роироо்рооுроЯрой் роЗрогைрои்родு роЗро░ுрок்рокро╡ро░்роХро│்

ро╡ெро│்ро│ி, роЬройро╡ро░ி 12, 2018

роЗро╕்ро▓ாрод்родிрой் роТро│ிропிро▓் роЗро│ைроЮро░் роЪрооூроХроо்,

﷽﷽இஸ்லாத்தின் ஒளியில்.. பேறு பெற்ற இளைஞர் சமூகம

சமீப காலமாக கலாச்சார சீரழிவுகளில் தங்களையும் இணைத்துக் கொள்ளும் சமூகமாக இஸ்லாமிய சமூகம் மாறிக் கொண்டிருக்கின்றது.

அதிலும் குறிப்பாக இன்றைய இளைஞர் சமூகம் தங்களை ஈடுபடுத்தி, தங்களின் இஸ்லாமிய அடையாளங்களை இழந்து வரும் போக்கும் அதிகரித்திருக்கின்றது.

அப்படியொரு கலாச்சாரச் சீரழிவு இதோ “காதலர் தினம்” எனும் பெயரில் எதிர் நோக்கி இருக்கிறது.

அதில் சிக்கிக் கொள்ளாமல் இருக்கவும், இளைஞர் சமூகத்திற்கான இலக்காக இஸ்லாம் வகுத்திருக்கிற எல்கைகளை அறிந்து கொள்ளும் பொருட்டும் ஒரு சில செய்திகளை பரிமாறிக் கொள்வது காலத்தின் கட்டாயமாகும்.

மனித வாழ்வின் முக்கியப் பருவம்இளமைப் பருவம். இப்பருவம் அளப்பரியஆற்றலைத் தன்னகத்தே கொண்டுள்ளது.

இளமைப் பருவம் என்பது இறைவனால்மனித சமூகத்திற்கு வழங்கப்பட்டிருக்கின்றமகத்தான அருட்கொடையும் கூட.

இளமைப் பருவத்தை இஸ்லாமிய ஒளியில்திட்டமிட்டு மிகச் சரியாக பயன்படுத்துகிறஇளைஞர் சமூகம் மாத்திரமே வாழ்விலும்,சமூகத்திலும் வெற்றி பெற்றவர்களாக வலம் வரஇயலும்.

இளமைப் பருவத்தை இஸ்லாத்தின்நிழலில் அழைத்துச் சென்றவனுக்கு வல்லஇறைவன் நாளை மஹ்ஷர் பெருவெளியில் தன்அரியாசணத்தின் கீழ் நிழல் தருவான் எனஇஸ்லாம் உயர்த்திக் கூறுகின்றது.

ஆனால், வாழ்வியல் வெற்றி, சமூக வெற்றி,மஹ்ஷர் வெற்றி என இந்த வெற்றிபெற்றவர்களின் பட்டியலில் சிலர் மட்டுமே இடம்பெற்றிருக்கின்றார்கள்.

பெரும்பாலானவர்கள் இடம் பெறவில்லைஎன்பதும், அழிவின் விளிம்பில் இருக்கிறார்கள்என்பதும் தான் வருத்தத்தை தருகிற நிதர்சனமானஉண்மையாகும்.

எனவே, அழிவின் விளிம்பில் இருக்கிறஇளைஞர்களை ஈடேற்றத்தின் பால் அழைத்துவருவதும், இருளில் தத்தளித்துக் கொண்டிருக்கிறஇளைஞர்களை விடியலை நோக்கி பயணிக்கவைப்பதும், தோல்வியை ஆரத்தழுவிக்கொண்டிருக்கிற இளைஞர்களை வெற்றிபெற்றவர்களின் பட்டியலில் இடம் பெறச்செய்வதும் இன்றைய இஸ்லாமிய சமூகத்தின்இன்றியமையாத கடமையாகும்.

அதுவே, இன்றைய சமூகச் சூழலில் கட்டாயமும் கூட.

எனவே, நாம் இளைஞர் சமூகத்தை பாதுகாக்கிற பயணத்தை தொடங்கி விட்டோம் எனில், சீர்திருத்தம் செய்ய முயல்கிறோம் என்றால் அழிவின் விளிம்பில் இருக்கிற, இருளில் தத்தளித்துக் கொண்டிருக்கிற, தோல்வியை ஆரத்தழுவிக் கொண்டிருக்கிற இளைஞர் சமூகத்தை அடையாளம் கண்டு கொள்வது மிகவும் அவசியமாகும்.

இதோ அவர்களின் அடையாளங்களும்... சீர்திருத்த முறைகளும்...

1. கற்பனையில் வாழ்ந்து கொண்டிருக்கும் இளைஞன், இவன் அழிவின் விளிம்பில் நின்று கொண்டிருக்கின்றான்.

இவனைக் கண்டு பிடிப்பது ஒன்றும் அரிதான காரியம் இல்லை. படித்த படிப்பிற்கான வேலையை மட்டுமே செய்வேன் என விடாப்பிடியாக இருந்து கொண்டு, வீட்டிற்கும், ஊருக்கும், சமூகத்திற்கும், நாட்டிற்கும் பயன் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருப்பவன்.

இவன் வாழ்க்கை வெறும் கனவுகளிலும், கற்பனைகளிலும் மட்டுமே கரைந்து கொண்டிருக்கும்.

இவனுக்கு வாழ்க்கை என்றால் என்ன? என்றே தெரியாது. இத்தைகைய மனப் பாங்கு கொண்ட இளைஞர்கள் சமூகத்தில் நிறைந்தே காணப்படுகின்றார்கள்.

இவர்களுக்கான சீர்திருத்தங்களில் மிக முக்கியமானது இது தான்.

 வாழ்க்கையை உணர்த்த வேண்டும்....

1. இளமை என்பது...

عن بن عباس رضي الله عنهما قال : قال رسول الله صلى الله عليه وسلم لرجل وهو يعظه : " اغتنم خمسا قبل خمس شبابك قبل هرمك وصحتك قبل سقمك وغناءك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك "
أخرجه الحاكم في المستدرك رقم ( 7846 ) 4 / 341 وقال : هذا حديث صحيح على شرط الشيخين ولم يخرجاه ، وابن أبي شيبة رقم ( 34319 )

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:

”அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களிடம் அறிவுரை கேட்டு வந்த ஒருவருக்கு அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அறிவுரை பகர்ந்தவண்ணம் கூறினார்கள்: “நீர் ஐந்து விஷயங்களை ஐந்து விஷயங்களுக்கு முன் அரிய வாய்ப்புக்களாய்க் கருதுவீராக!

1. நீர் முதுமையடைவதற்கு முன்னால் உம் இளமையயும், 2. நீர் நோயுறுவதற்கு முன்னால் உம் ஆரோக்கியத்தையும், 3. நீர் ஏழ்மையடைவதற்கு முன்னால் உம் செல்வநிலையையும், 4. நீர் பணிகளில் ஈடுபடுவதற்கு முன்னால் உமக்கு கிடைக்கும் ஓய்வையும், 5. நீர் மரணமடைவதற்கு முன்னால் உமது வாழ்நாளையும் நீர் அரிய வாய்ப்புக்களாய்க் கருதி பயன்படுத்திக் கொள்வீராக!”

2. வாழ்நாளில் ஒரு நாள் என்பது...

وقال ابن مسعود: “ما ندمت على شيء ندمي على يوم غربت شمسه، نقص فيه أجلي، ولم يزدد فيه عملي”.

இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் கூறுவார்களாம்: “என் வாழ்வில் என்னை விட்டும் தப்பிப்போன எந்த ஒரு விஷயத்திற்காகவும் துளி அளவு கூட நான் வருத்தப்பட்டது கிடையாது. ஆனால், ஒவ்வொரு நாள் சூரியன் மறைகிற போதும் ஒரேயொரு விஷயத்தைக் குறித்து மாத்திரம் நான் மிகவும் வருத்தப்பட்டிருக்கிறேன்.

”நேற்றை விட அதிகப்படியான எந்தவொரு நற்செயலும் செய்யாமல் என் வாழ்நாளில் ஒரு நாள் கழிந்து விட்டதே!”... என்று.

قال الحسن البصري:

“ما من يوم يمرُّ على ابن آدم

إلا وهو يقول: يا ابن آدم، أنا يوم جديد، وعلى عملك شهيد، وإذا ذهبت عنك لم أرجع إليك، فقدِّم ما شئت تجده بين يديك، وأخِّر ما شئت فلن يعود إليك أبداً”.

ஹஸன் அல் பஸரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: “மனிதனைக் கடந்து செல்கிற எந்த ஒரு நாளும் இப்படிச் சொல்லாமல் கடந்து செல்வதில்லை.

ஓ ஆதமின் மகனே! நான் உனக்கான புத்தம் புதிய நாளாவேன். நீ என்னை என்ன செய்யப் போகிறாய்? என்பதைக் காண நான் ஆவலாய் இருக்கின்றேன்.

நான் சென்று விட்டால் இனி ஒருபோதும் உன்னிடம் திரும்பி வரப்போவதில்லை.

நீ விரும்பினால் என்னை அழகிய முறையில் பயன்படுத்திக்கொள்! அதற்கான பலனை உன் வாழ்வில் நீ பெற்றுக் கொள்வாய்!

நீ விரும்பினால் என்னை பயன்படுத்தாமல் நாளைக்கு செய்கிறேன் என்று தள்ளிப்போடு!ஆனால், ஒன்றை நீ நன்றாக விளங்கிக்கொள்!இன்றாகிய நான் இப்போது உன்னை விட்டும் சென்று விட்டால் இனி எப்போதும் வரப்போவதில்லை.”

يقول أحد الصالحين: “أوقات العبد أربعة لا خامس لها: النعمة، والبلية، والطاعة، والمعصية. و لله عليك في كل وقت منها سهم من العبودية يقتضيه الحق منك بحكم الربوبية: فمن كان وقته الطاعة فسبيله شهود المنَّة من الله عليه أن هداه لها ووفقه للقيام بها، ومن كان وقته النعمة فسبيله الشكر، ومن كان وقته المعصية فسبيله التوبة والاستغفار، ومن كان وقته البلية فسبيله الرضا والصبر

3. வாழ்க்கை என்பது…

மேன்மக்களான ஸாலிஹீன்களில் ஒருவர் கூறுகின்றார்: “ஓர் அடியானின் கால நேரம் என்பது நான்கு வகைகள் ஆகும். ஐந்தாவதாக ஒன்று கிடையாது.

1. ஓர் அடியான் தன் வாழ்வை அல்லாஹ் வழங்கியிருக்கிற அருட்கொடையாகக் கருதி கழிப்பானேயானால் அல்லாஹ் அவன் வாழ்க்கையை நன்றி செலுத்துவோரின் பாதையில் வழி நடத்துவான்.

அதன் விளைவாக அவன் வாழ்க்கை அல்லாஹ்வின் அருட்கொடைகள் நிறைந்ததாய் அமைந்து விடுகின்றது.

لَئِنْ شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ

அல்லாஹ் கூறுவது போன்று: “நீங்கள் நன்றி செலுத்துவீர்களாயின் நிச்சயம் நான் உங்களுக்கு மென்மேலும் வழங்குவேன்.”                 (அல்குர்ஆன்: 14:7 )

2. ஓர் அடியான் தன் வாழ்வை அல்லாஹ்விற்கு கட்டுப்பட்ட நிலையிலேயே கழிப்பானேயானால் அல்லாஹ் பேருபகாரம் வழங்கப்பட்டோரின் பாதையில் வழி நடத்துவான்.ஆம்! நேர்வழியிலும், நேர்வழியின் மீது நிலைத்திருக்கிற பேருபகாரத்தை வழங்குவான்.

அதன் விளைவாக அவனது வாழ்க்கை ஈருலகத்திலும் சோபனத்திற்குரியதாய் அமைந்து விடுகின்றது.

إِنَّ الَّذِينَ قَالُوا رَبُّنَا اللَّهُ ثُمَّ اسْتَقَامُوا تَتَنَزَّلُ عَلَيْهِمُ الْمَلَائِكَةُ أَلَّا تَخَافُوا وَلَا تَحْزَنُوا وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنْتُمْ تُوعَدُونَ () نَحْنُ أَوْلِيَاؤُكُمْ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَفِي الْآخِرَةِ

அல்லாஹ் கூறுவது போன்று: “எவர்கள்”அல்லாஹ் தான் எங்கள் இறைவன்” என்று கூறி பின்னர் அதில் உறுதியாக நிலைத்து நின்றார்களோ திண்ணமாக, அவர்கள் மீது {மரண நேரத்தின் போது} வானவர்கள் இறங்குகின்றனர்.மேலும், அவர்களிடம் கூறுகின்றார்கள்:

“அஞ்சாதீர்கள்! கவலைப்படாதீர்கள்!உங்களுக்கு வாக்களிக்கப்பட்டிருக்கும் சுவனத்தின் நற்செய்தியினால் மகிழ்ச்சியடையுங்கள்! நாங்கள் உங்களுக்கு உற்ற துணையாய் இருப்போம்; இந்த உலக வாழ்விலும் மறுமையிலும்!”

3. ஓர் அடியான் தன் வாழ்வை நல்லறங்களோடு அல்லாஹ்விற்கு மாறு செய்த நிலையிலும் கழிக்கின்றானோ அல்லாஹ் அந்த அடியானுக்கு ஒரு வாய்ப்பாக பாவமன்னிப்பு எனும் பாதையை திறந்து விடுவான்.

அதன் விளைவாக அவனது வாழ்க்கை அல்லாஹ்வின் கருணைக்கும், மன்னிப்புக்கும் உரியதாய் அமைந்து விடுகின்றது.

وَآخَرُونَ اعْتَرَفُوا بِذُنُوبِهِمْ خَلَطُوا عَمَلًا صَالِحًا وَآخَرَ سَيِّئًا عَسَى اللَّهُ أَنْ يَتُوبَ عَلَيْهِمْ إِنَّ اللَّهَ غَفُورٌ رَحِيمٌ ()

அல்லாஹ் கூறுவது போன்று: “மேலும், தம் குற்றங்களை ஒப்புக் கொண்டிருக்கும் வேறு சிலரும் அவர்களில் உள்ளனர். அவர்கள் நற்செயலோடு தீய செயலையும் கலந்து விட்டிருக்கின்றார்கள். ஆயினும், அல்லாஹ் அவர்கள் மீது கருணை புரியக்கூடும்!ஏனென்றால், திண்ணமாக அல்லாஹ் பெரிதும் மன்னிப்பவனும், கருணை புரிபவனும் ஆவான்.”                ( அல்குர்ஆன்: 9:102 )

4. ஓர் அடியான் தன் வாழ்வை சோதனைகள் நிறைந்ததாய் கழிக்கின்றானோ அல்லாஹ் அந்த அடியானுக்கு பொறுமையாளர்கள், சோதனைகளை அல்லாஹ்விற்காக பொருந்திக் கொள்கின்றவர்கள் ஆகியோரின் பாதைகளில் பயணிக்க வைத்து விடுவான்.

அதன் விளைவாக அவனது வாழ்க்கை சோபனத்திற்குரியதாய், அல்லாஹ்வின் அருளுக்கு சொந்தமானதாய் அமைந்து விடுகின்றது.

وَبَشِّرِ الصَّابِرِينَ () الَّذِينَ إِذَا أَصَابَتْهُمْ مُصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ () أُولَئِكَ عَلَيْهِمْ صَلَوَاتٌ مِنْ رَبِّهِمْ وَرَحْمَةٌ وَأُولَئِكَ هُمُ الْمُهْتَدُونَ ()

அல்லாஹ் கூறுவது போன்று: “(வாழ்க்கையில் சோதனையின் போது)பொறுமையை மேற்கொள்கின்றவர்களுக்கு (நபியே! ) நீர் நற்செய்தி

கூறுவீராக! அவர்கள் எத்தகையோர் எனில், தங்களுக்கு ஏதேனும் துன்பம் ஏற்படும் போது “நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள். மேலும், நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்லக்கூடியவர்களாக இருக்கின்றோம்” என்று சொல்வார்கள்.

அத்தகையோர் மீது அவர்களின் இறைவனிடமிருந்து நல்வாழ்த்துக்களும்,நல்லருளும் உண்டாகும். இன்னும் அத்தகையோர் தாம் நேர்வழி பெற்றவர்கள்.”       ( அல்குர்ஆன்: 2:155 – 157 )

இத்தகைய வாழ்க்கையை வாழாத எந்த ஒருவரும் அழிவின் விளிம்பிலேயே இருக்கின்றார்கள் என்பதை தெளிவாக உணர முடிகின்றது.

4. காலம், நேரம் என்பது…

فقد أقسم الله به في مطالع سور عديدة بأجزاء منه مثل الليل، والنهار، والفجر، والضحى، والعصر، كما في قوله تعالى: ( واللَّيْلِ إِذَا يَغْشى والنَّهَارِ إِذَا تَجَلَّى ) ، ( وَالْفَجْرِ وَلَيَالٍ عَشْرٍ ) ، ( وَالضُّحَى وَاللَّيْلِ ) ، ( وَالْعَصْرِ إِنَّ الإِنْسَانَ لَفِيْ خُسْر ) . ومعروف أن الله إذا أقسم بشيء من خلقه دلَّ ذلك على أهميته وعظمته، وليلفت الأنظار إليه وينبه على جليل

மனித வாழ்க்கையில் கால நேரங்கள் எவ்வளவு முக்கியமானவை என்பதை மனித சமூகம் குறிப்பாக இளைஞர் சமூகம் உணரும் முகமாக அல்லாஹ் தன் திருமறையில் பல்வேறு இடங்களில் காலம், அதிகாலை நேரம், இரவு, பகல்,முற்பகல் ஆகியவற்றின் மீது சத்தியமிட்டுக் கூறுகின்றான்.

அல்லாஹ் ஒரு விஷயத்தின் மீது சத்தியம் செய்து சொல்கிறான் என்றால் அதன் முக்கியத்துவத்தை உணர முன் வர வேண்டும்.

எனவே, வாழ்க்கையில் முன்னேற ஈடேற்றம் பெற கால நேரங்களை பயன் படுத்திக் கொள்ளவேண்டும்.

அதை விட்டு விட்டு கற்பனையிலும்,கனவுகளிலும் இன்றைய நவீன இளைஞர் சமூகம் வாழ்க்கையை கழித்துக் கொண்டு அழிவின் விளிம்பில் நின்று கொண்டிருக்கிறது.

2. சுய நலம் நிறைந்த இளைஞன்,இவன் அழிவின் விளிம்பில் நின்று கொண்டிருக்கின்றான்.

பெற்றோர், உறவினர், மனைவி மக்கள் என குறுகிய வட்டத்தில் நின்று கொண்டு அவர்களுடனான தொடர்பை வளப்படுத்துவதிலும், அவர்களுக்குச் சேவை செய்வதிலும் தான் இன்றைய நவீன இளைஞர் சமூகம் ஆர்வத்துடன் இருக்கின்றனர்.

ஆனால், சமுதாயத்தின் ஏனைய பலவீனமான மக்கள், நாதியற்றவர்கள், ஏழைகள், வறியவர்கள் ஆகியோர்களுடனான தொடர்பை வளப்படுத்துவதிலோ, அவர்களுக்குத் தொண்டுகள் செய்வதிலோ ஆர்வம் இருப்பதில்லை.

குறைந்த பட்ச சேவையான வாயளவில் ஆறுதல் சொல்லக்கூட நேரம் ஒதுக்குவதில்லை. மனதளவில் அவர்கள் குறித்து நல்லெண்ணமும் கொள்வதில்லை.

இவர்கள் தங்களின் குறுகிய வட்டத்தை தார்மீகக்கடமையாக எண்ணி தவறான பாதையில் சென்று கொண்டிருக்கின்றனர். இந்த சிந்தனை கொண்டவர்கள் சமூகத்தில் நிறைந்தும் காணப்படுகின்றனர்.

இவர்களுக்கான சீர்திருத்தங்களில் மிக முக்கியமானது இது தான்.

சமூக அக்கறை, மனித நேயம் என்றால் என்ன? என்பதை உணர்த்துவது...

1. சமூக அக்கறை இஸ்லாத்தின் உயரிய நடைமுறையாகும்.

وَاعْبُدُوا اللَّهَ وَلَا تُشْرِكُوا بِهِ شَيْئًا وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَبِذِي الْقُرْبَى وَالْيَتَامَى وَالْمَسَاكِينِ وَالْجَارِ ذِي الْقُرْبَى وَالْجَارِ الْجُنُبِ وَالصَّاحِبِ بِالْجَنْبِ وَابْنِ السَّبِيلِ وَمَا مَلَكَتْ أَيْمَانُكُمْ إِنَّ اللَّهَ لَا يُحِبُّ مَنْ كَانَ مُخْتَالًا فَخُورًا ()

”மேலும், நீங்கள் அனைவரும் அல்லாஹ்வுக்கே அடிபணிந்து வாழுங்கள். அவனோடு எதனையும் இணையாக்காதீர்கள். தாய் தந்தையரிடம் நல்ல விதமாக, அன்பொழுக நடந்து கொள்ளுங்கள்! மேலும், உறவினர்கள், அநாதைகள், வறியவர்கள் ஆகியோருடனும் நல்ல விதமாக நடந்து கொள்ளுங்கள்.

மேலும், உறவினரான அண்டை வீட்டார், உறவினரல்லாத அண்டை வீட்டார், அருகிலிருக்கும் நண்பர், மற்றும் வழிப்போக்கர், உங்கள் பொறுப்பின் கீழ் இருக்கும் பணியாளர்கள் ஆகியோருடனும் நல்ல விதமாக நடந்து கொள்ளுங்கள்.

திண்ணமாக, அறிந்து கொள்ளுங்கள்! வீண் பெருமையிலும், கர்வத்திலும் உழல்பவர்களை அல்லாஹ் ஒரு போதும் நேசிப்பதில்லை.”      ( அல்குர்ஆன்: 4:30 )

சேவை, தொண்டு என்றால் உடனே நம்முடைய மனம் பொருளாதார உதவியின் பக்கம் தான் செல்கிறது.

இஸ்லாம் அதையும் தாண்டி ஒரு சிறு புன்னகை, பிறரைப் பற்றி நல்லெண்ணம் கொள்வது, குரோதமின்றி நடப்பது, பிறரை விமர்சிக்காமல் இருப்பது, நல்ல பண்பாடுகளுடன் நடப்பது, இரக்கம் கொள்வது, நேசம் கொள்வது, உள்ளண்போடு நடந்து கொள்வது என பரந்து விரிந்த பல உயர் பண்பாட்டு விழுமியங்களைக் கொண்டதாக சேவையையும், தொண்டையும் விவரிக்கின்றது.

மேன்மக்களான நபித்தோழர்கள் இந்த விஷயத்தில் முழு உம்மத்திற்கும் மிகப் பெரிய முன்னோடிகளாக விளங்கியிருக்கின்றார்கள் என்பதை அவர்களின் வரலாற்றை வாசிக்கும் போது நம்மால் உணர முடிகின்றது.

அத்தோடு இப்படியெல்லாம் ஒரு சமூகத்தால் எப்படி வாழ முடிந்திருக்கின்றது என வியப்பின் விளிம்பிற்கே நம்மை அழைத்துச் செல்வதையும் உணர முடிகின்றது.

நபித்தோழர்களின் வாழ்விலிருந்து....

وقال الإمام أحمد: حدثنا خَلَف بن الوليد، حدثنا إس

رائيل، عن أبي إسحاق، عن أبي مَيْسَرة، عن عمر بن الخطاب [رضي الله عنه] أنه قال: لما نزل تحريم الخمر قال: اللهم بَيّن لنا في الخمر بيانًا شافيًا. فنزلت هذه الآية التي في البقرة: { يَسْأَلُونَكَ عَنِ الْخَمْرِ وَالْمَيْسِرِ قُلْ فِيهِمَا إِثْمٌ كَبِيرٌ } فَدُعي عمر فقرئت عليه، فقال: اللهم بين لنا في الخمر بيانًا شافيًا. فنزلت الآية التي في سورة النساء: { يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لا تَقْرَبُوا الصَّلاةَ وَأَنْتُمْ سُكَارَى } فكان منادي رسول الله صلى الله عليه وسلم إذا أقام الصلاة نادى: ألا يقربن الصلاة سكران. فدعي عمر فقرئت عليه، فقال: اللهم بين لنا في الخمر بيانًا شافيًا. فنزلت الآية التي في المائدة، فدعي عمر فقرئت عليه فلما بلغ: { فَهَلْ أَنْتُمْ مُنْتَهُونَ } قال عمر: انتهينا.

وهكذا رواه أبو داود، والترمذي، والنسائي من طرق، عن إسرائيل، عن أبي إسحاق عَمْرو بن عبد الله السَّبِيعي وعن أبي ميسرة -واسمه عمرو بن شُرَحبيل الهمداني-عن عُمَر، به.

மது குறித்த இறைவனின் வழிகாட்டல் படிப்படியாக இறைவசனங்களாக இறக்கியருளப்பட்ட போது, அவ்வசனங்களை பெருமானார் {ஸல்} அவர்கள் உமர் (ரலி) அவர்களை அழைத்து சத்திய ஸஹாபாக்களுக்கு ஓதிக்காட்டச் சொல்வார்களாம்.

அப்பொழுது, உமர் (ரலி) அவர்கள் பெருமானாரின் கட்டளைக்கிணங்க ஸஹாபாக்களிடையே ஓதிக்காட்டி விட்டு “யா அல்லாஹ் மது சம்பந்தமாக தெளிவான போதுமான ஓர் கட்டளையை எங்களுக்கு நீ இறக்கியருள வேண்டும்” என மனமுருகி பிரார்த்திப்பார்களாம்.

இறுதியாக, அல்லாஹ் மதுவை முற்றிலுமாக தடை செய்து வசனங்களை இறக்கியருளினான்.

”இறைநம்பிக்கை கொண்டவர்களே! மது, சூதாட்டம், பலிபீடங்கள், குறிபார்க்கும் அம்புகள் ஆகியவை அருவருக்கத்தக்க ஷைத்தானியச் செயல்களாகும். அவற்றை நீங்கள் தவிர்த்துக் கொள்ளுங்கள்! அதன் மூலம் நீங்கள் வெற்றி பெறலாம்.

மது மற்றும் சூதாட்டத்தின் வாயிலாக உங்களுக்கிடையில் பகைமையையும், வெறுப்பையும் ஏற்படுத்தி அல்லாஹ்வை நினைவு கூர்வதிலிருந்தும், தொழுகையிலிருந்தும் தடுத்துவிடவே ஷைத்தான் விரும்புகின்றான். இதற்குப் பிறகாவது நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்வீர்களா?”

அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் நீங்கள் கட்டுப்படுங்கள். மாறு செய்வதிலிருந்து நீங்கள் விலகியிருங்கள். நீங்கள் புறக்கணித்து விட்டால், நமது தூதைத் தெள்ளத் தெளிவாக எடுத்துரைப்பது மட்டுமே நமது தூதர் மீது கடமையாகும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.”           ( அல்குர்ஆன்: 5:90,91,92 )

இந்த இறைவசனத்தை ஓதியவராக ஓர் அறிவிப்பாளர் மதீனாவின் வீதி வழியாக முழங்கிக் கொண்டே செல்கின்றார்.

நபித்தோழர்களின் செவிகளில் இவ்வசனம் நுழைந்த மாத்திரத்தில் “தவிர்த்துக் கொள்கின்றோம் இறைவா!” “விலகிக் கொண்டோம் இறைவா!” என்ற முழக்கத்துடன் தங்களின் கரங்களிலும், தங்கள் வீடுகளில் சேமித்தும் வைத்திருந்த மதுபானங்களை கீழே ஊற்றினார்கள்.

அதற்காக பயன்படுத்திய பாத்திரங்களையும், பீப்பாய்களையும் உடைத்தெறிந்தார்கள்.

அத்தோடு அவர்கள் நிறுத்தி இருந்தால் நாம் இங்கே இந்தச் செய்தியை குறிப்பிட்டு இருக்கமாட்டோம்.

ஆனால், அடுத்து ஒரு காரியத்தைச் செய்தார்கள். அது எவ்வளவு மகத்தான சேவை தெரியுமா? எத்துனை மகத்தான தொண்டு தெரியுமா?

ஆம், அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் அருள் நிறைந்த சபையில் நபித்தோழர்களெல்லாம் அவதானித்திருந்த ஒரு பொழுதிலே ஒட்டுமொத்தமாய் ஒரே குரலாய்....

وقال الناس: يا رسول الله، ناس قتلوا في سبيل الله، [وناس] ماتوا على سرفهم  كانوا يشربون الخمر ويأكلون الميسر، وقد جعله الله رجسًا من عمل الشيطان؟ فأنزل الله تعالى: { لَيْسَ عَلَى الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ جُنَاحٌ فِيمَا طَعِمُوا } إلى آخر الآية، وقال النبي صلى الله عليه وسلم: "لو حرم عليهم لتركوه كما تركتم". انفرد به أحمد.

“அல்லாஹ்வின் தூதரே! இதோ அல்லாஹ்வின் கட்டளை எங்களுக்கு முன்பாக இறங்கிற்று! அது ஷைத்தானியச் செயல் என்று எங்களுக்கு உணர்த்தப்பட்டு விட்டது. நாங்களும் ரப்பிற்கு கட்டுப்பட்டு அந்த இழிசெயலை முழுமையாக விட்டு விட்டோம்.

ஆனால், இந்த இறைக்கட்டளை இறக்கப்படும் முன், இது ஷைத்தானியச் செயல் என்று தெரியாமல் எத்தனையோ பேர் மது அருந்தியிருக்கின்றார்கள். சூதாடிய பணத்தில் உண்டிருக்கின்றார்கள்.

அவர்கள் பத்ரிலும், உஹதிலும் இன்னும் சில யுத்தங்களிலும் கலந்து கொண்டு ஷஹாதத் வீர மரணமும் அடைந்திருக்கின்றார்கள்.

அவர்களின் நிலை என்ன? அவர்களை அல்லாஹ் எவ்வாறு நடத்துவான்? “ என்று கேட்டார்கள்.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் மௌனமாக இருக்கின்றார்கள். சில நொடிப்பொழுதில் நபிகளாருக்கு இறைச் செய்தி வந்து கொண்டிருப்பதை நபித்தோழர்கள் உணர்கின்றார்கள்.

அப்போது நபி {ஸல்} அவர்கள்: “இறைநம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிகின்றவர்கள், முன்னர் எதையும் உண்டவர்கள் பற்றி அவர்கள் மீது குற்றமில்லை. ஆனால், இனி தடுக்கப்பட்டவைகளில் இருந்து இறைநம்பிக்

கையாளர்கள் விலகியிருக்க வேண்டும்.

மேலும், இறைநம்பிக்கையில் உறுதியாக நிலைத்திருப்பவர்களாகவும், நற்செயல் புரிபவர்களாகவும், இன்னும் எந்தெந்தப் பொருள்களை விட்டு தடுக்கப்பட்டிருக்கின்றனரோ அவற்றிலிருந்து விலகியிருப்பவர்களாகவும், மேலும், இறைக்கட்டளைகளை ஏற்று வாழ்பவர்களாகவும், இன்னும் இறையச்சத்துடன் நன்னடத்தையை மேற்கொள்பவர்களாகவும் திகழ வேண்டும். அல்லாஹ் நன்னடத்தை கொண்டோரை அதிகம் நேசிக்கின்றான்.” ( அல்குர்ஆன்: 5:93 ) எனும் இறைவசனத்தை ஓதிக்காண்பித்த பின்னர் “இதே இறைக்கட்டளை அவர்கள் உயிர் வாழ்கிற போதும் இறக்கியருளப்பட்டிருக்குமேயானால் அவர்களும் உங்களைப் போன்றே நடந்து கொண்டிருப்பார்கள்”என்று நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.

      ( நூல்: தஃப்ஸீர் இப்னு கஸீர், தஃப்ஸீர் அல்குர்துபீ, முஸ்னத் அஹ்மத் )

மேன்மக்களான நபித்தோழர்கள் இதற்கு முன்னர் இது போன்ற இன்னொரு இரு சந்தர்ப்பங்களிலும் இறந்து போன முஃமின்கள் விஷயத்தில் கவலை கொண்ட போது அல்லாஹ் அவர்களின் விஷயமாக இறைவசனங்களை இறக்கியருளி தெளிவுபடுத்தினான்.

وكان الذي مات على القبلة قبل أن تُحَوّل قبل البيت رجالا قتلوا لم ندر ما نقول فيهم، فأنزل الله عز وجل { وَمَا كَانَ اللَّهُ لِيُضِيعَ إِيمَانَكُمْ إِنَّ اللَّهَ بِالنَّاسِ لَرَءُوفٌ رَحِيمٌ }

انفرد به البخاري من هذا الوجه  . ورواه مسلم من وجه آخر .

பைத்துல்முகத்தஸ்ஸிலிருந்து கிப்லா பைத்துல்லாஹ்வை நோக்கி மாற்றப்பட்டபோது“அல்லாஹ்வின் தூதரே! பைத்துல்முகத்தஸை நோக்கி தொழுத, காலஞ்சென்ற எங்கள் சகோதரர்களின் நிலை என்ன?” என வேண்டி நின்ற போது..

“அல்லாஹ் உங்களுடைய ஈமானை – இறை நம்பிக்கையை ஒரு போதும் வீணாக்கி விடமாட்டான்” என அல்லாஹ் இறக்கியருளிய இறைவசனத்தை நபி {ஸல்} அவர்கள் ஓதிக்காண்பித்தார்கள்.

إِنَّ الَّذِينَ تَوَفَّاهُمُ الْمَلَائِكَةُ ظَالِمِي أَنْفُسِهِمْ قَالُوا فِيمَ كُنْتُمْ قَالُوا كُنَّا مُسْتَضْعَفِينَ فِي الْأَرْضِ قَالُوا أَلَمْ تَكُنْ أَرْضُ اللَّهِ وَاسِعَةً فَتُهَاجِرُوا فِيهَا فَأُولَئِكَ مَأْوَاهُمْ جَهَنَّمُ وَسَاءَتْ مَصِيرًا () إِلَّا الْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ وَالْوِلْدَانِ لَا يَسْتَطِيعُونَ حِيلَةً وَلَا يَهْتَدُونَ سَبِيلًا () فَأُولَئِكَ عَسَى اللَّهُ أَنْ يَعْفُوَ عَنْهُمْ وَكَانَ اللَّهُ عَفُوًّا غَفُورًا ()

ஹிஜ்ரத் கடமையாகி, ஹிஜ்ரத் செய்யாமலிருப்பவர்களின் நிலைகுறித்து அல்லாஹ் அந்நிஸா அத்தியாயத்தில் 97 முதல் 99வரையிலான இறைவசனத்தை இறக்கியருளினான்.

அந்த இறைவசனத்தில் கூறப்பட்டுள்ள கடுமையான தண்டனை மக்காவில் வயோதிகத்தின் காரணமாக ஹிஜ்ரத் செய்யாமல் இருந்த ளம்ரா இப்னு ஜுந்துப் (ரலி) அவர்களின் மனதை உலுக்கிற்று.

وروى معمر عن قتادة قال: لما نزلت (إِنَّ الَّذِينَ تَوَفَّاهُمُ الْمَلائِكَةُ ظالِمِي أَنْفُسِهِمْ) الآية، قال رجل من المسلمين وهو مريض: والله ما لي من عذر! إني لدليل في الطريق، وإني لموسر، فاحملوني. فحملوه فأدركه الموت في الطريق، فقال أصحاب النبي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: لو بلغ إلينا لتم أجره، وقد مات بالتنعيم. وجاء بنوه إلى النبي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وأخبروه بالقصة، فنزلت هذه الآية (ومن يخرج من بيته مهاجرا) الآية. وكان اسمه ضمرة بن جندب،

தம்மக்களை அழைத்துக் கொண்டு மதீனா நோக்கி ஹிஜ்ரத் செய்து வருகிற போது,மதீனாவின் எல்லையான தன்யீமில் வைத்து இறந்து போனார்கள்.

இதைக் கேள்விபட்ட மக்காவின் தலைவர்களும், முஷ்ரிக்குகளும் ஏளனமும்,கேலியும் செய்தனர்.

ளம்ரா (ரலி) அவர்கள் ஹிஜ்ரத் செய்து வந்து வழியிலேயே இறந்து போனார் எனும் செய்தி மதீனாவில் வாழ்கிற முஸ்லிம்களுக்கு தெரிய வந்த போது...

فقال أصحاب النبي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: لو بلغ إلينا لتم أجره، وقد مات بالتنعيم.

“அவர் மாத்திரம் ஹிஜ்ரத் செய்து வந்து ஹிஜ்ரத் உடைய பூமியான மதீனாவில் இறந்து போயிருந்தால் முழுமையான நற்கூலியை இறைவனிடமிருந்து பெற்றுக்கொண்டிருப்பார்” என்று கவலையுடன் பேசிக் கொண்டனர்.

அல்லாஹ் உடனடியாக நபித்தோழர்களின் கவலையை நீக்கி தன்புறத்திலிருந்து வசனத்தை இறக்கியருளினான்.

“மேலும், ஒருவர் அல்லாஹ்வின் பக்கமும், அவனுடைய தூதரின் பக்கமும் ஹிஜ்ரத் செய்வதற்காகத் தன்னுடைய வீட்டைத் துறந்து, வெளியேறிய பிறகு, வழியிலேயே அவருக்கு மரணம் ஏற்பட்டுவிட்டால், திண்ணமாக அவருக்கு நற்கூலி வழங்குவது அல்லாஹ்வின் பொறுப்பாகி விட்டது. அல்லாஹ் மிகவும் மன்னிப்பு வழங்குபவனாகவும், கருணையாளனாகவும் இருக்கின்றான்.” ( அல்குர்ஆன்: 4:100 )

قال عكرمة مولى ابن عباس: طلبت اسم هذا الرجل أربع عشرة سنة حتى وجدته.

இந்தச் செய்தியை அறிவிக்கிற இக்ரிமா (ரலி) அவர்கள் “இந்த இறைவசனம் யார் குறித்து இறக்கியருளப்பட்டது என்பது குறித்தான தேடலில் நான் சுமார் 14 ஆண்டுகளுக்குப் பிறகு தான் அவர் ஜுன்துப் இப்னு ளம்ரா (ரலி) என்பதை” அறிந்து கொண்டேன்.

          

                         ( நூல்: தஃப்ஸீர் குர்துபீ, அல் இஸ்தீஆப் )

இன்று உயிரோடு வாழ்கிற சகமுஸ்லிம்கள் மீது அக்கறை இல்லாமல், சுய நலத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கிற இளைஞர் சமூகம் அக்கால மேன்மக்களான நபித்தோழர்கள் இறந்து போன சகமுஸ்லிம்கள் மீது எத்துனை அக்கறையுடன் செயல்பட்டிருக்கின்றார்கள் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

3. பெற்றோர்களை நிந்திக்கும் இளைஞன். இவனும் அழிவின் விளிம்பில் நின்று கொண்டிருக்கின்றான்.

பெற்றோர்களை அவமதித்தும், பாரமாக நினைத்தும், எதிரியாக கருதியும் வருகிற பேராபத்தான சமூகச் சூழ்நிலையில் நாம் வாழ்ந்து வருகின்றோம்.

இன்று தன் நண்பர்களுக்கு கொடுக்கிற முக்கியத்துவத்தைக் கூட பெற்றோர்களுக்கு ஒரு இளைஞன் தருவதில்லை.

மிகச் சாதரணமாக தூக்கியெறிந்து ஏசிப்பேசுகிற, கைநீட்டி அடிக்கிற, காலால் உதைக்கிற, கொஞ்சம் கூட மதிக்காத ஒரு சூழ்நிலையில் பெரும்பாலான இளைஞர்கள் வாழ்ந்து வருகின்றார்கள்.

இவர்களுக்கான சீர்திருத்தங்களில் மிக முக்கியமானது இது தான்.

பெற்றோர்களின் விஷயத்தில் இஸ்லாம் உயர்த்திக் கூறும் மாண்புகளை, மகத்துவங்களை உணர்த்த வேண்டும்.

1. பெற்றோரின் மாண்புகளும்... மகத்துவங்களும்....

وَوَصَّيْنَا الْإِنْسَانَ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُ وَهْنًا عَلَى وَهْنٍ وَفِصَالُهُ فِي عَامَيْنِ أَنِ اشْكُرْ لِي وَلِوَالِدَيْكَ إِلَيَّ الْمَصِيرُ ()

”மனிதனுக்கு அவனுடைய பெற்றோர் குறித்து நாம் அறிவுறுத்தினோம். அவனுடைய தாய் அவனைச் சிரமத்திற்கு மேல் சிரமப்பட்டு சுமந்தாள். அவன் பால்குடி மறக்க இரண்டாண்டுகள் பிடிக்கும். (ஆகவே, மனிதா!) எனக்கும் உம் பெற்றோருக்கும் நீ நன்றி செலுத்துவாயாக! உனது மீட்சி என்னிடமே உள்ளது.”

                                                       ( அல்குர்ஆன்: 31:14 )

وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِنْدَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُلْ لَهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا () وَاخْفِضْ لَهُمَا جَنَاحَ الذُّلِّ مِنَ الرَّحْمَةِ وَقُلْ رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا ()

( நபியே! ) பெற்றோருக்கு நீர் உதவி புரிந்திடவேண்டுமென உமதிறைவன் தீர்மானித்து விட்டான். பெற்றோரில் ஒருவரோ அல்லது இருவருமோ முதுமை அடைந்த நிலையில் உம்மிடம் இருந்தால் அவர்களைச் “சீ” என்று கூட சொல்ல வேண்டாம். அவர்களை விரட்டவும் வேண்டாம்.

அவர்களிடம் கண்ணியமான சொல்லையே பயன்படுத்துவீராக! அன்பால் உருவான பணிவெனும் இறக்கையை அவர்களுக்காக விரிப்பீராக! என் இறைவா! நான் சிறு குழந்தையாக இருந்த போது என்னை அன்போடு அவர்கள் வளர்த்தது போன்று இப்போது அவர்களுக்கு நீ அருள்புரிவாயாக! என்று பிரார்த்திப்பீராக!”.

                                                    ( அல்குர்ஆன்: 17: 23,24 )

இறைவனுக்குச் செய்ய வேண்டிய கடமைக்கு அடுத்த கடமை…

وَاعْبُدُوا اللَّهَ وَلَا تُشْرِكُوا بِهِ شَيْئًا وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا

“அல்லாஹ்வையே வழிபடுங்கள்.அவனுக்கு எதையும் இணையாக்கி விடாதீர்கள்.மேலும், பெற்றோருக்கு உபகாரம் செய்யுங்கள்.      (அல்குர்ஆன்: 4:36 )

ஹிஜ்ரத்தை விட, ஜிஹாதை விடச் சிறந்த இபாதத்…

وعن عبد الله بن عمرو بن العاص رضي الله عنهما قال: أقبل رجل إلى نبي الله صلى الله عليه وسلم فقال أبايعك على الهجرة والجهاد أبتغي الأجر من الله تعالى قال فهل من والديك أحد حي قال نعم بل كلاهما قال فتبتغي الأجر من الله تعالى قال نعم قال فارجع إلى والديك فأحسن صحبتهما متفق عليه وهذا لفظ مسلم وفي رواية لهما جاء رجل فاستأذنه في الجهاد فقال أحي والداك قال نعم قال ففيهما فجاهد

அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னு அல்ஆஸ்(ரலி) அறிவிக்கிறார்கள்:

ஒருமுறை நபி {ஸல்} அவர்களிடம் ஒரு நபித்தோழர் “அல்லாஹ்வின் தூதரே! நான் அல்லாஹ்விடம் நற்பலன் பெறுவதற்காக ஹிஜ்ரத்தும், ஜிஹாதும் செய்ய தங்களிடம் உறுதிப் பிரமாணம் செய்கிறேன்” எனக் கூறினார்.

அதற்கு, நபி {ஸல்} அவர்கள் அந்தத் தோழரிடம் “உம் பெற்றோரில் எவரும் உயிருடன் இருக்கின்றார்களா?” என்று கேட்டார்கள். “ஆம் இருவரும் உயிருடன் தான் இருக்கின்றார்கள்” என அந்தத்தோழர் பதிலளித்தார்.

அப்போது, நபி {ஸல்} அவர்கள் “நீர் அல்லாஹ்விடம் நற்பலனைத் தேடுகின்றீரா?” என மீண்டும் கேட்டார்கள். அதற்கு, அந்தத்தோழர் “ஆம்”என்று பதிலளித்தார்.

“அப்படியானால், உம் பெற்றோரிடம் திரும்பிச்சென்று அவ்விருவரிடமும் அழகிய முறையில் நடந்துகொள்வீராக!” என அறிவுரை பகர்ந்தார்கள் நபி {ஸல்} அவர்கள்.

                                             ( நூல்:ரியாளுஸ்ஸாலிஹீன் )

அல்லாஹ்விடம் அதிக நேசத்திற்குரிய இபாதத்…

وعن أبي عبد الرحمن عبد الله بن مسعود رضي الله عنه قال سألت النبي صلى الله عليه وسلم أي العمل أحب إلى الله تعالى قال الصلاة على وقتها قلت

ثم أي قال بر الوالدين قلت ثم أي قال الجهاد في سبيل الله متفق عليه

இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: “அல்லாஹ்வின் தூதர் {ஸல்}அவர்களிடம் நான் “அல்லாஹ்வின் தூதரே!நற்செயல்களில் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானது எது?” என்று கேட்டேன். அதற்கு, நபி{ஸல்} அவர்கள் “தொழுகையை அதற்குரிய நேரத்தில் நிறைவேற்றுவது” என்று பதிலளித்தார்கள்.

”அடுத்தது எது?” என்று நான் கேட்டேன்.அதற்கு, நபி {ஸல்} அவர்கள் “பெற்றோருக்கு நன்மை செய்தல்” என்றார்கள்.

”அடுத்தது எது?” என்று நான் கேட்டேன். ”இறைவழியில் அறப்போர் புரிவது” என்று நபி{ஸல்} அவர்கள் பதில் கூறினார்கள்.       ( நூல்:ரியாளுஸ்ஸாலிஹீன் )

அழகிய முறையில் உறவாட அதிக தகுதி படைத்தோர்…

وعنه رضي الله عنه قال جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله من أحق الناس بحسن صحابتي قال أمك قال ثم من قال أمك قال ثم من قال أمك قال ثم من قال أبوك متفق عليه

ஒருமுறை நபி {ஸல்} அவர்களிடம் வருகை புரிந்த ஒரு தோழர், “அல்லாஹ்வின் தூதரே! நான் அழகிய முறையில் நடந்து கொள்ள மிகவும் தகுதியானவர் யார்?” என்று கேட்டார். நபி {ஸல்}அவர்கள் “உம்முடைய தாய்” என பதில் கூறினார்கள்.

”பிறகு யார்?” என்று அந்தத்தோழர் கேட்டார்.அதற்கும் “உமது தாய் தான்” என நபி {ஸல்}அவர்கள் பதில் கூறினார்கள். ”பிறகு யார்?” எனக் கேட்டார் அந்தத்தோழர். அப்போதும் நபி {ஸல்}அவர்கள் “உம்முடைய தாய்” என்றார்கள். “பிறகு யார்?” என்று மீண்டும் அவர் கேட்டார். அப்போது“உமது தந்தை” என்று நபி {ஸல்} அவர்கள் பதில் கூறினார்கள்.

                                             ( நூல்:ரியாளுஸ்ஸாலிஹீன் )

ஆக, பெற்றோர்களின் தகுதி மிகவும் உயர்ந்தது; பெரியது. ஹிஜ்ரத்தை விடவும் ஜிஹாதை விடவும் மாண்பும், மகத்துவமும் நிறைந்தது.

நபித்தோழர்கள் வாழ்விலிருந்து…

وعن ابن عمر رضي الله عنهما قال كانت تحتي امرأة وكنت أحبها وكان عمر يكرهها فقال لي طلقها فأبيت فأتى عمر رضي الله عنه النبي صلى الله عليه وسلم فذكر ذلك له فقال النبي صلى الله عليه وسلم طلقها رواه أبو داود والترمذي وقال حديث حسن صحيح

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: “என் மனைவி மீது நான் அதிகம் நேசம் வைத்திருந்தேன். ஆனால், என் தந்தை உமர்(ரலி) அவர்களோ  என் மனைவியை (என் மனைவியின் சில செயல்பாடுகளால்)வெறுத்தார்கள். மேலும், என்னிடம் என் மனைவியை மணவிலக்கு செய்து விடுமாறு கூறினார்கள். ஆனால், நான் என் மனைவியை மணவிலக்குச் செய்ய மறுத்து விட்டேன்.

அப்போது, என்னை அழைத்துக் கொண்டு நபி {ஸல்} அவர்களின் சபைக்கு வந்த என் தந்தை நடந்த சம்பவங்களை விவரித்தார்கள்.அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த நபி {ஸல்}அவர்கள் என்னிடம் “உமது மனைவியை மணவிலக்கு செய்திடுங்கள்” என்று கூறினார்கள். ( நூல்: ரியாளுஸ்ஸாலிஹீன் )

عن أبي الدرداء رضي الله عنه أن رجلا أتاه فقال: إن لي امرأة وإن أمي تأمرني بطلاقها فقال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: الوالد أوسط أبواب الجنة فإن شئت فأضع ذلك الباب أو احفظه رواه الترمذي وقال حديث حسن صحيح

அபுத்தர்தா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: “ஒரு நபித்தோழர் நபி {ஸல்}அவர்களிடம் வந்தார். “அல்லாஹ்வின் தூதரே! என் தாய் என் மனைவியை மணவிலக்குச் செய்யும் படி என்னை வற்புறுத்துகின்றார். ”நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார்.

அதற்கு, நபி {ஸல்} அவர்கள் “பெற்றோர்கள் சுவனத்து வாசல்களின் மத்திய பாகம் ஆவார்கள்.நீர் நாடினால் அவர்களைப் பாதுகாத்துக் கொள்வீராக! அல்லது வீணாக்கிவிடுவீராக!”என்று கூறினார்கள்.

இந்த இரு நபிமொழிகளுக்கும் விளக்கம் தருகிற அறிஞர் பெருமக்கள் நபி {ஸல்}அவர்களின் பதிலுக்குப் பின்னர் இப்னு உமர் (ரலி)அவர்களும், பெயர் அறியப் படாத அந்த நபித்தோழரும் தமது மனைவியரை மணவிலக்குச் செய்து விட்டனர்.

ஆனால், இன்று சமூகத்திலோ மனைவியின் சொல்லைக் கேட்டு முதியோர் இல்லங்களுக்கு பெற்றோர்களை அனுப்பும் அவலம் அரங்கேறுவதைக் கண்டு வருகின்றோம்.

حَدَّثَنَا وَالِدِي الإِمَامُ أَبُو الْمَعَالِي عَبْدُ الْجَبَّارِ بْنُ فَاخِرٍ ، أنبا أَبُو بِشْرٍ سَهْلُ بْنُ مُحَمَّدِ بْنِ أَحْمَدَ بْنِ سَهْلٍ الدَّارِكِيُّ ، أنبا أَبُو الْحَسَنِ مُحَمَّدُ بْنُ الْحُسَيْنِ بْنِ إِبْرَاهِيمَ بْنِ عَاصِمٍ ، أنبا أَبُو عَلِيٍّ الْحُسَيْنُ بْنُ عَلِيِّ بْنِ مُحَمَّدِ بْنِ أَحْمَدَ الرَّافِقِيُّ ، بِأَنْطَاكِيَةَ ، ثنا عَبْدُ الرَّحْمَنِ بْنُ سَلامٍ ، وَهُوَ الطَّرَسُوسِيُّ ، صَاحِبُ الْمُسْنَدِ ، ثناعُمَرُ بْنُ يُونُسَ ، ثنا عِكْرِمَةُ بْنُ عَمَّارٍ ، حَدَّثَنِي أَبُو كَثِيرٍ ، حَدَّثَنِي أَبُو هُرَيْرَةَ ، قَالَ : كُنْتُ أَدْعُو أُمِّي إِلَى الإِسْلامِ ، فَدَعَوْتُهَا يَوْمًا فَأَسْمَعَتْنِي فِي رَسُولِ اللَّهِ مَا أَكْرَهُ ، فَأَتَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَنَا أَبْكِي ، فَقُلْتُ : يَا رَسُولَ اللَّه

ِ ، إِنِّي كُنْتُ أَدْعُو أُمِّي إِلَى الإِسْلامِ فَتَأْبَى عَلَيَّ فَدَعَوْتُهَا الْيَوْمَ فَأَسْمَعَتْنِي فِيكَ مَا أَكْرَهُ ، فَادْعُ اللَّهَ أَنْ يَهْدِيَ أُمَّ أَبِي هُرَيْرَةَ ، قَالَ: وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " اللَّهُمَّ اهْدِ أُمَّ أَبِي هُرَيْرَةَ " ، قَالَ : فَخَرَجْتُ مُسْتَبْشِرًا بِدَعْوَةِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَمَّا جِئْتُ قَصَدْتُ إِلَى الْبَابِ ، فَإِذَا هُوَ مُجَافٍ ، فَسَمِعَتْ أُمِّي خَشْفَ قَدَمِي فَقَالَتْ : مَكَانَكَ يَا أَبَا هُرَيْرَةَ ، وَسَمِعْتُ خَضْخَضَةَ الْمَاءِ ، قَالَ : فَاغْتَسَلَتْ ثُمَّ لَبِسَتْ دِرْعَهَا وَعَجِلَتْ عَنْ خِمَارِهَا ، فَفَتَحَتِ الْبَابَ ، ثُمَّ قَالَتْ : يَا أَبَا هُرَيْرَةَ ، أَشْهَدُ أَنْ لا إِلَهَ إِلا اللَّهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ ، فَرَجَعْتُ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، وَأَنَا أَبْكِي مِنَ الْفَرَحِ ، قُلْتُ : يَا رَسُولَ اللَّهِ ، أَبْشِرْ قَدِ اسْتَجَابَ اللَّهُ لَكَ ، وَهَذِهِ أُمُّ أَبِي هُرَيْرَةَ فَحَمِدَ اللَّهَ ، وَقَالَ خَيْرًا ، قُلْتُ : يَا رَسُولَ اللَّهِ ، ادْعُ اللَّهَ أَنْ يُحَبِّبَنِي وَأُمِّي إِلَى عِبَادِهِ الْمُؤْمِنِينَ وَيُحَبِّبُهُمْ إِلَيْهِ ،

 قَالَ : فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " اللَّهُمَّ حَبِّبْ عَبِيدَكَ هَذَا

 يَعْنِي أَبَا هُرَيْرَةَ " وَأُمَّهُ إِلَى عِبَادِهِ الْمُؤْمِنِينَ وَحَبِّبْ إِلَيْهِ الْمُؤْمِنِينَ

وَقَالَ أَبُو هُرَيْرَةَ فَمَا خَلَقَ اللَّهُ مُؤْمِنًا سَمِعَ بِي وَلا يَرَانِي إِلا أَحَبَّنِي  

அன்றொரு நாள் அல்லாஹ்வின் தூதர்{ஸல்} அவர்களின் திருச்சபைக்கு அருமைத்தோழர் அபூஹுரைரா (ரலி) அழுதவாறே வருகின்றார்கள்.

அண்ணல் நபி {ஸல்} அவர்கள் அருகே அழைத்து “அபூஹுரைரா ஏன் அழுகின்றீர்? அழ என்ன காரணம்?” என்று வினவினார்கள்.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அழுதவாறே“அல்லாஹ்வின் தூதரே! என் தாய் இன்னும் சத்திய தீனை ஏற்றுக் கொள்ளவில்லை. என் தாயாரிடம் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுமாறு அழைப்பு விடுத்தேன்.

என் தாய் எதிர்பாராத விதமாக என்னை அடித்து விட்டார்கள். மேலும், உங்களையும் விமர்சித்து விட்டார்கள். ஆதலால் என்னால் பொறுத்துக் கொள்ள இயலவில்லை. எனவே தான் நான் அழுகிறேன்” என்று கூறினார்கள்.

அதைக் கேட்டதும் நபிகளார் அபூஹுரைராவே! உமக்கு உன் தாயாரின் மீது அளவு கடந்த நேசமா? இல்லை, இந்த இறைத்தூதரின் (என்) மீது அளவு கடந்த நேசமா?”என்று கேட்டார்கள்.

”அல்லாஹ்வின் தூதரே! உங்கள் மீது தான் நான் அளவு கடந்த நேசம் வைத்திருக்கின்றேன்.என்றாலும், அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் எனக்கு ஓர் உபகாரம் செய்ய வேண்டும்”என்றார்கள் அபூஹுரைரா (ரலி) அவர்கள்.

இப்போது, நான் என்ன செய்ய வேண்டும் கூறுங்கள்! என் அன்பு தோழரே! என்று நபி {ஸல்}அவர்கள் கூறினார்கள்.

அதற்கு, ”யா அல்லாஹ் அபூஹுரைராவின் தாயாருக்கு ஹிதாயத்தைக் கொடு!” என்று நீங்கள் ஒரேயொரு துஆ செய்ய வேண்டும் என்றார்கள் அபூஹுரைரா (ரலி) அவர்கள்.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் துஆ செய்ததும் தான் தாமதம். வேகமாக வெளியேறி தமது வீட்டை நோக்கி விரைந்தார்கள்.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் துஆவின் சக்தியை நேரில் பார்த்தவர்களல்லவா?அதன் வீரியத்தை உணர்ந்தவர்களல்லவா?

ஆம்! அவர் எதை எதிர்பார்த்து வீட்டை நோக்கி ஓடினாரோ, அது அப்போது நடந்து கொண்டிருந்தது. அபூஹுரைரா (ரலி) அவர்களின் தாயார் குளித்து முடித்து, புதிய ஆடை அணிந்து,பர்தா அமைப்பைப் பேணி வாசலின் கதவைத் திறந்து தமது மகனார் அபூஹுரைரா (ரலி)அவர்களின் முகத்தை மலர்ச்சியோடு நோக்கியவாறு “கலிமா ஷஹாதா” கூறினார்கள்.

போன அதே வேகத்தோடு, இம்முறை ஆனந்தக் கண்ணீரோடு தமது தாயாரையும் கையோடு அழைத்து வந்து அண்ணலாரின் சபையிலே நின்று கொண்டு “அல்லாஹ்வின் தூதரே! இதோ உங்கள் பிரார்த்தனையின் பலனை என்னோடு அழைத்து வந்திருக்கின்றேன்! இதோ என் தாயார் முஸ்லிமாகி விட்டார்கள்” என ஆனந்தத்தில் ஆர்ப்பரித்துக் கூறினார் அபூஹுரைரா (ரலி) அவர்கள்.

அல்லாஹ்வின் தூதரும் அதை ஆமோதிக்கும் முகமாக புன்னகையோடு மிகவும் நன்று என்று கூறி தலையசைத்தார்கள்.

”அல்லாஹ்வின் தூதரே! இன்னொரு துஆவையும் நீங்கள் எங்களுக்காக செய்ய வேண்டும்!” என்று வேண்டினார் அபூஹுரைரா(ரலி) அவர்கள்.

உம்! என்ன துஆ செய்ய வேண்டும் தோழரே! கூறுங்கள் என்றார்கள் நபி {ஸல்}அவர்கள்.

அதற்கு, அபூஹுரைரா (ரலி) அவர்கள்“அல்லாஹ்வின் தூதரே! என்னையும், என் தாயரையும் அல்லாஹ்வின் அடியார்களான முஃமின்கள் நேசிக்க வேண்டும். நானும் என் தாயாரும் அல்லாஹ்வின் அடியார்களான முஃமின்களை நேசிக்க வேண்டும்” இதற்காக அல்லாஹ்விடம் நீங்கள் துஆ செய்யுங்கள்”என்றார்கள்.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களும் அபூஹுரைரா (ரலி) அவர்கள் விரும்பியவாறே துஆ செ

ய்தார்கள்.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள் “அதன் பிறகு என்னையும், என் தாயாரையும் முஃமின்கள் அனைவரும் நேசித்தார்கள். புதிதாய் பார்க்கிற, பழகுகின்ற முஃமின்களும் எங்கள் இருவரையும் நேசிப்பதை நான் உணர்ந்தேன்.”

( நூல்: ஃபளாயிலுஸ் ஸஹாபா லின் நஸாயீ, உஸ்துல்ஃகாபா, அல் இஸ்தீஆப்,தபகாத்துல் குப்ரா லி இப்னு ஸஅத் )

அபூஹுரைராவின் தாயார் உமைமா பிந்த் ஸஃபீஹ் (ரலி) அவர்கள் தமது மகனை அடிக்கிற போது சற்றேறக்குறைய அபூஹுரைரா (ரலி)அவர்களுக்கு வயது 33 –லிருந்து 36 –க்குள் இருக்கும்.

இன்று ஒரு தாய் 35 வயதிற்குட்பட்ட தமது மகனை அடிக்க முடியுமா? அப்படியே அடித்தாலும் அந்தத் தாயை அடுத்த நொடியில் ஆம்புலன்ஸில் கொண்டு சென்றால் தான் காப்பாற்ற முடியும் எனும் சூழ்நிலை உருவாகி விடாதா?

எப்படி இருந்த தாயை உலக முஃமின்கள் எல்லாம் நேசிக்கிற ஒரு உன்னத நிலைக்கு அபூஹுரைரா (ரலி) அவர்கள் கொண்டு வந்தார்கள்.

வல்ல ரஹ்மான் இமது இளைஞர்களை நேர்வழியில் செலுத்துவானாக!

நமது இளைஞர்களை வீட்டிற்கும்,ஊருக்கும், சமூகத்திற்கும் பயன் தருகிறவர்களாக ஆக்குவானாக! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!!!

ﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺ
                           

роХро░ுрод்родுроХро│் роЗро▓்ро▓ை:

рокிро░рокро▓்ропрооாрой рокродிро╡ுроХро│்