роироо்рооுроЯрой் роЗрогைрои்родு роЗро░ுрок்рокро╡ро░்роХро│்

роЪройி, роЯிроЪроо்рокро░் 10, 2016

рооௌро▓ிрод் роУродро▓ாрооா?.....

மௌலித் ஓதலாமா?.....

குறிப்பு :- இந்த பதிவை பெறுபவர்கள் அனைவரும் கட்டாயம் அனைத்து ஹதீஸ்களையும் நன்றாக வாசித்து ஆதார நூல்கள் மற்றும் இலக்கங்களையும் மனதில்கொள்ளவும் ...

***********************************************************************************

(458) கவி (மௌலித்) மூலம் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை புகழ்து பாடுவதற்காக ஆதாரங்கள்
*********************************************************************************
♦கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கவி பாடியதற்க்குறிய ஆதாரம்
ஜுன்தப் இப்னு சுஃப்யான்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் போர் ஒன்றில் பங்கு கொண்டபோது அவர்களின் விரலில் (காயம் ஏற்பட்டு) ரத்தம் சொட்டிக் கொண்டிருந்தது. அப்போது அவர்கள், “நீ இரத்தம் சொட்டுகிற ஒரு விரல் தானே? நீ அடைந்த (பழு)தெல்லாம் இறைவழியில் தானே!” என்று (ஈரடிச் சீர் பாடல் (கவி) போன்ற வடிவில்) கூறினார்கள்.
(ஷஹீஹ் புஹாரி 2802)

.
♦நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹிவஸல்லம் அவர்களின் மறைவின் பின் ஸஹாபாக்கள் கவி மூலம் புகழ்து அவர்களை பாடியதற்க்குறிய ஆதாரம்
ஸயீத் இப்னு முஸய்யப்(ரஹ்) அறிவித்தார். மஸ்ஜிதுந் நபவீயில் (நபித் தோழரும் கவிஞருமான) ஹஸ்ஸான் இப்னு ஸாபித்(ரலி) கவிபாடிக் கொண்டிருக்க, உமர்(ரலி) அங்கு வந்தார்கள். (ஹஸ்ஸான்(ரலி) பள்ளிவாசலில் கவிபாடுவதை உமர்(ரலி) கண்டித்தார்கள்) ஹஸ்ஸான்(ரலி), “நான் இந்தப் பள்ளிவாசலில் உங்களை விடச் சிறந்தவர் (நபி(ஸல்) அவர்கள்) இருக்கும் போதே கவிபாடிக் கொண்டிருந்தேன்” என்று கூறிவிட்டு, அபூ ஹுரைரா(ரலி) பக்கம் திரும்பி, “அல்லாஹ்வின் பெயரால் உங்களிடம் கேட்கிறேன். (என்னிடம்) இறைத்தூதர்(ஸல்) அவர்கள், “(ஹஸ்ஸானே!) என் சார்பாக (எதிரிகளின் வசைக் கவிகளுக்கு) நீங்கள் (கவிகளாலேயே) பதிலளியுங்கள். இறைவா! ஹஸ்ஸானுக்கு ரூஹுல் குதுஸ்(தூய ஆத்மா வானவர் ஜிப்ரீல் அவர்களின்) மூலம் துணை புரிவாயாக!” என்று கூறியதை நீங்கள் செவியுற்றிருக்கிறீர்களா?“ என்று கேட்டார்கள். அதற்கு அபூ ஹுரைரா(ரலி), “ஆம் (செவியுற்றிருக்கிறேன்)” என்று பதிலளித்தார்கள்.
(ஷஹீஹ் புஹாரி 3212)

.
♦ பள்ளிவாசல்களிலும் கவி மூலம் நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹிவஸல்லம் அவர்களை புகழ்து பாடுவதற்காக ஆதாரம்
கஃபு இப்னு ஜீஹைர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பள்ளிவாசலில் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் புகழ்து கவி பாடினார்கள்
அறிவிப்பாளர் இப்னு ஜத்ஆன் ரலியல்லாஹு அன்ஹு
(ஆதாரம் ஹாகிம் 6555)

.
♦வீடுகளில் கவி (மௌலித்) பாடுவதற்காக ஆதாரம்
மஸ்ரூக் பின் அல்அஜ்தஉ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது
ஒரு முறை நான் ஆயிஷா நாயகியிடம் சென்றேன் அப்போது அவர்களுக்கு அருகில் ஹஸ்ஸான் பின் ஸாபித் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இருந்து கவி பாடிக்கொண்டும் தம் பாடல்களால் ஆயிஷா நாயகி அவர்களை பாராட்டிக்கொண்டுமிருந்தார்கள்
(ஆதாரம் முஸ்லிம் 1901)

.
♦திருமண வீட்டில் கவி (மௌலித் பாடுவதற்காக ஆதாரம்
ஆயிஷா(ரலி) அறிவித்தார் நான் ஒரு பெண்ணை அன்சாரிகளில் ஒருவ(ருக்கு மணமுடித்து வைத்து அவளை அவ)ரிடம் அனுப்பிவைத்தேன். அப்போது நபி(ஸல்) அவர்கள், “ஆயிஷாவே! உங்களுடன் பாடல் (பாடும் சிறுமியர்) இல்லையா? ஏனெனில், அன்சாரிகளுக்குப் பாடலென்றால் மிகவும் பிடிக்குமே““ என்றார்கள்
(ஷஹீஹ் புஹாரி 5162)

.
♦கவி (மௌலித்) பல தடவைகள் பாடுவதற்காக ஆதாரம்
ஷரீத் பின் சுவைத் அஸ்ஸகஃபீ (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு நாள் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பின்னால் (அவர்களது வாகனத்தில்) அமர்ந்திருந்தேன். அப்போது அவர்கள், ”உமய்யா பின் அபிஸ்ஸல்த்தின் கவிதைகளில் ஏதேனும் உமக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள். நான் ”ஆம் (தெரியும்)” என்றேன். ”பாடு” என்றார்கள். உடனே நான் ஒரு பாடலைப் பாடினேன். ”இன்னும் பாடு” என்றார்கள். பிறகு இன்னொரு பாடலைப் பாடினேன். ”இன்னும் பாடு”என்றார்கள். இவ்வாறே அல்லாஹ்வின் தூதருக்காக நூறு பாடல்களைப் பாடிக்காட்டினேன். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. - மேற்கண்ட ஹதீஸ் ஷரீத் பின் சுவைத் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் நான்கு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில் ”அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னைத் தமக்குப் பின்னால் தமது வாகனத்தில் அமரச்செய்தார்கள்...” என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன. - மேற்கண்ட ஹதீஸ் ஷரீத் பின் சுவைத் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில் ”அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், என்னிடம் உமய்யா பின் அபிஸ் ஸல்த்தின் கவிதைகளைப் பாடுமாறு கூறினார்கள்” என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன. மேலும் ”உமய்யா பின் அபிஸ்ஸல்த் இஸ்லாத்தைத் தழுவும் அளவுக்கு வந்துவிட்டார்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதாகக் கூடுதலாக இடம்பெற்றுள்ளது. அப்துர் ரஹ்மான் பின் மஹ்தீ (ரஹ்) அவர்களது அறிவிப்பில், ”அவர் தமது கவிதையி(ன் கருத்துகளா)ல் இஸ்லாத்தைத் தழுவும் அளவுக்கு வந்துவிட்டார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாகக் காணப்படுகிறது.
(ஸஹீஹ் முஸ்லிம் 4540)

.
♦கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை புகழ்து பாடினால் மலக்குமார்களின் பாதுகாப்பு கிடைக்கும் என்பதற்குறிய ஆதாரம்
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹஸ்ஸான் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு சொன்னார்கள் நீங்கள் அல்லாஹ்விற்றாகவும் அல்லாஹ்வின் தூதருக்காகவும் கவி மூலம் பாடும் காலமெல்லாம் பரிசுத்த ஆன்மாவான ஜிப்யீல் (அலை) அவர்கள் உங்களைப் பலப்படுத்திக் கொண்டே இருப்பார்கள்
அறிவிப்பாளர் ஆயிஷா ரலியல்லாஹுஅன்ஹா
(ஆதாரம் முஸ்லிம் 4545)

.
♦கூட்டமாக சேர்ந்து கவி பாடுவதற்கான ஆதாரம்
நபி(ஸல்) அவர்கள் மதீனாவிற்கு வந்த போது பெண்களும் சிறுவர்களும் குழந்தைகளும் பின்வரும் பாடலைப் பாடினார்கள். ” ”தலஅல் பத்ரு அலைனா மின் தனிய்யாதில் வதாயீ வஜபஷ்ஷுக்ரு அலினா மாதஆ லில்லாஹி தாயீ”
(ஆதாரம்: தலாயிலுன் நுபுவ்வா:2015)

.
♦மேடை போட்டு கவி பாடுவதற்கான ஆதாரமும், பள்ளியில் பாடுவதற்காக ஆதாரமும்
ஹஸ்ஸான் இப்னு தாபித் (ரலியல்லாஹு அன்ஹு) ‘நபியே நாயகமே! உங்களைப் போன்ற அழகான எந்த ஒரு மனிதரையும் எனது இந்த இரு கண்களும் கண்டதேயில்லை. உங்களைபோன்ற ஒரு அழகான ஒருவரை எந்தப் பெண்ணும் பெறவுமில்லை எனப் பாடியுள்ளார்கள்.’ கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் ஹஸ்ஸான் இப்னு தாபித் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களுக்கு பள்ளியில் மேடை போட்டுக் கொடுத்தார்கள். அம்மேடையில் ஸஹாபி அவர்கள் ஏறிநின்ற வண்ணம் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களை புகழ்ந்து பாடுவார்கள். இன்னும் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களை முஷ்ரிகீன்கள் இகழ்வதை தனது பாடல்களினால் முறியடிப்பார்கள். கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் ஹஸ்ஸான் இப்னு தாபித் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களுக்குப் புகழும் காலமெல்லாம் (முஷ்ரிகீன்களின் வசை மொழிகளை தனது பாடலைக்கொண்டு முறியடிக்கும் காலமெல்லாம் ஜிப்ரீல் (அலைஹிஸ்ஸலாம்) மூலம் ஹஸ்ஸான் இப்னு தாபிதிற்கு உதவி செய்வாயாக! எனப்பிரார்த்தித்தார்கள். அறிவிப்பவர் ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா)
(நூல் - புகாரி எண் 453, முஸ்லிம் 4545. மிஷ்காத் )

.
♦கவி பாடினால் நன்மை, கூலி கிடைக்கும் என்பதற்குறிய ஆதாரம்
ஒரு சமயம் ஹஸ்ஸான் இப்னு ஸாபித் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இறைமறுப்பாளர்களே! முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களைக் குறைவுப்படுத்தி கவி பாடுகிறீர்கள். அதற்கு பதிலாக அன்னவர்களை நான் புகழ்ந்து பாடுவேன். அதற்குரிய நற்கூலி இறைவனிடம் உண்டு. ஹதீஸ் தொடர் நீண்டுசெல்வதால் சுருக்கிக்கொள்கிறேன். தேவையெனில் பார்க்கவும் (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா)
நூல்: முஸ்லிம் எண்: 4545

.
♦நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹிவஸல்லம் அவர்களை புகழ்து பாடுபவர்களுக்கு அன்பளிப்புகள் வழங்குவதற்குறிய ஆதாரம்
கஃப் இப்னு ஜுஹைர் (ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஓதிய மவ்லித் அவர்களுக்கு அன்பளிப்பாக கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு போர்வை வழங்கியது பற்றிய தெளிவாக இந்த நீண்டகு ஹதீஸ் தொடரில் குறிப்பிடப்பட்டிருக்கிறது பார்க்கவும்.
(நூல்: ஹாகிம் எண்: 6558, அல்பிதாயா வன்னிஹாயா)
♻ وَأَمَّا بِنِعْمَةِ رَبِّكَ فَحَدِّثْ
மேலும், உம்முடைய இறைவனின் அருட்கொடையைப் பற்றி (பிறருக்கு) அறிவித்துக் கொண்டிருப்பீராக.
(அல்குர்ஆன் : 93:11)
எனவே இறைவன் நமக்கு தந்த மாபெரும் அருட்கொடை ரஹ்மத் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தான்
என்பதை அல்லாஹ் குர்ஆனில் தெளிவாக கூறியுள்ளான் அந்த அடிப்படையில் அந்த அருட்கொடை இவ்வுலகிற்க்கு ரபிஉல் அவ்வல் மாதம் கிடைத்த காரணத்தினால்தான்
இறைவன் வழங்கிய அருட்கொடை, ரஹ்மத்தான கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் புகழ்களை கவி மூலம் ஸஹாபாக்கள் காட்டிய அழகிய முன்மாதிரிகளை மனதில் கொண்டு மேலே கூறப்பட்ட குர்ஆன் வசனத்தின் பிரகாரம் மக்களிடம் கவி மூலம் புகழ்து பாடி சொல்லிட்காட்டுகிறோம்

роХро░ுрод்родுроХро│் роЗро▓்ро▓ை:

рокிро░рокро▓்ропрооாрой рокродிро╡ுроХро│்