நம்முடன் இணைந்து இருப்பவர்கள்

ஞாயிறு, மே 30, 2021

பிராமணர்களின் பூர்விகம் எது,

பிராமணர்களின் பூர்விகம் எது, எப்படி இந்தியாவில் அவர்களது வாழ்க்கை முறையைக் கட்டமைத்துக் கொண்டனர்?
இந்த கேள்விக்கு நாம் பதில் சொல்வதை விட பிராமணர்களே சொல்லியுள்ள தரவுகளை பதிவிட்டால்தான் ஒப்புக்கொள்வார்கள்.

ஒரிஜினல் பிராமணரும், பண்டிதரும், சாதி தர்ம ஆதரவாளருமான பாலகங்காதர திலகர் ஆய்வின் படி பிராமணர்களின் பூர்விகம் ஸ்கேண்டிநேவியா, அதை ஒட்டிய வட துருவ பிரதேசமாகும். இதற்கு ஆதாரமாக பிராமணர்களின் தலையாய ரிக் வேதத்திலிருந்தே தரவுகளை கொடுக்கிறார். வேதத்தில் பிராமணர்களின் பூர்வேஈக தேசம் ஆயிரம் ஆறுகள் ஓடும் பனிபடர்ந்த பகுதி எனவும் அங்கே 6 மாதம் பகல் 6 மாதம் இரவாக இருக்கும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. இதை வைத்து பார்க்கும் போது ஸ்காண்டிநேவிய நாடான சுவீடன், பின்லாந்து, நார்வே பகுதியே பிராமணர்களின் பூர்விகம் என நிறுவுகிறார். ஆயிரம் ஏரிகளின் நாடு பின்லாந்து, நள்ளிரவில் சூரியன் தெரியும் நாடு நார்வே என்ற சொற்பதங்கள் இன்றும் உள்ளது.

பிராமணர்களின் மொழியான சமஸ்கிருதம் வட ஐரோப்பிய மொழிகளோடு மிகவும் ஒத்திருக்கிறது. ஒரே இலக்கண அமைதியை கொண்டிருக்கிறது. பல சம்ஸ்கிருத சொற்கள் இன்றளவும் ஜெர்மன், டேனிஷ், ஸ்விடிஷ் ஆங்கிலத்தில் அதே அர்த்தத்தில் பேசப்படுகிறது. எனவே வேதத்தின் அடிப்படையிலும், மொழியின் அடிப்படையிலும் பிராமணர்களின் பூர்வீகம் வட ஐரோப்பியா என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

அடுத்து இந்தியாவில் எப்படி தம் வாழ்க்கையை கடடமைத்து கொண்டனர் என்று பார்க்கலாம். வட துருவம் மிக கடும் குளிர் பிரதேசம், ஆண்டிற்கு 9 மாதங்கள் பனிப்பொழிவு ஏற்படும் ஆதலால் உணவு பஞ்சம் எப்போதும் இருக்கும். ஆண்டின் 3 மாதத்தில் கிடைக்கும் கோதுமை, பார்லி, ஓட்ஸ் போன்ற தானியங்களையும், பழங்களையும் பதப்படுத்தி வைத்து கொண்டு குளிர்காலத்தில் மாமிசம், மீன் மற்றும் முட்டைகளுடன் சேர்த்து உண்டு வந்த பிராமணர்கள், குளிர் காலங்களில் கடுமையான உணவு பற்றாக்குறை மற்றும் பல வித நோய் தொற்றுக்களால் கொத்து கொத்தாக செத்து மடிந்தனர். எப்டியாவது வாழ்ந்தாக வேண்டுமே. கொஞ்சம் கொஞ்சமாக தெற்கு நோக்கி நகர்ந்து மித வெப்பமான மத்திய ஆசிய பகுதிக்கு வந்தவர்களை அங்கிருந்த பூர்வ குடிகளான ஜிப்ஸிகள் அடித்து விரட்ட தெண் கிழக்கு திசையில் நகர்ந்து கி.மு 1500 வாக்கில் சிந்து சமவெளியை (தற்போதைய பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான்) அடைந்தனர். அங்கு ஏற்கனவே நாகரிகமான மக்கள் இனம் ஆரிய பிராமணர்களை போல் நாடோடியாக இல்லாமல் விவசாயம் செய்து நகரங்களை அமைத்து கல் வீடுகளில் வாழ்ந்து வந்தனர். சிந்து சமவெளி நாகரீகம் ஆரியர்களின் வருகைக்கு 1000 ஆண்டுகள் பேசாமையானது. அதாவது இன்றிலிருந்து சுமார் 5000 ஆண்டுகள் பழமைமையானது.

அதுவரை அரிசி பயிரிட்டு வந்த சிந்து சமவெளி மக்களிடம் பிராமணர்கள் முதன்முறையாக கோதுமையை அறிமுகப்படுத்தினார். பாலுக்காகவும், உழவுக்காகவும் மாடுகளை பயன்படுத்தி வந்த திராவிடர்களிடம் வேகமாக ஓடும் ஆனால் பால் தராத, விவசாயப்பணிகளுக்கு பயன்படாத குதிரையை அறிமுகப்படுத்தினர். குதிரை மாடுகளை விட உயர்வானது எனவும் சொல்லினர். இதுவே ஆரியர்கள் தங்களை உயர்வானர்கள் என்று காட்டி கொள்ள எடுத்த முதல் படி. அதை தொடர்ந்து துருப்பிடிக்கும் இரும்பை திராவிடர் பயன் படுத்திய செம்பை விட உறுதியான உலோகம் என நம்பவைத்தனர்.

அதுபோலவே சம்ஸ்கிருத மொழியையைம் முன்னிலை படுத்தினர். உண்மையில் சமஸ்கிருதம் (sanskrit) என்பதன் அர்த்தம் "நன்றாக செய்யப்பட்டது" என்றாகும். san என்ற சொல் "நல்ல, புனித" என்ற பொருளிலும் create என்ற சொல் அதே பொருள் மற்றும் எழுத்து வடிவில் இப்போதும் பிரெஞ்சு, ஸ்பேனிஷ் மொழிகளில் வழங்கப்படுகிறது. ஆக இந்த மொழி மக்களால் பேசப்பட்டு தோன்றியதில்லை. மாறாக ஒரு குழுவினரால் கட்டமைக்கப்பட்ட மொழி. வேண்டுமென்றே சாமானியவர்களுக்கு புரியாத, மிகக்கடினமான இலக்கணத்தை இம்மொழிக்கு உருவாக்கினார். மேலும் கடினமான கூட்டெழுத்துக்களை சேர்த்தும், பிரித்து படிக்கும்போது எதிர்மறையான பொருளைத்தரும் விதமான சொற்களை சேர்த்தும் அமைக்கப்பட்ட மொழிதான் சமஸ்கிருதம். இதை தேவ பாஷை என அறிமுகப்படுத்தினர்.

ஆரியர்கள் சிந்து சமவெளியில் குடியேறியபோது அவர்களுடன் பெண்கள் வரவில்லை. ஆண்கள் மட்டுமே குடியேரினர். அவர்கள் வேண்டுமென்றே பெண்களை விட்டுவிட்டு வந்தார்களா, அல்லது அவர்கள் வரும் வழியில் பெண்கள் நோய் மற்றும் எதிரிகளால் கொல்லப்பட்டனரா என்று தெளிவில்லை. ஆனால் ஆண்கள் மட்டுமே வந்து குடியேறினர் என்ற கருத்தை சங்கராச்சாரியார் குறிப்பிட்டுள்ளார். இங்கு குடியேறிய ஆரிய ஆண்கள் இனப்பெருக்கத்துக்காக பூர்வகுடி திராவிட பெண்களையே சார்ந்திருக்க வேண்டி இருந்தது. ஆனால் திராவிட பெண்களுடன் இனவிருத்தி செய்தாலும் அப்பெண்களை தங்கள் இனத்தவராக ஒப்பு கொள்ளவில்லை. மாறாக அப்பெண்கள் எப்பொழுதும் மீண்டும் திராவிட ஆண்களோடு கலந்து விடுவார்களோ என்ற அச்சம் ஆரிய ஆண்களை சதா குடைந்து கொண்டிருந்தது. அதற்கு காரணம் இல்லாமல் இல்லை. ஆரியர்கள் நாகரீகத்தில் பின் தங்கி இருந்தனர். சிந்து சமவெளியில் ஏற்கனவே ஆண்கள் விவசாயம், நெசவு தொழில், உலோக வார்ப்பு, கட்டிட கலை என பல தொழில்நுட்பங்களை அறிந்திருந்தனர். ஆனால் ஆரிய ஆண்கள் நாடோடிகளாகவும், நாகரீகரிகமற்றவர்களாகவும், பல நோய் தொற்று உள்ளவர்களாகவும் இருந்ததால் தங்களை மணந்த பெண்கள் தங்களை விட்டு போய் விடக்கூடம் என்ற சந்தேகத்திலேயே வாழ்ந்தனர்.

இதன் வெளிப்பாடாக தங்களுக்கு பிறந்த ஆண் குழந்தைகள் பெண் யோனியில் ஜனித்த பாவம் தீர வேண்டும் என்று ஆண்களுக்கு பூணூல் அணிவித்தனர். பெண்களை சொத்து, சடங்குகளில் பங்கேற்கும் உரிமை என எதுவும் இல்லாமல் அடிமைகளாக நடத்தினர். அந்த நடை முறைகளையே வேதங்களிலும் சொல்லி வைத்தனர். ஆக ஆரிய பிராமணர்கள் ஆண் வழி அதாவது தந்தைவழி சமூகமாக உருவெடுத்தது. மாறாக இயற்கை வழிவந்த திராவிட இனம் உயிர் தோன்றலுக்கு காரணமான பெண்ணை தெய்வமாக வழிப்படும் தாய் வழி சமூகமாக இருந்தது.

மேற்சொன்ன நாகரீகம் , தொழில் ஏதும் அறியாத பிராமணர்கள் தங்கள் இருப்பை நிலை நிறுத்தி கொள்ள ஏற்கனவே தொழில் வளர்ச்சி பெற்றிருந்த திராவிட மக்களை தொழில் ரீதியாக பிரித்தனர். பிறகு அந்த பிரிவினையை சாதி என்றும், தொழில் அடிப்படையில் இல்லாது பிறப்பின் அடிப்படையில் ஆனது என்றும் மேலும் கடுமையாக்கி அதற்கு ஆதரவாக வேதத்தில் ஸ்லோகங்களையும் உருவாக்கினார். ஆனால் நால்வகை சாதியை சொல்லும் ஸ்லோகம் பழைய ரிக் வேதத்தில் இல்லை என்றும், பின்னாளில் இடைச்செருகலாக புகுத்தப்பட்டது என்றும் அந்த சொல்லாடல்களின் தன்மையை ஆராய்ந்த பண்டிதர்கள் சொல்கிறார்கள்.

எது எப்படியோ, ஆனால் வேதத்தில் இன்று இந்து கடவுளாக பிராமணர்கள் முன்னிறுத்தும் சிவனோ, விஷ்ணுவோ, விநாயகனோ, முருகனோ எங்கும் குறிப்பிட படவில்லை. மாறாக வேதம் முழுவதும் இந்திரனையே முழுமுதல் கடவுளாகவும் இந்திரனை குஷிப்படுத்த யாக, யக்ஞங்கள் செய்யும் முறைகளுமே விளக்கப்பட்டுள்ளது.

அப்படியானால் சிவனும் விஷ்ணுவும் எப்படி இந்து மதத்தில் புகுத்தப்பட்டனர்??

ஆரியர்கள் குடியேறும் இங்கிருந்த ஒரிஜினல் இந்துக்கள் முன் பெண் தெய்வங்களையும் (காளி, மாரி, கொற்றவை,கெங்கம்மா) , இயற்கையையும் (மலை, வேம்பு ,ஆல் போன்ற மரங்கள்), முன்னோர்களையும் (குல தெய்வம் & சிறு தெய்வ) வழிப்பட்டனர். அந்த சமயத்தில் சமண சமயமும் மேலோங்கி இருந்தது. கடைசி மற்றும் 24வது தீர்த்தங்கரரான மகாவீரர் கிமு 600 களில் வாழ்ந்தவர். அதற்கு 23 தலைமுறைகள் முன்பு (ஒரு தலைமுறைக்கு 25 வருடங்கள் என கொண்டாலும் சுமார் 600 ஆண்டுகள்) தோன்றிய முதல் தீர்த்தங்கரர் ஆதிநாத் என்று வழங்குப்படுகிறார். இந்த முதல் சமண துறவியை அபகரித்து ஆதி சிவன் என்றாக்கி பிராமணர்கள் தங்கள் தெய்வமாக வரித்து கொண்டனர். தவம் இயற்றுதல், தியானம் செய்தல், தன்னுள் மனதுள் கடந்து மனித இனத்தை உய்விக்கும் தேடல் சமண சமய கோட்ப்பாடுகளின் அடிப்படையாகும். தவம், தியானம் செய்யும் முறைகள் எதுவும் பிராமணர்களின் வேதத்தில் குறிப்பிடவில்லை. அதாவது உள்ளுக்குள் தேடும் உண்மையை அறியும் வித்தைகள் வேதத்தில் இல்லை. மாறாக பொருட்களை தீயிலிட்டு இந்திரனுக்கு படைக்கும் யாக முறைகளே உள்ளது. இப்படி ஆதிநாத்தை ஆதி சிவன் ஆக்கியதை நவீன கால ஆதி யோகி சிலையிலும் பார்க்கலாம்.

தற்போது கிருஷ்ணனை இந்து கடவுளாக ஒப்புக்கொண்டு கொண்டாடும் பிராமணர்கள், ஒரு காலத்தில் அதே கிருஷ்ணனை சூத்திரன், பெண் காமந்தகன், கள்வன் என்று தூற்றினார். காரணம் கிருஷ்ணன் திராவிடன். கரிய நிறமுடைய இடையன். பிராமணர்களின் கடவுளான இந்திரனுக்கு பூசை செய்ய விடாமல் தடுத்து இயற்கை வடிவான கோவர்த்தன மலைக்கு பூசை செய்ய சொன்னதால் ஆரம்பத்தில் கிருஷ்ணனை எதிரியாக பார்த்த பிராமணர்கள் பின்னாளில் அவரது பெருமை வளர்ச்சியை அபகரிக்கும் விதமாக கிருஷ்ணனை இந்து கடவுளாக ஏற்று கொண்டனர்.

இது போல காலத்திற்கேற்ப மக்களின் அறியாமையை முதலீடாக்கி பல வகைகளிலும் தன்னிருப்பை பிராமணர்கள் வரலாற்றின் வழி நெடுகிலும் தக்கவைத்து கொண்டனர்.https://ta.quora.com › பிராம...
Web results
பிராமணர்களின் பூர்விகம் எது ...

செவ்வாய், மே 11, 2021

ஃபித்ரா என்றால் என்ன?

ஃபித்ரா என்றால் என்ன?


பனித ரமளான் மாதத்தின் இறுதியில் பெருநாள் பிறை பார்த்ததிலிருந்து பெருநாள் தொழுகை க்கு முன்பு வரை கொடுக்கப்டும் தர்மத்திற்கு ஃபித்ரா என்று கூறப்படும்.


 *2.சதகத்துல் ஃபித்ரின்* *அளவு* (ஒரு நபருக்கு)
 *ஹனபி* : 1 கிலோ 635 கிராம் கோதுமை அல்லது அதன் கிரயம் 90 ருபாய் கொடுக்க வேண்டும் அதிகமாக கொடுத்தாலும் கூடும்


 *ஷாஃபி* :2 கிலோ 400 கிராம் அரிசி அல்லது கோதுமை *( கிரயம்* கொடுக்க கூடாது


 *சதகத்துல் ஃபித்ரு* 
 *நபர் ஒருவருக்கு ....* *90ருபாய்* 

நோன்பு நோற்றவர்,நோற்க்காதவர், சிறியவர்,பெரியவர் ஆண்கள், பெண்கள்,குழந்தைகள்,வயோதிகர்கள் *என*  *அனைவருக்காகவும் ஜகாத் கடமையானவர்கள் கொடுக்க வேண்டும்*

 சதகத்துல் ஃபித்ரு 
தர்மம் கொடுப்பதால் 
ஏழைகள் பெருநாளை மிகிழ்ச்சியோடு கொண்டாட உதவியாக ஆகும்


 சதகத்துல் ஃபித்ரு 
தர்மம் கொடுப்பதால் 
நமது நோன்பில் ஏதேனும் குறைபாடு ஏற்பட்டிருந்தால் அந்த குறைகளை நீக்கி விடும்


 *பெருநாள் பிறை பார்த்தது முதல் பெருநாள் தொழுகைக்கு* *முன்பு வரை* கொடுக்க வேண்டும் .
அவசியத் தேவை ஏற்பட்டால் முன் கூட்டியே கொடுக்கலாம்.

 அனைவரின் ஃபித்ராவையும் ஒருவருக்கே கொடுக்கலாம் அல்லது பலருக்கும் பிரித்தும் கொடுக்கலாம்


 எனவே  உங்கள் தர்மத்தை 
நீங்களோ அல்லது உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களோ ஏழைகளுக்கு உங்கள் கையாலேயே வழங்குங்கள் அவர் இவர் என எவரிடமும் கொடுத்து கொடுக்க சொல்லாதீர்கள்

 *நமது தர்மத்தை நாமே கொடுப்பதே சிறப்பாகும்* *மற்றவர்களிடம் ஒப்படைப்பதை விட* .

 முனாவலத்துல் மிஸ்கீனி துத்ஃபிவு கழபர் ரப்பி 
வதத்ஃபவு மீத்ததஸ் ஸுஇ 
 ஏழைக்கு தன் கையால் தர்மம் செய்வதால் ரப்பின் (அல்லாஹ்) கோபம் அணைகிறது 
கெட்ட மரணத்தை தடுக்கிறது என நபி ஸல் அவர்கள் கூறியுள்ளார்கள்


 உங்கள் தர்மங்களுக்கு அதிக நன்மை வேண்டுமென்றால் உங்கள் உறவினர்களில் உள்ள ஏழைகளுக்கு வழங்குங்கள்


 அடுத்து உங்கள் பக்கத்து வீட்டு ஏழைகள் 
உங்கள் தெருவில் வசிக்கும் ஏழைகள் 
உங்கள் மஹல்லாவில் வசிக்கும் ஏழைகளுக்கு வழங்குங்கள் அதுவே சிறந்த தர்மமாகும்


 இன்று செவ்வாய் இரவு பிறை 29 இந்த வருடத்தின் புனித ரமளான் மாதத்தின் கடைசி ஒற்றைப்படை இரவாகும் 
கடைசி இரவாகவும் இருக்கலாம் எனவே 
அதிகமாக அமல் செய்யுங்கள் 
நல் வாய்ப்பை தவற விட்டு விடாதீர்கள்

 யாஅல்லாஹ்!
கிருபையாளனே!!
புனித ரமளானை தந்து நல்லமல் செய்திட அருள் புரிந்தவனே !!! உனக்கே எல்லா புகழும் நன்றியும் உரித்தாகட்டுடமாக 
இந்த ரமளானை எங்களுக்கு கடைசி ரமளானாக ஆக்கி விடாதே அல்லாஹ்வே!
இன்னும் அதிகமான ரமளானை அடைந்து இதை விட அதிக அமல் செய்திட அருள் புரிவாயாக ஆமீன்

 யாஅல்லாஹ்!
கிருபையாளனே!!
புனித ரமளானை தந்து நல்லமல் செய்திட அருள் புரிந்தவனே !!! உனக்கே எல்லா புகழும் நன்றியும் உரித்தாகட்டுமாக 
இந்த ரமளானை எங்களுக்கு கடைசி ரமளானாக ஆக்கி விடாதே அல்லாஹ்வே!
இன்னும் அதிகமான ரமளானை அடைந்து இதை விட அதிக அமல் செய்திட அருள் புரிவாயாக ஆமீன்

 அல்லாஹ்வே !
அன்பாளனே !!
கருனையாளனே !!
இந்த புனித ரமளான் மாதத்தில் 
இந்த மாதத்திற்கோ...
நோன்பிற்கோ...
நோன்பாளிகளுக்கோ...ஏதேனும் கண்ணிய குறைவாக நடந்திருந்தால் எங்களை மன்னித்தருள்வாக

 இப்புனித ரமளானில் 
யாஅல்லாஹ்! நீ யாருக்கெல்லாம் உனது ரஹ்மத் என்னும் அருளை வழங்கினாயோ மஃபிரத் என்னும் மன்னிப்பை வழங்கினாயோ
நரகிலிருந்து யாரையெல்லாம் விடுதலை செய்தாயோ  அவர்களில் எங்களையும் சேர்த்துக்கொள்வாயாக ஆமீன்

பெருநாள் தொழுகை (ஹனபி)

பெருநாள் தொழுகை (ஹனபி)


பெருநாள் தொழுகையின் நேரமாவது சூரியன் நன்கு உதயமானதிலிருந்து (காலை 7 மணியிலிருந்து) நடுப்பகல் உச்ச நேரத்திற்கு சற்று முன் (11 மணி) வரையிலாகும்.

ஈதுல் பித்ரைவிட ஈதுல் அல்ஹாவைச் சீக்கிரம் தொழுது கொள்வது நல்லது


*பெருநாள் தொழுகை நிய்யத்:*

اُصَلِّى صَلٰةَّ عِيْدِ الْفِطْرِ رَكْعَتَيْنِ لِلهِ تَعَالٰى اَللهُ اَكْبَرْ

ஈதுல் பித்ர் பெருநாள் தொழுகை வாஜிபான இரண்டு ரக்அத்தை  இமாமை பின்பற்றி அல்லாஹ்விற்க்காக தொழுகிறேன்.


*தொழுகை முறை:*


முதலில் நிய்யத்து செய்து அல்லாஹ் அக்பர் சொல்லி இமாமுடன் தக்பீர் கட்டிக் கொள்ள வேண்டும். பிறகு ஃதனா ஓத வேண்டும். பிறகு இரண்டு முறை 'அல்லாஹ் அக்பர்' என்று கையை உயர்த்தி கீழே தொங்கவிட்டு விட்டு மூன்றாம் முறை 'அல்லாஹ அக்பர்' சொல்லி ( கையை  வழமைபோல் கட்டி கொள்ள வேண்டும்) வழக்கம் போல் இமாம் அல்ஹம்து ஸூராவும் துணை சூராவும் ஓதி ரூகூவு ஸஜ்தா செய்து முதல் ரக்அத்தை நிறைவு செய்வார்.


இரண்டாவது ரக்அத்தில் இமாம் அல்ஹம்து ஸூராவும் துணை சூராவும்  ஓதி முடித்து ருகூவுக்கு போகும் முன்னர், முன்புபோல் 3 தக்பீர் சொல்வார்கள் மூன்று முறை அல்லாஹ் அக்பர் சொல்லி கையைத் தொங்கவிட்டு விட்டு நாலாவது முறை அல்லாஹ் சொல்லி ருக்கூவுக்கு போய் வழக்கம் போல் தொழுகையை முடிப்பார்கள்

அதன்பிறகு இமாம் குத்பா ஓதுவார். அதை காது தாழ்த்தி கேட்க வேண்டும். பின்பு துஆ திக்ருகள் ஓதப்படும்.



தக்பீர்:

اَللهُ اَكْبَرُ اَللهُ اَكْبَر  لاَ اِلاَهَ اِلَّا اللهُ وَاَللهُ اَكْبَرُ اَللهُ اَكْبَرُ وَلِلهِ الْحَمْد.



 اَللهُ اَكْبَرُ اَللهُ اَكْبَرُ كَبِيْرًا وَالْحَمْدُ لِلهِ كَثِيْرًا وَسُبْحَانَ اللهِ بُكْرَةً وَّاَصِيْلًا لاَ اِلٰهَ اِلَاَّ اللهُ  وَاَللهُ اَكْبَرُ اَللهُ اَكْبَرُ وَلِلهِ الْحَمْد.



 اَللهُ اَكْبَرُ اَللهُ اَكْبَرُ كَبِيْرًا وَالْحَمْدُ لِلهِ كَثِيْرًا وَسُبْحَانَ اللهِ بُكْرَةً وَّاَصِيْلًا لاَ اِلٰهَ اِلَاَّ اللهُ وَلَا نَعْبُدُ اِلَّا اِيَّاهُ مُخْلِصِيْنَ لَهُ الدِّيْنَ وَلَوْ كَرِهَ الْكَافِرُوْنَ لَااِلٰهَ اِلَاّ اللهُ وَحْدَهْ وَصَدَقَ وَعْدَهْ وَنَصَرَ عَبْدَهْ وَاَعَزَّ جُنْدَهُ وَهَزَمَ الْاَحْزَابَ وَحْدَهْ لَا اِلٰهَ اِلَّا الله وَالله اَكْبَرُ اَللهُ اَكْبَرُ وَلِللهِ الْحَمْدُ .



அல்லாஹ் எல்லா விதமான நோய் நொடிகளை விட்டு நம் அனைவரையும் பாதுகாத்து நிம்மதியான வாழ்வையும் வளமான ரிஜ்க்கையும் நிறைவான பரகத்தையும் நமக்கும் நம் குடும்பத்திற்கும் நம் சந்ததிகளுக்கும் தந்தருள் புரிவானாக ஆமீன்

வெள்ளி, மே 07, 2021

சதகத்துல் பித்ரா(பெருநாள் தர்மம்),

பித்ரா(பெருநாள் தர்மம்)...

நம்மிடையே ஏழைகள், செல்வந்தர்கள், நடுத்தர வர்க்கத்தினர் எனும் ஏற்றத்தாழ்வு வாழ்க்கை அமைப்பில் இருந்தாலும், இஸ்லாம் இந்த வேறுபாடான மக்களை ஒன்று சேர்க்கும் விதமாக சில வணக்கங்களை விஷேசமான முறையில் ஏற்படுத்தித் தந்துள்ளது. அதில் பித்ரா(பெருநாள் தர்மம்)...ஒன்றுதான்'ஸதக்க‌துல் ஃபித்ர்' அல்லது 'ஜகாத்துல் ஃபித்ர்' என்று சொல்லப்படும் தர்மமாகும். இஸ்லாம் கூறும் இந்த ஃபித்ரா தர்மத்தின் முக்கியத்துவத்தையும் அதன் சட்டங்களையும் இப்போது பார்ப்போம்.

யார் யாரெல்லாம் நோன்புப் பெருநாள் தர்மம் கொடுக்கவேண்டும்?

பொருளாதாரக் கடமையான 'ஜகாத்' எவ்வாறு பொருள் வளத்தைத் தூய்மைப்படுத்தி இஸ்லாமிய சமூகத்தின் பொருளாதாரத் தேவையில் ஒரு குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்கின்றதோ, அதேபான்று இந்த 'ஜகாத்துல் ஃபித்ரு'ம் ஏழைகளின் சந்தோஷத்தில் பெரும் பங்காற்றுகிறது. பொருள்கள் மீதான கட்டாயக் கடமையான 'ஜகாத்' குறிப்பிட்ட செல்வ வளமுள்ள‌ முஸ்லிம்களில் யார் அதற்குரிய 'நிஸாப்' எனும் எல்லை அளவையை எட்டுகின்றனரோ அவர்கள் மீது மட்டுமே கடமையாகின்றது. ஆனால் இந்த ஜகாத்துல் ஃபித்ர் அவ்வாறல்ல! நோன்பாளிகள், நோன்பு நோற்க இயலாமல் இருந்தவர்கள், வசதியில் குறைந்தவர்கள் யாராக இருந்தாலும், தன் குடும்ப உறுப்பினர்கள் அத்தனை பேர் சார்பாகவும் கட்டாயம் கொடுக்க‌ப்பட வேண்டிய ஒன்றாகிவிடுகின்றது. எனவே த‌ன் குடும்பத்தின் பெருநாள் செலவு போக இதைக் கொடுக்கச் சக்தியுள்ள அனைத்து முஸ்லிம்களும் இந்த தர்மத்தை கொடுக்க வேண்டும். பெரும் செல்வந்தர்கள் தான் கொடுக்க வேண்டும் என்பது இதில் கிடையாது.

-:பெருநாள் தர்மம் கொடுப்பதின் நோக்கம்:-

ரமலானைத் தொடர்ந்து வரும் ஈகைத் திருநாள் எனும் இஸ்லாமிய பண்டிகையின்போது எந்தவொரு முஸ்லிமும் அப்பண்டிகை நாளின் மகிழ்ச்சியிலிருந்து தூரமாகி நிற்கக்கூடாது எனும் பரந்த நோக்கமும் இந்த தர்மத்தின் மூலம் வியாபித்து நிற்கின்றது! இதனால் நோன்பு நோற்றவர்களில் பணக்காரர்கள் ஏழைகளுடனும், ஏழைகள் அவர்களைவிட வறிய‌ ஏழைகளுடனும் நேரடியாக தொடர்புகொண்டு பெருநாளின் சந்தோஷத்தை பகிர்ந்துக்கொள்ள முடிகிறது. இதனால் அவர்களிடையே மகிழ்ச்சியின் தாத்பர்ய அம்சம் சகோதரத்துவ வாஞ்சையுடன் மிளிர்கின்றது.

இந்த நோன்புப் பெருநாள் தர்மத்தைக் கடமையாக்கிய நபிகள் நாயகம்(ஸல்)அவர்கள், ஏழை மக்கள் பெருநாள் பொழுதை மகிழ்வுடன் கழிப்பதற்காகவும், நோன்பு வைத்திருக்கும்போது நோன்பாளி ஏதாவது வீணான காரியங்களில் ஈடுபட்டிருந்தால் அதற்கு பரிகாரமாகவும் இந்த தர்மம் அமைவதாக‌ கூறியுள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் பெருநாள் தர்மத்தைக் கடமையாக்கி,"இன்றைய தினம் ஏழைகளைத் தேவையற்றவர்களாக்குங்கள்"என்றும் கூறினார்கள்.
         அறிவிப்பாளர்:இப்னு உமர்(ரலி); நூல்கள்:பைஹகீ,தாரகுத்னீ

ஸதக்க‌துல் ஃபித்ர் என்பது நோன்பு வைத்திருக்கும்போது நோன்பாளி வீணான காரியங்களில் ஈடுபட்டதற்குப் பரிகாரமாகவும், ஏழைகளின் (அன்றைய உணவுக்கு வழியாக இருப்பதற்காகவும் நபி (ஸல்) அவர்கள் விதியாக்கினார்கள்.
         அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ்(ரலி); நூல்கள்:அபூதாவூத்,இப்னுமாஜா,தாரகுத்னீ,பைஹகீ

பெருநாள் தர்மம்(ஸதக்க‌துல் ஃபித்ர்) எப்போது வழங்க வேண்டும்...?

இந்த தர்மமானது புனித ரமலானின் முடிவில், ஈகைத் திருநாள் தொழுகைக்கு முன்பே வழங்கப்படுவதாகும். ஒவ்வொரு முஸ்லிமான ஆண்-பெண்கள், அன்று பிறந்த குழந்தை முதல் முதியவர் வரை அனைவரின் சார்பாகவும் வழங்கப்படவேண்டும்.

ஃபித்ர் ஜகாத்தை பெருநாள் தொழுகைக்கு மக்கள் புறப்படும் முன்பே வழங்கிவிடவேண்டுமென நபி(ஸல்)அவர்கள் கட்டளையிட்டார்கள்.
         அறிவிப்பாளர்:இப்னு உமர்(ரலி); நூல்கள்:புகாரி,முஸ்லிம், அஹ்மத், நஸயீ, திர்மிதீ

நபித்தோழர்கள் பெருநாளைக்கு ஒருநாள் முன்பாக அல்லது இரண்டு நாட்களுக்கு முன்பாக பெருநாள் தர்மத்தை வழங்குபவர்களாக இருந்தனர்.
         அறிவிப்பாளர்: இப்னு உமர் (ரலி); நூல்:புகாரி

எனவே பெருநாள் தர்மத்தினைப் பெறக்கூடிய மக்கள் பெருநாளைக்கான‌ உணவுகளை தயார்படுத்திக்கொள்ள‌ வசதியாக ஒருநாள் அல்லது இரண்டு நாட்கள் முன்னதாக கொடுத்துவிடவேண்டும்.

-:பெருநாள் தர்மத்தின் அளவு:-

முஸ்லிமான ஆண்கள் பெண்கள், பெரியவர் சிறியவர், அடிமை, சுதந்திரமானவர் ஆகிய அனைவருக்கும் பேரீத்தம்பழம் அல்லது கோதுமை ஆகியவற்றிலிருந்து பெருநாள் தர்மம் தலா ஒரு 'ஸாவு' என்று நபி (ஸல்) அவர்கள் நிர்ணயம் செய்தனர்.
         அறிவிப்பாளர்: இப்னு உமர்(ரலி); நூல்கள்:புகாரி,முஸ்லிம்,அஹ்மத்,நஸயீ,அபூதாவுத்,திர்மிதீ,இப்னுமாஜா

நபி (ஸல்) அவர்களின் காலத்தில் நாங்கள் உணவுப் பொருட்களில் ஒரு 'ஸாவு' ஃபித்ர் தர்மம் வழங்குவோம். அன்றையதினம் எங்களின் உணவாக கோதுமையும் உலர்ந்த திராட்சையும் இருந்தது.
         அறிவிப்பாளர்: அபூஸயீத்(ரலி); நூல்:புகாரி

குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு நபருக்காகவும் ஒரு "ஸாவு" அளவுக்கு கொடுக்கவேண்டும் என்று இந்த ஹதீஸ்க‌ள் கூறுகின்றன.

