி கோபால் நாயக்கர்
என பட்டியல் நீளமானது.

* இந்தியா விடுதலையடையும் போது 604 சமஸ்தானங்களும், 11 மாகாணங்களுமாக தனித்தனியே இருந்தது.

* வெள்ளையனை எதிர்த்துப் போரிட்டு வீரமரணம் அடைந்த சமஸ்தானங்களே மாகாணங்களுக்குள் இணைக்கப்பட்டிருந்தது.

* வெள்ளையனுக்கு கப்பம் கட்டி வாழ்ந்தவர்கள் தனி சமஸ்தானங்களாக இருந்தனர்.

* இந்தியா-பாகிஸ்தான் என இரண்டாகப் பிரிந்தது.
இந்தியாவோடு 552 சமஸ்தானங்கள் இணையவும், பாகிஸ்தானோடு 49 சமஸ்தானங்கள் இணையவும் ஒப்புக் கொண்டன. 3 சமஸ்தானங்கள் இணைய மறுத்தன.

* இணைய மறுத்த சமஸ்தானங்கள்
1.ஜூனாகட் சமஸ்தானம் (குஜராத்)
2. ஹைதராபாத் சமஸ்தானம் 
3. காஷ்மீர் சமஸ்தானம் 

* இந்திய ஒன்றிய அரசு பேச்சுவார்த்தை மூலம் ஜூனாகட், காஷ்மீர் சமஸ்தானத்தையும், இராணுவ நடவடிக்கை மூலம் ஹைதராபாத் சமஸ்தானத்தையும் இந்தியாவோடு இணைத்தது.

* இதில் ஹைதராபாத் மன்னன் முஸ்லிம். மக்கள் பெரும்பான்மையோர் முஸ்லிம் அல்ல. காஷ்மீர் மன்னன் ஹரிசிங் முஸ்லிம் அல்ல. மக்கள் பெரும்பான்மையோர் முஸ்லிம் என்பது தான்.

* ஒரு புறம் 11 மாகாணங்கள். மறுபுறம் 500 க்கும் மேற்பட்ட சமஸ்தானங்கள். பல மொழி, பல பண்பாடு. இவர்களை எப்படி இணைத்து இந்தியாவுக்கு சட்டமியற்றுவது என ஆலோசித்தனர். எனவே தான் அரசமைப்புச் சட்டத்தை எழுத அண்ணல் அம்பேத்கர் தலைமையில் குழு அமைத்தனர்.

* 11 மாகாணங்களை வெள்ளையன் ஆண்ட போது எப்படி சட்டம் இருந்தது? அப்போது மாநில சுயாட்சி குறித்த நடந்த விவாதம் என்ன என்பதை அறிய வேண்டும்?

* 1911 ல் வைஸ்ராயாக இருந்த ஆர்டிங்ஸ் என்பவர், மாகாணங்களுக்கு அதிக அதிகாரம் தர வேண்டும் என்று பிரிட்டன் ஆட்சியாளர்களுக்கு பரிந்துரை செய்தார்.

* அப்பரிந்துரையில் இந்தியாவை Union Of Autonomous Provinces என ஆக்க வேண்டும் அல்லது United States of India என்ற நிலையைக் கூட உருவாக்கலாம் என்றார்.

* 1915 ல் கோபால கிருஷ்ண கோகலே 'அரசியல் கட்டளைகள்' என்ற பெயரில் ஒரு அறிக்கை எழுதினார். அதில் " மாகாண அரசுகளை, முழு அதிகாரம் படைத்த ஒரு விடுதலை அரசாக ஆக்க வேண்டும்" எனக் கோரினார்.

* 1916 ல் காங்கிரஸ் மற்றும் முஸ்லீம் கட்சிகள் இணைந்து லக்னோ ஒப்பந்தம் செய்தது. அதில் "மாகாணங்களில் தன்னாட்சி" அமைக்கப்பட வேண்டும் " என வலியுறுத்தின.

