நம்முடன் இணைந்து இருப்பவர்கள்

சனி, ஜனவரி 25, 2025

பெண்கள் பயான்கள்

 பெண்கள் தொடர்பாக பதிவு 

1) இஸ்லாத்தின் நிழலில் பேறு பெற்ற பெண்ணினம்!
https://vellimedaiplus.blogspot.com/2013/08/blog-post.html?m=1

2) பெண் குழந்தைகளை வளர்ப்பதில் பெருமானார் ஸல் அவர்கள்!

https://vellimedaiplus.blogspot.com/2018/11/blog-post_35.html?m=1

3) பெண் என்பவள்..
https://vellimedaiplus.blogspot.com/2019/03/blog-post_7.html?m=1

4) பெண்கள் கவலைப்படுவதை அல்லாஹ் விரும்புவதில்லை!
https://vellimedaiplus.blogspot.com/2023/11/blog-post_23.html?m=1

வியாழன், ஜனவரி 23, 2025

_மிஃராஜ் பயணம் ஏன்,

_மிஃராஜ் பயணம் ஏன்?
*=====================*

மிஃராஜ் நிகழ்வு நடப்பதற்க்கு பல காரணம் உண்டு என்பதை வரலாற்று ஆசிரியர்கள் பதிவு செய்கிறார்கள் அதில் ஒரு சிலதை மட்டும் பதிவு செய்கிறேன்

*காரணம்:-1* நபிகள் நாயகம் [ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்] அவர்களுக்கு ஏற்பட்ட மனரீதியான உடல் ரீதியான ஆழமான காயத்திற்க்கும் கவளைக்கும் மன உலைச்சலுக்கும் மருந்தாக இந்நிகழ்வு நடந்தது

நபியவர்களின் நபித்துவ வாழ்வின் தொடக்க முதல் எதிரிகளிடமிருந்து எதிர்ப்புகளும் தொந்தரவுகளும் வந்த நேரத்தில் நபியவர்களுக்கு எல்லா வகையிலும் பெரும் உருதுணையாகவும் ஆற்தலாகவும் பாதுகாப்பாகவும் இருந்தவர்கள் இரண்டு நபர்கள் மட்டுமே

*அதில் ஒருவர்:-*
நபியவர்களின் சிறிய தந்தை அபூதாலிப் அவர்கள் எதிரிகளின் சூழ்ச்சிகளும் அவர்களின் தந்திரங்களுக்கு மத்தியில் நபியை தொடாமல் இருக்க பெரும் உதவியாகவும் பாதுகாப்பாகவும் இருந்தவர் இவர்கள் தான்

ஒரு தடவை சஹாபாக்கள் யாரசூலல்லாஹ்! உங்களுக்காக கோபம் கொண்டு உங்களுக்கு அரணாக இருந்த உங்களின் சிறிய தந்தை அபூதாலிப் அவர்களுக்கு நீங்கள் என்ன கைமாறு செய்துள்ளீர்களா? என கேட்டார்கள் அதற்கு நபியவர்கள் ஆம்! அவர்கள் நரகின் மேல்தட்டில் இருக்கிறார்கள் நான் மட்டும் இல்லையெனில் அவர்கள் நரகின் அடிப்பகுதியில் இருந்திருப்பார்கள் என்றார்கள்

*இன்னொருவர்:* நபிகளாரின் அன்பு மனைவி அன்னை கதீஜா [ரலியல்லாஹு அன்ஹா] அவர்கள்

இவர்கள் பெரும் செல்வச் சீமாட்டியான இருந்தார்கள் நபிக்காக தன் அனைத்து சொத்துக்களையும் செலவு செய்தார்கள் நபித்துவத்திற்கு முன்பு அண்ணல் அவர்கள் ஹிரா குகையில் தன்னை தனிமைப்படுத்தி கொண்டு இறை வணக்கத்தில் ஈடுபட்ட நேரத்தில் தன் வயோதிக நிலையிலும் மிக கறடு முறடான பாதைகளை கடந்து நபியவர்களுக்கு பல நாட்களாக உணவும் தண்ணீரும் எடுத்து சென்றவர்கள்

முதன் முதலாக ஜிப்ரயீல் {அலைஹி வஸல்லம்} அவர்களை சந்தித்த அதிர்ச்சியில் பதட்டத்துடனும் படபடப்புடனும் வந்த நபியவர்களை மன அமைதிபடுத்தி பின்பு என்ன நடந்தது என விசாரித்து அவர்களுக்கு ஆறுதலான சில வார்த்தைகள் கூறியதை வரலாறு பதிவு செய்கிறது

அதனால் தான் அன்னை கதீஜா [ரலியல்லாஹு அன்ஹா] அவர்கள் இறந்த விட்ட பிறகும் எப்பொழுதும் அவர்களைப் பற்றி பேசிக் கொண்டே இருப்பார்கள் ஏதாவது பொருட்கள் அன்பளிப்பாக வந்தால் முதன் முதலாக அன்னை அவர்களின் நெருக்கமானவர்களுக்கு வழங்கும் படி கூறுவார்கள்

ஒரு நாள் நபியவர்கள் அன்னையை பற்றி பேசியதைக் கண்டு ஆயிஷா [ரலியல்லாஹு அன்ஹா] அவர்கள் ரோஷம் கொண்டு யாரசூலல்லாஹ்!  உங்களுக்கு நாங்களெல்லாம் இல்லையா? என்று கேட்டு விட்டார்கள் கடுமையாக கோபமுற்ற அருமை நாயகம் [ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்] அவர்கள் ஓஆயிஷாவே! கதீஜாவை பற்றி உனக்கு என்ன தெரியும் கதீஜா அவர்களுக்கு பிறகு அவர்களை விட சிறந்த பகரத்தை இறைவன் எனக்கு வழங்கவே இல்லை அவருக்கு நிகர் யாருமில்லை மக்களெல்லாம் என்னை பொய்யாக்கிய போது என்னை உண்மைப்படுத்தியவர் மக்களெல்லாம் என்னை கைவிட்ட பொழுது எனக்காக தன் சொத்துக்களை தியாகம் செய்தவர் அவர்களின் மூலம் தான் எனக்கு குழந்தை பாக்கியத்தை இறைவன் வழங்கினான் என்றார்கள்

இந்தளவு நெருக்கடியான நேரத்தில் ஆதரவாகவும் பெரும் உருதுணையாகவும் இருந்து உதவிகள் புரிந்த இவ்விருவரும் அடுத்தடுத்து மரணத்தை தழுவினார்கள் நபி [ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்] அவர்களின் ஐம்பத்தி ஓராவது வயதில் இருவரும் இருமாத இடைவெளியில் இன்னொரு கருத்தின் படி மூன்று நாட்கள் இடைவெளியில் உலகை விட்டுப் பிரிந்தார்கள்

மிகப்பெரிய இழப்பையும் நெருக்கடியையும் சந்தித்த நபி [ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்] அவர்களுக்கு ஆறுதல் அளிப்பதற்காகவும் அவர்களின் உள்ளத்தில் படிந்த துயரத்தை துடைப்பதற்காகவும் தான் இந்த நிகழ்வு நடந்தது

*காரணம்:-2*
தனது எல்லா அத்தாட்சிகளையும் ஒரே இரவில் நபியவர்களுக்கு காண்பித்து உலகத்தில் நிறைவானவர்கள் சிறந்தவர்கள் அவர்கள் தான் என்பதை உலகிற்கு சொல்வதற்காகவும் காட்டுவதற்காகவும் அல்லாஹ் இந்நிகழ்வை ஏற்பாடு செய்தான் இது குறித்து [சூரா இஸ்ரா வசனம்-1]ல் கூறுகிறான் 

*விளக்கம்:-* சமூகத்திற்கு மார்க்க போதனை நேரத்தில் இறைவனை இறைவனின் படைப்பை போதிக்கிறாயே? அவைகளை எல்லாம் நீ பார்த்துள்ளாயா? என கேட்டுக்கும் பதிலுக்குத்தான் இந்நிகழ்வு எனவே தான் இறைவனின் சந்திப்பு ஏழு வானம் சுவனம் நரகம் அர்ஷ் குர்ஷ் முன்தஹா ரப்ரப் வானவர்கள் நபிமார்கள் இன்னும் இதுபோன்றவைகளை பார்க்க செய்தான்

*காரணம்:-3*
மக்களின் ஈமானை பரிசோதிப்பதற்காக இந்நிகழ்வு நடந்ததாகவும் கூறப்படுகிறது

சிலர் இந்நிகழ்வை மறுத்தனர் ஆனால் அபூபக்கர் [ரலியல்லாஹு அன்ஹு] அவர்கள் மட்டுமே உறுதி கொண்டார்கள் இது மட்டுமல்ல இதை விட தூரமான விஷயங்கள் கூட நபி [ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம்] அவர்களின் நாவிலிருந்து எது வெளிப்படுகிறதோ அதை அனைத்தையும் நான் ஏற்றுக் கொள்வேன் என்றார்கள் அதனால் தான் அவர்களுக்கு சித்தீக் உண்மையாளர் என்ற பெயர் வந்தது

*காரணம்:-4*
நபிமார்கள் ஏக்கத்தை பிரியத்தை தனிக்க இந்நிகழ்வு நடந்தது 

இவ்வுலகில் 1-இலட்சத்திற்கு மேற்பட்ட நபிமார்கள் வந்தார்கள் இறைவன் உலகிற்க்கு ஒவ்வொரு நபிமார்களை அனுப்பும் போது இவ்வாறு கூறுவான் நான் உங்களை நபியாக உலகிற்க்கு அனுப்புகிறேன் ஆனால் உங்களுக்கு முன் ஒருவரை உங்களுக்கு நபியாக படைத்துள்ளேன் அவர் பெயர் முஹம்மது நீங்கள் நபியாக வாழும் காலத்தில் அந்த நபி உங்களுக்கு முன் தோன்றினால் நீங்கள் நபியல்ல அவரே நபி இதை ஏற்று கொள்கிறீர்களா? என கேட்பான் சரி ஏற்று கொண்டேன் என்றால் சொன்னால் தான் அவர்களை நபியாக இறைவன் அனுப்புவான் மேலும் நபியவர்களின் தன்மை மகிமை ஆளுமை போன்றவைகளை எடுத்து சொன்னதும் ஒவ்வொரு நபிமார்களும் அப்படிபட்ட நபியை பார்க்க துடித்தார்கள் ஆவல் கொண்டார்கள் எனவே தனிக்க இந்நிகழ்வு.

புதன், ஜனவரி 22, 2025

ஜும்ஆ பயான்கள்,

*ஜும்ஆ  பயான்கள்*
*======================*

1). ஹாஃபிழ்கள்
https://youtu.be/oNIHAmLPby8?si=YyiLLudXdrdoZsGc

2). வினை விதைத்தவன் வினை அறுப்பான், திணை விதைத்தவன் திணை அறுப்பான். (கட்டுரை)
https://imdhadhi.blogspot.com/2025/01/blog-post_15.html

3) சுத்தம் பேணுவீர்.. சுகாதாரம் பெறுவீர்… 
https://wp.me/p7XOes-q (கட்டுரை)
https://vellimedaikal.wordpress.com/2019/02/04/ஜூம்ஆ-முபாரக்-தகவல்-மேடை-4

4) எண்ணத்தால் பெறுவதே நற்கூலி.
https://youtu.be/zjbRAvk_fq4?si=eGq7LcS5ZRHOw98E

5) அல்லாஹ்வால்
தேர்வுசெய்யபட்டவர்கள்
https://youtu.be/oi6LbGDQOvU?si=nS_wx_6p0UNbu8-o

6) வல்லரசை கலங்கடிக்கும் காட்டுத்தீ!"
https://youtu.be/l4uvt9VQymw?si=oWawcZe3pEVGUEwH

7) அமெரிக்கவில் எரியும் தீ! 
ஃபலஸ்தீன் மக்களின் சாபமா.?"
https://youtu.be/FjgwLHhJyZI?si=-3mT3-KhtNGKprvi
       
8) காஸா முதல் கலிஃபோர்னியா வரை
https://youtu.be/Lw--AhCgm-8?si=QJkIy0Cxe3erHRun

9) படிப்பினைகள்
https://youtu.be/FOr_UgvGpdQ?si=6AazLSQ6EVaJ05Tr

10) பற்றி எரியும் அமெரிக்கா
https://youtu.be/1rnP6CEU4zU?si=ebj6eqaLh3_Mm823

11) நபிகளாரின் நெகிழ்வூட்டும் போர் நிகழ்வுகள்
https://youtu.be/TWFHA_n1etM?si=1jo3CMknynE7Tf3s

12) குலா, தலாக் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு
https://youtu.be/iywRLYgGdh0?si=ZbZloRRetus_0VSA

13) வலிமார்கள் ஓர் அற்பதம்”
https://youtu.be/JzLXn8ugNLY?si=AnyOclN8mIc9MW0m

14) தவ்ராத் வேதத்தில் தாஹா நபி
https://youtu.be/8Rnib3lEjCQ?si=PXmI7tiq6s3WQnFN

15) இளமையும் இறையச்சமும்
https://youtu.be/kGEWc9I7jD0?si=93RwB23I1Wn9J4Cf

16) திருமணமான தம்பதிகள் எப்படி நடந்து கொள்ள வேண்டும்
https://youtu.be/4NWqngWYd2Q?si=H9dDa2VsxkUUCXPk

17) நல்ல சுவடுகளை பதிவு செய்யுங்கள்
https://youtu.be/UL9OFo2xDNE

18) நான்கு நற்பாக்கியங்கள் 
(பெண்கள் பயான்)
https://youtu.be/dkdtGtX1-j4?si=753TtPfsOx-aaa-x

19) தாய்ப்பாலின் மகிமைகள்
https://youtu.be/0map7ocZHpg?si=G89ItxYV6bE4htM4

20) பெண்கள் பயான்
https://youtu.be/J7rMlS4WM2k?si=fHlo_v3tsjj5I7Q0

21) இஸ்லாமிய பார்வையில்...
உடல் உறுப்புக்கள் தானம் (கட்டுரை)
https://m.facebook.com/story.php?story_fbid=602685235682692&id=100078236624988&mibextid=Nif5oz

22) யஃஜூஜ் மஃஜூஜ் என்றால் யார்?
(கட்டுரை)
https://m.facebook.com/story.php?story_fbid=1000608103387491&id=373164366131871&mibextid=Nif5oz

ஜம்உ - கஸ்ர் தொழுகை,

ஜம்உ - கஸ்ர் தொழுகை பற்றி அறிந்து கொள்ளுவோம் 💞

• பயணம் என்பது ஒரு வேதனையின் ஒரு பகுதி ஆகும்! அதில் நமக்கு கஷ்டம் நெருக்கடி உடல் அசதி அலச்சல் என அனைத்தும் ஏற்படும் இது போன்ற நேரத்தில் தொழுவது பலருக்கு கடினமான இருக்கும்!

• பயணத்தில் போக கூடிய இடத்தில் தொழ கூடிய வசதி இருக்காது அல்லது சூழ்நிலை இருக்காது இதனால் தான் அல்லாஹ்! நபி (ஸல்) அவர்கள் மூலம் நமக்கு ஜம்உ கஸ்ரை கடமையாக்கினான்!

• ஜம்உ கஸ்ர் தொழுகை என்பது நாம் பயணத்தில் தொழுகையை சேர்த்தோ அல்லது சுருக்கியோ அல்லது தொழுகையை முற்படுத்தியோ அல்லது பிற்படுத்தியோ தொழுவது ஆகும்!

• ஜம்வு என்றால் சோ்த்தல் என்று பொருள் ஆகும்! அதாவது பயணத்தில் ளுஹரையும், அஸரையும் சோ்த்து தொழுவது அதே போன்று மஃரிபையும், இஷாவையும், சேர்த்து தொழுவது ஆகும்! 

• கஸா் என்றால் சுருக்குதல் என்று பொருள் ஆகும்! அதாவது பயணத்தில் நாம் நான்கு ரக்அத் தொழுகைகளை (லுஹர் - அஸர் - இஷா) இரண்டு ரக்ஆத்துகளாக சுருக்கி தொழுவது ஆகும்!

உதாரணமாக : லுஹர் 4 ரக்அத்தை இரண்டு ரக்ஆத் ஆக சுருக்கி தொழுவது ஆகும்!

• பயணத்தில் உள்ளவர்கள் அல்லது பயணம் செய்ய கூடியவர்கள் கட்டாயம் ஜம்உ - கஸ்ர் செய்ய வேண்டும் என்று கிடையாது! அவர்களுக்கு இடம் சூழ்நிலை நேரம் ஏற்றதாக இருந்தால் அவர்கள் முழுமையாக தொழுகலாம்!

💟 கஸா் (சுருக்கி தொழுதல்) :

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது :

அல்லாஹ் உங்கள் நபி (ஸல்) அவர்களது நாவின் மூலம் சொந்த ஊரிலிருக்கும் போது நான்கு ரக்அத்களாகவும்,பயணத்திலிருக்கும் போது இரண்டு ரக்அத்களாகவும், அச்ச நிலையில் ஒரு ரக்அத்தாகவும் தொழுகையைக் கடமையாக்கினான்!

(நூல் : முஸ்லிம் : 1223)

• நாம் ஊரில் இருக்கும் பொழுது தொழுகை சுருக்கி தொழ கூடாது! பயணத்தில் மட்டுமே தொழுகையை சுருக்கி தொழ வேண்டும்!

• அதாவது லுஹர் - அஸர் - இஷா இந்த மூன்று தொழுகைகளில் ஏதேனும் ஒன்று அல்லது மூன்றையும் பயணத்தில் தொழ நேரிட்டால் நாம் 2 ரக்ஆத்களாக தொழுது கொள்ளலாம்!

(நூல் : முஸ்லிம் : 1220)

• ஆனால் பஜ்ர் மற்றும் மஹ்ரிப் தொழுகையை மட்டும் அவ்வாறு சுருக்கி தொழ கூடாது! இருப்பதை அப்படியே தொழ வேண்டும்!

💟 கடமையான தொழுகைகளின் முன் மற்றும் பின் சுன்னத் தொழுகையை சுருக்கி தொழலாமா?

• நபி (ஸல்) அவர்கள் பயணத்தில் பர்ளு தொழுகைகள் (லுஹர் - அஸர் - இஷா) ஆகிய தொழுகைகளை மட்டுமே சுருக்கி தொழுது உள்ளார்கள்!

• இவற்றின் முன் - பின் சுன்னத் தொழுகைகளை நபி (ஸல்) அவர்கள் பயணத்தில் தொழுதது கிடையாது!

(நூல் : முஸ்லிம் : 1227)

• பஜ்ர் முன் சுன்னத் மற்றும் லுஹர் முன் சுன்னத் 2 ரக்அத் மற்றும் வித்ரு வாஜிப் ஆகிய மூன்று உபரியான தொழுகையை மட்டும் நபி (ஸல்) அவர்கள் பயணத்தில் கூட தொழுது உள்ளார்கள்!

(நூல் : அபூதாவூத் : 1222)

💟 எவ்வளவு தூரம் பயணம் செய்தால் இந்த கஸ்ர் தொழுகை நமது மீது கடமை ஆகும்?

• நபி (ஸல்) அவர்கள் மூன்று ஃபா்ஸக் தூரம் அளவுக்கு பயணத்தில் செய்தால் தொழுகையை சுருக்கி தொழுது உள்ளார்கள்!

(நூல் : முஸ்லிம் : 1230)

• ஒரு ஃபா்ஸக் என்பது மூன்று மையில்களாகும். மூன்று ஃபா்ஸக் என்பது ஒன்பது மையில்களாகும். அதாவது கிட்டதட்ட இருபது கிலோ மீட்டா் துாரமாகும்!

• அதே போன்று இந்த கஸ்ர் தொழுகை தொழ ஊர் எல்லையை தாண்டி தான் தொழ வேண்டும் என்று எந்த நிபத்தனையும் கிடையாது! நபி (ஸல்) அவர்கள் ஊர் எல்லை தாண்டுவதற்கு முன்பே கஸ்ர் செய்து உள்ளார்கள்!

(நூல் : முஸ்லிம் : 1231)

• தூரம் பற்றி நிறைய கருத்து வேறுபாடுகள் உள்ளன! ஒரு இடத்திற்கு அல்லது ஒரு வேலையின் காரணமாக ஒரு இடத்திற்கு செல்ல பயணம் மேற்கொள்ள போகிறோம் என்றால் அப்போது நாம் ஜம்உ கஸ்ர் செய்து கொள்ளலாம்! 

💟 எத்தனை நாட்கள் நாம் சுருக்கி தொழுகலாம் :

• இவ்வளவு நாட்கள் தான் தொழுகையை சுருக்கி தொழ வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் எந்த நிபந்தனையும் நமக்கு வகுக்க வில்லை!

• நபி (ஸல்) அவர்கள் ஒரு சந்தா்பத்தில் மக்காவில் 10 நாட்கள் தங்கி போது 10 நாட்களும் கஸ்ர் செய்துள்ளா்ர்கள் அதே போன்று மற்றொரு முறை 19 நாட்கள் தங்கியதற்காக 19 நாட்களும் கஸா் செய்துள்ளார்கள்!

(நூல் : முஸ்லிம் : 1233)

• எனவே நாம் எவ்வளவு நாட்கள் பயணம் செய்கிறோமோ அத்தனை நாட்களும் நாம் தொழுகையை சுருக்கி தொழகலாம்!

• வேலைக்காக ஏதேனும் ஒரு ஊரில் நாம் தங்கி வருடக்கணக்கில் வேலை செய்ய போகிறோம் என்றால் அந்த இடத்தில் நாம் தொழுகையை சுருக்கி தொழ வேண்டிய அவசியம் கிடையாது! ஏன் என்றால் தங்கி உள்ள இடத்திலேயே நாம் தொழுது கொள்ளலாம்!

• அதே போன்று நாம் தங்கி இருக்கும் இடத்திலிருந்து 20 கிலோமீட்டர்க்கு விட அதிகம் பயணம் செய்தால் மட்டும் நாம் தொழுகையை சுருக்கி தொழுகலாம்!

• பயணத்தில் ஜமாத் உடன் தொழ நேரம் கிடைத்தால் ஜமாத் உடன் தொழ வேண்டும்! அந்த நேரத்தில் கஸ்ர் செய்ய கூடாது!

• பயணிகள் மட்டும் ஜமாத் தொழுகை நடத்தினால் அப்போது அவர்கள் சுருக்கி தொழுது கொள்ளலாம்!

💟 ஜம்உ (சேர்த்து தொழுதல்) :

• நாம் ஏதேனும் பயணத்தில் இருந்தால் அல்லது அவசர பயணம் செல்ல போவதாக இருந்தால் பர்ளு தொழுகை தவறி விடும் அல்லது தொழ முடியாத சூழ்நிலை என்றால் அந்த நேரத்தில் நாம் ஜம்உ செய்து கொள்ளலாம்!

• அதே போன்று தகுந்த காரணம் அல்லது நிர்ப்பந்த சூழ்நிலை இருந்தால் ஊரிலயே நாம் ஜம்உ செய்து கொள்ளலாம்!

• அதாவது லுஹர் நேரத்தில் அஸரையும் அல்லது அஸர் நேரத்தில் லுஹரையும் நாம் சேர்த்து நமது பயணத்திற்கு ஏற்றால் போல் தொழுது கொள்ளலாம்!

• அதே போன்று மஹ்ரிப் நேரத்தில் இஷாவையும் அல்லது இஷா நேரத்தில் மஹ்ரிப்பையும் சேர்த்து நமது பயணத்திற்கு ஏற்றால் போல் தொழுது கொள்ளலாம்!

(நூல் : அபூதாவுத் : 1220 & முஸ்லிம் : 1266)

• அதவாது பயணியின் வசதிக்கு ஏற்றவாறு தொழுகையை முற்படுத்தியோ அல்லது பிற்படுத்தியோ தொழுகலாம்!

💟 ஜம்உ (சேர்த்து தொழுதல்)  எப்போது நமது மீது கடமை ஆகும்?

• ஜம்உ நாம் மூன்று காரணங்களுக்கு தொழுகைகளை சேர்த்து தொழுகலாம்!

1)  பயணம்

2)  அச்சம்

3) மழை 

(நூல் : முஸ்லிம் : 1272)

• இந்த மூன்று காரணங்களும் இல்லாமல் கூட நாம் நமது ஊரில் ஜம்உ செய்து கொள்ளலாம்!

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது :

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவில் லுஹரையும் அஸ்ரையும் சேர்த்து ஒரே நேரத்தில் தொழுதார்கள்! மஃக்ரிபையும் இஷாவையும் சேர்த்து ஒரே நேரத்தில் தொழுதார்கள். அப்போது அச்சமோ மழையோ இருக்கவில்லை.

நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்த காரணம் :  இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள் : தம் சமுதாயத்தாருக்குச் சிரமம் ஏற்படுத்தக் கூடாது என்பதற்காக நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்தார்கள் என்று கூறினார்கள்!

(நூல் : முஸ்லிம் : 1272)

• உதாரணமாக : இப்போது நமது ஊரில் ஏதேனும் முக்கிய  நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கிறது மஃரிபு தொழுகைக்கு நேரம் ஒதுக்குவது பின்பு மீண்டும் இஷாவிற்கு ஒரு நேரம் ஒதுக்குவதால் இதனால் நிகழ்ச்சி நீண்டு கொண்டு போகும் குறிப்பிட்ட நேரத்தில் முடிக்க முடியாது! 

• மஃரிபுடன் இஷாவையும் சேர்த்து தொழுது விட்டால் அல்லது இஷா நேரத்தை பிற் படுத்தினால் அனைவருக்கும் இது இலகுவாக அமைந்து விடும்!

• அதுமட்டுமல்ல பலர் நிகழ்ச்சி முடிந்து களைப்போடு வீட்டிற்கு சென்று இஷாவை தொழாமலே உறங்கி விடுவார்கள்! இப்படியான சூழ்நிலையில் நாம் ஜம்உ செய்து கொள்ளலாம்! ஆனால் சுருக்கி தொழ கூடாது!

💟 ஜம்உ - கஸ்ர் : பாங்கு இகாமத் உண்டா?

மாலிக் இப்னு ஹுவைரிஸ் (ரலி) கூறினார்கள் : 

நான் நபி (ஸல்) அவர்களிடமிருந்து திரும்பினேன். அப்போது எனக்கும் என் நண்பர் ஒருவருக்கும் நபி (ஸல்) அவர்கள், 'நீங்கள் இருவரும் பயணத்தில் தொழுகை நேரம் வந்தால் பாங்கும் இகாமத்தும் சொல்லுங்கள். உங்களில் (வயதில்) பெரியவர் உங்களுக்கு இமாமாக நின்று தொழுகை நடத்தட்டும்' என்று கூறினார்கள். 

(நூல் : புகாரி : 2848)

• பயணத்தில் இருக்க கூடியவர்கள் தமக்கு கேட்கும் அளவுக்கு பாங்கு கூறி தொழுகலாம்!

• ஜம்உ - கஸ்ர் செய்வதாக இருந்தால் ஒரு பாங்கு கூறி ஒவ்வொரு தொழுகைக்கும் இகாமத் கூறி சுருக்கி தொழுது கொள்ளலாம்!

உதாரணமாக :

பொதுவாக ஒரு பாங்கு கூறி இகாமத் கூறி லுஹர் 2 ரக்ஆத் தொழுது விட்டு பின்பு மீண்டும் இகாமத் கூறி அஸர் 2 ரக்ஆத் தொழுது கொள்ள வேண்டும்! 

💟 பயணத்தில் கிப்லாவின் பக்கம் தெரியவில்லை என்றால் :

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது :

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்  கழுதையில் இருந்தவாறு தொழுவதை நான் கண்டேன். அப்போது அவர்கள் கைபரை நோக்கிச் சென்று கொண்டிருந்தார்கள்!

(நூல் : முஸ்லிம் : 1253)

• நாம் வாகனத்தில் பயணம் செய்து கொண்டு இருக்கும் போது முன் பின் சுன்னத், நபில், வாஜிபு ஆகிய தொழுகைகளை வாகனத்தில் இருந்தவரே வாகனம் இருக்கம் திசையிலேயே நாம் தொழுகலாம்!

• ஆனால் கடமையான தொழுகை நேரம் வந்தால் வாகனத்தை நிறுத்தி கிழே இறக்கி தான் தொழ வேண்டும்! நிர்பந்த சூழ்நிலை அவ்வாறு தொழ முடியாது என்றால் மட்டும் நாம் வாகனத்தில் தொழுது கொள்ளலாம்!

