роироо்рооுроЯрой் роЗрогைрои்родு роЗро░ுрок்рокро╡ро░்роХро│்

роЪройி, роЬூрой் 24, 2017

роХро╡ிродை,

*பெற்றோர்களை* 
     *நோகடிக்காதே...*
     *நாளை உன் பிள்ளையும்*
     *உனக்கு அதை தான்*
     *செய்யும்...!!*

*பணம் பணம் என்று*
     *அதன் பின்னால்*
     *செல்லாதே...*
     *வாழ்க்கை போய்*  
     *விடும்...*
     *வாழ்க்கையையும்*
     *ரசித்துக் கொண்டே* 
     *போ...!!*

*நேர்மையாக இருந்து*
     *என்ன சாதித்தோம்*
     *என்று* *நினைக்காதே...*
     *நேர்மையாக இருப்பதே*
     *ஒரு சாதனை தான்...!!*

*நேர்மையாக*
     *இருப்பவர்களுக்கு*
     *சோதனை வருவது*
     *தெரிந்ததே,* *அதற்காக*
     *நேர்மையை கை விட்டு*
     *விடாதே...*
     *அந்த நேர்மையே*
     *உன்னை*
     *காப்பாற்றும். ..!!*

*வாழ்வில் சின்ன சின்ன*
     *விஷயத்திற்கெல்லாம்*
     *கோபப்படாதே..*.
     *சந்தோஷம்*
     *குறைவதற்கும்,*
     *பிரிவினைக்கும்* *இதுவே*
     *முதல் காரணம்...!!*

*உன் அம்மாவிற்காக*
     *ஒரு போதும்*
     *மனைவியை விட்டு*
     *கொடுக்காதே...*
     *அவள் உனக்காக*
     *அப்பா* *அம்மாவையே*
     *விட்டு வந்தவள்...!!*

*உனக்கு உண்மையாக*
     *இருப்பவர்களிடம்...*
     *நீயும் உண்மையாய்*
     *இரு...!!*

*அடுத்தவர்களுக்கு தீங்கு*
     *செய்யும் போது*
     *இனிமையாகத்தான்*
     *இருக்கும்...*
     *அதுவே உனக்கு வரும்*
     *போது தான், அதன்*
     *வலியும்* *வேதனையும்*
     *புரியும்...!!*

*உன் மனைவி*
    *உண்மையாக இருக்க*
    *வேண்டும் என்று, நீ*
    *நினைப்பது போல்...*
    *நீயும் உண் மனைவிக்கு*
    *உண்மையாய் இரு,*
    *எந்த* *பெண்ணையும்*
    *ஏறெடுத்து* *பார்க்காதே,*
    *அதுவே உன்*
    *மனைவிக்கு* *கொடுக்கும்*
    *மிகப்பெரிய பரிசு...!!*

*ஒருவன் துரோகி*
      *என்று தெரிந்து*
      *விட்டால்...*
      *அவனை விட்டு*
      *விலகியே இரு...!!*

*எல்லோரிடமும்*
      *நட்பாய் இரு...*
      *நமக்கும் நாலு*
      *பேர் தேவை...!!*

*நிறை குறை இரண்டும்*
      *கலந்தது தான்*
      *வாழ்க்கை...*
      *அதில் நிறையை மட்டும்*
      *நினை...*
      *நீ வாழ்க்கையை*
      *வென்று* *விடலாம்...!!*

*எவன் உனக்கு உதவி*
      *செய்கிறானோ,*
      *அவனுக்கு மட்டும்*
      *ஒரு நாளும் துரோகம்*
      *செய்யாதே...*
      *அந்த பாவத்தை நீ*
      *எங்கு போனாலும்*
      *கழுவ* *முடியாது...!!*

*அடுத்தவர்களைப்*
      *போல் வசதியாக*
      *வாழ முடியவில்லை*
      *என்று நினைக்காதே...*
      *நம்மை விட* 
      *வசதியற்றவர்கள்*
      *கோடி பேர்*
      *இருக்கிறார்கள்*
      *என்பதை மனதில்*
      *கொள்...!!*

*பிறப்பிற்கும்*
      *இறப்பிற்கும்* *இடையில்,*
      *நீ செய்யும் பாவம்*
      *புண்ணியம் மட்டுமே*
      *உனக்கு மிஞ்சும்...*
      *உன்னுடன் கடைசி*
      *வரை வருவதும்*
      *இதுவே...!!*

    ��

роХро░ுрод்родுроХро│் роЗро▓்ро▓ை:

рокிро░рокро▓்ропрооாрой рокродிро╡ுроХро│்