(குறிப்பு:- இரு கை கொள்ளளவின் நான்கு மடங்கே ஒரு "ஸாவு" என்பதாகும். அதாவது இருகைகளையும் ஒன்று சேர்த்து ஒரு பொருளிலிருந்து நான்கு முறை அள்ளி அளந்து போடுவதே ஒரு 'ஸாவு' என்பதன் அளவாகும். கிராம் கணக்கில் சொல்வதாக இருந்தால் சுமார் இரண்டரைக் கிலோ கொண்ட ஒரு அளவாகும்.)

ஒருவர் தமது பராமரிப்பில் உள்ள அனைவருக்காகவும் இந்தத் தர்மத்தை வழங்குவது அவசியம் ஆகும். உதாரணமாக, நமது பராமரிப்பில் 3 நபர்கள் இருந்தால் தன்னையும் சேர்த்து தலைக்கு இரண்டரைக் கிலோ அரிசி வீதம் (4 x 2.5 கிலோ) 10 கிலோ அரிசியை வழங்க வேண்டும். இதுவே ஃபித்ரா தர்மத்தின் அளவாகும்.

எதைக் கொடுக்கலாம்......? 
பித்ரா(பெருநாள் தர்மம்)...



நபிகள் நாயகம்(ஸல்)அவர்கள் காலத்தில் பெருநாளின் ஃபித்ரா தர்மமாக உணவுப் பொருள்கள்தான் திரட்டி விநியோகிக்கப்பட்டது. அவர்கள் காலத்தில் தங்கக் காசுகள், வெள்ளிக் காசுகள் புழக்கத்தில் இருந்தாலும் நோன்புப் பெருநாள் தர்மமாக காசுகள் கொடுக்கப்பட்டதில்லை. உணவுப் பொருட்கள் தான் கொடுக்கப்பட்டன. நபித்தோழர்களின் அன்றைய உணவாக இருந்த பேரீத்தம்பழம், தீட்டப்படாத கோதுமை (தோல் நீக்கப்படாதது) ஆகியவற்றைத் தான் கொடுத்து வந்தனர். ஆனால் நபி(ஸல்) காலத்தில் கோதுமை, பேரீத்தம்பழங்கள் பெருநாள் தர்மமாக கொடுக்கப்பட்டதால் நாமும் அதையே கொடுக்க வேண்டும் என்று விளங்கிக் கொள்ளக் கூடாது. இன்றைக்கு நம்முடைய உணவு முறை எதுவாக இருக்கிறதோ அதைதான் தர்மமாக கொடுக்க வேண்டும். ஏழைகளுக்குப் பயன்படும் விதத்தில் எந்த ஒரு உணவுப் பொருளையும் கொடுக்கலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் உணவில் தீட்டப்படாத கோதுமையில் ஒரு "ஸாவு', பேரீச்சம் பழத்தில் ஒரு ஸாவு, பாலாடைக் கட்டியில் ஒரு 'ஸாவு', உலர்ந்த திராட்சை(கிஸ்மிஸ்)யில் ஒரு 'ஸாவு' என்று நாங்கள் நோன்புப் பெருநாள் ஸகாத்தை வழங்கி வந்தோம்.
             அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரி(ரலி); நூல்: புகாரி 1506

நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் ஒரு "ஸாவு' உணவை நோன்புப் பெருநாளில் வழங்கி வந்தோம். எங்களின் அன்றைய உணவு, தீட்டப்படாத கோதுமை, உலர்ந்த திராட்சை, பாலாடைக் கட்டி, பேரீச்சம் பழம் ஆகியவை தான்.
            அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரி (ரலி); நூல்: புகாரி 1510

ஆக, மேற்கண்ட இரண்டு ஹதீஸ்களிலிருந்தும் பொதுவாக உணவுப் பொருட்கள் வழங்குவதுதான் முக்கியம் என்றும் அன்றைக்கு எது உணவாக இருந்ததோ அதைதான் வழங்கினார்கள் என்றும் புரிந்து கொள்ளலாம். எனவே நமது உணவாக எது இருக்கின்றதோ அதை பெருநாள் தர்மமாக கொடுக்க வேண்டும். ஏழைகளுக்கு உணவாக இருப்பதை நபியவர்கள் காரணம் காட்டியுள்ளதால் அந்தந்தப் பகுதிகளில் எது மக்களுக்கு உணவாக அமைந்துள்ளதோ அவற்றைக் கொடுக்கலாம். அப்போது தான் இந்த நோக்கம் நிறைவேறும். நமது உணவுப் பழக்கத்தில் முதன்மையானதாக‌ அரிசி இருப்ப‌தால் அதை ஒரு 'ஸாவு' அளவு கொடுக்கவேண்டும். இதர உணவுப் பொருள்களுக்கும் இது பொருந்தும்.

ஆனால், வெறும் அரிசியைப் பெற்றுக் கொள்பவர்களின் தேவைப் பூர்த்தியாகிவிட்டது என்று நம்மால் சொல்ல முடியாது. ஏனெனில் அரிசி சோறு சாப்பிட வேண்டுமானால் குழம்பு போன்றவை தேவைப்படுகிறது. அப்போதுதான் உணவு என்ற அந்தத் தேவைப் பூர்த்தியாகும். அன்றைய மக்கள் பேரீத்த‌ம் பழத்தை மட்டுமே உணவாக உட்கொண்டார்கள். ஆனால் வெறும் அரிசியை மட்டும் உணவாகச் சாப்பிட முடியாது. அதனால் அரிசியையும், உணவிற்கு தேவையான இதர பொருட்களையும் அதனுடன் சேர்த்து கொடுக்கலாம். அதே சமயம்,

அரிசிக்குப் பதிலாக அதற்கான பணத்தைக் கொடுக்கலாமா? ன்றால்,

தாராளமாக கொடுக்கலாம். அன்றைக்குப் பண்டமாற்று முறை நடைமுறையில் இருந்ததால் உபரியாக உள்ள பேரீத்த‌ம் பழத்தைக் கொடுத்துவிட்டு கோதுமையை வாங்கிக்கொள்ள முடிந்தது. அதுபோல் உபரியாக கிடைக்கும் எந்த பொருளையும் கொடுத்து தேவையான மற்ற எந்த பொருட்களையும் வாங்கிக்கொள்ள முடியும். இன்றைக்கு நம்மிடம் உள்ள அரிசியைக் கொடுத்து விட்டு தேவையானதை எந்தக் கடையிலும் வாங்க முடியாது.

'அன்றைய தினம் ஏழைகளைத் தேவையற்றவர்களாக்குங்கள்' என்பது நபிமொழி. எல்லோரும் அரிசியை தர்மமாக வழங்கும்போது அன்றைய தினம் ஏழைகள் வீட்டில் அரிசிக்குத் தட்டுப்பாடில்லாமலிருக்கும். அன்றைக்கு துணைத் தேவையே அதிகரித்து நிற்கும் என்பதால் பணமாக கொடுப்பது ஹதீஸுக்கு மாற்றமானதல்ல என்பதை நாம் புரிந்துக் கொள்ளலாம். எனவே தேவையான உணவுப் பொருட்களை வாங்கிக் கொள்வதற்குரிய‌ மொத்த‌ பணமாக கொடுக்கலாம். பணமாகக் கொடுத்தால்தான், தன் குடும்பத்திற்கு தேவையான அளவுக்கு தேவையான உணவு பொருட்களை வாங்கிக் கொள்ளவும் மக்களுக்கு வசதியாக இருக்கும். எனவே ஏழைகள் மகிழ்வோடு அந்த நாளைக் கொண்டாட அரிசியைவிடப் பணமே சிறந்ததாகும் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆக, பணமாகக் கொடுத்தாலும் இந்த நோக்கத்தை நிறைவேற்றும் என்பதால் ரூபாயாகக் கொடுப்பதைத் தடுக்க எந்த நியாயமும் இல்லை. அப்படி பணமாகக் கொடுக்கும்போது நாம் எதைப் பிரதான‌ உணவாக உட்கொள்கிறோமோ அந்த அரிசியின் விலையைதான் அளவுகோலாகக் கொண்டு, மேலே சொன்ன அளவில் கொடுக்கவேண்டும். அல்லது அரிசியும் அதனுடன் சேர்த்து தேவையான மற்ற பொருட்களையும் கொடுக்கலாம்.

அப்படி கொடுக்கும்போது அன்றாடம் நாம் எந்த வகையான தரத்தில் உணவைப் பயன்படுத்துகிறோமோ, அந்த தரத்திலிருந்து குறைந்துவிடாமல் தரமானதாக கொடுக்கவேண்டும். சிலர், தான் மட்டும் உயர்தர அரிசியை பயன்படுத்திவிட்டு இதுபோன்ற ஸதகாவுக்காக விலை மலிவான, தரம் குறைந்த அரிசியை வாங்கி விநியோகிப்பார்கள். இது கண்டிப்பாக தவிர்க்கப்படவேண்டியதாகும். 

எனவே பரிவுடன் ஏழைகளுக்கு உதவுவது, குறைந்த பட்சம் அவர்களைப் பெருநாளன்று பிறரிடம் கையேந்திக் கேட்காதிருக்கச் செய்வது போன்ற உன்னத மனிதம் கலந்திருக்கும் இந்த உயரிய நோன்புப் பெருநாள் தர்மத்தின் தத்துவத்தை உணர்ந்து, உரிய நேரத்தில் அலட்சியமின்றி அனைவரும் இந்த பெருநாள் தர்மத்தை ஈந்து, நாம் நோற்ற‌ நோன்பைத் தூய்மைப்படுத்திக் கொள்வோம்! அதன்மூலம் நாம் மகிழ்ச்சியில் திளைத்திருக்கும் இந்த‌ பண்டிகை நாளில், வறண்ட பாலையிலிருந்து ஏழை எளிய மக்களை வெளியேற்றி சோலைவன சுகந்தத்தை ந‌ம்முடன் பகிர்ந்திடச் செய்வோம்!இறைவனின் முழு திருப்பொருத்தத்தையும் நாம் அடைவோம், இன்ஷா அல்லாஹ்!

https://www.islamkalvi.com/?p=3864

செவ்வாய், மே 04, 2021

குர்ஆன்,quran,قران

1) திருக்குர்ஆன் ஓதத் துவங்கும் போது என்ன கூற வேண்டும்?
அஊது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம் என்றும் (16:98) மற்றும் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர்ரஹீம் என்றும் (96:1) கூற வேண்டும்.

2) திருக்குர்ஆன் யாரிடமிருந்து இறங்கியது?
அல்லாஹ்விடமிருந்து இறங்கியது

3) திருக்குர்ஆன் யார் மூலம் இறங்கியது?
ஹழ்ரத் ஜிப்ரயீல் (அலை) மூலம் இறங்கியது.

4) திருக்குர்ஆன் யாருக்கு இறங்கியது?
ஹழ்ரத்முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு இறங்கியது

5) திருக்குர்ஆன் எந்த இடத்தில் இறங்கியது?
ஹிரா என்னும் மலைக் குகையில் இறங்கியது

6) திருக்குர்ஆன் எந்த மொழியில் இறங்கியது?
அரபி மொழியில் இறங்கியது.

7) திருக்குர்ஆனில் முதன்முதலாக இறங்கிய வசனம் எது?
இக்ரஹ் என்னும் வசனம் ஆகும்.

8) திருக்குர்ஆன் எதற்காக வேண்டி இறங்கியது?
மனித, ஜின் வர்க்கத்திற்கு நேர்வழி காட்டுவதற்காகஇறங்கியது.

9) திருக்குர்ஆனின் திருப்பணி என்ன?
நன்மையை ஏவுவதும், தீமையை தடுப்பதும் ஆகும்.

10) திருக்குர்ஆனில் அல்லாஹ் என்ற வார்த்தை எத்தனை இடங்களில் வருகிறது?.
2698 இடங்களில்

11) திருக்குர்ஆனில் 'ரப்பு' என்ற வார்த்தை எத்தனை இடங்களில் வருகிறது?
151 இடங்களில்

12) திருக்குர்ஆனில் 'ரப்புல் ஆலமீன்' என்ற வார்த்தை எத்தனை இடங்களில் வருகிறது?
42 இடங்களில

13) திருக்குர்ஆனில் உள்ள பெரிய சூரா எது?
சூரா அல்பகரா

14) திருக்குர்ஆனில் உள்ள சிறிய சூரா எது?
சூரத்துல் கவ்ஸர்

15) திருக்குர்ஆனில் உள்ள நீண்ட வார்த்தை எது?
ஃபஅஸ்கைனாகுமூஹூ, வல்யஸ்தக்லி ஃபன்னஹூம் 
11எழுத்துக்களை கொண்டவை.

16) திருக்குர்ஆனில் (சூரா ஆரம்பமின்றி) உள்ள சிறிய வசனம் எது?
அல்முத்தஸ்ஸிர் அத்தியாயத்தில் உள்ள'சும்ம நழர' என்றவசனம்

17) திருக்குர்ஆனில் தான, தர்மம் பற்றி எத்தனை இடங்களில் வருகிறது?
150 இடங்களில்

18) சில சூராக்களில் ஆரம்பத்தில் (அலிஃப்,லாம், மீம்) போன்று துவங்கும் எழுத்துகளுக்கு என்ன பெயர் கூறப்படும்?
ஹூருஃபே முகத்த ஆத் என்று கூறப்படும்.

19) ஹூருஃ பே முகத்த ஆத் எழுத்துக்கள் எத்தனை?
14 எழுத்துக்கள்

20) ஜூஸ்வு 2 என்றால் என்ன?
பாகம் என்று பொருள்

21) திருக்குர்ஆனில் எத்தனை பாகங்கள் உள்ளன?
30பாகங்கள் உள்ளன.

22) சூரா என்றால் என்ன?
அத்தியாயம் என்று பெயர்

23) திருக்குர்ஆனில் எத்தனை சூராக்கள் உள்ளன?
114 சூராக்கள் உள்ளன.

24) ஆயத் என்றால் என்ன?
திருக்குர்ஆனின் வசனம் என்று பெயர்

25) திருக்குர்ஆனில் எத்தனை ஆயத்துக்கள் உள்ளன?
ஆயிஷா (ரலி) அவர்களின் கணக்குப்படி6666

26) திருக்குர்ஆன் வசனத்திற்கு மட்டும் ஏன் ஆயத் என்று பெயர் வந்தது?
இறைவேதமாகிய திருக்குர்ஆனின் ஒவ்வொரு வசனமும் அத்தாட்சியாக விளங்குவதால்

27) திருக்குர்ஆனில் உள்ள பெரிய வசனம் எது?
சூறத்துல் பகராவில் உள்ள கடன் பற்றிய282வது வசனம் (யா அய்யுஹல்லதீன ஆமனூஇதா ததாயன்ந்ததும்;....)

28) திருக்குர்ஆனில் ஐன் (ருகூவு) என்றால் என்ன?
தொழுகையில் ஒருரக் அத்தில் ஒதுவதற்கு ஏதுவாக உள்ள ஒரு பகுதி

29) ருகூவு என்று ஏன் பெயர் வந்தது?
பெரும்பாலும் தொழுகையில் அதுவரை ஓதிய பிறகு ருகூவிற்கு குனிவதால்

30) திருக்குர்ஆனில் அரபி எழுத்துக்கள் 29ம் வரும் வசனங்கள் எத்தனை?
சும்ம அன்ஸல்னா மேலும் முஹம்மதுர் ரசூலுல்லாஹ் இரண்டு வசனங்கள் மட்டுமே

31) திருக்குர்ஆனில் புள்ளியிட்ட எழுத்து இல்லாத வசனம் எது?
சூரா இக்லாஸின் 'அல்லாஹூஸ்ஸமது'என்ற வசனமாகும்.

32) திருக்குர்ஆனில் 'சுப்ஹான ரப்பிக ரப்பில் இஸ்ஸத்தி அம்மா யஸி ஃபூன்' என்ற வசனம் எங்கு வருகிறது?
ஸாஃப்பாத் என்ற அத்தியாயத்தின் கடைசியில் வருகிறது.

33) திருக்குர்ஆனில் எத்தனை சூராக்களின் ஆரம்பத்தில் ஹாமீம் என்று வருகிறது?
7 சூராக்களில் வருகிறது

34) திருக்குர்ஆனில் கூறப்படும் இறையச்சத்தை அடிப்படையாகக் 
கொண்டு கட்டப்பட்ட பள்ளிவாசல் எது?
மதினாவிற்கு அருகில் உள்ள மஸ்ஜிதே குபா ஆகும்.

