பாரசீகபேரறிஞர் இமாம்சாஅதி(ரஹ்) அவர்கள்சொன்ன அருமையான உபதேசம்...!*
قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم-
مَنْ حُرِمَ الرِّفْقَ حُرِمَ الْخَيْرَ أَوْ مَنْ يُحْرَمِ الرِّفْقَ يُحْرَمِ الْخَيْرَ
*அண்ணல்நபி ஸல்லல்லாஹூ* அலைஹிவஸல்லம்
அவர்கள்
சொன்னார்கள்:
*"மென்மையை இழந்தவர் நன்மைகளை இழந்தவராவார்."*
நூல்: முஸ்லிம்-5052
பாரசீக நாட்டின்
மாபெரும் பேரறிஞர்
குலிஸ்தான்
போஸ்தான் என்றபுகழ்பெற்ற
அருமையானநூலை
உலகிற்குதந்தவர்கள்.
*இமாம் சாஅதி*
ரஹ்மத்துல்லாஹி அலைஹிஆவார்கள்.
*"இமாம்சாஅதி(ரஹ்)*
அவர்கள், தங்களின் 85-ஆம்வயதில்
கைகால்கள் அசைக்க முடியாமல் மரணப்
படுக்கையில்படுத்து இருந்தார்கள்."
அப்போது
ஒருமனிதர் "எப்படி
வாழவேண்டும்?"என
எனக்குஉபதேசம்
செய்யுங்கள்."
எனக் கேட்டார்.
"வாயைப் போல்
வாழ்ந்துக்கொள்..!"
என்றார்கள்.
"வாயைப் போல்
எப்படி வாழ்வது
புரியவில்லையே..?"
என்றார்.
"இருபத்தைந்து
வருடங்களுக்குமுன்பு, என்வாய்க்குள்
இருந்த பற்கள்
இப்போது
இருக்கிறதா?" என
வாயைத் திறந்து காட்டினார்கள்.
"ஒருபல்கூடஇல்லை.!"
என்றார்.
"என் வாய்க்குள்
நாக்கு இருக்கிறதா?"
எனக் கேட்டார்கள்.
"ஆம்.. இருக்கிறது..!"
என்றார்.
"கடினமான
பற்கள் எல்லாம்
காணாமல்போய்
விட்டன.!"
ஆனால்
"மென்மையாக
இருந்த நாக்கு
இப்போதும்
இருக்கிறது..!"
"வாழ்க்கையில்
எப்போதும்
மென்மையைக்
கடைப்பிடி உன்
வாழ்க்கை மேன்மை பெறும்!" என்றார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக