நம்முடன் இணைந்து இருப்பவர்கள்

வியாழன், நவம்பர் 28, 2019

தீண்டாமை இஸ்லாத்தில் உண்டா,

தீண்டாமை என்றால் என்ன?

ஒரு மனிதன் தன்னைப் போன்ற சக மனிதன் ஒருவனைப் பிறப்பால் தாழ்ந்தவனாகக் கருதுவது தான் தீண்டாமை என்பதாகும்.

தீண்டாமையின் அளவுகோலைப் பொறுத்தமட்டில் அது நாட்டுக்கு நாடு வேறுபடும்.

நம் நாட்டில் காணப்படும் ஜாதீய அடிப்படையிலான தீண்டாமை, மொழி அடிப்படையிலான வேற்றுமை, மாநில அடிப்படையிலான பாகுபாடு, மேலை நாடுகளில் காணப்படும் இன, நிற ரீதியிலான தீண்டாமை என்று பல்வேறு வடிவங்களைக் கொண்டது தான் தீண்டாமை.

தீண்டாமை என்பது இன்றோ, நேற்றோ தோன்றிய ஒரு விஷயமில்லை. மனிதன் இப்பூமியில் வாழத்தொடங்கிய போதே தீண்டாமை எனும் கொடிய குணமும் மனிதனோடு வாழத்தொடங்கி, இன்றைய நவீன அறிவியல் யுகம் வரை மனித சமுதாயத்தில் விருட்சமாய் வளர்ந்திருப்பதை நாம் பார்த்து வருகின்றோம்.

கடந்த ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்த சி.எஸ் கர்ணண் அவர்கள் “தான் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவனாக இருப்பதால் தன்னிடம் சக நீதிபதிகள் கேவலமாக நடத்துகின்றார்கள்” என்பதாக பத்திரிக்கைக்கு அளித்த பேட்டி ஒன்றில் குறிப்பிட்ட அந்த செய்தியை நாம் அறிந்திருக்கின்றோம்.

தீண்டாமை எனும் கொடிய குணம் பாமரர்களில் தொடங்கி, மெத்தப் படித்த மேன்மக்கள் வரை பரவியிருக்கின்றது என்பதற்கு இது ஒரு சான்றாகும்.

இதில், இன்னொரு கேள்வியும் இருக்கின்றது “படித்த உயர்நீதிமன்ற நீதிபதிக்கே இந்த நிலை என்றால்?.....

ஒருவகையில் உலகில் தீண்டாமை எனும் கொடிய விஷம் வேரூண்ற மதங்களே அடிப்படையாக அமைந்திருப்பதைக் காணமுடிகின்றது.

இந்து மதம் போதிக்கும் தீண்டாமை....

உலகில் தீண்டாமையை விதைத்ததிலும், அதை அறுவடை செய்ததிலும் இந்து மதத்திற்கு ஈடு இணையாக வேறெந்த மதமும் இல்லை என்று சொன்னால் அது மிகையல்ல.

கடவுள் தான் மனிதனை உயர்வு, தாழ்வோடு படைத்து ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தி இருக்கிறார் என்று கூறுகின்றது.

1. பிறப்பில் தீண்டாமை.

”பிரம்மா தம் முகத்திலிருந்து பிரம்மர்களையும், தோளிலிருந்து சத்திரியர்களையும், தொடையில் இருந்து வைசியர்களையும், காலிலிருந்து சூத்திரர்களையும் பிறப்பித்தார்”                      ( மனு தர்மம் 2:35 )

2. பெயரில் தீண்டாமை.

“பிராமணனுக்கு மங்களம், சத்திரியனுக்கு பலம், வைசியனுக்குச் செல்வம், சூத்திரனுக்கு அவனது அடிமை நிலை தோன்றும் படியான பெயர்களைச் சூட்ட வேண்டும்.”                                              ( மனு தர்மம் 3:23 )

3. தொழிலில் தீண்டாமை.

“இழி பிறப்பாளன் ஒருவன் பிராமணப் பணியைப் புரியும் போதும் அவன் இழி பிறப்பாளன் தான். இழி தொழில் யாது புரிந்தாலும் பிராமணன் ஒரு போதும் இழி பிறப்பாளன் ஆகான். அவன் பிறப்பு உயர் பிறப்புதான். பிரம்மனின் ஆணை அவ்வாறு.”

4. உச்சகட்ட தீண்டாமை.

பிராமணரைச் சூத்திரர் கையாலேனும்கருவியாலேனும் தாக்கினால் பிராமணரை எந்தெந்த இடத்தில் அடித்தானோஅடித்தவனின் உறுப்புக்களைக் குறைப்பதே தக்க தண்டனையாகும்.

பிராமணனுக்குச் சமமாக அகங்காரத்தோடு அமர்கின்ற சூத்திரனுக்கு உயிருக்கு தீங்கற்ற தண்டனை தருகஇடுப்பில் சூடு போடுகஉட்கார்ந்த உறுப்பை அறுத்திடுகஊரை விட்டும் அவனைத் துரத்திடுக.

பிராமணன் மீது காறி உமிழ்பவன் உதடுகளை அறுத்திடுமூத்திரம் பெய்தால் குறியை வெட்டுமலத்தை வீசினால் ஆசனப்பகுதியை அறுத்து விடு.

சூத்திரன் பிராமணனின் குடுமிமீசைதாடிகழுத்துகுறி முதலியவற்றைப் பற்றியிழுத்தால் அவன் கையைத் துண்டித்து விடுக.

சூத்திரன் பிராமணனைக் கடுமையாக வதைத்தால் சூத்திரன் நாக்கை அறுத்தெறியவும்பிராமணனின் குலம் குறித்து இழித்துரைத்தால் பத்து அங்குல நீளக் கம்பியைப் பழுக்கக் காய்ச்சி சூத்திரன் வாயினுள் திணிக்க வேண்டும்”`

                                             ( மனு தர்மம்: 9: 263 – 267 )

யூதகிறிஸ்தவ மதங்கள் போதிக்கும் தீண்டாமை.

நாம் பிறப்பால் யூதர்கள்நாம் யூதர் அல்லாத பாவிகள் இல்லை.” (கேல்: 2:15)

அன்னியன் ஒருவன் பரிசுத்தமானவைகளில் புசிக்கலாகாதுஆசாரியன் வீட்டில் தங்கி இருக்கிறவனும்கூலிவேலை செய்பவனும் பரிசுத்தமானதில் புசிக்கலாகாது.”                                      ( லேவியராகமம்: 22:12 )

இஸ்ரவேல் மக்களைத்தவிர வேறு யாரையும் ஏற்றுக் கொள்வதற்கு கிறிஸ்தவ மார்க்கம் தயாராக இல்லை.”                  ( செகண்ட் கிங்: 5:15 )

அப்போது அந்தத் திசைகளில் குடியிருக்கிற கானானிய ஸ்திரீ ஒருத்தி அவரிடத்தில் (இயேசுவிடத்தில்வந்து , “ஆண்டவரேதாவீதின் குமாரனேஎனக்கு இரங்கும்என் மகள் பிசாசினால் கொடிய வேதனை செய்யப்படுகிறாள்” என்று சொல்லிக் கூப்பிட்டாள்.

அவளுக்குப் பிரதியுத்திரமாக அவர் (இயேசுஒரு வார்த்தையும் சொல்லவில்லைஅப்போதுஅவருடைய சீடர்கள் வந்து, “ஆண்டவரேஇவள் நம்மைப் பின் தொடர்ந்து கூப்பிடுகிறாளேஇவளை அனுப்பிவிடும்” என்று வேண்டிக் கொண்டனர்.

அதற்கு அவர், “காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்கு அனுப்பட்டேனே அன்றி மற்றபடி அல்ல” என்றார்.

அப்போதுஅந்த ஸ்திரீ வந்து “ஆண்டவரேஎனக்கு உதவி செய்யும்” என்று அவரை நோக்கிப் பணிந்து கொண்டாள்அதற்கவர் அவளை நோக்கி, “பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து நாய்க்குட்டிகளுக்கு போடுவது நல்லதல்ல” என்றார்.

அதற்கவள், “மெய் தான் ஆண்டவரேஆயினும் நாய்க்குட்டிகள் தங்கள் எஜமான்களின் மேஜைகளிலிருந்து விழும் துணிக்கைகளைத் திண்ணுமே!” என்றாள்.
(மத்தேயு: 15:22 – 27)

மேற்கூறிய இந்தச் சம்பவத்தில் கானானிய இன மக்களை நாய்கள் என்றும்இஸ்ரவேலர்களை பிள்ளைகள் என்றும் பைபிள் கூறுகின்றது.

வர்ணாசிரம தத்துவத்தை கிறிஸ்துவமும்யூதமும் ஆதரிப்பதற்கு இதை விடச் சிறந்த ஆதாரம் தேவையில்லைஏனெனில்யூதர்களுக்கும்கிறிஸ்துவர்களுக்கும் பைபிளின் பழைய ஏற்பாடு பொதுவான வேதமாகும்.

எனவே தான் இஸ்லாமிய கொள்கைகள் இந்த உலகத்தில் வளர்ந்து விடக் கூடாது என்பதில் உலகில் எல்லா நாடுகளின் தலைவர்களும் ஒரே சிந்தனையில் இருக்கின்றார்கள்.

இஸ்லாம் மட்டும் தான் உயர்குலத்தோனையும்தாழ்ந்தோனையும் ஒரே வரிசையில் வைத்துப் பார்க்கிறது.

முதலாளியையும்தொழிலாளியையும் ஒரே அந்தஸ்தோடு நோக்குகின்றது.

ஆள்பவனும்ஆளப்படுபவனும் ஒருவருக்கொருவர் சமமானவர் என்ற உயரிய சிந்தனையை உருவாக்கி இருக்கிறது.

கருப்புத் தோல் உடையவனும்சிவப்புத் தோலுடையவனும் எந்த விதத்திலும் ஒருவருக்கொருவர் வேறுபட்டவர் இல்லை என்று உறுதி படுத்தி இருக்கின்றது.

இந்த தத்துவங்களின் அடிப்படையில் மனித சமூகம் உருவாகுமானால், ”அமெரிக்க ஏகாதிபத்தியம் முடிவுக்கு வந்துவிடும்ஐரோப்பியபிரிட்டனின் தலைமைத்துவம் காவு கொள்ளப்படும்ரஷ்யசீன முதலாளித்துவம் சிதைந்து போகும்இஸ்ரேலிய இனவெறி இல்லாமல் போகும்இந்திய தேசத்தின் இந்து ராஜ்ஜிய கனவு காணாமல் போகும்” என்கிற அச்சம் இந்த நாடுகளுக்கும்இதன் தோழமை நாடுகளுக்கும் இருப்பதால் தான் இஸ்லாத்தை பயங்கரவாத மார்க்கமாக சித்தரிப்பதிலும்அதை ஸ்திரப்படுத்துவதிலும் உலக நாடுகள் முனைப்போடு இருப்பதை நாம் உணர வேண்டும்.

உலகின் எல்லா நாடுகளுமேநாவின் துணையோடு தீண்டாமையை ஒழிப்பதாக உறுதி பூண்டு விட்டுமறைமுகமாககொல்லைப் புறத்தின் வாயிலாக தீண்டாமையை வளர்த்துக் கொண்டிருக்கின்றன.

தீண்டாமை எனும் கொடிய விருட்சத்தை வேரோடு வீழ்த்திட புறப்பட்டவர்களாக உலக வரலாறு புகழ்ந்து பாராட்டும் “நெல்சன் மண்டேலாஆபிரகாம் லிங்கன்ஸ்டாலின்அண்ணல் காந்திடாக்டர் அம்பேத்கர்வேரா., அறிஞர் அண்ணா போன்றோர் ஓரளவே தங்களின் தீண்டாமை ஒழிப்பு போராட்டத்தில் வெற்றி கண்டனர்.

ஆனால்அல்லாஹ்வின் தூதர் {ஸல்அவர்கள் மாத்திரம் தான் தீண்டாமை எனும் கொடிய விருட்சத்தை வேரோடும்வேரடி மண்ணோடும் வெட்டி சாய்த்தார்கள்.

தீண்டாமையை அண்ணலார் {ஸல்ஒழித்துக் கட்டிய விதம்.

அன்றைய அரபுலக மக்கள் குலப்பெருமையாலும்இன பேதத்தாலும்நிற வெறியாலும்மொழி பாகுபாட்டாலும் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டும்தலைமுறைக்கும் பகைமையை வளர்த்து பழிதீர்த்துக் கொண்டும் இருந்த கால கட்டத்தில் தான் அல்லாஹ்வின் தூதர் {ஸல்அவர்கள் அம்மக்களிடையே ஏகத்துவ சுகந்தத்தைஇஸ்லாமிய அழைப்பை அறிமுகப் படுத்தினார்கள்.

தீண்டாமையின் வீரியத்தைஅதன் விபரீதத்தை அல்லாஹ்வின் அழகிய வழிகாட்டலோடு அங்குலம் அங்குலமாய் தெளிவு படுத்தினார்கள்.

மனிதன் தன் சக மனிதன் ஒருவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகளிலிருந்தும்கொடுக்க வேண்டிய உரிமைகளிலிருந்தும் புறக்கணித்து ஒதுங்கி நிற்கும் போது தான் தீண்டாமை உருவாகிறது என்று கூறி மாசு படிந்திருந்த அவர்களின் இதயங்களைத் தூய்மைபடுத்தினார்கள்.

சக மனிதனின் மீதான உரிமையை, கடமையை நிறைவேற்றும் போது இறைவன் புறத்திலிருந்து கிடைக்கும் வெகுமதிகளைக் குறித்து ஆர்வமூட்டி, சக மனிதனின் மீதான உரிமைகளில், கடமைகளில் தவறிடும் பட்சத்தில் இறைவன் புறத்திலிருந்து கிடைக்கும் சாபங்களைக் குறித்து எச்சரித்து சக மனிதர்களை சமத்துவமாகக் கருதுகிற, சகோதரனாக பாவிக்கிற ஓர் உன்னத நிலைக்கு அவர்களைக் கொண்டு வந்தார்கள் மாநபி {ஸல்} அவர்கள்.

அன்றிலிருந்து தான் அரபுலக மக்கள் “மானுடத்தின் வசந்தத்தை” நுகர ஆரம்பித்தார்கள்.

1. மனிதர்கள் அனைவரும் சமமானவர்களே!

يَا أَيُّهَا النَّاسُ إِنَّا خَلَقْنَاكُمْ مِنْ ذَكَرٍ وَأُنْثَى وَجَعَلْنَاكُمْ شُعُوبًا وَقَبَائِلَ لِتَعَارَفُوا إِنَّ أَكْرَمَكُمْ عِنْدَ اللَّهِ أَتْقَاكُمْ إِنَّ اللَّهَ عَلِيمٌ خَبِيرٌ ()
“மனிதர்களே! உங்களை ஓர் ஆண் ஒரு பெண்ணிலிருந்தே நாம் படைத்தோம்நீங்கள் ஒருவரையொருவர் அறிந்து கொள்வதற்காக உங்களைக் கிளைகளாகவும்கோத்திரங்களாகவும் ஆக்கினோம்உங்களில் (இறைவனைஅதிகம் அஞ்சுவோரே அல்லாஹ்விடம் அதிகம் சிறந்தவராவார்அல்லாஹ்வே நன்கறிபவன்நன்கறிந்தவன்”.                                              (அல்குர்ஆன்:49:13)

இந்த ஓர் இறைவசனத்தின் உதவி கொண்டு பெருமானார் {ஸல்அவர்கள் இறைவனின் பெயரால் நிலவி வந்த தீண்டாமைக்கு முற்றுப் புள்ளி வைத்தார்கள்.

மனித இனம் முழுமையும் ஆதம்ஹவ்வா (அலைஎன்கிற ஒரே ஜோடியின் மூலம் தான் படைக்கப்பட்டுள்ளனர்மனிதர்களுக்கு மத்தியில் பிறப்பால்இனத்தால்மொழியால்நிறத்தால் கலாச்சாரத்தால்நாட்டால் எந்த ஒரு வேறுபாடும் கிடையாது என்ற தீண்டாமைக்கு எதிரான இந்த முதல் பிரகடனமே அம்மக்களின் அறியாமைக்கு திரையிட்டது.

2. தீண்டாமையில் உழல்பவன் சுவனம் செல்லத் தடை.

பிற மனிதர்களை எந்த நிலையிலும் அவர்கள் தம்மை விட தாழ்ந்தவர்களாகக் கருதுவதும்தன்னை உயர்வாகக் கருதுவதும் தான் ஒரு வகையில் தீண்டாமை வேர் விட்டு வளர காரணம் என்பதை உணர்ந்த நபி {ஸல்அவர்கள் அதற்கு இப்படி ஓர் தடை உத்தரவை பிறப்பித்தார்கள்.

وعن عبد الله بن مسعود رضي الله عنه، عن النبي صلى الله عليه وسلم قال: لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من كبر فقال رجل: إن الرجل يحب أن يكون ثوبه حسنا، ونعله حسنة ؟ قال: إن الله جميل يحب الجمال الكبر بطر الحق وغمط الناس رواه مسلم .
بطر الحق: دفعه ورده على قائله غمط الناس: احتقارهم .

எவருடைய உள்ளத்தில் அணுவளவு தற்பெருமை இருக்குமோ அவர் சுவர்க்கத்தில் நுழையமாட்டார்” என்று நபித்தோழர்களோடு அமர்ந்திருந்த ஓர் சபையில் பெருமானார் {ஸல்அவர்கள் கூறினார்கள்.

அப்போதுநபித்தோழர்களில் ஒருவர் எழுந்து நின்று, “அல்லாஹ்வின் தூதரேதமது ஆடை அழகாக இருக்க வேண்டும்தமது செருப்பு அழகாக இருக்க வேண்டும் என்று ஒருவர் விரும்புகின்றார்இதுவும் தற்பெருமையாக கருதப்படுமா?” என்று வினவினார்.

அதற்குமாநபி {ஸல்அவர்கள் “அல்லாஹ் அழகானவன்அழகையே விரும்புகின்றான்உண்மையில்தற்பெருமை என்பது உண்மையை ஏற்றுக் கொள்ள மறுப்பதும்மக்களைக் கேவலமாக எண்ணுவதும் தான்” என்று பதில் கூறினார்கள்.

3. தொழில் ரீதியிலான பாகுபாட்டிற்கு தடை.

அன்றைய சமூகத்தில் குறிப்பிட்ட ஒரு தொழிலைகுறிப்பிட்ட சமூக மக்கள் தான் செய்ய வேண்டும் என்ற நிலையும்அத்தகைய தொழிலை மேற்கொள்பவர்கள் இழிநிலை கொண்டோராக கருதப்படுவதையும் கண்ட மாநபி {ஸல்அவர்கள்அதை களைவதற்கு அந்த தொழிலில் தம்மையும் ஈடுபடுத்திதொழிலில் எதுவும் இழிந்த தொழில் இல்லை என்பதை உணர்வுப்பூர்வமாக நிரூபித்துக் காட்டினார்கள்.

அபூ ஹுரைரா (ரலிஅவர்கள் அறிவிக்கின்றார்கள்: “அல்லாஹ் அனுப்பிய எல்லா இறைத்தூதர்களும் ஆடு மேய்த்திருக்கின்றார்கள்” என்று நபித்தோழர்களோடு அமர்ந்திருந்த ஓர் சபையில் அண்ணலார் {ஸல்அவர்கள் கூறிய போதுநபித்தோழர்களில் ஒருவர் “அல்லாஹ்வின் தூதரேநீங்களும் ஆடு மேய்த்திருக்கின்றீர்களா?” என்று ஆச்சர்யத்தோடு வினவிய போது, “ஆம்நானும் மக்காவாசிகளின் ஆடுகளை அற்பமான கூலிக்காக மேய்த்தவன் தான் நான்” என நெகிழ்ச்சியோடு பதில் கூறினார்கள்.

وعن الأسود بن يزيد قال: سئلت عائشة رضي الله عنها: ما كان النبي صلى الله عليه وسلم يصنع في بيته ؟ قالت: كان يكون في مهنة أهله - يعني: خدمة أهله - فإذا حضرت الصلاة، خرج إلى الصلاة رواه البخاري .

أنه كان النبي صلى الله عليه وسلم في بيته في خدمة أهله يحلب الشاة يخصف النعل، يخدمهم في بيتهم،

அன்னை ஆயிஷா (ரலிஅவர்களிடம் மக்களில் சிலர் வந்துஅல்லாஹ்வின் தூதர் {ஸல்அவர்கள் வீட்டில் என்ன செய்து கொண்டிருப்பார்கள்?” என்று வினவியதற்கு, “அல்லாஹ்வின் தூதர் {ஸல்அவர்கள் வீட்டில் தமது அறுந்து போன செருப்பைத் தைப்பார்கள்தமது ஆடையின் கிழிசலையும் தாமே தைப்பார்கள்வீட்டு வேலைகளையும் எங்களோடு இணைந்து செய்வார்கள்ஆடுகளின் பாலைக் கறந்து தருவார்கள்” என்று பதிலளித்தார்கள்.                         ( நூல்புகாரி )

حدثنا أحمد بن عثمان، حدثنا شريح بن مسلمة، حدثني إبراهيم بن يوسف، حدثني أبي، عن أبي إسحاق، عن البراء يحدث قال: لما كان يوم الأحزاب وخندق رسول الله رأيته ينقل من تراب الخندق، حتى وارى عني التراب جلدة بطنه، وكان كثير الشعر، فسمعته يرتجز بكلمات عبد الله بن رواحة، وهو ينقل من التراب

அகழ்யுத்தத்தின் போது நபி {ஸல்அவர்கள் மக்களுடன் இணைந்து அகழ் வெட்டும் பணியில் ஈடுபட்டார்கள்மண் சுமந்தார்கள்அப்போது நபிகளாரின் வயிற்றுப் பகுதியை மண் மறைத்திருந்ததை நான் பார்த்தேன்” என பர்ராஃ இப்னு மாலிக் (ரலிஅவர்கள் அறிவிக்கிறார்கள்.                       ( நூல்புகாரி )

عن هشام عن عروة ، عن أبيه ، عن عائشة أن رسول الله - صلى الله عليه وسلم - رأى في جدار القبلة بصاقا ، أو مخاطا ، أو نخامة فحكه .

அல்லாஹ்வின் தூதர் {ஸல்அவர்கள் பள்ளிவாசலில் எங்கேனும் சளியைக் கண்டால் அதைத் தாமே தங்களின் கையால் சுரண்டி சுத்தம் செய்வார்கள்” என அன்னை ஆயிஷா (ரலிஅவர்கள் அறிவிக்கின்றார்கள்.            ( நூல்புகாரி )

فإن أول عمل قام به النبي صلى الله عليه وسلم عندما قدم إلى المدينة المنورة هو بناؤه لمسجده الشريف في المكان الذي بركت فيه ناقته، وكان ملكاً ليتيمين فاشتراه النبي صلى الله عليه وسلم وأقام عليه المسجد، وكان يعمل فيه بنفسه مع أصحابه الكرام، وقد بدأ بناء المسجد في ربيع الأول سنة واحد من الهجرة بعد وصول النبي صلى الله عليه وسلم مباشرة، كما جاء في كتاب "الرحيق المختومللمباركفوري وغيره.

நபி {ஸல்அவர்கள் மதீனா வந்தடைந்த போதுஇறையில்லத்தை நிர்மாணித்தார்கள்மக்களோடு சேர்ந்து தாமும் கல்லையும்மண்ணையும் சுமந்தார்கள்.                                              ( ரஹீக் அல் மஃக்தூம் )


4. சுயமரியாதைமற்றும் திருமண பந்தத்தின் மீதான தீண்டாமையைக் களைதல்.

مرّ رجلٌ على رسول الله صلى الله عليه وسلم فقال: «ما تقولون في هذا؟ قالوا: هذا حريٌ إن خَطَب أن يُنْكح، وإن شَفَع أن يُشَفّع، وإن قال أن يُسْتمع له. قال: ثم سكت، فمر رجل من فقراء المسلمين فقال: ما تقولون في هذا؟ قالوا: هذا حريٌ إن خَطَب أن لا يُنْكح، وإن شَفَع أن لا يُشَفّع، وإن قال أن لا يُسْتمع له، فقال رسول الله صلى الله عليه وسلم
«هذا خيرٌ من ملء الأرض من مثل هذا» «»

ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் {ஸல்அவர்களும்நபித்தோழர்கள் சிலரும் அமர்ந்திருந்த இடத்தை ஒரு மனிதர் கடந்து சென்றார்.

அப்போதுஅண்ணலார் இவர் மீதான உங்களின் அபிப்பிராயம் என்ன?” என்று வினவியதற்கு… நபித்தோழர்கள் “இவர் சுதந்திரமான ஒருவர்இவர் திருமணம் செய்ய பெண் கேட்டால்மணமுடித்து வைக்கப்படுவார்ஏதேனும் ஒரு விவகாரத்தில் இவர் பரிந்துரைத்தால் உடனடியாக இவரின் பரிந்துரை ஏற்றுக் கொள்ளப்படும்அவர் ஏதாவது சொன்னால் செவி தாழ்த்தி மக்களெல்லாம் கேட்பார்கள்” என்று பதில் கூறினார்கள்.

இது கேட்ட மாநபி {ஸல்அவர்கள்சிறிது நேரம் மௌனமாக இருந்தார்கள்பின்னர் அண்ணலாரின் சபையைக் கடந்து சென்ற ஒரு ஏழை முஸ்லிமைக் குறித்து “இவரின் மீதான உங்கள் அபிப்பிராயம் என்ன?” என்று வினவினார்கள்.

அதற்குநபித்தோழர்கள், “இவரும் ஒரு சுதந்திரமான மனிதர் தான்எனினும் இவர் பெண் கேட்டால் எவரும் கொடுக்க முன் வர மாட்டார்கள்இவர் பரிந்துரைத்தால் அது பரிசீலிக்கப்படவே மாட்டாதுஇவர் பேச்சை எவரும் காது கொடுத்து கேட்கவும் மாட்டார்கள்” என பதிலளித்தனர்.

அப்போதுஅல்லாஹ்வின் தூதர் {ஸல்அவர்கள் “நீங்கள் முதலில் விமர்சித்த நபரை விடவும்நிரப்பமான இந்த பூமியை விடவும் இந்த ஏழை மனிதர் தான் மிகவும் சிறந்தவர்” என கூறினார்கள்.                              ( நூல்புகாரி ) 

மனிதர்களை மதிப்பதின் மீதான உங்களின் அளவீடுகளும்அணுகுமுறையும் தவறானது என்பதைச் சுட்டிக்காட்டி சுயமரியாதை உள்ள எந்த ஒருவரும் மதிக்கப்பட வேண்டும் என்பதை நபிகளார் தோழர்களுக்கு உணர்த்தினார்கள்.

ذكره أبو داود في (المراسيل)، حدثنا عمرو بن عثمان وكثير بن عبيد قالا حدثنا بقية بن الوليد قال حدثني الزهري قال: أمر رسول الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بني بياضة أن يزوجوا أبا هند امرأة منهم، فقالوا لرسول الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
نزوج بناتنا موالينا؟  فأنزل الله عز وجل:" إِنَّا خَلَقْناكُمْ مِنْ ذَكَرٍ وَأُنْثى وَجَعَلْناكُمْ شُعُوباً" الآية. قال الزهري: نزلت في أبي هند خاصة.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்அவர்கள் “பனூ பயாளா எனும் கோத்திரத்தார்களிடம் நீங்கள் உங்கள் கோத்திரப் பெண்களில் ஒருவரை அபூ ஹிந்த் (ரலிஅவர்களுக்கு மணமுடித்துக் கொடுங்கள்” என்று கூறினார்கள்.

அதற்கு அம்மக்கள் “உயர் குலத்துப் பெண்களான எங்களின் பெண்மக்களில் ஒருவரை எங்களிடம் சேவகம் செய்யும் அடிமை குலத்து வம்சத்தைச் சார்ந்த ஒருவருக்கு நாங்கள் திருமணம் செய்து கொடுக்க வேண்டுமா?” என்று கேட்டனர்.

அப்போது தான் அல்லாஹ் ஹுஜுராத் அத்தியாயத்தின் 13 –ஆவது வசனத்தை இறக்கியருளினான்.                               ( நூல்தஃப்ஸீர் அல் குர்துபீ )

5. சட்டத்திற்கு முன் அனைவரும் சமமே.

குரைஷி குலத்தின் ஓர் அங்கமான மஃக்ஸூமியா கோத்திரத்தைச் சார்ந்த ஒரு பெண்மணி திருடிவிட்டார்இது குரைஷிகளுக்கு பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியது.

இது குறித்து அண்ணலாரிடம் பேசிகை வெட்டப்படுவதிலிருந்து அப்பெண்மணியைக் காக்க வேண்டும்இது குறித்து சிபாரிசு செய்ய மிகத்தகுதியானவர் நபிகளாரின் நெருக்கத்தைப் பெற்றிருக்கிற உஸாமா (ரலிதான் தகுதியானவர் என்று தேர்வு செய்துஅவரிடம் வந்து குறைஷிகள் சிபாரிசு செய்யுமாறு முறையிட்டனர்.

உஸாமா நபி {ஸல்அவர்களிடம் சென்றுஇது குறித்துப் பேசினார்அப்போது நபி {ஸல்அவர்கள் “அல்லாஹ்வின் குற்றவியல் சட்டத்திலா என்னிடம் நீர் பரிந்துரை செய்கின்றீர்?” என்று உஸாமாவை நோக்கி கேட்டு விட்டுஉடனடியாக மக்களை ஒன்று திரட்டிமிம்பரின் மீது நின்று “உங்களுக்கு முன் சென்றவர்கள் தங்களின் உயர்குலத்தவர் திருடினால் அவரை விட்டு விடுவார்கள்.

பலவீனர் ஒருவர் திருடினால்அவருக்கு தண்டனையை நிறைவேற்றுவார்கள்அதனால் தான் அவர்கள் அழிந்து போயினர். “அல்லாஹ்வின் மீது ஆணையிட்டுச் சொல்கின்றேன்இந்த முஹம்மதின் மகள் ஃபாத்திமா திருடினாலும் அவரது கையையும் நான் வெட்டுவேன்” என்று பிரகடனம் செய்தார்கள்.

உயர்குலத்தவராக இருந்தால் அவர்களுக்கென எந்தவொரு தனிச் சட்டமும் இல்லைசட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற உயர் கோட்பாட்டைத் தன் மகளாரை முன் நிறுத்தி அல்லாஹ்வின் தூதர் {ஸல்அவர்கள் பிரகடனம் செய்தார்கள்.                                                     ( நூல்புகாரி )

6. செல்வாக்கு பெற்றவர்கள் ஆதிக்கம் செலுத்த தடை.

روى مسلم عن سعد بن أبي وقاص قال: كنا مع النبي صلى الله عليه وسلم ستة نفر، فقال المشركون للنبي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: اطرد هؤلاء عنك لا يجترءون علينا، قال: وكنت أنا وابن مسعود ورجل من هذيل وبلال ورجلان لست أسميهما، فوقع في نفس رسول الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ما شاء الله أن يقع، فحدث نفسه، فأنزل الله عز وجل" وَلا تَطْرُدِ الَّذِينَ يَدْعُونَ رَبَّهُمْ بِالْغَداةِ وَالْعَشِيِّ يُرِيدُونَ وَجْهَهُ".


ஸஅத் இப்னு அபீ வக்காஸ் (ரலிஅவர்கள் கூறுகின்றார்கள்: “ நான்இப்னு மஸ்வூத்,பிலால்ஹுதைல் கோத்திரத்தைச் சார்ந்த ஒருவர்மற்றும் இருவர் (அவ்விருவரின் பெயரை நான் மறந்து விட்டேன்அண்ணல் நபி {ஸல்அவர்களுடன் அமர்ந்திருந்தோம்.

அப்போது, “மக்கத்து இணைவைப்பாளர்கள் அல்லாஹ்வின் தூதரிடம் வந்துஇதோ இந்த ஏழைகளை உம்மை விட்டும் விரட்டி விடுவீராகஇல்லாவிட்டால் எங்கள் விஷயத்தில் இவர்கள் துணிச்சல் பெற்றுவிடுவார்கள்” என்று கூறினார்கள்.

அப்போது நபி {ஸல்அவர்களின் மனதில் எது ஏற்பட வேண்டுமென அல்லாஹ் நாடினானோ அது ஏற்பட்டு விட்டதுஅப்போதுதான் அல்லாஹ் “{முஹம்மதே {ஸல்தமது இறைவனின் திருப்தியை நாடி காலையிலும்மாலையிலும் அவனிடம் பிரார்த்திப்போரை நீர் விரட்டி விடாதீர்அவர்களைப் பற்றிய விசாரணையில் உமக்கு எந்தப் பொறுப்பும் இல்லைஉம்மைப் பற்றிய விசாரணையில் அவர்களுக்கு எந்தப் பொறுப்பும் இல்லைஎனவேஅவர்களை நீர் விரட்டினால் அநீதி இழைத்தவராக ஆகிவிடுவீர்!” எனும் 6-ஆம் அத்தியாயத்தின் 52 –ஆம் இறைவசனத்தை அல்லாஹ் இறக்கியருளினான்.

                                               ( நூல்தஃப்ஸீர் அல்குர்துபீ )

அல்லாஹ்வின் தூதர் {ஸல்அவர்களின் மீதான மக்காவாசிகளின் அபிப்பிராயம் உண்மையாளர்நேர்மையாளர் என்றே இருந்தது.

ஆனாலும்நபி {ஸல்அவர்களை அவர்கள் எதிர்ப்பதற்கு அடிப்படையாய் அமைந்திருந்தது “ஆண்டாண்டு காலமாய் அவர்கள் கட்டிக்காத்து வந்த குலப்பெருமையை உடைத்தெறிகின்றார்உயர்குலத்தோரையும்இழிகுலத்தோரையும் சமமாக அமர வைக்கின்றார்” என்கிற தீண்டாமையின் மீதான உச்சபட்ச வெறிதான் நபிகளாரை ஏற்பதற்கு தடையாக இருந்தது.

என்ற போதிலும்நபி {ஸல்அவர்கள் ”இவர்களைப் போன்ற செல்வாக்கு மிக்கவர்கள் இஸ்லாத்தில் சேர்ந்தால் பலம் சேர்க்கும் என்று நினைத்து தான்அவர்களுக்கு முன்னுரிமை கொடுக்க நினைத்து அவர்களின் கருத்தை ஆமோதித்தார்கள்.

இவர்கள் தங்களை இஸ்லாத்தில் இணைத்துக் கொண்டதின் பின்னால்இவர்களின் குணங்களை சரிபடுத்திக் கொள்ளலாம்” என்று நபிகளார் கருதி இருக்கலாம்.

ஆனாலும் அல்லாஹ் இந்தக் கருத்தில் உடன் படாமல் “இஸ்லாத்தை அதன் முழு வடிவத்தோடுஎல்லோரும் சமம் தான் என்கிற அடிப்படையையும் சேர்த்து ஏற்றுக் கொள்ள வேண்டும்இல்லையெனில்நபியேஅவர்களுக்காக நீர் வளைந்து கொடுக்க வேண்டாம்அவர்கள் வரவும் வேண்டாம்” என கண்டிப்பான வார்த்தைகளோடு அல்லாஹ்வின் தூதர் {ஸல்அவர்களுக்கு அல்லாஹ் ஆணையிட்டான்.

இப்படி கொஞ்சம் கொஞ்சமாக அவர்களின் அழுக்காறுகளை அல்லாஹ்வின் தூதர் {ஸல்அவர்கள் தங்களின் வெளிப்படையான வாழ்க்கையின் மூலமாகவும்அல்லாஹ்வின் தூய வழிகாட்டலோடும் அகற்றினார்கள்.

ஹிஜ்ரி 8 மக்கா வெற்றி கொள்ளப்பட்டுஅண்ணலார் வெற்றி வீரராய் வீற்றிருக்கின்றார்கள்.

புனித கஅபாவின் பொறுப்புகள் இணைவைப்பாளர்களிடம் இருந்து கைப்பற்றப் பட்டுநபித்தோழர்கள் சிலரிடம் ஒவ்வொன்றாக ஒப்படைக்கப் படுகின்றது.

ஆவலோடு எல்லோரும் காத்திருக்கும் அவ்வேளையிலேமதிய தொழுகையான லுஹர் தொழுகையின் நேரமும் வருகின்றது.

பாங்கு சொல்வதற்காக நீக்ரோவான பிலாலை அழைத்துகஅபாவின் மீதேறி நின்று பாங்கு சொல்லுமாறு மாநபி {ஸல்ஆணையிட்ட போது… “கருப்பர்நீக்ரோ இவர்களெல்லாம் அந்த மக்களிடையே அடிமைகளாகவே அன்றி அவர்களை நெருங்க முடியாது என்ற நிலையில் இருந்த இந்தத் தீண்டாமையை இன்றோடு இம்மண்ணிலிருந்து வெளியேற்றி விட்டேன் என்று பெருமானார் {ஸல்அவர்கள் பறைசாற்றும் விதமாகத்தான்” அது அமைந்திருந்தது.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்அவர்கள் அடுத்து எடுத்து வைத்த அடி இருக்கிறதே அது அம்மக்களிடம் இருந்த மிச்ச சொச்ச தீண்டாமைகளையும் களையும் முகமாக இருந்தது.

حدثنا قتيبة بن سعيد عن إسماعيل بن جعفر عن عبد الله بن دينار عن ابن عمر رضي الله عنهما قال بعث رسول الله صلى الله عليه وسلم بعثا وأمر عليهم أسامة بن زيد فطعن بعض الناس في إمرته فقام رسول الله صلى الله عليه وسلم فقال إن كنتم تطعنون في إمرته فقد كنتم تطعنون في إمرة أبيه من قبل وايم الله إن كان لخليقا للإمارة وإن كان لمن أحب الناس إلي وإن هذا لمن أحب الناس إلي بعده
ஆம்அடிமையாக இருந்த ஸைத் (ரலிஅவர்களையும்அவர்களின் மகன் உஸாமா (ரலிஅவர்களையும் படைகளுக்கு தளபதிகளாக நியமித்துதலைமைப் பொறுப்புக்கு தாங்கள் மட்டுமே தகுதியானவர்கள் என்று மார் தட்டிய குறைஷிகளின் குலப்பெருமையை குழிதோண்டிப் புதைத்தார்கள்.

இறுதியாகதாம் ஆற்றிய இறுதிப் பேருரையில்….

خطب رسول الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بمنى في وسط أيام التشريق وهو على بعير فقال: يا أيها الناس ألا إن ربكم واحد وإن أباكم واحد ألا لا فضل لعربي على عجمي ولا عجمي على عربي ولا لأسود على أحمر ولا لأحمر على أسود إلا بالتقوى
يا أيها الناس ألا
إن أمر عليكم عبد مجدع أسود يقودكم بكتاب الله فاسمعوا له وأطيعوا

“... All mankind is from Adam and Eve, an Arab has no superiority over a non-Arab nor a non-Arab has any superiority over an Arab; also a white has no superiority over black nor a black has any superiority over white except by piety and good action.”

ஓ மக்களேஎன் பேச்சைக் கவனமாகக் கேளுங்கள்உங்களது இறைவன் ஒருவனேஉங்களது தந்தையும் ஒருவரேஅறிந்து கொள்ளுங்கள்எந்த ஓர் அரபிக்கும் அரபி அல்லாதவரை விடவோஎந்த ஓர் அரபி அல்லாதவருக்கும் ஓர் அரபியை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை.

எந்த ஒரு வெள்ளையருக்கும் கறுப்பரை விடவோஎந்த ஒரு கறுப்பருக்கும் வெள்ளயரை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை.

இறையச்சம் மட்டுமே ஒருவரின் மேன்மையை நிர்ணயிக்கும்நிச்சயமாகஅல்லாஹ்விடத்தில் உங்களில் மிகச் சிறந்தவர்உங்களில் அதிகம் இறை அச்சம் உள்ளவர் தான்!”

ஓ மக்களேஅல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள்கறுப்பு நிற அபீசீனிய அடிமை ஒருவர் உங்களுக்குத் தலைவராக ஆக்கப்பட்டாலும்அவர் அல்லாஹ்வின் வேதத்தைக் கொண்டு உங்களை வழி நடத்திஅதை உங்களுக்கிடையில் நிலைநிறுத்தம் காலமெல்லாம் அவரது சொல்லைக் கேட்டு நடங்கள்அவருக்கு கீழ்ப்படியுங்கள்!”                                              ( நூல்புகாரி )

தீண்டாமை எனும் கொடிய விருட்சத்தை வெறும் பெயரளவில் இல்லாமல்செயலளவிலும் ஒழித்துக் காட்டிமறக்காமல் லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களின் முன்னிலையில் இந்த சமத்துவசகோதரத்துவ முழக்கத்தை தீண்டாமை ஒழிப்புப் பிரகடனத்தை முழங்கினார்கள் என்றால் அங்கு தான் உலகத் தலைவர்களிடத்தில் இருந்து வேறுபட்டு நின்று மகத்தான சாதனையைப் புரிந்தார்கள் சர்தார் நபி {ஸல்அவர்கள்.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்அவர்கள் போதித்த அந்த போதனைக்கு எந்த அளவு முஸ்லிம்கள் வழிபட்டு ஒழுகிசெயல் படுத்திக் காட்டினார்கள் என்பதற்கு வரலாற்றில் வனப்பானதோர் எடுத்துக் காட்டு.

وبعثه عمرو بن العاص في عشرة نفر لمقابلة المقوقس، وكان عبادة بن الصامت أسود اللون، فلما ركبوا السفن إلى المقوقس ودخلوا عليه، تقدم عبادة، فهابه المقوقس لسواده، فقال: نحُّـو عني هذا الأسود، وقدموا غيره يكلمني. فقالواإن هذا الأسود أفضلنا رأياً وعلماً، وهو سيدنا وخيرنا، والمقدَّم علينا، وإنا نرجع جميعنا إلى قوله ورأيه، وقد أمّره الأمير دوننا بما أمّره به، وأمرنا ألا نخالف رأيه وقوله.
 فقال المقوقس للوفد: وكيف رضيتم أن يكون هذا الأسود أفضلكم، وإنما ينبغي أن يكون دونكم؟. قالوا: كلا! إنه وإن كان أسود كما ترى، فإنه من أفضلنا موضعاً وأفضلنا سابقة وعقلاً ورأياً، وليس ينكر السود فينا. فقال المقوقس لعبادة: تقدم يا أسود وكلمني برفق فإني أهاب سوادك، وإن اشتد عليّ كلامك ازددت لك هيبة. فتقدم إليه عبادة فقال: قد سمعت مقالتك، وإن فيمن خلَّفت من أصحابي ألف رجل أسود كلهم مثلي، وأشد سواداً مني وأفظع منظراً، ولو رأيتهم لكنت أهيب لهم مني، وأنا قد وليّت، وأدبر شبابي، وإني مع ذلك بحمد الله ما أهاب مائة رجل من عدوي لو استقبلوني جميعاً، وكذلك أصحابي. فلما سمع المقوقس ذلك منه، قال لمن حوله: هل سمعتم مثل كلام هذا الرجل قط! لقد هبِت منظره وإن قوله لأهيب عندي من منظره، إن هذا وأصحابه أخرجهم الله لخراب الأرض، وما أظن ملكهم إلا سيغلِب على الأرض كلها

நிறவெறி நிறைந்த எகிப்து தேசத்தை வெற்றி கொண்டுஅதன் தலைமைப் பீடமான பாபிலோனிய கோட்டையை முற்றுகையிட்டிருந்தது அம்ர் இப்னுல் ஆஸ் (ரலிஅவர்களின் தலைமையிலான முஸ்லிம் படை.

கோட்டைக்குள்ளிருந்த எகிப்திய ஆட்சியாளன் மகூகாஸ் முற்றுகையிட்டிருந்த முஸ்லிம் படையினருடன் சமாதானமாய் போய்விடுவதாக அறிவித்தான் ஒரு நிபந்தனையோடு.

அந்த நிபந்தனை இது தான் “தான் முஸ்லிம்களின் பிரதிநிதிகளுடன் சந்தித்து உரையாட வேண்டும்அதுவே எனக்கு மகிழ்ச்சியாய் அமைந்து விடும் பட்சத்தில்…”

இதை கடிதத்தில் எழுதி ஒற்றரின் மூலம் படைத்தளபதி அம்ர் இப்னுல் ஆஸ் (ரலிஅவர்களிடம் தெரிவித்தான்.

மகூகாஸின் ஆசையை நிறைவு செய்ய முன்வந்தார்கள் படைத்தளபதி அம்ர் (ரலிஅவர்கள்.

அதன்படி ஒரு குழுவை அமைத்து அதற்கு தலைவராக உப்பாதா இப்னு அஸ்ஸாமித் (ரலிஎனும் நபித்தோழரை நியமித்து, “நீங்கள் யாரும் எந்த நிலையிலும் எகிப்திய ஆட்சியாளன் மகூகாஸிடம் எதுவும் பேசக்கூடாது” என்று குழுவில் இடம் பெற்ற அனைவரிடமும் கட்டாயமாகச் சொல்லிவிட்டார்கள்.

காரணம் இது தான், “குழுவில் உள்ள அனைவரும் வெள்ளை நிறத்தவர்கள்உப்பாதா இப்னு அஸ்ஸாமித் (ரலிஅவர்களோ கறுப்பு நிறம் கொண்டவர்கள்வெள்ளையர்கள் இவர்களைப் போன்றவர்களை அருவருப்பானவர்களாகவே கருதி வந்தனர்.”

குழு எகிப்திய ஆட்சியாளன் முன்னால் நின்றது.  உப்பாதா (ரலிஅவர்களின் தோற்றத்தைக் கண்ட மகூகாஸ் முஸ்லிம்களை நோக்கி “இந்த மனிதரை இந்த அவையை விட்டும் வெளியேற்றுங்கள்உங்களில் வேறொருவர் என்னிடம் வந்து பேசுங்கள்!” என்று அலறினான்.

ஆனால்குழுவில் இடம் பெற்றிருந்தவர்கள் “ஆட்சியாளரேஉங்களின் வேண்டுகோளை நாங்கள் நிராகரிக்கின்றோம்ஏனெனில்எங்களின் படைத் தளபதி இவரைத்தான் எங்கள் குழுவின் தலைவராக நியமித்து இருக்கின்றார்கள்.

மேலும்எங்கள் எவரையும் உம்மோடு பேச அனுமதிக்கவும் இல்லைஇன்னும் எங்கள் குழுவின் தலைவராக இருக்கும் இவர் “எங்களை விடச் சிறந்த அறிவாற்றலும்ஆற்றலும் நிறைந்தவர்இறையச்சத்தால் மிகவும் உயர்ந்தவர்அவருடைய சிந்தனை எப்போதும் உயர்ந்ததாகவே இருக்கக் காண்கின்றோம்.

பல நேரங்களில் நாங்களே அவரிடம் தான் எங்களுக்கான விவகாரங்களில் தீர்வு கோரி நிற்கின்றோம்அவ்வளவு ஏன் சில நேரங்களில் எங்களின் தளபதி கூட அவரிடம் ஆலோசனைகளையும்அறிவுரைகளையும் பெற்றிருக்கின்றார்கள்.

ஆகவேநீங்கள் இவரோடு தான் அவசியம் பேசியாக வேண்டும்” என்று கூறினார்கள்.

அப்போதுமகூகாஸ் “எப்படி மிக எளிதாக இவரை சிறப்பானவராக பொருந்திக் கொண்டீர்கள்இவர் தோற்றம் ஏற்றமுடையதாக இல்லையேஎன்றான்.

அதற்குகுழுவினர் “இறையச்சத்திலும்அறிவிலும்ஆலோசனையிலும் இவரே மிகைத்து விடும் போது அவருடைய தோற்றம் ஏற்பும்ஏற்றமும் நிறைந்ததாய் ஆகிவிடுகின்றது.” என்றார்கள்.

அப்போதுஅகம்பாவத்தோடு மகூகாஸ் உப்பாதா (ரலிஅவர்களை நோக்கி “ஓ கறுப்பரேஎன்னோடு பேசும்ஆனால்மிகவும் மென்மையான முறையில் பேசவும்உங்கள் தோற்றமே என்னை நடுங்க வைக்கின்றதுநீர் கடுமையாகப் பேசினால் என் நிலைமை இன்னும் மோசமாகி விடும் என நான் அஞ்சுகின்றேன்” என்றான்.

எகிப்தின் ஆட்சியாளன் மகூகாஸை நோக்கி உப்பாதா (ரலிஅவர்கள் “நீர் சொன்னதை நான் கவனமுடன் கேட்டேன்ஒரு உண்மையைச் சொல்லட்டுமா என் அருமை தோழரே!?” என்னுடைய படையில் என்னைவிட கடுமையான கறுப்பு நிறம் கொண்ட இன்னும் ஆயிரம் வீரர்கள் இடம் பெற்றிருக்கின்றனர்அவர்களை நீர் பார்த்தீர் என்றால் உம் குலை நடுங்கிப்போகும்

இன்னொன்றையும் சொல்லட்டுமாஒரே நேரத்தில் உன்னுடைய படைவீரர்கள் நூறுபேர் என்னை தாக்கிட முனைந்தாலும் “புகழுக்குரியவன் அல்லாஹ் ஒருவனே” நான் தனியொரு நபராக நின்று நூறு பேரையும் சாய்த்திடுவேன்.

இது போன்று தான் என்னுடைய தோழர்கள் ஒவ்வொருவரும் நிகரில்லா வீரர்கள் ஆவார்கள்” என்றார்கள்.

இதைக் கேட்டதும்மகூகாஸ் தம் அரசவைப் பிரதானிகளை நோக்கி “இன்று வரை இது போன்றதொரு வீரமிக்கதொரு வார்த்தையை நீங்கள் கேட்டிருக்க மாட்டீர்கள்நானும் தான்இவரின் தோற்றம் மாத்திரமல்ல இவர் பேசும் பேச்சும் கூட என்னை நடுங்கச் செய்து விட்டதாக நான் உணர்கிறேன்.

புதன், நவம்பர் 27, 2019

இஸ்லாமிய பெண்களே உஷார்,

சமூக வலைதளங்களில் குடும்பத்துடன் இருக்கும் போட்டோக்களையும் பதிவிடும் பெண்களுக்கு எச்சரிக்கை...

கடந்த சில நாட்களுக்கு முன்பு சகோதரி பர்வீன் என்பவர் தன்னுடைய தாய் மற்றும் தந்தையுடன் எடுத்த புகைப்படத்தை செல்போனிலிருந்து ஹேக் செய்த நபர்கள் அதைத் தன்னுடன் இருப்பது போல எடிட் செய்து சமூக வலைதளங்களில் பரப்பி உள்ளனர்... குடும்பத்தினர் அனைவரும் சகோதரி பற்றிய தவறான கண்ணோட்டத்தில் பார்க்க பின்னர் உண்மை நிலவரம் தெரிந்தவுடன் அந்த பெண்ணிற்கு குடும்பத்தினர் அனைவரும் ஆறுதல் கூறியுள்ளனர் ஆகவே சகோதரிகள் புகைப்படங்களை பேஸ்புக் மற்றும் வாட்ஸப்பில் பதிவிடுவதை தவிர்க்கவும் அது உங்களுக்கு ஆபத்தாக முடியும்..
இந்த சிங்கத்தை தான் இப்படியும் ஒரு நாய்
அசிங்கமாகி வச்சிருக்கான்
அழகான பேச்சாற்றல் உடைய பர்வீன் அம்மாவுக்கே இந்த கொடுமை என்றால் நம்முடைய இஸ்லாமிய பெண்கள் தன்னுடைய வீடியோவையும் போட்டோவையும் வாட்ஸ்அப் பலும் பேஸ்புக் கிலும்
பதிவிட கொஞ்சம் உஷாராக இருங்கள் தயவுசெய்து பதிவிட வேண்டாம்


இஸ்லாமிய பெண்களுக்கு அழகிய பயான்

கண்ணியமிக்க இஸ்லாமியஇஸ்லாமிய பெண்கள் எப்படி வாழவேண்டும் எப்படி எப்படி கணவனுடன் இருக்க வேண்டும்என்பதை அழகாகஇந்த பயான்கள் நமக்கு உணர்த்துகிறது

கணவன் மனைவி இடையில் எவ்வாறு அன்பை பகிர்ந்து கொள்ளவேண்டும் என்று முஹம்மது நபி (ஸல்) சொல்லிக் கொடுத்துவிட்டு தான் சென்று இருக்கிறார்கள்..... 

💞 மனைவியின் முகத்தை புன்முறுவலுடன் பார்த்தல்.
(ஸஹீஹ் அத் திர்மிதி 1956)

💞 அவளுக்கு உணவை ஊட்டி விடுவது.
(புஹாரி / முஸ்லிம்)

💞 அவள் வாய்வைத்து குடித்த பகுதியில் இருந்து நாம் அருந்துவது.
(முஸ்லிம் )

💞 அவளின் மடியில் சாய்வது.
(புஹாரி / முஸ்லிம்) 

💞 ஒரே பாத்திரத்தில் அவளுடன் குளிப்பது.
(புஹாரி / முஸ்லிம்)

💞 அவளுடன் கொஞ்சி குழாவுவது .
(அஸ் ஸில்ஸிலதுஸ் ஸஹீஹா 1/254)

💞 வீட்டு வேலைகளில் அவளுக்கு உதவியாக இருப்பது.
(அல் அதபுல் முப்ரத் 4996)

💞 அவளுக்காக எமது வாயை சுத்தப்படுத்தி கொள்வது.
(முஸ்லிம்)

💞 அவளுக்காக நம்மை அலங்கரித்து மணம் பூசிக்கொள்வது.
(முஸன்னப் இப்னு அபீ ஷய்பா) 

💞 அவளுக்கு விருப்பமான பெயர்களைக் கொண்டு அவளை அழைப்பது.
(புஹாரி / முஸ்லிம்)

💞 அவளிடம் குறையைக் கண்டால், காணதவன் போல நடந்து கொள்வது.
(முஸ்லிம்)

💞 அவளுடன் அன்பாக இருத்தல், அவள் அழுதால் கண்ணீரைத் துடைத்து விடுதல்.
(ஸஹீஹுன் நஸாஈ)

💞 அவளின் பிடிவாதத்தை சகித்துக் கொள்வது.
(புஹாரி)

💞 அவள் சமைத்த சாப்பாட்டை குறை கூறாமல் இருப்பது.
(புஹாரி)

💞 அவளின் பணிகளுக்கு நன்றி தெரிவிப்பது.
(அத் தர்கீப் வதர்ஹீப் 976)

💞 அவளின் குடும்பத்தினரையும் தோழிகளையும் சங்கைப் படுத்துவது.
(திர்மிதி) 

💞 அவளுடனே வாழ்வேன் என்பதை வாயால் சொல்வது.
(புஹாரி)

💞 அவளின் தேவைகளை கவனிப்பது, அவள் நோயுற்றால் அவளுக்கு ஓதி ஊதுவது.
(புஹாரி / முஸ்லிம்) 

💞 அல்லாஹ் வை வணங்க நாம் உதவியாக இருப்பது.
(அபூ தாவூத்) 

💞 அவளை நம்புவது, அவளுக்கு மோசடி செய்யாமல் இருப்பது.
(முஸ்லிம்) 

💞 நாம் வெளியில் செல்லும் போது அவளை முத்தமிடுவது.
(அபூ தாவூத்)
பெண்ணை அல்லாஹ் மென்மையான குணம் கொண்டவளாகவும் அதிக அன்பு காட்டக் கூடியவளாகவுமேபடைத்துள்ளான். அதனால் தான் அல்லாஹ்வுடைய அன்பைப் பற்றி உலக மக்களுக்கு அல்லாஹ்விளங்கப்படுத்தும் போது தாய்மையைப் பெற்ற மனைவியான ஒரு பெண்ணையே உதாரணத்துக்காகத்தேர்ந்தெடுத்துள்ளான். அன்புக்கு உதாரணமே ஓரு பெண்தான் என்று சொன்னால் யாரால் மறுக்க முடியும்.  

(ஹவாஸின் குலத்தைச் சேர்ந்த) கைதிகள் சிலர் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அவர்களிடையே இருந்தஒரு பெண்ணின் மார்பில் பால் சுரந்தது. அவள் பாலூட்டுவதற்காக(த் தன் குழந்தையைத் தேடினாள்). குழந்தைகிடைக்கவில்லை. எனவே), கைதிகளில் எந்தக் குழந்தையைக் கண்டாலும், அதை (வாரி) எடுத்து(ப்பாலூட்டினாள். தன் குழந்தை கிடைத்தவுடன் அதை எடுத்து)த் தன் வயிற்றோடு அணைத்துப் பாலூட்டலானாள். அப்போது ‘எங்களிடம் நபி (ஸல்) அவர்கள், ‘இந்தப் பெண் தன் குழந்தையை தீயில் எறிவாளா? சொல்லுங்கள்!” என்றார்கள். நாங்கள், ‘இல்லை, எந்நிலையிலும் அவளால் எறிய முடியாது” என்றுசொன்னோம். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் , ‘இந்தக் குழந்தையின் மீது இவளுக்குள்ள அன்பைவிடஅல்லாஹ் தன் அடியார்களின் மீது மிகவும் அன்பு வைத்துள்ளான்” என்று கூறினார்கள்.

பெண்ணிடம் அதிக அன்பையும், பாசத்தையும் கொடுத்த அல்லாஹ் அதே போன்று பிடிவாத குணத்தையும், நன்றிமறக்கும் தன்மையையும் அதிமாகவே கொடுத்துள்ளான். எல்லா மனிதர்களையும் முழுமையானவர்களாகப்படைத்திருந்தால் நன்மை, தீமை, சுவர்க்கம், நரகம், மரணம் என்று எதுவுமே தேவைப்பட்டிருக்காது. 

திருமணம் முடித்த அதிகமான ஆண்கள் பெண்ணின் குறைகளைத் தன்னுடைய நண்பர்களிடம், வேலைசெய்யும் இடங்களில், முகநூலில் என்று எல்லா இடங்களிலும் வெளிப்படுத்திக் கொண்டே இருக்கின்றனர். 

குறிப்பாக முகநூலில் மனைவியைப் பற்றி யாராவது ஒரு வரி சொன்னால் போதும். அவள் பிடிவாதக்காரி, கோபக்காரி, அடங்காதவள் என்று அவளால் எந்த நலவுமே கிடைக்காதது போன்றே தன் மனைவியின்குறைகளைக்கூறி முகநூலில் அவளது மாணத்தை இழக்கச் செய்யும் ஆண்களுக்கு மேலே வானத்தைப் பார்த்துஅழுக்குக் காரலைத் தனக்குத் தானே துப்பிக் கொள்கிறோம் என்பதைப் புரிந்து கொள்ள முடியவில்லைபோலும். முக நூலில் உள்ள நண்பர்கள் என்பது நாம் தேடிக்கொண்ட உறவுகள். அவர்கள் ஆண்களா, பெண்களா, என்று கூடத் தெரியாது. ஆனால் நாம் பிறக்கும் போதே யார் தனக்குத் தகுதியானவள் என்பதைதீர்மானித்து அல்லாஹ்வாலே விதித்த அந்த உறவைப் பற்றி இவர்களிடம் முறையிட்டு ஆனந்தம்அடைகின்றீர்கள். இது உங்கள் மனைவிக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் அல்லாஹ்விடம் எந்த ஒன்றும்மறைந்து விடாது. மறுமையில் அல்லாஹ் இது பற்றிக் கேட்டால் என்ன பதில் சொல்வது. 

கணவன், மனைவி உறவென்பது ஒரு ஒப்பந்தம் தான். அதன்மூலம் கணவனுக்கோ, மனைவிக்கோ நிம்மதி, சந்தோசம், ஆறுதல் எதுவுமே கிடைக்காவிட்டால் அவளைத் தலாக் கூறும் அனுமதியை அல்லாஹ் வழங்கினானே தவிர அவளது குறைகளை வெளிப்படுத்த அனுமதிக்கவில்லை. 

ஒரு ஆணுக்கு நான்கு பெண்களைத் திருமணம் செய்யச் சொன்ன இஸ்லாம் அதற்கு நிறையக் காரணங்களைச்சொல்லியுள்ளது. ஆனால் தன் மனைவியிடம் குறை இருப்பதற்காக இன்னொன்றை முடிக்கச் சொல்லவில்லை. ஒருபெண்ணிடம் குறை இருப்பதற்காக இன்னொருவரைத் திருமணம் செய்தாலும் அவளிடமும் நீங்கள்விரும்பாத குறைகள் இருக்கத்தான் செய்யும் 

நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.

பெண்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள் என உங்களுக்கு நான் உபதேசிப்பதைஏற்றுக்கொள்ளுங்கள்! எனெனில் பெண் (வளைந்த) விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டுள்ளாள். விலாஎலும்பின் மிகக் கோணலான பகுதி அதன் மேல்பகுதியாகும். அதை நீ பலவந்தமாக நிமிர்த்திக்கொண்டேபோனால் அதை நீ ஒடித்தே விடுவாய். அதை அப்படியே நீ விட்டுவிட்டால் கோணலுள்ளதாகவே அது நீடிக்கும். ஆகவே, பெண்கள் விஷயத்தில் உங்களுக்கு நான் உபதேசிப்பதை ஏற்றுக் கொள்ளுங்கள்."(நூல்கள்: ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

ஏனென்றால் பெண் என்பவள் ஆணிண் விலா எழும்பிலிருந்து படைக்கப்பட்டுள்ளால். அவளுடைய அத்திவாரம்ஒரு ஆணிண் விலா எழும்பாகும். அந்த விலா எழும்பில் வலைவில்லாமல் இருந்தால் சில வேலை அதனால்படைக்கப்பட்ட அந்த உயிரும் வலைவுகள் இல்லாமல் இருக்கும். உதாரணமாக ஒரு வீட்டுக்கு அத்திவாரம்எந்தளவு உறுதியாக இருக்குமோ அந்தளவுக்கு வீடு உறுதியாக இருக்கும். வீட்டின் அத்திவாரத்துக்குசேர்க்கப்பட வேண்டிய பொருட்களைக் குறைத்து விட்டு வீட்டை எவ்வளவு உறுதியாகவும், பெரிதாகவும், அழகாகவும், நவீன டிஸைன்களில் கட்டினாலும் அந்த வீடு அதிக காலம் உறுதியாக நிற்காது. இதற்காகவீட்டையோ, ஜன்னலையோ, டைல்ஸ்ஸையோ மாற்றுவதோ, குறை கூறுவதிலோ பயனில்லை. அத்திவாரத்தைத்தான் மீண்டும் செம்மைப்படுத்த வேண்டும். அப்போதுதான் வீடு உறுதியாக மாறும்.

மனைவியைக் குறை கூறும் ஆண்களே!! நீங்கள் அவர்களின் குறைகளை மறைத்தால் அவர்களும் உங்கள்குறைகளை மறைப்பார்கள். நீங்கள் அவர்களது குறையை உலகத்துக்கே தெரியப்படுத்தினால் அவளும்அவ்வாறே பகிரங்கப் படுத்தக்கூடியவளாக இருப்பாள் என்பதில் சந்தேகமே இல்லை. நீங்கள் கற்பைப் பேணிஅவர்களுக்கு நம்பிக்கையானவர்களாக இருந்தால் தான் அவர்களும் உங்களுக்கு ஏற்றவர்களாக இருப்பார்கள். ஏனென்றால் ஜாடிக்கு ஏற்ற மூடியல்லவா தேவைப்படுகின்றது. 
தன்னிடமுள்ள அழுக்கை சுத்தப்படுத்தாமல், பெண்ணின் இயல்பான குணத்தைப் பற்றி அறியாமல் ஒன்றல்லநான்கு பெண்களை நீங்கள் திருமணம் முடித்தாலும் இதை விட அதிகமாகவே புலம்பல்கள் இருக்கும். 

"அவனே உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்தான். அவரிலிருந்து அவரது துணைவியை அவளிடம் அவர் மனஅமைதி பெறுவதற்காகப் படைத்தான். 
அல்குர்ஆன் 7:189.

எனவே மனைவியைப் பற்றி நாம் கூறினால் மன அமைதி பற்றி மட்டுமே பேசலாம். அவ்வாறான மன அமைதிதிருமண வாழ்க்கையில் சொல்வதற்கு இல்லையென்றால் திருமணத்தின் மூலம் இஸ்லாம் எதிர்பார்த்தவைஅவர்களுக்குக் கிடைக்கவில்லை என்பதே உண்மை.

அல்லாஹ் கூறுகின்றான்.

اَلْخَبِيْثٰتُ لِلْخَبِيْثِيْنَ وَالْخَبِيْثُوْنَ لِلْخَبِيْثٰتِ‌ وَالطَّيِّبٰتُ لِلطَّيِّبِيْنَ وَالطَّيِّبُوْنَ لِلطَّيِّبٰتِ‌ اُولٰٓٮِٕكَ مُبَرَّءُوْنَ مِمَّا يَقُوْلُوْنَ‌ لَهُمْ مَّغْفِرَةٌ وَّرِزْقٌ كَرِيْمٌ‏
கெட்ட பெண்கள், கெட்ட ஆண்களுக்கும்; கெட்ட ஆண்கள், கெட்ட பெண்களுக்கும் தகுமானவர்கள். (அவ்வாறே) பரிசுத்தமான பெண்கள், பரிசுத்தமான ஆண்களுக்கும்; பரிசுத்தமான ஆண்கள், பரிசுத்தமானபெண்களுக்கும் தகுமானவர்கள். இத்தகைய (பரிசுத்தமான)வர்கள்தாம் (இந்த நயவஞ்சகர்கள்) கூறும்குற்றங்குறைகளிலிருந்து பரிசுத்தமாக இருக்கின்றனர்.இவர்களுக்கு (மறுமையில்) மன்னிப்பும் உண்டு; கண்ணியமான முறையில் உணவும் உண்டு.
(அல்குர்ஆன் : 24:26)

அல்லாஹ்வின் இந்தக் கூற்றின் அடிப்படையில் பார்த்தால் நாம் எப்படி உலகில் வாழ்கிறோமோ அதே போன்றுதான் நம் துணையும் அமையும். நாம் தொழுகையாளியாக இறையச்சமுடையவர்களாக நற்குணமுடையவர்களாகஇருந்தால் தான் நமக்கும் அவ்வாறான துணை கிடைக்கும். அதுவல்லாமல் நாம் ஏனோ தானோ என்று வாழ்ந்துவிட்டு நம் துணையை மட்டும் நூறு வீதம் நன்றாகக் குறையில்லாமல் எதிர்பார்பதென்பது எவ்வளவுமுட்டாள்தனம். 

அல்லாஹ்வால் தேர்வு செய்யப்பட்ட ஒர் கண்ணியமான உறவு இது. இதன் கண்ணியம் களையப்படாமல்பாதுகாக்கப்பட வேண்டியது அவர்களின் பொருப்பில் உள்ளது. ஒரு பெண் இருபது, இருபத்தைந்து வருடங்கள்பெற்றோருடன் நிம்மதியாக சந்தோசமாக இருந்தாள் என்பதல்ல முக்கியம். திருமணத்திற்குப் பின்னுள்ளவாழ்க்கை தான் அவளது சந்தோசத்தையும், நிம்மதியையும், அமைதியையும் தீர்மானிக்கின்றது. அது கணவன்அமைவதைப் பொருத்தே தீர்மானிக்கப் படுகின்றது. வாழுகின்ற முப்பது, நாற்பது வருடங்களை சந்தோசமாகவாழ முயற்சி செய்வதே சிறந்தது. 

முகநூலில் சில ஆண்கள் தம் மனைவியைக் குறை கூறுகின்றனர். கேலி செய்கின்றனர். ஆனால் நீங்கள்மனைவியின் குறைகளை வெளிப்படுத்தும் போது உங்கள் குறைகளையும் சேர்த்தே நீங்கள்வெளிப்படுத்துகின்றீர்கள் என்பது வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்குப் புரியும். முகநூலில் ஏதாவதுஎழுத வேண்டும் என்பதற்காக, அதிக லைஸ் கொமண்ட் வாங்க உங்கள் அன்பு மனைவியின் குறைகளையாவெளிப்படுத்த வேண்டும்.? நேரத்தைக் கழிக்கவும், அரட்டைக்காகவும், முகநூலைப் பயன்டுத்துகின்றவர்களிடம்உங்கள் புனிதமான காதலையும்,வாழ்க்கையையும் புலம்பித் தொலைத்து விடாதீர்கள்.

 அல்ஹம்துலில்லாஹ் சிலர் மனைவிமார் பற்றிப் பெறுமையாகப் பேசுகின்றனர், சிலர் மெளனிகளாகஇருக்கின்றனர். அவர்களுக்குப் பிரச்சனையோ, சோதனையோ இல்லை என்பதல்ல அர்த்தம். அவர்கள்அறிவுள்ளளவர்கள். பெண்ணின் உண்மையான இயல்பைக் கண்டறிந்து அல்லாஹ்வுக்காகப் பொறுமையாகஇருப்பவர்கள். கணவன் மனைவிக்கு ஆடை மனைவிக்கு கணவன் ஆடை என்ற அல்குர்ஆன் வசனத்தைவிளங்கியவர்கள். கிடைத்ததை வைத்துத் திருப்தி அடைபவர்கள். அல்லாஹ் அவர்களுக்கு அருள் புரியவேண்டும்.

கணவன் மனைவி பிள்ளைகளுக்காக கேட்க வேண்டிய துஆ

وَالَّذِيْنَ يَقُوْلُوْنَ رَبَّنَا هَبْ لَـنَا مِنْ اَزْوَاجِنَا وَذُرِّيّٰتِنَا قُرَّةَ اَعْيُنٍ وَّاجْعَلْنَا لِلْمُتَّقِيْنَ اِمَامًا‏
மேலும் அவர்கள்: “எங்கள் இறைவா! எங்கள் மனைவியரிடமும், எங்கள் சந்ததியரிடமும் இருந்து எங்களுக்குக்கண்களின் குளிர்ச்சியை அளிப்பாயாக! இன்னும் பயபக்தியுடையவர்களுக்கு எங்களை இமாமாக(வழிகாட்டியாக) ஆக்கியருள்வாயாக! என்று பிரார்த்தனை செய்வார்கள்.
(அல்குர்ஆன் : 25:74)
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்........

பிரதமர் நேருவை பற்றிய வீடியோ

பிரதமர் நேருவின் வரவேற்ப்பை பாருங்கள் இது ஒரு கிடைக்க கானா வீடியோ


திருக்குர்ஆன் எவ்வளவு அழகாக ஓதப்படுகிறது அதுவும் தவறு இல்லாமல் ஓதப்படுகிறத து நீங்களே கொஞ்சம் கேட்டு பாருங்களேன்

வெள்ளி, நவம்பர் 22, 2019

தயவு செய்து இஸ்லாத்திற்கு முற்றிலும் மாறுசெய்யும் வகையில் ♋🍭๏🌀

வியாழன், நவம்பர் 21, 2019

பாபர் மசூதி ஒரு பார்வை,

*பாபர் மசூதி நிலப்பிரச்சினை: இந்துத்துவத் திட்டத்துக்கு இணக்கம் காட்டும் அகழ்வாய்வாளர்கள்...* 

பாபர் மசூதிக்குக் கீழ் முன்பு கோயில் இருந்ததாகக் கூறுவது தவறானது.  சான்றுகளின் அடிப்படையில் இது நிறுவப்படவில்லை. கிடைத்துள்ள சான்றுகளைத் தங்களுக்குச் சாதகமாக , தவறாக இந்துத்துவச் சார்பாளர்கள் விவரிக்கிறார்கள் (misinterpretation ) .

 கடந்த 9.11.2019 அன்று ,உச்ச நீதிமன்றம் பாபர் மசூதி இருந்த இடத்தை இந்து அமைப்புக்கு வழங்கித் தீர்ப்பளித்தது. இதை நிலைப்படுத்திக் கொள்ள, மசூதிக்குக் கீழே கோயில் இருந்தது என்றக் கருத்தை நிலைநாட்ட, திட்டமிட்டப் பொய் பிரச்சாரம் தொடர்கிறது .

 இதுவரைக் கிடைத்த சான்றுகளின் அடிப்படையில் பார்த்தால்,பாபர் மசூதி இருந்த இடத்தில் கோயில் இருந்திருப்பதற்கு வாய்ப்பில்லை என்பதுதான் உண்மை.
 அந்த இடத்தில் அடுத்தடுத்து, இரண்டு பழைய மசூதிகள் கட்டப்பட்டு இருந்ததற்கான அடையாளங்களும், புத்த சமயம் முன்பு தழைத்திருந்த பகுதி என்பதால், சில புத்த சமயத் தடயங்களும் கிடைத்துள்ள நிலையில், இந்துக் கோயில் அங்கு இருந்ததில்லை என்று உறுதியாகக் கூறலாம். 

கோயில் அங்கு இருந்ததில்லை என்பது குறித்து ஏராளமான தொல்லியல்_வரலாற்று அறிஞர்கள் விரிவாக எழுதியுள்ளனர். இக்கேள்விக்கு விடை காண ஏராளமான அறிக்கைகளையும் பல்வேறு வரலாற்றாளர்களின் கருத்துக்களையும் ஊன்றிப் படிக்க வேண்டியுள்ளது. ஆனால் அங்கு கோயில் இருந்தது என்று கூறுபவர்களுக்கு எதுவும் தேவைப்படவில்லை. கிடைத்த தடயங்களை ஒழுங்காகப் பதிவு செய்யாத தொல்லியல் துறையின் குறைபாடுள்ள அறிக்கையும், இராமர் பற்றிய நம்பிக்கையும் , உச்சநீதிமன்றத்தின் முரண்பாடுகள் மிக்க தீர்ப்புமே போதுமானதாக இருக்கிறது.

 இந்நிலையில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நழுவ விட்டுவிடக் கூடாது என்ற நோக்கில், இந்துத்துவ ஆதரவுத் தொல்லியலாளர்களைக் களமிறக்கி, இடிக்கப்பட்ட மசூதிக்கு அடியில் கோயில் இருந்தது என்று அறிக்கைக்கு மேல் அறிக்கை விடச் செய்துகொண்டிருக்கின்றன இந்துத்துவ அமைப்புகள் . அப்படி பொய்யான செய்திகளைப் பரப்புவதில் தொல்லியலாளர்களைப் பயன்படுத்துகின்ற போக்கு அதிகரித்துள்ளது.

கே.கே. முகமது என்கிற தொல்லியலாளர் "பாபர் மசூதி இருந்த இடத்தில் முன்பு இந்து கோயில் இருந்தது " என்று அழுத்தமாகக் கூறி அறிக்கைகளும், பேட்டிகளும் அளித்து வருகிறார்.  பல ஊடகங்களும் அவரை முன்னிலைப்படுத்தி, செய்திகள் வெளியிட்டு, இடிக்கப்பட்ட பாபர் மசூதியின் கீழ் கோயில் இருந்தது என்ற கருத்தை மக்கள் மயமாக்கி வருகின்றன. இந்துத்துவவாதிகளும், மதவாதிகளும் அவரைக் கொண்டாடி வருகிறார்கள். 

 தி இந்து- தமிழ் அவரை நேர்காணல் செய்து, 14. 11. 2019 அன்று விரிவான செய்தி வெளியிட்டிருந்தது :

" அயோத்தி அகழ்வாராய்ச்சிக்கு சமஸ்கிருதம் உதவியாக இருந்தது " என்று செய்திக்கு தலைப்பிட்டு இருந்தது.  தொல்பொருள்  ஆராய்ச்சிக்கு சமஸ்கிருதம் தேவை என்ற கருத்துடன் செய்தி முடிவடைகிறது. பாபர் மசூதி நிலத்தில் நடத்தப்பட்ட அகழ்வாய்வில் சமஸ்கிருதம் பயன்பட்டது என்று கூறுவதே நகைப்புக்குரியது அல்லவா?

