நம்முடன் இணைந்து இருப்பவர்கள்

வியாழன், ஜூன் 19, 2025

இப்றாஹீம் நபி.10.கட்டளைகள்,

பத்து கட்டளைகள
وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَات فأتمهنَّ  (البقرة) 124
இன்று நமக்கு சுன்னத்தாக இருக்கும் பல விஷயங்கள்   இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு ஃபர்ளாக ஆக்கப்பட்டிருந்தது
عَنِ ابْنِ عَبَّاسٍ رض وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَات قَالَ: ابْتَلاهُ اللَّهُ بِالطَّهَارَةِ خَمْسٌ فِي الرَّأْسِ وَخَمْسٌ فِي الْجَسَدِ:فِي الرَّأْسِ قَصُّ الشَّارِبِ وَالْمَضْمَضَةُ وَالاسْتِنْشَاقُ وَالسِّوَاكُ وَفَرْقُ الرَّأْسِ، وَفِي الْجَسَدِ: تَقْلِيمُ الأَظَافِرِ وَحَلْقُ الْعَانَةِ وَالْخِتَانُ وَنَتْفُ الإِبْطِ وَغَسْلُ أَثَرِ الْغَائِطِ وَالْبَوْلِ بِالْمَاءِ(تفسير ابن كثير)مصنف عبد الرزاق –
பத்து காரியங்களைக் கொண்டு அல்லாஹ் இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை சோதித்தான். அதாவது  ஃபர்ளாகவே ஆக்கினான். அதை இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வாழ்க்கை முழுவதும்  முறையாக நிறைவேற்றினார்கள்
தலையுடன் சம்பந்தப்பட்டவை ஐந்து. உடலுடன் சம்பந்தப்பட்டவை ஐந்து. அத்தனையும் சுத்தம் சம்பந்தமான விஷயங்களாகும். தலையுடன் சம்பந்தப்பட்டவை 1.மீசையைக் கத்தரிப்பது 2. வாய் கொப்பளிப்பது 3.நாசிக்கு நீர் செலுத்துவது 4. மிஸ்வாக் செய்வது 5. தலைமுடியில் நேர் மாங்கு எடுத்து வாருவது.  உடலுடன் சம்பந்தப்பட்டவை ஐந்து 1.நகம் வெட்டுவது 2.மறைவிட ரோமங்களைக் களைவது  3. கத்னா செய்வது 4. அக்குள் முடிகளைக் களைவது 5. தண்ணீரைக் கொண்டு மல, ஜல சுத்தம் செய்வது.           
மேற்காணும் சுன்னத்துகளில் சிலவற்றை விரிவாக காண்போம்
மீசையைக் கத்தரிப்பதும் தாடி வளர்ப்பதும் தலைமுடியை,  தாடியை அழகு படுத்துவதும் சுன்னத்தாகும்
عَنْ ابْنِ عُمَرَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ خَالِفُوا الْمُشْرِكِينَ وَفِّرُوا اللِّحَى وَأَحْفُوا الشَّوَارِبَ (بخاري)
ஏதேனும் ஓதினால் அவர்களின் தாடி அசையும் அளவுக்கு நபி ஸல் அவர்களின் தாடி இருந்தது
عَنْ أَبِي مَعْمَرٍ قَالَ سَأَلْنَا خَبَّابًا أَكَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْرَأُ فِي الظُّهْرِ وَالْعَصْرِ قَالَ نَعَمْ قُلْنَا بِأَيِّ شَيْءٍ كُنْتُمْ تَعْرِفُونَ قَالَ بِاضْطِرَابِ لِحْيَتِهِ (بخاري)
நபி ஸல் அவர்கள் லுஹரிலும் அசரிலும் கிராஅத் ஓதுவார்களா என கப்பாப் ரழி அவர்களிடம் நாங்கள் கேட்டோம். அதற்கு அவர்கள் ஆம் என்றார்கள். எதை வைத்து நீங்கள் அதை அறிந்து கொள்வீர்கள் என்று கேட்டோம். அதற்கு அவர்கள் நபி ஸல் அவர்களின் தாடி அசைவதைக் கொண்டு தெரிந்து கொள்வோம் என்றார்கள்.                                                               
கையால் பிடித்து உலுக்கும் அளவுக்கு தாடி வைத்திருந்த ஹாரூன் அலைஹிஸ்ஸலாம்
قَالَ يَا هَارُونُ مَا مَنَعَكَ إِذْ رَأَيْتَهُمْ ضَلُّوا (92) أَلَّا تَتَّبِعَنِ أَفَعَصَيْتَ أَمْرِي (93) قَالَ يَا ابْنَ أُمَّ لَا تَأْخُذْ بِلِحْيَتِي وَلَا بِرَأْسِي.. (94)سورة طه
மறைந்த மாமேதை அல்லாமா p,s.p ஹழ்ரத் கிப்லா தங்களுடைய பயானில் அடிக்கடி கூறுவார்கள். தாடி வைப்பதன் சிறப்பைப் பற்றி பெண்களிடம் அதிகம் பேச வேண்டும். காரணம் பல வீடுகளில் ஆண்கள் தாடி வைக்க நினைத்தாலும் பெண்கள் விடுவதில்லை.
தலை முடியையும், தாடி முடியையும் அழகு படுத்த வேண்டும். ஆனால் அது நபி வழியில் இருக்க வேண்டும்
إِنَّ اللَّهَ يُحِبُّ التَّوَّابِينَ وَيُحِبُّ الْمُتَطَهِّرِينَ (222)البقرة عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ كَانَ لَهُ شَعْرٌ فَلْيُكْرِمْهُ (ابوداود)ஒவ்வொருவரும் தனது முடிகளை அழகு படுத்திக் கொள்ளட்டும்
கணவனின் கண்ணுக்கு மனைவி அழகாக இருக்க வேண்டும் என்று விரும்புவது போன்று மனைவியின் கண்ணுக்கு கணவனும் தன்னை அழகாக ஆக்கிக் கொள்ள வேண்டும். அதற்காக அழகு என்பதை தவறாகப் புரிந்த பெண்களில் யாரேனும் தாடி வைக்க வேண்டாம் என்று சொன்னால் அதை ஏற்கக் கூடாது. தாடியை அலங்கோலமாக இல்லாமல் அழகாக வைப்பது நல்லது
قال [ابن عباس]: إني لأتزين لامرأتي كما تتزين لى وما أحب أن أستطف كل حقي الذي لي عليها فتستوجب حقها الذي لها عليَّ لأن الله تعالى يقول: (ولهن مثل الذي عليهن بالمعروف) وقد دخل على الخليفة عمر زوج أشعت أغبر ومعه امرأته وهي تقول: لا أنا ولا هذا لا تريده .. ، فعرف كراهية المرأة لزوجها فأرسل الزوج ليستحم ويأخذ من شعر رأسه ويقلم أظافره فلما حضر أمره أن يتقدم من زوجته فاستغربته ونفرت منه ثم عرفته فقَبِلَتْ به ورجعت عن دعواها رجعت تراجعت إذن عن طلب الطلاق فقال عمر: وهكذا فاصنعوا لهن فوالله إنهن ليحببن أن تتزينوا لهن كما تحبون أن يتزين لكم  (الكتاب : عشرة النساء للنسائي)
இப்னு அப்பாஸ் ரழி அவர்கள் கூறினார்கள் எனக்காக என் மனைவி அலங்காரம் செய்வது போன்று நான் என் மனைவிக்காக அலங்கரித்துக் கொள்வதை விரும்புகிறேன். என் மீது மட்டும் அவளுக்குக் கடமைகள் உள்ளது. அவள் மீது எனக்குக் கடமைகள் எதுவும் இல்லை என்பதை நான் விரும்பவில்லை. காரணம் அல்லாஹ் குர்ஆனில் அந்தப் பெண்களின் மீது உங்களுக்கும் சில கடமைகள் உள்ளது என்று கூறுகிறான். உமர் ரழி அவர்களிடம் தலைவிரி கேலமாக அழுக்கான ஆடையுடன் ஒருவர் மனைவியுடன் வந்தார். அவரிடமிருந்து அப்பெண் விவாகரத்துக் கேட்கிறார் என்பதையும் எதற்காக விவாகரத்துக் கெட்கிறார் என்பதையும் புரிந்து கொண்ட உமர் ரழி அவர்கள் அந்தக் கணவரிடம் முதலில் உன்னை நீ நன்றாக சுத்தப்படுத்திக் கொண்டு வரும்படியும், அழகான ஆடையை அணிந்து வர வேண்டும் என்றும் தலைமுடியை நன்றாக வாரி வர வேண்டும் என்றும் உத்தரவிட்டார்கள். அவர் அவ்வாறே செய்தார். அவர் திரும்பி வந்த பின் அவரை மனைவிக்கு முன்னால் வந்து நிற்கச் சொன்னார்கள். அந்த மனைவி அந்தக் கோலத்தில் அவரைப் பார்த்த பின்பு முதலில் மறுத்தாலும் சற்று நேரத்தில் மனம் மாறி விவாகரத்துக் கேட்கும் எண்ணத்தை மாற்றிக் கொண்டார். அப்போது தான் உமர் ரழி அவர்கள் அந்தக் கணவரிடம். உங்கள் கண்ணுக்கு மனைவி அழகாக இருக்க வேண்டும் என விரும்புவது போன்று மனைவியின் கண்ணுக்கு நீங்கள் அழகாக இருக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புவார்கள் என்று கூறினார்கள்.
وقال [يحيى بن عبد الرحمن الحنظلي]: أتيت [محمد بن الحنفية] فخرج إلى في ملحفة حمراء ولحيته تقطر من الغالية ، والغالية هي خليط الأطياب بل خليط أفضل الأطياب ، ولحيته تقطر من الغالية ، يقول يحيى فقلت له: ما هذا ؟ قال محمد : إن هذه الملحفة ألقتها على امرأتى ودهنتنى بالطيب وإنهن يشتهين منا ما نشتهيه منهن ، ذكر ذلك القرطبي في تفسيره الجامع لأحكام القرآن (عشرة النساء للنسائي)
யஹ்யா ரஹ் அவர்கள் கூறினார்கள் நான் முஹம்மது இப்னு ஹனஃபிய்யா ரஹ் அவர்களிடம் வருகை தந்தபோது அவர்கள் அழகான நீண்ட அங்கியை அணிந்தவர்களாகவும் மிகச்சிறந்த நறுமணம் தடவியவர்களாகவும் இருந்தார்கள். அந்த நறுமணம் தாடியிலும் வடிந்த படி இருந்தது. அதுபற்றி அவர்களிடம் நான் கேட்டபோது இந்த ஆடையை என் மனைவி எனக்கு அணிவித்தார். இந்த நறுமணத்தையும் அவரே எனக்குத் தடவி விட்டார். நம் கண்ணுக்கு முன்னால் நம் மனைவிமார்கள் அழகாக இருக்க வேண்டும் என நாம் விரும்புவது போல மனைவியின் கண்ணுக்கு முன்னால் நாம் அழகாக இருக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புவது இயல்பு தானே என்றார்கள்.       
பரட்டைத் தலையுடன் இருப்பவரை ஷைத்தானுக்கு ஒப்பிட்டுக்கூறிய நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்
عن عَطَاءَ بْنَ يَسَارٍرضقَالَ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْمَسْجِدِ فَدَخَلَ رَجُلٌ ثَائِرَ الرَّأْسِ وَاللِّحْيَةِ فَأَشَارَ إِلَيْهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِيَدِهِ أَنْ اخْرُجْ كَأَنَّهُ يَعْنِي إِصْلَاحَ شَعَرِ رَأْسِهِ وَلِحْيَتِهِ فَفَعَلَ الرَّجُلُ ثُمَّ رَجَعَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَلَيْسَ هَذَا خَيْرًا مِنْ أَنْ يَأْتِيَ أَحَدُكُمْ ثَائِرَ الرَّأْسِ كَأَنَّهُ شَيْطَانٌ (مؤطا)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மஸ்ஜிதில் இருந்த போது தலைமுடியும் தாடியும் சீர் செய்யப்படமல் (தலைவிரி கோலமாக) ஒருவர் வந்தார்.  அவரிடம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நீங்கள் வெளியே சென்று முடிகளை சீர் செய்து கொண்டு வாருங்கள் என்று சைக்கினை செய்தார்கள். அவ்வாறே அவர் வெளியே சென்று தனது முடிகளை சீர் செய்து கொண்டு வந்தார். அவரிடம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உங்களில் ஒருவர் ஷைத்தானைப் போன்று தலைவிரி கோலமாக வருவதை விட இது எவ்வளவு மேலானது என்றார்கள்.                                                       
عَنْ يَحْيَى بْنِ سَعِيد أَنَّ أَبَا قَتَادَةَ الْأَنْصَارِيَّ قَالَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ لِي جُمَّةً أَفَأُرَجِّلُهَا فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَعَمْ وَأَكْرِمْهَا فَكَانَ أَبُو قَتَادَةَ رُبَّمَا دَهَنَهَا فِي الْيَوْمِ مَرَّتَيْنِ لِمَا قَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَعَمْ وَأَكْرِمْهَا(مؤطا)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் அபூ கதாதா ரழி அவர்கள் எனக்கு தோள் புஜம் வரை முடி  (கிர்தா) இருக்கிறது. அதை நான் அழகு படுத்தி வாரிக் கொள்ளட்டுமா என்று கேட்க, அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆம் அதை அழகு படுத்திக் கொள்ளுங்கள் என்றார்கள்.அதனால் அபூகதாதா ரழி அவர்கள் ஒருநாளைக்கு இருமுறைஎண்ணெய் தேய்த்து அழகு படுத்துவார்கள்.

போலீஸ் கட்டிங் போன்று தலையில் பாதி முடியும், பாதி மொட்டையுமாக இருப்பது கூடாது
عَنِ ابْنِ عُمَرَ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَهَى عَنِ الْقَزَعِ. قَالَ قُلْتُ لِنَافِعٍ وَمَا الْقَزَعُ قَالَ يُحْلَقُ بَعْضُ رَأْسِ الصَّبِىِّ وَيُتْرَكُ بَعْضٌ (مسلم)
عَنِ ابْنِ عُمَرَ رضي الله عنه أَنْ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَى غُلامًا قَدْ حُلِقَ بَعْضُ رَأْسِهِ وَتُرِكَ بَعْضُهُ فَنَهَاهُمْ عَنْ ذلِكَ قَالَ : إِمَّا أَنْ تَحْلِقُوا كُلَّهُ وَإِمَّا أَنْ تَتْرُكُوا كُلَّهُ (شرح السنة)وفي رواية قال فَإِنَّ هَذَا زِيُّ الْيَهُودِ(شرح السنة)
முதன் முதலில் நரையைப் பார்த்தவர்கள் நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம்
عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ أَنَّهُ قَالَ كَانَ إِبْرَاهِيمُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَوَّلَ النَّاسِ ضَيَّفَ الضَّيْفَ وَأَوَّلَ النَّاسِ اخْتَتَنَ وَأَوَّلَ النَّاسِ قَصَّ الشَّارِبَ وَأَوَّلَ النَّاسِ رَأَى الشَّيْبَ فَقَالَ يَا رَبِّ مَا هَذَا فَقَالَ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى وَقَارٌ يَا إِبْرَاهِيمُ فَقَالَ يَا رَبِّ زِدْنِي وَقَارًا (مؤطا)
நபி இப்றாஹீம் அவர்களின் காலத்திற்கு முன்பு வரை எவ்வளவு வயதானாலும் யாருக்கும் நரை ஏற்படாது
{وَأُحْيِي الْمَوْتَى بِإِذْنِ اللَّهِ} قيل: أحيا أربعة أنفس: العاذر: وكان صديقا له، وابن العجوز  وابنة العاشر وسام بن نوح؛ فالله أعلم. فأما العاذر فإنه كان قد توفى قبل ذلك بأيام فدعا الله فقام بإذن الله وودكه يقطر فعاش وولد له، وأما ابن العجوز فإنه مر به يُحمل على سريره فدعا الله فقام ولبس ثيابه وحمل السرير على عنقه ورجع إلى أهله. وأما بنت العاشر فكان أتى عليها ليلة فدعا الله فعاشت بعد ذلك وولد لها؛ فلما رأوا ذلك قالوا: إنك تحيي من كان موته قريبا فلعلهم لم يموتوا فأصابتهم سكتة فأحيي لنا سام بن نوح. فقال لهم: دلوني على قبره، فخرج وخرج القوم معه، حتى انتهى إلى قبره فدعا الله فخرج من قبره وقد شاب رأسه. فقال له عيسى: كيف شاب رأسك ولم يكن في زمانكم شيب؟ فقال: يا روح الله، إنك دعوتني فسمعت صوتا يقول: أجب روح الله، فظننت أن القيامة قد قامت، فمن هول ذلك شاب رأسي. فسأله عن النزع فقال: يا روح الله إن مرارة النزع لم تذهب عن حنجرتي؛ وقد كان من وقت موته أكثر من أربعة آلاف سنة، فقال للقوم: صدقوه فإنه نبي؛ فآمن به بعضهم وكذبه بعضهم وقالوا: هذا سحر. (قرطبي
 இறந்தவர்களில் நான்கு நபர்களை உயிராக்கியுள்ளார்கள். 1. ஈஸா அவர்களின் நண்பர் ஆதிர். அவர் இறந்து சில தினங்களுக்குப் பின் உயிராக்கினார்கள். அதன் பின் அவர் குழந்தைகளையும் பெற்றார்.  2. ஒரு மூதாட்டியின் மகன் இவரை இறந்த நிலையில் கஃபனிட்டு கட்டிலில் தூக்கிச் சென்றனர். அவரை உயிராக்கும்படி அல்லாஹ்விடம் துஆ செய்தார்கள். அவர் உயிர் பெற்று எழுந்து தனது இயல்பான ஆடையை அணிந்ததுடன் அந்தக் கட்டிலை அவரே வீடு வரை சுமந்து சென்றார்.  3. ஒரு பெண். இறந்த விட்ட இந்தப் பெண்ணின் வீட்டுக்கு இரவில் வந்த ஈஸா அலை அவரை உயிராக்கும்படி அல்லாஹ்விடம் துஆ செய்தார்கள். அவர் உயிர் பெற்று எழுந்தார். அவருக்கும் குழந்தைகள் பிறந்தன. 4. நூஹ் அலை அவர்களின் சாம் என்ற மகனை உயிராக்கினார்கள். இதன் பின்னணிடாகிறது அந்தமக்கள் ஈஸா அலை அவர்களிடம் நீங்கள் சமீபத்தில் இறந்தவர்களை மட்டும் தான் உயிர் பெற வைக்கிறீர்கள். ஒருவேளை மயக்கத்தில் இருந்து அவர்களை இறந்த விட்டதாக கருதப் பட்டிருக்கலாம். அவர்களின் மயகத்தை நீங்கள் தெளிய வைத்ததாகவும் நாங்கள் கருதுகிறோம். எனவே இறந்து நீண்ட காலம் ஆகி விட்டவர்களை உயிராக்க முடியுமா குறிப்பாக 4000 வருடங்களுக்கு முன் இறந்த நூஹ் அலை அவர்களின் சாம் என்ற மகனை உயிராக்க முடியுமா என்று கேட்க அதற்கு ஈஸா அலை அவரின் கப்ரைக் காட்டுங்கள் என்றார்கள் அவ்வாறே காட்டப்பட்டது. அவரை உயிராக்கும்படி அல்லாஹ்விடம் துஆ செய்தார்கள். அவர் உயிர் பெற்று எழுந்தார். ஆனால் தலைமுடி நரைத்த நிலையில் எழுந்தார். அவரிடம் ஈஸா அலை உங்களின் காலத்தில் நரை என்பதே இல்லையே என்று கேட்க,  நீங்கள் என்னை அழைத்தவுடன் கியாமத் வந்து விட்டதோ என்ற பயத்தில் எழுந்தேன். அதனால் நரைத்து விட்டது என்றார். அவரிடம் அவருடைய சகராத் பற்றி ஈஸா அலை கேட்க, இத்தனை வருடங்கள் ஆகியும் அதன் வலியை இன்றும் உணருகிறேன் என்று கூறினார். மேலும் அவர் அந்த மக்களிடம் ஈஸா அவர்களை தூதர் என நம்புங்கள் என்றார். சிலர் மட்டும் அப்போதே இஸ்லாத்தை ஏற்றனர். வேறு சிலர் இதை சூனியம் என்றார்கள். வேறு சில அறிவிப்பில் அந்த சாம் சற்று நேரத்தில் மீண்டும் அந்த கப்ருக்குள் மய்யித்தாக ஆக்கப்பட்டார். ஆனால் அவர் ஈஸா அலை அவர்களிடம் கோரிக்கை வைத்தார். மீண்டும் என்னை மவ்த்தாக்கும் போது ஏற்கெனவே சகராத்தை அனுபவித்து விட்டதால் சகராத் நிலை மீண்டும் வராமல் இருக்க துஆ செய்யுங்கள் என்றார். அவ்வாறே ஈஸா அலை துஆ செய்தார்கள். 
நரைத்த முடிக்கு கறுப்புச் சாயம் பூசுவது முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளது. மருதாணி இட்டு சிவப்பாக்குவது சுன்னத்
عَنْ ابْنِ عَبَّاسٍ رَفَعَهُ أَنَّهُ قَالَ قَوْمٌ يَخْضِبُونَ بِهَذَا السَّوَادِ آخِرَ الزَّمَانِ كَحَوَاصِلِ الْحَمَامِ لَا يَرِيحُونَ رَائِحَةَ الْجَنَّةِ (نسائ- عَنْ جَابِرٍ قَالَ أُتِيَ بِأَبِي قُحَافَةَ يَوْمَ فَتْحِ مَكَّةَ وَرَأْسُهُ وَلِحْيَتُهُ كَالثَّغَامَةِ بَيَاضًا فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ غَيِّرُوا هَذَا بِشَيْءٍ وَاجْتَنِبُوا السَّوَادَ (نسائ
சில மக்கள் புறாவின் ஈரல் கறுப்புச் சாயத்தைக் கொண்டு பூசிக் கொள்வார்கள் அவர்கள் சுவனத்தின் வாடையைக் கூட நுகர மாட்டார்கள்
டை அடிப்பதால் அதிலுள்ள இரசாயனப் பொருட்கள் தலையில் உள்ள தோலினுள் இறங்கி தலைமுடி கொட்ட ஆரம்பிக்கிறது. தலையில் சொரசொரப்பு ஏற்பட்டு தலையின் தோல் சிதில் சிதிலாக ஆக்கப்படுகிறது. அந்த இரசாயனத்தால் கண்பார்வை குறைகிறது. சிந்தனைத் திறனும் பாதிக்கப்படுகிறது என மருத்துவ மேதைகள் குறிப்பிடுகின்றனர்
وعن جابر قال : أتي بأبي قحافة يوم فتح مكة ورأسه ولحيته كالثغامة بياضا فقال النبي صلى الله عليه وسلم : " غيروا هذا بشيء واجتنبوا السواد " . رواه مسلم
மீசையைக் கத்தரிப்பது, நகம் வெட்டுவது, அக்குள் மற்றும் மறைவிட ரோமங்களை நீக்குவதில் அதிக பட்ச கெடு. 
عَنْ زَيْدِ بْنِ أَرْقَمَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ لَمْ يَأْخُذْ مِنْ شَارِبِهِ فَلَيْسَ مِنَّا(ترمذي)
எவர் மீசையைக் கத்தரிக்கவில்லையோ அவர் நம்மைச் சார்ந்தவர் அல்ல.
عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُصُّ أَوْ يَأْخُذُ مِنْ شَارِبِهِ وَكَانَ إِبْرَاهِيمُ خَلِيلُ الرَّحْمَنِ يَفْعَلُهُ (ترمذي)
عَنْ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مِنْ الْفِطْرَةِ حَلْقُ الْعَانَةِ وَتَقْلِيمُ الْأَظْفَارِ وَقَصُّ الشَّارِبِ (بخاري
عَنْ أَنَسِ رض قَالَ وَقَّتَ لَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَلْقَ الْعَانَةِ وَتَقْلِيمَ الْأَظْفَارِ وَقَصَّ الشَّارِبِ وَنَتْفَ الْإِبِطِ أَرْبَعِينَ يَوْمًا مَرَّةً (ابوداود
 அனஸ் ரழி கூறினார்கள் நபி ஸல் அவர்கள் மீசையைக் கத்தரிப்பது, மறைவிட ரோமங்களைக் களைவது, அக்குள் முடிகளைக் களைவது நகம் வெட்டுவது ஆகியவை அதிகம் பட்சம் நாற்பது நாட்களுக்கு மேல் இவ்வறைக் களையாமல் விடக் கூடாது என எங்களுக்கு கெடு விதித்தார்கள்.                                                                                                                  
இது அதிக பட்ச அளவாகும். குறைந்த பட்சம் நகம், மீசை ஆகியவற்றை ஒவ்வொரு ஜும்ஆ நாளிலும் அக்குள் முடிகளை நாற்பது நாட்களுக்கு ஒருமுறையும்,  மர்மஸ்தான முடிகளை இருபது நாட்களுக்கு ஒருமுறையும் களைவது சிறப்பு
عن ابن عمر رضي الله عنهما أن النبي كان يأخذ أظفاره ويحفي شاربه في كل جمعة ويحلق العانة عشرين يوما وينتف الإبط في كل أربعين يوما  ولا عذر في تركه وراء الأربعين  (مرقاة المفاتيح)  قَالَ الْقُرْطُبِيّ فِي"الْمُفْهِم" ذِكْر الْأَرْبَعِينَ تَحْدِيد لِأَكْثَر الْمُدَّة وَلَا يَمْنَع تَفَقُّد ذَلِكَ مِنْ الْجُمُعَة إِلَى الْجُمُعَة وَالضَّابِط فِي ذَلِكَ الِاحْتِيَاج(فتح الباري) 
நபி ஸல் அவர்கள் வாரம் ஒவ்வொரு ஜும்ஆ நாளிலும் நகம் வெட்டுபவர்களாகவும் மீசையைக் கத்தரிப்பவர்களாகவும் இருபது நாட்களுக்கு ஒருமுறை மறைவிட ரோமங்களைக் களைபவர்களாகவும் நாற்பது நாட்களுக்கு ஒருமுறை அக்குள் ரோமங்களைக் களைபவர்களாகவும் இருந்தார்கள் இப்னுஉமர் ரழி கூறினார்கள்
وَالْمُرَاد إِزَالَة مَا يَزِيد عَلَى مَا يُلَابِس رَأْس الْإِصْبَع مِنْ الظُّفْر لِأَنَّ الْوَسَخ يَجْتَمِع فِيهِ فَيُسْتَقْذَر وَقَدْ يَنْتَهِي إِلَى حَدّ يَمْنَع مِنْ وُصُول الْمَاء إِلَى مَا يَجِب غَسْله فِي الطَّهَارَة وَلَمْ يَثْبُت فِي تَرْتِيب الْأَصَابِع عِنْد الْقَصّ شَيْء مِنْ الْأَحَادِيث (فتح الباري)
நீளமான நகங்களுக்கிடையில் அழுக்குகள் தங்கும். அவற்றை சரிவர சுத்தம் செய்யவும் முடியாது. ஆகவே நீளமான நகம் உள்ளவரின் உளூ, கடமையான குளிப்பு ஆகியவை நிறைவேறாமல் போக வாய்ப்பு உண்டு
 لَكِنْ جَزَمَ النَّوَوِيّ فِي"شَرْح مُسْلِم" بِأَنَّهُ يُسْتَحَبّ الْبُدَاءَة بِمُسَبِّحَةِ الْيُمْنَى6 ثُمَّ بِالْوُسْطَى7 ثُمَّ الْبِنْصِر8 ثُمَّ الْخِنْصَر9 ثُمَّ الْإِبْهَام10 ، وَفِي الْيُسْرَى بِالْبَدَاءةِ بِخِنْصَرِهَا ثُمَّ بِالْبِنْصِرِ إِلَى الْإِبْهَام وَيَبْدَأ فِي الرِّجْلَيْنِ بِخِنْصَرِ الْيُمْنَى إِلَى الْإِبْهَام وَفِي الْيُسْرَى بِإِبْهَامِهَا إِلَى الْخِنْصَر، وَلَمْ يَذْكُر لِلِاسْتِحْبَابِ مُسْتَنَدًاوَتَوْجِيه الْبُدَاءَة بِالْيُمْنَى لِحَدِيثِ عَائِشَة الَّذِي مَرَّ فِي الطَّهَارَة " كَانَ النَّبِىُّ  صلى الله عليه وسلم  يُحِبُّ التَّيَمُّنَ مَا اسْتَطَاعَ فِى شَأْنِهِ كُلِّهِ فِى طُهُورِهِ وَتَرَجُّلِهِ وَتَنَعُّلِهِ (بخاري) باب يَبْدَأُ بِالنَّعْلِ الْيُمْنَى – كتاب اللباس)وَالْبُدَاءَة بِالْمُسَبِّحَةِ مِنْهَا لِكَوْنِهَا أَشْرَف الْأَصَابِع لِأَنَّهَا آلَة التَّشَهُّد ، وَأَمَّا اِتِّبَاعهَا بِالْوُسْطَى فَلِأَنَّ غَالِب مَنْ يُقَلِّم أَظْفَاره يُقَلِّمهَا قَبْل ظَهْر الْكَفّ فَتَكُون الْوُسْطَى جِهَة يَمِينه فَيَسْتَمِرّ إِلَى أَنْ يَخْتِم بِالْخِنْصَرِ ثُمَّ يُكْمِل الْيَد بِقَصِّ الْإِبْهَام وَأَمَّا الْيُسْرَى فَإِذَا بَدَأَ بِالْخِنْصَرِ لَزِمَ أَنْ يَسْتَمِرّ عَلَى جِهَة الْيَمِين إِلَى الْإِبْهَام (فتح الباري)لِلِاسْتِحْبَابِ مُسْتَنَدًاமுஸ்தஹப் என்பதற்கு ஆதாரம் கூறவில்லை
 இமாம் நவவீ ரஹ் கூறினார்கள். நகம் வெட்டுவதில் முஸ்தஹப்பாகிறது  வலது கையின் கலிமா விரலில் ஆரம்பித்து அடுத்து நடுவிரல் பிறகு மோதிர விரல் பிறகு  சுண்டு விரல் பிறகு பெருவிரல் நகங்களை வெட்ட வேண்டும். அதேபோல இடது கையில் முதலாவதாக சுண்டு விரல் பிறகு நடுவிரல் பிறகு நடுவிரல் பிறகு  ஆட்காட்டி விரல் பிறகு பெருவிரல் என்று வருவது முஸ்தஹப்பாகும். காரணம் நபி ஸல் அவர்கள் அனைத்திலும் வலது புறம் துவங்குவதை விரும்பியுள்ளார்கள்.  கலிமா விரலைக் கொண்டு துவங்குவதன் நோக்கம் அதுதான் விரல்களில் சிறந்த விரலாக இருக்கிறது என்பதாலும் அத்தஹிய்யாத் ஓதும்போது அது பயன்படுகிறது என்பதாலும் அது நல்லதாகும். அடுத்து நடுவிரல் நகத்தை வெட்ட வேண்டும் என்பதற்கான காரணம் பெரும் நகம் வெட்டுபவர்கள் உள்ளங்கையை மேல் நோக்கி வைத்தவாறு வெட்டுவார்கள் எனவே கலிமா விரல் நகத்தை வெட்டிய பின்பு அடுத்த வலது புற வரிசையில் நடுவிரல் தான் இருக்கும் என்பதால் அவ்வாறு கூறப்பட்டுள்ளது. அதேபோல இடது  கை விரல் நகங்களை வெட்டும்போது உள்ளங்கை மேல் நோக்கி இருக்கும்போது சுண்டு விரல் தான் முதலில் வலது புறத்தில் இருக்கும்.   
நீளமான நகங்கள் நரகவாதிகளின் அடையாளங்களில் ஒன்றாக கூறப்பட்டுள்ளது
عَنْ أَنَسِ  رضي الله عنه قَالَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمَّا عُرِجَ بِي مَرَرْتُ بِقَوْمٍ لَهُمْ أَظْفَارٌ مِنْ نُحَاسٍ11 يَخْمُشُونَ وُجُوهَهُمْ وَصُدُورَهُمْ فَقُلْتُ مَنْ هَؤُلَاءِ يَا جِبْرِيلُ قَالَ هَؤُلَاءِ الَّذِينَ يَأْكُلُونَ لُحُومَ النَّاسِ وَيَقَعُونَ فِي أَعْرَاضِهِمْ12 (ابوداود) بَاب فِي الْغِيبَةِ -كِتَاب الْأَدَبِ
மிஃராஜுக்கு என்னை அழைத்துச் செல்லப்பட்ட போது நான் சில மனிதர்களைக் கடந்து சென்றேன் அவர்களின் நகங்கள் செம்பால் ஆனதாக, (மிகவும் கூர்மையானதாக) இருந்தன. அவற்றின் மூலம் அவர்கள் தமக்குத் தாமே தமது முகங்களையும் நெஞ்சுகளையும் தங்களின் நகங்களால் குத்தி காயப் படுத்திக் கொள்வதைக் கண்டு, இவர்கள் யார் என்று ஜிப்ரயீல் அலை அவர்களிடம் கேட்டேன். அப்போது அவர்கள் கூறினார்கள். இவர்கள் தான் உலகில் மனித மாமிசம் சாப்பிட்டவர்கள். (புறம் பேசியவர்கள்) அதாவது அடுத்தவர்களின் மானம் மரியாதையை பாழ்படுத்தியவர்கள்
வெட்டிய நகங்களை புதைப்பது பற்றிய விபரங்கள்
நம் உடலில் இருந்து நீக்கப்பட்ட நகம், முடிகளை குப்பையில் போடுவதை விட முடிந்தால் அவற்றை புதைப்பது சிறப்பு
قال الحافظ ابن حجر: قلتُ لأحمد : يأخذ من شعره وأظفاره أيدفنه أم يلقيه ؟ قال : يدفنه . قلت : بَلَغَكَ فيه شيء ؟ قال : كان ابن عمر يدفنه " وقد استحب أصحابنا دفنها لكونها أجزاء من الآدمي والله أعلم (فتح الباري)
وَرُوِيَ أَنَّ النَّبِيّ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ أَمَرَ بِدَفْنِ الشَّعْر وَالْأَظْفَار وَقَالَ : لَا يَتَلَعَّب بِهِ سَحَرَة بَنِي آدَم . قُلْت وَهَذَا الْحَدِيث أَخْرَجَهُ الْبَيْهَقِيُّ مِنْ حَدِيث وَائِل بْن حُجْرٍ نَحْوه . وَقَدْ اِسْتَحَبَّ أَصْحَابنَا دَفْنهَا لِكَوْنِهَا أَجْزَاء مِنْ الْآدَمِيّ وَاَللَّه أَعْلَم (فتح الباري)
 இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் ரஹ் அவர்களிடம் கேட்கப்பட்டது. நகம், முடி வெட்டியவர் தனது முடியை புதைப்பது நல்லதா அல்லது வெறுமனே தூக்கிப் போடுவது போதுமா என்று கேட்கப்பட்டது. அதற்கு இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் ரஹ் அவர்கள் புதைக்க வேண்டும் என பதில் கூறினார்கள் இது விஷயமாக தங்களிடம் ஆதாரம் ஏதேனும் கிடைத்துள்ளதா என்று கேட்க, அதற்கு அவர்கள் ஆம்  இப்னு உமர் ரழி அவர்கள்  நகம், முடிகளை புதைப்பவர்களாக இருந்துள்ளார்கள். மேலும் நபி ஸல் அவர்கள் நகம், முடிகளை புதைக்கும்படி ஏவினார்கள் மேலும் கூறினார்கள் நகம், முடிகள் மூலமாக மனிதர்களில் சூனியக்காரர்கள் ஏதேனும் தவறாகப் பயன்படுத்தி விடக்கூடாது என்பதற்காகவும் புதைப்பதே நல்லது.                                                       
இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் ரஹ் அவர்கள் கூறும்போது நகம், முடி என்பது மனிதனின் உடல் அங்கங்களாக இருப்பதால் மனிதனை எப்படி மண்ணில் புதைப்போமோ அவ்வாறு மண்ணில் புதைப்பது நல்லது என்று கூறினார்கள். 
மிஸ்வாக் என்ற சுன்னத்தும் இப்றாஹீம் அலை அவர்களுக்கு கட்டளையிடப் பட்டிருந்தது
عَنْ أَبِي أَيُّوبَ قَاَل قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَرْبَعٌ مِنْ سُنَنِ الْمُرْسَلِينَ الْحَيَاءُ وَالتَّعَطُّرُ وَالسِّوَاكُ وَالنِّكَاحُ (ترمذي) - كِتَاب النِّكَاحِ
عَنْ أَبِى هُرَيْرَةَ  رضى الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ لَوْلاَ أَنْ أَشُقَّ عَلَى أُمَّتِى لأَمَرْتُهُمْ بِالسِّوَاكِ مَعَ كُلِّ صَلاَةٍ (بخاري) وَقَالَتْ عَائِشَةُ رضي الله عنها عَنِ النَّبِىِّ  صلى الله عليه وسلم (السواك) مَطْهَرَةٌ لِلْفَمِ مَرْضَاةٌ لِلرَّبِّ (بخاري) باب السِّوَاكِ– كتاب الجمعة
தொழுகை அல்லாத நேரங்களிலும் நபி ஸல் அவர்கள் மிஸ்வாக் செய்வார்கள்
عَنْ حُذَيْفَةَ قَالَ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا قَامَ مِنْ اللَّيْلِ يَشُوصُ فَاهُ بِالسِّوَاكِ(بخاري) باب السِّوَاكِ– كتاب الجمعةعَنِ الْمِقْدَامِ بْنِ شُرَيْحٍ عَنْ أَبِيهِ قَالَ قُلْتُ لِعَائِشَةَ بِأَىِّ شَىْءٍ كَانَ يَبْدَأُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلمإِذَا دَخَلَ بَيْتَهُ قَالَتْ "بِالسِّوَاكِ" (مسلم) بَاب السِّوَاكِ- كِتَاب الطَّهَارَةِ 
வீட்டுக்கு வந்தவுடன் நபி ஸல் அவர்கள் எந்த செயலைக் கொண்டு தொடங்குவார்கள் என்று ஆயிஷா ரழி அவர்களிடம் கேட்கப்பட்ட போது வீட்டுக்கு வந்தவுடன் மிஸ்வாக் செய்வார்கள் என ஆயிஷா ரழி அவர்கள் பதில் கூறினார்கள்
சகராத் நிலையிலும் மிஸ்வாக் செய்வதை விரும்பிய நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்
عن عَائِشَةَ  رضي الله عنها كَانَتْ تَقُولُ إِنَّ مِنْ نِعَمِ اللَّهِ عَلَيَّ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تُوُفِّيَ فِي بَيْتِي وَفِي يَوْمِي وَبَيْنَ سَحْرِي وَنَحْرِي13 وَأَنَّ اللَّهَ جَمَعَ بَيْنَ رِيقِي وَرِيقِهِ عِنْدَ مَوْتِهِ دَخَلَ عَلَيَّ عَبْدُ الرَّحْمَنِ وَبِيَدِهِ السِّوَاكُ وَأَنَا مُسْنِدَةٌ14 رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَرَأَيْتُهُ يَنْظُرُ إِلَيْهِ وَعَرَفْتُ أَنَّهُ يُحِبُّ السِّوَاكَ فَقُلْتُ آخُذُهُ لَكَ فَأَشَارَ بِرَأْسِهِ أَنْ نَعَمْ فَتَنَاوَلْتُهُ فَاشْتَدَّ عَلَيْهِ وَقُلْتُ أُلَيِّنُهُ لَكَ15 فَأَشَارَ بِرَأْسِهِ أَنْ نَعَمْ فَلَيَّنْتُهُ فَأَمَرَّهُ وَبَيْنَ يَدَيْهِ رَكْوَةٌ أَوْ عُلْبَةٌ يَشُكُّ عُمَرُ فِيهَا مَاءٌ فَجَعَلَ يُدْخِلُ يَدَيْهِ فِي الْمَاءِ فَيَمْسَحُ بِهِمَا وَجْهَهُ يَقُولُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ إِنَّ لِلْمَوْتِ سَكَرَاتٍ ثُمَّ نَصَبَ يَدَهُ فَجَعَلَ يَقُولُ فِي الرَّفِيقِ الْأَعْلَى حَتَّى قُبِضَ وَمَالَتْ يَدُهُ (بخاري) باب مَرَضِ النَّبِىِّ  صلى الله عليه وسلم وَوَفَاتِهِ-كتاب المغازى
அல்லாஹ் எனக்குத் தந்த அருட்கொடைகளில் ஒன்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எனது  வீட்டில் என்னுடன் தங்கும் நாளில் என்னுடைய கழுத்துக்கும் நெஞ்சுக்குமிடையே தலை சாய்த்த நிலையில் வஃபாத்தானார்கள். அல்லாஹ் அவர்களின் கடைசி நேரத்தில் எனது உமிழ் நீரையும் அவர்களின் உமிழ் நீரையும் ஒன்று சேர்த்தான். அதாவது என் சகோதரர் அப்துர் ரஹ்மான் ரழி என்னிடம் வருகை தந்தார். அவரிடம் ஒரு மிஸ்வாக் குச்சி இருந்தது. நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை என் மடியில் சாய்த்து வைத்திருந்த நிலையில் அவர்கள் அந்த மிஸ்வாக் குச்சியையே பார்ப்பதை நான் கண்டு அவர்கள் மிஸ்வாக் செய்ய விரும்புகிறார்கள் என்பதை நான் புரிந்து கொண்டேன். அதை உங்களுக்கு வாங்கித் தரட்டுமா என்று கேட்ட போது ஆம் என்று தலையசைத்தாரகள். அதை நான் வாங்கித் தந்தேன். ஆனால் புதிய மிஸ்வாக் என்பதால் அவர்களுக்கு அது சிரமமாக இருந்தது. அதை உங்களுக்கு மிருதுவாக்கித் தரட்டுமா என்று கேட்ட போது ஆம் என்று தலையசைத்தாரகள். அதை பற்களால் கடித்து அவர்களுக்கு மிருதுவாக்கித் தந்தேன். அதை வாங்கி பற்களில் தேய்த்தார்கள். அவர்களின் முன்னிலையில் ஒரு குவளை நீர் இருந்த து. அவர்களின் இரு கைகளையும் அதில் நுழைத்து பின்பு அந்தக் கைகளால் முகத்தைத் தடவினார்கள். பிறகு கலிமா சொன்னவர்களாக நிச்சயமாக ஒவ்வொரு மவ்த்துக்கும் சகராத் உண்டு என்று கூறி, தன் கைகளை மேலே தூக்கி உயர்த்தி உயர்ந்த சுவனத்திலே...என்ற வார்த்தையைக் கூறிய நிலையில் அவர்களின் உயிர் பிரிந்தது.அவர்களின் கைகள் தானாக கீழே சரிந்தது.                                                                                         
நாசிக்கு நீர் செலுத்துவதும் நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு கடமையாக்கப் பட்டிருந்தது
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِذَا اسْتَيْقَظَ أُرَاهُ أَحَدُكُمْ مِنْ مَنَامِهِ فَتَوَضَّأَ فَلْيَسْتَنْثِرْ ثَلَاثًا فَإِنَّ الشَّيْطَانَ يَبِيتُ عَلَى خَيْشُومِهِ (بخاري) باب صِفَةِ إِبْلِيسَ وَجُنُودِهِ– كتاب بدء الخلق -(خيشومه ) هو الأنف وقيل أقصى الأنف- 
உங்களில் ஒருவர் தூங்கி எழுந்து உளூச் செய்தால் மூன்று முறை மூக்கை சுத்தம் செய்து கொள்ளட்டும் ஏனெனில் ஷைத்தான் அவருடைய மூக்கந் தண்டின் மீது இரவைக் கழித்திருப்பான்.  
மறைவிட ரோமங்களை சிரைப்பதையும், அக்குள் முடிகளை பிடுங்குவதையும்அல்லாஹ் 
இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு அல்லாஹ்  ஃபர்ளாக்கினான். 
மர்மஸ்தான ரோமங்களை சிறைப்பது என்றும், அக்குள் முடிகளை பிடுங்குவது என்றும் ஹதீஸில் கூறப்பட்டுள்ளது. இது சிறப்பு என்ற அடிப்படையில் கூறப்பட்டதாகும்.  அக்குள் முடிகள் அடிக்கடி வளரும் என்பதால் பிடுங்குவது சிறப்பு. அதனால்  வலி ஏற்படும் என்றிருந்தால் சிரைப்பதும் கூடும்
يُستحب حَلْقُ جَمِيع مَا عَلَى الْقُبُل وَالدُّبُر وَحَوْلهمَا قَالَ وَذَكَرَ الْحَلْق لِكَوْنِهِ هُوَ الْأَغْلَب وَإِلَّا فَيَجُوز الْإِزَالَة بِالنَّوْرَةِ4 وَالنَّتْف وَغَيْرهمَاوَقَالَ النَّوَوِيّ: السُّنَّة فِي إِزَالَة شَعْر الْعَانَة الْحَلْق بِالْمُوسَى3 فِي حَقّ الرَّجُل وَالْمَرْأَة مَعًا- وَالْمُسْتَحَبّ الْبُدَاءَة فِيهِ بِالْيُمْنَى
இமாம் நவவீ ரஹ் அவர்கள் கூறும்போது மர்மஸ்தான முடிகளை கத்தி போன்றதைக் கொண்டு சிரைப்பது சுன்னத் என்றும் அதிலும் வலது புறத்தைக் கொண்டு முதலில் ஆரம்பிப்பது சிறப்பு என்றும் கூறியுள்ளார்கள்
عَنْ يُونُس بْن عَبْد الْأَعْلَى قَالَ دَخَلْت عَلَى الشَّافِعِيّ وَرَجُل يَحْلِق إِبْطه فَقَالَ :إِنِّي عَلِمْت أَنَّ السُّنَّة النَّتْف وَلَكِنْ لَا أَقْوَى عَلَى الْوَجَع-قَالَ الْغَزَالِيّ : هُوَ فِي الِابْتِدَاء مُوجِع وَلَكِنْ يَسْهُل عَلَى مَنْ اِعْتَادَهُ قَالَ: وَالْحَلْق كَافٍ لِأَنَّ الْمَقْصُود النَّظَافَة رواه اِبْن أَبِي حَاتِم فِي "مَنَاقِب الشَّافِعِيّ
யூனுஸ் ரஹ் அவர்கள் கூறினார்கள் நான் இமாம் ஷாஃபிஈ ரஹ் அவர்களைச் சந்திக்கச் சென்றேன். அப்போது அவர்களுக்கு ஒரு நாவிதர் அக்குள் முடிகளை சிரைத்துக் கொண்டிருந்தார். அப்போது இமாம் ஷாஃபிஈ ரஹ் அவர்கள் என்னிடம் கூறினார்கள். அக்குள் முடிகளைப் பிடுங்குவது தான் சுன்னத். இருந்தாலும்  என்னால் வலியைத் தாங்கிக் கொள்ள முடியாது என்பதால் இவ்வாறு செய்கிறேன் என்றார்கள். இமாம் கஸ்ஸாலி ரஹ் அவர்கள் கூறும்போது பிடுங்குவது என்பது ஆரம்பத்தில் சிரமமாக இருந்தாலும் போகப் போக இலகுவாகி விடும். (அடிக்கடி முடிகள் வளராமல் இருக்க பிடுங்குவதே சிறப்பாகும்). இருந்தாலும் சிரைப்பதும் கூட போதுமாகும். காரணம் நமக்கு சுத்தம் தான் நோக்கம். அது எப்படியிருந்தாலும் சரி என்று கூறியுள்ளார்கள். 
மறைவிட ரோமங்களைக் களைவதில் கவனக்குறைவு கணவன் மனைவிக்கு மத்தியிலும் பிரிவை ஏற்படுத்தி விடலாம்
-عَنْ جَابِرِ رض قَالَ كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي غَزَاةٍ فَلَمَّا قَدِمْنَا الْمَدِينَةَ ذَهَبْنَا لِنَدْخُلَ فَقَالَ أَمْهِلُوا حَتَّى نَدْخُلَ لَيْلًا أَيْ عِشَاءً كَيْ تَمْتَشِطَ الشَّعِثَةُ5وَتَسْتَحِدَّ الْمُغِيبَةُ (مسلم)- بَاب كَرَاهَةِ الطُّرُوقِ- كِتَاب الْإِمَارَةِ-النورة : أخلاط من أملاح تستعمل لإزالة الشعر
நாங்கள் நபி ஸல் அவர்களுடன் பிரயாணத்தில் இருந்தோம். நாங்கள் மதீனாவை அடைந்த போது உடனே வீட்டுக்குச் செல்ல நினைத்தோம். ஆனால் நபி ஸல் அவர்கள் கூறினார்கள். சற்று தாமதியுங்கள். நாம் இரவானதும் வீட்டுக்குச் செல்வோம். காரணம் நாம் வந்த தகவல் இப்போதுதான் நம் மனைவிமார்களுக்குத் தெரிந்திருக்கும். இத்தனை நாட்கள் கணவன் இல்லாததால் தன்னை அலங்கரித்துக் கொள்ளாத மனைவிமார்கள் தலை வாரி அலங்கரித்துக் கொள்ளட்டும். மறைவிடங்களில் கத்தியைப் பயன்டுத்தி (சுத்தம் செய்து) கொள்ளட்டும் என்றார்கள் 
 படிப்பினை- நீண்ட நாட்கள் கழித்துத் திரும்பும் கணவன்  திடீரென்று  வீட்டுக்குள் வந்து விட்டால் ஒருவேளை  மனைவி தன்னை சுத்தப் படுத்திக் கொள்ள  நேரம் இல்லாமல் போகலாம்.  அத்துடன் கணவன்  உறவு கொண்டால் அவள் மீது வெறுப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு.  அது பிரிவை ஏற்படுத்தி விடலாம் என்பதால் நபி ஸல் அவ்வாறு கூறினார்கள்.                                       
 சுன்னத் எனும் கத்னாவும் நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு கடமையாக்கப்பட்டதாகும்
عَنْ أَبِى هُرَيْرَةَ رضي الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ  صلى الله عليه وسلم  قَالَ  اخْتَتَنَ إِبْرَاهِيمُ عليه السلام بَعْدَ ثَمَانِينَ سَنَةً  وَاخْتَتَنَ بِالْقَدُومِ (بخاري) باب الْخِتَانِ بَعْدَ الْكِبَرِ وَنَتْفِ الإِبْطِ  -كتاب اللباس- عَنْ عُثَيْمِ بْنِ كُلَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِأَنَّهُ جَاءَ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ قَدْ أَسْلَمْتُ فَقَالَ لَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَلْقِ عَنْكَ شَعْرَ الْكُفْرِ يَقُولُ احْلِقْ -قَالَ الراوي- وأَخْبَرَنِي آخَرُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِآخَرَ مَعَهُ أَلْقِ عَنْكَ شَعْرَ (شِعَار) الْكُفْرِ وَاخْتَتِنْ (ابوداود) بَاب فِي الرَّجُلِ يُسْلِمُ فَيُؤْمَرُ بِالْغُسْلِ- كِتَاب الطَّهَارَةِوَعَنْ أَحْمَد وَبَعْض الْمَالِكِيَّة : يَجِب وَعَنْ أَبِي حَنِيفَة وَاجِب وَلَيْسَ بِفَرْضٍ . وَعَنْهُ سُنَّة يَأْثَم بِتَرْكِهِ .وَذَهَبَ أَكْثَر الْعُلَمَاء وَبَعْض الشَّافِعِيَّة إِلَى أَنَّهُ لَيْسَ بِوَاجِبٍ  (فتح الباري)
கத்னாவை சிறு வயதிலேயே செய்வது சிறந்தது
وَاخْتُلِفَ فِي الْوَقْت الَّذِي يُشْرَع فِيهِ الْخِتَان قَالَ الّمَاوَرْدِيّ: لَهُ وَقْتَانِ وَقْت وُجُوب وَوَقْت اِسْتِحْبَاب فَوَقْت الْوُجُوب الْبُلُوغ وَوَقْت الِاسْتِحْبَاب قَبْله ، وَالِاخْتِيَار فِي الْيَوْم السَّابِع مِنْ بَعْد الْوِلَادَة وَقِيلَ مِنْ يَوْم الْوِلَادَة فَإِنْ أَخَّرَ فَفِي الْأَرْبَعِينَ يَوْمًا ، فَإِنْ أَخَّرَ فَفِي السَّنَة السَّابِعَة ، فَإِنْ بَلَغَ وَكَانَ نِضْوًا نَحِيفًا يُعْلَم مِنْ حَاله أَنَّهُ إِذَا اُخْتُتِنَ تَلِفَ سَقَطَ الْوُجُوب . وَيُسْتَحَبّ أَنْ لَا يُؤَخَّر عَنْ وَقْت الِاسْتِحْبَاب إِلَّا لِعُذْرٍ وَقَالَ أَبُو الْفَرَج السَّرَخْسِيّ: فِي خِتَان الصَّبِيّ وَهُوَ صَغِير مَصْلَحَة مِنْ جِهَة أَنَّ الْجِلْد بَعْد التَّمْيِيز يَغْلُظ وَيَخْشُن فَمِنْ ثَمَّ جَوَّزَ الْأَئِمَّة الْخِتَان قَبْل ذَلِكَ 
وَقَالَ مَالِك : يَحْسُن إِذَا أَثْغَرَ أَيْ أَلْقَى ثَغْره وَهُوَ مُقَدَّم أَسْنَانه ، وَذَلِكَ يَكُون فِي السَّبْع سِنِينَ وَمَا حَوْلهَا ، وَعَنْ اللَّيْث يُسْتَحَبّ مَا بَيْن سَبْع سِنِينَ إِلَى عَشْر سِنِينَ ،قَالَ الْوَلِيد فَسَأَلْت مَالِكًا عَنْهُ فَقَالَ : لَا أَدْرِي ، وَلَكِنَّ الْخِتَان طُهْرَة فَكُلَّمَا قَدَّمَهَا كَانَ أَحَبّ إِلَيَّ . وَأَخْرَجَ الْبَيْهَقِيُّ حَدِيث جَابِر: أَنَّ إِبْرَاهِيم عَلَيْهِ السَّلَام خَتَنَ إِسْحَاق وَهُوَ اِبْن سَبْعَة أَيَّام .(فتح الباري)
பொருள்- 5,வெளியூர் சென்ற கணவனை பிரிந்திருந்த மனைவி தன்னை அலங்கரித்து, தன் மறைவிட ரோமங்களை நீக்குவதற்காக6,கலிமா விரல் 7,நடுவிரல் 8,மோதிர விரல் 9,சுண்டு விரல் 10,பெருவிரல் 11,செம்பு 12,புறம் பேசுபவர்கள் 13,என் கழுத்துக்கும், நெஞ்சுக்குமிடையில் 14,நெஞ்சில் சாய்த்து 15,மிருதுவாக்கித் தரட்டுமா ?