(நூல் : புகாரி : 1000)

• அதே போன்று வாகனம் செல்லும் திசையிலேயே நாம் அமர்ந்த வாறு அல்லது நின்ற நிலையில் நாம் தொழுது கொள்ளலாம்!

• பயணத்தில் கிப்லா திசை தெரியவில்லை என்றால் நாம் ஏதேனும் ஒரு திசையில் தொழுகலாம்!

கிழக்கும், மேற்கும் அல்லாஹ்வுக்கே (சொந்தம்); நீங்கள் எந்தப் பக்கம் திரும்பினாலும் அங்கே அல்லாஹ்வின் முகம் இருக்கிறது. நிச்சயமாக அல்லாஹ் விசாலமானவன்; எல்லாம் அறிந்தவன்!

(அல்குர்ஆன் : 2:115)

• பயணத்தில் உள்ளவர்கள் அல்லது வெளியூருக்கு செல்ல கூடியவர்களுக்கு காபாவின் திசை தெரியாத சூழ்நிலையில் அவர்கள் எந்த திசையில் வேண்டும் என்றாலும் தொழுகலாம் அவர்கள் தொழுகை கூடும்!

@அல்லாஹ் போதுமானவன் 💞

வெள்ளி, ஜனவரி 17, 2025

ஆயிஷா(ரலி) பற்றி,

.
ஆயிஷா(ரலி) அறிவித்தார். 
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஒரு பயணம் புறப்பட விரும்பினால் தம் மனைவிமார்களிடையே (எவரைப் பயணத்தில் தம்முடன் அழைத்துச் செல்வது எனத் தீர்மானித்திட) சீட்டுக் குலுக்கிப் போடுவார்கள். அவர்களில் எவருடைய (பெயருள்ள) சீட்டு வருகிறதோ அவரைத் தம்முடன் அழைத்துக் கொண்டு பயணம் புறப்படுவார்கள். இவ்வாறே, அவர்கள் செய்த ஒரு புனிதப் போரின்போது (பயணத்தில் உடன் அழைத்துச் செல்ல) எங்களுக்கிடையே சீட்டுக் குலுக்கிப் போட்டார்கள். என்னுடைய (பெயருள்ள) சீட்டு வந்தது. எனவே, நான் அவர்களுடன் (பயணம்) புறப்பட்டுச் சென்றேன். இது (பெண்கள் பர்தா முறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்னும்) ஹிஜாபின் சட்டம் அருளப்பட்ட பிறகு நடந்ததாகும். நான் ஓர் ஒட்டகச் சிவிகையில் வைத்துச் சுமந்து செல்லப்படுவேன். நான் அதில் இருக்கும் நிலையிலேயே கீழே இறக்கி வைக்கப்படுவேன். நபி(ஸல்) அவர்கள் அந்தப் போர் முடிந்து புறப்பட்டபோது நாங்கள் மதீனாவை நெருங்கிய வேளையில் இரவு நேரத்தில் (ஓரிடத்தில்) தங்கும்படி அறிவித்தார்கள். 
நான் (சிவிகையிலிருந்து) எழுந்து (மலஜலம் கழிப்பதற்காக மறைவிடம் தேடி) படையைக் கடந்து சென்றேன். என் (மலஜலத்) தேவையை நான் முடித்தபோது முகாமிட்டிருந்த இடத்தை நோக்கிச் சென்றேன். அப்போது என் நெஞ்சை நான் தொட்டுப் பார்த்தபோது, (என் கழுத்திலிருந்த) யமன் நாட்டு முத்துமாலையொன்று அறுந்து (விழுந்து) விட்டிருந்தது. எனவே, நான் திரும்பிச் சென்று என் மாலையைத் தேடலானேன்; அதைத் தேடிக் கொண்டிருந்தது (நான் சீக்கிரம் திரும்பிச் சென்று படையினருடன் சேரவிடாமல்) என்னைத் தாமதப்படுத்திவிட்டது. எனவே, என்னை எடுத்துச் சென்று ஒட்டகத்தில் வைப்பவர்கள், என் சிவிகைக்குள் நான் இருப்பதாக எண்ணிக் கொண்டு அதைச் சுமந்து சென்று, நான் வழக்கமாக சவாரி செய்கிற என் ஒட்டகத்தின் மீது வைத்துக் கட்டிவிட்டனர். அந்தக் கால கட்டத்தில் பெண்கள் பருமனாக இன்றி மெலிந்தவர்களாக இருந்தனர். அவர்களுக்கு சதை போட்டிருக்கவில்லை. சிறிதளவு உணவே அவர்கள் உண்பார்கள். எனவே, சிவிகையைத் தூக்கியபோது அதன் (இலேசான) கனத்தை மக்கள் வித்தியாசமாகக் கருதவில்லை. மேலும், நான் வயது குறைந்த சிறுமியாக இருந்தேன். அவர்கள் ஒட்டகத்தை (முன்னே) அனுப்பிவிட்டு நடக்கலானார்கள். படையினர் சென்ற பிறகு நான் (தொலைந்து போன) என் மாலையைப் பெற்றுக் கொண்டேன். பிறகு, நான் அவர்கள் தங்கியிருந்த இடத்திற்கு வந்தேன். அப்போது, அங்கு ஒருவரும் இல்லை. நான் ஏற்கனவே தங்கியிருந்த இடத்தைத் தேடிச் சென்று அங்கு அமர்ந்து கொண்டேன். படையினர், நான் காணாமல் போயிருப்பதைக் கண்டு என்னிடம் திரும்பி வருவார்கள் என்று நான் கருதினேன். நான் அப்படியே உட்கார்ந்தபடி இருந்த பொழுது என் கண்கள் (உறக்கம்) மிகைத்து நான் தூங்கி விட்டேன். ஸஃப்வான் இப்னு முஅத்தல் அல் ஸுலமீ என்பவர் படையினர் பின் அணியில் இருந்தார். அவர், நான் தங்கியிருந்த இடத்தில் காலை வரை தங்கி விட்டிருந்தார். அவர் (காலையில் விழித்தெழுந்தவுடன்) தூங்கிக் கொண்டிருந்த ஓர் உருவத்தை (என்னை)ப் பார்த்துவிட்டு என்னிடம் வந்தார். பர்தாவுடைய சட்டம் அருளப்படுவதற்கு முன்னால் அவர் என்னைப் பார்த்திருந்தார். (எனவே, என்னை அடையாளம் புரிந்து கொண்டு) அவர், 'இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் நாம் அல்லாஹ்விற்கே உரியவர்கள்; மேலும், நாம் அவனிடமே திரும்பிச் செல்லவிருக்கிறோம்' என்று கூறும் சப்தத்தைக் கேட்டு நான் கண் விழித்தேன். பிறகு, அவர் தம் ஒட்டகத்தை மண்டியிடச் செய்து, அதன் முன்னங்காலை (தன் காலால்) மிதித்துக் கொள்ள நான் அதன் மீது ஏறிக் கொண்டேன். அவர் என்னுடன் ஒட்டகத்தை ஒட்டிக் கொண்டு நடக்கலானார். இறுதியில் நாங்கள் படையினரை வந்தடைந்தோம். அதற்குள் அவர்கள் (மதிய ஓய்வுக்காக) நடுப்பகல் நேரத்தில் (ஓரிடத்தில்) தங்கி விட்டிருந்தார்கள். (இப்போது எங்களைக் கண்டு அவதூறு பேசி) அழிந்தவர்கள் அழிந்தார்கள். என் மீது அவதூறு (பிரசாரம்) செய்ய (தலைமைப்) பொறுப் பேற்றிருந்தவன் அப்துல்லாஹ் இப்னு உபை இப்னி ஸலூல் (எனும் நயவஞ்சகர்களின் தலைவன்) ஆவான். நாங்கள் மதீனாவை வந்தடைந்தோம். அங்கு ஒரு மாத காலம் நான் நோயுற்று விட்டேன். மக்களோ அவதூறு கற்பித்தவர்களின் சொல்லைப் பரப்பிக் கொண்டிருந்தார்கள். நான் நோயுற்று விடும்போது நபி(ஸல்) அவர்கள் வழக்கமாக என்னிடம் காட்டுகிற பரிவை (இந்த முறை) நான் நோயுற்றிருக்கும்போது அவர்களிடம் காணமுடியாமல் போனது எனக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. அவர்கள் வருவார்கள்; சலாம் சொல்வார்கள்; பிறகு, 'அவள் எப்படி இருக்கிறாள்?' என்று கேட்பார்கள்; (பிறகு போய் விடுவார்கள்.) அவ்வளவு தான். (என்னைக் குறித்து வெளியே பேசப்பட்டு வந்த அவதூறில்) ஒரு சிறிதும் எனக்குத் தெரியாது. இறுதியில், நான் (நோயிலிருந்து குணமடைந்து விட, நானும் உம்மு மிஸ்தஹ்(ரலி) அவர்களும் நாங்கள் கழிப்பிடமாகப் பயன்படுத்தி வந்த 'மனாஸிஉ' என்னுமிடத்தை நோக்கிச் சென்றோம். நாங்கள் இரவு நேரங்களில் மட்டும் இவ்வாறு செல்வோம். எங்கள் வீடுகளுக்கு அருகிலேயே கழிப்பிடங்களை அமைத்துக் கொள்வதற்கு முன்னால் நாங்கள் இவ்வாறு அங்கு சென்று கொண்டிருந்தோம். எங்களுடைய இந்த வழக்கம் வனாந்திரங்களில் வசித்து வந்த முற்கால அரபுகளின் வழக்கத்தை ஒத்ததாயிருந்தது. நானும் அபூ ருஹ்மின் மகளாகிய உம்மு மிஸ்தஹும் நடந்து முன்னால் சென்று கொண்டிருந்தோம். உம்மு மிஸ்தஹை அவர் அணிந்திருந்த கம்பளி அங்கி இடறியது. அப்போது அவர், 'மிஸ்தஹ் நாசமாகட்டும்' என்று கூறினார். நான், 'மிக மோசமான சொல்லைச் சொல்லிவிட்டாய். பத்ருப் போரில் பங்கெடுத்த ஒரு மனிதரையா நீ ஏசுகிறாய்' என்று கூறினேன். அதற்கு அவர், 'அம்மா! அவர்கள் என்ன சொன்னார்கள் என்று நீங்கள் கேள்விப்படவில்லையா?' என்று கூறிவிட்டு, அவதூறு கற்பித்தவர்கள் சொன்ன (அபாண்டத்)தை எனக்குத் தெரிவித்தார். அதைக் கேட்டு என் நோய் இன்னும் அதிகரித்துவிட்டது. நான் என் வீட்டிற்குத் திரும்பி வந்தபோது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னிடம் வந்து, 'அவள் எப்படி இருக்கிறாள்?' என்று கேட்டார்கள். நான் 'என் தந்தையரிடம் செல்ல எனக்கு அனுமதி கொடுங்கள்'  'என்று கேட்டேன். அப்போது நான் அவ்விருவரிடமிருந்தும் (உண்மையிலேயே அப்படியொரு வதந்தி உலவுகிறதூ என்று விசாரித்து என் மீதான அவதூறுச்) செய்தியை உறுதிப்படுத்திக் கொள்ள விரும்பினேன். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எனக்கு அனுமதியளிக்கவே நான் என் தாய் தந்தையரிடம் சென்றேன். என் தாயாரிடம், 'மக்கள் (என்னைப் பற்றி) என்ன பேசிக் கொள்கிறார்கள்?' என்று கேட்டேன். என் தாயார், 'என் அன்பு மகளே! உன் மீது இந்த விஷயத்தை; பெரிதுபடுத்திக் கொள்ளாதே. அல்லாஹ்வின் மீதாணையாக! சக்களத்திகள் பலரும் இருக்க, (தன்) கணவரிடம் பிரியத்துக்குரியவளாக இருக்கும் அழகுமிக்க பெண்ணொருத்தியைக் குறித்து அவளுடைய சக்களத்திகள் அதிகமாக (வதந்திகள்) பேசத் தான் செய்வார்கள். அவ்வாறு பேசாமலிருப்பது (பெரும்பாலும்) குறைவேயாகும்' என்று கூறினார்கள். நான், 'சுப்ஹானல்லாஹ் (இறைவன் தூய்மையானவன்!) இப்படியா மக்கள் பேசிக் கொள்கிறார்கள்?' என்று கேட்டேன். அன்றிரவை இடைவிடாமல் அழுது கொண்டும் தூக்கம் சிறிது மின்றியும் காலை வரை கழித்தேன். காலை நேரம் வந்தது. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம் மனைவியை (என்னை)ப் பிரிந்து விடுவது குறித்து ஆலோசனை கேட்பதற்காக அலீ இப்னு அபீ தாலிப்(ரலி) அவர்களையும், உஸாமா இப்னு ஸைத்(ரலி) அவர்களையும் அழைத்தார்கள். அப்போது 'வஹீ' (தற்காலிகமாக) நின்று போயிருந்தது. உஸாமா(ரலி) அவர்களோ தம் உள்ளத்தில் நபி(ஸல்) அவர்களின் மனைவிமார்கள் மீதிருந்த பாசத்தை அடிப்படையாகக் கொண்டு ஆலோசனை கூறினார்கள். 'இறைத்தூதர் அவர்களே! தங்கள் துணைவியரிடம் நல்ல (குணத்)தைத் தவிர வேறெதையும் நான் அறிய மாட்டேன்' என்று அவர்கள் கூறினார்கள். அலீ இப்னு அபீ தாலிப்(ரலி) அவர்களோ (நபி(ஸல்) அவர்களின் மனக் கவலையைக் குறைத்து ஆறுதல் கூறும் நோக்குடன்), 'இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ் உங்களுக்கு எந்த நெருக்கடியையும் ஏற்படுத்தவில்லை. அவர் (ஆயிஷா) அன்றிப் பெண்கள் நிறையப் பேர் இருக்கின்றனர். பணிப் பெண்ணைக் கேளுங்கள். அவள் உங்களிடம் உண்மையைச் சொல்வாள்' என்று கூறினார்கள். எனவே, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (பணிப் பெண்ணான) பரீராவை அழைத்து, 'பரீராவே! நீ ஆயிஷாவிடம் உனக்கு சந்தேகத்தை ஏற்படுத்தும் (செயல்) எதையாவது பார்த்திருக்கிறாயா?' என்று கேட்டார்கள். அதற்கு பரீரா(ரலி), 'தங்களை சத்திய(மார்க்க)த்துடன் அனுப்பியவன் மீது ஆணையாக! அவர் (குழைத்து வைத்த) மாவை அப்படியே போட்டுவிட்டு உறங்கிப் போய்விடுவார்; வீட்டிலுள்ள ஆடு வந்து அதைத் தின்றுவிடும்; அத்தகைய (விபரமறியாத) இளவயதுச் சிறுமி என்பதைத் தவிர அவரைக் குறை சொல்லக்கூடிய விஷயம் எதையும் அவரிடம் நான் பார்க்கவில்லை' என்று பதில் கூறினார். உடனே, அன்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (மிம்பரில் ஏறி) நின்று, அப்துல்லாஹ் இப்னு உபை இப்னி சலூலை தண்டிப்பதற்கு (தமக்கு) உதவும்படி (தம் தோழர்களிடம்) கோரினார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'என் வீட்டார் விஷயத்தில் (வதந்தி கிளப்பி) எனக்கு மன வேதனையளித்த ஒரு மனிதனை தண்டித்திட எனக்கு உதவிபுரிபவர் யார்? அவர்கள் (அவதூறு) கூறியுள்ளனர். ஆனால், அவரைப் பற்றி நல்லதையே அறிவேன். அவர் என் வீட்டாரிடம் என்னுடனேயல்லாமல் (நான் வீட்டிலிருக்கும் போதே தவிர) வந்ததில்லை' என்று கூறினார்கள். உடனே, ஸஅத் இப்னு முஆத்(ரலி) எழுந்து வின்று, 'இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ்வின் மீதாணையாக! அவனை தண்டிக்க நான் தங்களுக்கு உதவுகிறேன். அவன் (எங்கள்) அவ்ஸ் குலத்தைச் சேர்ந்தவனாயிருந்தால் நாங்கள் அவனுடைய கழுத்தைத் துண்டித்து விடுகிறோம். எங்கள் சகோதரர்களான கஸ்ரஜ் குலத்தைச் சேர்ந்தவனாக இருந்தால் (என்ன செய்ய வேண்டுமென்று) தாங்கள் உத்தரவை நாங்கள் நிறைவேற்றுகிறோம்' என்று கூறினார்கள். உடனே, கஸ்ரஜ் குலத் தலைவராயிருந்த ஸஅத் இப்னு உபாதா(ரலி) எழுந்து நின்று, 'அல்லாஹ்வின் மீதாணையாக! நீர் பொய்யுரைத்தீர்; அவனை நீர் கொல்லமாட்டீர். அது உம்மால் முடியாது' என்று கூறினார். அதற்கு முன் அவர் நல்ல மனிதராகத் தான் இருந்தார்; ஆயினும், குலமாச்சரியம் அவரை அவ்வாறு பேசத் தூண்டிவிட்டது. உடனே, உசைத் இப்னு ஹுளைர்(ரலி) எழுந்து நின்று, உபாதா(ரலி) அவர்களை நோக்கி, 'நீர் தாம் பொய்யுரைத்தீர். அல்லாஹ்வின் மீதாணையாக! அவனை நாங்கள் கொன்றே தீருவோம். நீர் ஒரு நயவஞ்சகர். (அதனால்தான்) நயவஞ்சகர்களின் சார்பாக வாதிடுகிறீர்' என்று கூறினார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மிம்பரின் மீது நின்று கொண்டிருக்க, அவ்ஸ், கஸ்ரஜ் ஆகிய இரண்டு குலத்தாரும் ஒருவர் மீதொருவர் பாய்ந்து சண்டையிட முற்பட்டனர். நபி(ஸல்) அவர்கள் மிம்பரிலிருந்து இறங்கி அவர்கள் மெளனமாகும் வரை அவர்களை அமைதிப்படுத்தினார்கள். பிறகு அவர்களும் மெளனமானார்கள். அன்று நான் இடைவிடாமல் அழுது கொண்டிருந்தேன்; சிறிதும் உறங்கவில்லை. காலையானதும் என் தாய் தந்தையர் என் அருகேயிருந்தனர். நானோ இரண்டு இரவுகள் ஒரு பகல் (முழுக்க) என் ஈரல் பிளந்து விடுமோ என்றெண்ணும் அளவிற்கு அழுதிருந்தேன். நான் அழுதவண்ணமிருக்கும்போது என் தாய்தந்தையார் என்னிடம் அமர்ந்திருக்க, அன்சாரிப் பெண்ணொருத்தி வந்து உள்ளே வர அனுமதி கேட்டாள். நான் அவளுக்கு அனுமதியளித்தவுடன் என்னோடு சேர்ந்து அவளும் அழுதபடி அமர்ந்தாள். நாங்கள் இவ்வாறு இருந்து கொண்டிருக்கும்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் வந்து அமர்ந்தார்கள். என்னைப் பற்றி அவதூறு சொல்லப்பட்ட நாளிலிருந்து அவர்கள் என்னருகே அமர்ந்ததில்லை. மேலும், ஒரு மாத காலம் வரை என் விஷயத்தில் (அல்லாஹ்விடமிருந்து தீர்ப்பு) எதுவும் அவர்களுக்கு வஹீயாக அருளப்படவில்லை. பிறகு நபி(ஸல்) அவர்கள், 'லாஇலாஹ இல்லல்லாஹ்' (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை)' என்று கூறிவிட்டு, 'ஆயிஷாவே! உன்னைக் குறித்து இன்னின்னவாறு எனக்குச் செய்தி கிடைத்துள்ளது. நீ நிரபராதியாக இருந்தால் அல்லாஹ் விரைவில் உன்னைக் குற்றமற்றவள் என்று அறிவித்து விடுவான். நீ குற்றமேதும் செய்திருந்தால் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி, அவன் பக்கம் திரும்பி விடு. ஏனெனில், அடியான் தன் பாவத்தை ஒப்புக் கொண்டு (மனம் திருந்தி) பாவ மன்னிப்புக் கோரினால் அவனுடைய கோரிக்கையை ஏற்று அல்லாஹ் அவனை மன்னிக்கிறான்' என்றார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், தம் பேச்சை முடித்தபோது என் கண்ணீர் (முழுவதுமாக) நின்று போய் விட்டிருந்தது. அதில் ஒரு துளியும் எஞ்சியிருக்கவில்லை. நான் என் தந்தையிடம், 'அல்லாஹ்வின் தூதருக்கு என் சார்பாக பதில் கூறுங்கள்' என்று சொன்னேன். அதற்கு என் தந்தை, 'அல்லாஹ்வின் தூதரிடம் என்ன (பதில்) சொல்வது என்று கூறினார்கள். நான் என் தாயாரிடம், 'இறைத்தூதர் சொன்னதற்கு என் சார்பாக பதில் கூறுங்கள்' என்று சொன்னேன். அதற்கு என் தாயார், 'அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் மீதாணையாக! இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு என்ன (பதில்) சொல்வது என்றே எனக்குத் தெரியவில்லை' என்று கூறினார்கள். நானோ இளவயதுடைய சிறுமியாக இருந்தேன். குர்ஆனிலிருந்து அதிகமாக (ஓதத்) தெரியாதவளாகவும் இருந்தேன். எனவே, 'அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள், மக்கள் என்னைப் பற்றிப் பேசியவற்றைக் கேட்டிருக்கிறீர்கள் என்பதையும் அது உங்கள் மனதில் பதிந்து போய், அதை உண்மையொன்று நம்பி விட்டீர்கள் என்பதையும் அறிவேன். நான் குற்றமற்றவள் என்று நானே தங்களிடம் சொன்னால்... நான் குற்றமற்றவள் என்பதை அல்லாஹ் அறிவான்... நீங்கள் அதை நம்பப் போவதில்லை; நான் குற்றமேதும் புரிந்திருப்பதாக ஒப்புக் கொண்டால் (நான் சொல்வதை அப்படியே உண்மையொன்று ஏற்று) என்னை நம்பி விடுவீர்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! எனக்கும் உங்களுக்கும் (நபி) யூசுஃப்(அலை) அவர்களின் தந்தையை (யஃகூப்(அலை) அவர்களை)யே நான் உவமையாகக் கருதுகிறேன். (அதாவது): (இதை) சகித்துக் கொள்வதே நல்லது; நீங்கள் புனைந்து சொல்லும் விஷயத்தில் அல்லாஹ்விடம் தான் நான் பாதுகாப்புத் கோர வேண்டும். (குர்ஆன் 12:83) பிறகு, அல்லாஹ் நான் குற்றமற்றவள் என அறிவிப்பான் என்ற நம்பிக்கையுடன் நான் என் படுக்கையில் (வேறு பக்கமாகத்) திரும்பிப் படுத்துக் கொண்டேன். ஆயினும், திருக்குர்ஆனில் என் விஷயத்தைப் பற்றிப் பேசுகிற அளவிற்கு நான் ஒன்றும் முக்கியத்துவமுடையவளல்ல மிகச் சாதாரணமானவள் தான் என்று என்னைக் குறித்து நான் கருதிக் கொண்டிருக்க, அல்லாஹ்வின் மீதாணையாக! இறைவன் என் விஷயத்தில் வஹீயையே -வேத வெளிப்பாட்டையே (திருக்குர்ஆனில்) அருளுவான் என்று நான் நினைத்தும் பார்க்கவில்லை. மாறாக, 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னை அல்லாஹ் குற்றமற்றவள் என்று உணர்த்தும் கனவு எதையாவது தூக்கத்தில் காண்பார்கள்' என்றே எதிர்பார்த்தேன். அல்லாஹ்வின் மீதாணையாக! நபி(ஸல்) அவர்கள் தாம் அமர்ந்திருந்த இடத்திலிருந்து எழுந்திருக்கவுமில்லை; வீட்டிலிருந்து எவரும் வெளியே செல்லவுமில்லை; அதற்குள் அல்லாஹ், நபி(ஸல்) அவர்களின் மீது (திருக்குர்ஆன் வசனங்களை) அருள ஆரம்பித்துவிட்டான். உடனே, (வேத வெளிப்பாடு வருகிற நேரங்களில்) ஏற்படும் கடும் சிரமமான நிலை அவர்களுக்கு ஏற்பட்டது; அது கடும் குளிர் காலமாயிருந்தும் அவர்களின் மேனியிலிருந்து முத்துக்களைப் போல் வியர்வைத் துளிகள் வழியத் தொடங்கின. அந்த நிலை அல்லாஹ்வின் தூதரைவிட்டு நீங்கியவுடன் அவர்கள் சிரித்துக் கொண்டே முதல் வார்த்தையாக, 'ஆயிஷாவே! அல்லாஹ்வைப் புகழ்ந்து நன்றி செலுத்து. உன்னை அல்லாஹ் குற்றமற்றவள் என அறிவித்துவிட்டான்' என்று கூறினார்கள். என் தாயார், 'அல்லாஹ்வின் தூதரிடம் எழுந்து செல்' என்று கூறினார்கள். நான், 'மாட்டேன்; அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்களிடம் செல்ல மாட்டேன். அல்லாஹ்வை மட்டுமே புகழ்ந்து, அவனுக்கே நன்றி செலுத்துவேன்' என்றேன். அப்போது அல்லாஹ், '(ஆயிஷாவின் மீது) அவதூறு பரப்பியவர்கள் உங்களில் ஒரு குழுவினர் தான்' என்று தொடங்கும் (திருக்குர்ஆன் 24:11) வசனங்களை அருளியிருந்தான். என் குற்றமற்ற நிலையைத் தெளிவுபடுத்தி அல்லாஹ் இதை அருளியபோது (என் தந்தை) அபூ பக்ர்(ரலி), 'அல்லாஹ்வின் மீதாணையாக! (என் மகள்) ஆயிஷாவைப் பற்றி (அவதூறு) கூறிய பின்பு ஒருபோதும் மிஸ்தஹுக்காக செலவிட மாட்டேன்' என்று கூறினார்கள். மிஸ்தஹ் இப்னு உஸாஸா தம் உறவினர் என்பதால் அவருக்காக அபூ பக்ர்(ரலி) செலவிட்டு வந்தார்கள்... உடனே அல்லாஹ், 'உங்களிடையேயுள்ள (பொருள்) அருளப் பெற்றோரும் (பிறருக்கு உதவும்) இயல்புடையோரும், (தங்கள்) உறவினர்களுக்கோ, ஏழைகளுக்கோ, இறைவழியில் ஹிஜ்ரத் செய்தவர்களுக்கோ (எதுவும்) கொடுக்க மாட்டேன் என்று சத்தியம் செய்ய வேண்டாம். (அவர்களால் தங்களுக்கு ஏதும் வருத்தம் ஏற்பட்டிருந்தால்) அதனை மன்னித்துப் (பிழைகளைப்) பொருட்படுத்தாமல்விட்டு விடட்டும். அல்லாஹ் உங்களுக்கு மன்னிப்பளிப்பதை நீங்கள் விரும்பமாட்டீர்களா? அல்லாஹ் மிகவும் மன்னிப்போனும் கிருபையுடையோனுமாய் இருக்கிறான்' என்னும் (திருக்குர்ஆன் 24:22) இறைவசனத்தை அருளினான். அதன் பிறகு அபூ பக்ர்(ரலி), 'ஆம், அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ் எனக்கு மன்னிப்பளிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்' என்று கூறிவிட்டு, மிஸ்தஹ்(ரலி) அவர்களுக்கு ஏற்கனவே தாம் செய்து வந்த (பொருள்) உதவியைத் தொடரலானார்கள். 
(திருக்குர்ஆனில் என்னைப் பற்றிய வசனங்கள் அருளப்படுவதற்கு முன்னால்) இறைத்தூதர் என் விஷயத்தில் (தம் இன்னொரு மனைவியான) ஸைனப் பின்த்து ஜஹ்ஷ்(ரலி) அவர்களிடம் விசாரித்தார்கள்; 'ஸைனபே! நீ (ஆயிஷாவைப் பற்றி) என்ன அறிந்திருக்கிறாய்? (அவர் விஷயத்தில்) என்ன பார்த்திருக்கிறாய்?' என்று கேட்டார்கள். அதற்கு அவர், 'இறைத்தூதர் அவர்களே! என் காதுகளையும் என் கண்களையும் (அவற்றின் மீது பழி சுமத்தாமல்) பாதுகாத்துக் கொள்வேன். அல்லாஹ்வின் மீதாணையாக! ஆயிஷாவைக் குறித்து நல்லதையே அறிவேன்' என்று பதிலளித்தார்கள். ஸைனப்(ரலி) தாம் எனக்கு (அழகிலும் நபி(ஸல்) அவர்களின் அன்பிலும்) போட்டியாக இருந்தார்கள். ஆயினும், அல்லாஹ் அவர்களை இறையச்சமுடைய, பேணுதலான பண்பையளித்துப் பாதுகாத்திருந்தான். 
இந்த அறிவிப்பு இன்னும் பலர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
ஸஹீஹ் புகாரி : 2661. 
அத்தியாயம் : 52. சாட்சியங்கள்

வியாழன், ஜனவரி 16, 2025

மாற்றுத்திறனாளிகள்,

மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளை வழங்குவோம்!!!

மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளை வழங்குவோம்!!!




டிசம்பர் 3 –ஆம் தேதி சர்வதேச அளவில் மாற்றுத் திறனாளிகள் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

தங்களுடைய அன்றாட வாழ்வில் மாற்றுத் திறனாளிகள் எதிர்கொள்ளும் சவால்களைப் பற்றிய விழிப்புணர்வை உருவாக்கும் விதமாக இந்த தினம் கடை பிடிக்கப்படுகிறது.

ஏதோ ஒரு வகையில் குறைபாடு உடையவர்கள் உலகில் 100 கோடி மக்கள் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகின்றது.

இந்தியாவில் மட்டும் 2 கோடியே 68 லட்சத்து 10 ஆயிரத்து 557 மாற்றுத் திறனாளிகள் உள்ளனர். இது நம் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 2.21 சதவீதம் ஆகும்.

இவர்களில் ஆண்கள் 1 கோடியே 49 லட்சம் பேரும், பெண்கள் 1 கோடியே 18 லட்சம் பேரும் உள்ளனர். இவர்களில் 70 சதவீதம் பேர் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர்.

நம் நாட்டின் இந்த புள்ளிவிவரம் தவறென்று கூறும் ஒரு சாரார் சுமார் ஏழரை கோடி மக்கள் மாற்றுத் திறனாளிகளாய் இருக்கின்றனர் என்று கூறுகின்றனர்.

நம் நாட்டில் (2013ல்) 7 ½ கோடி பேர் மாற்றுத் திறனாளிகளாக உள்ளனர். ஆனால்தவறான புள்ளி விபரப்படி 2 ½ கோடி பேர் மட்டுமே காட்டப்படுகின்றனர். இவர்களுக்கு மட்டுமே அரசின் சலுகைகள் வழங்கப்படுகிறது.

கணக்கெடுக்கப்படாத மீதமுள்ள கோடி பேர் அரசின் எவ்வித சலுகையுமின்றிவீடுகளிலும் அவர்கள் சரிவர பராமரிக்கப்படாமல் கண்டு கொள்ளப்படாமல் விட்டு விடப்பட்டுள்ளனர். இது மனித நேயமற்ற மனிதாபிமானமற்ற மிகப்பெரும் கொடூரமான செயலாகும் என்று அவர்கள் கூறுகின்றனர்.


மாற்றுத் திறனாளிகள் வகைபாடு..

மாற்றுத் திறனாளிகளை அவர்களுக்கு இருக்கும் பிரச்சனைகளின் அடிப்படையில் உடல் உறுப்புக்களில் குறைபாடு உடையோர், பார்வைக் குறைபாடு உடையோர், காது கேளாதோர், வாய் பேச முடியாதோர், மனவளர்ச்சி மற்றும் மனநலம் குன்றியவர்கள் மற்றும் ஒன்றுக்கும் மேற்பட்ட குறைபாடுடையவர்கள் ( Multiple Disability ) என்று ஆரம்பத்தில் 5 வகைகளாகப் பிரித்திருந்தனர்.

ஆனால், தற்போது தொழுநோய், மூளை முடக்குவாதம், உயரக்குறைபாடு, தசை அழிவு நோய், கற்றல் குறைபாடு, கவனச்சிதறல் குறைபாடு, நடுக்குவாதம், நரம்பியல் சார்ந்த நோய்கள், ஹீமோபிலியா என்கிற ரத்த ஒழுக்கு, தலசீமியா என்கிற ரத்த அழிவுச்சோகை போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களையும் இதோடு மேலும் சிலவற்றைச் சேர்த்து 22 வகைகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

எதிர்கொள்ளும் பிரச்சனைகள்…

மாற்றுத் திறனாளிகள் வாழ்வில் ஆரோக்கியம் மட்டுமே பிரச்சனை அல்ல, அது மனித உடலுக்கும் அதனை சூழ்ந்திருக்கும் சமூகத்திற்கும் இடையிலான தொடர்பைப் பிரதிபலிக்கும் சிக்கலான ஒரு பிரச்சனையாகும்.

போதுமான மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாதது, மருத்துவ பராமரிப்பு அளிக்க முறையான பயிற்சி பெற்ற மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் பற்றாக்குறை, இதைத் தாண்டி சமூகப்புறக்கணிப்பு, அலட்சியப்படுத்துதல், குறைபாடுகளை சுட்டிக்காடி எள்ளி நகையாடுதல் என நீண்ட பட்டியல் இருக்கிறது.

நம்மீதான கடமை என்ன?

மாற்றுத் திறனாளிகள் என்பவர்கள் ஒரு குடும்பத்தின் உறுப்பினராக, சமூகத்தின் அங்கமாக இருக்கின்றார்கள் என்பதை நாம் உணர வேண்டும்.

அவர்களுடைய உடல் மற்றும் மனநலக் குறைபாடுகளை ஏற்றுக் கொண்டு அவர்களுக்கு ஆதரவளிக்க வேண்டும்.

ஒவ்வொரு மாற்றுத் திறனாளிக்கும் தனிப்பட்ட திறமைகளும், ஆர்வமும் உண்டு. அவர்களுடைய திறமைக்கான வாய்ப்புகளை வழங்கி, அவர்களின் ஆர்வங்களை அங்கீகரிக்க வேண்டும்.

எல்லாவற்றிற்கும் மேலாக, அவர்கள் நம் குடும்பங்களில், நம் சமூகத்தில், நம் மஹல்லாவில், நம் தெருவில், நம் பக்கத்து வீட்டில் இருக்கின்றார்கள் என்றால் அவர்களை சுமையாக கருதும் நமது பார்வையை மாற்றிக் கொண்டு, அவர்களின் தேவைகளை புரிந்து கொண்டு அதை பூர்த்தி செய்வோம்.

மாற்றுத் திறனாளின் உரிமைகளை வழங்கிய உயர் மார்க்கம் இஸ்லாம்!

மாற்றுத் திறனாளிகளுக்கு சோபனம் கூறிய மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்..

قال أنس رضى الله عنه " إن جبريل أتى رسول الله صلّى الله عليه وسلم وعنده ابن ام مكتوم فقال له متى ذهب بصرك قال وانا غلام فقال جبريل الأمين له : قال الله تبارك وتعالى : إذا ما أخذت كريمة عبدى لم أجد له بها جزاء الا الجنة ، هكذا وعد الله إبن أم مكتوم بالجنة وبشره بها جبريل عليه السلام.

 البداية والنهاية أبو الفداء الحافظ بن كثير

அனஸ் (ரலிஅவர்கள் அறிவிக்கின்றார்கள்:

ஒரு நாள் பொழுது அண்ணலார் சபையில் ஜிப்ரயீல் (அலைஅவர்கள் வருகை தந்திருந்தார்கள்அப்போது அங்கே இப்னு உம்மி மக்தூம் (ரலிஅவர்களும் அமர்ந்திருந்தார்கள்.

அப்போதுஅண்ணலார் {ஸல்அவர்கள் தங்களருகே இப்னு உம்மி மக்தூம் அவர்களை அழைத்து, ”அப்துல்லாஹ் அவர்களே உங்களின் பார்வை பிறவியிலேயே இப்படியாஅல்லது இடையிலே ஏற்பட்ட ஏதேனும் கோளாரில் பார்வை பரிபோனதா?” என்று அன்பொழுக விசாரித்தார்கள்.

அப்போதுஅப்துல்லாஹ் (ரலிஅவர்கள்தாம் சிறுவயதாக இருக்கும் போது ஏற்பட்ட ஒரு சூழ்நிலையில் பார்வை பறிபோனதாக தெரிவித்தார்கள்.

அப்போது ஜிப்ரயீல் (அலைஅவர்கள்நபிகளாரிடம் “சங்கையான என்னுடைய அடியானிடம் இருந்து நாம் ஏதேனுமொரு அருட்கொடையை எடுத்துக் கொண்டோம் எனில்அதற்குப் பகரமாக நாம் சுவனத்தைத் தவிர வேறெதையும் கூலியாக வழங்குவதில்லை” என்று அல்லாஹ் கூறியதாக கூறினார்கள். ( நூல்: அல்பிதாயா வந்நிஹாயா )

1.   விழிப்புலன் (கண்பார்வை) இழந்தவரின் கோரிக்கையை கனிவுடன் நிறைவேற்றிய காரூண்ய நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.

عن محمود بن الربيع الأنصاري ، أن عتبان بن مالك - وهو من أصحاب الرسول صلى الله عليه و سلم ، وهو ممن شهدوا بدرا من الأنصار- أنه أتى رسول الله صلى الله عليه وسلم ، فقال : يا رسول الله ! قد أنكرت بصري وأنا اصلي لقومي ، فإذا كانت الأمطار سال الوادي الذي بيني وبينهم لم أستطع أن آتي مسجدهم فأصلي بهم ، وددت يا رسول الله أنك تأتيني فتصلي في بيتي فأتخذه مصلى ، قال : فقال رسول الله صلى الله عليه وسلم : " سأفعل - إن شاء الله - " . قال عتبان :فغدا رسول الله صلى الله عليه وسلم ،وأبو بكر حين ارتفع النهار فاستأذن رسول الله صلى الله عليه وسلم ،فأذنت له ،فلم يجلس حتى دخل البيت ، ثم قال : " أين تحب أن أصلي في بيتك ؟ " قال : فأشرت له إلى ناحية من البيت ، فقام رسول الله صلى الله عليه و سلم فكبر ، فقمنا فصففنا فصلى ركعتين ثم سلم . رواه البخاري الفتح 1/519

அல்லாஹ்வின் தூதர் {ஸல்அவர்களின் சமூகத்திற்கு வருகை தந்த இத்பான் இப்னு மாலிக் (ரலிஎனும் நபித்தோழர் நபிகளாரிடத்தில்

அல்லாஹ்வின் தூதரே! நான் என் சமூக மக்களுக்கு இமாமாக இருக்கின்றேன். என் வீட்டிற்கும் பள்ளிவாசலுக்கும் இடையே ஓர் ஓடை ஓடுகின்றது.

அதைக் கடந்து தான் நான் தொழவைக்கச் செல்வேன். ஆனால்மழைக் காலங்களில் அதைக் கடந்து செல்ல எனக்கு மிகவும் சிரமமாக இருக்கின்றது. மேலும்சமீப காலமாக எனக்குப் பார்வைக் குறைபாடும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அது எனக்கு மேலும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.

எனவேநான் அங்கு சென்று தொழுவதும்தொழவைப்பதும் இயலாத காரியமாக இருக்கின்றது.

ஆகவேநான் எனது வீட்டிலேயே ஓரிடத்தில் தொழுது கொள்ள அனுமதியளித்துஅந்த இடத்தில் நீங்கள் வந்து முதல் தொழுகையைத் தொழுதிட என் உள்ளம் நாடுகின்றதுஅதுவே எனது விருப்பமாகவும் இருக்கின்றது. மேலும்அந்த இடத்தை நான் தொழுமிடமாக ஆக்கிக் கொள்வேன்.

அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் வருவீர்களா?” என்று வேண்டி நின்றார்.

அதற்கு அண்ணலார், இன்ஷா அல்லாஹ்.. அப்படியே செய்கின்றேன் என்றார்கள்.

இத்பான் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:மறுநாள் நபிகளாரும்அபூபக்ர் (ரலி) அவர்களும் முற்பகல் நேரத்தில் எனது வீட்டிற்கு வருகை தந்தார்கள்.

 பின்னர்அல்லாஹ்வின் தூதர் {ஸல்வீட்டினுள் எங்கேயும் அமராமல் என்னை நோக்கி நீர்! எங்கே தொழுதிட விரும்புகின்றீர்!” என்று கேட்டார்கள்.

அப்போது நான் வீட்டின் ஒரு ஓரப்பகுதியை சுட்டிக் காட்டினேன். அண்ணல் நபி {ஸல்அவர்கள் இமாமாக நிற்கநானும் அபூபக்ர் (ரலி) அவர்களும் நபிகளாரைப் பின் பற்றி இரண்டு ரக்அத்கள் தொழுதோம். பின்னர் அண்ணலார் என்னிடம் இருந்து விடை பெற்றுச் சென்றார்கள். ( நூல்: புகாரியின் தெளிவுரை ஃபத்ஹுல் பாரீபாகம்:1பக்கம்:519 )

2.   மாற்றுத் திறனாளிகளோடு சமமாக பழக வேண்டும் என்று வலியுறுத்திய வல்லோன் அல்லாஹ்...

இஸ்லாத்தின் வருகைக்கு முன்னர்மதீனத்து மக்கள்பார்வையற்றவர்கள்நோயாளிகள், ஆகியோருடன் சேர்ந்து உணவருந்த மாட்டார்கள். அப்படி ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவதை வெறுத்தனர்.

மதீனா வந்த மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மதீனத்து மக்களின் இந்தப் பழக்கத்தை மாற்ற வேண்டும் என்று கருதிய போது அல்லாஹ் ரப்புல் ஆலமீன் பின்வரும் இறைவசனத்தை இறக்கியருளினான்.

மக்கள் முன்பாக வந்து நின்ற நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்,

لَيْسَ عَلَى الْأَعْمَى حَرَجٌ وَلَا عَلَى الْأَعْرَجِ حَرَجٌ وَلَا عَلَى الْمَرِيضِ حَرَجٌ وَلَا عَلَى أَنْفُسِكُمْ أَنْ تَأْكُلُوا مِنْ بُيُوتِكُمْ
لَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ أَنْ تَأْكُلُوا جَمِيعًا أَوْ أَشْتَاتًا
المراد [هاهنا] أنهم كانوا يتحرجون من الأكل مع الأعمى؛ لأنه لا يرى الطعام وما فيه من الطيبات، فربما سبقه غيره إلى ذلك. ولا مع الأعرج؛ لأنه لا يتمكن من الجلوس، فيفتات عليه جليسُه، والمريض لا يستوفي من الطعام كغيره، فكرهوا أن يؤاكلوهم لئلا يظلموهم، فأنزل الله هذه الآية رخصة في ذلك. وهذا قول سعيد بن جبير، ومِقْسَم.
وقال الضحاك: كانوا قبل المبعث يتحرجون من الأكل مع هؤلاء تقذرًا وتَقَزُّزًا، ولئلا يتفضلوا عليهم، فأنزل الله هذه الآية.

நம்பிக்கையாளர்களே! உங்களுடன் சேர்ந்து உணவு உண்பதில்பார்வையற்றோர்நடக்க முடியாதவர்கள்நோயாளிகள் மீது எந்தவிதக் குற்றமுமில்லை” (24:61) என்ற திருமறை வசனத்தை ஓதிக் காட்டி மக்கள் கண்ணோட்டத்தை மாற்றி, வெறுப்புணர்வை நீக்கி அனைவரும் சேர்ந்து உணவு உண்ணும் நிலையை ஏற்படுத்தினார்கள்.         ( நூல்: தஃப்ஸீர் இப்னு கஸீர் )

3.   மனித உணர்வுகளை ஊனப்படுத்துவதும், காயப்படுத்துவதும் ஈமானுக்குப் பிறகு பெரிய பாவம் என்று உணர்த்தினான் வல்லோன் அல்லாஹ்…

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا يَسْخَرْ قَوْمٌ مِنْ قَوْمٍ عَسَى أَنْ يَكُونُوا خَيْرًا مِنْهُمْ وَلَا نِسَاءٌ مِنْ نِسَاءٍ عَسَى أَنْ يَكُنَّ خَيْرًا مِنْهُنَّ وَلَا تَلْمِزُوا أَنْفُسَكُمْ وَلَا تَنَابَزُوا بِالْأَلْقَابِ بِئْسَ الِاسْمُ الْفُسُوقُ بَعْدَ الْإِيمَانِ وَمَنْ لَمْ يَتُبْ فَأُولَئِكَ هُمُ الظَّالِمُونَ (11)

இறைநம்பிக்கை கொண்டவர்களே! ஒரு சமூகத்தார் மற்றொரு சமூகத்தாரைப் பரிகாசம் செய்யவேண்டாம் (பரிகாசம் செய்யப்பட்ட ) அவர்கள் (பரிகாசம் செய்யும்) இவர்களைவிட மிகச் சிறந்தவர்களாக இருக்கக் கூடும். அவ்வாறே எந்தப் பெண்களும் மற்ற எந்தப் பெண்களையும் பரிகாசம் செய்ய வேண்டாம். பரிகாசம் செய்யப்பட்ட ) அவர்கள் (பரிகாசம் செய்யும்) இவர்களைவிட மிகச் சிறந்தவர்களாகஇருக்கலாம். உங்களில் சிலர் சிலரை குறை கூறவும் வேண்டாம் உங்களில் சிலர் சிலரை அவருக்கு வைக்கப்படாத பெயர்களால் அழைக்கவும் வேண்டாம். இறை நம்பிக்கை கொண்டதன் பின்னர் மோசமான பெயர்களைச் சூட்டுவது மிகவும் கெட்ட விஷயமாகும். எவர்கள் இந்த நடத்தைகளைக் கைவிட வில்லையோ அவர்கள் தாம் கொடுமைக்காரர்கள்                                        ( அல்குர்ஆன்: 49: 11 )

இவ்வசனம் அல் - ஹுஜறாத் அத்தியாயத்தில் இடம்பெற்றுள்ளது. இவ்வத்தியாயத்தில் இஸ்லாமிய சமூகத்தில் இடம் பெற வேண்டிய பொதுவாக பண்பியல்புகள் பற்றி எடுத்துக் கூறப்படுகின்றது.

அத்தோடு தம்மிடம் இருப்பதைக் கொண்டு அதைப்போன்று  இல்லாமற்றவர்களைக் குறை கூறித்திரிவதும்மற்றவர்களுக்கு பட்டப் பெயர் சூட்டுவது இஸ்லாமிய சமூகத்தில் ஆரோக்கியமான பண்பல்ல, என்பதைக் கூறுவதோடு குறிப்பாக மாற்றுத் திறனாளிகளின் ஊனத்தன்மையை வைத்து பட்டப்பெயர் சூட்டுவதையும் அவர்களை குறை கூறுவதையும் இஸ்லாம் தடைசெய்துள்ளதோடு அவர்களை கொடுமைக்காரர்கள் என்று கடுமையாக விமர்சிப்பதையும் உணர முடிகின்றது.

4.   மாற்றுத் திறனாளிகளின் உணர்வுகளுக்கு மதிப்பளித்த மாண்பாளன் அல்லாஹ்...

பத்ர் யுத்தம் முடிவடைந்துபத்ரில் கலந்து கொண்டவர்களுக்கு அல்லாஹ் அளித்த சிறப்புகளை கேள்விபட்டு அந்த சிறப்புக்களை தம்மால் அடைய முடியவில்லையே என்ற ஏக்கத்தோடும்பத்ரில் கலந்து கொள்ளாதவர்களை அல்லாஹ் விமர்சித்து இறைவசனம் இறக்கியருளியுள்ளான் என்பதைக் கேள்விபட்டு ஒரு வித நடுக்கத்தோடும் நபிகளாரின் அவைக்கு நபிகளாரைக் காண வருகை தந்தார்கள் அப்துல்லாஹ் இப்னு உம்மி மக்தூம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்.

அல்லாஹ்வின் தூதரேஎன்னால் இயலுமானால் நானும் போரில் கலந்து கொண்டிருப்பேனே!” என்று அல்லாஹ்வின் தூதர் {ஸல்அவர்களிடம் தன் இயலாமையை முறையிட்டார்கள்.

பின்னர்வானை நோக்கி கையை உயர்த்தி “யாஅல்லாஹ் என் விஷயத்திலும்என் போன்ற இயலாதவர்களின் நிலை குறித்தும் நீ உன் திருமறையில் வசனம் ஒன்றை இறக்கியருள வேண்டும்” என அல்லாஹ்விடம் அழுது மன்றாடினார்கள்.

உடனடியாக அவரின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட அல்லாஹ் அந்நிஸா அத்தியாயத்தின் 95 –ஆம் இறைவசனத்தை இறக்கியருளினான்.

புகாரியின் இன்னொரு அறிவிப்பில்..

حدثني سهل بن سعد الساعدي: أنه رأى مَروان بن الحكم في المسجد، قال: فأقبلت حتى جلست إلى جنبه، فأخبرنا أن زيد بن ثابت أخبره: أن رسول الله صلى الله عليه وسلم أملى عَلَيّ: " لا يستوي القاعدون من المؤمنين والمجاهدون في سبيل الله ". فجاءه ابن أم مكتوم، وهو يمليها عليَّ، قال: يا رسول الله، والله لو أستطيع الجهاد لجاهدت -وكان أعمى-فأنزل الله على رسول الله صلى الله عليه وسلم، وفَخِذه على فخذي، فثقلت علي حتى خفت أن تُرَض  فخذي، ثم سري عنه، فأنزل الله: { غَيْرُ أُولِي الضَّرَرِ }



ஸஹ்ல் இப்னு ஸஅத் அஸ்ஸாஇதீ ரலியல்லாஹு அன்ஹு அறிவித்தார்.

நான் மர்வான் இப்னு ஹகமைப் பள்ளி வாசலில் பார்த்தேன். அவரை நோக்கிச் சென்று அவருக்குப் பக்கத்தில் அமர்ந்து கொண்டேன். அப்போது அவர்ஸைத் இப்னு ஸாபித் ரலியல்லாஹு அன்ஹு (பின்வருமாறு) தமக்குத் தெரிவித்ததாக எங்களிடம் கூறினார்:

'இறை நம்பிக்கையாளர்களில் அறப்போரில் கலந்துகொள்ளாமல் இருந்துவிட்டவர்களும்தம் உயிராலும் பொருளாலும் இறைவழியில் அறப்போர் புரிந்தவர்களும் சமமாக மாட்டார்கள்எனும் (திருக்குர்ஆன் 04:95 வது) வசனத்தை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (நான் எழுதிப் பதிவு செய்வதற்காக) என்னிடம் ஓதிக்காட்டிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் என்னிடம் ஓதிக்காட்டிக் கொண்டிருக்கும்போது,

இப்னு உம்மி மக்தூம் ரலியல்லாஹு அன்ஹு வந்து, 'அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீதாணையாக! என்னால் அறப்போர் புரிய முடிந்திருந்தால் அறப்போர் புரிந்திருப்பேன்என்று கூறினார்கள். அவர் கண் பார்வையற்றவராக இருந்தார். அப்போது இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலை வஸல்லம் அவர்களின் தொடை என் தொடை மீதிருக்கஅவர்களின் மீது அல்லாஹ் (வேத அறிவிப்பை) அருளினான். எனவேஎன் தொடை நசுங்கிப் போய்விடுமோ என்று நான் அஞ்சும் அளவிற்கு நபி(ஸல்) அவர்களின் தொடை என் மீது கனத்து (அழுத்தத் தொடங்கி)விட்டது. பிறகுஅந்நிலை அகன்றது. அப்போதுதான் அல்லாஹ் 'இடைஒறு உள்ளவர்களைத் தவிரஎனும் சொற்றொடரை (மேற்கண்ட வசனத்துடன் சேர்த்து) அருளியிருந்தான்.

5.   மாற்றுத் திறனாளிகளின் திறமைகளை அங்கீகரித்த அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்...

وكان رسول الله يستخلفه على المدينة المنورة في غزواته فيصلي بالناس ويرعى شؤونهم وقد استخلفه ثلاث عشرة مرة في الأبواء وبواط وذي العشيرة، وغزوته في طلب كرز بن جابر، وغزوة السويق، وغطفان، وفي غزوة أحد، وحمراء الأسد، ونجران، وذات الرقاع، وفي خروجه إلى حجة الوداع، وفي خروجه إلى بدر

அல்லாஹ்வின் தூதர் {ஸல்அவர்களால் கிட்டத்தட்ட பதிமூன்று முறை மதீனாவின் இடைக்கால தலைவராக நியமிக்கப் பெற்ற சிறப்பு வாய்ந்த நபித்தோழர்.

பாங்கு சொல்கிற பணியிலும் மற்றும் இடைக்கால தலைவராக நியமிக்கப்பட்ட 13 முறையும் இமாமத் பணியிலும் நியமிக்கப்பட்ட நபித்தோழர் அப்துல்லாஹ் இப்னு உம்மி மக்தூம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் விழிப்புலன் அற்ற மாற்றுத் திறனாளியே!

முஆத் இப்னு ஜபல் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தான் முதன் முதலாக ஒரு நாட்டிற்கு இஸ்லாமிய அதிகாரியாக நியமிக்கப்பட்டவர்கள்.

யார் அந்த முஆத் இப்னு ஜபல் ரலியல்லாஹு அன்ஹு?

قال عمر بن الخطاب عندما حانت وفاته: «لو كان معاذ بن جبل حيا وليته ثم قدمت على ربي عز وجل فسألني من وليت على أمة محمد؟ لقلت: وليت عليهم معاذ بن جبل بعد ان سمعت النبي يقول: معاذ بن جبل إمام العلماء يوم القيامة، وقد كان أعرج».

ஓர் ஆச்சர்யமான செய்தி முஆத் இப்னு ஜபல் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கால் ஊனமுற்ற மாற்றுத் திறனாளி என்றால் நம்ப முடிகின்றதா?

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் சரி, அவர்களது மறைவிற்குப் பின்னர் மாநபித்தோழர்களும் சரி முஆத் இப்னு ஜபல் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு வழங்கிய மரியாதையும், கௌரவமும் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்யப்பட்டுள்ளது.

وعَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ قَالَ: أَخَذَ بِيَدِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ, فَقَالَ
((إِنِّي لَأُحِبُّكَ يَا مُعَاذُ, فَقُلْتُ: وَأَنَا أُحِبُّكَ يَا رَسُولَ اللَّهِ, فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: فَلَا تَدَعْ أَنْ تَقُولَ فِي كُلِّ صَلَاةٍ رَبِّ أَعِنِّي عَلَى ذِكْرِكَ وَشُكْرِكَ وَحُسْنِ عِبَادَتِكَ ))
أخرجه النسائي في سننه

ஒரு நாள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஓ முஆதே! என்றழைத்து.. முஆத் அவர்களின் கரங்களைப் பற்றிப் பிடித்து “முஆதே! உம்மை நான் நேசிக்கின்றேன்! கூறினார்கள்.

அது கேட்டமுஆத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அல்லாஹ்வின் தூதரே! நானும் தங்களை நேசிக்கிறேன்! என்றார்கள்.

மீண்டும் நபி {ஸல்அவர்கள் முஆதே! அது உண்மையானால்கடமையான ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னரும்

யா அல்லாஹ்! உன்னை நினைப்பதிலும்உனக்கு நன்றி செலுத்துவதிலும்உன்னை அழகிய முறையில் வணங்குவதிலும் எனக்கு உதவி புரிவாயாக! என்று பிரார்த்திப்பதை விட்டு விட வேண்டாம்” என்று கட்டளையிட்டார்கள்.


நபி {ஸல்அவர்கள் சபைக்குள் நுழையும் போதெல்லாம் முஆத் இருக்கின்றாராஎன்று கேட்டவாறு தான் நுழைவார்கள்.

முஆத் இப்னு ஜபல் (ரலிஅவர்களின் இந்த ஓயாத கல்வித் தாகத்தால் ஒரு முறை மாநபி {ஸல்அவர்கள் தோழர்களை நோக்கி இப்படிக் கூறினார்கள்.