* 1919 ல் மாண்டேகு-ஜேம்ஸ் போர்டு சீர்திருத்தம் "மாகாண உரிமை தர மறுத்தது". இதை முஸ்லிம் லீக் கடுமையாக எதிர்த்தது.

* 1924 ல் ஜின்னா தலைமையிலான முஸ்லிம்லீக் மாநாட்டில் " முழுமையான நிலங்களைக் கொண்ட ஒரு கூட்டாட்சி முறையையே ஏற்படுத்தியாக வேண்டும்" என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

* 1925 சிங்காரவேலர் தலைமையில் கான்பூரில் தொடங்கப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் அகில இந்திய மாநாட்டில் " மாகாண சுயாட்சி தீர்மானம்" நிறைவேற்றப்பட்டது.

* 1930-31-32 ஆகிய மூன்று வருடங்களில் நடைபெற்ற வட்ட மேசை மாநாடுகளிலும், மொழி வழி மாநில உரிமைகள் பற்றியும், மொழி வழி மாநிலங்கள் அமைக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

* 1931 சுதேச மன்னர்கள் மற்றும் மாகாணப் பிரிதிநிதிகள் கூட்டத்தை சைமன் கமிசன் கூட்டியது. இதில் பாட்டியாலா மற்றும் காஷ்மீர் மன்னர்கள், சுயாட்சி உரிமையை வலியுறுத்தினர்.

* தமிழகத்தைப் பொறுத்தவரை 1921 லேயே மொழி வழி மாநிலம் சார்ந்த பேசத் தொடங்கினர்.

* சென்னை மாகாணமாக இருந்த போதே " தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி" என்றே காங்கிரசார் கட்சி தொடங்கினர்.

* மாகாண ஆட்சி உருவாக்கி, ஆளுநருக்கு அதிகாரம் வழங்கிய போது, காங்கிரஸ் தான் முதலில் எதிர்த்தனர்.

* 1937 டில்லியில் நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழுவில் 11 மாகாண ஏற்பாட்டையும், ஆளுநர் அதிகாரத்தையும் காங்கிரஸ் ஏற்கவில்லை என்று தீர்மானம் போட்டனர்.

* 1939 பீஹார் மற்றும் ஒன்றிய மாகாண முதலமைச்சர்கள் ஆளுநர் தலையீட்டை எதிர்த்து ராஜினாமா செய்தனர்.

* ஆங்கில அரசுக்கு எதிராக, மாகாண சுயாட்சி என்பது மாநில சுயாட்சிக்கு மூலமாக அமைந்தது  என்பதே வரலாறு.

* 1937 ராஜாஜியால் குலக்கல்வி திட்டம் மற்றும் ஹிந்தி திணிப்புக்கு எதிராக " தமிழ்நாடு தமிழருக்கே" என்று பெரியார் உச்சபட்சக் குரலில் பேசினார்.

* 1939-1945 இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற போது, தேர்தல் முறைப்படியான ஆட்சி அமைப்பை தவிர்த்துவிட்டு, ஆளுநர்களை உருவாக்கியது வெள்ளை அரசு. அப்போது முதலமைச்சர்கள் இல்லாமல் ஆளுநர்களே ஆட்சி செய்தனர்.

* 1940-42 ல் சென்னை மாகாண ஆளுநராக ஆர்தர் ஹோப் இருந்த போது பெரியாரை முதலமைச்சராக பதவியேற்க அழைத்தார். பெரியார் மறுத்துவிட்டார்.

* 1940 தென்னிந்திய நல உரிமைச் சங்க மாநாடு நடைபெற்றது. தனிநாடு உரிமைத் தீர்மானம் மற்றும் அதற்கான திட்டக்குழுவையும் அறிவித்தது.

* 1944 தென்னிந்திய நல உரிமைச் சங்கம் "திராவிடர் கழகம்" எனப் பெயர் மாற்றப்பட்டு, திராவிட நாடு விடுதலைப்படை அமைக்கத் தீர்மானம் நிறைவேற்றியது.

* திராவிட நாடு கருத்து வலுவாக எழுந்த போது, காங்கிரசில் இருந்த தனது ஆதரவாளர்களைப் பெரியாருக்கு எதிராகத் தூண்டிவிட்டு, எதிர்வினையாற்றினார் ராஜாஜி.

* அதன்படி, காங்கிரசில் இருந்து கொண்டே 1946 ல் தமிழரசுக் கழகம் என்ற அமைப்பை, ம.பொ.சி தொடங்கினார். இந்திய ஒற்றுமை- மாநில சுயாட்சி என்று ஒப்புக்குப் பேசினார்.

*1963 பிரிவினை தடைச்சட்டம் கொண்டு வந்தபின்பு, திராவிட நாடு கோரிக்கையை கைவிட்ட அண்ணா,
விடுதலைக் கோரிக்கையைத் தான் கைவிட்டோம், விடுதலைக்கான காரணங்கள் அப்படியே தான் இருக்கிறது என்றார்.

* இந்நிலையில் தமிழக வரலாற்றில் திமுக தான் மாநில உரிமையை வலுவாகப் பேசியது.

* ராணுவம்
நாணயம் அச்சடிப்பு
வெளியுறவு
உள்நாட்டுத் தொடர்புகள் என்ற நான்கு தவிர, மற்ற அனைத்தும் மாநில உரிமை என்பதே, திமுகவின் மாநில சுயாட்சி உள்ளடக்கமாக இருந்தது.

* அரசியல் அமைப்புச் சட்டம் உருவாக்கிய போது ,ஒன்றிய அரசுக்கு 97 அதிகாரமும், மாநில அரசுகளுக்கு 66 அதிகாரமும், இரண்டு அரசுகளுக்கும் ஒத்திசைவாக 47 அதிகாரமும் உருவாக்கப்பட்டன.

* ஆனால் மாநில அரசின் 66 அதிகாரத்தில், 31 அதிகாரங்கள் மட்டுமே மாநில உரிமையாக இருந்தது. மற்ற 35 அதிகாரத்திலும் ஒன்றிய ஆட்சி  அதிகாரம் செலுத்தும் வகையிலும் இருந்தது.

* 1969 அண்ணா மறைவுக்குப் பிறகு முதல்வராகப் பொறுப்பேற்ற கலைஞர், முதன்முறையாக டெல்லி சென்றார். விமான நிலையத்தில் பத்திரிக்கையாளர்கள், உங்கள் பயணத்தின் நோக்கம் என்ன என்று கேட்டனர். மத்தியில் அதிகாரங்கள் குவித்திருக்கிறது.அதை மீட்டெடுக்க வந்தேன் என்றார்.

* மத்திய-மாநில உறவுகளை ஆராய நிபுணர் குழு அமைப்பேன் என்றும் கூறினார்.

* 1969 ஆகஸ்ட் நீதிபதி ராஜமன்னார் தலைமையில், மாநில சுயாட்சி குறித்து ஆய்வு செய்வதற்காக, மூவர் குழு அமைப்பதாக சட்டமன்றத்தில் அறிவித்தார்.

*நீதிபதி ராஜமன்னார் குழு பரிந்துரைகளை சட்டமன்றத்தில் தீர்மானமாக நிறைவேற்றினார் கலைஞர்.

* நீதிபதி ராஜமன்னார் குழுவின் பரிந்துரைகளில் அரசியல் அமைப்புச் சட்டத்தில், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்டங்களை மாநிலங்களில் அமுலாக்க, ஒன்றிய அரசுக்கு அதிகாரம் உண்டு எனக்கூறும் 256 பிரிவும், சில விசயங்களில் ஒன்றிய அரசு பிறப்பிக்கும் உத்தரவுகளை மாநில அரசுகள் கட்டாயம் நடைமுறைப்படுத்த வேண்டும் எனக்கூறும் 257 பிரிவும், முற்றிலுமாக நீக்கப்பட வேண்டும் என்பது மிக முக்கியமான பரிந்துரையாகும்.

