роироо்рооுроЯрой் роЗрогைрои்родு роЗро░ுрок்рокро╡ро░்роХро│்

ро╡ெро│்ро│ி, роЯிроЪроо்рокро░் 07, 2018

роЪிройிрооா роТро░ு роЪீро░்роХேроЯு,

குர்ஆனில் சினிமாவைப் பற்றி.?

ஒருமுறை (World Students Association) உலக மாணவர் கழகத்தைச் சார்ந்த மாணவர் குழு ஒன்று அப்துல் அலீம் சித்தீக்கி அவர்களைப் பேட்டி கண்டனர்.

அவர்களில் ஒரு மாணவர்,

*குர்ஆனில் உலகிலுள்ள அனைத்தும் கூறப் பட்டிருக்கிறது என்று நீங்கள் கூறுவது உண்மையென்றால்*இக்காலத்திலுள்ள சினிமாவைப்பற்றி கூறப்பட்டிருக்கிறதா?என்று கிண்டலாகக் கேட்டார்.

அப்போது சினிமா அறிமுகமகாத காலம். ஸித்தீக்கீ அவர்கள், சினிமா என்றால் என்ன என்றும்  சற்று விளக்மாகக்கூறுங்கள். பின்னர் நான் பதில் சொல்கின்றேன் என்றார்கள்.

அந்த மாணவர்,

“கற்பனைக் கதைகளை விலைக்கு வாங்கி அதில் கூத்தாடிகளை நடிக்க வைத்து, மக்களை சிரிக்கவைத்துப் பொழுது போக்குவது தான் சினிமா என்று விளக்கம் கூறினார்"

உடனே மௌலானா அவர்கள் “ஆம்! இது பற்றி குர்ஆனில் கூறப்பட்டிருக்கிறதே என்றார்கள். அம்மாணவர்களோ வியப்பு மேலீட்டால், "எங்கே காட்டுங்கள் பார்க்கலாம் என மீண்டும் வினாவைத் தொடர்ந்தார்கள்" அந்த மாணவர்கள்.

அதைக் கேட்ட மௌலானா சிறிதும் தயங்கா மல், குர்ஆனின் 31வது அத்தியாயத்தில் சூரா லுக்மானில் ஆறாவது வசனத்தில்

وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ لِيُضِلَّ عَن سَبِيلِ اللَّهِ بِغَيْرِ عِلْمٍ وَيَتَّخِذَهَا هُزُواً أُولَئِكَ لَهُمْ عَذَابٌ مُّهِينٌ

(அல்குர்ஆன் : அத்தியாயம் -லுக்மான், வசனம்- 33)
*மனிதர்களில் சிலர் உள்ளனர்.அவர்கள் வீணான செய்திகளை பொய்யான கட்டுக் கதைகளை) விலைக்கு வாங்கி அறிவின்றி அல்லாஹ்வின் பாதையிலிருந்து (மக்களை) வழிகெடுத்து அதனை பரிகாசமாக்கிக்கொள் கின்றனர். இவர்களுக்கு இழிவு தரும் வேதனையுமுண்டு* (31:6)
என்ற திருமறை வசனத்தை ஓதிக்காண்பித் து கேள்வி கேட்டவரையே வாயடைக்கச் செய்தார்கள். உடனே அந்த மாணவர் அனைவரும் “1400 ஆண்டுகளுக்கு முன்னரே சினிமாவைப்பற்றியும் கூறப்பட்டி ருக்கிறதே” என்று அதிசயித்து இஸ்லாத்தைத் தங்கள் வாழ்க்கை நெறியாக ஏற்றனர்.

*சினிமாவை சென்ற நூற்றாண்டில் தான் கண்டுபிடித்தார்கள்.ஆனால் 1400 ஆண்டுகளுக்கு முன்னரே அதைப்பற்றி மிகத்துல்லியமாகக் கூறப்பட்டிருக்கிறது என்றால் அது முக்காலத்தையும் அறிந்த இறைவனின் வேத வாக்காகத்தான் இருக்கமுடியும் என்பதில் என்ன சந்தேகம் இருக்கமுடியும்* ?

இதுவும் குர்ஆன் இறைவேதம் என்பதற்கும், அல்லாஹ் கூறும் வீணாணவர்கள் யார் என்பதற்கும் இது ஒரு சான்றாகும்.
இதனுடன் மற்றுமொரு பதிவையும் இணைக்கின்றேன்.

*சினிமாவின் மூலம் நாம் அடைந்த நன்மைகள்தான் என்ன...?

⚠ *சகோதரிகளாகப் பார்க்க வேண்டிய நமது இளம் பெண்களை காதலிகளாக பார்க்க வைத்ததும், சகோதரர்களாகப்பார்க்க வேண்டிய நமது இளைஞர்களை காதலனாகப்பார்க்க வைத்ததும்* இந்த சினிமாதான் ??

⚠ *பெற்றோர்களை எதிரிகளாக காட்டியது* இந்த சினிமா ??

⚠ *திருட்டின் வகைகளை கற்றுக்கொடுத்தது* இந்த சினிமா ??

⚠ நகைச்சுவை என்ற போர்வையில் *பொய்யை மனித பண்பாக மாற்றியது* இந்த சினிமா ??

⚠ *இசையை கேட்போரின் மனங்களில் திணித்து சிந்தனையை பாவங்களின் பக்கம் திருப்பியது* இந்த சினிமா ??

⚠ *வன்முறையை ஹீரோயிசமாக காட்டியது* இந்த சினிமா ??

⚠ *காதல் என்பதை புனிதமாக காட்டி பிஞ்சு மனங்களில் கூட நஞ்சை ஊட்டியது* இந்த சினிமா ??

⚠ *தீய பழக்க வழக்கங்களை ஆண்மைத்தனமாக காட்டியது* இந்த சினிமா ??

⚠ Fashion என்ற பெயரில் *பெண்களை அரைகுறை ஆடைகளுடன் வீதிகளில் திரிய விட்டு கலாச்சாரம், பண்பாடுகளை அழித்தது* இந்த சினிமா ??

⚠ *ஆபாசத்திற்கு பொழுதுபோக்கு என்ற பெயரை வைத்தது* இந்த சினிமா ??

⚠ *உறவுகளின் புனிதத்தன்மையை பாழ்படுத்தியது* இந்தசினிமா ??

⚠ *உண்மையை சொல்கிறோம் என்ற பெயரில் வன்புணர்ச்சியை வளர்த்தது* இந்த சினிமா ??

⚠ *திரையில் பெண்களை போகப் பொருளாக ஆக்கியது* இந்த சினிமா ??

⚠ *"அழகை ரசிக்கலாம் ஆனால் அதை அடைய விரும்பாதே"* என்ற அசிங்கமான தத்துவத்தை அறிமுகப்படுத்தி *மனிதர்களை கண்களால் "விபச்சாரம்" செய்ய கற்றுக்கொடுத்தது* இந்த சினிமா ??

⚠ *வியாபார நோக்கத்திற்காக சமூக ஒற்றுமையை சீர் குலைத்தது* இந்த சினிமா??

⚠ *ஒழுக்கக் கேட்டைத் தவிர இந்த சினிமாவினால் நாம் பெற்ற நன்மைகள் எதுவும் இல்லை* என்பதுதான் நிதர்சனமான உண்மை??

⚠ *இன்னும் பல வன்செயல்களை மக்கள் மனதில் விதைத்தது* இந்த சினிமா ??

மேற்கூறிய அனைத்து பெருமைகளும் இந்த பாழாப்போன சினிமாவையே சாரும்...

மொத்தத்தில் சினிமா??
என்பது

*ஒழுக்கச்சீர்கேட்டின் - "கையேடு"*
*விபச்சாரத்தின் - "நுழைவாயில்"*
*சமூக சீர்குலைவிற்கான - "ஆயுதம்"*

என் அன்பு சகோதர சகோதரிகளே நண்பர்களே இந்த சினிமாவில்
*1000 நல்ல காட்சிகள் இருந்தாலும் அது எமது வாழ்கைக்கு ஒரு துளியும் உதவாது என்பது தான் உண்மையானது* இப்பதிவு யாரையும் புண்படுத்துவதற்கு அல்ல.​
​தற்காலத்து எமது முஸ்லிம்‍ ஆண்களும் ‍பெண்களும் அவர்களின் மார்க்கமும்​

இன்று எமது சகோதர,சகோதரிகள் அதிகமாக விரும்பக் கூடிய ஒன்றுதான் ​சினிமா​ மற்றும் கவிதைப் புகைப்படங்கள்....
​ஹராமான ஒரு காரியத்தை அல்லாஹ் எம்மை பார்த்த வண்ணமாக உள்ளான் என்று பயம் இல்லாமல் வெளிப் படை யாகவே செய்கின்றார்கள். அதுதான் அவர்களின் whatsapp profile and whatsapp status...​

ஒரு விபச்சாரி அதுவும் காசுக்காக தன் உடம்பை உலக மக்களுக்கு காண்பிக்கும் ஒரு கேவலமான ​சினிமா கூத்தாடியின்​ புகைப் படங்களையும் அவர்களின்  அசிங்கமான பாடல் காட்சிகளையும் ​கொஞ்சம் கூட வெட்கம், அருவருப்பு இன்றி உங்கள் whatsapp இலும்Facebookஇலும் பதிவிடுகிறீர்கள்.​

​இதுதான் நமக்கு நபிகள் நாயகம்(ஸல்)அவர்கள் கற்றுத் தந்த இஸ்லாம் மார்க்கமா ? கூத்தாடிகளுக்கும் எமக்கும் என்ன வித்தியாசம்...?⚠​

*ஒழுக்கமான குடும்பத்தில் பிறந்துவிட்டு  மானம் கெட்ட ஒரு விபச்சாரியின் புகைப்படத் தையோ அல்லது வீடியோவையோ பதிவிடுகிறீர்களே நீங்கள்தானா உத்தம நபியின் உம்மத்துகள்*..?

நீங்கள் இன்று மரணித்தால் உங்களை ​மண்ணறையில்​ அடக்கிவிடுவார்கள் ஆனால் நீங்கள் பதிவிட்ட அசிங்கமான, ஹராமான  பாடல்கள், புகைப்படங்கள் உங்களின்  ​whatapp status​ ஆக 24 மணி நேரமும் இருக்கப் போகிறது. இதுமட்டுமா வருடாந்த நினைவுவாகக் கூட வருடா வருடம் அப்போதெல்லாம் இப்பதிவுகள் வலம் வந்து கொண்டே இருக்கும் இதை யார் யாரெல்லாம் பார்க்கிறார்களோ பகிர்கிறார்களோ ​அவர்களின் பாவங்களும் உங்கள் பாவங்களுடன் சேர்ந்து மண்ணறைக்கு வரும்​ இப்போது உங்களுக்கு புரிகிறதா? இதன் விளைவுகள்...

​நல்லவற்றை பதிவிடுங்கள் மற்றவர்களுக்கு அது பயன் படும் ( *இவ்வுலகம் மறுமையின் விளை நிலம்* ) ஆனால் இப்படி விபச்சாரிகளின் பாடல்களை யோ அல்லது புகைப்படங்க ளையோ பதிவிட்டு மறுமை யில் உங்களின் தங்கும் இடத்தை நரகமாக்கிக் கொள்ளாதீர்கள்....​

நாளை மறுமையில் அந்தக் கூத்தாடிகளுடன் தான் உங்களையும் எழுப்பப்படும் என்ற ​நபி (ஸல்) அவர்களின்​ வார்த்தை பொய் இல்லை என்பதை மறந்து விடாதீர்கள்.....

​அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுங்கள்....​
​அவனது பிடி மிகவும் பயங்கரமானதாக இருக்கும் அதில் இருந்து அல்லாஹ் என்னையும் உங்களையும் பாதுகாத்து அருள் புரிவானாக...ஆமீன்​

*​இப்போதே உங்களின் profile and status என்பவற்றை மாற்றி விடுங்கள்!!* *அல்லாஹ்வின் கோபப் பார்வையில் இருந்து தப்பி விடுங்கள்!!*

இது ​நமது இஸ்லாமிய சமுதாயத்திற்கான நவீன காலத்திற்கேற்ற பதிவாக அமைய வேண்டுமென்பதே எனது அவாவும் நோக்கமும் ஆகும்.

*யாரையும் காயப்படுத்துவதற்காகவும் அல்ல*
*கருணைக்கடலான எல்லாம் வல்ல அல்லாஹ் நம் மன்னித்து அருள்புரிவானாக!* *ஆமீன் ஆமீன் யாறப்பல் ஆலமீன்*

роХро░ுрод்родுроХро│் роЗро▓்ро▓ை:

рокிро░рокро▓்ропрооாрой рокродிро╡ுроХро│்