قَالَ رَسُوْلُ اللهِ -صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ-: (خُذُوا القُرْآنَ مِنْ أَرْبَعَةٍ: مِنِ ابْنِ مَسْعُوْدٍ، وَأُبِيٍّ، وَمُعَاذِ بنِ جَبَلٍ، وَسَالِمٍ مَوْلَى أَبِي حُذَيْفَةَ)

 குர்ஆனின் அறிவை நீங்கள் நான்கு நபர்களிடம் இருந்து பெற்றுக் கொள்ளுங்கள்! 1. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்உபை இப்னு கஅப்முஆத் இப்னு ஜபல்ஸாலிம் மவ்லா அபீ ஹுதைஃபா (ரலியல்லாஹு அன்ஹும்)”

இன்னொரு சந்தர்ப்பத்தில் இப்படிக் கூறினார்கள்.

عَنْ خَالِدٍ، وَعَاصِمٍ، عَنْ أَبِي قِلاَبَةَ:
عَنْ أَنَسٍ مَرْفُوْعاً: (أَرْحَمُ أُمَّتِي بِأُمَّتِي: أَبُو بَكْرٍ، وَأَشَدُّهَا فِي دِيْنِ اللهِ: عُمَرُ، وَأَصْدَقُهَا حَيَاءً: عُثْمَانُ، وَأَعْلَمُهُم بِالحَلاَلِ وَالحَرَامِ: مُعَاذٌ، وَأَفْرَضُهُم: زَيْدٌ، وَلِكُلِّ أُمَّةٍ أَمِيْنٌ، وَأَمِيْنُ هَذِهِ الأُمَّةِ: أَبُو عُبَيْدَةَ

என் உம்மத்தில் மிகவும் இரக்கமுடையவர் அபூபக்ர் (ரலிஅவர்கள் ஆவார்கள்தீனுடைய காரியங்களில் மிகவும் ரோஷமுடையவர் உமர் (ரலிஅவர்கள் ஆவார்கள்உண்மை பேசுவதிலும்வெட்க உணர்விலும் மேலோங்கியவர் உஸ்மான் (ரலிஅவர்கள் ஆவார்கள்ஹலால்ஹராமை மிகவும் விளங்கியவர் முஆத் இப்னு ஜபல் (ரலிஅவர்கள் ஆவார்கள்.

போதிக்கும் ஆசானாக நியமனம் வழங்கி ஆணை பிறப்பித்த அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்..

ابْنُ سَعْدٍ: أَنْبَأَنَا مُحَمَّدُ بنُ عُمَرَ، حَدَّثَنَا إِسْحَاقُ بنُ يَحْيَى، عَنْ مُجَاهِدٍ، قَالَ:
لَمَّا فَتَحَ رَسُوْلُ اللهِ -صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ- مَكَّةَ، اسْتَخْلَفَ عَلَيْهَا عَتَّابَ بنَ أَسِيْدٍ يُصَلِّي بِهِم، وَخَلَّفَ مُعَاذاً يُقْرِئُهُم وَيُفَقِّهُهُم

மக்கா வெற்றிக்குப் பிறகு மக்காவாசிகள் கூட்டங்கூட்டமாக இஸ்லாத்தை நோக்கி இணைந்த வண்ணம் இருந்தனர்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் {ஸல்அவர்கள் மக்காவாசிகளுக்கு கவர்னராக அத்தாப் இப்னு உஸைத் (ரலிஅவர்களையும்குர்ஆனை கற்றுக் கொடுப்பதற்கும்சன்மார்க்க சட்டதிட்டங்களை போதிப்பதற்கும் முஆத் இப்னு ஜபல் (ரலிஅவர்களை ஆசானாகவும் நியமித்தார்கள்”.

وروى سهل بن أبي حثمة، عن أبيه قال: كان الذين يفتون على عهد رسول الله صلى الله عليه وسلم من المهاجرين: عمر، وعثمان، وعلي. وثلاثة من الأنصار: أُبي بن كعب، ومعاذ بن جبل، وزيد بن ثابت.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்அவர்கள் வாழும் காலத்திலேயே மக்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு தீர்வளித்திடும் ஆற்றல் மிக்க ஆறு நபித்தோழர்கள் உண்டுமுஹாஜிர்களில் மூன்று பேர். 1.உமர் (ரலி), உஸ்மான் (ரலி), அலீ (ரலி), அன்ஸார்களில் மூன்று பேர். 1.உபை இப்னு கஅப் (ரலி), முஆத் இப்னு ஜபல் (ரலி), ஜைத் இப்னு ஸாபித் (ரலிஆகியோர் ஆவார்கள்.

                                               ( நூல்உஸ்துல் ஃகாபா )

فهذا عائذ الله بن عبدالله يحدثنا انه دخل المسجد يوما مع أصحاب الرسول صلى الله عليه وسلم في أول خلافة عمر..قال:
" فجلست مجلسا فيه بضع وثلاثون، كلهم يذكرون حديثا عن رسول الله صلى الله عليه وسلم، وفي الحلقة شاب شديد الأدمة، حلو المنطق، وضيء، وهو أشبّ القوم سنا، فاذا اشتبه عليهم من الحديث شيء ردّوه اليه فأفتاهم، ولا يحدثهم الا حين يسألونه، ولما قضي مجلسهم دنوت منه وسالته: من أنت يا عبد الله؟ قال: أنا معاذ بن جبل".


ஆயிதல்லாஹ் இப்னு அப்துல்லாஹ் (ரஹ்எனும் தாபியீ கூறுகின்றார்கள் 

நான் உமர் (ரலிஅவர்களின் ஆட்சிக்காலத்தின் துவக்கத்தில் மஸ்ஜிதுன் நபவீ –யிற்குச் சென்றேன்அங்கே முப்பதுக்கும் மேற்பட்ட நபித்தோழர்கள் ஒரு இளம் வயது வாலிபரிடம் நபிகளாரின் ஹதீஸ் குறித்தும்சன் மார்க்க சட்டதிட்டங்கள் குறித்தும் வினா எழுப்பிக் கொண்டிருக்கசற்றும் அசராமல் ஒவ்வொன்றுக்கும் மிக அழகிய முறையிலே பதிலளித்துக் கொண்டிருந்தார்கள்.

உடனடியாக அந்த சபையில் என்னையும் ஒரு மாணவராக நான் இணைத்துக் கொண்டேன்அவர்கள் அளிக்கும் பதிலில் ஒளியும்இனிமையும் இழையோடியதை நான் அறிந்து கொண்டேன்.

நீண்ட நேரத்திற்குப் பின் சபை முடிந்து எல்லோரும் வெளியேறிக் கொண்டிருந்தனர்அப்போது அவர் அருகே சென்று அல்லாஹ்வின் அடியாரே நீங்கள் யார்என்று வினவினேன்அதற்கு அவர்கள் நான் தான் முஆத் இப்னு ஜபல் (ரலிஎன்று அடக்கத்தோடும் பணிவோடும் பதில் கூறினார்கள்.

وهذا أبو مسلم الخولاني يقول:
" دخلت مسجد حمص فاذا جماعة من الكهول يتوسطهم شاب برّاق الثنايا، صامت لا يتكلم. فاذا امترى القوم في شيء توجهوا اليه يسألونه. فقلت لجليس لي: من هذا..؟ قال: معاذ بن جبل.. فوقع في نفسي حبه".

அபூ மூஸ்லிம் ஃகவ்லானி (ரஹ்அவர்கள் கூறுகின்றார்கள்: “நான் ஹிம்ஸ் நகரின் ஒரு பள்ளிவாயிலுக்குச் சென்றிருந்தேன்அங்கு பெருங்கூட்டத்தினர் அமர்ந்திருந்தனர்அவர்களின் நடுவே ஒரு வாலிபர் அமர்ந்திருந்தார்.

அவரை நான் உற்று நோக்கினேன்அவரது கண்களும்பற்களும் வெண்முத்துக்கள் போல் பளிச்சிட்டனஆனால்அவரோ மிகவும் அமைதியாகவும்அடக்கமாகவும் அமர்ந்திருந்தார்.

அங்கே கூடியிருந்தவர்கள் அவ்வப்போது தங்களுக்கான மார்க்க சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற்று கொண்டிருந்தனர்அப்போது நான் இவர் யார்என அங்கிருந்தோரிடம் வினவஅவர்கள் இவர் தான் முஆத் இப்னு ஜபல் (ரலிபதில் கூறினார்கள்.

அன்றிலிருந்து நான் அவர்களை நேசிக்க ஆரம்பித்து விட்டேன்.

وهذا شهر بن حوشب يقول:
" كان أصحاب رسول الله صلى الله عليه وسلم اذا تحدثوا وفيهم معاذ بن جبل، نظروا اليه هيبة له"…
ஷஹ்ர் இப்னு ஹவ்ஷப் (ரஹ்அவர்கள் கூறுகின்றார்கள்: “நபித்தோழர்கள் ஒன்று கூடி கருத்துப் பரிமாற்றம் செய்து கொண்டிருக்கும் அவைக்கு முஆத் (ரலிவருகை புரிந்தார்கள் என்றால் முஆத் (ரலிஅவர்களை மரியாதை கலந்த பார்வையோடு அணுகுவார்கள்         ( நூல்ரிஜாலுன் ஹவ்லர் ரஸூல் {ஸல்}.)

6.   மாற்றுத் திறனாளிகளுக்கு சமூகத்தில் அங்கீகாரத்தை வழங்கத்தூண்டிய வள்ளல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்..

وقال  الإمام أحمد: حدثنا عبد الرزاق، أخبرنا مَعْمَر، عن ثابت البُنَاني، عن أنس قال: خطب النبي صلى الله عليه وسلم على جُلَيْبيب امرأة من الأنصار إلى أبيها، فقال: حتى أستأمر أمها. فقال النبي صلى الله عليه وسلم: فنعم  إذًا. قال: فانطلق الرجل إلى امرأته،فذكر ذلك لها  ، فقالت: لاها الله ذا  ، ما وجد رسول الله صلى الله عليه وسلم إلا جلَيبيبا، وقد منعناها من فلان وفلان؟ قال: والجارية في سترها  تسمع. قال: فانطلق الرجل يريد أن يخبر النبي صلى الله عليه وسلم بذلك. فقالت الجارية: أتريدون أن تَرُدّوا على رسول الله صلى الله عليه وسلم أمره؟ إن كان قد رضيه لكم فأنكحوه. قال: فكأنها جَلَّت عن أبويها، وقالا صدقت. فذهب أبوها إلى رسول الله صلى الله عليه وسلم فقال: إن كنت رضيته فقد رضيناه. قال: "فإني قد رضيته". قال: فزوجها  ، ثم فزع أهل المدينة، فركب جُلَيْبيب فوجدوه قد قتل، وحوله ناس من المشركين قد قتلهم، قال أنس: فلقد رأيتها وإنها  لمن أنفق بيت بالمدينة  .

وقال  الإمام أحمد: حدثنا عفان، حدثنا حماد -يعني: ابن سلمة -عن ثابت، عن كنانة بن نعيم العدوي، عن أبي برزة الأسلمي أن جليبيبا كان امرأ يدخل على النساء يَمُرّ بهن ويلاعبهن، فقلت لامرأتي: لا يدخلن اليوم عليكم  جُليبيبُ، فإنه إن دخل عليكم  لأفعلن ولأفعلن. قال: وكانت الأنصار إذا كان لأحدهم أيّم لم يزوجها حتى يعلم: هل لنبي الله صلى الله عليه وسلم فيها حاجة أم لا ؟ فقال رسول الله صلى الله عليه وسلم لرجل من الأنصار: "زوجني ابنتك". قال: نعم، وكرامة يا رسول الله  ، ونُعْمَة عين. فقال: إني لست أريدها لنفسي. قال: فلمن يا رسول الله؟ قال: لجليبيب.


ஒரு முறை நபி {ஸல்அவர்கள்ஜுலைபீப் (ரலி) அவர்களை அழைத்து என்ன திருமணம் செய்து கொள்ளவில்லையாஎன்று கேட்டார்கள்.

அதற்கு ஜுலைபீப் அவர்கள் ”அருவருப்பான தோற்றம் கொண்ட எனக்கு இந்த மதீனாவில் யார் பெண் கொடுப்பார்என்று விரக்தியுடன் கேட்டார்”.

தோழரேஅல்லாஹ்விடத்தில் நீர் ஒன்றும் அருவெறுப்பானவர் இல்லைஊரின் இந்த பகுதியில் உள்ள (ஒரு இடத்தை சுட்டிக்காட்டிஇன்ன மனிதரிடம் சென்று நான் உமக்கு பெண் கேட்டதாக சொல்லுங்கள்” என்று கூறி அனுப்பி வைத்தார்கள் நபி {ஸல்அவர்கள்.

அந்த வீட்டிற்குச் சென்று நபிகளார் சொன்ன அந்த விஷயத்தைக் கூறினார்கள்அந்த வீட்டில் உள்ளவர்கள் உடனடியாக மறுக்கவும் முடியாமல்ஆமோதிக்கவும் முடியாமல் தடுமாறிக்கொண்டிருந்தனர்அவருக்கு பெண் தர அவர்களின் மனம் இடம் தர வில்லை.                        

 ப்போது உள்ளிருந்தவாரே தமது பெற்றோரின் உரையாடலையும் ஜுலைபீப் அவர்களின் உரையாடலையும் கேட்டுக்கொண்டிருந்த சம்பந்தப்பட்ட அந்தப் பெண்மணி தமது பெற்றோரை அழைத்து….

வந்திருப்பவர் அல்லாஹ்வின் தூதர் {ஸல்அவர்களே எனக்காக அனுப்பிய மணாளன்நீங்கள் எப்படி எனக்காக மாப்பிள்ளை பார்ப்பீர்களோ அதை விட பன்மடங்கு அக்கறையோடு தான் மா நபி {ஸல்அவர்கள் எனக்கான மணாளனை தேர்ந்தெடுத்து அனுப்பியிருப்பார்கள்”  என்று கூறிவிட்டு....

وَمَا كَانَ لِمُؤْمِنٍ وَلَا مُؤْمِنَةٍ إِذَا قَضَى اللَّهُ وَرَسُولُهُ أَمْرًا أَنْ يَكُونَ لَهُمُ الْخِيَرَةُ مِنْ أَمْرِهِمْ وَمَنْ يَعْصِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ ضَلَّ ضَلَالًا مُبِينًا (36)

 “அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஏதேனுமொரு விவகாரத்தில் முடிவு செய்துவிட்டால் பிறகு அந்த விவகாரத்தில் மாற்று முடிவு எடுக்கும் அதிகாரம் இறை நம்பிக்கை கொண்டுள்ள எந்த ஆணுக்கும்,இறை நம்பிக்கை கொண்டுள்ள எந்தப் பெண்ணுக்கும் கிடையாது.” எனும் இறை வசனத்தை தம் பெற்றோரிடம் ஓதிக் காண்பித்தார்கள்.

பின்பு  என் விஷயத்தில் நபிகளாரின் முடிவையே நான் திருப்தி அடைகிறேன்ஜுலைபீப் அவர்களை என் மணாளராக்க மனப்பூர்வமாக சம்மதிக்கின்றேன்”  என்று கூறினார்கள்.

                                            (நூல்: இப்னு கஸீர்பாகம்:3)

جليبيب، بضم الجيم، على وزن قنيديل، وهو أنصاري، له ذكر في حديث أبي برزة الأسلمي في إنكاح رسول الله صلى الله عليه وسلم ابنة رجل من الأنصار، وكان قصيراً دميماً، فكأن الأنصاري أبا الجارية وامرأته كرها ذلك، فسمعت الجارية بما أراد رسول الله صلى الله عليه وسلم فتلت قول الله: " وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمراً أن يكون لهم الخيرة من أمرهم " وقالت: رضيت، وسلمت لما يرضى لي به رسول الله صلى الله عليه وسلم، فدعا لها رسول الله، وقال: " اللهم اصبب عليها الخير صباً، ولا تجعل عيشها كداً " ز فكانت من أكثر الأنصار نفقة ومالاً.

நபி {ஸல்அவர்களின் முன்னே அமர்ந்து அந்த வீட்டில் நடை பெற்ற அத்துனை நிகழ்வினையும் ஜுலைபீப் {ரலிவிவரித்துக்கொண்டிருந்தார்கள்.

 அந்தப் பெண்மணி உதிர்த்த வார்த்தைகளை கேட்ட மாநபி {ஸல்அவர்கள்
இறைவாஅப்பெண்மணியின் வாழ்க்கையில் அனைத்து வகையான நலவுகளையும் கொட்டுவாயாககேடுகளும்சோதனைகளும் நிறைந்த வாழ்வை கொடுத்து விடாதே!” என்று அகம் மகிழ துஆ செய்தார்கள்.

 இந்த செய்தியை அறிவிக்கின்ற அபூ பர்ஸா {ரலிஅவர்கள் ”மதீனாவிலேயேஅன்ஸாரிப் பெண்களிலேயே இந்தப் பெண்மணியை விட செல்வச் சீமாட்டியை நாங்கள் கண்டதில்லை”  என்று கூறுகின்றார்கள்.

                                                 ( நூல்உஸ்துல் ஃகாபாஇஸ்தீஆப்,பாகம்:1,பக்கம்:155,156 )

இறுதியாக, மாற்றுத் திறனாளிகளின் கவனத்திற்கு….

மாற்றுத் திறனாளிகளாக இருக்கும் பலரும் தங்களுடைய குறைபாடுகளுக்காக படைத்த ரப்பை நிந்திக்கிற பழக்கம் உடையவராக இருப்பதைக் காண முடிகின்றது.

அதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

وَرَبُّكَ يَخْلُقُ مَا يَشَاءُ وَيَخْتَارُ مَا كَانَ لَهُمُ الْخِيَرَةُ سُبْحَانَ اللَّهِ وَتَعَالَى عَمَّا يُشْرِكُونَ (68)

”மேலும், உம்முடைய இறைவன் தான் நாடுவதைப் படைக்கின்றான்; மேலும், அவனே எப்படிப் படைக்க வேண்டுமென தேர்ந்தெடுத்துக் கொள்கின்றான். இப்படித் தேர்ந்தெடுப்பது இவர்கள் பணியன்று. அல்லாஹ் தூய்மையானவன்; மிகவும் உயர்ந்தவன்”.                                                ( அல்குர்ஆன்: 28: 68 )

இன்னொரு கோணத்தில் சொல்ல வேண்டுமானால் இது அல்லாஹ்வின் தீர்மானிக்கப்பட்ட விதியாகும்.

مَا أَصَابَ مِنْ مُصِيبَةٍ فِي الْأَرْضِ وَلَا فِي أَنْفُسِكُمْ إِلَّا فِي كِتَابٍ مِنْ قَبْلِ أَنْ نَبْرَأَهَا إِنَّ ذَلِكَ عَلَى اللَّهِ يَسِيرٌ (22) لِكَيْلَا تَأْسَوْا عَلَى مَا فَاتَكُمْ وَلَا تَفْرَحُوا بِمَا آتَاكُمْ وَاللَّهُ لَا يُحِبُّ كُلَّ مُخْتَالٍ فَخُورٍ (23)
எந்த துன்பமும் அதனை நாம் சிரிஷ்டிப்பதற்கு முன்னதாக ( லவ்ஹூல் மஹ்பூல்) எனும் கிரந்தத்தில் (பதியப்பட்டு) இருந்தே தவிர பூமியிலோ அல்லது உங்களிலோ ஏற்படுவதில்லை. நிச்சயமாக இது அல்லாஹ்வுக்கு மிக்க எளிதானதாகும் . உங்களுக்கு தவறி விட்டதன் மீது நீங்கள் கவலைப்படாமல் இருப்பதற்காவும் அல்லாஹ் உங்களுக்க கொடுத்ததைப் பற்றி மகிழ்ச்சி கொள்ளாதிருப்பதற்காகவும் இதனை உங்களுக்கு அறிவிக்கின்றான். கர்வம் கொண்டு தற்பெருமையடிப்போர் ஒவ்வொருவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை. ( 57: 22-23)


அல்லாஹ் வழங்கிய அருட்கொடைகளைப் பொருந்திக் கொண்டு நன்றியாளர்களாய் வாழ முயற்சிக்க வேண்டும்..

குறைவான செல்வ வளம் கொடுக்கப்பட்ட ஸஅலபா இப்னு ஹாத்தப் ரலியல்லாஹு அன்ஹு என்கிற நபித்தோழர் செல்வ வளம் பெருகிட துஆச் செய்யுமாறு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வேண்டி நின்ற போது…

عن أبي أمامة الباهلي قال: " جاء ثعلبة بن حاطب الأنصاري إلى رسول الله صلى الله عليه وسلم فقال: يا رسول الله، ادع الله أن يرزقني مالاً، فقال: " ويحك يا ثعلبة، قليل تؤدي شكره خير من كثير لا تطيقه " .

அல்லாஹ்வின் தூதர் {ஸல்அவர்களிடம் ஸஅலபா இப்னு ஹாத்தப் என்கிற நபித்தோழர் வந்தார்.

அல்லாஹ்வின் தூதரேசெல்வச் செழிப்பான வாழ்விற்காக அல்லாஹ்விடம் எனக்காக பிரார்த்தியுங்கள்” என்றார்.

ஸஅலபா “குறைவாக வழங்கப்பட்டு அதற்காக நீர் நன்றி செலுத்துவது இருக்கிறதேநிறைவான செல்வம் வழங்கப்பட்டு நன்றி செலுத்தாமல் வாழ்வதைக் காட்டிலும் மிகச் சிறந்ததாகும்” என்று நபி {ஸல்அவர்கள் கூறினார்கள்.

எனவே, தன்னம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் சமூகத்தில் வாழ்ந்து சிகரம் தொட்ட சாதனையாளர்களாய் வலம் வர வேண்டும்.

மாற்றுத் திறனாளிகளுக்கு இஸ்லாம் வழங்கும் முக்கியத்துவத்தையும், உரிமைகளையும் இங்கு ஓரளவு குறிப்பிட்டுள்ளேன்.

எனவே, மாற்றுத் திறனாளிகளுக்கு ஆதரவளிப்போம்அவர்களின் உரிமைகளை வழங்குவோம்!! 

அல்லாஹ் ரப்புல் ஆலமீன்! இயற்கையான குறைபாடுகளோடு பிறப்பதில் இருந்து நமது சந்ததிகளைப் பாதுகாப்பானாக!

ஜும்ஆ பயான்கள்,


1) வீரியம் நிறைந்த இளமை பருவம்
https://youtu.be/uLMC8TtPwmg?si=7cE-YSA1h3_JYj6T

2) ரஜப் மாதச் சிறப்புகள்...!
https://youtu.be/5Ga7L8Xz0eg?si=oZpK1r3Q92N-KP6_

3) குடும்ப வாழ்வில் இணக்கமான 
சூழல் ஏற்பட
https://youtu.be/i6NG-LXHN2U

4) பித்அத் ஒரு ஆய்வு (கட்டுரை)
https://m.facebook.com/story.php?story_fbid=189411550343398&id=100078236624988&mibextid=Nif5oz

5) சொர்க்கத்தில் கிடைக்கும் இன்பங்கள் ஏராளம் ஏராளம் (கட்டுரை)
https://m.facebook.com/story.php?story_fbid=4738793852902212&id=373164366131871&mibextid=Nif5oz

6) உண்மையை பேசுவோம் உயர்வு பெறுவோம்
https://youtu.be/m2RR43HWrg4?si=ZaIGn-8hn0l4gfR8

7) அய்யாமுல் பீள் நோன்பு பற்றி தெரியுமா?
https://youtu.be/Z0ShXC328NA?si=FIUCFC54xAk7jOiK

8).மரணத்துடன் எதிர்நீச்சல்
https://youtu.be/vL8K-0nRwm8

9) நல்லறத்திலுமா நம்பகத்தன்மை
https://youtu.be/Z918W_OMC2A?si=-vxEdsMFMc_cuuO5

10) ரஜப் மாதத்தின் அகமியங்கள்
https://youtu.be/iU0tRSRmYpw?si=dhmrZ_6aN-hbl1Tz

11) எண்ணம் போல் வாழ்வு* 
https://youtu.be/CKlpnEf3SRQ?si=8oRBLwAGp3YNze6W

12) சங்கையான ரஜப் மாதம்
https://youtu.be/dag7goGxWAQ?si=3IHTmJ4NC-FAZ1h7

13) தேனும், தேனீயும் 
https://youtu.be/_fqv7HSVetM

14) இஸ்லாமிய இளைஞர்கள் (கட்டுரை)
https://m.facebook.com/story.php?story_fbid=1598627893585506&id=373164366131871&mibextid=Nif5oz

15) இணையதளத்தின் பிடியில் இளைய சமுதாயம்
https://www.facebook.com/share/v/157QyjMcPw/

16) ஜியாரத்தும் ஸீனத்தும்                                
https://youtu.be/r8lKyHtgpvU?si=Mrqfi2q-6nLy_A1N

17) இறுதி நபித்தவத்தை பாதுகாப்போம்!"
https://youtu.be/Vgugdyb9DbA?si=nS40vUI1bP37sv8M

18) மக்கா மதினா புனித தலங்கள் செல்வதின் பலன்கள்
https://youtu.be/-Zbp7vbbMvI

19) மரண இத்தா மற்றும் தலாக் இத்தா வேறுபாடு என்ன?
https://youtu.be/r9xpbQzeENg?si=mTiyhP-Fp43r6LLE

20) பிள்ளைகளை நேர்வழிப்படுத்துவோம்
https://youtu.be/woiO4t2r3uc?si=rZER_As_dbgqvdWU

21) தண்ணீர் ஓர்  மகத்தான அருள்கொடை (கட்டுரை)  
https://m.facebook.com/story.php?story_fbid=1217750068339959&id=373164366131871&mibextid=Nif5oz

22) அழிவில் ஆழ்த்தும் அநீதங்கள் (கட்டுரை)
https://m.facebook.com/story.php?story_fbid=3652354378212837&id=373164366131871&mibextid=Nif5oz

23) தேச நலனும், முஸ்லிம் சமூகமும் (கட்டுரை)
https://m.facebook.com/story.php?story_fbid=189935646957655&id=100078236624988&mibextid=Nif5oz

24) பிரிவினைகள் வேண்டாம் (கட்டுரை)
https://m.facebook.com/story.php?story_fbid=189936646957555&id=100078236624988&mibextid=Nif5oz

25) சமூக உறவிற்கு இஸ்லாம் கற்றுத் தரும் பாடம் (கட்டுரை)
https://m.facebook.com/story.php?story_fbid=189939113623975&id=100078236624988&mibextid=Nif5oz

26) ஹிஃபுழ் மதரஸா பட்டமளிப்பு விழா
https://www.youtube.com/live/jNfiOMZsM7Q?si=kU0UQ70FWOB1gWxz

27) ரஜபின் நினைவலைகள்
https://youtu.be/WVbP1kSmgE0?si=9liTb0YiLPppQnFd

28) பிறர் உரிமை பேணல்
https://youtu.be/xqkrPK4rRSA?si=fVev0rBBaREZnXCq

29) ஏமாற்றும் துன்யா
https://youtu.be/FwTdsKSSJ7o?si=wsXVz9Ynu0iRYAIp

30அல்லாஹ்வின் அழகிய திருநாமங்களும்  அதன் மகத்துவங்களும்.
https://youtu.be/0ZZZdos7yjA?si=6ohuUMnucjeJjnAr

31) ரஜப்பின் வரலாற்றுத் திருப்பம்
https://youtu.be/Fuy8YH2BDms?si=D_uvb9NyCIDVFhXS

32) பொருப்புள்ள சமூகத்தை உருவாக்குவோம் !
https://youtu.be/C-Avxho4lyM?si=VhVp9OcjjcQDib9N

33) மாணவர்கள் தங்கள் திறன் மேம்பட வேண்டும்                           
https://youtu.be/sd0kBvBH6vw?si=nq7MC-UUFzlByhJH

34) இன்றைய இளைஞர்களிடம் இஸ்லாம்?
https://albayaanvellimedai.blogspot.com/

35) தொழுகை யாளிகளின்கண்ணியம் !
https://youtu.be/v6sfE8xyiCw?si=sOrDGdaQsyZzWVqDhttps:

36) ஆனந்தம் தரும் ஆசைகள் பேராபத்தை தரும் பேராசைகள்
https://youtu.be/XAJ2Rn7z448

*ஆலிம், உலமாக்களே!*
*உங்களுடைய வட்டார,* *மாவட்ட தளங்களிலும், நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.*

=========================
https://www.facebook.com/rafiqmisbahi?mibextid=ZbWKwL
*பயான் தேவைப்படுபவர்கள் இந்த லிங்கில் சென்று பார்த்துக் கொள்ளலாம்.

பிரபல்யமான பதிவுகள்