 "இந்தியத் தொல்பொருள் ஆய்வுத் துறையில் (ஏ.எஸ்.ஐ)  மண்டல இயக்குனராகப் பணியாற்றியவர், புகழ் பெற்ற தொல்பொருள் ஆய்வாளர் கே.கே. முகமது."

" 30 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொல்பொருள் ஆய்வுத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். சர்ச்சைக்குரிய அயோத்தி நிலத்தில் அகழ்வாய்வு செய்த போது, பாபர் மசூதிக்குக் கீழே கோயில் இருப்பதை அறிந்து அதை உலகுக்குச் சொன்னவர் இவர்தான். சர்ச்சைக்குரி ய இடத்தில் கோயில் மீது தான் மசூதி கட்டப்பட்டிருப்பதைத் தகுந்த ஆதாரங்களுடன் அவர் நிரூபித்தார். "

 "அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில், 1976- 77 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆய்வுப் பணியில் ஈடுபட்ட தொல்பொருள் ஆய்வாளர் பி.பி.லால் தலைமையிலான முதல் இந்தியத் தொல்பொருள் குழுவில் கே.கே. முகமது இடம்பெற்றிருந்தார். "

 "பாபர் மசூதியின் மேற்குப் பகுதியில் நடந்த அகழ்வாராய்ச்சியில், தனது குழு பல்வேறு டெரகோட்டா சிற்பங்களைக் கண்டுபிடித்தது என்றும்,  இதுபோன்ற டெரகோட்டா சிற்ப அமைப்புகள் இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டவை என்பதால், இந்த இடம் கோயில் இருந்த இடம் தான் என்பதை ஆணித்தரமாக எடுத்துரைத்து பாராட்டுக்களைக் குவித்தார்"
என்று வியந்து பாராட்டிப் பேசுகிறது. 

 இந்துத்துவவாதிகள் மற்றும் இராமர் கோயில் ஆதரவு அரசியல்வாதிகள் அனைவருக்கும், கே.கே. முகமது அளித்த இராமர் கோயில் ஆதரவுக் கருத்துக்கள் மகிழ்ச்சி அளித்து வருகின்றன.
இந்நிலையில், "அகழ்வாய்வில் பங்கேற்ற அகழ்வாய்வு அறிஞர் முகமதுவே கூறி விட்டார்" என்று மக்கள் அனைவரையும் நம்ப வைக்கும் வகையில் ஊடகங்கள் அவரை விளம்பரப்படுத்தி வருகின்றன.

*அயோத்தியில் அகழ்வாய்வு செய்த B. B.லால் அவர்களின் அகழ்வாய்வுக் குழுவில் கே.கே. முகமது ஒரு குழு உறுப்பினரா என்பது அடிப்படையான கேள்வி.*

 கே.கே. முகமது கேரளாவைச் சேர்ந்தவர். அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகத்தில் 1973- 75 ஆகிய ஆண்டுகளில் முதுகலை வரலாறு படித்தார்.

அதன் பிறகு 1976 -77 இல்,  இந்தியத் தொல்லியல் துறையின் கீழ் இயங்கும் ஸ்கூல் ஆஃப் ஆர்க்கியாலஜி - இல் ஓராண்டு டிப்ளோமா படித்தார். தொல்லியல் அகழ்வாய்வு குறித்த அவருடைய படிப்பு அவ்வளவுதான். 

இதன் பிறகு, அலிகார் பல்கலைக்கழகத்தில் 1978-ல் வரலாற்றுத் துறைக்கு உட்பட்ட தொல்லியல் பிரிவில் உதவி தொழில்நுட்ப உதவியாளராகவும், பின்னர் உதவியாளராகவும் வேலைபார்த்தார்.

 பின்னர், இந்தியத் தொல்லியல் துறையில், உதவி மேற்பார்வையாளராக  1988 - 90 இல் -சென்னையிலும்,
 1991 - 1997 இல் கோவாவிலும், பின்னர்,
மேற்பார்வையாளராகப் பதவி உயர்வு பெற்று 1997-2001இல் பீகாரிலும், 
2001 - 2003 இல் ஆக்ராவிலும், 
2003 - 2004 இல்  சட்டிஸ்கரிலும், 
204-2008 இல் போபாலிலும்,
2008-2012-இல் டில்லியிலும் வேலை பார்த்தார்.

2012 -இல் இந்திய தொல்லியல் துறையின் ரீஜினல் டைரக்டர் _ வடக்கு எனப் பதவி உயர்வு பெற்று, அதே ஆண்டு ஓய்வு பெற்றார்.

இந்நிலையில், அயோத்தி அகழ்வாய்வில் கே.கே.முகமது எப்போது பங்கேற்றார்?

 2003 - இல் பாபர் மசூதியின் கீழ் அகழ்வாய்வை நடத்தியவர் டாக்டர் பி.ஆர். மணி என்பவருடைய குழு ஆகும்.
 அவருடைய ஆய்வுக் குழுவுக்கும், கே.கே. முகமதுவுக்கும்  எந்தத் தொடர்பும் கிடையாது.

 கே.கே. முகமது அளித்துள்ள, அலுவலக பூர்வமான தன் விபரப்பட்டியல் (curriculum vitae) - இன் படி, அயோத்தி அகழ்வாய்வு என்பதில் அவருடைய பங்களிப்பு என்பது கிடையாது.

*அவருடைய பங்களிப்புகள் 
அக்பரின் இபாதத் கானா, 
பதேபூர் சிக்ரியில் முதல் கிறித்தவக் கோயில், அசோகரின் கேசாரியா புத்த ஸ்தூபம், ராஜ்கிர்  புத்த ஸ்தூபம் அகழ்வாய்வு, வைசாலியில் கொல்ஹுவா  புத்தமத இருப்பு அகழ்வாய்வு, கோழிக்கோடு-மலப்புரம் குகைக்கோயில்கள், குடை கற்கள் ஆகியவைதான்.

 இவருடைய ஆய்வுகள் இவற்றைத்தவிர, அவருடைய சாதனையாக, வேறு எதுவுமில்லை.

 சட்டீஸ்கரில் பர்சூர், சம்லூர்  கோயில்களைப் பாதுகாத்தல் நடவடிக்கை மேற்கொண்டார். குவாலியருக்கு 40 கிலோ மீட்டர் தொலைவில் பட்டேஸ்வர்,  மொரீனா பகுதிகளில் உள்ள 200 சிவன், விஷ்ணு கோயில்களில் 60 கோயில்களை இவர் புதுப்பித்தார். 2008- காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின்போது, டில்லியில் உள்ள நினைவுச் சின்னங்களை அழகு படுத்தினார். டில்லியில் குழந்தைகள் மியூஸியத்தை உருவாக்கினார். இவைதாம் அவருடைய ஒட்டுமொத்த செயல்பாடுகள். 

 இப்போது 2019 நவம்பர் 9- அன்று, உச்ச நீதிமன்றம் பாபர் மசூதி இருந்த இடம் இந்துக்களுக்கு என்று தீர்ப்பளித்தது.
 'அதுவே சரியான தீர்ப்பு' என்றும், அந்த இடத்தை முஸ்லிம்களே மனமுவந்து முன்னரே வழங்கியிருக்க வேண்டும் என்றும், மத்திய அரசு வழங்கும் 5 ஏக்கர் நிலத்தையும் இராமர் கோயிலுக்கு முஸ்லிம்கள் வழங்கிவிட வேண்டும் என்றும், பேசியும், எழுதியும் வருகிறார்.

 அனைத்து செய்தி ஊடகங்களும் இதை முன்னிலைப்படுத்தி, செய்தி வெளியிட்டு வருகின்றன.

 இந்நிலையில் "அயோத்தியின் அகழ்வாராய்ச்சிக்கு சமஸ்கிருதம் உதவியாக இருந்தது" என்றும், சர்ச்சைக்குரிய அயோத்தி நிலத்தில் கோயில் இருந்ததை கண்டுபிடித்து உலகுக்கு அறிவித்தவர் இவர்தான் என்றும், கோயில் இருந்ததை தகுந்த ஆதாரங்களுடன் அவர் நிரூபித்திருக்கிறார் என்றும், B.B.லால் தலைமையிலான முதல் இந்தியத் தொல்பொருள் குழுவில் கேகே முகமது இடம் பெற்றிருந்தார் என்றும், இப்போது வேறு சில செய்தித்தாள்களில் மசூதிக்கு அடியில் இருந்து 263 சிலைகள் எடுக்கப்பட்டன என்று அவர் கூறியதாகவும், தொடர்ந்து செய்திகள் வெளிவந்திருக்கின்றன.  

இச்செய்திகள் அனைத்தும் தவறானவை. செய்தியைப் படிக்கும் பலருக்கு, பிரச்சினையை ஆதரித்தோ, எதிர்த்தோ பேசும் பலருக்கு,  இந்த அகழ்வாய்வில் ஈடுபட்டவர்கள் பற்றியோ, அகழ்வாய்வுக் குழுவில் இல்லாமல் பார்வையாளர்களாக வந்திருந்து அகழ்வாய் வைக் கண்கானித்தவர்கள் பற்றியோ, தொல்லியல் துறை தோண்டியெடுத்தச் சில முக்கியத் தடயங்களைப் பதிவு செய்ய மறுத்து கண்டனத்துக்கு உள்ளானது பற்றியோ, மொட்டையடிக்கப்பட்ட ஆய்வறிக்கையை நீதிமன்றத்தில் தொல்லியல் துறை சமர்ப்பித்தது பற்றியோ, முதல் இரண்டு இடைக் கால ஆய்வுகளில் இல்லாத செய்திகளை  இறுதி அறிக்கையில் சேர்த்தது பற்றியோ எதுவும் தெரியாது. 

இந்நிலையில், மசூதிக்குக் கீழே கோயில் இருந்தது என்று கண்டுபிடித்துக் கூறியவரே ஒரு முஸ்லிம்தான் என்றும், அவர் மிகப் பெரிய அகழ்வாய்வு அறிஞர் என்றும் செய்தி பரப்பப்படுகிறது.

 அயோத்தி ஆய்வுக்கும் கே.கே. முகம்மதுவுக்கும் என்ன தொடர்பு? 

இது குறித்து அறிந்துகொள்ள அயோத்தியில் இதுவரை நடந்துள்ள அகழ்வாய்வுகள் குறித்த சில செய்திகளை அறிந்து கொள்ள வேண்டும். இது வரை அயோத்தியில் அகழ்வாய்வு செய்த 
எந்த அகழ்வாய்வுக் குழுப் பெயர்ப் பட்டியலிலாவது அவருடைய பெயர் இருகிறதா என்பது குறித்து அறிந்து கொள்ள வேண்டும்.

 அயோத்தியில் இதுவரை நடந்த அகழ்வாய்வு அறிக்கைகள் எதிலாவது கே.கே. முகமதுவின் பெயர் இருக்கிறதா? எதிலும் இல்லை. ஏனென்றால், அயோத்தி அகழ்வாய்வு எதிலும் ஓர் அகழ்வாய்வாளர் என்ற முறையில் அவர் பங்கேற்றதில்லை.(பயிற்சி மாணவர் என்ற முறையில் குறுகிய காலம் உடனிருக்கும் வாய்ப்பை மட்டுமே பெற்றார்.)

 அயோத்தியில் அகழ்வாய்வு 1861, 1969,  1976 -77,  1977 -78,  1978 -79, அதன் பிறகு 2003 - ஆகிய ஆண்டுகளில் நடைபெற்றது.  இதில் எந்த அகழ்வாய்வுக் குழுவிலும் கே.கே. முகமது கிடையாது. 

 1976-இல் எம்.ஏ. வரலாறு முதுகலை பட்டப் படிப்பை முடித்த கே.கே. முகமது ஓராண்டு  School of Archaeology (ஸ்கூல் ஆஃப் ஆர்க்கியாலஜி) யில் தொல்லியல் டிப்ளமோ படித்தார், அதை முடித்தவுடன் 1978 -இல்  ஆய்வு உதவியாளர் (Research Assistant) ஆக அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகத்தில் பணிஅமர்த்தம் பெற்றார். இவ்வேலை 1979இல் உறுதி செய்யப்பட்டது. அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகத்தில் வரலாற்றுத் துறைக்கு உட்பட்ட ஒரு பிரிவாகிய தொல்லியல் பிரிவில் (Archaeology Section)-இல்  Research Assistant - ஆகவும், உதவி தொல்லிய லாளராகவும் 1988 - வரை வேலை பார்த்தார்.

அதன் பிறகு, இந்தியத் தொல்லியல் துறையில் துணை தொல்லியல் கண்காணிப்பாளராக நியமனம் பெற்றார்.

1976 -77 ஆகிய ஆண்டுகளில் தொல்லியல் துறையின் டைரக்டர் ஜெனரல் பி.பி.லால் நடத்திய அகழ்வாய்வுக்  குழுவில் இவர் இல்லை. அப்போது இவர் தொல்லியல்  டிப்ளோமா படித்துக் கொண்டிருந்த 12 மாணவர்களுள் ஒருவர்; ஒரு பயிற்சி மாணவர் (Trainee). 

  அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகத்தில் வரலாற்றுத் துறையின் தலைவர் பேராசிரியர் சையது அலி ரிஸ்வி, "பி.பி. லாலின் ஆய்வுக் குழுவில் கே.கே. முகமது ஒரு போதும் இருந்ததில்லை" என்று கூறுகிறார். 
School of Archaeology யில் தொல்வியல் டிப்ளோமா படிக்க, 12 மாணவர்கள் ஓராண்டில் சேர்க்கப்படுகின்றனர் என்றும், டிப்ளோமா படிப்புக்கான வகுப்புகள் செப்டம்பர் -அக்டோபரில் தொடங்கும் என்றும், மாணவர்களை தொல்லியல் ஆய்வுத்துறையின் இரண்டு மாதங்கள் பயிற்சிக்கு டிசம்பர் மற்றும் பிப்ரவரி மாதங்களில் அனுப்புவார்கள் என்றும், கே.கே. முகமதுவின் வகுப்பில் படித்த சக மாணவரான அசோக் பாண்டே தெரிவிக்கிறார். பின்னாளில், போபாலில் தொல்லியலாளராகப் பணியாற்றிய அசோக் பாண்டே கூறுகிறபடி, இந்த பயிற்சி காலத்தில்தான் பி.பி.லால் அவர்களின் அயோத்தி அகழ்வாய்வு க்குச் சென்று வந்ததாகக் கூறுகிறார் .

 அசோக் பாண்டே 2016இல் போபாலில் தொல்லியல் கண்காணிப்பாளர் (சூப்பர்இண்டெண்டிங் ஆர்க்கியாலஜிஸ்ட்) என்ற பொறுப்பு வகித்து ஓய்வு பெற்றார். 

கே.கே. முகமது பணிசெய்த  அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகத்தில்  வரலாற்றுத்துறைத் தலைவர்  பேராசிரியர் சையது அலி ரிஸ்வி,  "எப்பொழுது அயோத்தியா அகழ்வாய்வில்  அவர் ஈடுபட்டார்? " என்று கேள்வி எழுப்புகிறார். "அதற்கு ஒரே வாய்ப்பு , அவர் டிப்ளோமா மாணவராக இருந்தபோது,  அகழ்வாய்வு நடந்த இடத்திற்கு சில நாட்கள்  செய்முறை பயிற்சிக்காகச் சென்றிருக்க கூடும் " என்று கூறுகிறார்.

 2007-இல் குவாலியரில்  முனிசிபல் மியூசியத்தில் இயக்குனராக இருந்து 2007-இல் ஓய்வு பெற்ற  ராமகாட்  சதுர்வேதி  அயோத்தி அகழ்வாய்வில்  முகமது  ஒரு  பயிற்சி மாணவராகப் பங்கேற்றார் என்று பதிவு செய்கிறார்.

 ராஜ்நாத் கோ என்ற பெயர் கொண்ட ASI - இன் தலைமைப் புகைப்படக்காரர், முகமது முதுகலை டிப்ளோமா மாணவர் என்றும், இரண்டு மாத பயிற்சி பெற்றார் என்றும் கூறுகிறார்.

 அயோத்தி அகழ்வாய்வு குறித்து  இதுவரை நடந்த  எந்த ஆய்வறிக்கையிலும்  கே.கே. முகமதுவின் பெயர் இல்லை. ஏனென்றால்  அகழ்வாய்வுக் குழுவில் அவர் ஒர் உறுப்பினர் அல்ல என்று குறிப்பிடும் தொல்லியல் துறையின்  தலைமை புகைப்படக்காரரான ராஜ்நாத் கோ,  பயிற்சிக்காக வந்த மாணவர்களுடைய பெயர்களை அறிக்கையில் (Reports)சேர்ப்பது இல்லை  என்று குறிப்பிடுகிறார்.

 பயிற்சி காலம் டிசம்பர் மற்றும் பிப்ரவரியில்  முடிந்துவிடுகிறது; ஆகவே பாபர் மசூதியின் அருகாமைப் பகுதிகளில் (அப்போது பாபர் மசூதி உடைக்கப்படவில்லை ) B. B.லால் அகழ்வாய்வு நடத்தியபோது கே.கே. முகமது ஒரு பயிற்சி மாணவராகத்தான் பங்கேற்றார். 

கேகே முகமதுவின் அயோத்தி அகழ்வாய்வுப் பங்கேற்பு குறித்து முன்னமே வரலாற்று அறிஞர்களும், அகழ்வாய்வுத் துறை அறிஞர்களும் கேள்வி எழுப்பி, தங்கள் கருத்துகளைப் பதிவு செய்துள்ளனர். 

கே.கே. முகமதுக்கும், அயோத்தி  அகழ்வாய்வுக்கும்  என்ன தொடர்பு என்று பலரும் கேள்வி எழுப்பும் சூழல் எழுந்த நிலையில்,   அவரைக் காக்கும் விதமாக,  இப்போது 92 வயதாகியிருக்கும் ஓய்வு பெற்ற தொல்லியல் துறையின் டைரக்டர் ஜெனரல் பி. பி.லால் "அயோத்தியில் ராம ஜென்ம பூமியை நான் அகழ்வாய்வு செய்து கொண்டிருந்த போது, ஸ்ரீ கே.கே. முகமது அங்கே என்னுடன் இருந்தார் என்பது உண்மை " (It is a fact that Sri K. K. Muhammed was there with me when I was excavating the Ram Janmabhumi area in Ayodhya.) என்று பொதுவாகக் கூறி சான்றளித்திருக்கிறார்.

இடிக்கப்பட்ட பாபர் மசூதிக்குக் கீழே 82 தூண்களுடன் மிகப் பிரமாண்டமான இராமர் கோயில் இருப்பதாகக் கூறி வந்தவர்கள், மசூதிக்கும் கீழே கோயில் இருந்ததற்கான சான்றுகள்  கிடைக்காமல், அதற்கு எதிரான சான்றுகள் அகழ்வாய்வில் தென்பட்டதும், அந்தக் குழிகளையே பிற வரலாற்றறிஞர்களும், அகழ்வாய்வறிஞர்களும் நெருங்கி விடாதபடி தடுத்தனர். அறிக்கை தயாரித்தவுடனேயே அடிப்படை, அன்றாடக்குறிப்பேடுகள் அனைத்தையும் 24 மணி நேரத்துக்குள் அழிந்தனர். 

குறைபாடுள்ள தொல்லியல் அறிக்கையின் அடிப்படையில் ஒரு நீதிமன்றத் தீர்ப்பு, இந்துத்துவத் தலைவர்கள் கூறிக் கொண்டிருந்தது போலவே வழங்கப்பட்டுள்ள நிலையில்,  உன்மையிலேயே மசூதிக்கு அடியில் கோயில் இருந்தது என இந்தியாவில் அனைத்து மக்களையும் நம்ப வைக்கும் முயற்சியில், இந்திய இந்துத்துவ அரசும், இந்துத்துவ அமைப்புகளும் இறங்கியுள்ளன.

 உண்மைக்குப் புறம்பாக, மசூதிக்குக் கீழே  இராமர் கோயில் இருந்தது என்ற கருத்துக்கு ஆதரவாக இருப்போரை பாஜக அரசு தேடி அலைகிறது. அவர்கள் மூலம் பொய்யை மக்கள் கருத்தாக மாற்ற முயற்சிக்கிறது.

  நாசகாரத் திட்டங்களை நடைமுறைப்படுத்த அறிவியல் துறையில் பா.ஜ.கவுக்கு அப்துல்கலாம் கிடைத்தது போல,  அகழ்வாய்வுத் துறையில் கே.கே. முகமது கிடைத்திருக்கிறார். 

மசூதிக்குக் கீழே கோயில் இருந்ததற்கு ஆதாரங்கள் கிடைத்து விட்டன என்று ஓர் அகழ்வாய்வுத் துறையைச் சேர்ந்தவரே கூறினால் மக்கள் நம்புவார்கள். அதுவும் ஒரு முஸ்லிம் அகழ்வாய்வு அறிஞர், மசூதிக்குக் கீழே கோயில் இருந்தது என்று கூறினால், அது தான் உண்மையாக இருக்கும் என்று மக்கள் நம்புவார்கள் அல்லவா!

 கே.கே. முகமது எப்படிப்பட்டவர்? அவர் யாருக்கானவர்? என்பதையும் | அவருடையஉள்ளத்தையும், அவருடைய நோக்கையும் , போக்கையும் புரிந்து கொள்ள வேண்டும்.

 மதச் சார்பற்றவர்கள் தாங்கள் வாழும் இந்த நாட்டை 'இந்தியா' என்றும் தங்களை 'இந்தியன்' என்றும் அடையாளப்படுத்திக் கொள்வார்கள். ஆனால் இந்துத்துவவாதிகள் தாங்கள் வாழும் இந்திய நாட்டைப் 'பாரதம்' என்றுதான் அழைக்க வேண்டும் என்று வலியுறுத்துவதும், தாங்கள் புனித இந்துமத மரபைப் போற்றும் வகையில் தங்களைப் 'பாரதீயர்கள்' என்றும்  அடையாளப் படுத்திக் கொள்ளுவதும் வழக்கம்.

 2016-இல் கே.கே. முகமது தன் சுயசரிதையை எழுதினார். அதற்கு "ஞான் என்ன பாரதீயன்" (Njan Enna Bharateeyan )என்று பெயரிட்டு இருக்கிறார். "நான் ஒரு பாரதீயன்" என்று அறிவித்துக் கொண்ட அவருடைய இந்துத்துவ உளப்பாங்கை,  நெருக்கத்தை உணர்ந்து கொள்ளலாம். அவர் யார்? அவருடைய உள்ளக்கிடக்கை என்ன? யாருடைய ஆளாகச் செயல்படுகிறார்? என்பது எளிதாகப் புரியும். 

அவர் சுய சரிதை எழுதிய அதே ஆண்டு, 2016-ல் அவருக்கு மோடி அரசு 'பத்மஸ்ரீ' விருது வழங்கிச் சிறப்பித்தது. இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் விருது வழங்கினார். 

இப்போது 2019 நவம்பர் 9ஆம் தேதி,  உச்சநீதிமன்றம் பாபர் மசூதி இருந்த இடம் இந்து அமைப்புகளுக்கு என்று தீர்ப்பளித்த நிலையில், "அதுவே சரியானத் தீர்ப்பு" என்றும், "அந்த இடத்தை  முஸ்லிம்களே மனமுவந்து முன்னரே வழங்கியிருக்க வேண்டும்" என்றும், "மத்திய அரசு வழங்கும் 5 ஏக்கர் நிலத்தையும் இராமர் கோயிலுக்கு வழங்க வேண்டும் என்றும், பேசியும், எழுதியும் வருகிறார். அனைத்து செய்தி ஊடகங்களும் இதை முன்னிலைப்படுத்தி வெளியிட்டு வருகின்றன.

 மக்கள் மத்தியில் தொல்லியளாளர்கள்  உரையாற்றுவது அரிதான ஒன்று. ஆனால், இன்று, கே.கே. முகமது மக்களைச் சந்திக்கவும், உரையாற்றவும் ஏற்பாடுகள் செய்யப் படுகின்றன. இந்த செயல்பாடுகளின் பின்னுள்ள நோக்கம் மதச்சார்புடையது.

வரலாறு எழுதுபவர்களும், அகழ்வாய்வு செய்பவர்களும் நேர்மையாளர்களாக இருக்க வேண்டும். ஏனெனில், கடந்த காலத்தைப் பற்றிய இவர்களுடைய கண்டுபிடிப்புகளும், கருத்துக்களும்தாம், எதிர்காலத் திசைவழியைத் தீர்மானிக்கும். திரிக்கப்பட்ட வரலாறு வெடிகுண்டுகளை விடவும் அழிவைத் தரத்தக்கவை என்று வரலாற்றறிஞர் எரிக் ஹாப்ஸ்பாம் கூறுகிறார். 

வரலாறும், ஆழ்வாய்வும் எஜமானனாக இருக்க வேண்டுமேயொழிய, ஆட்சியாளர்களின் ஏவலாளிகளாக மாறக் கூடாது. தங்களுக்கு ஏற்றம் கிடைக்கிறது என்பதற்காக அகழ்வாய்வாளர்கள் அனுமார் சேவை செய்யக் கூடாது.

- பேராசிரியர் த.செயராமன்,
  வரலாற்றுத் துறை .
19.11.2019.

இந்தியாவும் அதன் கடந்து வந்த பாதையும்

.










பிரபல்யமான பதிவுகள்