உடல் உறவு
சட்டம்
------------------------------------
சலமா என்ற சகாபி ரமழானில் நோன்பு வைத்து கொண்டு பகல் நேரத்தில் தனது மனைவி உடன் உடலுறவு கொண்டு விட்டார்.அப்பால் தனது தவறை உணர்ந்து வருந்தி மாநபி ஸல் அவர்கள் இடம் விபரம் சொன்னார்கள்.அதற்கு தோழரே உமது பாவத்திற்கு பரிகாரமாக ஒரு அடிமை உரிமை விடுங்கள் என்று கூற அடிமை இல்லை நாயகமே
என்க. அப்படியானால் தொடர்ந்து அறுபது நாட்கள் நோன்பு வையுங்கள் என்று மாநபி ஸல் சொன்னார்கள்.என்னால் முடியாது நாயகமே என்க. சரி
நீங்க அறுபது ஏழைகளுக்கு உணவு கொடுங்கள் என்று மாநபி ஸல் சொன்னார்கள்.அதற்கும் வசதி இல்லை நாயகமே என்க மாநபி ஸல் அவர்கள் ஒரு சகாபி இடம் அறுபது மரக்கால் பேரீத்த பழங்கள் வாங்கி கொடுத்து இதை அறுபது ஏழைகளுக்கு தர்மமாக கொடுங்க
என்க .நாயகமே இந்த மதீனாவில் எங்களைவிட ஏழைகள் யாரும் இல்லை நாயகமே என்க உடனே மாநபி ஸல் அவர்கள் கடவாய் பற்கள் தெரியும் அளவுக்கு சிரித்து விட்டு தோழரே நீங்களே சாப்பிடுங்கள் என்று மாநபி ஸல் சொன்னார்கள்
(முஸ்லிம் 1111)
நோன்பு சட்டம்
சஹாபிகளுக்கு
கஷ்டம்
நமக்கு இஷ்டம்
------------------------------------
நோன்பாளி இஷா தொழுகைக்கு பின் உடல் உறவு கொள்ள கூடாது என்பது சட்டம். ஒரு நாள் உமர் (ரழி) போன்ற சில சஹாபிகள் இஷா தொழுகைக்கு பின் உடல் உறவு கொண்டு விட்டார்கள்.இந்த செய்தி மாநபி ஸல் அவர்களுக்கு எட்டியதும் வருத்தமுடன் வான் நோக்கி வஹியை எதிர் பார்த்தார்கள்.
அப்பால் அல்லாஹ்
احل لكم ليلة الصيام الرفث
(இனிமேல்) நோன்பு இரவில் உடல் உறவு
கொள்வது ஹலால் ஆக்கப்பட்டு விட்டது என்ற வசனத்தை இறக்கினான் சூராபகரா(இப்னு கசீர்)
------------------------------------
நோன்பு துறக்கும் சட்டம்
------------------------------------
ஒரு நோன்பாளி நோன்பு துறக்கும் நேரத்தில் உறங்கிவிட்டால் இனி அவர் மறுநாள் தான் நோன்பு துறக்க வேண்டும் எனவே கைஸ் என்ற சகாபி ஒரு நாள் நோன்பு துறக்கும் நேரத்தில் வீட்டிற்கு வந்து மணைவி இடம் உணவு கேட்க இல்லை என்று கூற அவர் சற்று நேரத்தில் உறங்கிவிட்டார்.இதனால் அவர் மறுநாளும் நோன்பாகவே இருக்க நடு மதிய நேரத்தில் வேலை செய்த வயக்காட்டிலேயே சுருண்டு விழுந்தார் இந்த செய்தி மாநபி ஸல் அவர்களுக்கு எட்டியதும் வருத்தமுடன் வான் நோக்கி வஹியை எதிர் பார்த்தார்கள்.அப்பால் அல்லாஹ்
وكلوا واشربوا حتي يتبين لكم الخيط الابيض من الخيط الأسود من الفجر
(ரமழானில்) இரவு முதல் பஜ்ர் வரை உண்ணுங்கள் பருகுங்கள் என்ற வசனத்தை இறக்கினான் சூராபகரா (புகாரி 1816)
(صام قيس بن صرمة وحضر افطاره وسأل عند امرأته قالت لا وصام غدا وسقط في بستانه وبلغ خبره للنبي صلي الله عليه وسلم ونزل
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக