நம்முடன் இணைந்து இருப்பவர்கள்

திங்கள், நவம்பர் 28, 2022

பணம், பணம், பணம் ,

*பணத்தை* கையில பிடிச்சி, கொஞ்சம் தள்ளி வெச்சி யோசிச்சு பாத்தா...
அடேங்கப்பா இந்த பணத்துக்கு எவ்வளவு *பெயர்கள்...*

கோவில் உண்டியலுக்கு செலுத்தினால் *காணிக்கை*

யாசிப்பவருக்குக் கொடுத்தால் *பிச்சை*

அர்ச்சகருக்குக் கொடுத்தால் *தட்சணை*
 
கல்விக் கூடங்களில் *கட்டணம்*

திருமணத்தில் *ஸ்ரீதனம்*

திருமண விலக்கில் *ஜீவனாம்சம்*

விபத்துகளில் இறந்தால் *நஷ்டஈடு*

இன்சூரன்ஸ்க்காக செலுத்தினால் *காப்பீடு*

வங்கிகளில் வைத்தால் *வைப்புந்தொகை* 

ஏழைகள் கேட்டுக் கொடுத்தால்
*தர்மம்*

நாமாக விரும்பி ஏழைகளுக்குக் கொடுத்தால் *தானம்*

திருமண வீடுகளில் பரிசாக *மொய்*
     
திருப்பித் தர வேண்டும் என யாருக்காவது கொடுத்தால் அது *கடன்*

திருப்பித் தர வேண்டாம் என இலவசமாகக் கொடுத்தால் அது *அன்பளிப்பு*

விரும்பிக் கொடுத்தால் *நன்கொடை*
     
நீதிமன்றத்தில் செலுத்தினால் *அபராதம்*
      
அரசுக்குச் செலுத்தினால் *வரி*

அரசு மற்றும் பிற தர்ம ஸ்பானங்களுக்கு கொடுத்தால் அது *நிதி*
      
செய்த வேலைக்கு மாதந்தோறும் கிடைப்பது *சம்பளம்*

தினமும் கிடைப்பது *கூலி*
    
பணி ஓய்வுப் பெற்றால் கிடைப்பது *ஓய்வூதியம்*

சட்டத்திற்கு விரோதமாக கையூட்டு வாங்குவதும் கொடுப்பதும் *லஞ்சம்*
     
கடன் வாங்கினால் அத்தொகைக்கு
*அசல்*

வாங்கியக் கடனுடன் கொடுக்கும் போது *வட்டி*

தொழில் தொடங்கும் போது *முதலீடு*

தொழிலில் கிடைக்கும் வருமானத்துக்கு *இலாபம்*
     
குருவிற்குக் கொடுக்கும் போது *குருதட்சணை*

ஹோட்டலில் நல்குவது *டிப்ஸ்*

இவ்வாறு பல பெயர்களில் கைமாறும் இந்தப் *பணத்திற்கு* மாற்றாக வேறொன்றும் இப்புவியில் இல்லை...

இந்தப் *பணம்* என்ற காகிதத்தைப் பெற...

*சிலர் அன்பை இழக்கின்றனர்...*

*சிலர் பண்பை இழக்கின்றனர்...*

*சிலர் நட்புகளை இழக்கின்றனர்...*

*சிலர் உறவுகளை இழக்கின்றனர்...*

*சிலர் கற்பை இழக்கின்றனர்...*

*சிலர் கண்ணியத்தை இழக்கின்றனர்...*

சிலர் மனித நேயத்தை இழக்கின்றனர்...*

*சிலர் வாலிபத்தை இழக்கின்றனர்...*

*பலர் வாழ்க்கையையே இழக்கின்றனர்*...

வெள்ளி, நவம்பர் 25, 2022

மரணத்தை பற்றி இஸ்லாம்,

ஒருவருக்கு ஏற்படும் மரணம் என்பது இன்னொருவருக்கோ, ஒரு குடும்பத்திற்கோ, ஒரு சமூகத்திற்கோ, ஒரு சமுதாயத்திற்கோ சொல்கிற செய்தி “வாழ்ந்தால் என்னைப் போல் வாழ்! என்றோ, அல்லது ஒரு போதும் என்னைப் போல் வாழ்ந்து விடாதே! என்றோ இவ்விரண்டில் ஏதாவது ஒன்றாகத்தான் இருக்கும்.

நாளை நம்முடைய மரணமும் உலக சமூகத்திற்கு இவ்விரண்டில் ஏதாவது ஒன்றைத் தான் சொல்லவிருக்கின்றது.

மாநபி {ஸல்} அவர்கள் ”மரணம் என்பது ஓர் மௌன உபதேசியாகும்” என்று கூறினார்கள்.

எப்படியானவர்களையும் மாற்றவல்ல ஆயுதமான உபதேசத்தை மரணத்தோடு மாநபி {ஸல்} அவர்கள் ஒப்பிட்டுக் கூறியதன் அவசியத்தை நாம் சிந்தித்துப் பார்க்க கடமைப் பட்டுள்ளோம்!

ஆயிரமாயிரம் வார்த்தைகள், நூல்கள் உண்டு பண்ணாத தாக்கத்தை சில போது ஒரு சில வார்த்தைகளைக் கொண்ட உபதேசம் மனிதனிடம் ஒரு வித தாக்கத்தை ஏற்படுத்தி விடும்.

அது போன்றே ஒரு மனிதனின் மரணம் அது பற்றி பேசுகிற போதோ, கேள்வி படுகிற போதோ, அதைப் பார்க்கிற போதோ ஒரு நொடியில் மனித வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்திடும், புரட்டிப் போட்டு விடும் ஆற்றல் உண்டு என்பதைத் தான் மாநபி {ஸல்} அவர்களின் அழகிய மொழி நமக்கு உணர்த்துகின்றது.

தமிழகத்தில் ஒரு மௌனம் நிலவிக்கொண்டிருக்கின்றது. அந்த மௌனத்திற்கு பின்னால் ஒரு ஆளுமையின் மரணம் நிகழ்ந்திருக்கின்றது என்பதை நாம் எல்லாம் அறிவோம்.

ஆம்! தமிழகத்தின் முதலமைச்சர் மரணம் அடைந்திருக்கின்றார், குடிமக்கள் ஆட்சியாளர் என்கிற அடிப்படையிலான தொடர்பு நமக்கும், அவருக்கும் இடையே இருக்கின்றது.

உலகிலேயே மிக உயரிய மருத்துவமனையின், மிக உயரிய மருத்துவ உபகரணங்களின் துணை கொண்டு, மிக உயரிய மருத்துவ சிகிச்சைப் பிரிவில், மிக உயரிய மருத்துவர்களின் நேரடி கண்காணிப்பின் கீழ் சுமார் 75 நாட்களாக போராடி இறுதியாக அங்கே மரணம் நிகழ்ந்திருக்கிறது.

கடைசி நிமிடம் வரை மதங்களைக் கடந்து, சமயங்களைத் தாண்டி பிரார்த்தனைகள், சடங்குகள், வழிபாடுகள், நேர்த்திக் கடன்கள், லட்சக் கணக்கில், அல்ல கோடிக்கணக்கில் செலவுகள் செய்தும் உயிரை உடலோடு தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை.

முதலமைச்சரின் மரணம் மாத்திரமல்ல. பொதுவாக, நம்மைச் சுற்றி யார் மரணம் அடைந்தாலும் அங்கிருந்து இறைநம்பிக்கையாளர்களாகிய நாம் பெற வேண்டிய பாடங்களும், அங்கே குவிந்து கிடக்கிற படிப்பினைகளும் ஏராளம், தாராளம்.

வாருங்கள்! மரணம்!! அது தரும் பாடங்களும்… அங்கே குவிந்து கிடக்கிற படிப்பினைகளும் என்னவென்பதை பார்த்து விட்டு நம் மரணமும் நல்லதாக அமைய முயற்சிப்போம்!

பெற வேண்டிய பாடங்கள்….

1. ஆரோக்கியமான வாழ்க்கை வாழ வேண்டும்…

நபி ஸல் அவர்கள் பல்வேறு காலகட்டங்களில் வலியுறுத்திச் சொன்ன ஓர் அம்சம் இருக்குமானால் அது ஆரோக்கியம் எனும் அருட்கொடை குறித்து தான்.

روى الترمذي في سننه من حديث رفاعة بن رافع قال: قام أبوبكر الصديق على المنبر، ثم بكى فقال: قام رسول الله -صلى الله عليه وسلم- عام الأول على المنبر ثم بكى، فقال: "سلوا الله العفو و العافية ، فإن أحدًا لم يعط بعد اليقين خيرًا من العافية".

“நீங்கள் லாஇலாஹ இல்லல்லாஹீ என்று கூறும் வார்த்தைக்குப் பிறகு ஆரோக்கியத்தைத் தவிர வேறு எதனையும் சிறந்த ஒன்றாக உங்களுக்கு வழங்கப்பட வில்லை. எனவே நீங்கள் அல்லாஹ்விடம் ஆரோக்கியத்தை கேளுங்கள் என்று நபி {ஸல்} அவர்கள் கூற நான் கேட்டிருக்கிறேன் என்று அபூபக்கர் சித்தீக் (ர­லி) அவர்கள் கூறினார்கள். ( நூல்: அஹ்மத் )

மக்களுக்கு கட்டளையிட்டது மட்டும் நின்று விடாமல் நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் ஆரோக்கியத்தை கேட்டுள்ளார்கள்.

اللهم إني أسألك العافية من كل بلية ، وأسألك تمام العافية ، وأسألك دوام العافية ، وأسألك الشكر على العافية ،

யாஅல்லாஹ்! உன்னிடம் நான், அனைத்து வகையான சோதனைகளின் போதும் ஆரோக்கியத்தைக் கேட்கிறேன்! நிறைவான ஆரோக்கியத்தைக் கேட்கிறேன்! நீடித்த ஆரோக்கியத்தைக் கேட்கிறேன்! நீ வழங்கிய ஆரோக்கியத்திற்காக உனக்கு நன்றி செலுத்தும் நற்பண்பை உன்னிடம் கேட்கிறேன்!” என்று மாநபி {ஸல்} அவர்கள் ஓதியதாக அபூதர் (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஒர் அறிவிப்பை இமாம் திர்மிதீ (ரஹ்) அவர்கள் தங்களின் நவாதிருல் உஸூலில் பதிவு செய்திருக்கின்றார்கள்.

     اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ زَوَالِ نِعْمَتِكَ، وَتَحَوُّلِ عَافِيَتِكَ، وَفُجَاءَةِ نِقْمَتِكَ، وَجَمِيعِ سَخَطِكَ

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி­) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “யா அல்லாஹ் உன்னுடைய அருள் என்னை விட்டு நீங்குவதில் இருந்தும், நீ எனக்கு கொடுத்த ஆரோக்கியம் என்னிடம் இருந்து விலகுவதை விட்டும், உன்னுடைய தண்டனை திடீரென்று வருவதையும், உன்னுடைய அனைத்து கோபத்தை விட்டும் நான் பாதுகாப்பு தேடுகிறேன் என்று பிரார்த்தனை செய்வார்கள். இது அவர்களின் (வழமையான) பிரார்த்தனைகளில் ஒன்றாகும். ( நூல்: முஸ்லிம் )


நபி {ஸல்} அவர்கள் நோய்வாய்ப்பட்டிருந்த ஒரு நபித்தோழரை நலம் விசாரிக்கச்சென்றார்கள். அவர் நோயினால் மிகவும் சிரமப்பட்டு கொண்டிருந்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள் நீர் இறைவனிடம் ஆரோக்கியத்தை கேட்டு பிரார்த்தனை செய்யக்கூடாதா? என்று கேட்டார்கள். அதற்கவர், ”நபிகளாரின் முன்னிலையில் யா அல்லாஹ்! மறுமையில் என்னை நீ தண்டிப்பதாக இருந்தால் இவ்வுலகத்திலேயே அதற்காக தண்டனையை வழங்கிவிடு!” என்று பிரார்த்தனை செய்தார்.

அப்போது, நபி (ஸல்) அவர்கள் ”அல்லாஹ் உமக்கு இவ்வுலகத்திலேயே தண்டனையை வழங்கிவிட்டால் நீர் தாங்கிக் கொள்ள முடியாது. எனவே, யா அல்லாஹ் இவ்வுலத்திலும் எனக்கு நன்மையை வழங்குவாயாக! மறு உலகத்திலும் எனக்கு நன்மையை வழங்குவாயாக என்று கேட்பீராக!” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( நூல்: திர்மிதி )

ஆரோக்கியத்தோடு இருக்கிற போது தான் ஒர் இறைநம்பிக்கையாளனாக படைத்த ரப்புக்கு செய்யவேண்டிய கடமைகளையும், சக அடியார்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும், தனக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும் முழுமையாக செய்ய முடியும்.

عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمُؤْمِنُ الْقَوِيُّ خَيْرٌ وَأَحَبُّ إِلَى اللَّهِ مِنْ الْمُؤْمِنِ الضَّعِيفِ

மேலும், அளப்பரிய அல்லாஹ்வின் நேசத்தையும் பெற முடியும். ஏனெனில், அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “இறைநம்பிக்கையோடு வாழ்கிற பலகீனமான அடியாரை விட சிறந்தவரும், அல்லாஹ்வின் நேசத்திற்குரியவரும் எவர் என்றால் ஆரோக்கியத்தோடு வாழும் இறைநம்பிக்கையாளரே!” என்று மாநபி {ஸல்} அவர்கள் கூறினார்கள். ( நூல் முஸ்லிம் )

2. நோய்வாய்ப்பட்டால் அதில் பொறுமையும், சகிப்புத்தன்மையும் வேண்டும் …

عمران بن حصين
أسلم عام خيبر، وغزا مع رسول الله صلى الله عليه وسلم غزوات، بعثه عمر بن الخطاب إلى البصرة، ليفقه أهلها وكان من فضلاء الصحابة، واستقضاه عبد الله بن عامر على البصرة، فأقام قاضياً يسيراً، ثم استعفي فأعفاه.
قال محمد بن سيرين: لم نر في البصرة أحداً من أصحاب النبي صلى الله عليه وسلم يفضل على عمران بن حصين.
وكان مجاب الدعوة وكان في مرضه تسلم عليه الملائكة، فاكتوى ففقد التسليم، ثم عادت إليه، وكان به استسقاء فطال به سنين كثيرة، وهو صابر عليه، وشق بطنه، وأخذ منه شحم، وثقب له سرير فبقي عليه ثلاثين سنة، ودخل عليه رجل فقال: يا أبا نجيد، والله إنه ليمنعني من عيادتك ما أرى بك! فقال: يا ابن أخي، فلا تجلس، فوالله إن أحب ذلك إليّ أحبه إلى الله عز وجل.
وحقق ايمان عمران بن حصين أعظم نجاح، حين أصابه مرض موجع لبث معه ثلاثين عاما، ما ضجر منه ولا قال: أفّ..
بل كان مثابرا على عبادته قائما، وقاعدا وراقدا..
وكان اذا هوّن عليه اخوانه وعوّاده أمر علته بكلمات مشجعة، ابتسم لها وقال:
" ان أحبّ الأشياء الى نفسي، أحبها الى الله"..!!
وكانت وصيته لأهله واخوانه حين أدركه الموت:
" اذا رجعتم من دفني، فانحروا وأطعموا"..

இம்ரான் இப்னு ஹஸீன் (ரலி) அவர்கள் நபித்தோழர்களில் நபிகளாரின் தனிப் பெரும் பாசத்திற்குரிய ஒருவர். கைபரின் போது இஸ்லாத்தைத் தழுவினார்கள்.

துஆ ஒப்புக்கொள்ளப்படும் தூய நபர்களில் ஒருவராகவும் விளங்கினார்கள்.
கைபருக்குப் பின் நடந்த அனைத்துப் போர்களிலும் நபி {ஸல்} அவர்களோடு ஆர்வத்தோடு கலந்து கொண்டார்கள்.

      அவர்களுக்கு வயிற்றில் ஒரு கட்டி இருந்தது. அக்கட்டியை அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றினார்கள். முறையான மருத்துவ வசதிகள் இல்லாத காரணத்தால் முடக்கு வாதத்தால் முடங்கிப் போனார்கள்.

      கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் அவர்கள் படுத்தப் படுக்கையாய் ஆனார்கள். என்ற போதிலும் இறைவழிபாட்டில் சிறிதேனும் அவர்கள் விலகிட வில்லை.

      ஒரு நாள் அன்னாரை நலம் விசாரிக்க வந்த ஒருவர், “அபா நுஜைதே! உம்மை நலம் விசாரிக்க ஒவ்வொரு நாளும் வரவேண்டும் என நினைப்பேன். ஆனால், மக்கள் உன் நிலை குறித்து என்னிடம் சொன்ன போது இந்த நிலையில் உம்மைப் பார்க்கும் சக்தி எமக்கு வரவில்லை. இப்போது கூட மனதைக் கல்லாக்கிக் கொண்டு தான் உம்மை நலம் விசாரிக்க வந்தேன்” என்று கூறியவாறு அமர்ந்தார்கள்.

      அப்போது, இம்ரான் பின் ஹஸீன் (ரலி) அவர்கள் “தோழரே! நீர் அமரவேண்டாம்! அல்லாஹ் நான் எப்படி இருக்க வேண்டும் என விரும்புகின்றானோ, அவ்வாறே நானும் இருக்க விரும்புகின்றேன். என்னை இப்படிப் பார்க்க விரும்புகின்றான். நான் அதை மனப்பூர்வமாக பொருந்திக்கொண்டேன்” என்று பதில் கூறினார்கள்.

      فدخل عليه بعض الصحابة فرأوه فبكوا، فنظر إليهم وقال: لم تبكون؟! قالوا: لحالك، وما أنت عليه من هذا الابتلاء؛ فقال عمران بن حصين -رضي الله عنه-: "شيء أحبه الله أحببته، أنتم تبكون، أما أنا فراضٍ، أحب ما أحبه الله، وأرضى بما ارتضاه الله تعالى، وأسعد بما اختاره الله"، ثم قال لهم: "والله أكون على حالي هذا فأحس بتسبيح الملائكة وأحس بزيارة الملائكة، فأعلم هذا الذي بي ليس عقوبة وإنما يختبر رضائي عنه،

       இன்னொரு முறை அவர்களை சந்திக்கச்சென்ற சில ஸஹாபாக்கள் அவர்களின் நிலை கண்டு அழுதபோது, ஏன் அழுகிறீர்கள்? அல்லாஹ் பிரியப்பட்டதை நான் பிரியப்பட்டுவிட்டேன். அவன் திருப்திபட்டதை நான் திருப்திபட்டு விட்டேன். என்று சொன்னதுடன், நீங்கள் என்னை இந்த நிலையை பரிதாபமாகக் காண்கிறீர்கள்.

அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டுக் கூறுகின்றேன்! இதே நிலையில் இருக்கவே நான் விரும்புகின்றேன். ஏனெனில், நான் மலக்குமார்களின் தஸ்பீஹை கேட்கிறேன். அவர்களை சந்திக்கிறேன், அவர்களின் ஸலாமிற்கு பதில் கூறுகின்றேன், நன்றாக விளங்கிக்கொள்ளுங்கள்! அல்லாஹ் எனக்கு வழங்கிய தண்டனையாக இதை நான் கருத வில்லை, மாறாக, அவனிம் முடிவை நான் திருப்தியோடு ஏற்றுக் கொள்கின்றேனா என்பதை சோதிப்பதற்காக எனக்கு இதை வழங்கியதாக நான் கருதுகின்றேன்” என்றும் கூறினார்கள்.

             ( நூல்: ரிஜாலுன் ஹவ்லர் ரஸூல் {ஸல்}...., உஸ்துல் ஃகாபா )

3. இறந்தால் இப்படித்தான் இறக்க வேண்டும் என்று பிறரால் விரும்பப்படுகிற அளவுக்கு நம்முடைய மரணமும் அமைய வேண்டும் ….

وفي ليلة من الليالي نام هو والصحابة، وكانوا في غزوة في سبيل الله، قال ابن مسعود - رضي الله عنه وأرضاه -: قمت آخر الليل فنظرت إلى فراش الرسول - صلى الله عليه وسلم - فلم أجده في فراشه، فوضعت كفي على فراشه فإذا هو بارد، وذهبت إلى فراش أبي بكر فلم أجده على فراشه، فالتفت إلى فراش عمر فما وجدته، قال: وإذا بنور في آخر المخيم، وفي طرف المعسكر، فذهبت إلى ذلك النور ونظرت، فإذا قبر محفور، والرسول - عليه الصلاة والسلام - قد نزل في القبر، وإذا جنازة معروضة، وإذا ميت قد سجي في الأكفان، وأبو بكر وعمر حول الجنازة، والرسول - صلى الله عليه وسلم - يقول لأبي بكر وعمر: « دليا لي صاحبكما».

فلما أنزلاه نزله - صلى الله عليه وسلم - في القبر، ثم دمعت عيناه - صلى الله عليه وسلم - ثم التفت إلى القبلة ورفع يديه وقال: «اللهم إنّي أمسيت عنه راض فأرض عنه، اللهم إنّي أمسيت عنه راض فارض عنه».
قال: قلت من هذا؟

قالوا: هذا أخوك عبد الله ذو البجادين مات في أول الليل.

قال ابن مسعود: فوددت والله أني أنا الميت. 


இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

தபூக் யுத்தத்திற்காக எதிரிகளின் இருப்பிடத்திற்கே நபித்தோழர்களை அண்ணலார் அழைத்துச் சென்றிருந்த தருணம் அது.

முதல் நாள் இரவு திடீரென நான் கண்விழித்தேன். அண்ணலாரின் கூடாரத்தில் அண்ணலாரைப் பார்த்தேன். ஆனால், நபி {ஸல்} அவர்கள் அங்கு இல்லை.

உடனடியாக நபி {ஸல்} அவர்களைத் தேடியவாறு அபூபக்ர் (ரலி) அவர்களின் கூடாரத்திற்கு வந்தேன். அங்கு அண்ணலாரும் இல்லை, அபூபக்ர் (ரலி) அவர்களும் இல்லை.

அங்கிருந்து நேராக உமர் (ரலி) அவர்களின் கூடாரத்திற்குச் சென்று தேடினால், அங்கு உமர் (ரலி) அவர்களும் இல்லை.

மூவரையும் தேடிக் கொண்டிருக்கும் போது படை வீரர்கள் முகாமிட்டிருந்த பகுதியின் எல்லைப் பகுதியிலிருந்து நெருப்பு மூட்டப்பட்டதற்கான அறிகுறிகள் தென்பட்டன.

அதன் அருகே விரைவாகச் சென்று பார்த்தேன். அங்கு அண்ணலார் {ஸல்} அவர்களும், அபூபக்ர்(ரலி) மற்றும் உமர் (ரலி) அவர்களும் நின்று கொண்டிருப்பதைக் கண்டேன்.

அங்கே, கப்ர் ஒன்று தோண்டப்பட்டுக் கொண்டிருந்தது. அதன் அருகே ஒரு ஜனாஸாவும் வைக்கப்பட்டிருந்தது.

அப்போது, நான் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களிடம் இறந்து போன அந்த மனிதர் யார்? என்று வினவினேன்.

அதற்கு அண்ணல் நபி {ஸல்} அவர்கள் உமது தோழர் அப்துல்லாஹ் துல் பஜாதைன் (ரலி) அவர்கள் தான் என்று கூறினார்கள்.

மாநபி {ஸல்} அவர்கள் மண்ணறைக்குள் இறங்கினார்கள். பின்னர் அப்துல்லாஹ் துல் பஜாதைன் அவர்களின் உடலை குழிக்குள் இறக்குமாறு கூறினார்கள்.

பின்னர், மண்ணறைக்குள் நின்றவாறு வானை நோக்கி கையை உயர்த்தி “யாஅல்லாஹ்! இன்று மாலை நேரத்தை அடைகிற போது இந்த அப்துல்லாஹ் துல் பஜாதைன் அவர்கள் வாழ்வை நான் பொருந்திக் கொண்டேன்! உன்னுடைய தூதராகிய நான் பொருந்திக் கொள்கிற நிலையில் அவர் இவ்வுலகில் வாழ்ந்தார்! எனவே யாஅல்லாஹ் நீயும் அவரைப் பொருந்திக் கொள்வாயாக!” என்று இருமுறை துஆ செய்தார்கள். பின்னர் தாங்களே நல்லடக்கமும் செய்தார்கள்.

அப்போது நான் இறந்து போன அப்துல்லாஹ் துல் பஜாதைனாக இருந்திருக்கக் கூடாதா என ஏங்கினேன்.”

                                   ( நூல்: அல் இஸ்தீஆப், உஸ்துல்ஃகாபா )

4. வாழும் போதே புகழோடும், வாழ்ந்து மரணித்த பின்னரும் அப்புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும் அளவுக்கான வாழ்க்கை அமைய வேண்டும் என ஆசை வேண்டும்.

இப்ராஹீம் {அலை} அவர்கள் அல்லாஹ்விடம் பிரார்த்திக்கும் போது….

وَاجْعَلْ لِي لِسَانَ صِدْقٍ فِي الْآخِرِينَ

 “இறைவா! பிற்கால மக்களிடையே எனக்கு உண்மையான புகழை வழங்குவாயக!” என்று பிரார்த்தித்ததை அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.

மேலும், மறுமை நாளில் நடைபெறும் நிகழ்வுகளைக் கூறும் போது….

يُنَبَّأُ الْإِنْسَانُ يَوْمَئِذٍ بِمَا قَدَّمَ وَأَخَّرَ

“அந்த நாளில் மனிதனுக்கு அவன் மரணத்திற்கு முன் செய்த, அவன் மரணத்திற்கு பின் தனக்காக செய்து வைத்து விட்டு வந்த அனைத்துச் செயல்களும் எடுத்துக் காட்டப்படும்”

عَلِمَتْ نَفْسٌ مَا قَدَّمَتْ وَأَخَّرَتْ

“ஒவ்வொரு மனிதனும் தான் முன்பும் பின்பும் செய்த செயல்கள் அனைத்தையும் நன்கு அறிந்து கொள்வான்”.

என்று கூறுகின்றான். மேற்கூறிய இறைவசனங்களுக்கு விரிவுரை தருகிற அறிஞர் பெருமக்கள் ஒரு மனிதன் மரணத்திற்கு பின்னரும் அவனுக்காக நாளை மறுமையில் அவனை ஈடேற்றம் பெறச் செய்கிற நல்லறங்களை மேற்கொண்டு, புகழ்மிக்க வாழ்க்கையை வாழவேண்டும் என்று” விளக்கம் தருகிறார்கள்.

5. மரணத்தை எந்த உயரிய உபகரணத்தின் துணை கொண்டும் வெல்ல முடியாது எனும் நம்பிக்கை ஆளமாகவும், எந்நேரத்திலும் நடக்கும் என்கிற நம்பிக்கையோடும் இருக்க வேண்டும்.

நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் நம்மை மரணம் வந்து அடைந்தே தீரும்.

இது வரை உலகில் எவரும் மரணத்தில் இருந்து தப்பித்து விட்டதாக செய்தி கிடையாது.

كُلُّ نَفْسٍ ذَائِقَةُ الْمَوْتِ

அல்லஹ் கூறுகின்றான்: “ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரும்”. ( அல்குர்ஆன்: 3: 185 )

أَيْنَمَا تَكُونُوا يُدْرِكْكُمُ الْمَوْتُ وَلَوْ كُنْتُمْ فِي بُرُوجٍ مُشَيَّدَةٍ

அல்லாஹ் கூறுகின்றான்: “நீங்கள் எங்கிருந்தாலும் மரணம் உங்களை வந்து அடைந்தே தீரும். நீங்கள் உறுதி மிக்க கோட்டைகளில் இருந்தாலும் சரியே!”

                                                     ( அல்குர்ஆன்: 4: 78 )

قُلْ إِنَّ الْمَوْتَ الَّذِي تَفِرُّونَ مِنْهُ فَإِنَّهُ مُلَاقِيكُمْ ثُمَّ تُرَدُّونَ إِلَى عَالِمِ الْغَيْبِ وَالشَّهَادَةِ فَيُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُونَ (8)

“நபியே அம்மக்களிடம் நீர் கூறுவீராக! நீங்கள் மரணத்தை விட்டும் விரண்டோடிக் கொண்டிருக்கின்றீர்கள். ஆனால், நிச்சயம் அந்த மரணம் உங்களை ஒரு நாள் தழுவியே தீரும்”. ( அல்குர்ஆன்: 62: 8 )

எனவே, நாம் ஒவ்வொருவரும் நிச்சயமாக ஒரு நாள் மரணத்தை தழுவ இருக்கின்றோம். இப்போது நாம் அமர்ந்திருக்கிற இதே பள்ளிவாசலிலோ, அல்லது இது போன்றதொரு பள்ளிவாசலிலோ நம்முடைய உடலை கஃபன் செய்து இறுதி பிரார்த்தனைக்காக எடுத்து வர இருக்கின்றார்கள்.

6. மாற்றுக் கருத்து கொண்டவர்கள், மாற்றுக் கொள்கை கொண்டவர்கள் மரணத்தை தழுவினால் நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?
فلما رأى النبي - صلى الله عليه وسلم
 عكرمة وثب إليه ، وما على النبي - صلى الله عليه وسلم ـ رداء ، فرحا بعكرمة
ثم جلس رسول الله - صلى الله عليه وسلم - فوقف بين يديه ، وزوجته منتقبة ، فقال: يا محمد إن هذه أخبرتني أنك أمنتني ، فقال رسول الله - صلى الله عليه وسلم
صدقت
 فأنت آمن
 فقال عكرمة
 فإلى ما تدعو يا محمد ؟
 قال
 ( أدعوك إلى أن تشهد أن لا إله إلا الله وأني رسول الله ، وأن تقيم الصلاة وتؤتي الزكاة ، وتفعل ، وتفعل ـ ، حتى عَدَّ خصال الإسلام..
فقال عكرمة
 والله ما دعوتَ إلا إلى الحق وأمرٍ حسن جميل ، قد كنتَ والله فينا قبل أن تدعو إلى ما دعوت إليه وأنت أصدقنا حديثا وأبرنا برا ..

ثم قال عكرمة
 فإني أشهد أن لا إله إلا الله ، وأشهد أن محمدا عبده ورسوله .. فسُرَّ بذلك رسول الله - صلى الله عليه وسلم -، ثم قال : يا رسول الله علمني خير شيء أقوله ، قال
 ( تقول أشهد أن لا إله إلا الله وأن محمد عبده ورسوله ) قال عكرمة
 ثم ماذا ؟ ، قال رسول الله - صلى الله عليه وسلم - : ( تقول أُشْهِد الله وأشهد من حضر أني مسلم مهاجر ومجاهد ) ، فقال عكرمة ذلك ..
فقال رسول الله
 ( لا تسألني اليوم شيئا أعطيه أحدا إلا أعطيتكه
 فقال عكرمة
 فإني أسألك أن تستغفر لي كل عداوة عاديتكها ، أو مسير وضعت فيه ، أو مقام لقيتك فيه ، أو كلام قلته في وجهك أو وأنت غائب عنه ، فقال رسول الله - صلى الله عليه وسلم
 اللهم اغفر له كل عداوة عادانيها ، وكل مسير سار فيه إلى موضع يريد بذلك المسير إطفاء نورك ، فاغفر له ما نال مني من عرض في وجهي أو أنا غائب عنه ) ..
فقال عكرمة
رضيت يا رسول الله ، لا أدع نفقة كنت أنفقها في صدٍ عن سبيل الله إلا أنفقتُ ضعفها في سبيل الله ، ولا قتالا كنت أقاتل في صد عن سبيل الله إلا أبليت ضعفه في سبيل الله .. ثم اجتهد في القتال حتى قتِل شهيدا (أي في يوم اليرموك) .. وبعد أن أسلم رد رسول الله - صلى الله عليه وسلم - امرأته له بذلك النكاح الأول .." .

وقد أخرج ابن عساكر عن عمرو
ابن دينار) قال : " .. لما قدم عكرمة بن أبي جهل المدينة ، اجتمع الناس ، فجعلوا يقولون : هذا ابن أبي جهل ، هذا ابن أبي جهل ! ، فقال رسول الله ـ صلى الله عليه وسلم ـ
 لا تؤذوا الأحياء بسبِّ الأموات ) ..
மக்கா வெற்றியின் போது நபி {ஸல்} அவர்களின் வருகையையும்,முஸ்லிம்களின் எழுச்சியையும் கண்டு பயந்துபோய் இக்ரிமா எமனுக்குச் சென்று விட்டார்.

இக்ரிமா வேறு யாருமல்ல. அபூஜஹ்லின் மகன், இவரும் தந்தையைப் போலவே இஸ்லாத்திற்கெதிராக கடும் பகமை கொண்டிருந்தார்.

இவரின் மனைவி உம்மு ஹக்கீம் பின்த் ஹாரிஸ் {ரலி} அவர்கள் எமனுக்குச் சென்று அழைத்து வந்தார்கள். பின்பு மாநபியின் சபைக்கு அழைத்து வந்தார்கள். தூரத்தில் இக்ரிமா வருவதைக் கண்ட பெருமானார் {ஸல்} அவர்கள் “வெகு தூரத்திலிருந்து சிரமத்துடன் பயணித்து வரும் பயணியே, வாருங்கள்! தங்கள் வருகை நல்வரவாகட்டும்!” என்று கூறி தம் அருகே அமர வைத்தார்கள்.

இக்ரிமா கேட்டார் “இப்போது நான் என்ன சொல்ல வேண்டும்.? நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்: “ஷஹாதத் சொல்லுங்கள். உடனடியாக ஷஹாதாவை மொழிந்து இக்ரிமா முஸ்லிமானார்கள். பின்னர் நபி {ஸல்} அவர்கள் ”இக்ரிமா.. உமக்கு என்ன வேண்டும் கேளுங்கள். எது கேட்டாலும் தருகிறேன்.” என்றார்கள்.

இக்ரிமா {ரலி} அவர்கள் சொன்னார்கள்: “அல்லாஹ்வின் தூதரே! ஆரம்பமாக என்னை நீங்கள் மன்னிக்க வேண்டும். உங்கள் மீதான பகைமையால் உங்களை நான் கடுமையாக ஏசியிருக்கிறேன். போர்களில் கலந்து கொண்டு கண்மூடித்தனமாக நான் நடந்து கொண்டிருக்கிறேன். இவை அத்தனைக்காகவும் என்னை மன்னித்து விடுங்கள்.” 

அப்போது நபி {ஸல்} அவர்கள் தம் இரு கைகளையும் வானை நோக்கி உயர்த்தி “யா அல்லாஹ்! இந்த இக்ரிமா எனக்கு எதிராக நடத்திய போருக்காக, என்மேல் கொண்டிருந்த பகைமைக்காக, என்னை ஏசியதற்காக, இவை அத்தனைக்காகவும் இவரை மன்னித்துவிடு” என்று துஆ செய்தார்கள்.          

 இதனைக் கேட்ட இக்ரிமா {ரலி} அவர்கள்: “ அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இந்த மார்க்கத்தை தடுப்பதற்காக எவ்வளவு பொருளாதாரத்தை செலவு செய்தேனோ, அதைவிட பன்மடங்கு இந்த மார்க்கத்தின் உயர்விற்காக நான் செலவு செய்வேன்.

இந்த மார்க்கத்திற்கெதிராக எவ்வளவு போர்களில் நான் கலந்து கொண்டேனோ, அதைவிட பன்மடங்கு இந்த மார்க்கத்தின் உயர்விற்காக இறைவனின் பாதையில் நான் போர் செய்வேன்.” என முக மலர்ச்சியோடு கூறினார்கள்.  

மாநபி {ஸல்} அவர்கள், இக்ரிமா {ரலி} அவர்கள் தம்மை நோக்கி சபைக்குள் நுழைகிற போதே அவரின் நோக்கத்தை அறிந்து கொண்டு “அபூஜஹ்லின் மகன் இக்ரிமா நம்பிக்கை கொண்டவராக உங்கள் முன் வருகிறார். அவரைக் கண்டால் அவரின் தந்தையைக் குறித்து குறை கூறி விமர்சனம் செய்யாதீர்கள். இறந்து போன ஒருவரை ஏசினால் அது உயிருடன் இருப்பவருக்கு மனவேதனையையே தரும்” என்றார்கள்.

                                                                   ( நூல்: இஸ்தீஆப், பாகம்:2, பக்கம்:269,270,271. )

روى مُحَمَّد بن إسحاق عن نافع وزيد بن أسلم، عن ابن عُمر، وعن سعيد بن أبي المقبري، وابن المنكدر عن أبي هريرة، وعن عَمَّار بن ياسر، قالوا: قد قدمت دُرَّة بِنْت أبي لهب المدينة مهاجرةً، فنزلت في دار رافع بن المعلّي الزرقيّ، فقال لها نسوة جلسْنَ إليها من بني زريق: أنتِ ابِنة أبي لهب الذي يقول الله له: " تبّت يدا أبي لهب وتبّ " فما يغني عنكِ مهاجرتكِ؟ فأتت دُرَّة النَّبِيّ صلّى الله عليه وسلّم فذكرت له ما قلن لها فسكّنها وقال: " اجلسي " . ثم صلى بالناس الظهر، وجلس على المنبر ساعةً ثم قال: " أيها الناس، ما لي أُوذى في أهلي؟ فوالله إن شفاعتي لتنال بقرابتي حتى إن صُداءَ وحكماً وسلهماً لتنالها يوم القيامة وسِلْهَمُ في نسب اليمن " .

அண்ணல் நபிகளாரின் அவைக்கு அழுத வண்ணமாக ஓடோடி வருகின்றார் துர்ரா பின்த் அபூலஹப் (ரலி) என்ற பெண்மணி.

மிகவும் ஆர்வத்தோடு இஸ்லாத்தில் தம்மை இணைத்துக் கொண்ட பெண்மணிகளில் அவரும் ஒருவர்.

ஹிஜ்ரத் எனும் புனிதப் பயணத்தின் பதிவேட்டில் இடம் பெற்றவர்களில் அவரும் ஒருவர்.

அந்தப் பெண்மணியின் அழுகையைப் பார்த்து அண்ணலாரின் திரு முகம் கூட மாறிப் போனது.

காரணம் கேட்கின்றார்கள் நபிகளார். அந்தப் பெண்மணி ”அன்ஸாரிப் பெண்மணிகளில் பனீ ஸரீக் குடும்பப் பெண்கள் தன்னை சுடு வார்த்தைகளால் காயப் படுத்தி விட்டதாக” அழுது கொண்டே கூறினார்கள்.

அவர்களின் கரம் பற்றிப் பிடித்து, ஆறுதல் கூறி அமர வைத்தார்கள். அப்போது ளுஹர் தொழுகைக்கான நேரமாக அது இருந்தது.

துர்ரா (ரலி) அவர்கள் வேறு யாருமல்ல. அண்ணலாரின் மிக நெருங்கிய உறவினரான அபூ லஹபின் மகள் தான்.

இப்போது நமக்கு புலப்பட்டிருக்கும் பனூ ஸரீக் பெண்மணிகள் எத்தகைய வார்த்தைகளால் துர்ரா (ரலி) அவர்களைக் காயப் படுத்தியிருப்பார்கள் என்று.

ஆம்! இப்படிச் சொன்னார்களாம்: “உமது தந்தை அபூலஹபின் கேட்டினாலும், உமது தாயின் தகாத செயலினாலும், அண்ணலாரின் மீது கொண்டிருந்த தீராத பகமையினாலும் அல்லாஹ் உமது தாயையும், தந்தையையும் சபித்து ஒரு சூராவையே தனது குர்ஆனில் இடம் பெறச் செய்துள்ளான். நீ ஹிஜ்ரத் செய்து எந்த பலனையும் அடையப் போவதில்லை” என்று.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் ளுஹர் தொழுகைக்குப் பின்னர், மிம்பரின் மீதேறி “மக்களே! என் குடும்பத்தார்களின் விஷயத்தில் இப்படி இப்படியெல்லாம் பேசி என்னையும் என் குடும்பத்தாரையும் நோவினைப் படுத்தாதீர்கள்.” என்று கூறினார்கள்.

பின்னர், துர்ரா (ரலி) அவர்களை தமதருகே அழைத்து “எவர் உம்மை கோபப்படுத்துவாரோ, அவர் மீது அல்லாஹ்வும் கோபப்படுவான். நீ என்னைச் சார்ந்தவள். நான் உன்னைச் சார்ந்தவன்.” என்று கூறினார்கள்.

பின்னர், இது பற்றி அறிந்த அப்பெண்மணிகள் தமது தவறை உணர்ந்து மிகவும் வருந்தினார்கள்.

                        ( நூல்: உஸ்துல் ஃகாபா, தபகாத் இப்னு ஸஅத், அல் இஸ்தீஆப். )

இஸ்லாத்தோடும், நபி {ஸல்} அவர்களோடும் முஸ்லிம்களோடும் கடுமையான முறையில் விரோதத்தை வெளிப்படுத்தியவர்களின் சந்ததிகளின் முன்னால் அவர்கள் மரணித்து நீண்ட காலங்கள் கழிந்த பின்னரும் கூட அவர்களின் வாழ்க்கை முறை குறித்து, விரோத மனப்பான்மை குறித்து விமர்சிக்க வேண்டாம் என்று கூறி மாநபி {ஸல்} அவர்கள் தடுத்திருக்கின்றார்கள்.

இன்னும் ஒரு படி மேலே சென்று அவர்கள் செய்த நல்லறங்களை நினைவு கூறி வாழ்த்தினார்கள் பெருமானார் {ஸல்} அவர்கள்.
سفانة بنت حاتم الطائي
الكريمة بنت الكريم
كان أبوها مضرب الأمثال في الكرم في الجاهلية، فلما ظهر الإسلام وانتشرت الفتوح، غزت خيلُ رسول اللَّه صلى الله عليه وسلم قبيلتها “طَـيِّئ”، وأخذوها بين مَنْ أخذوا من السبايا. وكانت امرأة بليغة عاقلة، مرّ عليها النبي صلى الله عليه وسلم فقالت له: يا رسول اللَّه! امْـنُنْ عَلَي، مَنَّ اللَّه عليك، فقد هلك الوالد، وغاب الوافد (تَنَصَّرَ أخوها وفرّ حتى كان قريبًا من أرض الروم، وكان ذلك قبل أن يُسلم ويَحْسُنَ إسلامه) ولاتُشَمِّتْ بى أحياء العرب، فإنى بنتُ سيد قومي، كان أبى يفك الأسير ويحمى الضعيف، ويَقْرِى (يكرم) الضيف، ويشبع الجائع، ويفرّج عن المكروب، ويطعم الطعام، ويفشى السلام، ولم يرد طالب حاجة قط، أنا بنت حاتم الطائي.
فقال لها رسول اللَّه صلى الله عليه وسلم: “يا جارية، هذه صفة المؤمن، لو كان أبوك مسلمًا لترحمنا عليه”. ثم قال لأصحابه: “خلوا عنها، فإن أباها كان يحب مكارم الأخلاق”. ثم قال لها: “فلا تعجلي حتى تجدي ثقة يبلغك بلادك، ثم آذنيني” [ابن هشام].
فلما قدم ركب من أهلها، أرادت الخروج معهم، وذهبت إلى رسول اللَّه صلى الله عليه وسلم تستأذنه، فأذن لها وكساها من أحسن ما عنده من الثياب، وجعل لها ما تركبه، وأعطاها نفقة تكفيها مؤنة السفر وزيادة.
ஸஃபானா நஜ்த் தேசத்தின் பெரும் கொடையாளர் ஹாதிம் தாயி அவர்களின் மகளார் இப்போது நபிகளாரின் முன்னால் கைதியாக பிடிக்கப்பட்டு நிறுத்தப்பட்டு இருந்தார்.

ஸஃபானாவோடு, அவர்களின் கோத்திரத்தார் சிலரும் கைதிகளாக பிடிக்கப்பட்டு இருந்தனர். ஸஃபானா வின் சகோதரர் அதீ இப்னு ஹாதிம் முஸ்லிம்களின் படை தமது தேசத்திற்குள் நுழைவதை அறிந்ததும், ஸஃபானா வையும், தமது குடும்பத்தாரையும் விட்டு விட்டு ஓடிவிட்டார்.

அண்ணலார், மஸ்ஜிதுன் நபவீயில் தற்காலிகமாக ஏற்படுத்தப்பட்ட ஒரு குடிலைத் தாண்டி தமது இல்லத்திலிருந்து மஸ்ஜிதை நோக்கி சென்று கொண்டிருந்த போது, அல்லாஹ்வின் தூதரே! எனும் ஒரு குரல் அழைத்ததை கேட்கிறார்கள்.குரல் வந்த திசை நோக்கி பார்க்கின்றார்கள் அங்கே ஸஃபானா நின்று கொண்டிருந்தார்கள்.

தொடர்ந்தார் ஸஃபானா தமது பேச்சை, “அல்லாஹ்வின் தூதரே! என் தந்தை இறந்து விட்டார். எங்களின் தலைவரோ எங்களை விட்டு ஓடிவிட்டார். தாங்கள் தான் என்மீது கருணை காட்ட வேண்டும்! என்று கூறி முடித்தார்.

நபிகளார் மௌனமாக சென்று விடுகின்றார்கள். மறு நாளும் அது போன்றே நடக்கிறது. மூன்றாம் நாளும் ஸஃபானா அழைக்க, அருகே வந்த அண்ணலார் ஆதரவாய் பார்க்கின்றார்கள்.

ஸஃபானா, ”அல்லாஹ்வின் தூதரே! இல்லாதோருக்கு உதவிகள் புரிந்தும், கஷ்டத்தில் சிக்கியவர்களை அதிலிருந்து காப்பாற்றியும், பலகீனமானவர்களை தூக்கிப் பிடித்தும், குடும்ப உறவுகளை பலப்படுத்தியும், பிரயாணிகளுக்கு உணவளித்தும், ஏழைப் பெண்களுக்கு திருமணம் செய்து கொடுத்தும் வந்த ஒருவரான ஹாத்திம் தாயின் மகள் தான் நான். நீங்கள் எனக்கு கருணை காட்ட வேண்டும்” என்று வேண்டி நின்றார்கள்.

ஸஃபானாவின் பேச்சை கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்த அண்ணலார் “உண்மையில் நீ உம் தந்தை செய்ததாகச் சொன்ன அனைத்து நற்காரியங்களும், இஸ்லாம் உயர்த்திக் கூறுகின்ற நற்காரியங்களே! அவை அனைத்தும் ஒரு முஃமின் செய்ய வேண்டிய காரியங்களே! உம் தந்தை மாத்திரம் முஸ்லிமாக இருந்திருப்பாரேயானால் இன்னும் பேருபகாரம் வழங்கப்பட்டிருப்பார்! உனக்கு எம் கருணையுண்டு! என்று கூறி விட்டு, தோழர்களை நோக்கி “ தோழர்களே! இவரின் தந்தை நற்குணங்களின் பிறப்பிடமாக இருந்து, நற்குணங்களை அதிகம் நேசித்து வாழ்ந்திருக்கின்றார்! ஆகவே, இவரை விடுதலை செய்து விடுங்கள்” என்று கூறினார்கள்.

சிறிது நேரத்தில், ஸஃபானா அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் வீட்டின் முன் நின்று அண்ணலாரை அழைக்கின்றார்கள்.

வெளியில் வந்த அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களிடம் “குடிமக்களுக்கு ஒரு கஷ்டம் என்றால் என் தந்தை உறங்கவே மாட்டார். அப்படிப் பட்ட நல்ல மனிதர் ஒருவரின் மகளான எனக்கு என்னை மட்டும் நீங்கள் விடுவித்ததில் எனக்கு எப்படி மகிழ்ச்சியாய் இருக்கும்? என் நாட்டு மக்களையும் நீங்கள் விடுதலை செய்ய வேண்டும்” என்று ஸஃபானா கூறினார்.

இது கேட்ட அண்ணலார், சிரித்தவாரே ஸஃபானாவின் கோத்திரத்தார் அனைவரையும் விடுதலை செய்யும்படி உத்தரவிட்டார்கள்.

மேலும், ஸஃபானா விற்கு அணிய ஆடைகளையும், பயணிக்க வாகனமும், வழிச்செலவுக்கு பணமும் வழங்கி அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் கண்ணியப்படுத்தினார்கள்.

                          ( நூல்: தஹ்தீப் ஸீரத் இப்னு ஹிஷாம், பக்கம்:272 )

இப்படியான, இன்னும் பல பாடங்களும், படிப்பினைகளும் நம் கண் முன்னே மரணம் என்கிற நிகழ்வு தந்து கொண்டிருக்கின்றது.

அல்லாஹ் நாம் பெறுகிற பாடங்களைக் கொண்டும், படிப்பினைகளைக் கொண்டும் வாழ்க்கையில் மாற்றத்தைத் தருவானாக! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!

வியாழன், நவம்பர் 24, 2022

நாற்பது நாட்கள் (40) மகத்துவம்,

நாற்பது -  பரிணாமத்தின் குறியீடு

நாற்பது நாட்கள் ,நாற்பது என்பதின் மகத்துவம் பற்றி கட்டுரை இருந்தால் போடுங்க பிளீஸ்' - Shafiyath Qadiriyah  கேட்டுக் கொண்டதற்கிணங்க ,

உங்களில் ஒருவரின் கரு தம் தாயின் வயிற்றில் நாற்பது (40 நாட்கள்) பகல் அல்லது இரவு சேமிக்கப்படுகிறது. 

பிறகு அதைப் போன்றே (40 நாட்கள்) அது (அட்டை போன்று கருப்பையின் சுவரைப் பற்றிப் பிடித்துக் தொங்கும்) ஒரு கருக் கட்டியாக மாறுகிறது. 

பிறகு அதைப் போன்றே (மேலும் 40 நாட்கள் மெல்லப்பட்ட சக்கை போன்று) ஒரு சதைப் பிண்டமாக மாறுகிறது. முஸ்லிம் 5145

அன்றி (தவ்றாத் வேதத்தைக் கொடுக்க) மூஸாவுக்கு நாம் நாற்பது இரவுகளை வாக்களித்திருந்தோம். (குர்ஆன் : 2:51)

(அதற்கு இறைவன், அவ்வாறாயின் ( பனி இஸ்ரவேலர்களுக்கு )அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட) "அந்த இடம் நாற்பது வருடங்கள் வரையில் அவர்களுக்கு நிச்சயமாகத் தடுக்கப்பட்டு விட்டது. (அதுவரையில்) அவர்கள் பூமியில் தட்டழி(ந்து கெட்டலை)வார்கள்.  (குர்ஆன் : 5:26)

மூஸாவுக்கு நாம் முப்பது இரவுகளை வாக்களித்திருந்தோம். பின்னர் அத்துடன் பத்து (இரவுகளைச்) சேர்த்தோம். ஆகவே, அவருடைய இறைவனின் வாக்குறுதி நாற்பது இரவுகளாகப் பூர்த்தியாயிற்று. (குர்ஆன் : 7:142)

மனிதன் தன்னுடைய தாய் தந்தைக்கு நன்றி செலுத்தும்படி நாம் அவனுக்கு நல்லுபதேசம் செய்தோம். இவன் வாலிபமாகி நாற்பது வயதையடைந்தால், "என் இறைவனே! நீ என் மீதும், என் தாய் தந்தை மீதும் புரிந்த அருளுக்காக உனக்கு நான் நன்றி செலுத்தி, உன்னுடைய திருப்தியை அடையக்கூடிய நற்செயல்களைச் செய்யும்படி(யான நல்லறிவை) நீ எனக்குத் தந்தருள்வாயாக! ...(குர்ஆன் : 46:15)

அபூஅப்திர் ரஹ்மான் அல்ஹுபுலீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஏழை முஹாஜிர்கள் மறுமைநாளில் செல்வர்களைவிட நாற்பதாண்டுகளுக்கு முன்பே சொர்க்கத்துக்குச் சென்றுவிடுவார்கள்" என்று கூறியதைக் கேட்டுள்ளேன்" என்றார்கள் 
முஸ்லிம் : 5699. 

காலித் பின் உமைர் அல்அதவீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
எங்களிடம் "சொர்க்கத்தின் நிலைக்கால்களில் இரு நிலைக்கால்களுக்கிடையேயான தொலைவு நாற்பதாண்டு பயணத் தொலைவாகும்" என்றும் சொல்லப்பட்டது. 
ஸஹீஹ் முஸ்லிம் : 5676. 

அபூஸாலிஹ் ஃதக்வான் அஸ்ஸம்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அந்த இரு எக்காளத்திற்கு (ஸூர்) மத்தியில் (இடைப்பட்ட காலம்) நாற்பதாகும்" என்று கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் தெரிவித்தார்கள். ஸஹீஹ் முஸ்லிம் : 5660. 

நவ்வாஸ் பின் சம்ஆன் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு நாள் காலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தஜ்ஜாலைப் பற்றிக் குறிப்பிட்டார்கள். 

நாங்கள், "அல்லாஹ்வின் தூதரே! அவன் பூமியில் எத்தனை நாட்கள் தங்கியிருப்பான்?"  என்று கேட்டோம். அதற்கு, "நாற்பது நாட்கள்" என்று பதிலளித்த நபியவர்கள், "அன்றைய ஒரு நாள் ஓர் ஆண்டைப் போன்றும், மறுநாள் ஒரு மாதத்தைப் போன்றும், அதற்கு அடுத்த நாள் ஒரு வாரத்தைப் போன்றும், மற்ற நாட்கள் உங்களின் (சாதாரண) நாட்களைப் போன்றும் இருக்கும்" என்று குறிப்பிட்டார்கள் முஸ்லிம் : 5629. 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஆதம் (அலை) அவர்களும் மூசா (அலை) அவர்களும் தர்க்கம் செய்துகொண்டார்கள்.  மூசா (அலை) அவர்கள், "ஆதம் அவர்களே! எங்கள் தந்தையான நீங்கள் (உங்கள் பாவத்தின் காரணத்தால்) எங்களை இழப்புக்குள்ளாக்கி விட்டீர்கள்;சொர்க்கத்திலிருந்து எங்களை வெளியேற்றிவிட்டீர்கள்" என்று சொன்னார்கள்.

அதற்கு மூசாவிடம் ஆதம் (அலை) அவர்கள், "நீர்தான் மூசாவா? அல்லாஹ், தன்னுடன் உரையாடுவதற்கு உம்மையே தேர்ந்தெடுத்தான்; அவன் தனது கையால் உமக்காக (வேதத்தை) எழுதினான். (இத்தகைய) நீங்கள், அல்லாஹ் என்னைப் படைப்பதற்கு நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே என்மீது அவன் விதித்துவிட்ட ஒரு விஷயத்திற்காக என்னைப் பழிக்கின்றீர்களா?" என்று கேட்டார்கள்.

(இந்த பதில் மூலம்) மூசா (அலை) அவர்களை ஆதம் (அலை) அவர்கள் தோற்கடித்து விட்டார்கள்;தோற்கடித்துவிட்டார்கள்" என (இரண்டு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஸஹீஹ் முஸ்லிம் : 5157. 

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாற்பதாவது வயதின் தொடக்கத்தில் அவர்களை அல்லாஹ் தன் தூதராக அனுப்பினான். ஸஹீஹ் முஸ்லிம் : 4685. 

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர் சோதிடனிடம் சென்று, எதைப் பற்றியாவது கேட்டால், அ(வ்வாறு கேட்ட)வருடைய நாற்பது நாட்களின் தொழுகை அங்கீகரிக்கப்படுவதில்லை.
இதை நபி (ஸல்) அவர்களின் துணைவியரில் சிலரிடமிருந்து ஸஃபிய்யா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். முஸ்லிம் : 4488. 

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
மது அருந்திய ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் கொண்டுவரப்பட்டபோது, அவரை இரு பேரீச்ச மட்டைகளால் ஏறக்குறைய நாற்பது முறை அடிக்குமாறு உத்தரவிட்டார்கள். ஸஹீஹ் முஸ்லிம் : 3512. 

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மக்களுக்கு ஒரு காலம் வரும். (அப்போது போர்கள் மிகுந்து) ஆண்கள் குறைந்து, பெண்கள் அதிகரித்துவிடுவதால் ஓர் ஆணை நாற்பது பெண்கள் பின்தொடர்ந்துவந்து,  அவனைச் சார்ந்திருக்கும் நிலை காணப்படும்.
இதை அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் முஸ்லிம் : 1838. 

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட அவர்களின் அடிமையான குறைப் பின் அபீமுஸ்லிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுடைய  புதல்வர்  ஒருவர் "குதைத்" அல்லது "உஸ்ஃபான்" எனுமிடத்தில் இறந்துவிட்டார். அப்போது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், "குறைப்! மக்கள் ஒன்றுகூடிவிட்டனரா எனப் பார்" என்று கூறினார்கள். 

நான் சென்று பார்த்தபோது அங்கு மக்களில் சிலர் குழுமியிருந்தனர். நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் வந்து விஷயத்தைச் சொன்னபோது "அவர்கள் நாற்பது பேர் இருப்பார்களா, சொல்" என்றார்கள். 

நான் "ஆம்" என்றேன். "அதை (மய்யித்தை) எடுத்துக்கொண்டு புறப்படுங்கள்" என்று கூறிவிட்டு, "ஒரு முஸ்லிம் இறந்தவுடன் அல்லாஹ்விற்கு எதையும் இணைவைக்காத நாற்பது பேர் அவருக்காக (இறுதித் தொழுகை) தொழுதால் அவர்களின் பரிந்துரையை அல்லாஹ் ஏற்காமல் இருப்பதில்லை" என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியுற்றுள்ளேன்" என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள். ஸஹீஹ் முஸ்லிம் : 1730. 

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (முதுமையில் நஃபில்) தொழும்போது உட்கார்ந்த நிலையிலேயே ஓதுவார்கள்; ருகூஉச் செய்ய எண்ணும்போது எழுந்து நின்று (சாதாரணமாக) ஒருவர் நாற்பது வசனங்கள் ஓதும் அளவுக்கு ஓதுவார்கள் (பிறகு ருகூஉச் செய்வார்கள்(. இதை அம்ரா (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஸஹீஹ் முஸ்லிம் : 1331. 

அபூதர் அல்கிஃபாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் (நபி (ஸல்) அவர்களிடம்) "அல்லாஹ்வின் தூதரே! பூமியில் முதன் முதலாக அமைக்கப்பெற்ற பள்ளிவாசல் எது?" என்று கேட்டேன். 

அதற்கு அவர்கள், "அல் மஸ்ஜிதுல் ஹராம் (மக்கா நகரிலுள்ள புனித கஅபா அமைந்திருக்கும்) பள்ளிவாசல்" என்று பதிலளித்தார்கள். 

நான் "பிறகு எது?" என்று கேட்டேன். அவர்கள் "(ஜெரூஸலத்திலுள்ள) அல்மஸ்ஜிதுல் அக்ஸா" என்று பதிலளித்தார்கள். 

நான், "அவ்விரண்டுக்குமிடையே எத்தனை ஆண்டுக் காலம் (இடைவெளி இருந்தது)?" என்று கேட்டேன். அவர்கள் "நாற்பதாண்டுகள்" (மஸ்ஜிதுல் ஹராம் அமைக்கப்பெற்று நாற்பதாண்டுகள் கழித்து மஸ்ஜிதுல் அக்ஸா அமைக்கப்பெற்றது). முஸ்லிம் 903

புஸ்ர் பின் சயீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
என்னை ஸைத் பின் காலித் அல்ஜுஹனீ (ரலி) அவர்கள் அபூஜுஹைம் பின் அல்ஹாரிஸ் அல்அன்சாரி (ரலி) அவர்களிடம் அனுப்பி, தொழுது கொண்டிருப்பவருக்குக் குறுக்கே செல்பவர் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் என்ன செவியேற்றார்கள் என்று கேட்டுவருமாறு சொன்னார்கள். 

(நான் சென்று கேட்டேன்.) அப்போது அபூஜுஹைம் (ரலி) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தொழுது கொண்டிருப்பவருக்குக் குறுக்கே செல்பவர் அதனால் எத்தகைய பாவம் தம்மீது ஏற்படும் என்பதை அறிந்திருப்பாரானால் அவருக்கு முன்னால் கடந்துசெல்வதைவிட நாற்பது (நாட்கள்/மாதங்கள்/வருடங்கள் அப்படியே காத்து) நிற்பது அவருக்கு நல்லதாக இருந்திருக்கும்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அபுந்நள்ர் சாலிம் பின் அபீஉமய்யா (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
புஸ்ர் பின் சயீத் (ரஹ்) அவர்கள் நாட்களில் நாற்பது என்று சொன்னார்களா, அல்லது மாதங்களில் நாற்பது என்று சொன்னார்களா, அல்லது வருடங்களில் நாற்பது என்று சொன்னார்களா என்று எனக்குத் தெரியவில்லை. 
முஸ்லிம் : 878

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
மீசையைக் கத்தரிப்பது, நகங்களை வெட்டுவது, அக்குள் முடிகளை அகற்றுவது, மர்ம உறுப்பின் முடிகளை மழிப்பது ஆகியவற்றில் நாற்பது நாட்களுக்கு மேல் விட்டு வைக்கக் கூடாதென எங்களுக்குக் கால வரம்பு விதிக்கப்பட்டிருந்தது.ஸஹீஹ் முஸ்லிம் : 431. 

.... நாற்பது என்பது பரிணாம வளர்ச்சியின் காலகட்டம் அது நாட்களாக , வருடங்களாக , எண்ணிக்கைகளாக எடுத்துக் கொள்ளப்படுகிறது .

இப்படி முழுமைப் பெற்ற பரிணாமத்தின் குறியீடாக நாற்பதைக் கணிக்கப்படுகிறது

கத்தார் கால் பந்து உலக கோப்பை,

இந்த உலகம் ஒரு வித்தியாசமான  கால் பந்து உலக கோப்பையை காண்கிறது.

இங்கே விபச்சாரம் கொடி கட்டி பறக்கவில்லை...
ஆண் உறைகளை வழங்க ஏடிஎம் திறக்கவில்லை..
மதுபானம் ஆறாக ஓடவில்லை...
ஆபாச ஆடல் பாடல் இல்லை....

இந்த செய்திகள் உலக விளையாட்டு வரலாற்றிலே இதுவரை இல்லாத ஒன்று....

கத்தார் என்ற ஒரு சிறிய நாடு உலகநாடுகளை திரும்பி பார்க்க வைத்திருக்கிறது... தனது சாதுர்யமான அரசியல் காய் நகர்தல்கள் அதனை சாதித்தும் காட்டியுள்ளது.

உலக கோப்பை கால்பந்து விளையாட்டை நடத்த கத்தார் தேர்வு செய்யப்பட நாள்முதல் இன்றுவரை சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லை.

அமெரிக்காவுடன் போட்டி போட்டு கத்தார் இந்த உலக கோப்பை விளையாட்டை கைப்பற்றியது.

Fifa தேர்வு கமிட்டி உறுப்பினர்களுக்கு  கத்தார் லஞ்சம் கொடுத்ததாக ஒரு புகார்.

கட்டுமான பணிகளுக்காக பணியாளர்களை அடிமையாக நடத்துவதாக ஒரு புகார்.

கட்டுமான பணிகளில் பலர் இறந்ததாக ஒரு புகார்.

ஆடை கட்டுப்பாடு, மது தடை, தன்பால் இணையர்களுக்கு  தடை என கத்தாரை உலகின் பல நாடுகளும் மீடியாக்களும் விமர்சித்துக் கொண்டே இருக்கிறது.

இவைகள் அனைத்தையும் கடந்து சுமார் 25 லட்சம் டிக்கெட்களை விற்பனை செய்து fifa வரலாற்றில் இதுவரை இல்லாத ஒரு சாதனையை கத்தார் நிகழ்த்தியுள்ளது....

25 லட்சம் கோடியை இந்த ஒரு மாத நிகழ்வுக்காக கத்தார் செலவழித்துள்ளது..

இன்னும் 20 வருடங்களுக்கு தேவையான கட்டமைப்பை கத்தார் உருவாக்கியுள்ளது.

கத்தார் எடுத்த சில அதிரடி முடிவுகள் உலக மீடியாக்களை தூங்கவிடவில்லை ....

கடைசிவரை மது தடை பற்றி பேசவே இல்லை ... இரண்டு நாட்களுக்கு முன்பாக மது தடை என கத்தார் அறிவித்தது.. ஐரோப்பிய மீடியாக்கள் ஆடித்தான் போனது...

இஸ்ரேல் என்ற வாசகமே இருக்க கூடாது என கத்தார் அறிவித்தது ... யூதர்களின் தூக்கத்தை கலைத்தது ...

சர்ச்சைக்குரிய நபர் என்று ஓரம் கட்ட நினைத்த யூத கைக்கூலிகலுக்கு சம்மட்டி அடியாக ஜாஹிர் நாயக் துவக்க  விழாவில் சிறப்பு அழைப்பாளர் அளைக்கப்பட்டுள்ளார் ...

குர்ஆன் வசனங்களால் ஆரம்பமானது விழா .... அதற்கு அவர்கள் தேர்வு செய்த வசனமும் அடடா....

يٰۤاَيُّهَا النَّاسُ اِنَّا خَلَقْنٰكُمْ مِّنْ ذَكَرٍ وَّاُنْثٰى وَجَعَلْنٰكُمْ شُعُوْبًا وَّقَبَآٮِٕلَ لِتَعَارَفُوْا‌  اِنَّ اَكْرَمَكُمْ عِنْدَ اللّٰهِ اَ تْقٰٮكُمْ‌  اِنَّ اللّٰهَ عَلِيْمٌ خَبِيْرٌ‏
மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு. பின்னர், உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; (ஆகவே) உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், (யாவற்றையும் சூழந்து) தெரிந்தவன்.
(அல்குர்ஆன் : 49:13)

ஏதோ ஒரு மூலையில் இருந்த ஒரு நாடு .... உலக நாடுகள் அனைத்தையும்  அழைத்து தனது கொள்கையில் ஒரு போதும் சமரசமில்லை ... என அடித்து கூற ஒரு தைரியம் வேண்டும்.... அது  கத்தாருக்கு நிறையவே உள்ளது....

கத்தார் நாட்டிர்க்கு இறைவன் அருள் புரிவானாக ஆமீன் …

https://youtu.be/SbXp-RX6UMQ

வெள்ளி, நவம்பர் 18, 2022

காதியானிகள் யார்.

காதியானிகள் முஸ்லிம் இல்லை

முஸ்லிம் யாரும் அவர்கள் பேச்சை கேட்க வேண்டாம் அவர்கள் இந்துக்கள் 


காதியானிகளும் அவர்களது வழிகெட்ட கொள்கைகளும்!

அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும் உரித்தானது.

யார் இந்த காதியானிகள்?


ஆங்கிலேயர்களின் காலனிய ஆட்சிக்காலத்தில் தங்களை எதிர்க்கும் இந்திய முஸ்லிம்களிடம் குழப்பங்களை ஏற்படுத்தி அவர்களின் மார்க்கத்தை விட்டும் குறிப்பாக முஸ்லிம்களின் வீரதீரமிக்க ஜிஹாது சிந்தனைகளிலிருந்தும் அவர்களை  அகற்றி அதனால் தாங்கள் முஸ்லிம்களின் எதிர்ப்புகளிலிருந்து சுலபமாக தப்பித்துக் கொள்ளலாம் என்ற ஆங்கிலேய ஆதிக்கவாதிகளின் சதி வேலையின் மூலம், ஒருங்கினைந்த இந்தியாவில் பஞ்சாப் மாகானத்தில் உள்ள காதியான் என்ற ஊரில் வசித்து வந்த, ஆங்கிலேயர்களின் கைப்பாவையாக விளங்கிய மிர்ஸா குலாம் அஹ்மது காதியானி (1839-1908 CE) என்பவரால் தோற்றுவிக்கப்பட்ட (1876 CE) வழிகெட்டக் கொள்கைகளைப் பின்பற்றுபவர்கள் தான் காதியானிகள். இவர்கள் தங்களை ‘காதியானிகள்’ என்றழைத்துக் கொள்வதைவிட ‘அஹ்மதியாக்கள்’ அல்லது ‘அஹ்மதிய்யா ஜமாஅத்’ தைச் சேர்ந்தவர்கள் என்று கூறி தாங்களும் ‘முஸ்லிம்களின் ஒரு பிரிவினர்’ போன்று முஸ்லிம்களிடம் குழப்பங்களை ஏற்படுத்துகின்றனர்..


காதியானிகளின் வழிகெட்டக் கொள்கையின் தோற்றம்:


உலகம் முழுவதும் வேகமாகப் பரவிவரும் இஸ்லாத்தை அழித்தொழிப்பதற்காக முஸ்லிம் நாடுகளையெல்லாம் கைப்பற்றி காலனியாதிக்கத்தைச் செலுத்தி வந்த ஆங்கிலேய ஏகாதிபத்தியர்களும் கிறிஸ்தவ மிஷனரிகளும் ஸ்பெயினின் வீழ்ச்சிற்கு பிறகு இந்தியாவின் பக்கம் பார்வையைச் செலுத்தினர்.


ஆனால் இந்திய முஸ்லிம்களின் உணர்வில் ஊறித் திளைத்திருந்த ஈமானிய சக்திகளுக்கு எதிராக அவர்களை அடக்கியாள்வது அவ்வளவு எளிதல்ல என்பதை நன்கு புரிந்துகொண்டனர். மேலும் ஆங்கிலேயருக்கெதிராக ஜிஹாது செய்வது மார்க்கக் கடமையென வலியுறுத்தி தாமும் பல போர்களில் ஈடுபட்ட முஸ்லிம் உலமாபெருமக்களின் வீரதீர செயல்களும் அவர்களின் ஆங்கிலேயர்களுக்கெதிரான ஃபத்வாக்களும் இந்திய முஸ்லிம்களின் உள்ளங்கிளில் ஆழமாகப் பதிந்துவிட்ட காரனத்தினால் ஆங்கிலேயர்கள் செய்வதறியாது தவித்தனர்.


பிரித்தாளும் சூழ்ச்சிக்குப் பெயர் போன ஆங்கிலேயர்கள் முஸ்லிம்களிடம் பிளவை ஏற்படுத்தி அவர்களின் ஈமானை சிதைத்து அவர்களுடைய ஜிஹாது சிந்தனையை அவர்களிடம் இருந்து எப்படியாவது ஒழித்துக் கட்டினால் தவிர தங்களால் நிம்மதியாக இந்தியாவில் ஆட்சி செய்திடவும் தங்களின் மிஷனரிகளால் கிறிஸ்தவ மதத்தைப் பரப்பிட இயலாது என்பதை நன்கு உணர்ந்தனர்.


இந்த சூழ்நிலையில் இவர்களுக்குச் சாதகமாக அமைந்தவர் தான் இந்த மிர்ஸா குலாம் அஹ்மத் காதியானி என்பவர். ஏற்கனவே மிர்ஸா குலாம் அஹ்மதுவின் குடும்பமே ஆங்கிலேயர்களுக்கு மிகவும் விசுவாசமானதாக இருந்து வந்தது. மிர்ஸா குலாம் அஹ்மதுவின் தந்தை மிர்ஸா முர்தளா ஆங்கிலேயர்களுக்கு அடிபனிவதில் தன்னை அர்பனித்துக் கொண்டு அதன் மூலம் ஆங்கிலேயர்களிடமிருந்து பல நற்சான்றிதழ்களையும் வெகுமதிகளையும் பெற்றார். அவரோடு சேர்ந்து மிர்ஸா குலாம் அஹ்மதுவின் சகோதரரான மிர்ஸா குலாம் காதிரும் ஆங்கிலேயப் படைகளுடன் சேர்ந்து ஆங்கிலேயர்களுக்கு எதிராக கலகம் செய்தவர்களுடன் போராடினார்.


ஆரம்பத்தில் ஆங்கிலேயர்களிடம் தம் தந்தைக்கு இருந்த செல்வாக்கைப் பயன்படுத்தி ஸியால்கோட் – ல் பணிபுரிந்த  (1864-1868) மிர்ஸா குலாம் அஹ்மத் காதியானி, யூதர்கள் மற்றும் கிறிஸ்தவ பாதிரியர்களிடம் மிக நெருக்கமாக இருந்தார். ஆங்கிலேய அரசின் உளவுத்துறையின் மிக முக்கிய நபரும் ”ஸியால் கோட்” பகுதிக்கு  மிஷனரி வேலைகளுக்கான பொறுப்பாளருமான கிறிஸ்தவ பாதிரியார் பட்லர் M.A .வுடன் மிர்ஸா குலாம் காதியானிக்கு மிகவும் நெருக்கமான தொடர்ப்பு ஏற்பட்டது. இருவருரிடையே நீண்ட சந்திப்புகள், இரகசிய உரையாடல்கள் நடந்து வந்தன. ஒருமுறை இந்தப் பாதிரியார் காதியானுக்கே நேரடியாகச் சென்று மிர்ஸா குலாம் அஹ்மதுவிடம் நீண்ட நேரம் இரகசிய சதி ஆலோசனை நடத்தினார். அதைத் தொடர்ந்து மிர்ஸா குலாம் அஹ்மது காதியானி தமது வேலையை திடீர் என ராஜினாமா செய்துவிட்டு இஸ்லாத்திற்கெதிரான ஆங்கிலேயர்களின் சதி வேலைகளுக்கு ஆதரவாக முழுநேரமும் ஈடுபடத் தொடங்கினார்.


ஆங்கிலேயர்களும், கிறிஸ்தவ மிஷனரிகளும் அவரை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டனர். இவரும் தன்னுடைய எஜமானர்களுக்கு மிகவும் விசுவாசமாக நடந்துக் கொண்டு அல்-குர்ஆன் மற்றும் ஆதாரப் பூர்மவமான ஹதீஸ்களின் போதுமான மொழி பெயர்ப்புகள் அந்தக் காலத்தில் இல்லாத காரணத்தால் போதிய கொள்கைத் தெளிவில்லாமலும் பல்வேறு மூடப்பழக்க வழக்கங்களிலும் அனாச்சாரங்களிலும் ஈடுபட்டுக் கொண்டிருந்த முஸ்லிம்களிடம் அல்-குர்ஆன் மற்றும் ஹதீஸ்களின் கருத்துக்களை திரித்து தமது விஷக் கருத்துக்களை பரப்பினார். மார்க்கம் அறியா பாமர மக்களில் சிலர் இவருடைய விஷமப் பிரச்சாரத்திற்கு மயங்கினர்.


‘ஜாமிய்யத் அஹ்லல் ஹதீத் ஃபீ உமூம் அல்-ஹிந்த்’ என்ற இமைப்பின் தலைவராக விளங்கிய ஷைய்க் அபுல் வஃபா தானா அல்-அம்ரிஸ்தரி என்ற மார்க்க அறிஞர் இந்த மிர்ஸா குலாம் அஹ்மது காதியானியோடு விவாதித்துப் பார்த்தும் எவ்வித பலனும் இல்லாததால் இவருடன் முபாஹலா செய்துகொண்டார். அதாவது இருவரும் சேர்ந்து அல்லாஹ்விடம், ‘இருவரில் யார் பொய் கூறுகிறாரோ அவர் மற்றொருவர் வாழ்ந்துக் கொண்டிருக்கும் போதே மரணிக்கவேண்டும்’ என்று  பிரார்த்தனை செய்தனர். அவ்வாறு செய்த சில நாட்களிலே மிர்ஸா குலாம் அஹ்மத் காதியானி 1908 ஆம்  ஆண்டு மரணித்தார். மிர்ஸா குலாம் அஹமதுவிற்குப் பிறகு அவரின் வழித் தோன்றல்களும் அவரைப் பின்பற்றியவர்களும் அவர் விதைத்துச் சென்ற நச்சுக்கருத்துக்களை மக்களிடையே பரப்பி முஸ்லிம்களின் ஈமானை சிதைத்து வருகின்றனர்.


காதியானி வழிகெட்டக் கொள்கைகளின் மூல நூல்கள்:


மிர்ஸா குலாம் காதியானி இறக்கும் போது 50 க்கும் மேற்பட்ட நூல்கள், கட்டுரைகள் மற்றும் துண்டு பிரசுரங்கள் போன்றவற்றை விட்டுச் சென்றார். அவைகளில் முக்கியமானவைகள்:


‘இஜாலத் அல்-அவ்ஹாம்’, ‘இஹ்ஜாஸ் அஹ்மதி’, ‘பராஹீன் அஹ்மதிய்யா’, ‘அன்வார் அல்-இஸ்லாம்’, ‘இஹ்ஜாஸ் அல்-மஸீஹ்’, ‘அல்-தப்லீக்’, ‘தஜாலிய்யாத் இலாஹிய்யாஹ்’


மிர்ஸா குலாம் அஹ்மதுவிற்குப் பிறகு ஆங்கிலேய அரசினால் காதியானிகளின் முதல் கலீபாகவாக முடிசூடப்பட்ட நூருத்தீன் என்பவர் ‘பஸ்ல் அல்-கிதாப்’ என்ற நூலை எழுதினார்.


காதியானியிஸத்தை முழுமையாக வடிவமைத்தவரும் ஆங்கிலேய காலனியாதிக்கத்தின் உளவாளியுமான லாகூரிய்யா காதியானிகளின் தலைவர் முஹம்மது அலி என்பவர் குர்ஆனுக்கு தப்பும் தவறுமாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். மேலும் இவர் ‘ஹகீகத் அல்-இக்திலாஃப்’, ‘அல்-நுபுவ்வாஹ் ஃபில்-இஸ்லாம்’, ‘அல்-தீனல் இஸ்லாமி’ என்ற நூல்களையும் எழுதினார். மேலும் இவர் லாகூரிய்யா காதியானிகளின் ஊதுகுழலாக விளங்கிய பத்திரிக்கையின் பொறுப்பாளராகவும் இருந்துவந்தார்.


லாகூரிய்யா காதியானிகளின் மற்றொரு தலைவராக விளங்கிய கோஜா கமாலுதீன் என்பவர் ‘அல் மதால் அல்-அஃலா ஃபில் அன்பியா’ மற்றும் சில நூல்களை எழுதினார்.


மிர்ஸா குலாம் அஹ்மது காதியானியை லாகூரிய்யா காதியானிகள் இஸ்லாத்தை சீர்திருத்தவந்த ஒரு சீர்திருத்தவாதியாக கருதுகின்றனர். ஆயினும் இவர்களின் கொள்கைகளில் பெரும்பான்மையானவை காதியானிகளின் கொள்கைகளோடு ஒத்துப்போவதால் இதுவும் வழிகேடே என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை!


காதியானிகளின் முஃப்தியாக விளங்கிய முஹம்மது சாதிக் என்பவர் ‘காத்திம் அல்-நபிய்யீன்’ என்ற நூலை எழுதினார்.


பஷீர் அஹ்மத் இப்னு குலாம் என்பவர் ‘சிராத் அல்-மஹ்தி’ மற்றும் ‘கலிமத் அல்-பஸ்ல்’ என்ற நூல்களை எழுதினார்.


காதியானிகளின் இரண்டாவது கலீபாவாக விளங்கிய மஹ்மூத் அஹ்மத் இப்னு குலாம், ‘அன்வார் அல்-கிலாஃபா’, ‘துஹ்ஃபத் அல்-முலூக்’ மற்றும் ‘ஹகீகத் அல்-நுபுவ்வாஹ்’ ஆகிய நூல்களை எழுதினார்.


காதியானிகளின் வழிகெட்டக் கொள்கைகள் / நம்பிக்கைகள்:


1) மிர்ஸா குலாம் அஹ்மத் காதியானி முதலில் தன்னை ஒரு ‘தாயியாக – இஸ்லாமிய அழைப்பாளராக’ காட்டிக்கொண்டார். அவரைச் சுற்றி கூட்டம் சேர்ந்ததும் பிறகு தன்னை இஸ்லாமிய ஃபிக்ஹ் கலைகளை ஆய்வு செய்கின்ற ‘முஜ்தஹிதாக’ காட்டிக்கொண்டார். பின்னர் ஒரு படி மேலே சென்று முஸ்லிம்கள் ‘எதிர்பார்த்திருக்கும் மஹ்தி (அலை)’ தாமே என்று பறைசாற்றினார். அதன் பிறகு ‘தானும் ஒரு நபி’ என்று தன்னைத் தானே பிரகடனப்படுத்திக் கொண்டதோடு மட்டுமல்லாமல் முஹம்மது (ஸல்) அவர்களின் ‘நபித்துவத்தை விட தன்னுடைய நபித்துவம் சிறந்தது’ என்றும் கூறலானார். காதியானிகளும் அதை நம்புகின்றனர்.


2) காதியானிகள், ‘நபித்துவம் முஹம்மது நபி (ஸல்) அவர்களோடு முற்றுப் பெறவில்லை; நபித்துவம் தொடரும்’ என்று கூறுகின்றனர். இதற்கு விளக்கமாக குர்ஆனின் வசனத்திற்கு வேறு வியாக்கியானத்தை கொடுக்கின்றனர். அதாவது, ‘காத்தமுன்னபிய்யீன்’ என்பதற்கு முஸ்லிம்கள் கொடுக்கும் பொருளான ‘நபிமார்களுக்கெல்லாம் இறுதியானவர்’ என்பது தவறாகும். அதன் உண்மையான அர்த்தம் ‘நபிமார்களில் சிறந்தவர்’ என்பதே சரியான பொருளாகும் என தம் மனம் போன போக்கில் உளறுகின்றனர்.


3) மிர்ஸா குலாம், தனக்கு ஜிப்ரயீல் (அலை) அவர்களின் மூலம் 10,000 க்கும் அதிகமான வேதவசனங்கள் வஹியாக அருளப்பட்டதாகவும் ‘இதை நிராகரிப்பவர்கள் இஸ்லாத்தை விட்டும் வெளியேறியவர்கள்’ என்றும் கூறிவந்தார்.


4) மிர்ஸா குலாம் அஹ்மது காதியனியின் வசனங்களையும் அவருடைய போதனைகளையும் பின்பற்ற வேண்டுமேயல்லாது முஸ்லிம்கள் குர்ஆனையும் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் ஹதீஸ்களை பின்பற்றக் கூடாது என;றும் காதியானிகள் கூறுகின்றனர்.


5) ‘காதியான் நகரம் மக்கா மற்றும் மதினாவைப் போன்று புனிதம் நிறைந்தது’ என்றும் ‘முஸ்லிம்கள் காதியான் நகருக்கு புனித யாத்திரை செல்ல வேண்டும்’ என்றும் மிர்ஸா குலாம் கூறிவந்தார். மேலும் குர்ஆனில் குறிப்பிடப்பட்டிருக்கின்ற மக்ஸிதுல் அக்ஸா என்பது காதியான் நகரைக் குறிக்கிறது என்றார். இவைகள் ‘பராஹீன் அஹ்மதிய்யா’ மற்றும் ‘தப்லீக் ரிஸாலத்’ என்ற அவருடைய நூல்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.


6) மிர்ஸா குலாம் அஹ்மத் காதியானியின் மகனும் ஆண்மீக வாரிசுமான மிர்ஸா பஷீருத்தீன், தன்னுடைய ‘அஈனா-இ-சதகாத்’ என்னும் நூலில், ‘எதிர்பார்க்கப்பட்ட மேசியாவை (மிர்ஸா குலாம் அஹ்மதை) பற்றிக் கேள்விபட்டோ அல்லது கேள்விபடாமலோ அவரிடம் பைஅத் செய்யாத ஒவ்வொரு முஸ்லிமும் இஸ்லாத்தை விட்டும் வெளியேறியவர்” என்று கூறுகிறார். (பக்கம் 35)


7) காதியானிகள், முஸ்லிம்களின் அடிப்படையான அல்லாஹ், ரஸூல், குர்ஆன் தொழுகை, நோன்பு, ஜக்காத் மற்றும் ஹஜ் ஆகிய எல்லாவற்றினின்றும் முற்றிலும் மாறுபடுகின்றனர். இதை அவர்களே தங்களின் பத்திரிக்கையான அல்-.பதல் 30-ஜூலை-1931 பதிப்பில் கூறுகின்றனர்.


8) அவர்களின் அதே பத்திரிக்கையின் மூன்றாவது வால்யூமில், குர்ஆனில் அத்தியம் 61 வசனம் 6 -ல் கூறப்பட்டிருக்கின்ற ‘அஹ்மது’ என்ற இறைத்தூதர்  ‘மிர்ஸா குலாம் அஹ்மது காதியானி’ குறிக்கின்றது என்கின்றனர்.. (இன்ஜார் அல்-கிலாஃபா, பக்கம் 21)


9) ஒருங்கினைந்த இந்தியத் துணைக்கண்டத்தில் வாழ்ந்த முஸ்லிம்கள் ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போரிடாமல் இருப்பதற்காகவும், தனது எஜமானர்களாகிய ஆங்கிலேயர்களுக்கு விசுவாசமாகவும் ‘ஜிஹாது’ என்ற ஒன்றே இல்லையென்று ஃபத்வா கொடுத்து அறியாமையில் இருந்த சில முஸ்லிம்களை வழிகெடுத்து அவர்களை ஆங்கிலேயர்களுக்கு அடிபணிய வைத்தார் மிர்ஸா குலாம் அஹ்மத் காதியானி.


10) ‘ஈஸா நபி மரணித்துவிட்டார். யூதர்கள் அவரை கொன்று விட்டனர். கியாமத் நாளின் அடையாளமாக ஈஸா நபியை அல்லாஹ் உலகிற்கு அனுப்பமாடான்’ – இதுவும் காதியானிகளின் உளறல்கள்.


காதியானிகள் கொள்கை இஸ்லாத்திற்கு முற்றிலும் புறம்பான வழிகேடாகும்!


அல்லாஹ்வின் வேதமும் பல்வேறு நபிமொழிகளும் முஹம்மது நபி (ஸல்) அவர்களே நபிமார்களுக்கெல்லாம் இறுதியானவராகவும் அவருக்குப் பின்னர் யாராலும் நபியாக வரமுடியாது என்றும் வலியுறுத்துவதோடல்லாமல், நபி (ஸல்) அவர்களுக்குப் பிறகு 30 பொய்யர்கள் தோன்றுவார்கள் என்றும் அவர்கள் ஒவ்வொருவரும் தன்னை நபியென வாதிடுவர் என்றும் உணர்த்துகிறது. நபி (ஸல்) காலத்திலேயே தன்னை நபியென வாதிட்ட சிலர் தோன்றினர். நபி (ஸல்) அவர்களுக்குப் பிறகும் கூட அத்தகைய போலியானவர்களுடன் அபூபக்கர் ஸித்தீக் (ரலி) அவர்கள் போர் செய்திருக்கிறார்கள்.


அல்லாஹ் கூறுகின்றான்:

“முஹம்மது(ஸல்) உங்கள் ஆடவர்களில் எவர் ஒருவருக்கும் தந்தையாக இருக்கவில்லை; ஆனால் அவரோ அல்லாஹ்வின் தூதராகவும், நபிமார்களுக்கெல்லாம் இறுதி (முத்திரை)யாகவும் இருக்கின்றார்; மேலும் அல்லாஹ் எல்லாப் பொருள்கள் பற்றியும் நன்கறிந்தவன்.” (33:40)


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“என்னுடைய நிலையும் எனக்கு முன்பிருந்த இறைத்தூதர்களின் நிலையும் ஒரு வீட்டைக் கட்டி அதை அழகாக அலங்கரித்து, ஒரு மூலையில் ஒரு செங்கல் அளவிற்குள்ள இடத்தை மட்டும்விட்டுவிட்ட ஒரு மனிதரின் நிலை போன்றதாகும். மக்கள் அதைச் சுற்றிப் பார்த்துவிட்டு ஆச்சரியமடைந்து, ‘இச்செங்கல் (இங்கே) வைக்கப்பட்டிருக்கக் கூடாதா?’ என்று கேட்கலானார்கள். நானே அச்செங்கல். மேலும், நானே இறைத் தூதர்களில் இறுதியானவன்.” அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி); ஆதாரம்: புகாரி, முஸ்லிம்


“நான் மற்ற இறைத்தூதர்களைவிடவும் ஆறு விஷயங்களில் சிறப்பிக்கப்பட்டுள்ளேன்: 1. நான் ஒருங்கிணைந்த (பொருள்களைக் குறிக்கும்) சொற்கள் வழங்கப்பெற்றுள்ளேன். 2. எதிரிகளின் உள்ளத்தில் என்னைப் பற்றிய (மதிப்பும்) அச்ச(மு)ம் ஊட்டப்பட்டு எனக்கு வெற்றியளிக்கப்பட்டுள்ளது. 3 போர்ச் செல்வங்கள் எனக்கு (மட்டும்) அனுமதிக்கப்பட்டுள்ளன. 4 எனக்கு பூமி முழுவதும் சுத்தம் (தயம்மும்) செய்வதற்கேற்றதாகவும் தொழுமிடமாகவும் ஆக்கப்பட்டுள்ளது. 5 நான் மனித இனம் முழுவதற்கும் தூதராக நியமிக்கப்பெற்றுள்ளேன். 6 என்னோடு நபிமார்களின் வருகை முற்றுப்பெற்றுவிட்டது.” அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி); ஆதாரம்: முஸ்லிம்.


“தூதுத்துவமும் நபித்துவமும் நிறைவு பெற்றுவிட்டது. எனக்குப் பிறகு எந்த ரசூலும் இல்லை நபியும் இல்லை“. (நபியவர்கள் இவ்வாறு கூறியது) மக்களுக்கு மிகவும் கஷ்டமாகிவிட்டது. உடனே நபியவர்கள்,  “என்றாலும் நற்செய்திகள் (எஞ்சியுள்ளது)” என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே! “(முபஸ்ஸராத்) நற்செய்திகள்” என்றால் என்ன? என்று கேட்டார்கள். அதற்கு நபியவர்கள், “ஒரு முஸ்லிம் காண்கின்ற கனவு. அது நபித்துவத்தின் (நாற்பத்தாறு) பங்குகளில் ஒரு பங்காகும்” என்று கூறினார்கள். அறிவிப்பவர் : அனஸ் (ரலி); ஆதாரம்: திர்மிதி


ஜுபைர் பின் முத்இம் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “எனக்கு (ஐந்து) பெயர்கள் உள்ளன. நான் “முஹம்மத்” (புகழப்பட்டவர்) ஆவேன். நான் “அஹ்மத்” (இறைவனை அதிகமாகப் புகழ்பவர்) ஆவேன். நான் “மாஹீ” (அழிப்பவர்) ஆவேன்; என் மூலம் அல்லாஹ் (ஏக) இறைமறுப்பை அழிக்கின்றான். நான் “ஹாஷிர்” (ஒன்றுதிரட்டுபவர்) ஆவேன்; மக்கள் என் பாதங்களுக்குக் கீழே (என் தலைமையில்) ஒன்று திரட்டப்படுவார்கள். நான் “ஆகிப்” (இறுதியானவர்) ஆவேன்; எனக்குப் பிறகு வேறெந்த இறைத்தூதரும் இல்லை“ என்று கூறினார்கள்.


மேற்கண்ட ஹதீஸ் ஜுபைர் பின் முத்இம் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.


அவற்றில் உகைல் பின் காலித் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “நான் ஸுஹ்ரீ (ரஹ்) அவர்களிடம் “ஆகிப்” என்றால் என்ன? என்று கேட்டேன். அதற்கு அவர்கள் “தமக்குப் பிறகு வேறெந்த இறைத்தூதரும் இல்லாதவர்” என்று பதிலளித்தார்கள்” என இடம்பெற்றுள்ளது.


‘பனூ இஸ்ராயீல்களை நிர்வகிப்பவர்களாக இறைத்தூதர்கள் இருந்தனர். இறைத்தூதர் ஒருவர் இறக்கும் போதெல்லாம் மற்றோர் இறைத்தூதர் அவருக்குப் பதிலாக வருவார். மேலும், எனக்குப் பின் எந்த இறைத்தூதரும் (வரப்போவது) இல்லை. ஆயினும், இனி (எனக்குப் பின்) கலீபாக்கள் (பிரதிநிதிகள்) நிறையப் பேர் தோன்றுவார்கள்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி); ஆதாரம்: புகாரி, முஸ்லிம்


சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: “தபூக் போரின்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்களை (தாம் திரும்பிவரும்வரை தமக்குப்) பிரதிநிதியாக நியமித்தார்கள். அப்போது அலீ (ரலி) அவர்கள், “குழந்தைகளையும் பெண்களையும் கவனித்துக் கொள்வதற்காகவா என்னை விட்டுச்செல்கிறீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “மூசாவிடம் ஹாரூனுக்கு இருந்த அந்தஸ்தில் என்னிடம் நீங்கள் இருப்பதை விரும்பவில்லையா? ஆயினும், (ஒரு வேறுபாடு யாதெனில்) எனக்குப் பிறகு எந்த நபியும் இல்லை“ என்று சொன்னார்கள். ஆதாரம்: முஸ்லிம்.


மேற்கண்ட அல்-குர்ஆன் வசனம் மற்றும் நபிமொழிகள் அனைத்தும் முஹம்மது (ஸல்) அவர்களே இறுதி நபி என்பதை விளக்குகின்றது. தனக்குப் பிறகு வேறெந்த நபியும் இல்லையென்ற முஹம்மது (ஸல்) அவர்கள், தனக்குப் பிறகு பல பொய்யர்கள் தோன்றுவர் என்றும் அவர்களனைவரும் தம்மை நபியென்று வாதிடுவர் என்றும் எச்சரித்திருக்கின்றார்கள்.


தன்னை நபியென வாதிடும் பொய்யர்கள் தோன்றுவர் என்ற நபி முஹம்மது நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கைகள்:


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“இரண்டு குழுவினர் ஒருவரோடொருவர் போரிட்டுக் கொள்ளாதவரை உலக முடிவு நாள் வராது. அவ்விரு குழுக்களுக்குமிடையே பெரும் போர் நிகழும். ஆனால், அவ்விரண்டும் முன்வைக்கும் வாதம் ஒன்றாகவே இருக்கும். பெரும் பொய்யர்களான ‘தஜ்ஜால்கள்’ ஏறத்தாழ முப்பது பேர் (உலகில்) தோன்றாத வரை இறுதி நாள் வராது. அவர்களில் ஒவ்வொருவனும் தன்னை இறைத்தூதர் என்று வாதிடுவான்.” அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி); ஆதாரம்: புகாரி


நபி என வாதிடுபவர்கள் அனைவரும் பொய்யர்கள் வழிகேடர்கள் என முஹம்மத் (ஸல்) அவர்கள் கூறியுள்ளதால் முஸ்லிம்கள் எந்த தடுமாற்றமுமின்றி இந்த காதியானிகளை புறக்கனித்து விடவேண்டும். முஹம்மத் நபி(ஸல்) அவர்களுக்குப் பின் நபி என வாதிப்பவர்கள் அனைவரும் விஷமிகள் என்பதனாலேயே அவர்களுக்கெதிராக அபூபக்கர் (ரலி) அவர்களும் அவருக்குப் பின் வந்த கலீபாக்களும் நடவடிக்கை எடுத்தார்கள் என்ற பாடத்தை மறந்துவிடக் கூடாது.


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘அறிந்து கொள்ளுங்கள் உங்களுக்கு முன்னிருந்த யூத, கிறிஸ்தவர்கள் 72 கூட்டங்களாகப் பிரிந்தார்கள். எனது உம்மத்து 73 கூட்டங்களாகப் பிரிவார்கள். 72 கூட்டங்கள் நரகில் (பிரவேசிப்பார்கள்) ஒரு கூட்டத்தினர் மட்டுமே சுவர்க்கத்தில் (பிரவேசிப்பார்கள்). அந்தக் கூட்டம்தான் (ஸுன்னத் வல்) ஜமாஅத்தாகும்’ நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: அஹ்மத்


வேறு சிலரின் மற்றொரு ரிவாயத்தில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது. ‘(ஒரே) ஒரு கூட்டத்தைத் தவிர அவர்கள் அனைவரும் நரகம் பிரவேசிப்பார்கள். நானும் எனது ஸஹாபாக்களும் எந்த வழியில் இருக்கின்றோமோ அவ்வழியில் இருப்பவர்கள் தான் அந்த ஒரு கூட்டமாகும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. ஆதாரம்: திர்மிதி: (ஸஹீஹ்)


மேற்கண்ட சான்றுகள் அனைத்தும் முஹம்மது (ஸல்) அவர்களே இறுதி நபி என்றும் அவர்களுக்குப் பிறகு தன்னை நபி என்று கூறிக்கொண்டு வருபவர் பொய்யரே என்பதையும் நபி (ஸல்) அவர்களும் ஸஹாபாக்களும் எந்த மார்க்கத்தில் இருந்தார்களோ அந்த மார்க்கமே இறைவனால் அங்கீகரிக்கப்பட்ட மார்க்கம் என்பதையும் நாம் தெள்ளத்தெளிவாக அறியலாம்.


காதியானிகள் நபி (ஸல்) மற்றும் ஸஹாபாக்களின் மார்க்கத்தை உதறி தள்ளிவிட்டு வேறொரு மார்க்கத்தை தேர்ந்தெடுத்துவிட்டதால் அவர்களும் வழிகேட்டில் இருக்கும் கூட்டத்தினர்களைச் சேர்ந்தவர்களாவர் என்பதையும் அறியலாம்.


காதியானிகள் காஃபிர்களே – முஸ்லிம் உலமா கவுன்ஸின் ஏகோபித்த முடிவுகள்.


ஹிஜ்ரி 1394 (ஏப்ரல் 1974) ஆம் ஆண்டு உலகின் பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் பங்குபெற்ற மக்காவில் நடைபெற்ற மிகப்பெரிய அகில உலக முஸ்லிம்களின் மாநாட்டில், காதியானிகளின் கொள்கைகளை அல்-குர்ஆன் மற்றும் சுன்னாவின் அடிப்படையில் ஆய்வுசெய்த பிறகு, ‘காதியானிகள் இஸ்லாத்திற்கு அப்பாற்பட்ட காஃபிர்கள்’ என்றும் ‘முஸ்லிம்கள் அவர்களின் தீய கொள்கைகளை எதிர்க்க வேண்டும்; அவர்களுக்கு எவ்வகையிலும் உதவி ஒத்தாசைகள் புரியக் கூடாது’ என்றும் ‘காதியானிகள் இறந்தால் முஸ்லிம்களின் அடக்கஸ்தலங்களில் அவர்களை புதைக்கக்கூடாது’ என்றும் தீர்மானம் நிறைவேற்றினர்.


 முஸ்லிம்களுக்கான எச்சரிக்கைகள்:


காதியானிகளின் கொள்கைகள் முஸ்லிம்களின் ஈமானைப் பறித்து அவர்களை இஸ்லாத்தை விட்டும் வெளியேற்றுவதால் காதியானிகளை மேற்கத்திய உலகமும் குறிப்பாக பிரிட்டனும் முஸ்லிம்களின் பரம எதிரியான யூதர்களும் நன்றாக ஆதரிக்கின்றனர். அதற்காக அவர்களுக்கு மிகப்பெரிய அரசு பதவிகளும் கொடுக்கப்படுகின்றன. அவர்களில் அதிகமானோர் இங்கிலாந்திலும் மற்றும் சிலர் இஸ்ரேலிலும் வசிக்கின்றனர்.


இஸ்ரேலிய அரசு காதியானிகளுக்காகவும் அவர்களின் கொள்கைகள் பரவுவதற்காகவும் மிகப்பெரும் அளவில் உதவிகள் புரிகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரையில் அவர்கள் சிறந்த கல்வியாளர்களாகவும் விவாதத் திறமையுடையவர்களாகவும் இருப்பதால் போதிய கல்வியறிவில்லாதவர்கள் அவர்களின் வலையில் எளிதில் விழுந்துவிடுகின்றனர். ஏன் ஏகத்துவச் சிந்தனையாளர்களில் சிலர் கூட அவர்களின் வாதத்திறமையிலும் அவர்கள் விரித்த மாய வலையிலும் விழுந்துவிடுகின்றனர்.


எனவே தமிழ் பேசும் முஸ்லிம்கள் காதியானிகளின் வழிகெட்டக் கொள்கைகளைப் பற்றி நன்கு அறிந்திருப்பதோடல்லாமல் சக முஸ்லிம்களுக்கும் அவர்களைப் பற்றி எச்சரிக்கை செய்யவேண்டும். அல்லாஹ் நம் அனைவர்களுக்கும் நேர்வழி காட்டி அதில் நிலைத்திருக்கச் செய்வானாகவும்.




































வியாழன், நவம்பர் 03, 2022

இஸ்லாம் கூறும் மருத்துவம் ,

هُوَ الَّذِىْ بَعَثَ فِى الْاُمِّيّٖنَ رَسُوْلًا مِّنْهُمْ يَتْلُوْا عَلَيْهِمْ اٰيٰتِهٖ وَيُزَكِّيْهِمْ وَيُعَلِّمُهُمُ الْكِتٰبَ وَالْحِكْمَةَ وَاِنْ كَانُوْا مِنْ قَبْلُ لَفِىْ ضَلٰلٍ مُّبِيْنٍۙ‏ (அல்குர்ஆன் 62 : 2 )

இன்றைய நவீன மருத்துவம் கூறும் செய்தி;ஆரோக்கியம் என்பது உடல் சார்ந்தது மட்டுமல்ல உடல்,உள்ளம்,சிந்தனை, செயல்,பேச்சு,இயல்பு அனைத்தும் சரியாக அமைவதாகும்.சுருக்கமாக வாழ்வியல் முறை சீராக இருப்பதே ஆரோக்கியமாகும்.வாழ்வியல் முறை சீர்கெடும் போதும்,இயற்கை சீதோஷ்ணம் சமநிலை மாறுப்படும் போதும் மனிதனின் ஆராக்கியம் பாதிக்கப்பட்டு நோய்வாய் படுகிறான்.

இன்றைய நவீன மருத்துவத்தின் முன்னோடி இஸ்லாம்,இன்று மருத்துவ உலகம் கூறுவதை இஸ்லாம் 1400 ஆண்டுகளுக்கு முன்பே தெளிவுப்படுத்திவிட்டது.

இஸ்லாம் மனிதனுக்கு வழிகாட்டும் வாழ்வென்பது இறைப்பொருத்தத்தை பெற்றுத்தருவதோடு இவ்வுலகில்  ஆரோக்கியமாக வாழ வழிவகைச்செய்கிறது.அதனால் தான் இஸ்லாத்தை "இயற்கை மார்க்கம்"என்பர்.மனிதன் இயற்கையோடு ஒன்றி ஆரோக்கியமாக வாழ அழகிய வழிகட்டுகிறது.

ஆரோக்கியமாக வாழ இஸ்லாம் காட்டும் வழிமுறைகளை காண்போம்.

ஆரோக்கியத்தின் அடிப்படை தூய்மை.

இஸ்லாம் தூய்மையை வலியுறுத்தும் மார்க்காம்.அகத்தூய்மை எவ்வளவு முக்கியமோ அதுப்போல புறத்தூய்மையும் மிக முக்கியமாகும்.

தூய்மையை வாழ்வின் நோக்கங்களில் ஒன்று என்கிறது குர்ஆன்...

قَدْ اَفْلَحَ مَنْ تَزَكّٰىۙ‏

தூய்மையடைந்தவன், திட்டமாக வெற்றி பெறுகிறான்.

(அல்குர்ஆன் : 87:14)

وَذَكَرَ اسْمَ رَبِّهٖ فَصَلّٰى ‏

மேலும், அவன் தன் இறைவனுடைய நாமத்தைத் துதித்துக் கொண்டும், தொழுது கொண்டும் இருப்பான்.(அல்குர்ஆன் : 87:15)

بَلْ تُؤْثِرُوْنَ الْحَيٰوةَ الدُّنْيَا ‏

எனினும், நீங்களோ (மறுமையை விட்டு விட்டு) இவ்வுலக வாழ்வைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறீர்கள்.(அல்குர்ஆன் : 87:16)

وَالْاٰخِرَةُ خَيْرٌ وَّ اَبْقٰى‏

ஆனால் மறுமை (வாழ்க்கை)யோ சிறந்ததாகும்; என்றும் நிலைத்திருப்பதும் ஆகும்.(அல்குர்ஆன் : 87:17)

நபிகளாரின் முக்கிய பணிகளில் ஒன்று தூய்மை...

هُوَ الَّذِىْ بَعَثَ فِى الْاُمِّيّٖنَ رَسُوْلًا مِّنْهُمْ يَتْلُوْا عَلَيْهِمْ اٰيٰتِهٖ وَيُزَكِّيْهِمْ وَيُعَلِّمُهُمُ الْكِتٰبَ وَالْحِكْمَةَ وَاِنْ كَانُوْا مِنْ قَبْلُ لَفِىْ ضَلٰلٍ مُّبِيْنٍۙ‏

அவன்தான், எழுத்தறிவில்லா மக்களிடம் அவனுடைய வசனங்களை ஓதிக்காட்டி, அவர்களைப் பரிசுத்தமாக்கி, அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்பிக்கும் படியான தூதரை அவர்களிலிருந்தே அனுப்பி வைத்தான்; அவர்களோ, அதற்கு முன்னர் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருந்தனர்.(அல்குர்ஆன் : 62:2)

மேற்கூறிய வசனங்களில் தூய்மை என்பதன் நோக்கம்,அகம் புறம் இரண்டின் தூய்மை அவசியமாகும். தனிமனித வாழ்வு,கூட்டுவாழ்கை அனைத்திலும் சொல்,செயல்,சிந்தனை அனைத்திலும் அகம் புறம் இரண்டும் தூய்மையாக இருந்தால் தான் அங்கீகரிக்கப்படும்.

காரணம் தூய்மை,ஆரோக்கியத்தின் அடிப்படையாகும்,வெளிரங்கமான செயல்களில் தூய்மையில்லையெனில் அது ஆரோக்கியத்தை கெடுத்து நோயை உண்டாக்கும்.

வாழ்க்கையில் நாம் வாழும் நாளில் ஆரோக்கியமாக நோய் நொடி இல்லாமல் வாழ வேண்டும் என்றால் சுத்தமாகவும் சுகாதார வழி முறைகளை பின் பற்றி சுத்தமான உணவு தூய குடிநீர் பாதுகாப்பான தங்குமிடம் சிறந்த நலச்சேவைகள் போன்றவற்றை ஒரு மனிதன் பெற்று கொள்கின்ற போது தான் ஒரு மனிதன் ஆரோக்கியமாக வாழ முடியும்.

ஷரிஅத் சட்டங்களில் பெரும்பாலும் நோயாளிகளுக்கு  விதிவிலக்களிக்கப்படும்.(எ.க)நோன்பு நோயாளியின் மீது கடமையில்லை ஆனால்  அவர் குணமானால் நோன்பை களாச்செய்யவேண்டும்.

இப்படி பல்வேறு வணக்கங்களுக்கு ஆரோக்கியம் அவசியமாகும்.அதனால் ஆரோக்கியத்தை கெடுக்கும் அசுதத்தை விட்டும் நீங்க தூய்மை அவசியமென்கிறது இஸ்லாம்.

எல்லா நோய்க்கும் மருந்துண்டு.

நாயகம் ﷺஅவர்கள் உடல் ஆரோக்கியத்தின் அவசியத்தை பல நபிமொழிகளில் வலியுறுத்தியுள்ளார்கள்.உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதற்காக பலமருத்துவ முறைகளையு காட்டிதந்திருக்கிறார்கள்.நபிமொழிகளில் طبُّ النَّبِي "நபிவழி மருத்துவம்" என்பதற்கு தனிப்பிரிவே ஹதிஸ் கிதாபுகளில் உள்ளன.

மனிதன் நோய்வாய்ப்டும் போது அதற்கான சரியான சிகிச்சை எடுத்துக்கொள்ளுமாறும்,தகுந்த மருத்துவரை அனுகுமாறும் இஸ்லாம் அறிவுத்துகின்றது.

حديث أبي هريرة t: أن النبي r قال: "إن الله لم ينـزل داءً إلا أنزل له شفاء" رواه البخاري

அல்லாஹ் அதற்கான நிவாரணியை இறக்காமல் எந்த நோயையும் இறக்குவதில்லை.

حديث جابر t قال: قال رسول الله r : "لكل داء دواء، فإذا أصيب دواء الداء برئ بإذن الله عزّ وجل "، رواه مسلم([2]).

ஒவ்வோரு நோய்க்கும் மருந்துண்டு.நோயின்  மருந்தை(மருத்துவதை)பெற்றுக்கொண்டால்,அல்லாஹ்வின் நாட்டப்படி நோய்குணமாகும்.

எல்லா நோய்க்கும் மருந்துண்டு என்றால் நாமே நமக்கு சுயமாக மருந்தை எடுத்துக்கொள்வதல்ல,அத்துறைச்சார்ந்த மருத்துவரை அணுகி அவர் பரிந்துரைக்கும் மருத்துவத்தை மேற்கொள்வதாகும் இதனை இன்னொரு ஹதீஸ் தெளிவுப்படுத்துகிறது..

எவரொருவர் தனக்கு அனுபவமில்லாத நோய்க்கு யாருக்காவது சிகிச்சையளித்து,அதனால் (அவருக்கு பாதிப்பு ஏற்பட்டால் )அவரின்  பாதிப்புக்கு (சிகிச்சையளித்த)இவரே பொருப்புதாரியாகும்.(سنن ابن ماجہ، کتاب الطب)

நம் முன்னோர்கள் சுவர் இருந்தால் தான் சித்திரம் வரையலாம் என்று கூறியது போல உடலில் நல்ல ஆரோக்கியம் இருந்தால் தான் நல்வாழ்வினை வாழ முடியும் அதிகமான வணக்க வழிபாடுகள் செய்திட முடியும்.

عَنِ ابْنِ عَبَّاسٍ ، رَضِيَ اللَّهُ عَنْهُمَا ، قَالَ : قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم نِعْمَتَانِ مَغْبُونٌ فِيهِمَا كَثِيرٌ مِنَ النَّاسِ الصِّحَّةُ وَالْفَرَاغ

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மனிதர்களில் அதிகமானோர் இரண்டு அருட்செல்வங்களின் விஷயத்தில் (ஏமாற்றப்பட்டு) இழப்புக்குள்ளாகி விடுகின்றனர்....

1. ஆரோக்கியம்     2. ஓய்வு

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: புகாரி-6412

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ((مَا أَنْزَلَ اللَّهُ دَاءً إِلاَّ أَنْزَلَ لَهُ شِفَاءً)). 

 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' அல்லாஹ் எந்த நோயையும் அதற்குரிய நிவாரணியை அருளாமல் இறக்குவதில்லை என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.        (ஸஹீஹ் புகாரி 5678)

மூன்று மருந்துகள்.

قَالَ: سَمِعْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: ((إِنْ كَانَ فِي شَيْءٍ مِنْ أَدْوِيَتِكُمْ- أَوْ يَكُونُ فِي شَيْءٍ مِنْ أَدْوِيَتِكُمْ- خَيْرٌ فَفِي شَرْطَةِ مِحْجَمٍ، أَوْ شَرْبَةِ عَسَلٍ، أَوْ لَذْعَةٍ بِنَارٍ تُوَافِقُ الدَّاءَ، وَمَا أُحِبُّ أَنْ أَكْتَوِيَ)).

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:உங்கள் மருந்துகளில் ஒன்றில் நன்மை ஏதேனும் 'இருப்பதாயிருந்தால்' அல்லது 'இருக்கிறதென்றால்' நோயின் தன்மைக்கு ஏற்றபடி இரத்தம் உறிஞ்சும் கருவியால் (உடலில்) கீறுவது, அல்லது தேன் அருந்துவது, அல்லது நெருப்பால் சூடிடுவதில் தான் அது உள்ளது. (ஆயினும்,) சூடிடுவதை நான் விரும்பவில்லை,என ஜாபிர்(ரலி) அறிவித்தார். (ஸஹீஹ் புகாரி 5683)

தேன் எனும் அருமருந்து.

மிகச்சிறந்த மருத்துவ குணம் கொண்ட உணவுப்பொருள் தேன். ‘வயிற்றின் நண்பன்’ என தேனைக் கூறுவது உண்டு. தேன், உணவாகவும் மருந்தாகவும் பயன்படக்கூடிய பொக்கிஷம். குழந்தைகள் இருக்கும் வீடுகளில் அவசியம் வைத்திருக்க வேண்டிய பொருள் இது. தேன் மூலம் பல நோய்களை குணப்படுத்த முடியும்.

தேன் ஆற்றல் நிறைந்தது. தேனில் எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. 100 கிராம் தேனில் 304 கலோரி அடங்கியிருக்கிறது.

குர்ஆன் தேனை ஷிஃபா அருமருந்து என்கிறது.தேனின் சிறப்பைக்கூறும் பல ஹதீஸ்கள் உள்ளன.

ثُمَّ كُلِىْ مِنْ كُلِّ الثَّمَرٰتِ فَاسْلُكِىْ سُبُلَ رَبِّكِ ذُلُلًا‌  يَخْرُجُ مِنْ بُطُوْنِهَا شَرَابٌ مُّخْتَلِفٌ اَلْوَانُهٗ فِيْهِ شِفَآءٌ لِّلنَّاسِ‌ اِنَّ فِىْ ذٰ لِكَ لَاٰيَةً لِّقَوْمٍ يَّتَفَكَّرُوْنَ‏

“பின், நீ எல்லாவிதமான கனி(களின் மலர்களிலிருந்தும் உணவருந்தி உன் இறைவன் (காட்டித் தரும்) எளிதான வழிகளில் (உன் கூட்டுக்குள்) ஒடுங்கிச் செல்” (என்றும் உள்ளுணர்ச்சி உண்டாக்கினான்). அதன் வயிற்றிலிருந்து பலவித நிறங்களையுடைய ஒரு பானம் (தேன்) வெளியாகிறது; அதில் மனிதர்களுக்கு (பிணி தீர்க்க வல்ல) சிகிச்சை உண்டு; நிச்சயமாக இதிலும் சிந்தித்துணரும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது.(அல்குர்ஆன் : 16:69)

தேனின் பயன்கள்.

தேனை பொதுவாக 'வயிற்றின் நண்பன்' என கூறுவதும் உண்டு. 70 வகையான வைட்டமின் சத்துக்கள் சுத்தமான தேனில் அடங்கியுள்ளன. தேன் எண்ணற்ற சத்துக்களை இயற்கையாகவே கொண்டுள்ளது.ஊட்டச்சத்து.சுவாசப் பிரச்சனைகள்.நோயெதிர்ப்பு சக்தி.எடை குறைவு.உடல் சோர்வு.முகப்பரு பிரச்சினை.சரும சுருக்கம்.காயங்களை குணமாக்க.சொறி, சிரங்கு, படை.முதுமை தோற்றத்தை தடுக்கும்.தசைப் பிடிப்பு.கொலஸ்ட்ரால் போன்ற என்னற்ற பிரச்சினைகளை நீக்குகிறது.ஆனால் கலப்படம் செய்யக்கூடிய பொருட்களில் முதலிடம் வகிப்பது தேன் தான்.

குர்ஆன் பொய்யாகாது.

அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) கூறினார்கள்:

ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து 'என் சகோதரர் வயிற்று வலியால் சிரமப்படுகிறார்' என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், 'அவருக்குத் தேன் ஊட்டுங்கள்' என்று கூறினார்கள். பிறகு இரண்டாம் முறையாக அவர் வந்தி(ருந்து 'தேன் ஊட்டியதில் வயிற்றுப் போக்குதான் ஏற்பட்டது' என்று கூறி)டவே, மீண்டும் நபி(ஸல்) அவர்கள், 'அவருக்குத் தேன் ஊட்டுங்கள்' என்று கூறினார்கள். பிறகு மூன்றாம் முறையாக அவர் வர நபி(ஸல்) அவர்கள் அப்போதும், 'அவருக்குத் தேன் ஊட்டுங்கள்' என்று கூறினார்கள். பிறகு (நான்காம் முறை அவர் வந்து), '(தாங்கள் சொன்னதையே) நான் சென்தேன். (ஆனால், குணமாகவில்லை)' என்றார். அப்போது நபி(ஸல்) அவர்கள் '(தேனில் நிவாரணம் இருப்பதாகக் குர்ஆனில்) அல்லாஹ் உண்மையே கூறியுள்ளான்; உங்கள் சகோதரரின் வயிறுதான் பொய் சொல்கிறது: அவருக்குத் தேன் ஊட்டுங்கள்' என்று கூறினார்கள். அம்மனிதர், மீண்டும் தம் சகோதரருக்குத் தேன் ஊட்டினார். அதையடுத்து அவர் குணமடைந்தார். ( புகாரி 5684)

وَلَوْ جَعَلْنٰهُ قُرْاٰنًا اَعْجَمِيًّا لَّقَالُوْا لَوْلَا فُصِّلَتْ اٰيٰتُهٗ  ءَؔاَعْجَمِىٌّ وَّعَرَبِىٌّ‌   قُلْ هُوَ لِلَّذِيْنَ اٰمَنُوْا هُدًى وَشِفَآءٌ‌   وَ الَّذِيْنَ لَا يُؤْمِنُوْنَ فِىْۤ اٰذَانِهِمْ وَقْرٌ وَّهُوَ عَلَيْهِمْ عَمًى‌  اُولٰٓٮِٕكَ يُنَادَوْنَ مِنْ مَّكَانٍ بَعِيْدٍ‏ 

நாம் இதை (குர்ஆனை) அரபியல்லாத வேறு மொழியில் இறக்கியிருந்தால்; இதன் வசனங்கள் தெளிவாக விளக்கப்பட்டிருக்கக் கூடாதா? (சொல்) அஜமீ (வேற்று மொழி); (தூதர்)) அரபியரா?” என்று அவர்கள் கூறியிருப்பார்கள். “இது ஈமான் கொண்டவர்களுக்கு ஒரு வழிகாட்டியும், (அரு) மருந்துமாகும்” என்று கூறுவீராக! ஆனால் ஈமான் கொள்ளாதவர்களுக்கு, அவர்களுடைய காதுகளில் செவிட்டுத்தன்மை இருக்கிறது; இன்னும், அவர் (கண்)களில் குருட்டுத்தனமும் இருக்கிறது; எனவே அவர்கள் வெகு தொலைவான இடத்திலிருந்து அழைக்கப்படுபவர்கள் (போல் இருக்கின்றனர்).  (அல்குர்ஆன் : 41:44)

பால் எனும் அமிர்தம்.

பால் என்பது கால்சியம் நிறைந்த, உடலுக்கு தேவையான ஒரு முழு உணவாக பார்க்கப்படுகிறது. உடல் எடையை பாதுகாக்கவும், கலோரிகளை எரிக்கவும் பால்  உதவுகிறது. மேலும் பால் குடிப்பதால் உடலுக்கு நல்ல சக்தியும், எலும்புகளுக்கு உறுதியும் அளிக்கிறது.

நாட்டு பசுக்களின் பாலில் உடல் வலிமை தரும் வகையிலான புரதம் உள்ளது. பசும்பால் 90% நீர்தன்மையுடன் அடர்த்தி குறைவாகவும், எளிதில் ஜீரணிக்க கூடியது.

நாட்டு பசும்பாலில் உள்ள பீட்டா கெசின் என்னும் புரதம் உடலை வலிமை அடைய செய்கிறது. 

பால் குறித்து குர்ஆன்...

وَاِنَّ لَـكُمْ فِىْ الْاَنْعَامِ لَعِبْرَةً‌   نُّسْقِيْكُمْ مِّمَّا فِىْ بُطُوْنِهٖ مِنْ بَيْنِ فَرْثٍ وَّدَمٍ لَّبَنًا خَالِصًا سَآٮِٕغًا لِّلشّٰرِبِيْنَ‏

நிச்சயமாக உங்களுக்கு (ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற) கால்நடைகளிலும் (தக்க) படிப்பினை இருக்கின்றது; அவற்றின் வயிற்றிலுள்ள சாணத்திற்கும், இரத்தத்திற்கும் இடையிலிருந்து கலப்பற்ற பாலை அருந்துபவர்களுக்கு இனிமையானதாக (தாராளமாகப்) புகட்டுகிறோம்.(அல்குர்ஆன் : 16:66)

கருஞ்சீரகம்.

காலித் இப்னு ஸஅத்(ரஹ்) கூறினார் :

எங்களுடன் ஃகாலிப் இப்னு அப்ஜர்(ரலி) இருக்க நாங்கள் (பயணம்) புறப்பட்டோம். வழியில் ஃகாலிப்(ரலி) நோய்வாய்ப்பட்டார்கள். அவர்கள் நோயாளியாக இருக்கும் நிலையிலேயே மதீனாவுக்குச் சென்றோம். ஃகாலிப்(ரலி) அவர்களை இப்னு அபீ அ(த்)தீக்(ரலி) உடல் நலம் விசாரிக்க வந்தார்கள். 

அப்போது அவர்கள் எங்களிடம் (பின்வருமாறு) கூறினார்கள்: இந்தச் சின்னஞ்சிறு கறுப்பு வித்தை (கருஞ்சீரகத்தை) நீங்கள் பயன்படுத்துங்கள். இதிலிருந்து ஐந்து அல்லது ஆறு வித்துகளை எடுத்துத் தூளாக்கி (எண்ணெய் பிழிந்து) அவரின் மூக்கில் இந்தப் பக்கத்திலும் அந்தப் பக்கத்திலும் (அதன்) எண்ணெய்ச் சொட்டுகளை விடுங்கள். ஏனெனில், ஆயிஷா(ரலி) என்னிடம், 'நபி(ஸல்) அவர்கள் இந்தக் கருஞ்சீரகம் எல்லா நோய்க்கும் நிவாரணமாகும்; 'சாமை'த் தவிர என்று கூறியதை கேட்டிருக்கிறேன்' எனத் தெரிவித்தார்கள். நான், 'சாம் என்றால் என்ன?' என்று அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் 'மரணம்' என்று பதிலளித்தார்கள். (ஸஹீஹ் புகாரி 5687)

இரவு தூக்கம்.

ஒரு காலத்தில் இருட்டியதும் விலங்குகளும் பறவைகளும் மனிதர்களும் உறங்கி விடுவார்கள். அதனால் அதிமான மனிதர்கள் நீண்ட ஆயுளோடும் ஆரோக்கியமாகவும் இருந்தனர்.

எப்பொழுது மின் விளக்குகள் கண்டுபிடிக்கப்பட்டதோ அன்றிலிருந்து மனிதன் தூக்கத்தை இழந்தான்.இரவுகளில் வேலைக்கு செல்வது அல்லது இரவில் அதிக நேரம் செல்போன் பயன்படுத்துவது நண்பர்களோடு அரட்டை அடிப்பது இவைகளினால் நோய்கள் அதிகமாகி விட்டது ஆனால்

'நபி(ஸல்) அவர்கள் இஷாவுக்கு முன் உறங்குவதையும் இஷாவுக்குப் பின் பேசுவதையும் வெறுப்பவர்களாக இருந்தனர்.' (ஸஹீஹ் புகாரி 568)

பிஸ்மில்லாஹ் கூறுவது.

ஹள்ரத் உமர் இப்னு அபீ ஸலமா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் : “நான் சாப்பிடும் பொழுது தட்டில் எனது கை முறையின்றி உலாவிக் கொண்டிருந்ததைக் கண்ட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “சிறுவனே! அல்லாஹ்வின் பெயர் ‘பிஸ்மில்லாஹ்’ கூறி உண்ணு! உனது வலது கரத்தினால் சாப்பிடு! (இங்கொன்றும் அங்கொன்றுமாக கையை உலாவாமல் ஒரு பக்கத்திலிருந்து) தட்டில் உனக்கு அருகில் உள்ளவற்றிலிருந்து சாப்பிடு” என்று எனக்கு கற்றுக் கொடுத்தார்கள். (நுல் : புஹாரி)

இந்த ஹதீஸின் மூலம் மூன்று விஷயங்கள் விளங்குகிறது. 

1. பிஸ்மில்லாஹ் என்று சொல்லி ஆரம்பிக்க வேண்டும். 

2. வலது கரத்தினால் சாப்பிட வேண்டும். 3. தட்டில் நமக்கு அருகில் இருப்பதை சாப்பிட வேண்டும்.

சாப்பிடும் முன்பு இரு கைகளை கழுகுவது.

ஹள்ரத் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் : நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குளிப்பு கடமையான நிலையில் தூங்க நாடினால் உளூ செய்து கொள்வார்கள். மேலும் சாப்பிட நாடினால் தங்களது கையை கழுகிக் கொள்வார்கள். (நூல் : நஸாயீ)

விஞ்ஞானம் : மனிதன் கரங்களை பல இடங்களில் உபயோகிப்பதால் அவற்றில் கண்ணுக்குத் தெரியாத நுண் (Invisible Rays) ஒன்று சேர்ந்திருக்கும். கைகளை கழுகாமலேயே சாப்பிட ஆரம்பித்தால் அக்கிருமிகள் உள்ளே சென்று பல கோளாறுகளுக்கு அடித்தளமிடுகிறது.

உணவே மருந்து.

மனிதனின் அடிப்படை தேவைகளுள் முதன்மையானது உணவாகும். மக்கள் உண்ணும் உணவு பழக்க வழக்கங்களுமே அவர்களின் உடல் நலத்தை தீர்மானிக்கின்றன.

நாம் உண்ணும் உணவு நமது உடலுக்குத் தேவையான சக்தியைத் தருகிறது  என்பது உண்மைதான்.அதற்காக எப்போதும் எல்லா உணவு வகைகளையும் பிடிபிடியென்று சாப்பிட்டு  விட்டால் செரிமானம் செய்ய நேரமும் காலமும் இருக்காது அதனால்தான் அஜீரணக் கோளாறு ஏற்பட்டு அவயங்களைப் பாதிக்கிறது என்பது எவ்வளவு உண்மை.

"அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு" என்ற இந்த பழமொழிக்கேற்ப

குர்ஆனில்...

وَّكُلُوْا وَاشْرَبُوْا وَلَا تُسْرِفُوْا‌  اِنَّهٗ لَا يُحِبُّ الْمُسْرِفِيْنَ‏

ஆதமுடைய மக்களே! ஒவ்வொரு  உண்ணுங்கள், பருகுங்கள்; எனினும் வீண் விரயம் செய்யாதீர்கள். ஏனெனில் அல்லாஹ் அளவு கடந்து (வீண்) விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை.    (அல்குர்ஆன் : 7:31)

இங்கு "இஸ்ராஃப்" என்பதன் பொருள் வெறுமனே உணவை வீணடித்தல் மட்டும் அல்ல,அளவுக்கதிகமாக உணவுஉட்கொள்வதும்,ஆரோக்கியமற்ற உணவை எடுத்துக்கொள்வதையும் குறிக்கும்.

அல்லாஹ் நம் அனைவருக்கும்  ஆரோக்கியத்தை தந்து அவன் கருணையால் வாழச் செய்வானாக! ஆமின்...


பிரபல்யமான பதிவுகள்