роироо்рооுроЯрой் роЗрогைрои்родு роЗро░ுрок்рокро╡ро░்роХро│்

рокுродрой், роиро╡роо்рокро░் 25, 2015

роЙро▓рооாроХ்роХро│்,

உலமாக்களின் தகுதி … அந்தக் காலம் எப்போது வரும்
தமிழில் : அ. கான் பாகவி
சுலைமான் அல்கானூனீ
———————————–
துருக்கி நாட்டின் பத்தாவது மன்னர் சுலைமான் அல்கானூனீ. உஸ்மானியப் பேரரசர்களில் மிக முக்கியமானவரான சுலைமான் , தமது ஆட்சிக் காலத்தில் ( கி. பி .1520 -1566 ) ஐரோப்பா, ஆசியா நாடுகள் மீது 13 முறை நேரடித் தாக்குதலை எதிர் கொண்டு முறியடித்தவர் .
இவரது ஆட்சியில் தலைநகர் இஸ்தான்பூல் ஜாமிஆ மஸ்ஜித் பள்ளி வாசலுக்கு இமாமைத் தேர்ந்தெடுக்க நேர்காணல் நடத்துவார் . போட்டி நடக்கும். போட்டியில் வென்று முதலாவதாக வருபவரே இமாமாகத் தேர்ந்தெடுக்கப்படுவார்.
இந்த உயர்ந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஏழு தகுதிகளை அவர் நிர்ணயித்திருந்தார் . அத்தகுதிகள் அறிவார்ந்த சமுதாயத்தை உருவாக்கும் தலைமைப் பண்புக்குச் சிறந்த முன்னுதாரணமாகும். அப்படியானால் அது எவ்வளவு பெரிய பொற்காலம் .
தகுதிகள் என்ன?
1 . அரபி , ஃபார்சி , லத்தீன் , துருக்கி ஆகிய மொழிகளை நன்கு அறிந்திருக்க வேண்டும். ( பேசத் தெரிந்தால் மட்டும் போதாது; மொழியாற்றல் வேண்டும்)
( இவற்றில் ஃபார்சீ, லத்தீன் , துருக்கி ஆகியவை அந்நாட்டிற்கும் அக்காலத்திற்கும் அவசியமானவை ) .
2 . திருக்குர்ஆன் , தவ்ராத் ( தோரா) , இன்ஜீல் ( பைபிள்) ஆகியவற்றைக் கற்றிருக்க வேண்டும்.
3 . தற்காலப் பிரச்சனைகளுக்கு மார்க்கத் தீர்ப்பு ( ஃபத்வா ) அளிக்கும் ஆற்றல் இருக்க வேண்டும் .
4 . தற்காலப் போர்க்கலை அறிந்திருக்க வேண்டும்.
5 . கணிதம் ( விணீtலீs ) இயற்பியல் ( றிலீஹ்sவீநீs ) ஆகிய கலைகளைப் பள்ளிவாசலில் கற்பிப்பதற்காக நன்கு கற்றிருக்க வேண்டும் .
6 . நல்ல தோற்றமுள்ளவராக இருத்தல் வேண்டும் .
7 . குரல் வளமிக்கவராக இருத்தல் வேண்டும் .
இமாம் என்பவர் தொழுகை எனும் வழி பாட்டிற்கு வழிகாட்டியாக, தொழுகையாளிகளின் செயல்களுக்குப் பொறுப்பாளியாகத் திகழ்கிறார். அதனால், தொழுகை தொடர்பான எல்லா விசயங்களும் அவருக்கு அத்துப்படியாக இருக்க வேண்டும்.
அதே நேரத்தில் , ஜாமிஆ மஸ்ஜிதின் இமாம் என்பவர் சமுதாயத்தின் தகுதி வாய்ந்த முக்கியப் புள்ளி ஆவார் . நாட்டிற்கும் சமுதாயத்திற்குமான தோற்றத்தை உருவாக்கும் பொறுப்பு அவருக்கு உள்ளது . எனவே , அவரிடம் வேறுபல தகுதிகளும் இருப்பது அவசியம்.
இமாம்குர்ஆனை மட்டும் கற்றால் போதாது , தவ்ராத் , இன்ஜீல் போன்ற முந்தைய வேதங்களையும் அறிந்திருக்க வேண்டும். இன்றும் புவியில் இருக்கும் இரு மதங்கள் அவை . நாம் வாழும் நாட்டிலேயே அம்மதத்தார் வாழ்கின்றனர் .
அவர்களில் சிலருக்கு இஸ்லாம் பிடிக்கிறது. வேறுசிலரோ இஸ்லாத்தின் மீது தாக்குதல் தொடுக்கிறார்கள். இது பொதுமக்களிடையே சலசலப்பை உண்டாக்கிவிடுகிறது. இந்நிலை யில் , வேதக்காரர்களின் வாதங்களை அறிவுப்பூர்வமாக எதிர்கொண்டு முறியடித்தாக வேண்டும்.
இதற்கு மேம்போக்கான அறிவு போதாது , அவர்களின் வேதம் பற்றி சற்று ஆழமாக ஆராய்ந்திருக்க வேண்டும் . அப்போதுதான் , முஸ்லிம் பொதுமக்களின் நம்பிக்கையைக் காக்க முடியும்.
நபித்தோழர் அதீ பின் ஹாத்திம் ( ரலி ) அவர்கள் யார் தெரியுமா? வேதக்காரராக இருந்தவர் . நபி ( ஸல்) அவர்களைச் சந்தித்து , அவர்களின் நிலையை அறிய வருகிறார். மக்களிடையே பிரசித்தி பெற்று விளங்கிய அதீ வந்தவுடன் , இதோ ! அதீ பின் ஹாத்திம் ! அதீ பின் ஹாத்திம் ! என்று மக்கள் கூவினர் . “அதீ பின் ஹாத்திமே ! இஸ்லாத்தில் இணைந்துவிடு! சாந்தி அடைவாய் ” என்று நபி ( ஸல்) அவர்கள் அழைத்தார்கள் .
மூன்று முறை இதையே சொன்னார்கள் .
அவரோ , “ நான் ஒரு மதத்தில் இருக்கிறேன் ” என்றார். உடனே நபியவர்கள் , உன்னைவிட உன் மதத்தை நான் நன்கு அறிந்தவன் என்றார்கள் . அப்படியா என்று வியப்போடு வினவிய அதீயிடம், நீர் ரகூஸ் மதத்தில் ( யூதம்-கிறித்தவம் இடையிலான ஒரு மதம்) உள்ளவர் அல்லவா ? உன் சமூகத்தாரின் போர்ச் செல்வங்களில் நான்கில் ஒரு பகுதியை உண்பவரல்லவா?” என்று கேட்டார்கள். அவர் ஆச்சரியத்தோடு ` ஆம் ’ என்றார் .
இது உங்கள் மதத்தில் அனுமதிக்கப்படவில்லையே என்று நபியவர்கள் கேட்டதுதான் தாமதம் ! அதீ பணிந்துவிட்டார் . உங்களில் ஒருவர் மற்றவரை இறைவனாக ஆக்கிக் கொண்டுள்ளீர்களே! என்ற அடுத்த கணையை நபியவர்கள் வீசினார்கள் . அதற்கு அதீ , எங்களில் யாரும் யாரையும் வழிபடுவதில்லையே! என்று கேட்டார் .
நபி ( ஸல்) அவர்கள், உங்கள் மதத்தலைவர்கள் , உங்களுக்குத் தடை செய்யப்பட்டதை அனுமதிக்கப்பட்டதாகவும், அனுமதிக்கப்பட்டதைத் தடை செய்யப்பட்டதாகவும் மாற்றவில்லையா? அதை நீங்கள் ஏற்பதுதான் அவர்களுக்கு நீங்கள் செய்யும் வழிபாடு என்றார்கள் . ( முஸ்னது அஹ்மத்)
எதிரியின் மதத்தையும் வேதத்தையும் நபி ( ஸல்) அவர்கள் அறிந்திருந்த காரணத்தால் பதில் சொல்ல முடிந்தது. எதிரி உணர்ந்தார். தோழர் ஆனார் . தீர்வுக்காகப் பழைய வேதங்களை அணுகக் கூடாது என்றுதான் நபியவர்கள் தடை செய்தார்களே தவிர , தெளிவுக்காகப் பழைய வேதங்களைப் படிப்பதற்கு தடை விதிக்கவில்லை.
இன்றையப் பிரச்சனைகளுக்கு மார்க்கத் தீர்ப்பு அளிக்கும் அறிவு இமாமுக்கு மிக முக்கியமானது. பிரச்சினைகள் புதிது புதிதாக முளைக்கின்றன. புதிதாகச் சிந்திக்கவே கூடாது என்று தடைபோடுவது முடக்கம் ஆகும். ஆக்கப்பூர்வ நடவடிக்கையாக ஆகாது . மார்க்கம் எங்கே அப்படிச் சொன்னது ?
இயற்பியல், கணிதம் போன்ற கலைகளும் இமாம் தெரிந்திருக்க வேண்டும் என்று சொல்வதற்குக் காரணம் உண்டு . இக்கலைகளுக்குப் பின்னால், கட்டடம் , வளர்ந்து வரும் தொழில்கள் , புதிய கண்டுபிடிப்புகள் என ஏராளமான சமுதாய வளர்ச்சிகள் ஒளிந்திருக்கின்றன. இத்துறைகளில் சமுதாயத்தை முன்னேற்றுவதில் இமாமுக்குப் பங்கு இருக்க வேண்டும்.
பள்ளிவாசலில் பலர் ஒன்றுகூடுகின்றார்கள் . படித்தவர் , படிக்காதவர், பல்கலைக்கழக பட்டதாரி , இராணுவ வீரர் , ஆலிம் எனப் பலவகை மனிதர்களும் தொழுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும் இமாம் வழிகாட்டக் கடமைப்பட்டவர் . அவருக்கு மார்க்கமும் தெரிந்திருக்க வேண்டும். உலகமும் தெரிந்திருக்க வேண்டும். தாய்மொழியும் தெரிந்திருக்க வேண்டும். உலக மொழியும் தெரிந்திருக்க வேண்டும். அப்போதுதான் சரியாக வழிகாட்ட இயலும்.
இவ்வாறு இல்லாதபோது மார்க்கமும், உலகமும், மார்க்கமும் அறிவியலும் , மார்க்கமும் அரசியலும் மோதிக் கொள்கின்றன . மார்க்க அறிஞர்களும் உலக அறிஞர்களும் பகைத்துக் கொள்கின்றனர் . மார்க்கத்தை மக்கள் விரோதமாக , விநோதமாகப் பார்க்கின்றனர் .
மன்னர் சுலைமான் விதித்த இந்தத் தகுதிகள் இன்று முஸ்லிம் நாடுகளிலாவது இமாம்களிடம் உண்டா? அவர்களுக்கு அரபிமொழி தவிர வேறு உலக மொழிகள் தெரியுமா? அரபி மொழியைக்கூடத் தெளிவாகப் பேச முடிகிறதா ?
இதற்கு என்ன தீர்வு? ஷரீஅத் கல்லூரியின் ( அரபிக் கல்லூரியின்) எல்லைக்குள் மேற்சொன்ன கலைகள் ஏதேனும் ஓர் அடிப்படையில் இடம் பெற வேண்டும். இமாம்கள் வல்லவர்களாக வெளிவர வேண்டும். அலைக்கழியும் சமுதாயத்தை வழிநடத்த வேண்டும். இது ஒரு பாரம்பரியம் மிக்க, அறிவு சார்ந்த சமுதாயம் என்பதை நிரூபிக்க வேண்டும் .
அக்காலம் எப்போது வரும் ?
பின்குறிப்பு :
எல்லாம் சரி ! இத்தனை தகுதிகள் உள்ள இமாமுக்கு துருக்கி அரசு எவ்வளவு கௌரவம் அளித்திருக்கும் ! அதையும் யோசிக்க வேண்டுமல்லவா ! இவ்வாண்டு ஹஜ்ஜூக்கு சென்றிருந்தபோது மறைந்த முஃப்தி ஷைக் அப்துல்லாஹ் பின் பாஸ் அவர்களின் வீட்டை மக்கா புறநகர்ப் பகுதியில் பார்த்தேன் . சென்னை அமீர் மஹாலைவிடப் பெரியது. இப்போதுள்ள இமாம் சுதைஸி அவர்களின் இல்லம் மாளிகைபோல் காட்சியளித்தது .
-------
சுலைமான் உருவாக்கிய பள்ளிவாசல்
உலகப் புகழ்பெற்ற சுலைமானியா பள்ளிவாசல் இன்றும் துருக்கி தலைநகர் இஸ்தன்புல்லில் மிக கம்பீரமாக காட்சியளிக்கிறது .
கி.பி . 1558 இல் கட்டிமுடிக்கப்பட்ட இப்பள்ளி வாசலை அன்றைய நாட்களில் உலகப் புகழ்பெற்ற கட்டிடக் கலை நிபுணர் சினான் பாஷா என்பவர் தான் வடிவமைத்தவர் .
பள்ளிவாசல்கள் எப்படி அமையப் பெற வேண்டும் என்று நபி ( ஸல்) அவர்கள் மதீனாவில் கட்டி உலகிற்கு காட்டித் தந்தார்களோ அதே போன்ற சிறப்புகளுடன் இந்தப் பள்ளி சுலைமான் அல்கானூனி அவர்களின் மேற்பார்வையில் கட்டப்பட்டுள்ளது .
பள்ளிவாசலில் இலவச மருத்துவமனை, ஆரம்பப் பாடசாலை, பொதுக் குளியலறை , வழிப்போக்கர்கள் தங்குமிடம், மதரஸா , ஹதீஸ் கற்பதற்கான சிறப்பு உயர்கல்வி நிறுவனம், மருத்துவக் கல்லூரி , ஏழைகளுக்கான இலவச உணவு வழங்கும் மையம் என்று மக்களின் அன்றாட வாழ்வோடு ஒன்றிணைந்த அனைத்து அம்சங்களும் அந்தப் பள்ளிவாசலில் அமைந்திருந்தது .

роХро░ுрод்родுроХро│் роЗро▓்ро▓ை:

рокிро░рокро▓்ропрооாрой рокродிро╡ுроХро│்