роироо்рооுроЯрой் роЗрогைрои்родு роЗро░ுрок்рокро╡ро░்роХро│்

ро╡ிропாро┤рой், роЬூро▓ை 20, 2017

рооро░рокрогு роХроЯுроХு,родроХ்роХாро│ி,роХрод்родро░ிроХ்роХாроп்,

தக்காளி, கத்திரிக்காய், இப்போது கடுகு... மரபணு மாற்றம் நமக்குத் தரப்போவது என்ன?

ஏற்கெனவே மரபணு மாற்றம் செய்யப்பட்ட பருத்தியால் பருத்தி விவசாயம் கேள்விக்குறியானது. மரபணு கத்திரிக்காய் பல்வேறு உடல்நலக் கோளாறுகளை நமக்கு அள்ளி அள்ளிக் கொடுத்தது. அந்த வரிசையில் புதிதாக முளைத்திருக்கிறது மரபணு கடுகு..!

`கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது.’ இது, கடுகில் உள்ள காரத்தன்மைக்காக சொல்லப்பட்ட பழமொழி அல்ல. கடுகில் உள்ள மருத்துவக் குணங்களைக் குறிப்பதற்காகச் சொல்லப்பட்டது. அந்த அளவுக்கு இதில் மருத்துவ குணங்கள் ஏராளமாகக் கொட்டிக்கிடக்கின்றன. இதில் நார்ச்சத்து அதிகம். இது, கெட்ட கொழுப்புகளைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டது. செரிமான சக்தியை மேம்படுத்தும் சக்தி கொண்டது... இப்படி கடுகு தரும் ஆரோக்கியப் பலன்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.
கடுகில் சினிகிரின் (Sinigrin), மைரோசின் (Myrosin), ஈகோசெனோக் (Eicosenoic), ஓலீக் (Oleic) , பால்மிடிக் (Palmitic) போன்ற மனித உடலுக்குத் தேவையான அமிலங்கள் நிறைந்துள்ளன. தாது உப்புக்களான கால்சியம், மாங்கனீஸ், தாமிரம், இரும்பு, செலினியம், துத்தநாகம் ஆகியவையும் உள்ளன. மேலும் இதில் பி- காம்ப்ளக்ஸ் வைட்டமின்களான ஃபோலேட்ஸ், நியாசின், தயாமின், ரிபோஃபிளேவின், பைரிடாக்ஸின், பான்டோ தெனிக் ஆகியவையும் உள்ளன.
தென்னிந்தியக் குடும்பங்களின் உணவுகளில் கடுகு தவிர்க்க முடியாத ஒன்று. இது நேரடியாகவும், கடுகு எண்ணெயாகவும் சமையலில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், இப்போது இயற்கையாக விளையும் நாட்டு கடுகுக்குப் பதிலாக, செயற்கையான முறையில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகு விற்பனைக்கு வர இருக்கிறது.

மரபணு மாற்றம் என்றால் என்ன ?
ஒரு விதையின் அடிப்படை பண்புகள் எதையும் மாற்றாமல், அதனுடைய மூலக்கூறுகளில் தங்களுக்குத் தேவையான சில மாற்றங்களைச் செய்து, அதனுடைய வீரியத்தை அதிகரிக்கச் செய்வதே மரபணு மாற்றம்.
உதாரணமாக, தக்காளியில் எப்படி மரபணு மாற்றம் செய்யப்படுகிறது என்பதைப் பார்ப்போம். கடுங்குளிரில் தக்காளிகள் சீக்கிரம் அழுகிவிடும். அவற்றால் குளிரைத் தாங்க முடியவில்லை என்றால், ஆர்டிக் குளிரைத் தாங்கக்கூடிய ஒரு மீனின் மரபணுவை எடுத்து தக்காளிக்குள் வைத்தால், தக்காளி கெட்டுப் போகாமல் பல நாள்கள் இருக்கும். நல்ல லாபம் கிடைக்கும். இதன் பின்னால் இருப்பது வணிக நோக்கம் மட்டுமே அன்றி வேறொன்றும் இல்லை. நாட்டுத் தக்காளிக்கும், மரபணு மாற்றம் செய்யப்பட்ட தக்காளிக்கும் பெரிய அளவில் வேறுபாடு இருக்காது. நம்மால் கண்டுபிடிக்கவும் முடியாது. ஆனால், அதனால் உண்டாகும் பாதிப்புகள் அதிகமாக இருக்கும்..

``மரபணு மாற்றம் என்னென்ன விளைவுகளை உண்டாக்கும்?’’ என்று மருத்துவர் கு.சிவராமனிடம் கேட்டோம்...

"நம் வயிற்றில் உள்ள நல்ல பாக்டீரியாக்களின் மரபணுக்களை இது பாதிக்கும் என்கிற அச்சம் உலக அளவில் உள்ளது. மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவுகளை உண்ணும்போது, நோய்களை எதிர்க்கும் ஆன்டிபயாடிக் மருந்துகள் வேலை செய்யாது என்ற கருத்தும் இருக்கிறது. மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களால் ஒவ்வாமை ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகின் வேதிப்பொருள்களிலும் மாற்றம் செய்யப்படும். இந்த வேதிப்பொருள்கள் என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பது இதுவரை தெளிவுபடுத்தப்படவில்லை.
இந்த கடுகு மற்ற உணவுப்பொருளுடன் இணையும்போது என்னென்ன பாதிப்புகளை உண்டாக்கும் என்பதும் ஆய்வுசெய்யப்படவில்லை. அதாவது, நம் காய்கறிகளுடன், வெங்காயம், தக்காளி போன்றவற்றுடன் கடுகு கலக்கும்போது என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பதும் கண்டறியப்படவில்லை.
நாட்டு கடுகில் ஏராளமான மருத்துவக் குணங்கள் உள்ளன என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை. ஆனால், மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகில் என்ன மருத்துவக் குணங்கள் உள்ளன என்பதும் தெரியப்படுத்தப்படவில்லை. இதை தெளிவுபடுத்தப்படவேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது.
நாட்டு கடுகுடன், மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகு கலக்கும்போது நாடு முழுவதும் மரபணு மாற்றப்பட்ட கடுகுகளே அதிகமாக இருக்கும். புதிய நோய்களை உருவாக்கும் என்று அச்சப்படக்கூடிய ஒரு பொருளை, மிக வேகமாக விற்பனைக்கு கொண்டுவர முயற்சிப்பது தவறான ஒரு செயல்.

இதை அனுமதித்தால், அடுத்தடுத்து ஒவ்வொரு பயிராக மரபணு மாற்றத்துக்கு அனுமதிக்கப்படும். இந்த மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளின் உரிமைகளை தனியார் நிறுவனங்களிடம் கொடுத்து, அவர்களிடம் இருந்து பெறவைப்பதற்கான முயற்சிதான் இது. இதன் பின்னால் மிகப்பெரிய வணிகம்தான் இருக்கிறது. மக்களின் நலனையும் ஜனநாயகத்தையும் பொருட்படுத்தாத ஒரு செயல் இது’’ என்கிறார் மருத்துவர் சிவராமன்.

மேலும் படிக்க

роХро░ுрод்родுроХро│் роЗро▓்ро▓ை:

рокிро░рокро▓்ропрооாрой рокродிро╡ுроХро│்