வியாழன், ஜூன் 05, 2025

ஹஜ்,உம்ரா,

 

 





 

صفة حجة النبي صلى الله عليه وسلம்

"ஏற்றுக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜின் கூலி சுவர்க்கத்தைத்தவிர வேறில்லை" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அதனை நீங்கள் அடைய வேண்டுமானால் இரண்டு நிபந்தனைகளை, பரிபூரணப்படுத்தியே ஆக வேண்டும். முதலாவது இக்லாஸ் (அல்லாஹ்வுக்காக ஹஜ்ஜை நிறைவேற்றுவது) இரண்டாவது நபி (ஸல்) அவர்கள் செய்ததைப் போன்றே ஹஜ்ஜை நிறைவேற்றுவது. ஹஜ்ஜைப்பற்றிய சரியான தெளிவு இல்லாமல் இன்று பல ஹாஜிகள், ஹஜ் கிரியைகளை தவறான முறையில் செய்கின்றார்கள். நபியவர்கள் செய்த ஹஜ்ஜை சுருக்கமாகச் சொல்லி விளங்கவைப்பதினால் இத்தவறுகளை நீக்கலாம் என்ற நன்னோக்கோடு இச்சிறு பிரசுரம் வெளியிடப்பட்டுள்ளது.


என்னிடமிருந்து உங்களின் ஹஜ் கடமைகளை எடுத்துக் கொள்ளுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆகவே இதைப்படித்து நபியவர்களின் ஹஜ்ஜைப் போன்றே நீங்களும் செய்யுங்கள். அல்லாஹ் நமது ஹஜ்ஜை ஏற்று "அன்று பிறந்த பாலகனை" போன்றும், ஹஜ்ஜின் கூலியாகிய சுவர்க்கத்தைப் பெற்றவர்களாகவும் ஆக்கியருள்வானாக.


உம்ராச் செய்யும் முறை

உம்ரா செய்வதற்கு முன் குளித்து நறுமணம் பூசிக்கொண்டு இஹ்ராம் உடையை அணிந்த பின் "லப்பைக்க உம்ரத்தன்" என்று உரிய எல்லையிலிருந்து (மீக்காத்திலிருந்து) நிய்யத்து வைத்துக் கொண்டு மக்காவிற்குப் புறப்பட வேண்டும். (இலங்கை, இந்தியாவிலிருந்து வருபவர்களின் எல்லை யலம்லம்) இஹ்ராம் அணியும் எல்லைக்குள் வசிப்பவர்கள் அவர்கள் வசிக்கும் இடத்திலிருந்தே இஹ்ராம் அணிந்து நிய்யத்து வைத்துக் கொள்ள வேண்டும். இஹ்ராம் உடை என்பது ஆண்களுக்கு இரண்டு தைக்கப்படாத துணிகளை அணிவதாகும். ஒரு துணியை உடுத்துக்கொள்வது, மற்ற துணியால் தன் மேனியை போர்த்திக் கொள்வது. பெண்களுக்கு தனி இஹ்ராம் உடை கிடையாது. அவர்கள் தங்களுடைய அங்கங்கள் மறையும் அளவுக்கு இஸ்லாம் அனுமதித்த எந்த ஆடையையும் அணிந்து கொள்ளலாம். மக்கா செல்லும் வரை தல்பியா சொல்லிக் கொண்டு செல்வது சுன்னத்தாகும்.

 

لَبَّيْكَ أَللَّهُمَّ لَبَّيْكَ ، لَبَّيْكَ لاَ شَرِيْكَ لَكَ لَبَّبيْكَ، إِنَّ الْحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ وَالْمُلْكُ، لاَشَرِيْكَ لَكَ.


லைப்பைக், அல்லாஹும்ம லைப்பைக், லப்பைக் லா ஷரீக்க லக்க லப்பைக், இன்னல் ஹம்த வன்னிஃமத லக வல் முல்க், லாரீக்க லக்.

ஹரத்திற்குள் நுழைவதற்கு முன் தல்பியாவை நிறுத்திக் கொண்டு வலது காலை முன் வைத்து பின் வரும் துஆவை ஓத வேண்டும்.

 

 بِسْمِ اللهِ وَالصَّلاَةُ وَالسَّلاَمُ عَلَى رَسُوْلِ اللهِ أَللَّهُمَّ إفْتَحْ لِيْ أَبْوَابَ رَحْمَتِكَ.


