*ரமலான்பிறை15*
*திருச்சி தப்லே*
*ஆலம்பாதுஷா*
*தப்லேஆலம்*
*பாதுஷாநாயகம்*
*குருநாதரிடம்*
*கேட்டகேள்வி*
ஹஜ்ரத் தப்லே ஆலம் பாதுஷா
(ரலி) அவர்கள்
குருநாதர் முன்பு
மண்டியிட்டு..
"ஷைக் அவர்களே!
கொதிக்கும் நீரில்
குளித்து வரச்
சொல்கிறீர்களே
ஏன்..?" எனக்
கேட்டார்கள்.
அதற்கு
அஷ்ஷைக்ஹஜ்ரத்
*சையத்அலி*
(ரலி) அவர்கள்
அருமையாக பதில் சொன்னார்கள்:
"இறைநேசர்களின்
இதயங்களில்
இறைக்காதல்என்ற
நெருப்புஎப்போதும்
எரிந்து கொண்டே
இருக்கும்..அந்த
சூட்டைக் கண்டு
நரகம் நடுங்கும்.!"
அகிலத்தின் அருள்
*அண்ணல் நபி*
*ஸல்லல்லாஹூ* அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்:
"ஒரு முஃமீன்
நரகத்தின் அருகில்
சென்றால்...
அவனைப் பார்த்து
முஃமினே! என்
அருகில் வராதே
உனக்குள்இருக்கும்
ஒளி என்னை
அணைத்துவிடும்..!"
என நரகம் கூறும்
என்றார்கள்.
மேலும்
"எவர் உள்ளத்தில்
*இஷ்கேஇலாஹி*
எனும்
*இறைக்காதல்*
தகித்துக் கொண்டு
இருக்கிறதோ...
"கொதிக்கும் சுடு
தண்ணீரென்ன
தீக்குழம்புக்குள்
அவர் நுழைந்தாலும்
அது குளிர்ந்துபோய்
விடும்.!"என்றார்கள்.
*ஹஜ்ரத் தப்லே*
*ஆலம்பாதுஷா*
(ரலி) அவர்கள்
ஷைகிடம் தங்கி
இருந்த சில
காலங்களிலேயே
பல்வேறு ஆன்மீக ஞானங்களைகற்று முடித்தார்கள்..!"
பின்பு
"அஷ்ஷைக்ஹஜ்ரத்
*சையத்அலி(ரலி)* அவர்களின்
அனுமதி பெற்று
900 சீடர்களான கலந்தர்களுடன்
புனித ஹஜ்ஜை
நிறைவேற்ற
சென்றார்கள்.
"புனித மக்காவில்
ஹஜ்ஜூக்
கடமைகளை
நிறைவுசெய்து
மதீனா ஷரீஃபுக்குச்
சென்று ஒருவருடம்
தங்கினார்கள்."
எஜமான்
அவர்களின் சீடர்
அய்யூப் கலந்தர்
(ரஹ்) அவர்கள்
சொல்கிறார்கள்:
"ஒருநாள்
நள்ளிரவு நேரம்
எஜமானும், நானும்
ரவ்ளா ஷரீபில்
ஸலவாத் ஓதி
ஜியாரத் செய்து
கொண்டிருந்தோம்.."
"திடீரென எஜமான்
*ஹஜ்ரத் தப்லே*
*ஆலம்பாதுஷா*
(ரலி) அவர்கள்
மறைந்துவிட்டார்கள்!
சிறிதுநேரத்திற்குப்
பின் என்னருகில்
ஸலவாத் ஓதிக்
கொண்டிருந்தார்கள்!
"எஜமானே!
எங்கே சென்றீர்கள்.?"
எனஆச்சரியத்துடன்
கேட்டேன்.
அதற்கு
எஜமான் அவர்கள்
சொன்னார்கள்:
நான் அலம்நஷ்ரஹ்
சூராவை ஓதிக்
கொண்டிருந்தேன்."
அப்போது
*அண்ணல் நபி*
*ஸல்லல்லாஹூ* அலைஹி வஸல்லம்
அவர்கள் எனக்கு
காட்சியளித்தார்கள்.!
என்னை ஆரத்தழுவி
ரவ்ளா ஷரீஃபுக்குள்
அழைத்துசென்று
அவர்களின் புனித உமிழ்நீரை
எனது வாயில்
உமிழ்ந்தார்கள்.!
"உமது உமிழ்நீர்
எவரது வாயில்
படுகிறதோ..
அவர் இறைநேசர்
ஆகிவிடுவார்.!"
"எவரைப் பார்த்து
வலியுல்லாஹ் என்றுஅழைக்கிறீர்
களோஅவரும்
அல்லாஹ்வின்
'வலி'யாக
ஆகிவிடுவார்.!"
என்றார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக