நம்முடன் இணைந்து இருப்பவர்கள்

புதன், டிசம்பர் 22, 2021

ரேசன் கார்டு,smart card, விபரம்,

ரெண்டு நிமிடம் ஒதுக்கி இதை படியுங்கள் நண்பர்களே இதை ஷேர் பண்ணுங்க இனிமே யாரையும் ஏமாத்தமுடியாது...

இதை உங்களுக்கு தெரிஞ்சவங்க மற்றும் படிக்கதேரியாதவங்களுக்கு சொல்லி கொடுங்க நண்பர்களே !!....

ரேஷன் கடைக்கு செல்வோரில் பல பேருக்கு இந்த அனுபவம் கிடைத்தி...ருக்கும். காலையில் அரிசி, பருப்பு, சர்க்கரை போன்றவைவந்திருக்கும். நாம் மாலையிலோ அல்லது மறுநாளோ சென்றால், அவைகள்இருந்தும் கூட "ஸ்டாக் இல்லை" என்று சொல்லி விடுவார்கள்.
இனி அப்படி ஏமாற்ற முடியாது. ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்பினாலே போதும், அன்றைய சரக்கிருப்பு விவரங்களைப் அறிந்துக் கொள்ளலாம்.

எஸ்.எம்.எஸ் அனுப்பும் முறை:
குடும்ப அட்டைதாரர்கள் (PDS) இடைவெளி (மாவட்ட குறியீடு) இடைவெளி (கடை எண்)
என்ற முறையில் எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டும்.
உதாரணமாக :-

PDS 01 BE014
என்ற தகவலை 9789006492, 9789005450, 9176480226, 9176480227, 9094831766, 9790725349, 9176480216ஆகிய ஏதேனும் ஒரு செல்பேசி எண்ணுக்கு அனுப்பினால் உடன் ரேஷன் கடையில் பொருள் வாரியான அன்றைய சரக்கிருப்பு விவரங்களைப் பெறலாம்.

மேலே கண்ட எஸ்.எம்.எஸ். தகவலில் உள்ள 01 என்ற குறியீடு சென்னை (வடக்கு) மாவட்டத்திற்கு உரியது. எனவே, இந்த குறியீட்டினை தங்களதுமாவட்டக் குறியீட்டினைக் கொண்டுமாற்றிட வேண்டும்.
அதுபோல் BE014 என்ற கடை குறியீடு (shop code) தங்களது குடும்ப அட்டையிலுள்ள முன்பக்க கீழ்ப்பகுதியில்அச்சடிக்கப்பட்டுள்ளவாறு எஸ்.எம்.எஸ். பதிவு செய்ய வேண்டும்.

குடும்ப அட்டை எண்ணில் முதல் இரண்டு எழுத்துக்கள் மாவட்ட குறியீட்டு எண்ணாகும். உதாரணமாக, 01/G/0557070 என்ற குடும்ப அட்டை எண்ணில் “01” என்பது சென்னை (வடக்கு) மாவட்ட குறியீடாகும். இதுபோல் ஒவ்வொரு மாவட்ட குறியீடு குடும்ப அட்டை எண்ணில் உள்ளது. எனவே, அந்த குறியீட்டு எண்ணை சரியாக அளித்து நியாய விலைக் கடையின் இருப்பு விவரத்தைப் பெறலாம்.

எஸ்.எம்.எஸ். அனுப்பும் கணினியில்(server) மாலை 5 மணிக்கு மேல் அதிகபளு ஏற்படுவதால் மேற்கண்ட தகவல் பெறும் சேவையை காலை நேரங்களில் உடனடியாக பதில் தகவல் பெறும் வண்ணம் பொது மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

வியாழன், டிசம்பர் 16, 2021

இஸ்லாமும் நடு நிலையான தன்மையும்,

நடுநிலையாக செயல்படுவது.          என்றும் நன்றாகவே இருக்கும்


وَلَا تَجْهَرْ بِصَلَاتِكَ وَلَا تُخَافِتْ بِهَا وَابْتَغِ بَيْنَ ذَلِكَ سَبِيلًا


(நபியே) உங்களுடைய தொழுகையில் குரலை மிகவும் உயர்த்தவும் வேண்டாம்; மிகவும் தாழ்த்தவும் வேண்டாம் இதற்கிடையே சமநிலையைக் கடைப்பிடிப்பீராக.       திருக்குர்ஆன்:- 17:110


இஸ்லாம் மனிதனுக்கு  ஆன்மீகமும், உலகியலும் அவசியம் என்கிறது. இஸ்லாமில் ஆன்மீகத்தை புறக்கணிக்கும் உலகியல் இல்லை; அதேபோல் ஆன்மீகத்தை அரவணைத்துக் கொண்டு உலகை உதறித் தள்ளும் கோமாளித்தனமும் இல்லை.


இந்த உலக வாழ்க்கையை மறுமை வாழ்க்கையின் நன்மைகளை அறுவடை செய்யும் விளைநிலமாக ஆக்கிக்கொள்ள வேண்டும் என்கிறது.


முஸ்லிம்களைப் பொறுத்தவரை அவர்கள் தங்கள் ஆசைகளையும், தேவைகளையும் இரண்டு உலகத்திற்கும் (இம்மை - மறுமை) இடையே சமமாகப் பங்கிட்டுக் கொள்கிறார்கள்.


"இந்த உலகம் பொய். இதில் உள்ளதெல்லாம் அழிந்து விடும். எனவே, இதை துறப்பதே விமோசனத்திற்கு வழி" என்று சில மதங்கள் உபதேசிக்கின்றன. "இந்த உலகம் மெய். இதில் இருப்பவை அழிவதற்கு முன் ஆசை தீர இன்பங்களை அனுபவித்துவிடு! பாவமாவது, புண்ணியமாவது" என சில தத்துவங்கள் கூறுகின்றன. இஸ்லாம் இந்த இரண்டுக்கும் மத்தியில் சமநிலையைப் பேணச் சொல்கிறது.


இம்மையில் அனுமதிக்கப்பட்ட இன்பங்களை அனுபவியுங்கள். ஆனால்,  இம்மை இன்பங்களைவிட மறுமை இன்பங்கள் உயர்ந்தவை. மறுமையில் இன்பங்களை அறுவடை செய்ய  இம்மை அதற்காக  விளைநிலம் என அறிவுறுத்துகிறது இஸ்லாம்.


எங்கள் இறைவா! எங்களுக்கு இவ்வுலகிலும் நல்லவற்றையே கொடுத்தருள்வாயாக! மறுவுலகிலும் நல்லவற்றையே கொடுத்தருள்வாயாக!                                                        திருக்குர்ஆன்:- 2:201


இந்த அழகான பிரார்த்தனையை குர்ஆன் கற்றுத்தருகிறது. இவ்வாறு இஸ்லாம் ஈருலகிலும் இன்பம் பெறும் வழியை எடுத்துரைக்கிறது.


மனித வாழ்க்கையில் உண்பது, உறங்குவது, உடுத்துவது, உறவு கொள்ளுவது,  பொருளீட்டுவது, பிறரிடம் நட்பு கொள்வது மற்றும் விரோதம் கொள்வது என அனைத்திலும் சமநிலைப் போக்கை  இஸ்லாம் கடைபிடிக்க வலியுறுத்துகிறது.


நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( خَیرُ الاُمُورِ اَوسَاطُهَا ) காரியங்களில் சமநிலையை மேற்கொள்வதே நன்மையாகும். நூல் பைஹகீ


அப்துல்லாஹ் பின் மஸ்ஊது (ரலி) அவர்கள் கூறினார்கள்.   ( عَلَیکُم بِالقَصدِ فَاِنَّ القَصدَ اَبلَغُ ) நடுநிலையைக் கடைப்பிடியுங்கள். நிச்சயமாக நடுநிலையை கடைப்பிடிப்பதனால் உங்கள் இலட்சியத்தை அடைந்து கொள்ள முடியும்.


 *உபரியான தொழுகைகள்* 


அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (மஸ்ஜிதுந் நபவீ பள்ளிவாசலுக்குள்) நுழைந்த போது இரு தூண்களுக்கிடையில் நீண்ட கயிறு ஒன்று காணப்பட்டது. ( مَا هَذَا الْحَبْلُ ) "இந்தக் கயிறு என்ன (ஏன்)?" என்று அண்ணலார் வினவினார்கள். இதற்கு மக்கள், "இது ஸைனப் (ரலி) அவர்களுக்கு உரியதாகும்; அவர் (நின்று தொழும் போது) சோர்வடைந்தால் இந்தக் கயிறை பற்றிக்கொள்வார்" என்று கூறினார்கள்.


அதற்கு அண்ணலார், ( لاَ، حُلُّوهُ، لِيُصَلِّ أَحَدُكُمْ نَشَاطَهُ، فَإِذَا فَتَرَ فَلْيَقْعُدْ ) "வேண்டாம். அவிழ்த்து விடுங்கள். உங்களில் ஒருவர் உற்சாகமாக இருக்கும் போது (கூடுதலான தொழுகைகளைத்) தொழட்டும். சோர்வடைந்தால் உட்கார்ந்து கொள்ளட்டும்" என்று கூறினார்கள்.        நூல்:- புகாரீ-1150


அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. அருமை நாயகம் (ஸல்) அவர்கள் என்னிடம், ( يَا عَبْدَ اللَّهِ، لاَ تَكُنْ مِثْلَ فُلاَنٍ، كَانَ يَقُومُ اللَّيْلَ فَتَرَكَ قِيَامَ اللَّيْلِ ) "அப்துல்லாஹ்! இரவில் (அதிகமாக) நின்று வழிபாடு செய்து விட்டு, இறுதியில் இரவுத் தொழுகையையே கைவிட வேண்டிய நிலைக்கு ஆளான இன்ன மனிதரைப் போன்று நீரும் ஆகிவிட வேண்டாம்" என்று கூறினார்கள்.       நூல்:- புகாரீ-1152


அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( فَسَدِّدُوا وَقَارِبُوا وَأَبْشِرُوا ) (கூடுதலான வழிபாடுகள் உட்பட அனைத்துக் காரியங்களிலும்) நடுநிலையையே கடைபிடியுங்கள்; இயன்றதைச் செய்யுங்கள்; நற்செய்தி பெறுங்கள். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள்    நூல்:- புகாரீ-39


ஜனாதிபதி உமர் (ரலி) அவர்கள் சுலைமான் அபீ ஹஸ்மா (ரலி) அவர்களை கடைத்தெருவின் மேற்பார்வையாளராக நியமித்திருந்தார்கள். ஒருநாள் அவர்கள் ஃபஜ்ர் தொழுகையில் காணப்படவில்லை. உமர் (ரலி) அவர்கள் தொழுகை முடிந்ததும் அவருடைய வீட்டுக்குச் சென்று அவர்களின் தாயாரிடம், ( لَمْ أَرَ سُلَيْمَانَ فِي الصُّبْحِ ) "(இன்று) சுலைமான் (ரலி) அவர்கள் ஃபஜ்ருத் தொழுகைக்கு காணவில்லையே காரணம் என்ன?" என்று கேட்டார்கள்.


அதற்கு அவ்வம்மையார், "சுலைமான் இன்று இரவு முழுவதும் நஃபில் தொழுவதில் ஈடுபட்டிருந்ததால் தூக்கம் மிகைத்து ஃபஜ்ரு தொழுகை நேரத்தில் கண்ணயர்ந்துவிட்டார்" என்று கூறினார். இதை கேட்ட உமர் (ரலி) அவர்கள், ( لأَنْ أَشْهَدَ صَلاَةَ الصُّبْحِ فِي الْجَمَاعَةِ أَحَبُّ إِلَيَّ مِنْ أَنْ أَقُومَ لَيْلَةً ) "இரவு முழுவதும் நஃபில் தொழுவதை விட ஜமாஅத்துடன் ஃபஜ்ரு தொழுவது அவசியமானதாகும்" என்று கூறினார்கள். நூல்:- முஅத்தா மாலிக்-296


பொதுவாக வழிபாடுக் குறைவாகச் செய்தாலும் நிறைவாகச் செய்ய வேண்டும். நிலையாகச் செய்ய வேண்டும். அதுவே இறைவனுக்கு உவப்பானதாக இருக்கும். ஆர்வ மிகுதியால், சிரமங்களை ஏற்படுத்திக்கொண்டு அதிக அளவில் வழிபாடு செய்யும்போது, ஒரு நாள் சடைந்து போய் அதைக் கைவிட வேண்டியது வரும். இது நல்லதன்று. இறுதியில் முற்றாக அந்த வழிபாட்டைக் கைவிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. எனவே, வழிபாடுகளில் நடுநிலையை பேணவேண்டும். மூழ்கிப் போய் விடக்கூடாது. உற்சாகத்தோடு தான் வழிபாடுகளை மேற்கொள்ள வேண்டும்; சடைவு ஏற்பட இடமளித்து விடக்கூடாது.


ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது. கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள், ( سَدِّدُوا وَقَارِبُوا وَأَبْشِرُوا فَإِنَّهُ لَنْ يُدْخِلَ الْجَنَّةَ أَحَدًا عَمَلُهُ ) "நடுநிலையாக செயலாற்றுங்கள். (அல்லது) அதற்கு நெருக்கமாகச் செயலாற்றுங்கள் நற்செய்தி பெற்றுக் கொள்ளுங்கள். ஏனெனில் யாரையும் அவரது இறைவழிபாடு ஒருபோதும் சொர்க்கத்தில் நுழைவிக்காது என்று கூறினார்கள்.


மக்கள், "தங்களையுமா, நாயகமே? என்று கேட்டார்கள். அண்ணலார், ( وَلاَ أَنَا إِلاَّ أَنْ يَتَغَمَّدَنِيَ اللَّهُ مِنْهُ بِرَحْمَةٍ وَاعْلَمُوا أَنَّ أَحَبَّ الْعَمَلِ إِلَى اللَّهِ أَدْوَمُهُ وَإِنْ قَلَّ ) "என்னையும்தான்;  அல்லாஹ் தனது பேரருளால் என்னை அரவணைத்துக் கொண்டாலே தவிர. அறிந்து கொள்ளுங்கள்! வழிபாடுகளில் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானது (எண்ணிக்கையில்) குறைவாக இருந்தாலும் (தொடர்ந்து செய்யப்படும்) நிலையான வழிபாடே ஆகும்" என்று கூறினார்கள். நூல்:-  புகாரீ-6464, முஸ்லிம்-5430


அதாவது ஒருவர் இறைவழிபாடு புரிவதனால் மட்டும் அவர் சொர்க்கம் சென்று விடுவார் என்று உறுதியாகக் கூற முடியாது. மாறாக, அவரது இறைவழிபாட்டை இறைவன் அங்கீகரிக்க வேண்டும். அதற்கும் மேலாக, அவர் மீது இறைவன் அன்பும் அருளும் புரிய வேண்டும். அப்போதுதான் அவர் சொர்க்கம் செல்ல முடியும். தவிரவும், இறைவழிபாடு புரிவதற்கும் இறைவனின் அருளும் உதவியும் தேவை. அதன்றி எவரும் இறைவழிபாடு புரிய இயலாது.


 *இல்லற வாழ்க்கையில்…* 


அபூஜுஹைஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது. நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் சல்மான் அல்ஃபார்ஸீ (ரலி) அவர்களையும் அபூதர்தா (ரலி) அவர்களையும் சகோதரர்களாக ஆக்கினார்கள். சல்மான் (ரலி) அவர்கள் அபூதர்தாவைச் சந்திக்கச் சென்றபோது அவரின் மனைவி அழுக்கடைந்த ஆடை அணிந்து இருக்கக் கண்டார்.


சல்மான் (ரலி) அவர்கள் "உமக்கு என்ன நேர்ந்தது?" என்று அவரிடம் கேட்டார். அதற்கு அவரது மனைவி, ( أَخُوكَ أَبُو الدَّرْدَاءِ لَيْسَ لَهُ حَاجَةٌ فِي الدُّنْيَا ) "உங்கள் சகோதரர் அபூதர்தாவுக்கு இவ்வுலகில் எந்த தேவையுமில்லை" (அதாவது அவர் என்னுடன் தாம்பத்திய உறவில் ஈடுபடுவதில்லை) என்று விடையளித்தார்.


சற்று நேரத்தில் அபூதர்தா (ரலி) வந்து சல்மானுக்கு உணவு தயாரித்தார். சல்மான் (ரலி) அவர்கள் அபூதர்தாவிடம், உண்பீராக! என்று கூறினார். அதற்கு அபூ தர்தா, "நான் நோன்பு நோற்று இருக்கிறேன்" என்றார். சல்மான், "நீர் உண்ணாமல் நான் உண்ண மாட்டேன்" என்று கூறியதும் அபூதர்தா உண்டார். இரவு வந்ததும் அபூதர்தா (ரலி) அவர்கள் (தொழுவதற்கு) எழுந்திருக்கப் போனார். அப்போது சல்மான் (ரலி) அவர்கள் உறங்குவீராக! என்று கூறியதும் அபூதர்தா உறங்கினார்கள்.


பின்னர் (சிறிது நேரத்தில் மீண்டும் தொழுவதற்காக) அபூதர்தா எழுந்திருக்கப் போனார். அப்போதும் சல்மான் 'உறங்குவீராக!' என்றார். இரவின் கடைசி நேரம் வந்ததும் சல்மான் (ரலி) அவர்கள் 'இப்போது எழுவீராக!' என்று கூறினார்கள். இருவரும் தொழுதனர்.


பிறகு அபூ தர்தாவிடம் சல்மான் (ரலி) அவர்கள், ( إِنَّ لِرَبِّكَ عَلَيْكَ حَقًّا، وَلِنَفْسِكَ عَلَيْكَ حَقًّا، وَلأَهْلِكَ عَلَيْكَ حَقًّا، فَأَعْطِ كُلَّ ذِي حَقٍّ حَقَّهُ ) "நிச்சயமாக உம் இறைவனுக்கு நீர் செய்ய வேண்டிய கடமைகள் இருக்கின்றன; உமக்கு  நீர் செய்ய வேண்டிய கடமைகளும் இருக்கின்றன; உம் குடும்பத்தாருக்கு நீர் செய்ய வேண்டிய கடமைகளும் இருக்கின்றன; ஒவ்வொருவருக்கும் அவரவர் உரிமைகளை வழங்குவீராக!" என்று கூறினார்கள். பிறகு அபூ தர்தா (ரலி) அவர்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் வந்து இந்த விஷயத்தைக் கூறினார்கள். அதற்கு அண்ணலார், ( صَدَقَ سَلْمَانُ ) "சல்மான் உண்மையையே கூறினார்" என்றார்கள்.           நூல் புகாரீ-1968


அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் இதைப் பற்றி அபூதர்தா (ரலி) அவர்கள் கூறியபோது சல்மான் (ரலி) அவர்கள் சொன்னது சரி தான் என்று ஆமோதித்தார்கள். ஆம்! இல்லற வாழ்க்கையில் ஈடுபடவும் வேண்டும் இறைவழிபாட்டில் ஈடுபடவும் வேண்டும் இவ்வாறு தான் இஸ்லாம் போதிக்கிறது.