பிஸ்மில்லாஹ், வஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா ரசூலில்லாஹ், அல்லாஹும்மஃப்தஹ்லி அப்வாப ரஹ்மத்திக.

 

ஹரத்திற்குள் நுழைந்ததும் முதலில் தவாபை ஆரம்பிக்க வேண்டும். தவாப் என்பது கஃபத்துல்லாவை ஏழு முறை பரிபூரணமாகச் சுற்றி வருவதற்கு சொல்லப்படும். தவாபுக்கு ஒளு அவசியமாகும். தவாபை ஆரம்பிப்பதற்கு முன் ஆண்கள் தங்களின் வலது தோள் புத்தை திறந்துவிட வேண்டும். அதாவது மேனியை போர்த்தியிருக்கும் துணியின் நடுப்பகுதியை வலது கக்கத்தின் கீழ் வைத்துக் கொண்டு அத்துணியின் இரு ஓரங்களையும் இடது தோள் மீது போட வேண்டும். அதன் பின் உம்ராவிற்குரிய தவாபை நிறைவேற்றுகின்றேன் என்ற எண்ணத்தோடு "ஹஜருல் அஸ்வத்" கல் பொருத்தப்பட்டிருக்கும் மூலையிலிருந்து உம்ராவின் தவாபை ஆரம்பிக்க வேண்டும். தவாபை ஆரம்பிக்கும் போது நான்கு முறைகளில் ஒன்றைக் கொண்டு ஆரம்பிக்க வேண்டும்.


1- முடியுமாக இருந்தால் ஹஜருல் அஸ்வத் கல்லை முத்தமிடுவது.
2- அதற்கு முடியாவிட்டால் கையினால் ஹஜருல் அஸ்வத் கல்லை தொட்டு கையை முத்தமிடுவது.
3- அதற்கும் முடியாவிட்டால் ஹஜருல் அஸ்வத் கல்லை, தடிபோன்றதால் தொட்டு அதை முத்தமிடுவது.
4- அதற்கும் முடியாவிட்டால் ஹஜருல் அஸ்வத் கல்லுக்கு நேராக நின்று தன் வலது கையை அதன்பக்கம் உயர்த்திக்காட்டி "அல்லாஹுஅக்பர்" என்று சொல்வது. (இப்போது கையை முத்தமிடக்கூடாது).

 

இந்நான்கில் முடியுமான ஒன்றைச் செய்துவிட்டு தவாபை ஆரம்பிக்க வேண்டும். ஹஜருல் அஸ்வத் கல்லை முத்தமிட வேண்டுமென்பதற்காக மற்றவர்களை இடித்துக் கொண்டு செல்வதை ஹாஜிகள் தவிர்த்துக்கொள்ள வேண்டும். ஹஜருல் அஸ்வத் கல்லை முத்தமிடுவது சுன்னத்தாகும். மற்றவர்களுக்கு தொல்லை கொடுப்பது ஹராமாகும். ஹராத்தைச் செய்து சுன்னத்தை நிறைவேற்ற வேண்டுமா? குறிப்பாக பெண்கள் இதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

 

கஃபத்துல்லாவோடு சேர்ந்து ஓர் அரைவட்டம் இருக்கின்றது, அதையும் சேர்த்து தவாப் செய்ய வேண்டும், காரணம் அதுவும் கஃபத்துல்லாவின் எல்லைதான். ருக்னுல் யமானியை, (ஹஜருல் அஸ்வத் கல் மூலைக்கு முன்னுள்ள மூலையை) தொட வாய்ப்புக் கிடைத்தால் தொட்டுக்கொள்ள வேண்டும். அதை முத்தமிடுவதோ அல்லது தொட்டு கையை முத்தமிடுவதோ அல்லது தொட வாய்ப்புக் கிடைக்காத நேரத்தில் அதன் பக்கம் கையை உயர்த்திக் காட்டி அல்லாஹுஅக்பர் என்று கூறுவதோ கூடாது. முந்திய மூன்று சுற்றுக்களிலும் "ரம்ல்" செய்வது சுன்னத்தாகும். "ரம்ல்" என்பது கால் எட்டுக்களை கிட்ட வைத்து வேகமாக நடப்பதற்குச் சொல்லப்படும். மற்ற நான்கு சுற்றுக்களையம் சாதாரணமான நடையில் நடப்பது. "ரம்ல்" செய்வது ஆண்களுக்கு மாத்திரம்தான் சுன்னத்தாகும். பெண்களுக்கல்ல.


ஒவ்வொரு சுற்றுக்களுக்கும் மத்தியில் குறிப்பிட்ட துஆக்கள் எதுவும் இல்லை, விரும்பிய துஆக்களைக் கேட்கலாம். தஸ்பீஹ், திக்ர் செய்தல், குர்ஆன் ஓதுதல் போன்றவைகளை, செய்து கொள்ளலாம். ருக்னுல் யமானியிலிருந்து ஹஜருல் அஸ்வத் கல் பொருத்தப்பட்டிருக்கும் மூலை வரையுள்ள இடத்தில்

 

رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَاحَسَنَةًوَفِي اْلآخِرَةِ حَسَنَةً وَقِنَاعَذَابَ النَّارِ

 

"ரப்பனா ஆத்தினா ஃபித்துன்யா ஹஸனத்தன் வஃபில் ஆகிரத்தி ஹஸனத்தன் வகினா அதாபன்னார்"

 

என்ற துஆவை ஓதுவது சுன்னத்தாகும். ஒவ்வொரு சுற்றை ஆரம்பிக்கும் போதும் ஹஜருல் அஸ்வத் கல்லுக்கு நேராக வரும்போது தக்பீர் (அல்லாஹுஅக்பர் என்று) கூறுவது சுன்னத்தாகும். தவாப் செய்து முடிந்ததும் திறந்த வலது தோள்புத்தை மூடிக்கொள்ள வேண்டும். பின்பு மகாமுல் இப்ராஹிமுக்குப் பின் சென்று தவாபுடைய சுன்னத் இரு ரக்அத்துகளை தொழ வேண்டும். முந்திய ரக்அத்தில் சூரத்துல் பாத்திஹாவுக்குப்பின் சூரத்துல் காஃபிரூனும் (குல்யாஅய்யுஹல் காஃபிரூன்) இரண்டாவது ரக்அத்தில் சூரத்துல் பாத்திஹாவுக்குப்பின் சூரத்துல் இக்லாஸையும் (குல்ஹுவல்லாஹுஅஹது) ஓதுவது சுன்னத்தாகும். முகாமுல் இபுறாஹிமுக்குப்பின் இட நெருக்கடியாக இருந்தால் கிடைக்கும் இடத்தில் தொழுதுகொள்ளலாம்.


ஸஃயி


ஸஃயி என்பது ஸஃபா மர்வா மலைகளுக்கு மத்தியில் ஏழு சுற்றுக்கள் சுற்றுவதாகும். தவாப் முடிந்த பின் ஸஃயி செய்வதற்காக ஸஃபா மலைக்குச் செல்லவேண்டும். ஸஃபா மலையடிவாரத்தை அடைந்ததும்

 إِنَّ الصَّفَا وَالْمَرْوَةَ مِنْ شَعَائِرِ اللهِ


என்னும் ஆயத்தை நபி (ஸல்) அவர்கள் ஓதிவிட்டு அல்லாஹ் எதைக்கொண்டு ஆரம்பித்தானோ அதைக் கொண்டு நாமும் ஆரம்பிப்போம் என்று சொல்லி ஸஃபா மலை மீது கஃபத்துல்லாவை பார்க்கும் அளவுக்கு ஏறி கிப்லாவை முன்னோக்கி அல்லாஹ்வை ஒருமைப்படுத்தி பெருமைப்படுத்தி அவனைப்புகழ்ந்து

 

لاَ إِلهَ إِلاَّ اللهُ وَحْدَهُ لاَ شَرِيْكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ يُحْيِيْ وَيُمِيْتُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيْرٍ، لاَ إِلهَ إِلاَّ اللهُ وَحْدَهُ، أَنْجَزَ وَعْدَهُ، وَنَصَرَ عَبْدَهُ، وَهَزَمَ اْلأَحْزَابَ وَحْدَهُ


லாஇலாஹா இல்லல்லாஹு வஹ்தஹு லாரீக்க லஹ், லஹுல் முல்க்கு வலஹுல் ஹம்து யுஹ்யீ வயுமீத்து வஹுவ அலா குல்லி ஷைய்யின் கதீர். லாஇலாஹா இல்லல்லாஹுவஹ்தஹ், அன்ஜஸ வஃதஹ், வநஸர அப்தஹ், வஹஸமல் அஹ்சாப வஹ்தஹ்.


என்னும் திக்ருகளை ஓதி இடையே துஆக்களும் செய்தார்கள். இப்படி மூன்று தடவைகள் செய்தார்கள். (அபூதாவூத், நஸாயி, இப்னுமாஜா, தாரமி, தப்ரானி)

 

இந்த திக்ருகளை நாமும் ஓதி இவைகளுக்கு இடையே நமக்காக துஆக்கள் செய்வதும் சுன்னத்தாகும். இன்று சிலர் தொழுகைக்குத் தக்பீர் கூறுவது போல் இரு கைகளையும் கஃபத்துல்லாவின் பக்கம் உயர்த்திக் காட்டிவிட்டுச் செல்கின்றார்கள். இது சுன்னத்தான முறையல்ல. துஆவுக்கு மாத்திரமே கையை உயர்த்த வேண்டும். பின்பு ஸஃபா மலையிலிருந்து இறங்கி மர்வாவை முன்னோக்கிச் செல்ல வேண்டும், முதல் பச்சை விளக்கு பொருத்தப்பட்ட இடத்திலிருந்து மறு பச்சை விளக்கு பொருத்தப்பட்ட இடம் வரைக்கும் சிறிது வேகமாக ஓட வேண்டும். அதன்பிறகு சாதாரணமாக நடக்க வேண்டும். இப்படி வேகமாக ஓடுவது ஆண்களுக்கு மட்டும்தான் பெண்களுக்கல்ல. மர்வா மலையை அடைந்ததும் அதன்மீது ஏறி கிப்லாவை முன்னோக்கி ஸஃபா மலையில் செய்தது போன்றே செய்வது சுன்னத்தாகும். இத்தோடு ஒரு சுற்று முடிவுறுகின்றது. பின்பு மர்வாவிலிருந்து ஸஃபா வரைக்கும் செல்வது, இங்கும் இரு பச்சை விளக்குகளுக்கு மத்தியில் சற்று வேகமாக ஓடுவது சுன்னத்தாகும். ஸஃபா மலையை அடைந்தால் இரண்டாவது சுற்று முடிவுறுகிறது. இப்படி ஏழு சுற்றுக்கள் சுற்ற வேண்டும், மர்வாவில்தான் கடைசிச் சுற்று முடிவுறும். ஒவ்வொரு சுற்றுக்கும் இடையில் தனிப்பட்ட பிரார்த்தனைகள் இல்லை.

 

விரும்பிய பிரார்த்தனைகள், திக்ருகள், குர்ஆன் போன்றவைகளை ஓதலாம். இப்படிப்பட்ட சிறப்பான இடங்களில் மனமுருக அல்லாஹ்விடத்தில் பிரார்த்தியுங்கள். தவாப் மற்றும் ஸஃயியை கீழ் தளத்தில் செய்ய முடியாவிட்டால் (கூட்டமாக இருந்தால்) மேல்மாடியில் செய்து கொள்ளலாம்.

 

ஸஃயின் ஏழு சுற்றுக்களும் முடிவடைந்தபின் ஆண்கள் மொட்டை அடித்துக் கொள்ள வேண்டும், இதுவே சிறந்த முறையாகும். மொட்டை அடிக்காதவர்கள் முடியை குறைத்துக் கொள்ள வேண்டும். முடியை குறைத்துக் கொள்வதென்பது இரண்டு அல்லது மூன்று இடங்களில் சில முடிகளை மட்டுமே கத்தரிப்பது என்பதல்ல, மாறாக தலையில் உள்ள எல்லா முடிகளும் கொஞ்ச அளவுக்காவது கத்தரிக்கப்பட வேண்டும், இதுவே நபிவழியாகும். பெண்கள் தங்களின் தலைமுடியின் நுனியில் விரல் நுனியளவுக்கு வெட்டிக் கொள்ள வேண்டும், இதுவே அவர்களுக்கு சுன்னத்தான முறையாகும், இத்துடன் உம்ராவின் செயல்கள் பரிபூரணமடைந்துவிட்டன. அல்லாஹ் நமது உம்ராவையும் மற்ற அமல்களையும் ஏற்றுக் கொள்வானாக.
 

குறிப்பு:- தவாஃபிலும் ஸஃயிலும் ஏழு சுற்றுக்களையும் ஒரே நேரத்தில் சுற்ற முடியாதவர்கள் இடையில் களைப்பாறிவிட்டு பின்பு மீதமுள்ள சுற்றுக்களைத் தொடருவதில் தவறில்லை.


ஹஜ் செய்யும் முறைகள்


ஹஜ்ஜின் வகைகள் மூன்று
 

1. ஹஜ்ஜுத்தமத்துஃ

2. ஹஜ்ஜுல் கிரான்

3. ஹஜ்ஜுல் இஃப்ராத்


ஹஜ்ஜுத் தமத்துஃ :-


ஹஜ்ஜுடைய மாதத்தில் (வ்வால், துல்கஃதா, துலஹஜ்) ஹஜ்ஜுக்கான உம்ராவைச் செய்து அதே வருடத்தில் ஹஜ்ஜையும் செய்வதற்குச் சொல்லப்படும். ஹஜ்ஜுக்குச் செல்லும்போது குர்பானி கொடுக்கும் பிராணியை, தன்னுடன் கூட்டிக் கொண்டு செல்லாதவர்களுக்கு இதுவே சிறந்த முறையாகும். ஹஜ்ஜுத்தமத்துஃ செய்பவர் உம்ராவை முடித்துவிட்டால் ஹஜ்ஜுக்காக நிய்யத் வைக்கும் வரை, இஹ்ராமினால் ஹராமாக்கப்பட்டிருந்த அனைத்தும் ஹலாலாகிவிடும், துல்ஹஜ் 8-ஆம் நாள் காலையில் தங்கியிருக்கும் இடத்தில் இருந்தே ஹஜ்ஜுக்கு நிய்யத் வைத்துக் கொண்டு இஹ்ராமை அணிந்து மினாவிற்குச் செல்ல வேண்டும்.


ஹஜ்ஜுல் கிரான் :-


ஹஜ்ஜுடைய மாதத்தில் ஹஜ்ஜுக்கும் உம்ராவுக்கும் சேர்த்து ஒரே நிய்யத்து வைப்பது. யார் தன்னுடன் குர்பானிக்குரிய பிராணியை, கொண்டு செல்கின்றார்களோ அவர்களுக்கு இதுவே சிறந்த முறையாகும். இந்த முறையில்தான் நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுசெய்தார்கள்.


ஹஜ்ஜுல் இஃப்ராத் :-


இம்முறையில் குர்பானி கடமையில்லை. ஹஜ்ஜுடைய மாதத்தில் ஹஜ்ஜுக்கு மட்டும் நிய்யத்து வைப்பதாகும்.

 

கிரான் மற்றும் இஃப்ராத் முறைகளில் ஹஜ் செய்பவர்கள் மக்கா வந்ததும் தவாப் செய்ய வேண்டும். இதற்கு தவாபுல் குதூம் என்று சொல்லப்படும். தவாபுல் குதூமுக்குப் பின் ஸஃயி செய்பவர்கள் 10-ஆம் நாள் தவாபுல் இஃபாலாவுக்குப் பின் ஸஃயி செய்யத்தேவையில்லை. இப்போது ஸஃயி செய்யாதவர்கள் தவாபுல் இஃபாலாவுக்குப்பின் ஸஃயி செய்தே ஆகவேண்டும்.


துல்ஹஜ் பிறை 8-ஆம் நாள்


மேலே கூறப்பட்ட மூன்று முறைகளில் ஹஜ் செய்பவர்களும் துல்ஹஜ் பிறை எட்டாம் நாள் மினாவிற்குச் செல்ல வேண்டும். மினாவில் லுஹர், அஸர், மஃரிப், இஷா, ஸுப்ஹுத் தொழுகைகளை உரிய நேரத்தில் தொழ வேண்டும். நான்கு ரக்அத்துத் தொழுகைகளை இரண்டாக சுருக்கித் தொழவேண்டும். இப்படித்தான் நபி ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்கள் தொழுதார்கள்.


துல்ஹஜ் பிறை 9-ஆம் நாள்


துல்ஹஜ் பிறை ஒன்பதாம் நாள் சூரியன் உதித்தபின் அரஃபா செல்ல வேண்டும். அரஃபா சென்றதும் அரஃபா எல்லையை உறுதிப் படுத்தியபின் மஃரிப் தொழுகையின் நேரம் வரும் வரை அங்கேயே தங்கி இருப்பது அவசியமாகும். லுஹருடைய நேரம் வந்ததும் பாங்கும், இகாமத்தும் கூறி லுஹரை இரண்டு ரக்அத்தாக சுருக்கித் தொழ வேண்டும். லுஹர் தொழுகை முடிந்ததும் இகாமத் கூறி அஸர் தொழுகையையும் இரண்டு ரக்அத்தாக சுருக்கி லுஹருடன் முற்படுத்தித் தொழ வேண்டும். முன் பின் சுன்னத்துக்கள் இல்லை. தொழுகை முடிந்ததும் ஓர் இடத்தில் அமர்ந்து வணக்கத்தில் ஈடுபடவேண்டும். அரஃபாவுடைய தினம் மிக, சிறப்பான தினமாகும். ஹஜ் என்றால் அரஃபாவில் தங்குவதுதான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஹாஜிகளின் இத்தியாகத்தைப் பார்த்து மலக்குகளிடம் அல்லாஹ் பெருமைப்படும் நாளாகும். ஆகவே, அங்குமிங்கும் அலைந்து திரியாமல் உருக்கமான முறையில் உங்களின் ஈருலக வெற்றிக்காகவும், உலக முஸ்லிம்களுக்காகவும் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யுங்கள். அந்நாளில் செய்யும் வணக்கங்களில் மிக மேலானது துஆச் செய்வதாகும்.
நபி (ஸல்) வஸல்லம் அவர்கள் (தொழுகையை முடித்து விட்டு,) அரஃபா மலையடிவாரத்தில் நின்றவர்களாக, கிப்லாவை முன்னோக்கி சூரியன் மறையும் வரை துஆச்செய்தார்கள். (முஸ்லிம்)
அந்நாளில் செய்யும் திக்ருகளில் மிகச் சிறந்தது பின்வரும் திக்ராகும். நானும் எனக்கு முன்வந்த நபிமார்களும் கூறியவையில் மிகச் சிறந்தது

 

لااِلَهَ إِلاَّ اللهُ وَحْدَهُ لاَشَرِيْكَ لَهُ ، لَهُ الْمُلْكُ، وَلَهُ الْحَمْدُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءِ قَدِيْرٍ .


லாஇலாஹா இல்லல்லாஹு வஹ்தஹு லாரீக்க லஹ், லஹுல் முல்க்கு வலஹுல் ஹம்து வஹுவ அலா குல்லி ஷைய்யின் கதீர். என நபி (ஸல்) வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

 

அரஃபாவுடைய எல்லைக்குள் எங்கும் தங்கிஇருக்கலாம். ஜபலுர் ரஹ்மாவிற்க்குப் போய் அங்கிருந்து பிரார்த்தனை செய்யவேண்டும் என்று நினைத்து, பல சிரமங்களுக்கு மத்தியில் அங்கு சென்று அன்றைய நாளையே வீணாக்கிவிடாமல் கிடைத்த இடத்தில் அமர்ந்து, ஒவ்வொரு நொடிப்பொழுதிலும் முடியுமான அமல்களைச் செய்யுங்கள். நபி (ஸல்) அவர்கள் ஜபலுர்ரஹ்மா மலைமீது ஏறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. "நான் இந்த இடத்தில்தான் தங்கினேன், அரஃபாவின் எல்லைக்குள் எங்கும் தங்கலாம்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (அபூதாவூத், அஹ்மத்)


நபி (ஸல்) அவர்களே அரஃபாவின் எல்லைக்குள் எங்கு தங்கினாலும் ஒரே நன்மைதான் என்று சொல்லியிருக்கும் போது எதற்காக ஜபலுர்ரஹ்மாவிற்குச் செல்ல வேண்டும்? ஹாஜிகள் இதை கவனத்தில் கொள்வது அவசியம்.


குறிப்பு : யார் அரஃபா எல்லைக்கு வெளியில் தங்கி இருக்கின்றாரோ அவருடைய ஹஜ்ஜு ஏற்கப்படாது, இன்னும் அரஃபா தினத்தன்று ஹாஜிகள் நோன்பு நோற்கக்கூடாது.
முஸ்தலிஃபாவில் இரவில் தங்குவது


ஒன்பதாம் நாளின் சூரியன் மறைந்ததும் தல்பியா கூறியவர்களாக அமைதியான முறையில் முஸ்தலிஃபா செல்ல வேண்டும். முஸ்தலிஃபா சென்றதும் ஓர் பாங்கு இரண்டு இகாமத்தில் மக்ரிபையும் இஷாவையும் சேர்த்து இஷாவை இரண்டு ரகஅத்தாக சுருக்கித் தொழ வேண்டும். முன் பின் சுன்னத்துக்கள் இல்லை. சுப்ஹுவரை அங்கு தங்குவது அவசியமாகும். முஸ்தலிஃபாவிற்குள் எங்கும் தங்கலாம்.
நான் இங்குதான் தங்கினேன், முஸ்தலிஃபாவிற்குள் எங்கும் தங்கலாம் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

 

நோயாளிகள், பெண்கள் நடு இரவுக்குப்பின் அவர்கள் விரும்பினால் மினா செல்லலாம். நபி (ஸல்) அவர்கள் இதை அனுமதித்துள்ளார்கள்.


சுபஹுடைய நேரம் வந்ததும் சுபஹுத் தொழுகையை தொழுதுவிட்டு சூரியனின் மஞ்சள் நிறம் வரும் வரை அல்லாஹ்வை, போற்றிப்புகழ்ந்து அவனைப் பெருமைப்படுத்தக்கூடிய திக்ருகளைக் கூறுவதும்; கிப்லாவை முன்னோக்கி துஆச் செய்வதும் சுன்னத்தாகும்.


நபி (ஸல்) அவர்கள் மஸ்அருல் ஹராம் என்னும் மலைமீது ஏறி கிப்லாவை முன்னோக்கி நின்று சூரியனின் மஞ்சள் நிறம் வரும் வரை நின்ற நிலையில் பிரார்த்தனை செய்தார்கள்.(அபூதாவூத்)
இன்னும் ஓர் அறிவிப்பில்:-


அல்லாஹ்வைப் போற்றிப்புகழ்ந்து அல்லாஹுவைப் பெருமைப்படுத்தி, ஒருமைப்படுத்தும் திக்ருகளை ஓதினார்கள்.


துல் ஹஜ் பிறை 10-ஆம் நாள்


சூரியன் உதயமாகுவதற்கு முன் முஸ்தலிஃபாவிலிருந்து புறப்பட்டு தல்பியா கூறியவர்களாக மினா வர வேண்டும். 10-ஆம் நாள் மினாவில் செய்யும் நான்கு அமல்கள்.
1- ஜம்ரத்துல் அகபாவிற்கு மாத்திரம் ஏழு கற்களை வீசுவது.
2- குர்பானி கொடுப்பது.
3- முடி எடுப்பது.
4- தவாபுல் இஃபாலா செய்வது.


சொல்லப்பட்ட வரிசைப்பிரகாரம் செய்வதே சுன்னத்தாகும். ஒன்றைவிட மற்றொன்றை முற்படுத்தியோ பிற்படுத்தியோ செய்தாலும் தவறில்லை. பத்தாம் நாள் நபி (ஸல்) அவர்களிடம் பல ஸஹாபாக்கள் வந்து ஒன்றை முற்படுத்தி செய்துவிட்டேன் அல்லாஹ்வின் தூதரே என்று கேட்கும் போதெல்லாம் பரவாயில்லை என்றே நபி (ஸல்) அவர்கள் விடையளித்தார்கள்.


கல் எறிவது


பத்தாம் நாள் எறியும் கற்களை காலை சூரிய உதயத்திலிருந்து ளுஹர் நேரத்துக்குள் எறிய வேண்டும். இந்த நேரத்திற்குள் எறிய முடியாதவர்கள் இதற்குப் பின்னும் எறியலாம்.


பத்தாம் நாள் ஒரு நபித்தோழர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே! மாலையான பின்புதான் நான் கல் எறிந்தேன் என்றார், பரவாயில்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி) எறியும் கல்லின் அளவு சுண்டுவிரலால் வீசும் கல் அளவிற்கு இருக்க வேண்டும். அதை ஒவ்வொரு கற்களாக "அல்லாஹுஅக்பர்" என்று சொல்லிக் கொண்டு எறிய வேண்டும். ஏழு கற்களையும் ஒரே தடவையில் எறியக்கூடாது.


"சுண்டு விரலால் வீசக்கூடிய கற்களைப் போன்று ஏழு கற்களை நபி (ஸல்) அவர்கள் வீசினார்கள். ஒவ்வொரு கற்களை வீசும் போதும் தக்பீர் கூறினார்கள்" என ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (அபூதாவூத், பைஹகி)


கல் எறிவதற்கு முடியாத நோயாளி மற்றும் பலவீனர்களின் கல்லை இன்னும் ஒருவர் அவருக்குப் பகரமாக எறியலாம். ஏறியக்கூடியவர் அவ்வருடம் ஹஜ்ஜு செய்யக்கூடியவராக இருக்க வேண்டும். அவருடைய கல்லை எறிந்த பின்புதான் மற்றவரின் கல்லை எறிய வேண்டும். தனக்கு கல் எறிய சக்தி இருக்கும் போது பிறரை எறியச் சொல்லக்கூடாது.


குர்பானி கொடுப்பது


தமத்துஃ மற்றும் கிரான் முறைப்பிரகாரம் ஹஜ் செய்பவர்கள் கல் எறிந்ததற்குப் பிறகு குர்பானி கொடுக்க வேண்டும். அதாவது ஒட்டகம், மாடு, ஆடு இவைகளில் ஒன்றை அல்லாஹ்வுக்காக அறுப்பது. ஏழு பேர் சேர்ந்து ஓர் ஒட்டகத்தை அல்லது ஒரு மாட்டை அறுக்கலாம். ஆடு கொடுப்பதாக இருந்தால் ஒருவருக்கு ஒன்று வீதம் கொடுக்க வேண்டும். இஃப்ராது முறையில் ஹஜ் செய்தவருக்கு குர்பானி கொடுக்க வேண்டிய அவசியமில்லை. குர்பானியை மினாவிலும், மக்காவின் எல்லைக்குள் எங்கும் அறுக்கலாம், ஆனால் ஹரம் எல்லைக்கு வெளியில் அறுக்கக்கூடாது. "நான் இந்த இடத்தில்தான் குர்பானி கொடுத்தேன். மினாவில் எங்கும் குர்பானி கொடுக்கலாம். மக்காவின் தெருக்கள் எல்லாம் நடக்கும் பாதையும் குர்பானி கொடுக்கும் இடமுமாகும்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத், அபூதாவூத்)


குர்பானி இறைச்சியிலிருந்து அதைக் கொடுத்தவரும் உண்ணலாம்.


குர்பானி கொடுக்கும் இறைச்சியிலிருந்து மினாவுடைய மூன்று நாட்களை (பிறை 11,12,13) தவிர (வேறு நாட்களில்) நாங்கள் உண்ணாமலிருந்தோம். நீங்களும் (அந்த இறைச்சியைச்) சாப்பிட்டு, சேமித்தும் வைத்துக் கொள்ளுங்கள் என நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு அனுமதித்த போது நாங்களும் சாப்பிட்டோம், சேமித்தும் வைத்தோம். மதீனாவிற்கும் அவ்விறைச்சியை கொண்டு செல்லும் அளவு எங்களிடம் இருந்தது என ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (அஹ்மத்)
குர்பானி கொடுப்பதற்கு வசதியற்றவர் ஹஜ்ஜுடைய நாட்களில் மூன்று நோன்புகளும், ஊர்; திரும்பிய பின் ஏழு நோன்புகளும் நோற்க வேண்டும்.


தலை முடி எடுப்பது


குர்பானி கொடுத்த பின் தலை முடியை எடுக்க வேண்டும். (முடி எடுக்கும் முறை முன்னால் சொல்லப்பட்டுவிட்டது) முடியை எடுத்ததும் இஹ்ராமிலிருந்து நீங்கிக் கொள்ளலாம். அதாவது கணவன் மனைவி தொடர்பைத்தவிர இஹ்ராத்தினால் தடுக்கப்பட்டிருந்தவைகள் எல்லாம் ஆகுமாகிவிடும். தவாபுல் இஃபாலாவைச் (ஹஜ்ஜுடைய தவாபை) செய்துவிட்டால் கணவன் மனைவி உறவும் ஆகுமாகிவிடும்.


தவாபுல் இபாலா


தலை முடி எடுத்த பின் குளித்து மணம்பூசி தனது வழமையான ஆடையை அணிந்து கொண்டு தவாபுல் இஃபாலா செய்வதற்காக மக்கா செல்ல வேண்டும். தமத்துஆன முறையில் ஹஜ் செய்பவர்கள் தவாபுல் இஃபாலாவை முடித்துவிட்டு ஹஜ்ஜுக்கான சஃயும் செய்ய வேண்டும். கிரான் மற்றும் இஃப்ராதான முறையில் ஹஜ் செய்பவர்கள் மக்கா வந்தவுடன் செய்த தவாபுல் குதூமுக்குப் பின் சஃயி செய்திருந்தால் இப்போது தவாபுல் இஃபாலா மாத்திரம் செய்தால் போதும், சஃயி செய்யத் தேவையில்லை. தவாபுல் குதூமுக்குப் பின் சஃயி செய்யவில்லையென்றால் இப்போது (தவாபுல் இஃபாலாவுக்குப் பின்) சஃயி செய்தே ஆக வேண்டும். தவாப் மற்றும் சஃயை முடித்ததும் மினா சென்று 11-ஆம் இரவில் மினாவில் தங்குவது அவசியமாகும்.


துல் ஹஜ் பிறை 11-ஆம் நாள்


11-ஆம் நாள் ளுஹருடைய நேரம் வந்ததிலிருந்து சூரியன் மறைவதற்கு முன் மூன்று ஜம்ராக்களுக்கும் முறையே ஏழு கற்கள் வீதம் எறிய வேண்டும். முதலில் சிறிய ஜம்ராவிற்கும், இரண்டாவது நடு ஜம்ராவிற்கும், மூன்றாவது பெரிய ஜம்ராவிற்கும் எறிய வேண்டும். முதலாவது ஜம்ராவிற்கு கல் எறிந்த பின் வலது பக்கம் சற்று முன்னால்; சென்று கிப்லாவை முன்னோக்கி துஆச் செய்வது சுன்னத்தாகும். இரண்டாவது ஜம்ராவிற்கு கல் எறிந்த பின் இடது பக்கம் சற்று முன்னால் சென்று கிப்லாவை முன்னோக்கி துஆச் செய்வது சுன்னத்தாகும். மூன்றாவது ஜம்ராவிற்க்குப்பின் துஆச் செய்வது சுன்னத்தல்ல.


துல் ஹஜ் பிறை 12-ஆம் நாள்


12-ஆம் இரவும் மினாவில் தங்குவது அவசியமாகும். 12-ஆம் நாளும் 11-ஆம் நாளைப் போன்றே மூன்று ஜம்ராக்களுக்கும் ளுஹர் தொழுகையின் நேரத்திற்குப் பின் கல் எறிய வேண்டும். 12-ஆம் நாளோடு ஹஜ்ஜுக் கடமையை முடித்துவிட்டுச் செல்ல விரும்புபவர்கள் சூரியன் மறைவதற்கு முன் மினா எல்லையை விட்டும் வெளியாகிவிட வேண்டும். 13-ஆம் நாளும் மினாவில் தங்க விரும்புபவர்கள் 13-ஆம் இரவும் மினாவில் தங்கிவிட்டு 13-ஆம் நாள் ளுஹர் நேரத்திற்க்குப் பின் மூன்று ஜம்ராக்களுக்கும் கல் எறிந்துவிட்டு மக்கா செல்ல வேண்டும். 10,11,12,13-ஆம் நாட்களில் மினாவில் ஒவ்வொரு தொழுகையையும் உரிய நேரத்தில் தொழ வேண்டும். நான்கு ரக்அத்துத் தொழுகைகளை இரண்டு ரக்அத்துக்களாக, சுருக்கித் தொழ வேண்டும். மாதவிடாய் மற்றும் பிரசவத் தீட்டு ஏற்பட்ட பெண்கள் தவாப் மற்றும் தொழுகையைத்தவிர ஹஜ்ஜுடைய மற்ற எல்லா அமல்களையும் செய்யலாம். சுத்தமானதும் விடுபட்ட தவாபை நிறைவேற்ற வேண்டும்.

தவாபுல் விதா


ஹஜ் கடமையை முடித்துவிட்டு தன்வீடு செல்ல விரும்புபவர்கள் கடைசியாகச் செய்யும் அமல் தவாபுல் விதாவாகும். தவாபுல் விதா என்பது கஃபத்துல்லாவிலிருந்து விடை பெற்றுச் செல்லும் தவாபாகும். அதுவே ஹஜ் செய்பவரின் கடைசி அமலாகும். தவாபுல் இஃபாலாவை முடித்த ஒரு பெண் மாதவிடாய் மற்றும் பிரசவ இரத்தத்தின் காரணமாக தவாபுல் விதாவைச் செய்ய முடியாவிட்டால் அப்பெண்ணிற்கு மாத்திரம் தவாபுல் விதாவை விடுவதற்கு அனுமதி உண்டு. மற்ற எல்லா ஹாஜிகளும் அதை நிறைவேற்றுவது அவசியமாகும். மக்காவிலுள்ள எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு கடைசியாக தவாபுல் விதாவைச் செய்ய வேண்டும். தவாபுல் விதா முடிந்ததும் பயணத்தைத் தொடங்க வேண்டும். இத்துடன் ஹஜ் கடமை முடிவடைகின்றது. சிலர் தவாபுல் விதாவை செய்து விட்டு கல் எறிகின்றார்கள். இது முற்றிலும் தவறாகும். அவர் மீண்டும் தவாபுல் விதா செய்ய வேண்டும். இன்னும் சிலர் தவாபுல் விதாவை முடித்துவிட்டுச் செல்லும் போது கஃபாவை பார்த்துக் கொண்டே பின்னோக்கி வருகின்றார்கள், இதுவும் தவறாகும். அல்லாஹ் நம் அனைவரின் ஹஜ் கடமைகளையும் ஏற்று அன்று பிறந்த பாலகனைப் போன்று தன் தாயகம் திரும்ப நம் அனைவருக்கும் வாய்ப்பளிப்பானாக!
இஹ்ராம் அணிந்தவர் தவிர்க்க வேண்டியவைகள்


1-உடலிலுள்ள முடியையோ, நகங்களையோ எடுப்பது.

2-உடல், ஆடைகள், உணவு, குடிபானம் ஆகியவைகளில் மணம் பூசுவது.
3-பூமியிலுள்ள உயிர்ப்பிராணிகளைக் கொல்வது அல்லது வேட்டையாடுவது, விரட்டுவது.

4-இஹ்ராமிலும், இஹ்ராமில்லாத நிலையிலும் ஹரமின் எல்லைக்குள் உள்ள மரம் செடிகளை வெட்டுவது.

5-தவறி விடப்பட்ட பொருட்களை எடுப்பது. ஆனால் உரியவர்களிடம் கொடுக்க முடியுமாக இருந்தால் மட்டும் எடுக்கலாம்.

6-இஹ்ராம் அணிந்தவர் திருமணம் செய்யவோ, அல்லது முடித்து கொடுக்கவோ, தனக்கோ அல்லது பிறருக்கோ திருமணம் பேசவோ கூடாது. இன்னும் பெண்ணுடன் உடலுறவு கொள்வது, காம உணர்வோடு கலந்துரையாடுவதும் கூடாது.


ஹஜ்ஜுடைய நேரத்தில் உடலுறவு கொண்டால் அந்த ஹஜ்ஜு சேராது. அதற்கு பரிகாரமாக ஓர் குர்பானி கொடுப்பதுடன் அடுத்த வருடம் மீண்டும் ஹஜ்ஜு செய்ய வேண்டும்.


ஆண்கள் மீது மாத்திரம் விலக்கப்பட்டவைகள்
தலையை, துணி போன்றவைகளால் மறைப்பது, சட்டையையோ அல்லது தையல் போடப்பட்ட எந்தவித உடைகளையோ உடம்பில் எந்த இடத்திலாவது அணிவது.
பெண்கள் மீது மாத்திரம் விலக்கப்பட்டவைகள்
இஹ்ராமுடைய நிலையில் பெண்கள் கையுறை அணிவது, முகத்தை புர்காவால் மூடுவது கூடாது. ஆனால் அன்னிய ஆண்களுக்கு முன் இருக்கும் போது முகத்தை மூடிக்கொள்ள வேண்டும்.


அர்கானுல் ஹஜ் (ஹஜ்ஜின் கடமைகள்)


இவைகளைச் செய்யாமல் ஹஜ்ஜுநிறைவேறாது.
 

1-நிய்யத் வைப்பதோடு இஹ்ராம் உடை அணிதல்.

2-அரஃபாவில் தங்குதல்.

3-தவாபுல் இஃபாலா செய்தல்.

4-ஸஃபா மர்வா மலைக்கு மத்தியில் ஹஜ்ஜுடைய ஸஃயி செய்தல்.


ஹஜ்ஜுடைய வாஜிபுகள் (அவசியமானவைகள்)


(1) நபி (ஸல்) அவர்கள் கூறிய எல்லையிலிருந்து இஹ்ராம் அணிதல்.

(2) சூரியன் மறையும் வரை அரஃபாவில் தங்கி இருத்தல்.

(3) 10-ஆம் இரவு முஸ்தலிஃபாவில் தங்குதல்.

(4) 10-ஆம் நாள் காலையில் பெரிய ஜம்ராவிற்கு ஏழு கற்களும், 11, 12-ஆம் நாட்கள் மூன்று ஜம்ராக்களுக்கும் முறையே ஏழேழு கற்கள் வீதம் எறிதல், 13-ஆம் நாள் மினாவில் தங்குபவர்கள் 13-ஆம் நாளும் கல்லெறிய வேண்டும்.

(5) ஆண்கள் முடியை மழிப்பது அல்லது கத்தரிப்பது. பெண்கள் முடியின் நுனியில் விரலின் நுனியளவு கத்தரிப்பது.

(6) 11, 12-ஆம் இரவில் மினாவில் தங்குவது. (13-ஆம் நாள் விரும்பியவர்கள் மினாவில் தங்கலாம். இந்த இரவு தங்குவது அவசியமில்லை, ஆனால் சிறந்தது.)

 

(ஹஜ் செய்யும் போது) கெட்ட செயல்களில் ஈடுபடாமலும், தன் மனைவியோடு இல்லற உறவில் ஈடுபடாமலும் யார் ஹஜ் செய்கின்றாரோ அவர் அன்று பிறந்த பாலகரைப்போன்று (தன் தாயகம்) திரும்பிச் செல்வார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்

 

நன்றி: C.O.C.G வெளியீடு, ஜித்தா


தொடர்புடைய சுட்டிகள்:

bullet

ஹஜ் உம்ரா ஜியாரத் - ஆய்வும் தெளிவும் (16 தலைப்புகளில்)

bullet

துல்ஹஜ் மாதத்தின் முந்தைய 10 நாட்களின் சிறப்புகளும் உழ்ஹிய்யாவின் சட்டங்களும்


ஹஜ் பக்கம் மெய்நிகர் ஹஜ்

ஹஜ் மற்றும் உம்ராவின் சடங்குகளை எவ்வாறு நிறைவேற்றுவது

ஷேக் முஹம்மது அஸ்-சாலிஹ் அல்-உதைமீன் மூலம்

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்




புனித யாத்திரை முறைகள் | உம்ரா | ஹஜ் | நபியின் மசூதிக்குச் செல்வது |
முதற்கட்ட அறிவிப்பு | ஆண்களுக்கான தேவைகள் | சொற்களஞ்சியம்


முன்னுரை

பிரபஞ்சத்தின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். இறுதி நபிமார்கள் மற்றும் தூதர்களான முஹம்மது (ஸல்) அவர்கள் மீதும், அவரது குடும்பத்தினர் மற்றும் மதிப்புமிக்க தோழர்கள் மீதும் சாந்தியும் ஆசீர்வாதமும் உண்டாகட்டும்.

ஹஜ் என்பது சிறந்த வழிபாட்டு முறைகளில் ஒன்றாகும், மேலும் இது மிகவும் உன்னதமான செயல்களில் ஒன்றாகும், ஏனெனில் இது அல்லாஹ் முஹம்மது (ஸல்) அவர்களை அனுப்பிய இஸ்லாத்தின் தூண்களில் ஒன்றாகும். அது இல்லாமல் ஒரு அடியானின் மதம் முழுமையடையாது.

கீழ்க்கண்டவை உண்மையாக இருக்கும்போது மட்டுமே ஒரு வழிபாட்டு முறை ஏற்றுக்கொள்ளப்படும்.

1. மறுமையின் மீதுள்ள ஆசையுடன் ஒருவர் அதை அல்லாஹ்வுக்கு மட்டுமே அர்ப்பணிக்கிறார். மனிதர்களிடையே காணப்பட வேண்டும் என்ற நோக்கத்திலோ அல்லது உலக லாபத்திற்காகவோ இதைச் செய்ய முடியாது.

2. ஒருவர் நபி (ஸல்) அவர்களின் முன்மாதிரியை வார்த்தைகளிலும் செயல்களிலும் பின்பற்றுகிறார். சுன்னாவைப் பற்றிய அறிவைத் தவிர இதை அடைய முடியாது.

புனித யாத்திரையின் வடிவங்கள்

ஹஜ்ஜின் மூன்று வடிவங்கள் உள்ளன:
தமத்து'-இஃப்ராத்-கிரான்

தமத்து': ஒரு யாத்ரீகர் ஹஜ் மாதங்களில் மட்டுமே உம்ராவுக்காக இஹ்ராம் அணிவார், அதாவது அவர் மக்காவை அடைந்ததும், உம்ராவுக்காக தவாஃப் மற்றும் சயீ செய்கிறார். பின்னர் அவர் தனது தலைமுடியை மழித்துக் கொள்கிறார் அல்லது வெட்டுகிறார். துல்-ஹஜ் மாதத்தின் எட்டாவது தர்வியா நாளில், அவர் ஹஜ்ஜுக்கு மட்டும் தனது இஹ்ராம் அணிந்து அதன் அனைத்து தேவைகளையும் நிறைவேற்றுகிறார்.

இஃப்ராத்: ஒரு யாத்ரீகர் ஹஜ்ஜுக்கு மட்டும் இஹ்ராம் அணிவார். அவர் மக்காவை அடைந்ததும், அவர் தனது வருகைக்காக தவாஃப் செய்கிறார், ஹஜ்ஜுக்கு சயீ செய்கிறார். அவர் இஹ்ராமிலிருந்து விலகாததால், அவர் தனது தலைமுடியை மொட்டையடிக்கவோ அல்லது வெட்டவோ இல்லை. அதற்கு பதிலாக, பெருநாள் நாளில் ஜம்ரா அல்-அகாபாவில் கல்லெறிந்த பிறகு வரை அவர் இஹ்ராமில் இருக்கிறார். ஹஜ்ஜுக்கு தவாஃப் செய்த பிறகு வரை ஹஜ்ஜுக்கு தனது சயீயை ஒத்திவைக்க அவருக்கு அனுமதிக்கப்படுகிறது.

குரான்: ஒரு யாத்ரீகர் உம்ரா மற்றும் ஹஜ் இரண்டிற்கும் இஹ்ராம் அணிவார் அல்லது அவர் உம்ராவிற்கு முதலில் இஹ்ராம் அணிவார், பின்னர் ஹஜ்ஜுக்கான தவாஃப் செய்வதற்கு முன் ஹஜ்ஜுக்கான நோக்கங்களைச் செய்கிறார். இஃப்ராத் செய்பவர் மீதான கடமைகள், குரான் செய்யும் ஒருவர் அறுக்க வேண்டும், ஆனால் முந்தையது அவ்வாறு செய்ய கடமைப்படவில்லை என்பதைத் தவிர. மூன்று வடிவங்களில் சிறந்தது 'தமத்து' ஆகும். நபி (ஸல்) அவர்கள் தம்மைப் பின்பற்றுபவர்களைச் செய்ய ஊக்குவித்த வடிவம் இது. ஒரு யாத்ரீகர் கிரான் அல்லது இஃப்ராத் செய்ய எண்ணங்களைச் செய்தாலும், அவர் தனது நோக்கங்களை 'தமத்து' ஆக மாற்ற அனுமதிக்கப்படுகிறார்; அவர் தவாஃப் மற்றும் சயீ செய்த பிறகும் இதைச் செய்யலாம்.

நபி (ஸல்) அவர்கள் தனது தோழர்களுடன் பிரியாவிடை ஹஜ் ஆண்டில் தவாஃப் மற்றும் சயீ செய்தபோது, ​​பலியிடும் விலங்குகளைக் கொண்டு வராத அனைவரும் ஹஜ்ஜுக்கான நோக்கங்களை உம்ராவிற்கான நோக்கங்களாக மாற்றிக்கொள்ளவும், தங்கள் தலைமுடியை வெட்டவும், ஹஜ் வரை இஹ்ராமிலிருந்து விலகவும் கட்டளையிட்டார்கள். "நான் பலியிடும் விலங்குகளைக் கொண்டு வரவில்லை என்றால், நான் உங்களுக்குக் கட்டளையிட்டதைச் செய்திருப்பேன்" என்று கூறினார்கள்.

உம்ரா

ஒரு யாத்ரீகர் உம்ராவிற்கு சடங்கு ரீதியாக தூய்மையாக இருக்க விரும்பினால், அவர் தனது ஆடைகளைக் களைந்துவிட்டு, பாலியல் அசுத்தத்திற்குப் பிறகு, வசதிப்பட்டால், குளிக்க வேண்டும். அவர் தனது தலை மற்றும் தாடியில் சிறந்த எண்ணெயைக் கொண்டு வாசனை திரவியம் பூச வேண்டும். இஹ்ராமுக்குப் பிறகு அதில் எஞ்சியிருப்பதில் எந்தத் தீங்கும் இல்லை.

மாதவிடாய் உள்ள பெண்கள் மற்றும் பிரசவத்திற்குப் பிந்தைய இரத்தப்போக்கு உள்ளவர்கள் உட்பட, ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்கும் இஹ்ராமுக்காக குளிப்பது சுன்னத்தாகும். மாதவிடாய் உள்ளவர்கள் அல்லது பிரசவத்திற்குப் பிந்தைய இரத்தப்போக்கு உள்ளவர்கள் தவிர, குளித்துவிட்டு தன்னைத் தயார்படுத்திக் கொண்ட பிறகு, ஒரு யாத்ரீகர், நேரம் வந்துவிட்டால், கடமையான தொழுகையைத் தொழுகிறார். இல்லையெனில், ஒவ்வொரு முறை வுழு செய்யும்போதும் செய்யப்படும் இரண்டு சுன்னத் ரக்அத்களைத் தொழுவதன் மூலம் அவர் தனது நோக்கத்தை நிறைவேற்றுகிறார்.

அவர் தனது தொழுகையை முடித்ததும், "உம்ராவுக்காக நான் இங்கே இருக்கிறேன், இதோ நான் இருக்கிறேன், ஓ அல்லாஹ், இதோ நான் இங்கே இருக்கிறேன். இதோ நான் இங்கே இருக்கிறேன். உங்களுக்கு எந்த துணையும் இல்லை. இதோ நான் இங்கே இருக்கிறேன். நிச்சயமாக எல்லா புகழும், அருளும், ஆட்சியும் உமக்கே, உங்களுக்கு எந்த துணையும் இல்லை" என்று கூற வேண்டும். [தல்பீயா].

இதைச் சொல்லும்போது ஒரு ஆண் தன் குரலை உயர்த்துகிறான், ஒரு பெண் தன் அருகில் இருப்பவருக்கு மட்டுமே அவள் சத்தம் கேட்கும் வகையில் அதைச் சொல்கிறாள்.

இஹ்ராம் கட்டிய ஒருவர் முடிந்தவரை அடிக்கடி தல்பீயா சொல்ல வேண்டும், குறிப்பாக காலங்களும் இடங்களும் மாறும்போது. உதாரணமாக: பயணத்தின் போது இறங்கும்போது அல்லது ஏறும்போது அல்லது பகல் அல்லது இரவு நெருங்கும்போது. அவர் அல்லாஹ்விடம் அவனது திருப்தியையும், சொர்க்கத்தையும் கேட்க வேண்டும், மேலும் நரக நெருப்பிலிருந்து அல்லாஹ்வின் கருணையில் அடைக்கலம் தேட வேண்டும்.

உம்ராவின் போது இஹ்ராம் அணிந்ததிலிருந்து தவாஃப் செய்யும் வரை தல்பீயா சொல்ல வேண்டும். ஹஜ்ஜின் போது இஹ்ராம் அணிந்ததிலிருந்து பெருநாள் தினத்தன்று ஜம்ரா அல்-அகாபாவில் கல்லெறியும் வரை தல்பீயா சொல்ல வேண்டும்.

ஒரு யாத்ரீகர் புனித மசூதிக்குள் நுழையும் போது, ​​அவர் தனது வலது காலை முதலில் நீட்டி, "அல்லாஹ்வின் பெயரால், அல்லாஹ்வின் தூதர் மீது சாந்தியும் ஆசீர்வாதமும் உண்டாகட்டும். யா அல்லாஹ், என் பாவங்களை மன்னித்து, உன் கருணையின் கதவுகளை எனக்குத் திறந்து விடு. நான் எல்லாம் வல்ல அல்லாஹ்விடமும், அவனது மகத்தான முகத்திலும், அவனது நித்திய ஆதிக்கத்திலும் சபிக்கப்பட்ட சாத்தானிடமிருந்து பாதுகாவல் தேடுகிறேன்" என்று கூறுவார்.

அவர் கருங்கல்லை நெருங்கி, அதைத் தனது வலது கையால் தொட்டு முத்தமிடுகிறார். இது சாத்தியமில்லை என்றால், அவர் கருங்கல்லை நோக்கி அதை சுட்டிக்காட்ட வேண்டும்.

தள்ளியும் தள்ளியும், தீங்கு விளைவித்தும், மற்றவர்களால் தீங்கு விளைவிக்காமலும் இருப்பது நல்லது.

ஒரு யாத்ரீகர் கல்லைத் தொடும்போது, ​​பின்வருமாறு கூற வேண்டும்: "அல்லாஹ்வின் பெயரால், அல்லாஹ் மிகப் பெரியவன். ஓ அல்லாஹ், உன் மீது நம்பிக்கை கொண்டு, உன் வேதத்தின் மீது நம்பிக்கை கொண்டு, உன் மீது விசுவாசம் கொண்டு, உன் நபி முஹம்மது (ஸல்) அவர்களின் வழியைப் பின்பற்றி."

ஒரு யாத்ரீகர் கஅபாவை இடதுபுறமாக வைத்துக்கொண்டு நடக்க வேண்டும். அவர் ருக்ன் அல் யமானியை அடையும் போது அதைத் தொட வேண்டும், ஆனால் முத்தமிடக்கூடாது, மேலும் "எங்கள் இறைவா, எங்களுக்கு இம்மையில் நன்மையையும் மறுமையிலும் நன்மையையும் வழங்குவாயாக, நரக நெருப்பின் தண்டனையிலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக. யா அல்லாஹ், இம்மையிலும் மறுமையிலும் மன்னிப்பும் ஆரோக்கியமும் உன்னிடம் நான் வேண்டுகிறேன்."

ஒவ்வொரு முறை அவர் கருங்கல்லை கடக்கும்போதும், "அல்லாஹ் மிகப் பெரியவன்" என்று சொல்ல வேண்டும்.

அவரது தவாஃபின் மீதமுள்ள நேரத்தில், அவர் தனக்குப் பிடித்தமான பிரார்த்தனைகள், அல்லாஹ்வைப் பற்றிக் குறிப்பிடுதல், குர்ஆனை ஓதுதல் போன்றவற்றைச் சொல்லலாம். ஏனெனில், தவாஃப், சயீ மற்றும் ஜம்ராவில் கல்லெறிதல் ஆகியவை அல்லாஹ்வைப் பற்றிக் குறிப்பிடுவதற்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளன.

இந்த தவாஃபின் போது ஒரு மனிதன் இரண்டு விஷயங்களைச் செய்ய வேண்டும்:

1. தவாஃபின் ஆரம்பம் முதல் இறுதி வரை அல்-ல்த்தெபா'. அல்-ல்த்தெபா' என்றால் ஒருவரின் ரெடாவின் நடுப்பகுதியை அவரது வலது கையின் கீழும் அதன் முனைகளை அவரது இடது தோள்பட்டையின் மீதும் வைப்பதாகும்.

அவர் தவாஃப் செய்து முடித்ததும், அவர் தனது ரெடாவை அதன் அசல் நிலைக்குத் திரும்பச் செய்யலாம், ஏனெனில் இத்தெபாவுக்கான நேரம் தவாஃபின் போது மட்டுமே.

2. முதல் மூன்று சுற்றுகளில் அல்-ரம்ல். அல்-ரம்ல் என்றால் சிறிய அடிகள் மூலம் ஒருவரின் வேகத்தை அதிகரிப்பதாகும். ஒரு யாத்ரீகர் தனது கடைசி நான்கு சுற்றுகளில் சாதாரண வேகத்தில் நடக்க வேண்டும்.

அவர் ஏழு தவாஃப் சுற்றுகளை முடித்ததும், மகாம் இப்ராஹிமை அணுகி, "மேலும் நீங்கள் ஆபிரகாமின் இடத்தை தொழுகைக்கான இடமாக எடுத்துக் கொள்ளுங்கள்" என்று ஓதுகிறார். அத்தியாயம் 2, வசனம் 125 [2:125].

அவர் மகாம் இப்ராஹிமுக்கு அருகில், முடிந்தவரை வசதியாக இரண்டு குறுகிய ரக்அத்களைத் தொழுகிறார். முதல் ரக்அத்தில் அவர் சூரா அல்-காஃபிரூனையும் [அத்தியாயம் 109] இரண்டாவது ரக்அத்தில் சூரா அல்-ல்க்லாஸையும் [அத்தியாயம் 112] ஓதுகிறார்.

இரண்டு ரக்அத்களை முடித்ததும், அவர் கருங்கல்லுக்குத் திரும்பிச் சென்று, வசதிப்பட்டால் அதைத் தொட வேண்டும். அவர் மேஸாவுக்குச் சென்று, அஸ்-சஃபாவை நெருங்கும்போது, ​​"நிச்சயமாக அஸ்-சஃபாவும் அல்-மர்வாவும் அல்லாஹ்வின் ஆலயங்களில் ஒன்றாகும்" என்று ஓத வேண்டும் [2:158].

அவர் கஅபாவைப் பார்க்கும் வரை அஸ்-சஃபாவில் ஏறுகிறார். கஅபாவை நோக்கி கைகளை உயர்த்தி, அல்லாஹ்வைப் புகழ்ந்து, தனக்குப் பிடித்த பிரார்த்தனைகளைச் செய்கிறார். நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு பிரார்த்தனை செய்தார்கள்: "அல்லாஹ்வைத் தவிர வேறு தெய்வம் இல்லை", இடையில் மூன்று முறை பிரார்த்தனை செய்தார்கள்.

அவர் அஸ்-சஃபாவிலிருந்து இறங்கி, பச்சை நிற அடையாளத்தை அடையும் வரை வழக்கமான வேகத்தில் அல்-மர்வாவை நோக்கிச் செல்கிறார். பின்னர் அவர் அடுத்த பச்சை நிற அடையாளத்தை அடையும் வரை வேகமாக ஓட வேண்டும். அவர் வழக்கமான வேகத்தில் அல்-மர்வாவை நோக்கித் தொடர்கிறார். அவர் அதை அடைந்ததும், அவர் அதில் ஏறி, கிப்லாவை நோக்கிச் சென்று, கைகளை உயர்த்தி, அஸ்-சஃபாவில் சொன்னதை மீண்டும் கூறுகிறார். அவர் அல்-மர்வாவிலிருந்து இறங்கி, நடக்க வேண்டிய இடத்தில் நடக்கவும், ஓட வேண்டிய இடத்தில் ஓடவும் கவனமாக இருக்கிறார்.

அவர் ஏழு சுற்றுகள் முடியும் வரை இந்த நடைமுறையைத் தொடர்கிறார். அஸ்-சஃபாவிலிருந்து அல்-மர்வாவுக்குச் செல்வது ஒரு சுற்று, திரும்பி வருவது மற்றொரு சுற்று.

அவர் தனது சயீயின் போது தான் விரும்பிய பிரார்த்தனைகள், குர்ஆன் ஓதுதல் மற்றும் அல்லாஹ்வைப் பற்றி நினைவு கூர்தல் போன்றவற்றை ஓதலாம்.

சயீயை முடிக்கும்போது அவர் தலையை மொட்டையடித்துக் கொள்கிறார். ஒரு பெண் தனது தலைமுடியை விரல் நுனி நீளத்திற்கு வெட்டுகிறார்.

Shaving is preferable, except when Hajj is near and there isn't sufficient time for hair to grow back. In this case it's best to clip so that hair will remain for shaving during Hajj.

With that, Umrah is completed. and a pilgrim is free to dress in other clothing, wear perfume and engage in marital relations, etc.

The Hajj

In the forenoon of the eighth day of Dhul-Hijja, a pilgrim purifies himself once again by bathing as he did before Umrah in the place in which he is staying, if convenient. He puts on his Ihram and says: " Here I am for Hajj. Here I am, oh Allah, here I am. Here I am. You have no partner. Here I am. Surely all praise, grace and dominion is yours, and you have no partners."

If he fears that something will prevent him from completing his Hajj he should make a condition when he makes his intentions, saying: " If I am prevented by any obstacle my place is wherever I am held up." If he has no such fear, he doesn't make this condition.

A pilgrim goes to Mina and there prays Dhuhr, Asr, Magrib, Isha and Fajr, shortening his four unit prayers so as to make them two units each, without combining them.

When the sun rises, he goes to Arafah and there prays Dhuhr and Asr combined at the time of Dhuhr, making each one two units. He remains in Namira Mosque until sunset if possible. He remembers Allah and makes as many supplications as possible while facing the Qibla.

The Prophet (may the peace and blessing of Allah be upon him) prayed thus: "There is no Deity but Allah alone. He has no partner. All dominion and praise are His and He is powerful over all things.

If he grows weary it is permissible for him to engage in beneficial conversation with his companions or reading what he can find of beneficial books, especially those concerning Allah's grace and abundant gifts. This will strengthen his hope in Allah.

He should then return to his supplications and be sure to spend the end of the day deep in supplication because the best of supplication is the supplication of the day of Arafah.

At sunset he goes from Arafah to Muzdalifah and there prays Magrib, Isha, and Fajr. If he is tired or has little water, it is permissible for him to combine Magrib and Isha. If he fears that he will not reach Muzdalifah until after midnight, he should pray before he reaches it for it is not permissible to delay prayer until after midnight. He remains there, in Muzdalifah, making supplications and remembering Allah till just before sunrise.

If he is weak and cannot handle the crowd during Ar-Ramy, it is permissible for him to go to Mina at the end of the night to stone the Jamrah before the arrival of the crowd.

Near sunrise, a pilgrim goes from Muzdalifah to Mina. Upon reaching it he does the following:

a) He throws seven consecutive pebbles at Jamrah Al-Aqaba which is the closest monument to Makkah, saying Greatest," as he : "Allah is the throws each pebble.

b) He slaughters the sacrificial animal, eats some of it, and gives some to the poor. Slaughter is obligatory on the Mutamati and Qiran.

c) He shaves or clips his hair; shaving is preferable. A woman clips her hair the length of a finger tip.

These three should be done in the above order if convenient, but there is no restriction if one precedes another.

With that, one is allowed to come out of Ihram. He can wear other clothing and do everything that was lawful before Ihram except engaging in marital relations.

He goes to Makkah to perform Tawaf Al-lfadha and Sa'yi, also for Hajj. It is Sunnah to put perfume on before going to Makkah.

With the completion of this Tawaf and Sa'yi, a pilgrim is allowed to do everything that was lawful before Ihram, including engaging in marital relations.

After performing Tawaf and Sa'yi, he returns to Mina to spend the nights of the eleventh and twelfth days there.

He stones the three Jamrah in the afternoon of both the eleventh and twelfth days. He starts with the first Jamrah, which is furthest from Makkah, then the middle one, and lastly Jamrah Al-Aqaba. Each one should be stoned with seven consecutive pebbles accompanied by Takbeer. He stops after the first and middle Jamrah to make supplications facing the Qibla. It is not permissible to stone before noon on these two days. It is best to walk to the Jamrah, but riding is permissible.

If he is in a hurry after stoning on the twelfth day, he leaves Mina before sunset. But if he wishes to prolong his stay, which is best, he spends the night of the thirteenth in Mina and stones that afternoon in the same manner as on the twelfth day.

When he is ready to return to his country, he makes Tawaf Al-Wadaa, which is seven circuits around the Ka'bah. Menstruating women and women experiencing postnatal discharge are not obligated to perform Tawaf Al-Wadaa.

Visiting The Prophet's Mosque

1. A pilgrim goes to Madina before or after Hajj with the intention of visiting the Prophet's mosque and praying in it. Prayer there is better than a thousand prayers elsewhere except in the Holy Mosque in Makkah.

2. Upon reaching the mosque he prays two Rakaas of salutation or performs any obligatory prayer that is due.

3. He goes to the grave of the Prophet (may the peace and blessings of Allah be upon him) and he stands before it. He greets him saying the " May the peace, mercy, and blessings of Allah be upon you, oh Prophet. May Allah grant you a good reward on behalf of your people. "

He takes a step or two to his right to position himself before Abu-Bakr and greets him saying : "May the peace, mercy, and blessing of Allah be upon you. oh Abu-Bakr, Caliph of the Messenger of Allah. May Allah be pleased with you and grant you a good reward on behalf of Muhammad's people."

Then he takes a step or two to his right to position himself before Umar and greets him saying: " May the peace, mercy and blessings of Allah be upon you, oh Umar, Prince of the believers. May Allah be pleased with you and grant you a good reward on behalf of Muhammad's people."

4. In a state of purity, he goes to pray in Qubaa Mosque.

5. He goes to Al-Baqee to visit Uthman's grave (may Allah be pleased with him). He stands before it and greets him saying: "May the peace, mercy and blessing of Allah be upon you,

oh Uthman Prince of the believers. May Allah be pleased with you and grant you a good reward on behalf of Muhammad's people." He greets any other Muslims in Al-Baqee.

6. He goes to Uhud and visits the grave of Hamza (may Allah be pleased with him) and the other martyrs there with him. He greets them and preys to Allah to grant them forgiveness, mercy, and pleasure.

Preliminary Notification l

The following is incumbent upon the Muhrim for Hajj or Umrah:

1. That he be committed to Allah's religious obligations upon him such as prayer in its time (in congregation for men).

2. That he avoids what Allah has prohibited such as obscenity, inequity, and disobedience. if anyone undertakes Hajj therein. Let there be no obscenity, nor wickedness, nor wrangling during Hajj ~ [2:197].

3. That he avoids harming the Muslims with words or actions within the Masha'ir or elsewhere.

4. That he avoids all of the restrictions of Ihram:

a. He shouldn't cause the loss of any of his hair or nails. A prick by a thorn and the like is unobjectionable, even if there is bleeding.

b. He shouldn't perfume himself, his clothing, his food or his drink after entering Ihram. He should also abstain from cleansing himself with scented soap. There is no harm in what remains of the effect of perfume used prior to Ihram.

c. He shouldn't touch, kiss, etc. his spouse out of passion and, even worse, shouldn't have sexual intercourse.

e. He shouldn't be wed or propose to a woman for himself or others. f. He shouldn't wear gloves, although there is no harm in wrapping the hands in cloth. This ruling goes for both men and women.

Requirements for Men:

a) He cannot cover his head with something that touches it, although there is no harm in the use of an umbrella, the roof of a car or tent for shade. There is also no harm in carrying his baggage atop his head. b) He cannot wear a shirt, turban, hooded cloak trousers, or shoes. Only if he is unable to obtain an Ezar or sandals can he wear trousers or shoes.

c) He cannot wear anything with the same qualities of the above mentioned such as an Abea', Qubaa, hat, undershirt, etc.

It is permissible for him to wear sandals, rings, glasses, a hearing aid. a watch, worn on his wrist or hung from his neck, or a speech aid. It is permissible for him to cleanse himself with unscented cleansers and to wash and scratch his head and body, even if some of his hair falls unintentionally. In such a case there is no obligation on him because of it.

A woman cannot wear a Niqab or Burqa'. The Sunnah is for her to uncover her face except if men not related to her might see her, in which case it is obligatory for her to cover her face during Ihram and otherwise.

Allah is the giver of success. May His blessings be upon our Prophet Muhammad and all of his family and companions.

By the needy before Allah, Muhammad As-Salih Al-Uthaimeen


Glossary


Abaya': cloak like, woolen wrap.
Abu Bakr: first Muslim Caliph.
Al-Baqee': a place in Madina.
Al-ldhtebaa:placing the middle of the Reda' under the right arm and the ends of it over the left shoulder during Tawaf.
Al-lkhlas: Chapter 112 (Purity of Faith).
Al-Kafirun: Chapter 109 of the Qur'an ( Those who reject Faith).
AlMarwah: name of the hillock where a Muslim begins Sa'yi.
Al-Raml: walking quickly but with small steps during the first three circuits of Tawaf.
Arafah: the most important stop during Hajj, located beyond Muzdalifah.
Ar-Ramy-- The Stoning.
As-Safaa: name of the hillock where a Muslim ends his last lap of Sa'yi.
Asr: the afternoon prayer.
Burqa': a face veil like a Niqab.
Dhul-Hijja: the twelfth month of the Islamic calendar.
Dhuhr: the noon prayer.
Eid: celebration for Muslims.
Ezaar: lower cloth of Ihram.
Fajr: dawn prayer.
Hajj: official Muslim pilgrimage to Makkah.
Hamza: one of the Prophet's uncles and a martyr during the battle of Uhud.
Ifraad: isolated form of Hajj.
Ihram: the ceremonial state of making Hajj or the Hajj garments themselves. Isha night prayer.
Jamrah: Monument in Mina.
Jamrah Al-Aqaba: the monument closest to Makkah.
Ka'bah: the house of Allah in the Holy Mosque in Makkah.
Magrib: dusk prayer.
Maqam Ibrahim: the stepping stone of the prophet Abraham.
Mes'aa: the stretch between As-Safaa and Al-Marwah.
Masha'ir: ceremonial shrines.
Mina: one of the ceremonial shrines, a valley near Makkah.
Muhammad-- the last of the prophets, the prophet of Islam.
Muhrim: a person in Ihram.
Mutamati: a pilgrim performing Hajj Tamattu'.
Muzdalifah: one of the ceremonial shrines of Hajj, between Mina and Arafah.
Namira: mosque in Mina.
Niqab: a face veil revealing the eyes through slashes
Qiran: a pilgrim performing Hajj Qiran.
Qibla: the direction Muslims face to pray.
Qiraan: Accompanied form of Hajj.
Quba: a mosque in Madina, used to be on the outskirts.
Qur'an: the Book of Allah.
Rakaa: a unit of prayer.
Reda': the upper cloth of Ihram.
Rukn Al-Yamani: the corner of the Ka'bah which faces Yemen.
Sa'yi: the walk made between As-Safaa and Al-Marwah.
Sunnah: way of the Prophet.
Surah: a chapter of the Qur'an.
Takbeer: saying "Allahu Akbar ("Allah is Greatest")
Talbeeya: the supplication a Muslim recites once he is in Ihram and has made his intention.
தமட்டு: ஹஜ்ஜின் இன்பமான வடிவம்.
தர்விய்யா: துல்ஹிஜ்ஜாவின் எட்டாவது.
தவாஃப்: கபாவைச் சுற்றி வருதல்
தவாஃப் அல்ஃபதா: ஹஜ்ஜுக்கான தவாஃப்.
தவாஃப் அல்-வதா: பிரியாவிடை தவாஃப்.
உஹுத்: மதீனாவில் உள்ள ஒரு மலையின் பெயர் மற்றும் இந்தப் பெயரில் போர் நடந்த இடம்.
உமர்: இரண்டாவது முஸ்லிம் கலீஃபா மற்றும் விசுவாசிகளின் முதல் இளவரசர்.
உம்ரா-சிறு ஹஜ்: தவாஃப் மற்றும் சாயி ஆகியவற்றின் கலவையாகும்.
உத்மான்: மூன்றாவது முஸ்லிம் கலீஃபா மற்றும் விசுவாசிகளின் இரண்டாவது இளவரசர்.
வுது: கழுவுதல்.


சவுதி அரேபியாவின் தூதரகம்

முகப்பு பக்கம் | புத்தகங்கள் & பிரசுரங்கள் | பதிவிறக்கம் | தகவல் கோரிக்கை | பிரார்த்தனை நேரங்கள் ]

புதன், ஜூன் 04, 2025

அரஃபா நாளின் சிறப்புகள்,

💞 இஸ்லாத்தில் அரஃபா நாளின் சிறப்புகள் பற்றி அறிந்து கொள்ளுவோம் 💞

• மக்காவிற்கு கிழக்கே 12 மைல் தொலைவில் ஒரு மலை உள்ளது! அதைச் சுற்றியுள்ள மைதானத்திற்கு சொல்லப்படும் பெயர் தான் அரஃபா ஆகும்! அரஃபா என்றால் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளுதல் என்று பொருள் ஆகும்!

• அரஃபா மைதானம் எப்போதும் வெட்ட வெளியாகக் காட்சி தரும்! ஆனால் துல்ஹஜ் மாதம் ஒன்பதாம் நாள் வந்த விட்டால் ஹாஜிகள் அனைவரும் ஒன்று கூடும் நாளாக அரஃபா மைதானம் ஆகி விடும்!

• ஒவ்வொரு வருடமும் பல லட்சம் மக்கள் துல் ஹஜ் உடைய 9 வது நாளில் உலகின் பல பாகங்கலிருந்தும் ஹஜ் கடமையை செய்ய மக்காவுக்கு வருகை தரக்கூடிய அனைத்து முஸ்லிம்களையும் ஒன்றிணைக்கக் கூடிய ஒரு ஒப்பற்ற தினம் தான் ‘ அரஃபா தினம் ’ ஆகும்!

• அன்றைய தினத்தில் ‘ அரஃபா மைதானத்தில் ’ அனைவரும் ஒன்று திரண்டு, நிறம், மொழி, குலம், நாடு, பணம், பதவி, சாதி, அமைப்பு அனைத்தையும் துறந்து, வேற்றுமையை இல்லாமல் ஒற்றுமையாக இருப்பார்கள்!

• ஹஜ் செய்ய கூடியவர்கள் கட்டாயம் அரஃபா மைதானத்திற்கு சென்று சிறிது நேரமாவது தங்க வேண்டும் அப்போது தான் ஹஜ் பூர்த்தி ஆகும்! இல்லை என்றால் இவர்களின் ஹஜ் செல்லுபடி ஆகாது!

📚(நூல் : தப்ரானீ : 6302 | ஸஹீஹ் ஜாமிஃ : 5995 | திர்மிதி : 889)

💟 அரஃபா எனும் பெயர் வர காரணம் :

• ஆதம் (அலை) அவர்களும் ஹவ்வா (அலை) அவர்களும் அல்லாஹ் தடுத்த ஒரு செயலை செய்த காரணத்தினால் அல்லாஹ் சொர்க்கத்தில் இருந்து இருவரையும் வெளியேற்றி இருவரையும் தனி தனியாக வெவ்வேறு இடங்களுக்கு அல்லாஹ் உலகில் இறக்கி வைத்தான்!

• பிறகு இருவரும் நீண்ட காலம் பாவ மன்னிப்பு தேடிய பின்பு இருவரையும் அல்லாஹ் மன்னித்து அரஃபா எனும் இடத்தில் தான் அல்லாஹ் சந்திக்க வைத்தான்! அதனாலயே இதற்கு அரஃபா (அறிந்து கொண்ட இடம்) என்னும் பெயர் வந்தது!

• அரஃபா மைதானத்தின் நடுப்பகுதியில் ஒரு மலை உள்ளது இதனை ‘ ஜபலே ரஹ்மத் ’ (அருளின் மலை) என்று அழைப்பார்கள்! இந்த இடத்தில் வைத்து ஆதம் (அலை) அவர்களும் அவர்களின் மனைவி ஹவ்வா (அலை) அவர்கள் மீதும் அல்லாஹ் இரக்கம் காட்டி பாவங்களை மன்னித்தான் அதனாலயே இதற்க்கு அருளின் மலை என்றும் பெயர் வந்தது! 

• இந்த மலையின் மீது ஏறி நின்று தான் நபி (ஸல்) அவர்கள் தங்களின் இறுதிப் பேருரை நிகழ்த்தினார்கள்!

📚(நூல் : ரஹீக் (முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு)

💟 அரஃபா நாளின் சிறப்புகள் :

1) அல்லாஹ் புகழ்ந்து பேசுகிறான் :

அல்லாஹ் கூறியதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

நிச்சயமாக அல்லாஹ், அரஃபா  தினத்தன்று முதல் வானத்திற்கு வருகை தந்து, வானவர்களிடம் அரஃபா தினத்தன்று ஒன்று கூடியிருக்கின்றவர்களைப் பற்றி பெருமை பாராட்டி பேசுகின்றான்!

"எனது மலக்குமார்களே! எனது அடியார்களை நோக்கி பாருங்கள்! அவர்களில் அந்தஸ்த்து உள்ளவர்கள், அந்தஸ்து இல்லாதவர்கள் என அனைவரும் பரட்டை தலையுடையவர்களாகவும், புழுதி படிந்தவர்களாகவும் என்னிடம் வந்துள்ளார்கள்!

📚(நூல் : முஸ்னத் அஹ்மத் : 7089)

2) நரக விடுதலை உறுதி செய்யும் நாள் :

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

அல்லாஹ், அரஃபா (துல்ஹஜ் 9ஆவது) நாளில் அடியார்களுக்கு நரக விடுதலையளிக்கும் அளவிற்கு வேறெந்த நாளிலும் நரக விடுதலை அளிப்பதில்லை!

📚(நூல் : ஸஹீஹ் முஸ்லிம் : 2623)

• ஹதீஸ் விளக்கம் : இந்த நாளில் நாம் செய்ய கூடிய நல்ல அமல்கள் மூலம் அல்லாஹ் நரகில் விடுதலையை உறுதி படுத்துகிறேன்!

3) துஆ ஏற்ற கொள்ளப்படும் சிறந்த நாள் :

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

அரஃபா நாளின் போது கேட்கப்படும் துஆவே சிறந்த துஆவாகும்! துஆக்களில் சிறந்தது அரஃபா நாளின் துஆவாகும்!

📚(நூல் : சுனன் திர்மிதி : 3585)

(தரம் : ஹசன் : அல்பானி (ரஹ்) : ஸஹீஹு அத் தர்கீப் வத் தர்ஹீப் : 1536) 

• நாம் இந்த அரஃபா நாளில் அதிகம் அதிகம் நமக்கும் நம்முடைய குடுபத்திற்கு உறவினர்கள் நண்பர்கள் மற்றும் முழு முஸ்லீம் சமுதாயத்திற்கு இம்மை மறுமைக்கும் அதிகம் துஆ செய்ய வேண்டும்!

4) இஸ்லாம் அரஃபா நாளில் தான் முழுமை பெற்றது :

• இஸ்லாம் அரஃபா நாளில் தான் முழுமை பெற்று விட்டது! இதற்க்கு பிறகு இஸ்லாத்தில் நன்மை காரியம் என்று ஒன்றை சேர்க்கவோ அல்லது இஸ்லாத்தில் உள்ள ஒரு செயலை நீக்கவோ யாருக்கும் அனுமதி கிடையாது!

• ஆனால் இஸ்லாம் முழுமை பெற்றாலும் இஸ்லாம் வருவதற்கு முன்பு ஆரம்ப கால மக்களிடம் எப்படி அறியாமை மூடநம்பிக்கை ஷிர்க் ஆனா செயல்கள் இருந்த அதே நிலை இஸ்லாத்தில் மீண்டும் ஏற்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறி உள்ளார்கள்!

📚(நூல் : சுனன் திர்மிதி : 2629)

இன்றைய தினம் நாம் உங்களுக்கு உங்களுடைய மார்க்கத்தை முழுமையாக்கி வைத்து என்னுடைய அருளையும் உங்கள் மீது முழுமையாக்கி வைத்து விட்டோம்!

 📖(சூரத்துல் : அல் மாயிதா : 03)

• என்ற அல் குர்ஆன் வசனம் அரஃபா நாளின் வெள்ளிக்கிழமை அன்று இறங்கியது! இந்த வசனத்தைக் கேட்ட உமர் (ரழி) கண் கலங்கினார்கள்! நபி (ஸல்) அவர்கள், உமரே! நீங்கள் அழுவதற்கு காரணமென்ன? என வினவினார்கள்!

• அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் ஒவ்வொரு நாளும் மார்க்கத்தை அதிகம் அதிகம் தெரிந்து கொண்டே வந்தோம்!  இப்போது மார்க்கம் முழுமையாக்கப்பட்டு விட்டது! முழுமையான ஒன்று மீண்டும் குறைய ஆரம்பித்து விடுமே என எண்ணி நான் அழுகிறேன்!  என உமர் (ரழி) கூறினார்கள்! அதற்கு நபி (ஸல்) நீங்கள் உண்மை தான் கூறினீர்கள் என்றார்கள்!

📚(நூல் : தப்ஸீர் இப்னு கஸீர் | ஸஹீஹ் முஸ்லிம் : 5742)

5) அல்லாஹ் சத்தியம் செய்த நாட்கள் :

சாட்சிகள் மீதும், சாட்சி சொல்லப்படுவதன் மீதும் சத்தியமாக!

📖(சூரத்துல் : அல் புரூஜ் : 03)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

வாக்களிக்கப்பட்ட நாள் என்பது மறுமைநாளாகும்! சாட்சி சொய்ய வேண்டிய நாள் என்பது அரஃபா தினமாகும்! சாட்சி என்பது ஜுமுஆ தினமாகும்!

📚(நூல் : சுனன் திர்மிதி : 3339)

6) சிறந்த திக்ர் :

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பிரார்த்தனைகளிலேயே மிகவும் சிறந்தது அரஃபா நாளில் செய்யும் பிரார்த்தனை ஆகும்.

நானும், எனக்கு முன் இருந்த நபிமார்களும் கூறியவற்றில் சிறந்தது “லாஇலாஹ இல்லல்லாஹு, வஹ்தஹு லாஷரீக்க லஹு, லஹுல் முல்க்கு, வலஹுல் ஹம்து, வஹுவ அலா குல்லி ஷய்இன் கதீர்” என்ற திக்ராகும்.

(பொருள்: வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் இல்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணை யாரும் இல்லை. அவனுக்கே ஆட்சியதிகாரம் உரியது. அவனுக்கே புகழ் அனைத்தும் உரியது. அவன் எல்லாவற்றிற்கும் வலிமையுடையவன்)

7) நபி (ஸல்) அவர்களின் கடைசி உரை :

• நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ரி 10 யில் மட்டும் தங்கள் வாழ்நாளில் ஒரே ஒரு முறை ஹஜ் மட்டும் செய்து உள்ளார்கள்! இது தான் நபி (ஸல்) அவர்களின் முதல் மற்றும் கடைசி ஹஜ் ஆகும்!

• நபி (ஸல்) அவர்கள் மரணத்திற்கு முன்பு கடைசியாக மக்களுக்uகு ஹிஜ்ரி 10 துல் ஹஜ் 9 வது நாள் அரஃபா நாளில் தான் வரலாற்று சிறப்புமிக்க உபதேசம் செய்தார்கள்!

❤️ அல் குர்ஆன், நபிவழி - இரண்டையும் பின்பற்றுங்கள் :

• மக்களே! சிந்தித்துப் புரிந்து கொள்ளுங்கள்! எனது பேச்சை கவனமாக கேட்டுக் கொள்ளுங்கள்! நான் எனது பிரச்சாரத்தை உங்களுக்கு எடுத்துரைத்து விட்டேன்!

• உங்களிடையே அல்லாஹ்வின் வேதத்தையும் அவனது தூதரின் வழிமுறையும் விட்டுச் செல்கிறேன்! நீங்கள் அவற்றைப் பின்பற்றினால், ஒருபோதும் வழிகெட மாட்டீர்கள்!

• இஸ்லாத்தில் புதிதாக (ஒன்றை) உருவாக்குவதிலிருந்து உங்களை நான் எச்சரிக்கை செய்கின்றேன்! ஏனென்றால் புதிதாக ஏற்படுத்தப்பட்ட அனைத்தும் பித்அத்தாகும், அனைத்து பித்அத்தும் வழிகேடாகும்!

📚(நூல் : இப்னு மாஜா : 3074 | அபூதாவூத் : 4607)

❤️ தலமைக்கு கட்டுப்பட வேண்டும் :

• மக்களே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள் கருப்பு நிற (அபிசீனிய) அடிமை ஒருவர் உங்களுக்குத் தலைவராக ஆக்கப்பட்டாலும் அவர் அல்லாஹ்வின் வேதத்தைக் கொண்டு உங்களை வழி நடத்தி அதை உங்களுக்கிடையில் நிலைநிறுத்தும் காலமெல்லாம் (அவரது சொல்லைக்) கேட்டு நடங்கள்! (அவருக்குக்) கீழ்ப்படியுங்கள்!

(நூல் : ஸுனன் நஸாயி  : 4192 | திர்மிதி : 616)

❤️ இஸ்லாத்தில் ஏற்ற தாழ்வு பார்க்க கூடாது :

• மக்களே! உங்களது இறைவன் ஒருவனே அறிந்து கொள்ளுங்கள்! எந்த ஓர் அரபிக்கும் ஓர் அரபி அல்லாதவரை விடவோ, எந்த ஓர் அரபி அல்லாதவருக்கும் ஓர் அரபியை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை!

• எந்த ஒரு வெள்ளையருக்கும் ஒரு கருப்பரை விடவோ, எந்த கருப்பருக்கும் ஒரு வெள்ளையரை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை!  இறையச்சம் மட்டுமே ஒருவரின் மேன்மையை நிர்ணயிக்கும்!

• நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உங்களில் மிகச் சிறந்தவர் உங்களில் அதிகம் இறையச்சம் உள்ளவர் தான்!

(நூல் : அஸ்ஸில்ஸலதுல் ஸஹீஹா : 2700)

❤️ பெண்களை மதிப்புடன் நடத்துங்கள் :

• கவனியுங்கள்! பெண்கள் விஷயத்தில் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்!  அவர்களுக்கு நன்மையே நாடுங்கள்! அவர்கள் உங்களுக்குக் கட்டுப்பட்டவர்கள்!

• அல்லாஹ்வுடைய அமானிதமாக அவர்களை நீங்கள் பெற்றுள்ளீர்கள்! எப்படி உங்கள் மனைவியர் மீது உங்களுக்கு உரிமைகள் இருக்கின்றனவோ, அதே போல் உங்கள் மனைவியருக்கும் உங்கள் மீது உரிமைகள் இருக்கின்றன!

• அவர்கள் உங்களுக்குச் சிறந்த முறையில் பணிவிடை ஆற்றட்டும்! அவர்களுக்குரிய கடமை என்னவென்றால், நீங்கள் எவரை விரும்ப மாட்டீர்களோ, அவரை அவர்கள் வீட்டுக்குள் அனுமதிக்காமல் இருக்கட்டும்!

• இன்னும், மானக்கேடான செயலைச் செய்யாமல் இருக்கட்டும்! அவர்கள் குற்றம் புரிந்தால், அவர்களைத் தண்டிக்கிற உரிமையும் உங்களுக்கு உண்டு! அது அவர்களை இலேசாக காயம்படாதபடி தண்டிப்பதாகும்!

• அவர்களுக்கு ஒழுங்கான முறையில் உணவும் உடையும் வழங்குங்கள்!  அவர்களுக்கு நன்மையை நாடுங்கள்! அவர்கள் உங்களின் உதவியாளர்களாகவும் உங்களைச் சார்ந்தவர்களாகவும் இருக்கிறார்கள்! அல்லாஹ்வின் பெயரை முன்மொழிந்தே நீங்கள் அவர்களுடன் மணவாழ்க்கை மேற்கொண்டுள்ளீர்கள்!

(நூல் : முஸ்லிம் 2334 | ஸஹீஹ் ஜாமி : 7880 | திர்மிதி : 1163)

❤️ நம்முடைய ஒவ்வொரு செயலுக்கும் அல்லாஹ்விடம் பதில் கூறவேண்டும் :

• மக்களே! எனக்குப் பின் எந்தவொரு நபியும் (இறைத்தூதரும்) இல்லை! உங்களுக்குப் பின் எந்தவொரு சமுதாயமும் இல்லை! உங்களைப் படைத்துக் காப்பவனான அல்லாஹ்வையே வணங்குங்கள்!

• உங்கள் இறைவனை அதிவிரைவில் நீங்கள் சந்திப்பீர்கள்! அவன் உங்கள் செயல்களைப் பற்றி உங்களிடம் விசாரணை செய்வான்! எனக்குப் பிறகு நீங்கள் உங்களுக்குள் கொலை குற்றம் புரிந்து வழிகேடர்களாக மாறிட வேண்டாம்!

• உங்களது இறைவனை நீங்கள் சந்திக்கும் வரை (இப்படியே வாழுங்கள்!) நீங்கள் அனைவரும் தவறாமல் அல்லாஹ்வின் முன்னிலையில் ஆஜராகப் போகிறீர்கள்! அப்போது அல்லாஹ் உங்களது செயல்களைப் பற்றி விசாரிப்பான்!

• நான் மார்க்கத்தை உங்களுக்கு எடுத்துரைத்து விட்டேன்! உங்களில் எவராவது மற்றவருடைய பொருளின் மீது பொறுப்பேற்றிருந்தால், அதை அவர் உரிய முறையில் அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்து விடட்டும்!

📚(நூல் : ஸஹீஹ் முஸ்லிம் : 2334)

❤️ அற்பமானவற்றை வைத்தும் ஷைத்தான் வழிகேடுப்பான் :

• எச்சரிக்கையாக இருங்கள்! மக்களே! உங்களது இந்த நகரத்தில், தான் வணங்கப்படுவதைப் பற்றி ஷைத்தான் நம்பிக்கை இழந்து விட்டான்! ஆனாலும், அவன் மகிழ்ச்சியுறும் விதமாய் நீங்கள் அற்பமாக கருதும் சில விஷயங்களில் அவனுக்கு நீங்கள் கீழ்ப்படிவீர்கள்!

• ஆகவே, உங்களது மார்க்க விஷயத்தில் அவனிடம் எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள்!

📚(நூல் : ஸஹீஹ் ஜாமிஃ : 7880)

❤️ வட்டிக் கணக்கிடாதீர்கள் :

 • அறியாமைக்கால அனைத்து விவகாரங்களும் என் பாதங்களுக்குக் கீழ் புதைப்பட்டு விட்டன! மேலும், இன்று வரையிலான எல்லா வட்டிக் கணக்குகளையும் ரத்துச் செய்து விட்டேன். எனினும், உங்களது அசல் உங்களுக்கே உரியது!

(நூல் : முஸ்லிம் : 2334 | இப்னு மாஜா : 3074)

❤️ சகோதரத்துவம் பேணுங்கள்!

• ஒவ்வொரு முஸ்லிமும் மற்ற முஸ்லிமுக்கு சகோதரர் ஆவார். முஸ்லிம்கள் அனைவரும் சகோதரர்களே! 

• ஒரு முஸ்லிமின் பொருள் பிறருக்கு அறவே ஆகுமானதல்ல! மனமுவந்து கொடுத்தாலே தவிர! உங்களுக்கு நீங்கள் அநீதம் இழைத்துக் கொள்ளாதீர்கள்

📚(நூல் : ஸஹீஹ் ஜாமிஃ : 7880)

❤️ சொர்க்கம் செல்லும் வழி :

• மக்களே! உங்கள் இறைவனையே வணங்குங்கள்! உங்கள் இறைவனுக்கே பயந்து கொள்ளுங்கள்! கடமையான ஐவேளைத் தொழுகைகளையும் தவறாது பேணுங்கள்! (ரமளானில்) நோன்பு நோற்று வாருங்கள்!

• விருப்பமுடன் ஜகாத் கொடுத்து விடுங்கள்! அல்லாஹ்வின் இல்லத்தை ஹஜ் செய்யுங்கள்! உங்களில் அதிகாரம் உடையோருக்குக் கட்டுப்பட்டு நடங்கள்; நீங்கள் சொர்க்கம் செல்வீர்கள்!

📚(நூல் : திர்மிதி : 616 | மிஷ்காத் : 576)

❤️ மார்க்கத்தை பிறருக்கு எடுத்து கூறுவது நமது மீது கடமை :

• மறுமையில் என்னைப் பற்றி உங்களிடம் விசாரிக்கும் போது நீங்கள் என்ன பதில் கூறுவீர்கள்? என்று நபி (ஸல்) அவர்கள் ஸஹாபாக்களிடம் கேட்டார்கள்!

• கூடியிருந்தோர் நிச்சயமாக நீங்கள் எடுத்துரைத்தீர்கள் நிறைவேற்றினீர்கள் நன்மையையே நாடினீர்கள் என நாங்கள் சாட்சி கூறுவோம் என்றார்கள்!

• நபியவர்கள் தங்களது ஆட்காட்டி விரலை வானை நோக்கி உயர்த்தி, பின்பு மக்களை நோக்கித் திருப்பி “அல்லாஹ்! இதற்கு நீயே சாட்சி!” என்று மூன்று முறை கூறினார்கள்!

• இங்கு வந்திருப்பவர்கள் அனைவரும் இங்கு வராத மற்றவர்களுக்கும் எடுத்துக் கூறுங்கள்! ஏனெனில், செய்தியை கேள்விப்படுபவர்களில் சிலர் நேரடியாகக் கேட்பவர்களைவிட நன்கு விளக்கமுடையவர்களாக இருப்பார்கள்!

📚(நூல் :ஸுனனுத் திர்மிதி &  முஸ்னது அஹ்மது | முஸ்லீம் : 1739)

7) அரஃபா நாளில் தான் அல்லாஹ் நம்மிடம் வாக்குறுதி வாங்கினான் :

• அல்லாஹ் முதன் முதலில் ஆதம் (அலை) அவர்களை படைத்தான் அவர்களின் விலா எலும்பில் இருந்து அவ்வா (அலை) அவர்களை படைத்தான்!

• ஆதம் (அலை) மற்றும் அவ்வா (அலை) இவர்கள் இருவர் மூலமே அல்லாஹ் மனித சமுதாயத்தை தோற்றுவித்தான்!

• அல்லாஹ் அரஃபா நாளில் ஒரு பெருவெளியில் ஆதம் {அலை} அவர்களின் முதுகுத்தண்டிலிருந்து உறுதிமொழி பெற்றான்!

• அதாவது, அவரது முதுகுத்தண்டிலிருந்து தான் படைத்த அனைத்து வழித்தோன்றல்களையும் வெளியோக்கினான்! பிறகு தனக்கு முன்னால் அவர்களை அணுக்களைப் போன்று பரப்பினான்!

• பின்னர், அவர்களை நோக்கி நான் உங்கள் இறைவன் அல்லவா? என்று கேட்டான்! ஆம்! நாங்கள் நீதான் எங்கள் இறைவன் என சாட்சியமளிக்கின்றோம்  என்றனர்!

• இவ்வாறு செய்வதற்கு காரணம் அல்லாஹ் கூறுகிறான் :

உம் இறைவன் ஆதமுடைய மக்களின் முதுகுகளிலிருந்து அவர்களுடைய சந்ததிகளை வெளியாக்கி, அவர்களைத் தங்களுக்கே சாட்சியாக வைத்து: “நான் உங்களுடைய இறைவன் அல்லவா?” என்று கேட்டதற்கு, அவர்கள் “மெய் தான். நாங்கள் சாட்சி கூறுகிறோம்” என்று கூறியதை (அவர்களுக்கு) நினைவூட்டுவீராக! (ஏனெனில் இது நினைவூட்டப்படாததனால்) நிச்சயமாக இதனை (மறந்து) விட்டுப் பராமுகமாக இருந்து விட்டோம் என்று மறுமை நாளில் நீங்கள் (யாருமே) சொல்லாதிருக்கவும்!

அல்லது, இணைவைத்தவர்கள் எல்லாம் எங்களுக்கு முன் இருந்த எங்கள் மூதாதையர்களே; நாங்களோ அவர்களுக்குப் பின் வந்த (அவர்களுடைய) சந்ததிகள் - அந்த வழிகெட்டோரின் செயலுக்காக நீ எங்களை அழித்து விடலாமா?” என்று கூறாதிருக்கவுமே! (இதனை நினைவூட்டுகிறோம் என்று நபியே! நீர் கூறுவீராக.)

📖(சூரத்துல் : அல் அஃராஃப் : 172 & 173 |
(நூல் : சுனன் அல் குப்ரா : 11191 | முஸ்னத் அஹ்மத் : 2455)


*புனிதமான இரவு* 
)) قال رسول الله ﷺ : صِيامُ يَومَ عَرَفَةَ، أَحْتَسِبُ على الله أَنْ يُكَفِّرَ السَّنَةَ الَّتِي قَبْلَهُ، والسَّنَةَ الَّتِي بَعْدَهُ »
அல்லாஹ்வின் திருத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறுகிறார்கள் 
அரஃபா நாளில் நோன்பு நோற்பதன் மூலம், அதற்கு முந்தைய ஆண்டு மற்றும் அதற்குப் பிந்தைய ஆண்டுகளின் சிறிய பாவங்களுக்கு பரிகாரமாக அமையும் .
 (ஸஹீஹ் முஸ்லிம்)(2840)


அரஃபா நாளின் இரவு மற்றும் பகலில் செய்யவேண்டிய நல்ல அமல்கள்:👇

1) அரஃபா நாள் நாட்களின் அரசனான வெள்ளிக்
கிழமையில் வருகிறது 
2)பகலின் அரசனான அரஃபா தினமும் பகல்தான் 
3)ஸலவாத்தின் அரசனான தரூதே இப்ராஹீமை அதிகம் ஓதுங்கள் .
4) அரஃபா நோன்பு வையுங்கள் (அதுவும் வெள்ளிக்கிழமை அன்று அல்லாஹு அக்பர்) 
5) புனிதமான துல்ஹஜ் மாதத்தின் முதலாவது நோன்பாக இந்த அரபாவுடைய நோன்பை நான் நோற்க்கிறேன்.
6) ரமலானில் கலாவான ஒரு நோன்பை இதில் நான் சேர்த்துக் கொள்கிறேன். 

புனிதமான நாளின் புனித அமல்கள்👇
1)வெள்ளிக்கிழமை என்பதால் தயவுசெய்து வேகமாக பள்ளிக்குச் செல்லுங்கள்
2) கஃபு  சூராவை அவசியம் ஓதுங்கள்
3) பெண்கள் அவர்கள் இருக்கும் இடத்திலேயே முசல்லாவில் வேகமாக அமருங்கள் 
4) அரபா நாளில் லட்சோப லட்ச ஹாஜிகள் குழுமியிருந்து அல்லாவிடம் துவா செய்யும் பொழுது கண்ணீர் விட்டு அழுவார்கள்க அதனைப் பார்த்து சைத்தான் பொறாமை படுகிறான் மேலும் வெட்கப்படுகிறான் வேதனைப்படுகிறான். 
5) நம்முடன் இருந்து வபாத்தான தாய், தந்தை மற்றும் குடும்பத்தார்களுக்கு மறக்காமல் துவா செய்யுங்கள் 
6) புனிதமான ஹஜ் பயணம் புறப்பட்டுச் சென்ற நமது குடும்பத்தார்களுக்காக நமது நண்பர்களுக்காக துவா செய்ய மறந்து விடாதீர்கள் காரணம் அவர்களின் ஹஜ்ஜுகள் கபூல் ஆக வேண்டும். 
_________________👇
புனிதமான அரபாவுடைய நாள் மஃரிபு தொழுகை முதல் ஆரம்பிப்பதால் நாளை மஃரிப் வரை தயவுசெய்து எல்லோரும் கீழ்காணும் துவாக்களை ஓதி வாருங்கள்.
👇
حَسْبُنَا اللهُ وَنِعْمَ الْوَكِيل نِعْمَ الْمَوْلَى وَنِعْمَ النَّصِيرُ
لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ الْعَلِيِّ الْعَظِيمِ
رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ

اَسْتَغْفِرُ اللَّهَ الْعَظِيمَ إِنَّهُ كَانَ غَفَّارًا

لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ يُحْيِي وَيُمِيتُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ

اللَّهُمَّ صَلِّ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ وَعَلَى آلِ سَيِّدِنَا مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى ابْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ
وَبَارَكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آل مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلَى ابْرَاهِيمَ وَعَلَى آلِ ابْرَاهِيمَ فِي الْعَالَمِينَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ
ஒன்பதாவது அத்தியாயமான சூரத்து தவ்பாவினுடைய கடைசி இரண்டு ஆயத்துக்களை அவசியம் ஓதவும்👇
أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمُ

لَقَدْ جَاءَكُمْ رَسُولٌ مِنْ أَنْفُسِكُمْ عَزِيزٌ عَلَيْهِ مَا عَنِتُمْ

حَرِيصٌ عَلَيْكُمْ بِالْمُؤْمِنِينَ رَءُوفٌ رَحِيمٌ

فَإِنْ تَوَلَّوْا فَقُلْ حَسْبِيَ اللَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ عَلَيْهِ تَوَكَّلْتُ

وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ

துவா ஓதும்போது பாவியான இஸ்கீனையும் நினைவு கூர்ந்து துவா செய்யுங்கள் அல்லாஹ் உங்கள் அனைவருக்கும் நல்லருள் பாலிப்பானாக ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்.


பிரபல்யமான பதிவுகள்