* 1970 பிப்ரவரி, திருச்சியில் நடைபெற்ற திமுக மாநில மாநாட்டில் "மாநில சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி" என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

* சென்னையில் மாநில சுயாட்சி மாநாடு நடத்தப்பட்டது.
பெரியார்- காயிதே மில்லத்- அஜய் முகர்ஜி (மே.வங்கம்),சோசலிஸ்ட் தலைவர் அரங்கில் ஸ்ரீதரன், பிரணாப் முகர்ஜி, எஸ்.எம்.கிருஷ்ணா ஆகியோர் பங்கேற்றுப் பேசினர்.

* மாநில சுயாட்சி என்ற நூலை திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான திருமிகு. முரசொலி மாறன் எழுதினார்.
மாநில சுயாட்சி குறித்த உலகளாவிய அறிஞர்களின் மேற்கோள்களுடன் அந்நூல் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது.

* பேராசிரியர்.அன்பழகன் "ஒரு கடிகாரத்தின் மணி முள் முதன்மை உடையது தான். எனினும் நிமிட முள் பேரளவில் இயங்கினால் தான், மணி முள் சிறிதளவு இயங்கும். அதைப் போல, மக்களோடு நெருக்கமாக இருக்கும் மாநில அரசு பேரளவு இயங்க, மத்திய அரசு இணக்கமாக இருப்பதே மக்களாட்சி நெறி" என்றார்.

* தமிழகம் பெருமளவில் மதித்த தலைவரான வி.பி.சிங் அவர்கள் பிரதமராக இருந்த போது, திமுகவின் முயற்சியால், மாநிலங்களுக்கு இடையேயான Inter state council உருவாக்கினார். ஆனால் அவரது ஆட்சி பாஜகவால் கவிழ்க்கப்பட்டது.

* திமுக ஆட்சியில் 2007  ஆளுநர் உரையில்,மாநில சுயாட்சி கொண்டு வர முயற்சிப்போம் என்றது.

* 2009 அண்ணா நூற்றாண்டு நிகழ்வின் மையப் பொருளாக மாநில சுயாட்சி குரல் தான் எதிரொலித்தது.

* தற்போது 15 வது நிதிக்குழுவில் மாநிலங்கள் வளர்ச்சி அடைய விடாமல் நிதி ஆதாரத்தை முடக்கும் ஒன்றிய அரசைக் கண்டித்து, முதல்வர் ஸ்டாலின், மாநில முதல்வர்களுக்கு கடிதம் எழுதினார்.

*மாநில சுயாட்சியின் ஒரு அங்கமாக "இந்திய அளவில் சமூகநீதிக்கான கூட்டமைப்பையும் ஏற்படுத்த முயற்சிக்கிறார்.

* மாநில சுயாட்சிக்கான குரல்
அன்றைய பூலித்தேவன் முதல் வீரன் வேலுத்தம்பியும், தீரன் சின்னமலையும் எழுப்பிய குரலின் நீட்சி தான். 

* மாநில சுயாட்சிக்கு எதிரானவர்கள்
பூலித்தேவன் முதல் தீரன் சின்னமலை வரையிலான குரலுக்கு எதிரானவர்கள் தான்.

* மாநில சுயாட்சி என்பது
தமிழக நலன் சார்ந்த கோரிக்கை மட்டுமல்ல. இந்திய மாநிலங்கள் அனைத்துக்குமான கோரிக்கையே.

* சுருக்கமாகச் சொன்னால்
மாநில சுயாட்சி என்பது
மாநில நலன் சார்ந்தது மட்டுமல்ல.
இந்திய நலன் சார்ந்ததும் தான்.

சூர்யா சேவியர்
15-04-25

பிரபல்யமான பதிவுகள்