 *அழகிய அறிவுரை* 

நடுநிலை தவறி விடவேண்டாம். எங்களுக்குச் சீரான வழியைக் காட்டுவீராக! என்றனர்.      திருக்குர்ஆன்:- 38:22


ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் கூறியதாவது. நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் பல தொழுகைகளைத் தொழுதிருக்கிறேன். அவர்களது தொழுகையும் உரையும் (நீண்டதாகவும் இல்லாமல் மிகவும் சுருக்கமானதாகவும் இல்லாமல்) நடுத்தரமாக அமைந்திருந்தன.                                                              நூல்:- முஸ்லிம்-1572


அபூவாயில் ஷகீக் பின் சலமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது. " அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் ஒவ்வொரு வியாழக்கிழமையும் எங்களுக்கு (ஹதீஸ் அறிவித்து) அறிவுரை வழங்கி வந்தார்கள். இந்நிலையில் அவர்களிடம் ஒரு மனிதர் அபூ அப்துர் ரஹ்மானே! தங்களின் ஹதீஸ் அறிவிப்பை நாங்கள் நேசிக்கிறோம்; ஆசிக்கிறோம். தாங்கள் ஒவ்வொரு தினமும் எங்களுக்கு ஹதீஸ் அறிவிப்பதை நாங்கள் பெரிதும் விரும்புகிறோம் என்று கூறினார்.


அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள், ( مَا يَمْنَعُنِي أَنْ أُحَدِّثَكُمْ إِلاَّ كَرَاهِيَةُ أَنْ أُمِلَّكُمْ. إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَتَخَوَّلُنَا بِالْمَوْعِظَةِ فِي الأَيَّامِ كَرَاهِيَةَ السَّآمَةِ عَلَيْنَا ) "நான் உங்களுக்குச் சடைவை ஏற்படுத்தி விடுவேனோ எனும் அச்சம்தான் உங்களுக்கு (நாள்தோறும்) ஹதீஸ் அறிவிக்கவிடாமல் என்னைத் தடுத்து விட்டது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நாங்கள் சடைவு அடைவதை விரும்பாமல் (சந்தர்ப்ப சூழ்நிலைக் கவனித்து) விட்டு விட்டு எங்களுக்கு அறிவுரை வழங்கி வந்தார்கள். (இதுவே உங்களுக்கிடையே அறிவுரை வழங்க வரவிடாமல் என்னைத் தடுக்கிறது") என்று கூறினார்கள்.   நூல்:- முஸ்லிம்-5435


அறிவுரை, உபதேசம் வழங்குவது ஒரு நல்லறம் தான். அடிக்கடி அறிவுரை கூறப்பட்டு வந்தால்தான், மக்களின் அலைபாயும் மனம் ஒருமுகப்பட்டு மறந்துபோன நன்மைகளைத் தொடரச் செய்யவும், இறைவனைப் பயந்து தீமைகளைக் கைவிடவும் வழி பிறக்கும். அதே நேரத்தில் மக்கள் சடைந்து போகும் அளவுக்குத் தொடர்ந்து அறிவுரை கூறுவது கூடாது. அதனால் பற்று ஏற்படுவதற்குப் பதிலாக வெறுப்பு ஏற்பட்டு விடலாம். இது சொல்பவருக்கும் சொல்லப்படும் கருத்துக்கும் மதிப்பில்லாமல் செய்துவிடலாம். எனவே, சந்தர்ப்பச் சூழ்நிலைகளைக் கவனித்து தேவைக்கேற்பவே உபதேசம் செய்ய வேண்டும். இதில் எவரையும் கட்டாயப்படுத்தக்கூடாது.


மொகலாயச் சக்கரவர்த்தி  அவுரங்கசீப் (ரஹ்) அவர்கள் தன்னுடைய மகனுக்கு கூறிய அறிவுரை, "மகனே! நீ கல்கண்டு போல் இனிப்பாகவும் இருந்து விடாதே! அவ்வாறு இருந்து விட்டால், உன்னை எல்லோரும் தூக்கி விழுங்கி விடுவார்கள். மேலும், வேப்பங்காய் போன்று கசப்பாகவும் இருந்துவிடாதே! அவ்வாறு இருந்துவிட்டால், உன்னை எல்லோரும் 'தூதூ' என தூற்றி துப்பத் தொடங்கி விடுவார்கள் என்று கூறினார்கள்.


 *நபித்தோழர்கள்* 


உமது நடையில் மிதமான நிலையைக் கடைப்பிடி.      திருக்குர்ஆன்:-31:19


மரியாதைக்குரிய நபித்தோழர்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்களுடன் கொண்டிருந்த நட்பின் பலனால் எந்தளவுக்கு நடுநிலையான இயல்புடையவர்களாக இருந்தார்கள் எனில், அவர்கள் துறவிகள் மற்றும் உலக பற்றற்றவர்கள் போன்றும் இருந்ததில்லை. உலகாதாயவாதிகளை போன்றும் கிண்டல் கேலியிலும், வீண்பேச்சிலும் ஈடுபட்டுக்கொண்டிருந்ததில்லை. மாறாக அவர்களது உள்ளங்களில் நகைச்சுவையுடன் தீனில் ரோசமும் உத்வேகமும் நிரம்பியிருந்தன.


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  ( السَّمْتُ الْحَسَنُ وَالتُّؤَدَةُ وَالاِقْتِصَادُ جُزْءٌ مِنْ أَرْبَعَةٍ وَعِشْرِينَ جُزْءًا مِنَ النُّبُوَّةِ ) நன்னடத்தை, நிதானம், நடுநிலைப் போக்கு ஆகியவை நபித்துவத்தின் 24 பாகங்களில் ஒரு பாகமாகும். அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் சர்ஜிஸ் அல்முஸனீ (ரலி) அவர்கள் நூல்:-  திர்மிதீ-1933


காரியங்களில் நடுநிலையை கடைபிடிக்கும் பண்பு அவ்வளவு சாதாரணமானதல்ல. அது நபித்துவ பண்புகளில் உள்ளவை என விளங்க வேண்டும். அது ஒப்பற்ற அழகிய பண்பாகும்.


காரியங்கள் அனைத்திலும் நாம் சக்திக்கும் வலிமைக்கும் ஏற்றவாறு செயல்பட வேண்டும். அதற்கு எதிரான எத்தகைய வழிமுறையை மேற்கொண்டாலும் அது நமக்கு மகிழ்வூட்டுகின்ற விஷயமாக இருக்காது.


 *குர்ஆன் ஓதும்போது...* 


அப்துல்லாஹ் பின் அபீகைஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது. நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம், "அண்ணல் நபி (ஸல்) அவர்கள் இரவுத் தொழுகையில் எவ்வாறு குர்ஆனை ஓதுவார்கள்? மெதுவாக ஓதுவார்களா? சப்தமாக ஓதுவார்களா?" என்று கேட்டேன்.


அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், "இரு விதமாகவும் ஓதி வந்தார்கள்; சில நேரங்களில் மெதுவாக ஓதுவார்கள்; சில நேரங்களில் சப்தமாக ஓதுவார்கள்" என்று விடையளித்தார்கள். அப்போது நான், ( اَلْحَمْدُ لِلَّهِ الَّذِي جَعَلَ فِي الأَمْرِ سَعَةً ) "நடைமுறைகளில் தாராளத்தை ஏற்படுத்திய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்" என்று கூறினேன். நூல்:-  அபூதாவூத்-1132, திர்மிதீ-411


அபூ கத்தாதா (ரலி) அவர்கள் கூறியதாவது. (ஒருநாள் அபூபக்ர்-ரலி அவர்களும் உமர்-ரலி அவர்களும் ஒன்றாக இருந்த போது) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "அபூபக்ர் (ரலி) அவர்களிடம், ( مَرَرْتُ بِكَ وَأَنْتَ تَقْرَأُ وَأَنْتَ تَخْفِضُ مِنْ صَوْتِكَ ) “நீங்கள் (இரவில்) குர்ஆன் ஓதிக் கொண்டிருக்கும் போது நான் உங்களைக் கடந்து சென்றேன். அப்போது நீங்கள் மெதுவாக ஓதிக் கொண்டிருந்தீர்களே (ஏன்)?" என்று கேட்டார்கள்.


அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள், "நான் யாருடன் ரகசியமாக உரையாடுவேனோ அந்த இறைவனுக்கு கேட்கும் விதமாக அவ்வாறு ஓதினேன், என்றார்கள். அண்ணலார், ( اِرْفَعْ قَلِيلاً ) "இன்னும் சற்று (சப்தத்தை) உயர்த்திக் கொள்வீராக!" என்று கூறினார்கள்.


பிறகு உமர் (ரலி) அவர்களிடம், ( مَرَرْتُ بِكَ وَأَنْتَ تَقْرَأُ وَأَنْتَ تَرْفَعُ صَوْتَكَ ) "நீர் (இரவில்) குர்ஆன் ஓதிக் கொண்டிருந்த போது நான் உம்மைக் கடந்து சென்றேன். நீர் குரலுயர்த்தி ஓதுகிறீரே?" என்று கேட்டார்கள். அதற்கு உமர் (ரலி) அவர்கள் நான் இவ்வாறு ஓதுவதன் மூலம் சிற்றுறக்கத்தில் இருப்போரை விழிக்கச் செய்கிறேன். ஷைத்தானை விரட்டுகிறேன்" என்று கூறினார்கள். அண்ணலார், ( اِخْفِضْ قَلِيلاً ) "சற்று (சப்தத்தைத்) தாழ்த்திக் கொள்வீராக!" என்று கூறினார்கள். நூல்:- அபூதாவூத்-1133, திர்மிதீ-409, 


 *செலவு  செய்வதில்* 


(நபியே! உங்களுடைய பொருள்களில் ஒன்றையுமே செலவு செய்யாது) உங்களுடைய கையைக் கழுத்தோடு சேர்த்துக் கட்டிக் கொள்ளாதீர். மேலும் (உங்களிடம் இருப்பதை எல்லாம் கொடுத்து) உங்களுடைய கையை முற்றிலும் விரித்தும் விடாதீர். (அவ்வாறு செய்தால்)  தூற்றப்பட்டவராகவும் முடக்கப்பட்டவராகவும் நீர் அமர்ந்துவிடுவீர்.     திருக்குர்ஆன்:- 17:29


அதாவது பணத்தையும் பொருளையும் செலவிடும்போது நடுநிலையைப் பேண வேண்டும். அதிலேயே நினைத்திருக்க வேண்டும் என்கிறது இந்த திருவசனம்.


அவர்கள் செலவு செய்தால் விரயம் செய்ய மாட்டார்கள்; (கையை) இறுக்கவுமாட்டார்கள். அ(வர்களின் செலவான)து, அதற்கிடையே நடுநிலையானதாக இருக்கும்.          திருக்குர்ஆன்:- 25:67


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَا عَالَ مَنْ اِقْتَصَدَ " لَمْ يُخَرِّجُوهُ ) சிக்கனத்தை மேற்கொள்பவர் (குடும்பத்தில் பொருளாதார) நெருக்கடியை சந்திக்க மாட்டார். அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் மஸ்ஊது (ரலி) அவர்கள் நூல்:- முஸ்னது அஹ்மது தப்ரானீ, தஃப்சீர் இப்னு கஸீர் அல்ஃபுர்கான் வசனம்-67


கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.    ( مَا اَحسَنَ القَصدَ فِی الغِنٰی مَااَحسَنَ القَصدَ فِی الفَقرِ وَمَا اَحسَنَ القَصدَ فِی العِبَادَةِ ) செல்வ நிலையிலும், வறுமையிலும், இறைவழிபாட்டிலும் கடைபிடிக்கப்படும் நடுநிலைப் போக்கு (சிக்கனம்) எவ்வளவு எழிலானது! அறிவிப்பாளர்:- ஹுதைபா (ரலி) அவர்கள் நூல்:- முஸ்னது:- பஸ்ஸார், கன்ஸுல் உம்மால், தஃப்சீர் இப்னு கஸீர் அல்ஃபுர்கான் வசனம்-67


அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நடுத்தரமான செலவாளியை இறைவன் யாசிப்பவராக்கமாட்டான். வீண் செலவு செய்பவரையே இறைவன் வறுமையில் ஆழ்த்துகிறான்.


தனி மனிதனோ, ஒரு குடும்பமோ, ஏன் ஓர் அரசோ தனது செலவீனங்களில் விரயமும் இல்லாமல், கஞ்சத்தனமும் இல்லாமல் நடுநிலையோடு - அதாவது சிக்கனத்தோடு செயல்பட்டால் பொருளாதார நெருக்கடியிலிருந்து தப்பிக்க முடியும். இது பொருளியலின் முக்கியப் பாடங்களில் ஒன்றாகும். உலக நாடுகள் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்த ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒன்று, விரயம் அங்கே ஆட்சி புரிந்திருக்கும். அல்லது அவசியமான செலவினங்கள் புறந்தள்ளப்பட்டிருக்கும். மொத்தத்தில் சிக்கனம் மறக்கப்பட்டிருக்கும்.


விரயம் என்பது பயனற்ற முறையில் செலவிடப்படுவதாலோ சரியான முறையில் பயன்படுத்தாததாலோ பொருள் வீணாவதைக் குறிக்கும். கஞ்சத்தனம் என்பது அவசியமான செலவைக்கூட தவிர்த்து விட்டு பணத்தை மிச்சம் பிடிக்க நினைக்கும் குணமாகும். சிக்கனம் என்பது தேவையான அளவுக்கு மட்டும் கவனமாக செலவு செய்வதைக் குறிக்கும்.


ஒவ்வொரு குடும்பமும் ஒவ்வொரு அரசும் விரயத்தையும் கஞ்சத் தனத்தையும் கைவிட்டு, சிக்கனமாகச் செலவிட்டு வந்தால் அங்கே பொருளாதார நெருக்கடிக்கோ பட்டினிக்கோ பெரும்பாலும் அவசியம் இராது.


 *நட்பு - பகைமை* 


உங்களுக்கும், அவர்களுள் உள்ள உங்களுடைய எதிரிகளுக்கும் இடையில், அல்லாஹ் நேசத்தை ஏற்படுத்திவிடக்கூடும். (இதற்கும்) அல்லாஹ் ஆற்றலுடையவனே!      திருக்குர்ஆன்:- 60:7


உபைதில் கின்தி ( ரஹ்) அவர்கள் கூறியதாவது. அலீ (ரலி) அவர்கள் இப்னுல்கவ்வாஃ (ரஹ்) அவர்களிடம், ( أَحْبِبْ حَبِيبَكَ هَوْنًا مَا، عَسَى أَنْ يَكُونَ بَغِيضَكَ يَوْمًا مَا، وَأَبْغِضْ بَغِيضَكَ هَوْنًا مَا، عَسَى أَنْ يَكُونَ حَبِيبَكَ يَوْمًا مَا‏ ) "உன் நண்பனை அளவோடு நேசிப்பீராக. என்றாவது ஒருநாள் அவன் உன்னைக் கோபமூட்டுபவனாக ஆகலாம். உனது எதிரியை அளவோடு வெறுப்பீராக. என்றாவது ஒருநாள் அவன் உனது நேசனாக ஆகலாம்" என்று கூறினார்கள்.       நூல்:- அல்அதபுல் முஃப்ரத்- 1321


அஸ்லம் (ரலி) அவர்கள் கூறியதாவது. உமர் (ரலி) அவர்கள், ( لاَ يَكُنْ حُبُّكَ كَلَفًا، وَلاَ بُغْضُكَ تَلَفًا ) "உனது நேசம் அளவு கடந்ததாகவும், உமது கோபம் நாசத்திற்குக் காரணமாகவும் இருக்க வேண்டாம்" என்று கூறினார்கள். அப்போது நான், "அது எப்படி?" என்று கேட்டேன். உமர் (ரலி) அவர்கள், ( إِذَا أَحْبَبْتَ كَلِفْتَ كَلَفَ الصَّبِيِّ، وَإِذَا أَبْغَضْتَ أَحْبَبْتَ لِصَاحِبِكَ التَّلَف‏ )"நீர் நேசித்தால் குழந்தையை நேசிப்பது போன்று அளவுகடந்து நேசிக்கிறாய். நீ கோபப்பட்டால் உனது தோழனுக்கு நாசம் ஏற்படுவதை விரும்புகிறாய்" என்று கூறினார்கள்.      நூல்:- அல்அதபுல் முஃப்ரத்-1322


ஆகவே, அனைத்து  காரியங்களிலும் சமநிலையைப் பேணி, இறையருளைப் பெறுவோமாக! அமீன்

சனி, டிசம்பர் 11, 2021

ஒரு நிலம் நம்மிடம் வாங்குவதற்கும் விற்பனைக்கு முன்,

ஒரு நிலம் நம்மிடம் விற்பனைக்கு வந்தால்.உடனடியாக நாம் என்ன செய்ய வேண்டும்..!

1.முதன் முதலில் computerised EC 1975 முதல் போட்டு பார்க்க வேண்டும் 1975 முதல் பின்னோக்கி 1908 அல்லது 1858 வரை manual EC கட்டாயம் போட்டு பார்க்க வேண்டும்.

Zero value நிலம் EC யில் நிலத்தின் மதிப்பு Zero மதிப்பு என்று இருந்தால் அது பூமிதான நிலம் & புறம்போக்கு அல்லது வில்லங்க நிலம் எனவே zero value நிலம் வாங்காதீர்.

2.Double Document நிலம்.

Power of attorney(POA) double document 

அதாவது power யில் வரும் நிலத்தை வாங்காதீர் இது double டாக்குமெண்ட் க்கு இட்டு செல்லும்.