35) திருக்குர்ஆனில் ஆயத்துல் குர்ஸி எந்த ஜூஸ்வில் உள்ளது?
3ம் ஜூஸ் உவின் ஆரம்பத்தில் வருகிறது.

36) திருக்குர்ஆனில் யாஸூன் சூரா ஜூஸ்உவில் ஆரம்பிக்கிறது?
22ம் ஜூஸ்வின்; இறுதியில்

37) திருக்குர்ஆனில் உள்ள மொத்த ஸஜ்தாக்கள் எத்தனை?
14 ஆகும்.

38) திருக்குர்ஆனில் உள்ள நீண்ட அல்லாஹ்வின் அழகிய திருப்பெயர் எது?
துல் ஜலாலி வல் இக்ராம்

39) திருக்குர்ஆனில் உள்ள சூராக்கள் அனைத்திலும் ஒரே எண்ணிக்கையில் ஆயத்துக்கள் உள்ளனவா?
இல்லை

40) திருக்குர்ஆனில் எத்தனை மாதங்களின் பெயர் உள்ளது?
ஒரே ஒரு மாதத்தின் பெயர் தான் உள்ளது

41) திருக்குர்ஆனில் உள்ள ஒரு மாதத்தின் பெயர் என்ன?
ரமலான் மாதம்

42) திருக்குர்ஆனில் உள்ள ஒரே வார்த்தைக் கொண்ட ஆயத்து எது?
முத்ஹாம்மதான்

43) திருக்குர்ஆனில் இஸ்லாமிய அடிப்படைக் கடமைகளில் ஒரு கடமையின் பெயரில் உள்ள சூரா எது?
சூரா அல்ஹஜ்

44) திருக்குர்ஆனில் மதீனாவிற்கு கூறப்பட்ட மற்றொரு பெயர்?
யஸ்ரிப்

45) திருக்குர்ஆனில் 'சூரத்' என்ற வார்த்தை எத்தனை இடங்களில் இடம் பெறுகிறது.?
7 இடங்களில்

46) திருக்
குர்ஆனில் 'குல்' என்ற வார்த்தை எத்தனை இடங்களில் இடம் பெறுகிறது?
232 இடங்களில்

47) திருக்குர்ஆனில் உதாரணம் காட்டப்படும் இரண்டு சிறிய உயிரினம் எது?
1.ஈ (22:73) 2. சிலந்தி (29:41)

48) திருக்குர்ஆனில் முதல் சூரா எது? கடைசி எது?
முதல் சூரா ஃபாத்திஹா கடைசி சூரா நாஸ்

49) திருக்குர்ஆனில் எத்தனை பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் உள்ளன?
114 உள்ளன

50) திருக்குர்ஆனில் 'ஸகர்' என்ற நரகத்தின் காவலாளிகள் எத்தனை பேர் என குர்ஆன் கூறுகிறது?.
19 பேர்

51) திருக்குர்ஆனின் கடைசி 'ஸஜ்தா'எந்த சூராவில் உள்ளது?
சூரத்துல் 'அலக்' என்ற அத்தியாயத்தில் உள்ளது.

52) திருக்குர்ஆனில் 'ஜின்' என்ற வார்த்தை எத்தனை இடங்களில் வந்துள்ளது?
22 இடங்களில்

53) திருக்குர்ஆனில் உள்ள ஜபர் (என்ற அகரம்) எத்தனை?
53,223 இடங்களில் வருகிறது

54) திருக்குர்ஆனில் உள்ள ஜேர் (என்ற இகரம்);எத்தனை?
39,582 இடங்களில் வருகிறது

55) திருக்குர்ஆனில் உள்ள பேஷ் (என்ற உகரம்;) எத்தனை?
8804 இடங்களில் வருகிறது

56) திருக்குர்ஆனில் 'மத்து' என்ற நீட்டல் குறி எத்தனை?
1771 இடங்களில் வருகிறது

57) திருக்குர்ஆனில் 'ஷத்து'என்ற அழுத்தல் எத்தனை?
1274 இடங்களில் வருகிறது

58) திருக்குர்ஆனில் 'நுக்தா' (புள்ளி)க்கள் எத்தனை?
1,05,684 எழுத்துக்கள்

59) திருக்குர்ஆன் கூறும் அழியாமல் பாதுகாக்கப்பட்டு பின்வரும் சமுதாயத்திற்கு அத்தாட்சியாக உள்ள மனித உடல் எது?
ஃபிர்அவ்னின் உடல்

60) திருக்குர்ஆன் கூறும் மூஸா நபியின் எதிரி யார்?
ஃ பிர்அவ்ன்

61) திருக்குர்ஆன் கூறும் இப்ராஹீ நபியின் எதிரி யார்?
ஃநம்ரூத்

62) திருக்குர்ஆன் கூறும் ஈஸா நபியின் எதிரி யார்?
யூத சமுதாயம்

63) திருக்குர்ஆனில் நன்மையை ஏவும் வசனங்கள் எத்தனை?
சுமார் 1000

64) திருக்குர்ஆனில் தீமையை தடுக்கும் வசனங்கள் எத்தனை?
சுமார் 1000

65) திருக்குர்ஆனில் உதாரணம் கூறும் வசனங்கள் எத்தனை?
1000

66) திருக்குர்ஆனில் வாக்குறுதி கூறும் வசனங்கள் எத்தனை?
1000

67) திருக்குர்ஆனில் அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் வசனங்கள் 
எத்தனை?
1000

68) திருக்குர்ஆனில் ஹலால் (ஆகுமாக்கப்பட்டவை) பற்றிய வசனங்கள் எத்தனை?
250

69) திருக்குர் ஆனில் ஹராம் (ஆகாதவை) பற்றிய வசனங்கள் எத்தனை?
250

70) திருக்குர்ஆனில் வரலாறு கூறும் வசனங்கள் எத்தனை?
1000

71) திருக்குர்ஆனில் துஆக்கள் (பிரார்த்தனை) அடங்கிய வசனங்கள் எத்தனை?
1000

72) திருக்குர்ஆனில் மன்சூக் (சட்டம் மாற்றப்பட்டவை) வசனங்கள் எத்தனை?
66

73) திருக்குர்ஆனில் எத்தனை நபிமார்களின் பெயர்கள் கூறப்பட்டுள்ளன?
25 நபி மார்களின் பெயர்கள் கூறப்பட்டுள்ளன.

74) திருக்குர்ஆனில் நபி (ஸல்) அவர்களின் பெயர் எத்தனை இடங்களில் கூறப்பட்டுள்ளது?
4 இடங்களில் முஹம்மது என்றும், ஒரு இடத்தில் அஹ்மது 
என்றும் கூறப்பட்டுள்ளது.

75) நபி ஆதம் (அலை) அவர்களின் பெயர் எத்தனை இடங்களில் கூறப்பட்டுள்ளது?
25 இடங்களில்

76) திருக்குர்ஆனைப் போன்று வாழ்ந்தவர்கள் யார்?
நபி (ஸல்) அவர்கள்

77) திருக்குர்ஆனில் நபி (ஸல்) அவர்களை அல்லாஹ் என்னென்ன பெயர்கள் மூலம் அழைக்கிறான்?
முஹம்மது, அஹ்மது, தாஹா, யாஸீன்,முஸ்ஸம்மில், 
முத்தஸ்ஸிர், அப்துல்லாஹ் ஆகிய 7பெயர்களில்
அழைக்கிறான்.

78) நபி (ஸல்) அவர்களுடைய சிறப்பு பெயர்கள் திருக்குர்ஆனில் எத்தனை கூறப்பட்டுள்ளது?
ஷாஹித், பஷீர், நதீர், தாஈ, ஹாதி,ஸிராஜிம்-முனீர் உட்பட 27 பெயர்கள்

79) திருக்குர்ஆனில் 'யா அய்யுஹன்ன பிய்யு'என்று எத்தனை இடங்களில் வருகிறது?
11 இடங்களில்

80) திருக்குர்ஆனில் நபிமார்களின் பெயர்களைக் கொண்ட சூராக்கள் எத்தனை?
மொத்தம் 6 சூராக்கள்

81) திருக்குர்ஆனுக்கு முந்தைய வேதங்கள் எவை?
1.தவ்ராத், 2.ஸபூர் 3.இன்ஜீல் (ஆதாரம் : அபூதாவூத்)

82) திருக்குர்ஆனில் முதன் முதலில் முழுவதுமாக இறங்கிய சூரா எது?
சூரா ஃபாத்திஹா

83) திருக்குர்ஆன் லவ்ஹூல் மஹ் ஃபூலில் இருந்து எங்கு இறங்கியது?.
முதல் வானத்தில் பைத்துல் இஸ்ஸஹ் என்ற இடத்தில் இறங்கியது

84) திருக்குர்ஆன் முதல் (வஹீ) வசனம் எப்போது அருளப்பட்டது?
கி.பி.610ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்

85) திருக்குர்ஆன் எந்த இரவில் அருளப்பட்டது?
ரமலான் மாதத்தில் புனித லைலத்துல் கத்ர் என்னும் சங்கை மிகு இரவில் (ஆதாரம் 97.01)

86) திருக்குர்ஆனின் கடைசி சூரா எங்கு இறக்கப்பட்டது?
மதீனாவில்

87) திருக்குர்ஆனில் மதீனாவில் இறங்கிய கடைசி சூரா எது?
சூரா நஸ்ரு

88) திருக்குர்ஆனை அல்லாஹ் எப்படி பாதுகாக்கின்றான்?
கல்வியாளர்கள் உள்ளத்தில் பாதுகாக்கின்றான்

89) திருக்குர்ஆன் ஒன்று திரட்டப்பட்ட காரணம் என்ன?
யமாமா என்ற போரில் ஏறத்தாழ 70ஹாஃபிழ்கள் (குர்ஆனை 
மனனம் செய்தவர்கள்) ஷஹீதாக்கப்பட்டு வீரமரணம் 
அடைந்ததால் (ஆதாரம் :புகாரி)

90) திருக்குர்ஆனை ஒன்று திரட்டும் யோசனையை அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்களிடம் தெரிவித்தவர் யார்?
உமர் (ரலி)அவர்கள் (ஆதாரம் :புகாரி)

91) திருக்குர்ஆன் முதன் முதலில் அச்சிடப்பட்டது எப்போது?
ஹிஜ்ரி 1113
வது ஆண்டில்

92) திருக்குர்ஆன் எங்கு முதன் முதலில் அச்சிடப்பட்டது?
ஜெர்மனில் ஹம்பர்க் நகரில்

93) திருக்குர்ஆன் என்ற வார்த்தையின் பொருள் என்ன?
ஓதுதல், ஓதப்பட்டவை, ஓதப்பட வேண்டியது என்பதாகும்.

94) திருக்குர்ஆனில் பிஸ்மில்லாஹ் எழுதப்படாத சூரா எது?
சூரா தவ்பா என்ற பராஅத் சூராவாகும்

95) திருக்குர்ஆன் ஒலி வடிவமாக இறங்கியதா? எழுத்து வடிவில் இறங்கியதா?
ஒலி வடிவில் இறங்கியது

96) திருக்குர்ஆனை ஒன்று சேர்த்தவர் என்ற சிறப்பு பெயருக்குரியவர் யார்? ஹளரத் உஸ்மான் ரலியல்லாஹூ அன்ஹூ

97) திருக்குர்ஆனில் 'ஷத்து' குறியீடுகளை அமைத்தவர் யார்?
கலீல் இப்னு அஹ்மது அஸ்தீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள்

98) திருக்குர்ஆனுக்கு 'ஸபர், ஜேர், பேஷ்'என்னும் உயிர் குறியீடுகளை அமைத்தவர் யார்?
ஹிஜ்ரி 43ல் இராக் ஆளுநராக இருந்த ஹஜ்ஜாஜ் இப்னு யூசுப் என்பவராவார்.

99) திருக்குர்ஆனின் சூராக்களை வரிசைப்படுத்தியது யார்?
நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள்

100) திருக்குர்ஆனின் ஞானம் பெற்ற உலமாக்களை அதிகமாக உருவாக்கும் தமிழக மாவட்டம் எது?
வேலூர் மாவட்டம் 

101) திருக்குர்ஆனின் ஞானம் பெற்றவர்கள் அதிக எண்ணிக்கையில் வாழும் மாவட்டம் எது?
திருநெல்வேலி மாவட்டம்

102) திருக்குர்ஆனை மனைம் செய்தவர்கள் ஹாபிழ்கள் தமிழகத்தில் அதிகஎண்ணிக்கையில் வாழும் ஊர் எது?
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேலப்பாளையம்

103) திருக்குர்ஆன் முதன் முதலில் எந்த மொழியில் தர்ஜூமா செய்யப்பட்டது?
சுர்யானீ மொழியில்

104) திருக்குர்ஆன் இரண்டாவதாக எந்த மொழியில் எப்போது தர்ஜமா செய்யப்பட்டது?
பர்பரீ மொழியில், ஹிஜ்ரி 127ல்

105) திருக்குர்ஆன் மூன்றாவது தடவை எந்த மொழியில், எப்போது தர்ஜூமா செய்யப்பட்டது?
பாரசீக மொழியில், ஹிஜ்ரி 255ல்

106) திருக்குர்ஆனை ஒதுவதால் என்ன நன்மை?
ஒரு எழுத்துக்கு 10 நன்மைகள் உண்டு (ஆதாரம் :திர்மிதீ)

107) திருக்குர்ஆனை ஒதக் கேட்பதால் என்ன நன்மை?
ஒதுவது போன்றே நன்மை கிடைக்கும் (அல்ஹதீஸ்)

108) திருக்குர்ஆனை ஒளுவுடன் ஓதினால் என்ன நன்மை கிடைக்கும்?
ஒரு எழுத்துக்கு 25 நன்மைகள் கிடைக்கும் (ஆதாரம் :இஹ்யா)

109) திருக்குர்ஆனை ஒருவர் உட்கார்ந்து தொழுகும் போது ஓதினால் என்ன நன்மை கிடைக்கும்?
உட்கார்ந்து தொழும் போது ஒரு எழுத்துக்கு50,50 நன்மைகள் கிடைக்கும் (ஆதாரம் :இஹ்யா)

110) திருக்குர்ஆனை நின்று தொழும் போது ஒதினால் என்ன நன்மை கிடைக்கும்?
ஒரு எழுத்துக்கு 100 நன்மைகள் கிடைக்கும் (ஆதாரம்:இஹ்யா)

111) திருக்குர்ஆனை பார்த்து ஒதுவது சிறந்ததா? பார்க்காமல் ஒதுவது சிறந்ததா?
பார்த்து ஒதுவதே சிறந்தது

112) திருக்குர்ஆனை திக்கி ஓதினாலும் நன்மைகள் கிடைக்குமா?
ஆம் : இரு மடங்கு நன்மைகள் கிடைக்கும்
(ஆதாரம் : புகாரி, அபூதாவூது, முஸ்லிம்,திர்மிதி) 

113) திருக்குர்ஆன் மறுமையில் பரிந்துரைக்குமா?
ஆம் அதனை ஒதியவருக்கு கண்டிப்பாக பரிந்துரைக்கும்
(ஆதாரம் : முஸ்லிம்)

114) சூரா ஃ பர்த்திஹா ஓதினால் என்ன நன்மை?
திருக்குர்ஆனில் 3ல் 2 பகுதி ஒதிய நன்மைகள் உண்டு.

115) சூரா யாசீன் ஓதினால் என்ன நன்மை?
10 திருக்குர்ஆன் ஓதிய நன்மைகள் உண்டு (ஆதாரம்: திர்மிதி)

116) சூரா இக்லாஸ் ஓத்னால் என்ன நன்மை?
திருக்குர்ஆனில் 3ல் 1பங்கு ஒதிய நன்மைகள் உண்டு.
(ஆதாரம் :புகாரி , இப்னு கஸீர்)

117) திருக்குர்ஆனில் எந்த சூராவை ஒதினால்4000 வசனங்கள் ஒதிய 
நன்மை கிடைக்கும்?
சூரா தகாசுர்

118) திருக்குர்ஆனில் தலைசிறந்த 'ஆயத்'எது?
ஆயத்துல் குர்ஸீ

119) திருக்குர்ஆனில் 'இதயம்' எந்த அத்தியாயம்?
யாஸீன் என்ற அத்தியாயம்

120) திருக்குர்ஆனில் மொத்தம் எத்தனை எழுத்துக்கள் உள்ளன?
3,21,267 (3 லட்சத்து 21 ஆயிரத்து 267எழுத்துக்கள் உள்ளன.)

பிரபல்யமான பதிவுகள்