POA நிலதை வாங்கியே தீர வேண்டும் என்றால் Power கொடுத்தவர் உயிரோட சுய நினைவோட இருக்கிறாரா என்று கண்டுபிடியுங்கள் POA agreement நகல் வாங்கி அதில் குறிப்பிடப்படுள்ள அட்ரஸ் இல் power கொடுத்தவரை நேரில் சந்தித்து விசாரியுங்கள்.

அடுத்து அந்த power பத்திரம் செல்ல கூடியாதா என்று கேளுங்கள் அதாவது power பத்திரம் எழுதி கொடுத்தவர் அதை ரத்து செய்து விட்டாரா என்றும் கேளுங்கள் முகவரும் (agent )விற்கலாம், principal (power எழுதி கொடுத்தவர்) ளும் விற்கலாம் விற்றால் அது double டாக்குமெண்ட்.

3.உயில் பத்திர நில double document.

உயில் மூலம் உரிமை மாறி இருக்கா

 உயில் பத்திரம் மூலம் நிலம் விற்பனைக்கு வரும் நிலமெனில்.
எது இறுதி/கடைசி உயில் என்று கவனமாக பார்க்க வேண்டும் பதிவு செய்யபட்ட உயில் மூலம் விற்பனை நடந்தால் அது ஒரு நில விற்பனை பத்திரம்.

பதிவு செய்யப்பட்ட உயிலுக்கு பிறகு ஏதாவது பதிவு செய்யாத உயில் இருக்கான்னு நிலம் விற்பவரின் உறவினர்களை கேட்க வேண்டும் இந்த பதிவு செய்யப்படாத உயில் மூலம் விற்பனை செய்யப்பட்டு இருந்தால் அது double டாக்குமெண்ட்.

4.Settlement பத்திர நிலம் double document .

Settlement பத்திரம் மூலம் நிலம் விற்பனைக்கு வந்தால் செட்டில்மெண்ட் ரத்து செய்ய பட்டு இருக்கிறதா என்று கவனமாக பார்க்கவும் 1990 முதல் 2015 வரை ரெஜிஸ்டர் ஆபீசில் செட்டில்மெண்ட் ரத்து செய்து நிலத்தில் மேலும் சொத்தை சிக்கல் ஆக்கிவிட்டர்கள்.

செட்டில்மெண்ட் பத்திரத்தை civil கோர்ட் மூலியமாக தான் ரத்து பண்ண முடியும் பத்திர ஆபீசில் செய்யும் ரத்து பத்திரம் சொல்லாது.

EC யில் SRO=Sub register Office)மூலம் ரத்து ஆகி இருந்தால் அந்த நிலத்தை வாங்காதீர்.

உயில் பத்திரம் தாய் பத்திரம் ஆக இருந்தால் அந்த தாய் பத்திர உயில் மூலம் கிரயம் நடைபெற்று இருந்தால் அந்த கிரய பத்திரத்துக்கு லிங்க் கவனமாக இறங்கியதா என்று பார்க்க வேண்டும்.

5. Update ஆகாத பட்டா மூலம் கிரயம்-double document.

1987-UDR, 1995-நத்தம் நிலவரி திட்டம் முன்பு நிலம் பத்திரத்தின் மூலம் வாங்கியவர் அதை revenue record எனப்படும் பட்டாவில் தான் தான் தற்போதைய உரிமையாளர் அதாவது current owner என்பதை update செய்யாமல் இருந்தால் 1987முந்தைய owner & அவரின் வாரிசுகள் பழைய பட்டா மூலம் கிரயம் செய்தால்.

அடுத்து நிலம் வாங்கி பட்டாவில் update செய்யாமல் விட்டுவிட்ட அசல் (எ ) original owner றோ இல்லை அவரின் வாரிசுகள் விற்று கிரய பத்திரம் ஆகி இருந்தால் அதுவும் double document.

6.Layout frame, வடிவம், உருவாமாற்றம் மாற்றிய நிலமா?

அடுத்து அந்த நிலம் நத்தம் நிலமா, layout பிளாட் ஆஹ் என்று பாருங்கள்.

DTCP approved or CMDA approved என்றால் DTCP & CMDA website யில் approval நம்பர் போட்டு approval ஒரிஜினல் தானா என்று உறுதி படுத்தி கொள்ளலாம். Website லே கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் நேரில் LPA(local planning authority என்னும் DTCP அல்லது CMDA அலுவலகத்திற்கு சென்று நிலத்தின் approval சரிதானா என்று கேளுங்கள்.

அது பழைய approved layout ஐ திருட்டுதனமாக redraw செய்து விற்பனைக்கு வந்திருக்கும் layout ஆஹ் என்றும் விசாரியுங்கள்.

Layout ப்ளூ பிரிண்ட் இருந்தால் கொண்டு சென்று park, ஸ்கூல் க்கு இடம் விட்டுட்டு layout போட்டு இருக்கிறார்களா என்றும் கேளுங்கள் நிறைய land ப்ரோமோட்டார்ஸ் park, ஸ்கூல் இடத்தை காட்டி approval வாங்கி விட்டு layout வரை படத்தை மறுபடியும் திருட்டுதனமாக வரைந்து(எ ) redraw செய்து park, ஸ்கூல் இடத்திலும் மனை போட்டு விடுவார்கள்.

 எனவே ஜாக்கிரதை.

பஞ்சாயத்து approved இடங்கள் வாங்காமல் இருப்பது நல்லது. ஏனென்றால் வாங்கிய பின்பு நீங்கள் தான் நிலத்தை frame work scheme இன் கீழ் வரையறை செய்ய அலைய வேண்டி இருக்கும்.

நத்தம் நிலம் என்றால் VAO வை பார்க்க வேண்டும் உங்கள் சர்வே நம்பர் இன் UDR காலத்து 1987 ஆம் ஆண்டின் சிட்டா அடங்கலை, FMB நேரில் சென்று கேளுங்கள்.

இனாம் கிராமம் ஆக இருந்து இனாம் ஒழிப்பின் மூலம் நத்தம் நிலவரி திட்டத்தின் கீழ் பட்டா வழங்கபட்ட நிலமா என்றும் பார்க்க வேண்டும். அந்த பட்டா UDR காலத்து சிட்டா அடங்கல் ரெஜிஸ்டர் இல் ஏறி இருக்கா னும் பார்க்கணும். 

VAO நேரில் கேட்டும் கொடுக்கவில்லை என்றால்  RTI மனுவில் கேளுங்கள் RTI யில் கட்டாயம் கொடுக்க வேண்டும்.

4. EB, சொத்து வரி விற்பவர் பெயரில் இருக்கா என்று பாருங்கள்.இல்லை என்றால் மாற்றி, பின்னர் விற்க சொல்லுங்கள் .

5.பட்டா விற்பவர் பெயரில் இருக்கானு பார்க்கணும்.

கூட்டு பட்டா நிலம் எனில், நிலம் பங்குதாரர்கள்குள் யாருக்கு எவ்வளவு இடம் & எந்த இடம் என்று பிரித்திருக்க வேண்டும் இல்லை என்றால் வாங்கும் உங்களுக்கு சிக்கல். விற்பவருக்கு உரிமை இல்லாத நிலத்தை விற்க வாய்ப்பு இருக்கு 

பட்டா வாங்குறது பெரிய process, நிறைய அலைச்சல் & கஷ்டம்.

அதனாலே விற்பவர் பெயரில் பட்டாவை மாற்ற சொல்லுங்கள் அதன் பின்பு நிலத்தை வாங்குங்கள்.

6. நிலத்தின் வகைப்பாடு கண்டிப்பாக பார்க்க வேண்டும்.

 நஞ்சை, புஞ்சை, நத்தம், நத்தம் புறம்போக்கு, மேய்ச்சல், வாய்க்கால், ஓடை  புறம்போக்க்கா, நெல் போராடிக்கும் இடமா, park, விளையாட்டு திடல்,கோயில் க்கு ஒதுக்கப்பட்ட நிலமா,பொதுவில் மாடு கட்ட விடப்பட்ட இடமா, நிலவியல் பாதை(அரசு நிலம் ), நிலவியல் ஓடை etc.என்று பார்க்கிவேண்டும்.

7. பட்டாவின் பயனாளி யார்?.

முன்னோரு காலத்தில் அது ஜமீன் நிலமா அல்லது இனாம் நிலமா அல்லது ரயட்டுவாரி நிலமா ஆஹ்  என்று பார்க்க வேண்டும்

மேஜர் இனாம்

ராயட்டு வாரி
1802 காலத்தின் permanent settlement record காலத்தின் ஜாகிர் இனாம் , ஜமீன் நிலமாக இருந்து ராயட்டுவாரி யாக மாற்றம் பெற்றதா என்றும் பார்க்க வேண்டும்.

வெள்ளைக்காரன் காலத்துல இனாம் ஒழிப்பில் இருந்து ஜமீன் நிலமாக மாறியதா என்றும் ஆராய வேண்டும்.

இதற்கு VAO, தாலுகா & கலெக்டர் அலுவலகத்தில் record section இல் இருக்கும் B-record, OSR, RSR, SLR இன் நகல் தேவை உங்கள் நிலத்தின் சர்வே நம்பர் குறிப்பிட்டு ஒரு மனு கொடுத்து, 50 ரூபாய் கட்டி வாங்கி கொள்ளலாம்.
------------

Minor இனாம் 
சுதந்திரத்திற்கு முன் பிரிட்டிஷ்காரர்கள் கொடுத்த   DC land (எ) (Depressed Class) நிலமா? என்று பார்க்க வேண்டும்

தொழில் முறை இனாம் நிலம்
----
தச்சர், கருமான், நாவிதர், காவக்காரன்,கர்ணம்,தலையாரி,
வெட்டியான், சக்கிலியர்,புதிரை வண்ணார்  இனாம் நிலமா? என்றும் பார்க்க வேண்டும்.

வெள்ளைக்காரன் காலத்தில் மணியமாக அங்கீகாரிக்க பட்ட ஊழிய மானியங்களான பூசாரி, தேவதாசி,பூ கட்டும் மானியம் நிலமா? என்று பார்க்க வேண்டும்.

சோஸ்திராம் மானியம் ஒழிக்கப்பட்ட நிலமா?என்றும் பார்க்க வேண்டும்.

ஹாஜி இனாம் ஒழிக்கப்பட்ட நிலமா? என்றும் பார்க்க வேண்டும்.
------------

DC அல்லாத பிற இனதவர்க்கு கொடுக்கப்பட்ட குறவர், கள்ளர்(குற்றபரம்பரை)
settlement etc யா என்று பார்க்க வேண்டும்.

மேற்சொன்ன வகை பாடு அனைத்தும் வெள்ளைக்காரன் காலத்தாவை.
---------

சுதந்திரத்திற்கு பின் கொடுக்கபட்ட Assigment land.

Assignment land (எ ) ஒப்படை பட்டா நிலங்கள் எனில் அதற்கு உண்டான (HSD பட்டா , D-பட்டா, நமுனா பட்டா, TKT பட்டா,F-பட்டா, B-memo பட்டா, அனுபந்த பட்டா, Assignment land என்னும் ஒப்படை நிலம் ) யா என்று பார்க்க வேண்டும்.

SC & ST பிரிவினற்கு கொடுத்த AD  assignment Land (Adi Dravidar )பட்டா உள்ள நிலமா என்றும் பார்க்க வேண்டும்.

F-பட்டா.
இது நிலசீர்திருத்த துறையால் வழங்க பட்டது.நிலசீர்திருத்த துறை வேறு revenue டிபார்ட்மென்ட் வேறு.

ஜமீன் ஒழிப்பில் இருந்த நிலங்களை பயனாளிக்கு கொடுத்தது என்பதை உறுதி படுத்தும் ஆவணமே F-பட்டா.

1970-B-Memo land =பீமா பட்டா.

B memo பட்டா நிலம் விற்பனை க்கு வந்தால் வாங்காதீர். ஏன் என்றால் B-memo என்பது நில உரிமை பட்டா அல்ல. அது நீ ஒரு அரசின் புறம்போக்கு நிலத்தின் ஆக்கிரமிப்பு செய்தவன் என்ற govt நோட்டீஸ் மட்டுமே. B-memo நிலத்தில் குடி இருப்பவர்களை எந்நேரமும் அரசு காலி செய்ய சொல்லும்.

Assignment பட்டாவில் உள்ள கண்டிஷன் பார்க்க வேண்டும். கண்டிஷன் பார்க்காமல் வாங்காதீர்.

ஒப்படை நிலங்களை அரசாங்கமே திருப்பி எடுத்து கொண்டு விட்டாதா என்றும் பார்க்க வேண்டும்.
--------

1956-பூமி தான நிலம்

Manual EC 
கட்டாயம் 1950-1965 வரை manual EC போட்டு பார்க்க வேண்டும்.

manual EC யில் மட்டும் தான் பூமி தான போர்டுக்கு நிலங்களை பெரும் நில சுவாந்தார்கள் தான பத்திரம் (கிரயபத்திரம்) கொடுத்த அந்த entry  காட்டபட்டு இருக்கும்.

பூமி தான போர்டு பெயரில் பட்டா, சிட்டா ஆகியவை மாறிவிட்டு இருந்தால் VAO அலுவலகத்தின் A-Record இல் காட்டும்.

ஏர் உழவன் பட்டா=பூமி தான நிலத்திற்கு ஆன குத்தகை பட்டா.

Manual EC யில் கிடைக்காத பூமி தான நிலங்களை பற்றிய தகவல்கள் revenue record யில் தான் கண்டுபிடிக்க முடியும்.

பூமி தான நிலம் என்றால் மெட்ராஸ் சைதாப்பேட்டை யில் உள்ள பனகல் மாளிகையில் உள்ள பூமி தான board க்கு சென்று வாங்க விரும்பும் நிலத்தின் சர்வே நம்பர் பூமி தான வரையறைக்குள் வருகிறதா என்று பார்க்க வேண்டும். Master ரெஜிஸ்டர் பார்க்க வேண்டும்.

பூமி தான நிலம்  வாங்காதீர்.

பூமி தான நிலத்தை பயனாளி விற்கு அதிகாரம் இல்லை. பயனாளிக்கு குத்தகை உரிமை மட்டுமே உண்டு.

எனவே அது பூமி தான நிலம் என்று தெரியவந்தால் வாங்காதீர்.
-----------

Zero value நிலம்

-EC யில் நிலத்தின் மதிப்பு Zero மதிப்பு என்று இருந்தால் அது பூதிதானம் & புறம்போக்கு அல்லது வில்லங்க நிலம்.
-----------

கோயில் நிலம் -HR&CE நிலமா 

வாங்க விரும்பும் நிலம் கோயில் நிலம் ஆஹ்  என்று பார்க்க வேண்டும்.

கோயில் நிலம் என்றால் பயந்து விட கூடாது அது இறையிலி(100% கோயிலுக்கு சொந்தம்), தேவதானம், தர்மதாயம் ஆக  இருக்க கூடாது அவ்வளவே.

கோயில் நிலத்தில் கட்டளை என்று ஒரு பிரிவு உண்டு இதையும் வாங்க கூடாது. கட்டளை எப்படி உடைக்க வேண்டும் என்று தெரிந்தவர்கள் மட்டுமே வாங்கலாம்.

கோயில் மணியமாக இருந்து ரயத்துவாரி நிலமாக 1963 இல் மாறி இருந்தால் அது கண்டிஷன் பட்டாவா என்று பார்க்கனும்.

இந்த நிலம் வாங்கும் போது கவனம் தேவை. ஏன்னா HR&CE நிறைய நிலங்களை திருப்பி எடுத்து கொண்டு உள்ளது.
-----------

ஜமீன் & மானியம் முற்றாக ஒழித்தது 1950 to 1960 களில்.

land reforms act.
இதற்கு நில சீர்திருத்தம் என்று பெயர். ஜமீன் இடம் இருந்து அரசு எடுத்த உபரி நிலம் கிராம கணக்கில் B register லே இருந்து A-register க்கு மாறும் போது உபரி நிலம் , அனாதீனம், உரிமையாளர்கள் பெயர்கள் மாறி உள்ளது போன்ற சிக்கல் உள்ளதா என்றும் பார்க்க வேண்டும்.
-----

1963 minor இனாம் ஒழிப்பு சட்டம்

இனாம் ஒழிப்பு to ரயட்டுவாரி பட்டா. உழுபவனுக்கே நிலம் சொந்தம் scheme.

RSLR இல் "கிராமத்தார்" என்று பட்டா தாக்கல் செய்யப்பட்டு 1963 minor இனாம் ஒழிப்பு சட்டம்
மூலம் ரயட்டுவரி பட்டாவாக மாறி பின்பு 1987 UDR இல் மீண்டும் RSLR இல் உள்ளது போன்று "கிராமத்தார்"  என்று மாறி இருந்தால் அந்த நிலத்தை வாங்காதீர்.

அது தனி நபர் பட்டா என்று மாறி இருக்கா என்றும் பார்க்க வேண்டும்.
-------

1963 கோவில் நிலம் (இனாம் ஒழிப்பு சட்டம், ஒழிப்பு மற்றும் ரயட்டுவாரியாக மாற்றுதல்) சட்டம் 

தேவதாசி மானியம் to நிபந்தனை பட்டாவாக உள்ள நிலத்தை பயன்படுத்தி கொள்ளலாமே தவிர சொந்தம் கொண்டாட முடியாது.

ஊழிய மானிய நிலங்கள் கண்டிஷன் பட்டா வா இல்லை normal ராயட்டுவாரி பட்டா நிலமா? ன்னு பார்க்கணும்.

இந்த நிலம் வாங்கும் போது மிகுந்த கவனம் தேவை. தமிழ் நாட்டின் நில நிர்வாக பற்றிய அறிவு உள்ள ஒரு சிவில் லாயர் தான் உங்களை காப்பாற்ற முடியும் m
--------
1961(center)to 1972(TN)Land ceiling act நிலம்

நில உச்சவரம்பு வரையறைகுள் மாட்டிக்கொண்ட நிலமா என்று பார்க்க வேண்டும்.

UDR லே celing இடம் என்று இருக்கானு பார்க்கணும்.

Section 37B இல் வந்த நிலாமா என்று பார்க்க வேண்டும்.
--------

1976 களின் Urban land seiling act

ULC ஆக்ட் இல் மாட்டி கொண்ட ULC நிலமா என்று பார்க்க வேண்டும். ULT என்று note இருந்தால் மெட்ராஸ் பரங்கிமலை ரயில் நிலையம் அருகில் உள்ள உச்சவரம்பு ஆபீசில் சர்வே நம்பர் கொடுத்து விசாரிக்கணும். Innocent buyer என்று சொல்லி land கமிசினர் க்கு மனு செய்யனும்.

ULC நிலம் தவறுதலாக நீங்கள் வாங்கினாலும் நிலத்திற்கு  revenue department(டாசில்தார், VAO )பட்டா மாற்றம் செய்து கொடுக்க மாட்டார்கள். எனவே ஜாக்கிரதை.

8. கோர்ட் attached property வாங்காதீர்.

9. டிவோர்சஸ் கேஸ் உள்ளவரிடம் நிலம் வாங்காதீர். அந்த நிலத்தை அவர் மனைவி maintenance (ஜீவனாம்சம்) வேண்டி மனு செய்து இருந்தால் நீங்கள் போட்ட பணம் காலி.

எனவே விற்பவர் இடம் இந்த விவரத்தை கேளுங்கள். ஒரிஜினல் பத்திரதை காட்டச்சொல்லி பத்திரத்தின் பின் புறம் கோர்ட் சீல் இருக்கா என்று பாருங்கள்.
---------------

10.அடுத்த step, அந்த நிலத்தின் சர்வே என்னை கொண்டுபோய் நிலம் அமைந்துள்ள கிராம VAO கிட்ட அந்த நிலத்தோட FMB, பட்டா, சிட்டா, A ரெகார்ட் வாங்குங்கள்.

11.அடுத்து VAO கிட்ட govt அந்த இடத்தில் ரோடு போட , டேங்க் அமைக்க .i e., பிற்காலத்தில் govt project க்கு எடுத்து கொள்ளுமான்னு கேளுங்கள்?.பாலுமாகேந்திரவின் "வீடு " படத்தை நினைவில் வைத்து கொள்ளுங்கள்.

அவர்(VAO) டாக்குமெண்ட் தர வில்லை என்றால்,

12. மேற்கூறிய டாக்குமெண்ட் அனைத்தின் அட்டெஸ்ட் copy வேண்டும் என்று VAO office மற்றும் டாசில்தார் ஆபீஸில் RPD போஸ்ட் அல்லது நேரடி மனுவோ அல்லது RTI யில் கேட்டு டாக்குமெண்ட் நகல் வாங்கி கொள்ளுங்கள்.(கண்டிப்பாக attest copy வேண்டும் )

13..அடுத்து நிலத்தின் 1858 காலத்து OSR, RSR A-Record எடுக்க முடிந்தால் இன்னும் நல்லது.

1908,1936 ஆண்டின் SLR, RSLR A- Record, FMB ஒரு   80  to 100 வருடத்திற்கு வேண்டும்.

1987 ஆம் ஆண்டின் FMB, A-record, சிட்டா அடங்கல் கட்டாயம் எடுக்கணும்.

இதன்  நகல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கேளுங்கள்.இது ஏன் கேட்க சொல்றோம் என்றால்

1.அது வெள்ளைக்காரன் காலத்தில் DC land @பஞ்சமி நிலம் ஆக இருந்தால் போட்ட பணம் எல்லாம் காலி. சுப்ரீம் கோர்ட் போனாலும் கேஸ் நிக்காது.

2. அடுத்து அது ஜமீன் ஒழிப்பு & கோயில் மானிய ஒழிப்பில் அரசால் எடுக்கப்பட்டு ஆனால் revenue record இல் அரசு நிலம் என்று பதிவேற்றம் செய்யப்படாமல் இருக்கும் நிலமா என்று பார்க்க வேண்டும்.

ஏன் என்றால் இவர்கள் revenue record இல் பதிவேற்றம் செய்யாத ஓட்டையை பயன்படுத்தி UDR சர்வே செய்ய வந்த தனியார் கம்பெனி அதிகாரிகளை கரெக்ட் செய்து UDR இல்  திரும்பவும் ஜமீன் பெயரே ரயத்துவாரி யாக மாற்றி கொண்டார்கள்.

14.அடுத்து ரெஜிஸ்டர் ஆபிசில் அந்த நிலத்தின் மீது யாராவது பத்திரம் பண்ண கூடாதுனு தடை மனு கொடுத்து இருக்காங்களா கேட்டு confirm(உறுதி )பண்ணிக்கணும்.

15..அடுத்து அந்த பத்திரம் முழுமையானா ஆவணமா அதாவது பத்திரம் முழுமையான ஸ்டாம்ப் டூட்டி கட்டி இருக்கிறதா என்று confirm பண்ணுங்க.

16.அடுத்து நிலம் இருக்கும் இடத்தை குறைந்தது 10தடவை பாருங்கள். அக்கம் பக்கம் இருப்பவர்களிடம் நிலத்தின் மீது ஏதாவது பிரச்சனை, வில்லங்கம், ஆக்கிரமிப்பு இருக்கிறதா என்று கேளுங்கள் இதை ஏற்கனவே யாராவது வாங்கி இருக்கிறார்களா தற்போதைய owner யார் என்றும் கேளுங்கள் 

17.அடுத்துநிலம் விற்பவர் வீட்டுக்கு அருகில் இருப்பவர்களிடம் அவருக்கு எத்தனை உடன்பிறத்தோர்,மனைவி, குழந்தைகள், விற்பவருக்கு இந்த நிலம் எப்படி வந்தது . அந்த சொத்தில் விற்பவரின் உடன் பிறந்தோர் க்கு பங்கு இருக்கா?என்று கேளுங்கள்

18.அடுத்து நான் கூறிய டாக்குமெண்ட் எல்லாம் வாங்கி விட்டு உங்கள் நிலத்தின்  ரெஜிஸ்ட்டர் ஆபிஸ் ஏரியாவின் நல்ல சிவில் lawyer பாருங்கள்.

நல்ல லாயர் எப்படி கண்டு பிடிப்பது?.

உங்களுக்கு lawyer refer செய்கிறவரிடம்,

 லாயர் எங்கு படித்தார் எந்த ஆண்டில் இருந்து practise செய்கிறார் எத்தனை பத்திரம் பதிந்து இருக்கிறார், எத்தனை லீகல் ஒப்பீனியன் கொடுத்து இருக்கிறார் போன்ற கேள்விகள் கேளுங்கள் புரோக்கர் சொல்லும் லாயர் இடம் செல்லாதீர்.

மேற்கூறிய கேள்விகளுக்கு உங்களால் பதில் கண்டுபிடிக்க முடியும் என்றால் நல்ல லாயாரை கண்டுபிடித்தீர்கள் என்று வைத்துக்கொள்ளலாம்.

கண்டுபிடிப்பது உங்கள் சாமர்த்தியம்.

Lawyer க்கு பணம் கொடுக்க அழுக கூடாது. அந்த பணம் தான் நிலத்தின் முதலீடு நீங்கள் விற்பவருக்கு கொடுக்கும் பணம் அல்ல.

19. எல்லாம் சரியாக அமைந்து விட்டால் அடுத்து ஒரு govt registered surveyor பாருங்க. அவர் நிலத்தை அளந்து, encroachment, deviation எல்லாம் சொல்லுவார் பின்பு படத்தை வரைந்து தருவார்.

20. தயவு செய்து டாக்குமெண்ட் writer வைத்து பத்திரம் எழுதலாமா என்று நிதானமாக யோசிக்கவும்..பத்திரம் எழுதிற license govt 1990களில் இருந்து தரவில்லை என்று கேள்வி . சந்தேகம் என்றால் லைசெஸ் நம்பர் கேளுங்கள்.

பாதி பேர் 10வது தாண்டதவர் . மீதி பேர் காலேஜ் ஹே போகாமல் 700KM தள்ளி இருக்கும் ஆந்திர, கருநாடகவில் பணம் கொடுத்து LLB டிகிரி வாங்கினவர் எல்லாம் பழைய டாக்குமென்டில் இருந்து copy paste செய்கிறார்கள் உங்களுக்கு என்று draft செய்வது குறைந்த நபர்களே.
========

காசு போனாலும் நல்ல சிவில் லாயர் வைத்து எழுதுங்கள்.சில ஆயிரம் advocate பீஸ் க்கு கஞ்ச படாதீர்கள். கொஞ்சம் மிஸ் ஆனாலும் பல லட்சம், கோடி நஷ்டம்.

திரும்பவும் சொல்றேன் நல்ல லாயர்  கண்டு பிடிப்பது உங்கள் சமர்த்தியம்.
========

நாம் டாக்குமெண்ட் வேண்டி govt ஆபிஸ் க்கு நடப்பது நமது வருங்கால நன்மைக்கே நான் சொன்ன ஆவணங்கள் இல்லாமல் நிலம் வாங்காதீர்.

அடுத்து லாயர், surveyor consulting, நிலம் விற்கும் நபரின் அண்டை வீட்டார், நிலம் இருக்கும் இடத்தின் அண்டை வீட்டார் இடம் பேசாமல் இல்லாமல் புதிய சொத்து வாங்காதீர்.
இதுதான் நீங்கள் கடைபிடிக்க வேண்டியவை...

வியாழன், டிசம்பர் 02, 2021

தொழுகை - கடமையும் சிறப்பும்,

தொழுகை - கடமையும் சிறப்பும்
=========================
இஸ்லாம் ஐந்து காரியங்கள் மீது நிர்மானிக்கப்பட்டுள்ளது.
1- வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறுயாருமில்லை, முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வுடைய தூதராவார்கள் என்று சாட்சி கூறுவது,
2- தொழுகையை நிலை நாட்டுவது
3- ரமளான் மாதம் நோன்பு நோற்பது
4- ஹஜ் செய்வது
5- ஜகாத் கொடுப்பது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர் : இப்னு உமர் -ரலி, நூல் : புகாரீ)

தொழுகையை நிலைநாட்டும்படி அல்லாஹ் சுமார் 80 இடங்களில் அல்குர்ஆனில் கட்டளையிட்டுள்ளான். அதில் சில வசனங்களையும் தொழுகையைப் பற்றிய நபி (ஸல்) அவர்களின் பொன்மொழிகளில் சிலவற்றையும் தங்களின் நினைவுக்கு கொண்டு வருகிறோம். அல்லாஹ் நம் அனைவரையும் ஈருலகிலும் வெற்றிபெறும் தொழுகையாளிகளாக ஆக்கியருள்வானாக! 

1- தொழுகைக் கடமை
நிச்சயமாக நான்தான் அல்லாஹ்! என்னைத் தவிர வேறு நாயன் இல்லை. ஆகவே, என்னையே நீர் வணங்குவீராக! என்னை நினைவு கூறும் பொருட்டு தொழுகையை நிலைநிறுத்துவீராக! (அல்குர்ஆன் 20:14) 

அல்லாஹ்வுக்கு வணக்கத்தை தூய்மையாக்கியவர்களாக (தவறான வழியிலிருந்து விலகி சரியான வழியில்) பிடிப்புள்ளவர்களாக அல்லாஹ்வை வணங்க வேண்டும் மேலும் தொழுகையை நிலைநாட்டவேண்டும் மேலும் ஜகாத்தை வழங்க வேண்டும் என்பதைத் தவிர (வேறெதுவும்) அவர்களுக்குக் கட்டளையிடப்படவில்லை. இதுதான் நேரான மார்க்கமாகும். 
(அல்குர்ஆன் 98:5)

நபி(ஸல்) தனது மரண வேளையில்கூட "தொழுகை! தொழுகை!" என கூறிக் கொண்டிருந்தார்கள்.
(அறிவிப்பவர் : உம்மு ஸலமா-ரலி, நூல் : இப்னுமாஜா)

குழந்தைகள் ஏழு வயதை அடையும் போது அவர்களைத் தொழும்படி ஏவுங்கள்! பத்து வயதை அடைந்து விட்டால் அடித்தாவது தொழ வையுங்கள்! என நபி(ஸல்) கூறினார்கள். 
(அறிவிப்பவர் : அம்ர் பின் ஷுஐப் -ரலி, நூல் : அபுதாவூத்) 

2- போர்க்களத்திலும் தொழுகை
(பகைவர்களையோ அல்லது வேறெதையுமோ கொண்டு) நீங்கள் பயப்படும் நிலையில் இருந்தால், நடந்து கொண்டோ அல்லது சவாரி செய்து கொண்டோவாகிலும் தொழுது கொள்ளுங்கள்! 
(அல்குர்ஆன் 2:239)

3- உரிய நேரத்தில் தொழவேண்டும்

நிச்சயமாக குறிப்பிட்ட நேரங்களில் தொழுகையை நிறைவேற்றுவது முஃமின்கள் மீது கடமையாக்கப் பட்டுள்ளது. (அல்குர்ஆன் 4:103)

தொழுகைகளை (குறிப்பாக) நடுத்தொழுகையை பேணிக் கொள்ளுங்கள்! (தொழுகையின் போது) அல்லாஹ்வின் முன்னிலையில் உள்ளச்சத்துடன் நில்லுங்கள்! (அல்குர்ஆன் 2:238)

4- மானக்கேடை விட்டும் விலகிட
தொழுகையை நிலை நிறுத்துவீராக, நிச்சயமாக தொழுகை (மனிதரை) மானக்கேடானவற்றையும் தீமையையும் விட்டு விலக்கும். நிச்சயமாக, அல்லாஹ்வின் திக்ரு (தியானம்) மிகவும் பெரிதா(ன சக்தியா)கும் அன்றியும் அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிகிறான். (அல்குர்ஆன் 29:45)

5- தொழுகையாளியே வெற்றியாளர்
ஈமான் கொண்டவர்கள் நிச்சயமாக வெற்றி பெற்று விட்டார்கள். அவர்கள் எத்தகையோரென்றால், தங்கள் தொழுகையில் உள்ளச்சத்தோடு இருப்பார்கள். (அல்குர்ஆன் 23.1-2)

தூய்மையடைந்தவன் திட்டமாக வெற்றி பெறுகிறான். மேலும், அவன் தன் இறைவனுடைய நாமத்தைத் துதித்துக் கொண்டும், தொழுது கொண்டும் இருப்பான். (அல்குர்ஆன் 87:14-15)

பொறுமையைக் கொண்டும், தொழுகையைக் கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்! எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும். (அல்குர்ஆன் 2:45)

நம்பிக்கை கொண்டோரே! பொறுமையுடனும், தொழுகையுடனும் (இறைவனிடம்) உதவி தேடுங்கள்! நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கிறான். (அல்குர்ஆன் 2:153)

6- சுவனத்தின் வாரிசுதாரர்
மேலும் அவர்கள் தம் தொழுகைகளை(க் குறித்த காலத்தில் முறையோடு) பேணுவார்கள். இத்தகையோர் தாம் (சுவர்க்கத்தின்) வாரிசுதாரர்கள். இவர்கள் ஃபிர்தவ்ஸ் (என்னும் சுவனபதியை) அனந்தரங்கொண்டு அதில் இவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள். (அல்குர்ஆன் 23:9-11)

யார் தொழுகையை பேணிக் கொள்கிறாரோ அவருக்கு அத்தொழுகை பிரகாசமாகவும், அத்தாட்சியாகவும், மறுமை நாளில் ஈடேற்றமாகவும் இருக்கும். யார் அதை பேணிக்கொள்ள வில்லையோ அவருக்கு அத்தொழுகை பிரகாசமாகவோ, அத்தாட்சியாகவோ, ஈடேற்றமாகவோ இருக்காது. மாறாக 'அவர் மறுமை நாளில் -காஃபிர்களாகிய- காருன், ஃபிர்அவ்ன், ஹாமான், உபை இப்னு கலப் ஆகியவர்களுடன் இருப்பார்', என நபி (ஸல்) எச்சரித்தார்கள். 
(அறிவிப்பவர்: அப்துல்லாஹ் -ரலி, நூல்: அஹ்மத்)

மக்களே! ஸலாத்தைப் பரப்புங்கள்! பிறருக்கு உணவளியுங்கள்! உறவினர்களுடன் இணைந்து வாழுங்கள்! இரவில் மக்கள் உறங்கிக் கொண்டிருக்கும் போது நீங்கள் வணங்குங்கள்! -இவ்வாறு செய்வீர்களானால்- நிம்மதியாக சொர்க்கத்தில் நுழைவீர்கள்! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
(அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு ஸலாம் -ரலி, நூல் : இப்னுமாஜா)

காலையிலோ, மாலையிலோ பள்ளிவாயிலுக்குச் செல்பவருக்காக - அவர் காலையிலும், மாலையிலும் செல்லும் போதெல்லாம் அவருக்காக சொர்க்கத்தில் ஒரு தங்குமிடத்தை அல்லாஹ் ஏற்பாடு செய்கின்றான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
(அறிவிப்பவர் : அபூஹுரைரா -ரலி, நூற்கள் : புகாரீ, முஸ்லிம்)

சூடு தனிந்த நேரத்திலுள்ள (ஃபஜ்ர் மற்றும் அஸர் ஆகிய) இரு தொழுகைகளைத் தொழுபவர் சொர்க்கத்தில் நுழைந்து விட்டார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
(அறிவிப்பவர் : அபூமூஸா -ரலி, நூற்கள் : புகாரீ, முஸ்லிம்)

ஒரு முஸ்லிம் அழகிய முறையில் உளுச் செய்து, பிறகு முகம் மற்றும் மன ஈடுபாட்டுடன் இரண்டு ரகஅத்கள் தொழுவாரானால் அவருக்கு சொர்க்கம் கிடைப்பது உறுதியாகிவிட்டது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர் : உக்பா இப்னு ஆமிர் -ரலி, நூல் : முஸ்லிம் )

7- வேண்டாம், நரகக் கேடு
ஆனால், இவர்களுக்குப் பின் (வழி கெட்ட) சந்ததியினர் இவர்களுடைய இடத்திற்கு வந்தார்கள் அவர்கள் தொழுகையை வீணாக்கினார்கள் (இழிவான மன)இச்சைகளைப் பின்பற்றினார்கள் (மறுமையில்) அவர்கள் (நரகத்தின்) கேட்டைச் சந்திப்பார்கள். 
(அல்குர்ஆன் 19:59)

இன்னும், (கவனமற்ற) தொழுகையாளிகளுக்குக் கேடுதான். அவர்கள் எத்தகையோர் என்றால் தம் தொழுகையில் பராமுகமாக(வும், அசிரத்தையாக)வும் இருப்போர். (அல்குர்ஆன் 107:4-5)

8- மறுமை நாளில் முதல் விசாரணை!
மறுமையில் (செயல்களை குறித்து) முதல் விசாரணை தொழுகையைக் குறித்தே இருக்கும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். 
(அறிவிப்பவர் : அபுஹுரைரா-ரலி, நூல் : அபுதாவூத்)

9- நீங்கள் முஸ்லிம்கள்தானா?
அடியானுக்கும் இணைவைத்தலுக்கும் மத்தியிலுள்ள வித்தியாசம் தொழுகையை விடுவதில் உள்ளது என நபி(ஸல்) கூறினார்கள். 
(அறிவிப்பவர்: ஜாபிர் -ரலி, நூல் : முஸ்லிம்)

நமக்கும் (இறைநிராகரிப்பாளராகிய) அவர்களுக்கும் மத்தியிலுள்ள உடன்படிக்கை தொழுகையாகும். யார் அதை விட்டு விடுவாரோ அவர் காஃபிராகி விட்டார் என நபி(ஸல்) கூறினார்கள். 
(நூற்கள் : நஸயீ, திர்மிதீ, அபுதாவூத்); 

10- பிரார்த்தனை
رَبِّ اجْعَلْنِيْ مُقِيْمَ الصَّلاَةِ وَمِنْ ذُرِّيَّتِيْ رَبَّنَا وَتَقَبَّلْ دُعَاءَ، رَبَّنَا اغْفِرْ لِيْ وَلِوَالِدَيَّ وَلِلْمُؤْمِنِيْنَ يَوْمَ يَقُوْمُ الْحِسَابُ.
ரப்பிஜ்அல்னீ முகீமஸ் ஸலாத்தி வமின் துர்ரிய்யத்தீ ரப்பனா வதகப்பல் துஆ. ரப்பனஃக்ஃபிர்லீ வலிவாலிதைய்ய வலில் முஃமினீன யவ்ம யகூமுல் ஹிஸாப்.

(என்) இறைவனே! தொழுகையை நிலைநிறுத்துவோராக என்னையும், என்னுடைய சந்ததியிலுள்ளோரையும் ஆக்குவாயாக! எங்கள் இறைவனே! என்னுடைய பிரார்த்தனையையும் ஏற்றுக் கொள்வாயாக! எங்கள் இரட்சகனே! எனக்கும் என் பெற்றோருக்கும் (மற்ற) விசுவாசிகளுக்கும் கேள்வி கணக்கு நிலைபெறும் (மறுமை) நாளில் மன்னித்தருள்வாயாக! (அல்குர்ஆன் 14:40)

செவ்வாய், நவம்பர் 30, 2021

விதவைகளுக்கான பென்ஷன் ஆன்லைனில் அப்ளை செய்து பெறுவது எப்படி?

விதவைகளுக்கான பென்ஷன் ஆன்லைனில் அப்ளை செய்து பெறுவது எப்படி?
என்று தெரிந்துக்கொள்ளலாம். விதவை பென்ஷன் வாங்குவதற்கு யாரெல்லாம் தகுதியானவர்கள், தேவையான ஆவணங்கள் என்னெல்லாம் என்பதை பற்றி தெரிந்துக்கொள்ளுவோம். தமிழகத்தில் ஏராளமான பென்ஷன் திட்டங்கள் உள்ளன. அதில் விதவை பெண்களுக்காக இப்போது பென்ஷன் ஆன்லைன் மூலம் எளிமையாக எப்படி அப்ளை செய்து பெறலாம் என்பதை படித்தறியலாம் வாங்க..!

திட்டத்திற்கு தகுதியானவர்கள்:

ஆதரவற்றோராக இருக்க வேண்டும்

கணவரால் கைவிடப்பட்ட விதவையாக இருக்க வேண்டும்.

20 வயதிற்கு மேல் உள்ள ஆண் மகன்கள் அவர்களுக்கு இருத்தல் கூடாது. 

அவர்களுக்கு சொந்தமாக வீடு / நிலங்கள் எதுவும் இருக்க கூடாது.

தேவையான ஆவணம்:

விண்ணப்பதாரரின் புகைப்படம் (Photo)

குடும்ப அட்டை (Ration Card)

ஆதார் அட்டை (Aadhar Card)

இறப்பு சான்றிதழ் (Death Certificate)

விதவைக்கான சான்றிதழ் (Widow Certificate)

பேங்க் புத்தகம் (Bank PassBook)

விண்ணப்பங்கள் சென்றடையும் நபர்கள்:

VAO 

RI 

SSS (தாசில்தார்)

இவர்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்த பிறகு Approved செய்வார்கள். உங்களுக்கு தேவையான Order copy-யை ஆன்லைன் மூலமாக டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

அடுத்த மாதத்தில் இருந்து உங்களுடைய வங்கி கணக்கிற்கு விதவை பென்ஷன் தொகையானது ரூ. 1000/- வந்தடையும்.

விதவை உதவித்தொகை ஆன்லைனில் அப்ளை செய்து பெறுவது எப்படி?

Widow Pension Apply Online Tamil
ஸ்டேப் 1:

முதலில் tnega என்று டைப் செய்யவும்.

ஸ்டேப் 2:

அவற்றில் “Citizen Login” என்பதை க்ளிக் செய்யவும்.
 

புதிதாக Account ஓபன் செய்யவும். அதில் new user? sign up என்ற ஆப்ஷனில் புதிதாக அக்கௌன்ட் ஓபன் செய்யலாம். ஏற்கனவே account இருப்பவர்கள் user name password கொடுத்து Login செய்யவும்.

Captcha Code என்பதில் சரியானவற்றை கொடுத்து லாகின் செய்யவும்.

ஸ்டேப் 3:

அவற்றில் Revenue Department என்பதை க்ளிக் செய்யவும். அவற்றில் நிறைய திட்டங்கள் இருக்கும். நீங்கள் தேர்வு செய்ய வேண்டியது Destitute Widow Pension scheme என்பதை தேர்வு செய்யவும். அடுத்ததாக Proceed என்பதை க்ளிக் செய்யவும்.

ஸ்டேப் 4:

இப்போது Register can என்பதை க்ளிக் செய்யவும்.

அவற்றில் Document Type-ல் திரு/ திருமதி என்பதில் சரியானவற்றை கொடுத்து விண்ணப்பதாரரின் பெயர், பாலினம், திருமண நிலை, பிறந்த தேதி, உறவு முறை, தந்தை/ தாய் பெயர், மதம், கல்வி தகுதி, சாதி, வட்டம், மாவட்டம், கிராமம், நிரந்தர வீட்டு முகவரி, மொபைல் எண் கொடுத்து Generate OTP என்பதை கொடுத்த பிறகு மொபைல் எண்ணிற்கு OTP எண்ணானது வரும்.

ஸ்டேப் 5:

அந்த OTP எண்னை கொடுத்து ரெஜிஸ்டர் என்பதை க்ளிக் செய்யவேண்டும். இப்போது can நம்பர்/ ரெஜிஸ்டர் செய்த மொபைல் எண்ணை கொடுத்து விவரங்களை குறிப்பிட்ட பிறகு search ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

இப்போது உங்களுடைய பெயர், தந்தை பெயர், பிறந்த தேதி அனைத்தும் வந்துவிடும். அவற்றை க்ளிக் செய்யவேண்டும்.

ஸ்டேப் 6:

அடுத்து உங்களுடைய மொபைல் எண் வரும். அருகில் இருக்கும் generate otp என்பதை கொடுத்த பிறகு மொபைல் எண்ணிற்கு OTP எண்ணானது வரும். அவற்றை கொடுத்து Confirm OTP என்ற ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

அடுத்து கீழே proceed என்ற ஆப்ஷனை க்ளிக் செய்யவும். இப்போது படிவமானது ஓபன் ஆகும்.

ஸ்டேப் 7:

அடுத்து mode of disbursement என்பதில் bank / postal மூலம் தேர்வு செய்யவும். அதன் பிறகு bank details என்பதில் சரியானவற்றை கொடுக்க வேண்டும்.

ஸ்டேப் 8:

படிவத்தில் கேட்டுள்ள இதர விவரங்களை சரியாக குறிப்பிட வேண்டும். மேலும் வருமானம், குடும்பத்தில் உள்ள நபர்களின் எண்ணிக்கை விவரத்தினை சரியாக கொடுக்க வேண்டும்.

ஸ்டேப் 9:

அதன் பிறகு Property Details என்பதில் select ஆப்ஷனில் விண்ணப்பதாரர் பெயரை செலக்ட் செய்து கொள்ளவும். அவற்றில் கேட்டுள்ள விவரங்களுக்கு சரியானவற்றை நிரப்ப வேண்டும்.

சரியானவற்றை படிவத்தில் நிரப்பிய பிறகு submit ஆப்ஷனை க்ளிக் செய்யவும்.

ஸ்டேப் 10:

அடுத்து உங்களுடைய ஆவணங்களை அப்லோட் செய்யவும். உங்களுடைய புகைப்படம் (Photo) 50 KB அளவுடனும், மீதமுள்ள அனைத்து ஆவணங்களும் 200 KB என்ற அளவுடன் ஸ்கேன் செய்து வைத்துக்கொள்ளவும்.

Scan செய்து வைத்துள்ளதை படிவத்தில் Upload செய்யவும்.

ஸ்டேப் 11:

அடுத்து Self Declaration Form , Download Aadhar Consent Form டவுன்லோடு செய்வதற்கு Download Self Declaration Form என்பதை க்ளிக் செய்யவும்.
 
இது போன்ற படிவமானது டவுன்லோடு ஆகும். அவற்றில் உங்களுடைய கையெழுத்து போட வேண்டும்.

ஸ்டேப் 12:

அடுத்து Download Aadhar Consent Form டவுன்லோடு செய்வதற்கு Download Aadhar Consent Form என்பதை க்ளிக் செய்யவும்.

இது போன்ற படிவமானது டவுன்லோடு ஆகும். அவற்றில் உங்களுடைய கையெழுத்தினை என்டர் செய்யவும்.

Aadhar Consent Form-ஐ பிரிண்ட் அவுட் எடுத்து கொள்ளவும். இல்லையெனில்  இ சேவை மையம் மூலம் பயன்படுத்தி கையெழுத்து இடவும். இந்த படிவத்தினை upload செய்யவும்.

ஸ்டேப் 13:

அப்லோட் செய்த பிறகு Make payment என்பதை கொடுக்க வேண்டும். அவற்றில் service charges என்பதில் ரூ.10/- இருக்கும்.

அவற்றின் I agree என்ற கட்டத்தில் டிக் செய்த பிறகு make paymentஐ கொடுக்க வேண்டும்.

ஸ்டேப் 14:

இவற்றில் ஏதேனும் பயன்படுத்தி ஆன்லைன் மூலம் பணத்தினை  செலுத்த வேண்டும்.

பணம் செலுத்திய பிறகு ஒப்புகை சீட்டு வரும். அவற்றில் உங்களுக்கான எண் இருக்கும். அந்த எண்ணினை கொடுத்து உங்களுடைய status-ஐ உறுதி செய்து கொள்ளலாம்.

சனி, நவம்பர் 27, 2021

அல்சர் எவ்வாறு உண்டாகிறது,


அல்சர் எவ்வாறு உண்டாகிறது

https://youtu.be/ZgfGtJ8VBXM


அல்சர் என்றால் புண், காயம் என்று அர்த்தம். உடலில் எங்கு புண் இருந்தாலும் அது அல்சர் என்று தான் அழைக்கப்படும். வயிற்றில் ஏற்படும் புண்ணிற்கு  கேஸ்ட்ரிக்  அல்சர் அல்லது பெப்டிக் அல்சர் என்று பெயர்.

சரியான நேரத்தில் சாப்பிடாமல் இருப்பதால் தான் அல்சர் ஏற்படுகிறது என்று மக்களிடத்தில் ஒரு பொதுவான கருத்து நிலவுகிறது. இது தவறான கருத்தாகும்.

வறுமை கோட்டிற்கு கீழே  இருக்கும் கோடிக் கணக்கானவர்கள் சரியான நேரத்தில் சாப்பிட முடிவதில்லை.  நேரத்துக்கு சாப்பிடாமல் இருப்பதால் தான் அல்சர் வருகிறது என்பது உண்மையானால்  இவர்கள் அனைவருக்கும் அல்சர் வந்திருக்க வேண்டும். ஆனால் நடைமுறையில் அவ்வாறு இல்லை. எனவே அதில் உண்மையில்லை.

அல்சர் எவ்வாறு ஏற்படுகிறது?

நாம் உண்ணும் உணவு சரியாகவும், முறையாகவும் ஜீரணிக்கப்பட வேண்டும்.
அவ்வாறு ஜீரணமாகாமல் அதிக நேரம் வயிற்றில் தங்கும் உணவுகளால் செரிமான கோளாறு  ஏற்படுகிறது. ஜீரணக் கோளாரின் ஆரம்ப நிலையில் ஏப்பம், வாயு தொல்லை, பசிக் குறைவு, உணவு எதுகளித்தல், வயிற்று உப்புசம், வயிற்று பொருமல் போன்ற உபாதைகள் தோன்ற ஆரம்பிக்கின்றன.

அப்போது Gelusil, Digene போன்ற மருந்துகளையும், Soda, Cola போன்ற பானங்களையும் கொண்டு நாம் உண்ட உணவை ஜீரணிக்க வைக்க முயற்சிக்கின்றோம். இது மிகவும் பாதகமான செயலாகும். காரணம் ஏற்கனவே செரிமான சக்தியை இழந்து பலவீனமாக இருக்கும் வயிற்றை, மருந்துகளை கொண்டு மேலும் அடித்து துன்புறுத்தி வேலை வாங்குவது போன்றதாகும்.  இவை அனைத்தும் ஆரம்ப காலத்தில் சற்று நன்றாக இருப்பதாக தெரியும்.

இவ்வாறு மருந்துகளை தொடர்சியாக உட்கொள்ளும் போது நாளடைவில் அது அல்சர் அல்லது கேன்ஸராக மாறக்கூடும்.

காரம் சாப்பிடுவதால் தான் அல்சர் வரும் என்று மக்களிடத்தில் பொதுவாக ஒரு கருத்து நிலவுகிறது. அது முற்றிலும் தவறானது.  அல்சர் உண்டாவதற்கு 
காரம் காரணமல்ல.

செரிமான சக்தி குறைவின் காரணமாக,  நாம் சாப்பிட்ட உணவுகள் அதிக நேரம் வயிற்றில் தங்கும் போது அது கெட்டுப்போய் நொதித்தல் ஏற்பட்டு  புளிக்க ஆரம்பிக்கிறது.  

பொதுவாக புளிப்பு அரிக்கும் தன்மையை கொண்டது.  உணவில் சேர்ந்துள்ள  புளிப்பு வயிற்றின் உட்புறச் சுவரில் படிந்திருக்கும் ஜவ்வு போன்ற படலத்தை (Mucus membrane) அரிக்க ஆரம்பிக்கிறது. பிறகு  அது புண்ணாக மாறுகிறது. எனவே அல்சர் ஏற்பட  'காரம்' காரணமல்ல. புளிப்பு (Acid) உணவுகள் தான் காரணம்.

அடிக்கடி தலைவலி, ஜுரம், உடல் வலி என்று மாத்திரைகள் எடுத்துக்கொள்வது, டீ, காபி, குளிர் பானங்கள் குடித்தல்,  எண்ணெயில் முக்கி பொறித்த வடை, பஜ்ஜி, முறுக்கு,  அப்பளம், ஊறுகாய் போன்றவைகளை  சாப்பிடுதல்,  மற்றும் புளிப்பு தன்மையான இட்லி, தோசைகளை சாப்பிடுவது அல்சரை அதிகப்படுத்தும்.

மது அருந்துதல், புகை பிடித்தல், இரசாயனம் கலந்த பாஸ்ட் புட், ஜங்க் புட், பாக்கெட், டின்களில் அடைக்கப்பட்ட ரெடிமேட்  உணவுகள் போன்றவைகளை சாப்பிடுவது  அல்சரை கேன்ஸ்ராக மாற்றக் கூடும்.

அல்சர் உள்ளவர்கள்
காரம் சாப்பிட்டால் வயிற்றில் வலி ஏற்படுகிறது என்று சொல்வார்கள். 

உதாரணமாக நீங்கள் கீழே விழுந்து கை, கால்கள் தேய்ந்து சிராய்ப்பு ஏற்பட்டால் எப்படி இருக்குமோ அதுபோலதான் அல்சர் நோயாளிகளுக்கும் வயிற்றில் புண் இருக்கும். அவர்கள் சாப்பிடும் உணவில் உள்ள காரம் ஏற்கனவே உருவான அல்சர்  புண்ணில் படும்போது சற்று எரிச்சலையும், வலியையும் ஏற்படுத்தும். 

மேலும் பால், தயிர் சாப்பிட்டால் அல்சருக்கு நல்லது என்றும் மக்களிடத்தில் பொதுவான கருத்துக்கள் நிலவுகின்றது. இதுவும் தவறானது. பாலும் தயிரும் புளிப்பு தன்மையை கொண்டது. பால் வயிற்றுக்கு சென்றவுடன் புளிக்க ஆரம்பித்துவிடும்.  பால் அதன் தன்மையிலிருந்து மாறி புளித்து கெட்டுப் போகும்போது தான் அது  தயிராக மாறுகிறது. மேலும் இவைகளில் அதிகமாக கால்ஷியம்  உள்ளது. கால்ஷியம் என்றால் சுண்ணாம்பு சத்து. காயத்தில் சுண்ணாம்பு படும்போது ஏற்கனவே உள்ள அல்சரில் மேலும் அது புண்ணை ஏற்படுத்தும்.

எனவே அல்சர் உள்ளவர்கள் பால், தயிர் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். மேலும் புளிப்பான பழ வகைகள், இனிப்பில்லாத இளநீர், வாழைப்பழம் போன்றவைகளையும் தவிர்க்க வேண்டும்.

வயிற்றுக்கு இரண்டு விதமான செயல்பாடுகள் உள்ளன. ஒன்று உணவுகளை செரிக்க வைத்தல். இரண்டாவது மன அமைதியை ஏற்படுத்துதல். 

பரபரப்பான வேலை சூழ்நிலையில் உள்ளவர்கள், நீண்ட நேரம் கண் விழித்து வேலை செய்பவர்கள்,  தூக்கம் குறைவு,  Day - Night   என மாறிமாறி வேலை செய்பவர்கள் ஆகியவர்களுக்கு பசி வந்தவுடன் உணவு உண்ணக்கூடிய சூழ்நிலை இல்லையென்றால் கைக்கால்கள் நடுங்கும், படபடப்பு அதிகமாகும், மயக்கம் ஏற்படும், எளிதில் எரிச்சலடைவார்கள். அவர்கள் உணவை கண்டவுடன்  பரபரப்பின் காரணமாக அவசர அவசரமாக சாப்பிடுவார்கள். இந்நிலையில் சாப்பிடும் உணவு அரைகுறையாக ஜீரணிக்கப்படுவதால் பல வயிற்றுக் கோளாறுகளை ஏற்படுத்துகிறது.

பசி இல்லாமலும்,மன அமைதி இல்லாத போதும் உண்ணப்படும் அனைத்து உணவுகளும் வயிற்றுக் கோளாறுகளை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும். இதுவும் அல்சர் ஏற்பட முக்கிய காரணமாகும். எனவே உணவு உண்ணும் போது அமைதியும், நிதானமும் தேவை. 

அல்சர் நோயாளிகள் எப்போதும் வயிறு முட்ட உணவை உண்ணக் கூடாது.
அரை வயிறு உணவாக 3 வேலைக்கு பதிலாக 4, 5 வேலையாக பிரித்து  உண்ணலாம்.  அப்பளம், முறுக்கு, பிஸ்கட் போன்ற மொறு மொறுப்பான உணவுகளையும் தவிர்க்க வேண்டும். 

நீர் நிறைந்த காய்களை சாப்பிட வேண்டும்.

இனிப்பான பழவகைகளை சாப்பிடுவது மிகவும் நல்லது. இனிப்பு சுவை வயிற்றை குணப்படுத்தும்.

கொஞ்சம் மனதக்காளி கீரையை விதையுடன் எடுத்து, அத்துடன் சிறிது கசகசாவையும், ஒரு துண்டு தேங்காவும் சேர்த்து மிக்ஸியில்  அரைத்து அந்த ஜூசை காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் 15, 20 நாட்களில் அல்சர் புண் ஆறிவிடும். 

உணவுடன் தினமும் அகத்தி கீரையை சேர்த்துக் கொள்வது  நல்லது. இதற்கு     புண்களை ஆற்றும் தன்மை உள்ளது.

வயிற்றில் வலி ஏற்பட்டால் கொஞ்சம் சர்க்கரையையோ அல்லது உப்பையோ வாயில் போட்டு சுவைத்தால் சிறிது நேரத்தில் வலி மறைந்து விடும்.

பசிக்கும் போது  உங்கள் செரிமான சக்திக்கு ஏற்றாவாறு உணவை தேர்ந்தெடுத்து சாப்பிடும் போது அல்சர் கொஞ்சம் கொஞ்சமாக முற்றிலும் குணமாகும்.

எந்த இயற்கை முறை மருத்துவத்தில் மருந்து எடுத்து கொண்டாலும் குறிப்பிட்ட காலத்திற்குள் மருந்தை நிறுத்தி உங்கள் வாழ்க்கை முறையில் பின்பற்றப்படும் உணவுகளை சரியாக தேர்ந்தெடுத்து பின்பற்றினால் பல நோய்களுக்கு அடிப்படை காரணமாக இருக்கும் அல்சர் எனப்படும் குன்மம் முற்றிலும் குணமாகும் இன்ஷாஅல்லாஹ்.

மேலும் ஆலோசனை பெற 
New life nature health centre
Dr abdul jaleel 
📞8807224995

மத்திய அரசின் கல்வி உதவித் தொகை ,

https://scholarships.gov.in/fresh/newstdRegfrmInstruction

மத்திய அரசின் கல்வி உதவித் தொகை பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்பு!

சிறுபான்மை வகுப்பைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் மத்திய அரசின் கல்வி உதவித் தொகை பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.


மத்திய அரசின் கல்வி உதவித் தொகை பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்பு!

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியதாவது

மாநிலத்தில் சிறுபான்மையினராக உள்ள முஸ்லிம், கிறிஸ்துவர், சீக்கியர், புத்த மதத்தினர், பார்சி மற்றும் ஜைன மதத்தைச் சேர்ந்த மாணவ, மாணவியர்களுக்கு மத்திய அரசின் சார்பில் கல்வி உதவித் தொகை வழங்கப்படுவது வழக்கம். இதில், அரசு, அரசு உதவி பெறும் மற்றும் மாநில, மத்திய அரசால் அங்கீகாரம் பெற்ற தனியார் கல்வி நிலையங்களில் 1-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகையும், 11-ஆம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை (ஐடிஐ, ஐடிசி, வாழ்க்கை தொழிற்கல்வி, பாலிடெக்னிக், செவிலியர், ஆசிரியர் பட்டயப்படிப்பு, இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகள் உள்பட) பயில்வோருக்கு பள்ளி மேற்படிப்பிற்கான உதவித்தொகையும் வழங்கப்படும். அதேப் போன்று, தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி பயில்வோருக்குத் தகுதி மற்றும் வருவாய் அடிப்படையில் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

பள்ளிப் படிப்பு கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு தகுதியான மாணவ, மாணவிகள் 15.10.2019 வரையிலும், பள்ளி மேற்படிப்பு மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை திட்டத்திற்குத் தகுதியானவர்கள் 31.10.2019 வரையிலும் இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

இதில் விண்ணப்பிக்க விரும்புவோர் மத்திய அரசின் www.scholarships.gov.in என்னும் தேசிய கல்வி உதவித் தொகைக்கான இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். நடப்பு கல்வியாண்டில் தமிழகத்தில் கல்வி உதவித்தொகை திட்டத்தின் சார்பில் 1 லட்சத்து 35 ஆயிரத்து 127 மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்க மத்திய அரசால் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

விண்ணப்பதாரர்கள் இணைய தளத்தில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்து, விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனுடன் தங்களது புகைப்படம் மற்றும் தேவையான ஆவணங்களின் நகல்களை இணைத்து குறிப்பிட்ட நாட்களுக்குள் அந்தந்த கல்வி நிலையத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

ஆவண நகல்களை விண்ணப்பத்துடன் இணைத்து தங்களது கல்வி நிலையத்திற்கு அனுப்பாத மாணவ, மாணவிகளின் இணையதள விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது.

பதிவு செய்த விண்ணப்பங்களின் விவரங்களை எந்த நிலையிலும் மாற்றவோ, திருத்தவோ இயலாது. எனவே, ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது வங்கிக் கணக்கு எண் உள்ளிட்ட விவரங்களை மிகவும் கவனத்துடன் பதிவு செய்ய வேண்டும்.

இக்கல்வி உதவித்தொகை மாணவ, மாணவிகளின் வங்கிக் கணக்கில் மத்திய அரசால் நேரடியாக விடுவிக்கப்படும்.

இத்திட்டம் தொடர்பாக மத்திய அரசால் வெளியிடப்பட்ட வழிகாட்டி முறைகள் 

http:www.minorityaffairs.in/schemes

 என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்

வியாழன், நவம்பர் 18, 2021

மத்திய அரசின் மாநில அரசின் உதவித் திட்டம்,

40 ஆயிரம் மதிப்புள்ள  இம்போர்ட்ட‌ட் வீல்சேர் மற்றும் ட்ரை (மூன்று சக்கர) சைக்கிள்... மத்திய அரசு இல‌வ‌ச‌மா குடுக்குது. தேவை இருக்கிறவ‌ங்க நேர்ல‌போய்... வ‌ருமான‌ சான்றித‌ழ், ரேஷ‌ன் கார்ட், மாற்றுதிறனாளி அடையாள‌ அட்டை குடுத்து வாங்கிக்க‌லாம். 

இட‌ம் : National institute 
for empowerment of persons with multiple disabilities, muttukadu, Chennai.
http://niepmd.tn.nic.in/schemes.php

படித்தவர்கள் பிறருக்கு எடுத்து கூறுங்கள்

புதன், நவம்பர் 17, 2021

மனிதனின் உடல் நிலைகள்

#மனித_உடல்:

1: எலும்புகளின் எண்ணிக்கை: 206
2: தசைகளின் எண்ணிக்கை: 639
3: சிறுநீரகங்களின் எண்ணிக்கை: 2
4: பால் பற்களின் எண்ணிக்கை: 20
5: விலா எலும்புகளின் எண்ணிக்கை: 24 (12 ஜோடி)
6: இதய அறை எண்: 4
7: மிகப்பெரிய தமனி: பெருநாடி
8: சாதாரண இரத்த அழுத்தம்: 120/80 Mmhg
9: இரத்தம் Ph: 7.4
10: முதுகெலும்பில் உள்ள முதுகெலும்புகளின் எண்ணிக்கை: 33
11: கழுத்தில் உள்ள முதுகெலும்புகளின் எண்ணிக்கை: 7
12: நடுத்தர காதில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை: 6
13: முகத்தில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை: 14
14: மண்டையில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை: 22
15: மார்பில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை: 25
16: கைகளில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை: 6
17: மனித கையில் உள்ள தசைகளின் எண்ணிக்கை: 72
18: இதயத்தில் உள்ள பம்புகளின் எண்ணிக்கை: 2
19: மிகப்பெரிய உறுப்பு: தோல்
20: மிகப்பெரிய சுரப்பி: கல்லீரல்
21: மிகப்பெரிய செல்: பெண் கருமுட்டை
22: மிகச்சிறிய செல்: விந்து
23: மிகச்சிறிய எலும்பு: நடுத்தர காது குத்துகிறது
24: முதல் மாற்று உறுப்பு: சிறுநீரகம்
25: சிறுகுடலின் சராசரி நீளம்: 7 மீ
26: பெரிய குடலின் சராசரி நீளம்: 1.5 மீ
27: பிறந்த குழந்தையின் சராசரி எடை: 3 கிலோ
28: ஒரு நிமிடத்தில் துடிப்பு விகிதம்: 72 முறை
29: சாதாரண உடல் வெப்பநிலை: 37 C ° (98.4 f °)
30: சராசரி இரத்த அளவு: 4 முதல் 5 லிட்டர்
31: வாழ்நாள் சிவப்பு ரத்த அணுக்கள்: 120 நாட்கள்
32: வாழ்நாள் வெள்ளை இரத்த அணுக்கள்: 10 முதல் 15 நாட்கள்
33: கர்ப்ப காலம்: 280 நாட்கள் (40 வாரங்கள்)
34: மனித பாதத்தில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை: 33
35: ஒவ்வொரு மணிக்கட்டில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை: 8
36: கையில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை: 27
37: மிகப்பெரிய நாளமில்லா சுரப்பி: தைராய்டு
38: மிகப்பெரிய நிணநீர் உறுப்பு: மண்ணீரல்
40: மிகப்பெரிய மற்றும் வலிமையான எலும்பு: Femur
41: மிகச்சிறிய தசை: ஸ்டேபிடியஸ் (நடுத்தர காது)
41: குரோமோசோம் எண்: 46 (23 ஜோடி)
42: பிறந்த குழந்தை எலும்புகளின் எண்ணிக்கை: 306
43: இரத்த பாகுத்தன்மை: 4.5 முதல் 5.5
44: உலகளாவிய நன்கொடையாளர் இரத்தக் குழு: ஓ
45: உலகளாவிய பெறுநர் இரத்தக் குழு: ஏபி
46: மிகப்பெரிய வெள்ளை இரத்த அணு: மோனோசைட்
47: மிகச்சிறிய வெள்ளை இரத்த அணு: லிம்போசைட்
48: அதிகரித்த சிவப்பு இரத்த அணுக்களின் எண்ணிக்கை: பாலிசித்தீமியா
49: உடலில் உள்ள இரத்த வங்கி: மண்ணீரல்
50: வாழ்க்கை நதி என்று அழைக்கப்படுகிறது: இரத்தம்
51: சாதாரண இரத்தக் கொழுப்பு அளவு: 100 மிகி / டிஎல்
52: இரத்தத்தின் திரவப் பகுதி: பிளாஸ்மா

வாழ்க்கை என்று அழைக்கப்படும் இந்த சாகசத்தை அனுபவிக்க உங்களை அனுமதிக்கும் ஒரு முழுமையான வடிவமைக்கப்பட்ட இயந்திரம். அதை கவனித்துக் கொள்ளுங்கள். தீமைகள் மற்றும் அதிகப்படியானவற்றால் அதை சேதப்படுத்தாதீர்கள்.

நன்றி: எழுத்தாயுதம்


சனி, நவம்பர் 13, 2021

ஷைகுல் ஹதீஸ் அல்லாமா A.E.M.அப்துர் ரஹ்மான் ஹஜ்ரத் மரணம்,

அஸ்ஸலாமு அலைக்கும வரஹ் ..

    *ஷைகுல் ஹதீஸ்  அல்லாமா A.E.M.அப்துர் ரஹ்மான் ஹஜ்ரத் கிப்லா அவர்களின் மரணச் செய்தி

 தமிழக முஸ்லிம்களுக்கும் மற்றும்  உலமாக்கள் அனைவருக்கும் மிகுந்த வருத்தத்தையும் மன வேதனையும் அளிக்கிறது.*  

*தமிழகத்திலுள்ள முஸ்லிம்களுக்கும் உலமாக்களுக்கும் அவர்கள் ஆற்றிய சேவை மகத்தானது.*

    *ஹஜரத்   மாநில ஜமாத்துல் உலமா சபையின் தலைவர் பொறுப்பில் இருந்த போது அடியேன் மூன்று ஆண்டுகள் சென்னை மாவட்ட செயலாளரக இருந்து அவர்களின் கீழ் பணியாற்றும் வாய்ப்ப்பை பெற்றேன்.*

   *கம்பீரமான தோற்றம், வசீகரமான பார்வை குழந்தை போன்ற உள்ளம் புன் சிரிப்புடன் அணுகுமுறை போன்ற நற் குணங்களைக் கொண்ட ஹஜ்ரத் பெருந்தகை ஜமாத்துல் உலமா சபைக்கு யார் நிதி வழங்கினாலும் வாங்கி அப்படியே பொருளாளர் அல்லது  பொறுப்பாளர்களிடத்தில் வழங்கும் தன்மை கொண்டவர்கள்.* 

    *சென்னை மாவட்ட ஜமாத்துல் உலமா சபை நிகழ்ச்சிகளுக்கு  அவர்களை அழைக்கும் போதெல்லாம் தவறாமல் கலந்துக் கொள்ளக் கூடியவர்கள்.*

*சென்னை மாவட்ட ஜமாத்துல் உலமா சபையின் செயல்பாடுகளை குறிப்பாக வெள்ள நேரத்தின் செயல்பாடுகளை அலைபேசியில் அழைத்து பாராட்டியதுடன் ஜமாத்துல் உலமா சபையின் கூட்டங்களிலும் மனதார பாராட்டியவர்கள்.*

  *மன்பயிக்களின் சிறப்பான கல்வி ஞானத்திற்கு,  ஹஜ்ரத் போன்றவர்களின் அறிவு ஞானம் பெரிதும் உதவியது.*

 *ஷைகுல் ஹதீஸ் என்னும் பெயருக்கு ஏற்றார் போல அவர்களின்  வகுப்புகளும் இருக்குமென அவர்களின் மாணவர்களின் மூலமாக அறிய முடிகிறது. தன்னுடைய நீண்ட கால அனுபவங்களையும் மாணவர்களுடன் பகிர்ந்து பொது அறிவையும் மாணவர்கள் பெறுவதற்கு வழி வகுத்தவர்கள்.*


 *மறைந்த பெங்களுர் ஷபீலுர் ரஷாத் அரபிக் கல்லூரியின் முதல்வர் அஷ்ஷெய்கு அஸரஃப் அலி ஹஜ்ரத் கிப்லா அவர்களுக்கு சென்னை மாவட்ட ஜமாத்துல் உலமா சபையின் சார்பில் நினைவேந்தல் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து  ஹஜ்ரத் அவர்களை  அழைத்துப் பேச வைத்தோம்.  நாங்கள் அவர்களுக்கு போக்கு வரத்து செலவுக்காக  ஹத்யா வழங்க முன்வந்த போது அவற்றை  ஏற்க மறுத்து என்னுடைய கடமையை ஆற்ற இங்கே வந்தேன்.*

 *இதைக் கூட செய்யா விட்டாமல் எப்படி என்றுக் கூறி புறப்பட்டார்கள்.* 

 *ஹஜ்ரத்   அவர்களின் சேவைகள் தமிழக வரலாற்றில் எப்போதும் இடம் பெற்றிருக்கும் எனபதில் எவ்வித  சந்தேகமில்லை.* 

    *ஹஜ்ரத் அவர்களின் சேவைகளை வல்ல ரஹ்மான் கபூல் செய்து ஜன்னத்துல் பிர்தவுஸை வழங்கிய அருள்வானாக.*


https://youtu.be/5ZPlgPMBwSg



மௌலானா
அப்துர் ரஹ்மான் ஹஜ்ரத் கிப்லா அவர்களின் வாழ்க்கை வரலாறு



https://youtu.be/-CpWQLyzKls

வியாழன், நவம்பர் 11, 2021

ஜும்மா மேடை


மழை செய்த பிழையா?

مصابيح المحراب : மழை செய்த பிழையா?


http://vellimedaiplus.blogspot.com/2015/11/blog-post_18.html?m=1

*மழை அல்லாஹ்வின் அருள்* ~ WARASATHUL ANBIYA


http://warasathulanbiya.blogspot.com/2015/11/blog-post.html?m=1

வெள்ளிமேடை منبر الجمعة: *மழையோ மழை*
http://vellimedai.blogspot.com/2015/11/blog-post_20.html?m=1

தாவூதி ஆலிம்கள் சங்கமம் : *பேரிடர்கள் தரும் பாடம்*
http://dawoodiaalimkalsangamam.blogspot.com/2018/08/blog-post_23.html?m=1

ஞாயிறு, நவம்பர் 07, 2021

சிசுவிற்கு ஜனாஸா தொழுகை உண்டா?

 கேள்வி :ஸலாத்தில் கரு கலைப்பு கூடுமா?*


சிசுவிற்கு ஜனாஸா  தொழுகை உண்டா?*



*الجواب بعون الله الملك الوهاب 👇*



فالجنين بعد نفخ الروح فيه 

لا يجوزإجهاضه بلا خلاف، 


أما قبل ذلك ففيه خلاف، 


فجمهور أهل العلم على تحريمه 


ومنهم من قال بالتحريم , وهو المعتمد عند المالكية. 


ومنهم من قال بالكراهة، 


ومنهم من قال بالجواز لعذر، 


من قال بالإباحة لعذر فقط , وهو حقيقة مذهب الحنفية


ومنهم من قال بالجواز مطلقا ، 


ولعل القول بالجواز في الأربعين الأولى إذا كان هناك عذر ومصلحة هو الراجح،


واختلف في الكفارة والأحوط فعلها، 


وهي عتق رقبة، 


أو صيام شهرين متتابعين، 


ودية الجنين إن سقط ميتا 


مقدارها عشر دية المرأة، 


وقدّرها بعضهم بمائتين وثلاثة عشر جراما من الذهب تقريبا


وَكَذَلِكَ الْمَرْأَةُ يَسَعُهَا أَنْ تُعَالَجَ لِإِسْقَاطِ الْحَبَلِ مَا لَمْ يَسْتَبِنْ شَيْءٌ مِنْ خَلْقِهِ وَذَلِكَ مَا لَمْ يَتِمَّ لَهُ مِائَةٌ وَعِشْرُونَ يَوْمًا ثُمَّ إذَا عَزَلَ وَظَهَرَ بِهَا حَبَلٌ هَلْ يَجُوزُ نَفْيُهُ؟ 


قَالُوا إنْ لَمْ يَعُدْ إلَى وَطْئِهَا أَوْ عَادَ بَعْدَ الْبَوْلِ وَلَمْ يُنْزِلْ جَازَ لَهُ نَفْيُهُ وَإِلَّا فَلَا كَذَا فِي التَّبْيِينِ


إِنْ أَسْقَطَتْ بَعْدَ مَا اسْتَبَانَ خَلْقُهُ وَجَبَتْ الْغُرَّةُ كَذَا فِي فَتَاوَى قَاضِي خَانْ.


الْعِلَاجُ لِإِسْقَاطِ الْوَلَدِ إذَا اسْتَبَانَ خَلْقُهُ كَالشَّعْرِ وَالظُّفْرِ وَنَحْوِهِمَا لَا يَجُوزُ وَإِنْ كَانَ غَيْرَ مُسْتَبِينِ الْخَلْقِ يَجُوزُ وَأَمَّا فِي زَمَانِنَا يَجُوزُ عَلَى كُلِّ حَالٍ وَعَلَيْهِ الْفَتْوَى كَذَا فِي جَوَاهِرِ الْأَخْلَاطِيِّ.


وَفِي الْيَتِيمَةِ سَأَلْت عَلِيَّ بْنَ أَحْمَدَ عَنْ إسْقَاطِ الْوَلَدِ قَبْلَ أَنْ يُصَوَّرَ فَقَالَ أَمَّا فِي الْحُرَّةِ فَلَا يَجُوزُ قَوْلًا وَاحِدًا وَأَمَّا فِي الْأَمَةِ فَقَدْ اخْتَلَفُوا فِيهِ وَالصَّحِيحُ هُوَ الْمَنْعُ كَذَا فِي التَّتَارْخَانِيَّة



وذهب الحنفیة إلی إباحة إسقاط العلقة حیث أنهم یقولون بإباحة إسقاط الحمل ما لم یتخلق منه شيء ولم یتم التخلق إلا بعد مائة وعشرین یوماً، 


قال ابن عابدین: وإطلاقهم یفید عدم توقف جواز إسقاطها قبل المدة المذکورة علی إذن الزوج، 


وکان الفقیه علي بن موسی الحنفي یقول: إنه یکره فإن الماء بعد ما وقع في الرحم مآله الحیاة، 


فیکون له حکم الحیاة کما في بیضة صید الحرم، 


قال ابن وهبان: فإباحة الإسقاط محمولة علی حالة العذر أو أنها لا تأثم إثم القتل



حمل کو چار ماہ یعنی 120 دن گزرنے کے بعد چوں کہ اللہ رب العزت اس میں روح ڈال دیتا ہے؛ جس کی وجہ سے ایسے حمل کا اسقاط حرام ہے، اور یہ ایسے ہی ہے جیسے زندہ بچے کو درگور کردیا جائے۔



نیز الٹرا ساؤنڈ میں بچے کی کسی بیماری کا علم یقینی نہیں، 


بلکہ گمان کے درجے میں ہوتا ہے، 


اور اگر یقینی بھی ہو تو خالقِ کائنات بقیہ مدت میں اس مرض سے نجات دینے پر قدرت رکھتا ہے 


اور بالفرض آخر وقت تک بھی بچہ مذکورہ مرض میں مبتلا رہے، 


پھر بھی اس کا اسقاط جائز نہیں؛ 


کیوں کہ بیمار انسان کو مارنا جائز نہیں، 


اگر اب اسقاط کیا گیا تو یہ قتلِ جنین ہے، جس کی وجہ سے ماں باپ پر عُقل (بطورِ تاوان پانچ سو درہم) لازم ہوگا۔ 


لہذا آپ اللہ رب العزت سےصحت یابی کی دعا کریں اور اس سے اچھی امید رکھیں۔





(abortion) கருக்கலைப்பின் யதார்த்தத்தையும் ஷரீஅத்தின் விதிமுறையையும் முதலில் நாம் விளங்கி கொள்ள வேண்டும் 


மொழியியல் ரீதியான பொருளின்படி கருக்கலைப்பு abortion என்பது கருவை கருப்பையிலிருந்து வெளியேற்றுவது ஆகும். 



இஸ்லாமிய ஃபிக்ஹ் அறிஞர்கள்  பிரசவ காலம் பூர்த்தியாவதற்கு முன்பு கருவை கருப்பையிலிருந்து வெளியேற்றுவதே கருக்கலைப்பு என்பதாக வரையறுக்கின்றனர்.



பிரத்தியோகமான மருந்து சாப்பிடுதல், சுமை தூக்குதல்,மருத்துவரை அணுகி கருக்கலைப்பு செய்யக் கோருதல்,போன்ற முறைகளில் கருவைக் கலைக்கலாம். 


சிலவேளைகளில் தானாகவோ அல்லது பலவந்த தாக்குதல் மூலமாகவோ கரு கலைந்து விடுவதுமுண்டு.


abortion கருக்கலைப்பு என்பது கருவிற்கு ரூஹ் கொடுக்கப்படுவதற்கு முன்போ அல்லது பின்போ நடக்கலாம்.


முஸ்லிம் அறிஞர்களின் ஒருமித்த கருத்தின்படி ரூஹ் கொடுக்கப்பட்ட பின்பு கருவைக் கலைப்பது ஹராமாகும்.



ஏனெனில் இது மனித உயிருக்கு எதிரான தாக்குதலாகும். 


இதற்கு இரத்த ஈட்டுதொகையாக  - غرة  குர்ரா (ஆண் அல்லது பெண் அடிமை) கொடுக்கவேண்டும். 


இது பிறந்துவிட்ட முழு மனிதனுக்கு பகரமாக கொடுக்கப்படவேண்டிய திய்யாவில் (الدية) பத்தில் ஒரு பங்காகும்.


அல்லாஹ் கூறுகிறான்:-



وَلَا تَقْتُلُوا النَّفْسَ الَّتِي حَرَّمَ اللَّهُ إِلَّا بِالْحَقِّ



(கொலையை) அல்லாஹ் விலக்கியிருக்க நீங்கள் எந்த மனிதனையும் நியாயமான காரணமின்றி கொலைசெய்து விடாதீர்கள்..



(அல் இஸ்ரா : 33)




قَضَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي جَنِينِ امْرَأَةٍ مِنْ بَنِي لَحْيَانَ سَقَطَ مَيِّتًا بِغُرَّةٍ، عَبْدٍ أَوْ أَمَةٍ



‘பனூ லிஹ்யான்’ குலத்தைச் சேர்ந்த (கர்ப்பிணி) பெண் ஒருத்தியின் (வயிற்றிலிருந்த) சிசு, (மற்றொரு பெண் அடித்ததால்) இறந்து பிறந்தது. 


அதற்கு நஷ்ட ஈடாக ஓர் ஆண் அடிமையை, அல்லது ஓர் அடிமைப் பெண்ணை வழங்கிட வேண்டுமென இறைத்தூதர்  صلى الله عليه وسلم  அவர்கள் தீர்ப்பளித்தார்கள்.       


பார்க்க 👇                                                      (அபூஹுரைரா(ரலி), புஹாரி,முஸ்லிம்)



இதனடிப்பையில் கருவுக்கு ரூஹ் கொடுக்கப்பட்ட பின்பு அதைக் கலைப்பது தடை செய்யப்பட்டுள்ளது என்று முஸ்லிம் சட்ட அறிஞர்கள் ஒருமித்து கூறியுள்ளனர்.



கருவிற்கு ரூஹ் கொடுக்கப்படுவதற்கு முன்னர் கருக்கலைப்பு செய்வது குறித்து அறிஞர்களிடையே கருத்து வேறுபாடுகள் உள்ளது.


கருத்தரித்த பின்புள்ள படிநிலைகளைப் பொறுத்து சிலர் அதை அனுமதிக்கவும், 

சிலர் அதை தடை செய்யவும் செய்கின்றனர். 


சிலர் கருத்தரித்து 40 அல்லது 42 நாட்களுக்கு பிறகு கருக்கலைப்பு abortion செய்வது ஹராமாகும். என்கின்றனர், 



கரு முதிர்கருவாக வளர்ச்சியடைய ஆரம்பிக்கும்போது கை,கால், கண், நகம் போன்றவை வளர ஆரம்பிக்கின்றன.


எனவே  முன்பு கூறிய ஹதீஸ் அடிப்படையில் 


அதற்கு திய்யா(الدية) என்னும் இரத்த ஈட்டுத்தொகை வழங்குவதும் கட்டாயமாகும்.



நபி ஸல் அவர்கள் கூறியுள்ளதாக இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்;-




إِذَا مَرَّ بِالنُّطْفَةِ ثِنْتَانِ وَأَرْبَعُونَ لَيْلَةً، بَعَثَ اللهُ إِلَيْهَا مَلَكًا، فَصَوَّرَهَا وَخَلَقَ سَمْعَهَا وَبَصَرَهَا وَجِلْدَهَا وَلَحْمَهَا وَعِظَامَهَا، ثُمَّ قَالَ: يَا رَبِّ أَذَكَرٌ أَمْ أُنْثَى؟ 


فَيَقْضِي رَبُّكَ مَا شَاءَ، وَيَكْتُبُ الْمَلَكُ، ثُمَّ يَقُولُ: يَا رَبِّ أَجَلُهُ، فَيَقُولُ رَبُّكَ مَا شَاءَ، وَيَكْتُبُ الْمَلَكُ، ثُمَّ يَقُولُ: يَا رَبِّ رِزْقُهُ، فَيَقْضِي رَبُّكَ مَا شَاءَ، وَيَكْتُبُ الْمَلَكُ، ثُمَّ يَخْرُجُ الْمَلَكُ بِالصَّحِيفَةِ فِي يَدِهِ، فَلَا يَزِيدُ عَلَى مَا أُمِرَ وَلَا يَنْقُصُ



நுத்ஃபாவின் மீது நாற்பத்து இரண்டு இரவுகள் கடந்துவிட்ட நிலையில் அல்லாஹ்سبحانه وتعالى வானவர் ஒருவரை அனுப்புகிறான். 


பிறகு (மூன்றாவது நாற்பது கழிந்தபின்) அதற்கு உருவமளித்து,அதற்குச் செவிப்புலனையும் பார்வையையும் தோலையும் சதையையும் எலும்பையும் படைக்கிறான்.



பிறகு (நாற்பத்து இரண்டு நாட்கள் கழிந்ததும் அனுப்பப்பட்ட) அந்த வானவர், 



“இறைவா! இது ஆணா, பெண்ணா?” என்று கேட்கிறார். 


அப்போது உம்முடைய இறைவன் தான் நாடியதைத் தீர்ப்பளிக்கிறான்.


(அவ்வாறே) அந்த வானவரும் எழுதிப் பதிவு செய்கிறார். 


பிறகு அவர், “இறைவா! இதன் வாழ்நாள் (எவ்வளவு?)” என்று கேட்கிறார். 


அப்போது உம்முடைய இறைவன் தான் நாடியதைச் சொல்கிறான்.


(அதன்படி) அந்த வானவரும் எழுதிப் பதிவு செய்கிறார்.


பிறகு அவர், “இறைவா! இதன் வாழ்வாதாரம் (எவ்வளவு)?” என்று கேட்கிறார். 


அப்போது உம்முடைய இறைவன் தான் நாடியதைத் தீர்ப்பளிக்கிறான். 


(அதன்படி) அந்த வானவரும் எழுதி பதிவு செய்துவிட்டு பிறகு தமது கையில் அந்த ஏட்டை எடுத்துக்கொண்டு வெளியேறிவிடுகிறார். 


(தமக்கு) ஆணையிடப்பட்டதைவிட அவர் கூட்டுவதுமில்லை; குறைப்பதுமில்லை



(அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்(ரலி), 


நூல் :முஸ்லிம்)



மற்றொரு அறிவிப்பில் நாற்பத்திரண்டு இரவுகள் என்பதற்கு பதிலாக أَرْبَعِينَ لَيْلَةً  நாற்பது இரவுகள் என்று வந்துள்ளது.



அல்லாஹ்سبحانه وتعالى  கூறுகிறான்-



وَإِذَا الْمَوْءُودَةُ سُئِلَتْ * بِأَيِّ ذَنْبٍ قُتِلَتْ



உயிருடன் புதைக்கப்பட்ட பெண் (குழந்தை) வினவப்படும் போது – “எந்தக் குற்றத்திற்காக அது கொல்லப்பட்டது?” என்று. 



(அத்தக்வீர் : 8,9)



ஆகவே கருவைக் கலைப்பது தடை செய்யப்பட்டுள்ளதால், கருவின் மீதான தாக்குதலான  கருக்கலைப்பிற்கு காரணமாக இருக்கும் தாயோ, தந்தையோ, கணவரோ, மருத்துவரோ, அல்லது வேறு யாராக இருந்தாலும் அவர்கள் குற்றவாளிகளாவர்.



எனவே இந்த குற்றத்தை இழைத்தவர்கள் இரத்த ஈட்டுத்தொகை என்னும் திய்யா செலுத்தவேண்டியது கட்டாயமாகும்.



அதற்கான கஃப்பாரா👇 



وَمَا كَانَ لِمُؤْمِنٍ اَنْ يَّقْتُلَ مُؤْمِنًا اِلَّا خَطَـــٴًــا‌  وَمَنْ قَتَلَ مُؤْمِنًا خَطَـــٴًــا فَتَحْرِيْرُ رَقَبَةٍ مُّؤْمِنَةٍ وَّدِيَةٌ مُّسَلَّمَةٌ اِلٰٓى اَهْلِهٖۤ اِلَّاۤ اَنْ يَّصَّدَّقُوْا‌  


فَاِنْ كَانَ مِنْ قَوْمٍ عَدُوٍّ لَّـكُمْ وَهُوَ مُؤْمِنٌ فَتَحْرِيْرُ رَقَبَةٍ مُّؤْمِنَةٍ‌  وَاِنْ كَانَ مِنْ قَوْمٍ بَيْنَكُمْ وَبَيْنَهُمْ مِّيْثَاقٌ فَدِيَةٌ مُّسَلَّمَةٌ اِلٰٓى اَهْلِهٖ وَ تَحْرِيْرُ رَقَبَةٍ مُّؤْمِنَةٍ‌  


فَمَنْ لَّمْ يَجِدْ فَصِيَامُ شَهْرَيْنِ مُتَتَابِعَيْنِ تَوْبَةً مِّنَ اللّٰهِ‌  وَكَانَ اللّٰهُ عَلِيْمًا حَكِيْمًا


‏ 

தவறாக அன்றி, ஒரு முஃமின் பிறிதொரு முஃமினை கொலை செய்வது ஆகுமானதல்ல; 


உங்களில் எவரேனும் ஒரு முஃமினை தவறாக கொலை செய்துவிட்டால், 


அதற்குப் பரிகாரமாக முஃமினான ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும்; 


அவனுடைய குடும்பத்தாருக்கு நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் - 


அவனுடைய குடும்பத்தார் (நஷ்ட ஈட்டுத் தொகையை மன்னித்து) அதை தர்மமாக விட்டாலொழிய; 


கொல்லப்பட்ட அவன் உங்கள் பகை இனத்தைச் சார்ந்தவனாக (ஆனால்) முஃமினாக இருந்தால், முஃமினான ஓர் அடிமையை விடுதலை செய்தால் போதும் (நஷ்ட ஈடில்லை; இறந்த) அவன் உங்களுடன் சமாதான (உடன்படிக்கை) செய்து கொண்ட வகுப்பாரைச் சேர்ந்தவனாக இருந்தால் அவன் சொந்தக்காரருக்கு நஷ்ட ஈடு கொடுப்பதுடன், முஃமினான ஓர் அடிமையை விடுதலை செய்யவும் வேண்டும்; 


இவ்வாறு (பரிகாரம்) செய்வதற்கு சக்தியில்லாதவனாக இருந்தால், 


அல்லாஹ்விடம் மன்னிப்புப் பெறுவதற்காகத் தொடர்ந்து இரண்டு மாதங்கள் நோன்பு வைக்க வேண்டும் - 


அல்லாஹ் நன்கு அறிந்தவனாகவும், பூரண ஞானமுடையவனாகவும் இருக்கிறான்.



(அல்குர்ஆன் : 4:92)




அடிமையை உரிமையிடுவது


தொடர்ந்து இரு மாதம் நோன்பு நோற்பது 


அல்லது அதற்கான ஈட்டுத்தொகை 213 கிராம் தங்கம் என்றும் ,


அல்லது ஒன்றரை கிலோ வெள்ளி என்றும் கூறப்படுகிறது 



கருத்தரித்து நாற்பது நாட்களுக்கு முன்னர் செய்யப்படும் கருக்கலைப்பை பொறுத்தவரை அது அனுமதிக்கப்பட்டதாகும்



கருவின் மீதான தாக்குதலாக இது கருதப்படமாட்டாது என்பதால் செய்தால் இதற்கு தண்டனை கிடையாது.



فأجمع أهل العلم على حرمة الإجهاض إذا أتم الجنين مائة وعشرين 


لأنه بعد الطور الثالث ‏وهو تمام المائة وعشرين يوماً يكون قد نفخ فيه الروح وفي إجهاضه قتل للنفس التي حرم ‏الله إلا بالحق، 



ஆக ஒரு மண்டலம் 40 நாள் 

3மண்டலத்தில் அதாவது 120நாளில் ஒரு சிசு பூரணமாக உருவாகி விடுகிறது 


அதற்கு பிறகு எந்த ஒரு நிலையிலும் கருகலைப்பு ஹராமாகும்.. 



குழந்தை கருவிலேயே இறந்து விட்டது எனில் அதை வெட்டி எடுப்பது கூடும் 


அதே சமயம் அந்தக் குழந்தை உயிருடன் இருக்கிறது எனில் அவ்வாறு செய்வது கூடாது 


குழந்தையின் உயிரை எடுப்பதற்கு எவ்வகையிலும் அனுமதி இல்லை


கருவில் குழந்தைக்கு ஏதேனும் குறைபாடு இருக்கிறது என ஸ்கேன் வழியாக தெரிந்தாலும் 


120 நாட்கள் கழிந்த பின்னர் கலைப்பதற்கு அனுமதி கிடையாது 


ஏனெனில் நோயாளியான ஒருவரை கொலை செய்வதற்கும் மார்க்கத்தில் அனுமதி இல்லை



அவ்வாறு தெரியாமல் கலைத்து விட்டால்  அது ஒரு உயிரை கொலை செய்ததினுடைய குற்றமாகும் 


எனவே அதற்கு பரிகாரமாக 500 திர்ஹம் அதாவது ஒரு கிலோ 531 கிராம் கிராம் வெள்ளி அளவில் காஃப்பாரா  கடமையாகிவிடும்



பார்க்க 👇



فتاوی رحیمیہ (2/240)


الموسوعة الفقهیة الکویتیة۳۰/ ۲۸۵)


الفتاوى الهندية (5/ 356)


فتاوی شامی (3 / 176)


الدرالمختار مع الشامية، کتاب الحظر والإباحة، باب الاستبراء وغیره، ، کراچی ( ۶/ ۴۲۹)


ابن الهمام، فتح القدير، 3: 274


(ہدایہ: ۲/۳۱۱، کتاب النکاح، ط: اشرفی دیوبند)


نہایۃ المحتاج" (8/443)


حاشیہ قليوبی "(4/160) 


مرداوی رحمہ اللہ "الإنصاف" (1/386)


"الشرح الكبیر" (2/266)


"الفتاوى الجامعہ" (3/1055)


(غایۃ الا وطار ۴/۲۴۹، باب الا ستبراء)



مذاهب الفقهاء في الصلاة على السقط



abortion ஆகி இறந்து விட்ட குறை மாதக் குழந்தைக்கு ஜனாஸா தொழுகை நடத்தும் விஷயத்தில் இமாம்களின் பார்வையானது மூன்று வகைப்படும்



قال الامام احمد يصلي علي السقط اذا كان له اربعة اشهر وعشر في البطن ونفخ فيه الروح وان لم يستهل 



*ஒன்று ஹம்பலி மத்ஹபின் ஆய்வாகும்*



அதாவது வயிற்றில் நான்கு மாதம் பத்து நாட்கள் உள்ளேயிருந்து அதற்கு உயிர் கொடுக்கப்பட்டு விட்டால் அது தானாக பிறக்கா விட்டாலும், அசையாவிட்டாலும்  அந்த குறைமாத குழந்தைக்கு தொழுகை நடத்தப் படவேண்டும்




பார்க்க 👇



المرقات( 4/56)



واستدل بقوله صلى الله عليه وسلم : 


( والسقط يصلى عليه ، ويدعى لوالديه بالمغفرة والرحمة )  


குறை மாதக் குழந்தைக்கு தொழுகை நடத்தப் படவேண்டும் என்றும் அது தனது பெற்றோர்களுக்காக பாவமன்னிப்பையும் கிருபையையும் வேண்டி நிற்கும் என்றும் நபியவர்கள் கூறியிருக்கிறார்கள்



ஆதாரம் 👇

رواه أبو داوود صححه الألباني في صحيح الجامع/3525)

ولحديث المغيرة بن شعبة قال قال النبي صلى الله عليه وسلم 

السقط يصلي عليه 

رواه ابوداؤد 

والطفل يصلي عليه 

رواه الترمذي 

قال الامام مالك لا يصلي علي الطفل الا ان يختلج ويتحرك بعد الولادة 

*இரண்டாவது மாலிக்கீ மத்ஹபின் ஆய்வாகும்*

பொதுவாக குழந்தை வெளியே பிறந்து அதற்குள் அசைவு  ஏற்பட்டு விட்டால் 

அவ்வகையான குழந்தைக்கு தொழுகை நடத்தப் படவேண்டும்

பார்க்க 👇

العيني (4/196) 

قال الامام ابو حنيفة والشافعي لا يصلي علي الطفل حتي يستهل 


 *மூன்றாவது ஹனஃபீ மற்றும் ஷாஃபியீ  மத்ஹபின் ஆய்வாகும்*

والاستهلال ما يدل علي الحياة من حركة عضو او رفع صوت


 குறைமாதக் குழந்தை உயிரோடு தான் இருந்தது என்பதற்கான அறிகுறி இருக்க வேண்டும் 


அதாவது உடலசைவின் மூலமோ அல்லது சப்தத்தை வெளியே உயர்த்துவது மூலமாகவோ அறிந்து கொள்ளலாம்

والمعتبر فيه خروج اكثره حيا حتي لو خرج اكثره وهو يتحرك صلي  عليه ، وفي الاقل لا 

அதாவது குறை மாத குழந்தைக்கு உறுப்பில் அதிகமான பகுதியில் தோற்றம் ஏற்பட்டு அதற்குள் அசைவு ஏற்பட்டால் அப்போது தொழுகை நடத்தப்படும் 

இல்லையானால் தொழுகை நடத்தப்படாது

 பார்க்க👇

المرقات (4/56 )

عن جابر قال قال رسول الله صلى الله عليه وسلم الطفل لايصلي عليه ولايرث ولا يورث حتي يستهل 


குறை மாத குழந்தைக்கு உயிர் உள்ளது என்பதற்கான அறிகுறி தென்படாத வரை அதற்கு தொழுகையும் நடத்தப்படாது பாகக்காரனாகவும் ஆகாது  ஆக்கவும் படாது


ஆதாரம் 👇

رواه الترمذي والنسائي وابن ماجه 

وعن جابر اذا استهل الصبي صلي عليه وورث 

உயிரோடு பிறந்ததற்கான அறிகுறி தென்பட்டால் அவ்வகை குழந்தைக்கு தொழுகையும் நடத்தப்படும் வாரிசுரிமையும் தரப்படும்

ஆதாரம் 

رواه النسائي

வியாழன், நவம்பர் 04, 2021

தாடியின் நன்மைகள். அறிவியல் சான்றுகள்,

தாடியின் நன்மைகள். அறிவியல் சான்றுகள்.

-டாக்டர் த முஹம்மது கிஸார்

தாடி பற்றி பிறமத அறிஞர்களின் ஆய்வுகள், கருத்துகள்:-

அமெரிக்காவில் உள்ள சிகாகோ பல்கலைக்கழகத்தின்  சமூக உளவியல் துறையைச்  சேர்ந்த டாக்டர் டேனியல் G பிரீட்மான் (Daniel G. Freeman) என்பவர்  தாடி வளர்ப்பதால் உண்டாகும் இனப்பெருக்க மதிப்பு (reproductive value) பற்றி ஓர்  ஆய்வு மேற்கொண்டார்.

இதை நிரூபிக்க, அவரும் அவரின் மாணவர்களும் ஒரு குறிப்பிட்ட  சில இளங்கலை மாணவர்களிடம், தாடி வைப்பதால் அவர்களுக்கு என்னென்ன உணர்வுகள் ஏற்படுகிறது என்பதைப் பற்றி பிரிண்ட் செய்யப்பட்ட கேள்வி மூலமாகவும் மற்றும் நேர்காணல் மூலமாகவும் ஆய்வு செய்தனர்.

ஆய்வு செய்யும் ஒரு மாணவர், பல மாணவிகளிடம்  "தாடி வைத்த ஆண்களைப்பற்றி என்ன உணருகிறீர்கள்" என்று நேர்காணல் எடுத்தார். அனேகமாக எல்லா மாணவிகளும், தாடியுடன் உள்ள  ஆண்களின் முகம் , முழுவதுமாக சவரம் செய்யப்பட்ட ஆண்களின் முகத்தைக் காட்டிலும் அதிக ஆண்மைத்தனம், முதிர்ச்சித்தன்மை, சுதந்திர உணர்வு கொண்டதாக இருப்பதாக தெரிவித்து இருந்தனர்.

இறுதியாக இந்த ஆய்வு "தாடி, ஒரு பாலியல் காந்த விசையாகவும், ஆண்களை அதிகம் கவர்ச்சியாகவும், பெண்களுக்கு ஓர் ஈர்க்கின்ற விதமாகவும் " இருப்பதாகத் தீர்மானிக்கிறது.(they concluded from their studies that beard increases "sexual magnetism" and attractiveness and makes men more appealing to women.)

(பெண்களின் கூந்தல் பாலியல் உறவுக்கு எந்த வகையிலும் சம்மந்தமில்லாமல் இருந்த போதும் எப்படி ஆண்களை ஈர்ப்பதாக உள்ளதோ அது போல் தாடி பெண்களை ஈர்க்கிறது என்பது இதன் கருத்தாகும்.)

கலிபோர்னியா ஸ்டேட் பல்கலைக்கழகத்தின்  உளவியலாளர் ராபர்ட் J பெல்லிக்ரிணி என்பவர் 1973 ஆம் ஆண்டு உளவியல் பத்திரிகையில் ஒரு ஆராய்ச்சி முடிவை வெளியிட்டார். இந்த ஆய்வுக்காக அவர், 22 வயது முதல் 25 வயது வரையிலான தங்கள் தாடியை முழுவதுமாக சவரம் செய்ய விருப்பமுள்ள எட்டுப் பேரை தேர்ந்து எடுத்தார். அவர்கள் அனைவரும் கீழ்க்கண்ட நான்கு நிலைகளில் புகைப்படம் எடுக்கப்பட்டனர்.

1. முழு தாடியுடன் 

2. குறுந்தாடியுடன் 

3. மீசையுடன்

4. முழுவதும் சவரம் செய்யப்பட்ட முகத்துடன்.

இந்தப் புகைப்படங்கள் எடுத்து முடித்த உடன், மொத்தம் 32 போட்டோக்களில் ஓவ்வொரு படமும் இரண்டு ஆண்கள் இரண்டு பெண்களிடம் கொடுக்கப்பட்டன. இப்படி 64 ஆண்களிடமும் 64 கொடுக்கப்பட்டன. அந்த ஆண்களிடமும், பெண்களிடமும், அந்த  போட்டோவில் உள்ளவர்களின் ஆளுமைப்பண்பு கூறுகள் (personality trait) அடிப்படையில் முதன் முதலில் போட்டோவைப்  பார்த்தவுடன் ஏற்பட்ட உணர்வு, அபிப்பிராயத்தை, (first  impression) மதிப்பிடுமாறு கூறப்பட்டது.

அந்த ஆய்வின் முடிவு இப்படி தீர்மானிக்கிறது." அந்த ஆண்களின் ஆண்மைத் தன்மை, நல்ல தோற்றம், ஆதிக்க உணர்வு, முதிர்ந்த தன்மை, தைரிய தோற்றம், தாராளவாத இயல்பு, ஆரோக்கியத் தன்மை, கவர்ச்சித்  தோற்றம் ஆகிய பண்புகளும் அவர்களின் முகத்தில் உள்ள முடிகளின் எண்ணிக்கையுடன் நேரடி தொடர்பு உள்ளதாக நிருபித்துள்ளது"

(The result of this study by Pelligrini indicated a generally positive correlation between the amount of hair on the person's face and his being perceived as masculine, good looking, dominant, mature, courageous, liberal, non-confirming, older healthy and attractive.)

அமெரிக்க மருத்துவர் Dr சார்லஸ் ஹோமேஸ் (charles holmes)  என்பவர் இப்படிக் கூறுகிறார்,:

"மக்கள் தாடி வளர்க்க ஏன் கஷ்டப்படுகிறார்கள் என்று தெரியவில்லை? தலையில் முடி வளர்க்கும் போது, அதே முடியை முகத்தில் வளர்ப்பதில் என்ன பிரச்சினை உள்ளது என்று தெரிய வில்லை? என்கிறார்.

தலையின் முடி கொட்டிவிட்டால், மிக கஷ்டப்பட்டு வெட்கப்படும் அதே மக்கள், சந்தோசமாக தாடியை ஏன் சவரம் செய்கிறார்கள் என்பது ஆச்சிரியமாக உள்ளது.

நீண்ட தாடி  ஒரு மனிதனின் தடுமல்  சளி கழுத்தை நெருங்குவதை விட்டும்  தடுக்கிறது

 தாடி மார்க்க கட்டளை மட்டுமின்றி, மனிதனுக்கு பயன் அளிக்கக்கூடியதும் ஆகும். முந்தைய அறிவு ஜீவிகள், மருத்துவர்கள் எல்லோரும் தாடி வளர்ப்பவர்களாக இருந்தார்கள். உதாரணம் லூயிஸ் பாஸ்டர், ஆபிரகாம் லின்கன்  உட்பட பலர்.

மேற்சொன்ன முன் நிகழ்வுகள், ஆய்வுகள், அறிக்கைகள் எதுவும் முஸ்லிம்களால் சொல்லப்பட்டதோ அல்லது செய்யப்பட்டதோ அல்ல.

 ஒரு முஸ்லிம் இளைஞன் தாடிவுடன் ஒரு கிறிஸ்தவ நிருவனத்திற்கு  ஒரு நேர்காணலுக்குச் சென்றான். அவன் தாடியை  மழித்தால் வேலை தருவதாக அந்த நிறுவனம் கூறியது. அவன் அதை மறுத்து விட்டு வெளியில் வந்து, அங்கு இருந்த jesus கிறிஸ்து போட்டோவை எடுத்துச் சென்று "இந்த jesus நேர்காணலுக்கு வந்து இருந்தால், அவரிடம் இதே நிபந்தைனையைச் சொல்வீர்களா?" என்று கேட்டு, அவர்களை வாயடைக்க செய்தான். ஒவ்வொரு முஸ்லிமின் மனப்பாங்கும் இப்படித் தான் இருக்க வேண்டும்.

மூட நம்பிக்கை -மருத்துவ உண்மை

"தாடியில் வளரும் பக்டீரியா போன்ற நுண்கிருமிகள் சுகாதாரத்தைக் கெடுக்கும்" என்று சிலர் நம்புகிறார்கள். ஆனால் இது மூட  நம்பிக்கை.

உண்மை என்னவென்றால் "தாடியை மழிப்பதால், முகத்தில் உள்ள இயற்கையான செல்கள் நீக்கப்படுவதால், முகப் புற்றுநோய் வரலாம்" என்று அஞ்சப்படுகிறது.

ஒரு  நாளைக்கு குறைந்தது ஐந்து முறை ஒழு செய்யும் போது முகத்தைக் கழுவினால், எங்கிருந்து நுண்கிருமிகள் வரும்? என்பதே அறிவியல் பூர்வமான கேள்வி.

நேர விரயம்

 போஸ்டன் பல்கலைக்கழகத்தின் டாக்டர் ஹெர்பெர்ட் மேஷ்கோன் (Herbert Mescon) இப்படி கணக்கிடுகிறார்.." ஒரு இளவயதினர் தனது 15 வயதில் முகச்சவரம் செய்ய ஆரம்பித்து தொடர்ந்து சராசரியாக 55 வயது வரை செய்தால், அவர் சராசரியாக 3350 மணிநேரம்  அதாவது 139 நாட்களை சவரம் செய்வதில் செலவழிக்கிறார்."

தாடியின் நன்மைகளில் சில

தாடி மனிதனின் முகத்தை, தீங்குதரும்  இரசாயணம், காற்றில் உள்ள மாசுக்களிடம் இருந்து பாதுகாக்கிறது. இந்த மாசு, மற்றும் இராசயனத்தால், முகத்தின் செல்கள் பாதிக்கப்பட்டு, சுருங்கி, அசிங்கமான தோளாக நாளைடைவில் ஆகிறது.

இதனால் முகச்சுருக்கம், மோசமான தோல், தோல் வயோதிகம் ஆகியவற்றில் இருந்து தாடி பாதுகாக்கிறது.

தாடி  முகத்தில் உள்ள சரும மெழுகு சுரப்பிகள் என்னும் sebaceous gland ஐ பாதுகாத்து, அதில் நோய் தொற்றி, பருக்கள், சலம், புள்ளிகள் வருவதை விட்டும் தடுக்கிறது.

 தாடி முகத்தைச் சற்று வெதுவெதுப்பக வைத்து, கன்னத்தை ஆபத்தில் இருந்து பாதுகாக்கிறது.

 தாடி தொண்டை மற்றும் பல் ஈறுகளின் நோயில் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது.

 தாடி வைப்பதால் அநேக சுவாச பிரச்சினைகள் தடுக்கப்படுகிறது.

 தாடி ஓரு ஆணின் அடையாளம். தனித்துவம்

ஆய்வுகள் இப்படி கூறுகின்றன :"தடியின் நீளம் மற்றும் அடர்த்திக்கும், அந்த மனிதனின் புதிசாலித்தனதுக்கும் நேரடித் தொடர்பு உள்ளது"

தாடி வைப்பதால், மனிதனின் பொன்னான நேரம் மிச்சப்படுகிறது. (மேற்சொன்ன டாக்டர் ஹெர்பெர்ட் மேஷ்கோன் (Herbert Mescon) கணக்குப்படி.

தாடி வைப்பதால், மனிதனின் செலவு மிச்சப்படுகிறது.( சவர blade , ஷேவிங் gel , after save lotion விலை)

இந்தக் கூற்றுக்கள் எல்லாம், இஸ்லாத்தின் சுன்னத்தை நியயபடுத்திட நானோ அல்லது வேறு முஸ்லிமோ கூறியது அல்ல. பெரும்பாலும் கிருஸ்துவ அறிஞர்களாலும், மற்ற மதத்தைச் சார்ந்தவர்கள் நடத்தும் இணைய தளங்களும் கூறுகின்றன.

பிரபல்யமான பதிவுகள்